Search This Blog

21.2.14

தூக்குத் தண்டனையைத் தூக்கிடுக!



2011 நவம்பரில் டில்லியில்  நடைபெற்ற தூக்குத் தண்டனைபற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி முக்கியமான சில கருத்துக்களை எடுத்துரைத்தார்.

நமது சட்டத்தில் தூக்குத் தண்டனைக்கு இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தன மானது; வாழும் உரிமைக்கு எதிரானது; ஜனநாயக விரோதமானது; பொறுப்பற்றது. வெற்று அனுமானங் களால் ஒருவருக்கு நமது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விட்டது. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையை பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சட்டத்தை உருவாக்கிய அந்தக் கால கட்டத்தில் கூறிய கருத்து முக்கியமானதாகும். சாதாரண மக்கள் இயல்பாக அகிம்சையைப் பின்பற்றப் போவதில்லை என்றாலும், அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை இயன்ற வரைக் கடைப்பிடிக்கவே செய்கிறார்கள். இதை மனதில் வைத்துத்தான் மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதே இந்தியா எடுக்கும் சரியான  முடிவாக இருக்கும் என்று சட்டத்தை உருவாக்கிய முக்கிய சிற்பியே கூறுகிறார் என்றால்; 60 ஆண்டுகளுக்குப்பிறகும், இதில் இந்தியா முடிவு எடுக்கத் தயங்குவது ஏன்?

காந்தியார் அவர்களை மகாத்மா என்று ஒப்புக் கொள்ளும் தேசியவாதிகள் இந்தப் பிரச்சினையில் காந்தியார் அவர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொண்டு அந்தத் திசையில் சிந்திக்கக் கூடாதா?

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற நீதி முறை பாபிலோனியா மன்னன் ஹமுராபியின் காலத்துச் சட்டம்; பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண், உயிருக்கு உயிர் என்பது பழங்காலத்தைச் சார்ந்த தாகும். நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத் தில் பல்லுக்குப் பல் என்ற வாதம் கேலிக் கூத்தாகும். கண்ணுக்குக் கண் என்ற தண்டனை இருந்தால் உலகில் கண் பார்வையற்றவர்கள்தான் இருப் பார்கள் என்றாரே காந்தியார்.

உலகில் இன்று பெரும்பாலான நாடுகளிலும் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டதே! தூக்குத் தண் டனையைச் சட்டத்தில் வைத்துக் கொண்டு இருக்கும் நாடுகள்கூட அதனைப் பெரும்பாலும் செயல்படுத்துவது கிடையாது என்பதுதான் உண்மை.

அய்.நா.வில் 2007இல் மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் தூக்குத் தண்டனை கூடாது என்று வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை 104, எதிர்த்த நாடுகள் 54; வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள் 29; அதே அய்.நா.வில் 2011இல் இதே பிரச்சினைக்கான வாக்கெடுப் பில் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது; தூக்குத் தண்டனைக்கு ஆதரவாக 41 நாடுகளும், எதிராக 111 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள் 34. தூக்குத் தண்டனை விதித்தால் கொலைக் குற்றங்கள்  குறைந்து போய் விடும் என்பதற்கான ஆதாரங்களும் இல்லை. பெரும்பாலும்  ஏழை எளியவர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் மேல் முறையீடுசெய்யும் வாய்ப்பு இல்லாத வர்கள் தான் தூக்குத் தண்டனைக்கு ஆளாகிறார்கள்.

போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிவால் மரணம் அடைந்தோர் 22 ஆயிரம் பேர்கள், ஊனமுற்றோர் 5,74,367.

இந்த நிலைக்கு காரணமானவரை - பொறுப்பு ஏற்கவேண்டியவரை இந்திய அரசாங்கம் மிகவும் பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கவில்லையா? அது தொடர்பான வழக்கில், நிறுவனத்தின் வழக்குரைஞர் என்ன கூறினார்? It is an act of god, for which no human being was responsible என்று கூறவில்லையா? அந்த விபத்து கடவுளின் செயல் - அதற்கு மனிதர்கள் எவரும் பொறுப்பேற்க முடியாது என்று சொல்ல வில்லையா?
இந்தியாவில் 1999ஆம் ஆண்டு ஒரிசாவில் தொண் டூழியம் செய்து வந்த ஆஸ்திரேலிய நாட்டின் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்களையும் இந்துத்துவா பேர் வழிகள் உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி ரவிந்திரபால் சிங் (பஜ்ரங்தள்)குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று மத்தியப் புலனாய்வுத் துறை கேட்டுக் கொண்டது; அந்த நேரத்தில் ஒரிசாவின் பெர்ஹாம்பூர் மறைஆயர் சரட்சந்திர நாயக், யாருக்கும் மரண தண்டனை அளிப்பதை திருச்சபை ஆதரிக்காது என்று கூறினார்.

காந்தியார் கொலை வழக்கில் நாதுராம் கோட்சே, ஆப்தே ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது அந்தத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று காந்தியார் அவர்களின் மகன்கள் தேவதாஸ் காந்தி, இராமதாஸ் காந்தி ஆகியோர் உட்பட காந்தியார் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த சிலரும் கையொப்பமிட்டு மனு ஒன்றினை அன்றைய பிரதமர் நேரு அவர்களுக்கு அனுப்பியதுண்டு. ராஜீவ்காந்திகொலை வழக்கில் தண்டனை பெற்றவர் களுக்காக அத்தகைய மனுக்கள் வராமல் இருக்கலாம். 

உச்சநீதிமன்றம் சிறப்பான வகையில் செயல்பட்டு இருக்கிறது. இதன் முடிவில், இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுமானால், அது மிகச் சிறந்த மனிதநேய செயல்பாடாக இருக்கும்!  தூக்குத் தண்டனை ரத்துச் செய் யப்பட வேண்டும் என்பதைத் திராவிடர் கழகம் தொடர்ந்து பல  மாநாடுகளிலும்  வலியுறுத்தியே வந்திருக்கிறது.

              -------------------------------"விடுதலை” தலையங்கம் 20-02-2014

37 comments:

தமிழ் ஓவியா said...


மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்! எக்னாமிக் டைம்ஸ் அம்பலப்படுத்துகிறது


புதுடில்லி, பிப்21- மக்கள் மத்தியில் போலி யான மலிவுப் பிரச்சாரத் தைச் செய்வது எப்படி என்பதற்கு மோடியின் பின் னால் உள்ள நிபுணர்கள் குழுவை ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாஜக-வினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி எந்த எந்த வகையில் புதிய புதிய அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்ற முடியும் என அனைத்துத் துறை நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்டு வரு கிறார்.

தேர்தலை மய்யமாக கொண்டு மூன்று நிலையில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

அது 1. மக்களை ஏமாற்றும் புதிய திட்டங் கள்,

2. அதை மய்யமாக வைத்து பொதுக் கூட்டங் களில் உரையாற்றுவது,

3. அவற்றை அப்படியே ஊட கங்களின் மூலம் மக்களி டம் கொண்டு சேர்ப்பது;

இதுதான் மோடியின் தேர் தல் மோசடித் திட்டம். மோடியின் இந்த மோசடித்திட்டத்திற்கு வலு வூட்ட பல நிபுணர்கள் கொண்டகுழு உள்ளது. இக்குழுவில் பொருளாதார நிபுணர் கொலம்பிய பல் கலைக்கழக பேராசிரியர் அரவிந்த பங்கரியா, பிரபல பங்குவர்த்தக முதலீட்டு ஆலோசகர் குரு ரவி மந்தா, கொள்கை ஆய்வு மய்யக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் திபோராய், மனீஷ் சபர்வால் போன் றோர் உள்ளனர்.

இந்தக்குழுவின் தலை வர் போல் செயல்படும் ஜகதீஷ் பகவதி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மீது மதிப்பு கொண் டவர். ஆனாலும், அவரது சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்டவர். இதில் பங்கரியா பாது காப்பு மற்றும் அயலுறவுத் துறை விவாகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராம். இந்தக்குழு தொடர்ந்து இந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மோடிக்கு ஆலோசனை அளித்து வருகிறது. இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஒருவர் இந்தக் குழுவின் ஆலோச னையின் பேரில் நரேந்திர மோடியின் உரைகள் தயா ரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் மோடியின் தேர்தல் களத் தின் பின் புலத்தில் உள்ளனர்.

இந்தக் குழு தற்போது நாடு எதிர்நோக்கி இருக் கும் முக்கிய பிரச்சினை யான மின்சாரத்தை முதன் மையாக எடுத்துள்ளது.

24 மணி நேரம் மின்சாரம் என்பது சாமானியர்களின் கனவாகும். இதை மனதில் கொண்டு மின்சாரம் மற் றும் இந்த பிரச்சினையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் தன்னை பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடப் போகும் ஒருவராக காட்டிக் கொள்ள நரேந்திர மோடிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். நிறைவேற்ற இயலாதவை! மேலும் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை கூறு வது மோடியின் வளர்ச்சி பற்றிய பேச்சுக்களின் பின் புலத்தில் பொருளாதார, தொழில்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய ஆலோசனைக்குழு வின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இவர்களின் ஆலோ சனைப்படியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த உரையை அனைத்து மேடை களிலும் பேசி வருகிறார்.

பொருளாதார நலிவில் சிக்கியுள்ளதாக மாயையை முதலில் தனது பேச்சால் உருவாக்கி, அதன் பிறகு அதற்கான திட்டங்கள் இவை என்று மக்களிடம் கூறி வாக்காளர்களை கவர்ந்து (ஏமாற்றி) வருகிறார். உண்மையில் மோடிக்கு பின்புலத்தில் நிற்கும் நிபு ணர்களின் ஆலோசனைகள் பெரும்பாலானவை நிறை வேற்ற இயலாதவையா கவே உள்ளன .

