Search This Blog

4.2.14

ஜன நாயகமா? பண நாயகமா?



உலகில் ஜனநாயகம் என்னும் வார்த்தை மிகவும் செல்வாக்குப் பெற்றது என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது.

செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையானதும், நேர்மையானதும் என்று சொல்லிவிட முடியாது.

செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் பெரும்பான்மையும் சில சுயநலங்கொண்ட மக்களால் உள் எண்ணத்தோடு கற்பிக்கப்பட்டு பாமர மக்களுக்குள் பிரசாரம் செய்யப்பட்டதின் பயனாகவே செல்வாக்கடைய முடிந்ததாக இருக்குமே தவிர உண்மையில் அதன் யோக்கியதையால் ஏற்படும் பயன்களால் செல்வாக்கு ஏற்பட்டதென்று சொல்லிவிடவும் முடியாது.

புண்ணியம், சத்தியம், அஹிம்சை, ஜீவகாருண்யம், ஒழுக்கம், கற்பு என்பன போன்ற வார்த்தைகளுக்கு நாட்டில் மதிப்பும் செல்வாக்கும் இருந்து வருகின்றது என்றாலும் அவைகள் உபயோகப்படும் மாதிரியும் காரியத்தில் அனுஷ்டிக்கப்படும் தன்மையும் எப்படி இருந்து வருகின்றது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவை பெரும்பாலும் வலுத்தவன் இளைத்தவனை அடக்கியாளும் காரியத்திற்கும் தன் தன் சுயநலத்துக்குமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன என்பது கண்கூடு.

இம்மாதிரியிலேயே தான் ஜனநாயகம் என்கின்ற வார்த்தையும், பணநாயகத்துக்கு அடிமை அதாவது பாமர மக்களையும், ஏழை மக்களையும் அடக்கியாள, படித்த பணக்கார மக்களால் கற்பிக்கப்பட்டதும், பயன்படுத்தத் தக்கதுமான வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

உலகிலே எந்தெந்த நாட்டில் ஏழை மக்கள் கண் விழித்தார்களோ அங்கெல்லாம் ஜனநாயகத்தின் புரட்டு வெளியாகிக் கொண்டுதான் வருகின்றது. ஜனநாயக அரசாங்கம் ஜனநாயக ஸ்தாபனங்கள் ஜனநாயக முயற்சிகள் என்பவைகளைப் பற்றிய அனுபவம் இந்திய மக்களுக்குச் சுமார் 50, 60 வருஷ காலமாக இருந்து வருகின்றது என்று எண்ணுகின்றோம். இந்த ஐம்பது, அறுபது வருஷகால அனுபவத்தில் ஜனநாயகத்தின் பலன் என்ன என்பதைப் பார்த்தால் பிறகு ஜனநாயகம் என்பதில் அதன் வார்த்தைக்கேற்ற தத்துவம் இருக்கின்றதா? அல்லது ஜனநாயகம் என்பது பணநாயகத்தின் அடிமையா என்பது விளக்கும்.

இந்தியாவில் ஜனநாயக ஸ்தாபனம் என்னும் காங்கிரசு ஏற்பட்டு சுமார் 50 வருஷங்களுக்கு மேலாகின்றது. ஜனநாயக தத்துவம் என்னும் முனிசிபாலிட்டிகள், ஜில்லா தாலூகா போர்டுகள் முதலியவை ஏற்பட்டும் 50, 60 வருஷங்களாகின்றன.

சட்டசபைகள், நிர்வாக சபைகளில் பெரும்பாகம் முதலியவைகளும் ஜனநாயகத்துக்கு வந்து 20 வருஷங்கள் முதல் 40 வருஷங்கள்வரை ஆகின்றன. இவைகளால் பொது மக்களுக்கு ஜனநாயக தத்துவ நன்மை என்ன ஏற்பட்டது? அல்லது ஜனநாயக உரிமை என்ன ஒழுங்காய் பயன்படுத்தப்பட்டது? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். ஜனநாயக சட்டசபையையும், நிர்வாக சபையையும் எடுத்துக் கொள்ளுவோம். ஜனநாயக ஸ்தாபனங்களின் பேரால் நடக்கும் புரட்டுகள் எவ்வளவு? என்பதில் காங்கிரசைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றோம். பொதுவாகப் பேசுவோமானால் இன்று ஜனநாயகம் பணநாயகத்தின் அடிமையா அல்லவா என்பதை முதலில் யோசிப்போம். நமது சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால் ஒரு இரண்டு மூன்று ஜமீன்தார்களோ, பணக்கார லேவாதேவிக்காரரோ முதலாளிகளோ ஒன்று சேர்ந்து 3 அல்லது 4 லக்ஷ ரூபாய் முதல் வைத்து ஜனநாயகத்தை விலைக்கு வாங்கும் கூட்டாளிகளாகி ஒரு கூட்டு வியாபாரம் ஆரம்பித்தால் 26 ஜில்லாக்களிலும் குறைந்த அளவாக மெஜாரிட்டி சட்டசபை மெம்பர்களையாவது தங்கள் இஷ்டப்படி ஆடக் கூடியவர்களாக சம்பாதித்து விட முடியுமா முடியாதா என்று யோசித்துப் பாருங்கள். இன்னமும் கொஞ்சம் பணம் செலவு செய்தால் அரசாங்க நியமன மெம்பர்களையும் சுவாதீனம் செய்து கொள்ள முடியுமா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் எந்த தேர்தலை எடுத்தாலும் ஸ்தல ஸ்தாபன தேர்தலுக்கு 2000ரூ செலவு, 5000ரூ செலவு, 10000ரூ செலவு என்று சொல்லப்படுவதும் சட்டசபை முதலிய தேர்தல்களுக்கு பத்து ஆயிர ரூபாய் செலவு, இருபது ஆயிர ரூபாய் செலவு, ஐம்பது ஆயிர ரூபாய் செலவு என்று சொல்லப்படுகின்றதும் உண்மையா அல்லவா என்று கேட்கின்றோம்.

100க்கு 90 மக்களை ஏழை விவசாயிகளாகவும், ஏழைத் தொழிலாளிகளாகவும் எழுத்து வாசனை அற்ற பாமர மக்களாகவும் சராசரி வாழ்க்கைக்கு போதுமான சௌகரியமில்லாத மக்களாகவும் கொண்ட இந்த நாட்டில் மேல் கண்டபடி ஆயிரம், பதினாயிரம் லக்ஷம் கணக்காக ரூபாய்களைச் செலவு செய்தால் தான் ஜனநாயகப் பிரதிநிதித் தத்துவத்தை அடையலாம் என்கின்றதான ஜனநாயகம் அல்லது கலப்பற்ற உண்மையான ஜனநாயகமா? பணநாயகமா? என்று கேட்பதல்லாமல் இத்தேர்தல்களின் பயனாய் ஏற்படும் கலகம், காலித்தனம், மனஸ்தாபம், கக்ஷி, பிரதிக்கக்ஷி மனப்பான்மை ஆகியவைகள் ஒரு கூட்ட மக்களை முடிநாயகத்துக்கு நிபந்தனை அற்ற அடிமைகளாகச் செய்து வருகின்றதா இல்லையா என்றும் கேட்கின்றோம்.

அரசாங்கம் தன்னை ஜனங்களுக்காக ஜனங்கள் அபிப்பிராயப்படி நடக்கும் ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளுவதை நாம் புரட்டு என்று சொல்லுவதை விட அவர்களால் கொடுக்கப்பட்ட ஜனநாயகத் தத்துவத்தை கையாளும் ஜனங்கள் உண்மையாய் யோக்கியமாய் அனுபவிக்கத் தகுதி உடையவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதானது இன்னும் ஆயிரம் பங்கு முழுப் புறட்டு என்றுதான் சொல்லப்பட வேண்டியதாகும்.

ஜனநாயகம் கொடுக்கப்பட்ட எல்லாத் துறைகளிலும் பணம் உள்ளவன், பூமி உள்ளவன், வீடு வாசல் உள்ளவன், இந்திய மக்களின் சராசரி வரும்படிக்கு மேல் 10 பங்கு 100 பங்கு அதிக வரும்படி உள்ளவன் ஆகியவர்களுக்குத்தான் ஓட்டுரிமை இருகின்றதே தவிர, கைகால் உறமாய் இருந்து அவனவன் கைப்பட உழைத்து உண்ணும் பாட்டாளி மக்களுக்கு ஓட்டுச் சுதந்திரம் கிடையவே கிடையாது. மற்றும் தன் உழைப்பின் பயனாய் வருஷம் ஒன்றுக்கு 350 ரூபாய் வரையில் கூலியோ, சம்பளமோ, பெறுகின்றவனாய் இருந்தாலும் அவனுக்கும் ஓட்டுரிமை கிடையாது என்கின்ற முறையில்தான் ஜனநாயக ஓட்டுரிமை இருக்கின்றது என்றால் இப்படிப்பட்ட ஏழைப்பாட்டாளி மக்களுக்கு ஜனநாயகப் பிரதிநிதித்துவம் எப்படி கிடைக்குமென்று கேட்கின்றோம். ஓட்டு அருகதை, பிரதிநிதி அருகதை இப்படியாக இருந்தாலும் பிரதிநிதித்துவத்தைப் பெறும் முறை முன் குறிப்பிட்டபடி ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் ரூபாய் செலவிட வேண்டியதாய் இருக்கின்ற தென்றால் ஏதோ ஒரு சில பணக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் பொதுமக்கள் இதை நினைக்கத்தான் யோக்கியதை யுடையவர்களாவார்களா என்றும் தேர்தல் கூச்சல் போடுகிறவர்களைக் கேட்கின்றோம். இந்த மாதம் பூராவும் ஜனநாயகத் தேர்தல் கூச்சலாகவே இருக்கிறது. இந்திய சட்டசபைத் தேர்தல், டவுன் முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்கள் ஆகியவைகளின் பேச்சுக்களாகவே இருக்கின்றன. இந்திய சட்டசபைத் தேர்தல் சம்மந்தமாய் லக்ஷக்கணக்கான செல்வம் உள்ளவர்களும், லக்ஷக்கணக்கான செல்வந்தர்களை தங்கள் கைக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்பது வெளிப்படை. பணச்செலவு இல்லாமல் ஏமாற்றலாம் என்று கருதுகின்றவர்கள் ஜனநாயக ஸ்தாபனங்களின் புரட்டுகளையும் அயோக்கியத்தனங்களையும் ஆதாரமாய்க் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே இரண்டுக்கும் யோக்கியதையற்ற வெகுபேர் "சீ அந்தப் பழம் புளிக்கும்" என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது நிற்க, முனிசிபல் டவுன் தேர்தல்களை எடுத்துக் கொள்ளுவோம். ஒரு ஓட்டுக்கு 10 ரூபாயில் இருந்து 15 ஆகி 20 ஆகி, 25 ஆகி, 35 ஆகி, 50 ரூபாய் ஆகி விட்டதுடன் சில ஓட்டுகளுக்கு அதாவது சிறிது சாமார்த்தியவாளியாய் இருந்து வாங்கின பணத்தைத் திரும்பக் கொடுப்பதாய் பாசாங்கு செய்தவர்களுடைய ஓட்டுகளுக்கு 100 ரூபாய் விலையும் ஆகிவிட்டது. இதில் எதுவும் இரகசியமிருப்பதாய் சொல்ல முடியாது. சர்க்கார் சேவகர்கள், குமாஸ்தாக்கள் ஓட்டுகளும் கூட இந்த விலைக்குத்தான் வாங்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்க வேண்டியிருக் கின்றது. சிலர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக்கலாம் என்றாலும், அதற்குத் தகுந்த பிரதிப் பிரயோஜனமாவது அடையக் கருதியே ஓட்டுச் செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவற்றோடு மாத்திரமல்லாமல் ஜனநாயகத்தைப் பணநாயகம் என்று மாத்திரம் சொல்வதோடல்லாமல் காலித்தன நாயகம் என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையில் சில ஊர்களில் தேர்தல்கள் நடைபெற்றதாகச் செய்திகள் எட்டுகின்றன.

இன்றைய தினம் இருக்கும் பண நெருக்கடியில் 20ரூ, 30ரூ, 100ரூ. போல ஒரு காக்காப்புள்ளி து போடுவதற்குப் பணம் கிடைப்ப தாயிருந்தால் அதை வேண்டாமென்று சொன்னவர்களை முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் "பொது ஜனங்கள்" கேட்ட ஜனநாயகத் தத்துவத்தில் புரட்டு இல்லை என்று சொல்ல எவராலும் முடியாது. அரசாங்கத்தார் வழங்கிய ஜனநாயகத் தத்துவத்தில் ஏமாற்றமும், புரட்டும் இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது. இதை ஏற்றுக்கொண்டு ஜனநாயகப் பிரதிநிதிகளாய் நிற்கும் அபேட்சகர்களிடத்தில் புரட்டும், ஏமாற்றமும், பித்தலாட்டமும் மாத்திரம் அல்லாமல் நாணையக் குறைவும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மையும் அடியோடு இல்லை என்று சிறிது கூட சொல்லிவிட முடியாது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு ஓட்டர் இப்படிப்பட்ட காரியத்திற்கு இப்படிப்பட்ட ஆட்களிடம் பத்தோ, இருபதோ, ஐம்பதோ, நூறோ வாங்கிக்கொண்டு ஓட்டுச் செய்தால் அது எப்படி குற்றமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.

எப்படி ஒரு பெண் கற்பு இழந்தால் அந்த பெண்ணுக்கும், அதற்குச் சரிபங்கு பொறுப்பாளியாய் இருந்த ஆணுக்கும் சரிசமமான பாவம் என்று சொல்லுகின்றோமோ, அது போலவேதான் ஒரு ஓட்டர் பணம் வாங்கினால் அந்த ஓட்டருக்கும், அவருக்குப் பணம் கொடுத்த அபேட்சகருக்கும் அதற்கு இவ்வளவு தாராளமாய் இடமளித்த அரசாங்கத்துக்கும் சமமான பாவம், குற்றப் பொருப்பு இருக்கின்றது என்று தான் சொல்லுவோம். இன்றைய சட்டத்தில் இதற்கு வேறு மாதிரியான அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால் தீர்ப்பு நாள் சட்டமிருக்கின்றதாகச் சொல்லுகின்றார்களே, அந்தச் சட்டத்தில் அதாவது ஒவ்வொருவருடைய பகுத்தறிவையும் உபயோகித்து நடுநிலையில் இருந்து பார்க்கும் தன்மையில் மூன்று பேரும் அதாவது ஓட்டரும், அபேட்சகரும், தேர்தல் முறைகளும் மூன்றும் குற்றவாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத் தத்துவம் பணக்காரத் தன்மையது என்பது யாரும் மறுக்கக் கூடியதல்ல. ஏனெனில் பணக்காரனுக்குத்தான் ஓட்டு என்பதோடு அதிகப் பணம் செலவு செய்யத் தகுந்தவன் தான் வெற்றி பெறக்கூடிய நிலையில் இன்று பெரும்பான்மையான எல்லா தேர்தலும் இருந்து வருவதையும் அந்தப்படியே நடந்து வருவதையும் அரசாங்கம் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது.

போட்டி போடும் இரண்டு அபேட்சகர்களும் இந்த மாதிரி நடந்து கொள்வதால் அரசாங்கத்தாரிடம் பிராது கொடுக்க எவனும் வருவதில்லையே ஒழிய அதாவது சூதாடிகள் சூதுக் குற்றத்துக்காக எப்படி அவர்களே பிராதுக்கு வராமல் இருக்கிறார்களோ அதுபோல் இருவரும் வருவதில்லை.

ஆனால் அரசாங்கம் இந்தக் குற்றத்துக்கு ஜவாப்தாரியல்ல என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் மற்றக் காரியங்களுக்கு எப்படிப் புலன் விசாரித்து நடவடிக்கை நடத்துகிறார்களோ அதுபோல் நடத்தி இக்காரியங்களை ஒழித்து இருக்கலாம். ஆதலால் அரசாங்கம் இதில் பங்கு பெறாமல் தப்பித்துக் கொள்ள முடியாது.

இந்தக் காரணங்களால் தான் ஜனநாயகம் என்று சொல்லப்படுவது ஏமாற்றம் என்றும், அது பணநாயகத்தின் லைசென்ஸ் பெற்ற கூலி என்றும், அதைப் பொது மக்கள் இந்த மாதிரி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுச் செய்யலாம் என்கின்ற காரியத்திற்கு அல்லாமல் வேறு காரியத்திற்கு உதவும் என்று எண்ண இடமில்லை என்றும் சொல்லுகிறோம்.

              ------------------------- தந்தைபெரியார் - "பகுத்தறிவு" தலையங்கம் 30.09.1934

62 comments:

தமிழ் ஓவியா said...


ஓமாந்தூரார்


ஓமாந்தூரார் என்ற ஊரின் பெயர், ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களையே குறிக்கும். அவரின் பார்ப்பனர் அல்லா தார் உணர்ச்சியைக் கண்டு அவரை தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்று பார்ப்பனர்கள் கூறிய துண்டு.

சென்னை திருவல்லிக் கேணியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது தந்தை பெரியார் ஒரு தகவலைச் சொன்னார்.

ஈரோடு ராமசாமியா வது நாஸ்திகம் பேசித் தொல்லை கொடுக்கிறான்; ஆனால் ஓமாந்தூர் ராம சாமியோ விபூதி பூசிக் கொண்டே தொல்லை கொடுக்கிறான் என்று பார்ப்பனர்கள் கூறியதை தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் அடையாளப் படுத்தினார்.

சென்னை உயர்நீதிமன் றத்தில் முதன் முதலாகப் பார்ப்பனர் அல்லாத நீதிபதி சோமசுந்தரம் வருவதற்கு முதல் அமைச்சர் ஓமாந் தூரார் பரிந்துரை செய்தார்; பார்ப்பனர் ஒருவரை அந்த இடத்துக்குக் கொண்டு வர பார்ப்பன சக்திகள் அழுத் தம் கொடுத்தன. (ராஜாஜி உட்பட).

பிரதமர் நேரு அவர்கள் முதல்வர் ஓமாந்தூராரைத் தொடர்பு கொண்டு, விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓமாந்தூரார் என்ன செய்தார் தெரியுமா? பிடியுங்கள் என் ராஜி னாமாவை! என்பதுதான் பதிலாக இருந்தது.

வேறு வழியின்றி பிரத மர் நேரு ஓமாந்தூரார் உறு திக்கு இணங்க நேர்ந்தது.

1948இல் ஓமாந்தூரார் காலத்தில் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் இந்தித் திணிப்பை முன் வைத்தார் தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார். அந்த சூழலில் தந்தை பெரியார் முதல்வர் ஓமாந்தூராரைச் சந்திக்க நேர்ந்த சமயத்தில் ஓமாந்தூரார் கூறியதை தந்தை பெரியார் வெளியிட் டுள்ளார் (விடுதலை 2.11.1948)

நீங்கள் காங்கிரஸில் இருந்திருந்தால் நீங்கள் அல்லவோ இந்த ஸ்தானத் தில் இருந்திருக்க வேண் டும் என்றார் ஓமாந்தூரார்.

அந்த ஸ்தானத்தில் நான் இருந்தால் இப்பொழுது நான் செய்யும் வேலையைச் செய்ய முடியாதே என்று தந்தை பெரியார் பதில் கூறினார். உண்மைதானே!

சேரன்மாதேவி குரு குலத்தில் படித்த மாணவர் களுள் ஒருவர் ஓமாந்தூரார் மகன். குருகுலத்தில் அங் குப் பார்ப்பனர் அல்லாதார் பாதிக்கப்பட்டதை ஓமாந் தூரார் மகன் மூலம்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது என்பதும் கூடுதல் தகவலாகும். இன்று ஓமாந்தூரார் பிறந்த நாள் (1895).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74573.html#ixzz2sJMInJDT

தமிழ் ஓவியா said...


ரசல்


உலக நாத்திகச் செம்மல் பெட்ரண்ட் ரசல் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1970) 98 ஆண்டுகள் 8 மாதம் 15 நாள்கள் வாழ்ந்து இன்ஃ புளூயன்சா காய்ச்சலால் மரணம் அடைந்தார். Why I am not a Christian என்ற அவரின் புகழ் பெற்ற ஆங்கில நூலை நான் ஏன் கிருத்துவன் அல்ல என்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.

குத்தூசி குரு சாமி அவர்கள் அதனை மொழி பெயர்த்தார். 1927ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இலண்டன் லோகாயத சங்கத்தின் (National Secular Society) சார்பில் பாட்டார்சி நகர மன்றம் ஒன்றில் இந்தத் தலைப்பில் ரசல் உரையாற் றினார். நான்கு ஆண்டு களுக்குள் 7 பதிப்புகள் வெளியிடப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் 24 ஆயிரம் நூல்கள் விற்பனையாயின என்பது சாதாரணமானதல்ல.

தனது மூன்றாவது வயதிலேயே ரசல் பெற் றோர்களை இழந்தார்.

ஆனாலும் அவர்தம் பெற்றோர்கள் தம் பிள்ளை மத மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தனர். அதற்காக இருவரை, குழந்தை ரசலுக்குப் பாதுகாவலர் களாக நியமித்தனர் என் பது அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியமான தகவல்தான்.

11 வயது முதல் 38 வயது வரை கணிதம்தான் அவ ருக்கு எல்லாமுமாக இருந் தது. அதன் பிறகு சமு தாயச் சிந்தனைகள் அவரி டம் வேர்விட ஆரம்பித்தன. முதல் உலகப் போர் நடந்த போது அதன் தீய அம்சம் குறித்து எதிர்த்து எழுதி னார். அதன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வேலை பறிபோயிற்று - சிறையும் அவரை வா என்று வரவேற்றது.

1910ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கட்சியின் கூட் டத்தில் ரசல் பேசியபோது சில வினாக்கள் அவரிடம் தொடுக்கப்பட்டன.

கேள்வி: கடவுளைப் பற்றி நீங்கள் கவலைப் படாதவரா? ரசல்:ஆம்!

கேள்வி: சர்ச்சுக்குப் போவதுண்டா? ரசல்: நிச்சயமாகப் போக மாட்டேன். கேள்வி: இந்தக் கருத்தை இரகசியமாக வைத்துக் கொள்வீர்களா? ரசல்: இல்லை. வெளிப் படையாகவே கூறுவேன் என்றார் ரசல். விளைவு - அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப் பட்டது.

