tag:blogger.com,1999:blog-1474608369333206681.post863411218848684038..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மரணப் பதிவு நிலையம் தொடங்கப்படும்! ஏன்?எதற்கு? -- கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83234649095790081882014-04-03T07:30:03.242+05:302014-04-03T07:30:03.242+05:30 நீங்களே சொல்லுங்க சார்....!
- டான் அசோக்
ஸ்ரீ... நீங்களே சொல்லுங்க சார்....!<br /> <br /><br />- டான் அசோக்<br /><br />ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.<br /><br />அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா... அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.<br /><br />ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்... அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.<br /><br />திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58422704244459469732014-04-03T07:29:31.136+05:302014-04-03T07:29:31.136+05:30புதுப்பாக்கள்
ஆண்டவரும்
அளவுகோலும்!
நான் எப்போ...புதுப்பாக்கள்<br /> <br /><br />ஆண்டவரும்<br />அளவுகோலும்!<br /><br />நான் எப்போதும்<br />உன்னைக் கைவிட மாட்டேன்<br />என்று சொன்ன<br />என் ஆண்டவரே!<br />அனைத்தையும்<br />சுனாமி வந்து சுருட்டி<br />வாயில் போட்டுக்கொண்டுவிட<br />தனிமரமாய்<br />தன்னந்தனியே தவிக்கிறேனே!<br />நெஞ்சிலே நஞ்சை வைத்து<br />நாவிலே தேனைத் தடவி<br />நயவஞ்சகமாய்ப் பேசி<br />நம்பவைத்துக் கழுத்தறுப்பது<br />தனிமனித ஒழுக்கக்கேட்டின்<br />அடையாளம் மட்டும்தானா?<br />ஆண்டவராகிய உமக்கு - அந்த<br />அளவுகோல் கிடையாதா?<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணா<br /><br /> <br /><br />மகாத்மா மண்ணில்<br />மதம் எனும் மலத்தை<br />தேர்தல் களமாய்<br />தின்னுகின்றன<br />நாகரிகப் பன்றிகள்<br /><br />செய்திகளும் தின்பண்டங்களாக<br />தின்னுகின்றன மாயைகளை...<br />(மோடி... மோடி<br />ஜாடி... ஜாடி)<br /><br />ஜனநாயகம் என்னும் குடிசையை<br />அயோத்திய அனுமான்கள்<br />தீவைக்கின்றன...<br />மீண்டும்<br />பதாகை ஆட்சி<br />வேண்டுமென்று...<br /><br />நம் இராவணனின் விபீசனர்கள்<br />கூட்டாஞ்சோறு எனும்<br />தேர்தல் பந்தியில்<br />பாத்தி கட்டுகிறார்கள்<br /><br />இந்திய வாக்காளனுக்கு<br />நோட்டா எனும்<br />வாக்குச் சீட்டில்<br />வாக்குச் சாவடி<br /><br />ஜனநாயகமே<br />உனது மறுமலர்ச்சி<br />எப்போது?<br /><br />- சின்னவெங்காயம், சென்னைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81225336960116251352014-04-03T07:27:10.710+05:302014-04-03T07:27:10.710+05:30 ஜாதகம் அது பாதகம்
இது நண்பர் ஒருவர் மூலமாகக் கே... ஜாதகம் அது பாதகம்<br /><br /><br />இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.<br /><br /><br />என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.<br /><br />பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?<br /><br />- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45620308529118436562014-04-03T07:26:34.252+05:302014-04-03T07:26:34.252+05:30சில்லறை யு(பு)த்தி
கேள்வி : சூரிய கிரகணம், சந்த...சில்லறை யு(பு)த்தி<br /><br /><br /><br />கேள்வி : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும் - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?<br /><br />பதில் : அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி பணம் பகிர்ந்து கொள்ளும் உத்தியே! கோவிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லறை புரளும்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22599426772948238132014-04-03T07:26:03.791+05:302014-04-03T07:26:03.791+05:30கலைஞரின் சுளீர்
செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின்...கலைஞரின் சுளீர்<br /><br />செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?<br /><br />தி.மு.க. தலைவர் கலைஞர்: எனக்குத் தெரிந்த வரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.<br /><br />- தி.மு.க.வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டபோது... (10.3.2014)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66935094492074431032014-04-03T07:25:39.339+05:302014-04-03T07:25:39.339+05:30குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!
இணையத்தைச் ச...குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!<br /><br />இணையத்தைச் சொடுக்கினால் அனைத்து வணிகத்தளங்களிலும் மோடியே காட்சி தருகிறார். நிச்சயம் பல நூறு கோடியைச் செலவழித்தால் ஒழிய இத்தகைய முரட்டுத்தனமான விளம்பரத்தைச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம் நாடெங்கும் நடத்தப்படும் மோடியின் கூட்டங்களுக்கு பல நூறு கோடிகள் கொட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? தேர்தல் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கிறதா என்பதே வாக்காளர்களின் கேள்வி. இந்த உருவாக்கப்பட்ட செய்தியையே அனைத்து ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,அந்த விளம்பரங்கள் அத்தனையும் பொய் நிரப்பிய பலூன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது இந்தச் செய்தி.<br /><br />குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் மோடியின் ஆதரவு பெற்ற சங் பரிவாரின் அகில பாரத வித்யார்தி பரிஷத் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாம்.<br /><br />8 இடங்களில் போட்டியிட்ட என்.எஸ்.யூ.அய். என்ற காங்கிரஸ் மாணவர் சங்கம் 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுவிட்டதாம்.<br /><br />மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.அய். 6 இடங்களிலும், ஏ.பி.வி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.<br /><br />இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :<br /><br />குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள குஜராத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார். இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30778874369809444462014-04-03T07:24:49.802+05:302014-04-03T07:24:49.802+05:30குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?
