Search This Blog

22.6.13

ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் தொழிற்கல்வியா?

மூன்று செய்திகள் மீதான விவாதங்கள்
  • கோயில் பிசினஸ்
  • இந்தியாவின் ஆன்மா?
  • குலக்கல்வி திட்டம் தொழிற்கல்வியா?

செய்தி -1

கன்னியாகுமரியில் திருப்பதி மாதிரி கோயிலுக்கு பூமிபூஜை!
கன்னியாகுமரி, ஜூன் 4: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமையவிருக்கும் சுவாமி ஏழு மலையான் மாதிரி கோயிலுக்கான பூமிபூஜை, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் கடந்த 28.2.2010ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம், கன்னியாகுமரியில் வெங்கடேஸ்வர பெருமாளுக்கு மாதிரி கோயில் கட்ட முடிவு செய்தது.

கோயில் கட்ட 5.5. ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் தானமாக தர முன்வந்தது. இதையடுத்து, கோயில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்தது.
இந்த நிலையில் ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் கோமாதா பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, ஸ்ரீநிவாச பூஜைகள் சங்கல்பம் ஆகியன நடை பெற்றன.

இதையடுத்து, காலை 6.37 மணிக்கு பூமிபூஜை நடத்தப்பட்டது. பூஜையின்போது நவதானியங்கள், நவரத்னம், பஞ்சலோகம் ஆகியன பூஜை நடைபெற்ற இடத்தில் தெளிக்கப் பட்டன. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து வந்தி ருந்த அனைத்துப் பக்தர்களுக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூமி பூஜை நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் கே.பாபிராஜு, நிர்வாக அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம், சென்னை கமிட்டித் தலைவர் ஆனந்த குமார் ரெட்டி, உறுப்பினர்கள் சிவபிரசாத், கிருஷ்ணாராவ், மோகன் ராவ், விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொரு ளாளர் ஹனுமந்தராவ், தமிழக பா.ஜ.க., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சாமி தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
(தினமணி _- 5-_6_-2013, பக்கம் 14)

1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் அகில இந்திய இந்து மாநாடு  நடை பெற்றது. அம்மாநாட்டில்  சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஓர் உண்மையை அவரை அறியாமலேயே கக்கிவிட்டார்.

மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள் மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும் மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் (குஹளுழஐடீசூ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும் பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்று ஒரே ஒரு தடவை உண்மையைச் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

திருப்பதி வெங்கடாஜலபதி இந்தியாவின் மிகப் பெரிய கல் முதலாளி. மொட்டை அடிப்பதால் கிடைக்கும் தலைமுடிகூட கோடிக் கணக்கில் பணத்தை கொண்டுவந்து கொட்டுகிறது.

வியாபாரம் பெருகி விட்டால் பிராஞ்சு ஆபீஸ் திறக்க வேண்டியது தானே - அதுதான் கன்னியாகுமரியில் ஆரம்பம்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் என்றால் அந்த ஊருக்கென்று தலப் புராணம் வைத்திருப்பார்களே - பல அற்புதக் கதைகளை வைத்திருப் பார்களே. இப்பொழுது கன்னியா குமரியில் கட்டப்படும் ஏழுமலையான் கோயிலுக்கு என்ன தல புராணம் சொல்லப் போகிறார்கள்? (இதற்குமேல் எதையாவது அவிழ்த்துவிட்டால்தான் உண்டு)

விசுவஹிந்து பரிஷத் -_ சிறீரங் கத்திலே மாநாடு நடத்தி, வழிபாட்டுக்கு வசூல் செய்யக்கூடாது என்று தீர்மானம் போட்டார்கள்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பக்தி வியாபாரம் படுத்துவிடுமே - பார்ப்பனச் சுரண்டலுக்கு மூடுவிழா நடத்த வேண்டி இருக்குமே - அது நடக்குமா என்ன?
விசுவ ஹிந்து பரிஷத் துகள் வெறும் மாநாடு நடத்தி ஏட்டில் தீர்மானம் போட்டால் போதுமா?

கோயில்களில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மறியல் செய்ய வேண்டியது தானே. செய்வார்களா?

இந்த நேரத்தில் இன் னொன்று நினைவிற்கு வந்து தொலைகிறது.
திருவாளர் சோ. ராமசாமி துக்ளக்கில் கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லி யிருந்தார்.

கேள்வி: சென்னை தீவுத்திடலில் திருப்பதி ஏழுமலையானின் சீனிவாச கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?

பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேசப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை. (துக்ளக், 23.4.2008, பக்கம் 17) என்று எழுதினாரே!

திருவாளர் சோவுக்கே பொறுக்கவில்லை - இந்தப் பக்தி வியாபாரத்தைக் கண்டு. வசூல் செய்து திருவிழாக்களை நடத்தி மக்களை ஈர்க்காவிட்டால் கடவுளைப் பற்றி யார் நினைக்கப் போகிறார்கள்?

பணமும், பிரச்சாரமும் இல்லை யென்றால் கோயிலாவது கடவுளாவது _- வெங்காயமாவது!

செய்தி -2

ஆன்மீகம் பற்றி திருவாளர் குருமூர்த்தி

அகோபில மடம் அழகிய சிங்கரின் வாழ்க்கை வரலாற்றை கவிஞர்வாலி வசன கவிதையால் ஆன நூல் ஒன்றை எழுதி அதன் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

குமுதம் வரதராஜ அய்யங்காரின் ஏற்பாட்டில் தடபுடல்! கலந்துகொண்ட பிரமுகர்களின் பெயர்களைப் பார்த்தால் அந்த விழாவின் கன பரிமாணத்தை சாங்கோபாங்கமாகவே தெரிந்து கொள்ளலாம்.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் நூலை வெளியிட, கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படும் குருமூர்த்தி அய்யர் பெற்றுக் கொண்டுள்ளார்.

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, பாலச்சந்தர், முக்தா சீனிவாசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அக்கிரகாரப் பெருவிழா என்பது சொல்லாமலே விளங்கிவிடும். ஆழ்வார் மய்யம் நடத்தும் திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலந்து கொண்டதும் சரி பொருத்தம் தானே!

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் ஒலிபெருக்கிக்கு முன் வந்து உரை நிகழ்த்தினார்.

அழகிய சிங்கரின் பக்தன் நான். ஆச்சாரியாரின் அனுக்கிரகமும் ஆசியும்தான் என் வாழ்க்கையின் அச்சாணி. என்னை வழிநடத்துவதும் அதுதான். 

ஆன்மீகமும், தெய்வீகமும் இங்கே இணைஞ்சிருக்கு. அதனால் இது ஒரு அற்புத விழா என்று தன் பிறவிக் கடமையைச் செய்தார்.

அடுத்து வந்தாரே பார்க்கலாம் ஆடிட்டர் குருமூர்த்தி. தனக்கே உரிய பாணியில் பேசியதைக் குமுதம் எழுதுகிறது:

ஊழல் செய்தவர்கள் இங்கே கொண்டாடப்படுகிறார்கள். அதைச் செய்தவர்கள் யாருக்கும் கூச்சமில்லை. அதனால் தொடர்ந்து தவறு செய்யலாம்னு நெனைக்கிறாங்க. இருந்தாலும் இன்னமும் இந்தியாவின் ஆன்மா கெடாமல் இருக்கு. அதற்குக் காரணம் ஆன்மீகம்தான் என்று சொல்லி பார்வையாளர்களின் அப்ளாசை அள்ளினார். (குமுதம் _- 19.6.2013 _- பக்கம் 13)

ஆமாம், உண்மைதான் - ஆன்மீகம் என்பது காஞ்சி சங்கராச்சாரியார் வடிவத்தில்தானே நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஆன்மா கெடாததற்கு அவாளின் லோகக்குரு ஜெயேந்திரர் நடமாடிக் கொண்டு இருப்பதுதான் காரணம்.

அவருடைய ஒழுக்கம் உள்ளூரையும், இந்தியாவையும் தாண்டி ஓகோ என்று ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அனுராதா ரமணன் என்ற பார்ப்பன பெண் எழுத்தாளர் ஜெயேந்திரர் என் கையைப் பிடித்து இழுத்தார் என்று கண்ணீரும் கம்பலையுமாக கதறிய காட்சியைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின அல்லவா! ஆமாம், ஆன்மிகம் அங்கே குடிகொண்டுதான் உள்ளது.  விடாது இதே குருமூர்த்தியும் சோ ராமசாமியும் சேர்ந்துகொண்டு அந்தப் பெண் எழுத்தாளர் மீது இல்லாததும் பொல்லாததுமாக பழியைச் சுமத்தவில்லையா? (துக்ளக் - 29-12-2004)

அதற்கு பதிலடி கொடுத்தார் அனுராதா ரமணன். சங்கரமடத்தில் என் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் லோகக்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஆபாசமாக நடந்து கொண்டதைச் சொல்லி தலையில் அடித்துக் கொண்டாரே. இவ்வளவுக்கும் அந்த அம்மையார் பார்ப்பனர்தான். சங்கராச்சாரியார் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர்தான்.

சங்கராச்சாரியாரின் அழைப்பின் பேரில் (ஒரு பத்திரிகை நடத்துவது தொடர்பாக) சங்கரமடத்துக்குச் சென்றபோது தன்னிடம் லோகக்குரு நடந்துகொண்ட ஆபாசமான - கேவலமான செயலுக்குப் பிறகுதான் குமுறினார். காவி உடையில் நடமாடும் காம நரியின் உண்மை உருவத்தின் முகத்திரையைக் கிழித்தார்.

காஞ்சி ஜெயேந்திரரையும் காஞ்சி மச்சேஸ்வரர் கோயில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன்களையும் பார்த்த பிறகும்கூட, இந்தியாவின் ஆன்மாவை ஆன்மீகம்தான் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்று சொல்லுவதற்கு  உண்மையிலேயே அளவுக்கு மீறிய அகம்பாவமும் ஆரியக் குணமும்தான் இருக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.
அது சரி... அது என்ன இந்தியாவின் ஆன்மா? அவர்தான் விளக்கவில்லை. செய்தியை ஓகோ என்று வெளியிட்டு மகிழ்ந்திடும் குமுதமாவது அடுத்த இதழில் எழுதுமா?

செய்தி -3

ராஜாஜியின் குலக்கல்வி திட்டம்
ராஜாஜி 1953 மே முதல் புதிய கல்வித் திட்டம் கொண்டுவந்தாராம். அதைக் குலக்கல்வி திட்டம் என்று தவறான பெயர் கொடுத்துக் கெடுத்து விட்டார்களாம் - கூறுகிறது தினமலரின் வாரமலர் (16.6.2013 -பக்கம் 8,9)
80 ஆண்டுகளுக்குப் பிறகும் அவாளின் ஆச்சாரியார் அரசியலி லிருந்து விரட்டப்பட்ட ஆத்திரத்திலிருந்து அவாள் விடுபட வில்லை என்று தெரி கிறது.

கல்கி இதழும் இதே பாணியில் எழுதியதுண்டு. ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒருவேளை தொழில் என்றார். அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளை யும், ஆசிரியர்களை யும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்து வத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும் அதில் இழிவு இல்லை என அறிவுறுத் தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது. தொழில் உற்பத் திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது. வேலையில்லாத் திண்டாட் டத்தைப் போக்குவது.

தொழிற் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாய் இருந்தது அவ்வளவுதான். (கல்கி - 1980 ஜூலை)

ஆச்சாரியாரின் அந்தக் குலக்கல்வி திட்டத்தின் காரணமாக ஆயிரங் கால் சிங்கமாக தந்தை பெரியார் சீறி எழுந் ததன் விளைவாக ஆச்சாரியாரின் அரசியல் பொதுவாழ்க்கையே அஸ்தமனமானது. அந்த ஆத்திரம் அவாளை இன்று வரை சுளுக் கெடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஆச்சாரியார் கொண்டு வந்தது என்னவோ தொழிற் கல்வி திட்டமாமே - அப்படியென்றால் அவனவன் அப்பன் தொழிலைத்தான் பையன் செய்ய வேண்டும் என்று நிபந்தனை வைத்தது எந்த அடிப்படையில்?
பள்ளிக்கூடங்களிலேயே தொழிற் கல்வியைக் கற்பிக்கக் கூடாதா? சிரைக்கிறவன் மகன் சிரைக்கவும், வெளுக்கிறவன் மகன் வெளுக்க வும்தான் கற்றுக்கொள்ள வேண்டுமா? பார்ப்பார வீட்டுப் பிள்ளைகள் எந்தத் தொழிலை செய்யுமாம்? பள்ளியில் படிக்கும் பொழுதே வக்கீல் தொழிலைச் செய்வார்களா? உயர்நிலைப் பள்ளி யில் படிக்கும் பொழுதே பாப்பாரப் பிள்ளைகள் டாக்டர் தொழிலைச் செய் வார்களா?

தந்தை பெரியார் கடுமையாக எதிர்த் தார் என்பது உண்மை தான். பெட்ரோலும், தீப்பந்தமும் தயாரா கட்டும் _ - அக்ரகாரத் திற்குத் தீ வைக்க  நாள் குறிப்பிடும் வரை காத்திருங்கள் என்று சொன்னது உண்மைதான்.

ஆச்சாரியாரின் அந்தக் கல்வித் திட்டத்தை அவர் சார்ந்த காங்கிரஸ் காரர்களே _ காமராசர் உட்பட எதிர்த் தார்களே. - அதற்கு எந்த உள்நோக் கத்தைக் கற்பிக்கப் போகிறது இந்தக் கல்கி, தினமலர் வகையறாக்கள்?

இன்னொரு கேள்விக்கு நாணய மாக பதில் சொல்லட்டும் பார்க்கலாம். 6000 கிராமப் பள்ளிகளை ஏன் இழுத்து மூடினார் ராஜாஜி? 1937இல் வந்தபோதும் 2500 கிராமப் பள்ளிகளுக்கு ஏன் மூடுவிழா நடத்தினார்? 1952இல் வந்தபோதும் பள்ளிகளை இழுத்து மூடினாரே. அதுகூட தொழிற்கல்வியைப் பிள்ளை களுக்கு ஊட்டத்தானோ!

தினமலர், கல்கி மட்டுமல்ல _- துக்ளக்கிலும் திருவாளர் சோ அப்படித்தான் எழுதினார்.

ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர். (துக்ளக் _- 15.7.1988) என்று அழுது புலம்பினாரே திருவாளர் சோ.

பார்ப்பனர்களைப் புரிந்துகொள்ள இது ஒன்று போதாதா?

----------------- மின்சாரம் அவர்கள் 22-6-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

51 comments:

தமிழ் ஓவியா said...


பிரபஞ்சம் உண்டானது எப்படி?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம்(யுனிவர்ஸ்) எப்படி தோன்றியது என்றால் பெரு வெடிப்பு கொள்கை என்று எளிதாக கூறிவிடுவோம், அதாவது பாரிய அழுத்ததால் சிதறும் அணுத்துகளின் முழுப் பரிமாணம் இந்த பிர பஞ்சம், நாம் அண்ட வெளியை நோக்கி பயணித் தோமானால் இதற்கான விடை கிடைக்கும், ஒளியின் வேகத்தில் நாம் நமது பூமியில் இருந்து பயணித்தோமென் றால், நமது சூரிய குடும்பத்தை கடக்க சுமார் 20 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை ஆகும், சூரிய குடும்பத்தை கடந்து நமது பால்வெளி மண்டலத்தின் எல்லையை கடக்க குறைந்த 200 ஆண்டுகள் வரை ஆகும். நமது பால்வெளிமண்ட லத்தை கடந்து அடுத்து உள்ள கொடுங்கதிர் மையத்தை (காஸ்மிக்) கடக்க 500 வருடங்கள் ஆகும், நமது பயணம் ஒளிவேகம் குறையாமல் தொடர்ந்தால் பால்வெளிமண்டலக் கூட்டங்களை கடந்து நீராவிக்கூட்டு திரள் மண்டலங்களை கடக்க குறைந்த பட்சம் 3000 ஆண்டுகள் வரை பயணம் செய்யவேண்டும், அங்கிருந்து 7000 ஆண்டுகள் பயணிக்க பிர பஞ்சத்தின் எல்லை நமக்கு தெரியவரும், நாம் பிரபஞ்சத்தின் எல்லையை அடையும் போது நாம் ஒளிவேகத்தை விட 400 மடங்கு அதிகம் பயணித்துக் கொண்டு இருப்போம், (அதாவது பூமியில் இருந்து பிரபஞ்ச எல்லையை சென்றடைய சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்) பிரபஞ்சத்தின் விளிம்பை கடக்கும் போது நமது வின்கலத்தின் வேகம் அறிவியல் கணக் கீட்டிற்கு எட்டாத அளவிற்கு கூடிவிடும் (இதற்கு எடுத்துக்காட்டாக அந்த வேகத்தில் நாம் மீண்டும் புறப்பட்டு வந்தால் வெறும் 120 ஆண்டுகளுக்குள் பூமிக்கு வந்து சேர்ந்து விடுவோம்) இந்த வேகத்தில் நாம் பயணித்து அண்டவெளியை (ஸ்பேஸ்) அடைந்த உடன் அங்கு ஏற்படும் அழுத்தம் நம்மை நமது வின்கலத்தோடு சேர்த்து அணுவளவு சிறிய தாக்கிவிடும், அந்த அளவிற்கு அழுத்தம் இந்த அழுததம் தான் புதிய பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. இங்கு ஒரு புதிய கொள்கை ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது, பிக் பாங் என்னும் பெரு வெடிப்பு கொள்கை என்பது தன்னைத்தானே ஏற்பட்ட தல்ல, அண்டவெளியில் மிகவும் அதீத அழுத்ததால் கட்டுக் கடங்காத வேகத்தில் பயணிக்கும் அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி யதால் தான் புதிய ப்ரபஞ்சம் உருவா கிறது. இதை தான் சமீபத்தில் ஸ்வீசர் லாந்தில் மனித குலத்தின் மிகப்பெரிய அணுக்கரு மோதல் சோதனை மூலம் உறுதிபடுத்தியுள்ளனர். ஞிணீக்ஷீளீ னீணீமீக்ஷீ ணீஸீபீ நிஷீபீ ஜீணீக்ஷீவீநீறீமீ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் கட்டுரை. தமிழில்: சரவணா இரா

தமிழ் ஓவியா said...


கடலில் மாசுகலப்பதை நிறுத்தாவிட்டால்..!