தந்தைபெரியார் போல பெண்ணுரிமைக் கருத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்; அவர் எழுதிய திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Moral) எனும் நூல் தடை செய்யப் பட்டது.

குறிப்பு: மேலும் விவரங் களுக்கு ஆசிரியர் மான மிகு கி.வீரமணி அவர்கள் உண்மை இதழில் மார்ச்சு, ஏப்ரல் 1970, விடுதலை 15.2.1970 கட்டுரைகளைக் காண்க)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74602.html#ixzz2sJMa4tIW

தமிழ் ஓவியா said...

யாகம் என்று சொல்லி கணவன் - மனைவியை கிணற்றில் தள்ளி நகைகள் கொள்ளை! கணவன் மனைவியான ஜோதிடர்கள் கைது!


பெங்களூரு, பிப்.2- ஜோதிடம் யாகம் செய் வினை எடுப்பு இவற்றில் கைதேர்ந்தவர் என்று மக்களின் மூடநம் பிக்கை காரணமாக பிரபலமான புள்ளியாக நடைபோட்டு வந்த ஜோதிடர்களான இணையர்கள் யாகம் என்று சொல்லி பணக் கார இணையரை கிணற்றில் தள்ளி நகை களைக் கொள்ளையடித் தனர் - இப்பொழுது சிறையில் உள்ளனர்.

கருநாடக மாநிலம், குமுதா தாலுகா, பக் கான் கிராமத்தில் வசிக் கும் பிரபல ஜோதிடர் கணேஷ் பட் மற்றும் வன்யா இணையர். கர் வார் நகரில் மிகவும் பிரபலமான இந்த ஜோ திட இணையர் கடந்த 13 ஆண்டுகளாக புது மனை புகுவிழா, யாகம், நிலம் வாங்குவதற்கு தொழில் துவங்க என பலருக்கு ஜோதிடம் பார்த்து வந்தனர். இவர் கள் உள்ளூர் தொலைக் காட்சியில் ஜோதிடம் தொடர்பான மற்றும் ஆன்மீக சொற்பொழி வாற்றிவந்தனர்.

யல்லாப்பூர் தாலுகா வில் உள்ள நந்தோயி கிராமத்தைச்சேர்ந்த திம் மண்ணா ராமச்சந்திர பட் சவிதா பட் இணை யர் பல ஆண்டுகளாக கணேஷ் பட் ஜோதிட ரின் மீது பெரும் நம் பிக்கை கொண்டிருந் தனர். இவர்கள் புதுவீடு கட்டும் போதும், விவ சாய நிலங்கள் வாங்கும் போதும் கணேஷ் பட் ஜோதிடரை அழைத்து யாகம் செய்வர்.

இந்த நிலையில் இவர் கள் இரண்டு லாரிகள் வாங்க முடிவு செய்து அதற்காக கணேஷ் பட்டிடம் ஆலோசனை கேட்டனர். கணேஷ் பட் முதலில் வங்கியில் லோன் வாங்கி செய் யப்போகிறீர்களா என்று கேட்டுள்ளார்.அதற்கு திம்மண்ணா தங்கள் வசமுள்ள நகைகளை அடகுவைத்தால் 25 லட் சத்திற்கு மேல் கிடைக் கும் அதைவைத்து நாங் கள் லாரி வாங்குவோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

இதைக் கேட்டவுடன் ஜோதிட ருக்கு அந்த நகைகளை அபகரிக்க ஆசை வந் தது. இதற்கான திட்ட மிட்ட அவர் திம் மண்ணா இணையரி டம் யாரோ உங்களுக்கு செய்வினை செய்திருப் பதாகவும் அதை நிவர்த்தி செய்த பிறகு உங்கள் நகைகளை அடகு வைக்கலாம் ஆகையால் உங்கள் நகைகளை எல்லாம் வயலில் உள்ள கிணற்றருகில் கொண்டுவாருங்கள் அங்கு ஜலப்பிரதாப யாகம் ஒன்று நடத்தி வருண பகவானின் ஆசி பெற்று செய்வினையை நீக்கிய பிறகு அந்த நகைகளைக் கொண்டு சென்று அடகு வைத் தால் அதைவிட பல மடங்கு நகைகள் உங் களுக்கு வந்து சேரும் என்றும் வேறு யாருக் கும் இந்த யாகம் பற்றிக் கூறவேண்டாம் என்று கூறினார்.

ஜோதிடரின் பேச்சில் மிகுந்த நம்பிக்கை கொண்ட திம்மண்ணா தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை சுஷாந்தையும் அழைத் துக்கொண்டு ஊருக்கு வெளியில் உள்ள தங்கள் நிலத்தில் உள்ள கிணற் றின் அருகில் யாகத் திற்கு தயார் செய்தார். செவ்வாய்க் கிழமை அதிகாலை சரியாக ஒருமணிக்கு தனது மனைவி வன்னியாவின் துணையுடன் யாகம் என்ற பெயரில் ஏமாற்று வேலையைத் துவங் கியகணேஷ் பட்,ஒரு வெள்ளைத்துணியை விரித்து அவற்றை வரி சையாக மந்திரம் கூறக் கூற ஒவ்வொன்றாக வைக்கக்கூறினார்.

பிறகு கிணற்றின் சுவரில் மற்று மொரு வெள்ளை துணியை விரித்து அதில் இணையர் இருவரையும் அமரவைத்து கண்ணை மூடி மந்திரங்களை கூறக் கூறினார். சிறிது நேரத் திற்கு பிறகு கணேஷ் பட் மற்றும் அவரது மனைவி திம்மண்ணா இணை யரை அப்படியே கிணற் றில் தள்ளிவிட்டனர். அதன் பிறகு அங்கி ருந்த பெரிய கற்களை கிணற்றுக்குள் வீசினார் கள், ஆனால் திம் மண்ணா மற்றும் அவ ரது மனைவி சவிதா கிணற்றின் சுவரில் உள்ள திண்டுகளை பிடித்து உயிர் தப்பினார்கள். நள்ளிரவு ஆகையால் கிணற்றில் இவர்கள் தொங்கிக்கொண்டு இருப்பது தெரியாமல் இருவரும் இறந்துவிட் டனர்.

என நினைத்து நகை மற்றும் திம்மண் ணாவின் ஒருவயது பையனை தூக்கிக் கொண்டு அந்த இடத் தில் இருந்து ஜோதிட இணையர் தப்பி ஓடி விட்டனர். ஒருவழியாக தப்பி வந்த இணையர் ஊருக்கு வந்து ஊர்க் காரர்கள் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலை யில் தூங்கிக்கொண்டு இருந்த ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களுக்கு இணையர்கள் உயி ருடன் தப்பியதும் தங் கள்மீது காவல்துறையி டம் புகார் கொடுத்தி ருப்பதை அறிந்த இணை யர் கர்வார் காவல் நிலையம் சென்று சரண டைந்தார்கள். விவரம் இதுபற்றி தகவல் அறிந்ததும் திம்மண்ணா கர்வார் காவல்நிலையம் சென்று தன்னுடைய குழந்தையை பெற்றுக் கொண்டார். ஜோதிட இணையர் கள் மீது கொலை முயற்சி, கொள்ளை, குழந்தை அபகரிப்பு மற்றும் ஆதாரங்களை அழித்தல் பிரிவில் வழக்கு பதிவுசெய்து அவர்களை கைது செய் தனர்.

இந்த சம்பவம் குறித்து கர்வார் காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில் அதிகாலை ஒரு மணிக்கு இச்சம்ப வம் நடந்தது, இணை யர்கள் உயிருடன் தப் பியதை அறிந்து கொண்ட ஜோதிடர் நேராக காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை அவர்களின் பெற்றோரிடம் ஒப் படைக்கப்பட்டது.

6 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண வாழ்க்கை வாழ்ந்த இணையர் திடீ ரென பெரும் வசதி மிகுந்தவர்களாக மாறி விட்டனர். ஆகையால் இது போன்ற சம்பவம் வேறு எங்கும் நிகழ்த்தி இருக்கிறார்களா என்று விசாரிக்கவேண்டும், மேலும் இந்த குமுதா மற்று யல்லாப்பூர் தாலு காவில் பல கிராமங் களில் இவர்கள் யாகம் என்ற பெயரில் செய்த கொள்ளைகளை விசாரிக்க வேண்டும் விசார ணைக்கு பிறகு பல உண் மைகள் வெளிவரும் எனக்கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/74578.html#ixzz2sJMmNkgk

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என பெயர் மாற்றம் சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தல்


மதுரை, பிப். 2- சென்னை உயர்நீதி மன்ற என்பதை 'தமிழ் நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்ற வேண்டும். உயர் நீதிமன் றங்களில் தமிழில் வாதிட கட்சி பாகு பாடின்றி தமிழக எம்.பி.,க்கள் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்,'' என மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத் தினார்.

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதிட வழிகாண வேண்டும் என மதுரை வந்த சுதர்சன நாச்சியப்பனிடம், உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். சுதர்சன நாச்சியப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மூன்று திராவிட மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்கியவர் சோனியா.

இதன்படி, தமிழ் மொழி, செம்மொழியானது. இந்நிலையில் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதிட வலியுறுத்தி வழக்குரைஞர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பட்டினிப் போராட்டமும் இருந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழில் வாதிட தடை எதுவும் இல்லை. இதை நடைமுறைப்படுத்தும்படி, பிரத மரிடம் வலியுறுத்துவேன். சென்னை உயர்நீதி மன்றம் என்பதை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழக உயர்நீதிமன்றங்களில், தமிழில் வாதிடுவதற்கு ஏற்ப, கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.பி.,க் களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/page1/74546.html#ixzz2sJN6vUHg

தமிழ் ஓவியா said...

சமூகசீர்திருத்தம்,மறுமலர்ச்சிமாநாடுதான்!

திருச்சி தி.மு.க. மாநாடு குறித்து கலைஞர் கடிதம்

சென்னை, பிப்.3- திருச்சிராப்பள்ளியில் பிப்ரவரி 15, 16 நாட் களில் நடைபெறும் மாநில மாநாடு குறித்து முரசொலியில் இன்று தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்களால் எழு தப்பட்ட கடிதத்தில் திருச்சி மாநாடு திருப்பு முனை மாநாடுதான்! சமூக சீர்திருத்தம், சமு தாய மறுமலர்ச்சி இவற்றை தி.மு.க. என் றும் கை விடாது என் றும் அழுத்தமாகக் குறிப் பிட்டுள்ளார். கடிதம் வருமாறு:

1990ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 9, 10, 11 ஆகிய நாட்களில் தி.மு.க.வின் ஆறாவது பொது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற் றது. இந்த மாநாட் டோடு இணைந்து, இளைஞர் அணி சம தர்ம சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சி மாநாடாக இரண்டாவது நாள் காலை முதல் இரவு வரை நடைபெற்றது. முதல் நாள் மாபெரும் அணிவகுப்புப் பேரணி நடந்தது.திருச்சியில் நடைபெற்ற இந்த 6ஆவது பொது மாநில மாநாட்டிற்கு முன்பு தான் இந்த திருப்பு முனை என்ற பெயரே எழுந்தது. திருப்புமுனை, திருப்புமுனை என்று சொல்கிறீர்களே, அது என்ன திருப்புமுனை என்று பத்திரிகைக் காரர்கள்கூட என்னைக் கேட்டார்கள்.

அதே திருச்சியில் நடைபெற்ற இரண் டாவது மாநில மாநாட் டிற்கு அப்போது பேர றிஞர் அண்ணா அவர் கள் அன்பில் அழைக் கிறார் என்ற தலைப் பிலே பாசத்தையும் பைந் தமிழையும் குழைத்து தொடர்ந்து எழுதி, கழகத் தோழர்களை யெல்லாம் எழுச்சி கொள்ளச் செய்து அந்த மாநாட்டிற்கு வரவழைத் தார்கள். அதுபோல திருச்சி என்றாலே, திருப் புமுனை மாநாடுதானே என்ற தலைப்பில் மாநில மாநாடு ஒரு திருப்பு முனை என்று அறுதி யிட்டுக் கூறிட என்ன காரணம் என்று கேட் பவர்களுக்கு நான் கூறுகின்ற பதில், நான் ஆறாவது மாநில மாநாட் டிலேயே தெரிவித்தது தான். திருச்சியிலிருந்து சேலத்திற்குச் செல்ல வேண்டுமென்று நாம் புறப்படுகிறோம். சேலத்திற்குச் செல்ல வேண்டுமென்று புறப்பட்டால், நாம் வழியிலே இடது பக்கம் முசிறி வழியாகத் திரும்பி, நாமக்கல் வழியாகச் சேலத்திற்குச் சென்றிடலாம். முசிறிப் பகுதியில் திரும்ப வேண்டிய பாதையை தவற விட்டு விட்டு, உளுந்தூர்பேட்டை வரை சென்ற பிறகு, அடடா, உளுந்தூர்பேட்டை வரை வந்து விட்டோமே, சேலத்திற்கு அல்லவா செல்ல வேண்டும், பரவாயில்லை, இங்கிருந்து சேலத்திற்குச் செல்ல சாலை இருக்கிறதே, அந்த வழியாகச் செல்லலாம், என்று உளுந்தூர் பேட்டையிலிருந்து சேலத்திற்குச் செல்லலாம். அதைப்போல திருச்சியில் அரசியல் ரீதியாக நாம் நடைபோடுவோம் என்று ஆரம்பித்த இயக்கம், முசிறியில் திரும்பாமல், நம் முடைய சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக் களைப் பற்றிய கவலையை விட்டு விட்டு, நேராக உளுந்தூர்ப்பேட்டை வரை சென்று விட்ட காரணத்தால், மறுபடியும் சேலத்திற்கு அல்லவா செல்ல வேண்டும், சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளை விட்டு விடக்கூடாது என்று செயல்படுவது தான் திருப்புமுனை! இதைத்தான் அந்த ஆறாவது பொது மாநில மாநாட்டிலும் விளக்கினேன்.இப்போதும் திரும்பக் கூறுகிறேன்.


தமிழ் ஓவியா said...

தி.மு.கழகத்தினுடைய அரசியல் பயணத்தில் சமுதாய சீர்திருத்தம், சமுதாய மறுமலர்ச்சி இவை கைவிடப்பட்ட ஒன்றல்ல. நீதிக் கட்சிக் காலத்தில் நடை பெற்ற ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு, லண்டன் மாநகரில் மன்னருடைய அரண்மனை. அதிலே ஒரு விருந்து. செல்வந்தர்களும், சீமான்களும் கூடியிருக்கிறார்கள். அனை வரும் மன்னர் அய்ந்தாம் ஜார்ஜ் எப் போது நுழைவார் என்று அவர் வருகின்ற வழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கள். மன்னர் வருகிறார் - அனைவரும் கைதட்டி வரவேற்கிறார்கள். மன்னர் ஒவ்வொருவரிடமும் வந்து கை குலுக்கு கிறார். சர் ஏ.டி. பன்னீர்செல்வம், சர் ஏ. ராமசாமி முதலியார், ஜெயகர், முகமது உஸ்மான் போன்றவர்களிடம் கை குலுக் கியவாறு வந்தவர், முறுக்கு மீசையும், அகன்ற நெற்றியும், தெளிவான மார்பை யும் கொண்ட ஒருவர், மன்னர் கை குலுக்க வந்தபோது, கையை நீட்டாமல் இழுத்துக் கொண்டார். மன்னர் அதிர்ச்சியோடு, அவரைப் பார்த்த போது, மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே! நீங்கள் என்னைத் தீண்டக் கூடாது, தீண்டினால் மன்னருக்கு தீங்கு நேரும். ஏனென்றால் நான் இந்தியாவில் உள்ள தீண்டத்தகாத வகுப்புகளில் ஒன்றான பறையர் இனத் தைச் சேர்ந்தவன் என்று கணீரென்று ஆங்கிலத்தில் சொன்னார். உடனே மன்னர் ஆச்சரியமடைந்து, மனிதனை மனிதன் தீண்டுவது கூடாது என்பது என்ன நியாயம்? என்று கேட்டு அந்த மனிதரை உற்றுப் பார்த்தபோது, அந்த மனிதருடைய கோட்டில் இணைக்கப்பட் டிருந்த அட்டை ஒன்றில், ராவ் பகதூர் ஆர். சீனிவாசன் - பறையன் - நான் ஒரு தீண்டத்தகாதவன் என்று எழுதப்பட் டிருந்தது. அப்போது மன்னர், பரவா யில்லை, மிஸ்டர் ராவ் பகதூர் சீனிவாசன் அவர்களே என்று கூறியவாறு, அவரு டைய கையை அழுத்திப் பிடித்துக் குலுக் கினார். இது நடந்த சம்பவம்.யார் அந்த சீனிவாசன்? செங்கற்பட்டு மாவட்டத்தில் இரட்டை மலை என்ற ஒருவருடைய பிள்ளையாகப் பிறந்து - தந்தையின் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு இரட்டை மலை சீனிவாசன் என்று சூட்டிக் கொண்ட - நீதிக் கட்சியின் தலைவர்களிலே ஒருவர்தான் அந்த மாபெரும் மனிதர்! அந்த அளவிற்கு அந்தக் காலத்தில் தீண்டாமை தமிழகத்தில் கொடிகட்டி ஆட்சி புரிந்தது. அந்த இரட்டை மலை சீனிவாசன்தான் 1924ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத் திலே தீண்டாமை எதிர்ப்புத் தீர்மானத் தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அரசு அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. அந்தத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட அந்த 1924ஆம் ஆண்டு சூன் திங்கள் 3ஆம் தேதியன்று தான் நான் பிறந்தேன். இப்போது 90 வயதைக் கடந்து விட்டேன் என்று கலைஞர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/74603.html#ixzz2sJNyRuaI

தமிழ் ஓவியா said...


அறிஞர் அண்ணா நினைவு நாள்: நாமாவளி பாடிடும் நாளல்ல!


செயற்கரிய செய்த தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. (3.2.2014)

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, வைதீகபுரி அகராதியில் உள்ள திதியோ, சிரார்த்தமோ, திவஷமோ அல்ல.

நம் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு நாள்!

அண்ணா இன்று பலருக்குப் படம் மட்டுமே! உண்மையில் அவர் பாடம் ஆக வேண்டும்.

- படமல்ல! இது ஒரு விசித்திர வேடிக்கை, நமக்கு வேதனை!

அண்ணா பெயர் சொன்னால் போதுமா?
அண்ணா என்றால் யார்? எதைச் செய்தவர்?
அண்ணா என்றால் பகுத்தறிவு,
அண்ணா என்றால் சமூகநீதி,

அண்ணா என்றால் அடக்கம், எளிமை, ஆடம்பரமின்மை!
அண்ணா என்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஆகியவைகளைப் போற்றிப் பின்பற்றிய பண்பாளர்!

இவைகளை மறந்துவிட்டு அண்ணாவைப் புறந்தள்ளி பூஜை செய்வது போல சடங்கு நிகழ்வு களை நடத்துவது - அண்ணாவைக் கொச்சைப் படுத்தும் கோணல் நடவடிக்கைகளேயாகும். நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று கூறி இறுதி மூச் சடங்கும் வரை பெரியாரைத் துணைக் கொண்ட பெம்மான்!
எனவே அண்ணாநினைவு நாளில் அவர்தம் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி, பீடு நடைபோட உறுதி ஏற்று, அவர் காண விரும்பிய பெரியார் உலகத்தைப் படைப்போம்!

அது - வெறும் தேர்தலை மட்டும் பொறுத்ததல்ல,

அடுத்த தலைமுறைகளின் மானவாழ்வைப் பொறுத்த மகத்தான நிலைப்பாடு;

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 3.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74605.html#ixzz2sJO8yrqi

தமிழ் ஓவியா said...

குஜராத் வளர்ச்சி என்கிற புளுகு


- நரேன் ராஜகோபாலன்

மோடியின் புளுகு மூட்டை களை தோழர் நரேன் ராஜகோ பாலன் ஆதாரத்தோடு நிரூபித்து தொடர்ந்து எழுதி வருகிறார்... மோடி குறித்தான ஊடகங் களின் பம்மாத்துகளுக்கும் (paid news), கூலிக்கு ஆள் வைத்து, இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான கட்டுரைகள் சரியான சாட்டை யடி..... நண்பர்கள் இதுபோன்ற கட்டுரைகளை முழுதும் படித்து, தங்களால் இயன்றளவு பரப்பவேண்டும்....

மாநில மொத்த உற்பத்தியும் (GSDP) மோடியாரின் வளர்ச்சி பலூன் வெடிப்பும் (Long Read) ஒரு நாட்டின் ஒட்டு மொத்த உற் பத்தியினை (பொருட்கள் மற்றும் சேவைகளை (Gross Domestic Product - GDP) வைத்து தான் அந்த நாடு முன்னேறியிருக்கிறதா. தேங்குகிறதா. அல்லது பின்னேறுகிறதா என் பதைச் சொல்ல முடியும். இதையே ஒரு மாநிலத்துக்காக சுருக்கினால் அது தான் - - GSDP - Gross State Domestic Product ஒரு மாநிலத்துக்குள் ஒரு ஆண்டில் உருவாகும் பொருட்கள் சேவைகளின் மொத்தப் பயன் பாட்டை பணமாக அளவிடுவது தான் இது.

எடுத்துக்காட்டாக போன ஆண்டு ரூ.100 என்று வைத்துக் கொண்டால், இந்த ஆண்டில் ரூ.110 ஆக மாறியிருந்தால், மாநிலம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. பொருட்களும், சேவைகளும் பெருகுகிறதென்று பொருள். மாறாக இந்த ஆண்டு ரூ.90 என்றால் தேக்கமோ, மந்தமோ, தொய்வோ ஏற்பட்டிருக்கிறது. 10 குறைவான பொருட்கள் + சேவைகள் உருவாக் கப்பட்டிருக்கிறது என்று பொருள். இந்த அடிப்படை தெரிந்தால் போதும். இந்தியாவில் திட்ட ஆணையம் இதை அளவிட ஆறு காரணிகளை முன்வைக்கிறது.

