Search This Blog

5.6.13

இந்து முன்னணி நாத்திக அமைப்பா?


இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது.

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பல லட்சம் செலவில் தேர் திருப்பணி  வேலை செய்து வந்த இடத்தில், மேற்கூரை தென்னங்கீற்றால் இருந்துள்ளது. அது தீப்பற்றி நாசத்தை விளைவித்துள்ளது. பல லட்சம் மதிப்பிலான தேர் சிற்பங்கள் செய்த இடத்தில் அலுமினிய ஷீட் கூரை அமைக்காமல் இருந்தது, கண்டிக்கத்தக்கது.

இனி இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகத்தில் உள்ள கோவில்களில் கீற்று கொட்டகைக்குப் பதிலாக ஷீட் போட அரசு உத்தரவிட வேண்டும்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இழப்பு ஏற்பட்டால், அரசு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை, அரசு அலுவலகங் களிலும் தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதையும் அரசின் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, தமிழக அரசும், அறநிலையத்துறையும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
--------------------------- இவ்வாறு இராம.கோபாலன் கூறியுள்ளார். (தினத்தந்தி, பக்கம் 18).

இதன்மூலம் இந்து முன்னணி ஒன்றை ஒப்புக் கொண்டுவிட்டது.

கடவுளாவது - வெங்காயமாவது - அதற்குச் சக்தியாவது - புடலங்காயாவது!
சிற்பி செதுக்கி வைத்த வெறும் சிற்பம்தான் அது - பாம்பாட்டி ஒரு பாம்பை வைத்து வித்தை காட்டி பிழைப்பதுபோல, கிளி சோதிடன் கூண்டுக்குள் ஒரு கிளியை வைத்து ஜோதிடம் என்று சொல்லி மக்களின் பணத்தைத் தண்டுவதுபோல, கோவில் கருவறை என்று சொல்லி அதற்குள் ஒரு சிலையைச் செய்து வைத்து செப்படி வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறோம்.
மக்கள் மத்தியில் எங்களுடைய பிரச்சாரத்தால் பக்திப் போதையை ஏற்றி வைத்திருப்பதால், அந்தக் கல்லைக் கடவுள் என்று நம்புகின்ற அந்த அப்பாவி மக்களின் அந்த நம்பிக்கை என்னும் மூலதனத்தின் மீதுதான் எங்கள் பக்தித் தொழில் ஜாம்ஜாமென்று நடந்துகொண்டி ருக்கிறது.

போதும் போதாதற்கு ஒவ்வொரு கோவிலுக்கும் தல புராணம் எழுதி வைத்து இருக்கிறோம்.

ஒவ்வொரு கோவில் கடவுள்மீது அற்புதங்கள் இருப் பதாகப் பரப்பி வருகிறோம்.

கல்யாணம் நடக்க வேண்டுமா? திருமானம் (மயிலாடுதுறை) மகாகாளநாதர் கோவிலுக்கு வாருங்கள்; உங்களுக்கு காது, தோல், கண் தொடர்பான நோய்கள் நீங்கவேண்டுமா? திருவாரூர் விருப்பாட்சி ஈசுவரர் ஆலயத்திற்கு வாருங்கள்.
ஆண்டாள் குடிபுகுந்த சிறீவில்லிபுத்தூர் வைணவத் திருத்தலத்தைக் கும்பிட்டால், 108 வைணவ திவ்யதேசங்களுக்குச் சென்ற புண்ணியம் கிட்டும் என்றெல்லாம் தல புராணம் எழுதியுள்ளோம்.

கடவுளுக்குச் சக்தியிருந்தால் கடவுள் சிலை திருட்டு நடக்குமா? கோவில் அர்ச்சகப் பார்ப்பனருக்குத் தெரியாதா இந்தக் கோவில்களுக்குள் குடியமர்த்தி இருக்கும் இந்தக் கடவுள்கள்பற்றி.... அதனால்தான் சாமி சிலை திருட்டுக்கு அர்ச்சகப் பார்ப்பனர்களே உடந்தையாக இருக்கிறார்கள்.

எத்தனை எத்தனை கோவில்கள் தீப்பற்றி எரிந் துள்ளன. அய்யப்பன் கோவிலும், சிறீரங்கம் கோவிலும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிடவில்லையா? அதற்குப் பிறகு புதிய கடவுள் சிலைகள் அங்கு செதுக்கி வைத்து மறுபடியும் சுரண்டல் தொழிலை ஓகோ என்று நடத்திக் கொண்டு இருக்கவில்லையா?

தஞ்சை பெருவுடையான் கோவில் குட முழுக்கின்போது யாகம் வளர்க்கப்பட்டபோது அந்தத் தீ, பந்தலைத் தாக்கி 41 பக்தர்கள் (அதில் பெண்கள் மட்டும் 31) பதறப் பதறத் துடித்துக் கருகிப் போனார்களே!

பிரகதீசுவரன் பக்தர்களைக் காப்பாற்றினானா? என்று இப்படியெல்லாம் இராம.கோபாலன் போன்றவர் கள் கேட்டதாகத்தான் பொருள்.
இவையெல்லாம் யதார்த்தமான, கண்ணுக்கு எதிரில் நாம் பார்த்த உண்மையான தகவல்கள்தானே - இல்லை என்று இராம.கோபாலன் வகையறாக்கள் மறுக்க முடியுமா?

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த காரணத்தால் தான் கோவில்களில் கீற்றுக்கொட்டகை போடாதீர்கள் - கடவுள்களைக் காப்பாற்றுங்கள் -
கோவில்களைக் காப்பாற்றுங்கள் - சிற்பங்களைக் காப்பாற்றுங்கள் என்று அரசுக்கு மனு போடுகிறார்.

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் கூறினார். அது இந்து முன்னணி விடயத்திலும் நூற்றுக்கு நூறு பொருந்திவிடவில்லையா?
காவிகளே - உங்கள் வேடம் கலைந்துவிட்டது; ரொம்ப நாள்களுக்கு உங்கள் ஏமாற்று வேலை பலிக்கப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பக்தர்களே உங்கள் மூளையில் மாட்டிக்கொண்டுள்ள பக்தி விலங்கைத் தூக்கி எறியுங்கள் - பகுத்தறிவுள்ள மனிதராக வாழ முயலுங்கள்!

                   -------------------------"விடுதலை” 05-06-2013

39 comments:

தமிழ் ஓவியா said...


குற்றாலத்தில் 36 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை


வீகேயென் அவர்களின் கொடை உள்ளத்துக்குப் பாராட்டு - நன்றி!

பயிற்சி பெற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வீர்!

கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

வள்ளல் வீகேயென் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

குற்றாலத்தில் நான்கு நாள்கள் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் சிறப்புகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குற்றாலத்தில் கழக இளைஞர்கள் - மாணவர்களுக் கான பெரியாரியல் கொள்கைப் பயிற்சிப் பட்டறை 36 ஆவது ஆண்டாக சென்ற மே 29ஆம் தேதி தொடங்கி, ஜூன் முதல் தேதி முடிவடைந்தது.

இந்த நான்கு நாள்கள் பயிற்சிப் பட்டறையில் சுமார் 75 மாணவர்களும், 25-க்கு மேற்பட்ட பார்வையாளர்களான நண்பர்களும் கலந்து கொண்டனர்.

வீகேயென் அவர்களின் தொண்டுள்ளம்

குற்றாலத்தில் ஆண்டுதோறும் பயிற்சிப் பட்டறைகளை முன்பெல்லாம், கேரள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைத் தோட்டத்தை வாடகைக்கு எடுத்துத்தான் நடத்துவது வழமை.

ஆனால் வள்ளல் வீகேயென் கண்ணப்பன் அவர் களின் பன்மாடிகளைக் கொண்ட பெரியதொரு கட்ட டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அருமையானதொரு இடத்தில் தான் வீகேயென் அருள் உள்ளம் காரணமாக நடை பெறுகிறது!

எல்லா வசதிகளும் - உண்டி, உறையுள் - எல்லாம் வீகேயென் என்ற மாமனிதரின் வற்றாத உபசரிப்புக்கு உட்பட்டதேயாகும். நம் மாணவக் கண்மணிகளை (இருபாலர்களும்) மிகுந்த மகிழ்ச்சியுடன் கலகலப்பாக வைத்திருந்தது பட்டறை!

தமிழ் ஓவியா said...

வகுப்பு நடத்திய பெரு மக்கள்

நான்கு நாள்களும் விரைந்தோடின! மாணவர்களின் பயிற்றுநர்களாக, பல்வேறு தலைப்புகளில் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் கோ.சாமி துரை, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல் செல்வி மற்றும் டாக்டர் இரா.கவுதமன், பேராசிரியர் ப.காளிமுத்து, யோகா பயிற்சி இராசமாணிக்கம், மந்திரமா? தந்திரமா? ஈட்டிகணேசன், உடுமலை வடிவேல் (வலைக்காட்சி), பிரபாகரன் (கணினி பயிற்சி), ஜெகன் (கணினி பயிற்சி) ஆகியோர் வகுப்பு எடுத்தனர்.

நானும் 2 நாள்கள் வகுப்பு எடுத்து மகிழ்ந்தேன் - மகிழ்ந்தோம்!

குற்றாலத்துச் சாரல் - அங்கே கொள்கைச் சாரலாக தோழர், தோழியர்கள்மீது வீழ்ந்து கொள்கை- லட்சிய ஈரத்தை அவர்களுக்கு அளித்தது!

குற்றாலம் அருவியில் நீர் வீழ்ச்சிகூட சில - பல நேரங்களில் வீழாது; மழையை நம்பியே இருக்கும்!

தமிழ் ஓவியா said...

ஆனால் பேருள்ளம் - தூய உள்ளம் - தொண்டு உள்ளம் படைத்த வள்ளல் உழைப்பால் உயர்ந்த, தொண் டறத்தால் சிறந்த டாக்டர் வீகேயென் அவர்களின் அருட்கொடையும், அன்பு பரிமாறலும் எழுத்தில் வடிக்க முடியாத, ஏட்டில் எழுத முடியாத அளவுக்குப் பெரிது - மிகப் பெரிது! அவர்கள் பல்லாண்டு நலமுடன் - வளமுடன் வாழ்க என்று நன்றி உணர்வு பொங்க கலந்துகொண்ட கழகக் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்!

கோடையின் வெப்பச் சலனம் இல்லை. குற்றாலத்தில் கொள்கைக் குளிர்ச்சி கோலோச்சியது! அதைத் தாண்டி அன்பு கனிந்த விருந்து பேணிய மானமிகு வீகேயென் அவர்களின் உபச்சாரம் குளுமையில் மூழ்கச் செய்தது! வார்த்தைகளால் மட்டுமல்ல, உணர்வுகளில் மூழ்கச் செய்தது! அவ்வள்ளல் பெருமானுக்கு நமது இதயங் கனிந்த நன்றி.

