Search This Blog

27.6.13

மாங்கனித் திருவிழா! பக்தி வந்தால் புத்திதான் போய் விடுமே!

காரைக்கால் வீதிகளில் எங்கு பார்த்தாலும்  மாம்பழங்கள் சிதறிக் கிடக்கின்றன. பக்தர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது.

என்ன காரணமாம்! ஏதோ மாங்கனித் திருவிழாவாம்! அதற்காக உணவுக்குத் தேவைப் படும் ஒரு பொருள் மிதிபட்டு இப்படி வீணாய்க் கிடக்க வேண்டுமா?
பகுத்தறிவும், மனிதாபிமானமும் கொண்ட வர்கள் இப்படித்தான் கேள்வி எழுப்புவார்கள்.

ஆனால் வைதீகர்கள் இதற்கு வேறு காரணங்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வீணாக்கப்படும் மாங்கனிக்காகக்கூட வீண் பேச்சு - வெட்டிப் பேச்சு சமாச்சாரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்களே!

சரி.. சரி.. அந்தக் கதைக்குள்தான் போய்ப் பார்ப்போமே!

காரைக்காலில் தனதத்தன் தனதத்தன் என்ற ஒருவர் இருந்தார் - அவருடைய மனைவியின் பெயர் தர்மவதி. அவர்களுக்கு ஒரே ஒரு மகள் பெயர் புனிதவதி.
புனிதவதிக்கும் வியாபாரியான பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் முடிக்கப்பட்டது.

திருமணம் ஆனாலும்கூட, அளவு கடந்த சிவன் மீதான பக்தி மட்டும் குறையவில்லை; பொங்கி வழிந்து கொண்டு இருந்ததாம்.

பரமதத்தன் இரண்டு மாம்பழங்களை ஒருவர் மூலம் தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நேரத்தில் பிச்சைக்கார சிவனடியார் அங்கு வந்தார்; அவனுக்குப் புனிதவதி அன்னம் பரிமாறினாள் - அத்தோடு இரண்டு மாம்பழங் களில் ஒரு மாம்பழத்தையும் அந்தச் சிவனடி யார்க்கு அளித்து மகிழ்ந்தார்.

சிறிது நேரம் கழித்து கணவனான பரமதத்தன் வீட்டுக்கு வந்தான். உணவு பரிமாறினாள்; மீதியிருந்தஒரு மாம்பழத்தை தன் கணவனுக்குப் பிரியமுடன் அளித்தாள் புனிதவதி.

மாம்பழம் நன்கு ருசியாக இருக்கவே, இன்னொரு மாம்பழத்தையும் கொண்டு வரும்படிக் கேட்டான்.

கணவனிடம் இல்லை என்று சொல்ல மனம் வராத பாரியாள், 

சமையலறைக்கு சென்று கண்களை மூடிக் கொண்டு சிவனைப் பிரார்த்தித் தாள்.

என்ன ஆச்சரியம்! சாயிபாபா கையசைப்பில் ஏதோ வரும் என்று சொல்லுவார்களே, அதே போல ஒரு மாம்பழம் அவள் கையில் டக்கென்று வந்தது.

அதைத் தம் கணவரிடம் கொடுத்தாள். முதலில் தந்த மாம்பழத்தை விட இது மேலும் இனிப்பாக இருந்ததால் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதுபற்றிக் கேட்டபோது நடந்ததைச் சொன்னாள் மனைவி.

அப்படியென்றால் இன்னொரு மாம்பழத்தை வரவழைத்துக் கொடு பார்க்கலாம் என்று தன் மனைவியைச் சோதனை செய்து பார்த்தான் கணவன்.
சிவனை அவள் பிரார்த்தனை செய்ய, திடீர் என்று ஒரு மாம்பழம் வந்து திடீரென்று மறைந்தும் விட்டதாம்.

தன் மனைவி தெய்வ சக்தியுடையவள் என்று அறிந்து, வீட்டைத் துறந்து வியாபார நிமித்தமாக வெளியூர் சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். கணவனைத் தேடிச் சென்றாள் புனிதவதி. அங்கு தன் கணவனும், அவனது மனைவியும் குழந்தையுடன் முன்னாள் மனைவி புனிதவதியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

தன் கணவனுக்குப் பயன்படாத தனது அழகும், உடலும் உருக்குலைந்து போகட்டும் என்று சிவனை வேண்டினாள் புனிதவதி. சதை உருக்குலைந்து எலும்பாகி முதியவள் ஆனாள் புனிதவதி.

இறைவனைத் தரிசிக்க கயிலாயம் சென்ற போது கண்ணில் கண்ட கற்கள் எல்லாம் அவருக்குச் சிவலிங்கமாகத் தெரிந்ததாம். அதனால் காலை ஊன்றாமல் தலையாலேயே நடந்து சென்றாளாம்.

அப்பொழுதுதான் அம்மையே! என்று சிவன் விளித்து அழைத்துக் கொண்டார்.

அவர் காரைக்காலைச் சேர்ந்தவர் ஆதலால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப் படுகிறார். அங்கு அவளுக்கென்று ஒரு கோயில் இருக்கிறது. அங்குதான் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பவுர்ணமியில் மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது காரைக்கால் அம்மையாரிடம் மாங்கனி வாங்க சிவன் வீதி உலா வரும்போது ஒவ்வொரு வீட்டின் மாடியில் இருந்தும் மாம்பழங்களை எடுத்து வீசுவார்கள். அவற்றைப் பக்தர்கள் முண்டியடித்து பெற்றுக் கொண்டால், அது நற்பேறு!

இப்படியாக ஒரு தலப் புராணத்தை வழக்கம்போல கட்டி விட்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தெருப் புழுதி திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.
துளியோண்டு அறிவைச் செலுத்தினால் கூட சில உண்மைகள் பளிச் சென்று புரியும்.

தன் கணவன் வீட்டுக்கு வந்தபோதோ அல்லது இன்னொரு மாம்பழத்தைக் கேட்ட போதோ உண்மையைப் புனிதவதி ஏன் மறைக்க வேண்டும்? (அதில் ஏதோ குற்றம் இருக்கிறது அல்லவா!)

பிரார்த்தனை செய்து இன்னொரு மாம் பழத்தை புனிதவதி வரவழைத்தது போல, இப்பொழுது எந்த ஒரு தெய்வ பக்தி நிறைந்த ஒரு பெண்ணின் மூலம் வரவழைத்துக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். (அப்படியென்றால் உண்மையான சிவபக்தி உள்ள ஒரே ஒருவர்கூட நாட்டில் கிடையாதா? வெறும் வெளி வேஷம் தானா?)

ஒரு அற்புதத்தைக் கூறுவதன் மூலம்தான் இதுபோல தெய்வ சக்திகளை இன்னொருவர்மீது திணிக்க முடியும்.

கயிலாயம் செல்லும்போது  கண்ணில் பட்ட கற்கள் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது என்று சொல்லப்படுகிறதே - அப்படியென்றால் அந்தப் பெண் கண்டிப்பாக மனநிலை (மூளை) பாதிக்கப் பட்டவராகத் தானிருந்திருக்க வேண்டும்.

காலால் நடக்கக் கூடாது- அப்படி நடந்தால் கல்லாகிய சிவலிங்கங்களை மிதிக்கும்படி நேரும் என்பதற்காக ஒரு பெண்ணானவள் தலையால் நடந்தாள் என்றால் அது எவ்வளவு பெரிய அருவருப்பு - ஆபாசம்! அந்தக் காலத்திலேயே பைஜாமா கண்டுபிடித்து விட்டார்களா என்ற கேள்வி எழாதா?

(புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஒருவர் இந்தப் பகுத்தறிவுக் கேள்வியை எழுப்பிய தற்காக - பதில் சொல்ல முடியாதவர்கள் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயன்று தோல்வி கண்டனர்).

இந்த முட்டாள்தனமான புராணப் பொய்க் கதைக்காக ஒவ்வொரு வருடமும் மாங்கனித் திருவிழா என்று கூறி, மாம்பழங்களை வாரி இறைக்கிறார்கள் என்றால் இது முட்டாள்தனம் மட்டுமல்ல - மக்களுக்கான உணவுப் பொருளை நாசப்படுத்தும் - கிரிமினல் குற்றம் அல்லாமல் வேறு என்னவாம்?

பக்தி வந்தால் புத்திதான் போய் விடுமே!

எங்கே சுற்றினாலும் கடைசியில் ஈரோட்டுப் பாதையின் கேள்விக் கண்ணி வெடியில்தான் சிக்க வேண்டும்.
                  --------------------------------"விடுதலை” 27-6-2013

42 comments:

தமிழ் ஓவியா said...


வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


மன்றல்


சென்னை பெரியார் திட லில் சுயமரியாதைத் திரு மண நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதில் புதுத் திருப்பம் தந்தார். அதுதான் மக்களைத் தேடிச் செல்லும் மன்றல் நிகழ்ச்சி! மன்றல் நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மய்யங்களில் நடைபெற்றுள் ளன. அடுத்து பல முக்கிய மய்யங்களில் நடத்திடத் திட்டம் கைவசம் உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தவர்கள், மணவிலக்குப் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் இவர் களிடையே இணை தேடும் சிறப்பு நிகழ்ச்சி இது.

ஆயிரக்கணக்கில் மண மக்களும், பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், இவற்றில் ஆர்வமுடைய இலட்சியவாதிகளும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

வாழ்க்கை இணை நலத் துக்குரிய ஆண்கள், பெண் கள் அறிமுகப்படுத்தப்படு கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிவிக் கப்படுகின்றன.

அறிமுகத்துக்குப் பிறகு கலந்துகொண்டவர்களுக் கிடையே கலந்துரையாடும் பரிவர்த்தனைகள் நடக்கின் றன.

மாலை நிறைவு விழாவி லேயே சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

தத்தம் ஊர்களுக்குச் சென்ற பிறகு தொலைப்பேசி மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவது மன்றல் நிகழ்ச்சி சாதனைத் தோட் டத்தில் பூக்கும் புதுமலராகும்.

இன்று காலை சென்னை பெரியார் திடலில் ஒரு திடீர்த் திருமணம். கோவை மன்றல் நிகழ்ச்சியில் கலந்துகொண் டவர்கள் அவர்கள்.

மணமகன் கோவை மாவட்டம் வேடபட்டி சாலை - தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த திருவாளர்கள் முத் துக்கிருஷ்ணன் - மரகதம் ஆகியோரின் மகன் சிவ சத்திய மூர்த்தி.

மணமகள் புதுக் கோட்டை மாவட்டம் உசி லங்குளம் - திருவாளர்கள் நாகராசன் - இந்திராணி ஆகியோரின் மகள் ரேவதி - இவர் பிறவியிலேயே வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளி!

இவர்களுக்குத் திரா விடர் கழகத் துணைத் தலை வர் கலி.பூங்குன்றன் வாழ்க்கை இணை நல ஒப் பந்தத்தை நடத்தி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் மானமிகு கோவிந்தராசன் மணமக் களைப் பாராட்டி ரூ.500 நன்கொடை நல்கினார். பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் மணமக்க ளுக்கு வாழ்த்துக் கூறினார். மாநில மாணவரணி செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - முன்னமே விதிப்பலனால், பிராப்தப்படி ஜாதகப் பொருத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற மூடக் கருத்தின் முதுகைப் பிளக்க வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணகர்த்தா என்ற முறையில் தந்தை பெரியார்- கொள்கைகளை செயல்படுத்தி வருவதில் திராவிடர் கழகம் - இவற்றிற்கு இணையாகப் புரட்சி பற்றி வாய் திறக்க, மார்பு தட்ட வேறு யாரால், எந்த அமைப்பால் முடியும்?

