Search This Blog

11.6.13

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை!




கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழுவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியில் உள்ள கட்சிகள் என்ன கருதுகின்றன என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ளன.

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது பிஜேபி என்று காங்கிரஸ் தரப்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.

மோடியை பிஜேபி பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்க விரும்புகிறது;

அதற்கு முன்னோட்டமாகத்தான் கட்சியில் இந்தப் பதவி மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

2002இல் கோத்ரா நிகழ்வைக் காரணம் காட்டி குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதம் என்பதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான வகையில் வேட்டையாடப்பட்டனர்.

2000-த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 230 தர்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை; 4000 நான்கு சக்கர வாக னங்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் சாம்பல் குவியலாகக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3800 கோடி என்று மதிப்பிடப்பட்டது.

இந்த கலவரத்தில் மலைவாழ் மக்கள் உட்பட 12 லட்சம் பேர் களத்தில் இறக்கி விடப்பட்டனர் என்றால் அந்த உக்கிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.


குஜராத்தில் இனப் படுகொலை செய்யப்பட்டது பற்றி முதல் அமைச்சர் மோடி சொன்ன பதில் என்ன தெரியுமா?

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் தியரியை நினைவூட்டினார். ஒரு முதல் அமைச்சர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகள் தானா இவை? அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு முதல் அமைச்சர் இந்த மனப் போக்கில் இருந்தால் இந்துக்களைத் தவிர்த்த மற்ற மக்களுக்குக் குஜராத்தில் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது? வேலியே பயிரை மேய்ந்தால் பயிருக்குப் பாதுகாப்பு எங்கே? எங்கே?

கோத்ரா சம்பவத்தை நேரில் பார்த்த முதல் அமைச்சர் அந்தக் கணத்தில் எடுத்த முடிவு மிக மிக விபரீதமானது. செத்தவர்களின் உடல் சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு எடுத்துச் செல்லுவது என்ற முடிவை மாற்றி, அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆணையிட்டு, ஏற்பாடு செய்தவர் முதல் அமைச்சர் மோடி. இதன் நோக்கம் என்ன என்பது எளிதிற் புரிந்து கொள்ளத்தக்கதே.

கோத்ரா ரயில் எரிப்பை திட்டமிட்டு நடத்தினார் கள் முசுலிம்கள் என்று பரப்பி, அந்தச் சூழலில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட 56 பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்துக்களின் வெறித்தனம் இஸ்லாமியர்கள் மீது திரும்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதற்குள் இருக்கிறதா - இல்லையா? ஆக இனக் கலவரத்துக்கான விதையை அந்த இடத்திலேயே விதைத்த விஷமிதான் இந்த மோடி.

உடனே அன்றே அரசு அதிகாரிகளைக்கூட்டி நாளை மாநிலத்தில் நடக்க இருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்களை காவல் துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு போட்டவர்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுத் துறை அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் இதனை உறுதிபடுத்தியுள்ளனரே.

இந்த மோடியைப் பற்றி வேறு எவர் சொன்னதை யும்கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மோடி சார்ந்துள்ள பிஜேபியைச் சேர்ந்த சட்டப் பேரவை பெண் உறுப்பினர் ரமிலாபென் ஆன் லுக் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்று போதுமே!
ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர். பொய்களையே பிரகடனங்களாக வெளியிட்டவர் என்று கூறியதைவிடவா மோடிக்கு நற்சான்றுப் பத்திரம் தேவை?

உச்சநீதிமன்றமே இந்த மனிதருக்குக் கொடுத்த பட்டம் நீரோ மன்னன்!

இந்த நிலையில் உள்ளவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் - அதற்கு முன்னோட்டம் தான் பிஜேபி பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டு இருப்பது.

இதன் மூலம் பிஜேபி என்ற அமைப்பே பாசிசத்தின் கொடிய தாய் என்பது அம்பலமாகி விடவில்லையா?

இந்திய ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? அல்லது இனப்படுகொலை  மய்யமாக்கப்பட்ட குஜராத்தாக ஆக்கப்பட வேண்டுமா? சிந்திக்க வேண்டியது இந்தியத் துணைக் கண்டத்து வெகு மக்கள்தான்!
                  ------------------------"விடுதலை” தலையங்கம் 10-6-2013

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (2)

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, அதனை சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்ட மாபாதகத்தைச் செய்தவர் குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி;  அவசர அவசரமாக அதிகாரிகளை அழைத்து - சிறுபான்மை யினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்ட உத்தரவு பிறப்பித்தார் என்று காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, மோடியின் அமைச்சர வையில் முக்கிய அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவும் கூறினார். அவர் சாட்சியாக மாறி விடுவார் என்று அஞ்சி அந்த அமைச்சரே படுகொலை செய்யப்பட்டார் மோடி ஆட்சியில். என் மகன் படுகொலைக்குக் காரணம் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தை பகிங்கரமாகவே நானாவதி ஆணையத்தின்முன் சொல்லவில்லையா?

குஜராத் கலவர வழக்குகள் 4252; அவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், உச்சநீதிமன் றத்தின் ஆணையின்படி அல்லவா  அவை மீண்டும் உயிர் பெற்றன.

மோடியின் காவல்துறையினர் முதல் குற்றப் பத்திரிகையில் எப்படி வழக்கைப் பதிவு செய்தனர்? நரோடா பாட்டியாவில் நடைபெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெறுகின்றன.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன் முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் இதன் பொருள் என்ன? குற்றப் பத்திரிகையிலேயே தீர்ப்பை எழுதி விட்டனர் என்பதுதானே!

நரோடா பாட்டியா என்னும் ஒரே இடத்தில் மட்டும் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்துக் கருவைத் தீயில் தூக்கி எறிந்து - அந்தக் காட்சியைக் கண்டு குதூகலித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தன படுகொலைகளுக் குத் தலைமை வகித்தவர் மோடி அரசின் முக்கிய அமைச்சராக இருந்த 55 வயது நிறைந்த ஒரு பெண்மணி - மாயாகோட்னானி - இவ்வளவுக்கும் இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது வெட்கக் கேடு!

இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation) வை அமைத்ததால் தான் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர்.

மோடி அரசின் பெண் அமைச்சர் மாயாகோட் னானிக்கு 28 ஆண்டுகள் தண்டனை; பஜ்ரங்தள் என்ற அமைப்பின் குஜராத் மாநிலத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும்; 8 பேருக்கு 31 ஆண்டுகள் தண்டனை. மேலும் 22 பேர்களுக்கு 24 ஆண்டுத் தண்டனை; இந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் பெயர் ஜோத் சனாயாக்னிக்.

தீர்ப்பில் அந்த நீதிபதி சொன்ன வாசகங்கள் மிக மிக முக்கியமானவை; குஜராத் வன்முறை இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். நரோடாபாட்டியா படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நியாயமாக தூக்குத் தண்டனை யைத்தான் வழங்கிட வேண்டும். உலகெங்கும் தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல் கிளம்பு வதால் ஆயுள் தண்டனையைக் கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாரே.
இன்னொரு அதிர்ச்சியான தகவல், நீதிபதி நானாவதி ஆணையத்தின்முன்  குஜராத் - மோடி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்ன தெரியுமா? 2007ஆம் ஆண்டிலேயே ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்பதுதான்.

இவையெல்லாம் ஜனநாயக நாடு என்னும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடந்ததுதான். மற்றொரு மானம் கப்பலேறும் தகவல், நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் - குஜராத் கலவரம் தொடர்பாக பொது நல வழக்கினைத் தொடர்ந்த வழக்குரைஞரான அவர் கூறுகிறார்.

நான் ஏற்பாடு செய்திருந்த வழக்குரைஞர் களுக்கு மோடி காவல்துறையினர் மூலம்  பணம் கொடுத்துச் சரி கட்ட முயற்சித்தார் என்று கூறியுள்ளார்  - மோடியின் சீழ் பிடித்த புத்திக்கு இது ஓர்  எடுத்துக்காட்டாகும்.

குஜராத் மாநிலத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் 287; அதில் 286 பேர் முஸ்லிம்கள், மற்றொருவர் சீக்கியர்.

எப்படி இருக்கிறது நியாயம்? படுகொலைக்கு ஆளான மக்களைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும், படுகொலைக்குக் காரணமானவர் களுக்கு மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவதும்தான் மோடியின் தனிப் பாணி; இவர்தான் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளராம்; சொல்லுகிறது பிஜேபி - இந்துத்துவா கும்பல். வெகு மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
                     -----------------------------"விடுதலை” தலையங்கம் 11-6-2013

31 comments:

தமிழ் ஓவியா said...


பாரதீய ஜனதாவில் உள்கட்சிப் பூகம்பம் வெடித்தது!


மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியா? அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அத்வானி விலகல்

சுயநலக் கூடாரமாகிவிட்டது கட்சி என்றும் குற்றச்சாற்று

சென்னை, ஜூன் 11- வரும் நாடாளுமன்றத் தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இக்கட்சிக்குள்ளே ஏற் பட்டுள்ள உச்சக் கட்ட மோதலின் விளைவாக சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இக்கட்சி யின் செயற்குழுவில் மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரி வித்து அத்வானி திடீர் ராஜினாமா செய்து பூகம் பத்தைக் கிளப்பியுள் ளார்.

மத சார்பற்ற நாடான இந்தியாவில் இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும், சிறுபான்மையினரை பல்வேறு வகையில் கொச்சைப்படுத்தியும் தாக்குதல் தொடுத்து வருவது பாரதீய ஜனதா கட்சியாகும்.

அத்வானி பற்றி..

இக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி இந்தியா முழுவதும் மதவெறியைத் தூண்டும் வகையில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் உள்ள இஸ்லாமியரின் வழிப்பாட்டுதலமான பாபர் மசூதியை இடித்து, தன்னை முன்னணி தலை வராக பிரகடனப்படுத் திக் கொண்டவர். இச் சம்பவம் உலகம் முழு வதும் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத் தியது.