- (நன்றி: எக்னாமிக் டைம்ஸ் நாள்:19.2.2014)

Read more: http://viduthalai.in/e-paper/75683.html#ixzz2u0MywW4H

தமிழ் ஓவியா said...


மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம் இந்தியாவின் 29-ஆவது மாநிலம் ஆனது


தெலங்கானா புதுடில்லி, பிப்.21- கடும் அமளிக்கு இடையே, மாநிலங்களவையில் தெலுங் கானா மசோதா நேற்று நிறைவேற்றப் பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியதும் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அவரவர் மாநில பிரச்சினைகளை எழுப்பி அமளி யில் ஈடுபட்டனர்.

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக் கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங் கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட னர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

தெலுங்கு தேச எம்.பி.க்கள், ஆந்தி ராவை பிரிப்பதற்கு எதிராக பதாகைகளை பிடித்து முழக்கமிட்டனர்.

இந்த அமளிக்கிடையே, தெலங்கானா மசோதாவை மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்போது, அவரைச் சுற்றிலும் தெலங் கானா ஆதரவு எம்.பி.க்கள் மனித வளையம் போல் நின்று கொண்டனர். அவர்களை தெலங்கானா எதிர்ப்பு எம்.பி.க் கள் தாக்க முற்பட்டனர்.

அமளி காரணமாக, பிற்பகல் 2 மணியில் இருந்து 4.30 மணிக்குள் 5 தடவை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நடந்த விவாதத்தின்போது, தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தெலங் கானா மசோதா, இந்தியாவின் கூட்டாட்சி முறை பற்றிய கவலையை எழுப்புகிறது. ஆந்திராவை பிரிப்பதை நாங்கள் எதிர்க் கிறோம். ஆகவே, வெளி நடப்பு செய் கிறோம் என்று தி.மு.க. உறுப்பினர் கனி மொழி கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் திடீரென சபைக்கு வந்தார். அவர் முன்னிலையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி, தெலங்கானா தனிமாநிலம் உருவாக்குவதற்கு எதிராக பேசினார். கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவது தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பா.ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், சீமாந்திரா பகுதிக்கு ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு நிதிஉதவி அறிவிக்க வேண்டும் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் குறுக்கிட்டு பேச எழுந்தபோது, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மசோதாவை கிழித்து வீசு என்று கூச்சலிட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், மன்மோகன்சிங் முன்பு காகிதங்களை கிழித்து வீசினர்.

மன்மோகன்சிங் பேசுகையில், சீமாந் திரா பகுதியின் பின்தங்கிய மாவட் டங்களுக்கு சிறப்பு நிதிஉதவி திட்டம் அறிவிக்கப்படும். வரிச்சலுகை அளிக்கப் படும். சீமாந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் 6 அம்ச வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். போலா வரம் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சீமாந்திராவுக்கு 5 ஆண் டுகளுக்கு சிறப்பு தகுதி அளிக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து, தெலங்கானா மசோ தாவை திருத்தம் இன்றி ஆதரிக்க பா.ஜனதா முன்வந்தது. ஓட்டெடுப் பின்போது, காங்கிரஸ், பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரித் தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தெலுங்கு தேசம், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடுமையான கூச்சல்-குழப்பத்துக்கு இடையே, குரல் ஓட்டெடுப்பு மூலம், மசோதா நிறைவேறியது. இரவு 8.30 மணியளவில்தான் மசோதா நிறைவேற் றப்பட்டது.
திருத்தம் இல்லாமல் மசோதா நிறை வேற்றப்பட்டதால், அதை மறுபடியும் மக்களவைக்கு அனுப்ப வேண்டியது இல்லை. குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்கு நேரிடையாக அனுப்பி விடலாம்.
எனவே, நாட்டின் 29-ஆவது மாநில மாக தெலங்கானா உதயம் ஆனது.

Read more: http://viduthalai.in/page-2/75677.html#ixzz2u0NpCQAj

தமிழ் ஓவியா said...


மதத்தைப் பற்றி மதவாதி!


இந்துமதம் பாசிசத் தன்மை கொண்டது. அய்யாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் மக்களை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதி, அவர்களை மனிதனைவிட மிகக் கேவலமாக நடத்தி வருகிறது.

ஜாதிஇந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தினர். இன்றும் அவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது.

ஜாதி இந்துக்களின் தெருவிலுள்ள கிணற்றிலிருந்துகூட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுங்கூட தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இந்துமதம் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வருகிறது. இவற்றை யெல்லாம் நான் எதிர்க்கிறேன். ஆண்களைப் போன்று பெண்களையும் சமமாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை பார்ப்பானும் தாழ்த்தப்பட்டவனும் ஒன்றே.

மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அனைத்து கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் அழிக்க வேண்டும்; அவற்றிற்குத் தீயிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளவர் புனேயில் யோகா நிலையம் வைத்து நடத்தி வரும் ரஜனீஷ். அவரும் ஒரு மதவாதியே என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: ஆன் லுக்கர், டிசம்பர் 15 (1970

Read more: http://viduthalai.in/e-paper/75712.html#ixzz2u0OaWbbg

தமிழ் ஓவியா said...


நாஸ்திக வாதம்! (கிளிக்கண்ணி மெட்டு)


1. கடவுள் எனும் சொல் வெறும்
கற்பனைச் சொல் ஆகுமடா
திடமுடன் டுடுட்டு வென்றால் - மனிதா!
தெரியும் பொருளே தடா!

2. கல்லில் ஒரு கடவுள்
கருத்தில் ஒரு கடவுள்
சொல்லில் ஒரு கடவுள் - மனிதா!
தொட்டதெல்லாம் கடவுள்

3. அர்த்தமில்லாக் கடவுள்
அனர்த்தஞ் செய்யுங் கடவுள்
மெத்த இம் மேதினியில் - மனிதா!
வீண் வீணென்றே உமிழடா

4. எட்டாக் கடவு ளென்று
எட்டிப் பிடிப்ப தன்றோ?
முட்டாள் ஆஸ்திகர்கள் - மனிதா!
முற்றும் முரண் பேசுவரே

5. உழைப்பு செல்வம் காலத்தை உண்டு சும்மா இருந்திடும்
பிழைப்புத்தான் கடவுட்கென்றால் - மனிதா!
பிசகென்ன நாஸ்திகத்தில்!

6. ஏழையுலகை வாட்டிடும்
ஈனக் கடவுளைத்தான்
ஆழக்குழி வெட்டியே - மனிதா!
ஆழ்த்திப் புதைத்திடடா

7. அறிவியல் அன்றும் இன்றும்
ஆத்திகம் காத்ததில்லை
குறி, சட்டம், ஸ்தாபனத்தால் - மனிதா!
கொடும் மதம் காத்ததடா

8. அரி சிவன் அல்லா பிரம்மம்
அருஞ் சமரிட்டதாலே
சொரிந்தனர் மக்கள் ரத்தம் - மனிதா!
சொல்லவும் கொதிக்குதடா

9. அடிமை வறுமை பஞ்சம்
அநியாயம் மோசம் நாசம்
மிடிமையும் கடவுள் மேலே - மனிதா
வேர்க் கொள்ளக் கண்டோமடா

10. மனிதன் மனிதனாக!
மதங்கள் கடவுள் வீழ்க!
புனிதப் பொதுவுடமை - மனிதா!
புது உலகம் வாழ்ந்திடவே.

Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0P5WXzY

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து எடுத்துவிடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட் பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.
அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத் தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங் குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.


Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0PJdH4u

தமிழ் ஓவியா said...

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே!

இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப் போய்விட்டன. செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்ததுடன், அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.

உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ளுவதில்லை; நடந்து கொள்ள முடிவதில்லை. உதாரணமாக, பவுத்தர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லா மியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனைக் காணமுடிகின்றதா?

முதலாவதாக, வேஷத்திலும் சடங்கிலுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும், வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ, ஆசைப்படவோ கூட முடிகின்றவர் காணப்படுவது இல்லை.

இந்த நிலையில் உள்ள மக்களே தான் இன்று தங்கள் மதங்களைக் காப்பாற்ற வேண்டும், மதத்திற்கு ஆபத்துவந்து விட்டது; தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு குழிதோண்டிப் புதைக்காமல், நாற்றத்தில் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும், உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதே போல் எல்லா மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுகின்றனர். இதனால் உண்மை உணரமுடியாமல் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/75710.html#ixzz2u0PkQdt3

தமிழ் ஓவியா said...


கட்டிப்பிடி சாமியார் அமிர்தானந்தமயி திடுக்கிடும் தகவல்கள்!


கேரளாவைச் சேர்ந்த கட்டிப்பிடி சாமியார் அமிர் தானந்தமயியிடம் உதவியாள ராக இருந்த கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி, ஹோலி ஹெல் (Holy Hell) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளி யிட்டுள்ளார்.

அந்த புத்தகத் தில் அமிர்தானந்தமயியின் தகிடுதத்தங்கள் பலவற்றை யும் அம்ப லப்படுத்தி யுள்ளார். அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் பணத்தை தங்க மாக மாற்றி அவரது உற வினர்கள் எப்படியெல்லாம் செல் வச் செழிப்புடன் இருக்கின்றனர் என்றும், ஏதேனும் தவறு செய்தால் அமிர்தானந்தமயி அடிப்பது, கடிப்பது போன்ற தண்டனைகள் கொடுப்பார் என்றும் காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் அமிர்தானந்தமயியின் ஆண் சீடர்களால், தான் பாலியல் வன்கலவிக்கு உள்ளான தாகவும் கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/75661.html#ixzz2u0jq4yFP

தமிழ் ஓவியா said...


குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலைக்கு எதிர்ப்பு காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் வேறுபாடு கிடையாது

தமிழக முதல்வரின் முடிவு அபாய கரமானது, எனக் கூறி தமிழக அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, நீதிமன்றம் செல்லுமாம். ராஜீவ்காந்தி படு கொலைக்கு தொடர்புள் ளவர்கள் என்று கூறி தூக்குத்தண்டனை விதிக் கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உட்பட ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும் முடிவை நேற்று தமிழக முதல்வர் சட்டமன்றத் தில் வெளியிட்டார். இதுகுறித்து மத்திய அரசின் உள்துறை அமைச் சகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். தமிழக அரசின் முடிவை காங் கிரஸ் கடுமையாக எதிர்த் துள்ளது.

அபிஷேக் சிங்வி தமிழக அரசின் இந்த முடிவு பற்றி காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறியதாவது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனைத்து மாநிலத்திற் கும் உரிமை உள்ளது, ஆனால் இந்த உரி மையை தவறாக பயன்படுத்தி கொலைக் குற்ற வாளிகளை விடுதலை செய்வது என்பது அரசி யல் சாசனத்திற்கும் அதன் மாண் பிற்கும் விரோத மானதாகும். மேலும் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை அரசியல் அனுபவ மில்லாத பொறுப்பற்ற விளம்பரத் திற்காக செய்யும் ஒரு காரியமாகும். ஜெயலலிதாவின் இந்த நடவடிக் கையை எதிர்த்து நாங்கள் நீதிமன் றத்தை நாடுவோம், இந்த தீவிர வாத கொலைச் சம்பவம் மூலம் ராஜீவ் காந்தி மாத்திரம் மரணமடையவில்லை, பல தமி ழர்களும் உயிரிழந்தனர், உயிரிழந்த குடும்பத்தின ருக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகி றது என்றார். அஜய் மக்கன்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கன் தமிழக அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்துள் ளார். தமிழக அரசின் இந்த முடிவு நீதிக்கு புறம்பானது மாத்திரமல்ல, ராஜீவ்காந்தியுடன் மரணமடைந்த அனை வரின் குடும்பத்திற்கு அநீதி இழைப்பதாகும். இந்த செயல் இந்திய நாட்டின் சட்டத்தின் மீது முழு நம் பிக்கை கொண்ட அனை வரின் நம்பிக்கைக்கும் முரணாக அமைந்து விடும். மேலும் தீவிரவாதத்தின் மீது எடுக்கும் நடவடிக் கைக்கு பெரிதும் பாதகம் ஏற்படுத்தும் என்றும் கூறி னார்.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது, இதில் என் னுடைய சொந்த கருத்து என்று எதுவும் சொல்வ தற்கில்லை. காங்கிரஸ் கட்சி இந்த முடிவு குறித்து கண்டனம் தெரிவித்துள் ளது என்றார். இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா ஏன் அமைதி காக்கிறது என்று தெரிய வில்லை, அப்சல் குருவை தூக்கிலிட கூக்குரலிட்ட பாரதிய ஜனதா ராஜீவ் காந்தி விவகாரத்தில் மவுனம் காப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் குறிக் கிறது என்று காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிஜேபி என்ன கூறுகிறது?

ஜெயலலிதாவின் முடிவு விடு தலைப்புலிகளுக்கு சாதகமானதாக அமையும் என்று பார தீய ஜனதா கட்சி தலை வர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசின் எழுவர் விடுதலைக்கான தமிழக அமைச் சரவை முடிவு பற்றி பிரதான எதிர் கட் சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான அருண்ஜெட்லி கூறும் போது தமிழக அரசின் இந்த விபரீத முடிவு அரசியல் முதிர்ச்சியற்ற தன் மையைக் குறிக்கிறது.

தமிழக அரசின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை, இது முழுக்க முழுக்க தூக்குத் தண் டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி கருணை மனு தாமதத் தினால் ஏற்பட்ட ஒன்றாகும். இருப் பினும் தமிழக அரசு அரசியல் கார ணங்களுக்காக எடுத்திருக்கும் இந்த நடவ டிக்கையை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75659.html#ixzz2u0k67s74

தமிழ் ஓவியா said...


கா. நமச்சிவாயனார்


தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.

திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும் திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்

அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.

தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே
தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.

அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் - அந்தக் கால கட்டத்தில் தமிழின் - தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.

தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய - முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் - அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் என்று தந்தை பெரியார் எழுதினார்.

(விடுதலை 15.2.1960)

இது ஒரு பானை சோற் றுக்கு ஒரு பருக்கைப் பதம்!

குறிப்பு: இன்று பெரும் புலவர் கா.நமசிவாய (முதலி யார்) பிறந்த நாள் (1876).

- மயிலாடன் -20-2-2014

Read more: http://viduthalai.in/page1/75655.html#ixzz2u0kQ3QPl

தமிழ் ஓவியா said...

வைரம் எவ்வளவு ஆழத்தில் இருந்து கிடைக்கிறது?

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா? ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப் போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக் கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75626.html#ixzz2u0lypyFZ

தமிழ் ஓவியா said...


கல் மீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


கல் மீன் எதிரியின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தரைமட்டத்தில் வாழும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மிகவும் சோம்பேறி மீன். அசைவற்றுக் அப்படியே கல்லு மாதிரி இருப்பதால் இப்பெயர் வந்தது.

இந்தக் கல் மீன் மிகவும் சாந்தமானது. ஆனால் இதுகல் மாதிரி இருப்பதால் அடையாளம் தெரியாமல் யாராவது இதை சீண்டி விட்டால் நைசாக தன் முதுகுப்புற முள்ளை அப்படியே விரிக்கும். இந்த முள் நாம் உடலில் குத்தும் போது விஷத்தை உடலில் பாய்ச்சிவிடும். விஷம் உடலில் ஏறியதும் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டு பயங்கரமாக கத்துவர்.

வாயில் நுரை தள்ளும். பனிரெண்டு மணி நேரம் இந்த வலி நீடிக்கும். தூக்க மருந்து வலி நிவாரண மருந்து எது கொடுத் தாலும் பலன் இருக்காது. கடித்த இடம் பயங்கரமாக வீங்கிவிடும். கடிபட்டவர் நிச்சயமாக இறந்துவிடுவார்.

Read more: http://viduthalai.in/page1/75630.html#ixzz2u0noA8sU

தமிழ் ஓவியா said...

மனித குருதி நிறம் என்ன?

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0o8kLVw

தமிழ் ஓவியா said...


உலகின் மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி!


உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி என்றதும் அது எங்கோ அடர்ந்த ஊசியிலைக்காடுகளிலோ, மலை களிலோ இருக்கும் என்று உங்கள் எண்ணம் ஓடினால்.. உங்கள் ஊகம் தவறு ! மிகக் கொடிய விஷமுள்ள பூச்சியினம் உங்கள் வீட்டு கொல்லைப்புறத்திலும் இருக்க வாய்ப்புள்ளது ! முதலில் பூச்சி என்றால் என்ன ?

6 கால்களும் 3 உடல் பாகங்களும் உடையதுதான் பூச்சி என்றழைக்கப்படுகிறது ! சரி, அந்த மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி எது தெரியுமா ? எறும்பு ?!

ஆம் எறும்பேதானாம் ! ஆனால் நாம் சாதாரனமாக பார்க்கும் இந்த எறும்பு இல்லை. அதன் பெயர் ஹார்வஸ்ட் ஆண்ட் என்றழைக்கப்படும் அறுவடை எறும்பு ஆகும்.

உருவத்தோடு சதவீத அடிப்படையில் ஒப்பிடுகையில் ஒரு தேனீக்கு இருக்கும் விஷத்தை விட இவ்வகை எறும்புகளுக்கு அதிக விஷம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

எறும்புகள் கடிப்பதும்,கொட்டுவதும் இரு வெவ்வேறு நடவடிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. சில எறும்புகள் கடிக்கும் ஆனால் கொட்டுவதில்லை; சில எறும்புகள் கடித்து விட்டு கடித்த இடத்தில் விஷத்தை பீய்ச்சியடிக்கின்றன.

சில எறும்பு வகைகள் கொடுக்கு களால் கவ்விப்பிடித்துக்கொண்டு கடித்த பாகத்தில் தொடர்ச்சி யாக விஷத்தை செலுத்தும் பழக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்: சுமார் இரண்டு கிலோ எடையுள்ள ஒரு எலியை இவ்வகை எறும்புகள் பன்னிரண்டு முறை கொட்டினால் இறந்து விடுமாம்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0oEnYAL

தமிழ் ஓவியா said...


விண்வெளிக்கு எளிய வழி! ஏழு மணி நேரத்தில் செல்லலாம்


சற்று தொலை தூர ஊர் என்றால் பேருந்து, ரயில் பயணத்திலேயே 7,8 மணி நேரம் ஆகும்.

ஆனால் சமீபத்தில் பூமியில் இருந்து விண்வெளியில் வீரர்கள் வெறும் 6 மணி நேரப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை படைத்து இருக்கிறார்கள். இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், ஓர் அமெரிக்க விண்வெளி வீரர்தான் அந்தச் சாதனை யாளர்கள்.

கஸகிஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இவர்களின் சோயூஸ் காப்சூல்ஸ்' விண்வெளிச் சுற்றுப்பாதை அவுட் போஸ்ட்டான சர்வதேச விண்வெளி நிலையத்தை 6 மணி நேரத்துக்குள்ளாக அடைந்து விட்டது. வழக்கமான இந்த விண்வெளிப் பயணத்துக்கு ஆகக்கூடியது 51 மணி நேரம்.ஆனால் ஒரு குறுக்கு வழி'யில் சென்றதன் மூலம் 45 மணி நேரத்துக்குள் முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தை வீரர்கள் அடைந்துவிட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரூட் என்ற புதிய வழியின் மூலம்,அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் காஸ்டி,ரஸ்ய விண்வெளி வீரர்கள் பாவல் வினோகி ரடோவ்,அலெக்ஸ்சாண்டர்,மிருஸ்கின் குழுவின் சோயூஸ்கேப்சூல்ஸ்,வெறும் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தொட்டது. அங்குள்ள பாய்ஸ் மாட் ஊளில் பார்க்' ஆனது. அய்ந்தரை மாத விண்வெளி ஆய்வு பயணமாக இக்குழு சென்றுள்ளது.