இந்தியாவின் ஜப்...குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?<br /> <br /><br />இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!<br /><br />குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலைப் படித்துவிட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!<br /><br /> இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் குஜராத்திற்கு 10 ஆம் இடம்.<br /><br /> இந்தியாவில் ஹூயூமன் டெவலப்மெண்ட் (527 புள்ளிகள்) குஜராத்திற்கு 14ஆம் இடம்.<br /><br /> ஜிடிபி (Gross Domestic Product) இந்தியாவில் குஜராத்திற்கு 5ஆம் இடம்.<br /><br /> வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3ஆம் இடத்தில் உள்ளது.<br /><br /> எழுத்தறிவில் குஜராத்திற்கு 18ஆம் இடம்.<br /><br /> ஏழைகள் குறைந்த மாநிலத்தில் குஜராத்திற்கு 10ஆம் இடம்.<br /><br /> சாலைகள் பராமரிப்பில் குஜராத்திற்கு 11ஆம் இடம்.<br /><br /> தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.<br /><br /> பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம்: ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.<br /><br /> மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:<br /><br />ஆண்கள் 63..12, பெண்கள் 64.10<br /><br />பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67 பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.<br /><br />(இன்னும் ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 16ஆம் மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களே சிந்திப்பீர் எனும் நூலிலிருந்து.)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69936730240441118742014-04-03T07:23:48.890+05:302014-04-03T07:23:48.890+05:30கருத்து
தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உ...கருத்து<br /> <br /><br />தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவிகித பெண்களே உள்ளனர். அவர்களுக்கென வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.<br /><br />மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய அய்.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை அய்.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை. அய்.நா. இப்படிச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித விவகாரங்களைப் பேச அய்.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடாது.<br /><br />- நிமல்கா பெர்னாண்டோ,<br />இலங்கை மனித உரிமைப் போராளி<br /><br />மனித உரிமை ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இலங்கைமீது சர்வதேச விசாரணை நடத்த ஆணையர் அலுவலகத்தால் முடியும். மனித உரிமை மீறல் தொடர்பான புகாரின்பேரில் அந்நாட்டில் விசாரணை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் உள்ளது.<br /><br />- நவநீதம் (பிள்ளை), அய்.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்<br /><br />பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதால் பள்ளிகளிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டுக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெண்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். இந்தத் திறனே அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.<br /><br />- டாக்டர் சாந்தா,<br />சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத் தலைவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25571552152118663392014-04-03T07:23:08.477+05:302014-04-03T07:23:08.477+05:30கமலைப் பிறாண்டும் பூணூல்கள்
கோவில் உண்டியலில் பண...கமலைப் பிறாண்டும் பூணூல்கள்<br /><br /><br />கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.<br /><br />நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா?<br /><br />கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா?<br /><br />நீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே!<br /><br />இப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு?<br /><br />- பெரியாரிடிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1594529724443749762014-04-03T07:20:48.782+05:302014-04-03T07:20:48.782+05:30தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்தி...தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?<br /><br />7. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!<br /><br />லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை உண்டா?<br /><br />கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.<br /><br />2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப தி.மு.க. மீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்துகிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் என்று கூறவில்லையா?<br /><br />இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க.வை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே! அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.<br /><br />அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார்களேயாயின் அதே பதில் _- லாஜிக் தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?<br /><br />அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய்யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!<br /><br />மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா _- விசாரணை அமைப்புகள்?<br /><br />சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் _- உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?<br /><br />சொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே! இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?<br /><br />மேலே காட்டப்பட்டுள்ளபடி மற்றவர்களைக் குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?<br /><br />கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?<br /><br />தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் _- சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் -_ வெகுமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!<br /><br />கி.வீரமணி,<br />ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34185657199979457382014-04-03T07:20:39.097+05:302014-04-03T07:20:39.097+05:30அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,...அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே _- இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?<br /><br />6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே! அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை _- குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வழி வகைசெய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!<br /><br />ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையே மீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய்தானே மருத்துவ ஆலோசகர் _- வழிகாட்டியாக இருப்பார்?<br /><br />ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49126524012218415202014-04-03T07:20:25.434+05:302014-04-03T07:20:25.434+05:30ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்
ஈழத் தமிழர...ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்<br /><br /><br />ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!<br /><br />பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி -_ எந்தப் பொதுக்கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.<br /><br />அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.<br /><br />எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!<br /><br />தி.மு.க. ஊழல் _- காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.<br /><br />1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்புகளுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே -_ உண்மைகள் இவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறதே _- அதைக் கவனித்தார்களா?<br /><br />2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே -_ அது மறந்து விட்டதா?<br /><br />சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!<br /><br />3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்துபோய் விட்டதா?<br /><br />4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!<br /><br />5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத்தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் -_ ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16935172663849908552014-04-03T07:19:37.775+05:302014-04-03T07:19:37.775+05:30இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை
இந்தியாவில் பெ...இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை<br /><br /><br />இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.<br /><br />இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.<br /><br />வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.<br /><br />வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.<br /><br />வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64767369151002110612014-04-03T07:17:06.876+05:302014-04-03T07:17:06.876+05:30
தேர்தல் துணுக்குகள்!