கட்சியில் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பார தீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல் வர் நரேந்திரமோடி குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தனக்கு சாதகமாக்கி இஸ்லா மியர்மீது பழி போட்டு, தனது அரசு இயந்தி ரத்தை பயன்படுத்தி சிறு பான்மை மக்கள்மீது மேற்கொண்ட கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்கள் மூலம் தனது இந்துமத வெறித் தனத்தின் கோரத்தை தனக்குத்தானே வெளிப் படுத்திக் கொண்டவர்.

இந்த இருவருக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என பனிப் போர் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழு வில் குஜராத் முதல மைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நிய மிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி நேற்று (10..6.2013) கட்சி யின் தேசிய செயற்குழு, ஆட்சிமன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மோடியை தவிர்த்தார்:

தனது உதவியாளர் மூலம் நேற்று காலை 11 மணிக்கு ராஜ்நாத் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அத்வானி அனுப்பினார். பின்னர், 12.30 மணியளவில் அத் வானியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். ராஜினாமாவை திரும் பப் பெற அத்வானியை அவர் கோரியதாக தெரி கிறது. ஆனால், மோடிக்கு பதவி அளிக்கப்பட்ட தற்கு அத்வானி தனது எதிர்ப்பை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்ன தாக, மோடியும் ராஜ் நாத் சிங்கும் அத் வானியை சந்தித்து மோடியின் நியமனத் துக்கு ஆசி பெற முடிவு செய்ததாகவும், கடைசி நேரத்தில் ராஜ்நாத் சிங் மட்டுமே சந்தித்துள் ளார். கட்சியின் மூத்த தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், எஸ்.எஸ்.அலுவாலியா, அனந்த் குமார், வெங் கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் டில்லியில் உள்ள அத்வானி வீட் டுக்கு சென்றனர். அத் வானியை சந்தித்து ராஜி னாமாவை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தனர். அத்வானி யின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ராஜ்நாத் சிங் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டு கோளை அத்வானி நிராகரித்தார்.

ஏமாற்ற மாட்டார்

அத்வானியை நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை திரும்பப் பெறும்படி கோரினார். இத்தகவலை டுவிட்டர் இணையதளத் தில் மோடி தெரிவித் துள்ளார். லட்சக்கணக் கான தொண்டர் களை அத்வானி ஏமாற்ற மாட்டார் என்று மோடி கூறியுள்ளார்.

ராஜ்நாத்துக்கு உருக்கமான கடிதம்

ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

ஜனசங்கத்துக்காகவும் பா.ஜ.வுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். இது எனக்கு எல்லை யற்ற திருப்தியை அளிக் கிறது. ஆனால், சமீப காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் போக்கு ஏற் றுக் கொள்ள முடியாத தாக இருக்கிறது. நாட் டையும் மக்களையும் பற்றி கவலை கொண்ட ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் போன்ற தலை வர்களின் கொள்கை யோடு உருவாக்கப்பட்ட கட்சியில் அந்தக் கொள் கைகள் இப்போது இல்லை. நமது கட்சியின் பெரும்பாலான தலை வர்கள் தங்கள் சொந்த நலன் குறித்தே கவலைப் படுகின்றனர்.

எனவே, கட்சியின் தேசிய செயற்குழு, ஆட்சி மன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதையே எனது ராஜி னாமா கடிதமாக ஏற் றுக் கொள்ளவும்.
- இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூன்று முறை ராஜினாமா

பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை, பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 2005இல் பாகிஸ்தான் சென்ற அத்வானி, அந்நாட்டின் உயரிய தலைவர், முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என, பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பல நாட்களுக்கு பிறகு, திரும்பப் பெற்றார். அதே ஆண்டு, டிசம்பரில், மும்பையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், இப்பிரச்சினை மீண்டும் எழவே, அத்வானி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ.,வின், பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக, அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் பிற்போக்குத்தனம்:


திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் கூடாதாம்

இந்தூர், ஜூன் 11- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத் திற்கு முன் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அணுமதிக் கக் கூடாது என மத்திய பிரதேச பா.ஜ., துணைத் தலைவரும் மக்களவை எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது ரகுநந்தன் தனது கருத் தைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசு கையில், மாணவர்கள் குறிப்பாக இளம்பெண் கள் செல்போன் பயன் படுத்துவதாலேயே பெரும் பாலான அச்சுறுத்தல் களும், குற்றங்களும் நடைபெறுவதாக தெரி வித்தார். இளம்பெண் கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத் துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதி ரானது, ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித் துள்ளார். தனது இந்தக் கருத்தை தனி மனித நோக்கில் இருந்தே தெரி விப்பதாகவும், பா.ஜ.,வின் கொள்கை யின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை எனவும் ரகுநந்தன் தெரி வித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு பா.ஜ., எம்.பி., ரகுநந் தனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் மற்றம் தேசிய மகளிர் ஆணையம் ஆகி யன எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா கூறுகையில், பெண்கள் இன்னும் பழங்கா லத்தை போன்றே இருக்க வேண்டும் என இந்த அரசியல்வாதி விரும்புவதாகவும், இவரது இந்தக் கருத்து அனைத்து பெண்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என வும் தெரிவித்துள்ளார். ரகுநந்தனின் இந்த கருத்திற்காக அவரும், பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலி யுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தெரி வித்ததாவது: ரகுநந் தனின் இந்த கருத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., கட்சி யிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது சந்தேகத்திற்கு இடமில் லாமல் நிரூபணம் ஆகி உள்ளது; மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்ச வான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்; ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான விஜய்ஷா, பாபுலால் கவுர், கைலாஷ் விஜய் வர்கியா, ரகுநந்தன் சர்மா உள்ளிட்டோர் பெண் களுக்கு எதிரான கருத் துக்களை வெளியிட்டு வருகின்றனர்; ரகுநந் தனின் பெண்களுக்கு எதிரான இந்த கருத் திற்கு அவர் மட்டுமல்ல பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை நிரந்தரக் குழுவை உடனே அமைத்திடுக மதுக்கூர் மாநாட்டில் கழகத் தீர்மானம்


மதுக்கூர் மாநாட்டில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (10.6.2013)


காவிரி டெல்டா விவசாயிகள் நலனைப் பாதிக்கும் வகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும் என்பதையும், காவிரி நதிநீர் பங்கீடு சரியாகக் கிடைக்க ஒரே நிரந்தரத் தீர்வு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தி அதன் அளவீட்டின்படி கர்நாடகம், தமிழ்நாட்டிற்குக் காவிரி நதி நீரைத் தரும் வகையில் காவிரி மேலாண்மைக் குழுவினை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அதற்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க மறுத்தால், மத்திய அரசே தனது நேரடிக் கண்காணிப்பில் நாட்டின் அணைகளை அவசரச் சட்டத்தின் மூலம் எடுத்து தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டுமென்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கர்நாடகத்தைப் போல எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் உரிமைபற்றி முழங்க வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திட வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளையும் இத்திராவிடர் கழக மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

- மதுக்கூரில் நேற்று (10.6.2013) நடைபெற்ற வட்டார திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்


பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


உண்மையான நாவன்மை எது?


நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.

மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.

நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம். எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:

நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.

இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.

என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.

எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்! இல்லையா?

அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!

அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.

நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!

தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!

காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!

சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!

எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!

நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்

என்ற கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!

நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!

எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.

அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?

எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையின் முடைநாற்றம்!



கோவிலுக்குச் சென்றவர்
குளத்தில் மூழ்கி சாவு!

சென்னை, ஜூன் 11- மயிலாப்பூரில் இருந்து வேனில் ஊத்துக்காடு கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற தனியார் வங்கி ஊழியர், அங்குள்ள குளத் தில் குளித்தபோது மூழ்கி இறந்தார். அவரது நண் பர்கள் 2 பேரை கிராம மக்கள் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

மயிலாப்பூர் பிஎன்கே தோட்டம் பகுதியைத் சேர்ந்தவர் வினோத் (24). தனியார் வங்கி ஊழியர். இவரது நண்பர்கள் நவீன் (23), தினேஷ் (19). இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத் தில் உள்ள எல்லையம்மன் கோயிலுக்கு வேனில் சென்றனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கினர்.

நேற்று காலை எழுந்ததும் வினோத், நவீன், தினேஷ் ஆகியோர் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு சென்று குளித்தனர். அப்போது மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

குளக்கரையில் நின்றிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற உள்ளே குதித்தனர். நவீன், தினேஷ் ஆகியோரை மீட்டனர். வினோத்தை காப்பாற்ற முடியவில்லை.
உடனே காஞ்சிபுரம் தீயணைப்பு படையின ருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடினர். சேற்றில் சிக்கி இருந்த வினோத் உடலை மீட்டனர். காவல் துறையினர் வந்து உடலை, பிரேத பரிசோதனைக்கு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட மற்ற இருவரும் காஞ் சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோயி லுக்கு வந்தவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

வெட்கக்கேடு!

கொலை, கொள்ளை தடுக்க காவல் நிலையத்தில் பூஜையாம்!

சென்னை, ஜூன் 11- கொலை, கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பூசணிக்காய், தேங்காய் உடைத்து திருத்தணி காவல் நிலையத்தில் திருஷ்டி கழித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டதாம்.

திருத்தணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் அடிதடி, குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட வர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி திருத்தணி பொரி வியாபாரி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப் பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருத்தணி - திருப்பதி சாலையில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியின் வரவு கால்வாயில் கர்ப்பிணி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டு புதைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருத்தணி - பெரியார் நகரில் ரிக்ஷா தொழிலாளி தன்ராஜ், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவரது உறவினர் ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசையை யொட்டி திருத்தணி காவல் நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாம். காவல்நிலையம் முழு வதையும் கழுவி சுத்தப்படுத்தி அங்குள்ள சாமி படத் துக்கு மாலை போட்டு கற்பூரம் ஏற்றி காவல்நிலை யத்தின் வாசலில் பூசணிக்காய், எலுமிச்சம் பழம் உடைத்து திருஷ்டி கழித்தனராம்.