விவசாயம் மற்றும் அதற்கிணை யான தொழில்கள் (Agriculture and
Allied)

நேரடி விவசாயம் (Agriculture)

தொழில்துறை (Industry)

சுரங்கம் மற்றும் குவாரிகள் (Mining and Quarrying)

உற்பத்தித் துறை (Manufacturing)

சேவைகள்(Services)

இந்த ஆறு காரணிகளின் ஆண்டு உயர்வு / தாழ்வில் தான் ஒரு மாநிலத்தின் ஏற்றமும் / இறக்கமும் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் அதிகமான ஆண்டு வளர்ச்சிப் பெற்ற மாநிலம் - குஜராத்

இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்

சிறு சிறு கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத் திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்

24 X 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மய்யம் கொள்ளும் மாநிலம் - குஜராத்

மேற்சொன்னவை அத்தனை யுமே குஜராத் அரசாலும், வெவ் வேறு ஊடகங்களாலும் முன் வைக்கப்படும் செய்திகள். இதில் எவ்வளவு தூரம் உண்மைகள் இருக்கிறது ?

நான் திட்ட ஆணையத்தின் பட்டியலை முன்வைக்கிறேன். இது 2004-2005 விலைவாசியை அடிப் படையாகக் கொண்டு 2012-2013 வரைஇந்த ஆறு காரணிகளுக்கான வளர்ச்சியை மாநிலம் தோறும் கணித்திருக்கிறது. மாண்டேக் சிங் அலுவாலியா வேண்டுமென்றே குஜராத்துக்கு குறைவான மதிப்பீடுகள் போடுவார் என்று நினைத்து இதைப் படித்தால், இப்போதே கிளம்பிவிடுங்கள். உங்களோடு பேச முடியாது. நேரடியாக மத்திய அரசின் கீழ் வந்தாலும், திட்ட ஆணையம் சி ஏ ஜி, ரிசர்வ் வங்கி, செபி மாதிரி தனியான ஒரு அமைப்பு. இதனு டைய டேட்டாவினை அடிப்படை யாக வைத்து தான் பேச முடியும்.

இப்போதைக்கு குஜராத், ராஜஸ்தான், பிகார், ஆந்திரா, தமிழ கம் இந்த அய்ந்து மாநிலங்களையும் ஓப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். (குஜராத்தினுடைய 2012-2013 டேட்டா திட்ட ஆணையத்திலேயே இல்லை. ஆகவே நாம் 2011-12 வரைக்குமான வளர்ச்சி / தேய்வு ஒப்பீட்டினை மட்டும் செய்வோம்) 2004-2005 விலைவாசியில் குஜராத் ஆரம்பிப்பது 203,373 கோடிகள்; பீகார் ஆரம்பிப்பது 77,781 கோடிகள்.

2011-2012 முடிவில் 2004-2005 விலைவாசியில் குஜராத் ரூ.398,884 கோடிகள்; அதாவது எட்டு ஆண்டு களில் ஆரம்பித்ததிலிருந்து சற்றேறக் குறைய இரண்டு மடங்கு (ரூ.406,000 கோடிகள் தேவை. சல்தா ஹே!)

ஆனால் பீகார் இதே கால கட்டத்தில் செய்திருப்பது ரூ.246,995 கோடிகள்; எட்டு ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் மேலான வளர்ச்சி.

தமிழ் ஓவியா said...

இந்த எட்டு ஆண்டுகளில் பிகார் வெறும் ரூ.77,000 கோடிகளில் ஆரம்பிக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம். குஜராத் ஆரம்பிப்பது அதைப் போல இரண்டு மடங்கிற்கும் மேலே. ஆனால் எட்டு ஆண்டுகள் கழித்து வளர்ச்சி விகிதத்தை சராசரியாய்ப் பார்த்தால் வருவது இது தான்

குஜராத் - 10.13 பிகார் - 18.84 அந்த ஃக்ராப்பினைப் பார்த்தால் 2005-2006-இல் மட்டும் தான் பிகாரின் வளர்ச்சி விகிதம் (6.05) குஜ ராத்தை (14.75) விட பின் தங்கியிருக் கிறது. அங்கிருந்து எடுக்கிறது வேகம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு முறையும் பிகார் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்திற்கு குறையவே இல்லை. இதில் நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் (போன ஆண்டோடு ஒப்பிடுகையில்) 20 + ஆனால், குஜராத் ஒற்றை இலக்க வளர்ச்சியோடு மூன்று ஆண்டுகளையும், 2010-2011-இல் முட்டி மோதி ஜஸ்ட் பாஸ் நிலையில் இரட்டை இலக்க வளர்ச்சியோடு நிற்கிறது. ஆக எட்டாண்டுகள் மோடி யின் ஆட்சியின் கீழ், இந்திய சரா சரியை விட குஜராத் அதிகமாக வளர்ந்திருக்கலாம். ஆனால், பீமாரு என்று நக்கலடிக்கப்பட்ட மாநிலங் களில் முதல் மாநிலமான பிகாரின் வளர்ச்சியை தொடக் கூட முடியவில்லை.

இது தான் குஜராத் வளர்ச்சி மாடல். இந்த மாடலை தான் அவர் இந்தியா முழுமைக்கும் முன் வைக் கிறார்.

There is absolutely no reasoning for why we should go for this model, when statistically it is very clear that the model has its limitations & issues. It is vividly clear about governance deficit & administrative inability to take the State to growth trajectory sustain-ably.

தமிழ் ஓவியா said...

இந்த க்ராபிலேயே உங்களால் ராஜஸ்தான், ஆந்திரா, தமிழக விவரங்களையும் பார்க்க முடியும். தமிழகத்தில் இந்த எட்டாண்டுகளில் மூன்று ஆட்சிகள் (2005-2006 அதிமுக / 2006 - 2011 திமுக / 2011 - 2012 அதிமுக மீண்டும்) மாறியிருக்கின்றன. வழமை யாய் ஆட்சி மாறினால் திட்டங்கள் தொய்வுறும். அப்ரூவல்கள் நிற்கும். முந்தின ஆட்சி முன்வைத்த திட்டங் களை ஆளும் கட்சி எடுத்து நடத்த யோசிக்கும். இதெல்லாம் உண்மை யில் நடப்பவை. நடந்தவை. ஆனால் இத்தனையும் தாண்டி, தமிழகம் புலிப்பாய்ச்சலில் முன்னேறியிருக் கிறது. தமிழகத்தின் சராசரி எட் டாண்டு கால வளர்ச்சி (ஒப்பீட்டள வில்) குஜராத்தை விட அதிகம் (10.30 சராசரி). ஆக இனிமேல் தமிழகத் தையும், குஜராத்தையும் ஒப்பிடத் தேவையில்லை. ஏனென்றால் தமிழ கத்தின் ஆரம்ப 2004 -2005 அடிப் படையே ரூ.219,003 கோடிகள், குஜராத்தை விட ரூ.16,000 கோடிகள் அதிகமாய் ஆரம்பிக்கிறது. TN has entered into the Developed State league in alignment with Maharastra & Delhi.
ஆக கடந்த எட்டாண்டுகளில், தொழில் நுட்ப ரீதியாக இந்தியாவின் வேகமாக வளர்ந்த மாநிலம் - பிகார்.

குஜராத்தில் வளர்ச்சி பரவலாக நடக்கவில்லை. மேலும் கீழுமாகத் தான் போயிருக்கிறதேயொழிய சீரான வளர்ச்சி இல்லை. ஆகவே குஜராத் இந்தியாவின் முதல் நிலை வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று இனிமேல் சொல்லாதீர்கள். They have done an okay job for growth, not spectacular sustainable growth traction. ஆக அதிகமான ஆண்டு வளர்ச்சிப் பெற்ற மாநிலம் என்கிற இத்தோடு முடிந்தது.

முதலும் முக்கியமுமான விக்கெட் காலி.

ஒப்பீட்டளவில் இந்த இரண்டு மாற்றுக் கருத்துக்கள், மாற்று வளர்ச்சி மாதிரிகள் கொண்ட மாநி லங்களை (குஜராத் / பிகார்) எடுத்துக் கொண்டு ஒவ்வொரு காரணியாக அலசுவோம்.

பிகாரில் மின்சாரம் 60 விழுக்காடு இருந்தால் பெரிய விஷயம். சரியான தரவுகள் இல்லை. குஜராத் பீற்றிக் கொள்வது நூறு விழுக்காடு மின் சாரம். இதை ஏற்கெனவே நாம் உடைத்து விட்டோம். ஆனாலும் ஒரு வாதத்துக்கு இப்போதைக்கு குஜராத் சொல்வதையே அடிப் படையாகக் கொள்வோம்.

முதலில் பிகாரை எடுத்துக் கொள்வோம். அவர்கள் தானே பரிதாபமான நிலையில் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. விவ சாயம் + சார்புகளிலும், நேரடி விவசாயத்திலும் கிட்டத்திட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறார்கள் (24,530 65,102 / 20,673 58,113) எட்டாண்டுகளில் ஆட்சியமைப்பும், அரசாங்கமும், அரசும் ஒழுங்காக இல்லாமல் இது சாத்தியமேயில்லை. இந்த எட்டாண்டுகளில் 2007-2008 /2009-2010 காலக்கட்டங்களில் மட் டுமே முந்தைய ஆண்டை விட கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருக் கிறது. அதற்கு ஈடாக வெறித்தனமாக முன்/பின் ஆண்டுகளில் முன்னேற் றம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


இதற்கு ஈடான காலக்கட்டத்தில் குஜராத்தில் என்ன நடந்திருக்கிறது ?

விவசாயம் + சார்புகள் விஷயத்தில் 60 விழுக்காடு முன்னேறியிருக்கிறார் கள் (32,706 51,525) இதிலேயே மூன்று ஆண்டுகளில் நடுவில் சுணக்க மிருக்கிறது.

நேரடி விவசாயத்தில் சரி அடி வாங்கியிருக்கிறார்கள். ஜான் ஏறி னால் கி.மீ சறுக்கியிருக்கிறது. எட் டாண்டுகளின் வளர்ச்சி 70 விழுக் காடு மட்டுமே. மூன்றாண்டுகள் இங்கேயும் மரண அடி. இந்த கால கட்டங்களில் குஜராத் அரசு இந்த ஆண்டுகளை (2006 - 07 / 2008 - 09 / 2009 -10) ஆக அறிவித்திருக்கிறதா என்று கெஜட்டில் பார்க்க வேண்டும். ஆனால் வளர்ச்சி சீராக இல்லை என்பதை டேட்டா சொல்கிறது.

தொழில் துறை: குஜராத் அரசு போகிற இடங்களெல்லாம் பறை சாற்றும் முழக்கம் Fastest growing Industrialized State in India.

2004 - 05 - 89,321
2004 - 05 - 89,321
2011 - 12 - 163,826

அட்டகாசம், எட்டாண்டுகளில் கிட்டத்திட்ட இரண்டு மடங்கு (90ரூ வளர்ச்சி) மின்சாரம் செய் திருக்கும் வேலையாகக் கூட இருக்கலாம். மின்சாரமே இல்லாத மாநிலமான பிகார் எப்படி தொழில் துறையில் பயணித்திருக்கிறது ?

2004 - 05 - 10,706

2011 - 12 - 48,212

இந்த டேட்டாவினை முதல் முறையாகப் பார்த்தப் போது மிரண்டு போய் ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. எட்டாண்டு களில் 400ரூ வளர்ச்சியை. நிதிஷ் குமார் ஏற்படுத்தியுள்ளார். இதை ஒரு தனியார் நிறுவனத்தில் செய் திருந்தால் இந்நேரம் நிறுவனம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடித் தள்ளி யிருக்கும்.

இத்தனைக்கும் ஊரிலிருக்கக் கூடிய எல்லா disadvantage களும் இருக்கக்கூடிய மாநிலம் பிகார். மின்சாரம் கிடையாது. முழுமை யான சாலைகள் கிடையாது. திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடை யாது. இதையெல்லாம் வைத்துக் கொண்டே இந்த மனிதர் இதை செய்திருக்கிறார் என்றால் ஒரள வுக்கு நல்ல கட்டமைப்பும், வசதி களும் இருந்தால் பிகார் முன்னணி மாநிலமாக ஏன் மாறாது?

கட்-ஆப்ல 95 வாங்கியவன் தேர்ச்சி பெறுவது பெரிய விஷயமே இல்லை. 40ரூ எடுத்தவன் முதல் வகுப்பில் (பர்ஸ்ட் கிளாஸ்) எடுப்பது தான் சாதனை. அந்த வகையில் பிகாரில் எட்டாண்டு களில் நடந்திருப்பது அசாத்திய மான சாதனை. எல்லாத் தளங் களிலும் நிர்வாகமும், தெளிவும் இருந்தாலேயொழிய அந்த மாதிரி யான ஒரு மாநிலத்தை இப்படி தலைகீழாகப் புரட்டிப் போடவே முடியாது.

இறுதியாய் மோடி அடிக்கடி சொல்லும் தொழிற்சாலைகள் அடங்கிய உற்பத்தித் துறை.

குஜராத்துக்கும், பிகாருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. குஜராத்தின் ஆரம்பத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பிகாரில்லை (G: 55,443; B : 4,379)

எட்டாண்டுகளில் குஜராத் மேலேறி சாதித்திருப்பது (112,521) அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. மறுக்க முடியாத சாதனை தான்.

ஆனால் ஒன்றுமேயில்லாத, மின்சாரமில்லாத ஒரு மாநிலம் அதே காலக்கட்டத்தில் நான்கு மடங்கு தாண்டியிருக்கிறது (12,705)


இவை வெறும் எண்கள் அல்ல. இதற்கு பின் இரண்டு மாநிலத் தலைமைகளின் ஆளுமையும், நிர்வாகத் திறமையும், பங்களிப்பும் இருக்கிறது.

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். இத்த னைக்கு பிறகும், மோடி முன் வைக்கும் புகழாரங்களுக்கு அவர் தகுதியானவர் தானா? தகுதியான வர்கள் எல்லாம் சத்தமே போடா மல் சாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய ஒப்பீட்டளவில் பெரியதாய் leap frogging எதுவுமே செய்யாத ஒருவரை எப்படி ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள் ?

இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்

சிறு சிறுச் கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத் திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்

24 X 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மய்யம் கொள்ளும் மாநிலம் - குஜராத்.

இனி நீங்கள் முடிவு செய்துக் கொள்ளுங்கள். இந்த வாசகங்களில் உண்மை இருக்கிறதா அல்லது தன்னை பட்டவர்த்தனமாக முன்னி றுத்திக் கொள்ளும் ஒரு அதிகார வெறி பிடித்த ஆளுமையின் குரல் இருக்கிறதா என்பதை.

Read more: http://viduthalai.in/page-2/74619.html#ixzz2sJPFt1ew

தமிழ் ஓவியா said...


மண் பானை சமையல் நல்லதா?


மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தி னால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல் லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக் கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது.

இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்.

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJQZIRB1

தமிழ் ஓவியா said...

இதயத்திற்கு இதம் தரும் கனிகள்

இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.

இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJQhWCLe

தமிழ் ஓவியா said...


குதிகால் வலியை விரட்டுங்கள்...

இன்றைய பரபரப்பான சூழலில் உடல் எடையை கட்டுக்குள் வைத்து பேணிகாப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் அதற்கு தகுந்தாற்போல் உயரத்திற்கு தகுந்த அளவில் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் குதிகால் வலி ஆகியவற்றை தவிர்க்கலாம்.


தமிழ் ஓவியா said...

உடலின் மொத்த எடையையும் தாங்குவது குதிகால் என்பதால் அதற்காக அதிக கவனம் அவசியம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தை தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகம் உள்ள இடங்களாகும்.

உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலு விழுந்தால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. இதை யடுத்து குதிகால் மற்றும் இடுப்பு வலி அதிகரிக்கும். முதலில் வலி அதிகரிக்கும்போது எலும்புகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவரை அணுகி எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். குதிகால் வலி வராமல் தடுக்க இயற்கையான முறையில் பல வைத்தி யங்கள் உள்ளன.

காலை முதல் இரவு வரை ஓயாமல் நடப்பவர் களுக்கும், வீட்டு வேலைகளை செய்வோருக்கும் இரவில் குதிகால் வலி ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதனை தடுக்க இரவில் படுக்கும் முன்பும், காலையில் குளிப்பதற்கு முன்பும் உள்ளங்கால்களுக்கு சுத்தமான எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டியது அவசியம். இதுதவிர மேலும் பல வழிகளும் உள்ளன. சஹசராதி தைலம் 100 மில்லியும், கர்ப்பூராதி தைலம் 100 மில்லியும் கலந்து ஒரு இரும்புக்கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மில்லி) சூடு செய்ய வேண்டும்.

இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்ய (20 நிமிடங்கள் வரை) வேண்டும். வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் மூழ்குமளவு 5 அல்லது 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலை துடைக்க வேண்டும். அதன்பிறகு படுக்கச்செல்லவும்.

காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோல செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். கால்களை தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதை தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.

தமிழ் ஓவியா said...

திராட்சைப் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸி டென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும்போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும். சித்தரத்தை, அமுக்கரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.

முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத் தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டுவலி குணமாகும்.

பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.

உடல் எடையை குறைக்க...

அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வர காரணமாகிறது. இது ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது. இதை தடுக்க உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். இவை 200 மி.லி அளவில் கிடைக்கும். 3 டீஸ்பூன் மருந்துடன் 12 ஸ்பூன் கொதித்து ஆறிய தண்ணீர் மற்றும் கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

காலையில் மருந்து சாப்பிட்டதும் அரைமணி நேரம் இடதுபக்கமாக சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாக தண்ணீரை குடிக்கவும். உடல் பருமனை குறைக்க இது நல்ல கஷாயம். தயிரை தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும்.

கால் டீஸ்பூன் தேனை சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 டீஸ்பூன் (5 கிராம்) ஆகியவற்றை 80 மி.லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு உடனே அருந்த வேண்டும். அதன்பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம் குதிகால் வலியை போக்க உடல் எடை குறைப்பு அவசியமாகிறது. எனவே காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள லாம். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும்.

பகல் தூக்கம் தவிர்க்கவும். சர்வாங்காசனம், ஹலாசனம் மற்றும் சிரசாசனமும் வலி குறைக்கும். கோடைகால சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

புளித்த மோரை சிறிது சூடாக்கி 70 முதல் 100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத்தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கி விடும்.

சோப்புக்கு பதிலாக ஏலாதி சூர்ணம் கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையை குறைக்கவும் முடியும்.

Read more: http://viduthalai.in/page-7/74595.html#ixzz2sJQqIVUc

தமிழ் ஓவியா said...

இதயத்திற்கு இதம் தரும் கனிகள்

இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.

இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJRO3T4S

தமிழ் ஓவியா said...

கேள்வி: பெரியார் அணிந்த மோதிரம் உங்களிடம் எப்படி வந்தது?

பதில்: பெரியார் படத்தில் நடிச்சதுக்குச் சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டேன். 60 நாட்கள் அந்தப் படத்துல நடிச்சேன். படத்தின் 100_ஆவது நாள் விழாவில், இந்த மோதிரம் பெரியார் தன் 19_ஆவது வயசுல விரல்ல போட்டுக்கிட்டது. இன்னைக்குக் கணக்குப் போட்டா மோதிரத்துக்கு சுமார் 110 வயசு. இதை சத்யராஜுக்குப் பரிசளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்னு சொல்லி, கி.வீரமணி அய்யா கலைஞர் கையால் எனக்கு அணிவிச்சார். இந்த மோதிரத்தின் மீது பலருக்கும் கண் உண்டு. நானும்கூட ஒரு கண் வைத்திருந்தேன். ஆனாலும், இந்த மோதிரம் தம்பி சத்யராஜ் கைக்குப் போனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சினு தலைவர் கலைஞரும் சொன்னார். அப்படிப் பார்த்தா ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட், டாம் குரூஸைவிட உலகத்திலயே அதிக சம்பளம் வாங்கிய நடிகன் நான்தான். ஏன்னா, பெரியாரின் மோதிரம் அந்த அளவுக்கு விலை மதிப்பில்லாதது!

- நன்றி: ஆனந்த விகடன், 15.1.2014

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.



இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.



இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக் காவலர் கி.வீரமணி முன்பு நிற்பதே எனக்குப் பெருமை!


மராட்டிய அமைச்சர் புஜ்பால் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை இந்தியா முழுதும் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் வட மாநிலங்களில் பல நூறுமுறை பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார். இந்த ஒப்பற்ற பணிக்கு உறுதுணையாக உள்ள பெருமக்களைச் சிறப்பிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யம் `சமூக நீதிக்கான வீரமணி விருதினை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வரிசையில் மராட்டிய மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல் அவர்களுக்கு 2013ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா 11.1.2014 அன்று மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் விருதினை வழங்கினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன், அய்.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன், ப.க. பொதுச்செயலாளர் வீ.குமரேசன், உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், `சமூக நீதிக்கான வீரமணி விருதைப் பெற்றுக் கொண்ட மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல், மராட்டியத்தில் முதன்முதலாக இந்த விருதை வாங்குபவன் என்ற பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது,

தமிழ் ஓவியா said...

இது எனக்கான பெருமையல்ல, இந்தியாவில் சமூக நீதிக்கான போராட்டத்தை ஆரம்பித்த மகாத்மா புலே மற்றும் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர், சாஹூ மஹராஜ் போன்றோரின் போராட்டத்திற்கான பெருமையாகும். பெரியார் தென்னகத்தில் சமூக நீதிக்கான புரட்சி விதையைத் தூவியவர், மராட்டியத்தில் சமுக நீதியை நிலைநாட்டப் பாடுபட்டவர்களான மஹாத்மா ஜோதிபா புலே, சாவித்திரிபாய் புலே, பாபாசாகிப் அம்பேத்கர் போன்றவர்களின் பாதையில் அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஒளியின் பாதையில் நாம் பயணிக்கிறோம். இந்த விருதைப் பெற்றபிறகு எனது பணிகள் இன்னும் சிறப்பு மிக்கதாய் அமைய எனக்குள் ஒரு உத்வேகம் பிறந்திருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விருதை நான் தலித், ஆதிவாசி மற்றும் பெண்களுக்காக அர்ப்பணிக்கிறேன்,.