இதற்கு முந்தைய விண்வெளிப் பயணக் கலங்கள் அனைத்துமே -தோது நாசாவின் ஓய்வு பெற்ற' ஸ்பேஸ் சட்டல்களாக இருக்கட்டும்-சர்வேதேச நிலையத்தை எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டி ருக்கின்றன.

இப்படி விரைவாக சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டியதால்,நெருக்கடியான விண்கலத்தில் இரண்டு நாள்களுக்கு அடைபட்டுக் கிடக்கும் சிரமத்தில் இருந்து விடுதலை என்று நிம்மதி பெருமூச்சு விடு கிறார்கள், இந்த விண்வெளி வீரர்கள்!

Read more: http://viduthalai.in/page1/75627.html#ixzz2u0oPfxww

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக இ-மெயில் செய்ய வசதி

புதுடில்லி, பிப்.20- பாலி யல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் இனி உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக இ-மெயில் அல் லது கடிதம் மூலமாக தங் களது புகார்களை பதிவு செய்யலாம்.

நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வரும் பெண் களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் இது தொடர்பான புகார்களை பெற உச்சநீதிமன்ற பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீ பத்தில் ஏற்படுத்தினார்.

பணியிடங்களில் பெண் களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விஷாக்கா வழக்கில் உச்சநீதி மன்றம் வழிகாட்டி நெறி முறைகளின்படி இந்த குழு செயல்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த குழு வுக்கான உறுப்பினர்கள் அனைவரும் நியமிக்கப்பட் டுள்ள நிலையில் இந்த குறை தீர்ப்பு மய்யம் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள் ளது.

தங்களுக்கு நேர்ந்த பாலி யல் வன்கொடுமை பற்றி புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள், இனி நேரடியாக இந்தக் குழுவுக்கு இ-மெயில், பதிவு தபால், விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட்) அல்லது கொரியர் மூலமாக புகார் தெரிவிக்கலாம். நேரில் சென்று புகார் அளிக்க விரும் புபவர்கள் உச்சநீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் குழுவின் அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம்.

இ-மெயில்

பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக ரகசியாக மாகவும், நியாயமான முறை யிலும் உரிய விசாரணை நடத்தப்படும். புகார் அளிப் பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முக வரி: gupta.rachna@indian judiciary.gov.in

மேற்கண்ட இ-மெயில் முகவரியில் வன்கொடுமை யால் பாதிக்கப்படும் பெண் கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம்.

Read more: http://viduthalai.in/page1/75613.html#ixzz2u0ogZRHZ

தமிழ் ஓவியா said...

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்


இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி கேள்வி

புதுடில்லி, பிப்.20- அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப் பாடு என்ன என்று கவிஞர் கனிமொழி, மாநிலங்கள வையில் உரையாற்றுகை யில் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி உரை யாற்றுகையில், தமிழக மீன வர்களை இலங்கைக் கடற் படையினர் நடுக்கடலில் இந்திய எல்லையில் தாக் கப்பட்டு வருவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த அவையில் இந்தக் கூட்டத் தொடர் முழுவதுமே நாங் கள் பேசவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அனு மதி கேட்டு வருகிறோம்.

ஆனாலும், இது குறித்து பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் அய்க்கிய நாட் டின் மனித உரிமை கவுன் சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர் மானம் கொண்டு வரவிருக் கிறது. அதுகுறித்து இந்தியா வின் நிலைப்பாடு என்ன? என்பதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு குறிப்பிட்ட கவிஞர் கனிமொழி அவர் கள், மேலும் உரையாற்று கையில், தெரு வியாபாரி கள் மசோதா உள்ளிட்ட இரண்டு மசோதாக்களை தி.மு.க. ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் மாற்றுத் திறனாளி கள் மசோதாவை எதிர்க்கி றோம் என்றும் அந்த மசோ தாவை நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என் றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் கமல் நாத் இதற்கு பதிலளித்து உரையாற்றுகையில், உறுப்பினர் கவிஞர் கனி மொழி, பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப் பட்டு வருவதாக தெரிவித் தார். மேலும் அய்.நா. மன் றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசு தனது நிலையை தெரிவிக்கவேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தாக் கப்படுவது குறித்து உறுப் பினர்களின் வேதனையை தாமும் பகிர்ந்து கொள்வ தாக நாடாளுமன்ற விவாக ரத்துறை அமைச்சர் கமல் நாத் கூறினார்.

மீனவர்கள் தாக்கப்படு வதை தடுக்கவும், சிறையி லிருந்து மீனவர்களை விடு விப்பதற்கும், இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கமல்நாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75613.html#ixzz2u0opAM6Y

தமிழ் ஓவியா said...


அழியும் மொழிகள்


1,000 வருடங்களாக மொழி அழிவதும், புது மொழி உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில வருடங்கள் முன்பு அந்தமான் தீவில் வயதான பெண்மணி ஒருவர் இறந்துபோனார். அவர் பேசிய 'போ மொழியும் அவருடன் அழிந்துபோனது. அந்த மொழி தெரிந்த கடைசி ஆள் அவர். '65,000 வருடக் கலாசாரம் துண்டுபட்டது என்று பத்திரிகைகள் எழுதின.

100 வருடங்கள் முன்பு ஹீப்ரு மொழி, அழிவின் வாசலில் நின்றது. இன்று 9 மில்லியன் மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு 'இஸ்ரேல் என்ற ஒரு நாடு கிடைத்ததுதான் காரணம். 50 வருடங்கள் முன்பு, ஹவாய் மொழி அழிவு நிலையில் இருந்தது. இன்று அதை மீட்டெடுத்துவிட்டார்கள்.

நவீனத் துருக்கிய மொழியின் வயது 80. இந்த மொழியில்தான் ஓர்ஹான் பாமுக் நாவல் எழுதி நோபல் பரிசு பெற்றார். தமிழுக்கு அழிவு வெளியே இருந்து வரப்போவது இல்லை. தமிழர்களால்தான் வரும். போலந்தில் பிறந்த ஒருவர் போலந்து மொழியில் படிப்பார். ரஷ்யாவில் பிறந்த ஒரு ரஷ்ய மொழியில் படிப்பார். டென்மார்க்கில் பிறந்த ஒருவர் டேனிஷ் மொழியில் படிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் படிக்காமலேயே மேல்படிப்பு படித்து வேலை தேடிக்கொள்ளலாம். இந்த நிலைமை தமிழ்நாட்டில் இருந்தாலும், புலம்பெயர் சூழல் ஆரோக்கிய மானதாக இருக்கிறது.

அறிவகம் என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் பாடத்திட்டத்தின் கீழ் 3,000 புலம்பெயர் தமிழ்ச் சிறார்கள் ஆண்டுதோறும் தேர்வு எழுதுகிறார்கள். இதனால் ஒரு லாபமும் அவர்களுக்கு கிடையாது. ஆர்வம் தான் காரணம். வைதேகி ஹெர்பர்ட் எனும் அமெரிக்கப் பெண்மணி, 12 சங்க நூல்களை ஆங்கிலத்தில் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். 2,000 வருடங்களாக ஒருவரும் செய்திராத சாதனை இது. அமெரிக்கத் தமிழர் குமார் சிவலிங்கம், குழந்தைப் பாடல்களையும் குழந்தைக் கதைகளையும் அச்சு/ஒலி புத்தகங்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகான படங்களுடன் உலகத் தரத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழின் எதிர்காலம் ஒருபக்கம் பிரகாசமாகவும், இன்னொரு பக்கம் இருள் நிறைந்ததாகவும் உள்ளது. எந்தத் திசையைத் தமிழர்கள் தேர்வு செய் வார்கள் என்பது ஊகம்தான்!

- ஆனந்தவிகடன் - 5.2.2014, பக்கம் 30-31

Read more: http://viduthalai.in/page2/75785.html#ixzz2uC8IEnA1

தமிழ் ஓவியா said...


இணையத் தொடர்பு இல்லாமல் போனில் பேஸ்புக்

போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக. ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க.

இது இந்தியாவுக்கு மட்டும் இப்போது. முதலில் உங்கள் அலைபேசியில் இருந்து *325# அல்லது (or *fbk#). இதற்கு உங்களிடம் இணையத் தொடர்பு தேவை இல்லை. கட்டணம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும்.
கீழே உள்ள படங்களை பாருங்கள் புரியும்.
Facebook India ஆனது Fonetwish உடன் இணைந்து இந்த வசதியை இந்தியர்களுக்கு வழங்குகிறது.
முதலில் உங்கள் User name, Password என்று வரிசையாக செல்ல வேண்டும். இந்த வசதி இப்போது ஏர்டெல், ஏர்செல்,ஐடியா, டோகோமோ நிறுவனப் பயனர்களுக்கு இது கிடைக்கும்.

இதற்கு ஒரு நாளுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே போதும் என்று சொல்லப்பட்டு உள்ளது. (தமிழன் இலவசமா எதிர் பார்ப்பான்னு தெரியல விடுங்க). இதன் மூலம் எளிதில் சாட் செய்யலாம், உங்கள் செய்திகளை பகிரலாம்.

இணையத் தொடர்பு இல்லாத நேரங்களில் இது பெறும் உதவி செய்யும். ஆபத்தான நேரங்களில் கூட இது உதவலாம். மிக அருமையான வசதி. பயன்படுத்தி பார்ப்போமே.
- பிரபு கிருஷ்ணா

Read more: http://viduthalai.in/page2/75786.html#ixzz2uC8r25kS

தமிழ் ஓவியா said...

அதிசய மனிதர்

போலியோ என்னும் நோயைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க், தனது கண்டுபிடிப்பு உரிமைக்கான காப்புரிமையைக் கோரவில்லை - உண்மையிலேயே அதிசய மனிதர்தான்.

