Search This Blog

4.6.13

கலைஞர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் கி.வீரமணி













மானமிகு சுயமரியாதைக்காரன் என்ற ஒரு வரி விமர்சனத்தில் தன்னைக் குறிப்பிட்ட தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வரும் ஜூன் 3 இல் 90ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இந்தத் தொண்ணூறு வயதில், ஏறத்தாழ 75 ஆண்டுகள் பொது வாழ்க்கை! வியப்பான வித்தக சாதனை!

உலகம் இதுவரை கண்டிராத, கேட் டிராத அதிசயங்களில் இது ஒன்று!

பள்ளிப் பருவத்திலேயே...

பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறி வுப் பகலவன் தந்தை பெரியாரின் இயக்கம் அவரை ஈர்த்தது.

அய்யாவின் அந்நாள் தளபதியாகச் செயல்பட்ட அறிஞர் அண்ணாவின் பார்வை, இளம் மாணவராக இருந்த (கலைஞர்) கருணாநிதி எழுதிய கட்டுரையை தனது வார ஏடான திராவிட நாடு இதழில் வெளியிடும் அளவுக்கு அவரது எழுத்தாற்றலின் துவக்கமே, அண்ணாவுக்கு அமைந்த பரிந்துரைக் கடிதமானதும் மற்றொரு அதிசயமே!

மாணவப் பருவத்திலேயே லட்சிய தாகம் - இவரிடம் பீறிட்டது!

அவர் திருவாரூரின் மாணவப் பேச்சாளர் - எழுத்தாளர் என்பதோடு, மாணவர் மன்ற அமைப்பாளரும் ஆன அனுபவத்தை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது.

அந்த அடிநாள் உழைப்பு இன்னும் அவரை விட்டு நீங்கவில்லை; இன்றும் அது ஓங்கி நின்று ஒளியூட்டும் கலங்கரை விளக்கமாக கழகத்திற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

துள்ளித் திரிந்திடும் வேளையில், பள்ளிப் பருவத்திலும்கூட இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதைச் சூறாவளிப் பேச்சுகளைக் கேட்ட இவரது காது களும், கால்களும் அவரை ஈரோடு, காஞ்சி என்றே அழைத்து நிறுத்தியது!

ஈரோட்டுக் குருகுலத்திலே...

அந்நாள் குடிஅரசு வார ஏடு ஒரு புரட்சிப் பாசறை - அது அவருக்கு நல்லதோர் வாய்ப்பாக இடந்தந்து, ஈரோட்டுக் குருகுலத்தின் இணை யற்ற மாணவ மணியாக ஆக்கி, பயிற்சிக் களத்தில் நிறுத்தியது.

அப்போதே கவிதையல்ல...! என்ற தலைப்பில் கவிதை வரிகளைப் போன்றே வெடித்துக் கிளப்பிய எரி மலை எழுத்துக்கள்!

குடிஅரசின் துணை ஆசிரியராக இருந்த நிலையில், அவர்தம் எழுத்துக் கள், தந்தை பெரியாரின் பாராட்டுகளை பெற்றது. குருகுலவாசமே இவர் பன் முனையிலும் கூர்தீட்டிட குதூகலமான தொரு வாய்ப்பாக ஆகியது. அந்நாள் இன்றும் அவருக்குப் பொன்னாள்! மறக்கமுடியாத கலைக்கூட அனுப வங்கள்!
குருகுலத்திலிருந்து வெளியேறி னாலும் குருவிடம் கற்ற பாடங்களை குவலயத்திற்கே கொண்டு சேர்க்கும் பணிக்கே அவரது வாழ்க்கை அன்று முதல் இன்று வரை பயன்படுகிறது!

கலைத்துறை ஆற்றல்

அவரது கலைத்துறை ஆற்றல் இளம் வயதிலேயே நாடகங்களை எழுதிடத் தூண்டியது; அவைகூட வெறும் கேளிக்கைகள், கூத்துக்கள் அல்ல; கொள்கைப் போத்துக்களை நட்டு வைத்து, நாடகம் பார்த்தோரை சிந்திக்க வைத்த லட்சிய வகுப்பு களாகவே அமைந்தன!

திரையுலகப் பிரவேசம் செய்ய அவை துணை நின்றன; கூன் விழுந்த சமூகத்தை நிமிர்த்திடவும், கூழைக் கும்பிடு போட்டுக் கோணலாகிப் போன மக்களை பெரியாரின் பகுத் தறிவு வழியில், அண்ணாவைப் போலவே எழுதி, நிமிர்த்திடும் வெற்றி வாகை சூடிய வீரராக வளர்ந்தார்!

பராசக்தி பேசமாட்டாள்  அது கல்!

பராசக்தி பேசமாட்டாள், அது கல்! என்று பேசவைத்து பாமர மக்களிடம் கூட கைதட்டலைப் பெறவைத்தார்.  கட்டணம் கொடுத்துக் கேட்கவும் வைத்தார். பகுத்தறிவுப் பிரச்சாரத் தினை, திரையுலகைத் திகைக்கச் செய்து, திராவிடர் இயக்கக் கொள் கைகள் திக்கெட்டும் பரவச் செய்து திரையும் எனக்கு ஒரு அறிவாயுதமே என்று காட்டினார் திறம்பட தீரம்மிக்க எழுத்துக்களால்.
முரசொலி என்ற கையெழுத்து ஏட்டினை திருவாரூரில் 60 ஆண்டு களுக்குமுன் துண்டறிக்கைபோல் தொடங்கி, இன்று தூக்கி நிறுத்தும் அவர்தம் உறுதிப்பாடும், உழைப்பும் எதிரிகளாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று!
தி.மு.க. அரசியல் கட்சியாகியது. தான் போட்டியிட்ட தேர்தல் களத்தில் கலைஞர் தோல்வி காணாத அரசியல் தலைவர் என்ற சரித்திர சாதனையைச் செய்தார்!

55 ஆண்டுகாலம் தொடர்ந்ததும் ஒரு உலகச் சாதனைதான்!

இயக்கத்தின் 1967 ஆம் ஆண்டு வெற் றிக்கு இவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.
முதல்வராக, அண்ணாவையே புறந் தள்ள செய்த முயற்சிகளை முறியடித்த ராஜதந்திரி - இவர் தனி முத்திரை பொறித்தவர்!

தி.மு.க. கப்பலின் மீகாமன்

அண்ணாவுக்குப்பின் முதலமைச்சர் என்பதை, தி.மு.க. என்ற கப்பலுக்கு மீகாமன் (கேப்டன்) என்பதுபற்றி சலசலப்புகளும், சஞ்சலங்களும் உருவான போது, கலைஞர்தான் தகுதிமிக்கவர் என்று தன்னை ஆளாக்கிய தந்தை பெரி யாரால் ஆணையிடப்பட்டு, அரியாசனம் ஏறி அமர்ந்து சூத்திரர்களுக்கான, சூத்திரர்களால் ஆளப்படும் சூத்திர ஆட்சி என்ற சரித்திரம் படைத்தவர்;
வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் ஆட்சியை வெறும் காட்சியாக நடத்தாமல், இனத்தின் மீட்சியாகவே நடத்திட்ட எழுச்சி நாயகனாகவே காட்சியளித்தார்!
ஈழத் தமிழர் பிரச்சினையிலும் கலைஞருக்கு இருக்கும் தொடர்பின் வரலாறு நெடிது.

1985 மே 15 இல் உருவாக்கப்பட்ட டெசோவை மீண்டும் புதுப்பித்து (30.4.2012) புது முறுக்கேற்றி, உலகளவில் ஈழத் தமிழர் பிரச்சினையைக் கொண்டு சென்றதில் கலைஞர் அவர்களின் பங்கு மகத்தானது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவே இருமுறை ஆட்சி பறிக்கப்பட்டது என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

இருமுறைக் கலைப்பு!

