Search This Blog

14.6.13

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! - 5


குஜராத் மாநிலத்தில் காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரல் என்னும் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர் கே.ஜி.ஷா. அவர் நீதிபதி நானாவதி ஆணையத்தின் முன் சொன்ன கருத்தும், தகவலும் மிக முக்கியமானவை.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும், காவல்துறையின்  கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப் பட்டனர். அரசு வழக்கறிஞர்கள் (Public Procecutors) இதற்குத் துணை போனார்கள். குஜராத்தில் ஊடகங்கள் கலவரங்களைத் தூண்டி விடுவதில் அக்கறை செலுத்தின. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை! என்று குறிப்பிட்டுள்ளாரே!
இது போன்ற அதிகாரப் பூர்வமான தகவல்களை நானாவதி ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள் ளாதது வியப்புக்குரியது என்பதைவிட அதிர்ச்சிக் குரியது என்றே சொல்ல வேண்டும்.

நரேந்திர மோடி இன்னொரு கோயபல்ஸ் அவதாரம் என்று சொல்லத் தோன்றுகிறது. நரேந்திரமோடி என்பதை விட நரேந்திர மோசடி என்று அவரைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது. அவரது வலை தளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்தனர் என்றும், அதுவும் குறுகில காலத்தில் இந்தச் சாதனை நடந்தது என்றும் கிளப்பி விட்டனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள்தான் - இவரது புளுகு வெகு சில நாட்களிலேயே 50 சதவீதம் போலிக் கணக்கு என்று அம்பலமாகி விட்டது.
இலண்டன் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதளப் பொறியாளர்கள் மோடி கணக்கில் உள்ள 46 சதவீதம் போலி கணக்கு; 41 சதவீதம் பயன் படுத்தப்படாத கணக்காளர்கள் என்பதையும், மீதியுள்ள 13 சதவீதத்தினரே இவரது வலைதள நண்பர்கள் என்பதையும் அந்த நிறுவனம் நிரூபித்து விட்டது.

இதுபோல எத்தனை எத்தனையோ ஏமாற்று வேலைகளை தன் பிம்பத்தை உயர்த்திக் கொள்ள மோடி மேற்கொள்வதுண்டு.

இந்தியாவில் இருக்கும் பார்ப்பன ஊடகங்கள் - என்னதான் ஊதிப் பெருக்க வைத்தாலும், வெளிநாட்டில் மோடி என்றால் ஒரு பாசிஸ்ட் - இனப்படுகொலையாளர் என்ற கருத்துதான் நிலவுகிறது!  அதனால் தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருகின்றன.

நேராகத்தான் அமெரிக்கா செல்ல அனுமதியில்லை. காணொலிக் காட்சிமூலம் அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தில் மோடி உரை நிகழ்த்த ஏற்பாடாகி இருந்தது.

இனப்படுகொலைவாதி மோடியின் உரையைக் கேட்கத் தயாராக இல்லை; ஒலி பரப்பவும் கூடாது என்று பேராசிரியர்கள், மாணவர்கள் கண்டனக் குரல்களை உயர்த்தினர் விளைவு - அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்தவர்களைப் பிடித்து மோடியை அமெரிக்காவுக்கு அழைப்பதாக ஒரு கதையைக் கிளப்பினர். அந்த அசிங்கத்தின் முகத் திரையும் கிழிந்து தொங்கி விட்டது.

இராமச்சந்திர குஹா போன்ற சிந்தனையாளர்கள் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு போன்றவர்கள் மோடி பிரதமராக நிறுத்தப்படுவதற்குத் தம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை என்பது மதவெறியைக் கிளப்பி, மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனே நடந்ததாகும். ஏனெனில், அதற்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்தார். குஜராத்தில் முஸ்லிம் மீதான இனப்படுகொலை முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளது.

குஜராத் இந்தியாவில் ஓர் அங்கம்தானா? இந்திய அரசமைப்புச் சட்டம் குஜராத்துக்கும் பொருந்துமா? என்ற வினாவை எழுப்பினார் சமூக நல ஆர்வலர் அருந்ததிராய்.

மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வழக்குரைஞர் மேமோன் கூறினார்.

குஜராத்தில் இருப்பது பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல; பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் சட்டம் (Production of Terrorist Act).
குஜராத்தில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்கிற தனி சட்டம் இருக்கிறதா என்று கேட்டார். ஆனால் உள்துறை அமைச்சரிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடையாது. வீராதி வீரராகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இந்த மோடி சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலாளர் கரண்தப்பார் எழுப்பிய வினாக்களுக்கு விடை கூற முடியாமல்  விழிப்பிதுங்க வெறும் ஒன்றரை நிமிடத்தில் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையான நரேந்திர மோடி என்பவர் இனப்படு கொலையாளர்  - வெளி உலகுக்குக் காட்டப்படுவது வேறு முகம் - மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்களாக!
                      ------------------------"விடுதலை” தலையங்கம் 14-6-2013

41 comments:

தமிழ் ஓவியா said...