திருத்தணி பகுதியில் கொலை, கொள்ளை நடக்க மல் இருப்பதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாம்

பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய காவல் துறையினரே காவல் நிலையத்தில் பூஜை போன்ற மூடத்தனங்களில் ஈடுபடுவது சரியானதுதானா?

தமிழ் ஓவியா said...

பழனி முருகனின் மகிமையைப் பாருங்கள் ஆசிரியர்களே!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே நடந்த சாலை விபத்தில் ஆசிரியர் குடும் பத்துடன் பலியாகி விட்டார். ராஜபாளையம் பகுதியில் இருந்து புதுக்கோட்டையில் செட்டிலா னவர் ஆசிரியர் ரவி. வயது 49. இவர் புதுக்கோட்டை நற்சாந்துப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அரசுப் பணி என்றால் துணையும் அப்படித்தானே இருப்பார்கள். சிலட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரியும் குசேலகுமாரியைத் திருமணம் செய்து கொண்டார்.

வாழ்க்கை நன்றாகத்தான் அமைந்திருந்தது. அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். மூத்தபெண் ராஜநேத்திரா. பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இளைய மகள் ராஜசுபிக்ஷா. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். அந்தப் பெண் தேர்வாகி விடுவார் என்ற நம்பிக்கை ஆசிரியர் தம்பதிகளான பெற்றோருக்கே இல்லாமல் இருந்தது. ஆனாலும் தேர்வாகி விட்டார்.
அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக 8.6.2013-அன்று தங்களது சொந்தக் காரில் பழனிக்குக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள். அங்கு எல்லாம் வல்ல இறைவன் முருகனுக்கு (?) நன்றிக் கடன் செலுத்தி விட்டு இரவில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறார்கள். வரும் வழியில் அன்னவாசல் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது விடியற்காலையில் கார் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கண் அயர்ந்து சாலையோரத்தில் நின்றிருந்த பனை மரத்தில் மோதியதில் கார் குட்டிக்கர்ணம் அடித்து அருகில் உள்ள வயலுக்குள் விழுந்து விட்டது.

உடனே கார் தீப்பிடித்து விட்டது. விபத்தில் காரின் கதவுகள் திறக்க முடியவில்லை. காரில் இருந்த எரிவாயு சிலிண்டரில் இருந்து வெளியான கேசில் ஏசி வயரில் தீப்பிடித்திருக்கக் கூடும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது. நால்வரும் எரிந்து கரிக்கட்டையாகி விட்டார்கள். அப்போது மணப் பாறையில் இருந்து வந்த பேருந்தில் வந்தவர்கள் ஓடிப்போய்க் காப்பாற்ற நினைத்தும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் சொந்தக்கார் என்றாலும் இதுபோன்ற தொலைதூரப் பயணங் களுக்கு ஓட்டுநரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்கிற சிறு செயலைக் கூட மறந்ததால் இப்படி ஒரு விபத்து நடந்துவிட்டது. மேலும் ஆசிரியர்கள் சாதிக்க முடியாததை பழனிமலை முருகன் சாதித்து விடுவானா என்ன? மகள் தேர்வெழுதி தேர்வானது முருகன் செயல் என்றால் தேர்வெழுதிய மாணவியின் செயல் சாதாரணமானதா? இந்த ஆசிரியர்கள் உண்மை யான பக்தர்களாக இருந்துதானே கடவுளுக்கு நன்றி செலுத்தச் சென்றார்கள். அவர்களுக்கு முருகன் இப்படி ஒரு சோக முடிவைச் செய்கிறான் என்றால் மற்றவர்கள் ஏன் முருகக் கடவுளை நம்ப வேண்டும்? இறந்து போன இந்த ஆசிரியர் தம்பதியினருக்காகக் கண்ணீர் சிந்தும் ஆசிரியர் சமுதாயம் இதையும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நீங்கள் சிந்தித்தால்தான் சிந்தனை ஆற்றல் படைத்த சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். பக்தர்களே! ஆசிரியர்களே!! சிந்திப்பீர்..

(தகவல்: ம.மு.கண்ணன்)

தமிழ் ஓவியா said...

கடவுளைக் கேட்கலாமே!

கோயிலுக்கு வந்த பெண் எங்கே?

சிதம்பரம் கோயிலுக்கு வருகை தந்த புது மணப் பெண்ணை காணவில்லை என அவரது கணவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி தாலுக்கா, வழுதலம்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த ராஜாராமனுக்கும், பரங்கிப் பேட்டை அருகே உள்ள கரிகுப்பம் ரவிச்சந்திரன் மகள் மஞ்சுளா (18) என்பவருக்கும் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கரிக்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு விருந்திற்கு வந்த ரவிச்சந்திரன், தனது மனைவி மஞ்சுளாவுடன் இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சனிக்கிழமை மாலை வந்துள்ளார். கோயிலுக்கு சென்று திரும்பி போது மனைவியை கோயில் வாயிலில் நிற்குமாறு கூறி இருசக்கர வாகனத்தை எடுத்து வரச் சென்றார். இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து பார்த்த போது மனைவி மஞ்சுளாவை காணாதது கண்டு அதிர்ச்சியுற்றார்.

இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் தனது மனைவியுடன் பழக்கம் இருந்த சிறீமுஷ்ணம் அருகே உள்ள கலியங்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவியை கடத்தி சென்றிருக் கலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

மயிலம் அருகே சாமியார் அடித்துக் கொலை

மயிலம் அருகே குறி சொல்லும் சாமியார் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்யப் பட்டார்.

புதுவை ஏம்பலம் அருகே செம்பியம்பாளை யத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (43). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மயிலம் அருகே வெளியனூர் கிராமத்தில் தங்கி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார். இவருக்கு உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் பாபு (30) இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு குறி சொல்லிவிட்டு ஆறு முகமும், பாபுவும் பேசிக்கொண்டிருந்தனர். அப் போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாபு கோவிலில் சிறுவர்கள் விளையாட வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து ஆறுமுகம் தலையில் ஓங்கி அடித்தார். இதில் தலையில் பலத்த காய மடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் உயிரிழந்தார். பின்னர் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவலறிந்த மயிலம் காவல்துறை ஆய்வாளர் வெற்றி செல்வன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாபுவை தேடி வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதான்!

அரக்கோணம், ஜூன் 11- அரக்கோணத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டு உள்ளது. இதில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இதுகுறித்த விவரம் வருமாறு:-

அரக்கோணம் வீட்டு வசதி வாரிய பகுதியில் சிறீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வாசலில் எவர்சில்வரால் செய்யப்பட்ட பெரிய உண்டியல் உள்ளது. இந்த உண்டியலில் சேரும் பணத்தை கோவிலின் தலைவர் எஸ்.பி.வெங்கட் ராமன், பொருளாளர் வீரராகவன், செயலாளர் பாபு ஆகியோர் ஆன்மீக அன்பர்கள் முன்பாக திறந்து உண்டியலில் இருக்கும் பணத்தை எடுத்து பக்தர் களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் உண்டியல் திறக்கப்படும்போதும் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை காணிக்கை பணம் சேர்ந்திருக்கும். கடந்த சனிக்கிழமையன்று இரவு பூஜைக்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது.

நேற்று காலை ஆலய குழு தலைவர் வழக்கம்போல் கோவிலை திறக்க சென்றார். கதவை திறந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உண்டியலில் இருந்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருக்கலாம் என புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரக்கோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மிக அருகிலேயே உள்ள இந்த கோவிலில் திருட்டு நடந்து இருப்பது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, உண்டியலை உடைத்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


மதுக்கூரில் மக்கள் கடல் புகுந்ததோ! மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்!


மக்கள் கூட்டத்தின் மத்தியில் கடவுளை மற, மனிதனை நினை எனக் கூறி இளைஞரணி தோழர்கள் அலகுக்குத்தி காரை இழுத்தனர் (மதுக்கூர், 10.6.2013)


மதுக்கூர், ஜூன் 11- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூரில் வட்டார திராவிடர் கழக மாநாடு 10.6.2013 அன்று மாலை 6 மணியளவில் மிக எழுச்சியுடன் நடந்தது.

மாலை 5.30 மணியளவில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மண்டிக்கிடக்கும் மூடபழக்கங்களை முறியடிக்கும் வகையில் அமைந்தது. மாநாட்டின் தொடக்கமாக மாவட்டச் செயலாளர் அத்திவெட்டி பெ.வீரையன் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார். தொடர்ந்து அத்திவெட்டி ஜோதி ஒன்றிய ப.க.செயலாளர் மாணிக்க சந்திரன், ஒன்றியத் தலைவர் வை.இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் புலவஞ்சி இரா.இராமையன் ஆகியோர் மாநாட்டுக்கு முன்னிலை வகித்து உரையாற்றினர். மாவட்ட தொழி லாளரணி அமைப்பாளர் முத்து.துரைராஜ் அவர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து அனைத்து மாவட்டத்தலைவர்கள் சார்பில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், அனைத்து மண்டலத் தலைவர் செயலாளர்கள் சார்பில் தஞ்சை மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.