அமைப்புப் பணி செய்த பெரு மக்கள்

வகுப்பு எடுப்பதைவிட, அமைப்புப் பணிகளை ஆண்டுதோறும் அலுப்பு, சலிப்பின்றி செய்யும் நமது கொள்கைக் குடும்பத்து தொண்டறத் தோழர்கள் மானமிகு மதுரை தே.எடிசன்ராசா, காரைக்குடி சாமி. திராவிடமணி, தூத்துக்குடி பால்.இராசேந்திரம், மதுரை வே.செல்வம், இராஜபாளையம் இல.திருப்பதி, விருத்தாசலம் த.சீ.இளந்திரையன், மதுரை செ.முரு கேசன், தென்காசி டேவிட் செல்லத்துரை, கீழப்பாவூர் அய்.இராமச்சந்திரன் ஆகியோர் பராட்டுக்குரியோர்.

வீகேயென் மாளிகையின் பணியாளர்கள்

வீகேயென் அவர்களின் மாளிகையில் பணியாளர் களான நண்பர்கள் பாராட்டுதற்குரியவர்கள்; தேனீக் களாக உழைத்து உதவிய திருவாளர்கள் உதயகுமார், கருணாகரன் மற்றும் அவர்களது சக தோழர்கள் அனைவருக்கும் நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ மணிகள் - பொறுக்குமணிகள்!

எதிர்கால நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்திய மானவீரர்களாக, மான வீராங்கனைகளாக, கதிர் முற்றி விளைந்த நெல்மணிகளாக, கொள்கைச் செல்வங்களாக அமைந்தார்கள்!

அவர்கள் நாம் கண்டெடுத்த நல் முத்துக்கள்! வாழ்த்துகிறோம்.

பயிற்சி பெற்ற இருபால் இளைஞர்களையும் கழகப் பொறுப்பாளர்கள் ஆங்காங்கே பிரச்சாரம் மற்றும் களப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தங்களன்புள்ள,

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
5.6.2013

தமிழ் ஓவியா said...


வாழ்வியல் சிந்தனை - விருது பெற்றுத் தந்தது!




கடந்த சில நாள்களுக்குமுன், பல நூற்றுக்கணக் கான ரயில் பயணிகளைக் காப்பாற்ற மனோகரன் என்ற ரயில் ஓட்டுநர், கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை அருகில் வண்டியை ஓட்டி வரும்போது, இதயவலி ஏற் பட்டு, சங்கடப்பட்ட நிலையில், ரயிலை நிறுத்தி, பிறகு கீழே இறங்கி சுருண்டு விழுந்த நிலையில், மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார்.

அவரது கடமை உணர்வு, பொறுப்புணர்வைப் பாராட்டி ரயில்வே நிர்வாகம் அவருக்கு விருது வழங்கவேண்டுமென்று வாழ்வியல் சிந்தனையில் எழுதினோம். ரயில்வே நிலைக் குழுத் தலைவரான தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு அவர் களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அவர் உடனே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதைக் கூறினார். கைமேல் பலன் கிடைத்தது!

இன்றைய ஏடுகளில் மனோகரன் மறைந்த நிலையிலும் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது, பாராட்டுக்கள்! -------------விடுதலை” 5-6-2013

தமிழ் ஓவியா said...


பற்றி எரியும் பா.ஜ.க. அரசியல்!

மத்தியப் பிரதேசம் பா.ஜ.க. கூட்டத்தில் மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தான் குஜராத் முதல மைச்சர் மோடியைவிட சிறந்தவர் என்று பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் அத்வானி ஒரு குண்டைத் தூக்கிப்போட, அது பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்துவிட்டது. ம.பி. முதல்வர் சவுகானை விட்டே பேச வைத்தார் கில்லாடியான மோடி. என்னைவிட மோடிதான் சிறந்தவர் என்று சவுகானும் அவர் பங்குக்குப் பேசினார்.

இதற்கிடையே பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் தன் பங்குக்குத் திருவாய் மலர்ந்துள்ளார். நரேந்திர மோடிதான் பிரபலமான தலைவர் என்று அத்வானிக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா என்பார்கள். பி.ஜே.பி.யில் எந்த அத்தைக்கு, எப்பொழுது மீசை முளைக்கப் போகிறதோ தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


தொழிலாளர்களின் புத்தி இப்படியா?


தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போர்க்கொடி தூக்குவார்கள். கோரிக்கை கள் நிறைவேறும்வரை கோடிக் கைகளை உயர்த்துவார்கள். நீதிமன்றமும் செல் வதுண்டு. அவைதான் சரியான வழி முறையும்கூட.

புதுச்சேரியில் என்ன நடந்திருக்கிறது? முதலியார்பேட்டையில் ஏ.எஃப்.பி. (ரோடியர் மில்) துணி நெய்யும் தொழிற்சாலை.

நலிந்த தொழிற்சாலையாகி இழுத்து மூடப்பட்டது (3.2.2013). தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பறிபோனது. 13 மாத சம்பளப் பாக்கியும் நிலுவையில் உள்ளது - என்னே கொடுமை!

அதைவிட இன்னொரு கொடுமை - தொழிலாளர்கள் தரப்பில்,

ஜூன் 2 ஆம் தேதி காலை 9.30 மணி. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்த் தோழர் கள் தொழிற்சாலை முன் கூடினர்.

குதிரைமீது அமர்ந்திருக்கும் அய்யனார் சிலை போன்ற கட்-அவுட் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த அய்யனாருக்கு எலு மிச்சை மாலை, பூ மாலைகளைச் சூட்டினர். அய்யனாருக்கு மிகவும் பிடித்தமானதாகக் கதைக்கிறார்களே - சேவல், சாராயம் (அதுவும் புதுச்சேரி - கேட்கவேண்டுமா?) போன்றவற்றை களேபரமாகப் படைத்தனர். பிறகு உருமி அடித்தனர்.

10 மணி... அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். புதுச்சேரி பேருந்து நிலையத் திற்குள் அமைந்திருக்கும் கலிதீர்த்த அய்ய னார் கோவிலை வந்தடைந்தது ஊர்வலம்.

உருமி அடிக்கப்பட்டது - சிலர் சாமி வந்து(?) ஆடினார்களாம்.

அய்யனாருக்கு விசேடமாகப் பூஜைகள் செய்யப்பட்டனவாம் - கோரிக்கைகள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டினை குதிரைமீது வீற்றிருந்த அய்யனார் பொம்மைக் கையில் உள்ள கத்தியில் வைத்தனராம்.

வேடிக்கை பார்க்க மக்கள் கூடினார் களாம் - எப்படி இருக்கிறது? விவரம் தெரியாதவர்களா இந்தத் தொழிலாளர்கள்? விவரம் தெரியாதவர்களா இவர்களை வழிநடத்தும் தொழிலாளர்த் தலைவர்கள்?

அய்யனாருக்கு அவ்வளவு பெரிய சக்தி இருந்தால், தொடக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது ஏன்? அப் பொழுது அய்யனார் நினைவு வர வில்லையா?

தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் புகாவிடின், அதன் விளைவு இப்படிக் கீழ்த்தரத்தில்தான் சென்று முடியும்.

தந்தை பெரியார் கூறுகிறார்:

இன்று தொழிலாளிகளுக்குப் பாடுபடுவதாகச் சொல்கிற ஸ்தாப னங்கள் எல்லாம் தொழிலாளிக்கு நாத்திகம் தேவையில்லை; அவன் சாமி கும்பிடுவதையோ, கோவில் குளங்களுக்குத் திருவிழாக்களுக்குப் போவதையோ தடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவெல்லாம் சொல்லுகிறார்கள். அந்தப்படி இருப்ப தனால் தொழிலாளி தனக்குக் கிடைக்கும் பணத்தை இந்த மாதிரிக் கோவில், குளம் திருவிழாக்களிலே செலவிட்டே மூடத்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் பலியாவானே தவிர, சேர்த்த பொருளை மீட்காமல் கண்டதுக்கு, கண்மூடித்தனத்திற்குச் செலவிடுவானே தவிர, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவோ வாழ்க்கைத் தரத்தை சரிக் கட்டிக் கொள்ளவோ முடி யாதவனாக ஆகிவிடு கிறான் (விடுதலை, 22.3.1952) என்று தந்தை பெரியார் சொன் னதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் உண்மை வெளிச்சமாய்த் தெரியும்.

கான்பூரிலே செருப்புத் தொழிற் சாலைகளில் ஒருமுறை வேலை நிறுத்தம்; வன்முறைகள் தலைதூக்கின - தீ வைப்பு முதற் கொண்டு அரங்கேறின. காவல் துறையாலும் அடக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தொழிற்சாலை முதலாளி ஒரு தந்திரம் செய்தார். தம் குடும்பப் புரோகி தனைக் களத்தில் இறக்கிவிட்டார்.

அவன் கையிலே ஒரு தட்டு, அதில் கொஞ்சம் கோவில் பிரசாதம்!

இந்தச் சகிதமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தான் புரோகிதன்! அவ்வளவுதான்! ஆர்ப்பரித்த வாய்கள் அடங்கின. பொங்கி எழுந்த தோள்களும் அழுந்தின!

புரோகிதப் பார்ப்பானிடமிருந்து பிரசாதம் பெற தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

தொழிலாளியின் எரிமலைக் குழம்பை ஒரு திருநீறும், குங்குமமும் அணைத்து விட்டதே!

எந்தப் பிரச்சினைக்கும் பெரியார் மருந்து - மூலிகை தேவைப்படுகிறது!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (2)



மனிதர்களிடம் பின்பற்றத் தகுந்த பெரியவை எவை?

எண்ணியவைகளையே, சிந்தித்தவைகளையே பேசுவது,
பேசுவதையே செயல்படுத்துவது
என்பது எல்லாம் ஒன்றாக அமையும்
வாழ்க்கை நெறியே!
காரணம், மனிதரில் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், பேசுவதன் படிகூட நடவாது அதனின்றும் மாறுபட்ட செயல் வகையில் ஈடுபடுவதுமான மூவகை வாழ்வு (இரட்டை வாழ்வு கூட அல்ல) வாழுகின்ற அன்றாட அவலம் நமது கண்முன்னே காணும் காட்சியாகும்!

தவிர்க்கப்படவேண்டியவை எவை?

மற்றவர்களைத் துன்புறுத்தி - அது கேலி, கிண்டல், நக்கல் போன்றவைகள்மூலமும், இதர கேவல முறைகளாலும்கூட அமையலாம் - அதில் இன்பங்காணும் இழிதகைமை.

பின்பற்ற வேண்டிய பெருநெறி எது?

எந்த நிலையிலும் தன்னை விற்றுக் கொள்ளாத அல்லது சுயமரியாதையை விலை பேசாத உயர்நெறியான வாழ்க்கை.

புகழ் வேட்டையாடுதல் பற்றி...?

போதைகளிலேயே மிகப்பெரிய போதை இந்தப் புகழ் போதைதான்.

அதற்காக மனிதர்கள் உண்மை மனிதர் களாக இராமல், நிலை தாழ்ந்து, வீழ்ந்து, ஒப்பனை மனிதர்களாகி உயர நினைக்கும் பேதமை!

இயல்பாக வரும் புகழ் நல்ல இரத்த ஓட்டம்; திணிக்கப்பட்ட அல்லது யாசிக்கப்பட்ட புகழ் இரத்தக் கொதிப்பு போன்றது!

இரத்த ஓட்டம் - ஆரோக்கியமானது; இரத்தக் கொதிப்பு எந்த நேரத்திலும் பல நோய்களுக்கு அடிப்படை - ஆரோக்கியத்தின் வைரியாகும்!