புள்ளிவிவரம்
தமிழ்நாட்டில்...<br />தேர்தல் துணுக்குகள்!<br /><br />புள்ளிவிவரம்<br /><br />தமிழ்நாட்டில் வாக்காளர் கள்பற்றிய ஒரு தகவல்:<br /><br />30-39 வயதுள்ள வாக் காளர்கள் 1.34 கோடி<br /><br />40-49 வயதுள்ள வாக் காளர்கள் 1.15 கோடி<br /><br />50-59 வயதுள்ள வாக் காளர்கள் 83 லட்சம்<br /><br />60-69 வயதுள்ள வாக் காளர்கள் 55 லட்சம்<br /><br />இது தேர்தல் ஆணையம் அளித்துள்ள புள்ளி விவரம்.<br /><br />இல்லை<br /><br />உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வில்லை.<br /><br />சீசரின் மனைவி...<br /><br />தமிழக அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் சிறிய பேருந்துகள், விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் உள்ளது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய் யப்பட்ட நிலையில், உயர்நீதி மன்றத்திற்கு ஆளும் தரப்பில் அது எடுத்துச் செல்லப்பட் டது. நீதிமன்றத்தின் ஆணைப் படி சிறிய பேருந்துகளில் இரட்டை இலை நீக்கப்பட் டது. இப்பொழுது குடிநீர் பாட்டிலிலும் இடம்பெற் றுள்ள இரட்டை இலையை நீக்குவது குறித்துத் தலை மைத் தேர்தல் ஆணையத் திடம் ஆலோசனை கேட் டுள்ளதாக தமிழ்நாடு தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.<br /><br />இதில் ஆலோசனை கேட் பதற்கு என்ன இருக்கிறது? சுவரில் எழுதும் தேர்தல் சின் னத்தையே அனுமதிக்காத தமிழகத் தேர்தல் ஆணையம், அரசு விற்கும் குடிநீர் பாட்டி லில் சட்ட விரோதமாக இரட்டை இலை இடம்பெற்றி ருப்பதை நீக்குவதற்கு எண் பேராயத்தைக் கூட்டித்தான் முடிவு செய்யவேண்டுமா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?<br /><br />சீசரின் மனைவி சந்கேத் திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்திற்கும் பொருந்துமே!<br /><br />அ.தி.மு.க. கலக்கம்!<br /><br />அவாள் ஏடான தின மலரே இன்று வெளியிட் டுள்ள கருத்தும் தகவலும் அ.தி.மு.க. அணியின் தற் போதைய நிலவரம் - கலவ ரமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.<br /><br />அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பிரச்சாரத்தைத் தொடங் கும்போது இருந்த நிலை வேறு - இப்பொழுதுள்ள நிலை வேறு.<br /><br />நிலைமை தலை கீழாக மாறிவிட்டதால், அ.தி. மு.க. கலக்கத்தில் இருப்பதாக தினமலர் எழுதியுள்ளது.<br /><br />(அ.தி.மு.க. விழிப்போடு இருக்கவேண்டும் என்று தினமலர் அக்கறையோடு கொடுக்கும் சமிக்ஞை இது!)<br /><br />கறுப்புப் பணம்<br /><br />மக்களவைத் தேர்தலை யொட்டி வெளிநாடுகளில் தூங்கும் கறுப்புப் பணம் என்ற பூனைக்குட்டி (அதிகம் இல்லை ரூ.23 லட்சம் கோடி தான்) இந்தியா திரும்புகிற தாம்! வாக்குகளை விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டார்களோ! எச்சரிக்கை!!<br /><br />தாவலோ, தாவல்!<br /><br />கருநாடகத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கா ததால், எடியூரப்பாவின் கூட் டாளிகளான லட்சுமி நாராய ணன் மற்றும் நிருவாகிகள் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். நடிகை லட்சுமி தனக்கு வாய்ப்புக் கிடைக்காததால், மதச் சார்பற்ற ஜனதா தளத்தி லிருந்து விலகி, பி.ஜே.பி.,க்குத் தாவினார்.<br /><br />சென்னப் பட்னா தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. யோகேஷ் வர் காங்கிரசுக்குப் போனார். முன்னாள் முதல்வர் ஜே.எச். பட்டேலின் மகன் மகிமா பட்டேல் காங்கிரசு சார்பாகப் போட்டியிட வாய்ப்பு மறுக் கப்பட்டதால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார்.<br /><br />சீட்டுக் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் சீட்டைக் கிழித்துவிட்டு, சீட்டைத் தேடித் தாவ ஆரம்பித்து விட் டனர். இவர்கள் மேடைகளில் ஏறிக் கொள்கை முழக்கம் செய்வார்கள் பாருங்களேன்!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78017.html#ixzz2xmeQQ4ev<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49271657833855854522014-04-03T07:15:58.152+05:302014-04-03T07:15:58.152+05:30
இவாள் அவாள்!
முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஆர்.நட்ரா...<br />இவாள் அவாள்!<br /><br /><br />முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். இவாள் எல்லாம் அதிகாரத்தில் இருந்தபோது அவாளுக்குச் சாதமகமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.<br /><br />பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவராக்கப்பட்டார். இவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் தேர்வுத் தாள் அவுட்டானது. தேர்வில் தமிழுக்கு என்று இருந்த மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன.<br /><br />இப்பொழுது அதிமுகவிலேயே சேர்ந்து விட்டார். அடுத்தடுத்துப் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுவார் அதிமுக ஆட்சியில்.<br /><br />சென்னையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் விலக்கிக் கொள்ளப்பட்டு, அந்த இடத்தில் இவர் நிறுத்தப்படுவார் என்கிறது தினமலர் எதுவும் நடக்கலாம்.<br /><br />அவாள் ஆயிற்றே! அண்ணா தி.மு.க. அக்ரகார தி.மு.க. தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78012.html#ixzz2xme9Rbji<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17269751249899292812014-04-03T07:14:00.435+05:302014-04-03T07:14:00.435+05:30
குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?