வரலாறு படைத்தது மதுக்கூர் வட்டார மாநாடு


மாநாட்டின் இலாபம் அடுத்தகட்ட செயல்பாட்டில்தான் உள்ளது
இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் இயக்கம்
கழகத் தலைவர் வெளியிட்டுள்ள பாராட்டு அறிக்கை

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரில் நடைபெற்ற திராவிடர் கழக வட்டார மாநாட்டின் சிறப்பை விளக்கியும், வெற்றிக்குக் காரணமான கழகப் பொறுப் பாளர்களை, தோழர்களைப் பாராட்டியும், அடுத்த கட்ட பணிகளை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
பட்டுக்கோட்டை மாவட்டம் மதுக் கூரில் மதுக்கூர் வட்டார திராவிடர் கழக மாநாடு மிகவும் சீரும் சிறப்புடன் 10.6.2013 திங்கள் மாலை நடைபெற்றது.

மறைந்த பட்டுக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி தியாகராசன் அவர்களது பெயரால் அமைக்கப்பட்ட நினைவரங்கத்தில் மிகவும் எழிலோடும், எழுச்சியோடும் வட்டார மாநாடு, ஒரு மாவட்ட மாநாட்டையும் விஞ்சும் அளவுக்கு - மக்கள் கடலின் படையெடுப்போ என்று கண்டவர் வியக்க, மிகவும் வியக்கத்தக்க முறையில் நடந்தேறியது.

20 நாள் அவகாசத்தில்...

சுமார் 20 நாள்கள் அவகாசத்தில் தேதி தரப்பட்டது என்றாலும், மாவட்டத்தலைவர் மானமிகு மன்னை ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் சிறந்த செயல்வீரரான மாவட்ட செயலாளர் அத்திவெட்டி பெ. வீரையன் அவர்களது மேற்பார்வை கண்காணிப்பு அடிப்படையில், கழகப் பொறுப்பாளர்கள் தேனீக்களாகப் பறந்து பறந்து செயல்பட்டு வெற்றியை ஈட்டி மகிழ்ந்தனர்!

அரசியல் கட்சிகளையே ஆச்சரியப்பட வைத்தது

தமிழ் ஓவியா said...

அத்துணைக் கழகப் பொறுப்பாளர்களும், ஒரு குடும்ப விழா போல ஓடியாடி, நன்கொடை திரட்டி விளம்பரம் செய்தும், போராட்ட வீரர்கள் பட்டியல் திரட்டியும் ஒருங்கிணைந்து சலியாது உழைத்து, இந்த வெற்றியை ஈட்டி, அங்குள்ள அரசியல் கட்சிகளையே ஆச்சரியப்பட வைத்தனர்!

வசூலுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் எங்களை அன்பொழுக வரவேற்று, நன்கொடைகளை மனமு வந்து தந்து உற்சாகப்படுத்தினர்; மேலும் பலரையும் சந்திக்க எங்க ளுக்குப் போதுமான கால அவகாசம் இல்லை என்பதுதான் எங்கள் மனக்குறை! என்று மாவட்ட செயலாளர் அத்திவெட்டி வீரையன் நம்மிடம் தெரிவித்தார்!

மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தைக் கண்டு மகிழ்ந்த பொது மக்கள்

மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப் புப் பேரணி மதுக்கூர் ஒன்றியத் தலைவர் புலவஞ்சி அண்ணாதுரை தலைமையில் மிகவும் சிறப்புடன் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இரு மருங்கிலும் கூடி நின்று வேடிக்கை பார்த்து, கடவுள், மூட நம்பிக்கை புரட்டினைப் புரிந்து கொண்டனர்.

பெரியார் பெருந்தொண்டர்கள் ஜெயங் கொண்டம் கலியமூர்த்தி, கரம்பக்குடி முத்து போன்றவர்களும், எண்ணற்ற இளைஞர்களும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தினர்!
ஊர்வல இறுதியில் தீ மிதி சிறப்பாக நடைபெற்றது!

பக்கத்து மாவட்டங்களிலிருந்தும்

பக்கத்து மாவட்டப் பொறுப்பாளர்களை - மண்டலத் தலைவர்கள் தொடங்கி, ஒன்றிய மற்றும் கிளைக் கழகப் பொறுப்பாளர்களையெல்லாம் மதுக்கூர் தோழர்கள் இணைத்து, மாநாட்டின் கொள்கைக் குடும்பத்துக் கனபரிமாணம் எத்தகையது என்பதை உலகுக்குக் காட்டியது வெகு நேர்த்தி!

தோழர்களுக்குப் பாராட்டுகள்!

இந்த மாநாட்டு வெற்றிக்குக் காரணமான மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் அத்திவெட்டி வீரையன் மற்றும் பெரியார் பெருந் தொண்டர்கள், புலவஞ்சி இராமையன், அத்திவெட்டி ஜோதி (இவர் உடல் நலம் குன்றி தேறிவரும் நிலையிலும் கடுமையாக உழைத்து மகிழ்ந்தார்) காசாங்காடு முத்து துரைராசன், சிரமேல் குடி இராதா கிருஷ்ணன், சிரமேல் குடி சமரன், வெற்றிமாறன், சிராங்குடி சந்திரசேகர், படப்பைக்காடு ராஜீவ், அரவிந்த்குமார், வடக்கு மதுக்கூர் பகுத்தறிவாளர் தோழர் என்.கே.ஆர். நாராயணன், பகுத்தறிவாளர் மாணிக்கசந்திரன், நெம்மேலி உத்திராபதி, வடசேரி ஞான சிகாமணி, வடசேரி பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் முத்துக்குமாரசாமி, பள்ளத்தூர் அரு. நல்லதம்பி, முனைவர் அதிரடி அன்பழகன், இராம. அன்பழகன், பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், வழக்குரைஞர் அருளரசன், விளம்பரப் பொறுப்பாளர் சில்லத்தூர் சிற்றரசு, சிங்காரவேல், கழக அமைப்புச் செயலாளர், மண்டலத் தலைவர்கள், செயலாளர்கள், கழக மகளிரணி பகுத்தறிவாளர்கள் எல்லாரும் கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் மதுக்கூரில் ஒரு வரலாற்றுச் சாதனை புரிந்தனர்!