பதவி ஆசை, பதவி வெறி இவைகள்

சர்க்கரை நோயைவிட கொடுமையானது; ஒருமுறை உடலுள் நுழைந்தால், இறுதி மூச்சடங்கும் வரை அது உடலை விட்டு அகலாது; முயன்றால் சிலர் கட்டுக்குள் அதை வைக்கலாமே தவிர, அறவே நீக்கி அதனின்றும் விடுதலை பெற்றுவிட முடியாது; முடியவே முடியாது!

அதுபோலத்தான் பதவி ஆசையாக முதலில் தொடங்கி, பதவி வெறியாக அது தீவிரமாக மய்யங்கொண்டு, பலருக்குப் புதை பூமியாகவும் ஆகிவிடுகிறது!

ஒருமுறை ஆட்பட்டுவிட்டால் அது பிடித்தவர் களை விட்டு அகலாது.

அறிவு நாணயம் என்பது...?

உள்ளதை எக்காரணம் கொண்டும் ஒளிக்காது, மறைக்காது கூறுவதோடு, சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல்போல் வாழ்க்கையை செம்மையாக நடத்துவது,
எமை நத்துவாய் என எதிரிகள்
கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற வைராக்கிய நெஞ்சத்தோடு,
வறுமையின் உச்சத்திலும்
நெறிபிறழாத வாழ்வின் சிறப்பியல்புகளில் முக்கியமான ஒன்று!

உறவுகளில் உயர்ந்தது எது?

ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிடினும் ஒரு கொள்கை வயப்பட்ட நிலையில் அதற்காக, அதைப் பின்பற்றியவருக்காக, உயிரையும் விட எதனையும் ஏற்கத் தயாராகும் உறவே உயர்ந்த உறவு!

தியாகத்தில் சிறந்தது எது?

திணிக்கப்பட்டோ, விபத்தினாலோ வந்து விழும் தியாகம் உண்மை தியாகம் ஆகாது.

தெரிந்தே உயிர் விடுதல் செய்த சாக்ரட்டீஸ், பகத்சிங் போன்றவர்களின் தியாகம்.

அல்லாது கொண்ட கொள்கைக்காக வாழ்வை இழந்து வரலாறாக வாழும் வ.உ.சி. போன்றவர் களின் தியாகம் முதல் தரம்.

- கி.வீரமணி

- (தொடரலாம்)

தமிழ் ஓவியா said...


கலைஞர் என்றாலே வியப்பு - பிரமிப்பு காரணம் அவரின் கடுமையான உழைப்பு - தலைவர்கள் புகழாரம்


சென்னை, ஜூன் 5- கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தோழமைக்கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் 3.6.2013 அன்று மாலை சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது.

இப்பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது:-

தொல்.திருமாவளவன்

கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், அறிவு ஆற்றல் பெற்ற ஒரே தலைவர் கலை ஞர்தான். அவருக்கு போட்டி போடுவதற்கு தகுதி யான தலைவர்கள் யாரும் கிடை யாது. புவி ஈர்ப்பு விசையை போன்று அரசியல் விசையாக கலைஞர் திகழ்கிறார். ஈழம் வென்றெடுக்க தமிழர்கள் வாழ்வுரிமையை மீட் டெடுக்க கலைஞர் அவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாது என கலைஞர் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்திப் பேசினார்.

காதர் மொய்தீன்

கலைஞர் அவர்களின் வாழ் கின்ற காலம் நமக்கு பெருமை. கலைஞருடைய வரலாறு எத்தனை மேடு - பள்ளங்களை யும், காட்டாறுகளையும் கடந்து வந்திருக்கிறது. கலைஞரின் சிந்தனைகளையும், சாதனைகளை யும், எழுத்துக்களையும் தமிழ் அறிஞர்கள் தொகுத்து அவருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கச் செய்தவர் கலைஞர் அவருக்கு முஸ்லிம் சமுதாயம் என்றும் கடமைப் பட்டுள்ளதாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்துரை வழங்கினார்.

சுப.வீரபாண்டியன்

சமூக அரசியலில் 90 வயதிலும் கலைஞர் செய்து இருக்கின்ற சலிப்பில்லாத பணி பேராற்றல் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் வராது. கலைஞரின் கடந்த 70 ஆண்டு வரலாறு நீண்ட நெடிய வரலாறு. அவரின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கடினமானது. அடங்காத பல அரசியல் குதி ரைகளை அடக்கிய அரசியல் அலெக்சாண்டர் நீங்கள்! என்றைக்கும் எந்த நெருக்கடி காலத்திலும் தளராத நெப்போ லியன் நீங்கள்!

ஆட்சியை உயிர் மூச்சாக கருதாமல், மக்கள் பணி செய்கின்ற படைகலனாக கருதுபவர் கலைஞர் அவரை போன்று துணிச்சல், போராட்ட குணம் யாருக்கும் வராது என கலைஞருக்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலைஞரை வாழ்த்திப் பேசினார்.

இவ்விழாவின் இறுதியாக 90ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் கலைஞர் அவர்கள் ஏற்புரை நிகழ்த் தினார். முன்னதாக இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

90-ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன், பேராசிரியர் காதர் மொய்தீன், தொல்.திருமாவளவன் ஜெ.அன்பழகன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.

இவ்விழாவின் தொடக்கத்தில் அனைவரையும் எஸ்.மதன்மோகன் வரவேற்றார். ஏ.ஆர்.பி.எம். காமராஜ் வழி மொழிந்தார். மா.பா.அன்புதுரை நன்றி கூறினார். விழாவின் தொடக்கத்தில் மக்கள் இசை கலைஞர்கள் முனைவர் புஷ்பவனம் குப்பு சாமி, முனைவர் அனிதா இணையர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாமேடை அண்ணா அறிவாலய தோற் றத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அமைக் கப்பட்டிருந்தது. இதை விழா நாயகர் கலைஞர் மற்றும் தோழமைத் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், கலைஞர் குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள், ஆற்காடு நா.வீராசாமி, எ.வ.வேலு, பொன்முடி, துரைமுருகன், சற்குண பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் மற்றும் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆருக்கு... கருஞ்சட்டையிடம் விளையாட வேண்டாம்


பருவம் பாராது, மானம் பாராது தொண்டறம் புரிபவர் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களைப் பாராட்டிவிட்டாராம் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் பறக்கவிட்டுக் கொண்டு பூணூலுக்கும், திருநீறுக்கும் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டு இருக்கும் அக்கிரகார ஆன்மீக ஏடாகவே ஆட்டம் போடும் அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு. அத்திரிபாட்சா கொழுக் கட்டை என்று சாக்கடை எழுத்துக்களை சந்தனமாகக் கருதி உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை பூசிக் கொண்டுள்ளது (5.6.2013).

இந்த ஏட்டுக்கு அனா ஆவன்னா சொல் லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

பருவம் பாராது தொண்டாற்றக் கூடியவர் கலைஞர் என்பதில் என்ன தவறு? இந்தத் தொண்ணூறு வயதிலும் உழைக்கிறார். அன்றாடம், தானே கட்டுரை எழுதுகிறார் - தானே பேசுகிறார் (மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதையல்ல) செய்தியாளர்களைச் சந்திக்கிறார் - அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் - இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் - சுயமரியாதைத் திருமணங் களை நடத்தி வைக்கிறார்.

பொதுத் தொண்டாற்றி மறைந்த பெரு மக்களின் உடலுக்கு ஓடோடிச் சென்று இறுதி மரியாதை செலுத்துகிறார் - போராட்டங்களை அறிவிக்கிறார் - தானே அந்தக் களத்திலும் போய் நிற்கிறார் - இவ்வளவும் இந்தத் தொண்ணூறு வயதில் - இதற்குப் பெயர்தான் பருவம் பாராத தொண்டு என்பது.

அதேபோல மானம் பாராத தொண்டு என்று கழகத் தலைவர் பாராட்டியிருக்கிறார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள் - தன்மான இயக்கத்தின் தத்துவத்தை அறிந்து கொண்டவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

தனி வாழ்வில் மானம் பார்க்கலாம்; பொது வாழ்வில் மானம் பாராது தொண்டாற்ற வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் 1028)

- என்ற குறள், தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறளாகும்.

இதை எல்லாம் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சமாவது பகுத்தறிவும், பொது அறிவும் தேவைப்படும்.

கலைஞரின் மானம் பாராத பொதுத் தொண்டு என்பதற்கு உதாரணம் வெகு தூரம் போய்த் தேட வேண்டாம்.

ஒவ்வொரு நாளும் அதிமுகவின் எம்.ஜி.ஆர் ஏடு அவதூறுகளையும், ஆபாசச் சொற்களை யும், அநாகரிகச் சகதிகளையும் அவர்மீது வீசு கிறதே - அவற்றையெல்லாம் அனாயாசமாகப் புறந்தள்ளி, பொதுத் தொண்டில் 90 வயதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாரே - இந்த ஒன்று போதாதா?

திராவிடர் கழகம் - அதன் தலைவர் யாரை ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் அது கொள்கை அடிப்படையில் தான் இருக்கும் என்பது ஊருக்கும், உலகுக் குமே தெரியும். அதற்குப் பெயர் ஜால்ராவாம்.

கர்ப்பிணிப் பெண்களைக் கூட அவர்கள் முசுலீம்கள் என்றால் அவர்களின் குடலைக் கிழித்தெறிந்த மோடிகளுக்கெல்லாம் ஜால்ரா போடுபவர்கள் யார் என்று தெரியாதா?

எழுதுகோலை எதிர்த்துப் பிடிக்க ஆரம்பித்தால் நமது எம்.ஜி.ஆர். தாங்காது - கருஞ்சட்டையிடம் விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!

தமிழ் ஓவியா said...


வேண்டும்



பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


இதோ, இதயங் காக்கும் காவலன் பாரீர்!

மருத்துவத்துறையில் தொழில் நுட்பம் வியக்கத்தக்க வகையில் மிக வேகமாக வளர்ந்து, மனிதர்களின் ஆயுளையும்கூட நீண்ட காலம் வாழும் வண்ணம் செய்து வருகிறது!

இளமையைப் பாதுகாத்து முதுமையை விரட்டும் மரபு அணு ஆய்வும் மிக வெற்றிகரமாக பிரான் சிலும், இஸ்ரேலிலும் பல்வேறு கோணங்களில் போட்டியிட்டு முன்னேறுகின்றது!

ஆயுள் வளர்ந்தால் மட்டும் போதாது; முதுமை தவிர்க்கப்படல் அல்லவா முக்கியம் என்ற கண்ணோட் டத்தோடு புதுப்புது மருத்துவ தொழில் நுட்ப ஆய்வுகள் பல பல்கலைக் கழ கங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன!

Michio Kakku என்ற ஜப்பானிய - அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ஒரு நூலில், இதயத்துடிப்பின் சீர்மை, ரத்த அழுத்தம் மிகையாக ஆகிறதா? என்பன போன்றவற்றை நமது டாக் டருக்கே நேரிடையாகத் தெரிவித்து அவரை அக்கருவியே (Chips) அழைக்கும் வண்ணம் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன!