தேசிய கல்வி ...<br />குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?<br /><br />தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், மாநிலங் களின் கல்வி வளர்ச்சி பற்றிய அறிக் கையினை டிசம்பர், 2013 இல் வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, கல்வி குறியீட் டில், குஜராத் மாநிலம் இதற்கு முன் னர் இருந்த 9 ஆவது இடத்திலிருந்து 18 ஆவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.<br /><br />தொடக்கப்பள்ளி அளவில், 12 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கும், உயர் நிலைப்பள்ளி அளவில், 8 ஆவது இடத்திலிருந்து, 14 ஆவது இடத்திற்கும் குஜராத் பின்ன டைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டி, இரண்டையும் இணைத்து சராசரி பார்க்கையில், மாநிலங்கள் வரிசையில் 18 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளதை அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.<br /><br />மகாராஷ்டிர மாநிலம் 8 ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3 ஆவது இடத்திலும் தொடர்ந்து உள்ளதை யும் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கை கூறுகிறது.<br /><br />இந்த தரவரிசை, மாநிலங்கள் கல்வித்துறையில் செய்த சாதனையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்வி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள் ளிக்கு வராமல், நின்றுவிடும் குழந்தை களின் எண்ணிக்கை, இவற்றின் அடிப் படையில் இந்தத் தரவரிசை தேசிய பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.<br /><br />முதல் இடத்தை சிறிய தீவான லட்சதீபமும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரி மாநிலமும் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை தமிழகம் பெற் றுள்ளது. மிகப்பெரிய மாநிலம் என எடுத்துக்கொண்டால், தமிழகம் முத லிடத்தைப் பெற்றுள்ளது என நாம் பெருமையோடு கூறிக்கொள்ளலாம்.<br /><br />நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி, பெரியாரின் போராட்டத்தால், தமிழ கம் கல்வி வளர்ச்சி பெற்று, கல்வி வள்ளல் காமராசர் காலத்தில், கல்வி புரட்சி ஏற்பட்டு தொடர்ந்து, தமிழ கம் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.<br /><br />மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், 9 ஆவது இடத்திலிருந்து, 18 ஆவது இடத்திற்கு பின்னடைந்துள் ளது. (ஆதாரம்: Gujarat drops in educational index - DNA - 5.12.2013)<br /><br />குஜராத் மாடல், மோடியின் நல் லாட்சி என தமிழ் நாட்டில் பாஜகவு டன் கூவிக் குலாவும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இந்தப் புள்ளி விவரத்திற்கு, பதில் சொல்லி விட்டு, தேர்தலை சந்திக்கட்டும். பார்ப்போமே இவர்களின் நாண யத்தை?<br /><br />- - குடந்தை கருணா<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78018.html#ixzz2xmdeKIuK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11189185314965365962014-04-03T07:00:36.033+05:302014-04-03T07:00:36.033+05:30
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் மோடி மஸ்தானே!
...<br />பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் மோடி மஸ்தானே!<br /><br /><br />அகமதாபாத், ஏப்.2-எங் களுடைய மாநிலத்தில் விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்று குஜராத் அரசு அறிக்கை வெளி யிட்டு மாட்டிக்கொண்டது.<br /><br />கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் சென்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த கெஜ்ரி வால் அந்த மாநிலத்தின் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவந்து இது வரை மோடி நடத்திக் கொண்டு இருந்த குஜராத் வளர்ச்சி என்ற பிரச்சாரம் எல்லாம் பொய் என்பதை நிருபித்தார்.<br /><br />தனது பிரச்சாரத்தின் இறுதியில் மோடிக்கு எதி ராக 17 கேள்விகள் வைத் தார். இந்தக் கேள்விகளுக்கு மோடி எந்த ஒரு பிரச்சார மேடையிலும் பதில் அளிக்கவில்லை. புதன் கிழமையில் இருந்து மோடி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஆரம் பிக்க ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவா தேவி கோவிலுக்குச் சென்றுள் ளார். இந்த நிலையில் அர விந்த கெஜ்ரிவாலின் கேள் விக்கு பதில் அளிக்காமல் சென்றால் தமது இரண்டாம் கட்டத் தேர்தல் சுற்றுப் பய ணப் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்படும் என்ற நிலையில் அவசர அவசரமாக குஜராத் அரசு மூலமாக சில விளக் கத்தை கொடுத்துள்ளார். அதில் முக்கியமாக குஜராத் தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் விளைநிலங் களை இழந்து புலம் பெயர்ந்தனர். புலம் பெயரவழியில் லாத விவசாயிகள் தற் கொலை செய்துகொண்ட னர். குஜராத் அரசு முன் னணி மாநிலமாக இருந்தால் இந்த நிலை ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விக்கான பதிலில் குஜராத் மாநிலத்தில் இது வரை விவசாயிகள் தற் கொலை செய்யவே இல்லை, சமீபத்தில் ஒரே ஒரு விவ சாயி தற்கொலை செய்து கொண்டார். அதுவும் அவ ருடைய குடும்பப் பிரச் சினை காரணமாக என்று குறிப்பிட்டிருந்தது.