Search This Blog

21.3.14

ஹிந்து ராஷ்டிரம் வந்தால்... சிந்திப்பீர்

 ஹிந்து ராஷ்டிரம் வந்தால்...


ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் - அமைக்கப் போகிறோம் என்று சொல்லி வருகிறார்கள் அல்லவா - அந்த ராஜ்ஜியத்தில் மக்கள் தொகையில் கிட்டதட்ட சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களின் நிலை என்ன?

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் சொன்னதை எடுத்துக் காட்டினாலே போதுமானது. அசாமின் சில்சா நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் தலைவர் மோகன் பகவத் கூறியதை தினமலர் ஏடு வெளியிட்டிருந்தது.

மேலை நாட்டு நாகரிகத்தில் மயங்கி, இந்துமத பண்பாடு, கலாச்சார பெருமைகளைப் புறந்தள்ளி, கண்டபடி வாழ்பவர்கள் மத்தியில்தான் கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் நடக்கின்றன. இந்தியா முன் பாரதமாக இருந்தபோது, இது போன்ற வன்முறை சம்பவங்கள் கிடையாது.

மேலை நாகரிகத்தைப் பின்பற்றி பாரதம் இந்தியா என மாறிய பிறகுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டன. நகர்ப்புறங்களில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. 

கிராமப்புறங்களிலோ, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலோ அத்தகைய குற்றங்கள் அறவே நடப்பதில்லை என்ற கூறியபோது பெரும் சர்ச்சைகள் வெடித்தன. இதற்கு விளக்கம் கூறுவதாக நினைத்துக் கொண்டு மத்தியப் பிரதேசம் இந்தூரில் (16.1.2013) மோகன் பகவத் தெரிவித்த கருத்து பெருமாள் போய் பெத்த பெருமாள் என்ற கதையாகி விட்டது. என்ன கூறினார் பகவத்?

திருமணம் என்பது கணவன் மனைவிக்கு இடையேயான ஒப்பந்தம்; திருமணத்தின்போது, நீ வீட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டால்  உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்வேன். உன்னையும் பாதுகாப்பேன் என கணவன் ஒப்பந்தம் செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும்போது வேறு வழியின்றி மனைவியைக் கணவன் கைவிடுகிறான் என்று பேசினாரே பார்க்கலாம் (தினமலர் 7.1.2013 பக்.12).

குடும்ப வாழ்க்கையில் மனைவி செய்யும் தவறுதலால் தான் கணவன் மனைவியைக் கை விடுகிறான் என்கிறார் அப்படியானால் கணவன் தவறே செய்யாதவனா? இன்னொன்றையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும்  இந்தியா பாரதமாக இருந்தபோதெல்லாம் சரியாக இருந்ததாம். இதன் பொருள் என்ன? பாரதம் என்பதற்கு இவர்கள் என்ன பொருளை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?

அது புராண மூலத்தைக் கொண்டது என்பதால் அந்த வகையில் திசை திருப்பப் பார்க்கின்றனர்; இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும்  இந்துக்களின் மகா காவியமான பாரதம்கூட பெண்ணை இழிவுபடுத்து வதாகத் தானே உள்ளது! பெண்ணை வைத்துச் சூதாடியது எந்தவகை ஒழுக்கத்தைச் சேர்ந்ததாம்? அந்தப் பெண்கூட அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதான கர்ணன்மீது காதல் கொண்டது எந்த வகை ஒழுக்கத்தைச் சேர்ந்ததாம்?

மோகன் பகவத் இந்தூரில் தெரிவித்த கருத்துக்கு சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தாகாரத் நறுக்கென்று இந்துத்துவாவின் மூக்கை வெட்டும் கருத்தினைத் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. அவர்கள் இந்துகள், இந்துத்துவா, மனுதர்ம சாஸ்திரத்தின்படி நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என விரும்பியவர்கள் ஆகவே அவர்களின் கொள்கையை மோகன் பகவத் பிரதிபலித்துள்ளார் என்று அதே தினமலரில்தான் (7.1.2013) வெளியிட்டு இருந்தது.

திருவாளர் சோ ராமசாமி ஒவ்வொரு துக்ளக் இதழிலும் பெண்களை மட்டம் தட்டி எழுதும் போக்கை வழமையாகத்தான் கொண்டுள்ளார்.

கேள்வி: மகளிர் தினத்தன்று யாருக்கு வாழ்த்துச் சொன்னீர்கள்?

பதில்: அடடா? மகளிர் தினம் என்று ஒன்று உண்டா? அது இப்போது வந்து போய் விட்டதா? தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால் உங்களுக்கு வாழ்த்தும் சொல்லியிருப்பேனே! சரி கொஞ்சம் லேட்டாக இப்போது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் (துக்ளக் 26.3.2014 பக்21).

ஹிந்துத்துவாவில் ஊறிய பாழும் நெஞ்சங்கள் எல்லாம் இந்தவரிசையில்தான் பெண்களைக் காலில் போட்டு மிதிக்கும் நஞ்சினைத்தான் கக்குவார்கள்.

ஹிந்துத்துவா வந்தால் இந்தக் கெதிதான்.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி உள்ள பெண் களுக்கு ஆண்களைவிடக் கூடுதல் பொறுப்பும் கவலையும், கடமையும் உண்டு. அதுதான் பிஜே.பி. என்ற அணி எந்தகாரணத்தை முன்னிட்டும் அதிகா ரத்தைக் கைப்பற்றி விடக் கூடாது  அதே போல கொள்கையளவில் பிஜேபியுடன் மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் நல்ல பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

 ------------------------------”விடுதலை” தலையங்கம்  20-03-2014

52 comments:

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. - தீண்டாமை!

பிகார் முசாபர்பூரில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார மேடையில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் இருப் பதா என்று நான்கு பூமி கார் உயர் ஜாதியினரும், பா.ஜ.க.வின் பார்ப்பனத் தலைவர்களும் மேடையில் ஏறாமல் புறக்கணித்துள்ளனர் என்கிற விவரம் வெளியே வந்துள்ளது. பிகார் மாநிலத்தில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட் டத்தில் மோடி பேசும்போது தாழ்த்தப்பட்ட தலைவர் களே பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கள் என்று பெருமைப்படக் கூறினர்.

ஆனால், நடை முறையில் பா.ஜ.க.வினரின் செயல்பாடுகள் ஜாதி ஆதிக்க வெறியிலிருந்து அவர்கள் மீளவில்லை என் பதையே உணர்த்துகிறது.

மோடி பங்கேற்ற முதல் கூட்டத்தில் ராம்விலாஸ் பஸ்வான் பங்கேற்கிறார் என்றதுமே ஜாதியை வைத்து இழிவுபடுத்தும் நோக்கில் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்கள் கூட்டத்தையே புறக்கணித் துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க.வின் துணைத் தலைவர் சி.பி.தாக்கூர் கூறும்போது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் வர முடியாமல் இருந்திருக்கலாம் என் கிறார். பிகார் மாநிலத் துணை அவைத் தலைவர் அமரேந்திர பிசாத் சிங், கிரிராஜ்சிங், அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் தெளிவாகவே பா.ஜ.க. ராம் விலாஸ் பஸ்வானு டனான கூட்டணியை எதிர்த்துப் போராடுகிறோம் என்கிறார்கள்.

ஏன் இந்த நிலை? பி.ஜே.பி. என்ற கட்சி ஓர் இந்துமதவாதக் கட்சி. அது வர்ணாசிரமத்தை ஜாதியை - தீண்டாமையை ஆதரிக் கக் கூடிய கட்சி அவர் களின் காஞ்சி பெரிய வாளான - மறைந்த சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி மிக வும் வெளிப்படையாக தீண் டாமை க்ஷேமகரமா னது என்று சொன்னவர் (ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங் கள் - இரண்டாம் பாகம்).

அதே சங்கராச்சாரியார் 16.10.1927 அன்று பாலக்காட் டில் மாட்டுக் கொட்டகை யில் காந்தியாரை வைத்துச் சந்தித்தார் அப்பொழுது அந்த மூத்த பெரியவாள் என்ன சொன்னார்? ஹரி ஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங் களையும் பழைய வழக் கங்களையும் நம்பி இருப் பவர்கள் நாட்டில் பெரும் பாலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களை மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியி ருக்கிறது என்றும் ஸ்வா மிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார் (தமிழ்நாட் டில் காந்தி - பக்கம் 575, 576).

அங்குக்கூடப் போக வேண்டாம். இதே நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத் தில் என்ன நடக்கிறது? போலியோ சொட்டு மருந்து அளிப்பதில்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக் குழந்தைகள் அறவே புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஒரு கிராமத்துத் தண் ணீர்த் தொட்டியில் எழுதப் பட்ட வாசகம் என்ன தெரியுமா? ஜாதிவாரியாக நேரம்.காலை 9 மணி முதல் 10 மணி வரை பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதி படேல் இனத்தவர் மட்டும்.

காலை 10 மணி முதல் 12 மணி (மதியம்) வரை பர் வாதா வங்கிரிஸ் மற்றும் குறும்பர். நண்பகல் 12 (மதியம்) முதல் ஒரு மணி வரை தலித் இனத்தவர். மோடி கூறும் ஹிந்து ராஜ்யம் வந் தால் இதுதான் நிலைமை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77247.html#ixzz2wYDp6P00

தமிழ் ஓவியா said...


மோடிக்கு முட்டுக் கொடுப்பவர்களைக் கேட்கிறோம்!

27.2.2002 புதன் அன்று காலை 7.20 மணிக்கு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த கரசேவகர்கள் ரயில் நிலையத்தில் கலாட்டா செய்ததால் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி பொது மக்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்தப் பெட்டியில் பயணம் செய்த 26 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 58 பேர் எரிந்து சாம்பலாகி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்!

முதல் அமைச்சர் மோடி அந்தக் கலவரத்தை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மிகவும் ஆணவமாக - பேசினார்.

நியூட்டன் விதிகளின்படி ஒவ்வொரு விளைவிற்கும் எதிர் விளைவு உண்டு என்று இனப்படுகொலைக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் முதல் அமைச்சர் நரேந்திர மோடி!

கலவரத்தையொட்டி சிறுபான்மை மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களைக்கூட குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று வக்கிரப் புத்தியோடு வர்ணித்தார்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு (2014இல்) பிரதமர் வேட்பாளராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை நோக்கி முன்பு குஜராத்தில் (2002-இல்) நடைபெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு படுகொலைபற்றி இப்போது நீங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? வருத்தம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு,

ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் வேகமாகக் கார் செல்லும்போது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு விட்டது என்றால், பின் சீட்டில் உட்கார்ந்திருக்கிற எனக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தானே செய் யும்? என்று கூறிய பதில் - மனிதா பிமானமோ, செத்தவர்களுக்காக வருந் தும் நிலையோ கூட ஏற்படாத - இரக்கமற்ற ஆணவத் தின் குரல் அல்லவா?

இந்த குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?

இவரை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டுத் தமிழர் இன உணர்வாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் ஓடலாமா? கூட்டணி என்ன கொள்கைக் கூட்டணியா? அல்லது வெறும் சீட்டணியா?

சிந்தியுங்கள் வாக்காளர்களே!

- சர்ச்லைட்

Read more: http://viduthalai.in/e-paper/77249.html#ixzz2wYEBCAaq

தமிழ் ஓவியா said...


அம்மா உணவகத்தில் ஆபத்தான அம்...மாவு!


100 டன் கோதுமை மாவு அழிக்கப்படுகிறது!

சென்னை, மார்ச்.20- அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் மலிவு உணவால் ஆபத்து என்ற தகவல் வெளி வந்துள்ளது.

ஆய்வின் முடிவில் 100 டன் கோதுமை மாவு அழிக்கப் படுகிறதாம்....

தமிழக அரசின்சார்பில் நடத்தப்படும் அம்மா உண வகங்களில் சப்பாத்தி மாலை 6 மணி முதல் 9 மணிவரை ரூ.3க்கு இரு சப்பாத்திகள் பருப்புக் கடை சலுடன் வழங்கப்படு கின்றன . 203 அம்மா உண வகங்களில் ஓர் உணவ கத்தில் சப்பாத்தி விற்பனை இரண்டாயிரம் வரை ஆனது. தற்போது மளமளவென விற்பனை சரிந்துள்ளது.

திருவொற்றியூர், மாதவ ரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 30ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை யிலிருந்து 20ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை ஆகியுள்ளது.

விற்பனைக் குறைவால் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் வரும் பொதுமக்கள் சப்பாத்திகள் கசப்பது குறித்து உணவ கங்களில் பணிபுரியும் பெண்களிடம் தொடர்ச்சி யாக புகார்களைத் தெரி வித்தவண்ணம் உள்ளனர்.

கோதுமைமாவே அப்படித் தான் எங்களுக்கு வழங்கப் படுகிறது என்றுதான் ஊழி யர்களால் பொதுமக்களி டம் கூற முடிந்தது.

ஆனா லும், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

சப்பாத்திகள் கசப்பதற்கான காரணம் குறித்து அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் சப் பாத்தி மிகவும் கசப்பாக இருந்ததால் பொதுமக்கள் சப்பாத்திகளை வாங்குவ தில்லை என்று தெரிய வந்தது.

உணவுப்பொருள் வழங்கு துறைமூலம் பெறப்படும் கோதுமையைச் சுத்தம் செய்யாமல் அப்படியே கோதுமை மாவாக அரைத்ததால் சப்பாத்தி களில் கசப்புத்தன்மை ஏற் பட்டதாக தெரிய வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்ட அதி காரிகள் சப்பாத்திக்கு பயன் படுத்தப்பட்ட கோதுமை மாவை பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வில் அம் மாவுப்பொருள் உணவாக உட்கொள்ளத் தகுதியற்ற தாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் சான்று அளிக் கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு இலட்சம் கிலோ கோதுமை மாவைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள் ளனர். இதனைத்தொடர்ந்து 100 டன் கோதுமை மாவை அழிக்க உத்தர விட்டுள்ளனர்.