வடதுருவப்பகுதியான ஆர்டிக் கிலும் தென்துருவமான அண்டார்டிக் காவிலும் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையில் சுற்றுபுறச்சூழல் பாதிப்பின் காரணமாக கடுமையான மாற்றம் காணப்படுக்கிறது, முக்கியமாக துருவபகுதியில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்க விகிதம் திடீரென குறைந்துகொண்டே வருகிறது, இதற்கு முக்கிய காரணம் துருவப்பகுதியில் வாழும் உயிரினங்களின் உணவு பிரமீடில் ஏற்படும் பாதிப்பே ஆகும். இணப்பெருக்கம் விகிதம் குறைய காரணமாக இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருவப் பகுதியில் வாழும் உயிரினங்கள் பெரும்பாலும் தாவரங்களை உணவாக உட்கொள்பவைகள் அல்ல இந்த உயிரினங்களின் உணவு பிரமீட்டில் துருவக்கரடி கடற்சிங்கங்களை உண்ணும், கடற்சிங்கம் இறால் மீன்கள் மற்றும் பென்குவிங்களை உண்ணும், இறால் மீன்கள் கிரில்ஸ் எனப்படும் சிறு மீன்களை உண்ணும் சிறுமீன்கள் சில நுண்ணுயிர்களையும் பாசிகளையும் உண்ணும், கிரில்ஸ் மற்றும் சிறிய வகை மீன்கள் உலகம் முழுவதிலும் கடல் நீரோட்டம் வழியாக பயணிக்கிறது, இப்படி பயணிக்கும் போது மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களையும் சேர்த்து உணவாக கொள்கிறது. மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களில் ஈயம், காரியம், பாதரசம் மற்றும் சிலவகை ஆக்ஸி னேற்றம் பெற்ற வேதிப்பொருள்கள் (ஏகா:-தாமிரம்) இவற்றை உண்ணும் மற்றும் சுவாசிக்கும் சூழ்நிலைக்கு பாசிகள், சிறுமீன்கள் ஆளாகின்றன. இந்த நச்சுப்பொருள்கள் இந்த உயிரினங்களில் செல்களில் சேமிக்கப்படு கிறது, இறுதியாக இவற்றைமட்டுமே உணவாக கொள்ளும் துருவ உயிரி னங்கள் கரடி, சீல், மற்றும் திமிங்கிலம் போன்றவற்றின் இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்படுகிறது, விளைவு இவற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடலில் பாசிகள், நுண்ணுயிர்கள் மற்றும் இறால் மீன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இவற்றின் எண்ணிக்கை பெருக்கினால் கடலில் ஆக்ஸிசன் அளவு குறைந்து கடல்வெப்பநிலை கூடுகிறது.
கடல்வெப்பநிலை உயர்வடைவதால் புவிகாந்தப்புலத்தில் பாதிப்பு ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள 0.1 பாதிப்பின் காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு பார்வைத்திறன் குறைவு, காது கேளாமை, இரத்தஓட்டத்தில் மாற்றம் மற்றும் புத்திபேதலிப்பு போன்றவை அதிகமாகியுள்ளது.. கடலில் மாசு கலப் பதை நிறுத்தாவிட்டால் கூடிய விரை வில் மனித இனத்திற்கே பேரழி வைத் தரும் நிலை விரைவில் உருவாகிவிடும். -_ சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...


அதிர்ஷ்டசாலியா?


இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் மார்கரெட் ஹில்டா தாட்சர். இவர் தான் அந் நாட்டின் முதல் பெண் பிரதமரும் கூட!

சிறுவயதில் இருந்தே எல்லா வற்றிலும் முதல் மாணவி தான், தன்னம்பிக்கை அதிகம். ஒரு முறை கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் தாட்சர் முதல் பரிசு பெற்றபோது அவருடைய தலைமை ஆசிரியர் நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று தட்டி கொடுத்தார். தாட்சர் உடனே நான் ஒன்றும் அதிர்ஷ்ட சாலியல்ல. இந்தப் பரிசை பெற நான் தகுதியானவள் என்று வெடுக்கென்று பதில் கூறினார்
- ஆனந்த விகடன் 26.5.1949

தமிழ் ஓவியா said...


ஆபத்தோ ஆபத்து!


உலக வெப்பமயமாதலின் விளைவாக நடப்பு நூற்றாண்டின் இறுதியில் பூமியின் 42 சதவீதம் நிலப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகளவில் ஏற்படும் எனவும் ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. டோக்கியா பல்கலைக்கழகம், இயற்கை தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து நடத்திய ஆய்வில் தற்போதுள்ள உலக வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து 2100-இல் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டினால் வெள்ள அபாயம் 5.6 மில்லியன் முதல் 80 மில்லியன் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் உலகின் 29 முக்கிய நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனவும் இது ஒவ்வொரு 10 முதல் 50 ஆண்டுகளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

என்புருக்கி நோய் உறுதிமொழி உண்மையானது


என்புருக்கி நோய் என்பது எளிய நோய் அல்ல. அதற்குச் சிகிக்சை என்பது எளிது அன்று. மாதங்கள் கணக்கில் அந்நோய்க்குச் சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. மருந்துகளையே எதிர்த்திடும் வல்லமை கொண்டது இந்நோய். எனவே இந்நோயின் சிகிச்சைக்கு பல்திறன் எதிர் நச்சு உயிரிகள் கொண்ட மருந்து தேவை. எளிதாக பக்க விளைவுகள் தோன்றும். சில மருந்துகளின் விலையோ மிக மிக அதிகம். குறுகிய காலத்திற்கு அளிக்கப்படுவதும், குறைவான நச்சுத்தன்மை கொண்டதும், எளிய தன்மை கொண்டதும், ஏழைகளும் விலை கொடுத்து வாங்கத் தக்கதுமான மருந்துகளே இன்றைக்குத் தேவை.

கடந்த 40 ஆண்டுகளாக இந்நோய்க்கான புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது? மருந்து உற்பத்தி தொழிலகங்கள் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு காரணம் வளர்ந்து வரும் நாடுகளில், இந்நோய் பெரிதும் ஏழைகளையே தாக்குகிறது. எனவே மருந்து உற்பத்தி தொழிலகங்கள் இந்நோய்க்கான புதிய மருந்ததைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஏழைகளால் மருந்து வாங்க முடியாது. எனவே தொழிலகங்களால் இலாபம் காண முடியாது.

எய்ட்சு (AIDS) மற்றும் எச்.அய்.வி (HIV) நோய்களைப் பற்றி பிரச்சாரம் செய்திட, செயல் ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. இத்தகைய நோய்களுக்கு எளிய ஆற்றல் மிக்க மருந்துகள் தேவை என்று தீவிரப் பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் என்புருக்கி நோயாளிகளைப் பற்றிப் பேசிட இன்றைய நிலையில் யாரும் முன் வருவதில்லை.

தமிழ் ஓவியா said...

இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறந்து கொண்டிருக்கிறது என்றே கூறலாம். என்புருக்கி நோய் கூட்டணி (TB Alliance) என்னும் தொண்டு நிறுவனம், மருந்து உற்பத்தி தொழிலகங்கள், கல்வியாளர்கள், பில்கேட்ஸ் நிறுவனம் போன்றவைகள் என்புருக்கி நோயை ஒழித்துக் கட்டுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் என்புருக்கிக்கான புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். ஆற்றல் மிக்க மருந்துகள் விரைவில் வந்துவிடும். சோதனைக்கும் உட்படுத்தப்படும். மாக்ஸி ஃபிளாக்சஸின் (MOXI FLO XACIN) என்னும் மருந்தின் ஆற்றல் மீதான சோதனை நடைபெற்று வருகிறது. என்புருக்கி நோயை நன் முறையில் குணப்படுத்திட 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாக்ஸி ஃபிளாக்சஸின் எனும் மருந்து விளங்கப் போகிறது என்பதில் அய்யமில்லை.

மாக்ஸி ஃபிளாக்சஸின் என்னும் இந்த மருந்து சிகிச்சைக் காலத்தை மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடும். இம்மருந்தின் மீதான ஆய்வு வெற்றிகரமானதாக இருக்கக் கூடுமானால், இதற்கான அனுமதி 2014-ஆம் ஆண்டில் கிடைத்து விடும்.

புதிய மருந்துகளின் கலப்பு முறை உருவாவதில் தான் எதிர்காலமே உள்ளது. ஒரே ஒரு மருந்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, பல வகையான மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகின்றது. சிகிச்சைக்கான காலம் வெகு விரைவில் குறைந்துவிடும். என எதிர்பார்க்கலாம். என்புருக்கி கூட்டணி (TB Alliance) இந்த ஆண்டு ஒரு சோதனையை நடத்தி, அதன் மீதான அறிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய மருந்தின் பெயர் PaMZ என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆற்றல் மிக்க மருந்தாக உள்ளது.

சிகிச்சை காலத்தை இரண்டு மாதங்களாக குறைப்பதன் மூலம் குணப்படுத்தும் வேகத்தை விரைவுப் படுத்தலாம். நோயாளியின் உடல் மருந்துக்கு அளிக்கும் தடையை நீக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் இந்தியாவிற்கு மிக மிக அவசியம்.

இந்தியாவில் என்புருக்கி நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை மிகவும் வேறுபடுகிறது. நிறுவப்பட்ட நடைமுறைகளிலிருந்து அடிக்கடி சிகிச்சை முறை இந்தியாவில் வேறுபடுகிறது.

சரியான அளவு அல்லாத, இரத்தத்தை அடிப்படையாகக் கொண்ட, எதிர் நச்சு ஆய்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இருப்பினும் இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்திய மருந்து சந்தை ஒழுங்கு படுத்தப்படாமல் உள்ளது. பல எதிர் உயிரி மருந்துகள் இந்தியாவில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தாராளமாக கிடைக்கின்றன. எதிரி உயிரி மருந்துகளுக்கு இந்தியர்களின் உடல் எதிர்ப்பாற்றலை அளிக்கிறது. இதுவே புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புக்கு தடையாக இருக்கிறது.

இந்தியாவில் புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் அதை முறைகேடான வழிகளில் பயன்படுத்துவதை தடுக்க நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்.

என்புருக்கிக்கான மருந்துகள், மருத்துவரின் சிபாரிசு இல்லாமல் கடைகளில் விற்கக்கூடாது என்ற நிலைமை இந்தியாவில் உருவாக வேண்டும். தகுதி வாய்ந்த முறையான பயிற்சி பெற்ற ஆங்கிலமுறை மருத்துவர்கள் தான் தக்க மருந்தை சிபாரிசு செய்யும் நிலைமை இந்தியாவில் உருவாக வேண்டும்.

உள்நாட்டு, வெளிநாடுகளின் வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும். தான் தோன்றித்தனமாக மருத்துவர்கள் சிகிச்சை முறையை அமைத்துக் கொள்ளக் கூடாது.

சிறந்த மருத்துவர்களால் எழுதப்படுகின்ற மருந்துகளைத் தான் நோயாளிகள் உட்கொள்ள வேண்டும். அதனால் நோய் குணப்படுத்தப்படுவது மட்டுமின்றி எதிர் விளைவுகள் தடுக்கப்படும்.

புதிய மருந்துகள் கிடைக்கும் போது, மருத்துவர்கள் அதை மிக விழிப்பாகப் பயன்படுத்த வேண்டும். அந்த நிலையில் தான் என்புருக்கி நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

தமிழ் ஓவியா said...


தங்கத்தின் மீதான மோகத்தைத் தவிர்ப்போம்



தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள் மக்களே! என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் டெபுடி கவர்னர் கே.சி.சக்ரவர்த்தி ஒரு கூட்டத்தில் பேச, குழப்பமோ குழப்பம்! இது பற்றி நிதி ஆலோசகர் நாகப்பன், 20,000 ரூபாய்க்குத் தங்கம் வாங்கினால், அதன் உண்மை மதிப்பு ரூ. 17,500 மட்டுமே. செய்கூலி, சேதாரம், விளம்பரம், வியாபாரியின் லாபம் என்று ரூ, 2,500/- என்றும், அதைத் திருப்பி விற்றால் இன்னும் விலை குறைந்து வாங்கிய வருக்கு மேலும் நஷ்டமே என்றும் கூறியதை அவள் விகடன் (25.9.2012 - பக்கம் 12) அழகாகக் கூறுகின்றது.

பெண்களுக்குப் புன்னகை எதற்கு? பொன் நகைகள் எவ்வளவு போடு வார்கள்? என்று கேட்கும் மாமியார்கள் (ஒரு காலத்தில் மருமகளாக இருந்த வர்கள்), பெண்ணின் குணநலன்கள், அழகு, படிப்பு, பதவி, வீட்டை நிர்வகிக்கும் லாவகம், சமையல் திறமை எல்லாவற்றையும் மறந்து விட்டு / மறுத்து விட்டு வரதட்சணை என்ற பொன்னாசையால், வீட்டிற்கு வரும் ஆசை மருமகளின் பெற்றோர்கள் கடனாளியாகக் காரணமாகின்றார்கள் என்று தினத்தந்தி 14.7.2012இல், சமுதாயத்தைத் திருத்த வேண்டிய ஒரு தலையங்கமே எழுதியுள்ளது.

மேலும் தங்கம் விலை கடந்த 50 வருடங்களாக மாறவே இல்லை. ஆனால் ரூபாயின் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் விலை கூடியதாகத் தோன்றுகிறது என்று உலக கோல்டு கவுன்சில் ஒரு வியப்பான செய்தியைக் கூறியுள்ளது.

தென்னை மரத்தில் தேள் கொட்டி னால் பனை மரத்தில் நெறி கட்டியது போல் பெட்ரோல் விலை கூடிக்குறைந் தாலும், உலகில் எங்காவது போர் நடந்தாலும், பண்டிகைகள் வந்தாலும் தங்கத்தின் விலை எகிறுகிறது. சில சமயங்களில் மட்டும் குறைகிறது. இப்படிக் கூடிக் கொண்டே போகும் தங்க விலையை யார் நிர்ணயிக்கின் றார்கள் என்றால் நமக்குக் குழப்பமோ குழப்பம். அது ஒரு புரியாத புதிராக உள்ளது.

சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் தினமும் ஒரு நகைக்கடை திறக்கப்படு கிறது என்று தெரிய வருகிறது. காரணம். அதில் கிடைக்கும் கொள்ளை லாபமே!

இதற்கு மேலாக தங்க வியாபாரிகள் செய்யும் தினசரி டிவி விளம்பரங்கள், பக்கம் பக்கமாய்ப் பத்திரிகைகளில் விளம்பரங்கள், நோட்டீஸ் விளம் பரங்கள் மட்டுமல்லாமல் நடிகர், நடிகைகளைக் கொண்டு செய்யும் அதிரடி விளம்பரங்கள், டிவி நிகழ்ச் சிகள், தங்க நாணயப்பரிசுகள் கொஞ்ச நஞ்சமல்ல! இதற்கெனச் செய்யும் செலவுகள் அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தை விட மிக அதிகம் என்று இத்தொழிலில் அனுபவப்பட்ட ஒருவர் கூறினார். இதற்கான விளம்பரச்செலவு யார் தலையில் விழுகின்றது? அப் பாவித் தனமாக வாங்குபவர்கள் தலையில்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


தமிழ் ஓவியா said...

அக்ஷய திரிதியை என்றும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றும் ராசியான கடை என்றும், என்னவெல்லாமோ கூறி அவர்கள் விரிக்கும் வலையில் விழும் மீன்களா கவே மக்கள் இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் நிலைமையாகும்.

திருமணங்களிலும் விழாக் காலங் களிலும், பட்டுச்சேலை உடுத்திப்பளபள என்று பவனி வருவதால் என்ன இவர்களுக்குக் கிடைக்கின்றது.? அற்ப திருப்தி மட்டும் தான் என்று சமூக நலனில் அக்கறை உள்ள பெண்மணி, ஒரு பெண்கள் கருத்தரங்கில் கூறினார்.

சரி, இப்படி வாங்கிய தங்கம் சுத்தமானதா என்று யாருக்குத் தெரியும்? சுத்தமான 24 காரட் தங்கத்தில் நகை கள் செய்யவே முடியாது. செம்பு போன்ற உலோகங்கள் சேர்ந்தால்தான் நகை செய்ய முடியும். நகையின்உள் பக் கத்தில் எவ்வளவு செம்பு சேர்த்தார்கள் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? எக்காலத்திலும் போலி நகைகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனாலும் நல்ல நம்பிக்கையான தங்க வியாபாரிகளும் இருக்கத்தான் செய் கிறார்கள்,
இது இப்படி இருக்க, தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் முஸ்லிம் பெண்கள் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறார்கள். பொதுவாக முஸ்லிம்கள் மத்தியில் சம்பாதிப்பது ஆண்கள், ஜமாய்ப்பது பெண்கள் என் பது காலம் காலமாக நடந்துவருகின் றது. இந்தியாவில் மட்டும் தான் தங் கத்தைப் பற்றிய மோகம், செய்திகளும் பளபளக்கும் தன்மையும் பெண்களை மாயவலையில் வீழ்த்தி விடுகின்றன.

உலகிலேயே அதிகமான தங்க மோகம் இந்தியர்களிடம்தான் உள்ளது என்று தங்கக் கவுன்சில் கூறுகின்றது. அரேபியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இப்படி அளவிற்கு மீறிய தங்க மோகம் இல்லவே இல்லை. எத்தனை கிலோ நகைபோட்டாலும் காணாது காணாது என்று இந்தியப் பெண்கள் அவர்களின் மரணம் வரை தங்க மோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை கொள்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


உலகத் தங்கச் சுரங்கங்களிலிருந்து இந்தியாவிற்கு வரும் தங்கத்தில் 75ரூ தங்கம், இந்தியப் பெண்களின் தங்க மோகத்தில் கரைந்து, வீட்டு அலமாரிகளிலும் வங்கி லாக்கர்களிலும் ஒளிந்து கொள்கிறது.

தங்க வியாபாரம் செய்பவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கையிருப் புத் தங்கம் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் அவற்றை விற்கும்பொழுது அதிக லாபம் கிடைக்கின்றது. இதைப்பார்த்து விட்டு நமது வீட்டுப் பெண் பொருளாதார மேதைகளும் (வேறு யார், மனைவிமார்கள் தாம்) வாங்கோ வாங்கு என்று தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றார்கள். குவித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

எல்லா வளங்களும் இந்தியாவில் இருந்தாலும் இந்தியர்களின் தங்க மோகம் இந்தியாவை மேன்மேலும் ஏழை நாடாக மாற்றி வருகின்றது.