<br /><br />ஆனால் 2013 ஆம் ஆண்டு குஜராத் அரசின் உள்துறை அமைச் சகம் வெளியிட்ட பத்தி ரிக்கை குறிப்பிலேயே 2012-2013 வரை சுமார் 60 விவ சாயிகள் சரியான பயிர் வளர்ச்சி மற்றும் விவசாயக் கடன் கொடுக்காத காரணத் தால் தற்கொலை செய்துள் ளனர் என்று இருந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் அக மதாபாத் பதிப்பில் வெளி வந்த செய்தி குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள விவசாயிகள் வறட்சி மற்றும் விவசாயக்கடன் சுமையால் தற்கொலை செய்வது பற்றி அப்பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேஜஸ்சிறீ குஜராத் மாநில உள்துறை அமைச்சகத்தி டம் முழு விவரம் கேட்டி ருந்தார். அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த உள் துறை அமைச்சகம் நடப்பு ஆண்டில் சுமார் 60 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.<br /><br />அவர்களில் 25 பேர் விவசாயக் கடன் சுமை யால் தற்கொலை செய்து கொண்டனர். அதில் ஜூனா கட் மாவட்டத்தில் 10, அம் ரேலியில் 4, ராஜ்கோட் 7 மற்றும் ஜாம் நகரில் 2 என விவசாயக்கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளனர் என்று தகவல் தெரிவித்தி ருந்தது. மேலும் விவசாயத் தொழில் நலிவினால் கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சம் குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலிற்கு சென்று விட்டன. 2008 ,முதல் 2012 வரை முழுக்க சரியான நீர்ப்பாசன வசதியின்றியும், கால்வாய்கள் தூர்வாறாமல் சவுராஷ்டிரா பகுதியில் மட் டும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. முக்கிய மாக வறட்சிப் பகுதியில் வாணிகப் பயிர்களான பருப்புவகை பயிர்கள் முற் றிலும் பாதிக்கப்பட்டதால் அதனை நம்பி இருந்த பல குடும்பத்தினர் நகரத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என அந்த நாளிதழ் அரசு ஆவணங்களை ஆதாரமாக வைத்து செய்தி வெளியிட் டிருந்தது.<br /><br />ஆனால், அதே அரசு இன்று அவசர அவசரமாக குஜராத்தில் விவசாயிகள் தற் கொலை செய்யவே இல்லை என்று பதில் அறிக்கை விடுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/77996.html#ixzz2xmaGQWBS<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17465854831066736012014-04-02T07:53:05.387+05:302014-04-02T07:53:05.387+05:30இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை
இந்தியாவில் பெ...இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை<br /><br /><br />இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.<br /><br />இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.<br /><br />வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.<br /><br />வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.<br /><br />வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9497634958630889922014-04-02T06:55:38.054+05:302014-04-02T06:55:38.054+05:30
ஆரியர்கள்தான்
பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள்...<br />ஆரியர்கள்தான்<br /><br /><br />பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.<br /><br />- (விடுதலை, 24.2.1954)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/77934.html#ixzz2xgiV4nWv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74751484182996328742014-04-02T06:47:06.251+05:302014-04-02T06:47:06.251+05:30
மோடியை மக்கள் ஏற்பார்களா? பேராசிரியர் க.அன்பழகன்
...<br />மோடியை மக்கள் ஏற்பார்களா? பேராசிரியர் க.அன்பழகன்<br /><br /><br />போச்சம்பள்ளி, ஏப். 1- கிருஷ்ணகிரி நாடாளுமன் றத் தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சின்ன பில்லப்பாவை ஆதரித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று பிரச்சாரம் செய்தார்.<br /><br />காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அரசம்பட்டி யில் பிரச்சாரத்தை தொடங் கிய அவர், வேலம்பட்டி யில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் காவேரிப்பட்ட ணம் பேருந்து நிலையம் அருகேயும் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அரு கிலும் நடந்த தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டங்களி லும் பேராசிரியர் க.அன்பழ கன் பேசினார்.<br /><br />தி.மு.க. தலைவர் கலை ஞர் ஒவ்வொருமுறை ஆட் சிக்கு வரும்போதும் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திக் கொடுக்கவேண்டும் என்று கலைஞர் இலவச வேட்டி-சேலை திட்டத் தைக் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா, வங் காளம், ஒரிசா போன்ற மாநி லங்களில் இருந்து இலவச வேட்டி-சேலைகளை வாங்குகிறார்.<br /><br />இதில் கமிஷன் பெறுகி றார்கள். தி.மு.க. ஆட்சியில் நெசவாளர் மற்றும் விவ சாயிகளுக்கு சலுகையில் 500 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டது. இதை ஜெயலலிதா நிறுத்திவிட் டார். சென்னை கிண்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூல கத்தை பார்த்து வெளிநாட்டி னரே பாராட்டினர். ஆனால் அதையும் முடக்கிவிட்ட னர். செம்மொழி ஆராய்ச் சிப் பணியும் முடக்கப்பட் டுள்ளது. மதச்சார்புள்ள மோடியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். - இவ்வாறு அவர் கூறினார்.<br /><br />கூட்டங்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் செங் குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுக வனம் எம்.பி., தொகுதி தேர் தல் பொறுப்பாளர் பனமரத் துப்பட்டி ராஜேந்திரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/77965.html#ixzz2xggMgSuP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70594258595256400532014-04-02T06:43:38.971+05:302014-04-02T06:43:38.971+05:30
குஜராத் வளர்ச்சி யோக்கியதை?