மகாத்மா புலே மற்றும் பாபாசாகிப் அம்பேத்கர் ஏற்றி வைத்த புரட்சித்தீயை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும், இதை நாம் செய்தே ஆகவேண்டும். தெற்கில் பெரியார் கொண்டு வந்த மாற்றம் என்பது சாமானியர்களின் வெற்றி, -அதை பெரியார் நிகழ்த்திக் காட்டினார். நமது பணிகளுக்கு உற்சாகமளிக்கும் செயலில் தென்னகத்தில் பெரியாரின் பணியை மேற்கொண்டு வரும் திரு கி.வீரமணி அவர்கள் இந்த விருதைக் கொடுத்து என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். சமூக நீதிக்கான காவலர்கள் மிகவும் பொறுமைசாலிகள் என்பதற்கு கி.வீரமணி அவர்கள் நமக்கு முன்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் முன்பு நான் நிற்பதற்கே பெருமைப்படுகிறேன். விருதிற்கான நன்றிகள் எல்லாம் மிகவும் உயர்ந்தவை; அது சொற்களில் அடங்காது என தனது நன்றிப்பெருக்கை வெளிப்படுத்தினார்.

மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் பேசும்போது. இந்திய நாடு வளர்ந்துவிட்ட நாடு என கூறப்பட்டாலும் வளர்ச்சி என்பது மேலும் தொடர வேண்டிய நிலை நீடிக்கிறது. மக்களின் உளப்பாங்கு, மனநோக்கத்தினை மாற்றம் காணச் செய்திருப்பதில் பன்னெடும் தூரம் பயணப்பட வேண்டியுள்ளது. சமூக அநீதி உணர்வுகள் இன்னும் ஆதிக்கவாதிகளிடம் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவை வெகு விரைவில் மறைந்திட வேண்டும். உலகமயமாக்கப் பணியின் விளைவுகள், பெரும்பான்மை மக்களிடம் சென்று சேரவில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களிடம் குறிப்பாகச் சென்றடையவில்லை.

ஏழை -_ பணக்காரன் இடைவெளி மேலும் பெருக்கமடைந்து உள்ளது. படிப்பறிவின்மை, பசி, சுரண்டல் ஆகிய நிலைகளிலிருந்து, புதிய பொருளாதாரச் சூழல்களிலிருந்து மக்களைக் காத்து மேம்படுத்த வேண்டிய பணி நமக்கு உள்ளது. பிற்போக்குத் தன்மை வாய்ந்த, சமுதாயத்தில் சமத்துவமின்மையினை வலியுறுத்தி நீடித்திடச் செய்யும் ஆன்மீகச் சக்திகளிடமிருந்து வெகு மக்களைக் காத்திட வேண்டும். சமூகநீதித் தலத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திட வேண்டும்.

திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உரிமை நிலைநாட்டலுக்கு மேலும் பாடுபட வேண்டும். உலக அரங்கில் பெரியாரின் தத்துவங்கள், பெரியாரின் பற்றாளர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார்.

நிறைவாக கி.வீரமணி அவர்கள் தனது உரையில், சமூக- நீதிக்காகப் போராடிய களங்கள் மாறி மாறி வந்துள்ளன. ஆனால் அதற்கான போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. (We have won many battles, but the war still continues) அனைவருக்கும் சம உரிமை என்பது அடிப்படை உரிமை. சமூகநீதித் தலத்தில் நாம் உரிமை கோரிப் போராடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தினை மீறிய செயல் அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதிக்காகத்தான் போராடி வருகிறோம். மகாத்மா ஜோதிபா பூலே, சிறீ நாராயணகுரு, சாகுமகராஜ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போட்டுத் தந்த பாதையில் சமூகநீதியினை வென்றெடுக்கப் போராடி வருகிறோம்.

இது, பன்னாட்டுப் பங்கேற்புக் கொண்ட சமூகக் கூட்டணி ஆகும். நினைத்தோம்; செயல்படுகிறோம் என்ற நிலை, அணுகுமுறை கொண்டவர்கள் அல்ல நாம்; தத்துவார்த்த அடிப்படையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள அணுகுமுறையாளர்கள் நாம். தொடர்ந்து விழிப்புணர்வுடன் முழுமையாக இருந்து செயல்படுவதே உண்மையான சமூக விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலையாக இருக்க முடியும். (Eternal Vigilance is the price we have to pay for the freedom backed with Social Justice) அத்தகைய விழிப்புணர்வுடன் இருந்து போராட்டக் களங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமூக நீதியினை வென்றெடுப்போம்! என்று குறிபிட்டார்.

பெரியாரின் சமூகநீதிக் கொள்கை இந்தியா முழுமைக்குமானது என்பதற்கு இந்த விழா இன்னொரு சாட்சி.

தமிழ் ஓவியா said...

ஜெபம் ஜெயம் தருமா? - மதிமன்னன்


பழங்கதைப் பேச்சாளர் ஒருவர், ஒருமுறை எழுதும்போது, கடவுள் சூப்பர் மார்க்கெட் முதலாளி அல்ல, அவரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கக் கூடாது என்று எழுதினார். பிரபல ஏட்டில் எழுதியதால், பல பேர் படித்திருப்பார்கள். ஆனால், எத்தனைப் பேர் அதனைப் புரிந்து அதன்படி நடக்கிறார்கள்?

மறைந்த கிருபானந்த வாரியார் கூறியதுபோல, பக்தர்கள் அதிகமாக வளர்ந்துள்ளனர், பக்தி வளர்ந்துள்ளதா? சங்கடமான கேள்விதான். வேத ஆராய்ச்சி நிலையம் வைத்திருக்கும் வேலையற்ற பசு புத்திரர்கள் இதுபற்றி ஆய்வுசெய்து முடிவை அறிவித்தால் உருப்படியான உதவியை ஆன்மிகத்திற்குச் செய்ததாக அமையும். அதை விடுத்துப் பசு மாட்டுக்குப் பிறந்தவர்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக மூடபக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், இந்துமதத்தின் ஆகப்பெரிய ரிஷிகளில் ஒருவரான கவுதமன் பசு மாட்டிடம் பிறந்தவன் என்றுதானே எழுதி வைத்திருக்கிறார்கள்!

பிரார்த்தனை பலன் தருமா?

கடவுளை டிபார்ட்மென்டல் ஸ்டோர் என்று நினைத்துக் கொண்டுதானே, எல்லா பக்தர்களும் வழிபடுகிறார்கள்? வேண்டிக் கொள்கிறார்கள்? பேரம் பேசுகிறார்கள்! நீ இதைச் செய்தால் நான் அதைச் செய்வேன் என்று வேண்டுவது, பேரம் அல்லாமல் வேறு என்னவாம்? காரியம் நடைபெறுவதற்குக் கடவுளுக்கு லஞ்சம் தருவதல்லாமல் வேறு என்ன பெயர், வேண்டுதலுக்கு?

ஜெபம் செய்யுங்கள், ஜெயம் உண்டாகும் என்று கிறித்துவ மதத்தினர் கூறுகிறார்கள். இறைவனிடம் கை ஏந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்று பாட்டாகவே பாடிடும் பக்தர்கள், தம் கடவுளிடம் து ஆ கேட்கும்படிக் கூறுகிறார்கள். இவையெல்லாம் பலித்திருக்கின்றனவா? கேட்டது கிடைத்திருக்கிறதா? பலகோடிப் பேர் வேண்டுதலையும், பிரார்த்தனையையும் து ஆக்களையும் கடவுள்கள் நிறைவேற்றித் தந்திருக்கின்றனவா?

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்படும் கதிதானே, பக்தர்களின் வேண்டுதல்களுக்கும்...! காலங்காலமாக...! ஆனாலும் வேண்டுதல்கள் நின்றபாடில்லை! அதனாலேயேகூட, அவை மூடநம்பிக்கை!

போய் வருவதே புண்ணியமாம்

கன்னடப் பார்ப்பனர் ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டு, மலையாள அரசியல் தலைவர் ஒருவரால் தரிசிக்கப்பட்டு, காணிக்கை வழங்கப்பட்ட கோயில் கொடச்காத்ரி மலையில் சவுபர்னிகா நதிக்கரையில் உள்ள மூகாம்பிகை கோயில். ஊர்ப் பெயர் கொல்லூர். இந்தக் கோயிலை மலையாளத்து காலடி எனும் ஊரில் பிறந்த (ஆதி) சங்கரன் கட்டியதாகக் கதை உண்டு. இங்குள்ள ஆற்றுநீரில் குளித்தால் புனிதமாம். அதனால் குளித்து எழுந்து தங்கத்தினால் செய்த வாள் ஒன்றைக் காணிக்கையாகத் தந்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன்.

இங்கெல்லாம் போய் வருவதே புண்ணியமாம். ஊர் சுற்றி வருவதுதான் இந்திரன் எனும் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானது என்கிறது ரிக்வேதம். ரிக்வேத காலத்தில் உயிருடன் இருந்து இப்போது காணாமல் போய்விட்ட கடவுள்களில் ஒன்று இந்திரன். இப்படிப்பட்ட மாஜி கடவுள்கள், இந்து, ரோம, கிரேக்க, ஜப்பானிய ஷின்டோ மதங்களில் நூற்றுக்கணக்கில் உண்டு. இந்தக் கடவுள்களின் சாவுக்கு யாரும் இரங்கல் கவிதைகள் எழுதவில்லை என்பதுதான் சோகம்! நிளிஞிஷி திஹிழிணிஸிகிலி போல ஒன்றாவது எழுதியிருக்கலாமே!

புண்ணிய இடங்களா?

ஊர் ஊராகப் போய்ப் புண்ணிய க்ஷேத்திரங்களைப் பார்ப்பதைப் பற்றி கந்த புராணம் விரிவாகவே கூறுகிறது. தலைமயிரை மழித்து மொட்டையடித்துக் கொள்ளல், பட்டினி (உபவாசம்) மீன் இல்லாத எளிய உணவு உண்ணல், மது, புகையிலை பயன்படுத்தாமை, பெண் உறவு கொள்ளாமை முதலியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமாம். முக்கியமான நிபந்தனை ஒன்று உண்டு: பார்ப்பனர்களைக் கேள்வி கேட்கக் கூடாது அவர்கள் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் கேள்வி கேட்கக் கூடாது, கீழ்ப்படிய வேண்டும்!

தமிழ் ஓவியா said...

இப்படிப்பட்ட புனித இடங்களின் பட்டியல் இது: காசி, மதுரா, அயோத்யா, பிரயாகை, பத்ரிநாத், கேதார்நாத், சோம்நாத், விஸ்வேஸ்வர், ராமேஸ்வரம், பூரி, துவாரகை, மானசரோவர் முதலியவை. தென்னாட்டில் ஒன்றே ஒன்றுதான். மற்றவை எல்லாமே வடக்கே! இதிலும் வடக்கு_தெற்கு பாகுபாடு!

செத்தால் சொர்க்கம்

இந்த க்ஷேத்ராடனத்தில் செத்துப் போகும் எல்லாருக்கும் சொர்க்கத்தில் இடம் நிச்சயம் உண்டு. அதிலும் காசியில் செத்துப் போனால், சொர்க்கத்தில் முக்கியப் பிரமுகர்கள் இருக்கும் பகுதியில் இடம் உண்டு. இது இந்துமதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே காட்டப்படும் ஆசை! காசியில் இறப்பவர்களுக்கு முக்தி கிட்டும் என்கிறார்கள். முக்தி என்றால், இனிமேல் மறுபிறவியே கிடையாதாம். இந்தப் பிறவியோடு சரியாகிப் போகுமாம்! முன்பிறவி, பின்பிறவி என்றெல்லாம் புளுகித் தள்ளும் இந்துமதத்தில் மட்டுமே இந்த ஆசை வார்த்தை செலாவணி ஆகும்! சிதம்பரத்தைப் பார்த்தாலே முக்தி என்கிறான். திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்கிறான். திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்கிறான்! இந்த நிலையில், சுலபமாக முக்தி அடைவதை விட்டுவிட்டு, எவன் செலவு செய்து கொண்டு காசிக்குப் போய்ச் சாவது? என்கிற எண்ணத்தில் பலபேர் இப்போது காசி யாத்திரை போவதில்லை. புரோகிதத் திருமணத்தின்போது மணமகன் காசி யாத்திரை நாடகத்தில் நடிப்பதோடு சரி!

நால் வருணக் கொடுமை

வேண்டுதல் பலிக்கும் என்பதற்காகப் பலபேர் போய்வரும் கோயில்கள் இந்திய நாடு முழுவதும் பல உள்ளன. காதலர்கள் தங்களைச் சேர்த்து வைக்கும்படி வேண்டிக்கொள்ளும் முக்கிய இடமாக ராஜஸ்தான் மாநிலம், ஜோத்புர் இருக்கிறது. மன்னர் ஆண்ட இடமாக இருந்து இந்தியாவில் சேர்ந்த பகுதி ஜோத்புர். எந்த ஊருக்கும் இல்லாத அவலம் இந்த ஊருக்கு உண்டு. இந்த ஊரின் தெருக்கள் ஜாதிவர்ணம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பன, சத்திரிய, வைசிய, இதரர் என வர்ணவாரியாகத் தெருக்களை அமைத்து வீடுகளைக் கட்டிக் குடியிருக்கின்றனர். வீடுகளுக்குப் பூசப்பட்ட வர்ணங்களும் அப்படியே. நீல வண்ண வீடு என்றால் பார்ப்பனர்க்குரியது. சிவப்பு வண்ணம் என்றால் சத்திரியர்க்கு. மஞ்சள் வண்ண வீடுகள் வைசியர்க்கு. இதரர்க்கு வேறு வண்ணங்கள். இந்நிலை இன்றளவும் உண்டு. நம்புங்கள், இந்தியா மதச்சார்பற்ற நாடு!

இஷ்கிய கணபதி

நீலநிற வீடுகள் நிறைந்த பகுதியில், ஆடா பஜார் எனும் இடத்தில் ஜூனி மண்டி கணபதி கோயிலுக்குத்தான் காதலர்கள் வருகிறார்கள்; வேண்டிக் கொள்கிறார்கள். மூன்றே மூன்று கற்களால் கட்டப்பட்ட கோயில். 1981இல் இதைப் புதுப்பித்துக் கட்டியவர் இஷ்கிய கணபதி என்று பெயர் வைத்தார். கடவுளுக்கே பெயர் வைக்கும் பக்தர் இவர். பா.ஜ.க. ஆட்சியில் கோட்டைவிட்ட கார்கில் போரின்போது கார்கில் பிள்ளையார் படம்போட்ட பக்தர்களை நினைவிருக்கலாம்.

தமிழ் ஓவியா said...

ஜாதிக்கொரு வீதி, ஜாதிக்கொரு வண்ணம் பூச்சு, ஜாதிக்கொரு நீதி இருப்பதைப் போலவே, ஜாதிக்கு ஜாதி தனித்தனிக் கோயில்களும் உண்டு. ஆனால் இந்தக் கோயிலுக்கு மட்டும் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. சமரசம் உலாவும் இடம்! இந்துப் பெண்ணைக் காதலித்த இசுலாமியர் அஜ்மீரிலிருந்து இங்கு வந்து 16 வாரங்கள் வேண்டிக் கொண்டாராம். புதன் கிழமைகளில் வந்து வேண்டிக் கொண்டவர்களின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வாராம், இஷ்கிய கணபதி! மீதமுள்ள நாள்களில் கண்பார்வை இருக்காதோ? காதுகள் கேட்காதோ? புதன் கிழமைகளில் பூந்தி, லட்டு வியாபாரம் சக்கைப் போடு போடுமாம்! இதற்காகவே இஷ்கிய கணபதிக்கு இத்தனைப் பிரச்சாரம்!

சிகரெட், விஸ்கி போதும்

லட்டும் வேண்டாம், பூந்தியும் வேண்டாம்! சிகரெட்டும் பிராந்தி/விஸ்கி போதும் என்கிறார் கோரா பாபா! உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னவ் நகருக்கு வெளியே, கிறித்துவக் கல்லறைகளுக்கிடையே கோரா பாபாவின் சமாதி இருக்கிறது. ஆம், கோராபாபா இறந்துபோன வெள்ளைக்கார ராணுவ அதிகாரி! கேப்டன் ஃபிரெடரிக் வேல் என்பவர், 1857_58இல் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது கொல்லப்பட்டவர். 23 வயதே ஆன அவரது உடலை கோமதி நதிக்கரையில் புதைத்துக் கல்லறை கட்டினார்கள். அதுதான் கோராபாபாவின் கோயில்! கேப்டன் ஃபிரெடரிக் வேல் கோரா பாபா ஆக்கப்பட்டார்.

வியாழக்கிழமைகளில் நம் ஊர் தர்காக்களில் கும்பல் கூடி மந்திரித்துத் தாயத்துக் கட்டிக் கொள்வதைப்போல லக்னவ்வில் கூடுகிறார்கள். சிகரெட் பற்றவைத்து, இரண்டு தம் இழுத்து மீதி சிகரெட்டை பாபாவுக்காக கல்லறை மீது வைத்து விடுகிறார்கள். சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் குறிப்பாகப் பெண்களும் இரண்டு தம் அடித்து விட்டுத்தான் தங்கள் கடவுளுக்குத் துண்டு சிகரெட்டைக் காணிக்கை ஆக்குகிறார்கள். கால் பாட்டில் சரக்கை கல்லறையின் வெடிப்பில் ஊற்றி விடுகிறார்கள். கோரா பாபா ராஆகவே குடிப்பார் போலும்! ஜாதி, மத, வேறுபாடின்றி ஆண், பெண், குழந்தைகள் எனப் பலவகை பக்தர்களை ஆட்கொண்டுள்ளார் இந்த வெள்ளைக்காரர்! அருள் பாலிக்கிறார் என்பது இவர்களது நம்பிக்கை!

இவர்களது சொந்தக் கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, கொலை செய்யப்பட்ட வெள்ளையரை வணங்கும் இவர்களை அழைக்க, எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது? மூட மதியினர் என்பது போதாதே!

தமிழ் ஓவியா said...

ராகு - கேது - காளஹஸ்தி

அமுதம் எடுப்பதற்குக் கடலைக் கடைந்ததாகப் புராணம் எழுதி வைத்துள்ளார்கள். பாம்பின் தலைப் பகுதியைப் பிடிப்பதற்குத் துணிவு இல்லாத ஆரியக் கோழைகள் அசுரர்களைப் பிடிக்கச் சொல்லி அதன்படி அமுதம் எடுக்கப்பட்டதாம். அதைப் பங்கிடும்போது பாரபட்சமாகப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தந்தார்களாம். அதைக் கண்ட அசுரர்களில் இரண்டு பேர் அவாள் வரிசையில் அமர்ந்தனராம்.

கடவுள் விஷ்ணு அவர்களைத் தண்டித்ததாம். அந்த இரண்டு பேரும் ராகு, கேதுக்கள் எனவும், அவர்கள் நிழல் கிரகங்கள் என்றும் கூறி, ஜாதகம் சொல்கின்றனர். அந்த ராகுவும் கேதுவும் வழிபடத்தக்கவர்கள் என்றும் எழுதி வைத்துக் கொண்டுள்ளனர். அதற்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி எனும் ஊருக்குப் போகவேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் தொல்லைகள் நீங்கி நல்ல நிலையை அடையவேண்டும் என்பதற்காக இந்த இரண்டு கிரகங்களைக் கும்பிட வேண்டுமாம். இந்தப் பக்தர்கள் தரும் காணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. பூசைக் கட்டணம் ரூ.300 முதல் ரூ.2500 வரை வசூலிக்கிறார்கள்.

பிரணாப் முகர்ஜி அங்கு போய்தான்
குடியரசுத் தலைவர் ஆனாராம். அங்கு போய்வந்ததால்தான் இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் அந்தப் பதவியில் இருக்கிறாராம். தமிழரான நீதியரசர் சதாசிவம் இந்தியாவின் தலைமை நீதிபதியானதே இவர்களின் தயவினால்தானாம். அளப்புக்கு அளவே இல்லாமல் புளுகித்தள்ளி கூட்டம் சேர்க்கிறார்கள்.

காளஹஸ்தி எனும் ஊர் ராகு, கேது க்ஷேத்திரம் என்ற கதை கட்டப்பட்டதே 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் என்பதை இக்கோயில்பற்றி டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர் எழுதியிருக்கிறார். பேராசிரியர் கிரண்கிரந்த் சவுத்ரி திருப்பதியில் உள்ள வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அவர்தான் இதுபற்றி ஆய்ந்து அறிவித்தவர்.

காளஹஸ்தி கோயில் சிவன் கோயில். இந்த லிங்கம் சுயம்புவாம். யாரும் தொடக்கூடாதாம். தொட்டால் செத்துப் போவார்களாம். கோயில் அர்ச்சகரே தொடாமல்தான் பூசை செய்கிறாராம்.

தனித்துவ தத்தாத்ரேயா

கருநாடக மாநிலம் வடபகுதியில் உள்ள ஜனகபுர் எனும் ஊரில் உள்ள பிரபலமான தத்தாத்ரேயா எனும் கடவுளின் கோயிலுக்குப் பலவகைப் பைத்தியங்கள் வருகின்றன. பக்திப் பைத்தியங்களைக் கூறவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியங்கள் _ பெரும்பாலும் பெண்கள். இந்தப் பைத்தியங்களின் குடும்பத்தினர் யாரிடமும் பேசுவதில்லை. வெட்கமோ? நான்கு வருடங்களாக வந்து போய்க் கொண்டிருக்கிறார் வித்தல் வாலுஞ்ச் என்பவர். அவர் மகனுக்குப் பைத்தியமாம். இன்னும் தெளியவில்லை. தெளியும் அடையாளமும் இல்லை. இருந்தாலும் வந்து போகிறார். பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே!

நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வருகின்றனர். முழுநிலவு நாள்களில் பைத்தியங்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டுமாம். பூசாரிப் பார்ப்பனர் களின் காட்டில் நல்ல வருமான மழை!

அந்த இடத்தில் இருக்கும் பெரிய அத்திமரத்தின் காற்று பைத்தியம் தெளிய வைக்கு மாம். அங்கே உட்கார்ந்து பலரும் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சத்தம் கேட்கிறது. பித்தம் தெளிவில்லை. மடையர்கள் வருகை மட்டும் நின்ற பாடில்லை.

- இது போன்ற பிரார்த்தனை மோசடித் தலங்கள் இன்னும் உண்டு. அவை அடுத்த இதழில்...

தமிழ் ஓவியா said...

டீல் ஓகே யா?