ஆண்கள்தான் பெண்ணுக்கு மஹர் - பரிசம் - கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் முஸ் லிம்கள் அதற்கு நேர்மாறாக நடப்ப தாக இதர மதத்தினர் கூறுவதைக் கேட்டு உள்ளம் பதைக்கிறது. வர தட்சனைக் கொடுமை அதிகமாவதற்குத் தங்க மோகமும் ஒரு காரணமாகும். அதனால் இஸ்லாம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட தற்கொலைகள் முஸ் லிம்களிடையே நிகழ்ந்து வருகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

முஸ்லிம் பெண்களிடம் உள்ள தங்க மோகமும், சமுதாயத்தில் நடை முறையில் கட்டாயக் கடமைபோல் ஆகிவிட்ட ஆடம்பரத் திருமணங்களும் இதர மதத்தினர் இஸ்லாத்தை நெருங்க விடாமல் செய்கின்றன என்று கூறி ஒரு தமிழ் அறிஞர் வருத்தப்பட்டார்.

பெண்குழந்தைகள் பிறப்பதை வெறுக்க வைப்பதும் இந்தத் தங்கப் பைத்தியம் தான். சேலம் போன்ற இடங் களில் நடக்கும் சிசுக் கொலைகளுக்கு முக்கிய காரணமே வரதட்சணைதான் என்று சமூக ஆர்வலர்கள் கூறு கின்றார்கள்.

தங்கத்தை இஸ்லாம் அளவோடு தான் அனுமதித்துள்ளது. ஆண்களுக்கு ஹராம் என்று தவிர்த்திருக்காவிட்டால் நாமும் நகை நட்டுகளுடன் அலைந்து கொண்டிருப்போம். பெண்களுக்குத் தாலிகூட இஸ்லாத்தில் கட்டாயமாக் கப்படவில்லை.

85 கிராமிற்கு மேல் தங்கம் இருந் தால் ஜகாத் கடமையாகி விடும். தங் கத்தில் முதலீடு செய்வதைக் குறைப்ப தற்காகவே இது கூறப்பட்டுள்ளது போல தோன்றுகிறது.

பட்டுக் சேலைக்கும் தங்கத்திற்கும் உள்ள தொடர்பும் பெண்களைக் தங்க மோகத்தில் விழ வைத்து விடுகின்றது. சுடிதார் அணிந்தால் இப்படிக் கிலோ கணக்கில் தங்கம் அணிய முடியாது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படிப் பெண்கள் நகை நட்டுடன் வலம் வருவதைக் காண முடியாது.

வெளி நாட்டவர்கள் இந்தியப் பெண்களின் தங்க மோகத்தைப் பார்த்துச் சிரிப்பாய் சிரிப்பதை ஒரு சமூக ஆர்வலர் வருத்தத்துடன் கூறினார். சில சமயங்களில் செயின் திருடர்களுக்குக் கொடுப்பதற்காகவே பெண்கள் சேலை உடுத்தி ஆடம் பரமாகப் பளபளக்கும் தங்க நகை களுடன் வருவதாகத் தோன்றுகிறது என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.

மேலும் தங்கத்தை வீட்டில் வைத்துப் பாதுகாத்தாலும், லாக்கரில் வைத் தாலும், சில சமயங்களில் திருட்டுப் போவதுடன் உயிருக்கும் ஆபத்தாகி விடுகிறது என்பதை அன்றாடம் நாம் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் பார்த்து வருகிறோம்.

இன்றைய தங்க விலையின் படி, உதாரணத்திற்கு 100 பவுன் இருக்கிறது என்றால் ரூ. 24 லட்சம் (ஒரு பவுன் ரூ. 24,000). அதை நிலமாக அல்லது ஒரு வீடாக முதலீடு செய்தால் வாடகை வரும், நிலத்தின் மதிப்பு தொடர்ந்து கூடிக்கொண்டே வரும்.

எனவே தங்கத்தை எவ்வளவு சேர்த்தாலும் அது வீண் விரயமே ஆகும். அதற்காகத் தங்கமே வேண் டாம் எனறு கூறவில்லை. ஓரளவிற்கு மேல் வாங்கப்படும் தங்கத்தை எக் காலத்திலும் நாம் விற்கப் போவதில்லை. வாங்கி விற்பதற்காக நாம் தங்கம் வாங்குவதும் இல்லை. பத்மநாபா கோயிலில் உள்ள நகைகள் போல நாம் நகைகளைச் சேர்த்து வருகிறோம் என்பதே உண்மை. ஏனென்றால் எக்காலத்திலும் நம் நகைகளை விற்கப் போவதில்லை. அப்படி நடப்பதும் மிகவும் அரிது.

எனவே சேமிக்கும் பணத்தை தங்கத்தில் இல்லாமல், நிலத்திலோ வீடு அல்லது நன்கு அறிந்த தொழில் களிலோ முதலீடு செய்து, வரும் லாபத் தில் ஜகாத் கொடுத்து நல்ல முஸ்லிம் களாக நம்மை ஆக்கிக் கொள்வோம்.

மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டுப் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். ஜகாத் கொடுக்காது நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும் (குர் ஆன் 9:32, 35) என்ற எச்சரிக்கை நம்மை மனம் நடுங்கச் செய்ய வேண்டாமா?

ஆலிம்களும், அறிஞர்களும், பத்திரிகைகளும் இந்தத் தங்க மோகம் நீங்கும் விதத்தில் தொடர்ந்து எடுத்துக்கூறி வந்தால், இன்ஷா அல்லாஹ் நாம் நல்ல இஸ்லாமியப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

நன்றி: சமரசம் 16-_3-1 டிசம்பர்

தமிழ் ஓவியா said...


இந்தோனேசியாவில் பெண்களுக்குப் புதுச்சட்டம்


இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா ஆச்சே மாகாணத்தில் ரியா சட்டம் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுபாடு விதித்துள்ளார்.

பெண்கள் ஒரு புறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்ல வேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுக்காப்பானதும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சியில் பறக்கும் மனுதர்மக் கொடி!


தண்ணீர்க் குழாயிலும் தனித்தனி நேரம் - ஜாதி வேறுபாடு!

அகமதாபாத், ஜூன் 22- இந்தி யாவின் அடுத்த பிரதமருக்கான பி.ஜே.பி.யின் வேட்பாளர் என்று விளம்பரப்படுத்தப்படும் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதிலும்கூட - ஜாதி வாரியாக நேர ஒதுக்கீடு - தண் ணீர்க் குழாயில்கூட நான்கு வர்ணம் என்னும் மனுதர்மக் கொடி பறக்கிறது.

மனுதர்மம் குறிப்பிடுகிறது முதலில் பார்ப்பனன், பிறகு சத்திரி யன், அடுத்து வைசியர், இறுதியாக சூத்திரர்கள் பகுத்தறிவற்ற விலங்கு களிடம்கூட இல்லாத இந்த பாகுபாட்டை ஆரியர்கள் தங்களின் வயிறு வளர்க்க உழைப்பில்லாமல் வாழ்நாள் முழுக்க உண்டுகொழுக்க வழிகண்டு அதை சட்டமாக எழுதி வைத்தனர். வடக்கே அம்பேத்கர், தெற்கே தந்தை பெரியார் போன்றோர் இதை எதிர்த்து வெற்றி கண்டனர். சில ஆண்டுகளாக அடங்கி இருந்த இந்த மனுதர்ம கோடரி மீண்டும் தன்னுடைய மழுங்கிப்போன கூர் முனையை தீட்டிக்கொண்டு புறப் பட்டுள்ளது. கூர்முனையை தீட்டுவது மனுவின் புதல்வராக தன்னை உலகிற்கு காட்டிக்கொள்ளும் (இந்து மக்களின் பாதுகாவலன்) மோடியின் மாநிலமான குஜராத்தில் தான்; அதுவும் தலைநகரின் அருகில், அகமதாபாத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தன்வாதா (ப்ஹவியா வட்டம்) இந்த ஊரில் உள்ள பஞ்சாயத்துத் தண்ணீர் தொட்டியில் ஜாதீய பாகுபாட்டை நேரடியாக பறைசாற்றும் வாக்கியம் உள்ளது. முக்கியமாக தலித்து களுக்கு எதிரான ஜாதி வன்மம் இதில் அடங்கியுள்ளது. இப்படி பாகுபாடு பார்ப்பது தேசிய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குட்பட்டது. ஜாதிவாரியாக நேரம்

காலை 9 மணிமுதல் 10 மணிவரை பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்,

காலை 10 முதல் 12 (மதியம்) மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார்.

தமிழ் ஓவியா said...

நண்பகல் 12 முதல் (மதியம்) ஒரு மணிவரை தலித் இனத்தவருக்கு என எழுதியுள்ளனர். இந்தக் கிராமத்தின் பஞ்சாயத் துத் தலைவர் நிமிஷா தோனியா என்ற பெண் ஆவார், ஆனால் அவர் வீட்டில் ரொட்டி சுடுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை; பஞ்சாயத்து நிர்வாகம் அனைத்தையும் அவரது கணவர் ப்ரதாப்சிங்தோனியா தான் நிர்வகிக்கிறார்.

இந்த வாசகம் எழுதியதைக் குறித்து அவர் பெருமைப்படுகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு இதில் என்ன தவறு இருக்கிறது? பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்து வந்ததைத்தான் செய்கிறோம். இதில் ஜாதிவன்மம் என்று பெயர் சொல்லி நீங்கள் தான் புதிய பிரச்சினையை கிளப்புகிறீர்கள். இந்த ஊரில் உள்ள எந்த தலித்தாவது இது குறித்து ஒன்றுமே சொல்வது கிடையாது. எங்கள் ஊர்மக்களுக்கு தெரியும், எப்படி வாழ்வது என்று. பத்திரிக்கையாளர்களான நீங்கள் வந்து புதிதாக எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டாம், என்கிறார். பஞ்சாயத்துத் தலைவர் எங்கே?

உங்கள் மனைவி தானே பஞ்சாயத்துத் தலைவர், அவர் எங்கே எனக் கேட்டதற்கு, அவர் எதற்கு, அதுதான் நான் இருக்கிறேனே, என்று சர்வசாதாரணமாகக் கூறி யவர், மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார்.

இங்கு மட்டுமல்ல; குஜராத்தில் எந்த ஊருக்கும் சென்று பாருங்கள் இப்படித்தான் இருக்கிறது. இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை; மக்கள் தங்கள் பணிகளை கவனிக்கிறார்கள் என்கிறார். இது குறித்து நகர நிர்வாக அதிகாரியுடம் கேட்டபோது, அவர் நகரத்தின் அருகில் இருப்பதால் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் கூடம் செல்பவர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காகத்தான் இந்த முறை, இதில் ஜாதிப்பாகுபாடு என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை, வீட்டில்கூட பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவனை அனுப்பிவிட்டுத் தான் பிற குழந்தைகளை கவனிக் கிறோம் என்கிறார்.

குழாய்களிலும் ஜாதிப்பிரிவு

அதுமட்டுமல்ல இந்த ஊரில் குடிநீர் எடுத்துச்சொல்லும் குழாய் கள் கூட தொட்டியில் இருந்தே 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர் ஜாதிக்காரர்களுக்கு அவர்களின் தெருவிற்கென தனியாகக் குழாய் கள். அவை; அவர்களின் வீட்டின் குளியலறை வரை நீள்கிறது. பிற் படுத்தப்பட்டோருக்கு என்று தனியாக குழாயும், தலித் மக்களுக்கு என்று தனியாக குழாயும் உள்ளது. தலித் மக்கள் ஊருக்கு வெளியில் வாழ்வதால் அங்கு ஒரே ஒரு குழாய் தான் அதுவும், எல்லோருக்கும் சென்ற பிறகு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஒரு நாளைக்கு சில குடங்கள் கூட தலித் குடும்பத்தின ருக்கு கிடைப்பதில்லை, தன்வாதா கிராமத்தில் மற்ற இனத்தாரை விட தலித் மக்கள்தான் அதிகம் வசிக் கின்றனர்.

எட்டாண்டுகளாக இதே நிலைதான்

இதுகுறித்து அந்தக் கிராம தலித் குடும்பத்தார் கூறும் போது புதிதாக பஞ்சாயத்து வந்தபிறகு கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிலைதான், முதலில் ஊரில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது; ஆகையால் நாங்கள் தூரத்தில் உள்ள குளங்களில் சென்று தண்ணீர் கொண்டு வருவோம். ஆனால் இன்று குழாய் போட்ட பிறகு ஏதோ தண்ணீர் கிடைக்கிறது. இந்தப் பாகுபாட்டை கூறி நியாயம் கேட்டு கிளம்பினால், எங்களுக்கு இப்போது கிடைப்பதும் கிடைக்காமல் போகும் என்றார். மேலும் சில நாள்களாக எங் களுக்கு மறைமுகமாக மிரட்டல்கள் வர ஆரம்பித்து விட்டன. உங்க ளுக்குத் தண்ணீர் கிடைக்கிறதா? கிடைக்கவில்லை என்றால் கூறுங் கள்; அதை விட்டுவிட்டு புகார் கூறுவது போன்ற நடவடிக்கை எடுத்தால் இருக்கிற தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும் என் கிறார்கள். நகரத்திற்கு செல்லும் பேருந்தில்கூட எங்களுக்கு இடம் கொடுக்க மறுக்கிறார்கள், கேட்டால் என்ன கலெக்டர் வேலைக்கா செல் கிறீர்கள்? தெருக்கூட்டத்தானே செல்கிறீர்கள்? அதற்கு அவசரமாக போகத்தேவையில்லை என்று சொல் கிறார்கள், என அந்தக் கிராமத்தை சேர்ந்த தலித் குடும்பத்தினர் கூறுகிறார்கள்,

முதல்வர் மோடிக்கும் தெரியும்!

இந்தப் பாகுபாடு குறித்து பல முறை முதலமைச்சர் நரேந்திரமோடி யுடன் டுவிட்டரிலும், ஈ மெயிலிலும் புகார் கூறிவிட்டோம், இடையில் சில அதிகாரிகள் பஞ்சாயத்துத் தலை வரின் வீட்டிற்கு வந்து இப்படி செய்யக்கூடாது என வாய்மொழியாக சொல்லிவிட்டு, விருந்து சாப்பிட்டு விட்டு சென்றுவிடுகிறார்கள், ஆனால் இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது என்றார் நவவிசர்ஜன்(புதியமாற்றம்) என்ற தொண்டு இயக்கம் நடத்திவரும் கீரிதி ராத்தோட்.

தமிழ் ஓவியா said...


நெய்வேலி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்பனை!


முடிவினை ரத்து செய்ய கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 22- நெய்வேலி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச் சரவை எடுத்துள்ள முடிவினை ரத்து செய்ய வேண்டு மென்று திமுக தலைவர் கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

26-5-2013 அன்று நான் எழுதிய உடன்பிறப்பு மடலில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-5-2013 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை மத்திய அரசு மேலும் 5 சதவிகிதம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவதாகவும், அந்த முயற்சி விரும்பத்தக்கதல்ல என்றும், எனவே என்.எல்.சி. பங்கு களை விற்பனை செய்வதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக் கொள்வதாகவும் எழுதியிருப் பதைச் சுட்டிக்காட்டியதோடு, 24-5-2013 அன்று மத்திய அமைச்சர், நண்பர் நாராயணசாமி அவர்கள் என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்று மில்லை என்பதைப் போலக் கருத்து தெரிவித்திருந்ததையும் எடுத்துக் காட்டி, புதுவை உட்பட தமிழகத்திற் கும், குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமான இந்தக் கருத்து தி.மு. கழகத்திற்கு ஏற்புடைய கருத்து அல்ல என்று தெரிவித்திருந்தேன்.

தம்பி முரசொலி மாறன், மத்திய அரசின் தொழில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த போது எடுத்துக் கொண்ட பெருமுயற்சியின் காரண மாக நவரத்னா என்ற தகுதி பெற்ற என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு மீண்டும் ஈடுபடக்கூடாது, அது தேவையின்றி தமிழர்களை குறிப்பாக நெய்வேலி தொழிலாளர்களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல், அப்படிப் பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு மேலும் ஒரு எதிர்ப்பைத் தேடிக் கொள்ள வேண்டாமென்று எச்சரிக்க விரும்புகிறேன் என்றும் அதில் விளக்கியிருந்தேன்.

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதும் 22-6-2006 அன்று நெய்வேலி பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. உடனடியாக நான் 25-6-2006 அன்று இந்தப் பிரச்சினை குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத் தில், நெய்வேலியில் பத்து சதவிகிதப் பங்கினை விட்டுத் தருவது பற்றி, தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்க் கருத் துக்களை மத்திய அரசு அலட்சியப் படுத்தி விடக் கூடாது. ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்த பட்சத் திட்டத்தில் இருந்து விலகிச் செல்வதற்கு; எந்தக் காரணம் கூறப் பட்டாலும், அது முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டிலி ருந்து தளர்வதாகவே கருதப்படும். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்திட வேண்டு கிறேன் என்று கேட்டுக் கொண்டி ருந்தேன்.

2004ஆம் ஆண்டு அய்க்கிய முற் போக்குக் கூட்டணி சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குறைந்த பட்சத் திட்டத்தில், இலாபகரமாக இயங்கும், அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது; நவரத்தினங் களாக விளங்கும் அரசு நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.


2006ஆம் ஆண்டில், நான் பிரத மருக்கு எழுதிய கடிதத்திற்குப் பின்னர் நெய்வேலி நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளை விற்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தையும் திரும்பப் பெற்றனர்.

தற்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்தும், நான் எழுதிய உடன்பிறப்பு மடலுக்குப் பிறகும், மத்திய இணை அமைச்சர் நண்பர் நாராயணசாமி அவர்கள் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்ய முதல்வர் ஜெயலலிதா, தி.மு. கழகத் தலைவர் கலைஞர் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பை மத்திய அரசு அறிந்துள்ளது. இது சம் பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் தான் முடிவெடுக்க முடியும். எனவே மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும்போது என்.எல்.சி. பங்குகள் விற்பனைக்கு தமிழகத்தின் எதிர்ப்பு பற்றியும் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறி, அது தினமணி, தினகரன் போன்ற நாளேடுகளில் 28-5-2013 அன்று வெளி வந்திருக்கின்றது.

தமிழ் ஓவியா said...