குறிப்பு: பல நாடு களில் மைதா தடை செய் யப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77251.html#ixzz2wYEQZfOj

தமிழ் ஓவியா said...


உருக்கம், உறுதி , உழைப்பு!

நேற்றைய விடுதலையில் மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவரின் உருக்கமான நன்றி அறிக்கை நம்மில் பலரை நெகிழ வைத்துள்ளது. நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தமிழ் உணர்வாளர்களின் சார்பில் வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன்.

அய்யா! உங்களின் நன்றி எதிர் பார்க்காத, அயராத, கடுமையான உழைப்பை அருகில் இருந்து கண்டோர் மயக்கமடைகின்றோம். உங்கள் உடலை நீங்கள் இவ்வளவு வருத்திக் கொள்வது எங்களில் பலரை வேதனை அடையவும், எங்களில் பலருக்கு அதில் ஒரு பங்குகூட நாம் உழைப்பைத் தர முடியவில்லையே என்ற ஏக்கத்தையுந் தருகின்றது.

வெளியிலிருந்து பார்ப்போருக்கு உங்கள் வேன் (பயண ஊர்தி) பெரிதாகத் தெரியும். அதிலே உங்க ளுடன் பயணம் செய்தவர்களுக்குத் தான் தெரியும், அதன் குலுக்கலிலும், உலுக்கலிலும் நீங்கள் எப்படித் தான் உறங்குவீர்களோ, எழுதுவீர்களோ, ஆங்காங்கே நிறுத்தி உண்பதும், அந்தச் சின்னக் கழிவறையிலே நீங்கள் உள்ளே சென்று வெளியில் வரும் வரை விழுந்து அடிபட்டுவிடக் கூடாதே என்ற பரிதவிப்பும்.

எத்தனையோ சோதனைகளையும், எங்களை யெல்லாம் உலுக்கும் வேதனைகளையுந் துரோகங் களையும் தாங்கள் அமைதியுடனும் நெஞ்சுறுதி யுடனும் கையாள்வதைப் பார்த்து வியந்துள்ளோம். எல்லாம் பெரியாரின் சிந்தனைகளும், மூளையும் என்று எளிதாகச் சொல்லி விடுவீர்கள்.

கல்வி நிறுவனங்களும்,மருத்துவ மனைகளும், மற்ற தொண்டு நிறுவனங்களும் மற்றவர்களுக்குப் பெரியவையாகத் தோன்றலாம். ஆனால் உங்களுக்கு அவை தீராத தலைவலிகள். கையில் பணமே இல்லாமல் தொண்டர்களின் நம்பிகையையே மூல தனமாகக் கொண்டு அவை உருவானவை என்பது உலகத்தார்க்குத் தெரியாது.நம்பிப் பணம் கொடுத்த வங்கிகட்கு ஒரு தவணை கூடத் தவறாது திருப்பி செலுத்தியுள்ள வேறு அறக்கட்டளை இருக்காது என்பதை உறுதியாகச் சொல்வேன்.

ஒரு மணித் துளியையும் வீணாக்காது நமது அறிவு ஆசான் அய்யா போலவே படிப்பதும், எழுதுவதும், பேசுவதுமே உங்கள் வாழ்க்கை! அய்யா அவர்கள் மரத்தடியில் அமர்ந்து எழுதினார், நீங்கள் ஓடும் வேனில் எழுதுகின்றீர்கள் !

தங்களிடம் எப்படியாவது குறை கண்டு விட வேண்டும் என்று அலைவோர்க்குத் தான் ஏமாற்றம்! இப்படி அப்பழுக்கற்ற பொது வாழ்வு தந்தை பெரியாரைத் தாங்கள் உள் வாங்கியுள்ள ஆழமே !

உங்களின் கடுமையான உழைப்பிற்கும், விரைவில் சிந்தித்துச் செயல் படும் திறனுக்கும் ஈடு கொடுக்க முடியாமல், ஆனால் உங்களுக்காகவே உழைக்க உறுதி கொண்டுள்ள கருஞ்சட்டைப் படை உண்மை யிலேயே உலகில் வேறு எங்கும் காண முடியாத விந்தை தான். எள் என்றால் எண்ணெயாகத் துடிப் புடன் செயல்படுவோர் அவர்களின் திறமை முழு வதையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உழைக்கும் உழைப்பே உங்கள் பலம். அந்த பலத்திற்கு ஈடோ, இணையோ கிடையாது.அது தான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும், அந்த மகிழ்ச்சிக்கு இணை வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதைப் பல முறை சொல்லியிருக்கின்றீர்கள். பணமோ, பதவியோ எதுவுமே அதற்கு ஈடாகாது.

கழகத் தோழர்களின் இன்ப துன்பங்களை நீங்கள் பகிர்ந்து கொள்வதே மனித நேயத்தின் மாண்பு. அதில் நாங்கள் அடையும் மகிழ்ச்சியும், ஆறுதலும் வெளிப் படுத்த இயலாதது. தங்களைக் கண் இமை போல காத்து, தனது வாழ்வின் இன்பங்களைத் தங்களைத் துணை யாக ஏற்றுக் கொண்ட நாள் முதல் துறந்து,செல்வத்தில் வளர்ந்ததை மறந்து இன்று உங்களுடன் இரவு பகலாக அலையும் அண்ணியார்க்கு எவ்வாறு நன்றி சொல்ல முடியும் ?

கொள்கையில் சில நேரம் ஒத்துக் கொள்ளாத வர்கள் கூட உங்கள் குணத்தையும், எளிமையையும், அடக்கத்தையும், சிந்தனைத் திறத்தையும் போற்றிப் பாராட்டியுள்ளமை அனைவரும் அறிந்ததே.

தந்தை பெரியாரின் உழைப்பில், தங்கள் உழைப் பில் வாழ்வு பெற்றோர், வெற்றி பெற்றோர் தமிழி னத்திற்குத் தாங்கள் ஆற்றும் பணியைப் பாராட்டி மகிழ்கின்றார்கள். அடுத்த நூற்றான்டு பெரியார் நூற்றாண்டு, அதற்கு ஆவன செய்வோம். வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !

- சோம.இளங்கோவன்

Read more: http://viduthalai.in/e-paper/77259.html#ixzz2wYEZdDuj

தமிழ் ஓவியா said...


ஆனந்தவிகடன் பார்வையில்...


நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதில் தனக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறார் எல்.கே. அத்வானி. பா.ஜ.க. ஒன் மேன் ஷோவை நடத்துகிறது என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாக கட்சிக் கூட்டத்திலே குற்றம் சுமத்தியிருக்கிறார் அத்வானி. தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் ஒரு தனி மனிதரை மட்டுமே ஏன் முன்னிறுத்த வேண்டும்? மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை பிரச்சாரத் தில் ஏன் முன்னிறுத்தவில்லை? என்று சீறியிருக்கிறார். வழக்கம்போல் அத்வானியின் கேள்விகளுக்கு பாஸ் சொல்லி விட்டுக் கலைந்திருக்கிறது பா.ஜ.க. தலைவர் கள் கூட்டம். ஏன்னா, இப்போ பாஸ் அவர் இல்லையே!

- ஆனந்தவிகடன் 19.3.2014 பக்.37

Read more: http://viduthalai.in/e-paper/77260.html#ixzz2wYFXXsBM

தமிழ் ஓவியா said...


அற்பங்களா நம் வாழ்வை இழக்கச் செய்வது?


அண்மையில் செய்தி ஊடகங் களில் வெளி வந்த இரண்டு நிகழ்வுகள், நம் நெஞ்சை மிகவும் உலுக்கின. இந்த 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய நிலையில், மக்கள் அவற்றை அனுப வித்து மகிழும் வாய்ப்புள்ள ஒரு புதிய கால கட்டம்!

ஆனால் பல நேரங்களில், மனி தர்கள் தங்களுக்குள்ள ஆறாம் அறிவாகிய பகுத்தறிவைப் பயன் படுத்தி, சிந்தித்து வாழாமல், மனிதத்தை அற்பங்களுக்காக தங்களை இழந்து விடும் பரிதாபத்திற்கு ஆளாகிறார்களே என்ற வேதனை - சமூக நல் வாழ்வை விரும்பும் நம்மைப் போன்றவர்களை வேதனையடையச் செய்கிறது.
பெங்களூருவில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்துத் திருமணம்; நிச்சயிக்கப் பட்டு நடைபெற வேண்டிய முதல் நாள் ஒரு ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பெண் வீட்டுக் காரர்கள். அழைப்பாளர்கள் உட்பட பலரும் வந்திருந்த நிலையில், அவ் விருந்தில் கோழிப் புலவு - சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

உடனே மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்க மறுத்து ஆட்டுக் கறி புலவு - (மட்டன் பிரியாணி) தான் பரிமாற வேண்டும்; காரணம் இந்த கோழிப் புலவு விலை குறைந்தது - மலிவானது. என்று கூச்சலிட்டு ரகளை செய்தனர்; மணமகள் வீட்டாரோ அய்யா எங்கள் சக்திக்கு இதைத் தான் செய்ய இயலும்; அதிக செலவாகும் - மட்டன் பிரியாணியை ஆட்டிறைச்சி புலவைப் போட முடியாது என்று கெஞ்சிப் பார்த்தனராம். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் ஒப்பவில்லை; வந்த விருந்தினர் எவ்வளவோ சமாதானம் கூறி ஒரு சுமூக நிலையை ஏற்படுத்த முயன் றனராம். அது வெற்றியடையாமல் நிச்சயிக் கப்பட்ட திருமணமே நின்று போனதாம்!

அப்பெண்ணின் மன நிலை, பெற் றோர்களின் துன்பம் எப்படி இருந் திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க விடவில்லை அர்த்தமில்லா வீண் ஆடம் பர வளர்ச்சி. என்னே கொடுமை!

படாடோபம், வறட்டுக் கவுரவம் என்பதற்காக ஒரு திருமணமே நின்று போவதா? அற்பங்களாக வாழ்விணை யர்களின் வாழ்வு நீர்மேல் எழுதிய எழுத்தாகி விட்டதே!
திருமணமே நின்று போனதே!

இதுஒருபுறம், இதைவிட அற்பமான மற்றொரு நிகழ்வு; ஒரு மாணவியின் உயிரையே பறித்து விட்டது!

தேர்வு நேரத்தில் ஏனம்மா இப்படி தொலைக்காட்சி (டி.வி.) யைப் போட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டுள்ளாய்? படியம்மா என்று பெற்றோர்கள் கூறினார் களாம்; தொலைக்காட்சி பெட்டியை மூடி விட்டார்களாம்!

உடனே ஆத்திரம் கொண்ட அந்த மாணவி உள்ளே சென்று தற்கொலை செய்து கொண்டு விட்டதாம்!

என்னே கொடுமை! என்னே அறி யாமை! மனித உயிர்களும், உறவுகளும் எவ்வளவு அற்பத்திலும் அற்பமான காரணங்களுக்காக இழக்கப்படுகின்றன.


எண்ணிப் பாருங்கள்! அறிவு ஆட்சி செய்ய வேண்டிய நேரத்தில், உணர்ச்சி கள் மேலோங்கியதன் தீய விளைவு அல்லவா இவை?

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422)

ஒருவன் தன் மனத்தை அதுசெல்லக் கருதிய இடத்திற்கெல்லாம் செல்ல விடாமல், அதனைத் தீய வழியினின்றும் நீக்கி, நல் வழியின் பால் செலுத்துவதே அறிவுடைமையாகும்.

அறிவைக்கூட அது செல்லும் போக்கில் செல்ல விடாமல் கடிவாளம் போட்டு, சரியான பாதைக்குத் திருப்ப வேண்டும் என்கிறபோது

வெறும் உணர்ச்சிகளின் வெள்ளத் தால் அற்பத்திலும் அற்ப - சொற்ப - காரணங்களால், உயிரும், வாழ்வில் திருப்பங்களைத் தரக் கூடிய திருமணம் போன்றவையும் நின்று போகலாமா?

படித்தால் மட்டும் போதுமா? பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? பண்புகளை வளர்க்க வேண்டாமா?

எண்ணுங்கள் மனதில் விடை எழுதுங்கள்.
--------------veramani
Read more: http://viduthalai.in/page-2/77264.html#ixzz2wYFtMJin

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?

தண்ணீர் அருந்தாமல் அதிகநாள்கள் வாழும் மிருகம் எது என்றால், நமக்கு நினைவுக்கு வருவது ஒட்டகம்; ஆனால் சரியான பதில் எலி !

பண்டகா பிக்மா என்ற வகை மீன் தான் மனிதன் உலகில் கண்ட மிகச்சிறிய மீன் இனமாகும். இதன் உடல் கண்ணாடி போன்று இருக்கும். நன்கு வளர்ந்த மீன் ஒரு கட்டெறும்பு சைஸ் இருக்கும்.

ஆறு விநாடிகளுக்கு ஒரு முறை நாம் நம் கண்களை சிமிட்டுகிறோம்.மனிதனின் சராசரி வாழ் நாளில் சுமார் 25,00,00,000 முறை கண்களை சிமிட்டுகிறான்.

Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHaPqrC

தமிழ் ஓவியா said...


வந்தாரய்யா விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்றவுட னேயே அன்றாடம் நகைச்சுவைத் துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமே - வயிறு குலுங்கச் சிரிக்கலாமே என்று பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இன்று முதல் இலவசமாக அவை கிடைக்கும் என்கிற வகையில் அவரின் திருவாய் உதிர்த்த சமாச் சாரங்கள் வர ஆரம்பித்துவிட்டன.