பட்டுக்கோட்டை கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எ.ஸ்.சித்தார்த்தன் மாநாட்டு தலைமையுரை யாற்றினார். அவர் தனது உரையில் 1989இல் தஞ்சை ஆர்.பி.சாரங்கன் மாவட்டத் தலைவராகவும் இராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் மாவட்டச் செயலாளராகவும் இருந்து மதுக்கூரில் தந்தை பெரியார் அவர்கள் சிலை திறப்பு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 24 ஆண்டுகளுக்கு பிறகு அதே எழுச்சியுடன் தற்பொழுது மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் வட்டார மாநாடு நடைபெற்றது. மாநாடு சிறப்பாக நடைபெற உழைத்த மாவட்டச் செயலாளர் வீரையன் பொதுக் குழு உறுப்பினர் புலவஞ்சி இராமையன். மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து. துரைராசு, அத்திவெட்டி ஜோதி, ஒன்றியத் தலைவர் இராதா கிருஷ்ணன், செயலாளர் அண்ணாத்துரை, நகர தலைவர் சிவக்குமார், சொக்கனாவூர் சிவாஜி ஒன்றிய ப.க. செயலாளர் மாணிக்க சந்திரன், மதுக்கூர் பகுதியை சேர்ந்த பேச்சாளர்கள், முனைவர் அதிரடி அன்பழகன், இராம.அன்பழகன் இவர்களுக்கெல்லாம் ஒருங் கிணைப்பாளராக செயல்பட்ட பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் படைப்பைக்காடு தோழர் களுக்கும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர் களுக்கும் நன்றியை தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கிறேன் என உரையாற்றினார்.

தொடர்ந்து காவிரி பிரச்சினை தீர்ந்து விட்டதா? என்ற தலைப்பில் வழக்குரைஞர் பூவை புலிகேசி அவர்களும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது எப்போது? என்ற தலைப்பில் இராம.அன்பழகன் அவர்களும் ஈழப்பிரச்சனை இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் இரா.பெரியார் செல்வன் அவர்களும் சேதுகால்வாய் தேவையில்லையா? என்ற தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளின் தேவை குறித்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர். தொடர்ந்து கழக அமைப்பு செயலாளர் இரா.குணசேகரன் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு ஆகியோர் உரையை தொடர்ந்து காவிரி ஆற்று நீர் குறித்த முக்கியமான தீர்மானத்தை முனைவர் அதிரடி க.அன்பழகன் முன்மொழிந்தார்.

தமிழர் தலைவர் உரை

இறுதியாக, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார். அவர் தனது உரையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட் டத்தை நிறைவேற்றும் வகையில் பயிற்சி பெற்ற அர்ச் சகர்களை உடனடியாகப் பணியில் அமர்த்தவேண்டும்; திராவிடர் கழகம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி போராட் டத்தை அறிவித்துள்ளது; போராட்டம் நடத்தி நாற்காலிகளில் அமரப் போவது எங்கள் நோக்கம் அல்ல. ஜாதி ஒழிப்பிற்கான இறுதிப் போர் இன இழிவை ஒழிக்க நடைபெறும் போராட்டம்!

அரசு இதனைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுக்க எங்கள் தோழர்கள் அலகு குத்தி கார் இழுத்தல், அலகுக்காவடி, தீ மிதித்துக் காட்டுவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்கள்.

மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். காவிரி நதிநீர் பிரச்சினை என்பது இந்தப் பகுதி மக்களின் வாழ் வாதார பிரச்சினை. அதனைத் தீர்க்க அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பிரச்சினையை தீர்க்க துணிந்து செயல்படவேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

இறுதியாக நகரத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

மணமகனின் சமயோசிதமான முடிவு
தமிழர் தலைவர் பாராட்டு

வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவின்போது மணமகன் நீலகண்டன் சங்கிலி அணிவித்தபோது தலைவழியாக அந்தச் சங்கிலி நுழையவில்லை. நீலண்டன் அப்படியே கழற்றி எடுத்து விட்டு மணமகளின் சடை வழியாக சங்கிலியை மாட்டி திருப்பிக் கழுத்தில் அணிவித்தார்.

அதைக் கண்ணுற்ற தமிழர் தலைவர் அவர்கள் மீண்டும் ஒலிபெருக்கியை வாங்கி இந்த நிகழ்வைக் கவனித்துப் பார்த்தீர்களா? எம்போதுமே நம் மக்கள் மணமகளுக்கு தலையில் கொஞ்சம் அதிகமாகப் பூவைச் சுற்றி விடுவார்கள். சங்கிலி அணிவிக்க வேண்டும் என்று சொன்னவுடன் அதை வாங்கிப் பார்த்தேன். அதில் தாலி இல்லை. டாலர் மட்டும் இருந்தது. அதை அணிவிக்க முயன்றபோது தலை வழியாக நுழையவில்லை. மணமகன் மிகவும் சமயோசிதமாக சடைமுடி வழியாகக் கொண்டு வந்து எளிதாக அணிவித்து விட்டார். இந்த மணமக்கள் இருவரும் சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் என்பதற்கு இது நல்ல சான்றாகும் என்றார். (பேராவூரமணி மணவிழாவில்...)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தேர்வு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 11- ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப் படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் தியாகராயர் நகரில் நேற்றுமுன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமை வகித்தார்.

மத்திய அரசு முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி பேசியதாவது:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படை யிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் நிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தகுதிக்கான மதிப்பெண்ணில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்.

அதற்கான ஆணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணையை திரும்பபெற வேண்டும்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமருக்கான வேட்பாளரா? அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!


புதுடில்லி, ஜூன் 11- மோடியைப் பிரச்சாரக் குழுத் தலைவராக அறி வித்தும், அதன் பின்ன ணியில் பிரதமருக்கான வேட்பாளர் என்பதை முன்னிலைப்படுத்தியும் செயல்படும் போக்கினை பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சிகள் உள்பட கடும் எதிர்ப்பை தெரிவித்துள் ளனர்.

பா.ஜ., தலைமையி லான, தே.ஜ., கூட்டணி யின் பிரதமர் வேட்பா ளராக, நரேந்திர மோடியை அறிவிப்ப தற்கு, அந்த கூட்டணி யில் அங்கம் வகிக்கும், அய்க்கிய ஜனதா தளம், கடும் எதிர்ப்புத் தெரி வித்து வருகிறது. இந் நிலையில், இந்த பிரச் சினை குறித்து, பீகார் முதல்வரும், அய்க்கிய ஜனதா தள தலைவரு மான, நிதிஷ் குமார் கூறியதாவது:

பா.ஜ.,வுக்குள் ஏற்பட் டுள்ள குழப்பத்தை, கூர்ந்து கவனித்து வரு கிறோம். நரேந்திர மோடியை, கட்சியின், பிரச்சார குழு தலைவராக நியமித்துள்ளதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அத்வானியின் விலகலால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும், எங்கள் கட்சி நிர்வாகி கள் கூடி ஆலோசனை நடத்துவோம். அதைத் தொடர்ந்து, விரைவில் முடிவை அறிவிப்போம். - இவ்வாறு, நிதிஷ் குமார் கூறினார்.

அழிவுப் பாதையில் பா.ஜ., காங்கிரஸ் கருத்து: காங்., பொதுச்செய லாளர், ஜனார்த்தன் திவிவேதி கூறியதாவது:

நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக் கப்பட்டதை எதிர்த்து, அத்வானி, கட்சியின் அனைத்துப் பொறுப்பு களிலிருந்தும் விலகியுள் ளார். மோடிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது, எங்களை பொறுத்த வரை, பெரிய விஷய மல்ல. இது, அந்த கட்சி யின் உட்கட்சி விவகா ரம். அதேநேரத்தில், மோடிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதன் மூலம், பா.ஜ., அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என் பது, அத்வானியின் ராஜி னாமா மூலம், வெளிப் படையாக தெரிகிறது.

- இவ்வாறு, ஜனார்த் தன் திவிவேதி கூறினார்.

தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்., கட்சியின் செய்தி தொடர் பாளர், மகேஷ் டாப்சி கூறியதாவது: நரேந்திர மோடி, பா.ஜ., பிரச்சார குழு தலைவராக நியமிக்கப் பட்டதற்கு, அந்த கட் சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, அத்வானி ராஜினாமா மூலம், வெளிப்படை யாக தெரிகிறது. உட் கட்சி பூசலில் சிக்கியுள்ள பா.ஜ.,வால், அடுத்த மாநிலங்களவைத் தேர் தலில், கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. இவ்வாறு, மகேஷ் டாப்சி கூறினார்.

கேரள மாநில காங்., தலைவர், ரமேஷ் சென் னிதலா கூறியதவது: நரேந்திர மோடியை, பா.ஜ., பிரச்சார குழு தலைவராக நியமித்தது, நாட்டின், மதச் சார்பின் மைக்கு விடுக்கப்பட் டுள்ள அச்சுறுத்தல். நரேந்திர மோடியின் செயல்பாடுகள், ஜனநாய கத்துக்கு, மதச் சார்பின் மைக்கும், எதிரானவை யாகவே இருக்கும்.

அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும், கருத்து வேறுபாடு இருப் பது போல் தோற்ற மளித்தாலும், இரண்டு பேருமே, ஒரு நாணயத் தின் இரண்டு பக்கங் களை போன்றவர்கள் தான். நரேந்திர மோடி யால், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத் தலை சமாளிக்க, மதச் சார்பற்ற சக்திகள், ஓர ணியில் திரள வேண்டும். இவ்வாறு, ரமேஷ் சென் னிதலா கூறினார்.

சமாஜ்வாதி கட்சி யின் மூத்த தலைவரும், உ.பி., மாநில சட்டசபை விவகாரத் துறை அமைச் சருமான, ஆசம்கான் கூறுகையில், குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு கார ணமானவர், நரேந்திர மோடி. இப்படிப்பட்ட அவரை, பா.ஜ.,வின், பிரச்சார குழு தலைவ ராக நியமித்தது, எதிர்பா ராதது'' என்றார்.

திக்விஜய் சிங்

காங்., பொதுச்செய லாளர், திக்விஜய் சிங் கூறியதாவது:

நரேந்திர மோடி விவகாரதத்தில், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ் நாத்சிங் ஏமாந்து விட் டார். நரேந்திர மோடி, எப்போதுமே, தனக்கு உதவி செய்பவர்களுக்கு துரோகம் செய்யும் வழக் கம் உள்ளவர். இவர் விஷயத்தில், ராஜ்நாத் சிங் கவனமாக இருக்க வேண்டும்.