- குடந்தை கருணா
...<br />குஜராத் வளர்ச்சி யோக்கியதை?<br /><br /><br />- குடந்தை கருணா<br /><br /><br /><br />போலியோ முற்றிலுமாக இந்தி யாவில் ஒழிக்கப்பட்டு விட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக செய்தி வந்துள்ளது. ஆனால், குஜராத் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தில் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடப்பட வில்லை என்கிற அதிர்ச்சித் தகவலை நவ்சர்ஜன் டிரஸ்ட் என்கிற மனித உரிமை அமைப்பு, அமெரிக்க நிறு வனமான ஈஸ்ட் வெஸ்ட் நிர்வாக நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஆய்வில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித் துகளுக்கு இந்த போலியோ தடுப்பு மருந்து தரப்படவில்லை; பெரும் பாலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியிலும், துப்புரவு பணியிலும் இந்த வால்மீகி பிரிவினர்தான் பெரும் பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தடுப்பு சக்தி மிகக் குறைந்த நிலையில் இருப்பதால், போலியோ பாதிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வு கூறுகிறது.<br /><br />இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை விழுக்காடு குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது எனும் தகவலை விக்கிபீடியா இணைய தளம், புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ளது.<br /><br />அதில், தமிழ்நாடு, 81 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தந்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது என தகவல் தந்துள்ளது. ஆனால், வளர்ச்சி என்றால் குஜராத் தான் என ஊர்தோறும் முழங்கி வரும் மோடி ஆளும் குஜராத்தில் என்ன நிலைமை தெரியுமா? 45 விழுக்காடு மட்டுமே குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டு, 19ஆம் இடத்தில் உள்ளது என விக்கி பீடியா இணைய தளம் புள்ளி விவரம் தந்துள்ளது. போலியோ இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என கோடிக்கணக்கில் மத்திய அரசு செலவு செய்து வரும் நிலையில், குஜராத்தில், தலித் குழந்தைகளுக்கு, போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் வராத மோடி அரசு தான், வளர்ச்சிக்கு உதாரணமா?<br /><br />இந்த குஜராத் வளர்ச்சியைத் தான், நம்மூர் பாஜக கம்பெனியில் சேர்ந்திருக் கும் மோடி ஏஜெண்டுகளாக திகழும் வைகோ, விஜயகாந்த், ராம்தாஸ் வர வேற்கின்றனர். எப்படி? போலியோ ஒழிப்பில் முதல் மாநிலமாக திகழும் தமிழ் நாட்டை, 19-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம் போல, கீழே தள்ளுவதற்கு, இந்த அணியினர் துடிக்கின்றனர். தமிழ் நாட்டு மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, கீழே தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/77940.html#ixzz2xgfSSc2w<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25484308254624330332014-04-02T06:42:20.021+05:302014-04-02T06:42:20.021+05:30
மோடிக்கு சவால் விடும் மத்தியப் பிரதேச மோர்ச்சா
ப...<br />மோடிக்கு சவால் விடும் மத்தியப் பிரதேச மோர்ச்சா<br /><br />போபால், ஏப்ரல்.1- நாட்டின் இதயப் பகுதியாகிய மத்திய பிரதேசத்தில் பாஜக வுக்கு, மோடிக்கு சவாலாக மத்தியப் பிரதேச மோர்ச்சா என்கிற அமைப்பு உருவாகி உள்ளது. பாஜகவிலிருந்து அக்கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்களால் ஒருங்கிணைக்கப் பட்ட ஓர் அமைப்பாக மத்தியப் பிரதேச மோர்ச்சா உருவாகிறது. சத்தீஸ்கர் அல்லது குஜராத் போலன்றி மோடியின் எதிர்ப் பாளர்கள் அணி மத்தியப்பிரதேசத்தில் வலிமையாக உள்ளது.<br /><br />மும்முறை வெற்றிபெற்ற முதல்வ ரான சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமை யிலான ஆட்சியின்மூலம் கட்சிக்கு வலிமையும் இருப்பதாக சொல்லப்பட் டாலும், கட்சியில் அதிருப்தியாளர்கள் பிரிவு உருவாவதை தவிர்க்க முடிய வில்லை. ஜான்சி தொகுதியில் போட்டி யிட்ட உமாபாரதி, பாதுகாப்பான தொகு தியாகக் கருதி போபாலில் போட்டியிட விரும்பிய அத்வானி, அவரைத் தொடர்ந்து கட்சி மூத்தத் தலைவரான சுஷ்மாசுவராஜ் ஜான்சியில் போட்டியிட விரும்புகிறார்.<br /><br />மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர்கள்நிலை குறித்து கூறும்போது, சவுகானுக்கு முழு ஆதரவாக இருப்பினும், மோடி எதிர்ப்புத் தோற்றம் தெரியாதவாறு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கின்றனர்.<br /><br />சுஷ்மாசுவராஜ் துணைப்பிரதமர் என்று பேசி தலைப்புச்செய்திகளில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திர பட்வா அவர்மட்டுமே கட்சித் தொண்டர்களை விழிப்புணர்வுடன் ஒருங்கிணைப்பதாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, விடிஷா தொகுதியில் வரலாற்றில் வாஜ்பாய், சவுகான் மற்றும் பலரும் தொடர்ந்து வெற்றிபெற்று, உயர் பதவிகளை அடைந் ததாலும், முதல்வராகவும், இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்ப தால் சுஷ்மாசுவராஜ் துணைப் பிரதம ராகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினேன் என்றார்.<br /><br />எப்படியானாலும், கட்சியால் சுஷ்மா சுவராஜ் துணைப் பிரதமராக ஆக்கப் பட்டாலும், ஆக்கப்படா விட்டாலும், கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாத தலைவரா வார். அவர் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளையும் நன்கு செய்துள்ளார். இவை யாவும் அவருக்கு சாதகமாக உள்ளன.