சமூக இணையதளங்களில் இருக்கிற பார்ப்பன நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களில் பல பேர் எங்கள் நெருங்கிய நண்பர்களாகவும், பண்பாடு மிகுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான், அதற்காக இன்னும் பன்னெடுங்காலம் பேச எஞ்சியிருக்கிற பார்ப்பன எதிர்ப்பு அரசியலை எங்களால் பேசாமல் இருக்க முடியாது.

வேண்டுமானால் ஒரு உடன்பாடு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் தீட்சதர்களாகவோ, பூசாரிகளாகவோ உங்கள் உறவினர்கள் பலர் இருக்கக்கூடும், அவர்களிடம் நீங்களே பேசுங்கள். "இது எல்லாம் அவா கட்டின கோவில், நம்மவா யாரும் பத்துப் பைசாகூட கைக்காசு போடல, அவாளோட மொழில நாம பூஜை பண்றதும் கிடையாது, அவா நிறையப் பேரு ரொம்பக் கோவமா இருக்கா, நம்மவா எல்லாம் இப்போ நன்னா படிச்சு கையில நாலு காசு சேத்திண்டு ஷேமமா இருக்கா, அவா அபச்சாரம் அபச்சாரமா திட்றத நம்ம அம்பிகள் எல்லாம் கூச்சமா பீல் பண்றா, அதுனால நாம அவா கட்டின கோவில்கள்ல இருந்து வெளியே வந்துடலாம், நாமளே சிதம்பரம் என்ன தஞ்சாவூர் என்ன இன்னும் பெரிசா கோவில் கட்டி அதுல சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம்_ன்னு வெவ்வேற மொழிகள்ல அர்ச்சனை பண்ணலாம், பூஜை பண்ணலாம்" என்று முடிவு செய்து ஒரு நல்ல நாள் குறித்து எல்லாக் கோவில்களிலும் இருந்து வெளியேறி விடுங்கள். நீங்களும் கூச்சமா உணர வேண்டியதில்லை, நாங்களும் பொசுக்குப் பொசுக்குனு பாப்பான் பாப்பான்_ன்னு திட்ட வேண்டியதுமில்லை.
டீல் ஓகே யா?

...முகநூலில் அறிவழகன் கைவல்யம்

தமிழ் ஓவியா said...

தமிழர்களை உயர்த்திப் பிடித்த திராவிடர் திருநாள்


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திராவிடர் திருநாள் _ தமிழ்ப் புத்தாண்டு _ பொங்கல் விழா மற்றும் திராவிடர் இயக்க தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நெய்தல் நிலத்தினைப் பிரதிபலிக்கும் விதத்தில் பெரியார் திடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின் பண்பாட்டைப் போற்றும் வகையில் அலங்காநல்லூர் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சில ஆட்டம், பெரிய மேளம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், கயிறு இழுத்தல், உறியடி உள்ளிட்ட மக்கள் விளையாட்டுகளும் களைகட்டின. அதே மூன்று தினங்களும் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டுத் திடலில் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் மாநில அளவிலான சடுகுடு(கபாடி)ப் போட்டி ஆண்,-பெண் இருபாலருக்கும் நடைபெற்றது. வெகு உற்சாகத்துடன் நடந்த இப்போட்டிகளில் தமிழகத்தின் முன்னணி அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் முதல் பரிசை (ரூ50,000) சென்னை ஜெய்பவானி அணியும், இரண்டாம் பரிசை (ரூ30,000) சென்னை மாவட்ட கபாடி கழக அணியும், மூன்றாம் பரிசை 2 அணிகள் (தலா ரூ.10,000) சாய் சென்னை, சென்னை மாநகர காவல்துறை அணிகளும் பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் பரிசை (ரூ50,000) சென்னை குயின்ஸ் அணியும், இரண்டாம் பரிசை (ரூ.30,000) சென்னை மாநகர காவல்துறை அணியும், மூன்றாம் பரிசை 2 அணிகள் (தலா ரூ.10,000) எத்திராஜ் கல்லூரி, ஜே.பி.ஏ.எஸ். அணிகளும் பெற்றன.

தமிழ்ப் புத்தாண்டு விழாவின் சிறப்பு அம்சமாக, பல்வேறு துறைகளில் உயர்ந்து நிற்கும் தமிழர்கள் 9 பேருக்கு பெரியார் விருது அளித்துச் சிறப்பிக்கப்பட்டது. இவ்விருதுகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கிப் பாராட்டினார். அவர் தனது உரையில், திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதாயத்தைத் தகர்த்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம் என பெருமிதம் கொண்டு பேசினார்.

விருது பெற்றோர் ஏற்புரையில் தமது எண்ணங்களை எடுத்தியம்பினர். ஆங்கிலப் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும் இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஏற்புரை வழங்கும்போது, திராவிடர் இயக்கத்திற்கும், சிறந்த பத்திரிகையாளராக இருப்பதற்கும் என்ன உறவு என்று பார்த்தால் அடிப்படையில் இருக்கக் கூடியது சமூகநீதி என்ற ஒரே ஒரு விஷயம்தான். யார் ஒருவன் இந்தச் சமூகத்தில் சமூகநீதி நிலைபெற வேண்டும் என்று நினைக்கின்றானோ, யார் ஒருவன் சமூகநீதி குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சொந்தமில்லை அனைவருக்கும் சொந்தமானது என்று பரந்த பார்வை கொள்கின்றானோ அவனே சிறந்த பத்திரிகையாளனாக இருக்க முடியும். என்னைப் பொருத்தவரையில் சுயமரியாதை இயக்கம் என்பது அடிப்படையில் ஒரு மனிதனாகச் செயல்படுவதற்கான பார்வையைக் கொடுத்திருக்கிறது, என்று முழங்கினார்.

தமிழில் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான இமையம் ஆற்றிய உரை, மானுடத் தந்தை பெரியாருக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக்கடன் பட்டவன் என்பதை எடுத்துக்காட்டியது. அவர் பேசும்போது, இந்த ஏற்புரையை நான் நன்றியுரையாகவே கருதுகிறேன். இந்த நன்றியுரை என்னுடைய தந்தைக்கு அல்ல, தாய்க்கு அல்ல, என்னுடைய சகோதரருக்கு அல்ல, தந்தை பெரியாருக்கு. காரணம், என்னுடைய தந்தை, தாய் நான் படிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் மனிதனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. மூடநம்பிக்கைகளை எனக்குள்

தமிழ் ஓவியா said...

விதைத்தார்கள். நானும் இந்தச் சமூகத்தில் ஒரு மனிதனாக, பழுத்த மனிதனாக, நாகரிகமிக்க மனிதனாக, சுயசிந்தனைமிக்க மனிதனாக இருக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார். இன்று பல்வேறு மேடைகளில் பல்வேறு சமூகத்தினருடன் அமர்ந்து பேசுகிறேன். இதற்குக் காரணம் தந்தை பெரியார். அதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் திடலுக்கு இன்று முதன்முதலாக வந்தவன். 1976, 77இல் நான் ஆறாம் வகுப்புப் படித்தேன். ஆறாம் வகுப்புப் படித்தபோது சென்னை பூக்கடை பஸ்டாண்டுகிட்ட பழம் விற்கக்கூடிய ஒருவர் சொன்னார். நமக்கு நல்லது செய்றவரு பெரியார், கலைஞர். உண்மையிலேயே அதற்கு முன்னால் பெரியார் யாருன்னு தெரியாது. கலைஞர் யாருன்னு தெரியாது. அன்று அவர் விதைத்த விதைதான் இன்றுவரை வீணாக்காமல் விஷப்படுத்தாமல் எனக்குள் வளர்ந்துகொண்டே வருகிறது. என் மகன்களுடன் விருத்தாச்சலம் மாநாட்டில் கலந்துகொண்டேன். இரவு 11 மணிக்கு என்னுடைய மகனிடம் சொன்னேன். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் யாருக்காவது கடன்பட்டிருக்கிறீர்கள் என்றால், அது தந்தை பெரியாருக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள் என்றார்

எள்ளல் நடையில் சமூக அவலங்களைத் தோலுரிக்கும் எழுத்தாளர் பாமரன் தனது பாணியிலேயே பேசத் தொடங்கினார். இந்தியாவில் பொதுவாக விருது என்பது கொடுக்கப்படுவதாக இல்லை. வாங்கப்படுவதாகவே இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு எழுத்தாளனும் லேகியம் விற்பனையைவிட பிரமாதமான ஆளாக இருக்கான். ஆனால், இந்த விருது நிச்சயமாக உண்மையிலேயே வித்தியாசமானது. நான் ஆசிரியரைப்பற்றியோ திராவிடர் கழகத்தைப் பற்றியோ எந்த இடத்திலும் புகழ்ந்து எழுதவில்லை. கிண்டல் பண்ணி திட்டி வேணும்னா எழுதியிருக்கேன். உண்மையிலேயே ஆசிரியரின் பெருந்தன்மைதான் என் மனதில் உரைத்தது. நான் இப்படித் திட்டி, கிண்டல் பண்ணி ஒரு சங்கராச்சாரியாரையோ, ஆரியத்தையோ, எழுதியிருந்தால் அவர்கள் என்னை எப்படி நடத்துவார்கள்? என்ற கேள்வி மனதில் தோன்றிற்று! ஆசிரியர் அவர்கள் பி.ராமமூர்த்திக்கு மறுப்பாய் எழுதிய விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் என்கின்ற புத்தகத்தை என்னால் இன்றுவரை மறக்க முடியாது. எனக்கு முதன்முதலில் கிடைத்த விருது தந்தை பெரியார் விருது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பெரியார் நாத்திகர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல, ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர் என்பதை உணர்ந்தேன்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோம். இன்று எனக்குக் கிடைத்திருக்கிற விருது என்னுடைய தோழர்கள் அனைவருக்குமே கிடைத்ததாக நினைக்கிறேன் என்று உற்சாகம் ஊட்டினார்.
தமிழ்நாட்டின் ஊர்கள் தோறும் ஆவணப்படம், குறும்படம் எடுப்பது பற்றிய பயிற்சிப் பட்டறைகளை நடத்திவரும் நிழல் திருநாவுக்கரசு தனது ஏற்புரையில், தமிழர் திருநாள் திராவிடர் நன்னாளில் எனக்கு இந்த விருதினை அளித்ததற்கு எனது நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஆறு வயதாக இருந்தபோது தாராசுரத்தில் பெரியார் பேசும்போது முதன்முதலாக கேட்டிருக்கிறேன். மறைக்கப்பட்ட இசையாளர்களை ஒவ்வொரு முறை எழுதும்போதும் அய்யா கருத்துகள் ஒரு பக்கம் உறுதுணையாக இருக்கும். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் மறைக்கப்பட்ட தமிழ் இசையைக் கொண்டுவரும்போது எழுதிய முன்னுரை இன்றுவரை ஒரு வழிகாட்டியாய் இருக்கிறது. தமிழர்கள் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கே அவர்களை பார்ப்பனர்கள் நம்மை விடமாட்டார்கள். அதை அவர்கள் பிடுங்கிக் கொள்வார்கள். அந்த வரிசையிலேயே இந்தக் குறும்படத் துறையையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தார்கள். ஆனால், நாங்கள் விடவில்லை. அதில் பெரும்பாலும் தமிழ் இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். இதனால் அந்த வெறுப்பு அவர்களுக்கு இன்றுவரை இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

நமது நோக்கமே அறிவினைப் பரவச் செய் என்பதுதான். அதனைச் செய்துவரும் பணியைத் தொடர்ந்து செய்திட இந்த விருது ஊக்கப்படுத்துகிறது, என்றார்

மாற்றுப்பாலினமான திருநங்கைகளின் வாழ்வுக்காக பல்வேறு சாதனைகள் புரிந்துவரும் பிரியா பாபு, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் திராவிடர் திருநாளில் பெரியார் விருது கிடைத்ததை நான் ரொம்பப் பெருமையாக நினைக்கிறேன். இந்த விருதைப் பெறுவதில் இரண்டு விதமான மகிழ்ச்சி. ஒன்று, பொங்கல் திருநாளில் திருநங்கைகளுக்கு ஒரு புதிய வெளிச்சம் இந்த விருதின் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டாவது, என்னுடைய தேடலுடைய அடுத்த பயணத்தை நோக்கிப் பயணிக்கிறேனோ அப்படிங்கிறதுதான். என்னுடைய வாசிப்பு குறைவுதான். பெரியாரைப் பற்றிப் படித்திருக்கிறேன். அப்போதிருந்தே ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது. திருநங்கைகள் குறித்து என்னதான் பேசியிருப்பார் பெரியார் என்று எல்லாரிடமும் கேட்டேன். தெரியலை. ஒருவேளை அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த இடத்துல இந்த விருது கிடைத்திருக்குதுன்னு நினைக்கிறேன். .ஒவ்வொரு திருநங்கையும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது சாதிக்க முடியும் என்பதுதான் உண்மை. நாங்கள் மூன்றாவது பாலினம் இல்லை. நாங்கள் மாற்றுப் பாலினம். நீங்கள் தெருவில் பார்க்கிற ஒவ்வொரு திருநங்கையும் குடும்பத்தால் ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

இசை உலகில் உலகம் முழுதும் பயணம் செய்து தமிழர்களின் பண்பாட்டு இசை வடிவமான தாளக் கருவிகளின் ஓசைகளைப் புதுவிதமாய் வழங்கிவரும் இசை அமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, சிறுவயதில் இருந்தே இசையோடு வளர்ந்தவன் நான். சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் வளர்ந்தவன். என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு வாசிக்கப்படும் பறை இசை என்னுள் இசையைப் புகுத்தியது. அதனைக் கேட்கும்போது அருமையாக இருக்கும். அப்படி என்னுள் ஆர்வம் கலந்து வளர்ந்ததுதான் இசை. இன்று உலகம் முழுதும் சென்று நிகழ்ச்சி நடத்துகிறேன். இந்த நிலையில் எனக்கு பெரியார் விருது அளித்தது மிகவும் மகிழ்ச்சி என்றவர் எனக்கான விருதினை என் தாயாரிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதற்கொப்ப, டிரம்ஸ் சிவமணியின் தாயார் விருதினைப் பெற்றுக் கொண்டார். தமிழர்களின் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் மிகவும் குறைவே. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் எழுத்தாளர் தமிழ்மகன். நமது உண்மை இதழில் ஆல்பா, கடவுள் 2 ஆகிய தொடர்களை எழுதியுள்ள இவர் தற்போது ஆனந்த விகடனில் ஆப்பரேசன் நோவா என்ற அறிவியல் தொடரை எழுதி வருகிறார். எழுத்தாளர் தமிழ்மகன் தனது ஏற்புரையில், ``பெரியார் விருது பெறுவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதன்முதலில் விஞ்ஞானத் தொடரை எழுதுவதற்கு உண்மை இதழ்தான் வாய்ப்பளித்தது.

தமிழ் ஓவியா said...

நான் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். இலக்கியவாதிகள் வட்டாரத்தில் பேசப்படுபவர் பெரியார்தான். கேரளா பக்கம்போய் வைக்கம் வீரர் என்று சொன்னா விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று நிறையப் பேர் எழுதினார்கள். சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் இந்த மாதிரி அந்த ஏற்றத்தாழ்வு பார்த்ததே இல்லைன்னு எழுதுறாங்க. தொடர்ந்து பெரியாரை மட்டும்தான் காலந்தோறும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் என்றார். திரைப்படக் கலைஞராக, பின்னணிக் குரல் கொடுப்பவராக, நகைச்சுவை நடிகராக மிளிர்பவர் எம்.எஸ்.பாஸ்கர். அவர் பேசும்போது, ``நான் இறை நம்பிக்கை உள்ளவன். மூடநம்பிக்கை இல்லாதவன். என்னை வந்து இறைவனைப் பிடிக்குமா? தமிழைப் பிடிக்குமா என்று கேட்டால் தைரியமாகச் சொல்வேன், தமிழைத்தான் பிடிக்கும் என்று. எதுவாக இருந்தாலும் கூர்ந்து கவனித்தல் மிகவும் முக்கியம். பணிவாக இருப்போம், எந்த நிலையிலும் நம்முடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருப்போம் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன் என்றார்.

தற்காலத் தமிழ் ஆளுமைகளில் முக்கியமானவர் பேராசிரியர் அ.மார்க்ஸ். சமூக நல்லிணக்கம், மதவெறி எதிர்ப்பு, மனித உரிமைகளுக்காக தொடர்ந்து இயங்கி வருபவர். அவர் பெரியார் விருது பெற்றுக்கொண்டு ஆற்றிய உரையில், நான் விருது இதுவரை வாங்கியது கிடையாது. எனக்கு எந்த நிறுவனங்களும் விருது கொடுக்கத் தயாராக இல்லை. ஆனால், பெரியார் திடலில் பெரியார் விருது கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் நான் எந்த மறுப்பும் கூறாமல் வந்து பெற்றுக்கொண்டேன். மிகுந்த பெருமையுடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன். சிறு பத்திரிகைகள் என்பன இன்று மிகவும் நவீனமாக இலக்கியத்தை வளர்த்தவை என்று சொல்லக்கூடியவை. குறிப்பாக மணிக்கொடி என்ற ஒரு பத்திரிகை பற்றி எல்லோரும் சொல்வார்கள். மணிக்கொடி காலம் என்றெல்லாம் சொல்வார்கள். அதுதான் நவீன இலக்கியத்தினுடைய தொடக்கப்புள்ளி என்று குறிப்பிடுவார்கள். அந்த மணிக்கொடி பத்திரிகை கடைசிவரை சூனா மானா காலிகள் என்று சொல்லி சுயமரியாதைக் காலிகள் என்று உருவாகி வந்து திராவிட இயக்கத்தைத் தொடர்ச்சியாக திட்டியும் அவமதித்தும் எழுதிக் கொண்டிருந்த பத்திரிகை. அதை முதன்முதலாக எடுத்து வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்தினேன். அன்று முதல் கிட்டத்தட்ட 1992 வரை வெளிவந்த சிறு பத்திரிகைகள் எதிலும் பெரியார் என்பதைத் தவிர தமிழ்நாட்டின் ஒரிஜினல் சிந்தனையாளரைப் பற்றி ஒருவரிகூட எழுதியதுமில்லை. ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதுமில்லை. முதன்முதலாக நிறப்பிரிகையில்தான் நாங்கள் பெரியார் தொடர்பாக ஒரு விவாதத்தை எடுத்து வைத்தோம். அது மட்டுமல்ல, பெரியாரின் மாற்றுச் சிந்தனைகள் என்பன எப்படி இன்றைய நவீனமான பிரெஞ்சுத் தத்துவவியலாளர்கள் சொல்லக்கூடிய சிந்தனைகளுக்குச் சமமாக இருக்கிறது என்பதை நிறுவி ஒரு பெரிய சலசலப்பைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தினோம் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் போன்ற சிந்துவெளி நாகரிகம் போன்ற கண்டுபிடிப்புகள் ஒரு மிகப்பெரிய சுயமரியாதை உணர்வை தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தியது என்று எழுதினேன். இன்று சொந்தமாக நமக்கு ஒரு பண்பாடு இருக்கிறது, அதை வெற்றிகரமாக ஒரு அரசியலாக மாற்றியது பிராமணரல்லாதார் இயக்கம்தான் என்று கூறினார்.

பொங்கல் விழா என்பது திராவிடர்களின் திருநாளாகக் கொண்டாடப்படுவதுடன், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், தன்னம்பிக்கையோடு உருவாகி வளர்ந்துவரும் தமிழர்களை உயர்த்திப் பிடிக்கும் நிகழ்வாகக் கொண்டாடவேண்டும் என்பதை இந்த விழா எடுத்துக் காட்டியது.

-தொகுப்பு: பிரபாகர்

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை


தலைமுறைகள்

- சமா.இளவரசன்

மொத்தமாக 30 ஆண்டுகளில் 15 படங்கள் தான் தமிழில் இயக்கியிருக்கிறார் இதுவரை! ஆனால், தமிழ்த் திரையின் கதை சொல்லல் தரத்தை, ஒளிப்பதிவை, திரை மொழியை மாற்றியமைத்ததில் ஒளிஓவியர் பாலுமகேந்திராவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது தலைமுறைகள். நாற்பது ஆண்டுகால திரை வாழ்வில் திரைக்குப் பின்னால் இருந்தே இயங்கி வந்த பாலுமகேந்திராவே படத்தின் முக்கியப் பாத்திரமேற்று, எப்போதும் எங்கும் சூடியிருக்கும் தலைப்பாகையைத் தூக்கி வைத்துவிட்டு, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சுப்பு பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார். தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளிதான் தலைமுறைகள். 12 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் படித்த, தமிழ் தெரியாத, பெற்றோரில்லாமல் வளர்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் பெரிய மருத்துவராகத் திகழ்கிறார் சிவராமன். அடுத்தடுத்த முன்னேற்றம், புதிய மருத்துவமனை என்று வாழ்பவருக்கு, அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீடு திரும்பியிருக்கும் சேதி சற்று தாமதமாகக் கிடைக்கிறது.