ஆனால் 21-6-2013 அன்று நடை பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட் டத்தில் என்.எல்.சி.யின் அய்ந்து சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப் பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அந்தச் செய்தி வந்தவுடனேயே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அனைத் துத் தொழிலாளர்களும் கடும் அதிர்ச் சியடைந்து, தங்களது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டுகின்ற வகையில் போராட்டங் களில் இறங்க ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டுள்ளார்கள். அந்த நிறு வனத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளரும், மாநிலப் பேரவை துணைத் தலைவருமான சா. இராசவன்னியன் செய்தியாளர்களி டம் கூறும்போது, என்.எல்.சி. நிறு வனம் தொடர்ந்து ஆண்டு தோறும் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தில் இயங்கி வருகின்றது. கடந்த காலங்களில் 1996 முதல் மத்திய அரசு இதன் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்ட போதெல் லாம் தொ.மு. சங்கப் பேரவை கடுமையான போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக இருப் பதால், அந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

தனியாரிடம் விற்பனை செய்தால் மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய் யப்படும் அபாயம் உள்ளது என்றெல் லாம் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

மத்திய அரசு தனது 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலமாக 466 கோடி ரூபாய் தான் மத்திய அரசுக்கு கிடைக்கக் கூடுமென்று தெரிகிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பெரும் தொகையல்ல. பொதுத்துறை நிறுவ னங்களின் பங்கு களில் குறைந்தது 10 சதவிகிதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற இந்திய பங்கு பரி வர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்திருப்பதின் அடிப் படையிலே தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறக்கூடும்.

ஆனால் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டு வரலாம், அல்லது என்.எல்.சி நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங் களின் பட்டியலிலே இருந்து நீக்கி விடலாம் என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப் பதையும் மத்திய அரசு கருத்திலே கொண்டும், ஏற்கனவே இதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு பின்னர் தமிழகத்தின் வேண்டுகோளையேற்று அந்த முடிவினை தள்ளி வைத்ததை மனதிலே கொண்டும், தற்போது மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண் டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கடவுளா காப்பாற்றினார்!

செய்தி: இராணுவ வீரர்கள் உதவியால் உயிர் தப்பினோம், தமிழகம் திரும்பிய கேதார்நாத் பயண குழு பேட்டி.

சிந்தனை: உண்மைதானே கேதார்நாத்தில் குடிக் கொண்டிருக்கும் கடவுள் காப்பாற்றினார் என்றா பக்தர்கள் சொல்ல முடியும்?

தமிழ் ஓவியா said...


திருமணம் கிரிமினல் குற்றம் என்ற காலம் வரும்!


சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் திரு சி.எஸ். கர்ணன் அவர்கள் கணவன் - மனைவி தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பினை புரட்சிகரமானது என்று தலைப்பிட்டு விடுதலை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அத்தீர்ப்பினை வரவேற்று சிறப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 20.6.2013) .

பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைப் பேசி, உடலுறவு கொண்டு அதற்குப் பின் அந்தப் பெண்ணைக் கைவிட்டு வேறொரு பெண்ணைத் தேடும் ஆண் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீர்ப்பு அது என்பதை முற்போக்குச் சிந்தனையுடைய எவரும் ஏற்கவே செய்வார்கள்.

யதார்த்தமாகவும் பெண்களிடம் ஆசை காட்டி, மோசம் செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே நாசம் செய்து, புது செருப்புப் போட்டுக் கொள்ள பழைய செருப்பைக் கழற்றி எறிவது போன்ற அலட்சியத்துடன் மகளிரிடம் நடந்து கொண்டு அவர்கள் கருவுற்ற போதிலும் கூட அதற்குப் பொறுப்பு ஏற்க மறுத்து பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணி அடிக்கும் தீர்ப்பேயாகும் என்று மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்.

நீதியரசர் திரு. கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பின் நோக்கத்தையும், ஆழத்தையும் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டாலும் தங்களின் ஆழ் மனத்தில் பதிந்துள்ள இந்துத்துவா குணத்துடன் அணுகிய காரணத்தால் ஆத்திரம் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விட்டனர்.

தமது தீர்ப்பின் தன்மை குறித்தும், நோக்கம் குறித்தும் நீதிபதி தெளிவாக விளக்கம் கொடுத் துள்ளார்.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண் ணிடம் வாக்குறுதி கொடுத்து, பின்னர் உடலுறவு வையும் முடித்துவிட்டு, அந்தப் பெண்ணை விட்டு விட்டுச் சென்றுவிட்டால், அந்த ஆண்மீது கிரிமினல் வழக்கைச் சம்பந்தப்பட்ட பெண் தொடரலாம்; ஆனால் அந்தப் பெண் நிவாரணம் பெறுவதற்கு சிவில் நீதிமன்றங்களை அணுக முடியாது என்ற அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி கூறி யுள்ளது மிகச் சரியானது தானே!

அதனைப் புரிந்து கொள்ளாமல் வேறு வகையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியைச் சுற்றுவது (சப்தபதி) அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை யெல்லாம் மதச் சடங்குகளைப் பின்பற்றி சமுதா யத்தைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் பயன் படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்கு களையும், பின்பற்றித் திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லா விட்டால் அந்தத் திருமணம் சட்டப்படி செல் லாது என்று நீதிபதி கர்ணன் அவர்கள் கூறியுள்ளார்.

இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் தாம்பத்திய உறவை மறுப்பதன் அடிப் படையில் விவாகரத்துக் கோரலாம் என்று தீர்ப்பே இருக்கிறது.

நீதியரசர் கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பை இதனுடனும் சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அந்தத் தீர்ப்பின் சட்ட ரீதியான நுட்பமும் நீதியும் நியாயமாகப் புரியும்.

இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், நுனிப்புல் மேயும் தன்மையில், சடங்குகளைப்பற்றி மலினமாகச் சொல்லியிருக்கிறாரே நீதிபதி என்று கோதாவில் குதித்துள்ளனர்.

கலாச்சாரமும், சடங்கும் மாற்றங்களுக்கு ஆளானதேயில்லையா? குடும்ப அமைப்பு முறையில் மாற்றங்களும் ஏற்படவில்லையா? மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டால் இப்படியெல்லாம் குறுக்குச் சால் ஓட்ட மாட்டார்கள். இந்துத்துவாவாதிகள் கூறுகிறார்களே - அவர்கள் நம்பும் கலாச்சாரம் என்பதுதான் என்ன? அந்த எண் வகைத் திருமணங்களை ஏற்றுக் கொள்கிறார்களா?

அந்த எட்டில் ஒன்று பைசாசம் என்பது; ஒரு கன்னிகை தூங்கும்போதும், மது மயக்கத்தில் இருக்கும் போதும் அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதிருக்கும்போதும், அவருடைய மன சம்மதம் இல்லாமலேயே வலுவில் புணர்ச்சி செய்வதாகும்.

இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள இந்த பைசாச திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்களா?

திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்படும் காலம் வரும் என்றும் தந்தை பெரியார் கூறியுள்ளார். அப்படியொரு காலம் வரத்தான் போகிறது.

இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போக்கு (Living Together) வந்து விட்டதே - சட்ட ரீதியாகவும் அதற்கு அங்கீகாரமும் கிடைத்துவிட்டதே!

காலத்தின் வேகத்தையும், மாற்றத்தையும் புரிந்து கொள்ளாமல் மதவாதக் கண்ணோட்டத்தோடு கருத்துச் சொல்பவர்கள் எதிர் காலத்தில் எள்ளி நகைக்கப் படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பாதுகாப்பிற்கான ஒரே வழி தமிழ் ஈழம்தான் (2)

போசினியாவிற்கு உலக நீதிமன்றத்தில் வாதாடி தனிநாடு அந்தஸ்து வாங்கித் தந்த வழக்கறிஞர் கூறுகிறார்

- பேரா. பிரான்சிஸ் ஏ. பாயில்


அயல்நாட்டில் இயங்கும் தமிழ் ஈழ அரசு ஏற்பாடு செய்து பென்சில்வேனியா மாநில லேன்காஸ்டரில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. கொந்தளிப்பு மிகுந்த உலக அரசியல் எனும் பெருங் கடலினூடே விடுதலையை வென் றெடுத்தல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையாவது:

போசினியாவுக்கு ஆதரவாக 1993 இனப்படு கொலைக்கு எதிராக உலக நீதிமன்றத்தில் முன்வைத்த எனது வாதத்துக்கு ஆதரவாக 1948 இனப் படுகொலைத் தடுப்பு அனைத்துலக மாநாட்டுத் தீர்மான விதி தெளிவாகக் குறிப்பிடுவதை நான் குறிப்பிட்டேன். ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ, ஒரு பகுதியையோ அழிக்கும் நோக்கத் துடன் மேற்கொள்ளப்படும் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் இனப் படுகொலை என்றே பொருள்படும். வேறு சொற்களில் கூறுவதானால், இனப் படுகொலை என்ற குற்றத்தை இழைத்ததாக ஓர் அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு அது, நாஜிகள் யூதர் களை அழித்தது போல, ஓரினத்தை முழுமையாக அழித்தொழித்திருக்க வேண்டும் என்பதில்லை. அக்குழுவின் ஒரு பகுதியை மட்டுமே அழித் தொழிப் பதையே ஓர் அரசு நோக்கமாகக் கொண்டிருந்தாலும் கூட, அது இனப் படுகொலைக் குற்றத்தைப் புரிந்த தாகவே கருதப்பட வேண்டும். தங் களின் விருப்பப்படி செயல்பட அனு மதிக்கப்பட்டிருந்தால், அனைத்து போசினிய முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்கும் நோக்கத்தையே யுகோஸ் லேவியா கொண்டிருந்தது என்பதை நிச்சயமாகக் கூறலாம். 1995 இல் செர்பினிசியாவில் 7000 போசினிய முஸ்லிம் ஆண்களும், சிறுவர்களும் ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்கப் பட்ட நிகழ்வு இந்த உண்மையை வெளிக் காட்டுகிறது. முன்னாள் யுகோஸ்லேவி யாவுக்கான அனைத் துலக குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு செர்பினிசியா மற்றும் போத்ரிஞ்சா தாய்மார்களின் ஆவணப் படியான வழக்கறிஞராக நான் பின்னாட்களில் ஆனேன். அந்தத் தகுதியில், யுகேஸ் லேவியா அதிபர் ஸ்லோபோடான் மிலோசெவிக் புரிந்த சட்டப்படியான ஒவ்வொரு குற்றத்திற்கும், போசினி யர்கள் மீது அவர் இழைத்த கொடு மைகளுக்கும் - பொதுவாக போசினி யாவில் இனப்படுகொலை என்பதுடன், குறிப்பாக செர்பிசினியாவில் இனப் படுகொலை என்ற இரு குற்றச்சாட்டு களைப் பிறப்பிக்க வேண்டும் என்று குற்றவியல் வழக்கறிஞர் கார்லி டெல் போன்டி அவர்களிடம் கூறி நான் அவரை மன நிறைவடைந்து ஏற்றுக் கொள்ளச் செய்தேன். தி ஹாக் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருந்த போது, பிராசிக் யூஷன் தரப்பு வாதம் முடிந்த பிறகு, தன் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச் சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மிலோசெவிக்கின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு அவர் இறந்து போனார்.

தமிழ் ஓவியா said...


ராஜபக்சேக்களும் தி ஹாக் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்

ஆனால், அனைத்து போசினிய முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்கும் நோக்கத்தை யுகோஸ்லேவியா கொண்டி ருந்தது என்று உலக நீதிமன்றத்தில் வாதாட வேண்டிய தேவை 1993 இல் எனக்கு இருக்கவில்லை. அந்த கால கட்டத்தில் யுகேஸ்லேவியாவில் இருந்த 25 லட்சம் போசினிய முஸ்லிம்கள் உள்ளிட்ட 40 லட்சம் போசினியர்களில் 250,000 பேரை யுகேஸ்லேவியா அழித்து ஒழித்திருந்தது. அதனால், இறந்து போனவர்கள் அவர்களின் குழுவில் ஒரு குறிப்பிடத்தக்க அளவினர்களாக இருந் தனர் என்றும், இனப்படு கொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மான விதி 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பகுதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவினர்களாக என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும் என்று நான் வாதாடினேன்.

தமிழ் ஓவியா said...

உலக நீதிமன்றம் எனது வாதத்தை உறுதியாக ஏற்றுக் கொண்டது; ரோசன் னேவின் போலித்தனமான, கண்டிக்கத் தக்க, நாகரிகமற்ற வாதத்தை நிராகரித்தது. அதன்படி 1993 ஏப்ரல் 8 அன்று, போசினியர்கள் மீது நேரடி யாகவோ அல்லது போசினிய செர்ப் கைக்கூலிகள் மூலமாகவோ மேற்கொள் ளப்படும் அனைத்து வகையான இனப்படுகொலைச் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று போசினியா மற்றும் ஹெர்சோவினா குடியரசுகளுக்குப் பாதுகாப்பு அளித்து உலக நீதிமன்றம் மூன்று ஆணைகளைப் பிறப்பித்தது. இந்த ஆணை அமெரிக் காவில் பிறப்பிக்கப்படும் தடை ஆணையை ஒத்தது. 1993 செப்டம்பர் 13 அன்று யுகோஸ்லேவியாவுக்கு எதிராக போசினியா ஹெர்சினியா குடியரசு களின் பாதுகாப்புக்காக கூடுதலாக மூன்று நடவடிக்கைகள் மேற்கொள் வதற்கான உலக நீதிமன்றத்தின் இரண் டாவது ஆணையும் இதனைப் போன்றதே யாகும். 1948 இனப்படு கொலைத் தடுப்பு உலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத் தின் விதி 74 (4) இன் அடிப்படையில் யுகேஸ்லேவியாவுக்கு எதிராக, போசினி யாவுக்கு ஆதரவாக உலக நீதி மன்றத் தின் ஆணையை நான் 5-8-1993 அன்று வென்றெடுத்தேன். இந்த விதிப்படி உலக நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் இல்லாதபோது, நீதிமன்றத்தின் தலைவர் அவர்களின் முழு அதிகாரத்தையும் பயன் படுத்தி செயல்பட்டு வாதி, பிரதிவாதி களை சட்டப்படியாகக் கட்டுப்படுத்த இயன்ற வழக்கு ஒன்றில் தீர்ப்பாணை வழங்க முடியும். இனப்படுகொலைக்கு எதிராக மூன்று உலக நீதிமன்ற ஆணைகளை நான் வென்றெடுத்தேன். தகுதி அடிப்படையிலான போசினிய வழக்கு ஒன்றில் 2007 இல் பிறப்பிக்கப் பட்ட இறுதித் தீர்ப்பில், குழுவின் பகுதி என்பது எது என்பதைப் பற்றி தீர்மானிக் கும் 2 ஆவது விதி பற்றி குறிப்பிடுகை யில், ஒரு குறிப்பிட்ட குழுவின் ஒரு குறிப்பிடத்தக்க அளவினரை அழித்து ஒழிப்பது நோக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இனப் படுகொலை என்னும் குற்றத்தின் வெகு இயல்பு அதனைக் கோருகிறது. இனப் படுகொலைத் தடுப்பு மாநாட்டின் ஒட்டு மொத்த நோக்கமும் இலக்கும் அனைத் துலக அளவில் இவ்வாறு குழுக்கள் அழித்து ஒழிக்கப் படுவதைத் தடுப்பது தான். அவ்வாறு அழித்து ஒழிக்கப்படும் பகுதியினர் ஒட்டு மொத்தமாக அந்தக் குழுவின் மீது பாதிப்பை ஏற்படும் குறிப் பிடத்தக்க அளவினதாக இருக்க வேண் டும். இந்தத் தேவை யுகேஸ்லேவியாவுக் கான அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் ரவாண்டா குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தொடர்ந்த தீர்ப்பு களிலும், மனித இனத்திடையே அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் பற்றிய வரைவு விதிகள் பற்றிய அனைத் துலக சட்ட ஆணையத்தின் விமர்சனத் திலும் ஆதரித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

வேறு சொற்களில் கூறுவதா னால், தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா இனப்படுகொலையை மேற்கொண்டதா என்பதைக் காண் பதற்கு, அனைத்துத் தமிழர்களை யும் அழித்து ஒழிக்கும் நோக் கத்தை சிறீலங்கா பெற்றிருந்தது என்பது மெய்ப்பிக்கப்படவேண்டும் என்ற தேவை இல்லை. தேவை யானதெல்லாம், சிறீலங்காவில் வாழும் தமிழர்களில் ஒரு குறிப் பிடத்தக்க பகுதியினரை அழித்து ஒழிக்கும் நோக்கத்தைப் இலங்கை பெற்றிருந்தது என்பது மட்டும் உறுதி செய்யப்படவேண்டும்.

மேலும், 26-2-2007 இல் அளிக்கப் பட்ட போசினிய வழக்கின் தீர்ப்பில், யுகேஸ்லேவியா இனப்படுகொலைச் செயல்களைப் புரிந்தது என்பதை நிலை நாட்ட 250,000 போசினியர்கள் படு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அதை விட செர்பினிசியாவில் 7000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப் பட்டதே அதனை இனப்படுகொலை என்று முடிவு செய்வதற்குப் போது மானதாகும். உலக நீதிமன்றத்தின் கருத்துப்படி, பாதிக்கப்பட்டவர்கள் செர்பினிய சமூகத்தினரில் அய்ந்தில் ஒரு பகுதியினரே ஆகும். செர்பினி யாவில் 7000 போசினியர்கள் கொல்லப்பட்டதே அதனை இனப்படு கொலை என்று முடிவு செய்வதற்குப் போதுமானது என்று உலக நீதிமன்றம் 2007 இல் நிச்சயமாகத் தீர்ப்பு அளித்து உள்ள நிலையில், அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 2009 இல் இலங்கை வன்னிப் பகுதி யில் 150,000 தமிழர்கள் கொல் லப்பட்டதும் இனப்படு கொலை எனவே கருதப்பட வேண்டியதாகும்.

இனப்படுகொலை செய்யப்பட்டது போக எஞ்சியுள்ள இலங்கைவாழ் தமிழர்களுக்கு, மேலும் தங்களுக்கு நேர உள்ள அழிவிலிருந்து பாது காத்துக் கொள்வதற்கு உள்ள வரலாற்று ரீதியான ஒரே வழி தங் களுக்கு என்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொள்வதுதான். 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங் களில், இலங்கை பேரினவாத அரசு வேண்டுமென்றே, வெளிப்படையாகத் தோன்றும் அளவில், சற்றும் வெட் கமோ, கூச்சமோ இன்றி, எந்தவிதக் காரணமும் இன்றி வன்னியில் 150,000 இலங்கை வாழ் தமிழர்களைக் கொன்று குவித்ததை இந்த உலகம் முழுவதும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானிருந்தது, ஆனால் உலகில் இருந்த எந்த ஒரு நாடோ, அரசோ அவர்களைப் பாதுகாக்கவோ, 1948 ஜெனீவா அனைத்துலக நாடுகள் அவையின் மாநாட்டுத் தீர்மானத் தின்படி குறைந்த அளவு அவர்களுக்கு உதவி செய்யவோ கூட முன்வர வில்லை. எனவே, இலங்கையில் உள்ள தமிழ் இனம் ஒட்டு மொத்தமாக அழிந்து போகாமல் தங்களைத் தாங்களே பாது காத்துக் கொள்வதற்கு தங் களுக்கு என்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியமானதாக ஆகிறது.