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9acEoU

தமிழ் ஓவியா said...


சிகாகோவில் சு.சாமிக்கும், ராம்தேவுக்கும் தடை


சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக்குழு சு.சாமி, யோகா குரு ராம்தேவ் இவர்களின் தலையீட்டைக் கண்டித்து பிரச்சினை எழுப்பியது. சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக் குழு வானது சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை ஆதரிப்பதை ஏன் திரும்பப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத்தும் வெளிநாடு வாழ் பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப்பும் ஆதர வளித்து விவேகானந்தரின் விழாவை நடத்துவதால் அந்த சிகாகோ அமைப்பு விவேகானந்தரின் விழாவுக்கு ஆதர வளிப்பதைத் திரும்பப்பெற்றுக் கொண் டதாக அறிவித்துள்ளது.

அப்படிச் செய்ததன் மூலம் உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு, இந்திய பாரதிய ஜனதா கட்சிக்கும் உலக பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப் புக்கும் உள்ள தொடர்பை விளக்கமாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதுவுமல்லாமல் இந்திய பாரதிய ஜனதா கட்சியானது அமெரிக்காவால் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நரேந்திரமோடியினால் தலைமையேற்று நடத்தப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

அமெரிக்க ஹிந்து நிறுவனம் என்னும் ஹிந்து ஆதரவு அமைப்பு விவேகானந் தரின் விழாவுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதற்குக் கண்டனம் தெரிவித் துள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவானது பி.ஜே.பி மற்றும் சிறுபான் மையினருக்கு எதிரான பேச்சாளர்கள் குறிப்பாக இரண்டு நபர்கள் சுப்பிரமணிய சாமியும், சுவாமி ராம்தேவும் அந்த விழா வில் கலந்து கொண்டு பேச இருப்பதை தடைக்கான காரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

அதனால் தான் சி.றி.கீ.ஸி என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மேரி நெல்சன் என்பவர் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான காரணத்தைக் குறிப்பிடும் போது முக்கியப் பேச்சாளரான டாக்டர் சு.சாமி, பி.ஜே.பி.யின் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சு.சாமியின் கவுரவ விரிவுரையாளர் பதவிக்கு வேட்டு

இந்திய முஸ்லிகள் இந்து மதத்தின் பழைமையை அங்கீகரிக்க மறுப்பதால் அவர்களின் ஓட்டுரிமையைப்பறிக்க வேண்டும் என்றும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்றும் பேசிய திமிர்ப் பேச் சினால் சு.சாமியின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கவுரவ விரிவுரையாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினால் பெரும்பான் மையான வாக்குகள் வித்தியாசத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவின் துணைத் தலைவர் அட்டர்னி பிளிஸ் குயூரர் என்பவரும் மதக் கல்வியின் பேராசிரியர் ராபர்ட் செல்லர் என்பவரும் சுவாமி ராம்தேவ் என்பவர் மேற்கண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினர் என்பதோடு நரேந்திர மோடியின் ஆதர வாளர் என்றும் மோடியின் பிரச்சாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறி மேற்கண்ட விழாவிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதற்கான காரணத்தைக் கூறியுள் ளனர்.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு வானது அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத் தன் வலைத்தளத்தில் சீக்கியர்களும் ஜைனர்களும், புத்தமதத்தினரும் இந்துக் களே என்று கூறியுள்ளதைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.

மற்ற மதங்களுக்கு எதிரான நடவடிக் கைகளால் அமெரிக்க ராஜீயத்துறை 2001 ஆம் ஆண்டிலிருந்து விஸ்வஹிந்து பரி ஷத்தை ஒரு தீவிரவாதக்குழு என்று அறி வித்துள்ளது.

- (இந்து 3.10.2012 பக்கம் 10)

Read more: http://viduthalai.in/page4/75789.html#ixzz2uC9m0eM8

தமிழ் ஓவியா said...


அப்பனை! தூஷித்தவன் ராமன்


- பா.வே. மாணிக்கநாயக்கர் (B.E. M.O.I.M.I.E.)

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் 53வது சர்க்கம் ஸ்லோகங்கள் கருத்து- வால்மீகி ராமன் மனக்காட்சியால் சொல்வது:- ஓ இலக்குமணா! இப்போது தசரத மகாராஜா மிகுந்த துயரத்துடன் படுத்துக் கொண்டிருக்கிறார்.

கைகேயியோவென்றாலங்கு தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு மகிழ்வடைந்தவளாய் இருப்பதற்குரிய வள். அதாவது: அந்த தேவியாகிய கைகேயி அரசாட்சியடைய வேண்டியதன் பொருட்டு வந்த பரதனைப் பார்த்ததும் தசரத மகா ராஜா தன் உயிரை விடும்படி செய்ய மாட்டாளா என்ன?

உதவியற்றவனும், கிழவனும் (தலை மகனாகிய) என்னாலும் பிரிவுபட்டவனும் காமத்தில் அமிழ்ந்தோனும், கைகேயியின் கையிற் சிக்கியவனும் ஆகிய தசரதன் என்ன செய்யப் போகிறான்?

இந்தத் துயரத்தையும், அரசனுடைய (தசரதனுடைய) அறிவு கெட்ட மருட் சியையும் பார்க்கிறபோது, அறம் பொருள் இரண்டையும்விட இன்பமே (காமம்) பெரிதென்பது என்னுடைய கருத்து.

ஓ இலக்குமணா! படிப்பில்லாதவனுங் கூட மனுஷன் என்கிற ஒருவன் எவன்தான், பெண் பொருட்டாக, விருப்பத்தைப் பின்பற்றுகின்ற புதல்வனாகிய என்னை என் அப்பனைப் போல விட்டுவிடுவான்?

எவன் அறம், பொருளைக் கைவிட்டு, இன்பத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவன் தசரத அரசனைப் போல, விரைவில் இம்மாதிரி துயரத்தை அடைவான்.

(கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் பக்கம் 41-42-44).

Read more: http://viduthalai.in/page4/75790.html#ixzz2uCA0ZEem

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்


இந்திய சமுதாயத்தில் ஆழ வேரூன்றி யிருக்கும் மூடநம்பிக் கைகளை ஒழித்து, அவர்களை பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழி திருப்பி விடும் பெரும் பொறுப்பு விஞ் ஞானிகளுக்கு இருக்கிறது. இந்த அடிப் படையில் ஒரு விஞ்ஞானி சித்து வேலை களை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த ஏமாற்றுகளும் விஞ்ஞானமும் இணைந்து போக முடியாது. சமுதாய சீர்திருத்தம், சுகா தாரம், குடும்பக் கட்டுப்பாடு ஆகிய வற்றை வலியுறுத்துவதுதான் மூடநம்பிக் கைகளை ஒழித்து விஞ்ஞான மனப்பான் மையை உருவாக்க ஒரே வழியாகும். இந்தியாவில் விஞ்ஞானம் என்பது ஏதோ ஓட்டளவிலும் தொழில் ரீதியாகவும் இருக் கிறதே தவிர, விஞ்ஞான மனப் பான்மை வாழ்வியலில் எதிரொலிக்கவில்லை. சோத னைச் சாலையில் விஞ்ஞானியாக இருக் கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் விஞ்ஞானத் திற்கு நேர் எதிரான பழக்க வழக்கங்கள், சிந்தனை களை கைக்கொள்கிறார்கள். இது முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

(பெங்களூர் பல்கலைக் கழகத்தில் விஞ் ஞானமும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் இந்திய அரசுத்துறை செயலாள ரும், விஞ்ஞான தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநருமான டாக்டர் நாயுடம்மா).

Read more: http://viduthalai.in/page4/75791.html#ixzz2uCABjG2C

தமிழ் ஓவியா said...


சோதிடத்தைப்பற்றி ஆச்சாரியார்!


அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் கவர்னர் ஜெனரலுக்கு (ராஜாஜிக்கு) அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித் தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். ராஜாஜியின் முழுப்பெயரில் உள்ள எழுத்துக்களைக்கூட்டி, அதை வைத்து நம்பர் ஜோசியம் கூறுவதாக - அவரை ஒரேயடியாகப் புகழ்ந்து நல்ல பலன் களாகவே கூறினர். இவைகளுக்கு ராஜாஜி பதிலளித்துப் பேசு கையில், உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோசியத்தை நம்புவ தில்லை; எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோசியத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன

(ராஜாஜி மேற்கு வங்கத்தின் முதல் கவர்னராக இருந்தபோது அவருடைய ராணுவச் செயலாளராக இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ராஜாஜி யுடன் ஆயிரம் நாட்கள் (ஜிலீஷீணீஸீபீ பீணீஹ் ஷ்வீலீ ஸிணீழீணீழீவீ) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது).

Read more: http://viduthalai.in/page5/75797.html#ixzz2uCATN8hW

தமிழ் ஓவியா said...


சோதிடத்தைப்பற்றி ஆச்சாரியார்!


அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் கவர்னர் ஜெனரலுக்கு (ராஜாஜிக்கு) அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித் தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். ராஜாஜியின் முழுப்பெயரில் உள்ள எழுத்துக்களைக்கூட்டி, அதை வைத்து நம்பர் ஜோசியம் கூறுவதாக - அவரை ஒரேயடியாகப் புகழ்ந்து நல்ல பலன் களாகவே கூறினர். இவைகளுக்கு ராஜாஜி பதிலளித்துப் பேசு கையில், உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோசியத்தை நம்புவ தில்லை; எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோசியத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன

(ராஜாஜி மேற்கு வங்கத்தின் முதல் கவர்னராக இருந்தபோது அவருடைய ராணுவச் செயலாளராக இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ராஜாஜி யுடன் ஆயிரம் நாட்கள் (ஜிலீஷீணீஸீபீ பீணீஹ் ஷ்வீலீ ஸிணீழீணீழீவீ) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது).