அவரைப் பார்க்கச் சொல்லி மனைவி வற்புறுத்த, காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் சிவராமன். தந்தை வரவேற்க மறுத்தாலும், தங்கையின் அழைப்பின் பேரில் வீட்டில் தங்குகிறார். அண்ணனின் காதல் திருமணத்தின் காரணமாக தந்தை சுப்பு பிள்ளை தன்னை விரைவாக திருமணம் செய்துவைத்துவிட்ட வருத்தத்தைப் பகிர்கிறாள் தங்கை. பெண் பிள்ளை பிறக்குமா என்ற கணவனின் எதிர்பார்ப்புக்காக, மூன்று ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு நான்காவது கருவைச் சுமந்து கொண்டிருக்கும் தங்கை ஒரு புறம் என்றால், பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளை என்ற ஜாதிப் பெயரையும் சேர்த்துச் சொல்லிப் பழக்கி வைத்துக் கொண்டிருக்கும் தந்தை மறுபுறம் என பிற்போக்கான மனநிலைக்குள் இன்னும் உழன்று கொண்டிருக்கும் குடும்பம் அது. ஜாதி, மதம் என்று பேசிக் கொண்டிருக்கும் சுப்புவுக்கு இன்னொரு மனைவி மூலமாக ஒரு மகள் இருப்பதைக் காட்டும்போது ஜாதிப் பெருமை எதுவரைக்கும் என்ற எள்ளல் இயல்பாகப் பதிகிறது. அதிலும், வெளியில நான் சாப்பிடமாட்டேன்னு உனக்கும் உங்க அம்மாளுக்கும் தெரியாது? என்று அண்ணன் முன்னால் எரிந்து விழும் அப்பாவைப் பார்த்து, நல்லா தான்ணே வீட்டுல சாப்பிடுவார். இப்போ என்னமோ இப்படிப் பேசுறாரு என்று அவள் வெட்டி ஜம்பத்தைப் போட்டுடைக்கும் காட்சி ரசிக்க வைக்கக் கூடியது. முதலில் மகனையே வீட்டிற்குள் விட மறுக்கும் சுப்பு, மருமகள் வந்தால் வீட்டுக்குள் சமைக்கக் கூடாது என்று மகளிடம் போடும் நிபந்தனை அவரது எதிர்ப்பு முன்பு போல் இல்லாமல் முனை மழுங்கிவிட்டது என்பதற்கு அடையாளம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேசும் மருமகளைக் கண்டு மகிழ்ந்தாலும் 10 வயதாகியும் தமிழ் தெரியாத பேரனைப் பார்த்து வருத்தம் அடைகிறார் சுப்பு. மகனிடம் இருக்கும் மனவருத்தத்தையும் தாண்டி, பேரனிடம் பாசம் ஏற்படுகிறது. பேரனோடு விளையாடத் தொடங்குகிறார்; பேரனுக்குக் கற்றுக் கொடுக்கிறார்; பேரனிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்; பேரனின் கேள்விகளுக்குப் பதில் தருகிறார். தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையிலான அந்த உறவு பார்க்க அழகானது. தான் அமர்ந்து உறங்கும் சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் காலைத்தூக்கிப் போட்டபடி உறங்கும் பேரனை ரசிப்பதும், அவன் உள்ளங்கையில் வைத்திருக்கும் மிட்டாயை அவன் எழுந்துவிடாத வண்ணம் மெல்ல எடுத்துச் சுவைப்பதும் அழகு. ஆற்றைப் பார்த்திராத, ஆட்டைப் பார்த்திராத பேரனுக்குக் கிராமத்தின் எளிய வாழ்க்கையைப் பழக்குகிறார். தான் பண்பாடு என நினைக்கும் பழக்கங்களைப் பேரனுக்கும் சொல்லித் தருகிறார். அந்தக் காலத்து வாத்தியாராக, விஜயதசமி என்று கோவிலுக்குக் கூட்டிப் போய் நெல்லைக் கொட்டி, அதில் அ என்று கைப்பிடித்து எழுத வைத்து தமிழ் கற்றுத் தருகிறார் தாத்தா சுப்பு! தனக்குத் தமிழ் கற்றுத் தரும் தாத்தாவுக்கு, நல்ல நாள் பார்க்காமல், நெல்லைக் கொட்டியோ கோதுமையைக் கொட்டியோ கி எழுதாமல் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்குகிறான் பேரன். அதற்குப் பிறகு தாத்தா கற்றுக் கொடுத்த அவை சிறுநீர் கழிக்கையில் மணலில் வரைந்து பார்க்கும் பேரனைப் பார்க்கும் போது, அய்யய்யோ வருத்தம் கிருத்தம் படப்போகிறாரோ என்று நாம் நினைத்தால், அதற்கு மாறாக காவி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பேரனைப் போலவே தாத்தாவும் சிறுநீரில் அ வரைந்து பார்ப்பதும், அதைப் பேரன் ரொம்ப ஷேக்கிங் என்று சொல்வதும் இரண்டாம் குழந்தைப் பருவத்தைப் பதிவு செய்யும் காட்சிகள். ஆற்றில் குளிக்கப் பழக்குவது, தூண்டிலிட்டு மீன் பிடிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று இன்றைய நகர வாழ் குழந்தைகள் தவறவிட்ட தருணங்களை நினைவூட்டுகிறது தலைமுறைகள். தாய்ப்பால் காட்சியையெல்லாம் எந்த இடையூறும் இல்லாமல் வெகு அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

தமிழ் ஓவியா said...


மகள் வயிற்றுப் பேரன்களுக்கெல்லாம் சிவகுருநாதன் பிள்ளை, சிவ... பிள்ளை, சிவ... பிள்ளை என்று பேர்வைத்து ஜாதியோடு சொல்லப் பழக்கியவர் மகன் வழிப் பேரனுக்கும் ஆதித்யா பிள்ளை என்று சொல்லித் தருகிறார். அந்தப் பேரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் பேரன் ஆதித்யா. இந்த ஜாதி மதப் பிரிவினைக் குப்பையெல்லாம் நம்மோடவே போகட்டுமே! அடுத்த தலைமுறைக்கும் போகணுமா? என்று பாதிரியார் எழுப்பும் கேள்விக்குப் பிறகு, தானும் அதை விட்டுவிடுகிறார் சுப்பு. ஒரே தடவையில் திருந்திவிட்டாரா என்று சிலர் விமர்சனத்தில் கேட்டிருந்தார்கள். இந்தக் கேள்வியை ஒருமுறை கூட யாரும் கேட்காமலேயே பலருக்குக் காலம் கடந்துவிட்டிருக்கிறதே, ஒருவரின் கேள்வி கூட சுருக்கெனத் தைக்கலாம். கிறிஸ்துவ மருமகள் எட்டுக் கிலோமீட்டர் நடந்து சர்ச்சுக்குச் சென்று வர வேண்டுமா என்று யோசித்து, தான் வணங்கும் கடவுள்களுக்கு மத்தியிலேயே ஏசு படத்தையும் வைத்து, மற்ற கடவுளரைப் போலவே பூமாலையும் போட்டு வைக்கும் அளவுக்கு சுப்புவின் மனநிலையில் பாசம் மாற்றத்தை உண்டாக்குகிறது. வயதான காலத்தில் நிகழும் மாற்றங்கள் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியாது. யாராலும் அடங்காதவர்கள் பேரனுக்காக மாறும் இயல்புகளைத் தனியே விவரிக்க வேண்டியதில்லை. வெகு இயல்பாக இவற்றையெல்லாம் பதிவு செய்கிறார் பாலுமகேந்திரா. கம்பீரமான தோற்றத்துடன், வீராப்புடன் திகழ்வோரெல்லாம், கால மாற்றத்தில் புதியன அறியாதவர்களாக, வயதான காலத்தில் வெகு குழந்தைகளாக மாறிப் போவதைக் கண்டிருப்போம். சுப்பு கதாபாத்திரத்திற்கு இது சரியாகப் பொருந்தும். சுப்பு என்ற கதாபாத்திரத்தைத் தாண்டி பாலுமகேந்திராவை நாம் ஒரு வேளை தேடிக் கண்டுபிடித்தோமானால், அவரின் நடிப்பு எத்தனை இயல்பாக இருக்கிறது என்பதையும் நாம் உணரமுடியும். கையைக் கையை ஆட்டிப் பேசும் பாவனைகளில் சில நேரம் செயற்கைத்தன்மை இருப்பதாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் மூத்தோரை மனதில் வைத்துப் பார்த்தால் சுப்புவின் பாவனைகள் நமக்குத் தனித்துத் தோன்றவில்லை.

தமிழ் ஓவியா said...

சென்னையில் விட்டுவந்த மருத்துவப் பணியைத் தொடர விரையும் மகன் சிவராமன், கிராமத்து மக்களுக்கும் மருத்துவமனை தேவை; அதற்கு, தானே இங்கிருந்து நடத்தத் தயார் என்று சொல்லும் மருமகள் போன்ற முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், உங்க கல்யாணத்துக்குக் கையெழுத்துப் போட்டேன்னு எப்பவும் திட்டுவாரு.. இப்போ பார்த்தாலும் திட்டுவார் என்று மறைந்து மறைந்து ஓடும் சிவராமனின் நண்பன், சுப்புவின் நண்பர் லட்சுமணன், இரண்டாம் மனைவியின் மகளாக வரும் சிறுமி என்று அவ்வப்போது வரும் கதாபாத்திரங்களும் இயல்பானவை _- நம் குடும்பத்தைப் போல! ஆங்காங்கே காட்சிகள் கோர்வை இல்லாமல் இருப்பது உறுத்தல்தான். அப்படிக் கோர்வையற்ற ஒரு காட்சித் திணிப்புதான்- கடவுள் பற்றி அவர் பேரனுக்குக் கூறும் காட்சியும். ஆற்றங்கரை வழியில் இருக்கும் பிள்ளையார் சிலையை கடவுள் என தாத்தா அறிமுகப்படுத்த, இல்லை அது கல்லுதான் என்கிறான் பேரன். அடுத்த காட்சியிலேயே சம்பந்தமில்லாமல், தாத்தா என் போட்டோ என்று ஒரு படத்தைக் கொண்டு வந்து காட்டும் பேரனிடம் இது நீயில்லை; வெறும் பேப்பர் என்று வாதாடுகிறார் தாத்தா. காட்சி நிறுத்தப்பட்டு, வளர்ந்துவிட்ட பேரனின் குரலில் கண்ணதாசனின் தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ற வரிகளுக்கு எனக்கு ரொம்ப காலம் கழிச்சுத்தான் அர்த்தம் புரிஞ்சுச்சு என்று ஒரு வசனம். என் போட்டோ என்றும் போட்டோவிலிருப்பது என் உருவம்தான் என்றும் கூறும் பேரனிடம் இது நீயில்லை என்று நிறுவப் பார்க்கிறார் பாலுமகேந்திரா. கல்லைக் கடவுளென்றும் அதற்குச் சக்தி உண்டு என்றும் நம்பச் சொல்வதைப் போல, அந்த போட்டோதான் சிறுவன் என்பது வாதமில்லையே! போட்டோவை தங்கள் உருவத்தின் பிரதிபலிப்பாகத்தான் பார்க்கிறார்களே தவிர, அதுதான் தாம் என்று யாரும் பார்க்கவில்லை. கடவுள் விசயத்தில் பாலுமகேந்திராவின் இந்தப் பதட்டத்தை நாமும் ஓரிரு நிகழ்ச்சிகள் மூலம் அறிந்திருப்பதால் இந்தத் திணிப்பை நம்மால் உணரமுடிகிறது. அது அவசியமில்லை என்பதை அந்தக் காட்சியே உணர்த்தும். தேவையான அளவு, தேவையான இடத்தில் இசை.

அதற்குப் பெயர் தான் இளையராஜா. மென்மையோடு நாம் பார்த்த பழைய பாலுமகேந்திரா படங்களுக்கு குளிர் பின்னணியும், பிலிமும் காரணமாக இருந்தன. இந்தப் படத்தில் டிஜிட்டலில் படமாக்கியிருப்பதால் வெளிறித் தெரியும் சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் நெருடலின்றி இயல்பான ஒளியமைப்புடன் கண்ணுக்கு இதமளிக்கிறார் பாலுமகேந்திரா. முற்போக்கான படம் என்றோ, அனைவருக்கும் அவசியமான கருத்துகளைத் தந்திருக்கும் படம் என்றோ நம்மால் இதைச் சொல்ல முடியாதுதான். ஆனால் முன்னேற்றத்தை முடக்கிவிட்டு, கிராமத்தில் முடங்குங்கள் என்று இந்தப் படம் சொல்லவில்லை; நவீன வாழ்க்கை முறையை நோக்கி விரல் நீட்டி குற்றமும் சாட்டவில்லை; வேர்களை மறந்துவிடாதீர்கள் என்று மட்டும்தான் வேண்டுகோள் விடுக்கிறது. வேர்கள் என்பது கிராமம் என்ற இடம் அல்ல; அங்கிருக்கும் மனிதர்கள் என்பதையும் படம் காட்டிச் செல்கிறது. ஜாதியைப் பாதியில் விட்டுவிட்ட சுப்பு, தன் கடைசி வேண்டுகோளாக தமிழை மறந்துடாதே; இந்தத் தாத்தாவையும் மறந்துடாதே என்று கோருகிற இடத்தில் படம் அதற்கான முக்கியத்தைப் பெறுகிறது. வணிகம் குறித்துப் பெரிதும் கவலைப்படாமல் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் சசிக்குமார் பாராட்டுக்குரியவர். திரை மொழியை நன்கு பயன்படுத்தத் தக்க அண்மைக் காலத்துக் கலைஞர்களெல்லாம் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான். அதன் அடுத்த கட்டத்திற்கு இப்படம் இட்டுச் செல்லும். திரைப்படம் என்ற பார்வையில் ஆரவாரம் இல்லாமல், வணிகச் சமரசமில்லாமல், எளிமையாக இனிவரும் படங்களுக்கு இது முதல் தலைமுறை; தொடக்கம்; முதல் நெருப்பு. திரைப்படங்களை ரசிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு!

தமிழ் ஓவியா said...

தூங்கும் கடவுளுக்கு தங்கம் ஏன்?
தூங்கும் கடவுளுக்கு தங்கம் ஏன்?



- கவிஞர் கலி.பூங்குன்றன்

இந்த உலகத்தைப் படைத்தவன், சகலமும் அவனுக்கே உரியது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோவிலுக்குக் காணிக்கை கொடுப்பது _ உண்டியல் வைத்துப் பணம் வசூல் பண்ணுவது, பூஜை செய்வதற்கும், வழிபடுவதற்கும்கூட தட்சணை தண்டுவது என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?

கோவில் என்ற ஒன்றை வைத்து பணம் பண்ணுவது, வியாபாரம் செய்வது அல்லாமல் வேறு என்னவாம்?

வசதிவாய்ப்புள்ளவர்கள், பதவியாளர்கள் என்றால் கோவிலில் கடவுளைத் தரிசிக்க முன்னுரிமை கொடுப்பது எல்லாம் எந்த வகையைச் சேர்ந்தது?

நான் இதைத் தருகிறேன் கடவுளே _ நீ இதைத் தா! என்று வேண்டுவது எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிசினஸ் அல்லாமல் வேறு என்னவாம்?

சிதம்பரம் நடராசன் கோவில் பிரச்சினைகூட என்ன? நடராசன்மீது கொண்ட அளவற்ற பக்தியினாலா தீட்சதர்கள் திருநடனம் புரிகிறார்கள்? கோவில் மூலம் கொள்ளை லாபம் குவித்து _ அது பறிபோகிறதே என்ற ஆத்திரமும், ஆற்றாமையும்தானே தீட்சதர்களின் கூக்குரலுக்கெல்லாம் காரணம்! மறுக்க முடியுமா?

நவீன காலத்திற்கேற்ப எந்த எந்த வகைகளில் எல்லாம் பணம் பண்ணுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. ஏழுமலையானுக்கு செல்போனில் காணிக்கை என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது. (தி இந்து _ தமிழ் _ 19.1.2014 பக்கம் 16)


தமிழ் ஓவியா said...

அந்தத் தகவல் வருமாறு:

திருப்பதி: உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு செல்போனில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு காணிக்கை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது. நேரடியாக வரும் பக்தர்கள் மட்டும் கோவில் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களும் காணிக்கை செலுத்தும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பக்தர்கள் இ_உண்டி திட்டம் மூலம் தங்களது செல்போன் மூலமாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தலாம். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திரா வங்கி இந்தச் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் (அய்.எம்.பி.எஸ்) இந்தச் சேவையை பக்தர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்
_ தி இந்து, 19.1.2014 (பக்கம் 16)

மேற்கண்ட தகவல் எதைக் காட்டுகிறது? திருப்பதி ஏழுமலையான் என்ற ஒரு உருவத்தை வைத்து புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்திப் பணம் திரட்டுவதுதானே இதன் பின்னணியில் இருக்கும் இரகசியம்?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் உச்ச நீதிமன்றம்வரை சென்று ஆகமங்களுக்கு விரோதம் என்று அரட்டை அடிக்கும் இந்த அய்யன்மார்கள் அய்யங்கார்மார்கள், இப்படி செல்போன் மூலம் காணிக்கை செலுத்துவதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது என்று சொல்லட்டுமே பார்க்கலாம்!

கோவில் என்பதெல்லாம் ஜாதியைக் காப்பாற்றுவதும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும், அவற்றின் மூலம் மக்களின் பணத்தைச் சுரண்டுவதும்தான் நோக்கமே தவிர, பக்தியாவது மண்ணாங்கட்டியாவது?

திருப்பதி ஏழுமலையானைப் பொருத்தவரை, அதன் ஆண்டு வருமானம் 650 கோடி ரூபாய். நாட்டின் பல்வேறு வங்கிகளிலும் வைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவு 3 ஆயிரம் கிலோ! வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகை ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டுமாம்.


ஆண்டு ஒன்றுக்கு 300 முதல் 350 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி காணிக்கையாக வந்து சேர்கிறது.

பல்வேறு காலங்களில் மன்னர்களால் இந்தக் கோவிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளுக்குச் சரியான வகையில் கணக்குகள் கிடையாது.

குறிப்பாக கிருஷ்ணதேவராய மன்னன் இந்தக் கோவிலுக்கு அளித்த ஆபரணங்கள் அளவிட முடியாதது. இத்தனைக்கும் ஆபரணங்களைச் சோதனை செய்யும் பிரிவு ஒன்று தனியாக அக்கோவிலின் அறநிலையத்துறை சார்பில் இயங்கி வருகிறது.

என்றாலும், அவர்களின் கண்களிலேயே மண்ணைத் தூவி கொள்ளைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மன்னர்காலக் கல்வெட்டுகள், பல்வேறு நன்கொடைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றியெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அத்துறையினர் கையை விரிக்கிறார்கள்.

91 முத்துக்கள் அடங்கிய நெக்லஸ் ஒன்று மன்னர் கிருஷ்ண தேவராயரால் வழங்கப்பட்டுள்ளது.

முறையான சொத்துப்பட்டியல் தயாரிக்கப்படாதவரை மன்னரால் வழங்கப்பட்ட ஆபரணங்களை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார் வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள்துறைப் பேராசிரியரான கிரண் கிராந்த்.

ஆயிரம் தங்கக் காசுகள், ஒரு முத்து நெக்லஸ், மரகதம் பதிக்கப்பட்ட வைரப் பதக்கம் என்று நீண்ட பட்டியலைப் படிக்கிறது தொல்பொருள்துறை.

ஒருவேளை நன்கொடைகளின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடித்து, மாயமானதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உலகிலேயே பெரும் மோசடி வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தொல்பொருள் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பக்கம் பகற்கொள்ளை _ இன்னொரு பக்கமோ செல்போனில் காணிக்கை என்கிற அளவுக்குச் சுரண்டல்.

இன்னொரு பக்கம் இந்தியாவில் 77 சதவீத மக்கள் நாள் ஒன்றுக்கு வருமானம் ரூ.20 என்கிற பரிதாப நிலை.

குழவிக் கல்லுக்காகக் கோடிக்கணக்கில் பணமும், தங்கமும் கோபுரமாகக் குவிந்து கிடக்கிறது!

உலகிலேயே தங்கம் இந்தியாவில்தான் அதிகம் குவிந்து கிடப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் கோவிலில் கொட்டிக் கிடக்கும் தங்கத்தை உலக மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தால் தங்கத்தின் விலை படுபாதாளத்துக்குப் போகும்.
(தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி 5.4.1976)

பொருளாதார நிபுணர்தாம் நம் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். மிகப்பெரிய பொருளாதார மேதைதான் மாண்டேக்சிங் அலுவாலியா. ஏன் இதுபற்றி சிந்திக்கக் கூடாது? கோவிலுக்குள் தூங்கும் தங்கம் மக்கள் நலனுக்குச் செலவிட்டால் என்ன? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற ஒரு சொலவடையும் உண்டே!

தமிழ் ஓவியா said...

ஏழுமலையானுக்கு! கோவிந்தா, கோவிந்தா!



ஏழுமலையானுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான நகைகள் மோசடி!

தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு நகைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் நகைகளைக் களவாடிவிட்டனர். (மாலைமுரசு 26.8.2009)

2009 ஆகஸ்ட் 5ஆம் தேதி தேவஸ்தான கமிட்டி கூடியது. அந்தக் கூட்டத்தில் விஜிலென்ஸ் அதிகாரி ரமணகுமார் அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். அதிரடியான தகவல்கள் அனைவரையும் வியர்த்துப் போகச் செய்தது.

ஒவ்வொரு வருஷமும் ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வந்து குவியும் தங்க நகைகளை உருக்கி, இரண்டு, அய்ந்து, பத்துக் கிராமில் ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. 2006ஆம் ஆண்டு அய்ந்து கிராம் கொண்ட முந்நூறு தங்க டாலர்களை உரிய ரசீது இல்லாமல் மோசடியாக விற்பனை செய்ததாக விற்பனைப் பிரிவில் கே.வெங்கடாசலபதி (இவர் பெயரும் வெங்கடாசலபதிதான் - கவனிக்கவும்.) என்பவர் மீது புகார் எழுந்தது. இந்த மோசடிபற்றி விசாரிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டது. அதன்பேரில் 2001லிருந்து 2006வரை இப்படி மோசடி நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது என்று கூறினார்.

நெற்றியில் நெடுநாமம்! தொப்புள் வரை தொங்கும் டாலர் _- இவருக்குப் பெயர் டாலர் சேஷாத்திரியாம். ஆனால் இந்த மெகா திருடர் மீது ஒரு சிறு துரும்பும் பட்டுவிடவில்லை. (அவர் என்ன ஆ.இராசாவா?)

மேற்கண்ட தகவல்களை எல்லாம் விடுதலையில் வெளியிடவில்லை; சாட்சாத் ஆனந்த விகடன் குழுமத்தின் தொப்புட் கொடியிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (17.8.2009) வெளியிட்ட தகவல்கள்தான் இவை!

கீழ்த் திருப்பதி ஸ்ரீகோதண்டராமர் சுவாமி கோவிலின் பிரதான அர்ச்சகர் மூலவரின் நகைகளை அடகு வைத்த குட்டும்கூட உடைபட்டதே!

தமிழ் ஓவியா said...

சினிமா நடிகரும் பிரஜாராஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான சிரஞ்சீவி சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர்களுடன் நடந்து சென்று கோவிந்தா கடவுளின் நகைகள் கோவிந்தா ஆகாமல் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் போட்டாரே!

தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும் திருப்பதி கோவில் விசாரணையை சி.பி.அய்.யிடம் விடவேண்டும் என்று சொன்னாரே!

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பெஜரிவாட கோபால் ரெட்டி திருப்பதி கோவில் நகைக் கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்ற யோசனை ஒன்றைத் தெரிவித்தார். அதற்காக சோழர், பல்லவர், கிருஷ்ணதேவராயர், விஜய நகர மன்னர் போன்றவர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளித்த உபயங்களின் விவரத்தைத் தெரிவிக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்துக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு போட்டார். அவற்றிற்குப் பதில் தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் பதில் எழுதியது. மன்னர் தன் ஆட்சிக் காலத்தில் ஏழுமுறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்துள்ளார்.

1513 பிப்ரவரி 10 அன்று இரு மனைவிகளுடன் (திருமலா தேவி, சின்னமா தேவி) வந்தவர் ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளித்தவை: நவரத்தின கிரீடம் ஒன்று, வெள்ளித் தட்டுகள் 25, தங்கக் கிண்ணங்கள் 2.

1513 மே 2 _ மற்றும் ஜூன் 13 அளித்த காணிக்கை: உற்சவருக்கு மூன்று தங்க மணிமகுடம்.

1514 ஜூலை 6 _ அளித்த காணிக்கை: 30 ஆயிரம் வராகன்களில் கனகாபிஷேகம்!
1515: ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட 621 தோரணம் காணிக்கை.

1518 செப்டம்பர் 9: கோவில் கருவறை விமானக் கோபுரத்தில் 30 ஆயிரம் வராகனில் தகடு பதிப்பித்தார்.

1521 பிப்ரவரி 17: நவரத்தினக் கிரீடம் சூட்டப்பட்டது. விலை மதிப்பில்லா வைரப் பீதாம்பரம் பக்தியின் பரிசு.

கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக்கொண்ட 500ஆவது ஆண்டினையொட்டி பெருவிழா எடுப்பது என்றும் அதுபொழுது மன்னன் கிருஷ்ணதேவராயன் ஏழுமலையானுக்கு அளித்த நகைகளைக் கண்காட்சியில் வைப்பது என்றும் தேவஸ்தானம் முடிவு செய்த நிலையில்தான் திடுக்கிட வைக்கும் கொள்ளைகள் அம்பலத்திற்கு வந்தன. அந்த நகைகளையெல்லாம் உருக்கி டாலர்களாக மாற்றி விற்றுவிட்டோம் என்று சொன்னார்களே பார்க்கலாம். (எல்லாம் டாலர் சேஷாத்திரிகளுக்குத்தான் வெளிச்சமோ வெளிச்சம்!)

இப்படி பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்தவற்றை யாரோ சில பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதற்குப் பதிலாக அவற்றை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தினால் என்ன? என்று கேள்வி கேட்டால் அடேயப்பா இந்தப் பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் போடும் கூக்குரல் இருக்கிறதே _- அது என்ன சாதாரணமா?

தமிழ் ஓவியா said...

திருப்பதி நாமக் கடவுளின் இருப்பு

நிலம் : ரூ.15,000 கோடி

கட்டடங்கள் : ரூ.1,500 கோடி

நகைகள் : ரூ.30,000 கோடி

நிதி : ரூ.20,000 கோடி

- இந்தியா டுடே 4.10.2006

2006இல் இந்த மதிப்பு என்றால் 2014இல் எத்தனை மடங்கு? கணக்குப் போட்டுப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல்!


நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே!
தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு
ஆசிரியர்: சு. அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம், சென்னை - 600 041.
செல்பேசி: 94442 65152 / 94442 44017
பக்கங்கள்: 256 விலை: ரூ.160/-

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு _ ஒரு புதிய நோக்கு என இந்த நூலைச் சொல்லலாம். திராவிடர் என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை தொடங்கும் முன் விளக்கும் நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டியலிடுகின்றார். தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை, மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில், திருமணம், நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.

வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படித் திருப்பம் அடைந்தது? என்பது குறித்தும் பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917இல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (றிக்ஷீவீஸீநீவீஜீறீமீ) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச் செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது நடைமுறைகளை, அணுகு முறைகளை, செயல்திட்டங்களை (றிஷீறீவீநீவீமீ) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கையாண்டார். சமூக நீதிக்காக- _ பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செயல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர -_ உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச் செல்வதற்காக மாற்றினாரே தவிர- _ அவர் மாறவே இல்லை! என நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக இந்த நூல் அமைந்துள்ளது.

திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து, தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான், இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால -_ மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார். ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை, குழப்புபவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோருக்கும் தருவதாக அமைந்துள்ளது.

- முனைவர் வா.நேரு

தமிழ் ஓவியா said...

நாத்திகர்களின் பரப்புரை எப்படி இருக்க வேண்டும்?


- எட்வர்ட் தபாஷ்

மத நம்பிக்கை, கோட்பாடு, பரப்புரை ஆகியவற்றுக்கு எதிராக நாத்திகர்கள் எந்த அளவுக்குக் கடுமையாக தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பது பற்றி, 2006ஆம் ஆண்டு தொடக்க நிலையில், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களுக்குள்ளேயே நடத்திக் கொள்ள ஆரம்பித்த விவாதம் விரைவில் வேகம் பெற்றது. நிதானத்தையும், மென்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டனர். அதாவது, கடவுள் நம்பிக்கைக்கு எதிராக கடுமையாகவும், தீவிரமாகவும் பேசுவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்ற கருத்தை ஜெஃப் வெளியிட்டதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். என்றாலும், அதற்குப் பின் வெளியிடப்பட்ட ரிச்சர்ட் டாக்கின்சின் `கடவுள் பொய் நம்பிக்கை (‘God Delusion’ of Richard Dawkins), டேனியல் டி. டென்னட்டின் மனமயக்கத்தைப் போக்குதல் (‘Breaking the spell’ of Daniel C. Dennett),கிறிஸ்டொஃபர் ஹிக்சன்சின் கடவுள் சிறப்பான ஆற்றலையோ, முக்கியத்துவத்தையோ பெற்றவரல்ல (‘Godis not great’),விக்டர் ஸ்டெஞ்சரின் மனித இனத்துக்கு நன்மை செய்யத் தவறிவிட்ட கடவுள்: உண்மையா என்றறியப்படாத கருதுகோள் (God: The failed Hypothesis) என்ற மாபெரும் நூல்கள் மனித இனத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை, பாதிப்பை நாம் நன்றாகவே கண்டிருக்கிறோம். இந்த நூல்கள் அனைத்தும் 2004இல் வெளிவந்த சாம் ஹாரிசின் நம்பிக்கையின் இறுதிக்காலம் (‘The End of Faith’ of Sam Harris) என்ற நூலின் வரிசையில் சேர்ந்து கொண்டு நாத்திகத்தைப் பற்றிய கொள்கை விளக்க அறிவிக்கைகளை வெளியிடும் குறிப்பிடத்தக்க, முக்கியம் வாய்ந்த நூல்களின் தொகுப்பாக விளங்கியதுடன், இதற்கு முன் எப்போதும் கண்டிராத அளவில் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்தன.

தமிழ் ஓவியா said...

நாத்திக வாதத்தின் குரலை ஒடுக்குவதற்கான காரணம் எதுவுமே இருக்க முடியாது என்பதே எனது கருத்து. இயற்கையை விஞ்சிய ஆற்றல் படைத்தவர் கடவுள் என்று மதங்கள் கூறுவதை எதிர்த்து இன்னமும் வேகம் நிறைந்த விவாதம் ஒன்றை ஆணித்தரமாகவும், வெளிப்படையாகவும் முன் வைப்பதை நான் ஆதரிக்கிறேன். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்களைப் போன்ற இலக்கியத்தினால் சமூகம் மேன்மையே அடையும். பொதுவாக இயற்கைக்கு மாறுபட்ட கருத்துகளுக்கும், இயற்கையை விஞ்சிய ஆற்றல் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்துக்கும் எதிரான வாதங்களைக் கேட்டறிவதன் மூலம் சமூகம் மேம்பாடே அடையும்.

உலகம் பற்றிய நமது கண்ணோட்டத்தைப் பொதுமக்களிடையே வெளிப்படையாகப் பரப்புரை செய்யும்போது, கடவுள் நம்பிக்கை யாளர்களைவிட நாத்திகர்கள் கடுமையாக இல்லாமல் மென்மையாக நடந்து கொள்வதே சரியான, பொருத்தமான, அடக்கமான நடைமுறையாக இருக்கும் என்று சோதனை செய்யப்படாத ஒரு ஊகத்தை தங்களை அறியாமலேயே ஏற்றுக் கொண்டு, தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளும் நாத்திகர்களை எதிர்மறையான விளைவுகளை உருவாக்குபவர்களாகவே நான் காண்கிறேன்.

மேலும், கடுமையான வாதங்களை முன் வைப்பதற்கு கொள்கை அளவில் மறுப்பேதும் தெரிவிக்காத மற்ற நாத்திகர்களும் உள்ளனர். என்றாலும், நல்ல உத்தி என்ற அடிப்படையில் இன்னமும் கட்டுப்பாடான ஒரு அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். தற்போது நாம் அழிக்க முற்பட்டிருக்கும் செல்வாக்கு மிகுந்த மதக் கலாச்சாரம் இன்னமும் எதிர்க்க இயலாத அளவு பலம் பொருந்தியதாக இருப்பதால், நமது முயற்சிகள் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவர். இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள நான் மறுக்கிறேன். மத நம்பிக்கையாளர்கள் செய்வதைப் போலவே, நமது உலகக் கண்ணோட்டத்தை உறுதிபடக் கூறிக்கொள்ளும் அதே உரிமையை நாம் பயன்படுத்துவதால், நாத்திகர்களை சமூகம் ஒப்பி ஏற்றுக் கொள்வதில்லை என்றால், சமூகத்தின் இந்தப் புறக்கணிப்பே, நாம் போராடி ஒழிக்கப்படவேண்டிய ஒரு வகையான சமூக அடக்குமுறையாக இருப்பதாகும் என்று என்னாலும் வாதாட முடியும்.

நமது கருத்துகளை வெளிப்படுத்துவதில் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதைத் தொடர்வோமேயானால், நாத்திகக் கருத்துகளை ஏற்றுக் கொள்வதற்கான சமூகச் சூழல் தானாகவே மேம்பட்டுவிடாது. மத நம்பிக்கைகளில் இருந்து மாறுபடும் நமது கருத்தினை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள இயன்ற வகையில் அவர்களிடம் நாத்திகர்களாகிய நாம்தான் கொண்டு சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால், நமது கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் ஓர் இணக்கமான சூழலை உருவாக்கவோ அல்லது நமது கருத்துகளை வெளிப்படுத்தும்போது அவற்றைப் பகை உணர்வுடன் தற்போது நம்பிக்கையாளர்கள் பார்ப்பது குறையவோ எள்ளளவும் வாய்ப்பிருக்கப் போவதில்லை.

தமிழ் ஓவியா said...


இவற்றில் எதுவுமே மத நம்பிக்கையாளர்களை இழிவுபடுத்துவதாக ஆகாது. இயற்கையை விஞ்சிய ஆற்றல் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தே தவறானது என்று ஏன் நாம் நம்புகிறோம் என்பதற்கான காரணங்களை வெளிப்படுத்தும்போது, நமது உணர்வுகளை, எண்ணங்களை நாம் மறைத்துக் கொள்ளத் தேவையில்லை.

மதநம்பிக்கையும், நம்பிக்கை யாளர்களும் உருவாக்கும் பகை மற்றும் எதிர்ப்பு உணர்வு ஆபத்து அற்றதல்ல

இதனைப் பற்றி இப்போது நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். பொதுமக்களிடையே நாத்திகக் கருத்துகளைப் பரப்பும் செயலை மேற்கொள்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? உண்மையைக் கூறுவதானால், இதற்குப் பல காரணங்கள் உள்ளன:

1. நாத்திகர்கள் மீது மக்களில் பலர் காட்டும் பகை உணர்வு ஒன்றே அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உணர்ச்சியின் ஓர் அடையாளமாகும். இத்தகைய மோசமான பிற்போக்குத்தனமான, முதிர்ச்சி அற்ற வெறுப்புணர்வை மனித சமூகம் கைவிடவேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். உலகத்தை யாரோ கடவுள் உருவாக்கினார் என்று பார்க்காமல் உலகம், இயற்கையாக தானாகவே உருவானது என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்களை மக்கள் இன்னமும் நம்பாமல் இருக்கும் ஒரு சமூகம், எந்த ஒரு முடிவுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் ஆதாரங்களைத் தேடித் தொடரும் துணிவு உள்ளவர்களைப் பாராட்ட மறுக்கும் ஒரு சமூகம், அறிவார்ந்த - ஆரோக்கியமான சமூகமாக இருக்காது.

2

தமிழ் ஓவியா said...

. இந்த உலகை இயங்கச் செய்யும் அறிவார்ந்த ஒரு கடவுள் இல்லாத, ஒரு முடிந்து போன இயல்பியல் நடைமுறையே இந்த பிரபஞ்சம் என்றால், (இந்த உண்மையை எடுத்துக்காட்டும் ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்) இந்த உண்மை நிலை அனைத்துப் பொதுமக்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.

3. இயற்கையை விஞ்சிய ஒரு கடவுளால் கட்டளையிடப்பட்டதில்தான் மனித இனத்தின் ஒழுக்கமே அடங்கி இருக்கிறது என்று நமது சமூகத்தில் பரவி நிற்கும் கருத்து மிகமிகத் தவறான, மோசமான, தீவிரமாகவும் கடுமையாகவும் எதிர்க்கப்படவேண்டிய கருத்தாகும்.

4. வரலாற்றுப் பூர்வமாக, தீங்கு விளைவிக்காத, கருணை உணர்வு நிறைந்த புராணக் கதைத் தொகுப்பை வழிபடுவதாக மட்டுமே மதங்கள் இருக்கவில்லை. மனிதர்கள் இறந்தபிறகு அவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதுபற்றிக் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகளினால், கடந்த பல நூற்றாண்டு காலத்தில் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

5. பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நாமறிந்திருக்கும் பல சமூகங்களிலும், இதற்கான காரணம் மதமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

6. ஓரினப் பால் கவர்ச்சி கொண்ட மனிதர்களும், அத்தகைய உணர்வுகளைக் கொண்டிருப்பதற்கு, மற்ற மக்களைப் போன்ற உரிமைகளைச் சமமாகப் பெற்றுள்ளனர் என்ற கருத்து மீதான எதிர்ப்பும் மத மூடநம்பிக்கையில் இருந்து எழுந்ததேயாகும்.

7

தமிழ் ஓவியா said...

. 1960ஆம் ஆண்டிலிருந்து அதிக அளவிலான பாலியல் சுதந்திரத்தை மக்கள் கேட்கத் தொடங்கியபோது, அத்தகைய சுதந்திரத்திற்கான எதிர்ப்பு மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது.
8. 19ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய நாள்வரை, மனித குலத்துக்கு மிகவும் இன்றியாமையாத தேவையான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மதங்கள்தான் பெருந்தடையாக இருந்து வந்துள்ளன.

9. இறுதியாக, கடந்த பல பத்தாண்டு காலத்தில், அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரப்புரை செய்து வரும் மத போதகர்கள், மக்களுக்கு மோட்சத்தை அளிப்பதாகக் கூறிக்கொண்டு, தங்களின் பைகளைப் பெரும் பணம் கொண்டு நிரப்பி வந்துள்ளனர். தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொண்டது மட்டுமன்றி, தங்களைப் பின்பற்றும் பக்தர்களைக் கொண்டு, மற்ற மக்கள் அனைவரும் பாவங்கள் செய்து உழல்கின்றனர் என்று கண்டிக்கச் செய்வதன் மூலம், மக்களின் ஒழுக்க நெறி கண்காணிப்பாளர்களாகவும் தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டார்கள். இவற்றிலிருந்து, வரலாற்றுக் காலம் முழுவதிலும் கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு மனித குலத்திற்கு அழிவைத் தேடித் தந்துள்ளது என்பதையும், எந்த அளவுக்கு அது தொடர்ந்து அழிவைத் தேடித் தந்து கொண்டிருக்கிறது என்பதையும் எளிதாகக் காணலாம்.

மனித இனத்தின் மீதான மதத்தின் இறுக்கமான பிடி தானாக தளர்ந்துவிடாது

நாத்திகக் கொள்கைகளை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்துக்கான காரணங்களை இங்கு அளித்த பிறகு, இதற்கு ஒரு கடுமையான, தீவிரமான, உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் தேவை என்ன என்பதைப் பற்றி சிலவற்றைக் கூற நான் விரும்புகிறேன். ஆற்றல் நிறைந்த ஒரு மாற்று இயக்கம் இல்லாமல் போனால், சமூக ஒழுக்க நெறிக் கோட்பாட்டின் மீது மதம் கொண்டிருக்கும் இறுக்கமான பிடியை அது தானாகவே ஒரு போதும் தளர்த்திக் கொள்ளாது.

நடந்து முடிந்த விளையாட்டுப் போட்டிகளில் தாங்கள் மிகவும் திறமையாக விளையாடி வெற்றி பெற்றதற்கு கடவுளின் அருளைக் காரணம் காட்டும் விளையாட்டு வீரராகட்டும், அல்லது விமான விபத்தில் தான் மட்டுமே கடவுளின் அருளால் உயிர் தப்பியதாகக் கூறிக் கொள்ளும் பயணியாகட்டும், இவ்வாறு கூறுவது தன்னைத் தவிர மற்ற பயணிகள் அனைவரும் விபத்தில் இறந்து போகவேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்று பொருள் தரும் என்பதை முற்றிலுமாக கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அவர்களின் கூற்றினை அப்படியே ஏற்றுக் கொள்வது ஒழுக்க நெறிப்படி பாராட்டப்பட வேண்டியதே என்று பொதுவாகவே சமூகம் கருதுகிறது. ஆனால், தக்க ஆதாரங்களையும், காரண காரியங்களையும் கொண்டு கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்ற சுதந்திரமான முடிவுக்கு வருவது ஒழுக்கநெறிப்படி தவறானது என்று கருதப்படுகிறது. பகுத்தறிவுச் சிந்தனை நிலை பெறவேண்டிய தேவைக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.

கடவுள் நம்பிக்கையைப் பற்றி, சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் நாத்திகர்களாகிய நாம் என்ன சொல்லவேண்டும், என்ன சொல்லக்கூடாது என்பதைத் தீர்மானிக்க கடவுள் நம்பிக்கையாளர்களை நாம் அனுமதிப்பது, கோழிக்கூண்டுக்கு நரியைக் காவல் வைப்பது போன்றதாகும். நாத்திகர்களின் மனம் புண்படாத வகையில் அவர்களது கருத்துகள் பற்றி மதப் பிரச்சாரகர்கள் எவரும் மென்மையாக, வெறுப்போ கோபமோ இல்லாமல், பேசி நான் கேட்டதில்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரான தங்களது கருத்தினை நாத்திகர்கள் வெளிப்படுத்துவதில் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, ஒரு சமூகத்தின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கைகளை மாற்றுவதிலோ, சீர்திருத்துவதிலோ அல்லது தங்கள் நம்பிக்கையிலிருந்து மாறுபட்டுள்ள மக்களின் மீதான நம்பிக்கையாளர்களின் பகை உணர்வைக் குறைப்பதிலோ எந்த ஓர் இயக்கமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற்றதேயில்லை.

- நாத்திக நெத்தியடி அடுத்த இதழிலும் தொடரும்...

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

மருத்துவ வசதியற்ற குஜராத்


கலை, நிச்சயம் மனிதனைச் சாந்தப்படுத்தக் கூடியது; சந்தோசமளிக்கக் கூடியது. மறுக்கவில்லை. ஆனால், சினிமாவுக்கு மட்டும் ஏன் நம் நாடு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாம் விவாதிக்க எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் காத்துக்கிடக்க, அமீர் கானா, ஷாரூக் கானா, சல்மான் கானா... இந்த மூன்று கான்களில் யார் சிறந்தவர்? என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறோமே... ஏன்? நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்!

குஜராத்தில், புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன; நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்; கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இவற்றை மட்டும் வைத்து அளவிட முடியாது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்து போகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும் அது கேரளா, தமிழ்நாடு... ஏன் இமாச்சலப் பிரதேசத்தைவிடவும் பின்தங்கித்தான் இருக்கிறது.

மோடி, பிரதமரானால் சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அத்தகைய ஒருவர், நாட்டின் பிரதமராக வருவதை நான் ஏற்க மாட்டேன்!

--- அமர்த்தியா சென்,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

மும்பையில் மூடநம்பிக்கையின் உச்சநிலை

உலகத்தின் மிக அதிகமான செலவில் கட்டப்பட்ட வீடு, பயன்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி கட்டியுள்ள அந்த வீட்டில் குடியேறினால் அவர்களுக்குக் கெடுதல் வரக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

27 மாடிகளைக் கொண்டு பலநூறு கோடிகளை முழுங்கியுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அன்டில்லா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சீனத்து ஃடெங் சூயி என்று சொல்லப்படும் மனையடி சாத்திரம் போன்றுள்ள இந்திய வாஸ்து சாத்திரத்தின்படி அந்தக் கட்டிடம் அமையவில்லையாம்.

சென்ற ஆண்டு நிறைவெய்திய அந்த வீடு மும்பையில் விண்ணை முட்டி நிற்கும் அளவிற்கு ஆக்கிரமித்து அழகு செய்கிறது. 29 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்த வீடு, உலகின் ஒன்பதாவது பணக்காரர் என்று ஃபோபர்ஸ் பத்திரிகையால் கணிக்கப்பட்ட, இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியால் கட்டப்பட்டதாகும்.

ஆடம்பரம் நிறைந்த அந்தப் புது வீட்டில் அம்பானியும் அவரது மனைவி நீடாவும் இரண்டு குழந்தைகளும் ஏன் இன்னும் குடியேறவில்லை என்பது பற்றி பல யூகங்கள் முளைத்து வந்துள்ளன.