காலில் நாம் அணியும் பூட்சு களிலோ அல்லது கட்டும் டைகளிலோகூட அந்த சிப்ஸ்களை இணைத்து விட்டால் அதுவே இந்த வேலையைத் தவறாது செய்யும் என்று அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர்!

இப்போது நேற்று அதே செய்தி வண்ணக் கதிர் (தீக்கதிர்) வார ஏட்டில் வந்துள்ளதை அப்படியே தருகிறேன்.

இதய நோயாளிகள் பயப்பட வேண்டியதே இல்லை... இனி கவலையை விடுங்கள். இதயக் கோளாறு பெரிதாகு முன் ஓர் எச்சரிக்கைக் கருவியை உடலினுள் பொருத்தி விட்டால் போதும். இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை டாக்டருக்கு உடனுக்குடன் 24 மணி நேரமும், தானாகவே தெரியப்படுத்தி விடும். உங்களுக்கு பிரச் சினை என்பதை நீங்கள் உணரும் முன்பே தேவை யான மருத்துவ ஆலோசனை உங்களைத் தேடி வந்து விடும். இதைவிட வேறென்ன வேண்டும்? இது எப்படி சாத்தியம்?

ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மூலம் இதய நோய் கண்டறியும் கருவி ஒன்று உடலில் பொருத்தப்படும். இதயத்தின் செயல்பாடு, நுரையீரலில் நீர்கோர்வை, நாடித் துடிப்பு ஆகியவற்றை இந்தக் கருவி துல்லிய மாகக் காட்டக் கூடியது. நாடித்துடிப்பு குறைந்தால் அதை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பேஸ்மேக்கராகவும், ரத்தம் உடல் முழுவதும் செல்ல செயல்படும். இதயத்தின் செயல் குறைந்தால் சரி செய்யப் பயன்படும். ரீசிங்கரனைசேசன் தெரப்பி டிவைஸ் ஆகவும், இதயத்தை செயலிழக்க வைக்கும் குறைந்த நாடித் துடிப்பையும், சீரற்ற இதயத் துடிப்பையும் சரி செய்யும் டீபிப்ரில்லேட்டர் ஆகவும் இந்தக் கருவி செயல்படுகிறது. இந்தக் கருவி தானா கவே தான் பதிவு செய்த விவரங்கள் கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையில் 5 மீட்டர் தொலைவுக்குள் உள்ள செய்திக் கடத்தி கருவிக்குத் தெரி விக்கப்படும். அது சர்வரை சென்ற டைந்து மருத்துவரின் கைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சென்றடையும். அவசர நிலைமை என்றால் சிவப்பு வண்ண எச்சரிக் கையும், சீராக இருந்தால் மஞ்சள் வண்ண அறிவிப்பும் வரும். நம் நாட்டில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 லட்சம் என அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன இதயப் பிரச்சினை வருமோ என்ற பயம் நீங்கி, பயத்தால் ஏற்படும் விளைவுகள் வராமல் தடுக்கப்படு கின்றன. ஒவ்வொரு முறையும் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 24 மணி நேரமும் மருத்துவர் பார்வையில் இருக்கிறோம். இதைவிட வேறென்ன வேண்டும் ஓர் இதய நோயாளிக்கு? விஞ்ஞானத்துக்கு நன்றி சொல்வோம்!
- அ. சுந்தரம்

கணினி செய்த யுகப் புரட்சி இப்படி மனிதர்களை வாழ வைக்கும் உயிர் காப்பான் தோழனாக உயர்ந்து நிற் கிறது!

என்னே புதுமை! எவ்வளவு அருமை!
------------k.veramani

தமிழ் ஓவியா said...


சொல்லுவது அருந்ததிராய்!

இந்தியா சுதந்திரமடைந்த வேளையில், காலனி அரசுதான் நாட்டில் அதிகாரத்திற்கு வந்தது. தெலுங்கானா, வங்காளம் உள்ளிட்ட நாட்டின் எல்லைக் குள்ளாகவே ராணுவத்தை அனுப்பி, அரசு சொந்த குடிமக்களுக்கு எதி ராக போர் நடத்தியது. இவ் வகையான போர்கள் இன்றும் தொடர்கின்றன. இந்திய அரசு உயர்ஜாதி அரசாகும். இந்த அரசின் குணத்தை வேறொன்றுடன் ஒப்பிட முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலப் பிரபுத்துவம் மீண்டும் வருகிறது. முந்தைய காலங்களில் நடத்திய சீர்திருத்தங் களின் பலனாக ஏற்பட்ட நலன்கள்கூட பலன் பிரயோ கித்து மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. இதற்கெதிராகப் போராடுபவர்களுக்குப் பெரியதொரு இமேஜ் இருந்தாலே வெற்றி பெற முடியும். நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் மன்மோகன்சிங்கோ, நரேந்திரமோடியோ அல்ல. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட் தொழிலதிபர்கள்தாம் நாட்டை ஆளு கிறார்கள். ஆகையால்தான் முகேஷ் அம்பானிகளுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- அருந்ததி ராய், எழுத்தாளர்

தமிழ் ஓவியா said...


காவடி அல்ல ஆவடி!

பெரியாரோடு தி.க. குளோஸ் என்று மனப்பால் குடித்துக் கிடந்தனர். அன்னை மணியம்மையார் தலைமையில் இராவண லீலா நடத்தப்பட்டது என்றவுடன் அக்கிரகாரத்தில் எழவு விழுந்தது மாதிரியாகிவிட்டது.

அவரோடு அத்தியாயம் முடிந்துவிடாதா என்று ஆசைப்பட்டுக் கிடந்தனர்.

மானமிகு கி.வீரமணி அவர்கள் பொறுப் பேற்றார். மாவட்டத்துக்கு மாவட்டம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார்.

ஆத்திரத்தில் உச்சியிலே சென்ற அக்கிரகார வாசிகள் பழனியிலே மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். அதன்மூலம் பார்ப்பனர் அல்லாத மக்களின் தலைவர் - பாதுகாவலர் வீரமணிதான் என்று உலகுக்கே அறிவித்துவிட்டனர் பார்ப்பனர்கள். (பார்ப்பனர் களுக்கு முன் புத்தி ஏது?).

ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர் கள் தூக்கிச் சென்றார்களே, அது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா என்று எதிர் கேள்வி போட்டு, பார்ப்பனர்களுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த மான மரியாதையை யும் கப்பல் ஏற்றினார்.

பெரியார் காலத்தில் 50 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் 69 சதவிகிதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்தார்.

மாநில அரசு மட்டத்தில் இருந்த பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசுத் துறைகளிலும் (மண்டல் குழு பரிந்துரை) அமல்படுத்தச் செய்தார். (அதற்காக 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தினார்).

அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இடங்களைப் பெற்றனர்.

அக்கிரகாரத்தின் தலையில் இடிவிழுந்தது மாதிரி ஆயிற்று. பெரியார் பரவாயில்லையே, இந்த வீரமணிதான் மோசம் என்று எழுத, பேச ஆரம்பித்தனர்.

பெரியார் திடலுக்கே வந்து தலைவர் வீரமணி அவர்களைச் சந்தித்து எங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யுங்கள் என்று பார்ப்பனர்களை பணிய வைத்தார்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறதே என்று அங்கலாய்த்தார்கள்.

இவர் காலத்தில் இயக்கம் இளைஞர்களின் பாசறையாகி வருகிறது. கல்வி நிறுவனங்கள் விண்முட்ட எழுந்து நிற்கின்றன. இந்தியாவின் தலைநகரிலே பெரியார் மய்யம் கொண்டுள்ளார். பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் தொழச் செய்து வருகிறார்.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் இந்த வகையில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அதன் இரட்டைக் குழல் துப்பாகியான தி.மு.க. அதன் வலிமை வாய்ந்த, முதிர்ச்சிமிக்க தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் 90ஆம் அகவையை எட்டும் காலகட்டத்தில்,

அந்த அரசியல் பணி தொடர, அடுத்த கட்ட இளைஞர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயம்.

இந்தக் கலைஞர் அரசியலில் இருந்தாலும், வாக்குகளைக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தாலும், இடை இடையே அவரின் குரு குலமான ஈரோட்டுச் சரக்கினை வெளிப்படுத்திக் கொண்டேதானிருப்பார். ஈரோட்டு வாசனை வீசிக் கொண்டுதானிருக்கும்.

நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பார்; நான் நாத்திகன்தான் என்பார்; ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பார் - அந்த அரசியல் இவர் தலைமுறையோடு முழுக்குப் போடாதா என்று யாகம் நடத்திக் கொண்டு இருப்பவர்களின் ஆசையில் மண் விழ,

தளபதி ஒருவர் தோன்றியிருக்கிறார் - அவரை தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய இந்த வீரமணி தூக்கிப் பிடிக்கிறார் - அடையா ளம் காட்டுகிறார் என்றவுடன், ஆரிய தினமலருக்கு அடிவயிறு பற்றி எரிகிறது - ஆத்திரம் அலை மோதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கார்ட்டூன்.

இது வீரமணியார் எடுக்கும் காவடியல்ல - ஆவடி! ஆரியத்தை நோக்கி வீச வேண்டிய ஆயு தத்தைத் தயாரித்துக் கொடுக்கும் தொழிற் சாலைகள் ஆவடியில்தான் உற்பத்தியாகின்றன.

கொலைக் குற்றத்தின்கீழ் ஜெயிலுக்குச் சென்று பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் லோகக் குருக்களுக்கு ஜால்ரா தட்டும் தர்ப்பைகளா பூர்ணகும்பம் கொடுக்கும் பூணூல்களா ஜால்ரா பற்றிப் பேசுவது?

ஒன்று தெரியுமா இந்தப் பூணூல் கூட்டத் துக்கு? வீரமணி எங்கு இருந்தாலும் ராஜ குரு வாகத்தான் இருப்பார்!

- கருஞ்சட்டை -6-6-2013

தமிழ் ஓவியா said...


விபச்சாரம்


விபச்சாரம் என்பது பார்ப்பனர்களுக்குப் பிள்ளை விளையாட்டு! இல்லாவிட்டால் இதற்கென்றே ஒரு பகவானைப் படைத்து இருப்பார்களா?

வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்ஸனம் பாப நாஸம்
சம்பனம் சர்வதீர்த்தானாம்
மைதுனம் மோஷ சாதனம்

வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம், நாசம், முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்கு சமமான புண்ணியம், உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி.

இதுதான் இந்த சுலோகத்தின் பொருள். மோட்சத்தை அடைய இவ்வளவு சுலபமான மார்க்கத்தைக் காட்டி விட்டது சங்கராச் சாரியார் மதம். இந்து மதத்திற்கு ஈடு இணை இந்தப் பூவுலகில் எங்கும் இருக்கமுடியுமா!

தமிழ் ஓவியா said...

வேதங்களின் வண்டவாளம்

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்...

பதினோராவது புருஷனை நியோகத்தில் பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்து கின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர் களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

தமிழ் ஓவியா said...


பாவ விமோசனம்


பகவானிடம் பக்தி காட்டினால் போதும். வைதீகச் சடங்குகளிலே வாயையும், வயிற்றையும் கழுவிக் கொண்டால் போதும் - எதுவும் செய்யலாம் - எப்படியும் நடந்து கொள்ளலாம் - பகவான் அருள் அட்டியின்றிக் கிடைத்துவிடும்.