திருமண நிலைய இயக் குநர் மானமிகு திருமகள் இறையன் அவர்களின் பணி சிறப்பானது - பயன்படுத்திக் கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கடவுள் - மதம் - பக்தியின் ஒழுக்கம் பாரீர்!
வெள்ளத்தால் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பக்தர்களின் பணமும், நகையும் கொள்ளையோ, கொள்ளை!
பலியான பக்தர்களின் உடல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்த கொடுமை!

புதுடில்லி, ஜூன் 26- கேதார்நாத் வெள்ளக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பக்தர்களிடமிருந்து உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடலில் இருந்து உறுப்புகளை வெட்டி நகைகள் களவாடப்பட்டுள்ளன; பக்தியின் ஒழுக்கம் இதுதான்!

கேதார்நாத் மழைவெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர் களிடம் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டுள்ளன.

வரலாறு காணாத மழைவெள்ளத்தினால், உத்தர காண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்தலமான கேதார்நாத் மிகவும் அதிக அளவுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர்.

சாமியார்கள் கொள்ளை!

அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார்நாத்தில் உயிரிழந்தவர்களிடமும், உயிருக்குப் போராடிய பக்தர்களிடமும் சாமியார்கள் சிலர் கொள்ளை யடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் சுமக்க முடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்தப் பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என்று அவர்கள் கூறியதால் மீட்புப் படையினருக் குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டபோது, அந்தப் பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகளும் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மீட்பு!

உடனடியாக அந்தக் கொள்ளையர்களை பிடித்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டன. அவர்களில் ஒருவன் வைத்திருந்த டோலக் கில் (டிரம்) ரூ.62 ஆயிரம் இருந்தது. மற்றொருவன் வைத்திருந்த பிரசாதப் பொட்டலத்தில் ரூ.10 ஆயிரமும், இன்னொருவனின் ஆடைகளுக்குள் ரூ.1.2 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக வரிசையில் காத்து நின்ற சில கயவர்களிடம், பயன்படுத்தப் படாத புத்தம் புது கரன்சி நோட்டுகள் தொடர் நம்பர் வரிசையுடன் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவை கேதார்நாத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விரல்களை வெட்டி நகைகளை எடுத்துள்ளனர்

குப்தகாசியில் நேற்று ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் பெண் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நகைகள் கைப்பற்றப்பட்டன. வெள்ளத்தில் பலி யான பக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. சில உடல்களின் கை விரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உண்டியல் உடைப்பு!

கேதார்நாத்தில் உள்ள பிரதான கோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதே நேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டி யல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


நோக்கம்

சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும்.

(விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திக்கட்டும்!


தனது கட்சிக்காரரான நரேந்திர மோடியைத் தூக்கி நிறுத்துவதற்கும், பிரதமருக்கான வேட்பாளராக அறி விக்கப்பட உள்ள மோடி மீது விழுந்துள்ள அழிக்கப்படவே முடியாத பாசிச - இந்துத்துவா வெறி என்னும் கறையைக் கழுவுவதற்கும் வேறு வழியே இல்லாத நிலையில்தான் குஜராத் கலவரங்களை மறந்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்.

முசுலிம்களை மறந்துவிடுமாறு சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுவிலங்காண்டித்தனமான இந்து வெறிக் கண் ணோட்டத்தோடு திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் படுகொலையை வரலாறு எப்படி மறக்கும்?

இந்தியாவைத் தாண்டி இந்துத்துவாவாதிகளின் இந்தப் பாசிசம் உலக நாடுகளில் கேவலமான நாற்றமாக மூக்கைத் துளைத்துக் கொண்டு இருக்கிறதே!

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடியை எங்கள் நாட்டுக்குள் நுழையாதே என்று குரல் கொடுக்கின்றனவே. ஏன், இந்தியாவில்கூட டில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் மோடியே திரும்பிப் போ! என்று முழக்கமிடவில்லையா?

உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மதச்சார்பற்ற இந்தியா இனி பிழைக்குமா? (Will Secular India Survive?) என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனரே! 4,400 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.800.

இந்தியாவிலும், இராமச்சந்திரகுகா போன்ற சிந்தனையாளர்களும், பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்பது பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்குகளுக்குத் தெரியாதா?

பிரபல சமூகநல ஆர்வலர் அருந்ததிராயின் கருத்து என்ன?

குஜராத்தில் முஸ்லிம்கள்மீதான இனப் படுகொலை என்பது மத வெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனேயே நடந்ததாகும். ஏனெனில், அதற்குமுன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்தார்.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஓர் அங்கம்தானா? இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத்துக்கும் பொருந்துமா? என்ற வினாவை அருந்ததிராய் எழுப் பிடவில்லையா?

ஊடகங்கள் என்னதான் இந்துத்துவாவைத் தூக்கி நிறுத்தினாலும், மோடிக்கு முகமன் பாடினாலும், சில நேரங்களில் தங்களையும் அறியாமல் வேறு வழியின்றி உண்மைகளைக் கக்கியதுண்டு.

எடுத்துக்காட்டாக, இந்தியா டுடே (10.4.2002) எழுதியது இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

குஜராத் கலவரங்களில் 12 லட்சம் பேர் ஈடுபட்டார்கள். சகிப்புத் தன்மை என்ற வார்த்தை இந்திய அகராதியிலிருந்து மறைந்துவிட்டது. மிரண்டு போயிருக்கும் சிறுபான் மையினருக்கு எதிராகப் பெரும்பான்மையினர் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். புதிய இந்தியனை உருவாக்கும் கனவு தரையில் சிதறிக் கிடக்கிறது. மதச்சார்பின்மை தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று எழுதியதே இந்தியா டுடே!

மற்றவர்கள் எழுதுவது, சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; சங் பரிவாரம் உச்ச இடத்தில் தூக்கி வைத்து மரியாதை கொடுக்கும் ஜென்டில்மேனான - அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார்?

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து எந்த முகத் துடன் வெளிநாடுகளுக்குச் செல்வேன்? என்று புலம்பவில்லையா?

2009 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குக் காரணம் குஜராத் கலவரம்தான் என்று அன்றைய துணைப் பிரதமர் அத்வானியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லையா?

இதற்கெல்லாம் சமாதானம் கூறிவிட்டல்லவா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் முசுலிம்களுக்கு வேண்டுகோள் வைக்க முன்வரவேண்டும்?

கடைசியாக அவர்கள் தரப்பில் சொல்லுவது - குஜராத் கலவரத்துக்குப் பிறகுதான் மோடி இரண்டு முறை வெற்றி பெற்றார் என்பதாகும்.

கடந்த தேர்தலின் நிலை என்ன? அதற்கு முந்தைய மாநிலத் தேர்தலைவிட இரண்டு இடங்கள் குறை வாகத்தான் கிடைத்தன என்பதோடு, மோடி அமைச் சரவையில் இடம்பெற்றிருந்த ஏழு முக்கிய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியதையெல்லாம் சாமர்த்தியமாக மறைப்பது ஏன்? ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திப்பது நல்லது! மக்கள் ஏமாளிகள் அல்லர்!

தமிழ் ஓவியா said...


மோடிபற்றிய விடுதலை தலையங்கங்களை நூலாக வெளியிடுக!


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து, ஒன்று சொன்னவாறு ஊட கங்கள் பேசிவருகின்றன. வளர்ந்து விட்ட தகவல் தொடர்பு சாதனங்களில் எந்த ஒன்றையும் மறைக்க முடியாது என்ற போதிலும், மோடியின் தவறுகள் மட்டும் வெளியாவதில்லை அல்லது வலுவாகச் சொல்லப்படுவதில்லை.

இந்நிலையில் மோடிக்குப் பாரதீய ஜனதாவில் உயர் பொறுப்புக் கொடுத்த நிலையில், விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், அவரின் மொத்த உருவத்தின் தீயவை அனைத்தையும் உரித்துப் போடுவதாய் இருந்தது.

இடம், தேதி, ஆதாரம் ரீதியாக எழுதுவது நம் இயக்கத்தின் தலையாய தனித்தன்மை. ஆகவே, தொடர் தலை யங்கம் மற்றும் மேலும் பல செய்திகளை இணைத்து சிறு வெளியீடாக வெளி யிட்டால், எதிர்வரும் தேர்தல் நேரங் களில் மிகுந்த பயன்பாடாக அது அமையும்.

புதுக்கோட்டையில் பணிபுரியும் ஒரு பெண் ஆசிரியர் தலையங்கம் படித்து விட்டு, மோடிக்குப் பின்னால் இவ்வளவு விசயங்கள் உள்ளதா என வியந்தார். அதன் பிறகே அய்யா அவர்களுக்கு இக்கடிதம் எழுதத் தோன்றியது.

- வி.சி. வில்வம், திருவெறும்பூர்

தமிழ் ஓவியா said...


நான்தான் தந்தி (அஞ்சல் துறை) பேசுகின்றேன்!

மரணத்தின் மடியில் போராடிக் கொண்டிருந்த எத்தனையோ பேரின் நிலைமையை நான்தான் அவர்களின் சொந்தபந்தங்களுக்குப் போய்ச் சொல் வேன். மரணச் செய்திகளைக்கூட நான்தான் சுமந்து செல்வேன். இன்று நானே மரணப்படுக்கையில் கிடக்கிறேன். என் மரணச் செய்தியையும் நானே உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

எனக்கு நாள் குறித்துவிட்டார்கள். ஜூலை 15 ஆம் தேதியுடன் என் ஆயுள் முடி வடையப் போகிறது. இப்போது நான் யார் என்பதை அநேகமாக நீங்கள் யூகித் திருப்பீர்கள். நான்தான்... ... ... தந்தி. அஞ்சல் துறையின் மிக முக்கியமான சேவை நான் தான். பொதுமக்களின் நல்லது, கெட்டது, அவசரம் எதுவாக இருந்தாலும் என்னைத்தான் தேடி வருவார்கள்.

நான் வெள்ளைக்காரர்களால் இந்தியாவுக்குள் வந்தவன் என்றாலும் தமிழ் உள்பட பல மொழிகளிலும் வாழ்த்துச் செய்திகளை சுமந்து சென்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய அடிப்படை மொழி கட்.. கடா.. கட்.. கடாகட் என்கிற ஓசை மட்டும்தான். ஷில்லிங் என்பவரால் 1832 இல் நான் உருவாக்கப்பட்டேன். அவசர செய்திகளை மிகச் சுருக்கமான மின் சொற்களாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவதற்கு வசதியாகத்தான் என்னை உருவாக்கினார் அவர்.

1850 இல் டல்ஹவ்சி வைசிராயாக இருந்தபோது இந்தியாவுக்கு என்னை அழைத்து வந்தார்கள். கொல்கத்தாவுக்கும் அதன ருகிலுள்ள டயமண்ட் ஹார்பருக்கும் இடையில்தான் நான் முதலில் இயங் கினேன். 1851 பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனிக்காக சேவையாற்றத் தொடங் கினேன். 1853 இல் எனக்கெனத் தனித் துறை உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேவையாளனாக மாறினேன். 1854 இல் நான்காயிரம் மைல் நீளத்திற்கு மின் கம்பிகள் அமைக்கப்பட்டு என்னுடைய சேவை வளர்ந்தது. 1902 இல் கம்பி யில்லாமலேயே ஒயர்லெஸ் மூலமாக இயங்கத் தொடங்கினேன்.