பா.ஜ.க. அணி மதச்சார்புள்ளது போலவும், தி.மு.க. அணிதான் மதச்சார் பற்ற அணி போலவும் பேசி வருகின்ற னர். உண்மையில் மதச்சார்பு, மதச்சார் பற்றது என்பது குறித்தெல்லாம் எனக்குச் சரியாக விளக்கம் புரியவில்லை. இருந் தாலும், முஸ்லிம் அமைப்புகளைக் கூடவே வைத்துக்கொண்டு, தி.மு.க. எப்படி மதச் சார்புபற்றி பேசுகிறது? என்ற கேள்வியை யும் எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் அமைப்புகள் நாங்கள் ஒரு முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தை அமைக்கப் போகி றோம் என்று சொல்லவில்லை; ஆனால், விஜயகாந்த் கூட்டணி வைத்துள்ள பி.ஜே.பி. இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் (வாரணாசியில் நரேந்திர மோடி, 20.12.2013) என்று பேசியுள்ளாரே - இதற்குப் பெயர்தான் மதச்சார்பு என்று பெயர்.

ஸ்ரீராம பிரான், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகி யோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் (தினமணி, 16.10.2000) என்று பி.ஜே.பி.யின் குரு பீடமான ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ்.சுதர்சன் பேசினாரே - இதற்குப் பெயர்தான் மதவாதம் என்று பெயர்.

இந்த அரிச்சுவடியைக்கூட நாம் கற்றுக் கொடுக்கவேண்டியள்ளது.

சரி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இதே விஜயகாந்த் என்ன சொன்னார்?

கேள்வி: அயோத்தியில் பாபர் மசூ தியை இடித்ததுபற்றி என்ன நினைக்கிறீங்க?

விஜயகாந்த்: காட்டுமிராண்டித்தனம் - அநாகரிகமான செயல். டாக்டர் கலைஞர் சொன்னது மாதிரி... ஆதிகாலத்துக்கு திரும்பிப் போயிட்டது போல் இருக்கு!

நம் நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சி னைகள் இருக்கு சார். அதையெல்லாம் தீர்க்கிறதை விட்டுவிட்டு, அவசர அவசர மாக தகராறு பண்ணி ராமர் கோவில் கட்டுவதுதான் முக்கியமா?

உதாரணத்துக்கு பாருங்க, வடநாட்டில் வெள்ளம், தென்னாட்டில் தண்ணீர் பஞ்சம்; இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பாரதீய ஜனதா கட்சிக்காரங்க பாடுபட்டி ருந்தா பாராட்டலாம். வடக்கே ஓடுற கங்கையை கடலில் வீணாக கலக்கிற தண்ணியை தெற்கே திருப்பி விடுறதுக்கு ஒரு கரசேவா நடத்தியிருந்தாங்கன்னா அது நியாயம்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அதுக்கு ஒரு கரசேவை நடத்தியிருந்தாங் கன்னா அது நியாயம்.

எவ்வளவோ பொருளாதாரப் பிரச்சி னைகள் இருக்கு - அதுக்கு ஒரு கரசேவா செஞ்சிருந்தா உத்தமம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு ராமர் கோவில் கட்டினா, வெள்ளச் சேதத்தை தடுத்திட முடியுமா?

தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமா? இல்லே... நாட்டுக்குத்தான் சுபீட்சம் வந்திடுமா?

என்று சொன்னவர்தான் விஜயகாந்த். பி.ஜே.பி.யின் மதவாதத்தைக் கண்டித்தவர்தான்.

எந்தப் பத்திரிகையில்?

அவர் சம்பந்தப்பட்ட சினிமா இதழ்தான் - அதன் பெயர் ஹீரோ (1993, ஜனவரி).

அதில்தான் இப்படி பேட்டி கொடுத்துள் ளார். அந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் பா.ஜ.க. அணி மதச் சார்புள்ளது போல வும், தி.மு.க. அணிதான் மதச்சார்பற்ற அணி போலவும் பேசி வருகின்றன என்று குறிப் பிட்டுள்ளார்.

இதற்குப் பெயர்தான் சந்தர்ப்பவாதம் என்பது...

Read more: http://viduthalai.in/page-5/77253.html#ixzz2wYIIm3gy

தமிழ் ஓவியா said...


பத்திரிகையாளர்களைத் தாக்குவதா? விடுதலை ஆசிரியர் கண்டனம்!


காஞ்சிபுரத்தில் 19.3.2014 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாலையை மறைத்து போக்குவரத்தையே திருப்பிவிட ஆணையிட்ட நிலையில், அதை உடனே செய்யாமல் தாமதித்த தால் ஆத்திரம் கொண்ட டாக்டர் மைத்திரேயன் எம்.பி., ஒரு நாற்காலியைப்போட்டு நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு ரகளை செய்ததை படம் எடுத்த தினமணி புகைப்படக் கலைஞர், கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்ட அ.தி.மு.க.வின்மீது புகார்கள் கொடுக்கப்பட்ட பின்பும்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் தத்தம் கடமையைச் செய்கையில், அதற்காக ஆத்திரப் படுவது, அவர்களைத் தாக்குவது என்பது ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல; சர்வாதிகாரிகள், பாசிஸ்ட் ஆட்சியில்தான் அப்படி நடைபெறும். கண்டும் காணாததுபோல் அரசோ, காவல்துறையோ இருக்கக் கூடாது.

உடனே இதற்குப் பரிகாரம் தேடிட, நடவடிக்கை எடுக்க அனைத்துப் பத்திரிகையாளர்களும், ஊடகங் களும் குரல் கொடுத்து, தவறு செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.

கி.வீரமணி
ஆசிரியர்
விடுதலை



சென்னை
21.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77321.html#ixzz2we3kE01Q

தமிழ் ஓவியா said...


குஷ்வந்த்சிங் அவர்களுக்கு நமது வீரவணக்கம்!


பிரபல ஆங்கில எழுத் தாளரும் பத்திரிகையாளரு மான குஷ்வந்த்சிங் அவர்கள் தனது 99ஆம் வயதில் மறைந்தார் என்பது மிகப் பெரிய இழப்பாகும்! நிறை வாழ்வு வாழ்ந்த அவர் 100 ஆண்டை எட்டாமல் போய் விட்டாரே!

நம் நாட்டின் மிகப் பெரிய சிந்தனையாளர்; நகைச்சுவை கலந்த எழுத்தாளர். ஏராளமான ஆங்கில புத்தகங்களை 2013 வரை எழுதிக் கொண்டிருந்தவர். 2013இல் தனது சுய சரிதையை எழுதியவர். அவரே ஒரு திறந்த புத்தகம். எதையும் ஒளிவு மறைவின்றி எழுதும்திறந்த உள்ளத்தவர். மதச் சார்பற்ற அரசு (Secular) நடைபெற வேண்டும் என்று விரும்பியவர். தன்னை ஒரு கடவுளைப்பற்றிய கவலைப்படாத வன் (Agnostic) என்று பிரகடனப்படுத்தியவர்!

2003ல் - 2004 பொதுத் தேர்தலுக்குமுன்பு, குஜராத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா, மதவெறியின் ஓங்கிய குரல் - இவை கண்டு மனம் வெதும்பி, (‘The end of India’)
இனிமேல் இந்தியா இருக்காது;

இந்தியா எனும் நாட்டையே காணாமற் போகக் கூடிய அளவில் நாட்டின் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். மத வெறி அமைப்புகள் செயல்பட்டன; குஜராத் 2002-இல் இன அழிப்பு சிறுபான்மை இஸ்லாமியர்கள் படுகொலை பற்றி ஒரு சிறு நூலே எழுதியுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் அது ஒரு சிறந்த எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

அவருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
தலைவர். திராவிடர் கழகம்

சென்னை
21.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77314.html#ixzz2we3tSsnt

தமிழ் ஓவியா said...


பரிதாபமே காரணம்

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கிற உணர்ச்சிக்கோ, பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள் மீது உள்ள பரிதாபமே!
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/77297.html#ixzz2we4KL638

தமிழ் ஓவியா said...


Time to Make a Difference? - மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?


Time to Make a Difference?

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?

- குடந்தை கருணா

TIme to Make a Difference?

If there is so called ‘Modi wave’, why then Modi contests from two constituencies?

Modi is contesting from Vadodara of Gujarat. Fine. Only last week, BJP tipped his name for Varanasi and pushed out Murali Manohar Joshi, from that constituency against his wishes.

I have questions to Modi. But, Modi never dares to answer others’ questions so far. Hence my questions are directed to BJP.

1. You had been claiming and boasting all through these days, that there is Modi wave across the globe (not alone in India), why then you had fielded Modi for two constituencies?

2. If incidentally or accidentally, Modi wins from both constituencies, which constituency he will prefer to hold, Varanasi or Vadodara?

3. If people of these two con stituencies direct this question to Modi, what will be his honest reply?

4. Will BJP or Modi can boldly inform in advance about this?

5. Suppose, Modi prefers to hold Vadodara and resign from Varanasi, why then Joshi should be pushed to Kanpur? Joshi could have contested from Varanasi or instead Modi can contest from Kanpur also, because, even if he wins, he is going to resign?

Hope BJP will provide a honest reply. Yes, it is time to make a difference.

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்? மோடி அலை என்பது உண்மையா னால், மோடி எதற்காக இரண்டு தொகு திகளில் போட்டியிட வேண்டும்?

குஜராத் வதோதரா தொகுதியிலி ருந்து மோடி போட்டியிடுவார் என பிஜேபி அறிவித்துள்ளது. நல்லது. போன வாரம், பிஜேபி வெளியிட்ட பட்டியலில் மோடி உத்தர பிரதேசம் வாரணாசியில் போட்டியிடுவார் என அறிவித்தது.

அந்தத் தொகுதியில் சென்ற முறை வெற்றி பெற்ற பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியை கான்பூருக்குத் தள்ளிவிட்டு, மோடியை அறிவித்தது. மோடிக்கு ஒரு கேள்வி. ஆனால், மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. ஆகவே பாஜகவிற்கு நமது கேள்வி.

1. மோடி அலை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வீசுவதாக இத்தனை நாள்களும் பிதற்றிக்கொண்டிருந்தீர்களே, பின் ஏன் மோடியை இரண்டு தொகுதிக ளில் வேட்பாளராக நிறுத்துகிறீர்கள்?

2. எதேச்சையாகவோ, விபரீத மாகவோ, மோடி இரண்டு தொகுதி களிலும் வெற்றி பெற்றால், எந்தத் தொகுதியை அவர் தக்கவைத்துக் கொள்ள விரும்புவார்? வதோதராவா அல்லது வாரணாசியா?

3. அந்த இரண்டு தொகுதிகளின் மக்களும், மோடியிடம் இந்தக் கேள் வியைக் கேட்டால், மோடியின் நாணய மான பதில் என்னவாக இருக்கும்?

4. இதற்கான பதிலை, மக்களிடம் தைரியமாக பாஜக சொல்லுமா? அல்லது மோடிதான் சொல்வாரா?

5. தனது மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியைத் தக்க வைத் துக் கொள்ள மோடி முடிவெடுத்து, வாரணாசி தொகுதியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டால், பின் எதற்காக, ஜோஷியை ஏன் கான்பூர் தொகுதிக்கு விரட்டி விட்டு, மோடியை நிறுத்த வேண்டும்? பேசாமல், ஜோஷியை, வாரணாசி தொகுதியில் நிறுத்தி, மோடியை கான்பூர் தொகுதி யில் நிறுத்தியிருக்கலாமே? வெற்றி பெற்றால் கூட, பதவி விலகல் செய் வது என்றால் எந்த தொகுதியாக இருந்தால் என்ன?

பாஜகவிடமிருந்து நேர்மையான பதில் வரும் என எதிர்பார்ப்போம். ஆம், மாற்றத்தை உருவாக்குவ தற்கான தருணமல்லவா?

Read more: http://viduthalai.in/page-2/77311.html#ixzz2we52R5sq

தமிழ் ஓவியா said...


நாணயத்தில் மதச் சின்னங்கள்: ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ்


புதுடில்லி, மார்ச் 21- மத்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் மதச் சின் னங்களை பொறிக்கப்பட் டிருப்பது குறித்து விளக்க மளிக்கும்படி ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு டில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாண யத்தில் தஞ்சை பெரிய கோவில் படம் பொறிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாண யங்களில் வைஷ்ணவி தேவி சிலை பொறிக்கப்பட் டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி நீதிமன் றத்தில் பொதுநல மனு தாக் கல் செய்யப்பட்டது.

அதில், நாணயங்களில் மதச் சின்னங்களை பொறிப்பது மதச் சார்பின்மைக்கு எதி ரானது. எனவே, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 3 வாரத்திற்குள் விளக்கமளிக்கும்படி இந் திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/77308.html#ixzz2we64P7La

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னது என்ன?

தர்மசாலா, மார்ச் 21-ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக்கம் என கூறிய படேலுக்கு, மோடி சிலை வைப்பதன் மூலம் அவர் படேலின் வரலாறு மற்றும் கருத்துக்களை படிக்கவில்லை எனத் தெரிகிறது என இமாச்சலப் பிரதேசத்தில் ராகுல் பேசினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தர்ம சாலாவில் பேசியதாவது:

ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக் கம், அது நாட்டை அழித்துவிடும் எனக் கூறினார் சர்தார் வல்லபாய் படேல். அவ ருக்கு முழுக்க, முழுக்க ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் வளர்ந்த பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிலை அமைப்பதுதான் வேடிக்கை. இதிலிருந்து படேலின் வரலாறு மற்றும் கருத்துகளை மோடி படிக்கவில்லை எனத் தெரிகிறது.

மத, ஜாதி மற்றும் பகுதி ரீதியாக மக்களை பிரித்து விரோத அரசியலை பா.ஜ நடத்துகிறது.

நம்நாட்டில் மக்களவைத் தேர்தல் எண்ணங்களின் போராட்டமாக உள்ளது. ஏழைகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் பணக்காரர்கள், சக்தி வாய்ந்தவர் களால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என எதிர்கட்சி நினைக்கிறது. அவர்களி டம் ஏழைகளை பற்றிய சிந்தனையே இல்லை.

- இவ்வாறு ராகுல் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-8/77309.html#ixzz2we6Dobxa

தமிழ் ஓவியா said...