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் காட்டும் அற்புத மார்க்கம்!

பாவம் மிகப் பெரியது - கழுவாயோ மிகச் சிறிது!

இது வேதாரண்யம் தல வரலாறு இதனை வெளியிட்டது ஸ்ரீ வேதாரண்யேஸ்வரசுவாமி தேவஸ் தானம். வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள ராமச் சந்திரபுரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக் கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான்.

மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தா லல்லவா செய்யக் கூடும். எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கைவரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்குப் பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந் தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள்.

இவனைக் கண்டதும் இவன் இளமை யிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள்.

அவனும் மதுவை இதுவரையறியாதவனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவைக் கொன்றான். காமந்தலைக்கேறி, அவ் விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ்விதவையைப் பார்த்து-நீ யார்? உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் விதிவலி கொடியது, வெல்லுதற்கரியது என வருந்தினான்.

இப்பழி தொலையும் வழி யாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை. வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் அவன்முன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா! இதற்குத் தற்கொலையும் செய்துகொண்டு அப் பாவத்தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக் காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவனேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும். அப்படியே செய் என்றருளினார்.

பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சக்தி பதம் பெற்றாள்.

- இதை எழுதுவதற்கேகூடக் கை கூசுகிறது. ஆனால், வேதாரண்யேஸ்வரம் எழுந்தருளி இருக்கும் இத் தலத்தின் பெருமையும் தீர்த்தத்தின் (குளத்துநீர்) மகிமையும் எத்தகையது என்பதற்கு அளவுகோலை, தாயைப் புணர்ந்த பாவமும் தலைத் தெறிக்க ஓடியது என்பதிலே கொண்டுபோய் வைத் திருக்கிறார்கள் என்றால், இது ஒரு நாடு; இங்கு ஒரு மதம்.

இதனைக் கட்டியழச் சங்கராச்சாரிகள் என்றால் இந்தக் கேவலத்தின் தொகுப்பை - எல்லையை - பக்தி மார்க்கத்தில் ஒழுக்கச் சீலர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள்தான் சீர்தூக்கி எடைபோட்டு பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அம்மையாரை சிக்கலில் மாட்டும் நமது எம்.ஜி.ஆர்.ஏடு


முதுமையை முறியடிக்கிறார் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி விட்டாராம்! கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்கிறது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடாகக் கூறப்படும் நமது எம்.ஜி.ஆர். (6.6.2013, பக்கம் 18).

ஆயுளின் பெருமை என்பது வாழும் வருடங்களைப் பொறுத்ததல்ல! வாழுகிற காலத்தில் மக்களுக்கு ஆற்றிய பெருமை கொண்ட சேவைகளைப் பொறுத்ததே ஒருவனின் பிறப்புப் போற்றப்படுவதும், தூற்றப்படுவதும்! என்று தத்துவார்த்தம் வேறு பேசுகிறது அவ்வேடு.

90 வயதில் கலைஞர் மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யவில்லையா? மக்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களங்களில் குதித்து சிறைத் தண்டனைகளைப் பலமுறை ஏற்கவில்லையா?

அரசியலில் ஈடுபட்டு தோல்வி என்றால் என்ன வென்றே தெரியாத அளவுக்கு (12 முறை வென்று) 50 ஆண்டு சட்டமன்ற பணிகளைச் செய்த ஒரே தீரர் கலைஞர் தானே! இதே நேர்க்கோட்டில் அவர்களின் தலைவியரை வைத்துப் பேச முடியுமா?

கலைஞரின் பணிகளை அண்ணாவே பல வகைகளில் பாராட்டியது கிடையாதா? கலைஞரின் கைக்குக் கணையாழி அணிவித்தது எதற்காக? என்ற வரலாறு எல்லாம் அ.தி.மு.க. எழுத்தாள ருக்குத் தெரியுமா? கட்சியின் பெயரிலும், கொடியிலும் அண்ணா வேறு - அந்த அண்ணா பார்வையில் கலைஞர் எத்தகையவர் என்று முதலில் தெரிந்துகொள்ளட்டும்!

திராவிட இயக்க வீராங்கனைகள் பெயரில் மகளிர் நலத் திட்டங்களைச் செய்தவர் யார்?

பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தவர் யார்?

கலைஞர் செய்த திட்டங்களைத் தாண்டி மகளிர்க்கு அ.இ.அ.தி.மு.க. அரசு சாதித்தது என்ன?

அரவாணி என்று கேவலப்படுத்தப்பட்டவர்களை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்காக நல வாரியம் அமைத்தது யார்? அந்த நலவாரியத்தை முடக்கிய அம்மையார் யார்?

ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலிந்தோர்க்கு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தது யார்? (கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் உள்பட).

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைச் செயல்படுத்தியவர் யார்? அதனால் பொதுமக்கள் பலன் அடையவில்லையா?
20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் அம்மையார் ஆட்சி எங்கே? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்த கலைஞர் ஆட்சி எங்கே?

90 வயதிலும் போராட்டக் களம் கண்டவர் கலைஞர் - 90 ஆவது வயதிலும் போர்! போர்!! போர்!!! என்று அறிவிக்கக்கூடிய திராணி படைத்தவர் கலைஞர். அதனால்தான் முதுமையை முறியடிக்கிறார் கலைஞர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

நினைவாற்றல் இருப்பதால்தான் சொந்தமாகப் பேசுகிறார் - சொந்தமாக எழுதுகிறார் - அந்த உண்மையைத்தான் திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் எதிர்கேள்வி போட்டால் அவர்களின் தலைவரை எந்த இடத்தில் நிறுத்தி வைப்பது?

வரலாறு தெரியாத நுனிப்புல் மேய்பவர் களிடம் எழுத்தாணியைக் கொடுத்தால், எதையாவது கிறுக்கித் தள்ளி - அதன் விளைவு அக்கட்சியின் தலைவியைப் பரிதாபத்திற்குரிய இடத்தில் அல்லவா நகர்த்தும்!

ஒருக்கால் அது நடக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இப்படி வலிய வம்புக்கு வருவதுபோல் காட்டிக் கொள்கிறார்களோ!

இவை எல்லாம் அம்மையாரின் கவனத்திற்குப் போகவா போகிறது என்கிற தைரியத்தில்தான் இப்படி எல்லாம் எதிர்விளைவை நோக்காது கிறுக்குகிறார்களோ!

அந்தோ பரிதாபம்!

- கருஞ்சட்டை- 7-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி தேர்வு முறை: இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது - ஏன்?


தந்தை பெரியார் கொள்கைக்கு விரோதமானது!

தமிழக அரசுக்கு கலைஞர் கேள்வி

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, ஜூன் 7- ஆசிரியர் பணிக் கான தகுதி தேர்வில் தாழ்த்தப் பட்டோர் உட்பட அனைவருக்கும் - ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயித்தது - இடஒதுக்கீடு கொள்கைக்கும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டு தலுக்கும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கும் விரோதம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். முரசொலியில் இன்று அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி :- ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப் படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதே?

கலைஞர் :- மூன்றாவது முறையாக இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்ட தாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர் பார்ப்பதால், 15 இலட்சம் விண்ணப் பங்களை அச்சடித்து விநியோகிக்கப் போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட் டாயக் கல்வி சட்டத்தின்படியான விதி யாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப் பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்தி லிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங் களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி யன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியன்றும் நடக்கவுள்ளன.

தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கனவே நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப் படும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப் பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழ கத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமான தாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதி யினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித் துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர் களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு விரோத மானதுமாகும்.

எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறை யாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வர வேண்டும்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் முரசொலி யில் இன்று எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...


மக்களாட்சி முறை


சாக்ரடீஸ் மக்களாட்சி முறையைப் பார்த்துச் சிரித்தார்.

அவர் தனிச் சிலர் ஆட்சிமுறையின் நன்மைகளை வியந்து பாராட்டி பேசினார்.

ஏதென்சின் மக்களாட்சி முறையை எள்ளி நகைப்பதற்கு நிறையக் கார ணங்கள் இருந்தன. நானூறாயிரம் ஆதிக்குடி மக்களில் இருநூற்றைம்பதாயிரம் பேர், அரசியல் உரிமைகளின்றி அடிமைகளாக இருந்தனர்.

உயர் அதிகார அமைப்பான உச்சநீதி மன்றத்தில் குடி மக்களின் பெயர்ப் பட்டியலில் இருந்து அகர வரிசையில் தேர்வு செய்யப் பெற்ற ஓராயிரம் பேருக்கு மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். இதைவிட முட்டாள்தனமான செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

சாக்ரடீஸ் இதைப் பார்த்து நகைத்து ஏதென்சின் மக்களாட்சி முறையைக் குதர்க்கவாதம் செய்யும் சமுதாயத்தோடு ஒப்புமைப்படுத்திக் காட்டினார்.

மக்களாட்சிக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் சிலர் ஆட்சிக் கட்சி பொடியாகிப் போய் விட்டது.

மக்களாட்சி முறையைப் பற்றிய கருத்துக்களுக்காகவும் ஏதென்சு இளைஞர்களிடம் பல கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை விதைத்துப் பரப்பியமைக்காகவும் சாக்ரடீசைத் தீர்த்தக் கட்டுவதென்று மக்களாட்சிக் கட்சி முடிவு செய்தது.

சாக்ரடீஸ் இதிலிருந்து எளிதாகத் தப்பியிருக்க முடியும்.

ஆனால் தத்துவத்தின் தியாகியாக வரலாற்றில் நிலைத்திருக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதன் வாயிலாக, மனித மனம் வளர்ச்சியடைவதற்குச் சிந்தனை விடுதலை என்பது மக இன்றியமையாத உட்கூறு என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

(நாம் ஆராய்ந்து பாராமலே மெய்யென ஏற்றுக் கொள்ளும் பேச்சுரிமையைப் பெற்றுத் தந்த எண்ணற்ற தத்துவ ஞானிகளுக்கு நாம் உண்மையில் நன்றியுடையவர் களாவோம். பேச்சுரிமை நடைமுறையில் இல்லாத அக்காலத்தில் வால்டேர் விடா முயற்சியுடன் பேச்சுரிமையை ஆதரித்து வாதாடினார்.

ரூசோவின் இயற்கை இயல் வாதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது வால்டேர் சொன்னார்:

நீங்கள் சொல்வதனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன்.

ஆனால் அதைச் சொல்லும் உங்கள் பேச்சுரிமையை இறுதிவரை நான் உறுதியாக ஆதரிப்பேன் என்றார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான கொள்கைப் பரப்புரையில் தளராத உறுதியுடனும் துணிவுடனும் பெரியார் அரும்பாடுபட்டார். கீழத்தரமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, பகட்டு ஆரவாரம் கொண்ட, ஆவ ணம் பிடித்த மதம் வெறுமைக்குழியில் விழுந்தது. இதனை அச்சமின்றிப் பெரியார் திறனாய்ந்தார். சாக்டீரசின் காலத்து ஏதென்சு, பல்வேறு தத்துவங்களின் வார்ப்புப் பட்டறையாக விளங்கியது.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 39ஆம் பக்கத்தில்)

- க. பழநிசாமி, கன்னிவாடி

தமிழ் ஓவியா said...