தமிழ் ஓவியா said...

1927 இல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வான் அலைவரிசை மூலமாக செயல்பட ஆரம்பித்தேன். சுதந்திர இந்தியாவில் கிராமப்புறங்கள் வரை என் கால்படாத இடமே கிடையாது என்கிற அளவில் சேவையாற்றினேன். திருமண வீடுகளுக்கு நான் சுமந்திருக்கும் வாழ்த்துச் செய்தி யுடன் என்னை தபால்காரர் சுமந்து செல்வார். அந்த செய்தியைப் பார்த்ததும் குடும்பத்தினர் முகத்தில் ஏற்படும் மலர்ச் சியைக் கண்டு நான் மகிழ்வேன். என்னை சுமந்து சென்ற தபால்காரருக்கு அன் பளிப்பாக சிறுதொகை கொடுத்து அவர்கள் மகிழ்வார்கள்.

ஆனால், பொது மக்களிடம் அதிகளவில் நான் கொண்டு சென்றது சோகச் செய்திகளைத்தான். வெளியூரில் இருக்கும் உறவினருக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்பதையும், விபத்தில் இன்னார் இறந்து விட்டார் என்பதையும் சுருக்கமான செய்தியாக நான் சுமந்திருப்பேன்.

அப்போது என்னை சுமந்துசெல்லும் தபால்காரரின் நிலையைப் பார்க்கவேண்டுமே! ஊர்ப்புறங்களில் பலருக்கு படிக்கவே தெரியாத காலம் அது. தபால்காரர்தான் நான் சுமந்திருக்கும் சோக வாசகங்களைப் படிப்பார். அதைக் கேட்ட வேகத்தில் அதிர்ச்சியும் கோபமுமாக அவரது கன்னத்தில் அறைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். தந்தி என்ற என் பெயரைக் கேட்டாலே, அய்யய்யோ.. யாருக்கு என்னாச்சி என்று கதறக்கூடிய அளவுக்கு அப்போது மக்களின் மனநிலை இருந்தது. நான் வருகிறேன் என்றாலே பொதுமக்கள் பதறுவார்கள்.

மரணப் படுக்கையில் நான்...

என்னை சுமந்து சென்றதற்காக அடியும் உதையும் வாங்கிய தபால்கார சகோதரர்களை மரணப்படுக்கையில் கிடந்தபடி நினைத்துப் பார்க்கிறேன். வேதனையாக இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நானும் அவர்களும் சேவையாற்றிக்கொண்டே இருந்தது தான் நினைவுக்கு வருகிறது.

வரலாற்றின் பக்கங்களில் எனக்கெனத் தனி இடம் இருப்பதில் ஒரு சிறு ஆறுதல். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி உள்பட எத்தனையோ தலைவர்கள் என் மூலமாக அவசரச் செய்திகளை அனுப்பி போராட்டத்தை வேகப்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்குவதை எதிர்த்து காந்தி பட்டினிப் போராட்டம் இருந்ததால், அம்பேத்கர் தன் கோரிக் கையை கைவிடும் வகையில் புனே ஒப்பந்தத்திற்கு முன்வந்தார். அப்போது, ஒரு காந்தியாரைவிட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல.

அவர்களின் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஏமாந்து போகாதீர்கள் என்று அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்த தந்தை பெரியார் அம்பேத்கருக்கு என் மூலமாகத்தான் செய்தி அனுப்பினார். அந்த நெருக்கடியான நேரத்தில், அம்பேத்கருக்கு பெரும் ஆதரவாக நின்ற ஒரே தலைவரான பெரியாரின் செய்தியை சுமந்து சென்றதில் எனக்கு இன்றளவும் பெருமிதம் உண்டு.


தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர் உரிமை களுக்காக, மரண தண்டனைக்கு எதிராக, இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்காக எனத் தமிழக அரசியல் களத்தில் என் மூலமாக டில்லியை முற்றுகையிட்ட போராட்டங்கள் நிறைய உண்டு. எத்தனையோ தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி, அவர்களின் மரணத்தில் இரங்கல் செய்தி என்று என் தோள்கள் சுமந்தவை ஏராளம்... ஏராளம். ஆனால், இன்று நான் துவண்டு கிடக்கிறேன்.

காலவெள்ளம்....

காலவெள்ளம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டபடியே ஓடும் வல்லமை மிக்கது. 1995 இல் இந்தியாவுக்குள் இணையதளம் என்ற அதிநவீனத் தகவல் தொடர்பு வசதி நுழைந்தது. அதன்பின் எத்தனை வேக மான வளர்ச்சிகள். மின்னஞ்சல், செல்போன் குறுஞ்செய்திகள், முகநூல், ட்விட்டர் என உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஏராளமான தளங்கள் வந்துவிட்டன.

என்னை கண்டுகொள்ள ஆளில்லை. என் காலம் முடிந்துவிட்டது. அரசர்கள் காலத்தில் புறாக்கள் சுமந்து சென்ற செய்திகளைவிட, ஆங்கிலேயர்கள் காலத்தில் நான் சுமந்து சென்ற செய்திகள் வேகமாக சென்றன. என்னைவிட பலமடங்கு வேகமாக இன்று உலகத்தின் எந்த மூலைக்கும் உடனுக்குடன் செய்தி களை அனுப்பமுடிகிறது.

நவீனத் தகவல் தொழில்நுட்பங்களெல்லாம் என் பேரன் பேத்திகள்தான். தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார் திருவள்ளுவர். என் வழிவந்த மக்களாகிய நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி கண்டு மகிழும் தாத்தாவாக நான் மரணப் படுக்கையில் கிடக்கிறேன். உலகத்தை இணைக்கும் சக்தியாக விளங்குங்கள்.

மக்களுக்குத் துணையாக இருங்கள். சமுதாயத்தை மேம்படுத்த உதவுங்கள். சீரழிவுகளுக்குத் துணை போகாதீர்கள்- என் பேரன் பேத்திகளான புதிய தகவல் தொழில்நுட்பங்களுக்கு நான் எழுதும் இந்த உயில்தான் என்னுடைய கடைசி செய்தி. போய்வருகிறேன்.''

கட்... கடா... கட்... கடா... கட்.

(ஜூலை 15 ஆம் தேதியுடன் இந்திய அஞ்சல் துறையின் தந்தி சேவை நிறுத்தப்படவிருப்பதாக அறிவிப்பு)
லெனின்

தமிழ் ஓவியா said...


இங்கிலாந்தில் கலைஞர் உருவம் பொறித்த அஞ்சல் தலை!


லண்டன், ஜூன் 26- திமுக தலைவர் கலை ஞர் அவர்களின் உரு வம் பொறித்த அஞ்சல் தலை இங்கிலாந்து அர சின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டது.
தி.மு.க. இளைஞர் அணித் தோழர் சி.பிர தீப் மேற்கொண்ட முயற்சியால் இந்த முதல் வகுப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட் டது.

மதுரையைச் சேர்ந்த இளைஞர் அணித் தோழர் சி.பிர தீப் இவர் தற்போது லண்டனில் லெவி ஷாம் என்ற பகுதியில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

லண்டனில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை தமிழர்கள் வாழும் பகுதிகளில் சி.பிரதீப் மிகச் சிறப்பாக கொண் டாடி வருகிறார்.

இந்த ஆண்டு கலை ஞர் அவர்களின் உரு வம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட அவர் முயற்சி மேற்கொண் டார். அதற்காக அவரே அஞ்சல் தலை வடிவ மைத்து சம்மந்தப்பட்ட இங்கிலாந்து தபால் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டார்.
அதன் அடிப்படை யால் கலைஞர் உருவம் பொறித்த அஞ்சல் தலை முதல் வகுப்பு அஞ்சல் தலையாக (UK FIRST CLASS STAMP) நேற்று (ஜூன் 25 ஆம் தேதி) வெளியானது.

தற்போது வெளி யிடப்பட்டிருக்கும் இந்த அஞ்சல் தலை இங்கிலாந்து முழுவ தும் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலையாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கும் சி.பிரதீப், லண்டனில் வெளியி டப்பட்ட இந்த அஞ் சல் தலை, கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களிடம் விரைவில் மதுரை மாவட்ட இளை ஞர் அணி முன்னாள் செயலாளர் மா.ஜெய ராமன் மூலம் வழங்கப் படும் என்றும் தெரிவித் துள்ளார்.

தமிழ் ஓவியா said...


தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சியை ஏன் நடத்துகிறீர்கள்? பா.ம.க.வுக்கு நீதிபதி கேள்வி


சென்னை, ஜூன் 26- சாஸ்திரி நகரில் பாமக பொதுக்கூட்டத் துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது.பாமகவை சேர்ந்த வடிவேலு, சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவில் கூறி யிருப்பதாவது: சென்னை சாஸ்திரி நகரில் கடந்த 7ஆம் தேதி பாமக பொதுக் கூட்டம் நடத்த காவல்துறை யினர் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தோம். இதை நீதிபதி சசிதரன் விசாரித்து தள்ளுபடி செய்தார். இது தவறானது. பொதுக் கூட் டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. எனவே சாஸ் திரி நகரில் பாமக பொதுக்கூட் டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாரா யணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது, பாமக சார்பாக மூத்த வழக்குரைஞர் ராஜா ஆஜராகி, பாமக பொதுக்கூட்டம் நடத்த தனி நீதிபதி அனுமதி மறுத்தது தவறானது. இந்திய அரசியல் சட்டப்படி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த உரிமை யுள்ளது. எனவே பொதுக்கூட் டம் நடத்த அனுமதிக்க வேண் டும் என்றார்.

அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, மாமல்லபுரத்தில் பொதுக் கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் சில விதிமுறைகளை விதித்து பாமகவுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் உயர் நீதி மன்ற விதிமுறைகளை பாமக மீறி யுள்ளது. இதனால் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இதற்கு யார் பொறுப் பேற்பது. தற்போது விதிமுறை களை மீற மாட்டோம் என உத்தரவாதம் அளிப்பதை எப்படி ஏற்க முடியும்? எனவே பொதுக் கூட்டத்துக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது எனக் கூறினார்.

உடனே மூத்த வழக்குரைஞர் ராஜா குறுக்கிட்டு, பாமக தொண் டர்கள் நூறு பேர் உள்ள இடங் களில் பத்து பேர் விதிமீறினால் அதைக் கட்டுப்படுத்த முடிய வில்லை என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், பாமக தொண்டர் களை, தலைவர்கள் கட்டுப் படுத்த முடியாவிட்டால் கட்சியை ஏன் நடத்துகிறார்கள். தொண் டர்களைக் கட்டுப்படுத்த முடி யாதவர்கள் தலைவர்களாக எப்படி இருக்க முடியும்?

என்று கூறி, வழக்கில் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. எனவே அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைக் கிறோம் என்று உத்தரவிட்டனர்.

தமிழ் ஓவியா said...


தந்தி சேவை நிறுத்தப்படும் நிலையில் இ-போஸ்ட் சேவையை வழங்குகிறது தபால்துறை



சென்னை, ஜூன் 26- தந்தி சேவை நிறுத்தப் படவுள்ள நிலையில், இ-போஸ்ட் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் வெளியிட் டுள்ள அறிக்கை:

இந்தியாவின் மிகப் பழைமையான தகவல் தொடர்பு சேவைகளுள் ஒன்றான தந்தி சேவை ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள் ளது. தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய அஞ்சல் துறை வழங்கு கிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்ட ணமாக வசூலிக்கப்படு கிறது. மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படு கிறது.