அந்த ஆடம்பர சொகுசு மனையில் ஹெலிகாப்டர்கள் இறங்கக்கூடிய மூன்று தளங்களும் ஆறு மாடிகளில் கார் நிறுத்தும் வசதிகளும் பல நகரும் தோட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

வாஸ்து சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள இந்தியக் கட்டுமான வழிகாட்டுதல்களை மீறி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக அம்பானி குடும்பத்தினர் கருதுவதால், அந்த வீட்டில் குடிபுகுந்தால் அவர்கள் அதிர்ஷ்டம் (நல்வாய்ப்பு) சாபத்திற்கு ஆளாகும் என அஞ்சிக் குடிபுக மறுப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

வரலாற்றுத் தீர்ப்பு மூவரை விடுவிக்கட்டும்


இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் (பிலேந்திரன், சைமன், மீசை மாதய்யா, ஞானப்பிரகாசம்) உள்பட, இந்தியா முழுவதிலும் உள்ள மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 21.1.2014 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ப.சதாசிவம் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த மனிதாபிமானத் தீர்ப்பு, நீதி தவறாது குற்றவாளிகளுக்கு மறுக்கப்பட்ட நியாயம் - _ நீதி மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்க தீர்ப்பு என்பதால், தலைமை நீதிபதி மனிதநேயர் ஜஸ்டீஸ் ப.சதாசிவம் அவர்களையும், அவரது அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகளையும் உளம் உவந்து பாராட்டி மகிழ்கிறோம்!

இந்த நாகரிக யுகத்தில் மரண தண்டனை நீடிப்பதே ஒரு காட்டுமிராண்டி கால சிந்தனையாகும். அது நீடிக்கக் கூடாது என்பதே உலகின் பெரும்பாலான மக்களின், நாடுகளின் மனிதப் பற்றாளர்களின் மகத்தான கருத்தாகும்.

ஏனோ, இதில் இந்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது? நமக்கே புரியவில்லை!

கைக்குக் கை, காலுக்குக் கால், உயிருக்கு உயிர் என்ற(Code of Hammurabi ) அமுராபி அரசரின் சட்டம் இன்றைய நிலையில், நயத்தக்க நாகரிகம் உடையவர்களால் ஏற்கப்படத்தக்கதல்ல.

தமிழ் ஓவியா said...

தண்டனைகள், மனிதர்கள் மேலும் கொடூரமான குற்றவாளிகளாக சமூகத்தில் மாறும் வகையில் அமையாமல், திருந்தும் வகையிலேயே அமைய வேண்டும் என்பதே நமது கருத்தாகும். அது ஒருபுறமிருக்கட்டும்!

கருணை காட்ட மனு போடும் உரிமை _- சட்டப்படி தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட கைதிகளின் உரிமையாகும்.

அதனை உண்டு, இல்லை என்று மத்திய அரசு பரிசீலித்து உடன் பதில் அளிக்காமல், 9 ஆண்டுகள் கிடப்பில் போட்டு, 2013 ஆம் ஆண்டிலா நிராகரிப்பது? மன இறுக்கம், மன உளைச்சல், மனச் சிதைவுக்கு இட்டுச் செல்லுகிறதே! கைதிகள் சிலரை மனநோயாளிகளாகவே ஆக்கிவிட்டதே! இதைவிட மனித உரிமைப் பறிப்பு வேறு உண்டா? மற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரும் போட்ட கருணை மனு 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டது கொடுமையல்லவா?

மேலும் இரண்டாண்டுகள் என்றால், 13 ஆண்டுகளில் அவர்களது மனநிலை எப்படிப்பட்ட அவலம், வேதனை, உறுத்தல், விரக்தி இவைகளுக்கு ஆளாகியிருக்கக்கூடும்.

இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, மிகுந்த மனித நேயத்துடன், தாமதிக்கப்பட்ட நீதி இறுதிவரை மறுக்கப்பட்ட நீதியாகவே அமைந்துவிடக்கூடாது என்ற நீதி பரிபாலனக் கண்ணோட்டத்தில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ப.சதாசிவம் அவர்களும், சக நீதிபதிகளும் சட்டத்தின் மரியாதையை, இதன்மூலம் காப்பாற்றியுள்ளார்கள்; இது ஏதோ மனிதாபிமானத்தை மட்டும் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பாக யாரும் விமர்சிக்க முடியாது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

1. கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்துவது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு அடித்தளமாக அமையும்.

2. மரண தண்டனைக் கைதிகளுக்கு சட்ட உதவி கிடைக்க, சிறைத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. ஒரு கைதியின் (மரண தண்டனை பெற்ற கைதி) கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்பட்டால், அந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்குக் கண்டிப்பாக தெரிவிக்கப்படல் வேண்டும்.

4. தண்டனையை நிறைவேற்றும்முன் அந்தக் கைதி தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்.

5. மரண தண்டனைக் கைதி உள்பட யாராக இருந்தாலும், தனிச் சிறையில் அடைத்து வைப்பது சட்ட விரோதம். சிறைகளில் அந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பது கூடாது.

6. மனச் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளானால் அவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது.

மிக வரலாற்றுப் பெருமையும், மிகச் சிறந்த மனித நேயமும் ஒளிரும் மிக எடுத்துக்காட்டான நெறிமுறைகளைக் கொண்ட இத்தீர்ப்பின் அடிப்படையில் உள்ள சிறை நடைமுறைகள் திருத்தப்படுதல் அவசியம், அவசரம்!

இதே அடிப்படையும், அதற்கு மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் போன்றவர்களின் விசாரணை அதிகாரிகளின் மனந்திறந்த பேட்டிகளுக்குப் பிறகு, மறுஆய்வுக்கு உரியவையே!

உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகள் அவர்களுக்கும் திறவுகோலாக அமையும் என்று நாடே எதிர்பார்க்கிறது!

ஏற்கெனவே அவர்கள் ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளின் வழமையான அத்தண்டனைக் காலத்திற்குமேல் சிறை வாழ்க்கையைக் கழித்துவிட்டவர்களானபடியால், அவர்களின் விடுதலை இன்றியமையாதது! இது சட்டப்படியும், மனிதாபிமானப்படியும் சரி என்பதால், இந்தப் புதிய வெளிச்சத்தின்மூலம், சட்ட இருட்டறையில் இருந்து அவர்கள் வெளியே வந்து வாழட்டும்!

பத்துக் குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை என்பதால், பேரறிவாளன் உள்பட மற்றவர்களும் வெளியே வருவது அவசியமாகும்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள்தான்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

_ (விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/74662.html#ixzz2sOeKt4Jf

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, பிப். 4- ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் பழனிமுத்து, ஏ.ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப் பதாவது:

தேசியக் கல்வி ஆணைய விதி முறைப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும். தமிழக அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை இடஒதுக்கீடு அடிப்படையின் கீழ் தமிழக அரசு அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக் கிறது, இருந்தாலும் தேசியக் கல்வி ஆணைய விதிமுறை முழுவதுமாக அமுல்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞர்கள் பழனி முத்து, ரமேஷ் ஆகியோர் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/74671.html#ixzz2sOf0JiY0

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வு:
முதலமைச்சர் அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சி ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்குக் கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பேசுகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் டெட் என்னும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்க வேண் டும் என்று 15.11.2011இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 181இல் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் 2012, 2013 ஆண்டுகளில் டெட் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

நேற்று (3.2.2014) தமிழக முதல மைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவித்து பேசுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கும் 5 மதிப்பெண் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள் ளார். இதனை மாற்றி பட்டியலின மக்களுக்கு 40 மதிப்பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 45 மதிப்பெண்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 மதிப்பெண்கள் என்று திருத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. 2013 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய வர்கள் மட்டுமின்றி 2012 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்துவதாக அறிவிக்க வேண்டும். என்று மனித நேய மக்கள் கட்சி கோருகின்றது.

Read more: http://viduthalai.in/page-2/74671.html#ixzz2sOf8XzX6

தமிழ் ஓவியா said...


ஒற்றைப் பத்தி பற்றி


ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஒற்றைப் பத்தி பற்றி

30.1.2014 ஆம் நாளில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப் பாகும் பேராசிரியர் சுப.வீரபண்டியன் உரையாற்றும் நிகழ்ச்சியான ஒன்றே செய் நன்றே செய் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் ஒற்றைப் பத்தி எனும் தொகுப்பு வெளியீட்டின் சிறப்புகளைப் பற்றிய 2, 3 கருத்துக்களை மேற்கோள் காட்டிப் பாராட்டினார்.

இந்திய ராணுவ தளபதி பத்மநாபன் அவர்கள் இராகுகாலம் பார்த்த நிகழ்வுக்கு கவிஞர் அவர்கள் எடுத்துக் காட்டியுரைத்த கேள்வி என்னை மிகவும் நெகிழ வைத்தது. மெல்ல எறிந்து கடிதோச்சலாக இதை கொள்ளலாம்.

அதேபோல் நாள்தோறும் விடுதலை இதழ் அஞ்சலில் வத்தவுடன் ஒற்றைப் பத்தியைப் படிக்கத் தவறுவதேயில்லை. இதே இராகு வேளை செய்தியை இந்திய நாடு சுதந்திரம் வந்த புதிதில் நேரு அவர்கள் எப்படி கையாண்டார் என்பதை நினைக்கும் போது நேரு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கையை பாராட்டத் தோன்றுகிறது. இந்திய நாடு முதல் முதல் தயாரித்த கப்பலின் பெயர் ஜலஉஷா என்பது அதை கடலில் மிதக்க விடும் நிகழ்ச்சி விசாகப்பட்டினம் கப்பல் தளத்தில் நேரு அவர்களால் மிதக்கவிடப்பட ஏற்பாடு. ஏற்பாட்டாளர்கள் விழாவினை துவக்காமல் மெத்தனம் காட்டுவதாக நேருவுக்கும் படுகிறது. ஏன் தாமதம் என அருகிலிருப்பவரை கேட்கிறார். அவர்கள் மெல்லிய குரலில் இராகுவேளை தீரட்டும் என்று காத்து இருக்கிறார்கள் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றார்கள். ஆனால் நேருவோ நல்ல பணிகள் செய்வதற்கு இராகு வேளை குறுக்கிடுமா னால் அந்த இராகு வேளையையே தள்ளுங்கள் என்று கூறி கப்பலை மிதக்க விடுகிறார்.

ஆனால் விண்வெளிக்கு அனுப்பும் ஏவுகணைகளை சந்திராயன் ஆகியவற்றை அனுப்ப திருப்பதி கோயிலுக்கு மட்டும் போனால் சைவர்கள் கேள்வி கேட்க கூடும் என்ற காரணத்தால் காளஹஸ்தி கோயிலுக் கும் போய் அர்ச்சனை செய்கிறார்கள்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் இந்துமதச் சார்பான கோயில்களுக்கு மட்டும் ஏன் போக வேண்டும்? நாம் தர்காவுக்கும், வேளாங்கண்ணி கோவிலுக்கும் போகாதது ஏன் என்று கேள்வியும் எழுந்தால் பதில் என்னவாக இருக்கும்?.

இதுபோல் தான் அப்போது எல்லாம் பள்ளிகளிலும், அரசு நிகழ்ச்சியிலும் கடவுள் வணக்கம் என்று பாடுவார்கள். பாடுபவர் தன்னுடைய சார்பு கடவுளைப் பற்றி தான் பாடுவது வழக்கமாக இருந்த நிலை. இது பலருக்கும் சரியாகப் படாத காரணத்தால் தான். கலைஞர் அவர்கள் இறை வணக்கம் என்பதையே மாற்றி தமிழ்த் தாய் வாழ்த்து என்று நீராரும் கடலுடுத்த என்ற அற்புதமான திராவிட என்ற சொல் இடையில் வரும்படியான பாடலைத் தேர்வு செய்து ஆணை பிறப்பித்தார் ஆக மொழி வாழ்த்தலும் கூட நாட்டு வாழ்த்தான ஜனகனமன பாடலில் வரும் திராவிட என்ற சொல்லை அழுத்தம் தரும் வண் ணம் ஆணையிட்ட கலைஞரின் ஆட் சியை இந்த சந்தர்ப்பத்தில் மனதில் நினைத்து மகிழ்வுறும்போது, இன்று நடப் பதைப் பார்த்து................. - வேலை.பொற்கோவன்

Read more: http://viduthalai.in/page-2/74675.html#ixzz2sOfKK2Zi

தமிழ் ஓவியா said...


புறப்படுகிறார்கள் கோயபெல்சுகள் உஷார்!

இணைய தளத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கை அதி கரிக்கச் செய்ய புதிய திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட விருக்கின்றனர். இதற் கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென் னையில் நடத்தப்பட் டுள்ளது. தொழில் நுட்பப் பொறியாளர் கள் 350 பேர் கூட்டப் பட்டுள்ளார்கள். பி.ஜே. பி.யின் சென்னைத் தலைமை அலுவலகத் தில் இதற்காகத் தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.

சுருக்கமாகச் சொல் லப்போனால், புளுகு களைக் கட்டவிழ்த்து விட கோயபல்சுகள் திட்டம் தீட்டிவிட்ட னர் என்றே கருதவேண் டும்.

இதற்கு முன்பேகூட இணைய தளத்தில் மோடியுடன் தொடர்பில் உள்ளவர்கள் 19 லட்சம் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

இந்தியாவின் முன் னணி செய்தித் தொலைக் காட்சி நிறுவனமான ஹெட் லைன்ஸ் டுடே - மோடியின் டுவிட்டர் சமூக வலை தளக் கணக் கில் இணைந்துள்ளவர் களில் 70 சதவிகிதப் பெயர்கள் போலியானவை என்று அம்பலப்படுத்தி விட்டதே!

2013 ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் வெள்ள அபாயத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை வெள்ளத் திலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றிவிட் டார் என்று கிளப்பி விடவில்லையா?

இராணுவத்தினரே மீட்புப் பணியில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந் தித்த நிலையில், 80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தி 15 ஆயிரம் பேர்களை மோடி காப் பாற்றினாராம், நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடி கிறது!

அதிகபட்சமாகப் போனால், ஓர் இன் னோவா காரில் 7 பேர் களை ஏற்றலாம்; வேண்டு மானால், இரண்டு பேர் களை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர் களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15 ஆயி ரம் பேர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே கொண்டு போகவும், வரவும் 21 தடவைகள் பயணிக்கவேண்டும்.

கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரமாகும். 21 முறை என்று கணக்கிடும் பொழுது ஒவ்வொரு காரும் சுமார் 9300 கிலோ மீட்டர் பயணிக்கவேண் டும், அதுவும் மலைப் பகுதிகளில்.

சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் கூட 233 மணிநேரம் பயணம் செய்யவேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான அள வில் அல்லாடிக் கொண் டிருக்கும் மக்களில் குஜ ராத் மக்களை அடை யாளம் கண்டு, தேடிக் கண்டுபிடித்துப் பத்திர மாகக் கொண்டு வந்து சேர்த்தாராம், மற்ற மாநில மக்களைப் பார்த்து எப் படியோ தொலைந்து போங்கள் என்று சொல்லி அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டாரா மோடி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) அம்பலப்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். ஒரே நாளில் 15,000 பேர் களை மீட்டதாகக் கூறு வது அண்டப் புளுகு ஆகாயப் புளுகுதானே!

இப்பொழுது இளைஞர்களை மயக்க, ஈர்க்க இணையதளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்; அதற்காகக் கைதேர்ந்தவர்களை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறார்கள்.

சீனாவில், குவாங்ஜோ என்னும் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தாக இணைய தளத்தில் வெளியிட்ட கோயபல்சு கள் வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட் டனர்!

உஷார்!! உஷார்!!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74713.html#ixzz2sUm2V3Ab

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொலை யுண்டதை அடுத்து அதில் ஆர்.எஸ்.எஸ் நேரடித் தொடர்பு இருப்பது நிரு பணமானது இதனை அடுத்து உள்துறை அமைச்சர் சர் தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்த நாள், இந்நாள்! (1948)

Read more: http://viduthalai.in/e-paper/74698.html#ixzz2sUmC4RZ4

தமிழ் ஓவியா said...


ஆட்சியின் சீர்திருத்தம்



ஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதியின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான்.

- (விடுதலை, 24.1.1969)

Read more: http://viduthalai.in/page-2/74716.html#ixzz2sUmZSjoT

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்தை நடத்தவிடுக!


இன்று (5.2.2014) நாடாளுமன்றம் கூடுகிறது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் இது. 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்து நாடாளுமன்றம் கூடும். இன்று கூடும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் - நிறைவேறவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துகளை எடுத்து வைக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அதற்கு மாறாக தங்களுக்கு மாறுபாடானது என்பதற்காகவோ, உகந்ததாக இல்லை என்பதற்காகவோ நாடாளுமன்றத் தையே நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவது ஜன நாயகப் பண்பிற்கு உகந்ததல்ல. பல கூட்டத் தொடர்கள் முற்றிலும் முடக்கப்பட்ட மோசமான நிலைகள் எல்லாம் உண்டு. நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எடுத்துக் கூறுவதற்கான மன்றம் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றம் முடக்கப்படுவதால், பொன்னான நேரம் மட்டுமல்ல, மக்கள் பணமும் விரயமாக்கப்படுகிறது என்பதையும் புறந்தள்ளக்கூடாது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் இந்த இறுதிக் கூட்டத் தில் பல முக்கியமான பிரச்சினைகள் பேசப்பட்டாக வேண்டும்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

1. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்

2. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு

3. ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவர விருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதோடு இந்தியாவே தனியொரு தீர்மானத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதுபற்றி முடிவு செய்தல்

4. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படுவதற்கு நிரந்தர முடிவு

5. கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அடிப்படை உரிமைக்கான உத்தரவாதம்

6. தனித் தெலங்கானா பிரச்சினை

7. உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு என் பதற்கான சட்டத் திருத்தம் என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இதில் பெரும்பாலானவை பெரும்பான்மையான கட்சி களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். இதில் உடன்பாடில் லாத கட்சிகள் விவாதங்களை முன்வைத்து வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கலாமே தவிர, நாடாளுமன்றத்தையே முடக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப் படுகின்றன. வாக்களிக்கும் வெகுமக்களும் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவுதான் ரகளைகள் நடந்தாலும், பேரவைத் தலைவராக இருக்கக் கூடியவர்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. உறுப்பினர் களை வெளியேற்றுவதில்லை; தொடர் முழுவதும் அவைக்கு வரக்கூடாது (Suspension)என்று கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் சர்வசாதாரண மாகக் காணப்படும் ஒரு மாநில சட்டமன்றம் உண்டு என்றால், அது தமிழ்நாட்டுச் சட்டமன்றம்தான் - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்போதுதான்.

ஆளும் கட்சியைப்பற்றி ஒரு வார்த்தை குறை கூறினால்கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மனநிலை ஆளும் கட்சியிடம் இருப்பதை அனேகமாக நாட்டு மக்கள் பெரும்பாலும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கை அளவுக்குச் செல்லாவிட்டாலும், அளவுக்கு மீறி, அவையையே நடத்த முடியாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்மீது குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட தனது அதி காரத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் பயன்படுத்துவதுபற்றி யோசிக்கலாமே!

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளை நம்பி, மக்களவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தாலும், அமளி என்பது அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களிடத்திலேயே ஒழுங்கு, கட்டுப் பாடு இல்லையென்றால், பொதுமக்களிடம் அவற்றை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/74718.html#ixzz2sUmhswuc

தமிழ் ஓவியா said...


தினமலருக்குப் பதிலடி

சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா? அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா? கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா? இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார் அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.

வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.

குறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.

பாமரன், எழுத்தாளர்
(தினமலர், 5.2.2014, பக். 4)

Read more: http://viduthalai.in/page-4/74732.html#ixzz2sUoAf6sO

தமிழ் ஓவியா said...


வீரமா முனிவர் (1680-1747)


இத்தாலி நாட்டுக்கா ரர்- இயற்பெயர் கொன்ஸ் டான் டைன்; ஜோசப் பெஸ்கி பாதிரியார் என் றும் அழைக்கப்படுவார். கொன்ஸ்டான்ஸ் என் றால் தைரியசாலி என்று பொருள் - பின்னர் வீரமா முனிவர் என்று தனித் தமிழ் ஆயிற்று.

1710இல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் மொழி பயின்றார் - இலக்கிய இலக்கண நூல் களைப் பழுதறப் பயின் றார். இவர் படைப்புகளுள் இறவாப் புகழப் பெற்றது சதுர் அகராதியாகும். நான்கு வகைப்பட்ட அக ராதி என்று இதற்குப் பொருள்.

1) பெயர் அகராதி 2) பொருள் அகராதி 3) தொகை அகராதி 4) தொடை அகராதி ஆகும்.

தமிழில் தோன்றிய முதல் அகர முதலி இதுவே யாகும். அவரின் பரமார்த்த குருவின் கதைகள் - தமிழுலகிற்குக் கிடைத்த நகைச்சுவை மணம் வீசும் இலக்கியக் கருவூலமா கும். மதத்தைப் பரப்ப வந்தவர் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தார். தனது மேலை நாட்டுத் தோற்றத்தைக் தூக்கி எறிந்து தமிழ்ப் பண்பாட் டுக்கு ஏற்ப நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டார்.

இவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதிய முத்துசாமிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் (1822). நெற்றியில் சந் தனம், தலையில் பட்டுக் குல்லா, இடுப்பில் காவி திருநெல்வேலி கம்பிச் சேர்மன் போர்வையைத் தலையிலிருந்து தோள் வழியாக உடலை மூடிய படி பாதக்குறடு அணிந்து நடமாடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அறத் துப்பாலையும், பொருட் பாலையும் இலத்தின் மொழிக்குக் கொண்டு சென்றார்.

திராவிட மொழியியல், அறிஞர்களுள் முதன்மை யானவர் வீரமா முனி வரே என்று ஆய்வாளர் கமில் சுவலபில் கணித்துக் கூறுகிறார்.

கிறித்தவர்கள் வெளி நாடுகளில் இருந்து மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்ததுண்டு. அத்தோடு கல்வி, மருத்துவம் இவை இந்தி யாவுக்குக் கிடைப் பதில் அவர்களின் பங்க ளிப்பை உதறித் தள்ளி விட முடியாது.

அதிலும் சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்ததில் வீரமா முனிவர், கால்டுவெல் போன்றவர் களின் அருந்தொண்டுகள் அருந்தமிழ் வாழு மட்டும் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க வீரமா முனிவர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74651.html#ixzz2sUoVZbOf