குறும்பா


தீர்ந்ததா?

குருவுக்கு...
அர்ச்சனை...!
குருக்களுக்கு
தட்சிணை....!
பக்தனுக்கு...
தீர்ந்ததா...?
பிரச்சினை...??

குறும்பா

வெறி பிடித்தோர் ஆட்டம்!
நரித் தந்திர ஆட்டம்...!
சொறி பிடித்த வெறி நாயை
ச் சூ விட்டாடும் சூதாட்டம்...!
நெறி கெட்ட
கிரிக்கெட்டால்...
கண்ட பலன்..?
நாட்டு வளம்
வீட்டு நலம்..
கெட்டதுதான்..
இலாபம்.!!

- _ கோ. கலியபெருமாள்
மன்னார்குடி_1

தமிழ் ஓவியா said...


ஞானக் கண்ணோ!


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தில் (14.6.2013) ஒரு கட்டுரை. காஞ்சிபுரத்தில் கண் கொடுத்த வைத்தீஸ்வரன் - என்பது தலைப்பாகும்.

கேரளப் பெண் ஒருவர் தலையில் அடிபட்டுக் கண் பார்வை பாதிக்கப்பட்டா ராம். குருவாயூர் தொடங்கி கும்பகோணம் வரை க்ஷேத் திராடனம் சென்றால் கண் பார்வை வந்து விடும் என்று சொன்னார்களாம். அவ்வாறே அந்தப் பெண் சென்றாராம்; வைத்தீஸ் வரன் கோயிலில் வழிபடும் போது - எதற்கும் காஞ்சி புரம் சென்று பெரிய வாளைத் தரிசித்தால் பார்வை வரும் என்று கோயில் குருக்கள் கூறினா ராம் (எங்கெங்கெல்லாம் சங் கிலித் தொடர் பார்த்தீர் களா?) அவ்வாறே அங்கு சென்று சந்திரசேகேந்திர சரஸ்வதியைத் தரிசித் தாராம் - பழத்தட்டுக்களுடன்.

அப்பொழுது அந்தப் பெண்ணின் கணவரைப் பார்த்து சங்கராச்சாரியார் என்னைத் தெரியற தான்னு உங்க சம்சாரத் துக்கிட்டேயே கேளுங்க என்றார். அத்துடன் அருகி லிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரிய வாள். (தேஜஸ் என்பது இதுதானோ!) அந்த நேரம் அந்த பெண், குருக்கள் சொன்ன (வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன) சந்நியாசி இதோ தெரிகிறாரே என்றாராம் சத்தமாக பரவசம் பொங்க!

ஆமாம் காஞ்சி தெய் வம் அவளுக்குக் கருணை புரிந்தது. நம்பினார் கெடு வதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு என்று சும் மாவா சொல்லி வைத் தார்கள் என்று விஜயபார தம் அவிழ்த்து விட்டுள்ளது.

அற்புதத்தைச் சொல்லி தான் எந்த மதத்தையும் காப்பாற்ற வேண்டும் என் றாலும் சங்கராச்சாரியார் களைப் பொறுத்தவரை அற்புதங்களை நம்பாத வர்கள், இன்னும் சொல்லப் போனால் கடவுளை ஏற் காதவர்கள். தானே கடவு ளாக, கடவுளே தானாக இருப்பதாக ஸ்மார்த்தர் களின் சித்தாந்தம். அகம் பிரம்மாஸ்மி தத்வம் அஸி என்று சொல்லுவதும் அது தான். அப்படி இருக்கும் போது இது என்ன புதுக் கதை? விஜயபாரதத்தின் 24ஆம் பக்கக் கட்டுரைக்கு 35ஆம் பக்கத்தில் பதில் இருக்கிறது.

கேள்வி: குருடர்கள் கண் பார்வை பெறு கிறார்கள். செவிடர்கள் (காது) கேட்கிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள் என கிறிஸ்தவர்கள் பிரச் சாரம்பற்றி.

பதில்: ஆஹா ரொம்ப நல்லது. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டாம் - டாக் டர்கள் வேண்டாம் - சி.எம்.சி. ஆஸ்பத்திரி வேண்டாம் - மெடிக்கல் ஷாப் வேண்டாம் நல்லது தானே... ஒரே ஒரு சந்தே கம் தெரசா, டி.ஜி.எஸ். தினகரன் போன்றோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றது ஏனோ? இதுதான் விஜயபாரத்தின் பதில்; இதே கேள்வியை சங்கராச்சாரியாரைத் தரிசித்ததால் பெண் பார்வை பெற்றார் என்பதுபற்றியும் கேட்கலாம் அல்லவா!

Tail - Piece: அந்தக் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரா நேத்ராலயாவில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரே - அது ஏனோ?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஈழப் பிரச்சினையும் பி.ஜே.பி.யின் பார்வையும்



ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொருத்த வரையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது.

பிஜேபி.யைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் இலங்கைக்குச் சென்றனர். யாழ்ப்பாணம் பகுதிக்கும் சென்றுள்ளனர். அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் சந்தித்தனர்.

இந்தப் பயணம் குறித்து பிஜேபி குழு என்ன கூறுகிறது? இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா தயா ராகவே உள்ளது. ஆனால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவும் என எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. உள்ளூர் அரசியல் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் சரியானதாக இருக்கும். இலங்கையை இந்தியா நட்பு நாடாகத் தான் பார்க்கிறது ஆகவே அந்த நாடு சீர் குலைவதை இந்தியா அனுமதிக்காது என்று கூறியுள்ளது.

இதைச் சொல்லுவதற்குத்தான் பிஜேபி குழு இலங்கை சென்றதா? தமிழர்கள் அங்குள்ள பிரச்சினைகளை யாரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்?

தமிழினம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்ற வகையில் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தியும், சிங்கள இன வெறியைத் தூண்டியும் செயல்படுகிறவர்களிடம் எந்த வகையில் தமிழர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியும்?

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிட்டது இல்லையா? இந்தியா தலை யிட்டது இல்லையா? பாகிஸ்தான் சம்பந்தப் பட்டதுதானே வங்காள தேசப் பிரச்சினை - அதற்குத் தீர்வு எப்படி கிடைத்தது? இந்தியா வின் பங்கு அதில் கிடையாதா?

அப்படிப் பார்த்தால் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம் பெற்றது எப்படி? இன் றைக்கு அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கும் வகையில் செயல்படும் பொழுது இந்தியா அதில் தலையிட பாத்தியதை உடையது ஆகாதா?

ஈழத் தமிழர்களின் பிரச்சினை என்பது வெறும் உணவு, உடை, உறையுள் பிரச்சினை மட்டும் தானா? அதனைத் தாண்டியும் தங் களின் இனம், மொழி, பண்பாட்டு அடை யாளங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுபற்றிய கருத்தென்ன?

இந்தப் பிரச்சினையில் அந்தரங்க சுத்தியோடு பிஜேபி செயல்பட்டது கிடையாதே. இதற்கு முன்பு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை பிஜேபி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்றபோது, அதிபர் ராஜபக்சேவுடன் கலந்து பேசிய பிறகு, தனியே ராஜபக்சேயுடன் சுஷ்மா சுவராஜ் பேசியதுபற்றி சர்ச்சைகள் கிளம்பவில்லையா?

அதன்பின் புத்தர் விழா என்று சொல்லி ராஜ பக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்தது இதே சுஷ்மா சுவராஜ்தானே!

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு அரசு - ஒரு நாடு இந்தியாவிற்கான நட்பு நாடு என்று சொல்ல எப்படி மனம் வருகிறது?

தமிழர்களை மறந்து விடுங்கள் - மனித உரிமைக் கண்ணோட்டத்திலாவது இதனை அணுக வேண்டாமா?

மனித உரிமைகள் ஒரு நாட்டில் பறிக்கப் படுமேயானால், இனப்படுகொலை (Genocide) ஒரு நாட்டில் நடைபெறுமானால், அதில் தலையிட மற்ற நாடுகளுக்கு உரிமை உண்டு என்ற நியதிகூட பிஜேபிக்குத் தெரிய வில்லையா?

இங்குள்ள சோ ராமசாமிக்கு என்ன பார்வையோ, அதே பார்வைதான் பிஜேபிக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்!



புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப் பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

தமிழ் ஓவியா said...


சாலையோரங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல கோயில்களும்தான்


புதுக்கோட்டை டவுனில் பிருந்தா வனம் என்றொரு பகுதி உள்ளது. வடக்கு ராஜவீதியும் தஞ்சை சாலையும் இணை யும் இந்த இடத்தில் எப்போதும் மக்கள் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்த இடத்தில் விபத்துகள் ஏதும் நடைபெறா வண்ணம் சிக்னலும் அமைக்கப்பட்டிருக் கிறது. இன்று காலை 5-மணியளவில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்றும் புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சை சாலையை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் பிருந்தாவனம் முக்கத்தில் அதிவிரைவாக மோதிக் கொள்ள நேர்ந்தது. அதில் இரு லாரிகளின் ஓட்டுனர்களும் தங்களையும் தங்களது வாகனங்களையும் காப்பாற்ற திருப்பியும் விபத்துக்கு உள்ளானது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் ஒரு லாரியின் ஓட்டுநர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச் சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.

உடைந்து நொறுங்கியது அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்ச நேயர் கோயில்தான். பக்தர்களாலும் ஆன்மீகப் பெரியோர்களாலும் ஆஞ்ச நேயரை அவர் ராம பக்தராக இருக்கின்ற காரணத்தாலும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதாலும் ஆஞ்ச நேயருக்கு மிகப் பெரிய வலிமை இருக் கிறது என்றும் வல்லமை பொருந்திய அவரை வணங்கினால் அவருக்கு உரிய சக்தியைத் தம் பக்தர்களுக்கு அருளி பாலித்து வழங்கி விடுவார் என்றும் கற்பிக்கப் பட்டு ஆங்காங்கே அதிக எண்ணிக்கையில் கட்டப் பட்டு வரும் ஆஞ்சநேயரின் சக்தி அவரது இருப் பிடத்தைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது.

அந்த இடத்தில் விளக்குத்தூண் மட்டும் இல்லாதிருந்தால் அருகில் உள்ள கட்டடம் எப்படி உடைந்து சேதாரமாகி இருக்கும் என்பதைக் கற்பனையும் செய்ய இயலாத அளவிற்கு அந்த விபத்து நடந் திருக்கிறது. கோயில் உடைந்து நொறுங்கி விட்டது. இதுதான் ஆஞ்சநேயரின் பலம் என்பதை பக்தர்கள் உணரும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழரின் அடிமை விலங்கொடிக்கும் நாளாக இருக்கும். மேலும் சாலையோரங்களில இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல இது போன்ற பக்திப் போதையை வளர்க்கும் கோயில்களும் தான்.

ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிறப்புரிமை


வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக் கும் டாக்டர் மூஞ்சே அவர்களுக்கும் வங்காளத் திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை மேற்படி இரு கனவான் களும் வீரர்களைப் போல் மீறி நடந்தார்கள். அம்மீறுத லானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தே சித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம்.

அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக்கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி.ரங்காச் சாரியார் முதலிய பார்ப்பனர்கள் அரசப் பிரதிநிதி யிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வருகிறது.

ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்றுவதற்கு மற்றொரு புறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்குப் பிறப்புரிமை என்பது இதனால் விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவதான மசோதவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப் பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக்குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டுமென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப் பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்து நமது டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார்.

அதாவது:-

இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்துமத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசியல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் உள்பட காங்கிரஸ் காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில் காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும்.

ஆதலால் சட்டசபையிலுள்ள சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தவர்கள் கண்டிப்பாய் இது விஷயத்தில் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். அரசியலில் வேற்றுமை இருந்தாலும் சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய் நான் ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்.

அதாவது, வெளியிடப்பட்டிருக்கும் இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனரல்லாதாரும் முழு மனதுடன் ஆதரிக்கிறார்கள். மசோதாவுக்கு விரோதமாய் செய்யப்படும் கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால் நடத்தப்படும் பொய்க் கிளர்ச்சியாகும். இது விஷயமாய் அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கவும் தயாராயிருக்கிறேன் என்று பார்ப்ப னருக்கும் அரசாங்கத்திற்கும் தந்தி கொடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு மேல் ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதை நாம் முழு மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய் ஆதரிக்கவும் செய் கிறோம். இப்பார்ப்பனர்களின் கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத் தீவிர தேசியவாதிகளை ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திரமல்லாமல் சர்க்காரோடும் ஒத்துழைக்கச் செய்கிறது.

இனியும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் கொடுமையும் வெளியாக வெளியாக இன்னமும் என்னென்ன செய்யச் சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான் அறிவாள்.

- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?


பேராசிரியர், முனைவர் பு.இரா சதுரை எம்.ஏ.பிஎச்.டி., அவர்களின் நூலில் (இரண்டாம் பதிப்பு 77 ஆம் பக்கத்தில் இருப்பது)
என்றும் போரே எதிலும் வெற்றியே!

1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வாங்கினார்கள். தான் நிலைநாட்டிய வகுப்புரிமைக்கு அரசியல் சட்டத்தின் பேரால் தீங்கு வந்தபோது பெரியார் பொங்கி எழுந்தார்.

எதற்கும் துணிந்து விட்டோம்;

எதிரிகள் முட்டுக்கட்டை கண்டு கவலையுறோம்;

நம் நாட்டின் வசதிகளில் நமக்குரிய பங்கைக் கேட்பதை யாரும் அநீதி என்று கூறவி யலாது;

எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்பத்திற்கு இந்த வகுப்புப் பிரச்சினையே காரணம்;

நமது உண்மைத் தகுதிக் கும், திறமைக்கும் எந்தப் பார்ப்பானும் ஈடாக மாட்டான் என்று கூறிப் போர் தொடுத் தார். ஊர்தோறும் வகுப்புரிமைப் போர் முரசொலித்துப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

விருதுநகர் செந்திற்குமார் நாடார் கல்லூரியில் 1950இல் இதற்கான போராட்டத்தை நடத்தியவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர்.

- க.பழனிசாமி

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்! (ஆவணக் குறிப்புகளிலிருந்து)

விடுதலை பவள (75-ஆம் ஆண்டு வெளி யீட்டில், 90ஆம் பக்கத்தில் இருப்பது)



சில உறுதியான உண்மைகள்

தாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து அர சாங்கத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வடார்க்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணி யிடங்கள் எல்லாச் ஜாதியார்க்கும் அளிக்கப்பட வில்லை என்று தாங்கள் தங்கள் பத்திரிகையில் ஆசிரிய உரை எழுதியும் வேறு பல கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி இருந்தும் நிலைமை மாறவில்லை என்பது குறித்துத் தாங்கள் பத்திரிகையில் எழுத இடம் அளிக்க வேண்டுகிறேன்.

நிலைமை சீரடையவில்லை என்பது மட்டுமின்றி இன்னும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அடியிற் கண்டவற்றிலிருந்து அறியலாம்.

1. மாவட்டத்தின் 5 டிவிஷன்களிலும், ஹூசூர் கருவூலத்திலும் ஆறு டெபுடி கலெக்டர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.

2. ஹூசூர் சிரஸ்தார் ஒரு பிராமணரே.

3. மொத்தமுள்ள ஏழு தாசில்தார்களும் பிராமணர்களே.

4. மொத்தமுள்ள பதினைந்து டெபுடி தாசில்தார்களில் பத்துப்பேர் பிராமணர்களே.

5. மொத்தமுள்ள நான்கு தலைமைக் கணக்கர்களும் பிராமணர்களே.

6. மொத்தமுள்ள 39 வருவாய் ஆய்வாளர்களில் (Revenue Inspector) 30 பேர் பிராமணர்களே.

7. கோட்ட (டிவிஷனல்) அலுவலகங்களில் உள்ள அய்ந்து தலைமை எழுத்தர்களில் மூவர் பிராமணர்களே.

8. செட்டில்மெண்ட் பணி பார்க்கும் அலுவ லர்களில் மொத்தமுள்ள அய்ந்து துணைத் தாசில்தார்களும் இருபது வருவாய் ஆய்வாளர்களில் பதினைந்து ஆய்வாளர்களும் பிராமணர்களே.

தமிழ் ஓவியா said...


மாக்கடலாய் மதுக்கூரில் எழுவீர்! எழுவீர்!!


மதுக்கூர் என்றால் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் தான் நினைவிற்கு வருவார்.

நாகை இரயில்வே பணிமனையில் பணியாற்றியதால் அவர் நாகை காளியப்பன் ஆனார்.

அய்யாவின் நம்பிக்கைக்கு உரிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர் மலேசியாவுக்கு தந்தை பெரியார் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு, குடிஅரசு இதழுக்குச் சந்தாக்களை அங்கு திரட்டினார்.

அவருடைய நூற்றாண்டு விழாவை கழகம், மதுக்கூரில் சீரும் சிறப்புமாக நடத்தியது.

அதே மதுக்கூரில் நாளை மறுநாள் (10.6.2013) வட்டார மாநாடு நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் தன்மான முரசறைய உள்ளார்.

திண்டுக்கல் பொதுக் குழுவுக்குமுன் நடைபெறும் மாநாடு இது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மாநாட்டில் இன்றைய பிரச்சினைகள் குறித்து கழகத்தின் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் கருத்து வாள்களைச் சுழற்ற இருக்கின்றனர்.

ராஜபாளையம் மாநாட்டில் கழகம் அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியும், தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நீர் சிக்கல் குறித்தும், தமிழர்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று புராணம் புளுகும் ராமன் பெயரால் முடக்கப்படும் அநீதி குறித்தும், பற்றி எரியும் ஈழம் பற்றியும் கருத்துக்களம் சூடு பறக்க உள்ளது.

தமிழ்நாட்டில் கழகப் பேரணி எங்கு நடந்தாலும் அதில் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றக் கூடிய அத்திவெட்டி தோழர்கள் அங்குதானே இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்பொழுது மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிபற்றிக் கேட்கவா வேண்டும்?

கழகம் என்றால் இளைஞர்களின் சங்கமம் என்பதை ராஜபாளையம், ராஜபாட்டையில் நடத்திக் காட்டியது.

பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் இளைஞர் பட்டாளம் இருக்கவே இருக்கிறது. அவர்களின் கைத்திறனைக் காணப்போகிறோம்.

தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர இருக்கிறார்கள்.

அலை அலையாக மாநாடுகளை நடத்திக் கொண்டி ருக்கும் உயிர்ப்புள்ள இயக்கமாக (டுஎந றுசைந) திராவிடர் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்ட நாளை, போர்த் தலை வர் தமிழர் தலைவர் ராஜபாளை யம் மாநில இளைஞரணி மாநாட் டில் அறிவித்துவிட்டார். அறி வித்த அந்த சில மணித் துளி களுக்குள் ரத்தக் கையொப்ப மிட்டு ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் போராட்டக் களத்திலே குதிக்கப் பட்டியலைக் கொடுத்து விட்டனர். எந்த இயக்கத்தில் இப்படி நடக்கும் - எதிர்பார்க்கத் தான் முடியும்?

மதுக்கூர் மாநாட்டிலே பெரும் எண்ணிக்கையில் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

தமிழர்கள் இன்னும் நாலாஞ் ஜாதிகளா? தந்தை பெரியாரின் சகாப்தத்திலும் இன்னும் நாம் சூத்திரர்களா?

உங்களைச் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கவில்லையா?

தந்தை பெரியார் நாட்டுக்கு விட்டுச்சென்ற சொத்துக் களிலேயே விலை மதிக்க முடியாத பெருஞ்செல்வம் நமது தலைவர் - தமிழர் தலைவராக வையத்தில் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் அவர்களின் காலத்திலே சூத்திர இழிவை ஒழிப்போம்! ஒழிப்போம்!!

தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் பெயர் கொடுத்ததற்கு அதுதான் காரணம்.

அந்த இழிவு என்பது தமிழன் வீதிகளிலே தமிழன் கட்டிய கோவில்களின் கருவறைக்குள்ளே ஆணவமாக அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரிலே நாம் தோற்கக் கூடாது - தோற்கவும் மாட்டோம்.

சட்டம் ஒரு பக்கம் சவாரி செய்யட்டும் - மக்கள் மத்தியிலே நாம் ஏற்றும் சூடுதான் - நாம் எழுப்பும் உணர்ச்சி எரிமலைதான் நம்மைச் சூழ்ந்துள்ள இன இழிவை - சூத்திர இழிவைச் சுட்டெரிக்க முடியும்.

ஆங்காங்கே நாம் நடத்திக் கொண்டுவரும் மாநாடு கள், அதற்கான ஒத்திகைதான் - போடும் அஸ்திவாரம்தான்.

மதுக்கூர் மாநாடு மகத்தானதாக அமையட்டும்!

மான மீட்க, தமிழர்களே மதுக்கூர் நோக்கி மாக்கடலாய்ப் பொங்கி எழுவீர்! எழுவீர்!!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...

ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்



- அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்

கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? - சுகி சிவம்

புதிய விளக்கம்:

சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைக்கமாட்டார்கள். வீட்டிலேயே பொங்கல் வைத்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.

கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. மற்ற நேர்த்திக்கடன் எல்லாம் கோவில் சொத்தாகிவிடும். பொங்கல் நேர்த்திக்கடன், முழுவதும் தங்கள் சொத்தாகி விடும். இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்கிறார்களே தவிர, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதுபோல உப்புப் பொங்கல் வைப்பதில்லை. அதனால், கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பவர்கள் அனைவருமே இனிப்பு விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.

வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடந்தால் அம்மா சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுபோல் கடவுள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வராதது இருக்கட்டும். தாய் குழந்தைக்கு அன்போடு ஊட்டிவிடுகிறாளே, அதுபோல கடவுள் வந்து பக்தர்களுக்கு ஊட்டிவிடலாம் அல்லவா?