உதிர்ந்த மலர்கள்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

கடவுள் ஒருவர் உண்டு. அவர் உலகத்தையும் அதில் உள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி, அவற்றின் நடவடிக் கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன்னிச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன்.

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங் களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு, பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்டதாகும். புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சி என்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை என்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்குப் பெரும் விரோதிகளாவார்கள்.

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போலாகும்.

நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து, நானும் சுயமரியாதைக்காரன்தான்; என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது;

புராணங்கள் எல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாச மென்றும் பேசி, மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்குப் புராண பிரச்சாரத்தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால், பண்டிதர்களைக் கிட்டசேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6XH5tC

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை பலவிதம்!

மழைக் கடவுள் இந்திரனைத் திருப்தி செய்து மழை பெய்ய வைப்பதற்காக, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பல்லியா ஜில்லாவில் சில கிராமங்களில் வறண்ட நிலங்களில் பெண்கள் நிர்வாணமாக ஏர் பிடித்து உழுதனர்.

ஆண்கள் சிவனுக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். முஸ்லிம் பெண்கள் கூட தங்கள் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு மழைக்காகப் பிரார்த்தித்தனர். ஆனால், ஒன்றும் பலிக்கவில்லை. இதுவரை மழை பெய்யாமல் வறட்சியே நீடிக்கிறது.

ஜப்பான் பிரதமர் டாகியோ பகுடா. இவர் வீட்டின் வெளியே இரண்டு சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. எபிஸூ, டைகோகு என்று இந்தச் சிலைகளுக்குப் பெயர். இவைகளினால் தனக்கு எப்போதும் அதிர்ஷ்டம் என்று எண்ணுகிறார்.

பார்சிகள் அக்கினியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். இதனால் தான் அவர்கள் பிணத்தைக் கொளுத்துவது இல்லை.

மொராக்கோவில் காபிலிஸ் என்ற இனத்தவர் இருக்கிறார்கள். இவர்களிடம் ஒரு விநோதமான பழக்கம், திருமணத்தன்று மணப்பெண்ணின் தொடையில் இலேசாகக் கத்தியால் கீறி இரத்தம் சிந்தச் செய்கிறார்கள். கணவனுக்காக இரத்தம் சிந்தவும் தயார் என்பதை காட்டவே இந்தச் சடங்கு.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், திருமண விருந்தில் உணவு உண்ணும் போது, உடம்பில் சட்டையோ, துண்டோ போட்டுக் கொண்டு சாப்பிடக் கூடாது. இப்படி ஒரு மூடநம்பிக்கை!

தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், சாபர்மதி, குஜராத் மாநிலம்.

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6iHN1P

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துளிகள்!

மனிதன் - ஆம்; அவனால் ஒரு புழு, பூச்சியைக் கூட படைக்க முடியாது. ஆனால், எண்ணற்ற கடவுள்களை அவன் இன்னும் படைத்துக் கொண்டே இருக்கிறான்
- மண்டெய்ன்

எதிர்ப்பின் மூலமே உண்மையான மனிதன் உருவாகிறான். காற்றை எதிர்த்து மேலே செல்லும் காற்றாடி போல அவன் எதிர்ப்பைத் தாக்கித் தாக்கி முன் னேறுகிறான்.
- ஹென்றிஜேம்ஸ்

மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள் செல்வம்; ஆடம்பரம் நாமே தேடிக் கொள்ளும் வறுமை.
- சாக்ரட்டீஸ்

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6rXVez

தமிழ் ஓவியா said...

அய்யாவுரை

ஒரு மனிதனுக்கு தான் செய்த அயோக்கியத் தனங்களுக்குப் பரிகாரம் காணவும், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தான் கடவுள் பக்தியும், வணக்கமும் ஏற்படுகிறதே அல்லாமல், வேறு காரணம் எதுவும் இல்லை.

பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும், மற்ற மனிதர்களுக்கு தன்னால் ஆன தொண்டு, உதவி செய்ய வேண்டும் என்பதையும் பெரிதும் தத்துவமாகக் கொண்டது ஆகும்.

பக்தி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றுமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7lPyrO

தமிழ் ஓவியா said...

காண்டேகர் பேசுகிறார்!

மனிதன் கல்லால் ஆன தெய்வமும் அல்ல: இயற்கைக்கு அப்பால் ஓர் அடி கூட எடுத்து வைக்காத மிருகமும் அல்ல.

கண்ணுக்குத் தெரியாத தெய்வத்துக்கோ, உப தேசத்துக்கு எளிதாகவும், நடைமுறைக்குக் கடினமாகவும் உள்ள உயிரில்லாத தத்துவ ஞானத்துக்கோ, தன் கனவிலே உதித்த கற்பனைகளைப் பிறர் மண்டையிலே ஏற்றி பளுவை உண்டாக்கும் மகாத்துமாவுக்கோ, பண்டி தனுக்கோ, புத்தகத்துக்கோ அல்லது வேறு எவருக்கோ அவன் அடிமை அல்ல.

தகவல்: காட்டூர் தம்பு

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7rsreu

தமிழ் ஓவியா said...

புத்தரின் குறிக்கோள்

மனிதர்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லுவது புத்தருடைய முதல் குறிக்கோளாக இருந்தது.

அவன் உண்மையை கண்டறிய - சுதந்திர உணர்ச்சி யோடு செல்லச் செய்ய வேண்டும் என்பது அவருடைய இரண்டாவது குறிக்கோளாக இருந்தது.

எதையும் பகுத் தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சியைக் கொல்லக் கூடிய மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பது புத்தருடைய மூன்றாவது குறிக் கோளாக இருந்தது.

- புத்தா தம்மா என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7yzkTl

தமிழ் ஓவியா said...

ஆண்டவனைப் படைத்ததே மனிதன்தான்!

என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்கு அப்பால் எந்தக் கருத்துக்களும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் மனிதன் தான் - மனிதன் ஒருவன்தான் - எல்லா பொருட் களையும், எல்லா கருத்துகளையும் படைப்பவன். அற்புதங் களைச் செய்பவன் மனிதன் ஒருவனே.



இயற்கையின் சக்திகளை ஆட்சி கொள்கிற எதிர்கால எஜமானன் மனிதனே. மனிதனின் உழைப்புத்தான் - மனிதனின் திறமை மிக்க கைகள் தான் - இவ்வுலகில் உள்ள அழகான பொருட்கள் அனைத்தையும் சிருஷ்டித்துள்ளன. கலையின் வரலாறும், விஞ்ஞானத்தின் வரலாறும், தொழில் நுணுக்க இயலின் வரலாறும் இதை நமக்கு மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

மனிதனின் பகுத்தறிவுக்கும், மனிதனின் கற்பனைக்கும், மனிதனின் ஊக்கத்துக்கும் உருவகமாக இருப்பவற்றைத் தவிர, வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. எனவே தான், நான் மனிதனை வணங்கு கிறேன்.

போட்டோ பிடிக்கும் கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால், யதார்த்தத்தில் இருப்பதை காமரா படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆனால், கடவுள் என்பதோ சர்வ ஞானமும், சர்வ சக்தியும் பெற்று பரம நியாயத்துடன் நடந்து கொள்ள விரும்புகிற, சக்தி பெற்றிருக்க முடிகிற ஒரு புருஷனாக தன்னைப் பற்றி தானே புனைந்து கொண்ட ஒரு மனிதனைக் காட்டுகிற போட்டோ படமேயாகும்.

- மாக்ஸிம் கார்க்கி

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we86Q7HR

தமிழ் ஓவியா said...


பெரியார் கைத்தடி


பாம்பையும்
பார்ப்பானையும்
கண்டால்..
பாம்பை விட்டு விடு
பார்ப்பானை அடி..!
பேசியது பெரியார்
கைத்தடி!!

- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/77360.html#ixzz2wjyknvVq

தமிழ் ஓவியா said...


மூத்த பத்திரிகையாளர், பகுத்தறிவாளர் குஷ்வந்த் சிங் மறைந்தார்?


99 வயதான மூத்த எழுத்தாளரும் பகுத்தறிவாதி யுமான குஷ்வந்த் சிங் காலமானார். பத்திரிகை உலகிலும், எழுத்து உலகிலும் தனக்கென நிரந்தரமான இடத்தைப் பெற்றிருந்தவர் குஷ்வந்த் சிங் (வயது 99). டெல்லியில் வசித்து வந்த இவர் சமீப காலமாக வயோதிகத்தின் காரணமாக உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை (20.3.2014) மதியம் மரணம் அடைந்தார். இதை அவரது மகனும், பத்திரிகையாளருமான ராகுல் சிங் அறிவித்தார். அவருக்கு மறைந்த குஷ்வந்த் சிங், தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹதாலி என்ற இடத்தில் 1915-ம் ஆண்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி பிறந்தார். டெல்லி மாடர்ன் பள்ளியில் பள்ளிப்படிப்பு, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, லாகூர் அரசு கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு படித்தார்.

ஆரம்ப காலத்தில் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் செய்தார். 1947-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் பத்திரிகை துறையில் கால் பதித்தார். சொந்தமாக யோஜனா என்ற பத்திரிகை நடத்திய அவர் பின்னாளில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் ஆசிரியராக உயர்ந்தார்.

ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங் எழுதிய கட்டுரைகள் அவருக்கு பெயரைப் பெற்றுத்தந்தன. மரணத்தை தழுவுவதற்கு முன்பு கடந்த மாதம் வரை பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு, (1980-1986 ஆண்டுகளில்) பதவி வகித்தார். 1974-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஆனால் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை வெளியேற்ற மத்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுத்ததை ஆட்சேபித்து, பத்மபூஷண் விருதை திரும்ப அளித்து விட்டார். 2007-ம் ஆண்டு, நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த குஷ்வந்த் சிங்கின் மனைவி கவால் மாலிக் 2001-ல் மரணம் அடைந்தார். குஷ்வந்த் சிங்குக்கு ராகுல் சிங் என்ற மகனும், மாலா என்ற மகளும் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page4/77362.html#ixzz2wjzFNM6V

தமிழ் ஓவியா said...


ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க


இலங்கையை இந்தியாவோடு இணைக் கும் தீர்மானத்தை இலங்கை தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண் டும். சு.சாமி (1-5-2000)

தீர்வுக்கான எந்த உத்தரவாதமும் பெறாமல் இலங்கை அரசுக்கு உதவி செய்வதன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்கின்றது. சு.சாமி ( 3-5-2000)

சிலர் தனி ஈழம் கோருகின்றார்கள், எங்கே இருக்கின்றது ஈழம்? புலிகளே அதை இன்னும் அறிவிக்கவில்லையே கிருஷ்ணமூர்த்தி (பாஜக, துணைத் தலைவர்) தில்லியில் (6-5-2000)

திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சி களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிரமோத் மகாஜன் ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. 8/05/2000 அன்று வாஜ்பாய் (அண்ணன் வைகோவின் அண்ணன்)

அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதில் நார்வே, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கும் இருக்கின்றது. - லட்சுமண் கதிர்காமர் (22-5-2000)

இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக கட்டுப் படும் ராமதாஸ் (2-6-2000)

நீண்டகால நண்பனான இந்தியாவை புரிந்து கொள்வதுதான் இலங்கை பிரச் சினையை தீர்க்க உதவி புரியும். திருச்சியில் ஆறுமுக தொண்டைமான், முன்னாள் இலங்கை அமைச்சர், (2-6-2000)

இந்திய அரசு தற்போதைய சூழலை பயன்படுத்தி, பிரபாகரனையும், பொட்டுஅம்மானையும் கைது செய்ய வேண்டும். சு.சாமி (2-6-2000)

செக்கோஸ்லோவேகியா போல இலங்கை பிரிக்கப்பட வேண்டும். கலைஞர் (4-6-2000)

இந்திய அரசு தன்னுடைய நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. (5-6-2000) பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு தெரி யாது. அப்படியே, கோரிக்கை வைக்கப் பட்டாலும், புலிகள் மீதான தடையை நீக்க முடியாது. - வெங்கையா நாயுடு (11-5-2000)

புலிகள் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டி ருப்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். - அத்வானி (14-5-2000)

அவர்கள் தனி ஈழத்தையும் காண விரும்பவில்லை, இலங்கை அரசுக்கும் உதவ விரும்பவில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவின் நிலை குழப் பத்திற்குரியதாகவே இருக்கின்றது. - தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்புவில் (28-5-2000)

நான் இந்துத்வ சக்திகளை எதிர்க் கிறேன். நான் சிறையிலிருந்த பொழுது, அவர்கள் தங்களது ரகசிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல் வதை அறிந்தேன். திராவிட இயக்கத்தை வலுப்படுத்த, பாஜகவை எதிர்ப்பது என் முதன்மை கடமையாகின்றது. காங் கிரஸை பொறுத்தவரை அது ஒன்றிரண்டு தவறிழைத்திருந்தாலும், அது மதச் சார்பின்மையை உறுதியாய் பேணுவதில் அக்கறையோடு இருக்கின்றது. ஆகவே, நாட்டின் நலன் கருதி நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன். - வைகோ (2004) 8 ஜனவரி 2011 ஆம் ஆண்டு கௌ காத்தியில்(அஸ்ஸாம்) பாஜகவின் தேசிய செயற்குழுவில் பேசிய நிதின் கட்கரி...

"புலிகளைத் தோற்கடித்த போருக்கு பிறகு, இலங்கை தன்னை மீண்டும் கட்டமைத்து வருகின்றது. மக்கள் மீள் குடியிருப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் சுயமரியாதையோடு மய்ய நீரோட்டத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்."
யாழ் கோட்டையில் புலிகள் முற்றுகை யிட்டிருந்த போது..மே மாதம் 4 (4-5-2000) ஆம் தேதி ஜஸ்வந்த் சிங், பாஜக அமைச் சரவையின் வெளியுறவு துறை அமைச்சர் ராஜ்யசபையில் உரையாற்றும் போது

இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கையோடு தொடர்பில் இருக்கின்றோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்

ஆக, புலிகள் வலுவாக இருந்த போதும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும்...காவி, பாஜக கும்பல் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை...

