Search This Blog

28.6.13

மழை வேண்டி யாகமாம்! அண்ணா யாகத்தை ஏற்றுக் கொண்டவரா?

மழை வேண்டி யாகமாம்! 

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே போல கிருஷ்ணா கால்வாய் நீரும் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வராததால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய தண்ணீரும் நிறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறு எல்லா திசைகளிலும் தண்ணீர் கிடைக்காததால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 30 அடிக்கு கீழே சென்று விட்டது. மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் லாரிகளில் அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத் துகின்றனர்.

இந்நிலையில், மழைக்காக சிறப்பு யாகம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மாநகரில் உள்ள 28 கோயில்களில் ஜூன் 20 முதல் வரும் ஒன்றாம் தேதி வரை யாகங்கள் நடத்தப்படுகின்றன.

இந்து அறநிலையத்துறை சார்பில் ஜூன் 20 காலை 7.30 மணி முதல் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், புரசை வாக்கம் கங்காதேஸ்வரர் கோயில், தம்பு செட்டித்தெரு காளிகாம்பாள் கோயில் ஆகிய 4 கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. 

ஒவ்வொரு நாளும் 4 கோயில்கள் வீதம் இந்த யாகங்கள் நடத்தப் படுகின்றன. இவ்வாறு நாளேடுகளில் செய்தி ஒன்று வெளி வந்துள்ளது. இதனைப் படிக்கும் பொழுது எவ்வளவு பாமரத்தனமாக இந்த ஆட்சி நடக்கிறது என்று ஒரு பக்கத்தில் பரிதாபமும் இன்னொரு பக்கத்தில் பகுத்தறிவு ரீதியான சிந்தனையும் எழுகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் வலியுறுத்துகிறது (51A(h).

ஒவ்வொரு குடிமகனின் கடமையே இப்படி இருக்க வேண்டும் என்கிற போது குடி மக்களை ஆளும் ஓர் அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

விஞ்ஞான மனப்பான்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; மதச் சார்பற்ற அரசு குறிப்பிட்ட மதத்தின் (இந்து) கோயில்களில் யாகங்களை நடத்தச் சொல்லுவது எந்த வகையில் சரி? இதன் மூலம் குறிப்பிட்ட மதத்திற்கு இந்த ஆட்சியில் மரியாதையும் ஒரு சார்பும், செல்வாக்கும் அதிகம் என்ற கருத்து உருவாகாதா?

பல மதங்களைக் கொண்ட, மத நம்பிக்கையற்ற மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஓர் அரசு நடந்து கொள்ளலாமா?

மழை பொழிவதற்குக் காரணம் - கடவுள்தான் என்று இந்த அரசு நம்புகிறதா? அப்படி என்றால் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கூறி கருநாடக மாநில அரசை எதிர்த்து எதற்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுகிறார் தமிழ்நாடு முதல் அமைச்சர்?

மேட்டூர் அணையில் தடபுடலாக யாகத்தை நடத்த வேண்டியதுதானே? இது என்ன இரட்டை நிலை? மழை ஏன் குன்றியது என்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு; சுற்றுச்சூழல் பாதிப்பு மிக முக்கிய மான காரணம் என்கிறது அறிவியல். அதெல்லாம் இல்லை வருண பகவானின் கோபம் தான் காரணம் என்கிறது அண்ணா தி.மு.க. அரசு.

அண்ணா ஒரு முழு பகுத்தறிவுவாதி; அண்ணா யாகத்தை ஏற்றுக் கொண்டவரா? பெரியார், அண்ணா கொள்கைகளை திராவிட என்னும் மூடு திரையோடு கொச்சைப்படுத்தும் வேலையில் இந்த ஆட்சி இறங்கி இருப்பதாகத் தெரிகிறது - இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனைக் கேட்டால்கூட மழை பெய்வதற்கும், பொய்த்துப் போவதற்குமான காரணங்களைச் சொல்லி விடுவானே!

ஆனால் இந்த விவரம் ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை என்பது பரிதாபமே!

இதற்கு முன்பே கூட எம்.ஜி.ஆர். ஆட்சியில் மழை வேண்டி புழல் ஏரிக்கரையில் அமர்ந்து கொண்டு குன்னக்குடி வைத்தியநாதய்யரை, அமிர்தவர்ஷிணி ராகத்தில் பிடில் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டதே! கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்ததோ மழை!
ஆட்சியாளர்களின் நம்பிக்கையின் அடிப்படை யிலேயேகூட கேட்கிறோம். மக்களுக்குமழை வேண்டும் என்ற அறிவும், கருணையும் இல்லாதவன்தான் கடவுளா?

யாகம் நடத்தித்தான் அவனுக்குத் தெரிவிக்க வேண்டுமா? அல்லது ஆண்டவனைத் திருப்திப்படுத்த வேண்டுமா?

அப்படி என்றால் அந்த ஆண்டவனைவிட பொறுப்பற்றவன், புகழ்ப் போதைக்கு தற்பெருமைக்கு அடிமைக்காரன் வேறு யாராக இருக்க முடியும்?

மழை பொழிவதற்கு யாகம் நடத்த வேண்டும் என்றால் உத்தரகண்டில் மழை கொட்டித் தீர்த்ததே - வெள்ளம் பெருக்கெடுத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததே - அதனைத் தடுப்பதற்கு எந்த யாகத்தை நடத்த வேண்டுமாம்?

கடவுள் என்ன போக்கிரியா? தேவையான இடத்தில் மழை பொழியாமல் இருப்பதும், தேவையற்ற இடத்தில் கொட்டித் தீர்ப்பதும்தான் கடவுளின் யோக்கியதையா?

2013ஆம் ஆண்டிலும் நிலவில் குடியேற்ற முன்பதிவு செய்து கொள்ள ஆயத்தமாகும் கால கட்டத்தில் ஒரு  மாநில ஆட்சியே மூடநம்பிக்கையின் முகவரியாக  இருப்பது வெட்கக்கேடே!
                  ----------------------------"விடுதலை” தலையங்கம் 27-6-2013

34 comments:

தமிழ் ஓவியா said...


மும்மாரி?


வறட்சியால் நாடு வாடுகிறது. விவசாயம் வேண்டாத தொழிலாக ஆகிவிட்டது இந்த நிலையில் - நாட்டில் மழை பொழியவில்லை என்று அண்ணா பெயரில் உள்ள அதிமுக அரசு கோயில்களில் யாகங்களை நடத்தச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. (மக்களைத் திசை திருப்ப இதுதானே வழி?)

முதல் அமைச்சருக் கும் - இந்த அரசுக்கும் பக்தி அதிகம் - அதிலும் இந்து மதக் கடவுள்களி டத்தில் ஏகப்பட்ட பக்தி! யாகம், பூஜை, புனஷ் காரம் இவற்றில் ஏகப்பட்ட நம்பிக்கை! அதனால் இதோ ஒரு எடுத்துக் காட்டு!

விவேக சிந்தாமணி என்னும் காவியம், அதில் ஒரு பாடல் வருகிறது.

வேத மோதிய
வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர்
நெறியினுக்கோர் மழை
மாதர் கற்பிலா
மங்கையர்க்கோர் மழை
மாத மூன்று
மழையெனப்
பெய்யுமே என்பதுதான் அந்தப் பாடல். பொருள் எளி தானதே பொழிப்புரைகள் தேவைப்படாது.

இதன்படி மாதம் மும் மாரி பொழிய வேண்டும் இப்பொழுது அவ்வாறு பொழியவில்லை என்றால் என்ன காரணமாக இருக்க வேண்டும்?

அதுவும் ஆன்மீக வாதிகள் பார்வையில் பார்க்க வேண்டும் அப் படிப் பார்க்கப் போனால்...