<br /><br />அம்மாநில பாஜகவின் தலைவர் ஒருவர் கூறுகையில் மோடி கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்படுவதற்கு முன்னதாக சவுகான் டிவிட்டரில் வெளியிட்ட தகவல் குறித்து தன் கருத்தை சுஷ்மாசுவராஜ் வெளியிட் டது மட்டுமே எதிராகி உள்ளது.<br /><br />பாஜகவில் தங்களைத் தாங்களே தலைவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் இருக்கின்றபடியால், கட்சியைச் சேர்ந்த தொண்டர்கூட மிகவும் கவனமாகவே தேர்தலையொட்டிப் பேச வேண்டி உள்ளது. ஒன்றுபட்டு இருப்பதான தோற் றத்தையும் அளிப்பது அவசியமாகிறது.<br /><br />பாஜக மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, போபாலில் அத் வானி போட்டியிட்டிருந்தால் மகிழ்ந் திருப்போம். ஆனாலும், அத்வானி ஏன் போபாலில் போட்டியிடவில்லை என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரம் எனக்கில்லை. பாஜகவின் தேர்தல் குழு வைத்தான் இதுகுறித்து கேட்க வேண் டும் என்றார். போபால் உள்ளுர் பாஜக தலைவர் மாநிலத்தில் கட்சியினரை ஒருங்கிணைப் பதில் முனைப்பும், முயற்சியும் இல் லாததாலேயே மத்திய பிரதேச மோர்ச்சா அமைதியான வழியில் தன் பணியைத் தொடர்கிறது. அதேபோல் மோடியின் படத்தைக் காட்டிலும், போஸ்டர்களில் பெரிய அளவில் முதலமைச்சர் சவுகான், சுஷ்மா சுவராஜ் படங்கள் இடம் பெற் றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்து வதைப்போல் பிற மதங்களுக்கு எதிரான முழக்கங்கள் மத்தியப்பிரதேசத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரைப் பயன்படுத்துவதால் மாநிலத் தின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த தகவல்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போதைய போபால் நாடாளுமன்ற உறுப்பினரான கைலாஷ் ஜோஷி மூத்த தலைவரான அத்வானிக்கு பாதுகாப்பான தொகுதி போபால் என்று மாநில பாஜகவால் உருவகம் செய்யப்பட்டது. பாஜக தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு மோடியிடமே மனு போட்டுக் காத்திருப்பது மகிழ்ச்சிக் குரியதல்ல என்றார். மேலும், அத்வானி யிடம் போபாலில் போட்டியிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதையே தானும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், கட்சியின் முடிவு அத்வானி காந்திநகரில் போட்டியிடவேண்டும் என்கிறது. பாஜ வின் ஒழுங்கமைந்த தொண்டர்கள் கட்சித் தலைமையை எதிர்க்க முடியுமா? என்றார்.<br /><br />- தி எகனாமிக் டைம்ஸ் டில்லி பதிப்பு 29-3-2014<br /><br />Read more: http://viduthalai.in/page-2/77937.html#ixzz2xgf7iUOg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65225242806557003482014-04-02T06:40:29.257+05:302014-04-02T06:40:29.257+05:30
இது மக்கள் மத்தியில் மோடிக்கு மேலும் ஆதரவை அதிகரி...<br />இது மக்கள் மத்தியில் மோடிக்கு மேலும் ஆதரவை அதிகரிக்கும். முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு தரவில்லை என ப. சிதம்பரம் கூறியிருப்பது - மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான்; தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அப்படி வெற்றி பெற்றால் ராஜ்நாத் சிங் கூறியதுபோல, ஆட்சி அமைப்பதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.<br /><br />தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேமுதிகவும், பா.ம.க.வும் ஒற்றுமையாகத் தான் உள்ளன. சேலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதும் அதன் வெளிப்பாடு தான்.<br /><br />உடல் நலம் சரியில்லாததால் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் மகிழ்ச்சியாகத்தான் உள்ளார் - என்று பிஜேபியைச் சேர்ந்த திரு. இல. கணேசன் பேசியுள்ளார்.<br /><br />நினைவு கொள்ளுங்கள், நடைபெற்ற நிகழ்ச்சியோ இலக்கியத் தொடர்புடையது;<br /><br />அரசியலுக்கு அப்பாற்பட்டது. அத்தகு கூட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கியவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தாம் சார்ந்த கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்தமேடையைப் பயன்படுத்திக் கொண்டது அரசியல் நாகரிகமா? அல்லது அருவருப்பின் அடையாளமா?<br /><br />இந்தப் பிஜேபியினர் தார்மீகம், பண்பாடு பற்றி யெல்லாம் பலபட பரக்கப் பரக்கப் பேசக் கூடியவர்கள் தாம். இவை எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமாக இருக்குமே தவிர, தங்களுக்கென்று வருகிறபோது அவையெல்லாம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும்.<br /><br />காரணம் இவர்கள் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் ஆயிற்றே! அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.<br /><br />இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்ற ஒரு பழமொழி உண்டு.<br /><br />இலக்கிய வட்டத்துக்குள் இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு வேலை என்ன? இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர்கள் வேண்டுமென்றே தான் இல. கணேசன் பெயரைத் திணித்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாதா இது தேர்தல் நேரம் - அரசியல்வாதிகளை அழைத்தால் இலக்கிய வட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்று?<br /><br />இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை பொது மக்கள் பொதுவாக என்ன நினைக்கக்கூடும்? பி.