1976 இல் முதல் முறை, 1990 இல் இரண்டாம் முறையாகவும்  இவர்தம் ஆட்சி நியாயமில்லாமல், டில்லி துரைத் தனத்தால் கலைக்கப்பட்டபோதெல்லாம் கூட, ஆரியமும் அதன் அடிவருடிகளும், மகிழ்ந்தபோது, அவர்கள் போட்டது தப்புக்கணக்கு என்று காட்ட அச்சமின்றி, எதிர்ப்பைத் துச்சமாக்கி, துணிவின் உச்சியிலே நின்ற கலைஞரை எவர் மறைத்தாலும் சரித்திரம் மறைக்குமோ; மறைத்தாலும் அது பிழைக்குமோ!

கழகப் பொது வாழ்வு அவருக்கு மலர்ப் படுக்கையாக என்றும் இருந்ததில்லை. எதிர்ப்புகளும், ஏளனங்களும் அவர்மீது பொழியப்பட்டன அடைமழைபோல! அவரால் ஆளாக்கப்பட்டவர்களே கூட அவரது முதுகில் குத்தியபோதும்கூட அவர் அதையும் தாங்கித் தாங்கி, தனது லட்சியப் பயணத்தை பெரியார் வழியில், அண்ணா வழியில் தொடர்ந்து கொண்டே இருப்பவர்!

அவரிடம் செங்கோலைப் பறித்த நிகழ்வுகள் பலமுறை உண்டு.

அது ஜனநாயகத்தின் விசித்திரம்; ஏற்றுக்கொண்டே தீரவேண்டிய அரசியல் நியதி. நியாயம்தானா? என்று யாரும் கேட்பதில்லை. அதுபற்றி அவர் கவலைப் பட்டது மில்லை. காரணம், பெரியாரின் துணிவு, அண்ணாவின் கனிவு, அவரது அகத்தினைப் பக்குவப்படுத்தியுள்ள வன்மை. இதுவே அவரது அறிவுடைமை!
கொள்கை உடைமை!
செங்கோலும் - எழுதுகோலும்!
செங்கோல் பறிபோகலாம்; காரணம், மக்களாட்சியில் அந்த மகுடம் மாறி மாறி வரும். ஆனால், அவர் கையில் உள்ள வலிமைமிக்க எழுதுகோலைப் பறிக்க எந்த சக்தியாலும் முடியாது!

முதுமையே முயன்று அவரிடம் தோற்றுவிட்ட பிறகு, அந்த எழுது கோலைப் பறிக்க எவர் முயன்றாலும் ஏமாறுவர்!

1976 - நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற அதிகார மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அவரது எழுதுகோலின் மூலம் வரும் எண்ண ஊற்றுகளை நிறுத்திட முடிந்ததா?

பெரியாரிடமிருந்து எப்படி சுற்றுப் பயணத்தை எவராலும் இறுதிவரை நிறுத்திட முடியவில்லையோ, அது போலத்தான் கலைஞரின் எழுத்துக்கள் என்ற சிந்தனை சிற்பியின் உளி செதுக்கல்களை - எவர்தான் தடுத்திட முடியும்?

ஈரோட்டுக் குருகுலத்தில் பெற்ற அந்த இளமைப் பயிற்சி இன்றும் என்றும் கைகொடுக்கிறது! அவரது வற்றாத கொள்கை பலத்திற்கு மூலாதாரம் அதுவே.
முதுமையைத் தோற்கடிக்கும் முதிர்ச்சி!

முதுமை அவரிடம் போட்டியிடு கிறது! ஆனால் அவர்தம் முதிர்ச்சியால் அதை முறியடித்து, விரட்டி ஓடச் செய்கிறது!

நினைவாற்றல் என்ற அரிய அற் புதம் அவருக்கே உரிய தனித்ததோர் அறிவுப் படைக்கலன்! பெறற்கரிய பேறு!

எந்த நெருக்கடியிலும் நகைச்சுவை உணர்வைக் கையாண்டு, சிரிக்க, சிந்திக்க, சினம் போக்க ஆக்கிடும் அவரது சிறந்த பண்பு, எளிதில் எவருக்கும் கிட்டாத அரியதோர் அள்ளக் குறையாத அறிவுச் செல்வம்!

அவர்தம் ஆயுள் மேலும் பலப்பல ஆண்டுகள் நீண்டு நூறாண்டினையும் தாண்ட வேண்டும் என்ற விழைவு அவருக்காக மட்டுமல்ல; இந்த நாதி யற்ற திராவிடர் இனம் - நன்றியை அடிக்கடி மறந்து நயவஞ்சகர்களின் கண்ணிவெடிகளுக்குப் பலியாகும் பரிதாபத்திற்குரிய இனம் - பாதுகாக்கப்பட இந்தத் தலைவர்தான் - இன்றும்  இனம் பேசும் ஈரோட்டு நெறியில் இணையற்ற அரசியல் தலைவர்.

எனவே, அவர் வாழ்ந்தால் அது இனத்தின் ஏற்றம்!

எந்தச் சோதனையும் சரி, எதிர்ப்பும் ஏளனமும் சரி, அவரது கொள்கைப் பயிரும் விளையும் பண்ணையில் வீசப்படும் உரங்கள் - அவைகளினால் அவருக்கு வளர்ச்சி ஏற்படுமே தவிர, தளர்ச்சி ஏற்படாது!

90 வயது இளைஞர் வாழ்கவே!

90 வயது இளைஞராம் அவரை வாழ்த்தி நாம் மானமும், அறிவும் உள்ளவர்கள் என்று காட்டுவோம்; அம் மானமிகு சுயமரியாதைக்காரரை வாழ்த்துவதுதானே மானத்தை, அறிவைப் போற்றுவது - இல்லையா!
வாழ்க கலைஞர் பல்லாண்டு!
------------------------------- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். (விடுதலை - கலைஞர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்  மலரிலிருந்து)

20 comments:

தமிழ் ஓவியா said...


திராவிட இனத்தின் காவல் அரணே வாழ்க! வாழ்க!!


திராவிட இனத்தின் மான மீட்பரான அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் ஈரோட்டுக் குருகுல சீடரும், அவர்தம் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பியும் ஆன முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் அகவை தொண்ணூறில் அடியெடுத்து வைக்கும் நாள் இந்நாள்!

இவ்வினத்தின் இனிய பொன்னாள்!!

நன்றி உள்ள தமிழர்கள் இதைக் கோலாகலமாக கொண்டாடும் இத்திருநாளில், அவர் நீந்தி வந்த எதிர்ப்பு நெருப்பாறுகளும், கடந்துவந்த அவதூறு அலைகளும் அநேகம் உண்டு.

பெரியாரின் துணிவும், அண்ணாவின் கனிவும், அவருக்கே உரிய தனி உடைமையான சலியாத உழைப்பும் இணைந்து என்றென்றும் இந்த சரித்திர நாயகரின் சாதனைகளை நாளும் சிகரத்தின் உச்சிக்கே கொண்டு சென்று கொண்டிருக்கின்றன!

ஆட்சி - அவரின் மூச்சல்ல!

இனத்தின் மீட்சிக்கோர் வாய்ப்பான படைக் கலன் - அவ்வளவுதான்!
எவர் போற்றினும், பலர் தூற்றினும் அவரது லட்சியப் பயணம் தடைபடாது. தொய்வின்றித் தொடரும்.

தந்தை பெரியார் அவர்களால் வார்க்கப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களால் பதப்படுத்தப்பட்ட தன்னைத் தானே மேலும் செதுக்கிக் கொண்ட பல்கலைக் கொள்கலன் அவர்!

பருவம் பாராது, மானம் பாராது, நன்றியை எதிர்பாராது தொண்டறம் புரியும் இவருக்கு நாம் அணிவிக்க வேண்டிய மான ஆடை கழகத் தோழர்களின் கட்டுப்பாட்டினால் நெய்யப்பட்டதாக அமைய வேண்டும். அது நீடிக்கும் வரை இவ்வாடை, அவருக்கல்ல - அவர் காக்க முன் வந்துள்ள இனத் திற்கே மானங் காக்கும் மகத்தான ஆடையாகும்!