Seeni said...

nalla thakaval...

தமிழ் ஓவியா said...

மாலேகான் - மறு தீர்ப்பு!

மகாராட்டிரத்தில் மாலேகான் நகரத்தில் முசுலிம் அமைப்பான சிமி அலுவலகமுன் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இரு சக்கர மோட்டார் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பயங்கர செயலால் 7 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயமடைந்தனர்.

பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் _ அபிநவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முன்னாள் இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், இந்நாள் இராணுவ உளவுப் பிரிவு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். சிறீகாந்த் பிரசாத் புரோகித் (பார்ப்பனர்) சுயம்பு சங்கராச்சாரியார் தயானந்த் பாண்டே (பார்ப்பனர்) சிவ நாராயணன் கல்சன்கரா, ஷாம்சாகு, சமர்குல்கர்னி, அஜய ரசிர்கர், ராகேஷ் தாவ்டே, சுதாகர் சதுர்வேதி, ஜெகதீஷ் மார்த்ரே ஆகியோர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்தக் கும்பலுக்கும் _ பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் நடைபெற்ற குண்டு-வெடிப்பு-களுக்கும் தொடர்புண்டு என்றும் கண்டறியப்பட்டது.

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து வெளியில் எங்கும் கிடைக்காதது _ இராணு-வத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதாகும். இதில் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்கள்மூலம் இது கிடைத்திருக்கிறது. சிறுபான்மை-யினரைத் தீர்த்துக் கட்ட இராணுவ வெடிமருந்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் என்பவர் மகாராட்டிர மாநிலம் நாசிக் நகரில் இராணுவக் கல்லூரி ஒன்றையும் நடத்திக்கொண்டும் வருகிறார். இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவின் முப்படை-களிலும் ஊடுருவியுள்ளனர்.

இந்த இராணுவக் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலுக்கு வன்முறைப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது முதற்கொண்டு, எப்படிக் கையாள்வது என்பதுவரை இங்குப் பயிற்சி!.

இந்தியாவை இந்து மயமாக்கு _ இந்திய இராணுவத்தையும் இந்து மயமாக்கு! என்று இந்துத்துவா கும்பல் குரல் கொடுத்துவரும் பின்னணியையும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.

பாரதீய ஜனதா தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது இராணுவத்திலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்ட வகையில் திணிக்கப்பட்டனர். விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அப்பொழுதே இந்தக் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியதுண்டு.

ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர் என்றால், இதன் பின்னணி எவ்வளவு ஆழமானது _ பலமானது _ பயங்கரமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாமே!

மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திர-தாரியான இராணுவ அதிகாரி புரோகித் என்ற பார்ப்பனர் இசுரேல் நாட்டின் உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக இந்துத்துவா போட்டி அரசு ஒன்றை நிறுவுவதுவரை திட்ட-மிட்டி-ருந்தனர் என்றால், இவர்கள் எத்தகைய சதி-காரர்-கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்கள் கையாண்ட மடிக்கணினியில் இவையெல்லாம் பதிவாகி இருந்தன.

தமிழ் ஓவியா said...

இந்த சதிகாரர்கள்மீது 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தயார் செய்வதில் முதன்மை வகித்தவர் ஹேமந்த் கார்கரே என்ற காவல்துறை அதிகாரி ஆவார். ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கும்பலின் ஆணிவேர் வரை சென்று அலசி எடுத்து அறிக்-கையைத் தயாரித்த இந்த அதிகாரிதான் மும்பை தாஜ் ஓட்டல் தாக்கப்பட்ட கலவரத்தில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலே அவர்கள்கூட காவல்துறை அதிகாரி கார்கரே கொல்லப்பட்டதன் பின்-னணியில் சதியிருக்கிறது_ அது விசாரிக்கப்பட-வேண்டும் என்று சொன்னார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் 11 பேர்கள்மீதும் மோக்கா என்னும் மகாராட்டிர அமைப்பு ரீதியான குற்றத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இவர்கள்மீதான வழக்கு நாசிக் நீதிமன்றத்திலிருந்து மும்பை மோக்கா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஓர் அதிர்ச்சியான செய்தி _ மும்பை மோக்கா நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக இந்தப் பதினோரு பேர்கள்மீதான குற்றப் பத்திரிகையை நிராகரித்துவிட்டது.

இந்த அதிர்ச்சி மிகுந்த ஆணையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராட்டிர தீவிரவாத தடுப்புக் காவல்படை மேல்முறையீடு செய்தது.

மோக்கா சட்டத்தின்கீழ் மாலேகான் குண்டு-வெடிப்புக் குற்றவாளிகள் மீது அரசு எடுத்த நட-வடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கி _ சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியது.

சிறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாகச் சுற்றித் திரியும் இந்தக் கும்பல் மீண்டும் சிறைக் கொட்டடியில் தள்ளப்பட உள்ளனர்.

இந்துத்துவா காவிக் கும்பல் மிகப்பெரிய சதிப் பின்னணியோடு (வெளிநாட்டுச் சக்திகளுடன் கூடிய தொடர்-போடு) செயல்பட்டு வருகின்றன என்பது_ மாலே-கான் குண்டுவெடிப்பு மீதான விசாரணை வெளிச்-சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. இராணுவத்துறை, காவல்துறை, நீதித்துறை வரை ஊடுருவியுள்ள இந்தக் கும்பலை சட்ட ரீதியாக ஒரு பக்கத்திலும், பிரச்சார ரீதியாக சமூகத்தில் இன்னொரு பக்கத்திலும் ஒடுக்க-வேண்டியது மிகவும் அவசியமாகும். ------விடுதலை -22-7-2010

தமிழ் ஓவியா said...

மோகன் பகவத்தின் முனை முறியாப் பொய்கள்!

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தையும், இந்துக்களையும் தொடர்பு படுத்த முடியாது. பயங்கரவாதம் மற்றும் இந்துக்கள் என்ற சொற்கள் நேர் எதிரான முரண்பாடான பொருள் கொண்டவை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்த முடியாது. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு, குறிப்பிட்ட யாருக்கும் எதிரானதல்ல. எனவே, காவி பயங்கரவாதம் எனக் கூறுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடியவர் இவ்வாறு சொல்லியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இந்துத்துவா அமைப்பின் தலைவர் அவ்வாறு கூறவே கடமைப்பட்டவராகிறார்.

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்ல என்று அவர்கள் சொல்லவில்லையா? நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயும், கோபால் கோட்சேயின் மனைவியும் அதனைத் திடமாக மறுத்துள்ளனரே! இருந்தாலும் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன் அல்ல என்று மறுத்துத் தீரவேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு.

காந்தியாரைச் சுட்டுக் கொல்லுவதற்கு முன் நாதுராம் கோட்சே என்ன செய்தான்? தன்னை ஒரு முசுலிம் என்று திரித்துக் காட்டிக் கொள்வதற்காக சுன்னத் செய்து கொண்டிருக்கிறான் - தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இருக்கிறான். இப்படி கடைந்தெடுத்த பித்தலாட்டம் - மோசடியை இவர்களைத் தவிர வேறு யார்தான் செய்ய முடியும்?

பயங்கரவாதத்தையும், இந்துத்துவாவையும் தொடர்புபடுத்த முடியாதாம் - அப்படியானால், 1992 டிசம்பர் 6 அன்று 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், விசுவ இந்துபரிசத்தினரும், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலும் வன்முறை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கினார்களே - அதற்கு என்ன பெயராம்?

இவர்கள் எல்லாம் இந்துத்துவாவாதிகள் அல்லர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறப்போகிறாரா?

இவர்களின் இந்துத்துவா கதாநாயகனான இராமன், தவம் செய்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அதற்குப் பெயர் வன்முறை யல்லாமல் - நன்முறை என்று பட்டம் கட்டப் போகிறார் களா?

இந்து மதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் வாளாயுதம், வேலாயுதம், அம்பு, வெட்டரிவாள், கதை, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்கின்றனவே - இவை பலாத்காரத்தின் சின்னங்கள் அல்லவா - கொலை காரக் கருவிகள் அல்லவா!

சண்டை போடாத இந்து மதக் கடவுள்கள் உண்டா? கொலை செய்யாத சாமிகள் உண்டா?

தன் உற்றார் உறவினர்களைக் கொல்ல முயன்ற அர்ச்சுனனுக்கு அறிவுரை புகன்று அவர்களைக் கொல்லுமாறு போர்க்களத்தில் அறிவுரை புகன்றானே - அவர்களின் பகவான் கிருஷ்ணன் - அதற்கு என்ன பெயராம்!

யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால், அதைக் கொள்ளை யிடுவது தர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 7, சுலோகம் 24) என்கிறதே இந்து மத சாத்திரம் - இந்தக் கொள்ளையிடுவது என்பதன் பொருள் என்னவோ!

செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங் காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளை யிடலாம்!

(மனுதர்மம் அத்தியாயம் 11, சுலோகம் 13)

பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் என்ப தற்குத் தனி அகராதியை மோகன் பகவத்துகள் தயார் செய்து வைத்துள்ளார்களோ!

வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால், பிராம ணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்யவேண்டும்.

(மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 348)

மனுதர்மம் (வர்ணாசிரமம்) முறைப்படி ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை, அந்தத் தண்டத்தைக் கொண்டே -மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம்.

(மனுதர்மம் அத்தியாயம் 6, சுலோகம் 26)

இவை எல்லாம் பலாத்காரம், பயங்கரவாதம், வன்முறை என்ற பட்டியலில் வராது என்று வெளிப் படையாகச் சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்த முடியாது என்று சொல்லட்டும்!

வன்முறை நடவடிக்கைகளுக்காக மூன்று முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைக்க அடேயப்பா, இத்தனைப் பொய்புரட்டுப் பேச்சா? 20-10-2010

தமிழ் ஓவியா said...