ஒழுங்காக வேதம் ஓதும் வேதியர்கள் இந்த நாட்டில் இல்லை; நீதி யோடு ஆட்சி செய்யும் அரசு இங்கு இல்லை;

கற்புடைய மங்கை களுக்குப் பஞ்சம்! இவற் றின் காரணமாக மும் மாரிப் பொழிய வேண்டிய மழை பொய்த்து விட்டது என்று கொள்ளலாமா? வேறு வழியில்லை அப்படித்தானே பொருள் கொள்ள வேண்டும்.

பக்தி முற்றிப் போன (ப)மதைகள் சொல்லட் டும் சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த சாமி யார்கள்தான் சொல்லட் டும். புராணங்களைப் பிளந்து கட்டும் புலவர்கள் தான் வாய்த் திறக்கட்டும்.

மாதம் மும்மாரி பொழியாமல் போனதற்கு இவைதான் காரணம் என்பதை ஒப்புக் கொள் கிறார்களா?

இப்பொழுது ஒன்றே ஒன்றுதான் அவர்கள் முன்னிலையில்! ஒன்று விவேக சிந்தாமணியை ஒப்புக் கொள்வதாக இருந் தால் குறிப்பிடப்பட்ட மூன்று பேர்களின் நிலை என்ன என்பதுபற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் விவேக சிந்தாமணிகள் கூறுவதை எல்லாம் இந்தக் காலத் தில் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று நகுதல் வேலையில் இறங்க வேண்டும். எந்த இடத் தில் பக்தர்கள்? எந்த இடத்தில் இந்த அரசு?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!

அதிகார மய்யம்?

செய்தி: மத்திய அரசுக்கு மன்மோகன்சிங், சோனியா என இரண்டு அதிகார மய்யங்கள் உள்ளன என்று குற்றம் சாற்றுகிறோம். - நரேந்திர மோடி

சிந்தனை: பி.ஜே.பி.,க்கு பி.ஜே.பி. தலைமை - அதற்குமேல் ஆர்.எஸ்.எஸ். தலைமை என்ற இரு அதிகார மய்யங்கள் இருக்கின்றனவே, அது எப்படி?

தமிழ் ஓவியா said...


பூமியைப் போன்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு


லண்டன், ஜூன் 27- பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ் ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட் டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. அதிநவீன தொலை நோக்கி மூலம் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இந்தப் புதிய கோள்கள் கண்டுபிடிக் கப்பட்டன.

புதிதாகக் கண்டுபி டிக்கப்பட்ட இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரிய தாக உள்ளன. பூமியைப் போலவே இருக்கும் இந்தக் கோள்கள் அதிக வெப்பமாகவோ, அதிக குளிராகவோ இல்லாமல் போதிய நீர் ஆதாரத் துடன் இருப்பதாக விஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தூரம் கொண்ட இந்தக் கோள் கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட அருகில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனி தன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட கோள் களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறை. இந்தக் கோள்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன.

தமிழ் ஓவியா said...


பழக்க வழக்கங்கள்...


பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக்கேடானவனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்கவழக்கங்களால் தான் மனிதன் அயோக்கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


சுத்தமான குடிநீர் லிட்டர் 5 பைசாவுக்கு!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நானோ தொழில்நுட்ப முறை யில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் அய்.அய். டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செல வாகும் சூழ்நிலை உள்ளது.

மனிதனின் அடிப்படை தேவை யான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, அய்ந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், நானோ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், வெள்ளி அயனிகள் நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண் கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்து விடும் என் பதால், அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்தேன்.

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து, உயிரி பாலிமர் பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்; தொடர்ந்து பயன் படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண் களுக்கு இத்தொழில் நுட்ப பயிற்சி கொடுத்தால், வேலை வாய்ப்பு அதிகரிப் பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.

தமிழ் ஓவியா said...


மார்கழி மாத கொக்கோகம்! - துரை. சந்திரசேகரன்


மார்கழி மாதம் என்றால் படுகுஷி! குமரிப் பெண்கள் ஆடுவதென்ன! பாடுவதென்ன!! பாராயணம் செய்வதென்ன!!! என்ன, என்ன, என்ன, என்று கே.பி. சுந்தராம்பாள் பாடுவது மாதிரி சொல்லலாம்.

விஷயம் இல்லாமலா இருக்கும்? பாடுகின்ற பாடல்களை பார்க்கும் பொழுதே தெரியவில்லையா? உள்ளுக்குள்குமைந்து கிடக்கிற உணர்ச்சிகளைப் புரியும் வார்த்தைகளில் சொல்லக் கூச்சமாக இருக்காதா?

பக்தை என்ற பெயரில் பருவக் கொந்தளிப்பைப் பாட்டாகப் பாடி வைத்துள்ளார்கள் அல்லவா... அதை சந்தடி சாக்கில் பாடித் தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் மார்கழி மாதம் அவ்வளவுதான் - அதற்கு மேல் பூச்சுதான் பக்திப் பரவசம். பாடல்களில் ஒன்றிரண்டு தட்டி விடுகிறோம் படியுங்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பள்ளியெழுச்சிப் பாடல்:
பொங்குபாற்கடல்
பள்ளிகொள்வானைப்
புணர்வதிலோ ராசை - என்
கொங்கைகள் கிளர்ந்து குமைந்து குதூகலித் தாடென் ஆவியை யாகுலஞ்செய்?

பாடலை பார்த்தீர்களா?

பக்தையின் எண்ணம் எப்படி பக்தியைப் பரப்புகிறது! சபாஷ்! முடிந்தவர்கள் மார்கழி மாத பஜனையைத் தங்கள் வீட்டுப் பெண்களிடமும் சொல்லிக் கொடுங்கள். (கையில் கிடைத்ததை எடுத்து பக்தர்களை அடித்துவிடப் போகிறார்கள்..!)

இந்த விஷயத்தில் கிளைமேக்ஸ் பயில்வான் ஆண்டாள்தான். அவள் பாட்டையும் கேட்போமே!

குத்து விளக்கெரியக் கொட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
வாய் திறவாய்
செப்பன்ன மென்முலை
செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே!
துயிலெழாய்

நப்பின்னைக்கு எது எது எப்படி இருக்கிறது என்பதையும் நப்பின்னையின் கொங்கைமேல் எதையோ வைத்து இதமாக - சுகமாக உறங்கும் கண்ணனை எப்படி வர்ணித்திருக்கிறது திருப்பாவை!

குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கிய பக்தி சிவனாரைப் புகழ்ந்து ஆபாசக் களஞ்சியமாகத் திகழ்வதைப் போல், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை போன்றவை விஷ்ணுவைப் புகழ - பக்தர்களின் இச்சையை தணிக்க கற்பனையாகப் படைக்கப்பட்ட கொக்கோகப் பாடல்களே ஆகும்.

இப்படிப்பட்ட பாடல்களை மார்கழி மாதத்தில் பாடினால் மாதம் மும்மாரி மழை பொழியுமாம்; வயலெல்லாம் செந்நெல் விளைந்து குலுங்குமாம்!

ஓங்கி யுலகளந்த
உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச்
சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கி பெருஞ்செந்
நெலூடு கயலுகள
என்பது பாடல்.

கடும் வறட்சி என்றெல்லாம் சொல்லி எங்கும் காவடித் தூக்கி செல்ல வேண்டியதில்லை. மத்திய அரசும் பார்வையாளர்களை அனுப்ப வேண்டியதில்லை. உத்தமன் பேர் பாடினால் போதுமானது. பக்தர்கள் நம்புவார்களாக! பம்பு செட்டு எந்தப் பக்தர்களாவது வைத்திருந்தால் அதை விற்று விட்டு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி மும்மாரி பொழியச் செய்வார்களாக!

தமிழ் ஓவியா said...