எனவே கட்டுப்பாட்டை தி.மு. கழகத் தோழர்கள், இயக்க வீரர், வீராங்கனைகள், அவருக்கு 90ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாகத் தருவதைத் தவிர, உயர்ந்த பரிசுப் பொருள் வேறொன்றும் இல்லை என்று தாய்க் கழகத்தினர் என்ற உறவில் உரிமையின் பாற்பட்டு கேட்டுக் கொள்ளுகிறோம்.

எனவே, அவர் நூறையும் தாண்டி வாழ்ந்து இந்தத் திராவிட இனத்தின் காவல் அரணாக என்றென்றும் வாழட்டும் என்று வாழ்த்தும் உலகத் திராவிடர் களோடு நாம் நம்மையும் இணைத்துக் கொள்ளுகிறோம்!
இந்த மானமிகு சுயமரியாதைச் சிங்கம்
வாழ்க! வாழ்க!!

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே!




கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

3.6.2013

தமிழ் ஓவியா said...


மானமிகு கலைஞர் வாழ்கவே!



90ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் நூற்றாண்டு கண்டு, தமிழர் சமுதாயத்துக்குத் தொண்டாற்ற வாழ வேண்டும் என்று வாயார, கையார, மனமார வாழ்த்துகின்றோம்.

90 ஆண்டு அகவையில் 75 ஆண்டு பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். 5 முறை முதலமைச்சர் என்பது அவரைப் பொறுத்தவரையில் இடையில் வந்ததுதான்.

திராவிடர் கழகத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, கருஞ்சிறுத்தையாக அவர் உலா வந்தபோது, மாணவர் பட்டாளத்தைச் சேர்த்துக் கொண்டு தந்தை பெரியார் அவர்களின் கருத்துப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றபோது, அந்தப் பணிகளில் ஈடுபட்ட நிலையில் கடும் எதிர்ப்புகளையும், தொல்லைகளையும், வன்முறைகளையும் சந்தித்தபோது முரசொலி கையேட்டை நடத்தியபோது, பிரச்சார நாடகங்கள் எழுதி, அவற்றை அரங்கேற்றம் செய்தபோது, ஈரோடு சென்று அந்தக் குருகுலத்திலே பணியை மேற் கொண்ட போதெல்லாம் எதிர்காலத்தில் அரசியலில் நுழைவோம், சட்டமன்ற உறுப்பினராவோம், அமைச் சராவோம், முதல் அமைச்சராவோம் என்றெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்கப் படாதவை.

இன்று பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது எளிது; அந்தக் கால கட்டத்தில் அது கரடுமுரடான, கல்லும், முள்ளும் நிறைந்த புதரில் நடந்து செல்லும் தன்மை கொண்டதாகும். அரசியலில் நுழைந்த நிலையிலும் அடிப்படைச் சுயமரியாதை எண்ணத்திலிருந்தோ, தந்தை பெரியார் ஊட்டிய இனவுணர்ச்சியிலிருந்தோ விலகிச் செல்லவில்லை என்பதுதான் கலைஞர் அவர் களுக்கே உரிய தனித்தன்மையாகும்.
இன்னும் சொல்லப் போனால் இந்தக் கொள்கை களில் அவர் உறுதியாக இருப்பதுதான் அவருக்குரிய பிரச்சினையே! இன எதிரிகளும், அவர்கள் கைகளில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிற ஊடகங்களும் கலைஞர் அவர்களைக் குறி வைத்துத் தாக்குவதன் நோக்கமே, மாணவர் பருவத்தில் அவர் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படைக் கொள்கைகளில் அழுத்தமாக இருப்பதால்தான். இன்னும் ஆரியர் - திராவிடர் போராட்டம் நடக்கிறது என்று கலைஞர் சொல்லுகிறாரே - ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்ற வினா தொடுக்கிறாரே -ஹிந்து என்றால் திருடன் என்று பொருள் என்று ஆதாரம் காட்டிப் பேசுகிறாரே - தோழர்களே!

ஞானசூரியனைப் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறாரே - தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கிறாரே - ஜாதி வேருக்கு அமிலம் ஊற்றுகிறாரே - பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்குகிறாரே - தீட்சதர்கள் கைகளில் ஆண்டாண்டு காலமாக சுரண்டல் தொழில் ஏகபோகமாக நடத்தப்பட்டு வந்த சிதம்பரம் நடராசன் கோயிலை, அரசு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டாரே - வடலூர் இராமலிங்கனாரின் சத்திய ஞான சபையில் நுழைந்து வள்ளலாரின் கொள் கைக்கு விரோதமாக உருவ வழிபாடு நடத்தி வந்த ஆரியப் பார்ப்பனரான அர்ச்சகரை வெளியேற் றினாரே, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்த துடியாய் துடிக் கிறாரே, கோயிலுக்குள் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறாரே - சமூக நீதித்திசையில் சிறுபான்மை மக்களுக்கும் இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்து விட்டாரே, நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றி, நீதிமன்றத் திலும் வெற்றி பெற்று விட்டாரே - அப்படிப்பட்ட ஒருவரை விட்டு வைப்பார்களா பார்ப்பனர்கள்? பார்ப்பன ஊடகங்கள்தான் சும்மா இருக்குமா?

இவற்றிற்கு மேலாக தமது இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விட்ட நிலையில், அதனைக் கட்டிக் காக்க வேண்டும்; இனவுணர்வு மிக்க கலைஞரின் கரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் பலப்படுத்தி விடக் கூடாது என்பதுதான் எதிரிகளின், அவர்களின் ஊடகங்களின் வியூக மாகும். நன்றி கெட்ட தன்மையில் மத்திய அரசும் நடந்து கொள்ளும் போக்குகள் இன்னொருபுறம்.

காய்த்த மரத்தின்மீது கல்லடி என்றாலும் மானமிகு கலைஞர் அவர்கள் அவற்றிற்கெல்லாம் முகம் கொடுத்து முன்னேறுவார் - வெற்றிக் கனியைப் பறிப்பார் என்பதில் அய்யமில்லை.

கழகத் தோழர்கள் கட்டுப்பாடு காத்து கலைஞரின் கரங்களை வலுப்படுத்துவார்களேயா னால் சமுதாய களத்திலும் சரி, அரசியல் களத்திலும் சரி கலைஞர் வெற்றிகளைக் குவிப்பார் என்பதில் அய்யமில்லை.

கொள்கைப் பலமும், உழைப்பு என்ற பெரும் பலமும் அவரிடம் இருக்கும்வரை யாரும் அவரை வெல்ல முடியாது, முடியவே முடியாது. தமிழ், தமிழர், தமிழ்நாடு வாழ, வளம் பெற கலைஞர் அவர்கள் நீடு நீடு வாழட்டும்! வாழட்டும்!!

தமிழ் ஓவியா said...


நாத்திகன்



நாத்திகன் என்று சொன் னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?


உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.

மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.

எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

தமிழ் ஓவியா said...


முடைநாற்றம் வீசும் மூட நம்பிக்கைகள்!


குலதெய்வத்தைக் கும்பிடப் போனவர் கோரப் பலி!

விருதுநகர், ஜூன் 3- குலதெய்வ கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற போது பாலத்தில் கார் மோதி நேர்ந்த விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் இறந்தனர். மகன், மகள் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ் (48). திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மளிகை மற்றும் மிட்டாய்க் கடை நடத்தி வந்தார்.

சாத்தான்குளத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக மனைவி உஷாராணி (40), மகள் சவும்யா (21), மகன் பிரபு (18) ஆகியோருடன் வாடகை காரில் செங்கத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பினார் ராஜ். காரை, ஓட்டுநர் அசன் பாட்ஷா (38) ஓட்டினார்.