கணினிமயமாக்கப் பட்ட அனைத்து அஞ் சலகங்களிலும் இச் சேவை அளிக்கப்படு கிறது.

அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழு தப்பட்ட தகவலை, இ-போஸ்ட் மய்யத்தில் கொடுத்தால், அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின் னஞ்சல் செய்யப்படும். விநியோகிக்கப்படும் மய்யத்தில் அத்தகவல் பிரின்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு அஞ்சலர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப் படும்.

அஞ்சல் முகவரி தவிர, உலகின் எந்தப்பகுதியில் உள்ள மின்னஞ்சல் முக வரிக்கும் தகவல் கொண்டு சேர்ப்பதற்கும் இச்சேவை யைப் பயன்படுத்தலாம்.

கார்ப்பரேட் நிறுவ னங்களுக்காக இ-கார்ப் பரேட் எனும் சிறப்புத் திட்டம் அமலில் உள் ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரே சமயத்தில் 9,999 முகவரிகளுக்கு தகவல் அனுப்பலாம். இதற்கு ஏ4 பக்க அள விலான தகவலுக்கு ரூ.6 கட்டணமாக வசூலிக் கப்படும். ஒரே முறை குறைந்தது 50 அல்லது அதற்கு அதிகமான முக வரிக்கு தகவல் அனுப் பும் நிறுவனங்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.5 கட் டணமாக வசூலிக்கப்படும்.
பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் இச்சேவையைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மும்மாரி?


வறட்சியால் நாடு வாடுகிறது. விவசாயம் வேண்டாத தொழிலாக ஆகிவிட்டது இந்த நிலையில் - நாட்டில் மழை பொழியவில்லை என்று அண்ணா பெயரில் உள்ள அதிமுக அரசு கோயில்களில் யாகங்களை நடத்தச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. (மக்களைத் திசை திருப்ப இதுதானே வழி?)

முதல் அமைச்சருக் கும் - இந்த அரசுக்கும் பக்தி அதிகம் - அதிலும் இந்து மதக் கடவுள்களி டத்தில் ஏகப்பட்ட பக்தி! யாகம், பூஜை, புனஷ் காரம் இவற்றில் ஏகப்பட்ட நம்பிக்கை! அதனால் இதோ ஒரு எடுத்துக் காட்டு!

விவேக சிந்தாமணி என்னும் காவியம், அதில் ஒரு பாடல் வருகிறது.

வேத மோதிய
வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர்
நெறியினுக்கோர் மழை
மாதர் கற்பிலா
மங்கையர்க்கோர் மழை
மாத மூன்று
மழையெனப்
பெய்யுமே என்பதுதான் அந்தப் பாடல். பொருள் எளி தானதே பொழிப்புரைகள் தேவைப்படாது.

இதன்படி மாதம் மும் மாரி பொழிய வேண்டும் இப்பொழுது அவ்வாறு பொழியவில்லை என்றால் என்ன காரணமாக இருக்க வேண்டும்?

அதுவும் ஆன்மீக வாதிகள் பார்வையில் பார்க்க வேண்டும் அப் படிப் பார்க்கப் போனால்...

ஒழுங்காக வேதம் ஓதும் வேதியர்கள் இந்த நாட்டில் இல்லை; நீதி யோடு ஆட்சி செய்யும் அரசு இங்கு இல்லை;

கற்புடைய மங்கை களுக்குப் பஞ்சம்! இவற் றின் காரணமாக மும் மாரிப் பொழிய வேண்டிய மழை பொய்த்து விட்டது என்று கொள்ளலாமா? வேறு வழியில்லை அப்படித்தானே பொருள் கொள்ள வேண்டும்.

பக்தி முற்றிப் போன (ப)மதைகள் சொல்லட் டும் சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த சாமி யார்கள்தான் சொல்லட் டும். புராணங்களைப் பிளந்து கட்டும் புலவர்கள் தான் வாய்த் திறக்கட்டும்.

மாதம் மும்மாரி பொழியாமல் போனதற்கு இவைதான் காரணம் என்பதை ஒப்புக் கொள் கிறார்களா?

இப்பொழுது ஒன்றே ஒன்றுதான் அவர்கள் முன்னிலையில்! ஒன்று விவேக சிந்தாமணியை ஒப்புக் கொள்வதாக இருந் தால் குறிப்பிடப்பட்ட மூன்று பேர்களின் நிலை என்ன என்பதுபற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் விவேக சிந்தாமணிகள் கூறுவதை எல்லாம் இந்தக் காலத் தில் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று நகுதல் வேலையில் இறங்க வேண்டும். எந்த இடத் தில் பக்தர்கள்? எந்த இடத்தில் இந்த அரசு?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பூமியைப் போன்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு


லண்டன், ஜூன் 27- பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ் ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட் டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. அதிநவீன தொலை நோக்கி மூலம் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இந்தப் புதிய கோள்கள் கண்டுபிடிக் கப்பட்டன.

புதிதாகக் கண்டுபி டிக்கப்பட்ட இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரிய தாக உள்ளன. பூமியைப் போலவே இருக்கும் இந்தக் கோள்கள் அதிக வெப்பமாகவோ, அதிக குளிராகவோ இல்லாமல் போதிய நீர் ஆதாரத் துடன் இருப்பதாக விஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தூரம் கொண்ட இந்தக் கோள் கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட அருகில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனி தன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட கோள் களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறை. இந்தக் கோள்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன.

தமிழ் ஓவியா said...


சுத்தமான குடிநீர் லிட்டர் 5 பைசாவுக்கு!


நானோ தொழில்நுட்ப முறை யில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் அய்.அய். டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செல வாகும் சூழ்நிலை உள்ளது.

மனிதனின் அடிப்படை தேவை யான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, அய்ந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், நானோ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், வெள்ளி அயனிகள் நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண் கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்து விடும் என் பதால், அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்தேன்.

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து, உயிரி பாலிமர் பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்; தொடர்ந்து பயன் படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண் களுக்கு இத்தொழில் நுட்ப பயிற்சி கொடுத்தால், வேலை வாய்ப்பு அதிகரிப் பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.

தமிழ் ஓவியா said...


மார்கழி மாத கொக்கோகம்! - துரை. சந்திரசேகரன்


மார்கழி மாதம் என்றால் படுகுஷி! குமரிப் பெண்கள் ஆடுவதென்ன! பாடுவதென்ன!! பாராயணம் செய்வதென்ன!!! என்ன, என்ன, என்ன, என்று கே.பி. சுந்தராம்பாள் பாடுவது மாதிரி சொல்லலாம்.

விஷயம் இல்லாமலா இருக்கும்? பாடுகின்ற பாடல்களை பார்க்கும் பொழுதே தெரியவில்லையா? உள்ளுக்குள்குமைந்து கிடக்கிற உணர்ச்சிகளைப் புரியும் வார்த்தைகளில் சொல்லக் கூச்சமாக இருக்காதா?

பக்தை என்ற பெயரில் பருவக் கொந்தளிப்பைப் பாட்டாகப் பாடி வைத்துள்ளார்கள் அல்லவா... அதை சந்தடி சாக்கில் பாடித் தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் மார்கழி மாதம் அவ்வளவுதான் - அதற்கு மேல் பூச்சுதான் பக்திப் பரவசம். பாடல்களில் ஒன்றிரண்டு தட்டி விடுகிறோம் படியுங்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பள்ளியெழுச்சிப் பாடல்:
பொங்குபாற்கடல்
பள்ளிகொள்வானைப்
புணர்வதிலோ ராசை - என்
கொங்கைகள் கிளர்ந்து குமைந்து குதூகலித் தாடென் ஆவியை யாகுலஞ்செய்?

பாடலை பார்த்தீர்களா?

பக்தையின் எண்ணம் எப்படி பக்தியைப் பரப்புகிறது! சபாஷ்! முடிந்தவர்கள் மார்கழி மாத பஜனையைத் தங்கள் வீட்டுப் பெண்களிடமும் சொல்லிக் கொடுங்கள். (கையில் கிடைத்ததை எடுத்து பக்தர்களை அடித்துவிடப் போகிறார்கள்..!)

இந்த விஷயத்தில் கிளைமேக்ஸ் பயில்வான் ஆண்டாள்தான். அவள் பாட்டையும் கேட்போமே!

குத்து விளக்கெரியக் கொட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
வாய் திறவாய்
செப்பன்ன மென்முலை
செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே!
துயிலெழாய்

நப்பின்னைக்கு எது எது எப்படி இருக்கிறது என்பதையும் நப்பின்னையின் கொங்கைமேல் எதையோ வைத்து இதமாக - சுகமாக உறங்கும் கண்ணனை எப்படி வர்ணித்திருக்கிறது திருப்பாவை!

குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கிய பக்தி சிவனாரைப் புகழ்ந்து ஆபாசக் களஞ்சியமாகத் திகழ்வதைப் போல், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை போன்றவை விஷ்ணுவைப் புகழ - பக்தர்களின் இச்சையை தணிக்க கற்பனையாகப் படைக்கப்பட்ட கொக்கோகப் பாடல்களே ஆகும்.

இப்படிப்பட்ட பாடல்களை மார்கழி மாதத்தில் பாடினால் மாதம் மும்மாரி மழை பொழியுமாம்; வயலெல்லாம் செந்நெல் விளைந்து குலுங்குமாம்!

ஓங்கி யுலகளந்த
உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச்
சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கி பெருஞ்செந்
நெலூடு கயலுகள
என்பது பாடல்.

கடும் வறட்சி என்றெல்லாம் சொல்லி எங்கும் காவடித் தூக்கி செல்ல வேண்டியதில்லை. மத்திய அரசும் பார்வையாளர்களை அனுப்ப வேண்டியதில்லை. உத்தமன் பேர் பாடினால் போதுமானது. பக்தர்கள் நம்புவார்களாக! பம்பு செட்டு எந்தப் பக்தர்களாவது வைத்திருந்தால் அதை விற்று விட்டு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி மும்மாரி பொழியச் செய்வார்களாக!

தமிழ் ஓவியா said...


எவன் பிராமணன்?


ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான்ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண் டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப் பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.
- காந்தியார் 16.9.1927 அன்று தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில்

தமிழ் ஓவியா said...


பாவ புண்ணியம்


சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப் பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே. பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பி னராகவும், புண்ணியம் செய்த வர்கள் உயர் வகுப்பினராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக்கூட்டத்தில் நேரு

தமிழ் ஓவியா said...


வடமொழியில் சிபாரிசா?


தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார் ஒரு சொல்லால் ஒரு
சாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடி வந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?

- புரட்சிக் கவிஞர்
குயில், புதுச்சேரி, 12.8.1958

தமிழ் ஓவியா said...


வேண்டும்



பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


பெரியார் கண்ட சுயமரியாதைத் திருமணமும் - அதன் வெற்றியும்


- சரவணா இராசேந்திரன்

தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள் ஒரு தலைசிறந்த மனித நேயப் பற்றாளர், மனிதருள் பேதமற்ற பெருவாழ்வே நிலைக்கவேண்டும் என்று கருதினார்.மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக்கொள்வது தன் மானக்குறைபாடு அந்தக்குறை பாட்டை நீக்கிவிடின் அவனுக்குள் சமூகம் பற்றிய அக்கறை வரும் எனவே தான் அவர் தன்மான இயக் கமான சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார்.