காவிகளுக்குக் காவி சாமரம் வீசிக் கொண்டு கருப்புத் துண்டோடு...ஈழம் பற்றி பேசுபவர்களை என்ன செய்ய வேண்டும் என்று மக்களே முடிவு செய்யுங்கள்.

- மகிழ்நன் பா.ம

Read more: http://viduthalai.in/page4/77365.html#ixzz2wjzmFr6X

தமிழ் ஓவியா said...


ஏழுமலையான் கருணை

பக்தி ஸ்தலம் திருமலையில் தொடர்ந்து 6ஆம் நாளாக காட்டுத் தீயாம். செம் மரங்கள், சந்தன மரங்கள், அரிய வகை மூலிகைகள் அழிந்து விட்டனவாம். தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடுகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருப்பதி தேவஸ்தானத் தால் அரக்கோணம் அய்.என்.எஸ். இராஜாளி கடற்படை மற்றும் விசாகப் பட்டினம் கடற்படை வீரர்கள் அழைக்கப் பட்டிருக்கின்றனர். பக்தர்கள் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான். ஆனால் நமக்கு ஒன்று புரியவில்லை. திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கும் வெங்கடாஜலபதி என்ன ஆனார்? தம் பக்தர்களுக்கு சோத னையாக உள்ள அந்த நெருப்பை அணைப் பதற்கு அவர் ஏன் முயற்சி செய்யாம லிருக்கிறார்? இந்த மாதிரி நாம் கேள்வி கேட்டால் இப்படி சொல்லி அவர்கள் சமாளிப்பார்கள். அதாவது பகவான் ஏதோ குறையைக் கண்டுபிடித்திருக்கிறார், அதனால்தான் தன் உக்கிரத்தைக் காட்ட அக்னியை ஏவி விட்டிருக்கிறார் என்று.

அப்படியானால் கடவுளின் உக்கிரம் தணியும் வரை எரியவிட வேண்டியது தானே. அதை கஷ்டப்பட்டு அணைக்கப் போய் லார்ட் வெங்கியின் கோபத்திற்கு ஆளாவானேன்? சிறிது நாட்களுக்கு முன் னால் சிறுத்தை புலியை நடமாடவிட்டு பக்தர்களை பயம் காட்டி வைத்தார். இப்பொழுது தீயை மலைப் பகுதி முழு வதும் கொழுந்து விட்டு எரியச் செய் கிறார். ஒரு வேளை பக்தர்கள் தன்னைத் தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்க வில்லையோ என்னவோ?

செம்மரங்களும், சந்தன மரங்களும் விலை மதிப்பில்லாதவை. அவை அழிந்து கொண்டிருக்கின்றன. காட்டில் உள்ள உயிரினங்கள் எல்லாம் பற்றி எரிகின்ற நெருப்புக்கு பலியாகிக் கொண்டிருக் கின்றன. ஆனால் கடவுள் காப்பாற்ற வில்லை. ஆனால் நாம் குடும்பத்தோடு காசு பணத்தை கடன் வாங்கி சென்று மொட்டையடித்து ஏழுமலையான் நம்மை காப்பாற்றுவான் என்று நம்பிக் கொண்டி ருக்கிறோம். ஏழுமலையானே! உன்னை தாங்கும் மலைகள் எரிந்து கொண்டிருக் கிறது அப்பனே! பக்தர்களை மொட்டை யடிப்பது பத்தாதென்று மலைகளையும் மொட்டையாக்குகிறாயே!

ஏழுமலையானே! உன் கருணையே கருணை!

- இசையின்பன்

Read more: http://viduthalai.in/page4/77367.html#ixzz2wk0INMKz

தமிழ் ஓவியா said...


கடவுளை வணங்குபவர்கள் யார்? காட்டுமிராண்டிகள்! - தந்தை பெரியார்


கமுதி- ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழா வில், பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி, சேத் தாண்டி வேட மணிந்து, புதன் கிழமை நேர்த்திக் கடன் செலுத்தினர் (படம்).

அதிகாலையில் நீர்நிலைகளுக்குச் சென்று அங்குள்ள சகதியை அள்ளி எடுத்து தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். பின்னர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்று வலம் வருகின்றனர். சுமார் 2 மணி நேரம் சகதி பூசிய நிலையில் வலம் வந்து இந்த விசித்திர சேத்தாண்டி வேடம் என்ற நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். அம்மை உள்ளிட்ட தோல் நோய்கள் விரைவில் குணமடைய வேண்டி பக்தர்கள் இந்த விசித்திர சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

உடம்பில் சகதி பூசி சுமார் 2 மணி நேரம் வலம் வரும்போது, உடலில் உள்ள கெட்ட நீர் உறிஞ்சப்பட்டு, உடல் நலம் பெறுவதோடு, குளிர்ச்சியும் பெறுகிறது என்பதால் ஏராளமான பக்தர்கள் சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப் படுகிறது.

Read more: http://viduthalai.in/page4/77368.html#ixzz2wk0Qkvi2

தமிழ் ஓவியா said...


கருத்துத் திணிப்புதான் - ஒப்புதல் வாக்குமூலம்


- ஊசி மிளகாய்

ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வெளி யிடும் தேர்தல் கணிப்புகள்பற்றி நாம் நீண்ட கால மாகவே, கூறி வருவது அவை உண்மையான மக்களின் கருத்துக் கணிப்புகள் அல்ல; மாறாக, கருத்துத் திணிப்புகள் தான் என்பதாகும்!

இது ஒரு நல்ல மோசடி வியாபாரமாக மாறி விட்டது! சார்பு நிலை எடுத்து வெளியிடும் ஏடுகள், தொலைக்காட்சிகளுக்குப் பணத்தைக் கொட்டித் தருகின்றன என்பதை கல்கி வார ஏட்டின் (23 மார்ச் 2014) 33-ஆம் பக்கத்தில் - கருத்துத் திணிப்புக்கள் என்ற தலைப்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவலைக் கீழே தருகிறோம்:

கருத்துக் கணிப்புகள் நம்பத் தகுந்தவையா என்று ஏற்கெனவே விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் அம்பலமாகி விட்டன. பணத்துக்காக முடிவுகளை மாற்றிக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் சொல்லுவோம் என்று பதினோரு நிறுவனங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தன.

இதில், இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் நிறுவனங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்தும் சி - ஓட்டர் நிறுவனமும் ஒன்று. இந்த சி - ஓட்டர் நிறுவனம் மூன்றிலிருந்து அய்ந்து சதவிகிதம் வரை புள்ளி விவர முடிவை மாற்றிச் சொல்லி, குறிப்பிட்ட கட்சிக்குக் கூடுதல் இடம் கிடைக்கும் என்று காட்டத் தயார் என்று ஒப்புக் கொண்டதாம். இது கருத்துக் கணிப்பா? திணிப்பா?

இதே போல் தான் 2ஜி அலைக்கற்றைப் பிரச் சினையை (திட்டமிட்டே) திமுகவுக்கு எதிராக கிளப்பின சில ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்; ராசா, ஏகபோக கொள்ளை லாபக் கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்காமல், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைத் தொடர்பு வசதியைச் செய்ய முன் வந்த கம்பெனிகளுக்கெல்லாம் பிரித்துத் தந்து, பெரிய திமிங்கலங்களைப் பாதிப்பு அடையச் செய்தார்,

அதனால் தொலைக்காட்சியில் பயங்கர ஊழல் பலூனை ஏராளமாகக் காற்றடைத்துப் பறக்க விட்டு, இன்றளவும் தேர்தல் முதலீடாக பல கட்சிகள் கொண்டுள்ளன!

காரிருள் சூரியனை மறைத்ததுபோல் உண்மை களை மறைக்க இந்த பிரச்சார உத்தியை சுயலாபங் களுக்காகப் பயன்படுத்துகின்றன - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/77380.html#ixzz2wk168mNo

தமிழ் ஓவியா said...


பிடி - வாதம்!

பிடி - வாதம்!

பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம..க.வும் இருக்கிறது - புதுச்சேரி என்.ஆர். காங் கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப் பட்டது. ஆனால் பா.ம.க.வும், புதுச்சேரியில் போட்டிப் போடுகிறது. கேட்டால் பிஜேபி தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டுக்குத் தான் - புதுவைக்குச் செல் லாது என்று கறாராக - பிடிவாதமாகக் கூறி விட் டார் மருத்துவர் ராமதாசு.

தாடிக்கொரு சீயக்காய் - தலைக்கொரு சீயக்காயோ!

பிடிவாதம் என்கிறது தினமணி. பிடி எனக்கு வாதம் உனக்கு என்று பி.ஜே.பி.யின் தலைமைக்கே பெப்பே! கொடுத்து விட் டதே! பா.ம.க.



வாழ்க அண்ணா நாமம்!

லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆனால், வேலூர் மாநகர, மாவட்ட மாணவர் கள் 2000 பேர் திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போட சபதம்! வாழ்க அண்ணா நாமம்!

ஓ, திருப்பதி ஏழுமலை யானே நாமக் கடவுள்தானே!


தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்

அதிமுக ஆட்சியில் அவதிப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலை தஞ்சை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் வருமாறு:

1) பூமிநாதன் - மயிலாடுதுறை
2) ராஜாங்கம் - கீவளூர்
3) செல்வராஜ் - கீழையூர்
4) சக்ரவர்த்தி - பூலமேடு
5) அப்துல் ரகீம் - திருத்துறைப்பூண்டி
6) சிறீதர் - அபிவிருத்தீஸ்வரம்
7) கோபாலகிருஷ்ணன் - கொற்கை
8) முருகையன் - மாப்படுகை
9) செல்வராஜ் - மஹிலி
10) சாமியப்பன் - நாகூர்
11) சக்திவேல் - கடம்பங்குடி
12) இடும்பையன் - பிராந்தியன் கரை
13) சீனிவாசன் - குரும்பல்.




வாகன சோதனை

தமிழகத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத் தும் வகையில், ரயில் மற் றும் இரு சக்கர வாகனங் களிலும் பறக்கும் படை யினர், துணை ராணுவப் படை உதவியுடன் சோதனை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கார்த்திக் கூறினார்.


அந்தமானில் நிலநடுக்கம்

புதுடில்லி, மார்ச் 22- அந்தமான் மற்றும் நிக் கோபர் தீவுகளில், நேற்று மாலை, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 6.5 ஆக பதிவானது. "இந்த நில நடுக்கத்தால், "சுனாமி' ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும், கடலோர பகுதி களில், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது' என, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77381.html#ixzz2wk1GJWpz

தமிழ் ஓவியா said...


சந்தர்ப்பவாத கூட்டணியா? கொள்கைக் கூட்டணியா?


- குடந்தை கருணா

தமிழ் நாட்டில், பாஜக அணியில், மதிமுக, பாமக, தேதிமுக, கொமுக தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, கூட்டணி அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ராஜ் நாத் சிங் அறிவித் துள்ளார். தமிழ் நாட்டில், இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் சேர்ந்துள்ள தேதி முக, பாமக இரண்டும், கூட்டணியில் சேர்வதற்கு முதல் நிமிடம் வரை, ஒருவரை ஒருவர் சேற்றை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரே அணியில் சேர்த்திடும் ஒரே புள்ளி; ஏதாவது ஒரு இடம் கிடைக்காதா என்கிற ஆசை யைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

இவையெல்லாம் மக்கள் கருத வாய்ப்பில்லை என இரு கட்சியும் நினைக்கின்றன.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அதுவும் பாஜக அணி; அதன் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் பட்டுள்ளார். பாஜக அணியில் உள்ள பாமகவும் புதுச்சேரியில் வேட் பாளரை நிறுத்த என்ன கொள்கை இதில் இருக்கிறது என்றெல்லாம் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையா?

பாஜக தனது தேர்தல் அறிக்கைக் காக மக்களின் கருத்துக்களை கேட்பதாகக்கூறி, ஒரு இணைய தளத் தையும் உருவாக்கியது. அக்டோபர் 2013-இல் பாஜக வெளியிட்ட செய்தி யில், மக்கள் கருத்துக்களையும் பரி சீலித்து, தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்திடுவோம் என அறிவித்தது. அத்துடன் இன்னொரு செய்தியும் பாஜக கூறியது. அதாவது தங்களின் அடிப்படைக் கொள்கையான, ராமனுக்கு அயோத்தியில் கோவில் கட்டுவது, காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள சிறப்பு தகுதி தரும் 370 பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் தகுதி போன்ற கொள்கைகள், எந்த சூழ் நிலையிலும் பாஜக கைவிடாது என பாஜக அறிவித்துள்ளது. (தி இந்து 19.10.2013).

இப்போது தமிழ் நாட்டில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சி களுக்கு ஏதேனும் பொதுத் திட்டம் உண்டா?

பாஜக கூறிய அவர்களின் அடிப்படைக் கொள்கையான ராமர் கோவில், 370 பிரிவு ரத்து, பொது சிவில் சட்டம் இதை ஏற்றுக் கொள் கிறார்களா?

நாணயமான பதிலை, விஜய காந்த், ராமதாஸ், வைகோ இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/77385.html#ixzz2wk1f0jcA

தமிழ் ஓவியா said...


மற்ற மக்கள்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


இந்துமத தத்துவம்

இந்துமத தத்துவம்

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக் கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர் களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகால் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம்.
சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண் டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல் செத்து சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம். இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந் தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3EsPv5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி யொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம். நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப்படல் வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3MqBpO

தமிழ் ஓவியா said...


திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்

திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம். சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக்கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்ட போது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார். திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட் படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும். இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3Tqfus

தமிழ் ஓவியா said...

தொழிலாளர் தூது

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ்பகதூர், சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும், தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களைப் பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற் கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.

தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக்காரர்கள் கொடுமைப் படுத்திய விஷயங்களையும் சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்கு செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றையும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகிறது. பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபமும் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கின தைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மன வருத்தமடைந்ததாகவும் தெரியவருகின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரச்சாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுக்கவனத்தைச் செலுத்தி அவை களுக்குப் பரிகாரம் தேடுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.