விருதுநகர் மருளுத்தூர் -பட்டம்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் ராஜ், உஷா ராணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சவும்யா, பிரபு, அசன்பாட்ஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தேர் எரிந்து சாம்பல்

திருப்பூர், ஜூன் 3- திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சிற்பக்கூடம், நேற்று தீப்பிடித்து எரிந்ததில், தேர் சக்கரங்கள் நாசமாயின. திருப்பூர் வீராகவப் பெருமாள் கோவிலில், 50 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கின்றன. புதிதாக அமைக்கப்படும் சன்னதிகளுக்கு, கல் தூண், கல்சிற்பங்கள் செய்யும் பணிக்காக, கோவில் வளாகத்தில், கொட்டகை அமைக்கப் பட்டிருந்தது.

இதில், சிற்பிகள் வேலை செய்து வந்தனர். நேற்று, விடுமுறை தினமானதால், பணிகள் நடக்கவில்லை. பிற்பகல், 3.20 மணியளவில், திடீரென, தென்னை ஓலைக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததோடு, மேற்கூரையும் சரிந்து விழுந்தது. அருகிலிருந்த தேர்களின், பழைய மரச் சக்கரங் கள் எரிந்து தீக்கிரையாயின. தெற்கு மற்றும் வடக்கு தீய ணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்திற் கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

கழுதைக்கும் கழுதைக்கும் டும் டும் டும்மாம்!

கடந்த ஆண்டு, தமிழகம் முழுவதும், தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால், ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில், தண்ணீருக்காக மக்கள் அல்லல்படும் நிலை உள்ளது.

இதற்காக மக்கள் மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே, கழுதைகளுக்குத் திருமணம் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சேலம் ஏற்காடு மலைப்பகுதியை ஒட்டி அமைந் துள்ள செட்டிச்சாவடியில், இரண்டு கழுதைகளை அழைத்து வந்து, ஊர் மக்கள் திருமணம் நடத்தி வைத்தனராம்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்களும், செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட அய்ந்து கிராம பகுதி மக்களும் திரண்டு வந்தனராம். பூ, பழம், மேள தாளம் முழங்க, சித்தர்கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட இரண்டு கழுதைகள், அங்குள்ள ஊரணி மாரியம்மன், காளியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டதாம்.

அங்கு, பூசாரி குழந்தை என்பவர் கழுதை யின் கழுத்தில் மாலையை அணிவித்தாராம். பின்னர், ஆண் கழுதை சார்பில், பெண் கழுதைக்கு தாலியைக் கட்டினா ராம். அங்கிருந்த மக்கள் அனைவரும் அக்கழுதைகள்மீது மலர்களைத் தூவினராம்.

செட்டிச்சாவடி ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் கோவில் அறங்காவலர் மற்றும் அவ்வூர் முக்கிய பிரமுகர்களும் பலர் கலந்து கொண்டனராம். தொடர்ந்து, திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும் சோறு போடப்பட்டதாம். இதனால் மழை பொழிந்துவிடும் என்று நம்பும் மக்கள் என்றுதான் பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்புவார்களோ?

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை



பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

-(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (1)


உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?

1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.

மிகவும் கடினமானது எது?

பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?

நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!

மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!

மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.

நட்பின் ஆழமான அடையாளம்

அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.

நல்ல தலைமையின் அடையாளம்!

எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!

இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?

இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!

தொண்டர்களின் சரியான இலக்கணம்

சிந்திப்பதற்குத் தலைமை
செயல்படுவதற்கு நாம் என்பதே!

வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?

சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!

வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!

மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!

கல்வியின் சிறப்பு

தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!

பணம் சம்பாதிப்பதன் தேவையா?

ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.

அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!

சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?

நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.

மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?

ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.

இருக்கக் கூடாதது...?

பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.

(தொடரும்)

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அரசாணை எண் - 92


மத்திய அரசின் உதவித் தொகை திட்டத் தின்கீழ் 9.1.2012 அன்று அரசாணை ஒன்று பிறப் பிக்கப்பட்டது. அதன்படி அனைத்து விதமான படிப்புகளுக்கும் பொருளா தாரத்தில் பின் தங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு நூறு விழுக்காடு கல்விக் கட்டணம் ரத்து என்று இந்த ஆணை கூறுகிறது.

இதில் உள்ள அவலம் என்னவென்றால் இப்படி ஓர் ஆணை வெளி வந் துள்ளது என்பது வெளிச் சத்துக்கு வராமலேயே இருட்டில் தூங்குகிறது என்பதாகும்.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த ஆணையினால் பலன் பெற முடியும். 2011-2012ஆம் ஆண்டு முதலே இது அமலுக்கு வந்தது விட்டது.

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத் துறை இந்த ஆணையைச் சரிவர விளம்பரம் செய் யாததால், இந்த ஆணை யின்படி பயன் அடைய வேண்டிய தாழ்த்தப்பட்ட இருபால் மாணவர்களும் பணம் கட்டி விட்டனர்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.
மருத்துவம், பொறி யியல் மற்றும் அனைத்துப் படிப்புகளுக்கும் இந்த ஆணை பொருந்தக் கூடியதே!

கல்விக் கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரி கைகள், மருத்துவப் பரி சோதனை போன்றவற் றிற்கான கட்டணங்களும் இதில் அடங்கும்.

இந்த ஆணை தெரி யாமல் பணம் கட்டியவர் களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல். இந்தச் சலுகையை அறி யாத காரணத்தால் கல்லூரிகளில் சேர முடி யாத நிலைக்குத் தள்ளப் பட்ட தாழ்த்தப்பட்ட மாண வர்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முறைப்படி இது போன்ற ஆணைகளை அரசு, ஏடுகளில், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண் டும்.

ஆட்சியின் சாதனை கள் என்று பக்கம் பக் கமாக விளம்பரங்களை அள்ளிக் கொட்டும் தமிழ் நாடு அரசு, சமூக நீதித் தொடர்பான - தாழ்த் தப்பட்ட மக்களை வாழ் விக்கும் ஒரு ஆணையை விளம்பரப்படுத்துவதில் கமுக்கமாக இருட்ட டிப்புச் செய்தது ஏன்?

இனி மேலாவது தமிழ் நாடு அரசு விளம்பரப் படுத்துமா? தாழ்த்தப் பட்ட மக்கள்தான் விழித் துக் கொள்வார்களா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அத்வானி ஏற்படுத்திய அதிர்வு....


பி.ஜே.பி.யில் மூத்தத் தலைவரும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது (2009) பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளருமான லால்கிஷண் அத்வானி, மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் (1.6.2013) பேசிய பேச்சால் பிஜேபி கூடாரம் அதிர்ந்து போயிருக்கிறது.

தாம்தான் பிஜேபிக்கான அதிகாரப் பூர்வமான பிரதமர் வேட்பாளர் என்று எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த நரேந்திரமோடியின் தலையில் நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார் மூத்தத் தலைவர் அத்வானி!

மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானைப் பாராட்டு மழையால் குளிர வைத்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி போல அடக்கமானவர் என்று அடையாளப்படுத்தினார்.

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியையும் அக்கூட்டத்தில் அவர் பாராட்டியிருந்த போதிலும் ம.பி. முதல்வர் சவுகானுக்கு அதிகார மமதை கிடையாது என்று குறிப்பிட்டார். குஜராத்தைவிட மத்திய பிரதேசத்தில் சாதனைகள் அதிகம் என்று விளாசினார். இதன் மூலம் மோடியை அத்வானி மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது என்று தினமணியே கூறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்பதில் அத்வானிக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அது கிட்டியவுடன் சடார் என்று போட்டு உடைத்து விட்டார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம்; காரணம் அங்குதான் பிஜேபியின் முதல் அமைச்சராக சவுகான் இருக்கிறார்.

குஜராத் மோடி ஆட்சியில் குபீரென்று முன்னேறி விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்ட நிலையில், ம.பி.யில் சவுகான் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அத்வானி ஒரு போடு போட்டதன் மூலம் மோடியும், அவரைத் தோளில் தூக்கி வைத்துள்ள கூட்டத்தாரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டனர்.