பாவ புண்ணியம்


சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப் பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே. பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பி னராகவும், புண்ணியம் செய்த வர்கள் உயர் வகுப்பினராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக்கூட்டத்தில் நேரு

தமிழ் ஓவியா said...


யார் காரணம்?


ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார் கள், நபிகள், தேவகுமா ரர்கள் என்பவர்கள் கடவு ளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கி யர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
ஈ.வெ.ரா. பகுத்தறிவு 1.9.1935

தமிழ் ஓவியா said...


வடமொழியில் சிபாரிசா?


தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார் ஒரு சொல்லால் ஒரு
சாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடி வந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?

- புரட்சிக் கவிஞர்
குயில், புதுச்சேரி, 12.8.1958

தமிழ் ஓவியா said...


வேண்டும்



பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


பிற நாட்டைப் போற்றுவோர் பிறந்த நாட்டைத் திருத்தாதது ஏன்?

ஏற்றத் தாழ்வு சுவிட்சர்லாந்து
மக்களுக்குள் இல்லை என்றே
இங்குளோர் புகழ்ந்து பாடுவார் - ஆனால்

இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை
ஏற்றிப் போற்றி எத்தில் வாழும்
ஈனரெல்லாம் கூத்து ஆடுவார்.

மாற்றவிட மாட்டோ மென்று
மடமையை வளர்ப்போர் தீய
மதத்தின் பேரால் ஆட்டம் போடுவார் - பல்லவ

மன்னராண்ட காலம் முதல்
பவுத்தர் சமணர் கொல்லப்பட்ட
பகைமை யோங்க கூட்டம் கூடுவார்.

கழுவிலேற்றி சமணர்களைக்
கொன்று குவித்த கொடுமையினை
கனவில்கூட மறக்க முடியுமா? - அன்பால்

கொல்லாமையைக் கடைப்பிடித்த
பவுத்தர்களை நாட்டைவிட்டே
விரட்டியதை மறக்க முடியுமா?

உழுத அவர் நிலத்தை யெல்லாம்
வன்முறையில் கவர்ந்துகொண்ட
வஞ்சகத்தை மறக்க முடியுமா? - அந்தோ

அடிமை யாக்கி அவர்களையே
ஆதிக்க வெறிபிடித்தோர்
அடக்கியதை மறக்க முடியுமா?

ஜாதிவேற்றுமை கற்பிக்கும்
சதுர் வருணத்தைப் புகுத்தி
தமிழினத்தைப் பிளக்க வில்லையா? - கொடிய

தீண்டாமையைப் பவுத்தர்மீது
சுமத்தி அந்த தூயவரைத்
தாழ்த்தப்பட்டோர் ஆக்கவில்லையா?

வேதியர், நிலக்கிழார்கள்,
வேந்தர் ஒன்றாய்ச் சோந்துகொண்டு
உழைப்பவரை ஒடுக்கவில்லையா? - இன்றும்

ஒற்றுமையாய் வாழ்வதற்கு
வழிவகைகள் கண்டிடாமல்
வன்முறையைத் தொடரவில்லையா? (ஏற்றத் தாழ்வு)

வீ. இரத்தினம்,
பெங்களூரு

தமிழ் ஓவியா said...


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப் போது ஓரிருமிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இனிசுலின் ஏறி, இறங்கும்!

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதைப் பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள். அது மட்டு மல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலி னின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா? என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத் தால் தண்ணீர் அருந்திக் கொள்ள லாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாய மில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது, நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி, பெற்றுக் கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி, அளவுக்கு அதிக மாக தண்ணீரை அருந்த தேவை யில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில், நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கி விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண் ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை பாதித்து விடும்.

நம்மில் பெரும்பாலானோர் உண வுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவ தாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக் கிறது என்பதை மக்கள் அறியா மலேயே இருக்கின்றனர்.

உணவு செரிக்காமல் வயிற்று வலி என்று மருத்துவர்களிடம் செல் வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ் வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் வேண்டிய மட்டும் தாராளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச் சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே, சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள். இதோ! நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாமல் அதிக உப்புள்ள உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி தண்ணீரை அருந்தச் செய்து விடும். அதே போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடா தீர்கள் அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக் குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைப் போக்க தண்ணீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி கொண்ட உமிழ் நீருடன் சேர்த்து விழுங் கினால் அது உணவை வயிற்றில் சுரக் கும் திரவத் துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்து விடும்.

நன்றி: இன்றைய வேளாண்மை ஜூன் 2013


தமிழ் ஓவியா said...


சூன் 21: சூரியன் ஸ்தம்பிப்பு?


நாம் வாழும் பூமி தன்னைத் தானே நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டு, நொடிக்கு 11 கி.மீ. வேகத்தில் நீள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும்போது சூன்21 அன்று தன் அச்சில் கடகரேகையில் இருந்து திரும்புகிறது. பூமி தெற்கு நோக்கி பெயர்ந்ததால் சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததைப்போல் தோற்றம் தெரிந்தது. இதையே சங்க இலக்கியங்களில் சூரியனின் வடசெலவு, தென் செலவு என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதைத்தான் பார்ப்பனியம் தட்சிணாயணம், உத்தராயணம் என்றது. கடக சங்கராந்தி என்றும், மகர சங்கராந்தி என்றும் சமக்கிருதத்தை முன்னிறுத்தி கோலோச்சுகிறது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் காட்சிப் பிழைகள்தான்.

நாம் உண்மையான இயங்கியல் விதியை புரிந்து கொண்டு பூமியின் தென் பெயர்ச்சியால்தான் (டிசம்பர் 21 முதல் சூன் 21 வரை) சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததாக சொல்லப்பட்டதை (தட்சிணாயணம்) மறுத்து பூமிதன் பெயர்ச்சி அடைந்தது எனவும் அதே போல் பூமியின் வட பெயர்ச்சியால் தான் (சூன் 21 முதல் டிசம்பர் 21 வரை) சூரியன் தெற்கு நோக்கி நகர்வ தாகவும் (உத்தராயணம்) சொல்லப் படுவதையும் மறுத்து, புறப் பொருள் களின் காட்சி மாற்றத்திற்கு அடிப் படைக் காரணமே அகப்பொருள் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே காரணம் என்பதை பகுத்தறிவோடு உணர்ந்து ஆணித்தரமாக பார்ப் பனியத்தை எதிர்ப்போம்.

மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 அன்று இரவும் பகலும் சமமாக இருக்கும். நாம் வாழும் பூமியைப் பற்றி போற்றி பெருமிதம் கொள்வோம். வருங்கால எழுத்தாளர்களை பார்ப்பனியத்திட மிருந்தும் சொற்குற்றம், எழுத்துக் குற்றத்தில் இருந்து விடுவிப்போம்.

சூன் 21 அன்றும் டிசம்பர் 21 அன்றும் பூமி தனது நீள் வட்டப் பாதையின் முனைகளுக்குச் சென்று திரும்புகிறது. இதையே அவர்கள் நின்று செல்வதாக (ஸ்தம்பித்து) கூறுகின்றனர். சூரியனும் வடக்கு தெற்காக நகரவில்லை. பூமியும் ஸ்தம்பிக்கவில்லை. தன் பாதையில் சுற்றி நகர்ந்து திரும்புவது பூமியே! பூமியே! பூமியே!!

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள்

அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து - குறள்

- செந்தமிழ் சே குவேரா
பூமி சுழற்சி பெயர்ச்சிப் பேரவை

தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

பீகார் பூகம்பம் - காந்தியார்



1934 பீகாரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது காந்தியார் கூறியதை அருண்சோரி குறிப்பிடுகிறார்.