நாகை காளியப்பன் பிறந்த ஊர்

பக்கத்தில் உள்ள படப்பைக் காட்டில்தான் - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், அய்யா - அம்மா ஆகியோர் தலைமைமீது நம்பிக்கை இறுதி மூச்சு வரை காத்தவரான நாகை என்.பி. காளியப்பன் அவர்கள் இருந்த ஊர் என்ற சிறப்பும் மதுக்கூருக்கு உண்டு!

அத்திவெட்டித் தோழர்களின் கட்டுக்கடங்கா ஆர்வமும், கட்டுக் குலையாத கட்டுப்பாடும் கடமை உணர்ச்சியும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்!

ஓய்ந்து விடாதீர்!

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதை செயலில் காட்டிய கருஞ்சட்டைக் கடமை வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தலைமைக் கழகத்தின் இதயம் நிறைந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்! சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து கொள்கைப் பிரச்சாரம் அடைமழையாகப் பொழியட்டும்!

மாநாட்டின் வெற்றியிலேயே மகிழ்ந்து ஓய்ந்து விடக் கூடாது; அடுத்தகட்ட செயல்பாட்டில் தான்வெற்றியின் லாபம் இருக்கிறது. ஓடிக் கொண்டே இருப்பதே இயக்கம், சரியாக இயங்குகிறது என்பதற்குத் தக்கதோர் அளவுகோல் என்பதை மறவாதீர்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


ஆடு - ஆடு!


2011 சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னார்.

பிள்ளைகளைப் பள் ளிக்கு அனுப்ப வேண்டும் ஆடு மாடுகள் மேய்த்த நம் வீட்டுப் பிள்ளைகளை மறுபடியும் ஆடு மாடுகளை மேய்க்க வைக்க ஏற்பாடா? என்ற வினாவையும் தொடுத்தார்.

அது ஏதோ அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சொல்லப்பட்டது அல்ல.

கழிந்த தலைமுறை எப்படியோ போய்த் தொலையட்டும் - நிகழ்கால வருங்கால பஞ்சம - சூத்திரத் தலைமுறைகள் கல்விக்கண் பெறவேண்டாமா? என்ற அக்கறையில் - தந்தை பெரியார் பார்வை யில் சொல்லப்பட்ட கருத்து அது.

தமிழர் தலைவர் தொலைநோக்கோடு சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. அதுவும் அதிமுக ஆட்சிக்கு அரணாக இருக்கும் தினமலர் ஏட்டிலேயே இன்று வெளிவந்த தகவல் அது.

குழந்தைத் தொழிலாளர் தினம் பற்றிய கருத் தரங்கு திருப்பூர் பள்ளியில் நடைபெற்றது.

அந்தக் கருத்தரங்கத் தில் அனுப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்த அந்தத் தகவல் முக்கியமானது.

நான் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில், என் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

ஒரு குடும்பத்தில், கணவன், மனைவி இரு வரும் வேலைக்குச் செல்லுவதால் வேறு வழியில்லாமல் அவர்களுடைய மகனை 5ஆம் வகுப்பிலி ருந்து நிறுத்திவிட்டு, ஆடு மேய்க்கச் சொல்லி விட்டனர்.

அவனும் பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்க்கத் துவங்கினான். அம்மா திட்டத்தால் ஒருவனுக்குப் படிப்புப் பாழாக வேண்டுமா? என எனக்குக் கவலை வாட்டியது. தொடர்ந்து 20 நாட்கள் நடையாய் நடந்து அறி வுறுத்தியும், அவர்கள் கேட்கவில்லை. வேறு வழி யில்லாமல், பள்ளிக்குச் செல்லாவிட்டால், நான்கு ஆடுகளையும், அரசு திரும்பி வாங்கிக் கொள்ளும்? என்று கூறி, மீண் டும் மாணவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது (தினமலர் 14.6.2013 பக்கம் 8).

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுதர்மம். இதனை வேறு வழியில் செய்ததால் தான் தமிழர் தலைவர் அன்று எச்சரித்தார். இதோ இப் பொழுது நம் முன்னே! இன்னும் வெளிச்சத்துக்கு வராத எத்தனை அனுப் பட்டிகளோ!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இதுதான் மதத்தின் குணமா? நாத்திகச் சிறுவனைக் கொன்ற கொடூரம்


இஸ்லாமிய போராளிகள் 15 வயது சிறுவனை நாத்திகன் என்ற காரணத் தால் முகத்தில் சுட்டுக் கொன்று விட்டனர். அலெப்போ நகரில் ஒரு இஸ்லாமியக் குழு முகமது வாட்டா என்ற 15 வயது சிறுவனைக் கடத்திக் கொண்டு போய், முகத்திலும் கழுத் திலும் சுட்டுக் கொன்று விட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் காஃபி விற்பவன்.