குழந்தை அளைந்து கெடுத்த உணவைத் தாய் சாப்பிடுகிறாள். சில கோயில்களில் பொங்கல் பிரசாதத்தை எல்லாம் குப்பையில் கொட்டப் பார்த்திருக்கிறேன். அதையாவது சாப்பிட வரலாம் அல்லவா?

கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதானே. அப்படி ஒரு சக்தி எங்கும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆன்மீகவாதிகள் கதை அளப்பதெல்லாம் பக்தர்களை மூளைச் சலவை செய்வதற் காகவே தவிர, வேறு காரணம் இல்லை.

தமிழ் ஓவியா said...

குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்

பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் குழந்தைத் திருமணங்கள் வினோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள நம்மியம்பட்டு, ஜமுனாமாத்தூர் கிராமங்களில்.

வயதுக்கு வந்த (12-15 வயது) பெண்கள் மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு நம்மியம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் சந்தையிலும், திங்கட்கிழமை ஜமுனாமாத்தூரில் நடைபெறும் சந்தையிலும் கூடுகிறார்கள். அப்போது 16லிருந்து 20 வயதுக்குள் இருக்கும் ஆண் பிள்ளைகள் வர, அவர்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்பு, இருவரும் சேர்ந்து பையனின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இருவரும் ஒன்றாக - கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்களாம். இல்லையென்றால், அந்தப் பெண் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாளாம்.

வாழ்க்கையைத் தொடர விரும்பினால், திருமணம் செய்து வைப்பதற்கும் விரும்பவில்லை என்றால் பிரித்து வைப்பதற்கும் 14 வயது நிரம்பிய தலைவர் செத்தியராஜ் இருக்கிறார்.

தாத்தாவுக்குப் பின் பேரன் நாட்டாரா வர வேண்டும் என்று 9 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு செத்தியராஜ்க்கும் நாட்டாரா பட்டம் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மக்களில் யார் திருமணம் செய்தாலும் இந்த நாட்டாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, இவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை தாலி கட்டுவாராம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு என்று வந்தால் பிரித்து வைத்துவிடுவாராம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொடுப்பார்களாம்.

இதனால் கைக்குழந்தைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் இளம் விதவை களும் அதிகம் காணப்படுகின்றனர். சிறு வயதி லேயே திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைவதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இது நடப்பது மிகவும் தலைக் குனிவானது அல்லவா? ஆண்டாண்டு கால வழக்கம் என்றும்,கடவுள் கட்டளை என்றும் சொல்லி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நியாயப்படுத்த முடியாது.அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது. அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

தமிழ் ஓவியா said...

இதோ...! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்


படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் திராவிட இயக்க உழைப்பின் பயனை இன்று கண்கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கூவித் திரியும் துரோகிகளுக்கும் இந்த விவரங்கள் சமர்ப்பணம். 100 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது எப்படி என்பதில் போட்டி உருவாகிவருகிறது. அந்த அளவுக்கு கல்வி ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளின் ஒப்பீடு இது.

2008 மற்றும் 2011ஆ-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது

OC பிரிவினரின் cut off மதிப்பெண் 1.5% அதிகரித்துள்ளது.

BC பிரிவினரின் cut off மதிப்பெண் 3.25%அதிகரித்துள்ளது.

BCM பிரிவினரின் cut off மதிப்பெண் 3.5% அதிகரித்துள்ளது.

MBC பிரிவினரின் cut off மதிப்பெண் 4.75%அதிகரித்துள்ளது.

SC பிரிவினரின் cut offமதிப்பெண் 6.25% அதிகரித்துள்ளது.

ST பிரிவினரின் cut off மதிப்பெண் 18% அதிகரித்துள்ளது.

35% மார்க் வாங்கிய தலித் மாணவர்கள்.... தகுதி இல்லாத மாணவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்.. திறமைக்கு மதிப்பில்லை என்றெல்லாம்.... இப்படிப் பேசுபவர்களை எல்லாம் பார்த்தா காறித் துப்பனும் போல இருக்கு - இந்த கட்_ஆஃப் லிஸ்ட் பாத்ததும்!!!

(கட்_ஆஃப் என்றால் இந்த மதிப்-பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்று பொருள். எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஷிசி பிரிவினரில் 192.25 மதிப்-பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்தான் இடம்பெற முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இடஒதுக்-கீட்டுக்கு எதிராகப் பேசும் மே(ல்)தாவிக் கும்பல் ஏதோ வெறும் பாஸ் மார்க் மட்டும் எடுத்தவரை எல்லாம் மருத்துவராக்கி உயிருடன் விளையாடுகிறார்கள் என்று பச்சையாகப் பொய் பேசி வருகின்றனர். அதை முறியடிக்கின்றன இந்தப் புள்ளி விவர உண்மைகள்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தியபோது - பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை என்.பி. என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டுப் - பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கலைஞரின் தேவை


செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பயனாளி களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

சிந்தனை : கலைஞர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே தக்க சான்று. கலைஞரின் திட்டங்களை முடக்காமல் தொடரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

கருத்து


இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது.

-கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


கழிவறைகளில் தேவையைவிட பல மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை நம்மிடையே இல்லை. மாற்றுத் திட்டம் கண்டறியப்பட வேண்டும். விண்வெளியில் தண்ணீரற்ற முறையில் கழிவுகள் வெளியேற்றப்-படுகின்றன. நிலத்திலும் இதே போன்றதொரு திட்டம் தேவை.

- சாந்தா ஷீலா நாயர், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர்

தமிழ் ஓவியா said...

கலைஞர் - 90


இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே :

வாரியாரைத் திணறடித்த மாணவர்

திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் தெரியாதா-? என்றார்.

வாரியார்: கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்றவைகளைப் பறித்துத்தான் சாப்பிடுகிறோம். இது உயிர்க்கொலை ஆகாது. ஆட்டையும், மாட்டையும் கொலை செய்து சாப்பிடக்கூடாதென்பதற்காகத்தான் ஆண்டவன் தாவரங்களைப் படைத்தார். தளதளவென்றிருக்கும், வாழைமரத்தை வெட்டி, வாழைத்தண்டை உண்பதும், தழைத்து நிற்கும் கீரைத் தண்டைப் பிடுங்கிச் சாப்பிடு-வதும், உயிர்க்கொலை அல்லவா? நமக்குத்தான் தாவரங்களை ஆண்டவன் படைத்தார் என்றால் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்காக எவைகளைப் படைத்தார்? என்று அந்த மாணவர் கேட்டதும், வாரியார் திக்குமுக்-காடினார் _ திகைத்தார். தன் கையில் அணிந்திருந்த _ முருகா! முருகா! எனப் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தடவிக் கொண்டார். வெள்ளிக் கூஜாவில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தார்.

மேலும் தர்க்கம் நடவாமல் இருக்க, கோயில் அறங்காவலர் வடபாதிமங்கலம் மைனர் வி.எஸ். தியாகராச முதலியார் சில பிரமுகர்களை அனுப்பி அந்த மாணவரை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். 1943ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்கு-வாதத்தின் விளைவாகத் திருவாரூர் இளைஞர்-களிடையே உற்சாகமும், பெரியோர்களிடையே பரபரப்பும், தி.க. தோழர்களிடையே மேலும் நெருக்கமான தொடர்பும், ஒற்றுமையும் ஏற்படுத்திவிட்ட அந்த மாணவர்தான் இன்றைய கலைஞர் என்கிறார் டாக்டர் இரா.விஜயராகவன்.

மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற _ சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். 2004இல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் தம் பிடிக்கச் சொல்லிவிட்டு, மூச்சை நிறுத்துங்கள் என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கேன் என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம்.

தமிழ் ஓவியா said...


சோதனை முடிந்த பிறகு, இப்போது மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் டாக்டர்.

மூச்சை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்-தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர்.

மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வள்ளுவனுக்குக் கோட்டமும், சிலையும் அமைத்தவர், குறளோவியம் வரைந்தவர் குறள் நெறியில்தானே செல்வார்.

வசனத்தை மாற்றமுடியாது; நடிகையை மாற்று

குறவஞ்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். வில்லனிடம் சிக்கிய இளம்பெண், அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. இந்தக் கட்டத்தில் அவள், கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? என்று சொல்லிக் கதற வேண்டும். இளம்பெண்ணாக நடித்த நடிகை, இந்த வசனத்தைச் சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது மாற்றுங்கள் என்றார் திடீரென்று.

நல்லவேளையாக அப்போது செட்டில் கலைஞர் இல்லை.நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், பயனில்லை. கடவுளைத் தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேசமாட்டேன் என்று அடியோடு மறுத்து விட்டார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பண்டரிபாய், நிலைமையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் முறையிடுவது போல்தானே தவிர, தூஷிப்பதாகாது. அந்த வசனத்தைப் பேசி நடியும்மா! என்று எவ்வளவோ சொல்லியும், அவரது அறிவுரைக்கும் அந்த நடிகை இணங்கவில்லை.

அந்த நேரம் பார்த்து, கலைஞர் எதேச்சையாக வந்து விட்டார். நிலைமையை விளக்கினோம். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க மாட்டீர்களா? என்று கலைஞர் கேட்டார்.

வேறு ஏதாவது மாற்றி எழுதுங்கள். பேசுகிறேன்! என்று கலைஞரிடமே கூறிவிட்டார் அந்த நடிகை.

என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவே தேவையில்லை. உங்களை மாற்றி வேறு யாரையாவது போட்டுக் கொள்கிறோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்! என்று கூறிவிட்டார் கலைஞர்.

இந்த நடிகையைப் போட்டு அய்யாயிரம் அடி வரை எடுத்திருக்கிறோமே...... என்று அச்சத்துடனேயே கலைஞரிடம் சொன்னேன். அந்த ஃபிலிமைக் கொளுத்திவிட்டு, இந்த காரெக்டருக்கு வேறு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். தன்னுடைய உயிரான எழுத்துகளை நம்மைவிட உயர்வாக மதிப்பவர் கலைஞர் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார் மாயூரம் சௌந்தர்.

தொகுப்பு : சபீதா ஜோசப்
நன்றி : கலைஞர் 100 - நக்கீரன் வெளியீடு



கலைஞர் மொழி :

பிழைப்பு

வயிற்றுப் பிரச்சினையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் எனக் கருதுவது வாழ்வாகாது! அதற்குப் பெயர் பிழைப்பு! வாழ்க்கை அல்ல!

ஆண்டவன்

புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவனுக்குப் பெயர்தான் ஆண்டவன் என்றால்.....
ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவனா?


அனுதாபம்

ஒருவன் சாணத்தை எடுத்து நம்மீது வீசுகிறான். அது நமது சட்டையில் படுகிறது.
அப்போது நமக்கு ஏற்பட வேண்டியது ஆத்திரமல்ல. அதற்குப் பதிலாக சாணம் வீசியவன் தன் கையையல்லவா கறைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அனுதாபம்தான் ஏற்பட வேண்டும்.
இழிமொழிக்கு இழிமொழி எதிர்த்துக் கூறிவிடுவது சுலபம்! அதைத் தாங்கிக் கொள்வதுதான் கடினம்!
அந்தக் கடினமான வேலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


புகழ்

புகழே! நீ பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய், புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை! புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்!

தகுதி

மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளிலேயிருந்து அவர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.