அத்வானி, சுஷ்மா சுவராஜ் போட்டி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்து நிலவும் சூழ்நிலையில், மூன்றாவதாக சவுகானை அத்வானி களத்தில் இறக்க முயற்சிப்பதன் சூட்சுமத்தைப் புரியாமல் பிஜேபி வட்டாரம் திகைக்கிறது.

ஒருக்கால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் சவுகானுக்குக் கிடைக்க வேண்டும் என்று அத்வானி நினைக்கிறார் போலும்!

பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள இரு மாநில முதல் அமைச் சர்களை மோத விடுவதுதான் சுவையான காட்சியாகும்.

கருநாடக மாநிலத் தேர்தலில் காயடிக்கப்பட்ட பிஜேபி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் கால கட்டத் தில், உள்நாட்டுப் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கி விட்டது. அடுத்தடுத்த காட்சிகள் வேடிக்கை, விநோதம் நிறைந்ததாக இருக்கக் கூடும்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்றால் ஒட்டு மொத்தமான சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிஜேபிக்கு எதிராக சிந்தாமல் சிதறாமல் செல்லும்.

பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பா.ஜ.க.வை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் கைகோக்க அதிக வாய்ப்புண்டு.

சமூக நீதியாளர்கள், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் பிஜேபிக்கு எதிராகத் திரளவும் அதிக வாய்ப்புண்டு. தலைப்பாகையை மாற்றி னாலும் தலைவலி தீரப் போவதில்லை என்பதுதான் உண்மை.

கடைசி செய்தி (Tail Piece) : என்னைவிட மோடிதான் சிறந்த முதல் அமைச்சர் என்று ம.பி. முதல் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார். இதுவும் ஒரு மோடி மஸ்தான் வேலையாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்வதில் மோடி பலே கில்லாடி ஆயிற்றே!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


வாழ்வியல் சிந்தனை - விருது பெற்றுத் தந்தது!




கடந்த சில நாள்களுக்குமுன், பல நூற்றுக்கணக் கான ரயில் பயணிகளைக் காப்பாற்ற மனோகரன் என்ற ரயில் ஓட்டுநர், கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை அருகில் வண்டியை ஓட்டி வரும்போது, இதயவலி ஏற் பட்டு, சங்கடப்பட்ட நிலையில், ரயிலை நிறுத்தி, பிறகு கீழே இறங்கி சுருண்டு விழுந்த நிலையில், மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார்.

அவரது கடமை உணர்வு, பொறுப்புணர்வைப் பாராட்டி ரயில்வே நிர்வாகம் அவருக்கு விருது வழங்கவேண்டுமென்று வாழ்வியல் சிந்தனையில் எழுதினோம். ரயில்வே நிலைக் குழுத் தலைவரான தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு அவர் களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அவர் உடனே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதைக் கூறினார். கைமேல் பலன் கிடைத்தது!

இன்றைய ஏடுகளில் மனோகரன் மறைந்த நிலையிலும் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது, பாராட்டுக்கள்! -------------விடுதலை” 5-6-2013

தமிழ் ஓவியா said...


தொழிலாளர்களின் புத்தி இப்படியா?


தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போர்க்கொடி தூக்குவார்கள். கோரிக்கை கள் நிறைவேறும்வரை கோடிக் கைகளை உயர்த்துவார்கள். நீதிமன்றமும் செல் வதுண்டு. அவைதான் சரியான வழி முறையும்கூட.

புதுச்சேரியில் என்ன நடந்திருக்கிறது? முதலியார்பேட்டையில் ஏ.எஃப்.பி. (ரோடியர் மில்) துணி நெய்யும் தொழிற்சாலை.

நலிந்த தொழிற்சாலையாகி இழுத்து மூடப்பட்டது (3.2.2013). தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பறிபோனது. 13 மாத சம்பளப் பாக்கியும் நிலுவையில் உள்ளது - என்னே கொடுமை!

அதைவிட இன்னொரு கொடுமை - தொழிலாளர்கள் தரப்பில்,

ஜூன் 2 ஆம் தேதி காலை 9.30 மணி. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்த் தோழர் கள் தொழிற்சாலை முன் கூடினர்.

குதிரைமீது அமர்ந்திருக்கும் அய்யனார் சிலை போன்ற கட்-அவுட் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த அய்யனாருக்கு எலு மிச்சை மாலை, பூ மாலைகளைச் சூட்டினர். அய்யனாருக்கு மிகவும் பிடித்தமானதாகக் கதைக்கிறார்களே - சேவல், சாராயம் (அதுவும் புதுச்சேரி - கேட்கவேண்டுமா?) போன்றவற்றை களேபரமாகப் படைத்தனர். பிறகு உருமி அடித்தனர்.

10 மணி... அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். புதுச்சேரி பேருந்து நிலையத் திற்குள் அமைந்திருக்கும் கலிதீர்த்த அய்ய னார் கோவிலை வந்தடைந்தது ஊர்வலம்.

உருமி அடிக்கப்பட்டது - சிலர் சாமி வந்து(?) ஆடினார்களாம்.

அய்யனாருக்கு விசேடமாகப் பூஜைகள் செய்யப்பட்டனவாம் - கோரிக்கைகள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டினை குதிரைமீது வீற்றிருந்த அய்யனார் பொம்மைக் கையில் உள்ள கத்தியில் வைத்தனராம்.

வேடிக்கை பார்க்க மக்கள் கூடினார் களாம் - எப்படி இருக்கிறது? விவரம் தெரியாதவர்களா இந்தத் தொழிலாளர்கள்? விவரம் தெரியாதவர்களா இவர்களை வழிநடத்தும் தொழிலாளர்த் தலைவர்கள்?

அய்யனாருக்கு அவ்வளவு பெரிய சக்தி இருந்தால், தொடக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது ஏன்? அப் பொழுது அய்யனார் நினைவு வர வில்லையா?

தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் புகாவிடின், அதன் விளைவு இப்படிக் கீழ்த்தரத்தில்தான் சென்று முடியும்.

தந்தை பெரியார் கூறுகிறார்:

இன்று தொழிலாளிகளுக்குப் பாடுபடுவதாகச் சொல்கிற ஸ்தாப னங்கள் எல்லாம் தொழிலாளிக்கு நாத்திகம் தேவையில்லை; அவன் சாமி கும்பிடுவதையோ, கோவில் குளங்களுக்குத் திருவிழாக்களுக்குப் போவதையோ தடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவெல்லாம் சொல்லுகிறார்கள். அந்தப்படி இருப்ப தனால் தொழிலாளி தனக்குக் கிடைக்கும் பணத்தை இந்த மாதிரிக் கோவில், குளம் திருவிழாக்களிலே செலவிட்டே மூடத்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் பலியாவானே தவிர, சேர்த்த பொருளை மீட்காமல் கண்டதுக்கு, கண்மூடித்தனத்திற்குச் செலவிடுவானே தவிர, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவோ வாழ்க்கைத் தரத்தை சரிக் கட்டிக் கொள்ளவோ முடி யாதவனாக ஆகிவிடு கிறான் (விடுதலை, 22.3.1952) என்று தந்தை பெரியார் சொன் னதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் உண்மை வெளிச்சமாய்த் தெரியும்.

கான்பூரிலே செருப்புத் தொழிற் சாலைகளில் ஒருமுறை வேலை நிறுத்தம்; வன்முறைகள் தலைதூக்கின - தீ வைப்பு முதற் கொண்டு அரங்கேறின. காவல் துறையாலும் அடக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தொழிற்சாலை முதலாளி ஒரு தந்திரம் செய்தார். தம் குடும்பப் புரோகி தனைக் களத்தில் இறக்கிவிட்டார்.

அவன் கையிலே ஒரு தட்டு, அதில் கொஞ்சம் கோவில் பிரசாதம்!