ஜே.பி.யோடு சம்பந்தப்படுத்தித் தானே பார்ப்பார்கள்?<br /><br />பிஜேபியைச் சேர்ந்த (அவர் ஒரு வேட்பாளரும் கூட!) இல. கணேசனுக்கு அந்த இலக்கியவாதிகளால் பதில் சொல்ல முடியுமா? அப்படி பதில் சொல்ல ஆரம் பித்தால் அந்த மேடையின் நிலை என்ன? ஏற்பாட்டா ளர்களின் நிலை என்னாகும்? பார்வையாளர்கள் பகுதியும் இரண்டுப்பட்டு படுமோதல் வெடிக்காதா?<br /><br />அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இலக்கிய வாதிகளுக்கு இது ஓர் அனுபவமாகக்கூட இருக்கலாம்; எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் யார்? அவர்களின் தன்மை என்ன? யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் முன்ன தாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்படி இல்லாமல் யார் கூப்பிட்டாலும் போய் விடுவது என்ற நிலைப் பாட்டைக் கொண்டால் அவர்களுக்குத்தான் தர்ம சங்கடமும், அவப் பெயரும் ஏற்படும்.<br /><br />தினமணி ஏட்டுக்காவது ஓர் இங்கிதம் இருக்க வேண்டாமா? இலக்கிய விழாவில் ஓர் அரசியல் வாதியின் பேச்சை மட்டும் அய்ந்து பத்தி தலைப்புப் போட்டு, அவர் பேச்சை மட்டுமே வெளியிட்ட தன்மைக்கு புத்திக்குப் பொருள் என்ன?<br /><br />தினமணி என்பது பிஜேபிக்கு அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படும் ஒரு மேடையாக ஆகிவிட்டது என்றே மற்ற கட்சி அரசியல்வாதிகளும், பொதுவாக பொது மக்களும் தெரிந்து கொள்வார்களாக!<br /><br />பார்ப்பனர்கள் பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடிப்பதில் எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடுவதில்லையே, இதனைப் பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டாமா?<br /><br />பிஜேபியின் வெற்றி என்பது பார்ப்பனர்களின் வெற்றி, அவர்களின் ஆதிக்கத்துக்கான முழு முயற்சி என்பதை வாக்காளர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் உணர்வார்களா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2356973465986568122014-04-02T06:40:22.844+05:302014-04-02T06:40:22.844+05:30இலக்கிய மேடை, அரசியல் மேடையான அநாகரிகம்!
சென்னை ச...இலக்கிய மேடை, அரசியல் மேடையான அநாகரிகம்!<br /><br />சென்னை சைதாப்பேட்டையில் ஆதாரம் அமைப்பு சார்பில் இந்தியாவைக் காக்க இலக்கியவாதிகள் என்ற இலக்கியக் கூட்டம் கடந்த ஞாயிறன்று நடை பெற் றுள்ளது.<br /><br />இந்த நிகழ்வில் தென் சென்னைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளர் இல. கணேசன், இலக்கியவாதிகள் முத்துக் கண்ணன், ஏர்வாடி இராதாகிருஷ்ணன், முனைவர் அவ்வை நடராசன் முதலியோர் பங்கு கொண்டுள்ளனர்.<br /><br />காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்ற தலைப்பிட்டு தினமணி (31.3.2014 பக்கம் 6) 5 பத்தியில் செய்தியை வெளியிட்டது.<br /><br />அது அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியக் கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பிஜேபியைச் சேர்ந்த இல. கணேசன் வாள் என்ன பேசியிருக்கிறார்?<br /><br />காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் விரக்தியில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட நரேந்திரமோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மோசமாக பேசியுள்ளார்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69463756569600533722014-04-02T06:37:15.458+05:302014-04-02T06:37:15.458+05:30
எலி - தவளை - பருந்து கூட்டணி!
தேசிய ஜனநாயகக் கூட...<br />எலி - தவளை - பருந்து கூட்டணி!<br /><br />தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணிக்குள் இவர் களிடையே இன்னொரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தேர்தல் பிரச்சாரத்துக்குப் போக முடியாது என்று தைலாபுரம் தோட் டத்தில் உடல் நலமில்லை என்று கூறிப் படுத்துக் கொண்டு விட்டார் மருத்துவர் ராமதாசு.<br /><br />வானூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா பேசும்போது, பா.ம.க.,வைப் பற்றியோ, மருத்துவர் ராமதாசைப் பற்றியே டாக்டர் அன்புமணி ராம தாசைப் பற்றியோ ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையாம். பா.ம.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூடச் சொல்ல வில்லையாம். இதனால் பா.ம.க.வினர் முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டனராம்.<br /><br />தேர்தலில் ஆதரவு கோரி பா.ஜ.க. வினர் எங்களை முறைப்படி அணுக வில்லை என்று கூறி கோவை பா.ம.க. வினர் தேர்தல் பணி புறக்கணிப்பை அறி வித்தனர் என்பது இன்னொன்று இந்த செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.<br /><br />மதிமுக கொடி மருந்துக்கும்கூட கிடையாதாம்! இப்படி இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA).<br /><br />எலி, தவளை - பருந்து கூட்டணி என்று நாம கரணம் சூட்டலாம் இந்த அணிக்கு.<br /><br />தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நெடி ஏறலாம். ஒருவர் காலை இன்னொ ருவர் வாருவார் என்று எதிர்பார்க்கலாம்.<br /><br />கொள்கையில் அப்பட்டமான முரண் பாடுகள் கொண்ட கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் இந்தப் பரிதாப நிலைதான்!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/77933.html#ixzz2xgdoLdWC<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com