பொதுவாக உலகத்தார் - நாகரிகம் பெற்றோர் பெறாதோர் இரு வருமே - நம்பக் கூடியதை நானும் ஏற்கிறேன். தாங்கள் செய்த பாவத் துக்காக தண்டனையாகத்தான் மனித குலத்துக்கு இதுபோன்ற தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தண்டனை விதிக்கப்படக் காரணம், தீண்டாமை என்கிற பாவம்தான் என்றார் காந்தி (ஹரிஜன், பிப்ரவரி 2, 1934)

ஆனால், நிலநடுக்கத்திற்கு ஜாதி வேறுபாடு கிடையாது. அந்த தலித்துகளையும் சேர்த்துதான் அழித்தது.

(எம்.ஜே. அக்பர் எழுதிய கடவுளின் சக்கரம் - கட்டுரை, இந்தியா டுடே, 20.7.2011, பக்கம் - 4

தமிழ் ஓவியா said...

அரசு அனுமதி அளித்துள்ளதா?
வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்கு திருவிளக்குப் பூஜையா? சிவபெருமான் திருவள்ளுவர் என்னும் சதி: முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

திருவள்ளுவர் மதச் சார்பற்றவர் என்பதால், உலகம் அவரைப் பெரும் பாலும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிலர் அவருக்குப் பூணூல் போட முயற்சித் தனர். இன்னும் சிலர் அவர் நெற்றி யில் பட்டை தீட்டினர்; (மயிலாப்பூர் சிலையில் சில விஷமிகள் பெயிண் டில் பட்டை தீட்டினர் - தென் சென்னை மாவட்டக் கழகத்தின் முயற்சியால், அது அகற்றவும் பட்டதுண்டு)

இப்பொழுது, திருவள்ளுவரைப் புகழ்வது போல அவரை இகழும் சூழ்ச்சி ஒன்று அரங்கேற உள்ளது. அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முயற்சியால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உருவாக்கப்பட் டுள்ள வள்ளுவர் கோட்டத்தில். ஓம், அகத்தியர் துணை என்ற தொகையறாவுடன் துண்டறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

யாரோ ரெங்கராஜ தேசிக சுவாமி களாம் - அவரின் நல்லாசியுடன் நடைபெறப் போகிறதாம்.

சகல நன்மைகளைத் தரும் சிவபெருமான் திருவள்ளுவர் திருவிளக்குப் பூஜை என்ற ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளனர்.

வரும் 30ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், இந்த பூஜை நடைபெறுகிறதாம்!

திருவிளக்கு மட்டும் எடுத்து வந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜைக் குரிய அனைத்துப் பொருட்களும் மண்டபத்தில் இலவசமாக வழங்கப் படும் என்றும் துண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னணியில் ஏதோ சதித் திட்டம் இருக்கிறது! தமிழ்நாடு அரசின் அனுமதியோடுதான் இது நடைபெறுகிறதா?

யார் வேண்டுமானாலும் - அரசுக்குச் சொந்தமான வள்ளுவர் கோட்டத்தில் புகுந்து எது வேண்டு மானாலும் செய்யலாமா?

குறளில் கோயில் இல்லை தம்பி என்றார் புரட்சிக் கவிஞர். அத் தகைய ஒரு சிந்தனையாளரை - உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூலினைத் தந்த தொலைநோக்குச் சிந்தனையாள ரான திருவள்ளுவரை - மூடச் சகதிக்குள் குறிப்பிட்ட மதத்துக்குள் முடக்கும் சதி - இதன் பின்னணி யில் கண்டிப்பாக உள்ளது. தமிழ் உணர்வாளர்களே, முளையிலேயே இதனை கெல்லி எறிந்திட வேண் டாமா?

அரசாங்கம் இதில் தலையிட் டுத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் உரிய நடவடிக்கையில் நேரிடையாக இறங்க வேண்டிய அவசியம் ஏற்படும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


கல்கியும் துக்ளக்க்கும்!

நரேந்திரமோடியை பிரதமராக ஆக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் பார்ப்பனர்கள் நிற்பதற்குக் காரணம் இருக்கிறது.

பிஜேபியின் சார்பில் பார்ப்பனர் ஒருவரை பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்தால் அதில் பல சங்கடங்கள் உண்டு; ஒரே வரியில் அதன் பார்ப்பனத்தனம் பட்டாங்கமாக மக்கள் மத்தியில் தோலுரிந்து போகும்.

பார்ப்பனர் அல்லாதாரான மோடியை முன்னிறுத்தினால் அந்தப் பார்வை விழுவதற்கான வாய்ப்பே இல்லை. நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். மோடி இந்த வேடம் சூட்டிய புலி.

சிறுபான்மையினர் மீதான வெறுப்பு - காழ்ப்பு என்பது பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் உண்டு என்றாலும் நரேந்திரமோடி அளவுக்கு முஸ்லிம்களை நர வேட்டையாடுவதற்கு வேறு யாரால் முடியும்?

அதைக் குஜராத் மாநிலத்தில் நடத்திக் காட்டியதுடன் முஸ்லிம்கள் வாக்கு - முஸ்லிம் அல்லாதார் வாக்கு என்ற வாக்கு வங்கியைக் கோடு போட்டுக் காட்டி இரு அணிகளாகப் பிளவுப்படச் செய்து, பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தம் பைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்ற யுக்தியை குஜராத் மாநிலத்தில் கடைபிடித்துக் காட்டி, அதில் மோடி வெற்றி பெற்று இருப்பதாலும், இந்த அனுபவமும், தந்திரமும் யுக்தியும் இந்திய அளவுக்குப் பயன்படும் என்பது பார்ப்பனர் மனப் பாங்கு; அந்த நிலையை எட்டினால் அவர்கள் நெஞ்சுக்குள் பதுக்கி வைத்திருக்கும் இந்து ராஜ்ஜியத்தை எளிதாக அமைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது பொதுவாக மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது - மேலும் இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் அது ஆட்சியில் இருப்பதால் பொதுவாக மக்களின் எதிர்ப்பு வாக்குகள் (Anti Incumbency) கிடைக்கும் என்று பிஜேபி நம்பிக் கொண்டு இருக்கிறது.

இப்படி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே குழப்பமும், பிளவும் ஏற்பட்டு இருப்பதும், பிஜேபிக்குள்ளேயே அத்வானியின் தலைமையில் மோடிக்கு எதிர்ப்பு ஏற்பட்டு இருப்பதும் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

கல்கி கதறுகிறது. குறிப்பாக இவ்வார இதழில் (30.6.2013) பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்மீது விழுந்து குதறியுள்ளது.

பிஜேபி கூட்டணியிலிருந்து முறித்துக் கொண்டது பின்னடைவு என்று பொருமுகிறது. 2014ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அய்யோ என்று போய் விடுவார். மூன்றாவது அணி அமைத்தாலும் அது உருப்படாது என்று கல்கி மண்ணை வாரி இறைக்கிறது.

துக்ளக் இதழ் அத்வானி நடந்து கொள்ளும் போக்கைச் சற்றும் ஜீரணித்துக் கொள்ளாமல் இவ்வார (3.7.2013) கேள்வி பதில் பகுதியில் எட்டு கேள்வி பதில்களை அர்ப்பணம் செய்து தீர்த்து விட்டது (ஆம் திட்டித் தீர்த்து விட்டது!)

மோடியைப் பிரதமராக்கி மனுதர்மக் கொடியை நாடாளுமன்றக் கட்டடத்தில் ஏற்றிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சோவுக்குப் பெரும் சோகமாகப் போய் விட்டது அத்வானியின் போக்குகள்!

நீங்கள் பெரிதும் மதிக்கும் அத்வானியின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு ஏற்புடைய தாக உள்ளதா என்ற கேள்விக்கு சோவின் பதில்:

இல்லை. ஏன் இவர் இப்படிச் செய்கிறார் என்கிற வியப்புதான் ஏற்படுகிறது என்று புலம்பியிருக்கிறார்.

மோடியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அத்வானி பதவி விலகியதாகக் கருதலாமா? என்ற இன்னொரு கேள்விக்கு சோவின் பதில்: அப்படி ஒரு கருத்து தோன்ற அவர் வழி செய்து விட்டார் என்று கருதலாம் என்றும் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒட்டு மொத்தமாக இந்த வார கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லி வெதும்பி இருக்கிறார்.

அத்வானியையும் மோடியையும் துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு சேர பங்கு ஏற்கச் செய்ததே மனதுக்குள் ஒரு திட்டம் போட்டுதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அது வீணாகப் போனது பற்றி விலா நோக எழுதியுள்ளார்.

எப்படி இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப் போக்கு எந்த அடிப்படையில் உள்ளது என்பதற்கு இவ்வார கல்கி, துக்ளக் இதழ்களே எடுத்துக் காட்டாகும். 29-6-2013

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சி யும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...

குடந்தை கழக மாவட்டம் சுவாமிமலையில் 26.06.2013 அன்று காலை 9.30 மணியளவில் எருமைப் பட்டி வீரமுத்து மல்லிகா ஆகியோரின் மகன் மாதவன் அவர்களுக்கும் கோவிந்தகுடிஆவூர் கல் யாணசுந்தரம் இந்திரா ஆகியோரின் மகள் துர்க்கா ஆகியோரின் இல்வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் வாழ்வியல் தத்துவங் களை எடுத்து உரையாற்றி வாழ்த்து கூறி நடத்தி வைத்தார்.

தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில், 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சுவாமிமலையின் நகர தலைவராக இருந்த நாராயணசாமி அவர் களுடைய இல்ல திருமணத்தை நடத்தி வைக்க நான் வந்திருந்தேன். அப்போது வரிசையாக போடப் பட்டிருந்த மர நாற்காலிகளில் ஆண்கள்தான் பெரும்பாலும் அமர்ந்திருந்தார்கள் அதிக பணம் கொடுத்து வாங்கிய பட்டு புடவைகள் நகைகளோடு வந்திருந்த பெண்கள் எல்லாம் தரையில் அமர்ந் திருந்தார்கள்.

நாற்காலியில் உட்கார இடம் இருந்தும்கூட பெண்கள் அனைவரும் கீழேதான் அமர்ந்திருந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரே ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் பேசும்போது இவ்வளவு பெண்கள் தரையில் அமர்ந்துள்ளார்கள் துணிச்சலாக ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்படி தான் துணிச்சலாக இருக்கவேணடும் என்று அவரை பாராட்டி பேசிவிட்டு, அந்தப் பெண் உட்கார்ந்து இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த பெண்ணும் கீழே இறங்கி ஏனைய பெண்களோடு உட்கார்ந்து விட்டார்கள்.

பெரியார் வென்றார்

இங்கே நாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது பெரும்பாலான பெண்கள் மிகவும் வசதியாக நாற்காலியிலே அமர்ந்துள்ளார்கள். ஆண்கள் எல்லாம் பின் பக்கம் நாற்காலியில் அமர்ந்தும் நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

இந்த மாற்றம் எப்படி வந்தது? யாரல் வந்தது? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தான் பெரியார் இயக்கத்தினுடைய வெற்றி. சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி. சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது? என்பவர்களுக்கு இது தான் பதில்.

அம்பேத்கரும் - பெரியாரும்

இது ஜாதியை மறுக்கின்ற இயக்கம். வடபுலத்திலே அண்ணல் அம்பேத்கர் ஜாதி, மதத்தை எதிர்த்துப் போராடினார். அதே நேரத்திலே தென் புலத்திலே தந்தை பெரியார் அவர்கள் அதே காரணத்திற்காக போராடினார்கள். அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.

கேவலமான பெயர்கள்

நம்முடைய முன்னோர்கள் நமக்கு வைத்திருந்த பெயர்கள் எல்லாம் நம்மை கேவலப்படுத்து வதாகவும், அருவறுப்பை உண்டாக்குவதாகவும் இருந்தது. தற்போது தமிழர்கள் தம் மக்களுக்கு வைத்துள்ள பெயர்கள் எல்லாம் தஸ், புஸ் என்று புரியாத மொழியாக உள்ளது. அதனால் தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் பெயர் மாற்றம் செய்து கொண்டோம்.

தொல்.திருமாவளவனுக்கு பாராட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் அன்பிற்குரிய தொல்.திருமாவளவன் அவர்களை நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இந்த மோசமான பெயர் களை எல்லாம் மாற்றி நல்ல தமிழ் பெயர்களை தமது தொண்டர்களுக்கு வைத்துள்ளார் பாருங்கள் அது சாதாரண காரியம் அல்ல.

குருதிக்கொடைக்கு ஜாதியில்லை

இங்கே எங்களது கழக மாவட்டச் செயலாளர் குருசாமி அவர்கள் பலமுறை குருதிக்கொடை செய்துள்ளமைக்காக அவரது தொண்டறத்தைப் பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவரால் கடந்த மாதம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த குருதிக்கொடை செய்யும் காரியம் இருக்கின்றதே அதுவே ஒரு ஜாதி ஒழிப்பு திட்டம் தான்.

இந்த இந்த ஜாதிகாரர்களுக்கு, இந்த ஜாதியினுடைய இரத்தம் தான் செலுத்தவேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறதா? இரத்தத்திலே பிரிவுகள் உண்டு. அந்தந்த பிரிவு உள்ளவர்களுக்கு, அந்தந்த இரத்தம் தான் செலுத்த வேண்டும் எல்லா ஜாதி மக்களும் எந்த மொழி பேசினாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த பிரிவு இரத்தம் அவரவர்களுக்கு பொருந் தும் போது, இதிலே ஜாதி எங்கிருந்து வந்தது? போன்ற அறிவார்ந்த கேள்விகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ந் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க் கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்


எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.

அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும். 2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம்.

மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற் சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம்.

அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் விளம்பர சபை

நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் காங்கிரஸ் விளம்பர சபை என்பதாக ஒரு யோக்கியப் பொறுப் பற்ற தும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெ ளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லா தாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரில் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் எழுதி வருகிறார்.

இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டிய தில்லை. இவை ஒவ் வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற் கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம் என் பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம்.

அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத்தில் மூடு வண்டியில் அகப் பட்டுத் திக்கு முக்காடி இறந்துபோன சம்பவத்தைக் குறித்து 22.9.1926ந் தேதி சுதேசமித்திரனில் பார்ப் பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியார் இதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும் மற்றவர்கள் செய்த தற்கு விரோதமாயிருந்த தாகவும் எழுதியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம். மூடு வண்டி கொலை பாதகம் விஷயமாய்ச் சட்டசபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய தானத்தையும் ஒரு மந்திரிக்குக் காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற் காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய்ப் பலமாய் வாதாடியவரும் அந்த ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவரே ஆவர்.

ஆனால் அக் கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்தவர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலையாள மாப்பிள்ளைகளுக்கு அனுகூலமாயும் சில வெள்ளைக் காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால் தான் அந்த ரிப்போர்ட் வெளியில் வராமல் போய்விட்டது.

ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதியாக இருந்தார் என்பதை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒப்புக் கொள்ளு கிறாரா? மறுக்கிறாரா? இம்மாதிரி வேண்டுமென்றே ஜனங்களை ஏமாற்ற இந்தப் பார்ப்பனர் எழுதும் எழுத் தும், பேசும் பேச்சும் சூழ்ச்சித் தனமானது என்று இதிலி ருந்தாவது பொது ஜனங்களுக்கு விளங்கவில்லையா?