இனப்படுகொலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பயன் மிகுந்த பாதுகாப்பு அளிக்கவும், முறையான நிவாரணம் கிடைக்கவும் உள்ள ஒரே வழி தங்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொள்வதுதான் என்று அனைத்துலக சட்டமும் நடைமுறையும் நிலை நாட்டியுள்ளது. 1939 இல் யூத இனம் அழிக்கப்படத் தொடங்கியது போன்றதொரு வழியில் போசினிய இன மக்களும் அழிந்து போகாமல் தடுத்ததே போசினியா தனி நாடு என்ற நிலையைப் பெற்றதுதான். சுதந்திரமான தமிழ் ஈழம் உரு வாக்கப்படுவது ஒன்றே வரலாற் றின் அடிச்சுவட்டில் ஈழத் தமிழர் களை மேலும் மேலுமான அழிவி லிருந்து பாதுகாக்க இயன்றதாகும்.

தமிழ் ஈழ நாட்டை உருவாக்குக!

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(நிறைவு)
22-6-2013

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை



பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள்?: சித்திரபுத்திரன்


ஈரோடு ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்தர முதலியார், ஆரியா, சக்கரை செட்டியார், தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், பம்பாய் புலி ஜெயகர் ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிர தியாகிகளை யெல்லாம் காங்கிரசை விட்டுப் போகும்படித் துரத்திவிட்டு இவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டுப் போய்விட்டதால் காங்கிர பரிசுத்தமாய் போய் விட்டதென்று சொன்னவரும் இன்னமும் வக்கீல் தொழிலில் மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டு இருப்பவரும், நேற்று காங்கிரசில் வந்து சேர்ந்த வருமான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது பி.ஏ., பி.எல்., 20 வருஷத்திற்கு முன் படித்திருந்தும் நாளது வரை வக்கீல் உத்தியோகத்திற்கு போகாதவரும் பள்ளியில் படிக்கும்போது முதலே தேசத்திற் காகப் பேசி, தேச பக்தராயிருந்த பார்ப் பனரல்லாதார் நன்மை யின் பொருட்டு லண்டனுக்குப் போனவருமான ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் என்கிற பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச் செய் கிறீர்களா?

தேசத்திற்காக 5 வருஷ காலம் ஜெயிலுக்குப் போன ஸ்ரீமான் ஆரியாவை யும், பார்ப்பனரல்லாதார் சுயமரியா தைக்காக மூன்று முறை ஜெயிலுக்குப் போன ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஜெயிலில் போட வேண்டுமென்ற பார்ப்பன அட்வகேட் ஜெனரலையும் பார்ப்பன சட்ட மெம்ப ரையும் கெஞ்சும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்னும் பார்ப்பனருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல் லது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான் சக்க ரைச் செட்டியாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழித்துப் பார்ப்பனரல்லா தார் இப்பொழுது பார்த்து வரும் உத்தியோகங் களை யெல்லாம் பிடுங்கிப் பார்ப்பனர் கையில் கொடுத்து விட்டு பார்ப்பனரல்லாதார் சூத்திரர், பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள் என்னும் கொள்கையை நிலைநிறுத்தப் பாடுபடும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் என்னும் பார்ப்ப னருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

அல்லது பார்ப்பன ரல்லாதார் சுயமரியாதைக்கும், மனுசத் தன்மைக்கும், தேச விடு தலைக்கும் உழைக்கும் ஸ்ரீமான் வி. சக்கரை செட்டி யாரான பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப் போடப் போகி றீர்களா? இதில்தான் உங்கள் மூளையின் தத்துவம் விளங்கப் போகிறது.

- குடிஅரசு - கட்டுரை - 26.09.1926

தமிழ் ஓவியா said...

முளையிலேயே வெறுப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளைச் சிறு பிராயம் முதற் கொண்டே நம்மைத் தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை அடி! அடி!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடி; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களைத் தொட்டுட்டு வந்துட்டையே! போ! போ!

போயி குளிச்சுட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அவர்களுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்குப் போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய்? என்று கேட்டால், என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டு விட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா? என்கிறார்கள்.

இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் அருவருப்பும், அவர்கள் தொடக் கூடாத ஜாதி என்கிற உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கொடுமை களையெல்லாம் நமது பெரியவர்கள் அறிந்தேதான் பார்ப்பனன் என்பது அமங்கலவத்து மென்றும், அவனைக் காண்பதே சகுனத் தடை, அதாவது கெட்ட சகுனம் என்றும்.

நாம் போகும் காரியங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தால்கூட அவற்றைக் கெடுத்துதான் வாழப் பார்ப்பான் என்கிற எண்ணமும் அதில் வைத்து அவ்வளவு தாழ்மையாய்க் கருதி அனுபவத்தில் நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். ஆனால், நாம் அவற்றையெல்லாம் மறந்து அதற்கு நேர் விரோதமாய் பார்ப்பனர் எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும் நம்ம குழந்தைகளுக்கு, அய்யர் மேல் பட்டுவிடாதே, அம்மாமி மேல் பட்டு விடாதே, அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுடன் நாமும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.

ஆதலால் நமது குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் படிப்பிலிருந்தே இதை ஒரு பாடமாய் வைத்து இவைகளின் உண்மைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான் நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்.

- குடிஅரசு - கட்டுரை - 05.09.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஓ.கே.கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான் ஓ.கே. கந்தசாமி செட்டியாரிடம் அனுதாபமிருந்து அவரை முனிசிபல் கவுன்சிலராக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் பார்ப்பனர்கள் ஓட்டு அதிகமாயிருக்கும் திருவல்லிக்கேணி வார்டில் போட்ட கவுன்சிலர் பதவியை ஏன் அவருக்கு செய்து வைத்திருக்ககூடாது? பட்டத் தையும் விட்ட பரிசுத்த மான ஒத்துழையா தத்துவம் கொண்ட காங்கிரஸ்வாதி இப்போது ஸ்ரீமான் அய்யங் கார் கூட்டத்தில் நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட வேறு யார் இருக்கிறார்கள்? அல்லாமலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் இன்னமும் இதற்கு முன்னும் வக்கீல் உத்தியோகம் செய்து வருகிறார்.

சர்க்கார் நியமன பதவிகளும் சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார். இவரைவிட ஸ்ரீமான் சிலவற்றை வைத்துக்கொண்டி ருக்கிறார். இவரை விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் குறைந்தவர்? அல்லாமலும் இந்த பார்ப்பனர் வார்த்தையைக் கேட்டு நடந்ததின் பலனாக பார்ப்ப னரல்லா சமுகத்தில் செட்டியாருக்கு இது சமயம் செல் வாக்கும் குறைந்து போயிருக்கிறது.

இந்த விஷயம் சேப்பாக்கம் டிவிஷனில் செட்டியார் தோல்வியுற்றதி னாலும் ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப் போடாமல் பட்டம் தாங்கும் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஓ.ஏ.ஓ.கே.லட்சுமணன் செட்டியாரை இவர்களே (பார்ப்பனர்கள்) போட்டதினாலேயும் நன்றாய் விளங்குகிறது.

ஆதலால் பார்ப்பனர் அதிகமாயுள்ள வார்டுக்கு இவரை ஏன் போட வில்லை? இது தான் போ கட்டும். சட்டசபைத் தேர்தலிலாவது இந்த பார்ப்பனர் களுக்கு நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாருக்கு ஒரு தானம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்றிருந்தால் பார்ப்பனர்கள் மிகுதியுள்ளதும் கண்டிப்பாய் பார்ப்பனர் சொல்லுகிறபடி ஓட்டுக் கிடைப்பதுமான யூனிவர்சிட்டி தொகுதிக்கு ஏன் நிறுத்தக் கூடாது? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி படிப்பையும் அனுபோகத்தையும்விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? இவற்றை யோசிக்கும்போது உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? என்ற பழமொழிபோல் இந்தப் பார்ப்பனர்களின் சகவாசம் என்பது இதிலிருந்தாவது விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 29.08.1926

தமிழ் ஓவியா said...

இந்து மத பரிபாலன மசோதா

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் நமது பார்ப்பனர் களுக்கு எமனாய் விளங்கும் இந்துமத பரிபாலன மசோதா முக்கால் பாகம் பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுக் கிடை யில் பெரும் பாகம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும் நிறை வேற்றப்பட்டு மலை யாளக் குடிவார மசோதாவைப் போல் பூரண வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்விரண்டு மசோதாவையும் எதிர்த்த வர்களுக்கு அடுத்த தேர்தலில் தக்கபடி புத்தி கற்பிப்பார்கள் என்றே நம்பு கிறோம். -

குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

மலையாளக் குடிவார மசோதா

இவ்வார சட்டசபையில் நமது பார்ப்பனர்கள் கடும் சூழ்ச்சிகளுக் கிடையில் மலையாளக் குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டது. இனி மலை யாளத்தில் உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன் மூலம் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பதையும் சந்தோஷத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

தேவதான மசோதாவுக்கு ஆதரவு

தேச மகாசபையின் பெயரால், இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும், மகந்துகளையும் மடாதிபதிகளையும் தொங்கிக் கொண்டு நிற்கும் சுயநலங் கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படை யாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதாரின் சார்பாக மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.
(பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பட்ட செய்தி)

- குடிஅரசு - செய்தி - 22.08.1926

தமிழ் ஓவியா said...


கலியபெருமாளின் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது


கலியபெருமாளின் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது
சரியான அஸ்திவாரம் போட்டதால்
கொள்கைக் குடும்பமாகத் திகழ்கிறது
பொறியாளர்கள் அனிதா - பரணிதரன் மணவிழாவில் தமிழர் தலைவர் பெருமிதம்!

சென்னை, ஜூன் 22- கலியபெருமாளின் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது என்றும், சரியான அஸ்திவாரம் போட்டதால் கொள்கைக் குடும்பமாக இக்குடும்பம் திகழ்கிறது என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

21.6.2013 அன்று சென்னை - குரோம்பேட்டையில் க.தனமணி - பெரியார் பெருந்தொண்டர் அம்பத் தூர் மறைந்த மு.கலியபெருமாள், ஆ.பத்மாவதி - மறைந்த ந.ஆனந்தன் ஆகியோரின் பெயர்த்தியும், ஆ.இராம்குமார் - இரா.இந்திரா ஆகியோரின் மகளு மான பொறியாளர் இரா.அனிதா பிரியதர்சினிக்கும், பூ.இராமலிங்கம் - இரா.ருக்மணி ஆகியோரின் மகன் பொறியாளர் இரா.பரணிதரனுக்கும் மணவிழா வினை நடத்தி வைத்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார். அவரது உரை வருமாறு:

அன்பு நண்பர்கள் அனிதா பிரியதர்சினி - பரணி தரன் ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா, மிகச் சுருக்கமாக சிறப்போடு இங்கே நடை பெற்றிருக்கிறது. நாம் எல்லோரும் மகிழ்வோடு கண்டுகளிக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பாக இந்த மணவிழா அமைந்திருக்கிறது.

29 ஆண்டுகளுக்கு முன்பு...

அன்பு நண்பர் இராம்குமார் அவர்களின் குடும்பம் எங்களுக்கெல்லாம் மிக நெருக்கமான குடும்பம். பல புதிய நண்பர்களுக்குத் தெளிவாக தெரியப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையிலே, மணமகள் அனிதா அவர்களின் பெற்றோர்களாகிய இராம் குமார் - இந்திரா ஆகியோரின் வாழ்க்கை இணை யேற்பு விழாவினை, நான்தான் 29 ஆண்டுகளுக்கு முன்பு 1984 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடத்தி வைத்தேன்.

இன்றைக்கு அவர்களுடைய பிள்ளை களின் மணவிழாவினையும் நடத்தி வைக்கும் அரிய வாய்ப்பினை பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியடை கிறேன். மணமகளின் தாத்தா - பாட்டி திருமணத் திலும் கலந்துகொண்டு உரையாற்றியவன்.

நீண்ட நாள்களுக்குப் பின்பு நான் மணவிழா வினை நடத்தி வைக்கிறேன் என்பதால் மகிழ்ச்சிய டைகிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்; ஏனென்றால், கலியபெருமாள் குடும்பமாக இருந்தாலும், அதேபோல், என்றைக்கும் நினைவில் வாழக் கூடிய என்னுடைய அருமை நண்பர் ஆனந்தன், சிங்கப்பூர் ஆனந்தன் என்றால்தான் எங்களுக்கெல்லாம் மனதில் நிற்கும்; காரணம் என்னவென்றால், முதன்முதலாக நான் 1968 ஆம் ஆண்டுதான் சிங்கப் பூருக்குச் சென்றேன்.

அப்போது அங்கு என்னை வரவேற்ற இயக்கத் தோழர்களில், நம்முடைய இராம்குமாருடைய தந்தையார் ஆனந்தன் அவர்கள் மிக முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர் சென்ற காலத்திலேயே, அங்கே இளைஞராக இருந்து வரவேற்றவர் ஆனந்தன் அவர்கள். அவர்கள் எப் பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறார்களோ, அப்பொழுதெல்லாம் பெரியார் திடலுக்கு வந்து சந்திக்காமல் இருக்கமாட்டார்கள்.

இந்தக் குடும்ப மணவிழாவிற்கு, உறவோடு வந்திருக்கிறேனே தவிர, வெறும் சம்பிரதாயத்திற்காக வந்து இந்த மணவிழாவினை நடத்தி வைக்கக் கூடியவன் அல்ல என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், நண்பர் கலியபெருமாளும், அவருடைய வாழ்விணையர் அவர்களையெல்லாம் பார்க்கின்றபொழுது மிக்க மகிழ்ச்சி.

இந்தக் குடும்பத்தில் இதுவரை பார்த்தீர் களேயானால், குறைந்தது எட்டு திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். கலியபெருமாளின் திருமணமே, தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே நடைபெற்றது - திருவையாறு பக்கத்திலுள்ள கணபதி அக்கிரகாரத்தில்.

தமிழ் ஓவியா said...

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவராக படிக்கின்ற காலத்திலிருந்து, என்னு டைய சகோதரர் தண்டபாணி அவர்களுக்கு அறி முகமானவர் கடலூர் கலியபெருமாள் அவர்கள். அன்றைய நாளிலிருந்து எங்களுக்குப் பழக்கமான வர்.அய்யாவின் கொள்கைகளில் மிகத் தீவிரமான பற்றுள்ளவர்கள்.

சரியான அஸ்திவாரம் போட்டு இந்தக் குடும்பம் என்கிற கட்டடத்தை எழுப்பியிருக்கிறார்கள்

தலைமைக் கழகத்தில், இந்தத் திருமணத்திற்கு தேதி வாங்குவதில் சிக்கல் இருந்தது என்று சொன் னார்கள்; ஆனால் நான், எந்தப் பணியாக இருந் தாலும் அதனை மாற்றி வைத்துவிட்டு, இந்தத் திரு மணத்திற்குக் கட்டாயம் செல்லவேண்டும் என்று சொன்னேன்.

இவர்களுடைய குடும்பம் பாரம் பரியத்திலேயே, பல இளைஞர்களுக்கு, புதிய தலை முறையினருக்குத் தெரியாத, அந்த அளவிற்கு உறவும், உரிமையும், அன்பும், கொள்கையும் படைத்த நிலை. இவர்கள் குடும்பத்தில் இத்தனை திருமணங்களில் கலந்துகொண்டேன் என்பது என்னுடைய பெருமைக்காக அல்ல; இந்தப் பிள்ளைகள் வழிவழியாக வருகிறவர்கள்; இந்தக் கொள்கையிலிருந்து மாறாமல் இருக்கிறார்களே, அதற்குத்தான் பாராட்டப்படவேண்டும்.

வாழ்க்கை யில் கொஞ்சம் வசதி, வாய்ப்புகள் எல்லாம் வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையிலிருந்து நழுவி விடுவார்கள்; ஆனால், அந்த உணர்வு இந்தக் குடும் பத்திற்கு இல்லை. ஆனால், ஆனந்தன் அவர்களும், கலியபெருமாள் அவர்களும் சரியான அஸ்திவாரம் போட்டு இந்தக் குடும்பம் என்ற கட்டடத்தை எழுப்பியிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரிய, மகிழ்ச்சிக்குரிய ஒன்று, அந்த வகையில், இத் திருமணம் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

மகிழ்ச்சியான இன்னொரு சிறப்பு என்ன வென்றால், மணமகள் அனிதா பிரியதர்சினி அவர்கள், எம்.டெக்., படித்திருக்கிறார். அதேபோல், மணமகனாக உள்ள பரணிதரன் அவர்கள் எம்.இ., படித்து, அதற்குமேலே பிஎச்.டி., டாக்டரேட் படித்துள்ளார் என்றால், இது நம்முடைய மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிள்ளைகளில் அவ்வளவு சுலபமாக ஒரு 50,100 ஆண்டுகளுக்கு முன்னாலே பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தவர்களாகிய நாமெல்லாம் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்று சொன்னார்கள்; படிக்க உரிமையில்லை என்று சொன்னார்கள்; மனுதர்மப்படி படிப்பு நமக்கெல் லாம் கிடையாது என்று சொன்னார்கள்; ஆனால், அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் குறிப்பாக சொல்கிறேன்,

தமிழ் ஓவியா said...


மணமகள் எம்.டெக்., மணமகன் எம்.இ., படித்து விட்டு பிஎச்.டி., ஆய்வுப் பட்டம். ஒரு காலத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் குறைவாக இருந் தார்கள். தமிழில் முதன்முதலாக பிஎச்.டி., பட்டம் பெற்றவர் டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார்; அதற்கடுத்து பிஎச்.டி., பட்டம் பெற்ற இரண்டா வது தமிழர் டாக்டர் மு.வ. மூன்றாவது தமிழர் டாக்டர் இராஜமாணிக்கம் இப்படியே வரிசையாக வந்து கொண்டிருந்தது. ஆனால், இப்பொழுது தடுக்கி விழுந்தால், ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரசுவதி பூஜையினால் வந்ததல்ல....