சுயமரியாதையை இழந்து வாழ்வது, விலங்குகளாய் வாழ்வது போன்றதாகும், மனிதர்க்குள் பேதங் களை உருவாக்கும் முதல் சங்கிலி, திருமணங்களில் இருந்து தான் தோன்றுகிறது, வாழ்வில் இருவர் இணையும் போது அங்கு பழைய முடைநாற்றமெடுக்கும் சாத்திரங்கள், மற்றும் மூடநம்பிக்கையின் மூலம் திருமணமாகும் இணைகளுக்கு மட்டுமல்ல அங்கு வந்திருக்கும் உறவினர்களின் உள்ளங்களிலும் பார்ப்பன அடிமைச்சாசனம் எழுதப் படுகிறது, அதன் படியே அவன் தலைமுறைக்கும் தொடர்கிறது.

இந்த சங்கிலியை உடைத்தெறிந்தாலே சுயமரியாதை போராட்டத்தில் 50 விழுக்காடு வெற்றிகிடைத்துவிடும் இதை தந்தை பெரியார் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவ னின் பார்வையில் கண்டார், வெற்றியும் அடைந்தார்.

அதிலிருந்து உதித்தது தான் சுயமரியாதைத்திருமணம், புரட்சிச் சிந்தனையாளர் தந்தை பெரியார் தொலைநோக்குப்பார்வையில் தன் னுடைய அனைத்து சிந்தனை களையும் நீண்டகாலம் மக்களுக்கு பயன்படும் வாழ்க்கைத் தத்துவத்தை கூறிவந்தார். அன்று கருவாக உரு வாகி, தவழ்ந்து பல எதிர்ப்புக்களை யும் மீறி ஆயிரக்கணக்கானோர் மனதில் நிலை நிறுத்தப்பட்டுவிட்ட சுயமரியாதைத்திருமணம் ஆரம்பகாலத்திலேயே சோதனையில் சிக்கியது.

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணமே செல்லாது என்று 1953-இல் நீதிபதி ராசகோபாலன், நீதிபதி சத்யநாரா யணராவ் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப் பட்டது. மனித உரிமைக்கு எதிராக தரும சாத்திரத்தை மனதில் கொண்டு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறினார்கள், சுயமரியாதைத் திரு மணம் சாத்திரப்படி நடைபெற வில்லை, புரோகிதர் இல்லை, ஹோமம் இல்லை, இதர அம்மி, அருந்ததி போன்ற சடங்குகள் இல்லை, மேலும் சுயமரியாதைத் திருமணம் என்று கூறியிருக்கும் இத்திருமணமுறை வழமையான ஒன்றா என்றால் அதுவும் கிடையாது, யாரோ சிலர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இத்திருமணத்தை நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாகச் செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

ஆகையால் சுயமரியாதைத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளை சட்டவிரோத வைப்பாட்டியின் பிள்ளைகள் என்று தான் கருதவேண்டும் என்று கிஞ்சித் தும் சிந்தனை இல்லாமல் சாஸ்திர சாம்பிரதாயம் என்னும் மடமை இருளில் மூழ்கி நீதி நியாயம் மற்றும் தொலைதூர சிந்தனைகளை மறைத்துவிட்டதன் காரணமாக இவர்களாகவே தாங்கள் தலை முறைகள் உழைப்பில்லாமல் அடுத்த வரை சுரண்டி அடிமைப்படுத்தி சுகபோக வாழ்வு வாழ எழுதிவைத்த மனுதர்மவிதிகளின்படி பார்ப் பனர்களைத் தவிர மற்ற எவருக்கும் திருமண உரிமை இல்லை என்றும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் சட்டப்படி பிறந்ததாக கொள்ள முடியாது என்றும், இந்துமத தரும விதிகளின்படி சூத்திரர்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் வைப் பாட்டி குழந்தைகளாகவே கருதப் படுவார்கள் என்றும் வைப்பாட்டி குழந்தைகளுக்கான சட்டவிதியில் என்ன சொத்துரிமை உள்ளதோ அதன்படி உரிமைகொண்டாடட்டும் என்று தீர்ப்பளித்தார்கள்,

தமிழ் ஓவியா said...

பார்ப்பன நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின்படி சுயமரியாதைத்திருமணம் சட்ட பூர்வமானது அல்ல, அத்தகைய திரு மணத்தின் மூலம் பிறக்கும் குழந் தைகள் சட்டபூர்வமான உரிமைகள் கொண்டவர்கள் அல்ல என்பதாகும். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரத்தை கண்டு சீற்றமடைந்தவர்களின் தீர்ப்பாகும், ஆனால் தந்தை பெரியார் இதுகுறித்து கவலைப்படவில்லை, சுயமரியாதைத்திருமணத்தினால் விளையும் நன்மையை கருதி அதனை மக்களிடம் முனைப்போடு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கினார்.

சுய மரியாதைக்கொள்கைப்படி செய்யப்படும் திருமணங்களில் சில சட்டப்படி செல்லக் கூடாதவை களாகவும் இருக்கலாம், அதாவது மணமக்கள் வெவ்வேறு ஜாதிகள் என்று சொல்லப்படும் கலப்பு மணங்களும், மூடப்பழக்கவழக்கமற்ற, அவசியமற்ற, அர்த்தமற்ற, சடங்குகள் செய்யப்படாத சில திருமணங்களும் செல்லுபடியாகாதவைகளாகலாம்,என்று சட்டவல்லுநர்கள் சொல்வதாக கேள்விப்பட்டேன்.

அப்படி இருந்தும் சமூக நலன் கருதி அக்கறையுடன் சிலர் சட் டத்தை கவனியாமலும், அதனால் ஏற்படக்கூடிய சட்டரீதியான இழப்பு களை புறந்தள்ளியும் எல்லாவற்றிற் கும் துணிந்து பலர் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள் முன் வருவதை நாம் காண்கிறோம், ஆகவே இம்மாதிரி திருமணங்களில் சுயமரி யாதைக்காரர்களுக்கு கொள்கை பிசகோ, நியாயப் பிசகோ இருப்பதாக நமக்குத்தோன்றவில்லை என்று தலையங்கம் எழுதினார் (குடிஅரசு 12.10.1930)

தமிழகமெங்கும் நகரம், கிராமம் பாராமல் சுயமரியாதைத்திருமணம் நடந்தவண்ணம் இருந்தது. இதன் காரணமாக பெரியார் வாழ்க்கைத் துணை நலம் என்னும் அருமையான நூலை சுயமரியாதை சட்டவிதி களாகவே எழுதினார். இறுதியில் பார்பனீய நீதி, தமிழன்னையின் அருமைப்புதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் தோல்வி யுற்றது. கழகம் ஆட்சியில் அமர்ந்த உடன் சட்டமன்றத்தில் சுயமரியா தைத்திருமணத்தை சட்டமாகவே இயற்றினார்.

வரலாறு மீண்டும் திரும்பியது கோவையைச்சேர்ந்த இருவர் ஓரிடத்தில் பணிபுரியும் போது ஏற்பட்ட காதலால் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்று வாழ்ந்த வந்த தருணத்தில் திடீரென கணவர் தன் மனைவியை விட்டு பிரிந்து விடுகிறார். இதனால் கணவன் மீது வாழ்வாதாரத்தொகை வேண்டி, வழக்கு தொடர்ந்த நிலையில் நீதி மன்றமும் மனைவிக்கு வாழ்வாதாரத் தொகை தரவேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பினை எதிர்த்து எங்களது திருமணம் சடங்குகளின் படி செய்ய வில்லை, நாங்களாகவே விருப்பப் பட்டு வாழ்ந்தோம் இப்போது நான் பிரிந்து விட்டேன், ஆகையால் மரபுப்படி நடக்காத திருமணம், திருமணமே அல்ல ஆகவே சட்டப் படி நான், என்னுடன் முன்பு வாழ்ந்த ஒருவருக்கு வாழ்வாதாரத்தொகை வழங்க முடியாது என்று கூறி நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக முறையிட்டார்.

இதை வழக்கில் நீதிபதி பழைமை வாத பார்வையில் சடங்குவிதிகள் இல்லாமல் செய்த திருமணம் செல்லாது என்று கூறியது, தான் வேடிக்கை! இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் விவரம் வருமாறு: சட்டவிதிகளின் படி வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் மனதளவில் ஒன்றி தங்களுக்குள் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் கணவன் மனைவி எனக்கருதலாம், சட்டபூர்வமான வயதைக்கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.

தாலிகட்டுவது, மாலை மாற்றுவது தீக்குழியைச் சுற்றுவது, அல்லது இதர அரசு வழி காட்டிய அலுவலகங் களுக்குச் சென்று சாட்சிகளின் முன்பு திருமணம் செய்து பதிவு செய் வது, போன்றவை மனநிறைவிற்காக மட்டுமே, என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் கூறி னார். இதைத்தானே அய்யா நூறாண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார்.

எதிர்காலத்தைக் கணித்தார். ஊரை ஏமாற்றும் சோதிடர்கள் கூட நாளை என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் பொய்யையும், புரட்டையும் அவிழ்த்துவிட்டு அலையும் நிலையில் தொலைநோக்கு பார்வையில் தந்தை பெரியார் கூறியது - எந்த நீதிமன்றம் செல்லுபடியாகாது என்று கூறியதோ அதே நீதிமன்றம் இன்று ஒருபடி மேலே போய் மனம் ஒன்றி வாழ்ந்தாலே அது சட்டப் படியான திருமணம் தான் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது.

இது தந்தை பெரியாரின் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வாழ்க பெரியார் வளர்க அவரது சமூக தொண்டு.

தமிழ் ஓவியா said...


பிற நாட்டைப் போற்றுவோர் பிறந்த நாட்டைத் திருத்தாதது ஏன்?

ஏற்றத் தாழ்வு சுவிட்சர்லாந்து
மக்களுக்குள் இல்லை என்றே
இங்குளோர் புகழ்ந்து பாடுவார் - ஆனால்

இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை
ஏற்றிப் போற்றி எத்தில் வாழும்
ஈனரெல்லாம் கூத்து ஆடுவார்.

மாற்றவிட மாட்டோ மென்று
மடமையை வளர்ப்போர் தீய
மதத்தின் பேரால் ஆட்டம் போடுவார் - பல்லவ

மன்னராண்ட காலம் முதல்
பவுத்தர் சமணர் கொல்லப்பட்ட
பகைமை யோங்க கூட்டம் கூடுவார்.

கழுவிலேற்றி சமணர்களைக்
கொன்று குவித்த கொடுமையினை
கனவில்கூட மறக்க முடியுமா? - அன்பால்

கொல்லாமையைக் கடைப்பிடித்த
பவுத்தர்களை நாட்டைவிட்டே
விரட்டியதை மறக்க முடியுமா?

உழுத அவர் நிலத்தை யெல்லாம்
வன்முறையில் கவர்ந்துகொண்ட
வஞ்சகத்தை மறக்க முடியுமா? - அந்தோ

அடிமை யாக்கி அவர்களையே
ஆதிக்க வெறிபிடித்தோர்
அடக்கியதை மறக்க முடியுமா?

ஜாதிவேற்றுமை கற்பிக்கும்
சதுர் வருணத்தைப் புகுத்தி
தமிழினத்தைப் பிளக்க வில்லையா? - கொடிய

தீண்டாமையைப் பவுத்தர்மீது
சுமத்தி அந்த தூயவரைத்
தாழ்த்தப்பட்டோர் ஆக்கவில்லையா?