போலீஸ் இலாகா மெம்பரின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்தல போலீஸ் அதிகாரி களின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளைப் பின்வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக் கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசரமானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரி களின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வ தாகத் தெரியவருகிறது.
ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப்புத்தியாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டிருப்ப தாகவும் தெரியவருகின்றது. ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினா லெல்லாம் தொழிலாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமே யொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப்பற்றி மாத்திரம் நாம் திருப்தி யடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்ல வென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரை களும் பிரிட்டிஷ் என்பதான ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வருவார்களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்க மிருக்கிறதா? தேசிய இயக்கங்கள் என்பதும் தேசியத்தலைவர்கள் என்பவர்களும் ரயில் வேக்காரர்களுடையவும், சர்க்காருடையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர் களாகவும் இருக்கத் தக்கவர்களாகிவிட்டார்கள். எனவே என்றைக் காவது தொழிலாளர் களும் கூலிக்காரர்களும் இந்த நாட்டில் சுயமரியாதை யோடும், சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங்களையும் போலித்தலைவர்களையும் நம்மால் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவிவிழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுய மரி யாதையில் மாத்திரம் கவனம் இருந்து கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - கட்டுரை - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3auQIo

தமிழ் ஓவியா said...


தேர்தல் வினோதங்கள்


சுயேச்சையாகப் போட்டியிடும் மனைவி!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் தன் கணவர் கதிர் ரானாவை எதிர்த்து அவரின் மனைவி ஷாகிதா பேகம் சுயேச்சையாகப் போட்டி யிடுகிறார்.

விசாரணை நாடகம்!

தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச் சர் சம்பத் வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாற் றின்மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ஓர் அமைச்சரை ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் உண்மையின் அடிப்படை யில் அந்த அறிக்கைதான் இருக்குமா?
இது ஒரு விசாரணை நாடகமே!

துடைப்பம்

மும்பையில் சாலையைத் துடைப்பத் தால் சுத்தப்படுத்தினார்கள். துடைப்பத் தைத் தேர்தல் சின்னமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மீராசன்யால்.

ஆளுநராகத் தயாராவீர்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரதமரானால், இங்குள்ள அனைவரும் ஆளுநராக பல்வேறு மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார் கள்.

- பாலகங்கா, முன்னாள் எம்.பி., அ.இ.அ.தி.மு.க.
(தினமணி, 21.3.2014, பக்கம் 7)

வெற்றிக்காக ஜோசியம் கேட்கும் வேட்பாளர்கள்

பெர்ஹாம்பூர், மார்ச் 22-வெற்றிக்காக ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்கும் வேட்பாளர்கள் ஒடிசா மாநிலத்தில் அதிகமாகிவிட்டனர். இதில் கட்சி வேறு பாடு இல்லாமல் வரிசையில் நிற்பதால், ஜோசியர்கள் அனைவரும் ஆலோசனை கூறுவதில் மிகவும் பிசியாக உள்ளனர்.

பெர்ஹாம்பூர் தொகுதி, பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சியாப்ட்நாயக் கூறும் போது, எனக்கு எப்போதும் வெள்ளிக் கிழமைதான் மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்று ஜோசியர் கூறியுள்ளார். நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்துள் ளேன். கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.

எல்லாம் ஜோசியர்களின் ஆலோசனைப் படியே செய்து வருகிறேன். இப்போதும், அவர்களது ஆலோசனைப்படி வெள்ளிக் கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல, கஞ்சம் மாவட்ட காங் கிரஸ் கமிட்டி தலைவர் பாக்பன் கந்தாயத் கூறும்போது, ஜோசியரின் ஆலோசனைப்படி, அவர் குறித்துக் கொடுத்த நாளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கோபால்பூர் தொகுதி யின் வேட்பாளராக கந்தாயத்தை காங் கிரஸ் அறிவித்துள்ளது. கோபால்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளரான பிப்ஹுதி ஜெனாவும், தேர்தல் தொடர் பாக ஜோசியர்களிடம் ஆலோசனைகளை கேட்கிறார். அவர்கள் கூறியபடி, தேர்தல் பிரச்சார வியூகத்தை வகுத்துப் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளரான அலி கிசோர் பட்நாயக் மட்டும் முற்றிலும் மாறாக உள்ளார். அவர் கூறும்போது, நான் எப்போதும் ஜோசி யத்தை நம்புவது இல்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு நல்ல நாள்தான். நான் எனது வேட்பு மனுவை பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி முன்னிலையில் தாக்கல் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். எப்படியோ தேர்தல் நேரத்தில் ஒடிசா மாநிலத்தில் ஜோசியர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாம்.

Read more: http://viduthalai.in/page-5/77413.html#ixzz2wk43vIyN

தமிழ் ஓவியா said...


கல்கியின் சாதுர்யம்!


கேள்வி: கூட்டணியிலிருந்து பிரிந்து விட்ட கம்யூனிஸ்டுகள்பற்றி ஜெ. ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே?

பதில்: அ.தி.மு.க. தலைமை இது குறித்து பேசாதிருப்பதே இத்தனை ஆண்டுகள் கொண்டிருந்த நட்புக்கு அழகு. காரணம், சொல்லப் புகுந்தால், வீண் வருத்தங்களே அதிகரிக்கும். கூட்டணி முறிவுபற்றி கம்யூ னிஸ்டுகளும் அதிகம் வார்த்தைகள் உதிர்க் காமல், கண்ணியம் காப்பது மெச்சத் தகுந்தது.
(கல்கி, 23.3.2014, பக்கம் 38)

கல்கியின் இந்தப் பதிலில் ஜெவைக் காப்பாற்றும் இனவாதம் இருக்கிறதே தவிர, நாணயமான அரசியல் இல்லை.

அகில இந்திய இடதுசாரித் தலைவர்கள் சென்னை வந்து ஜெ அவர்களைச் சந்திக்கக் காத்திருந்தும், முதல்வரைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டது எத்தகைய அரசியல் மற்றும் மனிதப் பண்பு? கல்கிக்கே வெளிச்சம்!

அந்த மூத்த தலைவர்கள் பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஏற்றிருக்கும் தியாகத் தழும்புகள் - அனுபவங்களுக்குமுன் செல்வி ஜெயலலிதா எம்மாத்திரம்!

இரண்டாவதாக இடதுசாரிகளின் மூத்த தலைவர்களான ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, பிரகாஷ் காரத் ஆகியோர் சென்னைக்கு வந்து முதல்வர் ஜெ அவர்களைச் சந்தித்து, கூட்டணி பற்றி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக செல்வி ஜெயலலிதா கையொப்பமிட்டு அறிவித் தாரே - அதன்படி நாணயமாக நடந்துகொண்டாரா? இவ்வளவும் நடந்த பிறகு, சி.பி.எம். அலுவல கத்துக்கு அ.இ. அ.தி.மு.க.வின் தூதராகச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நண்பர்களாகப் பிரிவோம் என்று சொன்னதும், சி.பி.அய்.க்கோ தொலைப் பேசி மூலமாக இதே கருத்தைச் சொன்னதும் தான் கல்கி கூறும் ஜெயலலிதா கடைப்பிடித்த அழகா?

கூட்டணி ஏன் வைத்தோம் - ஏன் பிரிந் தோம்? என்று வெளிப்படையாகக் கூறுவது தானே அறிவு நாணயமான அரசியல்? இது என்ன இரு நபர்களுக்கிடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளா?

ஜெயின் பக்கத்தில் எது தவறோ அதையே அழகாகக் காட்ட முயற்சிக்கும் கல்கியின் ரத்த பாசம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு மேலும் விளக்கம் தேவைப்படாது.
இடதுசாரிகளைப்பற்றி ஜெ அம்மையார் பேசாத பேச்சா? தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறும் அளவுக்குச் சென் றவர்தானே ஜெயலலிதா! இப்பொழுதென்ன அழகு வந்து குதித்துவிட்டது?

கண்ணியம் காத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கல்கி புகழாரம் சூட்டுகிறது. சூடாக அவர்கள் கிளப்பாமல் விட்டார்களே அதுவரை ஜெக்கு இலாபம் என்கிற ஆசையோடு கல்கியால் சொல்லப்பட்டது இது.

அதேநேரத்தில், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி யின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண் டியன் அரசியல் ரீதியாகவே ஜெமீது பாணத்தை ஏவியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குமுன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா, முன் னெடுத்த நிலைக்கு மாறாக, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார். முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த நிலைப் பாட்டிலிருந்து தடம் புரண்டிருக்கிறார். எந்தக் கூட்டத்திலும் பா.ஜ.க.வைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. அவர் பா.ஜ.க.வின் திசை நோக்கிச் செல்லுவதாகத் தெரிகிறது என்று தோழர் தா.பா. கூறியள்ளார்.

இதே கருத்தை வேறு சொற்களில் உச்சரித் துள்ளார் சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன்.

நமக்கு ஆச்சரியம் என்னவென்றால், இந்த இடதுசாரிகள் ஜெவைப்பற்றி இப்பொழுதுதான் புதிதாகப் புரிந்துகொண்டுள்ளார்களா?

எப்பொழுது ஜெ மதச்சார்பற்றவராக இருந் திருக்கிறார்? 1000 அ.தி.மு.க.வினர் அயோத்தி யில் முகாம் என்று, பெட்டிச் செய்தி போட்டதே தீக்கதிர் (7.12.1992) மறந்து போய்விட்டதா?

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத் தினால் இந்துக்களின் மனம் புண்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்து இருப்பதையும் இடது சாரிகள் அறியமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-5/77411.html#ixzz2wk4FOfql

தமிழ் ஓவியா said...


நடக்கப் போவது அழகுப் போட்டியா!


அஇஅதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன், அவரை அஇஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ எப்படி அறிமுகப்படுத்தினாராம்?

செக்கச்செவல்னு பால்வடியும் முகத்தைப் பாருங்க. அதனால்தான் தம்பியை இங்கே நிப்பாட்டிருக்காங்க. பொண்ணு பார்க்கப்போனால் பொண்ணைப்பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்லுவோம். பையனை நல்லா முகலட்சணமாக இருக்கான்னு சொல்லுவோம்.

அப்படிதான் கோபாலகிருட்டிணனை அம்மா செலக்ட் செஞ்சு நிறுத்தியிருக்காங்க என்று மதுரைத்தொகுதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் அமைச்சர். போறப்போக்கைப் பார்த்தால் நடக்கப் போவது தேர்தல் போட்டியா - அழகுப் போட்டியான்னு தெரியலை.

எண்ணார்!

புதுவைத் தொகுதியைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் இப்பொழுது எண்ணார் காங்கிரசாகி விட்டது. தமிழ்நாட்டில் கூட்டணி இருந்தாலும் அதற்குமாறாக புதுச்சேரித் தொகுதியில் என்ஆர் காங்கிரசு வேட்பாளரை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை அறிவித்திருக்கிறது. தேமுதிகவும் முறுக்குகிறது. என்ன தேர்தலோ - என்ன கூட்டணியோ!

Read more: http://viduthalai.in/e-paper/77475.html#ixzz2wpch2DXv

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சார பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை மனித உரிமை ஆணையம் உத்தரவு


புதுடில்லி, மார்ச் 23- மக் களவைத் தேர்தல் பிரச்சார பணிகளில் சிறுவர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 8 வாரத் துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், வாக்குசேக ரிப்பு பணிகளின்போது, சிறுவர்களை அரசியல் கட் சியினரும், வேட்பாளர் களும் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. துண்டு பிரசுரங்கள் விநி யோகம், முழக்கமிடுவது போடுவது, பட்டாசுகளை வெடிப்பது, கொடிகளை ஏந்திச் செல்வது போன்ற பணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்திக் கொள்கின் றனர்.

சிறுவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அதைப்பற்றி அரசியல் கட் சிகளும், வேட்பாளர்களும் கவலைப்படுவதே இல்லை. இப்போது மக்களவை தேர் தல் பிரச்சாரம் தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் சிறுவர்களை பிரச்சாரங்களில் பயன்படுத் திக் கொள்வது சர்வசாதா ரணமாக நடக்கிறது.

படிப்பு அல்லாத எந்த செயலிலும் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செய் தால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர் களை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகந்த் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத் திடம் புகார் ஒன்றை அளித் தார். இந்த புகாரை, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி யுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது:

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சியினர், வேட் பாளர்கள் மீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண் டும். இது தொடர்பாக என் னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட் டுள்ளது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த அகந்த், புவ னேஸ்வரில் அளித்த பேட்டியில், சிறுவர்களை பணத்தாசைக் காட்டி, பிரச் சார பணிகளில் ஈடுபடுத்து கின்றனர். அவர்களின் படிப்பு பாழாவதைப் பற்றி அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ எந்த கவலையும் கொள்வது இல்லை. இப்படிப்பட்ட நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் பிறப் பித்துள்ள இந்த உத்தரவு பெரும் வரவேற்புக்கு உரி யது என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/77472.html#ixzz2wpd4wLXe

தமிழ் ஓவியா said...


அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை!


சென்னை, மார்ச் 23- தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலு வலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ள தாக அரசுத்துறை வட்டாரங் கள் தெரிவித்தன.

அரசுத் துறை களின் பல்வேறு அலுவல கங்கள் தலைமைச் செயலகம் மற்றும் சென்னை சேப்பாக் கம் எழிலகம் ஆகிய வற்றில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கணினி களுடன் இணையதள வசதி யும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள வசதி யைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகி றார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அம லுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலு வலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.

அரசுத் துறைகளின் அனைத்து கணினிகளிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங் களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்ய தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் துறை அதி காரிகள் கூறியது: அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சமூக ஊடகங்களில் அவர் கள் கருத்துகளைத் தெரிவிப் பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின்போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/77444.html#ixzz2wpdcdNaU

தமிழ் ஓவியா said...