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்ற வாசகத்தைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படும்! கழகக் குடும்பங்களின் சந்திப்பில் தமிழர் தலைவர்

கண்கொடுத்தவனிதம், ஜூன் 29- கடவுள் இல்லைஎன்று முதன் முதலாக தந்தை பெரியார் அவர்கள் பாடம் நடத்தி அதற்கான வாசகங்களைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பர் மாதம் அய்யா பிறந்த நாளில் திறக்கப்படும் என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

கண்கொடுத்தவனிதத்தில் சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

43 ஆண்டுகால போராட்டம்

திராவிட விவசாயப் பெருங்குடி மக்களாக இருக்கக் கூடிய உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாள்களாக ஆகின்றன என்பதற்காகவும், அதேநேரத்தில், இந்த வட்டாரத்தில் நாம் திட்ட மிட்டிருந்த செயல்கள், சரியான நடைமுறை வேண் டும் என்பதையொட்டியும், அதேபோல, நம் முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்கிய அந்தப் போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகவேண்டும்;

அதிலே குறிப்பாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும், பார்ப்பனர்கள் மட்டும்தான் தமிழன் கட்டிய கோவிலுக்குள்ளே மணியாட்ட வேண்டும் என்று இருப்பதை மாற்றி, மிகப்பெரிய அளவில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெற வேண்டும் என்பதற்காக, பெரியார் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அளவிலே, ஏறத்தாழ ஒரு 43 ஆண்டுகாலம் தொடர்ந்து நாம் போராடி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகவேண்டும் என்பதற்கு முயற்சிகள் எடுத்து, தனி சட்டம் ஒன்றை இயற்றி, அதனடிப்படையில், நம்முடைய மாணவர் களை 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி தேர்ந் தெடுத்தார்கள். தேர்ச்சி பெற்ற 206 மாணவர்களில் பார்ப்பன மாணவர்களும் உள்ளனர்.

ஆகஸ்டு முதல் தேதி அறப்போராட்டம்

இவர்களுக்குப் பணி வழங்கக்கூடிய நேரத்தில், சிலர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி முடித் தவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்டு முதல் தேதி அறப் போராட் டத்தை நடத்த உள்ளோம்.

நம்முடைய தாய்மார்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் இவர்களையெல்லாம் நாம் சந்திப்பது வழமையான ஒன்றுதான். இது ஒன்றும் புதுமை யல்ல.

பெண்கள் சிறைக்குச் செல்லவேண்டும்; ஆண்கள் வீட்டில் இருக்கட்டுமே!

தமிழ் ஓவியா said...

நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கிறீர்கள். நம்முடைய சகோதரிகள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து அகமும், முகமும் மலர, அய்யா நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி இருக் கின்றது பாருங்கள், அதற்கு எல்லையே இல்லை.

கண்கொடுத்தவனிதத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மரியாதை

நம் அறிவு ஆசான் அய்யா பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இறுதியாக நடத்தக்கூடிய அளவிற்கு, துணிந்து நாம் இறங்க வேண்டும். இதுவரையில் ஆண்களை போராட்டத் திற்கு அனுப்பிவிட்டு, பெண்கள் வீட்டில் இருப்பார்கள். ஆனால், இந்த முறை ஆண்கள் வேண்டுமானால் வீட்டில் இருக்கட்டும்; பெண்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

ஏனென்றால், வீட்டில் நீங்கள் தான் வேலை செய்கிறீர்கள்; 100 நாள் திட்டத்திலும் வேலை செய்கிறீர்கள். கொஞ்ச நாள் நீங்கள் ஓய்வெடுக்கவேண்டுமென்றால், அதற்குச் சரியான வழி போராட்டத்தில் பங்கேற்பதுதான். சிறைச் சாலையில் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, மூன்று மாதமோ இருந்தால், நீங்கள் ஓய்வாக இருக்கலாம். அப்பொழுதுதான் ஆண்களுக்கு உங்களுடைய அருமை புரியும்.

விடயபுரத்தில் நினைவுச் சின்னம்!

கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று தந்தை பெரியார் அவர்கள் விடயபுரத் தில்தான் முதன்முறையாக சொன்னார்கள். அதற்காக வரலாற்றில் புகழ்வாய்ந்த அந்த இடத்தினை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று ஒரு கல்வெட்டினை அமைத்தோம். பல காரணங்களால் அந்தப் பணி நிறைவடையாமல் இருக்கிறது. இப்பொழுது வரும்பொழுது அந்த இடத்தினைப் பார்த்தோம்; கல்வெட்டினைச் சுற்றி காடுபோல் உள்ளது. அங்கே இருக்கின்ற தோழர்களும், பொறுப்பாளர்களும் அந்த இடத்தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்று சொன்னார்கள்; அவர்களின் விருப்பப்படி முதலில் அந்த இடத் தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது!

அடுத்தபடியாக, இங்கே வரும்பொழுது பள்ளிக் கூடத்தின் கூரை சரியில்லை என்று சொன்னார்கள்; 15 ஆண்டுகளுக்கு முன்பு கூரை போட்டது; இந்தப் பகுதி அடிக்கடி மழை, வெள்ளம், புயலால் தாக்கப்படுகின்ற பகுதியாகும். ஆகவே கூரை பழுதடைந்துவிட்டது என்று சொன்னார்கள்; நம் அறக்கட்டளை பொறியாளர்களை வரவழைத்து, அந்த பள்ளியைப் பார்வையிட்டு, அந்தப் பணிகளை உடனடியாக செய்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் கட்டடம் என்று பெயர் வைத்திருக்கிறோம்; பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. ஆகவே, அக்கட்டடத்தினை சரி செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப் படும்.

தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும்!

பருத்தியூரில் அய்யா பிறந்த நாள் விழா என்றால், மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், எடைக்கு எடை பொருள்கள் கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பகுதியில் ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்று நினைத்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். அந்தக் கட்டடம் கட்டுவதற்கு நாம் போட்ட பட்ஜெட்டைவிட அதிக நிதி தேவைப் படுகிறது. தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும். அய்யா பிறந்த நாள் விழாவையொட்டி அந்தக் கட்டடம் திறக்கப்படும்.

கண்கொடுத்தவனிதத்தில் நடைபெற்ற சுயமரியாதைக் குடும்ப விழாவில் பங்கேற்ற கருஞ்சட்டைக் குடும்பத்தினர் (28.6.2013).

விடயபுரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி, ஸ்தூபி போன்று எழுப்பலாமா என்று பல பேரிடம் கருத்துக் கேட்டுள்ளோம்.

இந்த இயக்கம் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் வாழும் இப்பகுதியில், கல்வி உதவி, மருத்துவ உதவி நம் இயக்கத் தோழர்களுக்கு தேவைப்பட்டால், அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவ இந்த இயக்கம் பின்வாங்காது, நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மேலும் பல கருத்துகளைக் கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Unknown said...

பிரதீப் அவர்களின் தொடர்பு எண் அல்லது வலைத்தளம் விவரம் கிடைக்குமா?

தமிழ் ஓவியா said...

பேயா - பிசாசா - ஆவியா?

சென்னை செங்குன்றம், நார வாரிக் குப்பம் பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் யாகம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய் மற்றும் உதிரிப் பூக்கள் அலுவலக நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் வைக் கப்பட்டுள்ளன. திருஷ்டி சுற்றப்பட்ட பூசனிக்காய் உடைக்கப்பட்டு, வாயிலில் உள்ள கொடிக் கம்பத்தின் அடியில் வைக்கப்பட்டது. ஏனிந்த தெருப்புழுதி? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல் அலுவலராக இருந்தவர் வெளி யூருக்கு மாற்றப்பட்டு 10 மாதங்கள் ஆகி விட்டனவாம். அவர் மன நிலை பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி இறந்து விட்டாராம். அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப் படவில்லை. சிறிது காலம் கழித்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் இறந்து விட்டா ராம்.