Read more: http://viduthalai.in/page5/75797.html#ixzz2uCATN8hW

தமிழ் ஓவியா said...


இனித்த கனி எது?


(சந்திரமோகன் நாடகத்தில்)

இடம்: காகப்பட்டர் ஆசிரமம்

இருப்போர்: காகப்பட்டர், ரங்கு

நிலைமை: (காகப்பட்டர் பழம் சாப்பிட்டுக் கொண்டே ஓலைச்சுவடி களைப் படித்து இரசித்துக் கொண் டிருக்கிறார்.

ரங்கு, குரு சாப்பிடும் பழத்தின் சுவையை எண்ணிய படி ஏக்கத்துடன் இருக்கின்றான். காகப்பட்டர், சுவடியிலே எதையோ படித்துப் பெரிதும் இரசித்தபடி)

காகப்பட்டர்: ரங்கு! எவ்வளவு அருமை, எவ்வளவு இனிமையாக இருக்கு தெரியுமோ!
(குரு பழத்தின் சுவையைத்தான் கூறுகிறார் என்று எண்ணிக் கொண்டு)

ரங்கு: எனக்கெப்படி ஸ்வாமி தெரியும். (பெரு மூச்செறிகிறான்)

(குரு, ரங்குவின் கண்கள் பழத்தின் மீது செல்வது கண்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, புன்னகை புரிந்து)

காக: மண்டு!

என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே பேசு கிறாயே-

ரங்கு: பழத்தின் இனிமையைத் தான் சொல்கிறீர்; புரிகிறது நன்னா- ஆனா பழத்தை நீர் சாப்பிட்டா, இனிமை, எனக்கா தெரியும் - சுவாமி!

காக: பைத்தியக்காரா! பழத்தின் இனிமையை அல்லடா நான் சொல்வது, வேணுமானா, இரண்டு பழம் சாப்பிட்டுத் தொலையேன். வேண் டாம்னு சொல்வேனா?

சொன்னாத்தான் நீ கேட்கப் போறாயா? நான், பழத்தின் இனி மையைக் குறித்துச் சொல்லவில்லை.

இந்தப் பழைய சுவடி இருக்கே..
நம்ம குல ரட்சகர்,

சட்டதிட்ட கர்த்தா மனு,

அவர் வகுத்து வைத்திருக்கும் -

அற்புதமான ஏற்பாடுகளைப் படிக்கப்படிக்க, சிந்திக்கச் சிந்திக்க, அவைகளோட தத்துவங்களை அலசிப் பார்க்கப் பார்க்க, அடடா! எவ்வளவு இனி மையா இருக்கு தெரியுமோ...

ரங்: அதைச்சொல்றேளா?

காக: கேவலம், பழத்தோட இனி மையைப் பத்தி நான் பேசறதாக எண்ணிண்டிருக்கே...

ரங்: நான் என்ன கண்டேன் சுவாமி! பழம் சாப்டிண் டிருந்தீர்...

காக: அதிலே என்னடா மதுரம் இருக்கு...

மண்டு?

மனு செய்திருக்கிற ஏற்பாடு, நமது குலத்துக்கு என் றென்றும் மதுரமான வாழ்வளிக்கும் கற்பகவிருட்சம்?

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (மாமனிதர் அண்ணா நாளிதழ் - பேராசிரியர் க.அன்பழகன்)

Read more: http://viduthalai.in/page7/75801.html#ixzz2uCT8m2iu

தமிழ் ஓவியா said...


கடவுள் புத்திசாலியா? யோக்கியமானதா?


ஒரு தகப்பன் பல குழந்தைகளைப் பெற்று விட்டு அவனது வீட்டின் புறக்கடையில் ஒரு கிணற்றை வெட்டி அக்கிணற்றுக்குச் சுற்றுச்சுவர் கட்டாமல் விட்டு விட்டுக் குழந்தைகளைப் பார்த்துக் கிணற்றிற்குச் சுற்று (பாதுகாப்பு)ச் சுவர் கட்டவில்லை; நீங்கள் புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வானேயானால் அத்தகப்பன் யோக்கியமான அறிவாளியான தகப்பன் ஆவானா?

அப்படித்தானே இன்று கடவுள் மக்களில் அயோக்கியர்களைப் படைத்துவிட்டுப் பாதுகாப்பில்லாமல் செய்து அவர்களிடம் மக்களைத் தொல்லைப்படச் செயகிறார்!

துஷ்ட மிருகங்களைப் படைத்து அவைகளிடம் சாது மிருகங்களைத் தொல்லை அனுபவிக்கும்படிச் செய்கிறார். கசாப்புக் கடைக்காரர்களைப் படைத்து அவர்களிடம் ஆடு மாடுகள் பலியாகும்படிச் செய்கிறார். மீன் பிடிக்கும் வலையர்களைப் படைத்து அவர்களிடம் தினமும் பலப் பல கோடி மீன்களைப் பலியாகும்படிச் செய்கிறார். பெண்களைப் படைத்து அவர்கள்மீது பலப்பல ஆண்களை ஆசைப்படும்படிச் செய்கிறார் - தந்தை பெரியார்.

ஆகவே, இவைகளிலிருந்து கடவுள் எவ்வளவு கருணாநிதி! எவ்வளவு புத்திசாலி! எவ்வளவு யோக்கியன்! கடவுளை நம்புகிற மக்களே, நீங்களே கூறுங்கள்.

Read more: http://viduthalai.in/page7/75800.html#ixzz2uCTIbv8J

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பிய துண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப் பதால் அவர் நமது வேண்டுகோளைக் கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன். நன்மையான தர்ம கைங் கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார் என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிர கஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதி கொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்து இப்பொழுது. அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய் விட்டது. இந்த மாய வஞ்சகம் நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக் காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக்கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி. சத்தியவந்தர், சர்வ வல்லமை யுள்ளவர். எங்கும் பரம் பொருளாக நிறைந்திருப்பவர் என்பனவற்றை நான் எப்படி நம்பக் கூடும்? மகா தயாநிதி சத்தியமே ஒரு உருவான மெய்க் கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித் திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி நிறைந்தது. சமத்துவத்திற்குப் பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமை களுக்கும் உறைவிடம்; மிருகத்தனமானது.

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான உலகத்தைச் சத்தியவந்தரான கடவுள் உண்டு பண்ணியிருக்க முடியுமா? பல ஆயிரக்கணக்கான கொடியர் இவ்வு லகில் ஜீவிக்கிறார்கள் இன்னும் பலர் முட்டாள்கள். அவர்களுக்கு மூளை என் பதே கிடையாது. அன்பு சத்தியம் நிறைந்த இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம் ஏழைகளை இம்சிக்கும் ராக்ஷதர் களும், சத்தியவந்தரைத் தொல்லைப் படுத்தி, அடக்கி, நசுக்கி, மண்ணுக்கு இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர் களும் இன்னும் பல ஆயிரம் கொள்ளை யடிக்கும். திருடர்கள் பலர் சுய நலமே உருக் கொண்ட தீயர்கள் எத்தனையோ லக்ஷம். இந்தச் சுயநலப் பேய்களே மகா சொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்துகிறார்கள். ஏழை களின் கதியோ அதோ கதி தான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகி, தரித்திரத்திற் குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிப் பசியால் வாடி மடிகின் றனர். முடிவில் மண்ணோடு மண்ணாய்ப் போகிறார்கள். உலகில் இந்தக் கொடு மைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்தக் கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்க முடியுமா?

வேதங்கள் பொய்: சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங் களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக்கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சிலர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாயையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மதவெறி கொண்டவர்களே உண்மையி ருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவானோ, கிறிஸ்துவோ, மகமது நபியோ உண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்களா? அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்தச் சத்தியம் மறைந் துவிட்டதா? அல்லது அதைப் போதிக்கப் புறப்பட்டவர்கள் திரித்து, சத்தியத்தையே மறைத்துவிட்டார்களா? இவர்கள் மனி தர்களைப் பாகுபாடு படுத்திப் பிரித்து வைத்தது ஏன்? சத்தியமென்றால் ஒற்று மையின்றிப் பல பாகுபாடுகள் உண்டு பண்ணிச் சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை: இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தேனெனக் கேட்கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்க வேண்டும். இது மனித சுபாவம்; ஒரு குணம் அது சதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

- லாலாலஜபதி

Read more: http://viduthalai.in/page8/75803.html#ixzz2uCTwqSO6

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. என்னும் மூடநம்பிக்கைக் கூடாரம் ஜோதிடர்களை நம்பி ஓடுகின்றனர்


ராஜ்காட், பிப்.23- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோதிடர்களுக்கு அர சியல்வாதிகளால் யோகம் தான். அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்றில்லாமல் குஜராத் மாநிலத்திலிருந்தும் மோடி போன்றவர்களின் ஆதரவு ஜோதிடர்களுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

ராஜ்காட்டில் அரசு அலு வலகங்களுக்குப் பின்புறமாக ஒரு சந்து அதில் இரண்டு அறைகளுடன் கூடிய இருட்டு உலகம். அங்கே துரிதகதியில் ஆட்கள் வருவதும் போவது மாக இருக்கிறதாம். அங்கே உடல்தளர்ந்து, வயது முதிர்ந்த, பார்வை இழந்த 80 வயது முதல் 90 வயதுக்குள் உள்ள பிரணாப் குமார் பட்டா என்பவர் ஆருடம் கணித்துக் கூறுபவராக உள் ளார். இவர் வாரணாசியில் ஜோதிடத்தைப் பயின்ற வராம். இவரை அந்த ஊரில் பெயர் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாதாம். ஆனால் குருஜி என்று கேட் டால் யார் வேண்டுமானா லும் சொல்லி விடுவார்களாம்.