வேதியர், நிலக்கிழார்கள்,
வேந்தர் ஒன்றாய்ச் சோந்துகொண்டு
உழைப்பவரை ஒடுக்கவில்லையா? - இன்றும்

ஒற்றுமையாய் வாழ்வதற்கு
வழிவகைகள் கண்டிடாமல்
வன்முறையைத் தொடரவில்லையா? (ஏற்றத் தாழ்வு)

வீ. இரத்தினம்,
பெங்களூரு

தமிழ் ஓவியா said...


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப் போது ஓரிருமிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இனிசுலின் ஏறி, இறங்கும்!

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதைப் பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள். அது மட்டு மல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலி னின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா? என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத் தால் தண்ணீர் அருந்திக் கொள்ள லாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாய மில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது, நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி, பெற்றுக் கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி, அளவுக்கு அதிக மாக தண்ணீரை அருந்த தேவை யில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில், நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கி விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண் ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை பாதித்து விடும்.

நம்மில் பெரும்பாலானோர் உண வுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவ தாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக் கிறது என்பதை மக்கள் அறியா மலேயே இருக்கின்றனர்.

உணவு செரிக்காமல் வயிற்று வலி என்று மருத்துவர்களிடம் செல் வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ் வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் வேண்டிய மட்டும் தாராளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச் சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே, சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள். இதோ! நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாமல் அதிக உப்புள்ள உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி தண்ணீரை அருந்தச் செய்து விடும். அதே போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடா தீர்கள் அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக் குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைப் போக்க தண்ணீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி கொண்ட உமிழ் நீருடன் சேர்த்து விழுங் கினால் அது உணவை வயிற்றில் சுரக் கும் திரவத் துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்து விடும்.

நன்றி: இன்றைய வேளாண்மை ஜூன் 2013


தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

பீகார் பூகம்பம் - காந்தியார்



1934 பீகாரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது காந்தியார் கூறியதை அருண்சோரி குறிப்பிடுகிறார்.

பொதுவாக உலகத்தார் - நாகரிகம் பெற்றோர் பெறாதோர் இரு வருமே - நம்பக் கூடியதை நானும் ஏற்கிறேன். தாங்கள் செய்த பாவத் துக்காக தண்டனையாகத்தான் மனித குலத்துக்கு இதுபோன்ற தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தண்டனை விதிக்கப்படக் காரணம், தீண்டாமை என்கிற பாவம்தான் என்றார் காந்தி (ஹரிஜன், பிப்ரவரி 2, 1934)

ஆனால், நிலநடுக்கத்திற்கு ஜாதி வேறுபாடு கிடையாது. அந்த தலித்துகளையும் சேர்த்துதான் அழித்தது.

(எம்.ஜே. அக்பர் எழுதிய கடவுளின் சக்கரம் - கட்டுரை, இந்தியா டுடே, 20.7.2011, பக்கம் - 4

தமிழ் ஓவியா said...

அரசு அனுமதி அளித்துள்ளதா?
வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்கு திருவிளக்குப் பூஜையா? சிவபெருமான் திருவள்ளுவர் என்னும் சதி: முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

திருவள்ளுவர் மதச் சார்பற்றவர் என்பதால், உலகம் அவரைப் பெரும் பாலும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிலர் அவருக்குப் பூணூல் போட முயற்சித் தனர். இன்னும் சிலர் அவர் நெற்றி யில் பட்டை தீட்டினர்; (மயிலாப்பூர் சிலையில் சில விஷமிகள் பெயிண் டில் பட்டை தீட்டினர் - தென் சென்னை மாவட்டக் கழகத்தின் முயற்சியால், அது அகற்றவும் பட்டதுண்டு)

இப்பொழுது, திருவள்ளுவரைப் புகழ்வது போல அவரை இகழும் சூழ்ச்சி ஒன்று அரங்கேற உள்ளது. அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முயற்சியால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உருவாக்கப்பட் டுள்ள வள்ளுவர் கோட்டத்தில். ஓம், அகத்தியர் துணை என்ற தொகையறாவுடன் துண்டறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

யாரோ ரெங்கராஜ தேசிக சுவாமி களாம் - அவரின் நல்லாசியுடன் நடைபெறப் போகிறதாம்.

சகல நன்மைகளைத் தரும் சிவபெருமான் திருவள்ளுவர் திருவிளக்குப் பூஜை என்ற ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளனர்.

வரும் 30ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், இந்த பூஜை நடைபெறுகிறதாம்!

திருவிளக்கு மட்டும் எடுத்து வந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜைக் குரிய அனைத்துப் பொருட்களும் மண்டபத்தில் இலவசமாக வழங்கப் படும் என்றும் துண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னணியில் ஏதோ சதித் திட்டம் இருக்கிறது! தமிழ்நாடு அரசின் அனுமதியோடுதான் இது நடைபெறுகிறதா?

யார் வேண்டுமானாலும் - அரசுக்குச் சொந்தமான வள்ளுவர் கோட்டத்தில் புகுந்து எது வேண்டு மானாலும் செய்யலாமா?

குறளில் கோயில் இல்லை தம்பி என்றார் புரட்சிக் கவிஞர். அத் தகைய ஒரு சிந்தனையாளரை - உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூலினைத் தந்த தொலைநோக்குச் சிந்தனையாள ரான திருவள்ளுவரை - மூடச் சகதிக்குள் குறிப்பிட்ட மதத்துக்குள் முடக்கும் சதி - இதன் பின்னணி யில் கண்டிப்பாக உள்ளது. தமிழ் உணர்வாளர்களே, முளையிலேயே இதனை கெல்லி எறிந்திட வேண் டாமா?

அரசாங்கம் இதில் தலையிட் டுத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் உரிய நடவடிக்கையில் நேரிடையாக இறங்க வேண்டிய அவசியம் ஏற்படும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


கல்கியும் துக்ளக்க்கும்!

நரேந்திரமோடியை பிரதமராக ஆக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் பார்ப்பனர்கள் நிற்பதற்குக் காரணம் இருக்கிறது.

பிஜேபியின் சார்பில் பார்ப்பனர் ஒருவரை பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்தால் அதில் பல சங்கடங்கள் உண்டு; ஒரே வரியில் அதன் பார்ப்பனத்தனம் பட்டாங்கமாக மக்கள் மத்தியில் தோலுரிந்து போகும்.

பார்ப்பனர் அல்லாதாரான மோடியை முன்னிறுத்தினால் அந்தப் பார்வை விழுவதற்கான வாய்ப்பே இல்லை. நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். மோடி இந்த வேடம் சூட்டிய புலி.

சிறுபான்மையினர் மீதான வெறுப்பு - காழ்ப்பு என்பது பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் உண்டு என்றாலும் நரேந்திரமோடி அளவுக்கு முஸ்லிம்களை நர வேட்டையாடுவதற்கு வேறு யாரால் முடியும்?

அதைக் குஜராத் மாநிலத்தில் நடத்திக் காட்டியதுடன் முஸ்லிம்கள் வாக்கு - முஸ்லிம் அல்லாதார் வாக்கு என்ற வாக்கு வங்கியைக் கோடு போட்டுக் காட்டி இரு அணிகளாகப் பிளவுப்படச் செய்து, பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தம் பைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்ற யுக்தியை குஜராத் மாநிலத்தில் கடைபிடித்துக் காட்டி, அதில் மோடி வெற்றி பெற்று இருப்பதாலும், இந்த அனுபவமும், தந்திரமும் யுக்தியும் இந்திய அளவுக்குப் பயன்படும் என்பது பார்ப்பனர் மனப் பாங்கு; அந்த நிலையை எட்டினால் அவர்கள் நெஞ்சுக்குள் பதுக்கி வைத்திருக்கும் இந்து ராஜ்ஜியத்தை எளிதாக அமைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது பொதுவாக மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது - மேலும் இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் அது ஆட்சியில் இருப்பதால் பொதுவாக மக்களின் எதிர்ப்பு வாக்குகள் (Anti Incumbency) கிடைக்கும் என்று பிஜேபி நம்பிக் கொண்டு இருக்கிறது.

இப்படி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே குழப்பமும், பிளவும் ஏற்பட்டு இருப்பதும், பிஜேபிக்குள்ளேயே அத்வானியின் தலைமையில் மோடிக்கு எதிர்ப்பு ஏற்பட்டு இருப்பதும் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

கல்கி கதறுகிறது. குறிப்பாக இவ்வார இதழில் (30.6.2013) பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்மீது விழுந்து குதறியுள்ளது.

பிஜேபி கூட்டணியிலிருந்து முறித்துக் கொண்டது பின்னடைவு என்று பொருமுகிறது. 2014ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அய்யோ என்று போய் விடுவார். மூன்றாவது அணி அமைத்தாலும் அது உருப்படாது என்று கல்கி மண்ணை வாரி இறைக்கிறது.

துக்ளக் இதழ் அத்வானி நடந்து கொள்ளும் போக்கைச் சற்றும் ஜீரணித்துக் கொள்ளாமல் இவ்வார (3.7.2013) கேள்வி பதில் பகுதியில் எட்டு கேள்வி பதில்களை அர்ப்பணம் செய்து தீர்த்து விட்டது (ஆம் திட்டித் தீர்த்து விட்டது!)

மோடியைப் பிரதமராக்கி மனுதர்மக் கொடியை நாடாளுமன்றக் கட்டடத்தில் ஏற்றிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சோவுக்குப் பெரும் சோகமாகப் போய் விட்டது அத்வானியின் போக்குகள்!

நீங்கள் பெரிதும் மதிக்கும் அத்வானியின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு ஏற்புடைய தாக உள்ளதா என்ற கேள்விக்கு சோவின் பதில்:

இல்லை. ஏன் இவர் இப்படிச் செய்கிறார் என்கிற வியப்புதான் ஏற்படுகிறது என்று புலம்பியிருக்கிறார்.

மோடியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அத்வானி பதவி விலகியதாகக் கருதலாமா? என்ற இன்னொரு கேள்விக்கு சோவின் பதில்: அப்படி ஒரு கருத்து தோன்ற அவர் வழி செய்து விட்டார் என்று கருதலாம் என்றும் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒட்டு மொத்தமாக இந்த வார கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லி வெதும்பி இருக்கிறார்.

அத்வானியையும் மோடியையும் துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு சேர பங்கு ஏற்கச் செய்ததே மனதுக்குள் ஒரு திட்டம் போட்டுதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அது வீணாகப் போனது பற்றி விலா நோக எழுதியுள்ளார்.

எப்படி இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப் போக்கு எந்த அடிப்படையில் உள்ளது என்பதற்கு இவ்வார கல்கி, துக்ளக் இதழ்களே எடுத்துக் காட்டாகும். 29-6-2013

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சி யும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...

குடந்தை கழக மாவட்டம் சுவாமிமலையில் 26.06.2013 அன்று காலை 9.30 மணியளவில் எருமைப் பட்டி வீரமுத்து மல்லிகா ஆகியோரின் மகன் மாதவன் அவர்களுக்கும் கோவிந்தகுடிஆவூர் கல் யாணசுந்தரம் இந்திரா ஆகியோரின் மகள் துர்க்கா ஆகியோரின் இல்வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் வாழ்வியல் தத்துவங் களை எடுத்து உரையாற்றி வாழ்த்து கூறி நடத்தி வைத்தார்.

தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில், 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சுவாமிமலையின் நகர தலைவராக இருந்த நாராயணசாமி அவர் களுடைய இல்ல திருமணத்தை நடத்தி வைக்க நான் வந்திருந்தேன். அப்போது வரிசையாக போடப் பட்டிருந்த மர நாற்காலிகளில் ஆண்கள்தான் பெரும்பாலும் அமர்ந்திருந்தார்கள் அதிக பணம் கொடுத்து வாங்கிய பட்டு புடவைகள் நகைகளோடு வந்திருந்த பெண்கள் எல்லாம் தரையில் அமர்ந் திருந்தார்கள்.

நாற்காலியில் உட்கார இடம் இருந்தும்கூட பெண்கள் அனைவரும் கீழேதான் அமர்ந்திருந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரே ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் பேசும்போது இவ்வளவு பெண்கள் தரையில் அமர்ந்துள்ளார்கள் துணிச்சலாக ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்படி தான் துணிச்சலாக இருக்கவேணடும் என்று அவரை பாராட்டி பேசிவிட்டு, அந்தப் பெண் உட்கார்ந்து இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த பெண்ணும் கீழே இறங்கி ஏனைய பெண்களோடு உட்கார்ந்து விட்டார்கள்.

பெரியார் வென்றார்

இங்கே நாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது பெரும்பாலான பெண்கள் மிகவும் வசதியாக நாற்காலியிலே அமர்ந்துள்ளார்கள். ஆண்கள் எல்லாம் பின் பக்கம் நாற்காலியில் அமர்ந்தும் நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

இந்த மாற்றம் எப்படி வந்தது? யாரல் வந்தது? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தான் பெரியார் இயக்கத்தினுடைய வெற்றி. சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி. சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது? என்பவர்களுக்கு இது தான் பதில்.

அம்பேத்கரும் - பெரியாரும்

இது ஜாதியை மறுக்கின்ற இயக்கம். வடபுலத்திலே அண்ணல் அம்பேத்கர் ஜாதி, மதத்தை எதிர்த்துப் போராடினார். அதே நேரத்திலே தென் புலத்திலே தந்தை பெரியார் அவர்கள் அதே காரணத்திற்காக போராடினார்கள். அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.

கேவலமான பெயர்கள்

நம்முடைய முன்னோர்கள் நமக்கு வைத்திருந்த பெயர்கள் எல்லாம் நம்மை கேவலப்படுத்து வதாகவும், அருவறுப்பை உண்டாக்குவதாகவும் இருந்தது. தற்போது தமிழர்கள் தம் மக்களுக்கு வைத்துள்ள பெயர்கள் எல்லாம் தஸ், புஸ் என்று புரியாத மொழியாக உள்ளது. அதனால் தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் பெயர் மாற்றம் செய்து கொண்டோம்.

தொல்.திருமாவளவனுக்கு பாராட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் அன்பிற்குரிய தொல்.திருமாவளவன் அவர்களை நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இந்த மோசமான பெயர் களை எல்லாம் மாற்றி நல்ல தமிழ் பெயர்களை தமது தொண்டர்களுக்கு வைத்துள்ளார் பாருங்கள் அது சாதாரண காரியம் அல்ல.

குருதிக்கொடைக்கு ஜாதியில்லை

இங்கே எங்களது கழக மாவட்டச் செயலாளர் குருசாமி அவர்கள் பலமுறை குருதிக்கொடை செய்துள்ளமைக்காக அவரது தொண்டறத்தைப் பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவரால் கடந்த மாதம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த குருதிக்கொடை செய்யும் காரியம் இருக்கின்றதே அதுவே ஒரு ஜாதி ஒழிப்பு திட்டம் தான்.

இந்த இந்த ஜாதிகாரர்களுக்கு, இந்த ஜாதியினுடைய இரத்தம் தான் செலுத்தவேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறதா? இரத்தத்திலே பிரிவுகள் உண்டு. அந்தந்த பிரிவு உள்ளவர்களுக்கு, அந்தந்த இரத்தம் தான் செலுத்த வேண்டும் எல்லா ஜாதி மக்களும் எந்த மொழி பேசினாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த பிரிவு இரத்தம் அவரவர்களுக்கு பொருந் தும் போது, இதிலே ஜாதி எங்கிருந்து வந்தது? போன்ற அறிவார்ந்த கேள்விகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

லைவர் பதவி பெறும் வழி

நம் நாட்டில் தேர்தல்களில் பதவிகள் பெறுதல் பட்டம் பெறுதல், சர்க்கார் உத்தியோகம் பெறுதல் முதலிய பல காரியங்கள் பெரும்பாலும் முக்காலே மூணு வீசமும் கண்ணியக் குறைவாலும் பொய்ப் பிரசாரத்தாலும் இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகின்றன என்பதைச் சத்திய நெறியுடைய எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஆனால் காங்கிரஸ் பிரசிடெண்ட் என்கிற தானம் கொஞ்ச காலமாய் அப்படிக்கில்லாமல் தனிப்பட்ட மக்க ளின் சுதந்திரத்திற்கு விடப் பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டுப் பிரசாரம் பண்ணியும் பணம் செலவு செய்தும், பொய் வாக்குத்தத்தம் செய்தும் இதுவரை யாரும் அந்த தானத்தை அடைந்ததில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததின் பலனாய் இப்போது இதற்கும் மற்ற தேர்தல்களைப் போலவே யோக்கியதைகள் ஏற்பட்டு போய்விட்டது.

ஏனெனில் மற்ற தேர்தல்களையும், பட்டங் களையும் உத்தியோகங்களையும் பெற நமது பார்ப்பனர்கள் என்னென்ன முறைகள் கையாண்டு அதன் யோக்கிய தையை கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும் பிரவேசித்து விட்டார்கள்.

ஸ்ரீமான் எ.சீனி வாசய்யங்காருக்குக் காங்கிரஸ் பிரசிடெண்ட் வேலை கிடைப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு சென்னை பார்ப்பனர் போய்ப் பிரசாரம் செய்யவும் ஆங் காங்குள்ள காங்கிரஸ் கமிட்டிகளில் பிரதான மாயுள்ளவர்களில் யாராவது பணங்காசு வாங்கக் கூடியவர்களாயிருந்தால் அவைகளையும் திருப்தி செய்தும், பதவி ஆசையுள்ள வர்களாயிருந்தால் அவை களையும் பற்றி பொய் வாக்குத் தத்தம் செய்தும் ஓட்டுகள் பெறப் பிரசாரம் செய்ததால் உண்மையிலேயே அதிக ஓட்டுப் பெற்றவரும் இன்னும் பெற இருந்தவருமான டாக்டர் அன்சாரி அவர்கள் இவற்றை அறிந்தே இந்த பிரசிடெண்டு உத்தியோகம் என் போன்றவர்களுக்கு லாயக்கில்லை; இதெல்லாம் பெரிய மனிதர்கள் என்கிறவர்களுக்கு வேண்டிய பதவி என்று பரிகாசமாய்ச் சொல்லி விலகிக் கொண்டார்.

அடுத்தபடி அதிக ஓட்டுக் கிடைக்கப் பெற இருந்த ஜனாப் மஷருல்ஹக் என்னும் பெரியாரும் இவ்வித இழிவுப் பிரசாரத்தில் இறங்க மனமில்லாதவராகி இம்மாதிரி போட்டி போடுவதானால் எனக்கு வேண்டாம், கண் ணியமாய், வருவதானால் வரட்டும் என்றே சொல்லி போட்டியில் இருந்து அறவே விலகிவிட்டார்.

எவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதானாலும் எவ்வளவு பரிசுத்தமானதானாலும் நமது பார்ப்பனர் அதில் கலந்தால் அதன் யோக்கியதை பார்ப்பனியத்திற்குத் தகுந்தபடி ஆகிவிடுகிறது என்பதைப் பொது ஜனங்கள் அறிவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 05.09.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ந் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க் கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்


எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.

அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும். 2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம்.

மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற் சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம்.

அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்


எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.

அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும். 2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம்.

மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற் சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம்.

அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் விளம்பர சபை

நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் காங்கிரஸ் விளம்பர சபை என்பதாக ஒரு யோக்கியப் பொறுப் பற்ற தும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெ ளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லா தாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரில் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் எழுதி வருகிறார்.

இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டிய தில்லை. இவை ஒவ் வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற் கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம் என் பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம்.

அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத்தில் மூடு வண்டியில் அகப் பட்டுத் திக்கு முக்காடி இறந்துபோன சம்பவத்தைக் குறித்து 22.9.1926ந் தேதி சுதேசமித்திரனில் பார்ப் பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியார் இதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும் மற்றவர்கள் செய்த தற்கு விரோதமாயிருந்த தாகவும் எழுதியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம். மூடு வண்டி கொலை பாதகம் விஷயமாய்ச் சட்டசபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய தானத்தையும் ஒரு மந்திரிக்குக் காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற் காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய்ப் பலமாய் வாதாடியவரும் அந்த ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவரே ஆவர்.

ஆனால் அக் கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்தவர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலையாள மாப்பிள்ளைகளுக்கு அனுகூலமாயும் சில வெள்ளைக் காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால் தான் அந்த ரிப்போர்ட் வெளியில் வராமல் போய்விட்டது.

ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதியாக இருந்தார் என்பதை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒப்புக் கொள்ளு கிறாரா? மறுக்கிறாரா? இம்மாதிரி வேண்டுமென்றே ஜனங்களை ஏமாற்ற இந்தப் பார்ப்பனர் எழுதும் எழுத் தும், பேசும் பேச்சும் சூழ்ச்சித் தனமானது என்று இதிலி ருந்தாவது பொது ஜனங்களுக்கு விளங்கவில்லையா?

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்ற வாசகத்தைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படும்! கழகக் குடும்பங்களின் சந்திப்பில் தமிழர் தலைவர்

கண்கொடுத்தவனிதம், ஜூன் 29- கடவுள் இல்லைஎன்று முதன் முதலாக தந்தை பெரியார் அவர்கள் பாடம் நடத்தி அதற்கான வாசகங்களைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பர் மாதம் அய்யா பிறந்த நாளில் திறக்கப்படும் என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

கண்கொடுத்தவனிதத்தில் சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

43 ஆண்டுகால போராட்டம்

திராவிட விவசாயப் பெருங்குடி மக்களாக இருக்கக் கூடிய உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாள்களாக ஆகின்றன என்பதற்காகவும், அதேநேரத்தில், இந்த வட்டாரத்தில் நாம் திட்ட மிட்டிருந்த செயல்கள், சரியான நடைமுறை வேண் டும் என்பதையொட்டியும், அதேபோல, நம் முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்கிய அந்தப் போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகவேண்டும்;

அதிலே குறிப்பாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும், பார்ப்பனர்கள் மட்டும்தான் தமிழன் கட்டிய கோவிலுக்குள்ளே மணியாட்ட வேண்டும் என்று இருப்பதை மாற்றி, மிகப்பெரிய அளவில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெற வேண்டும் என்பதற்காக, பெரியார் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அளவிலே, ஏறத்தாழ ஒரு 43 ஆண்டுகாலம் தொடர்ந்து நாம் போராடி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகவேண்டும் என்பதற்கு முயற்சிகள் எடுத்து, தனி சட்டம் ஒன்றை இயற்றி, அதனடிப்படையில், நம்முடைய மாணவர் களை 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி தேர்ந் தெடுத்தார்கள். தேர்ச்சி பெற்ற 206 மாணவர்களில் பார்ப்பன மாணவர்களும் உள்ளனர்.