இந்த நிலையில் இரவுப் பாது காவலர் ஒருவர் சில கதைகளைக் கிளப்பி விட்டுள்ளார். இரவு நேரத்தில் அலுவலகத்தில் யாரோ நடமாடுவது போல தெரிகிறது. பதிவேடுகள் புரட்டும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டுள்ளார்.

நம் மக்களைக் கேட்க வேண் டுமா? பேய் நடமாடுகிறது! - ஆவி நடமாடுகிறது என்று கிளப்பி விட்டுள்ளனர்.

அரசுத் துறைகளில் பணியாற்று வோர்க்கு ஊர் மாற்றம் என்பதெல் லாம் சர்வ சாதாரணம்தானே. ஒரு அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் மரணம் அடைவது என்ன அதிசயமான ஒன்றா?

புத்தியைச் செலுத்தாமல், புரளியைக் கண்டு அஞ்சினால் இத்தகைய மூடத்தனங்கள்தான் முளைக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவோர் என்ன சொல்லு கிறார்கள்?

பேயும் இல்லை; ஆவியும் இல்லை. பேரூராட்சிப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யாகம் வளர்த்தோம் என்று சமாதானம் கூறுகின்றனர்.

இது பெருமாள் போய் பெத்த பெருமாள் வந்த கதைதான்! ஒரு முட்டாள்தனத்துக்கு இன்னொரு முட்டாள்தனம் சமாதானம் ஆகுமா?

பகுத்தறிவுச் சிந்தனை மனித னுக்கு எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதாவது புரிந்தால் சரி.

தமிழ் ஓவியா said...

வில்லியநல்லூரில் நடந்ததென்ன?

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வில்லியநல்லூர் கிராமம். 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில நாட்களுக்குமுன் அடுத்தடுத்து அய்வர் மரணம் அடைந்தனர். அவ்வளவுதான். மூட நம்பிக்கை தொற்று நோய்ப் பற்றிக் கொள்ளுமே! ஆவி சேட்டைதான் காரணம் என்று எல்லா ஊர்களிலும் இருப்பதுபோல இந்த ஊரிலும் இருந்த வெட்டிப் பேச்சுப் பேர் வழிகள் கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

இந்த மூடநம்பிக்கை தகவலை அறிந்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகத் தோழர்கள் தென்னவன், யாழ் திலீபன், மஞ்சை அழகரசன் ஆகியோருடன் நேரில் சென்று ஊரில் விசாரணை நடத்தினர்.

இறந்தவர்களில் ஒருவர் முதியவர்; இன்னொருவர் உரிய மருத்துவ உதவியின்றி காமாலை நோய் காரணமாக உயிரிழந்த பெண்.

ஊர் நிலைமை எப்படி? சுகாதாரச் சீர்க்கேட்டின் உச்சம். எங்குப் பார்த்தாலும் குப்பை விரிகோலம் தான்! சாக்கடை சங்கமம்தான்! விளக்கு வெளிச்சம் கூட சரியாக இல்லை. 2013ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு கிராமம்.

சுகாதாரச் சீர்கேடு காரணமாக வியாதிகள் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் இங்கு உண்டு என்று கழக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் முதல் தேதி அவ்வூரில் மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் பிரச்சா ரத்தைத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வில்லியநல்லூரில் பொதுச் செய லாளர் தலைமையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட இது போன்ற பணிகளில் ஆங்காங்கே கழகத் தோழர்கள் ஈடுபடுவார்களாக!

தமிழ் ஓவியா said...


திருநங்கையர்களை அவமானப்படுத்துவதா? திமுக தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 30- மூன்றாவது பாலினத்வராகிய திருநங்கையினரை 9 என்ற எண் குறியிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா முழுவதும் ஆறாவது பொரு ளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப் பிடம் போன்ற எல்லா விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட் டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. திமு கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங் கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச் சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கை யர்களைக் குறிக்கும் வகையில் T (Transgender) என்ற எழுத்து குறிப்பிடப் பட்டது.

முதல் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபற்றி அப்போதே 16.3.2008 தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், “Third Sex gets its due in T.N. - Karuna Govt. is Country’s First to issue Ration cards with “T” as Gender” என்ற தலைப்பில் பெரிதாக எழுதியிருந்தது.

ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டுவிட்டு, ஆண் பெண் அல்லாத பாலினப்பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, ஏற்கெனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப் பிட்டுத்தான் கிண்டல் செய்கிறார்கள். இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவ மானப்படுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்ட போது, இந்தப்படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய் திருந்தாலும், மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஆதி பராசக்தி


கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட் பார்க்குப் புத்தி எங்கே போச்சு? என்ற பழமொழி நாட்டில் புழக்கத்தில் இருப் பது எல்லோருக்கும் தெரி யும்.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் 12ஆவது வார்டில், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மடத்தில் மாட்டியிருந்த கடவுளர் படத்தில் தேன் வடிகின்றது என்ற புரளியைக் கிளப்பி விட்டனர்.

உண்மைத் தகவல் களைவிட புரளிகளுக்குத் தானே இறக்கைகள் அதி கம். மக்கள் கூடிட ஆரம் பித்து விட்டனர்.

கருஞ்சட்டைத் தோழர் கள் களத்தில் இறங்கினர். மக்களுக்கு விளக்கம் அளித்தனர். காவல்துறைக் கும் தகவல் அறிவிக்கப்பட் டது. செய்தியாளர்களும் கூடினர்; கழகத்தின் விளக் கத்தை அனைவரும் ஏற் றனர்.

நேரில் சென்று பார்த்த போது பொய் மூட்டை என்பதும் தெளிவானது.

காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஊத்துக்கோட்டை என்.பி. சாலையில், நாகவல்லி யம்மன் கோயில் வளா கத்தில் புற்று அருகில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்தன. ஒரு அம்மன் சிலை, பால் குடித்ததாக புரளி அவிழ்த்து விடப்பட் டது - ஊரே திரண்டது.

செய்தியைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பா ளர் (டி.எஸ்.பி.) பாலச் சந்திரன், ஆய்வாளர் நாக லிங்கம் ஆகியோர் சம்பந் தப்பட்ட கோயிலுக்குள் சென்று, ஒரு கரண்டியின் மூலம் சிலைக்குப் பால் கொடுத்துப் பார்த்தனர். பால் குடிக்கவில்லை - புரட்டு அம்பலமானது.

பூசாரியைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று பூசாரியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். (விடுதலை 14.8.2010).

அதுபோன்ற நேர் மையாக சட்டத்தைக் காப்பாற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தால் இந்த மூடநம்பிக்கை வியா பாரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடு வார்கள்.

1990 ஆகஸ்டில் இதே மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி தொடர்பாக ஒரு துண்டு அறிக்கை வெளி யிடப்பட்டது. ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! என்ற தலைப்பிட்டு, இது ஆதி பராசக்தியிடமிருந்து வரும் கடிதம். இது போன்று 20 அல்லது 50 நகல்கள் எடுத்து தெரிந்தவர் களுக்கு அனுப்பினால் ஆதி பராசக்தியின் அருள் கிட்டும் என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மேல் மருவத்தூருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

4.8.1990 நாளிட்டு பதில் கடிதம் வந்தது. அந்தத் துண்டறிக்கை களை நம்ப வேண்டாம் என்று எழுதப்பட்டு இருந் ததை நினைவூட்டுகிறோம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விநாயகனிடம் மனு; சபாஷ் சரியான அய்டியா!