இந்தச் சகிதமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தான் புரோகிதன்! அவ்வளவுதான்! ஆர்ப்பரித்த வாய்கள் அடங்கின. பொங்கி எழுந்த தோள்களும் அழுந்தின!

புரோகிதப் பார்ப்பானிடமிருந்து பிரசாதம் பெற தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

தொழிலாளியின் எரிமலைக் குழம்பை ஒரு திருநீறும், குங்குமமும் அணைத்து விட்டதே!

எந்தப் பிரச்சினைக்கும் பெரியார் மருந்து - மூலிகை தேவைப்படுகிறது!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (2)



மனிதர்களிடம் பின்பற்றத் தகுந்த பெரியவை எவை?

எண்ணியவைகளையே, சிந்தித்தவைகளையே பேசுவது,
பேசுவதையே செயல்படுத்துவது
என்பது எல்லாம் ஒன்றாக அமையும்
வாழ்க்கை நெறியே!
காரணம், மனிதரில் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், பேசுவதன் படிகூட நடவாது அதனின்றும் மாறுபட்ட செயல் வகையில் ஈடுபடுவதுமான மூவகை வாழ்வு (இரட்டை வாழ்வு கூட அல்ல) வாழுகின்ற அன்றாட அவலம் நமது கண்முன்னே காணும் காட்சியாகும்!

தவிர்க்கப்படவேண்டியவை எவை?

மற்றவர்களைத் துன்புறுத்தி - அது கேலி, கிண்டல், நக்கல் போன்றவைகள்மூலமும், இதர கேவல முறைகளாலும்கூட அமையலாம் - அதில் இன்பங்காணும் இழிதகைமை.

பின்பற்ற வேண்டிய பெருநெறி எது?

எந்த நிலையிலும் தன்னை விற்றுக் கொள்ளாத அல்லது சுயமரியாதையை விலை பேசாத உயர்நெறியான வாழ்க்கை.

புகழ் வேட்டையாடுதல் பற்றி...?

போதைகளிலேயே மிகப்பெரிய போதை இந்தப் புகழ் போதைதான்.

அதற்காக மனிதர்கள் உண்மை மனிதர் களாக இராமல், நிலை தாழ்ந்து, வீழ்ந்து, ஒப்பனை மனிதர்களாகி உயர நினைக்கும் பேதமை!

இயல்பாக வரும் புகழ் நல்ல இரத்த ஓட்டம்; திணிக்கப்பட்ட அல்லது யாசிக்கப்பட்ட புகழ் இரத்தக் கொதிப்பு போன்றது!

இரத்த ஓட்டம் - ஆரோக்கியமானது; இரத்தக் கொதிப்பு எந்த நேரத்திலும் பல நோய்களுக்கு அடிப்படை - ஆரோக்கியத்தின் வைரியாகும்!

பதவி ஆசை, பதவி வெறி இவைகள்

சர்க்கரை நோயைவிட கொடுமையானது; ஒருமுறை உடலுள் நுழைந்தால், இறுதி மூச்சடங்கும் வரை அது உடலை விட்டு அகலாது; முயன்றால் சிலர் கட்டுக்குள் அதை வைக்கலாமே தவிர, அறவே நீக்கி அதனின்றும் விடுதலை பெற்றுவிட முடியாது; முடியவே முடியாது!

அதுபோலத்தான் பதவி ஆசையாக முதலில் தொடங்கி, பதவி வெறியாக அது தீவிரமாக மய்யங்கொண்டு, பலருக்குப் புதை பூமியாகவும் ஆகிவிடுகிறது!

ஒருமுறை ஆட்பட்டுவிட்டால் அது பிடித்தவர் களை விட்டு அகலாது.

அறிவு நாணயம் என்பது...?

உள்ளதை எக்காரணம் கொண்டும் ஒளிக்காது, மறைக்காது கூறுவதோடு, சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல்போல் வாழ்க்கையை செம்மையாக நடத்துவது,
எமை நத்துவாய் என எதிரிகள்
கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற வைராக்கிய நெஞ்சத்தோடு,
வறுமையின் உச்சத்திலும்
நெறிபிறழாத வாழ்வின் சிறப்பியல்புகளில் முக்கியமான ஒன்று!

உறவுகளில் உயர்ந்தது எது?

ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிடினும் ஒரு கொள்கை வயப்பட்ட நிலையில் அதற்காக, அதைப் பின்பற்றியவருக்காக, உயிரையும் விட எதனையும் ஏற்கத் தயாராகும் உறவே உயர்ந்த உறவு!

தியாகத்தில் சிறந்தது எது?

திணிக்கப்பட்டோ, விபத்தினாலோ வந்து விழும் தியாகம் உண்மை தியாகம் ஆகாது.

தெரிந்தே உயிர் விடுதல் செய்த சாக்ரட்டீஸ், பகத்சிங் போன்றவர்களின் தியாகம்.

அல்லாது கொண்ட கொள்கைக்காக வாழ்வை இழந்து வரலாறாக வாழும் வ.உ.சி. போன்றவர் களின் தியாகம் முதல் தரம்.

- கி.வீரமணி

- (தொடரலாம்)

தமிழ் ஓவியா said...


கலைஞர் என்றாலே வியப்பு - பிரமிப்பு காரணம் அவரின் கடுமையான உழைப்பு - தலைவர்கள் புகழாரம்


சென்னை, ஜூன் 5- கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தோழமைக்கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் 3.6.2013 அன்று மாலை சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது.

இப்பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது:-

தொல்.திருமாவளவன்

கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், அறிவு ஆற்றல் பெற்ற ஒரே தலைவர் கலை ஞர்தான். அவருக்கு போட்டி போடுவதற்கு தகுதி யான தலைவர்கள் யாரும் கிடை யாது. புவி ஈர்ப்பு விசையை போன்று அரசியல் விசையாக கலைஞர் திகழ்கிறார். ஈழம் வென்றெடுக்க தமிழர்கள் வாழ்வுரிமையை மீட் டெடுக்க கலைஞர் அவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாது என கலைஞர் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்திப் பேசினார்.

காதர் மொய்தீன்

கலைஞர் அவர்களின் வாழ் கின்ற காலம் நமக்கு பெருமை. கலைஞருடைய வரலாறு எத்தனை மேடு - பள்ளங்களை யும், காட்டாறுகளையும் கடந்து வந்திருக்கிறது. கலைஞரின் சிந்தனைகளையும், சாதனைகளை யும், எழுத்துக்களையும் தமிழ் அறிஞர்கள் தொகுத்து அவருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கச் செய்தவர் கலைஞர் அவருக்கு முஸ்லிம் சமுதாயம் என்றும் கடமைப் பட்டுள்ளதாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்துரை வழங்கினார்.

சுப.வீரபாண்டியன்

சமூக அரசியலில் 90 வயதிலும் கலைஞர் செய்து இருக்கின்ற சலிப்பில்லாத பணி பேராற்றல் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் வராது. கலைஞரின் கடந்த 70 ஆண்டு வரலாறு நீண்ட நெடிய வரலாறு. அவரின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கடினமானது. அடங்காத பல அரசியல் குதி ரைகளை அடக்கிய அரசியல் அலெக்சாண்டர் நீங்கள்! என்றைக்கும் எந்த நெருக்கடி காலத்திலும் தளராத நெப்போ லியன் நீங்கள்!

ஆட்சியை உயிர் மூச்சாக கருதாமல், மக்கள் பணி செய்கின்ற படைகலனாக கருதுபவர் கலைஞர் அவரை போன்று துணிச்சல், போராட்ட குணம் யாருக்கும் வராது என கலைஞருக்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலைஞரை வாழ்த்திப் பேசினார்.

இவ்விழாவின் இறுதியாக 90ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் கலைஞர் அவர்கள் ஏற்புரை நிகழ்த் தினார். முன்னதாக இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

90-ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன், பேராசிரியர் காதர் மொய்தீன், தொல்.திருமாவளவன் ஜெ.அன்பழகன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.