ஆகஸ்டு முதல் தேதி அறப்போராட்டம்

இவர்களுக்குப் பணி வழங்கக்கூடிய நேரத்தில், சிலர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி முடித் தவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்டு முதல் தேதி அறப் போராட் டத்தை நடத்த உள்ளோம்.

நம்முடைய தாய்மார்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் இவர்களையெல்லாம் நாம் சந்திப்பது வழமையான ஒன்றுதான். இது ஒன்றும் புதுமை யல்ல.

பெண்கள் சிறைக்குச் செல்லவேண்டும்; ஆண்கள் வீட்டில் இருக்கட்டுமே!

நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கிறீர்கள். நம்முடைய சகோதரிகள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து அகமும், முகமும் மலர, அய்யா நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி இருக் கின்றது பாருங்கள், அதற்கு எல்லையே இல்லை.

கண்கொடுத்தவனிதத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மரியாதை

தமிழ் ஓவியா said...

நம் அறிவு ஆசான் அய்யா பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இறுதியாக நடத்தக்கூடிய அளவிற்கு, துணிந்து நாம் இறங்க வேண்டும். இதுவரையில் ஆண்களை போராட்டத் திற்கு அனுப்பிவிட்டு, பெண்கள் வீட்டில் இருப்பார்கள். ஆனால், இந்த முறை ஆண்கள் வேண்டுமானால் வீட்டில் இருக்கட்டும்; பெண்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

ஏனென்றால், வீட்டில் நீங்கள் தான் வேலை செய்கிறீர்கள்; 100 நாள் திட்டத்திலும் வேலை செய்கிறீர்கள். கொஞ்ச நாள் நீங்கள் ஓய்வெடுக்கவேண்டுமென்றால், அதற்குச் சரியான வழி போராட்டத்தில் பங்கேற்பதுதான். சிறைச் சாலையில் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, மூன்று மாதமோ இருந்தால், நீங்கள் ஓய்வாக இருக்கலாம். அப்பொழுதுதான் ஆண்களுக்கு உங்களுடைய அருமை புரியும்.

விடயபுரத்தில் நினைவுச் சின்னம்!

கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று தந்தை பெரியார் அவர்கள் விடயபுரத் தில்தான் முதன்முறையாக சொன்னார்கள். அதற்காக வரலாற்றில் புகழ்வாய்ந்த அந்த இடத்தினை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று ஒரு கல்வெட்டினை அமைத்தோம். பல காரணங்களால் அந்தப் பணி நிறைவடையாமல் இருக்கிறது. இப்பொழுது வரும்பொழுது அந்த இடத்தினைப் பார்த்தோம்; கல்வெட்டினைச் சுற்றி காடுபோல் உள்ளது. அங்கே இருக்கின்ற தோழர்களும், பொறுப்பாளர்களும் அந்த இடத்தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்று சொன்னார்கள்; அவர்களின் விருப்பப்படி முதலில் அந்த இடத் தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது!

அடுத்தபடியாக, இங்கே வரும்பொழுது பள்ளிக் கூடத்தின் கூரை சரியில்லை என்று சொன்னார்கள்; 15 ஆண்டுகளுக்கு முன்பு கூரை போட்டது; இந்தப் பகுதி அடிக்கடி மழை, வெள்ளம், புயலால் தாக்கப்படுகின்ற பகுதியாகும். ஆகவே கூரை பழுதடைந்துவிட்டது என்று சொன்னார்கள்; நம் அறக்கட்டளை பொறியாளர்களை வரவழைத்து, அந்த பள்ளியைப் பார்வையிட்டு, அந்தப் பணிகளை உடனடியாக செய்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் கட்டடம் என்று பெயர் வைத்திருக்கிறோம்; பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. ஆகவே, அக்கட்டடத்தினை சரி செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப் படும்.

தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும்!

பருத்தியூரில் அய்யா பிறந்த நாள் விழா என்றால், மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், எடைக்கு எடை பொருள்கள் கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பகுதியில் ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்று நினைத்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். அந்தக் கட்டடம் கட்டுவதற்கு நாம் போட்ட பட்ஜெட்டைவிட அதிக நிதி தேவைப் படுகிறது. தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும். அய்யா பிறந்த நாள் விழாவையொட்டி அந்தக் கட்டடம் திறக்கப்படும்.

கண்கொடுத்தவனிதத்தில் நடைபெற்ற சுயமரியாதைக் குடும்ப விழாவில் பங்கேற்ற கருஞ்சட்டைக் குடும்பத்தினர் (28.6.2013).

விடயபுரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி, ஸ்தூபி போன்று எழுப்பலாமா என்று பல பேரிடம் கருத்துக் கேட்டுள்ளோம்.

இந்த இயக்கம் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் வாழும் இப்பகுதியில், கல்வி உதவி, மருத்துவ உதவி நம் இயக்கத் தோழர்களுக்கு தேவைப்பட்டால், அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவ இந்த இயக்கம் பின்வாங்காது, நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மேலும் பல கருத்துகளைக் கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கெட்டதிலும் - ஒரு நல்லது

உத்தரகாண்ட் வெள்ளைத்தின் சீற்றத்தினால் ஊர்களே அழிந்தன - கடவுள் குடி கொண்டு இருப்பதாக நம்பிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம் புதைந்து போயின.

இன்றைய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கும் பகுதிகளில் நிலத்தின் தாங்கும் திறன் குறைவாக இருப்பதால் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். மலைப் பகுதிகளில் உள்ள கோயில்கள், சுற்றுலாத்தலங்கள் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏழுமலையானை நம்பிப் பயனில்லை. தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் என்று நம்பிக் கையைக் கட்டிக் கொண்டு அழுதால் நம் உயிர் தீர்ந்து விடும் என்ற முடிவுக்கு வந்தவரை சந்தோ ஷம்தான்! உத்தரகாண்ட் இயற்கைச் சீற்றம் கடவுள் நம்பிக்கைக்குச் சாவு மணி அடிக்குமேயானால் கெட்ட திலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

பேயா - பிசாசா - ஆவியா?

சென்னை செங்குன்றம், நார வாரிக் குப்பம் பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் யாகம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய் மற்றும் உதிரிப் பூக்கள் அலுவலக நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் வைக் கப்பட்டுள்ளன. திருஷ்டி சுற்றப்பட்ட பூசனிக்காய் உடைக்கப்பட்டு, வாயிலில் உள்ள கொடிக் கம்பத்தின் அடியில் வைக்கப்பட்டது. ஏனிந்த தெருப்புழுதி? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல் அலுவலராக இருந்தவர் வெளி யூருக்கு மாற்றப்பட்டு 10 மாதங்கள் ஆகி விட்டனவாம். அவர் மன நிலை பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி இறந்து விட்டாராம். அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப் படவில்லை. சிறிது காலம் கழித்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் இறந்து விட்டா ராம்.

இந்த நிலையில் இரவுப் பாது காவலர் ஒருவர் சில கதைகளைக் கிளப்பி விட்டுள்ளார். இரவு நேரத்தில் அலுவலகத்தில் யாரோ நடமாடுவது போல தெரிகிறது. பதிவேடுகள் புரட்டும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டுள்ளார்.

நம் மக்களைக் கேட்க வேண் டுமா? பேய் நடமாடுகிறது! - ஆவி நடமாடுகிறது என்று கிளப்பி விட்டுள்ளனர்.

அரசுத் துறைகளில் பணியாற்று வோர்க்கு ஊர் மாற்றம் என்பதெல் லாம் சர்வ சாதாரணம்தானே. ஒரு அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் மரணம் அடைவது என்ன அதிசயமான ஒன்றா?

புத்தியைச் செலுத்தாமல், புரளியைக் கண்டு அஞ்சினால் இத்தகைய மூடத்தனங்கள்தான் முளைக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவோர் என்ன சொல்லு கிறார்கள்?

பேயும் இல்லை; ஆவியும் இல்லை. பேரூராட்சிப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யாகம் வளர்த்தோம் என்று சமாதானம் கூறுகின்றனர்.

இது பெருமாள் போய் பெத்த பெருமாள் வந்த கதைதான்! ஒரு முட்டாள்தனத்துக்கு இன்னொரு முட்டாள்தனம் சமாதானம் ஆகுமா?

பகுத்தறிவுச் சிந்தனை மனித னுக்கு எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதாவது புரிந்தால் சரி.

தமிழ் ஓவியா said...

வில்லியநல்லூரில் நடந்ததென்ன?

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வில்லியநல்லூர் கிராமம். 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில நாட்களுக்குமுன் அடுத்தடுத்து அய்வர் மரணம் அடைந்தனர். அவ்வளவுதான். மூட நம்பிக்கை தொற்று நோய்ப் பற்றிக் கொள்ளுமே! ஆவி சேட்டைதான் காரணம் என்று எல்லா ஊர்களிலும் இருப்பதுபோல இந்த ஊரிலும் இருந்த வெட்டிப் பேச்சுப் பேர் வழிகள் கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

இந்த மூடநம்பிக்கை தகவலை அறிந்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகத் தோழர்கள் தென்னவன், யாழ் திலீபன், மஞ்சை அழகரசன் ஆகியோருடன் நேரில் சென்று ஊரில் விசாரணை நடத்தினர்.

இறந்தவர்களில் ஒருவர் முதியவர்; இன்னொருவர் உரிய மருத்துவ உதவியின்றி காமாலை நோய் காரணமாக உயிரிழந்த பெண்.

ஊர் நிலைமை எப்படி? சுகாதாரச் சீர்க்கேட்டின் உச்சம். எங்குப் பார்த்தாலும் குப்பை விரிகோலம் தான்! சாக்கடை சங்கமம்தான்! விளக்கு வெளிச்சம் கூட சரியாக இல்லை. 2013ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு கிராமம்.

சுகாதாரச் சீர்கேடு காரணமாக வியாதிகள் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் இங்கு உண்டு என்று கழக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் முதல் தேதி அவ்வூரில் மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் பிரச்சா ரத்தைத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வில்லியநல்லூரில் பொதுச் செய லாளர் தலைமையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட இது போன்ற பணிகளில் ஆங்காங்கே கழகத் தோழர்கள் ஈடுபடுவார்களாக!

தமிழ் ஓவியா said...


திருநங்கையர்களை அவமானப்படுத்துவதா? திமுக தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 30- மூன்றாவது பாலினத்வராகிய திருநங்கையினரை 9 என்ற எண் குறியிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா முழுவதும் ஆறாவது பொரு ளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப் பிடம் போன்ற எல்லா விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட் டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. திமு கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங் கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச் சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கை யர்களைக் குறிக்கும் வகையில் T (Transgender) என்ற எழுத்து குறிப்பிடப் பட்டது.

முதல் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபற்றி அப்போதே 16.3.2008 தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், “Third Sex gets its due in T.N. - Karuna Govt. is Country’s First to issue Ration cards with “T” as Gender” என்ற தலைப்பில் பெரிதாக எழுதியிருந்தது.

ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டுவிட்டு, ஆண் பெண் அல்லாத பாலினப்பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, ஏற்கெனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப் பிட்டுத்தான் கிண்டல் செய்கிறார்கள். இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவ மானப்படுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்ட போது, இந்தப்படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய் திருந்தாலும், மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.