சமீபத்தில் அந்தப் படம் வெளி யிடப்பட்டுள்ளது. அதில், இரத்தம் ஒழுகும் வாயுடனும், கன்னங்கள் தகர்த்தெறியப்பட்டு, கழுத்தில் துப் பாக்கி குண்டு காயங்களுடனும் அந்தச் சிறுவன் காணப்பட்டான். மனித உரிமைக்களைக் கண்காணிக் கும் ஒரு பிரிட்டிஷ் அமைப்பு அந்த சிறுவன் யாருடனோ கடவுள் இருக் கிறாரா என்று வாதத்தில் ஈடுபட்டு இருந்தான். அப்பொழுது முகமது நபியே திரும்பி வந்தால்கூட, நான் கடவுள் நம்பிக்கையுடையவனாக மாற மாட்டேன் என்று அவன் கூறியதை சிலர் கேட்டுள்ளனர்.

ஆனால் வேறு சிலர், அவன் சொன்னது சரியாகக் கேட்கப்பட வில்லை. அந்தப் பையன் ஒரு வாடிக்கையாளரிடம் இலவச காஃபி கேட்டதற்கு முகமது நபியே திரும்ப வந்தாலும் கூட நான் உனக்கு இலவச காஃபி கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். இதுபற்றி, பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

அல்கொய்தா இயக்கம் அந்தப் பையனைக் கடத்திக் கொண்டு போய் 24 மணி நேரம் சித்திரவதை செய்து உள்ளது. பிறகு, பொது மக்கள் கூடியுள்ள வீதியின் மத்தியில் அவன் இழுத்து வரப்பட்டு அவன் தாயின் கண்ணெதிரே கொல்லப்பட்டான். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அக்கொடுஞ் செயலைப் புரிந்தவர்கள் சிரியர்களாகத் தோன்றவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், உணவைத் தேடி அலைந்த இரண்டு 10,16 வயதுப் பையன்கள் தாலிபான்களால் வெட்டிக் கொல் லப்பட்டனர்.

அபுசக்கார் என்ற சிரிய போராளித் தலைவர் ஒரு ராணுவ வீரரின் இதயம் துண்டாக்கப்பட்டு உண்பதை வீடியோ படம் பிடித்துள்ளார். இந்த அபுசாக கரின் இதயத்தை உண்ணும் வீடியோ படம் அயல் நாட்டு அலுவலகத்திட மிருந்து பெறப்பட்டுள்ளது.

நாத்திகம் பேசியதற்காக சிறுவன் கொல்லப்பட்டதைப்பற்றி பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு மேலும் விளக் கமாக தகவல் கொடுத்துள்ளது. அதன்படி,

அந்தப் பையனைச் சுற்றி கூட்டம் கூடிற்று. போர் அணியைச் சேர்ந்த ஒருவன் அலெப்போ நகரத்து இரக்க முள்ள குடி மக்களே, கடவுளை நம்பாததும் பல கடவுட் கொள்கை பற்றிப் பேசுவதும் - முகமது நபியைக் குற்றம் சாட்டு தலாகும், யார் அவ்விதம் நபியைக் குறை சொல் கிறார்களோ, அவர்கள் இவ்விதம் தண்டிக்கப்படுவார்கள் பிறகு அவன் இரண்டு குண்டு களை, பொது மக்கள், சிறுவனின் தாய் தந்தையர் கண் முன்னிலையிலேயே தானியங்கி துப்பாக்கியிலிருந்து சுட்டான். பின் ஒரு காரில் ஏறிக் கொண்டு போய் விட்டான்.

ராமி அப்துல் ரகுமான் என்பவர், பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு இந்தக் குற்றங்களைப் புறக்கணிக்க முடியாது. கண்டிக்காவிட்டால் இது புரட்சியின் எதிரிகளுக்கும், மனிதா பிமான எதிரிகளுக்கும் வசதியாகப் போய் விடும் என்று சொன்னார்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கடவுள் தூங்கினால்..

செய்தி: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளிமஞ்சம் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் அளிப்பு.

சிந்தனை: மஞ்சத்தில் படுத்துக் கடவுள் தூங்குவதும் உண்டோ? அப்படி தூங்கும் நேரத்தில் இந்த லோகத்தை வேறு யார் காப்பாற்றுவார்களாம்?

தமிழ் ஓவியா said...


பெருமை



மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வது தான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வது தான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

தமிழ் ஓவியா said...


டேப்லெட் கணினிகள் நல்லதா, கெட்டதா?


டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.

இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக் கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந் தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.

எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அவை எதிர்மறை யாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.

கற்றலை பாதிக்கின்றன

ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.

தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக் கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.

இவரது ஆய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்.

அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னால் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.

இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.

இரு ஆலோசனைகள்

இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.

முதலாவது, சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை.அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடு திரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.

இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்து கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


கோவை மன்றலின் இந்த முயற்சிக்கு கைகொடுப்போம்!