இவ்விழாவின் தொடக்கத்தில் அனைவரையும் எஸ்.மதன்மோகன் வரவேற்றார். ஏ.ஆர்.பி.எம். காமராஜ் வழி மொழிந்தார். மா.பா.அன்புதுரை நன்றி கூறினார். விழாவின் தொடக்கத்தில் மக்கள் இசை கலைஞர்கள் முனைவர் புஷ்பவனம் குப்பு சாமி, முனைவர் அனிதா இணையர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாமேடை அண்ணா அறிவாலய தோற் றத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அமைக் கப்பட்டிருந்தது. இதை விழா நாயகர் கலைஞர் மற்றும் தோழமைத் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், கலைஞர் குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள், ஆற்காடு நா.வீராசாமி, எ.வ.வேலு, பொன்முடி, துரைமுருகன், சற்குண பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் மற்றும் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆருக்கு... கருஞ்சட்டையிடம் விளையாட வேண்டாம்


பருவம் பாராது, மானம் பாராது தொண்டறம் புரிபவர் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களைப் பாராட்டிவிட்டாராம் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் பறக்கவிட்டுக் கொண்டு பூணூலுக்கும், திருநீறுக்கும் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டு இருக்கும் அக்கிரகார ஆன்மீக ஏடாகவே ஆட்டம் போடும் அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு. அத்திரிபாட்சா கொழுக் கட்டை என்று சாக்கடை எழுத்துக்களை சந்தனமாகக் கருதி உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை பூசிக் கொண்டுள்ளது (5.6.2013).

இந்த ஏட்டுக்கு அனா ஆவன்னா சொல் லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

பருவம் பாராது தொண்டாற்றக் கூடியவர் கலைஞர் என்பதில் என்ன தவறு? இந்தத் தொண்ணூறு வயதிலும் உழைக்கிறார். அன்றாடம், தானே கட்டுரை எழுதுகிறார் - தானே பேசுகிறார் (மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதையல்ல) செய்தியாளர்களைச் சந்திக்கிறார் - அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் - இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் - சுயமரியாதைத் திருமணங் களை நடத்தி வைக்கிறார்.

பொதுத் தொண்டாற்றி மறைந்த பெரு மக்களின் உடலுக்கு ஓடோடிச் சென்று இறுதி மரியாதை செலுத்துகிறார் - போராட்டங்களை அறிவிக்கிறார் - தானே அந்தக் களத்திலும் போய் நிற்கிறார் - இவ்வளவும் இந்தத் தொண்ணூறு வயதில் - இதற்குப் பெயர்தான் பருவம் பாராத தொண்டு என்பது.

அதேபோல மானம் பாராத தொண்டு என்று கழகத் தலைவர் பாராட்டியிருக்கிறார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள் - தன்மான இயக்கத்தின் தத்துவத்தை அறிந்து கொண்டவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

தனி வாழ்வில் மானம் பார்க்கலாம்; பொது வாழ்வில் மானம் பாராது தொண்டாற்ற வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் 1028)

- என்ற குறள், தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறளாகும்.

இதை எல்லாம் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சமாவது பகுத்தறிவும், பொது அறிவும் தேவைப்படும்.

கலைஞரின் மானம் பாராத பொதுத் தொண்டு என்பதற்கு உதாரணம் வெகு தூரம் போய்த் தேட வேண்டாம்.

ஒவ்வொரு நாளும் அதிமுகவின் எம்.ஜி.ஆர் ஏடு அவதூறுகளையும், ஆபாசச் சொற்களை யும், அநாகரிகச் சகதிகளையும் அவர்மீது வீசு கிறதே - அவற்றையெல்லாம் அனாயாசமாகப் புறந்தள்ளி, பொதுத் தொண்டில் 90 வயதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாரே - இந்த ஒன்று போதாதா?

திராவிடர் கழகம் - அதன் தலைவர் யாரை ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் அது கொள்கை அடிப்படையில் தான் இருக்கும் என்பது ஊருக்கும், உலகுக் குமே தெரியும். அதற்குப் பெயர் ஜால்ராவாம்.

கர்ப்பிணிப் பெண்களைக் கூட அவர்கள் முசுலீம்கள் என்றால் அவர்களின் குடலைக் கிழித்தெறிந்த மோடிகளுக்கெல்லாம் ஜால்ரா போடுபவர்கள் யார் என்று தெரியாதா?

எழுதுகோலை எதிர்த்துப் பிடிக்க ஆரம்பித்தால் நமது எம்.ஜி.ஆர். தாங்காது - கருஞ்சட்டையிடம் விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!

தமிழ் ஓவியா said...


வேண்டும்



பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


இதோ, இதயங் காக்கும் காவலன் பாரீர்!

மருத்துவத்துறையில் தொழில் நுட்பம் வியக்கத்தக்க வகையில் மிக வேகமாக வளர்ந்து, மனிதர்களின் ஆயுளையும்கூட நீண்ட காலம் வாழும் வண்ணம் செய்து வருகிறது!

இளமையைப் பாதுகாத்து முதுமையை விரட்டும் மரபு அணு ஆய்வும் மிக வெற்றிகரமாக பிரான் சிலும், இஸ்ரேலிலும் பல்வேறு கோணங்களில் போட்டியிட்டு முன்னேறுகின்றது!

ஆயுள் வளர்ந்தால் மட்டும் போதாது; முதுமை தவிர்க்கப்படல் அல்லவா முக்கியம் என்ற கண்ணோட் டத்தோடு புதுப்புது மருத்துவ தொழில் நுட்ப ஆய்வுகள் பல பல்கலைக் கழ கங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன!

Michio Kakku என்ற ஜப்பானிய - அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ஒரு நூலில், இதயத்துடிப்பின் சீர்மை, ரத்த அழுத்தம் மிகையாக ஆகிறதா? என்பன போன்றவற்றை நமது டாக் டருக்கே நேரிடையாகத் தெரிவித்து அவரை அக்கருவியே (Chips) அழைக்கும் வண்ணம் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன!

காலில் நாம் அணியும் பூட்சு களிலோ அல்லது கட்டும் டைகளிலோகூட அந்த சிப்ஸ்களை இணைத்து விட்டால் அதுவே இந்த வேலையைத் தவறாது செய்யும் என்று அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர்!

இப்போது நேற்று அதே செய்தி வண்ணக் கதிர் (தீக்கதிர்) வார ஏட்டில் வந்துள்ளதை அப்படியே தருகிறேன்.

இதய நோயாளிகள் பயப்பட வேண்டியதே இல்லை... இனி கவலையை விடுங்கள். இதயக் கோளாறு பெரிதாகு முன் ஓர் எச்சரிக்கைக் கருவியை உடலினுள் பொருத்தி விட்டால் போதும். இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை டாக்டருக்கு உடனுக்குடன் 24 மணி நேரமும், தானாகவே தெரியப்படுத்தி விடும். உங்களுக்கு பிரச் சினை என்பதை நீங்கள் உணரும் முன்பே தேவை யான மருத்துவ ஆலோசனை உங்களைத் தேடி வந்து விடும். இதைவிட வேறென்ன வேண்டும்? இது எப்படி சாத்தியம்?

ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மூலம் இதய நோய் கண்டறியும் கருவி ஒன்று உடலில் பொருத்தப்படும். இதயத்தின் செயல்பாடு, நுரையீரலில் நீர்கோர்வை, நாடித் துடிப்பு ஆகியவற்றை இந்தக் கருவி துல்லிய மாகக் காட்டக் கூடியது. நாடித்துடிப்பு குறைந்தால் அதை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பேஸ்மேக்கராகவும், ரத்தம் உடல் முழுவதும் செல்ல செயல்படும். இதயத்தின் செயல் குறைந்தால் சரி செய்யப் பயன்படும். ரீசிங்கரனைசேசன் தெரப்பி டிவைஸ் ஆகவும், இதயத்தை செயலிழக்க வைக்கும் குறைந்த நாடித் துடிப்பையும், சீரற்ற இதயத் துடிப்பையும் சரி செய்யும் டீபிப்ரில்லேட்டர் ஆகவும் இந்தக் கருவி செயல்படுகிறது. இந்தக் கருவி தானா கவே தான் பதிவு செய்த விவரங்கள் கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையில் 5 மீட்டர் தொலைவுக்குள் உள்ள செய்திக் கடத்தி கருவிக்குத் தெரி விக்கப்படும். அது சர்வரை சென்ற டைந்து மருத்துவரின் கைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சென்றடையும். அவசர நிலைமை என்றால் சிவப்பு வண்ண எச்சரிக் கையும், சீராக இருந்தால் மஞ்சள் வண்ண அறிவிப்பும் வரும். நம் நாட்டில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 லட்சம் என அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன இதயப் பிரச்சினை வருமோ என்ற பயம் நீங்கி, பயத்தால் ஏற்படும் விளைவுகள் வராமல் தடுக்கப்படு கின்றன. ஒவ்வொரு முறையும் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 24 மணி நேரமும் மருத்துவர் பார்வையில் இருக்கிறோம். இதைவிட வேறென்ன வேண்டும் ஓர் இதய நோயாளிக்கு? விஞ்ஞானத்துக்கு நன்றி சொல்வோம்!
- அ. சுந்தரம்

கணினி செய்த யுகப் புரட்சி இப்படி மனிதர்களை வாழ வைக்கும் உயிர் காப்பான் தோழனாக உயர்ந்து நிற் கிறது!

என்னே புதுமை! எவ்வளவு அருமை!
------------k.veramani

தமிழ் ஓவியா said...


சொல்லுவது அருந்ததிராய்!

இந்தியா சுதந்திரமடைந்த வேளையில், காலனி அரசுதான் நாட்டில் அதிகாரத்திற்கு வந்தது. தெலுங்கானா, வங்காளம் உள்ளிட்ட நாட்டின் எல்லைக் குள்ளாகவே ராணுவத்தை அனுப்பி, அரசு சொந்த குடிமக்களுக்கு எதி ராக போர் நடத்தியது. இவ் வகையான போர்கள் இன்றும் தொடர்கின்றன. இந்திய அரசு உயர்ஜாதி அரசாகும். இந்த அரசின் குணத்தை வேறொன்றுடன் ஒப்பிட முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலப் பிரபுத்துவம் மீண்டும் வருகிறது. முந்தைய காலங்களில் நடத்திய சீர்திருத்தங் களின் பலனாக ஏற்பட்ட நலன்கள்கூட பலன் பிரயோ கித்து மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. இதற்கெதிராகப் போராடுபவர்களுக்குப் பெரியதொரு இமேஜ் இருந்தாலே வெற்றி பெற முடியும். நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் மன்மோகன்சிங்கோ, நரேந்திரமோடியோ அல்ல. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட் தொழிலதிபர்கள்தாம் நாட்டை ஆளு கிறார்கள். ஆகையால்தான் முகேஷ் அம்பானிகளுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- அருந்ததி ராய், எழுத்தாளர்

தமிழ் ஓவியா said...


காவடி அல்ல ஆவடி!

பெரியாரோடு தி.க. குளோஸ் என்று மனப்பால் குடித்துக் கிடந்தனர். அன்னை மணியம்மையார் தலைமையில் இராவண லீலா நடத்தப்பட்டது என்றவுடன் அக்கிரகாரத்தில் எழவு விழுந்தது மாதிரியாகிவிட்டது.

அவரோடு அத்தியாயம் முடிந்துவிடாதா என்று ஆசைப்பட்டுக் கிடந்தனர்.

மானமிகு கி.வீரமணி அவர்கள் பொறுப் பேற்றார். மாவட்டத்துக்கு மாவட்டம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார்.

ஆத்திரத்தில் உச்சியிலே சென்ற அக்கிரகார வாசிகள் பழனியிலே மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். அதன்மூலம் பார்ப்பனர் அல்லாத மக்களின் தலைவர் - பாதுகாவலர் வீரமணிதான் என்று உலகுக்கே அறிவித்துவிட்டனர் பார்ப்பனர்கள். (பார்ப்பனர் களுக்கு முன் புத்தி ஏது?).

ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர் கள் தூக்கிச் சென்றார்களே, அது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா என்று எதிர் கேள்வி போட்டு, பார்ப்பனர்களுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த மான மரியாதையை யும் கப்பல் ஏற்றினார்.

பெரியார் காலத்தில் 50 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் 69 சதவிகிதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்தார்.

மாநில அரசு மட்டத்தில் இருந்த பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசுத் துறைகளிலும் (மண்டல் குழு பரிந்துரை) அமல்படுத்தச் செய்தார். (அதற்காக 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தினார்).

அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இடங்களைப் பெற்றனர்.

அக்கிரகாரத்தின் தலையில் இடிவிழுந்தது மாதிரி ஆயிற்று. பெரியார் பரவாயில்லையே, இந்த வீரமணிதான் மோசம் என்று எழுத, பேச ஆரம்பித்தனர்.

பெரியார் திடலுக்கே வந்து தலைவர் வீரமணி அவர்களைச் சந்தித்து எங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யுங்கள் என்று பார்ப்பனர்களை பணிய வைத்தார்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறதே என்று அங்கலாய்த்தார்கள்.

இவர் காலத்தில் இயக்கம் இளைஞர்களின் பாசறையாகி வருகிறது. கல்வி நிறுவனங்கள் விண்முட்ட எழுந்து நிற்கின்றன. இந்தியாவின் தலைநகரிலே பெரியார் மய்யம் கொண்டுள்ளார். பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் தொழச் செய்து வருகிறார்.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் இந்த வகையில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அதன் இரட்டைக் குழல் துப்பாகியான தி.மு.க. அதன் வலிமை வாய்ந்த, முதிர்ச்சிமிக்க தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் 90ஆம் அகவையை எட்டும் காலகட்டத்தில்,

அந்த அரசியல் பணி தொடர, அடுத்த கட்ட இளைஞர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயம்.

இந்தக் கலைஞர் அரசியலில் இருந்தாலும், வாக்குகளைக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தாலும், இடை இடையே அவரின் குரு குலமான ஈரோட்டுச் சரக்கினை வெளிப்படுத்திக் கொண்டேதானிருப்பார். ஈரோட்டு வாசனை வீசிக் கொண்டுதானிருக்கும்.

நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பார்; நான் நாத்திகன்தான் என்பார்; ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பார் - அந்த அரசியல் இவர் தலைமுறையோடு முழுக்குப் போடாதா என்று யாகம் நடத்திக் கொண்டு இருப்பவர்களின் ஆசையில் மண் விழ,

தளபதி ஒருவர் தோன்றியிருக்கிறார் - அவரை தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய இந்த வீரமணி தூக்கிப் பிடிக்கிறார் - அடையா ளம் காட்டுகிறார் என்றவுடன், ஆரிய தினமலருக்கு அடிவயிறு பற்றி எரிகிறது - ஆத்திரம் அலை மோதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கார்ட்டூன்.

இது வீரமணியார் எடுக்கும் காவடியல்ல - ஆவடி! ஆரியத்தை நோக்கி வீச வேண்டிய ஆயு தத்தைத் தயாரித்துக் கொடுக்கும் தொழிற் சாலைகள் ஆவடியில்தான் உற்பத்தியாகின்றன.

கொலைக் குற்றத்தின்கீழ் ஜெயிலுக்குச் சென்று பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் லோகக் குருக்களுக்கு ஜால்ரா தட்டும் தர்ப்பைகளா பூர்ணகும்பம் கொடுக்கும் பூணூல்களா ஜால்ரா பற்றிப் பேசுவது?

ஒன்று தெரியுமா இந்தப் பூணூல் கூட்டத் துக்கு? வீரமணி எங்கு இருந்தாலும் ராஜ குரு வாகத்தான் இருப்பார்!

- கருஞ்சட்டை -6-6-2013