மூத்த பாஜக தலைவர் ஒருவர் மோடிஜோதிடத் தைப் பெரிதும் நம்புவ தாகக் கூறுகிறார் . முன்னாள் முதல்வர் சிமன்பாய்பட் டேல், சபில்தாஸ் மேத்தா உட்பட பலரும் பட்டாவி டம் ஆருடம் கேட்பது உண் டாம். சாதாரண ஆளிலிருந்து முதல்வர்கள் வரையிலும் அரசியல் பிரபலங்களி டையே மிகுந்த செல்வாக்கு பெற்ற ஜோதிடராம். இவர் வசுந்தரா ராஜி எப்படியும் பிரதமர் ஆவார் என்கிறார். ஆனால், தேதி, நேரம் எல் லாம் தெரியாது என்கிறார்.

பட்டாவிடம் வாடிக்கை யாளர்களாக வரும் பிரபலங் கள்குறித்து கேட்டதற்கு அவர் கூற மறுத்ததுடன் ஜாதகத்துடன் வாருங்கள், பணம் கொடுங்கள், கேள்வி கேளுங்கள், பதிலைப் பெற்று இடத்தைக் காலி செய்யுங்கள் என்கிறார். என் கதவுகள் எல்லோருக்கும் திறந்தேவுள்ளது என்கிறார்.

மோடி ஜோதிடத்தை அறிய, தொழிலாக இருப்ப வர்களைமட்டும் நாடாமல் பொழுதுபோக்காக உள்ள வர்களையும் நாடுகிறாராம். அப்படி பொழுதுபோக்காக ஜோதிடம் சொல்பவர் தேஜாஸ் மேத்தா என்பவர். இவர் அமெரிக்காவில் இயங் கும் ஸ்டெம்-செல் கம் பெனியின் உரிமையாளராம். குஜராத்தில் ஜனசங்கத்தைத் தோற்றுவித்தவரும், ஜோதி டருமாகிய யசோதர் மேத்தா வின் பேரன்தான் தினேஷ் மேத்தா. மாநில நீர்ப்பாசனத் துறை ஊழியர் பி.சி.படேல் என்பவர் மோடிக்கு மூன்று நிகழ்ச்சிகளுக்கு நேரம் கணித்து சொல்லியுள்ளார். அவர் அமைச்சரவையில் உள்ளவர்களும் அவ்வப் போது நேரம் குறித்துத்தரச் சொல்வார்களாம்.

ஜோதிடர்களை நம்பி குறிகேட்பதும், எண்ணியல் பார்த்துப் பெயரில் மாற்றம் செய்வதும், குறித்த இடங் களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதும் என்று மூட நம்பிக்கையின்பிடியில் அரசியல்வாதிகள் பலரும் சிக்கிக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட அரசியல் பிரபலங்களின் வரிசையில் இந்தியா முழுவதுமிருந் தும், பலரைப்பற்றியும் தக வல்கள் வெளிவந்துள்ளன. இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கரு நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவர் மகன் குமாரசாமி, முன்னாள் முதல்வர் ஷட்டர் என்று பட்டியல் நீளுகிறதாம். மேற் கண்ட செய்திகளை ஆங் கில நாளேடு ஒன்று விவர மாக வெளியிட்டுள்ளது. மோடி தரப்பில் பதில் வருமா?

இந்திய அரசியலில் தற் போது நவீன தொழில்நுட்ப யுக்திகளைக்கொண்டு களம்காணுவதும், சமூக வலைதளங்கள், திட்ட மிடப்பட்ட நிகழ்ச்சிகள், நவீன, திட்டமிடப்பட்ட பிரச்சாரக் கூட்டங்கள் என்று பல்துறை, ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள் வதுமாக இருந்தாலும், 30-40 ஆண்டுகளாக இல்லாத தொழில்நுட்பங்களுடன் இன்னமும், தம் கொள்கை, தம் கட்சி, செயல்பாடுகளை, வாக்காளர்களை நம்பாமல் ஜோதிடர்களையும், ஜோதி டத்தையும் நம்பி அவர்கள் பின் செல்லும் மோடி போன்ற அரசியல்வாதிகள் சாதிக்கப் போவதுதான் என்ன? என்று விவரம் தெரிந் தவர்கள் கேட்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/75815.html#ixzz2uCUdaUhF

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு - 2


பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன், குஜராத் மாநிலம் ரேவாரி கிராமத்தில் 15.9.2013 அன்று பேசிய மோடி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள கட்ச் பகுதிகளில் காவல் புரியும் நமது இராணுவ வீரர்களின் பயன் பாட்டிற்கு, நர்மதா ஆற்றிலிருந்து குடிநீர் வருவதற்கு தன்னுடைய முயற்சிதான் காரணம் என்றும், இராணுவ வீரர்கள் மீது அதிக அன்பும் மதிப்பும் இருக்கும் காரணத்தினால், 700 கிலோமீட்டர் தூரத்திற்கு, குழாய் அமைத்து, தண்ணீர் செல்ல, தான் ஏற்பாடு செய்த தாகவும் பேசினார், மோடி. இதில் உண்மை இருக்கிறதா? கட்ச் பகுதிக்கு, குழாய் மூலமாக குடி நீர் வழங்கும் மிகப் பெரிய திட்டம் 4700 கோடி ரூபாய் செலவில் சர்தார் சரோவர் அணை மற்றும் மாகி குழாய் திட் டத்தின் மூலாமக 1999-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

மாகி குழாய் திட்டத்தின் மூலமாக நர்மதா ஆற்று நீர், ஆறு மாவட்டங்களில், 29 நகரங்களுக்கும், 1467 கிராமங்களுக்கும், 880 கோடி ரூபாய் செலவில், குடிநீர் தரப்பட்டதை, 2001ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய குஜராத் முதல்வரான கேசுபாய் படேல் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2002-க்குள் கட்ச் பகுதிக்கும் இந்த திட்டம் சென்றடையும் என்றும் அறிவித்தார் கேசுபாய். 22.1.2001 அன்று, மாகி குழாய் திட்டம் கதாதா மாவட்டத்தில் துவக்கப்பட்டது. துவக்கியவர் கேசுபாய் படேல். ஆசிய வளர்ச்சி வங்கியின் 600 கோடி ரூபாய் கடனில், இத்திட்டம், கட்ச் பகுதிக்கும் சென்றடைந்தது 2002 ஆம் ஆண்டு. 7.10.2001 அன்றுதான், நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-இல் இத்திட்டம் கட்ச் பகுதிக்கும் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பாதையை கடந்து சென்றது, இறுதி யாக எல்லைப் பகுதிக்கு சுமார் நூறு கி.மீ. தூரம் உள்ள பாதையை 2004-ல் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத் திறமை மிக்க? மோடி ஆட்சியில், நூறு கி.மீ. கடக்க பத்து ஆண்டுகள் ஆகியது. இறுதி யாக ஆகஸ்டு 2013-இல் தான் இராணுவ வீரர்கள் இருக்கும் எல்லைப் பகுதிக்கு இக்குடிநீர்த் திட்டம் சென்றடைந்தது. கேசுபாய் படேல் முதல்வராக இருந்து 1999-இல் துவக்கப்பட்ட இந்த குடி நீர் திட்டத்தை, மொத்தம் உள்ள 600 கி.மீ. தூர குழாய் திட்டத்தில், 500 கி.மீ. வரை கேசுபாய் படேல் ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப் பட்ட ஒரு திட்டத்தை, அக்டோபர் 2001-இல் முதல்வ ரான மோடி, தானே துவக்கியதாக 2013இல் கூறுகிறார் என்றால், இதற்குப் பெயர் தான் மோடி புளுகு.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/75819.html#ixzz2uCUzolsl

தமிழ் ஓவியா said...


ஊ.பு.அ.ச.


இதன் விரிவாக்கம் ஊ.பு.அ. (WPA) சவுந்தர பாண்டியன் ஆகும். தந்தை பெரியார் அவர்கள் முயற் சியால் செங்கற்பட்டில் 1929ஆம் ஆண்டு நடை பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டின் தலைவர் இவர் - அதனைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டவர்.

1928ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை இராமநாதபுரம் மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக இருந்தார். 1943-1947 கால கட்டத்தில் மதுரை மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக விளங்கினார். மூன்று முறை சென்னை மாநில சட்ட மன்ற உறுப்பினராக இருந் தார். டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் இவர் கொறடாவாகவும் பணி யாற்றினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக பாண்டியனார் இருந்தபோது பிறப்பித்த அவரின் ஆணை வரலாற் றில் என்றும் பேசப்படக் கூடிய ஒன்றே!
இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திரா விடர்களைத் தமது பஸ் களில் ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும், டிக்கெட்டில் ஆதிதிராவி டர்களுக்கு டிக்கெட் கொடுக் கப்பட மாட்டாது என்று நிபந்தனை ஏற்படுத்தியி ருப்பதாகவும் அறிகிறோம். இவ்வழக்கம் பிரயாணி களுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக் கிறது. ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ, டிக்கெட்டில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு ரத்து செய்யப் படும் என இதனால் எச்சரிக்கை செய்கிறோம்.

இந்த சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் அந்தத் தடை விதி நீக்கப் பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்துகொள்ள வேண்டும் என்று அந்தக் காலத்தில் பாண்டியனார் ஆணை பிறப்பித்தார் என் றால் அது என்ன சாதார ணமா! வளர்ந்த இந்தக் கால கட்டத்தில்கூட தேநீர் கடை களில் இரட்டை கிளாஸ் முறை இருக்கிறது என்றால் இன்றைக்கு 80 ஆண்டு களுக்கு முன் இப்படி ஓர் ஆணை பிறப்பிப்பதற்கு எத்தகைய கொள்கை உரமும், துணிவும் இருக்க வேண்டும். நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றம் பெற்ற சேலம் மாநாட்டில் (1944) தந்தை பெரியாருக்கு எதிராக ஒரு குழு செயல் பட்ட நிலையில், அவர்க ளுக்கு பாண்டியனார் உறு துணையாக இருப்பார் என்று பேசப்பட்ட நிலையில், அது உண்மையில்லை என்று தந்தை பெரியார் பக்கமே உறுதியாக நின்றார்.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் ஜாதிப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்ற தீர்மானத் தின் அடிப்படையில் அது வரை அவர் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டி ருந்த ஜாதி வாலை அறுத் தெறிந்தார். இந்தியாவி லேயே பெயருக்குப் பின் னால் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்ள வெட் கப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் அதற்குப் பாண்டியனார் போன்றவர் கள் வழி காட்டியல்லவா! - மயிலாடன்

குறிப்பு: இன்று பாண்டிய னாரின் நினைவு நாள் (1953).