இவை அத்தனையும் சரஸ்வதி பூஜையினால் வந்தது என்று நினைக்காதீர்கள்; நிறைய பேர்களுக்கு அதுதான் காரணமாகத் தெரியும்; காரணம் என்னவென்றால், சரசுவதியின்மீதுள்ள கோபத்தி னால் நாங்கள் இதனை சொல்லவில்லை; தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும், இங்கே வந்திருக்கின்ற பாட்டிமார்களில்கூட, சரசுவதி என்று பெயருள்ள பாட்டிக்கு கையொப் பம்கூட போடத் தெரியாது, அந்த காலத்தில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னாலே! ஆனால், இன்றைக்கு பெயர்த்தி சரசுவதி டாக்டர் சரசுவதியாக இருக்கிறார்கள்;

வழக்குரைஞர் சரசுவதியாக, பொறி யாளர் சரசுவதியாக இருக்கிறார்கள் என்றால், கல்விக்கே கடவுளான சரசுவதி பெயரை வைத்திருக் கின்ற பாட்டிக்குக் கையொப்பம் போடத் தெரிய வில்லை; கைநாட்டுப் பேர்வழி; ஆனால், பெயர்த்தி சரசுவதி இன்றைக்கு டாக்டராக வந்திருக்கிறார் என்றால், இது சரசுவதி பூஜையினால் வந்ததல்ல; தந்தை பெரியாரும், பகுத்தறிவு இயக்கமும், சுயமரி யாதை இயக்கமும் செய்த அரும்பணி, அதுதான் மிக முக்கியம்.

கல்வி வள்ளல் காமராசர் போன்ற வர்களின் ஆட்சியும், அதன் பிறகு திராவிடர் இயக்க ஆட்சி இப்படி வரிசையாக வந்ததினால், இன்றைக்கு கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்கிறது.

இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதினால், அவர்கள் தாழ்ந்து போய்விடவில்லை

மணமக்கள் இரண்டு பேரும் பொறியாளர் பட்டம் படித்து, அதற்குமேல் எம்.இ. படித்து, மணமகன் பரணிதரன் பிஎச்.டி., படித்து இவ்வளவு தூரம் வளர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிற இளைஞர் பாராட்டப்படவேண்டிய விஷயம். இரண்டு நல்ல குடும்பங்கள் இணைந்திருக்கின்றன; நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல் வார்கள். இரண்டு பல்கலைக் கழகங்கள்மாதிரி இரண்டு குடும்பங்களும் இணைந்திருக்கின்றன.

இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதினால், அவர்கள் தாழ்ந்து போய்விடவில்லை. இந்தக் கொள்கைகளைக் கடைபிடித்துதான் அவர்களின் குடும்பங்களில் இத்தனை திருமணங்களும் நடைபெற்றுள்ளன. மேலும் பல்வேறு கருத்து களைக் கூறி உரை யாற்றினார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று அறி வாணன் உரையாற்றினார். விழாவிற்கு முன்னிலை வகித்து கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் உரையாற்றினார். விழா வில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு ஏராளமானோர் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர். பொறியாளர்கள் அனிதா பிரியதர்சினி - பரணிதரன் ஆகியோரின் மணவிழாவினை நடத்தி வைத்து தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாக பூ.இராமலிங்கம் நன்றியுரையாற்றினார்.

வரவேற்பு

மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலை வருக்கு குரோம்பேட்டை மேம்பாலம் அருகே மண்டல செயலாளர் நெய்வேலி ஞானசேகரன், தாம்பரம் முத்தையன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் திரண்டிருந்து கழகக் கொள்கை முழக் கத்தோடு உற்சாகமாக வரவேற்றனர். இம்மண விழாவில், தாம்பரம் நாத்திகன், சன் சரவணன், இரா.சிவசாமி, லட்சுமிபதி, தே.சுரேசு, கண்ணன், கமலக்கண்ணன், அனகை ஆறுமுகம் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


இதுதான் பாரத புண்ணிய கலாச்சாரமா?


- ஊசி மிளகாய்

பாரத நாடு பழம் பெரும் நாடு - நீர் அதன் புதல்வர் என்று பாடிய பாட்டு - புண்ணிய பூமி, ஞான பூமி, என்று தனக்குத் தானே புகழ்மாலை சூட்டிக் கொண்டுள்ள நம் நாட்டில் வாழும் மனிதர்கள் எவ்வளவு கேவலமான மனிதர்களாக - ஏன் மனசாட்சியே இல்லாத மனித மிருகங்களாக வாழுகின்றனர் என்பதற்கு நேற்றும் இன்றும் தொலைக்காட்சி, ஊடகங்கள் - ஏடுகளில் வருகின்ற நெஞ்சை உலுக்கும் செய்திகளாக வருவன எல்லாம் செந்தேள் கொட்டுவதாக அல்லவா இருக்கின்றன!

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள கேதார்நாத், பத்திரிநாத் போன்ற இடங்களுக்கு புண்ணிய புனித யாத்திரை கடவுள் அருள் கிட்டும்; தெய்வத் தின் கிருபையை மொத்தமாகச் சம்பாதித்து புண்ணியத்தை பிக்செட் டெப்பாசிட்டில் போட்டு மோட்சத்தில் முன் இடம் பிடிக்கலாம் என்று பக்தர்கள் நம் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் சென்றனர். பரிதாபத் திற்குரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர்கள் என்றால் இதில் - கடும் மழை, வெள்ளம் - இமாலய சுனாமி காரணமாக திடீர் வெள்ளத்தில் அடித்துச் சென்றோர், காணாமற் போனவர்கள் சுமார் 13 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்ற சோகச் செய்தி - நம் போன்ற நாத்திகர்கள் உட்பட அனைவரையும் நெஞ்சுருகச் செய்கிறது!

எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரவர் வீடு திரும்பி, கதறி பதறிடும் உற்றார் உறவினருடன் மீண்டும் சந்தித்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டுமே என்று நாம் கவலைப்படுகிறோம்.

தமிழ்நாட்டின் ஒரு பெண்மணி - கவளம் சோறுகூட கிடைக்காமல் பட்டினியால் உயிர் விட்டார்; வேறு வழி இன்றி என்ற செய்தி நம் உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வழியும்படிச் செய்துள்ளது!

நாடே - ஏன் உலகமே திரண்டு இச்சோகத் திலிருந்து பாதிக்கப்பட்ட அம்மக்களை - பக்தர்களை - காப்பாற்றிட வேண்டும் என்று விரும்புகின்றனர்!

ஏராளமான நிதி உதவிகளும் நிவாரணப் பணிகளுக்கு பல தரப்பிலிருந்தும் அளிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு பரிதாபச் சூழலில் அங்கிருந்து வரும் சில செய்திகள் - இப்படியும் பணத்தாசை பிடித்த மனிதத்தைக் கொன்ற - கொல்லுகின்ற மனித உரு மிருகங்களா? என்று வேதனையும் வெட்கமும் படக் கூடிய நிலை உள்ளதாக அல்லவா இருக்கிறது!
வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள், மீட்புக் குழுவினர் வருகைக்காகக் காத்திருக் கின்றனர். அவர்களது சொத்துக்கள் மற்றும் கொண்டு வந்த பொருள்கள் எல்லாம் பறி போன நிலையில், உயிரோடு திரும்பினோமே என்று அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் அவர்களை தண்ணீர்த் தாகத்துடனும் கடும் பசியுடனும் ஜீவ மரணப் போராட்டம் நடத்திடும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தற்காலிகக் கடைகள் வைத்திருக்கும் சிலர்; தங்களது பேராசை விஸ்வரூபம் எடுத்து ஆடுவதுபோல,

ஒரு பரோட்டா - 250 ரூபாய்

ஒரு பாட்டில் தண்ணீர் - 200 ரூபாய்

ஒரு சிறிய சிப்ஸ் பாக்கெட் - 100 ரூபாய்

ஒரு சிறிய சப்பாத்தி - 150 ரூபாய்

ஒரு சிறிய ரொட்டி (சிலைஸ்) - 100 ரூபாய்

ஒரு சிறிய கப் சாதம் - 40 ரூபாய்

என்று விற்பதைவிட, வெட்கப்படத் தகுந்த வேதனை வேறு உண்டா?

மனிதம் இவர்களிடத்தில் மரித்தே விட்டதோ!

இப்படி மனசாட்சியைக் கொன்று சம்பாதிக் கும் பணத்தை இவர்களுடன் சேர்த்துப் புதைக் கப் போகிறார்களா? எரிக்கப் போகிறார்களா?

பக்தி வியாபாரம் என்ற பெயரால் சுரண்டலை ஒரு புறம்; மறுபுறம் இப்படி செத்த பிணங்களைத் தான் கழுகுகள் கொத்தித் தின்கின்றன.

உயிரோடு உள்ளவர்களை - இந்தச் சுயநலப் பேராசைக் கழுகுகள் குத்திக் குத்தி உயிரையும் போக்க அனுமதிக்கலாமா? இவர்களைவிட அந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் மேலானவை அல்லவா!

பாரதக் கலாச்சாரமாம்! வெங்காயமாம்!

கடவுளுக்கு,

அவதாரங்களுக்கு

முனிபுங்கவர்களுக்கு

காவிச் சாமியார்களுக்கு

கோயில்களுக்கு பஞ்சமே இல்லை!

அன்றாடம் கோடிக்கணக்கில் வசூல்களும் கூட? கோயில் உண்டியல்களுக்குப் பஞ்சமில் லாத நாடு அல்லவோ இது! பூமியின் பொது ஒழுக்கமோ எவ்வளவு சீர்கேடடைந்து விட்டது பார்த்தீர்களா?

பக்தி வந்ததே தவிர,

மனிதநேயம் மறைந்து விட்டதே!

இது நாடா? உயிருடன் சக மனிதர்களைக் கொத்தித் தின்னும் மனிதக் கழுகுகள் உலவும் காடா?

தமிழ் ஓவியா said...


சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!


பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி

நிறுவனப் பங்குகளை எதிர்ப்புகளை மீறி தனியாருக்கு விற்பதா?

சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!

தமிழர் தலைவர் அறிக்கை

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது பொருளாதாரத்தில் மட்டும் மக்களுக்கு இழப்பு மட்டுமல்ல; சமூக நீதி - இடஒதுக்கீட்டுப் பறிப்பு என்ற ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி (லிக்னைட்) பழுப்பு நிலக்கரி நிறுவனம், நாட்டிலேயே லாபத்தில் இயங்கும் நவரத்தினங்கள் என்ற 9 பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று.

தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளுவதா?

அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு மெல்ல ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதைப் போல, 5 சதவிகிதம் என்று துவங்கி (ஏற்கெனவே சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது) தனியாருக்கு விற்பதை எதிர்த்து, அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகளும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. உட்பட அத்தனைக் கட்சியினரும் குரல் கொடுத்தனர்; அதைக் கண்டு அத்திட்டத்தைத் தள்ளி வைத்தவர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழிக்கேற்ப, நேற்று முன்தினம் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழக மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி அலட்சியப்படுத்தி விட்டு, 5 சதவிகித பங்குகளை விற்க அனுமதி வழங்கிவிட்டதாம்!

திராவிடர் கழக அறப்போர் நடத்தியுள்ளதே!

ஏற்கெனவே பொன் முட்டை இடும் இந்த வாத்தைக் கொல்லாதீர்கள் என்று திராவிடர் கழகம் அறிக்கைவிட்டு அறப்போர் நடத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு (இந்த விற்பனை மூலம்) வெறும் 466 கோடி ரூபாய்தான் கிடைக்கக் கூடும். அரசுக்கு இது ஒரு பெரும் தொகையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு மிகவும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!

சமூகநீதிக்கும் ஆபத்து!

ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக மாறினால், பொருளாதாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுவது என்பது ஒருபுறம் இருந்தபோதிலும்கூட,

மற்றொரு முக்கிய கண்ணோட்டம் சமூகநீதி - இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைப்பதாகவும் ஆகிவிடும்.
காரணம் தனியார் துறை என்றால் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி நியமனங்கள் செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் (இன்றைய நிலைப்படி) இல்லை; பொதுத்துறை நிறுவனத்தில் சமூகநீதி இடஒதுக்கீடு, கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி உள்ள தாக்கீதாகும்.

எனவே, இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; இதை மறு பரிசீலனை செய்யா விட்டால் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது (நாடாளுமன்ற தேர்தலில்) உறுதி! உறுதி!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
23.6.2013

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

அடுத்த 20-30 ஆண்டுகளில் உலக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும்; அதனால் மக்களுக்குப் பெரும் கஷ்டங்கள் சூழும். இந்தியாவில் கொல்கத்தா, மும்பைப் பகுதிகளில் கடல் மட்டம் உயரும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சியும்; உணவுப் பஞ்சமும் ஏற்படும். தெற்கு ஆசியாவில் மழை பெய்யும் முறை மாறும். சில பகுதிகளில் மின் உற்பத்தி விவசாயம், குடிநீர் இவற்றால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.
இந்த தகவல்களை உலக வங்கி எடுத்துக் கூறி எச்சரித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கோயில்.. குகை!

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் ரூ.62 கோடி செலவில் 1760 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட தேவஸ்தானம் முடிவு! சிந்தனை: கோயில் திருடர்களின் குகை என்று எங்கோ படித்த நினைவு!

தமிழ் ஓவியா said...

கடிகாரம் ரூ.27 கோடி

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் உண்மை தான். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அணிந்திருக்கும் கடிகாரத்தின் மதிப்பு ரூ.27 கோடியாம்!

தமிழ் ஓவியா said...


உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் ஆதிசங்கரரின் சமாதியும் போச்சே!


டேராடூன், ஜூன் 23- உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஆதிசங்கரரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக, அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்துள் ளனர்.

கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர், ஆதிகுரு சங்கராச்சார்யா என, அழைக்கப்படும், ஆதிசங்கரர். பல சமய நூல்களுக்கு விளக்க வுரை எழுதியவர். இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணித்து, அத்வைத பீடங்களை நிறுவியவர். இவரின் சமாதி, உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலின் பின்புறம் இருந்தது. இது, எட் டாம் நூற்றாண்டில் கட் டப்பட்டதாக கூறப்படு கிறது. சமீபத்தில், உத்தர கண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த சமாதியும், அடித் துச் செல்லப்பட்டு விட் டதாக, அங்கிருந்தவர் கள் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் கோவிலில், அர்ச்சகர் ஒருவர் கூறிய தாவது:கடந்த ஞாயிறு இரவில், பலத்த மழை பெய்தது. இதுவரை, இப்படிப்பட்ட மழையை, நான் பார்த் தது இல்லை. நேரம் செல்ல செல்ல, மழை வலுத்தது. கோவிலின் அருகே செல்லும் மந்தா கினி ஆற்றில், வெள்ளம் கரை புரண்டோடியது.

கரையை கடந்து, கோவில் இருந்த பகுதிக்குள்ளும், வெள்ள நீர் புகுந்தது. மிகுந்த வேகத்துடன் வந்த வெள்ளப் பெருக்குடன், சகதியும் சேர்ந்து வந்த தால், கோவிலின் பெரும் பாலான பகுதி, சகதி யால் மூடப்பட்டது. உயிரை பாதுகாத்து கொள்வதற்காக, அங் கும், இங்கும் ஓடினோம். அங்கே, பாதுகாப்பான இடம் என்று, எதுவுமே இல்லை. கோவிலின் ஒரு பகுதியில் வெள்ள நீர் இல்லாததை பார்த்து, அங்கு ஓடினோம்.

வெள்ளச் சீற்றத்தில், எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, ஆதிசங் கரரின் சமாதியும் அடித் துச் செல்லப்பட்டது. ஆதிசங்கரர் சமாதியின் பெரும்பாலான பகுதி களை காணவில்லை. மேலும், அங்கிருந்த ஆதி சங்கரரின் இரண்டு சிலைகள், ஸ்படிக லிங்கம், அனுமன் சிலை ஆகியவையும், வெள் ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. அந்த பகுதி முழுவதும், சகதிகளுக்குள், உடல் கள் புதைந்து கிடந்தன. அங்கிருந்த ஆசிரமமும், இருந்த இடம் தெரி யாமல், வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறக்க வேண்டுமா?


பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஒரு கருத்தைக் கூறி யிருக்கிறார். 2002 இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை முசுலிம்கள் மறந்து நரேந்திர மோடியை ஆதரிக்கவேண்டும் என்று ஒரு வேண்டு கோளை முன்வைத்துள்ளார்.

இதிலிருந்து ஓர் உண்மையை அவர்களை அறி யாமலேயே பாரதீய ஜனதா தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர்.

குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் இஸ் லாமியர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாக்கப்பட் டுள்ளனர் என்பதை இதன்மூலம் பாரதீய ஜனதா ஒப்புக்கொண்டு விட்டதா இல்லையா?

இதனை ராஜ்நாத்சிங் சொல்வதைவிட நரேந்திர மோடியல்லவா முன்வந்து சொல்லவேண்டும்? இதுவரை ஒரே ஒரு வார்த்தை இந்த வகையில் வாய் திறந்து சொல்லியிருப்பாரா மோடி? குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்திருப்பாரா அவர்?

பி.ஜே.பி.யின் பிரச்சாரப் பத்திரிகையான தினமலர் (27.7.2012) ஒரு தகவலை வெளியிட்டது. உருது பத்திரிகைக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அளித்த பேட்டி அது.

நான் மன்னிப்புக் கோரமாட்டேன்! கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப்பின் குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அதேநேரத்தில் நான் என்ன சொன்னேன் என்பதை நீங்கள் சரி பாருங்கள்; 2004 ஆம் ஆண்டில் பத்திரிகை ஒன்றுக்கு நான் பேட்டி அளித்தேன். வன்முறை களுக்காக நான் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்? வன்முறைகளுக்கு என் அரசு காரணம் எனில், என்னைப் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்! என்றார். இதன் பொருள் என்ன?

குஜராத்தில் கலவரம் நடந்துள்ளது. இவர்தான் முதலமைச்சர். ஆனால், அதற்கு அவர் பொறுப்பு ஏற்கமாட்டாராம். எப்படி இருக்கிறது யோக்கியதை? குறைந்த பட்சம் வருத்தம்கூடத் தெரிவிக்கமாட்டார் முதலமைச்சர். அதேநேரத்தில் குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறந்துவிடவேண்டும் என்று பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் முசுலிம்களுக்கு வேண்டு கோள் விடுக்கிறார் என்றால், பி.ஜே.பி.யில் உள்ள பெருந்தலைவர்கள்வரை பொது நாகரிகம், மனிதத்தன்மை அற்றவர்கள் என்பது வெளிப்பட வில்லையா?