அசோக் சிங்கால் பேட்டி

அசீமானந்தர், குஜராத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மதமாற்றத்தை அதிகம் தடுத்தவர். அவரை எப்படியாவது முடக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டது சோனியா அரசு. அதற்கு ஏற்ப கைது செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன் - என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படிக்கிற விவரம் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க முடியாத அளவுக்குத் திணறுவார்கள். இன்னொரு பழமொழியும் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.

பிடிச் சோற்றில் பூசனிக்காயை மறைக்கப் பார்க்கும் மோசடி இது என்பது எடுத்த எடுப்பிலேயே புரிந்துவிடும். அதுவும் காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டாம் - அப்படி அவர் நம்புகிறாராம்.
எந்த எல்லைக்கும் சென்று புளுகுவது, உண்மைகளை திரிப்பது என்பது இந்தத் திரிநூல் கூட்டத்துக்கு கைவந்த கலையாகும்.

அந்தப் பாணியிலேயே இந்த வி.எச்.பி. முதியவரும் மனம் போன போக்கில் பிதற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பிஜேபியினர், சங்பரிவார்க் கூட்டத்தினர்கூட ஜெயேந்திர சரஸ்வதியின் கைதுக்கு சோனியாதான் காரணம் என்று சொன்னதில்லை.

அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்ததுகூட கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்கள் வேறு எப்படிதான் சொல்வார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

அய்தராபாத் மக்கா மஸ்ஜித் 2007 மே 17ஆம் தேதி குண்டு வெடிப்புக்கு இலக்கானது. ஒன்பது பேர் பலியாகினர்.

தொடக்கத்தில் இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம், சிமி இயக்கத்தைச் சேர்ந்த முசுலிம் தீவிரவாதி கள்தான் என்று 70 பேர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

அதன்பிறகுதான் காவி தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணமானவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் ஒன்பது பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மிக முக்கியக் குற்றவாளியான சுனில்ஜோஷி, அப்ரூவராக மாறி விடுவாரோ என்ற சந்தேகத்தின் பெயரில் சங்பரிவார்க் கும்பலாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான அசீமானந்தர் என்ற சாமியார் வசமாக சிக்கிக் கொண்டார்.

இந்தியன் குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) 164ஆம் பிரிவின்கீழ் மாஜிஸ்டிரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்தச் சாமியார் உண்மைகளைக் கக்கிவிட்டார். இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்றும் அடையாளம் காட்டியுள்ளார்.

ஆனால் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறுகிறார் - அசீமானந்தர் ஒன்றுமே தெரியாத பாப்பா மாதிரி அவரிடம் தவறாக வாக்குமூலம் வாங்கி விட்ட தாகக் கரடி விடுகிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடித்த, மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்துத்துவா காவி தீவிரவாதிகள் இருக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் அந்துலேயே கூறிடவில்லையா?

“Who Killed Karkare?’’ என்னும் விரிவான நூலினை மகாராட்டிர மாநில காவல்துறை முன்னாள் தலைவர் முஷ்ரப் எழுதியுள்ளாரே, இதுவரை மறுப்பு உண்டா?

தன் உயிருக்குக் குறிவைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுடப்படுவதற்குமுன்புகூட தம்மிடம் கூறியதாக திக் விஜய்சிங் அடித்துச் சொல்லியுள்ளாரே! கார்கரேயின் மனைவிக்கும் அந்த சந்தேகம் இருந்து வருகிறதே!

அஜ்மீர் தர்கா, அய்தராபாத் மெக்கா மசூதி, மகாராட்டிர மாநில மாலேகான்குண்டு வெடிப்பு - இவை மூன்றுக்கும் காரணமானவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மத்தியப் பிரதேச மால்வா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அத்தனைப் பேரும் இந்துத்துவா காவிக் கும்பல்காரர்கள் என்பதற்கான தடயங்கள் (உரையாடல்கள் உள்பட) வலுவாகக் கிடைத் துள்ளனவே.

இவற்றிற்குப் பிறகும்கூட விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் காவிக் கும்பலின் கற்புக்கு உத்தரவாதம் கொடுப்பது சொல்லுபவர்களின் யோக்கிய தாம்சத்தின் முகத்திரையைத்தான் கிழித்துக் காட்டும்.

காந்தியாரைப் படுகொலை செய்தவன் இந்து அல்ல - முசுலிம்தான் என்று பிரச்சாரம் செய்த கும்பல் அல்லவா! நாதுராம்கோட்சே என்ற அந்தக் கொலைகார மராட்டிய பார்ப்பான் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருக்கவில்லையா?

அதே ரகத்தில்தான் சிங்கால் பேட்டி கொடுத்துள்ளார். இந்தப் பொய் முகங்களை மக்கள் அடையாளம் காண்பார்களாக! 1-2-2011

தமிழ் ஓவியா said...


கல்கி


கேள்வி: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்குப் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என்று அத்வானி கூறியி ருப்பதுபற்றி...

பதில்: சவுகானை எதற்குக் கொம்பு சீவி விடுகிறாரோ அத்வானி? ஏற்கெனவே நாடெங்கும் நரேந்திரமோடியின் திறமைகள், நிர்வாகத் திறன், செல்வாக்கு ஆகியவை பற்றி நல்ல அபிப்ராயம் உருவாகிக் கொண்டு வரும் வேளையில் இத்தகைய பேச்சு, குழப்பத்தையே ஏற்படுத்தும். மோடியின் சில செயல்பாடுகள் குறித்து அத்வானிக்கு ஆதங்கம் உண்டு. ஆனால் தேர்தல் நெருங்கும் வேளையில் அத்வானியின் தனிப்பட்ட கருத்து (நியாயமிருப்பினும்) கட்சியின் வெற்றிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடக் கூடாது. அளந்து பேசுவதே இன்றைய தேவை.

- கல்கி 16.6.2013 பக்கம் 14

பார்ப்பனர்களின் இந்தப் பார்வை சுட்டுப் போட்டாலும் நம் மக்களுக்கு வரவே வராது. எல்.கே. அத்வானி என்ன கைசூப்பும் பாப்பா குழந்தையா? எத்தனை ஆண்டு அரசி யலில் கொட்டை போட்டுப் பழம் தின்றிருப்பார்? அவருக்குப் போய் கல்கி அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

நரேந்திரமோடியின் திறமைகள், நிர்வாகத் திறன், செல்வாக்கு நாட் டில் கொடி கட்டிப் பறக் கிறதாம்!

பார்ப்பனர்களும், சங்பரிவார்க் கும்பலும் திட்டவட்டமான வகையில் நயவஞ்சகமாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருவதைக் கவனிக்க வேண்டும்.

மோடியின் திறமைகள் நிர்வாகத் திறன்களைப் பெரிது படுத்திக் காட்டி, வெளிச்சத்தை அதிகமாகக் காட்டி, வெகு மககளின் கண்களைக் கூசச் செய்து அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டைப் பையில் இருப் பதைத் திருடும் யுக்தியைக் கவனிக்கத் தவறக் கூடாது.

ஹிட்லர்கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஜெர்மனியில் கொடி கட்டிப் பறக்கவில்லையா? இடி அமீன் கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சி பரிபாலனம் செய்யவில்லையா?

எட்டு லட்சம் கம்யூனிஸ் டுகளைக் கொன்று குவித்த சுகார்தோகூட 30 ஆண்டுகள் ஆட்சிக் கட் டிலில் ஏறி அட்டகாசம் செய்யவில்லையா? இவர்கள் நம்பும் மகாபாரதத்தில்கூட தாயாதி களைக் காட்டுக்கு அனுப்பி விட்டு துரியோ தனன் 14 ஆண்டுகள் ஆட்சி புரியவில்லையா?

திறமையும் நிர்வாகமும் எதற்குப் பயன்படுகிறது? குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்ப் புட்டு என்று அறிஞர் அண்ணா சொன்னது தான் நினைவிற்கு வரு கிறது.

இரண்டாயிரம் சிறு பான்மை மக்களைப் படு கொலை செய்வதுதான் அவாளின் அகராதியில் நிர்வாகத் திறனோ!

பார்ப்பனர்களிடம் பாடம் பயிலுங்கள் தமிழர்களே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கோயில், திருடர்களின் குகை!


விபச்சார விடுதி கோயில் என்று காந்தியார் கூறியது ஒருபுறம் இருக்கட்டும் (தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 533) கோயிலை திருடர்களின் குகை என்று சொன்னவரின் வாயில் சர்க்கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் - பேரளம் பாதையில் திருநள்ளாறு என்னும் கோயில் ஒன்று இருக்கிறது.

சனி தோஷம் போக்குவதற்கு ஏராளமான பக்தர்கள் தமிழ்நாட்டி லிருந்து மட்டுமல்ல; இந்தியாவின் எல் லாப் பகுதிகளிலிருந்தும் வருவதுண்டு.

சனி என்றால் என்ன? அது ஒரு கிரகம் தானே அது எங்கே தொலை கிறது என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது; அப்படிக் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனம் - நாத்திகவாதம்.

இந்தக் கோயிலுக்குப் பணக்கார பக்தர்களைக் கூட்டி வர கோயில் புரோக்கர்கள் உண்டு.

பணக்காரர்களுக்குப் பணம் ஒரு பொருட்டா! போற கெதிக்கு நல்ல கெதி கிடைக்க வேண்டும்; பரலோகம் போக வேண்டும். என்றால் பணம் ஒரு அற்பம் தானே! இது போதாதா பார்ப்பனப் புரோக்கர்களுக்கு அந்த முட்டாள்தனத்தில் மஞ்சள் குளிக்கிறார்கள்.