Read more: http://viduthalai.in/page1/75769.html#ixzz2uCW6lQVI

தமிழ் ஓவியா said...


பெரியாரின் மண்ணில் ஒழிந்து போன தேவதாசி முறை கருநாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை!


கருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெய ரில் படிப்பறிவில்லா மக் களை ஏமாற்றி இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட் டியார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் போன்றோர் நடத்திய சமூகப்போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்து போனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரி விக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர் அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத் தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண் களுக்குப் புனிதமான ஒரு சடங்கு போலவும், ஆல யங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை கார ணமாக சிலர் (பெரியார் பெயரைக்குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது பொறாமையும் மதத்தின் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப்போதே மிகவும் சல சலப்பை ஏற்படுத்தியது.

அவரின் ஆபாசமான கூற்றை உச்சநீதிமன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் மிகப் பெரிய அவமானம் என்று கூறி இருக்கிறது. கருநாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன் றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்தச் கோவில் தேவதாசி விழாவை சிறப்பாக நடத்தி வந்தது. போராடும் உளியம்மா

இந்தக் கோவிலின் முதிய தேவதாசியான உளி யம்மா என்பவர் நீண்ட காலமாக இந்தப் பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால் நகர நிர்வாகம் மற்றும் பிர பலங்களின் தலையீடு கார ணமாக அவரால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன்வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எஸ் எல் பவுண்டே சன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய் தது அதில் உதரங்கமல துர்க்கையம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம்பரிய தேவதாசி முறையையும் சின்னாபின்னமாக்கப் படும் பெண்களின் வாழ்க் கைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் சாட்டை! சமூகத்தின் மிகவும் கொடிய பழக்கமாக இன் றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதி மன்றமே ஒருமுறை அதிர்ந்து போனது, தேவதாசியாக மாற்றப்படும் விழா (13.02.14) அன்று இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசார னைக்கு எடுத்துக்கொண்டு இந்த மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்;

இந்த சம்பவம் குறித்து கருநாடக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் குறிப் பிடப்படுவதாவது : இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என் பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமானச் சின்னமாகும், இந்த சம்பவம் பற்றி உட னடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறுவ தைத் தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண் களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பான பதிவு செய்யப் பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட்டுள்ளது. சமூக நீதிக்கான கி.வீர மணி விருதுவழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கி றோம். சமூகத்தில் பெண் கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன் றளவு குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழு வதும் தேவைப்படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தர வின் படி அவரின் வார்த்தை உண்மையானது.

இப்பொழுதுள்ள கரு நாடக முதல் அமைச்சர் சித்தாராமையா பகுத்தறிவு வாதி அவர் தலையிட்டு இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page1/75770.html#ixzz2uCWGPSKT

தமிழ் ஓவியா said...


மோடியின் திருவிளையாடல்கள்!


மோடியின் திருவிளையாடல்கள்!

மோடி பயன்படுத்தும் அதானியின் தனியார் விமானம்

அகமதாபாத்: அய்ந்து ஆயிரம் கோடி ரூபாய் இழப் புக்கு மத்திய தணிக்கைத் துறை ஏற்கெனவே அதானியை குற்றம் சாட்டியுள்ளது.

பிரபல தொழிலதிபர் களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோ ருக்கு சாதகமாக மோடி செயல்பட்டுவருவதாக மத் திய தணிக்கைத்துறை மோடி மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில் தொடர்ந்து அவர் செல்லுமிடமெல் லாம் அதே தொழிலதிபர் களுக்குச் சொந்தமான நிறு வனத்தின் விமானத்தைத் தான் பயன்படுத்துகிறா ராம். இணையத்தில் அவர் களுக்கு ஆதரவாக ஏன் எங் கள் பணத்தை பயன்படுத் துகிறீர்கள் என்று ஆசாத் ஹிந்துஸ்தானி என்பவர் இணையத்தில் கேட்கிறார்.

நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் நீக்கமாம்

வதோத்ரா: குஜராத் மாநிலம் வதோத்ரா நகரில் கடந்த 15-ஆம் தேதி உள் ளூர் விளையாட்டு மைதா னம் திறப்பு விழா நடை பெற்றது. ஏராளமான மாண வர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், மாநில முதல்வரும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட் பாளருமான நரேந்திர மோடி மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், வதோத்ரா பள்ளியில் உள்ள 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். மோடி பங் கேற்ற விழாவை புறக் கணித்ததால் அவர்களை நீக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர் சங்கம் கடிதம் எழுதியுள் ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் பள்ளியின் முதல் வர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசியல் ஆதாயத்துக்காக பள்ளி மாணவர்களை மோடி பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/75772.html#ixzz2uCWQ18b0

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு -1




நரேந்திரா தாமோதர்தாஸ் மோடி, (பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் முழுப் பெயர்), மற்ற மாநிலங்களில் பேசுகையில், குஜராத்தில் மின் உற்பத்தி தன்னி றைவு பெற்றுவிட்டதாக கூறி வரு கிறார். இதில் உண்மை இருக்கிறதா?

பாஜகவின் விவசாயிகள் சங்கமாக இருக்கும், பாரதீய கிசான் சங், விவ சாயிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக குஜராத் இருந்தால், ஏன், விவசாயிகள் இப்படி ஓர் போராட்டத்தை நடத்த வேண்டும்?

தனியார் நிறுவனங்களில் இருந்து அதிக விலை கொடுத்து 15,300 மெகா வாட் மின்சாரத்தை குஜராத் அரசு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா விலேயே, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தனியார் நிறுவனங் களிடமிருந்து வாங்கும் மாநிலமாக குஜராத் முதலிடம் வகிக்கிறது.

தமிழ் நாட்டில், முதல் 100 யூனிட் வரை, ஒரு யூனிட் ஒரு ரூபாய் என்கிற நிலையில், குஜராத்தில், ஒரு யூனிட் ரூ. 3.60 ஆக உள்ளது. 200 யூனிட் வரை தமிழ் நாட்டில் ரூ.1.50 என் றால், குஜராத்தில் ரூ.4.25 ஆக உள் ளது. இதை மேலும் உயர்த்திட குஜ ராத் அரசிடம் தனியார் நிறுவனங்கள் கோரி வருகின்றன.

குஜராத்தில், பாஜகவிற்கு இந்த தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான் அதிக நன்கொடைகளை தந்துள் ளன என்பதை தேர்தலை பற்றிய ஆய்வு செய்த சனநாயக சீரமைப்பு சங்கம் என்ற அரசு சாரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் மின் இணைப்பு கேட்டு வந்த மூன்று லட்சம் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3945 விண்ணப்பங்களுக்குத் தான், மின் இணைப்பு தரப்பட்டுள்ளன.

2011 கணக்கெடுப்பின்படி, குஜ ராத்தில், மின்சாரம் இல்லாத 11 லட்சம் வீடுகள் உள்ளன. அதில் 9 லட்சம் வீடுகள், கிராமத்தில் தான் உள்ளது என பாரீஸில் வாழும் சமூக ஆய்வாளர் கிறிஸ்டபர் ஜாபரிலெட், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக் கையில் 17.4.2013 எழுதிய கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

இது தான், குஜராத்தில் மின் உற்பத்தி பற்றிய நிலை.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page1/75768.html#ixzz2uCWnRwDC

தமிழ் ஓவியா said...


பல்லாவரத்துப் பண்டிதர்


திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் தமிழ்நாடு திராவிடன் பத்திரிகைகளில் காணப்படுகின்றது.

அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தைத் திருவாளர்கள் தண்டபாணிப் பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்டதாகவும் பதில் சொல்ல இயலா மல் திக்குமுக்காடியதாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது.

அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத்தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்துகொண்டு போனதாகவும் அதை அக்கூட்டத் திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்த தாகவும் திராவிடனில் காணப்படுகின்றது.

அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை குடிஅரசில் அவைகளை எடுத்து எழுதி தக்க சமாதானங்கள் வெளியாக்கப்படும்.

- குடிஅரசு - தலையங்கம் - 29.07.1928

Read more: http://viduthalai.in/page1/75743.html#ixzz2uCXWUZxm

தமிழ் ஓவியா said...


விஸ்வ நேசன்

திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந.நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து விஸ்வ நேசன் என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது.

அது சீக்கிரத்தில் வெளியா கலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் போலவும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர் களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல் சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டிய தான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம்.

அன்றியும் அதன் அதன் பத்திராதி பராக இருக்கப் போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியார்வர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப்பட்டு, திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணை யிலிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை நடைபெறும் வரையில் அது பெரிதும் சுய மரியாதைக் கொள்கைகளையே ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால் இத்தகைய பத்திரிகையைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02.09.1928

Read more: http://viduthalai.in/page1/75744.html#ixzz2uCXoISCK

தமிழ் ஓவியா said...


திரு.சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்


திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும்.

(நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகு மென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூடநம்பிக் கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம்.

சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்ட சபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக் கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டபோது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார்.

திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந் தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும்.

இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page1/75746.html#ixzz2uCY2bWI6

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானது மான ஜாதியொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம்.



நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப் படல் வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/75747.html#ixzz2uCYJgffW