சென்னை - கஜவரத பெருமாள் கோயில் ஆலய மீட்புக் குழுவினர் ஒரு வேலையைச் செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையிடம் மனு கொடுக்கச் சென்றனராம்.

ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு காவல்துறையினரும் கணிசமான எண்ணிக்கையில் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

புஸ் என்று போனது - வந்த பக்தர்கள் வெறும் ஆறு பேர்கள் தானாம்; விநாயகரிடம் மனு கொடுத்துச் சென்று விட்டனராம்.

இது முட்டாள்தனம்தான் என்றாலும் அந்தப் பக்தர்களின் அறிவு நாணயத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கடவுள்மீது உண்மையிலேயே பக்தி உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பார் என்பதில் கண்டிப்பான வகையில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.

அயோத்தியில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று துடிக்கிற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வகையறாக் கள்கூட என்ன செய்ய வேண்டும்? சென்னை கஜவரத பெருமாள் பக்தர்கள், விநாயகரிடம் மனு கொடுத் திருப்பதுபோல ராமனிடம் மனு கொடுக்க வேண்டும்.

அதுபோல சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்தக் கூடாது - ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோஷம் போடுபவர்கள் நீதிமன்றம் சென்றி ருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறீமான் இராமச்சந்திரமூர்த்தி அவர்களே! உங்களுக்காகத் தான் நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். உங்கள் பேரால் உள்ள பாலம் இடிபடக் கூடாது என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றமும் சென்றுள்ளோம்.

சென்னைவாசிகளின் நடவடிக்கை எங்கள் கண்களைத் திறந்து விட்டது. இனிமேல் நீதிமன்றம், அரசு மன்றம், வீதி மன்றம் என்று செல்லாமல், கொடி பிடித்துக் கோஷம் போடாமல், நேரடியாக கடவுளாகிய தங்களிடம் மனு கொடுப்பது - அதாவது கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்து விட்டோம் என்று முடிவு செய்வார்களேயானால் அவர்களின் அறிவு நாணயத்தைக் கூடப் பாராட்டலாம்.

அப்படி கடவுள் சிலைகளிடம் மனு கொடுத்துக் காரியம் ஆகவில்லையென்றால், அந்தக் கடவுள்களை என்ன செய்யலாம் என்பதை சம்பந்தப்பட்ட பக்தர்களே ஒன்றுகூடி, கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

முடிவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் கால கட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை அணுகலாம் - அப்பொழுது நல்லதோர் தீர்வினை, முடிவினைக் கொடுப்பதற்கு நாங்கள் தாராளமாகவே இருக்கிறோம்!

சரிதானே?

தமிழ் ஓவியா said...


நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:


5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!

மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!

நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!

நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!

இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.

முதல் அமைச்சரின் கருத்து

வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.

அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.

அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம் (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.

தேவை மறுபரிசீலனை!

இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.

மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.

தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.7.2013

தமிழ் ஓவியா said...

முதல் கடமை

செய்தி: சேதம் அடைந்த கேதார்நாத் கோவில் புனரமைப்பு வேலையைச் செய்ய நாங்கள்தயார்! குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி

சிந்தனை: குஜராத் தில் ஊட்டச்சத்துக் குறைவால் செத்துக் கொண்டிருக்கும் குஜ ராத் மாநில சிசுக்களைக் காப்பாற்றும் வேலையில் குஜராத் முதல் அமைச் சர் மோடி உடனடியாக இறங்குவதுதான் மிக முக்கியம்.

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப் பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய் யப்பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.

- (விடுதலை, 17.3.1961

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

பாராட்டத்தக்க யோசனை

மய்ய அமைச்சரவை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அய்ந்து விழுக்காட்டுப் பங்குகளை விற்க மேற்கொண்ட முடிவு நெய்வேலித் தொழிலாளர் களை மட்டுமல்லாது, தமிழ் நாட்டு மக்களையே கவலைக்கு உள்ளாக்கியது.

அது மட்டுமல்லாது, காங்கிரசு தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் மய்ய அரசின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன.

தி.மு.க. தலைவர் கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கங்களும் முதலில் கண்டனக்குரல் எழுப்பத் தவறவில்லை. மாநில அரசும் கண்டித்தது. ஜூலை 2-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்புவிடுத்து. நெய்வேலி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து படிப்படியான போராட்டங்களை அறிவித்து, முதலில் எதிர்ப்பு அட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழக அமைச்சரவையில் புதிதாக அமைச்ச ராகியுள்ள சுதர்சன நாச்சியப்பன் நீண்டகாலமாகவே அனைத்து இந்திய அளவில் பிற்பட்டோர் நலனின் அக்கறையுடன் செயல்படுபவர். கதர்ச்சட்டைக்குள் முற்போக்குச் சிந்தனை உடையவராகவும், சமதர்மக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராகவும் கருதப் படுபவர்.

இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துதான் பாராட்டுக்குரியது.

நெய்வேலியின் அய்ந்து சதவீதப் பங்குகளைப் பண முதலாளிக்குக்கோ, வட நாட்டவருக்கோ, வெளி நாட்டவருக்கோ விற்க வேண்டியதில்லை. தமிழக அரசே அதை வாங்கிக் கொள்ளலாம். இதில் ஆட்சேபனை ஏதுமில்லை.

தமிழக அரசு வாங்கவில்லையா? தொழிலாளர்களே அவற்றை வாங்கிக் கொள்ளலாம். நம் சொத்து நம்மிடையே தான் இருக்கும். வெளியில் எவருக்கும் போய் விடாது. நம்மை விட்டுப் போகாது என்றார்.

இந்த யோசனை நல்ல யோசனை மட்டுமல்ல. தமிழக நலனுக்கு உகந்த யோசனை. தமிழக அரசு போராட்டம், நடத்துவதற்குப் பதிலாக, பங்குகளை வாங்கிக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும். ஏற்கெனவே தமிழக அரசின் இரண்டு இயக்குநர்கள் நெய்வேலி நிறுவனத்தில் இருக்கிறார்கள். இந்தப் பங்குகளைத் தமிழக அரசு வாங்குவதன் வாயிலாக மூன்றாவது இயக்குநர் ஒருவரும் கிடைப்பார். நெய்வேலி நிறுவனம் மய்ய மாநில அரசின் கூட்டு நிறுவனமாகும்.
எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாகும் போது தமிழக அரசின் கை ஓங்கும்.

தமிழக அரசுக்கு இந்த நானூறு கோடிப் பங்கு விலை ஒன்றும் அதிகமில்லை. எவ்வளவோ ரூபாய்களை மதுவில் சம்பாதித்துத் தமிழகத்தைச் சீரழிக்கும் அரசு இந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே.

தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே நெய்வேலி பங்குகள் விற்கப்பட்ட முன் மாதிரியும் அங்கே இருக் கிறது. எனவே தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்து அப்பங்குகளை வாங்கினால், தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கையில் ஆதரவுக் குரல் எழும்புமே.
தமிழர் தலைவர்தான் நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி கொடுக்கும் மய்ய அரசு, நெய்வேலி நிலக் கரிக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றுத் தந்தவர்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன் நெய்வேலி மின்சாரத்தின் முழுப் பயனும் தமிழகத்திற்குக் கிடைக்கத் தாமும், தம் வாழ்விணையர் மோகனா அம்மையாருடன் போராட்டம் நடத்திக் கைது ஆனவர்.

எனவே, மய்ய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் இந்த அறிவிப்பும் நம் தமிழர் தலைவரின் பாராட்டையும், வரவேற்பையும் பெறும் என்பதில் அய்யமில்லை.
தமிழர் தலைவர் நினைவு வராமல் நெய்வேலி எந்தப் பிரச்சியும் சிந்திக்க வியலாத அளவுக்கு அவருடைய பங்கு மகத்தானது.
- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்