வார இதழ் ஒன்றில் திருநள் ளாறுக்கு வரும் பக்தர்களின் பொருள்கள் திருடு போவதுபற்றி விலாவாரியாக வரிந்து தள்ளியுள்ளது. அது ஒன்றும் பகுத்தறிவு இதழும் அல்ல - திருநள்ளாறுக்கு வரும் பணக் காரப் பக்தர்கள் தங்கள் காருக்குள் பணம், நகை, டேப்ரிக்கார்டர் போன்ற பொருள்களை வைத்து விட்டு காரைப் பூட்டிவிட்டு, திருநள்ளாறு கோயிலில் உள்ள நளன் குளத்தில் குளிக்கச் செல்லும் போது காரை கள்ளச்சாவி போட்டுத் திறந்து பொருள்களைத் திருடிச் சென்று விடுகிறார்களாம்.

சனிக்கிழமைகளில் மட்டும் கிட்டத்தட்ட நூறு பவுன் திருடு போகிறதாம். சனி பகவானை தரிசித்து வரும் போது பொருள்கள் திருடு போவது குறித்துப் காவல் துறையினருக்குப் புகார் செய்வதுகூட ஒரு வகை குற்றம் - தோஷம் என்று கருதுகிறார்களாம் - இது போன்ற முட்டாள்தனம் இருக்கும் வரை திருடர்கள் பாடு கொண்டாட்டம் தானே

இது ஒருபுறம் இருக்க கோயில் அர்ச்சகர்கள் தங்களுக்கென்று தனி இணையதளம் (வெப்செட்) வைத்துக் கொண்டு தொழிலை ஜாம் ஜாமென்று நடத்துகிறார்களாம்.

கோயில் பூனைகள் என்று நாகர்கோயில் வழக்குரைஞர் சிதம் பரம் அவர்கள் நூல் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் வண்டி வண்டியாக அர்ச்சகப் பார்ப்பனர்களின் அயோக் கியத்தனமும், ஒழுக்கக் கேடும், திருட்டுத்தனமும் கொட்டிக் கிடக்கும்.

கோயில் சாமி திருட்டுகள், சாமி நகை திருட்டுகள் எல்லாம் அர்ச்சகர் பார்ப்பானின் தொடர்பு இல்லாமல் நடப்பதில்லை.

தமிழ்நாவலர் சரிதை எனும் ஒரு நூல் உண்டு. அதில் ஒரு தகவல்:

விஜய நகர மன்னர் ஆட்சிக் காலம், மன்னன் கிருஷ்ண தேவ ராயன், திருவாரூர் தியாகராசர் கோயிலில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளுள் இரண்டு சிலைகளை நாகராஜ நம்பி என்ற பார்ப்பான் திருடி விற்று விட்டான். இதை அரசனிடம் சொல்ல அமைச்சர்கள் பயந்தனர். ஒரு புலவர் கிளி ஒன்றுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்து, அதன் மூலம் மன்னனுக்குத் தெரியப்படுத்தினார். மன்னன் உண்மையை அறிந்து திருட்டுப் பார்ப்பானுக்குத் தண்டனை கொடுத்தான்.

அந்தப் பாடல் வருமாறு: முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார். அவரில் இந்நாள் இரண்டு பேர் ஏகினார் - கண்ணன்

நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகராஜநம்பி இருக்கின்றான் கிருட்டினராயா

என்பதுதான் அந்தப் பாடல்.

ஆக, கோயில் திருடர்களின் குகை என்பது மட்டும் உறுதியாகி விட்டது கிருட்டினராயன் காலத்துத் திருவாரூர் தியாகராசன் கோயில் முதல் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் வரை.
பக்தர்களின் பொருள்களைக்கூட காப்பாற்றிக் கொடுக்க முடியாத சனீஸ்வரன்தான் பக்தர்களின் தோஷத்தைப் போக்கப் போகிறானாம்!

வாயாலயா சிரிக்க முடியும்?

இந்தத் திருநள்ளாறு கோவி லுக்குத்தான் கருநாடக முதலமைச் சராக இருந்த எடியூரப்பா குட்டி யானையை தானமாக கொடுத்தார். இன்றைக்கு அவர் அரசியலில் கண்ட பலன் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும்.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்


தி.க., தி.மு.க., மற்றும் வர்த்தக அமைப்புகள் பங்கேற்றன

தூத்துக்குடி, ஜூன் 12- தமிழர்களின் நீண்ட நாள் கனவு திட்டமான, தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் நேற்று (11.6.2013) கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய, தமிழ்நாட்டிற்கு அன்னியச் செலாவணி வருவாயை ஈட்டித் தரக் கூடிய மாபெரும் திட் டம், தமிழகத்தினுடைய தொழில், வர்த்தகம் பெருகக் கூடிய அள விற்குப் பயன்படக் கூடிய திட்டம்.

கப்பல்களின் பயண தூரம், நேரம் பெரு மளவு குறையும் என்று சிலாகிக்கப்படுகின்ற திட்டம், தமிழகம் மற் றும் அண்டை மாநிலத் துறைமுகங்களின் சரக் குக் கையாளும் திறனை அதிகரிக்கும் என்கின்ற அளவிற்குப் பாராட்டப் படுகின்ற திட்டம்.

ராமேஸ்வரம் அல் லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகங்கள் உரு வாகும் என்றெல்லாம் கூறப்படுகின்ற திட்டம். கடல் சார் பொருள் வர்த் தகம் பெருகி மீனவர் களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உய ரும் என்று எல்லோரா லும் கூறப்படுகின்ற திட் டம் சேது சமுத்திர திட்டம்.
அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து நிறைவேற்றப் பட்ட திட்டமாக இது அமைந்து விடும் எனும் பொறாமை உணர்ச்சி காரணமாகவும், அரசி யல் காழ்ப்பணர்ச்சி காரணமாகவும் தான் நாட்டுக்கு நல்லது செய் யும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத் திற்குச் சென்று அந்தத் திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு காரணம் கற் பனை பாத்திரமான ராமன் பெயரை சொல்லி அது ராமர் கட்டிய பாலம் என்று சொல்கிறார்கள்.

கற்பனை பாத்திர மான ராமன் பெயரைச் சொல்லி இந்த நல்ல திட்டத்தை முடக்கு வதை கண்டித்தும், விரைவில் சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்றகோரி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சி கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் என தி.மு.க. தலைவர் கலைஞர் தனது 90ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2013) விழா சென்னை பொதுக் கூட்டத்தில் அறிவித்தி ருந்தார்.

தூத்துக்குடியில் கடையடைப்புப் போராட்டம்

இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தி.க., திமுக., உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் தொடர் போராட்டங்கள் மற்றும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள தி.க., திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூ.,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல் வேறு வர்த்தக அமைப் புகள் இணைந்து சேது கால்வாய் திட்டத்தை ஆதரித்து, தூத்துக் குடியில் புதிதாக சேது கால்வாய் திட்ட போராட்ட குழு துவக் கப்பட்டது.

இந்த குழு முடி வின்படி, சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று (11.6.2013) கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலை யம், போல்பேட்டை, குறிஞ்சிநகர், டபிள்யூ ஜி.சி. சாலை, பாளை சாலை, அண்ணா நகர், முத்தையாபுரம், நந்த கோபாலபுரம், எட்டை யபுரம் சாலை, ஸ்டேட் பாங்க் காலனி உள் ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. ஒரு சில ஆட்டோ நிறுத்தங் களில் ஆட்டோக்கள் ஓடவில்லை.

அடைக்கப்பட்டிருந்த கடைகளை திறக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், காவல் துறையினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கடைகளைத் திறக்கு மாறு உத்தரவிட்டனர். இருப்பினும், அதை மீறியும் பல இடங்களில் கடைகள் அடைக் கப்பட்டன. சில இடங் களில் காவல்துறையினர் மற்றும் ஆளுங் கட்சியின் மிரட்டலால் 11 மணிக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட் டன. கடையடைப்பு போராட்டத்தையொட்டி, தூத்துக்குடியில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நற்செய்தி!


நீரிழிவு - சர்க்கரை நோயாளி களுக்கு மிக நல்ல செய்தி, நாளேடு களில் வந்துள்ளது.

இன்சுலின் என்பது நமது உடலின் கணையத்தில் சுரக்காததினால்தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக, நீரிழிவு Diabetes நோயாக மாறி - பிறகு நாளடைவில் அதுவே உயிர்க் கொல்லியாகவும் மாறி விடுகின்றது!

இன்சூலினும், குளுக்கோனும் கணையத்தில் உற்பத்தியாகின்றன.

இன்சுலினை பீட்டா செல்களும், குளுகோனை ஆஃல்பா செல்களும் உற்பத்தி செய்கின்றன.

கணையம் பாதிக்கப்பட்டாலும் அல்லது கணையத்தின் சுரக்கும் தன்மை குறைந்தாலும் சர்க்கரை நோய் ஒருவரைத் தாக்கக் கூடும்!

அடிப்படையில் நாம் சாப்பிடும் உணவு சர்க்கரையாக மாறி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை தான் மனிதர்களுக்கு சக்தியை (Energy) அளிக்கிறது!

எஞ்சியுள்ள சர்க்கரை உடலில் தங்கு கிறது. இந்த எஞ்சிய சர்க்கரையைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் ஹார்மோன் குளுகோன் என்ற இரண்டு சுரப்பிகள் பணியாற்றுகின்றன.

இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஹோவோர்கா கடந்த 5ஙூ ஆண்டுக ளாக முயற்சி செய்து வந்தார். தற்போது அவரது ஆராய்ச்சி வெற்றியடைந் துள்ளது!

அவர் ஒரு செயற்கை கணையத்தை உருவாக்கியிருக்கிறார்.

செயற்கை கணையத்தை முதலில் இரவு நேரங்களில் நான்கு நோயாளி களுக்குப் பொருத்திப் பார்த்தார்கள்; அது வெற்றிகரமாக, சர்க்கரையைக் கட்டுப்படுத்தி இயங்கியது கண்டு மெத்த மகிழ்ச்சியுற்றனர்.

அதனை மேலும் 24 பேர்களுக்கு செயற்கை கணையத்தைப் பொருத்தி யுள்ளனர்!

அதுவும் வெற்றிகரமாகி விட்டால் - பெரிதும் நீரிழிவு நோய் இல்லாமலேயே ஆகிவிடும் என்று நம்புகிறார்கள்!