ஊழலை ஒழிக்கும் இலட்சணத்தைப் பாரீர்!

பல ஊழல் புகார்களில் சிக்கிய பாபாராம்தேவுடன் மோடி

புதுடில்லி, மார்ச் 24- ஊழலை ஒழிக்கப் புறப் பட்டுள்ளார் மோடி என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம்; மோடி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்டியே தீருவார் என்று பல கட்சி கள் (தமிழ்நாடு உட்பட) அவ ரோடு கூட்டும் சேர்ந்துள் ளன. உண்மை நிலை என்ன? யோகா குரு பாபாராம்தேவ் என்ற சாமியாரிடம் டில்லி யிலே பிஜேபியின் பிரதம ருக்கான வேட்பாளர் நரேந் திர மோடி கொஞ்சிக் குலவு கிறார். யார் இந்த ராமதேவ் இதோ ஒரு நீண்ட பட்டியல்.

நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்று ராம் தேவ் பாபா மும்பையில் பத்திரிக்கை யாளர் சந்திப்பில் கூறினார்.

நரேந்திர மோடியை ஆதரிக்கும் பாபாவின் யோக்கியதை கடந்த வருடம் வந்த செய்திகள் மாத்திரம் ராம் தேவ் பாபாவின் மீது வருமான வரிஏய்ப்பு, அயல் நாடுகளில் உள்ள சொத் துக்கள் குறித்த விவரங்களை மறைத் தல், தக்க அனுமதி யின்றி பலரை வெளிநாடு கூட்டி சென்றது போன்ற வழக்குகள் உள்ளன. இவர்மீது உத்தரா கண்ட் மாநிலத்தில் பல இடங்களை ஆக்ரமித்த குற்றச்சாட்டு உள்ளது, இவரது பதஞ்சலி மருத்துவ நிறுவனத்தின் மீது மஹ ராஷ்டிரா, ஹரியானா மற் றும் உத்தராகண்ட் மாநி லத்தில் நிலங்களை அப கரித்த குற்றச்சாட்டும் உள்ளது. ஹரித்துவாரில் 2 ஏக்கர் நிலத்தை வன்முறை யாக அபகரித்து திவ்ய யோகா மந்திர் என்ற பெய ரில் போலிப்பத்திரம் தயார் செய்தது (நவம்பர் 29, 2013 பி.டி.அய்) ராம் தேவ்பாபா வின் பதஞ்சலி யோகா ஆயூர்வேதக் கல்லூரியில் தங்கி இருந்த 18 வயது மாணவி மர்மமான முறை யில் காணாமல் போனார் இது குறித்த வழக்கும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நவம் பர் 23 2013) பி.டி.அய். பாபா ராம் தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனத்தில் வருமானவரித்துறை ஆய்வு சுமார் 20 முதல் 25 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை ஆணையர் ஆர் ஆர் சிங் தெரிவித்தார் (அக்டோ பர் 4. 2013) பி.டி.அய். யோகா பயிற்சி என்ற பெயரில் நாடெங்கும் நடத் தப்பட்ட முகாம் மூலம் ரூ 5 கோடிவரை வருமானம் பெற்று அதை அரசிடம் இருந்து மறைத்து வரி ஏய்ப்பு செய்தது. ராம் தேவ்பாபாவின் சகோதரன் ராம்பரத் தேவ் மீது ஆட்கடத்தல் வழக்கு அக்டோபர் 22. 2013 (டெக் கான் குரானிகள் செய்தி)

மேலும் சில சாதனைகள்!

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற வழக்கில் பாபாராம்தே வின் செயலாளர் பால கிருஷ்ணன் மீது சி.பி.அய் வழக்கு, இவர் மீது வெளி நாடுகளுக்கு ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி வழக் கும் உள்ளது. 2009-ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டில் சுமார் 200 கோடி மதிப் புள்ள (2மில்லியன் பிரிட் டன் பவுண்ட்) உள்ள ஒரு தீவை 2009 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார் (Glasgow, யூகே டைம்ஸ் September 28, 2009.) இந்த தகவல் பத்திரிக் கையில் வெளியான உடன் 2011 ஆம் ஆண்டு இங்கி லாந்தைச் சேர்ந்த ஒரு பக்தை தனக்கு தானமாக வழங்கியதாகவும் அதை உலக நலனுக்காக மாத் திரம் பயன்படுத்துவதாக வும் தனக்கு சொந்தமான எந்த ஒரு காரியத்தையும் அந்தத் தீவில் செய்ய வில்லை என்று புளுகுமூட் டையை அவிழ்த்துவிட்டார். (June 1, 2011 ஹிந் துஸ்தான் டைம்ஸ், மும்பை பதிப்பு)

இவ்வளவு பராக்கிர மங்கள் செய்த சாமியா ருக்கு ஆபத்பாந்தவனாக மோடி இல்லாமல் வேறு யார் இருக்கமுடியும் ஆகை யால் தான் இவருக்கு மோடி பிரதமராக வேண் டும் என்ற ஆவல் இருக் கிறது, இந்து முன்னணி செய்தி நிறுவனங்கள் பல இவரின் ஸ்பான்சரில் தான் இயங்குகிறது, ஆகையால் மோடி மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பேசி னால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சேனல் களிலும் நேரடி ஒளிபரப்பு மாத்திரமின்றி அன்றும் முழுவதும் அது பற்றிய செய்திகளையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/77487.html#ixzz2wvpXZu00

தமிழ் ஓவியா said...


பரிதாபத்திற்குரிய வைகோ


பரிதாபத்திற்குரிய வைகோ

பி.ஜே.பியுடன் ஏன் கூட்டு என்றால் ஈழம் பெறு வதற்காக என்றார் வைகோ- பி.ஜே.பி.யின் முக்கிய தலை வரான வெங்கையா நாயு டுவோ - தனியீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னைக்கு வந்தே கூறி விட்டார்.

மதிமுக தேர்தல் அறிக் கையில் இந்திய அய்க்கிய நாடுகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழக பி.ஜே.பி. தலை வர் பொன். ராதாகிருஷ் ணன் அதனைக் கண்டு கொள்ளாமல் விடவில்லை. அப்படி மாற்றம் விரும்பி னால் பாரதம் என்றுதான் மாற்ற வேண்டும் என்று கூறி விட்டாரே! இதற்குப் பெயர் தான் வேற்றுமையுள் ஒற் றுமையோ!

Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpmyHT1

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

நம் கைகளை சோப்புப் போட்டு கழுவாத காரணத் தால் ஸ்வைன் ப்ளூ போன்ற உலகமே அஞ்சும் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpyLfMp

தமிழ் ஓவியா said...

குஜராத் - மோடி ஆட்சியில்

விபச்சாரத்துக்கு உடன்படாத பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு!

தானே.மார்ச்.24- குஜராத் மாநிலத்திலிருந்து 24 வயது பெண், பெற்றவர்களாலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக அவளின் சகோதரர்களும் இருந்துள்ள கொடுமை குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

தானேவை அடுத்த பிவண்டி பகுதியில் அனுமான் தேக்தி என்கிற இடத்தில் உள்ள விபச்சார விடுதியில் விற்பனை செய்யப்பட்ட அப்பெண், விபச்சாரத் தொழிலுக்கு உடன்படாததால் தொடர்ந்து சித்தரவதைகளுக்கு உள்ளானார். விபச்சார விடுதியின் நிர்வாகி 24 வயதுள்ள அப்பெண்ணை தனி அறையில் அடைத்து சிகரெட்டால் சுட்டு துன் புறுத்தி உள்ளார். அவரிடம் தன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு அப்பெண் வேண்டியும், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்துள்ளார். மேலும் இரண்டு நாளில் அப்பெண்ணின் மார்பகங்களையும் அறுத்தும் உள்ளார். அப்பெண்ணின் கதறல் அந்த தெரு வழியே சென்றவர்களுக்கு எட்டியதால் காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. காவல்துறை யினர் அந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், அப்பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய மருத் துவர்கள் உடனடியாக, தானே பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாதவராக உள்ளார். பிவண்டி காவல் நிலைய ஆய்வாளர் இச்சம்பவம் குறித்து கூறும் போது, பாதிக்கப்பட்ட பெண் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணமான ரூபி முன்ஷி என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் களான ஆலம், அப்சல் உட்பட மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 325,326,370 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை யும் காவல்துறை தேடி வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvqEA8PS

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம் - ஜெயலலிதாவின் முரண்பாடு


கலைஞர் அம்பலப்படுத்துகிறார்

சென்னை, மார்ச் 24- திமுகவிற்கு ஒரு கொள் கையும் கிடையாது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் பேசிவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு சேது சமுத்திரத் திட்டம் என்பதில் அவர் எப்படியெல்லாம் முரண் பட்டு நிற்கிறார் என்பதை விளக்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.

ஜெயலலிதா எவ்வாறு ஒரே கொள்கையோடும், கோட்பாட்டோடும் நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகி றேன். 2001 அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில், சேது சமுத் திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடை யும். வாணிபமும் தொழி லும் பெருகும். அந்நிய முத லீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக் கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமா கும். ஏற்றுமதி, இறக்குமதி அதி கரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக் களின் வாழ்க்கைத்தரம் மேம் படும்.

வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வ தேச அள வில் விரிவடையும். சுற் றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத் தின் தேவையை முக்கியத்து வத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக் காகக் கூறிக் கொண்டிருக் காமல், உலக வங்கி போன்ற சர்வ தேச நிறுவனங்களுடன் மத் திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதி யைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னு ரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும் என்று சொன் னார்கள்.

அது மாத்திரமல்ல; 10.5.2004 அன்று வெளியிடப் பட்ட அ.தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கை யில் தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக் கும் சேது சமுத்திரத் திட் டத்தினை நிறைவேற்றுவ தற்கு உரிய நடவடிக்கை களை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற் குப் போதிய நிதியினை உட னடியாக ஒதுக்கி, ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறை வேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலி யுறுத்தும் என்று சொன் னார்கள். தற்போது வெளி யிட்டுள்ள அ.தி.மு.க. அறிக் கையிலே இந்தத் திட்டம் பற்றிய அறி விப்பு என்ன ஆயிற்று? அப்போது சிறப் பான திட்டம் என்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு தற்போது அந்தத் திட்டமே வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்திலேயே வழக் குத் தொடுத்திருக்கிறார் ஜெயலலிதா!

அன்று செழிக்க வைக்கும் திட்ட மாக இருந்த சேதுத் திட்டம், இன்று செல்லாக் காசுத் திட்டமாக மாறிவிட்டதா? இதுதான் ஒரே கொள்கை, ஒரே கோட்பாட்டிற்கான அடையாளமா?

Read more: http://viduthalai.in/e-paper/77488.html#ixzz2wvqMlYqD

தமிழ் ஓவியா said...


பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது


பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி

செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது

மக்களிடத்தில் எடுத்துச் சொல்லுவது அவசியம்

தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே!

பெண்களுக்குச் சொத்துரிமை - இந்து சாஸ்திர எதிர்ப்பு - அண்ணல் அம்பேத்கர் முயற்சி தோல்வி - 1929இல் செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் மத்திய ஆட்சியில் தி.மு.க.வின் முயற்சியில் நிறைவேற்றம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்துமதத் தர்மப்படி, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமல் துவக்கத்தில் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம். அவர்கள் தங்கள் தந்தையர்க்கு பிண்டம் பிடித்துப் போடும் உரிமை இல்லாதவர்கள் என்பதால்தான்!

ஆண் பிள்ளைகள் மட்டுமே அதனை சாஸ்திர சடங்காச்சாரப்படி செய்ய முடியும் என்பது இந்து தர்மம்!

முன் நிபந்தனையோடு அன்று ஒரு சட்டம்

எனவே இந்துக் கூட்டுக் குடும்பத்தில் (அவிபக்த குடும்பம்) என்பதில் உள்ள பெண்ணுக்குத் தந்தையின் சொத்தில், மகனுக்குள்ளதைப் போல மகள் உரிமை கொண்டாட வழியில்லாமல் இருந்தது.

ஏன் கணவன் சொத்தில், கணவன் முன்பே இறந்து மனைவி விதவையான பிறகுகூட அந்த சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லாமல் முன்பு இருந்தது;

பிறகு சற்று மாற்றம் வந்தது - அநேகமாக 1937 வாக்கில்; ஆனால் அதற்கொரு முன் நிபந்தனை வைக்கப்பட்டு விதவைக்கு இறந்த கணவனின் சொத்துரிமை கிடைத்தது.

அந்த முன் நிபந்தனை அந்த விதவை கற்பு இழக்காத வராக இருக்க வேண்டும்! Ramnad Case கற்பிழந்த விதவை வழக்கு Widow’s Case என்பது பிரபலமான வழக்காகும். இதுபடிப்படியாக பல கட்டங்களில் மாறுதல் அடைந்தது.

அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் - எதிர்ப்பினால் பதவி விலகிய கொடுமை!

இது ஒருபுறமிருக்க, மகளிருக்குச் சொத்துரிமை ஏற்படுத்த இந்து சட்டத்தை திருத்தி, ஆண்களைப் போல் (மகன்களுக்குள்ள உரிமை மகள்களுக்கும்) பெண்களுக் கும் வரவே இந்து சட்டத் திருத்த மசோதா (Hindu Code Bill) என்ற பெரும் சீர்திருத்த மசோதாவை அண்ணல் அம் பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது கொணர்ந்தார்.

சில சில பகுதிகளைப் பிரித்து சட்டமாக்கினர்; இந்த மகளுக்கு சொத்துரிமை - ஹிந்து தர்மத்தின் அடிப் படையைக் குலைக்கிறது என்று காரணம் காட்டி, ஹிந்து சனாதனிகள் கடும் எதிர்ப்பை, முதல் குடியரசுத் தலைவ ரான பாபு இராஜேந்திர பிரசாத் மூலம் காட்டி, அம்பேத்கரின் முயற்சி வெற்றி பெறாமல் தடுத்தார்கள்.
அதன் காரணமாகவே டாக்டர் அம்பேத்கர் பதவி விலகி வெளியேறினார். அவரது முயற்சி பிறகு தி.மு.க. பங்கு பெற்ற பிறகு நிறைவேற்றியதே!