குஜராத்தில் முசுலிம்களுக்குச் சொந்தமான 41 ஆயிரம் வணிக நிறுவனங்கள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன. 295 தர்க்காக்கள், 205 மசூதிகள் எரிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் முடிக்கப்பட்டன.

குஜராத் உயர்நீதிமன்றம் இவற்றிற்கு நஷ்ட ஈடு அளிக்கவேண்டும் என்றும், அவற்றை அரசு செலவில் கட்டிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்ததே - அதன் பொருள் என்ன? இவை நாசமாக்கப்பட்டதற்குக் குஜராத் மாநில அரசுதான் பொறுப்பு என்பதுதானே பொருள்.

குஜராத் மாநில பி.ஜே.பி. அரசு பொறுப்பு என்றால், அதன் முதலமைச்சர் பொறுப்பாளியாக மாட்டாரா?

பொடா சட்டத்தின்கீழ் குஜராத் மாநிலத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டனர் என்றால், அதில் 286 பேர் முசுலிம்கள்; ஒருவர் சீக்கியர். முசுலிம்கள் என்று சொன்னால், குறி வைத்து நசுக்கப்படுவர் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

குஜராத் மாநிலத்தில் 4000 வழக்குரைஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள். அவர்களில் அரசு வழக்குரைஞர்களாக எத்தனைப் பேர் நியமனம் செய்யப்பட்டனர் என்று மோடி தெரிவிப்பாரா?

குஜராத் மாநிலத்தில் மெட்ரிக்குலேசன் அள வுக்குப் பள்ளிக்குச் செல்லக்கூடியவர்கள் 41 விழுக்காடு என்றால், முசுலிம்கள் வெறும் 26 சதவிகிதம்தான்.

பள்ளிக்குப் படிக்க வருவோர் மற்றவர்கள் 79 சதவிகிதம் என்றால், முசுலிம் 75 சதவிகிதம்தான். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முசுலிம்கள் வெறும் 12 விழுக்காடு - வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்றவர்களோ வெறும் 2.6 சதவிகிதமே! நகர்ப் புறங்களில் முசுலிம்கள் உயர்ஜாதி இந்துக்களைவிட 800 மடங்கு வறுமை அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பி.ஜே.பி. தலைவர், குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறந்துவிடவேண்டும் என்று சொல்லு கிறார்?

இதுகுறித்து முசுலிம்கள் மட்டுமல்ல. மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களும் சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


2003 முதல் 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் குண்டு வெடிப்பு மூளையாக செயல்பட்டவர் இந்துத்துவாவாதி


தேசிய புலனாய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

புதுடில்லி ஜூன் 24- 2003-ஆம் ஆண்டிலி ருந்து 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக குண்டு வைத்துத் தாக்கி யத்தில் மூளையாக இருந்தவன் இந்துத்துவா வெறியன் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

சம்ஜவ்தா எக்ஸ் பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற வாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஹமீத் சவ்கான் என்ற ஹக்லா என்ப வரின் உண்மையான அடையாளம் என்ன என்பதை தேசிய புல னாய்வு அமைப்பு சமீ பத்தில் தாக்கல் செய் துள்ள துணை குற்றப் பத்திரிகையில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. அவரது உண்மை பெயர் ரமேஷ் வெங்கட் மஹால்கர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேச மகாராஷ்டிரா ஆகிய மாநில இந்துத்துவ தீவிர வாத ஆசாமிகளுக்கு இவர் இணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத் தில் மாலேகான், அஜ்மீர் தர்கா மற்றும் சம்ஜவ்தா வெடிகுண்டு தாக்குதல் 2006-லிருந்து நிகழ்ந்தன. மகாராஷ்டிர மாநிலத் தில் பார்ப்பனி, பூர்ணா, ஜல்னா மற்றும் நந்தால் ஆகிய இடங்களில் நடத் தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் 2003-லிருந்து 2006 வரை நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு செயல்பட்டவிதம் இந்துத்துவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒரு நபரின் தலைமையின் கீழ் இணைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள் ளது. ஹக்லாவின் உண்மை யான அடையாளம் வெளிப்படுவதற்குமுன் அவர் இமான்சுபான்சி என்பவரின் சொந்த ஊரான நந்தால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2006-லிருந்து 2008 வரை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்தார் என்று கண்டு பிடிக்கப் பட்டது.

இமான்சு பான்சி 2006 ஏப்ரல் மாதத்தில் இந்த நந்தால் என்ற இடத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண் டிருக்கும் போது இறந்து விட்டார். அவுரங்கா பாத்தில் உள்ள ஒரு மஸ் ஜிதை தகர்க்க அந்த வெடி குண்டு தயாரிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு நிறுவன வட்டார தகவல் படி ஹக்லாவின் குடும் பம் விஸ்வ ஹிந்து பரிஷத்துடன் தொடர்பு டையது. மேலும், ஹக்லா வி.எச்.பி.யில் ஒரு உறுப்பினர் ஆவார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஒரு அரசு ஊழியரின் மகன் ஆவார். இந்துத்துவ கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு அவர் தனது 20-ஆவது வயதில் 2003-ஆம் ஆண் டில் வீட்டை விட்டு வெளியேறினார்.
2003-ஆம் ஆண்டில் தான் மகாராஷ்டிரா மாநிலம், பார்ப்பானி மாவட்டத்தில் இந்துத் துவ தீவிரவாத ஆசாமி களின் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கால மான இமான்சு பான்சி யும் அவரது கூட்டாளி களும் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஹக்லாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2003-இல் வீட்டை விட்டு வெளியேறி தலை மறைவான ஹக்லா 2005-ஆம் ஆண்டில் ஜம்மு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சுனில் ஜோஷி மறைந்திருந்த இடத்தை சென்றடைந் தது, தெரியவந்துள்ளது. அதே ஆண்டில் சுனில் ஜோஷி ஹக்லாவை மத் தியப்பிரதேச மாநிலத் தில் உள்ள தேவாஸ் என்ற இடத்துக்கு அழைத்து வந்தார் அங்கே ஹக்லாவுக்கு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டில் புனே நகரில் சிங்காகட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு பயிற்சி முகாமில் இந்த ஹக்லா பயிற்சி பெற்றாரா என் பதையும் தேசிய புல னாய்வு நிறுவனத்தினர் விசாரித்து வருகின்றனர். அந்த பயிற்சி முகாமில் இமான்சு பான்சி வெடி குண்டுகளை எப்படி வெடிக்கச் செய்வது என் பதையும், வெடி குண்டு களை தயாரிப்பது பற்றி யும் பயிற்சி பெற்றார்.

ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பயிற்சி முகாமில் பயிற்சியளித் ததாக சந்தேகிகப்படு கிறது. இமான்சு பான்சி தன்னை வழி நடத்துபவர் களுக்கு தெரியாமல் சில குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகளை, தானா கவே வெடிக்கச் செய் தார். சக்தியில்லாத அந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் எந்த சேதமும் ஏற்படாத தால் இமான்சு பான் சியை அவரது தலைவர் கள் கண்டித்ததாகவும் தேசியப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தமிழ் ஓவியா said...


வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
(விடுதலை, 23.8.1961)

தமிழ் ஓவியா said...


இமாலயச் சுனாமியில்கூட இமாலய அரசியலா?


- ஊசி மிளகாய்

உத்தரகாண்ட், இமாலச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள பத்திரிநாத், கேதார்நாத் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்ற பக்தர்கள் (சுமார் ஒரு லட்சம் பேரில்) 13 ஆயிரம் பேருக்கு மேல் கடும் மழை, வெள்ளம் - இவற்றில் அடித்துச் சென்றும், மலைச் சரிவுகளில் சிக்கியும் - இறந்தும், காணாமற்போயும் உள்ளது நெஞ்சுருக்கும் வேதனை! நாட்டு மக்களின் நல் இதயங்களைக் கசக்கிப் பிழிகின்றன!

இராணுவம், துணை இராணுவம், திபெத்திய எல்லைப்படை அம்மாநிலங்களின் பல்வேறு அரசு அமைப்புகள் - மத்திய அரசின் உள்துறையினர் தனித்த முயற்சிகள் இவை எல்லாம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு போர்க்கால வேகத்தில் (On a War Footing) நடைபெற்று வருகின்றன.

இன்னும் மீட்கப்பட வேண்டிய யாத்திரிகர்கள் - பலர் உள்ளனர் - இடிபாடு - மலைச்சரிவில் சிக்கியோர்களும் இருக்கக் கூடும்.

இந்நிலையில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியதால் மீட்புப் பணிகள் நேற்று நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் வேறு ஏற்பட்டு விட்டது!

இறந்தவர்கள் - ஜலசமாதியின்மூலம் போக, எஞ்சியவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்து, அவரவர் மாநிலங்கள் வீடுகளுக்கு - அனுப்புவது எப்படி என்பதே பொதுக் கவலையாக உள்ள நிலையில்,

இந்த நிலையில் பா.ஜ.க., - மோடி மஸ்தான் கள் எழவு வீட்டிலும் ஏதாவது கிடைக்காதா என்ற பந்தலிலே பாவக்காய் கதை ஒப்பாரி வைத்து அழுது, தொங்கிய பாகற்காயில் கண் வைத்தழுதது போலவும்,

அத்துக்கத்தில் கவனமோடு இருந்து பதில் கூறிய சகோதரி போன்று மோடிகளுக்குப் பதில் கூறிட்ட காங்கிரசும் - விமர்சித்துக் கொள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாகும்!

இப்போது எல்லோர் கவனமும் மழை, அபாயத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றி மீட்டுக் கொணர்வது பற்றித்தான் இருக்க வேண்டுமே தவிர, இதில் விளம்பரம் தேடி அரசியல் ஆதாயம் தேடிட இது ஓர் அருமையான வாய்ப்பு என்று கருதுவதைவிட மிக மிகக் கேவலம் வேறு உண்டா?

மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்கள் தரும் விளம் பரமோ எல்லையற்ற ஒன்றாகும்!

மோடி, 25 இன்னோவா கார்களில் இத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகளை அழைத்துச் சென்றார் என்று அவரும் ஏதோ திரைப்பட நடிகர் மாதிரி வண்ண வண்ண உடைகளை உடுத்தி, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தனித்தனி பேட்டி கொடுப்பது, அரசியல் கட்சி சார்ந்த பதில்களைக் கூறுவது, ஒரு மாநில முதல்வர், மற்றொரு மாநிலத்திற்குள் சென்று (அவர்களின் அனுமதியே இன்றி) அங்கே நடப்பவைகளைக் குறை கூறுவது என்பது மிகுந்த கீழ்த்தரமான சுவை (It is in very bad Taste) அல்லவா!

தினம்தினம் பா.ஜ.க. பேச்சாளர்கள் ஆளும் காங்கிரசைக் குறை கூறுவதுதான் தொழிலாகப் போய் விட்டது!

அவர் உடனே வந்து குதித்தாரா? இவர் தோண்டினரா? இப்படி கேள்வி மேல் கேள்வி.
பெரிய வி.வி.வி. அய்ப்பிக்கள் வந்தால், வெள்ள நிவாரணப் பணிகள் அல்லவா வெகு வாகப் பாதிக்கப்படும்; அவர்கள் பாதுகாப்பு திருப்பி அனுப்பப்படுவது முதற்கொண்டு அம்மாநில முதல்வர் முதல், அதிகாரிகள் வரை அவர்கள் கவனம் இவர்கள் பாதுகாப்பில் (Security) தானே இருக்கும்? இதனால் மீட்புப் பணிகளில் சுணக்கமும் தேக்கமும் ஏற்படாதா?

நம் நாட்டில் எங்கும் அரசியல்! எதிலும் அரசியல் பொது ஒழுக்கச் சிதைவுக்கு ஓர் எல்லையே இல்லை!

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு, உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி ஒதுங்கி உயிருக்கு மன்றாடிய பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து, கொள்ளையடித்து, தங்களுக்கு வருவாய் தேடியவர்களுக்கும், ஹெலிகாப்டரில் போடப்பட்ட உணவுகளை அங்குள்ள மக்களை விரட்டியடித்து விட்டு பொறுக்கி எடுத்து அதை மீண்டும் அதிக ரூபாய்க்கு விற்று காசு தேடிய ஈவிரக்கமற்ற பாதகர்களுக்கும்

இந்த நிவாரணத்தில் அரசியல் நடத்தி விளம்பரம் தேடும் மோடி வித்தைக்கார அரசியல்வா(வியா)திகளுக்கும் தத்துவத்துவத்தில் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

பாழாய்ப் போன வாக்கு வங்கி ஓட்டுக் கண்ணோட்டம் நாட்டுக் கண்ணோட்டத்தை - மக்கள் நலக் கண்ணோட்டத்தையே கொன்று நாசமாக்கி விட்டதைக் கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே!

எப்போது முடிவு - இந்த அவல அரசியல் அலங்கோல போட்டிகளுக்கு?

தமிழ் ஓவியா said...


என்.எல்.சி. நெய்வேலி போராட்டம்: அறவழிப் போராட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவும், வாழ்த்தும்


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினை பொதுத்துறையிலிருந்து தனியார்மயமாக்கும் துவக்க முயற்சியாக 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அமைச்சரவை, அதன் முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொள்ள வற்புறுத்திடும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் அதன் அறவழி ஆதரவினை நல்குகிறது!

அனைத்துத் தொழிற்சங்கங்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் ஈடுபடும் இம்முயற்சி வெற்றி பெற நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

கோரிக்கை வெல்லும் வரை அறப்போராட்டம் தொடரட்டும்!



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.6.2013

தமிழ் ஓவியா said...


எப்படி மறக்க முடியும்?

2002இல் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மறந்து விட வேண்டுமாம். சொல்லுகிறார் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்.

பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனை யாளரும் புகழ் பெற்ற எழுத்தாளருமான ஆஷிஸ் நந்தி குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திரமோடியைச் சந்தித்து, நடத்திய நேர்முகம்பற்றிக் குறிப்பிடுகையில் அந்தப் பேட்டி முடிந்து நடுக்கத்துடன் வெளியில் வந்தேன் என்று கூறினாரே!

அனைத்துக் குணங்களும் பொருந்திய ஒரு ஃபாசிஸ்டைத் தான் சந்தித்துள்ளேன் என்பது எனக்கு நன்கு புரிந்தது. பாசிஸ்டு என்று நான் அழைத்தது ஆட்சேபகரமான சொல்லல்ல; வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சியான எதுவும் அந்தச் சந்திப்பில் இல்லை

சமூக வல்லுநர்கள்; நிபுணர்களின் கருத்திற் கிணங்க சர்வாதிகாரத்தின் பரிபூரணமான ஒரு மனநிலை கொண்ட நபராக மோடி விளங்கினார்.

ஒரு கொலையாளியை, சில வேளையில் ஒரு கூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று சொன்னதுதான் எத்தகைய உண்மை!

1999 அக்டோபரில் கோஜ் நடத்திய ஆய்வில், இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக குஜராத்தை மாற்றுவதற்கான தீய சக்திகளைக் காண முடிந்தது; சமூக அறிவியல் புத்தகங்களில் பாசிச விஷமத்தனங்கள் விதைக்கப்பட்டன. முஸ்லீம்களையும், கிருத்தவர்களையும், பார்சி களையும் அந்நியர்களாகச் சித்தரித்தனர். இதனைக் கம்யூனல் காம்பேக்ட் என்ற இதழ் அம்பலப்படுத்தியது; இந்தப் புத்தகங்களைப் படித்த நாடாளுமன்றக் குழு மேற்கண்ட பாடங்களை நீக்குமாறு குஜராத் மாநில அரசிடம் வற்புறுத்தியது. ஆனாலும் அதுதான் நடக்கவில்லை என்றது கோஜ்.

2002இல் குஜராத்தில் நடத்தப்பட்ட சிறு பான்மை மக்களுக்கு ஏதிரான கொடூர மனித வேட்டை ஏதோ திடீர் என்று எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை (Genocide) ஆகும்.

1991ஆம் ஆண்டிலேயே பிசினஸ் இந்தியாவில் வெளிவந்த இரு கட்டுரைகளே இதற்குப் பொருத்தமான சாட்சியங்கள் ஆகும்.

1991 ஜூலையில் குஜராத்தில் நடக்கிற வகுப்புவாத பிரிவினை நடவடிக்கை தான் எத்தகையது? விசுவ ஹிந்து பரிஷத் தயாரித்த ஒரு படம்; அதில் காவி குஜராத் - பச்சை குஜராத் என்று அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

காவி என்பது இந்துக்கள்; பச்சை என்பது முஸ்லீம்கள் என்பது குறியீடாகும்.

இதற்கான திட்டமிடுதல்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தன. உளவியல் ரீதியாக இரு சமூகங்களையும் தனிமைப்படுத்துவதற்காக, சமூகப் பண்பாட்டு உறவுகளைத் தகர்ப்பதற்கான குறிக்கோளுடன் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வந்தன.

குஜராத் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவம் என்ற சாக்கு உருவாக்கப்பட்டு, நீண்ட நாள் திட்டம், கூர்தீட்டி செயல்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.

இதுவரை இதற்காக ஒரே ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை.

இஸ்லாமியர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதுகூட அவர்கள் அணிவித்த குல்லாயைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டவர்தான் நரேந்திரமோடி.

ஒரு முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் இதுபோன்ற கலாச்சாரப் பரிவர்த்தனைகள் இயல்பாக நடப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ மன நோயாளியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் இந்து -இந்து அல்லதார் என்று உத்திப் பிரித்ததை (Polarisation) இந்தியா முழுமையும் அரங்கேற்றத் துடியாய்த் துடிக்கிறார் மோடி - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்


ஆசிரியருக்குக் கடிதம்

நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்

தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்! தங்களது நீதியரசர் கர்ணன் தீர்ப்பு பற்றிய அறிக்கையை 21.6.2013 (வெளியூர்) விடுதலையில் படித்தேன்.

தங்களது அறிக்கை வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் நீதியரசரின் தீர்ப்பையும் அதற்கடுத்த நாள் அவரின் விளக்கத்தையும் படித்தேன்.

இந்த தீர்ப்பைப் பாராட்டி தமிழகத்தில் வேறெந்த சமூக சீர்திருத்தவாதிகளும் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை, வேறெந்த சமூக, அரசியல் ஆர்வலர்களும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்காத தருணத்தில் நீதியரசர் கர்ணன் தீர்ப்பு - பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கான அடையாளம் என்று தலையிட்டு விடுதலை முதல் பக்கத்தில் நீதியரசர் அவர் களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், பழைமைவாதி களுக்கும், இந்துசனாதன ஆதிக்கவாதிகளுக்கும் இந்துமத பழைமை கழிந்து புரட்சிகரமான பெரியாரின் எண்ணங்கள் உலகமயமாகி, சட்டமாகவே ஆகிவரும் கலாச்சார புரட்சியை பற்றி தெளிவாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்.

தங்களது அறிக்கையில், இந்தத் தீர்ப்பு மாறிவரும் காலமாற்றத்திற்கு எப்படி தேவையான ஒன்று என்று குறிப்பிட்டுவிட்டு ஏற்கெனவே 1939-ஆம் ஆண்டிலி ருந்து திராவிடர் கழக மாநாடுகளில் தீர்மானங் களாக வடிவமைக்கப்பட்ட சமூக சீர்திருத்த, பெண்ணடிமை ஒழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் சட்டமாக அமுலில் இருப்பதை ஒவ்வென்றாக சுட்டிக்காட்டி இதனால் எல்லாம் கெடாத கலாச்சாரம் - இத்தீர்ப்பினாலா கெட்டுப்போகப் போகிறது என்று தாங்கள் எடுத்துவைத்த வாதம் எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல நீதியரசர் - கர்ணன் அவர்களுக்கே கூட வாதம் செய்ய நியாயப்படுத்த வழிசொல்லியுள்ளீர்கள்.

இறுதியாக சொல்லியுள்ளீர்கள், புராணகால கர்ணன்கள் அளித்தத்தைவிட இது நவீன கால நல்ல பெண்ணியப் பாதுகாப்புகென அருங்கொடை யாகும். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதுவதற்கு முன்பாக நீதியரசர் கர்ணன் கூட இப்படி யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை.

அய்யா! தலைவர் பெரியார் கருத்துக்கள் உலகமயமாகி வருகின்ற வேளையில் தங்களது அறிக்கை உலகம் முழுவதும் வாழும் தமிழர் களுக்கும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் களுக்கும் வாய்ப்பாடாக, வழிகாட்டியாக திகழ்கிறது.

தங்களது பணி, அய்யா வாழ்ந்த வயதை தாண்டி 100 ஆண்டுகள் நிறைவு பெறவும், இறுதி வரை சமூக வழக்கறிஞராக சிறப்பாக செயல்படவும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான பெரியார் தொண்டர்கள் ஆசைப்படுகின்றோம்.

- கே.செல்வராஜ், வழக்குரைஞர் (திருப்பூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர், தாராபுரம்)

தமிழ் ஓவியா said...


தமிழ் மொழி சிறந்தது


தமிழ் புனிதத் தன்மை உடையது; சிவன் பேசியது; தேவார, திருவாசகங் களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ் மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே.

- (விடுதலை, 10.10.1960)

தமிழ் ஓவியா said...


மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டவர் சுந்தரசோழன்


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நிகழ்ச்சியில் பேரா.எஸ்.சாந்தினிபீ ஆதாரங்களுடன் விளக்கம்!




சென்னை, ஜூன் 25- சோழ அரசர்களில், சுந்தர சோழன் மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டார் என்று அலிகார் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.சாந்தினி பீ குறிப்பிட்டார்.

சோழர்களும் சாஸ்திரங் களும் என்ற தலைப்பில், திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் 22.6.2013 சனிக்கிழமை அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பேரா.தானப்பன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அழ கப்பா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. அ.இராமசாமி தலைமையேற்று சிறப்பித்தார். பேரா.பரமானந் தன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சாதனைகள்

பேரா. அ.ராமசாமி தனது தலைமையுரையில் சூஊசுகூ வெளியிட்ட சமூக வரலாற்றில், திராவிடர் இயக்கம் பற்றி தவறான பல தகவல்கள் இடம் பெற்றிருந்ததையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அந் தத் தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதையும், இன்று அப்படிப்பட்ட தவறுகள் நீக் கப்பட்டுவிட்டதாக நமக்கு கடிதம் அனுப்பியதையும் சுட்டிக்காட்டினார்.

சோழர்களும் சாஸ்திரங்களும்

அவரைத் தொடர்ந்து பேரா. சாந்தினிபீ சிறப்புரையாற் றினார். அவர் தமதுரையில்:- சோழர்கள் தங்கள் ஆட்சியை எப்படியெல்லாம் சாஸ்திரப் படி அமைத்துக் கொண்டார் கள் என்பதை பல்வேறு ஆதா ரங்களுடன் விவரித்தார். அவரது ஆய்வு கல்வெட்டுகள் பற்றியது என்றும், கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பது தமிழில் தான் அதிகம் என்றும், அதற்குக் காரணமும் பார்ப்பன சாஸ் திரங்கள்தான் என்றும் அடுக் கடுக்காக ஆதாரங்களை எடுத்து வைத்தார். அதில் சோழர்கள் காலத்தில்தான் ஆரியர், சாஸ் திரங்களின் ஆதிக்கம் மேலோங் கியதை படம் பிடித்துக் காட் டினார்.
அப்படிப் படம் பிடித்து காட்டும் போதுதான், கலிங்கத் துப்பரணியை சுட்டிக் காட்டி அதில் நால்வருணம் கெட்டு விட்டது. அதை தழைக்க வைக்க குலோத்துங்கன் வந்திருக் கிறான் என்றிருப்பதை குறிப் பிட்டார். சோழர்கள் தங்களை மனுவின் மறுபிறப்பு என்றும் தங்களை மனுகுலத்தில் வந்தவர்களாகவும், மனுதர் மத்தைக் காத்து வந்தவர்களாக வும் எண்ணி செயல்பட்டதை யும், சுந்தரசோழன் தன்னை மனுவின் அவதாரமாகவும் எண்ணி செயல்பட்டதையும் அம்பலப்படுத்தினார்.

சோழர்கள் காலம் பொற்காலம் அல்ல

அவரைத் தொடர்ந்து நன்றி யுரை ஆற்றவந்த பேரா.கரு ணானந்தன், பொற்காலம் என்று கூறப்படுகின்ற ஒன்றை, அது அப்படியில்லை என்று மிகத்தெளிவாக அம்பலப்படுத் தியிருக்கிறார் என்று சிறப்புப் பேச்சாளரை வாழ்த்திப் பேசிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். முன்னதாக சிறப்புப் பேச்சாளரை பாராட்டிப் பேசினார் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. த.ஜானகி. அதைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளருக்கு பய னாடை அணிவித்தும் இயக்க நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்யப்பட் டது.

தமிழ் ஓவியா said...


வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


மன்றல்


சென்னை பெரியார் திட லில் சுயமரியாதைத் திரு மண நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதில் புதுத் திருப்பம் தந்தார். அதுதான் மக்களைத் தேடிச் செல்லும் மன்றல் நிகழ்ச்சி! மன்றல் நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மய்யங்களில் நடைபெற்றுள் ளன. அடுத்து பல முக்கிய மய்யங்களில் நடத்திடத் திட்டம் கைவசம் உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தவர்கள், மணவிலக்குப் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் இவர் களிடையே இணை தேடும் சிறப்பு நிகழ்ச்சி இது.

ஆயிரக்கணக்கில் மண மக்களும், பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், இவற்றில் ஆர்வமுடைய இலட்சியவாதிகளும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

வாழ்க்கை இணை நலத் துக்குரிய ஆண்கள், பெண் கள் அறிமுகப்படுத்தப்படு கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிவிக் கப்படுகின்றன.

அறிமுகத்துக்குப் பிறகு கலந்துகொண்டவர்களுக் கிடையே கலந்துரையாடும் பரிவர்த்தனைகள் நடக்கின் றன.

மாலை நிறைவு விழாவி லேயே சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

தத்தம் ஊர்களுக்குச் சென்ற பிறகு தொலைப்பேசி மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவது மன்றல் நிகழ்ச்சி சாதனைத் தோட் டத்தில் பூக்கும் புதுமலராகும்.

இன்று காலை சென்னை பெரியார் திடலில் ஒரு திடீர்த் திருமணம். கோவை மன்றல் நிகழ்ச்சியில் கலந்துகொண் டவர்கள் அவர்கள்.

மணமகன் கோவை மாவட்டம் வேடபட்டி சாலை - தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த திருவாளர்கள் முத் துக்கிருஷ்ணன் - மரகதம் ஆகியோரின் மகன் சிவ சத்திய மூர்த்தி.

மணமகள் புதுக் கோட்டை மாவட்டம் உசி லங்குளம் - திருவாளர்கள் நாகராசன் - இந்திராணி ஆகியோரின் மகள் ரேவதி - இவர் பிறவியிலேயே வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளி!

இவர்களுக்குத் திரா விடர் கழகத் துணைத் தலை வர் கலி.பூங்குன்றன் வாழ்க்கை இணை நல ஒப் பந்தத்தை நடத்தி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் மானமிகு கோவிந்தராசன் மணமக் களைப் பாராட்டி ரூ.500 நன்கொடை நல்கினார். பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் மணமக்க ளுக்கு வாழ்த்துக் கூறினார். மாநில மாணவரணி செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - முன்னமே விதிப்பலனால், பிராப்தப்படி ஜாதகப் பொருத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற மூடக் கருத்தின் முதுகைப் பிளக்க வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணகர்த்தா என்ற முறையில் தந்தை பெரியார்- கொள்கைகளை செயல்படுத்தி வருவதில் திராவிடர் கழகம் - இவற்றிற்கு இணையாகப் புரட்சி பற்றி வாய் திறக்க, மார்பு தட்ட வேறு யாரால், எந்த அமைப்பால் முடியும்?

திருமண நிலைய இயக் குநர் மானமிகு திருமகள் இறையன் அவர்களின் பணி சிறப்பானது - பயன்படுத்திக் கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கடவுள் - மதம் - பக்தியின் ஒழுக்கம் பாரீர்!
வெள்ளத்தால் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பக்தர்களின் பணமும், நகையும் கொள்ளையோ, கொள்ளை!
பலியான பக்தர்களின் உடல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்த கொடுமை!

புதுடில்லி, ஜூன் 26- கேதார்நாத் வெள்ளக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பக்தர்களிடமிருந்து உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடலில் இருந்து உறுப்புகளை வெட்டி நகைகள் களவாடப்பட்டுள்ளன; பக்தியின் ஒழுக்கம் இதுதான்!

கேதார்நாத் மழைவெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர் களிடம் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டுள்ளன.

வரலாறு காணாத மழைவெள்ளத்தினால், உத்தர காண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்தலமான கேதார்நாத் மிகவும் அதிக அளவுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர்.

சாமியார்கள் கொள்ளை!

அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார்நாத்தில் உயிரிழந்தவர்களிடமும், உயிருக்குப் போராடிய பக்தர்களிடமும் சாமியார்கள் சிலர் கொள்ளை யடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் சுமக்க முடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்தப் பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என்று அவர்கள் கூறியதால் மீட்புப் படையினருக் குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டபோது, அந்தப் பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகளும் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மீட்பு!

உடனடியாக அந்தக் கொள்ளையர்களை பிடித்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டன. அவர்களில் ஒருவன் வைத்திருந்த டோலக் கில் (டிரம்) ரூ.62 ஆயிரம் இருந்தது. மற்றொருவன் வைத்திருந்த பிரசாதப் பொட்டலத்தில் ரூ.10 ஆயிரமும், இன்னொருவனின் ஆடைகளுக்குள் ரூ.1.2 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக வரிசையில் காத்து நின்ற சில கயவர்களிடம், பயன்படுத்தப் படாத புத்தம் புது கரன்சி நோட்டுகள் தொடர் நம்பர் வரிசையுடன் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவை கேதார்நாத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விரல்களை வெட்டி நகைகளை எடுத்துள்ளனர்

குப்தகாசியில் நேற்று ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் பெண் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நகைகள் கைப்பற்றப்பட்டன. வெள்ளத்தில் பலி யான பக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. சில உடல்களின் கை விரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உண்டியல் உடைப்பு!

கேதார்நாத்தில் உள்ள பிரதான கோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதே நேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டி யல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


நோக்கம்

சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும்.

(விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திக்கட்டும்!


தனது கட்சிக்காரரான நரேந்திர மோடியைத் தூக்கி நிறுத்துவதற்கும், பிரதமருக்கான வேட்பாளராக அறி விக்கப்பட உள்ள மோடி மீது விழுந்துள்ள அழிக்கப்படவே முடியாத பாசிச - இந்துத்துவா வெறி என்னும் கறையைக் கழுவுவதற்கும் வேறு வழியே இல்லாத நிலையில்தான் குஜராத் கலவரங்களை மறந்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்.

முசுலிம்களை மறந்துவிடுமாறு சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுவிலங்காண்டித்தனமான இந்து வெறிக் கண் ணோட்டத்தோடு திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் படுகொலையை வரலாறு எப்படி மறக்கும்?

இந்தியாவைத் தாண்டி இந்துத்துவாவாதிகளின் இந்தப் பாசிசம் உலக நாடுகளில் கேவலமான நாற்றமாக மூக்கைத் துளைத்துக் கொண்டு இருக்கிறதே!

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடியை எங்கள் நாட்டுக்குள் நுழையாதே என்று குரல் கொடுக்கின்றனவே. ஏன், இந்தியாவில்கூட டில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் மோடியே திரும்பிப் போ! என்று முழக்கமிடவில்லையா?

உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மதச்சார்பற்ற இந்தியா இனி பிழைக்குமா? (Will Secular India Survive?) என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனரே! 4,400 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.800.

இந்தியாவிலும், இராமச்சந்திரகுகா போன்ற சிந்தனையாளர்களும், பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்பது பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்குகளுக்குத் தெரியாதா?

பிரபல சமூகநல ஆர்வலர் அருந்ததிராயின் கருத்து என்ன?

குஜராத்தில் முஸ்லிம்கள்மீதான இனப் படுகொலை என்பது மத வெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனேயே நடந்ததாகும். ஏனெனில், அதற்குமுன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்தார்.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஓர் அங்கம்தானா? இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத்துக்கும் பொருந்துமா? என்ற வினாவை அருந்ததிராய் எழுப் பிடவில்லையா?

ஊடகங்கள் என்னதான் இந்துத்துவாவைத் தூக்கி நிறுத்தினாலும், மோடிக்கு முகமன் பாடினாலும், சில நேரங்களில் தங்களையும் அறியாமல் வேறு வழியின்றி உண்மைகளைக் கக்கியதுண்டு.

எடுத்துக்காட்டாக, இந்தியா டுடே (10.4.2002) எழுதியது இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

குஜராத் கலவரங்களில் 12 லட்சம் பேர் ஈடுபட்டார்கள். சகிப்புத் தன்மை என்ற வார்த்தை இந்திய அகராதியிலிருந்து மறைந்துவிட்டது. மிரண்டு போயிருக்கும் சிறுபான் மையினருக்கு எதிராகப் பெரும்பான்மையினர் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். புதிய இந்தியனை உருவாக்கும் கனவு தரையில் சிதறிக் கிடக்கிறது. மதச்சார்பின்மை தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று எழுதியதே இந்தியா டுடே!

மற்றவர்கள் எழுதுவது, சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; சங் பரிவாரம் உச்ச இடத்தில் தூக்கி வைத்து மரியாதை கொடுக்கும் ஜென்டில்மேனான - அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார்?

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து எந்த முகத் துடன் வெளிநாடுகளுக்குச் செல்வேன்? என்று புலம்பவில்லையா?

2009 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குக் காரணம் குஜராத் கலவரம்தான் என்று அன்றைய துணைப் பிரதமர் அத்வானியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லையா?

இதற்கெல்லாம் சமாதானம் கூறிவிட்டல்லவா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் முசுலிம்களுக்கு வேண்டுகோள் வைக்க முன்வரவேண்டும்?

கடைசியாக அவர்கள் தரப்பில் சொல்லுவது - குஜராத் கலவரத்துக்குப் பிறகுதான் மோடி இரண்டு முறை வெற்றி பெற்றார் என்பதாகும்.

கடந்த தேர்தலின் நிலை என்ன? அதற்கு முந்தைய மாநிலத் தேர்தலைவிட இரண்டு இடங்கள் குறை வாகத்தான் கிடைத்தன என்பதோடு, மோடி அமைச் சரவையில் இடம்பெற்றிருந்த ஏழு முக்கிய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியதையெல்லாம் சாமர்த்தியமாக மறைப்பது ஏன்? ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திப்பது நல்லது! மக்கள் ஏமாளிகள் அல்லர்!

தமிழ் ஓவியா said...


மோடிபற்றிய விடுதலை தலையங்கங்களை நூலாக வெளியிடுக!


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து, ஒன்று சொன்னவாறு ஊட கங்கள் பேசிவருகின்றன. வளர்ந்து விட்ட தகவல் தொடர்பு சாதனங்களில் எந்த ஒன்றையும் மறைக்க முடியாது என்ற போதிலும், மோடியின் தவறுகள் மட்டும் வெளியாவதில்லை அல்லது வலுவாகச் சொல்லப்படுவதில்லை.

இந்நிலையில் மோடிக்குப் பாரதீய ஜனதாவில் உயர் பொறுப்புக் கொடுத்த நிலையில், விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், அவரின் மொத்த உருவத்தின் தீயவை அனைத்தையும் உரித்துப் போடுவதாய் இருந்தது.

இடம், தேதி, ஆதாரம் ரீதியாக எழுதுவது நம் இயக்கத்தின் தலையாய தனித்தன்மை. ஆகவே, தொடர் தலை யங்கம் மற்றும் மேலும் பல செய்திகளை இணைத்து சிறு வெளியீடாக வெளி யிட்டால், எதிர்வரும் தேர்தல் நேரங் களில் மிகுந்த பயன்பாடாக அது அமையும்.

புதுக்கோட்டையில் பணிபுரியும் ஒரு பெண் ஆசிரியர் தலையங்கம் படித்து விட்டு, மோடிக்குப் பின்னால் இவ்வளவு விசயங்கள் உள்ளதா என வியந்தார். அதன் பிறகே அய்யா அவர்களுக்கு இக்கடிதம் எழுதத் தோன்றியது.

- வி.சி. வில்வம், திருவெறும்பூர்