இது மிகப் பெரிய மருத்துவ சாதனையாகக் கருதப்படக் கூடும்.

ஏனெனில் சர்க்கரை நோயின் கொடுமை ஒன்று இரண்டல்ல; பல வகைப்பட்டது.

எனவேதான் இதனை ஒரு சந்திப்பு நோய் Diabetes is a Junction disease) என்று சர்க்கரை நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுமேயானால், அது (Stroke) ஸ்ட்ரோக் - பக்கவாதம், கண்பார்வை இழத்தல், சிறுநீரகப் பழுது, இதய நோயான மாரடைப்பு இவை மூலம் அது உயிரைப் பறிக்கும் நோயாக ஆகி விடுகிறதே!

மருத்துவ விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் எவ்வளவு அதியற்புத சாதனைகளை அனுதினமும் படைத்து வருகின்றனவே!

நீரிழிவு நோய், புற்று நோய் - இந்த இரண்டுக்கும் வெற்றிகரமான மருந்து களும், சிகிச்சைகளும் மருத்துவத் துறையில் வந்து விட்டால், உலக மனித குலம் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு நல் வாழ்வு வாழுமே!

நண்பர்களே, இந்தக் கண்டு பிடிப்புகள் வந்து விட்டன என்பதால், சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விடாதீர்கள்!

எப்போதும் அளவோடு உண்டு

நலமோடு வாழுங்கள் -

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, இலையில் - தட்டை - விட்டுவிட்டு எழுந்து கை அலம்பி மகிழுங்கள்.

அதுவே நல்ல ஆரோக்கிய முறையாகும். veramani

தமிழ் ஓவியா said...


அரசியல் வாழ்வு


நமது அரசியல் வாழ்வு என் பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திர வதைக்கு ஆளாகத்தான் நேரிடும். - (விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


ஆடு - ஆடு!


2011 சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னார்.

பிள்ளைகளைப் பள் ளிக்கு அனுப்ப வேண்டும் ஆடு மாடுகள் மேய்த்த நம் வீட்டுப் பிள்ளைகளை மறுபடியும் ஆடு மாடுகளை மேய்க்க வைக்க ஏற்பாடா? என்ற வினாவையும் தொடுத்தார்.

அது ஏதோ அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சொல்லப்பட்டது அல்ல.

கழிந்த தலைமுறை எப்படியோ போய்த் தொலையட்டும் - நிகழ்கால வருங்கால பஞ்சம - சூத்திரத் தலைமுறைகள் கல்விக்கண் பெறவேண்டாமா? என்ற அக்கறையில் - தந்தை பெரியார் பார்வை யில் சொல்லப்பட்ட கருத்து அது.

தமிழர் தலைவர் தொலைநோக்கோடு சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. அதுவும் அதிமுக ஆட்சிக்கு அரணாக இருக்கும் தினமலர் ஏட்டிலேயே இன்று வெளிவந்த தகவல் அது.

குழந்தைத் தொழிலாளர் தினம் பற்றிய கருத் தரங்கு திருப்பூர் பள்ளியில் நடைபெற்றது.

அந்தக் கருத்தரங்கத் தில் அனுப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்த அந்தத் தகவல் முக்கியமானது.

நான் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில், என் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

ஒரு குடும்பத்தில், கணவன், மனைவி இரு வரும் வேலைக்குச் செல்லுவதால் வேறு வழியில்லாமல் அவர்களுடைய மகனை 5ஆம் வகுப்பிலி ருந்து நிறுத்திவிட்டு, ஆடு மேய்க்கச் சொல்லி விட்டனர்.

அவனும் பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்க்கத் துவங்கினான். அம்மா திட்டத்தால் ஒருவனுக்குப் படிப்புப் பாழாக வேண்டுமா? என எனக்குக் கவலை வாட்டியது. தொடர்ந்து 20 நாட்கள் நடையாய் நடந்து அறி வுறுத்தியும், அவர்கள் கேட்கவில்லை. வேறு வழி யில்லாமல், பள்ளிக்குச் செல்லாவிட்டால், நான்கு ஆடுகளையும், அரசு திரும்பி வாங்கிக் கொள்ளும்? என்று கூறி, மீண் டும் மாணவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது (தினமலர் 14.6.2013 பக்கம் 8).

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுதர்மம். இதனை வேறு வழியில் செய்ததால் தான் தமிழர் தலைவர் அன்று எச்சரித்தார். இதோ இப் பொழுது நம் முன்னே! இன்னும் வெளிச்சத்துக்கு வராத எத்தனை அனுப் பட்டிகளோ!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இதுதான் மதத்தின் குணமா? நாத்திகச் சிறுவனைக் கொன்ற கொடூரம்


இஸ்லாமிய போராளிகள் 15 வயது சிறுவனை நாத்திகன் என்ற காரணத் தால் முகத்தில் சுட்டுக் கொன்று விட்டனர். அலெப்போ நகரில் ஒரு இஸ்லாமியக் குழு முகமது வாட்டா என்ற 15 வயது சிறுவனைக் கடத்திக் கொண்டு போய், முகத்திலும் கழுத் திலும் சுட்டுக் கொன்று விட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் காஃபி விற்பவன்.

சமீபத்தில் அந்தப் படம் வெளி யிடப்பட்டுள்ளது. அதில், இரத்தம் ஒழுகும் வாயுடனும், கன்னங்கள் தகர்த்தெறியப்பட்டு, கழுத்தில் துப் பாக்கி குண்டு காயங்களுடனும் அந்தச் சிறுவன் காணப்பட்டான். மனித உரிமைக்களைக் கண்காணிக் கும் ஒரு பிரிட்டிஷ் அமைப்பு அந்த சிறுவன் யாருடனோ கடவுள் இருக் கிறாரா என்று வாதத்தில் ஈடுபட்டு இருந்தான். அப்பொழுது முகமது நபியே திரும்பி வந்தால்கூட, நான் கடவுள் நம்பிக்கையுடையவனாக மாற மாட்டேன் என்று அவன் கூறியதை சிலர் கேட்டுள்ளனர்.

ஆனால் வேறு சிலர், அவன் சொன்னது சரியாகக் கேட்கப்பட வில்லை. அந்தப் பையன் ஒரு வாடிக்கையாளரிடம் இலவச காஃபி கேட்டதற்கு முகமது நபியே திரும்ப வந்தாலும் கூட நான் உனக்கு இலவச காஃபி கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். இதுபற்றி, பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

அல்கொய்தா இயக்கம் அந்தப் பையனைக் கடத்திக் கொண்டு போய் 24 மணி நேரம் சித்திரவதை செய்து உள்ளது. பிறகு, பொது மக்கள் கூடியுள்ள வீதியின் மத்தியில் அவன் இழுத்து வரப்பட்டு அவன் தாயின் கண்ணெதிரே கொல்லப்பட்டான். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அக்கொடுஞ் செயலைப் புரிந்தவர்கள் சிரியர்களாகத் தோன்றவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், உணவைத் தேடி அலைந்த இரண்டு 10,16 வயதுப் பையன்கள் தாலிபான்களால் வெட்டிக் கொல் லப்பட்டனர்.

அபுசக்கார் என்ற சிரிய போராளித் தலைவர் ஒரு ராணுவ வீரரின் இதயம் துண்டாக்கப்பட்டு உண்பதை வீடியோ படம் பிடித்துள்ளார். இந்த அபுசாக கரின் இதயத்தை உண்ணும் வீடியோ படம் அயல் நாட்டு அலுவலகத்திட மிருந்து பெறப்பட்டுள்ளது.

நாத்திகம் பேசியதற்காக சிறுவன் கொல்லப்பட்டதைப்பற்றி பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு மேலும் விளக் கமாக தகவல் கொடுத்துள்ளது. அதன்படி,

அந்தப் பையனைச் சுற்றி கூட்டம் கூடிற்று. போர் அணியைச் சேர்ந்த ஒருவன் அலெப்போ நகரத்து இரக்க முள்ள குடி மக்களே, கடவுளை நம்பாததும் பல கடவுட் கொள்கை பற்றிப் பேசுவதும் - முகமது நபியைக் குற்றம் சாட்டு தலாகும், யார் அவ்விதம் நபியைக் குறை சொல் கிறார்களோ, அவர்கள் இவ்விதம் தண்டிக்கப்படுவார்கள் பிறகு அவன் இரண்டு குண்டு களை, பொது மக்கள், சிறுவனின் தாய் தந்தையர் கண் முன்னிலையிலேயே தானியங்கி துப்பாக்கியிலிருந்து சுட்டான். பின் ஒரு காரில் ஏறிக் கொண்டு போய் விட்டான்.

ராமி அப்துல் ரகுமான் என்பவர், பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு இந்தக் குற்றங்களைப் புறக்கணிக்க முடியாது. கண்டிக்காவிட்டால் இது புரட்சியின் எதிரிகளுக்கும், மனிதா பிமான எதிரிகளுக்கும் வசதியாகப் போய் விடும் என்று சொன்னார்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கடவுள் தூங்கினால்..

செய்தி: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளிமஞ்சம் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் அளிப்பு.

சிந்தனை: மஞ்சத்தில் படுத்துக் கடவுள் தூங்குவதும் உண்டோ? அப்படி தூங்கும் நேரத்தில் இந்த லோகத்தை வேறு யார் காப்பாற்றுவார்களாம்?

தமிழ் ஓவியா said...


பெருமை



மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வது தான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வது தான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

தமிழ் ஓவியா said...


டேப்லெட் கணினிகள் நல்லதா, கெட்டதா?


டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.

இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக் கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந் தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.

எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அவை எதிர்மறை யாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.

கற்றலை பாதிக்கின்றன

ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.

தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக் கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.

இவரது ஆய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்.

அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னால் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.

இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.

இரு ஆலோசனைகள்

இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.

முதலாவது, சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை.அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடு திரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.

இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்து கிறார்கள்.