தி.மு.க. செய்த புரட்சி

ஆனால் தி.மு.க. இடம் பெற்று 2004 தேர்தலுக்குப் பிறகு அமைந்த அய்க்கிய முற்போக்கு முன்னணி அமைச்சரவை 2005-இல் மகளுக்குச் சொத்துரிமைக்கு இருந்த தடையை நீக்கி ஏற்கெனவே இருந்த 1956ஆம் ஆண்டு சட்டத் திருத்தமாக நிறைவேற்றி 2006 செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அதை அமலாக்கி வைத்து வரலாறு படைத்தது.

இதைவிட மகளிருக்கான சமூகப் புரட்சி வேறு உண்டா?

1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட் டின் தீர்மானம் இது! கலைஞர் தலைமையில் அமைந்த இயக்கம், மத்தியில் மக்களாதரவுடன் வெற்றி பெற்ற, நிகழ்த்திய சாதனை, பன்னூறு ஆண்டானாலும் வரலாற்றில் அழிக்கப்படாத மிகப் பெரிய அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி சாதனை அல்லவா?

மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம்!

இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, திசை திருப்புவோர் தம் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழிப்பது இப்போதைய தேவை அல்லவா?


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 24.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77482.html#ixzz2wvqVg3WA

தமிழ் ஓவியா said...


உண்டியலைப் பறி கொடுத்த பெருமாள்


சென்னை, மார்ச் 24-மாதவரம் அடுத்த மூலச் சத்திரம் பெருமாள் கோயில் தெருவில் மிக பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக நரசிம்மன் என் பவரும், துப்புரவு தொழி லாளியாக எல்லப்பன் என் பவரும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோயி லில் பூசைகள் முடிந்ததும், நரசிம்மன், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை சுத்தம் செய்ய எல்லப்பன் வந்தார்.

கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த சில நபர்கள் 5 அடி உயர உண்டியலை பெயர்த்து கொண்டு சென் றதை கண்டு, எல்லப்பன் அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித் தார். நிர்வாகி சங்கர் மாதவரம் பால் பண்ணை காவல்துறையில் புகார் செய்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கோயில் பின்பக்கம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உண்டியல் உடைந்து கிடப் பது தெரியவந்தது.

அதில் இருந்த பணத்தை சில நபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1 லட்சம் இருக்க லாம் என்று நிர்வாகி கூறி னார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து அந்த சில நபர்களை தேடி வருகின்ற னர். கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77491.html#ixzz2wvqg6AZc

தமிழ் ஓவியா said...


கலைஞர் மாடல் என்பதே சரி!

சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவதில், கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு மிகவும் சாதுர்யத்தோடு, சட்டச் சிக்கலுக்கு இடமின்றி, மிகச் சரியாக நடந்து கொண்டது.

ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் அடி வாங்கியது. அதே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எதிலும் நிதானமும், வைக்கும் அடியில் உறுதியும், எடுத்துக் கொண்ட பிரச்சினையில் உண்மையான ஈடுபாடும் இருக்க வேண்டும்.

பேருக்கு நாம் செய்ததாக இருக்கட்டும் - நீதிமன்றம் செல்லாது என்று சொன்னால், அதைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்பது சிலரின் அணுகுமுறையாகும்.

கிராமப்புறங்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர். எதிர்த்து நீதிமன்றம் சென்ற போதுகூட, செல்லுபடியானது. கலைஞரைவிட தான் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக 25 சதவீதமாக உயர்த்தினார் ஜெயலலிதா அம்மையார்; அதன் விளைவு - உள்ளதும் போச்சு என்ற நிலையில் நீதிமன்றத்தில் அடி வாங்கியது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தார் செல்வி ஜெயலலிதா அம்மையார்; அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார். ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்களின் சிபார்சு அடிப்படையில் நுழைவுத் தேர்வை செயல்படுத்தினால் சட்டச் சிக்கல் வராது - நீதிமன்றமும் - ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார். நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் இருக்க வேண்டுமே. எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா விளைவு நீதிமன்றத்தில் - அடிவாங்கியது தான் மிச்சம்!

அதே நேரத்தில் அடுத்து ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கல்வியாளர் முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழு தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்பொழுதும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அரசு நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது

எடுத்துக் கொண்ட பிரச்சினையின்மீது நல்லெண்ணமும், ஈடுபாடும், நிதானமும் இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். கலைஞர் அவர்கள் அப்படித்தான் நிருவாகத்தில் வெற்றி பெற்று வந்தார்! இந்தியாவிலேயே கலைஞர் மாடல் என்று சொல்லும் அளவுக்கு அவரின் நிருவாகம் கொடி கட்டிப் பறந்தது.

சி.என்.என் - அய்.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு, அடிப்படைக் கட்டமைப்புப் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலத்தைத் தேர்வு செய்து வைர மாநில விருதினை வழங்கி வருகிறது; சிறிய மாநிலங்கள், பெரிய மாநிலங்கள் என்று வளர்ச்சி கணக்கிடப்பட்டு, தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் கலைஞர்ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்ற வைர விருதினைப் பெற்றதே! புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் (23.2.2011) குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி அவர்களிடம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பெற்றாரே, அந்த நிலை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் உண்டா?

சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்பட்ட நிலையில் அம்மக்களின் வளர்ச்சி எந்த வகையில் சிறந்தது என்பது மிகவும் முக்கியம்.

முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக் கல்லூரிகளில் 2006-2007இல் பெற்ற இடங்கள் வெறும் 46. தனி இடஒதுக்கீடு என்ற நிலையில் 2007-2008இல் பெற்ற இடங்கள் 57; 2008-2009 இல் பெற்ற இடங்களோ 80; 74 சதவீத இடங்கள் முஸ்லிம்கள் கூடுதலாகப் பெற்றனர் என்றால் கல்வியில் வெகு காலமாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள், இந்தத் தனி இடஒதுக்கீட்டால் எத்தகைய மகத்தான வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதே போல பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் (2007-2008) பெற்ற இடங்கள் 2125.

கலைஞர் ஆட்சியில் முஸ்லீம்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே (2008-2009இல்) அவர்கள் பெற்ற இடம் 3288; 2009-2010இல் அது 3655ஆக உயர்ந்தது!

மோடி மாடல் என்பதெல்லாம் காற்றடைக்கப்பட்டு பொய்யாக வானத்தில் பறக்க விடப்பட்ட பலூன் - அப்படி சொல்ல வேண்டுமானால் கலைஞர் மாடல் என்பதுதான் மிகச் சரியானதாக இருக்க முடியும்.

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்; இப்பொழுது நன்றாகவே தெரிய ஆரம்பித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page-2/77498.html#ixzz2wvqpAdPR

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/77494.html#ixzz2wvr5Hgog

தமிழ் ஓவியா said...


கூட்டணி அல்ல; சீட்டணி



நேற்று சென்னையில் பேசிய, பாஜகவின் மூத்த தலைவர் வெங் கையா, தனி ஈழம் என்பதை பாஜக ஏற்கவில்லை; ஒன்றுபட்ட இலங்கை யில் தமிழ் மக்களுக்கு, ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் உள்ள 13-ஆவது திருத்தத்தின்படி, நடவ டிக்கை பாஜக வற்புறுத்தும் என ஓங்கி ஒலித்து விட்டார். கூடங்குளம் மின் உலையை மூடுவதற்கு பாஜக ஆதரவு இல்லை என்றும் சொல்லி விட்டார். இதற்கு முதல் நாள் தான், மதிமுக வின் தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. அதில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழ் ஈழம் மலர வற்புறுத்துவோம் எனக் கூறப்பட்டுள் ளது. வைகோவை பொறுத்தவரை, தமிழ் ஈழப் பிரச்சினையை முன்னி றுத்தி அரசியல் நடத்துகிறார்.

அதன் அடிப்படையில் தான் காங்கிரசையும், திமுகவையும் விமர்சிக்கிறார். அண் மையில் புதுடில்லியில் மோடி பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசு கையிலும் ஈழத் தமிழர்களின் பிரச் சினையைப் பற்றி பேசினார்.

ஆனால், மோடி அது குறித்து ஒன்றும் பதில் தரவில்லை என்பது வேறு செய்தி. தங்கள் கட்சியில் முதன்மை விஷயமாகக் கருதப்படும், தமிழ் ஈழம் என்பதை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளோடு மட்டும் தான் கூட்டணி என்று சொல்வதற்கு, வைகோவிற்கு எது தடையாக இருக்கிறது? பாஜக தமிழ் ஈழப்பிரச்சினையில், காங்கிரசு என்ன நிலைப்பாடோ, அதே நிலைப்பாடு தான், பாஜகவிற்கும். அய்.நா. மன்றத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத் தில், திமுக கோரிக்கை வைத்து வாதாடிய போது, பாஜகவின் சார்பில் யஸ்வந்த் சின்கா என்ன சொன்னார்? அப்படி எல்லாம் ஒரு நாட்டிற்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர முடியாது என நெத்தியில் அடித்தாற்போல் சொன்னாரே?

இப்போது, பாஜக கூட்டணி, மோடி பிரதமர் என குதூகலமிடும், வைகோ, தனது முதன்மைப் பிரச் சினையாகக் கருதும் ஈழப் பிரச்சினை யில், காங்கிரசின் அதே நிலைப் பாட்டைக் கொண்டுள்ள பாஜகவிடம், ஈழப் பிரச்சினையில் ஆதரவு தந்தால் தான் கூட்டு சேருவோம் என சொல் லியிருக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாமல், பாஜக வந்தால் ஈழப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று சொல்வது, யாரை ஏமாற்ற? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் சொன்னது போல், இவர்கள் அணி, கூட்டணி அல்ல; வெறும் சீட் டணி தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, தக்க பாடம் அளிப்பார்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77507.html#ixzz2wvrdRefj

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் மத்திய அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மார்ச் 24- அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் நடைபெறவுள்ள விவாதத்தின்போது ஈழத் தமிழர் களின்பால் அக்கறையோடு சர்வதேச சுதந்திரமான விசார ணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டுவரும் தீர் மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம்.

அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக் கல் செய்துள்ளபோதிலும், அது உலகத் தமிழர்களின் விருப் பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடுள்ளது. இதற்கிடையே அந்தத் தீர்மானத்தின்மீதான விவாதம் ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24 அல்லது 25 அன்றும், அதன் மீதான வாக்கெடுப்பு 26.3.2014 அன்றும் நடை பெற வுள்ளது.

இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கெனவே இரண்டுமுறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில்தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண் டது.

இப்போதும், அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப் பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வரு வதாகவும் செய்திகள் வருகின்றன. சிங்களர் கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச சுதந்திரமான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெற வுள்ள விவாதத்தின்போது, ஈழத் தமிழர்களின்பால் அக் கறையோடு, சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/77506.html#ixzz2wvsc3Ogm

தமிழ் ஓவியா said...


உடலைப் பாதுகாக்க சில வழிமுறைகள்


நாள்தோறும் பல் மட்டும் தேய்த்தால் போதாது. பல் தேய்த்த பின் நாக்கையும் வழித்து சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம். நாக்கு சுத்தமாக இருந்தால் ஆரோக்கியம்தான். சோற்றுக்கற்றா ழையை கண்ணாடி போல அலசி வெறும் வயிற்றில் விழுங்க, உடல் சூடு தணியும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

தலைமுடி உதிரத் தொடங்குகிறதா.. 25 கிராம் குன்றிமணியுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொடியுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டுங்கள். தினமும் அதை தலைக்கு தடவி வந்தால் முடி உதிராது. பத்து சீத்தாப்பழ இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடித்து வர, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

சின்ன வயசிலேயே ஒரு முடி நரைத்து விட்டாலும் அது இளநரைக்கு அறிகுறிதான். கருவேப்பிலைதான் அதுக்கு மருந்து. கருவேப்பிலையை அரைத்து வடை போல் தட்டி காய வையுங்கள். பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதில் ஒரு ஸ்பூன் பச்சை கற்பூரம் போடுங்கள். அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை வராது.

சின்ன துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டுகள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதயக்கோளாறு வரவே வராது.

கண்களை ஒரு நாளைக்கு இரு வேளை சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடி அணியாமல் பைக்கில் செல்வோர் வீட்டுக்குள் வந்ததும் கண்ணை கழுவ வேண்டும். கண்ணை திறந்து பல முறை தண்ணீரை அடித்து கழுவினால் தூசி நீங்கி விடும்.

காய்ச்சிய பாலில் நுங்குகளை நறுக்கிப் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட சோர்வு நீங்கும். புழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட களைப்பு நீங்கும். சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிராது.

Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtexqvC

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் கொண்ட தாழம்பூ

தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியு டையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. ரத்தம் சுத்தமடைய: உடலில் உள்ள அதிகப்பினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

பசியை தூண்ட: என்னமோ தெரியல பசியே எடுக்கமாட்டங்குது ஏதோ நேரத்திற்கு சாப்பிடுகின்றேன் என்று சிலர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். இவர் கள் உடல் நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப் படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.

வயிற்றுப் பெருமல் நீங்க: உணவின் மாறுபாட் டாலும் ரேநம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெரு மலை உண்டாக்குகிறது. இதை போக்க நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும்..

ரத்த சோகை நீங்க: ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறு சுறுப்பு இல்லாமல் எப்போதும் சோம்பி திரிவார்கள். இந்தக் குறையை போக்க தாழம்பூவை தீநீர்(சித்த மருத்துவபடி எடுக்கப்படும் நீர்) எடுத்து அருந்தினால் குணமாகும்.

உடல்சூடு தணிய : உடல் சூடானால் வெப்ப நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtnPgLH