Search This Blog

19.6.13

புத்தர் - வள்ளுவர் பற்றி பெரியார்

புத்தர் - வள்ளுவர்

ஓவியம் - மணிவர்மா

திராவிடர் கழகத்தினர் வள்ளுவர், புத்தர் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள். அதையே வைத்துக் கொண்டு மக்களை, இதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்.
இப்பொழுது மட்டும் வள்ளுவரையும், புத்தரையும் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள் என்று கூறமுடியாது.  இதற்குமுன் 30 ஆண்டுப் பிரச்சாரமும் அதுவேதான்.  இதையும் தள்ளிவிடுங்கள்.

நாங்கள் செய்தது தவறு என்று உங்கள் மனம் கூறுமானால் உங்களுக்கு இரட்டிப்பு உரிமை உண்டு தள்ளுவதற்கு.  நல்லதைக் கடைப்பிடியுங்கள். இப்படி இருந்தால்தான் மனித சமுதாயம், நாளுக்கு நாள் வளரும். நமக்கு அதிகமான அறிவு, சிந்தனை தேவை. ஈரோட்டில் மாநாடு நடந்ததைப் பார்த்து கண்டவர் அலட்சியமாகப் பேசினார்கள். கடைசியில் அகில இந்திய பண்டிகையாக புத்தர் விழா ஆகிவிட்டது.
இதுகூடப் பெரிதில்லை. சர்க்கார் இதற்காக ஒரு நாள் குறிப்பிட்டு விடுமுறையளித்ததுதான் இதைவிடப் பெரிய ஆச்சரியம்! புத்தர் பெயரால் அவருடைய பிறந்த நாளில் புதிய ஸ்டாம்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்! ஒவ்வொருவருக்கும் புத்தர் படத்தை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள்! இரண்டு மாதத்திற்கு ஒரு படமாக புத்தர் பிறந்தது, வளர்ந்தது,  மனைவி மக்களிடமிருந்து பிரிந்து சென்றது சந்நியாசம் வாங்கினது போன்ற படங்களை அதில் போட்டிருக்கிறார்கள்! மிகவும் நன்றாக இருந்தது. அவர் வகுத்த கொள்கைகளை இந்நாட்டில் விழாவாக இன்று கொண்டாடினால்கூட தப்பு என்கிறார்களே சிலர்!


***
மதமில்லாத சர்க்கார் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி ஒரு விழாவிற்கு ஆதரவு கொடுத்தால் என்ன அர்த்தம்? புத்தி இருக்கிறதா? இல்லையா? என்றனர். அவர்களெல்லாம் புத்தர் விழா கொண்டாடுவது தப்பு என்றும் சொல்லவில்லை. நல்லது என்றும் சொல்லவில்லை. இவ்வாறு பத்திரிகைகளில் எழுதி வருகின்றனர். மதச்சார்பற்ற சர்க்காரில் தீபாவளிக்கு இரண்டு நாள், சரஸ்வதி பூஜைக்கு மூன்று நாள் விடுமுறை! இவைகளெல்லாம் பண்டிகையில்லையா? பூணூல் போட ஒரு நாள் லீவு விடலாமா? எத்தனை பேர் இந்த நாட்டில் அன்றைக்குப் பூணூல் போடுகின்றனர். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்? எந்தப் பத்திரிகை எழுதுகிறது?
இந்த நாட்டின் பிரசிடென்ட் பிரசாத், முதலமைச்சர் நேரு,  மாஜி கவர்னர் ஜெனரல் இராஜாஜி வரையில் புத்தரைப் பற்றி மிக ஜாக்ரதையாகப் பேசியிருக்கிறார்கள். சிலர் ரிஷிகள் சொன்னதுதான். உபநிஷத்தில் இருப்பதுதான். கீதையில் இருப்பதுதான் இவை புதிதாக புத்தர் ஒன்றையும் சொல்லிவிடவில்லை என்று பேசினார்கள்.
***
நேரு அவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும்; கிரகணங்களின் போது முழுக்குப் போடுவது தப்பு, ஜோதிடம் பார்ப்பது முட்டாள்தனம் அது இது என்ற சகுனங்கள் தப்பு என்று பச்சையாகவே பேசிக் கண்டிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி ஒரு பெரிய மாறுதலோடு புத்தர் விழா கொண்டாடப்பட்டது. நாம் முயற்சி எடுத்துச் செய்த காரியம் தப்பு இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து, கூட இருக்கிறவர்கள் சிரிக்கிறார்கள். எதிரிகளும் புத்தரைப் பற்றிக் கூப்பாடு போடுகிறார்கள்.
தமிழ்நாடு கொஞ்சம் திருப்பு முனைக்கு வந்திருக்கிறது. இதைக் கண்டு நாடு எப்படிப் போகுமோ என்று தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் திருக்குறளைப் பள்ளியில் வைப்பதையும் நிறுத்திவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் பரிமேலழகர் உரையாகவே இருக்கும். அதனால் வேதமும், குறளும் ஒன்று என்று மக்கள் எண்ணினர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் கீதையிலிருந்த கருத்துகளை எடுத்துத்தான் குறளில் சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். இப்படிக்கு மக்களை ஏய்க்கிறார்கள்.
நான் 30 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஆரியர்கள் இந்நாட்டுக்குக் குடியேறியவர்கள் என்று எழுதியிருக்கும்.    ஆனால், இப்போது அந்த சரித்திரத்தையே தலைகீழாக மாற்றி வருகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு ஆரியர்கள் என்பவர்கள் குடி புகுந்தார்கள். அவர்கள் வருவதற்கு முன்பு திராவிடர்களும் குடிபுகுந்தவர்கள்தான். அவர்களும் இந்த நாட்டுக்குச் சொந்தம் இல்லை என்று எழுதி வருகிறார்கள். இவைகளை யார் கேட்கிறார்கள்? நம் புலவர்களை எடுத்துக் கொண்டால் எல்லோரும் வயிற்றுக்காகப் பாடுபடுபவர்கள்! அறிவுக்கு என்று படித்தவர்கள் 1000 க்கு ஒருவர்தான். அப்படிப் படித்துப் பட்டம் பெற்று இருந்தாலும் வேலைக்காக சிபாரிசுக்குத் தேடுவதற்குச் சரியாக இருக்கிறது.
தப்பித்தவறி கல்லூரியில் பேசிவிட்டால் நம் தப்புதானே. போ, போ, வெளியே இந்த மாதிரிப் பேசாதே என்று கூறுகிறான். நான் ஒருவன்தான் வயிற்றெரிச்சலில் பேசுகிறேன். ஜாதி ஒழியவேண்டும் என்று வள்ளுவர் சொன்னார். புத்தர் சொன்னார். அவர்களுக்கு அடுத்தபடியாக நான் சொல்லுகிறேன். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று கஷ்டத்துடன் பாடுபடுகிறேன்.
***
காந்தியத்தைப் பின்பற்றுகிறவர்களில் யார் சொல்லுகிறார்கள் ஜாதி ஒழியவேண்டும் என்று? தீண்டாமை பேதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுவார்களே தவிர ஜாதிகள் அனைத்தும் ஒழிய வேன்டும் என்று சொல்லமாட்டார்கள்.
***
யார் எப்படிப் பேசினாலும் ஜாதி இந்த நாட்டை விட்டு ஒழியத்தான் போகிறது.
இவர்கள் புத்தர் கொள்கைகளை ஆதரித்திருந்தால், அது ஜப்பான், மலேயா, பர்மா, சயாமுக்கு ஏன் போகிறது? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சரித்திரங்களிலும் புத்தநெறி விரட்டி அடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பவுத்தர்களுடைய மடம், கலாசாலைகளைத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறார்கள். பவுத்தர்களைக் கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள்.
***
 
காஞ்சிபுரம் வரை புத்தர்கள் கொள்கைகள் பரவி, ஜப்பான், பர்மா, மலேயா போன்ற நாடுகளுக்கும் பரவி விட்டது. ரங்கநாதரைக் காப்பியடித்து அதற்குத் தங்கமுலாம் பூசி வைத்திருக்கிறார்கள். ஆனால், எண்ணெய் விளக்குகள் இல்லை. இங்கிருப்பதைப் போல் பரிவார தேவதைகள் அங்கும் இருக்கிறார்கள்.
நாத்திகர் என்று நிந்திக்கப்பட்டு, வையப்பட்டு 2,000 வருடங்களாக மறைக்கப்பட்டு வந்த ஒருவரை இன்று 1956-இல் திடீரென்று அரசாங்கம் முதற்கொண்டு பல அறிஞர்கள் வரையில் ஊர்ஊராகப் பெருமைப்படுத்திப் பேசி விழா கொண்டாடுகிறார்கள் என்றால், என்ன அர்த்தம்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள். புத்தர் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டாரா? இதனுடைய அர்த்தம் என்ன? முன்னிருந்த நிலைமையைவிட ஒரு படி நாம் முன்னேறியிருக்கிறோம்.  நம் நிலையிலிருந்து கொஞ்சம் மாறியிருக்கிறோம் என்பதுதான். நமக்குப் புத்தி வந்துவிட்டது என்பதுதான் அர்த்தம். புத்தர் சொல்லியிருந்தாலும் யோசித்துப் பார்ப்போமே என்ற அளவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
--------------------------------------------- தந்தை பெரியார்-'`விடுதலை", 11.-6.-1956

17 comments:

தமிழ் ஓவியா said...


சு...தந்திரம்


நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட்டது என்று ஆடினார்கள் - பாடினார்கள். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கப்படுகிறது - (மன்னிக்கவும், கொஞ்சம் முன்னேறி - சாக்லெட் கொடுக்கப்படுகிறது)

ஆனாலும்.. ஆனாலும்... 2012ஆம் ஆண்டு குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் எனும் அமைப்பு வெளியிட் டுள்ள ஒரு தகவல் நமது தலையை 360 டிகிரியில் சுற்றச் செய்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் 2012ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத் தப்பட்ட வன்கொடுமை வழக்குகள் 33,655; 1.10 லட்சம் வழக்குகள் இன் னும் நிலுவை என்னும் ஊறுகாய்க் கலயத்தில் குறட்டை விட்டுத் தூங் கிக் கொண்டிருக்கின் றன - 5.6 சதவீத வழக் குகளில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண் டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக் கான தங்கப்பூண் அணி விக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்!

இந்த லட்சணத்தில் சில ஜாதீயவாதிகள் இப் பொழுது அக்னியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளார்கள். தலித்களுக்கு எதிரான அணியைத் திரட்டப் போகிறார்களாம். தமிழ் நாட்டில், தந்தை பெரியார் மண்ணில் அது வேகாது என்பதற்கு அடையாளம் அந்த நெருப்பு அதற்குள் அணைந்து சுருண்டது என்பதுதான்.

தீண்டாமைக் குற்றம் செய்பவர்களைத் தண்டிப் பதற்காக இருப்பது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம்; அது தவறாகப் பயன்படுகிறது என்றும், அந்தச் சட்டத்தை அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் நீட்டி முழங்கிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவ ரத்தை ஒரு முறை கவனிக்க வேண்டும்.

இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக் கின்றன. இன்னும் ஜாதி சுடுகாடுகள் இருக் கின்றன. இன்னும் கரு வறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை தாழ்த் தப்பட்ட மக்களுக்குக் கிடையாது. இன்னும் கவுரவக் கொலைகள் - தருமபுரிகள் - நடந்து கொண்டுதான் இருக் கின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந் திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சந்தி... சிரிக்கிறது!

செய்தி: அத்வானியை நரேந்திர மோடி சந்தித்தார்.

சிந்தனை: விடயம் சந்தி சிரிக்கிறதே - சந்திக்காமல் என்ன செய்வாராம்?

தமிழ் ஓவியா said...


அரசு என்ன செய்ய உத்தேசமோ!


திண்டுக்கல்லில் நடைபெற்ற (15.6.2013) திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் குறிப்பிடத்தக்கது - சமூகநீதித் தொடர்பான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வு பற்றியதாகும். இதுவரை தமிழ்நாட்டில் நடந்திராத அளவுக்கு சமூக அநீதி இதில் கொடி கட்டிப் பறக்கிறது.

தீர்மானம் வருமாறு:

ஆசிரியர் தகுதி தேர்வு - சமூகநீதிக்கு விரோதமான தமிழக அரசின் செயல்பாடு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், சமூக நீதிக்கு விரோதமாகவும், தேசிய கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமாகவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதி அனைவருக்கும் ஒரே அளவு தகுதி மதிப்பெண்ணை (60 சதவிகிதம்) நிர்ணயித்து இருப்பதை திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியும், அதுகுறித்துச் சிந்திக்காமல் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது - சமூகநீதிக்கு வெட்டப்படும் படுகுழி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், செய்த தவறைத் திருத்திக் கொண்டு, தமிழ் மண்ணுக்கே உரிய சமூகநீதி உணர்வைக் கட்டிக் காக்குமாறு தமிழ்நாடு அரசை - குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.

இந்தச் சமூக அநீதி கமுக்கமாகக் கழுத்தறுப்பது போல, மிக மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

முதன் முதலில் இந்தப் பிரச்சினையை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான்; வெளிப்படையாக்கியது விடுதலை - எனும் சமூக நீதிப் போர் வாள்தான்.

அதன் பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி சமாளித்த கல்வி அமைச்சர், தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளாமல், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏதோ சில வார்த்தைகளை பிறகு வெளியிட்டார்.

இது இன்னும் ஆபத்தானது. அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு - சமூகநீதிக்கு விரோத மானதே என்பதே கல்வி அமைச்சர் கூறுவதற்கான பொருளாகும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதுகுறித்து விளக்கமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்; கல்வியாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் கதையாக, ஏற்கனவே 19 ஆயிரம் ஆசிரியர் பணிகள் நியமனத்தில் செய்த அதே தவறினை - வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பான்மை அ.இ.அ.தி.மு.க. அரசிடம் இல்லை என்பது இன்னும் விரிவாக வெளிச்சமாகத் தெரிந்து விட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால், தமிழ்நாடு அரசு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு என்ற ஆணையைப் பிறப்பிக்கப் போய் - 1980 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியை வாரி அணைத்துக் கொண்டார் - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சமூகநீதிக்கு எதிரான அவரது ஆணையை மக்கள் மத்தியில் வலுவாக திராவிடர் கழகம் எடுத்துச் சென்றது - இநதத் தோல்விக்குக் காரணம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிக் கொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அரிய ஆலோசனை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்டது.

அதே முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் இன்றைக்கும் முதல் அமைச்சர் - சமூக நீதிப் பிரச்சினை யில் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டாமா? கோட்டை விட்டு விட்டாரே!

தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியவருக்கும் இடையே உள்ள இடைவெளி கூடத் தெரியாதவரா முதல் அமைச்சர் ஜெயலலிதா? பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் கையணைத்து வீதிகளில் உரிமை முழக்கமிடக் களத்தில் குதிக்க ஆரம்பித்தால் இந்த ஆட்சியின் நிலை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

குதிரை காணாமற் போன பின்பு தான் இலாயத்தை இழுத்துப் பூட்டப் போகிறதா அ.இ.அ.தி.மு.க. அரசு? தமிழ் மண் போராட்டக் களமாக மாற வேண்டுமா?

பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது; என்ன செய்ய உத்தேசம்?

தமிழ் ஓவியா said...

நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)


சில மாதங்களுக்கு முன்பு (ஏன் ஓராண்டுக்கு மேலாகவே கூட இருக்கலாம்); என்னுடன் முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் விடுதியில் தங்கியிருந்தவர் திரு. லட்சுமி நாராயணன் என்ற நண்பர். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர்; பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; அதற்கு முன்பும் இண்டர்மீடீயெட் என்ற இடைநிலை வகுப்பும் அங்கேயே படித்து அறிமுகமான நண்பர் திராவிடர் இயக்கப் பற்றாளர்.

எப்போதும் என்னிடத்தில் அன் புடன் பழகுபவர்; நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அண்ணாச்சி என்றுதான் அழைத்துக் கொள்வோம்! எனது அறைக்கே வந்து விடுதலை படிப்பார்; பல்வேறு செய்திகளை விவாதிப்பார்.

அதன்பிறகு அவர் பணிக்கு சென் னையில் சேர்ந்தபிறகு அடையாறு காந்திநகர் பகுதியில் குடியிருந்தார்; அவருடைய மகனும், என் மகனும் அங் குள்ள பள்ளியில் வகுப்புத் தோழர்கள்!

சிற்சில நேரங்களில் எங்கள் வீட் டிற்கு வந்து உரையாடிச் செல்வார்; பிறகு அதிக தொடர்பு இல்லை.

திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் அலுவலக முகவரிக்கு வந்தது. அத் துடன் முப்பாதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு, நான் லட்சுமிநாராயணன் எழுது கிறேன் என்று எழுதி, விடுதலையை நாளும் படித்து வருகிறேன். ஓய்வு பெற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி யுள்ளேன் சென்னை புறநகர் பகுதியில்.

தங்களின் பணிகள் சிறக்க விரும்பி, இந்தத் தொகையை நன்கொடையாக அனுப்பியுள்ளேன் பெற்றுக் கொண்டு, தங்கள் விருப்பப்படி இதனை பணி களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட முகவரிக்கு நான், நன்றி தெரிவித்துக் கடிதமும்கூட எழுதினேன்.

இதுபோல் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நண்பர் களைவிட நேரடிப் பார்வையில் இல்லா மலேயே நமது பணிகளைப் பாராட்டி ஊக்க மூட்டி நன்றி தெரிவிக்கும் நண்பர்கள் ஏராளம்! ஏராளம்!! அநேகர் அந்தப் பட்டியலில் உண்டு.

அதுபோலவே மருதூர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - மறைந்தா லும் எப்போதும் நம் நெஞ்சங்களில் நிறைந் தவரான நாகை மாவட்ட முன்னாள் தி.க. தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் - அவர்களது குடும்பம் அம்மா, பிள்ளைகள் உட்பட அனைவருமே மிகுந்த பற்றும் மரியாதையுடன் கழகப் பணிகளைப் பாராட்டிடுவர்.

சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை வளர்ச்சி நிதி திரட்டப்பட்ட கால கட்டத்தில் தங்கள் பங்கு என்று கூறி தந்தது சந்தாக்கள் அல்லாமல், ஒரு தொகையை என்னிடம் நேரில் வந்து தந்து, எதற்குப் பயன்படுத்திட தாங்கள் எண்ணுகிறீர்களோ, அதற்கு இந்த எளிய தொகையைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள் என்று கூறி சென்று விட்டார்கள்!

தமிழ் ஓவியா said...

விடுதலையின் எழுத்தாலும் கழகத் தின் போராட்டத்தினாலும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண் இன்று தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து M.B.B.S. பட்டம் வாங்க இருப்பதாக திண்டுக்கலில் நான் நமது கெழுதகை நண்பரும் பெரியார் சுயரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் டிரஸ்ட்டின் நிர்வாக உறுப்பினருமான வழக்குரைஞர் மானமிகு கொ. சுப்ரமணியம் இல்லத்தில் 15.6.2013 - பொதுக் குழுவுக்குப் போன போது நான் தங்கியிருந்த இடத்தில் - நேரில் வந்து இருவர் கூறி, நன்றி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாநகரில் மிகப் பெரிய புத்தக விற்பனையாளர்களாக இருக்கும் அய்யனார் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர்கள் பெரியவர் பூவலிங்கம், முத்து மாணிக்கம் தந்தையும் தனயனும் ஆவர்.

பெரியார் பற்றாளர்கள் - பகுத்தறி வாளர்கள் அவ்விருவரும்.

அய்யா எனது பேத்தி நல்ல மார்க் வாங்கியிருந்தும், மருத்துவக் கல்லூரிக்கு சேர்ப்பதில் வரிசைப்பட்டியல் வந்தததில் - முறைப்படி தேர்வு செய்ய 100 இடங்கள் - கலைஞரின் ஆட்சியில் சென்ற முறை தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, கட்டுமானங்கள் எல்லாம் முடித்து துவக்க மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லையாதலால் நூறு இடங்களை பூர்த்தி செய்யாமல் நிறுத்தி வைத்து விட்டனர்.

இது குறிப்பிட்ட கல்வி ஆண்டே துவக்கப்பட்டால் தான் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய கிராமப் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு ஏற்படும், என்று மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிகள் மேற் கொண்டு உடனடியாக இவ்வாண்டே துவக்க வேண்டும் என்று விடுதலையில் எழுதினீர்கள்.

தர்மபுரியில் அறப்போராட்டத்தை யும், திராவிடர் கழகம் நடத்திட அறிவித்து நடத்தினீர்கள். அதனால் அவ்வாண்டே மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. 100 இடங்கள் கூடுத லாக வந்ததால், கிடைக்கவில்லை என்று வேறு வேலைக்குச் சென்ற என் பேத்திக்கு M.B.B.S. அட்மிஷன் கார்டு வந்தது - எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது! எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர் இப்பெண். இது விடுதலையாலும், கழகத்தாலும் தான் சாத்தியமானது என்று நன்றி பொங்கக் குறிப்பிட்டார்கள்.

இப்படிப் பலப்பல நிகழ்வுகள்! பெரியார் என்ற பேராசானின் உழைப்பு என்றுமே பலன் தராமல் சென்ற தில்லை, என்றாலும் பயனடைந்தவர் களில் பலர் இல்லாவிட்டாலும் - சிலராவது கூறுகிறார்களே - அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நன்றிப் பெருக்கின் நாயகர்கள் வாழ்க! .

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


தமிழக அரசின் தவறான முடிவால் காலியான இடங்கள்


சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் போக்குப் பார்ப்பனீயத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது.

குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் நிலைப் பாட்டை மிகவும் தூக்கிப் பிடிக்கின்றன.

சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதில் இன்றைய மாநில அரசு தொடக்கம்முதலே எதிர்நிலையில் தான் இருந்துவந்தது.

உச்சநீதிமன்றம்வரை சென்று பார்த்த அரசு கடைசியில் வேறு வழியின்றி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது.

சமச்சீர் கல்வி காரணமாக இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர் இருபால் மாணவர்களும்; அதிக மதிப்பெண்களையும் ஈட்டியுள்ளனர். இதனைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன தினமணி உள்ளிட்ட அவாள் ஏடுகள்.

ஒரு காலகட்டத்தில் தேர்வில் பெறும் மதிப் பெண்கள்தான் தகுதி திறமைக்கான அளவுகோல் என்று ஆணி அடித்து எழுதினர்; அந்தக் கால கட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் அபார ஆற்றல் அவர்களிடம்தான் இருந்தது.

இப்பொழுது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஆரம்பித்த நிலையில், மதிப்பெண் தகுதியின் அளவுகோலா என்று பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியின் அடிப்படை ஆணிவேரில் வெந்நீரை ஊற்றிவிட்டது.

மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப் மார்க்) தனித் தனியேதான் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவருக்கும் (உயர்ஜாதிக்காரர்கள் உள்பட) ஒரே அளவு தகுதி மதிப்பெண்கள் - 60 சதவிகிதம் பெறவேண்டும் என்பது சமூகநீதிக்கே நேர் விரோதம் அல்லாமல் வேறு என்னவாம்?

இப்படி அனைவருக்கும் ஒரே அளவு மதிப் பெண்களை வரையறை செய்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள் 1470 இல் 659 காலியாகவே உள்ளன. பழங்குடியினர்க் கான 99 இடங்கள் காலியாகவே உள்ளன. அருந்ததியருக்கான 131 இடங்கள் பூர்த்தி செய்யப் பட முடியவில்லை. முசுலிம்களுக்கான 153 இடங்கள் காலியாகவே உள்ளன.

தமிழ்நாடு அரசின் குளறுபடியான - சமூகநீதிக்கு விரோதமான அணுகுமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவ்வகையில் பெரிய அநீதி நடந்துள்ளது. கேட்டால் இதுதான் அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு என்று சொல்லுகிறார் கல்வி அமைச்சர் - எங்கே போய் முட்டிக்கொள்வது?
இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் கல்விக் கழகம் அகில இந்திய ரீதியில் தகுதித் தேர்வு எப்படி நடத்தப்படவேண்டும் என்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதிக் கண்ணோட்டத் துக்கே விரோதமானது தமிழக அரசின் செயல்பாடு.

ஆந்திரா, கேரளா, பிகார் முதலிய மாநிலங்களில் தனித்தனியே தகுதி மதிப்பெண்களை நிர்ண யித்துள்ளபோது, சமூகநீதி பிறந்த பெரியார் மண்ணில், பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இப்படியொரு கொடுமை - அநீதி இழைக் கப்பட்டுள்ளதே - இதனை எப்படிப் பொறுப்பது?

சமூகநீதியாளர்கள் களம் காணவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தவறைத் திருத்திக் கொள்ளுமா தமிழக அரசு?

எங்கே பார்ப்போம்? 20-06-2013

தமிழ் ஓவியா said...


மோடி அலையை உருவாக்குவது யார்? நிதிஷ் அம்பலப்படுத்துகிறார்


பாட்னா, ஜூன் 20- நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அது போன்ற தோற்றத்தை உரு வாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்த்தின் மீது நிதிஷ்குமார் பதிலளிக் கையில், நரேந்திர மோடியை அவரது பெயரை குறிப் பிடாமல் மறைமுகமாகத் தாக்கியும், குற்றம் சாட்டியும் பேசினார். நிதிஷ் பேசியதாவது:

தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவருக்கு (நரேந்திர மோடி) ஆதரவாக அலை வீசிவருவதாக பா.ஜ. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், அப்படி எதுவும் அலை வீசவில்லை. பெரிய தொழில் நிறுவனங் கள்தான் இதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த போலித்தோற்றம் நீண்ட காலம் நீடிக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் இதனால், எந்த அற்புதமும் நடக்காது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததாலேயே யாரும் அவர்களது தலைவராகி விட முடியாது. பெரிய தொழில் நிறுவனங்களின் நலனை விரும்புகிறவர் பிற்படுத்தப் பட்டோரின் தலைவராக முடியாது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. பீகாரின் வளர்ச்சிக்காக அவர்கள் கூறிய ஆலோசனைகளை நாங்கள் கேட்டோம். ஆனால், எங்கள் யோசனைகளை பா.ஜ.க.வினர் நிராகரித்தனர். கூட்டணி முறிவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

- இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

தமிழ் ஓவியா said...

எருமை போவதுபோல்...



எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


நாட்டில் வறட்சி நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!


ஒருபுறம் வெள்ளம் - மறுபகுதியில் நாட்டில் வறட்சி

நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!

மத்திய - மாநில அரசுகள் உடனே ஆவன செய்ய வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வடமாநிலங்களான உத்தர காண்ட்/இமாச்சல பிரதேசங் களில் பெரும் மழை காரண மாக நிலச்சரிவு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள நிலையில், மேலும் அங்குள்ள மக்களின் பாது காப்புக்கு போர்க்கால அடிப் படையில் நிவாரணம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என தமிழர் தலைவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த வாரம் பெய்த பெரு மழை காரணமாகவும், அதன் விளைவாக அங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்!

என்னே கொடுமை!

பலியானோர்பற்றிய தகவல்கள் இன்னும் சரியானவை கிடைக்கவில்லை; உயிருடன் இருப்பவர்களை மீட்க மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டுள்ளன.

பக்தி யாத்திரை என்ற பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லும் பக்தர்களைப் பரவசப்படுத்திட, சுற்றுலாத் துறையினர் அமோக விளம்பரம் செய்து ஈர்க்கின்றனர்!

ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் போதிய அளவு கவனம் செலுத்துவதில்லை!

புண்ணியம் கிட்டும் என மூடநம்பிக்கை!

கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தால் புண்ணியம் கிட்டும் என்ற மூடநம்பிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லுகின்றனர்; சுற்றுலா வணிகர்களும் இதைப் பெரிதாக விளம்பரப்படுத்துகின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஆனால் அந்த மாநிலங்களில் (மலைப் பிரதேசங்கள் ஆனபடியால்) மழை வெள்ளம் எதிர்பார்க்க வேண்டிய வைகளே என்ற நிலையில், அங்கே போதிய பாது காப்புடன் கூடிய பாதைகளும், பாலங்களும், தடுப்புச் சுவர்களும் கட்டப்பட்டு, நிரந்தரப் பாதுகாப்பு வசதி செய்யப்படாமலேயே ஆண்டுதோறும் இந்த பக்தி வியாபாரம் நடைபெறுகிறது.

நிரந்தரப் பாதுகாப்பு வசதி தேவை!

கடவுள் கருணையே வடிவானவர் என்ற புரட்டு இந்த சோகப் படலம் மூலம் அம்பலமாகி விட்டது. அதற்காக இத்தனை உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியானது கண்டு, நாத்திகர்களாகிய நாம் தான் அதிக வேதனை அடைகிறோம்; காரணம் மனித உயிர்கள் - அவர்கள் எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் ஆனாலும், காப்பாற்றப்பட வேண்டியவைகள் என்ற மனிதநேயக் கொள்கை உடையவர்கள் பகுத்தறிவாளர்களாகிய நாம்!

எனவே இந்த எஞ்சியோர் போதிய பாதுகாப்புடன் அவரவர் வீடு திரும்ப அனைத்து முயற்சிகளும் அவசர கதியில் - போர்க் கால அடிப்படையில் - மேற்கொள்ளப் பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படல் வேண்டும். இப்படி வடக்கே கங்கோத்ரி, யமுனோத்திரி, யமுனை நதி டெல்லிப் பட்டணத்திலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது என்ற நிலை ஒருபுறம்; தென் மாநிலங் களில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. மாநிலங்களிடையே மிகப் பெரிய சண்டைகளும், ஏன் யுத்தமும்கூட!

குடிநீருக்கும்கூடப் பஞ்சமோ பஞ்சம்!!

இனி எதிர் காலத்தில் வரும் யுத்தங்கள் நீர் உரிமைக்கானவையாகத்தான் இருக்கப் போகிறது என்று நீரியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்!

நிரந்தரத் தீர்வு நதிநீர் இணைப்பு

இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு, நதிநீர் இணைப்பு அல்லவா?

அதுபற்றி மத்திய -மாநில அரசுகள் சிந்தித்து உடனடியாகச் செயல்பட வேண்டாமா?

எத்தனையோ விளம்பரத் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் மத்திய மாநில அரசுகளும் இந்தியாவின் நதிகளை இணைத்து, வெள்ள நீர் வறட்சி மாநிலங்களுக்குக் கிடைத்தால், எல்லா மக்களும் சுகவாழ்வு வாழ்வார்களே, இந்த அறிவியல் யுகத்தில் இது என்ன சாத்தியப்படாத ஒன்றா, இல்லையே!

உச்சநீதிமன்றம் இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்து தீர்ப்பு தந்தும்கூட, இதுவரை தீவிர முயற்சிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுக்கவில்லையே!

இதுபற்றி உடனடியாக நிபுணர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உலக வங்கி போன்றவை மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி - ஏன் கோயில்களில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கூட எடுத்து - கடன் பத்திரங்களை அரசு அக்கோயில்களுக்கு வழங்கி விட்டுக் கூட - செலவழித்து, இந்தியா முழுவதும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகளைப் போட்டு, அவை இப்போது ஆறு வழித் தடங்களாக அகலமாகும் நிலையில், இப்படி நதிகளை இணைக்கும்பணி உடனடியாகத் துவக்கப்படல் வேண்டும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் ஒருமித்த குரலில் ஓங்கிக் கூற வேண்டும். தற்காலிக நிவாரணங்களைவிட நிரந்தரத் தீர்வுகளே நாட்டு மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும்.

கடும் மழை வெள்ளம் ஒரு பகுதியில் - கடும் வறட்சி மறுபகுதியில் ஒரே நாட்டில் என்பது முரண்பாடு அல்லவா? அது களையப்படல் அவசர - அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
21.6.2013

தமிழ் ஓவியா said...


ஸ்ரீசாந்தைக் கொஞ்சம் பாருங்கள்!


மதமானது கடவுளுக்கும் நமக்கும் இடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எந்தவித அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தைவிட மேலானதாக நினைக்கிறது. அன்றியும் மதமானது பணச் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங் களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்ப தாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கிறது என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

- (குடிஅரசு 11.8.1929)

இதனை அப்படியே இப்பொழுது நடந்த நடந்து கொண்டு இருக்கிற நிகழ்வுக்கும் பொருத்திப் பார்த்தால் தந்தை பெரியார் இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன் சொன்னது எந்த அளவுக்குத் துல்லியமாகப் பொருந்து கிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.

அய்.பி.எல். கிரிக்கெட்டை மறந்து விடத்தான் முடியுமா? அதை மறந்தாலும் அதில்கூட இடம் பெற்ற சந்தர்ப்பத்தைத் தான் மறக்க முடியுமா?

சூத்தாட்டத்தையே மறந்தாலும் ஸ்ரீசாந்த், ஸ்ரீசாந்த் எனப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட்காரரைத் தான் மறக்க முடியுமா?

எப்படி எப்படி எல்லாம் சூதாடினார்? விளையாட்டு மைதானத்தில் இந்த மைனர் எந்தெந்த சைகைகளைக் காட்டிப் பந்துகளை வீசினார்! அப்படி வீசப்பட்ட ஒவ்வொரு பந்துக்கும் எவ்வளவுக் கோடி ரூபாய் புரண்டது?

பக்கம் பக்கமாக ஏடுகள், ஊடகங்கள் செய்திகளை அள்ளி அள்ளிக் கொட்டவில்லையா?

ஸ்ரீசாந்த் தங்கி இருந்த அறையில் கைப்பற்றப்பட்ட பணம் ஆவணங்கள், சி.டி.கள் இத்தியாதி.. இத்தியாதி சாட்சிகள் ஸ்ரீசாந்தை விளையாட்டுச் சூதாடி கில்லாடி என்பதை நிரூபித்ததே - ஆசாமி கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அத்தோடு முடிந்ததா? காவல்துறையினர் அவர் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் நுழைந்தபோது அங்கு அழகிகள் இருந்தனர் என்றெல்லாம் படத்துடன் வெளி வரவில்லையா?

அதன்பின் கைது செய்யப்பட்டு சிறைக் குள் நெட்டித் தள்ளப் படவில்லையா?

இவ்வளவுப் பெரிய குற்றவாளி இப்பொ ழுது எங்கே? ஜாமீனில் வெளிவந்து அவசர அவசரமாக எங்கு சென்றார் தெரியுமா?

சபரிமலைக்குச் சென்றுள்ளார்? எதற் காகவாம்? எல்லாம் பிரார்த்தனைக்காகத் தான். என்னை அய்யப்பன் காப்பாற்றுவான் நான் குற்ற மற்றவன் என்று வெளியில் வருவேன் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறாரே!

இப்பொழுது தந்தை பெரியார் கூறிய அந்தத் திருவாசகத்தைக் கொஞ்சம் பொருத்திப் பாருங்கள் பளிச்சென்று புரியும்!

பணச்செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருக்கிறது; எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்மூலம் மன்னிப்பு இருக்கிறது. என்று நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யத் தூண்டுகிறது என்று தந்தை பெரியார் சொன்னதுதான் எவ்வளவு துல்லியமானது! - உண்மையானது!

இது ஒன்றும் புதிதல்ல! மஸ்தான் - மஸ்தான் என்ற கடத்தல் மன்னனைக் கேள்விப்பட்டதில்லையா?

அன்றாடம் அய்ந்து வேளை தொழுபவர்தான் ஒவ்வொரு வருடமும் ரம்ஜானையொட்டி ஒரு மாதம் நோன்பு இருப்பவர்தான்! மெக்காவுக்குச் செல்ல இருந்தோம் - அதற்குள் கைது செய்துவிட்டார்கள் என்று மஸ்தான் மனைவி சொன்னாரே!

பிரபல கடத்தல் புள்ளி வரதன் முனிசாமி மும்பையில் கோளிவாடா என்னும் பகுதியில் சிவன் கோயிலையே கட்டியவர் தானே!

சிங்கம்பட்டி கொலை வழக்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்பதுபோல விஷ ஊசி கொலை வழக்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டில் பிரபலம்!

வைத்தீஸ்வரனும் அவனது கூட்டாளிகளும் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு பணக்காரர்களைக் கடத்திச் சென்று விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டு, பணத்தைக் கொள்ளையடித்துக் குபேரர்களாக வாழ்ந்தனரே!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாய் அந்தக் கும்பல் பிடிபட்டது.

அடித்து உதைத்துக் கேட்ட வுடன் உண்மைகளைக் கக்கினார்களே! கொள்ளை யடித்த பணத்தில் திருப்பதி, பழனி உள்ளிட்ட கோயில் களில் உண்டியலில் போட்டது வரை கணக்குக் கொடுத்தனரே!

தந்தை பெரியார் சொன்னதை இன்னொரு முறை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள். புத்தியைச் செலவழித்தால் இதற்குள்ளிருக்கும் உண்மை புலப்படும்!

கூடுதல் தகவல்: (Tail Piece:) கொலை வழக்கில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் - ஜெயேந்திர சரஸ்வதியைக் கொஞ்சம் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

நாள்தோறும் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பூஜை நடத்திக் கொண்டுதானே இருக்கிறார். பூஜை புனஷ்காரங்களுக்கு பஞ்சமா என்ன?

இவ்வளவையும் செய்யக் கூடிய லோகக் குரு சங்கராச்சாரியார்தான் கொலை வழக்கில் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார். ஆக கடவுள், பக்தி, பிரார்த்தனை, பிராயச்சித்தம் என்றால் என்ன என்பது இப்பொழுது புரிந்திருக்குமே!

தமிழ் ஓவியா said...


நமது பணி...



மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர் களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...

சந்திரோதய நாடகம் பற்றி குடிஅரசு


தோழர் அண்ணாதுரை எம்.ஏ., அவர்களால் எழுதப் பட்டு அண்ணாதுரை அவர்கள் நடிப்பு ஆசிரியராய் இருந்து பழக்கப்பட்ட காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார் சந்திரோதயம் என்னும் நாடகத்தை 19.11.1943இல் ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் நடத்தினார்கள்.

இதன் விவரம் சென்ற வாரம் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும் மானத்திற்கு உயர்தர வழி காட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்பட கூறியதாக ஆகாது.

இன்று ரஷ்ய நாடானது ஸ்டாலினது உருக்கு ஆட்சியின் கீழ் நிலைகுலையாமல் இருந்து உலகத்தைக் காப்பாற்றி வருகிறது என்றால் அது பெரிதும் ஸ்டாலினுடைய வீரமல்ல; வெற்றியல்ல; அறிவல்ல; ஆற்றலல்ல என்று மும்முறை முரசறைகிறோம்.

சிந்தனைப் பிரச்சாரம்

மற்றென்னையெனில், அங்கு அம்மக்களுக்கு தலைவர்களும் உண்மை உணர்ச்சி உள்ளவர்களும் செய்து வரும் இடையறாப் பிரசாரமேயாகும். அங்கு கடவுளைப்பற்றியும் பஜனைப் பாடினால் எட்டி உதைப்பார்கள். மோட்சத்தைப் பற்றிப் பேசினால் காரி உமிழ்வார்கள், தலைவிதியைப் பற்றிப் பேசினால் பிச்சித் தள்ளி அப்பளமாக்கி விடுவார்கள். பின்னை என்னை யெனில், மனிதனுக்கு மனிதன் கண்டவுடன், நீ யார்? உனக்கேன் சோற்றுக்கில்லை? அவனார்? அவனுக்கேன் தொப்பை வயிறு? நீ யார்? உனக்கேன் வீடில்லை? அவனார்? அவனுக்கேன் மாளிகை? நீ யார்? உனக்கேன் கோவணத்துக்கு இழுப்பும் பறிப்புமாய் இருக்கிறது? அவனார்? அவனுக்கு ஏன் பஞ்சகச்சமும் மூலைக்கு மூலை இழுத்து மடித்துச் சொருகுவதுமாய் இருக்கிறது?

ஓ மடையனே! பகுத்தறிவற்ற பதரே!! சிந்தித்துப் பார்.

என்பதாகிய இந்த அமுத வாசகங்கள் தான் பஜனையிலும், பக்தியிலும், பாட்டிலும், சிரிப்பிலும், வேடிக்கையிலும், விகடத்திலும், குலாவுவதிலும், கல்வியிலும், கற்பிலும், கல்லாமையிலும், நந்தவன சிங்காரத்திலும், நாடக நளினத்திலும், சினிமாவிலும், கவியிலும், காவியத்திலும், கலையிலும், இலக்கியத் திலும், ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும்.

காப்பிக் கடைகளிலும் இந்தக் கேள்வி களையும் பதில்களையும் கொண்ட ரேடியோ தான்; ரயில் பிரயாணத்திலும் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் இதே ரேடியோதான்; தொழிற்சாலைகள் முழுவதிலும் இதே ரேடியோதான்; தெருக்கள்தோறும் - கடைகள், மார்க் கெட்டுகள், பார்க்குகள், மக்கள் தங் கும் ஓட்டல்கள், மோட்டார்கள், ரயில் மேடை கள், சதுக்கங்கள், கச்சேரிகள், இராணுவக் கூடங்கள் இன்னும் ஒவ்வொரு இடத்திலும் இந்தப் பிரச் சாரமேதான் பல உருவில் விளங்கிக் கொண்டிருக்கும்.

தமிழ் ஓவியா said...

தாசியின் மோசவலை

எப்படி ஒரு தாசி ஒரு மைனர் பிரபுவை வீட்டிற்குள் வைத்து அவனுக்குத் தன் வீட்டு ஞாபகமோ, வேறு சேதியோ நினைப்பதற்கே இல்லாமல் வேறு யாரையும் பார்ப்பதற்கே இல்லாமல், சதாகாலமும் இடையறாக் கேளிக்கையும், கொஞ்சுதலும், லீலையுமாய் இரண்டற கலந்திருப்பாளோ அதே போலவே இந்தப் பிரச் சாரத்தை தவிர வேறு விஷயம் மக்களுக்கு எட்டுவ தற்கும் நினைப்புக்கு வருவதற்கும் இல்லாமலே நடத்தி வருகிறார்கள். இதன் பயனாலேயேதான் அப்பேர்ப்பட்ட ஜெர்மனி அங்கு தவிடு பொடியாக்கப்பட்டு வருகிறது.

காந்தியாராகட்டும், காங்கிரசாகட்டும், பண்டித நேருவாகட்டும், சாயிபாபாவாகட்டும், ரமண ரிஷியா கட்டும், சீனிவாச சாஸ்திரியாகட்டும் - இவர்கள் எல்லாரும் இவர்களைப் பற்றிய இடையறாப் பிரச்சாரம் இல்லாவிட்டால் இவர்களைப் போன்ற சராசரி மனிதத் தன்மைக்கு மேற்பட்ட ஒரு புதுக்கோட்டை அம்மன் காசு கூடப் பெறுவார்களா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, பிரச்சாரத்திற்கு அவ்வளவு பலம் இருக்கிறது என்பதை காட்டவே குறிப்பிட்டோம்.

அப்படிப் போலவே தான் நமக்குள் இந்துமதமும் சகலத்திலும் பரவி சதா பிரச்சாரத்தினால் நம்மை அடிமை கொண்டு விட்டது. கண்ணிலும் கருத்திலும், கவியிலும், வாக்கிலும், நாக்கிலும், எல்லாவற்றிலும் இடையறாமல் லீலை செய்து கொண்டே இருக்கிறது. இவற்றால்தான் அவைகளுக்குப் பலமிருந்து வரு கிறது. இவற்றை மாற்ற வேண்டுமானால் அவற்றிற் கேற்ற எதிர்ப்பிரச்சாரம்தான் தக்க மருந்தாகும்.

அண்ணாதுரையின் துணிவு

அப்படிப்பட்ட பிரச்சாரங்கள் நடத்துவதில் இந்த மாதிரி நாடகமும் முதன்மையானதாகும். இதைநாம் சுமார் 10, 15 வருஷகாலமாவே சிந்தித்து சிந்தித்து ஒன்றும் சரியாய் கைகூடாமல் இப்பொழுது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும் படியான நிலை ஏற்பட்டிருக் கிறதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்க முடியவில்லை.

சில நண்பர்கள் சில வருஷங்களுக்கு முன்னா லேயே திருச்சியில் முயற்சி செய்து வெளி வந்தார்கள்; என்றாலும், அது குடத்திற்குள் விளக்காய் இருக்கிறது. மற்றும் சில நண்பர்கள் பாரதிதாசன் சித்தரித்த இரண்யன் அல்லது இணையற்ற வீரன் என்ற கதையை பல இடங்களில் நடத்தினார்கள் என்றாலும் அதுவும் ஆமை ஓட்டத்தில் தான் இருந்து வருகிறது.

சென் னையில் சில தோழர்கள், முன்னேற்ற வீரன் என்ற கதையை நடத்திக் காட்டினார்கள். என்றாலும் அதுவும் ஒரே இடத்தில் தேங்கிப் போய் இருக்கிறது. தொழில் முறையில் தோழர்கள் என்.எஸ் கிருஷ்ணன், மதுரம், ராதா முதலிய அறிஞர்கள் உதவிபுரிகிறார்கள் என்ப தோடு இன்னும் சிலரும் இருக்கலாம்; அவை உற்சாகம், பொழுதுபோக்கு என்பவற்றின் பேரால் இல்லாமல் இன்னும் தைரியமாய் வெளியேறி வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

திக் விஜயம் செய்யட்டும்

சந்திரோதயமும் ஒரு காலத்தில் அண்ணாதுரை, சந்திரோதயம் என்னும் நாடகத்தில் நடித்தார். எங்கேயோ பார்த்ததாக எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்லும் நிலைமைக்கு வராமல் தமிழ்நாட்டில் அது (சந்திரோதயம்) திக் விஜயம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

உண்மையில் சந்திரோதயம் நல்ல தொண்டாற்று கிறது. இரண்டு வருஷத்தில் குறைந்தது ரூ.50000 அதற்கு சொந்தப் பொறுப்பில் சேகரம் செய்ய தமிழ் நாட்டில் தாராளமாக இடமிருக்கிறது. சமய சஞ்சீவி களுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லது படாமல் இம் மாதிரி தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியது மாகும் என்று தெரிவித்துக் கொண்டு, அண்ணா துரையையும், காஞ்சித் திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்.

- குடிஅரசு தலையங்கம் - 27.11.1943

தமிழ் ஓவியா said...


பொருளாதாரம் சீர்பட...


மதமும், கடவுளும், அடுத்த ஜென்மும் ஒழிந்தா லொழிய, இந்தியப் பொருளாதாரத்துறை எந்நாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும் நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்.

- தந்தை பெரியார் - பகுத்தறிவு 1-12-1936

தமிழ் ஓவியா said...

சுப்பிரமணியனின் வேண்டுதல்!

வாரிசு இல்லை என்று வள்ளியை மணந்து கொண்டேன். அவளும் அம்போ என்று கைவிட்டாள். என் அப்பனும் (சிவன்) சிவப்பு முக்கோணத்தில் அடங்கி விட்டான். கொள்ளி வைக்க ஒரு ஆணும், குந்தி அழ ஒரு பெண்ணும் எனக்கு வேணும். நல்ல மருத்துவர் விலாசம் ஒன்று தருவீர்களா?

நாத்திகச் செல்வி, பல்லவபுரம்

தமிழ் ஓவியா said...

பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?

சிவனும் பார்வதியும் நூறு தேவ வருடம் புணர்ந்து கொண்டிருந்தும், விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர். ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில், அவர் களின் மனைவிகள் எல்லாம் மலடாகப் போகக்கடவது என்று பார்வதிதேவியார் சாபமிட்டாளாம்.

மற்றும், தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீதும் பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம். கேவலம் அல்லவா?

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்