கொங்கு நாடு என்றழைக்கப்பட்ட கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் விவசாயத்தை சார்ந்த மக்கள் வாழும் பகுதியாக இருந்து வந்தது, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி காரணமாக இந்தியாவின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றாக கோவை மாநகரம் மாறியது.

நகரத்தைத் தவிர இதர சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கோவையை ஒட்டிய மாவட்டங்கள் அனைத்தும் பெரிதும் விவசாயத்தையே சார்ந்து இருந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு ஜாதிமுறைகள் குறைவாகவும், பொருளாதாரம் மற்றும் நிலப்புலன்களை மய்யமாக வைத்தே திரு மணங்கள் முடிவு செய்யப்பட்டன. நிலவரைமுறைச் சட்டம் வந்த பிறகு நிலச்சுவான்தார்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க உறவுகளுக்குள் திருமணம் என்ற ஒன்றை திடீரென ஏற்படுத்தினர்.

உறவுகளுக்குள் திருமணம்

இந்தத் திருமண உறவு பெரும்பாலும் ஒரு மன ஒற்றுமையற்ற நிலையில் தான் உள்ளது. முக்கிய மாக பெண்களுக்கு முழுவதும் சொத்துரிமை மற்றுக்கப்பட்ட நிலையில் சிறுவயதில் இருந்தே அத்தை மாமன் உறவு, சகோதரியின் மகள் போன்ற வற்றை காண்பித்து இன்னார் இன்னாருக்குத்தான் என்ற எழுதப்படாத மற்றும் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் ஆணைக்குட்பட்டு அடிமைத் திருமணங்கள் நடைபெற்று வந்தன. இன்றும் நடந்து வருகிறது.

கோவையில் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மன்றல் நிகழ்விற்காக நீலகிரியில் வைக்கப்பட்டுள்ள பதாகை

சமீபகாலங்களில் கோங்கு மண்டலத்தில் விவாகரத்து பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு இருக்கிறது, இதில் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொண்ட வர்கள் தான் விவாகரத்து பெறுவதில் முனைப்பாக இருக்கின்றார்கள் என்பது ஓர் அதிர்ச்சிகரமான செய்தி. அதே நேரத்தில் பெண்களின் வாழ்க்கைத் தரம் வியக்கத்தகு வகையில் சிகரத்தை தொட்டுக் கொண்டு இருக்கிறது.

பெண்கள் தனியாக அயல் நாடு சென்று மொன்பொருள் நிறுவன அதிகாரி களாக, பொருளாதார நிபுணர்களாக, மற்றும் வணிகம் சார்ந்த நிறுவன அதிகாரிகளாக அமெ ரிக்கா, சிங்கபூர், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சென்று பணியாற்றும் நிலை உருவாகிவிட்டது, பெண் கல்வியினால் வந்த நன்மை இளம்பெண் களிடம் ஓர் துணிச்சலை ஏற்படுத்திவிடுகிறது.

தற்போதைய ஆணாதிக்கச் சமூக சூழல் வேண்டுமானால் இதை அடாவடித்தனம் என்று எளிதாக கூறிவிடலாம், ஆனால் மனம் ஒவ்வாத போது ஒரு ஆண் தன் மனைவி இருக்கும்போது வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டு நாட்கணக் கில் வீட்டிற்கு வராமல் இருப்பதும் கணவனின் பெற்றோரே இதற்கு சாக்குபோக்கு கூறுவதும் எத்தனை நாள்கள் தான் ஒரு பெண் பொறுத்துக் கொண்டிருக்கமுடியும்.

பெண் சிசுக்கொலை

சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் 1991 மக்கள் தொகைக் கணக்கின் படி 100 ஆணிற்கு 92 பெண்கள் என்ற நிலை இருந்தது, இந்த நிலை தற்பொழுது 0.3 சதவீதம் தான் கூடியுள்ளது. காரணம் சிசுக்கொலைகள் தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கை எடுத்தும் பெண் சிசுக்கொலை என்பது வெளியில் தெரியாமல் தொடர்ந்து நடக்கிறது.

பெண் சிசுக்கொலை என்பது பெரும்பாலும் செல்வந்தர்கள் வீட்டில் நடப்பதுதான் வேதனை யான உண்மை, இதற்கு முதற்காரணம் சொத்துப் பறிபோகும், அதாவது தற்போது சொந்தத்தில் பெண் கொடுத்தாலும் தனது சொத்தில் பங்கம் வருமே என்ற மனநிலையில் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதையும் மீறி பெண் குழந்தை கொலை நடைபெற்றுவருகிறது, இதில் முக்கியமாக பல்லடம், மேட்டுப்பாளையம், காங்கேயம், அவினாசி போன்ற பகுதிகளில் பல செல்வந்தர்கள் பெண் வாரிசே இல்லை என்று பெருமையாக சொல்வதைப் பலர் கேட்டிருக்கலாம்.


தமிழ் ஓவியா said...

மேலும் சாதிச் சங்கங்கள் தனி மனித திருமண வாழ்வில் பெரிதும் அதிகாரம் செலுத்தும் நிலையில், பெண் என்றாலே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கர்ப்பத்தில் கலைத்தல், பிறந்த குழந்தையைக் கொலை செய்தல், கோவில்களில் விட்டுவிட்டு வருதல் போன்றவை நடைபெறுகிறது.

சமீபத்தில் கோவையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அழகிய பெண் குழந்தை மண்ணில் புரண்டு அழுது கொண் டிருந்தது, அதை எறும்புகள் மற்றும் வண்டுகள் கடித்துக்கொண்டு இருந்தன. தற்செயலாக அதைப் பார்த்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்குழந்தையை காப்பாற்றினார்.

அப்பகுதி மக்களிடம் கேட்ட போது சில மணி நேரத்திற்கு முன்பு கார் ஒன்று வந்ததாகவும் அதில் இருவர் இறங்கி நின்றனர். பொதுவாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கார்களில் பயணிப்ப வர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க இப்படி நிறுத்துவதுண்டு; நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்.

மேலும் அதிக தொலைவில் இருந்த தால் அவர்கள் யார் என்றும் என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்பு சாலையில் கூடிய கூட்டதை வைத்து தான் நாங்கள் சாலையோரத்தில் குழந்தை இருப்பதை தெரிந்து கொண்டோம் என்றார்கள்.

சாட்சியங்களின் வாக்குமூலப்படி பெண் குழந்தை என்றவுடன் வீட்டாரின் வற்புறுத்தலுக்கு இணங்க நெடுஞ்சாலை ஓரத்தில் விட்டுச்செல்லும் அளவிற்கு சொத்தைக் காப்பாற்றும் வெறி வளர்ந்து வருகிறது. இது வேறுவகையான பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் ஓவியா said...

அது அருகில் உள்ள மாநில மான கேரளத்தில் இருந்து பெண்களை இறக்குமதி செய்யும் கேணத்தனம், மணவாழ்க்கையில் ஜாதி, மொழி இனம் மற்றும் செல்வம் பார்ப்பது மூடத்தனம். ஆனால், இங்கே ஜாதிவெறியின் காரணமாக தனது தமிழ்ச் சமுகத்தை விடுத்து கேரளப்பெண்களை பசுக்களை விலைக்கு வாங்குவது போல் திருமணம் செய்து அழைத்து வருவது மிகவும் மடத்தனமான செயலாகும்.

இந்த நிலைமாற பெண் சிசுக்கொலை மறைய கொங்கு பகுதி பெண்களின் கல்வியறிவு ஒன்றே பெரிய ஆயுதமாகும்.

கோவை, ஈரோடு, சேலம் போன்ற நகரங்களில் கல்வி கற்ற பெண்களின் வெற்றிகரமான வாழ்க்கை இதற்கு முக்கிய உதாரணமாக திகழ்கிறது

தந்தை பெரியாரின் கூற்றுப்படி பெண்கல்வி தான் சமூகத்தை உயர்த்தும் தலையாய உந்துசக்தி. அது கோவையில் மெல்ல மெல்ல நடந்தேறி வருகிறது. சமீபகாலமாக மெல்ல மெல்ல ஆங்காங்கே தலைதூக்கும் ஜாதி வெறியை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய சமூக நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதாகும். சமுதாயத்தின் முதல் இணக்கச்சங்கிலியான திருமணத்தில் இருந்து சமுகத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதிக் களையை வெட்டி எறியும் விதமாக பெரியார் சுயமரியாதைத் திருமணத்தை கொணர்ந் தார்.

இன்று அதை மேலும் வீரியத்துடன் பெரியார் மாணாக்கராக அவரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் தன்னை அர்ப் பணித்துக் கொண்ட தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆலோசனையின்படி சுயமரியாதை திருமண நிலையம் 2012 டிசம்பரில் மன்றலை துவக்கி தமிழகம் முழுவதும் வெற்றி கரமாக பவனி வருகிறது.

ஜாதிக்கேற்ற வரன் என்று கூறிக்கொண்டு தமிழகம் முழுவதும் மக்களை பிரித்தாளும் திருமணத் தரகர் கூட்டத்தின் முன்பு, மக்களை மனத்தால் ஒன்று சேர்க்க ஒன்றுபட்ட திராவிட சமுதயமாக வாழ மன்றலின் இந்த முயற்சிக்கு கைகொடுப்போம்.

வாழ்க பெரியார்!

வளர்க அவரது தொண்டு!

-சரவணா இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...



தகுதி மிக்க தலைவர் வீரமணி

மரியாதைக்குரிய அய்யா,

வணக்கம். தாங்கள் எழுதிய புத்தகங்களை சமீப காலமாக அதிகமாக படித்து வருகின்றேன். மிகவும் அற்புதமான ஆய்வு நூல்கள் அவை மனித குல விடுதலைக்கான கருத்துக்கள் ஆகும். அவைகளை படிக்கும் போதெல்லாம் என்னுள் ஒரு நெருடல் இருந்து வருகின்றது. இது போன்ற மனிதகுல விடுதலைக்கான கருத்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு சில மனிதர்களிடத்தில் மட்டுமே முடங்கிக் கிடக்கின்றன.

அறிவுத் தேடலில் ஈடுபடும் மனிதர்களுக்கு மட்டும் சந்தர்ப்ப வசத்தால் மட்டுமே இதுபோன்ற முற்போக்கு சிந்தனைகள் கிடைக்கின்றன. அவர்களும் அவைகளை தாம் ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கின்றனர். தான் சார்ந்திருக்கும் மக்களிடம், தன் குடும்பத்தவர் களிடம் கூட அவைகளை பகிர்ந்துக் கொள்வதில்லை. தமக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வந்து விடாது என்ற சாதகமான சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே. தாம் இதுபோன்ற உயர்ந்த கருத்துக்களை கொண்டவர் என்று பெருமிதமாகக் காட்டிக் கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே இக்கருத்துக்களை பிறரிடத்தில் பகிர்ந்துக் கொள்கின்றனர். தாம் பெற்ற கருத்துக்கள் அந்த மனித சமுதாயத்திற்குச் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற வேட்கை அவர்களிடத்தில் காணப்படுதில்லை.

ஆனால் பிற்போக்குச் சக்திகளாகிய மதவாதிகள், தங்கள் கருத்துக்களை எல்லாவகையான ஊடகங் களையும் பயன்படுத்தி மாறிவரும் நவீன விஞ்ஞான கருத்துக்களுக்கு ஏற்ப அவைகளை மெருகூட்டிப் பரப்பி வருகின்றனர்.

எல்லா வகைப்பட்ட மக்களுக்கும் ஏற்ப, அந்தந்த மக்களுக்கு உரிய அமைப்புகளை தோற்றுவித்து அம்மக் களின் நலன்களைப் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அவர்களை பிற்போக்குத் தனத்தில் இருந்து விடுபடாமல் வைத்திருப்பதற்குரிய அனைத்துப் பணிகளையும் செய்து வருகின்றனர். உணர்வு ரீதியாக பிற்போக்கு கருத்துக் களில் திளைத்து இருக்கும் மக்கள் அவைகளை சுலபமாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களின் அடிமைத்தனம் தாம் கொண்டிருக்கும் கருத்துக்களிலும் தாம் சார்ந்திருக்கும் அமைப்பு முறைகளிலும் இருக்கிறது என்பதை உணராமல் இருந்து வருகின்றனர்.

இவைகளை மாற்றி தமிழ்நாட்டு மக்களும், இந்திய மக்களும் தாங்களை விடுதலைப் பெற்ற மக்களாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் பகுத்தறி வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் தங்களை முழுமையாக அந்த பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

பகுத்தறிவுக்கருத்துக்களும், முற்போக்கு சிந்தனை களும் மக்களின் உணர்வாகவும் அவர்களது வாழ்விய லாகவும் அமைய வேண்டும்.

பிற்போக்குக் கருத்துக்களும், மதவாதச் சக்திகளும், மேலோங்கும் போது மக்கள் அவைகளை இயல்பாகவே ஒவ்வாமையுடன் எதிர்க்கின்ற அளவிற்கு உணர்வூட்டப் பட வேண்டும்.

அதற்கு வெவ்வேறு அமைப்புகள் மக்களின் நிலைகளுக்கு ஏற்ப ஆட்படுத்தப்பட்டு அம்மாக்களின் வாழ்க்கையோடு கலந்து மார்க்சிய. பெரியாரிய. அம்பேத்காரிய கருத்துக்களை பரப்ப வேண்டும். அதற்கான தலைமைபீடமாக திராவிடர் கழகமும் தத்துவத் தந்தையாக தாங்களும் இருந்து செயல்பட வேண்டும்.

இந்த ஈடு இணையற்ற பணியை மேற்கொள்வதற்குரிய தகுதியும், அறிவும். மற்ற எல்லா வகையான ஆற்றலும் பெற்ற மனிதர் தாங்கள் தான். அதற்கான எல்லா விதமான தகவலைமப்புகளையும் தாங்கள் தான் பெற்றுள்ளீர்கள்.

அந்த உன்னத தியாகத்திற்கு நானும் என்னைச் சார்ந்தவர்களும் அர்ப்பணித்துக் கொள்ள தயாராக இருக்கின்றோம்.

தாங்கள் 21ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த தத்துவஞானியாகவும், சிறந்த சமூக புரட்சியாளராகவும், திகழ்ந்து இந்திய சமூகத்தை தலைகீழாக புரட்டிப் போட்டு அவர்கள் முழு விடுதலை பெற்ற சமூகமாக மாறுவதற்கு தாங்கள் உழைக்க வேண்டும் என்பதோடு வரலாற்றில் தாங்கள் 21-ஆம் நூற்றாண்டின் தலைவர்களிலேயே மிகவும் உயர்ந்தவர் என்ற பெருமை பெற வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

- கே.சுப்ரமணியன் வழக்குரைஞர் (தாழந்தொண்டி, நாகப்பட்டினம்)

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வும்- விடுதலையின் பாராட்டத்தக்க பணியும்

திராவிடர் கழகத் தலைவர் அய்யா அவர்களுக்கு எங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கழக நாளிதழான விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் 24.4.2013 முதல் 31.4.2013 வரை விடுதலை நாளிதழில் வெளியான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக தகுதித் தேர்வில் மோசடி நடந்துள்ள தையும் அதைத் தொடர்ந்து சமூக நீதிக்கு எதிரான இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார் செய்தி ஆசிரியர். இதனை எங்கள் சங்கம் மனதார பாராட்டி வரவேற்கிறது. தகுதித் தேர்வில் நடந்த குளறுபடிகளை மிகத் தெளிவாக சரியான நேரத்தில் வெளியிட்ட விடுதலை நாளிதழுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அறிவித்துள்ள தகுதி தேர்வை ரத்து செய்து அனைத்து ஆசிரியர் பணி நியமனங்களையும் மாநில வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப் படையில் நியமனம் செய்ய எங்களுக்காக தமிழக அரசை வலியுறுத்த வேண்டு மாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- கே. சற்குணம், (மாவட்டத் தலைவர்)
- ஏற்காடு ஜெ. பாலு (மாவட்டச் செயலாளர்)
தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

தமிழ் ஓவியா said...

கடவுள் பாகம் (1) புரட்டிப் போட்டது

கடவுள் பாகம் (1) என்ற தங்களது வெளியீட்டை வாசித்தேன் மிக மிக அற்புதம். தந்தை பெரியார் அவர்களின் வைரம் பாய்ந்த சிந்தனை என்னை மேன் மேலும் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாக புதுப்பித்திருக்கிறது.

தலை துவண்டு வாடிய கன்றாக ஒற்றையில் நின்ற என்னை இயற்கையின் நியதியால் அய்யாவின் மண்டைச்சுரப்பு வழிந்த ஓரிருதுளி என்மீதும் விழ தலை நிமிர்ந்து வளிமண்டலங்களைக் கிழித்துக் கொண்டு என்னை விண்ணை நோக்கி என் வளர்ச்சி பயணித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, தங்களின் பகுத்தறிவுப் பணியில் தானும் பங்கு கொள்ள விருப்பம் தான். மக்கள் மத்தியில் கடவுள் இல்லை என்று கூறினால் இவன் ஒரு பயித்தியகார னென்று பட்டம் சூட்டப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

உலகம் இந்த உண்மையை புரிந்துக் கொள்ளும் நாள், எந்நாளோ என்ற ஏக்கம் என்னுள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என் அச்சத்திற்கு காரணம் சரியா தவறா என்ற தீர்வுக்கான சமாதானம் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- ஆர். சிவசண்முகமூர்த்தி, கடலூர்

தமிழ் ஓவியா said...


சேவை என்பது...



சேவை என்பது கூலியை உத்தே சித்தோ, தனது சுய நலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி யும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம் தான் சேவை.
பெரியார்-(குடிஅரசு, 17.11.1940)

தமிழ் ஓவியா said...


ஆகஸ்டு ஒன்று அழைக்கிறது!



கடந்த 15.6.2013 சனியன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் மிகவும் அவசியமானவை - தேவை யானவை அவை என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

பொதுவாக மற்ற கட்சிகள், அமைப்புகள் நிறை வேற்றும் தீர்மானங்களுக்கும், திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு.

மேம்போக்கானவைகளாக இல்லாமல் ஆழ மாகவும், சமுதாயத்தின் ஆணிவேர் வரை ஊடுருவும் தொலைநோக்குடையதாகவும் கழகத்தின் தீர் மானங்கள் இருக்கும்.

திண்டுக்கல் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல புதுக்கோட்டையில் (9.10.1987) நிறைவேற்றப்பட்ட தொலைநோக்குத் தீர்மானம் தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்குக் கை கொடுப்பதாகப் பிற்காலத்தில் அமைந்திருந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின் கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி, நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறும் தீர்மானம் புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறிய நேரத்தில் புதுக்கோட்டை தீர்மானத்தை நினைவூட்டி திராவிடர் கழகத் தலைவர் அஞ்சற்க - இதிலிருந்து மீள சட்ட ரீதியாகவே வழி இருக்கிறது! என்று கூறி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (5.11.1993).

வெளியிட்டது மட்டுமல்ல - மாதிரி மசோதாவையே தயாரித்து அளித்தார். அதன்படி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்ற அனுமதியும் பெறப்பட்டதே (24,25.8.1994).

1928இல் சென்னையில் நடைபெற்ற தென் னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டிலும், 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்குச் சொத்துரிமை தீர்மானம் மானமிகு கலைஞர் தலைமையிலான ஆட்சியில் 1989இல் நிறைவேற்றப்பட்டது - அதன் பிறகு நாடாளுமன்றத் திலும் சட்டம் நிறைவேற்றப்பட்டு இந்தியா முழு மைக்கும் அந்தச் சட்டம் அமலுக்கு வந்து விட்டதே!

நமது இன்றைய தீர்மானம் என்பது நாளைய சட்டம் என்பதுதான் இயக்கத்தின் வரலாறு மட்டுமல்ல; நாட்டின் வரலாறும்தான்.

அந்த வகையிலே திண்டுக்கல்லில் நிறை வேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் நாளைய வரலாற்றின் திறவுகோலாகும்.

குறிப்பாக ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போர் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை) தொடர்பாக மூன்று தீர்மானங்கள் ஒன்றையொன்று தழுவி நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜாதியும், தீண்டாமையும் நிலவும் நாடு எப்படி சுதந்திர நாடாகும்? ஒரு சுதந்திர நாட்டில் ஜாதிக்கும், தீண்டாமைக்கும் இடம் இருக்கலாமா?

இந்தக் கேள்வியை இந்தியத் துணைக் கண்டத் திலேயே எழுப்பிய ஒரே தலைவர் தந்தை பெரியார், ஒரே இயக்கம் திராவிடர் கழகம்.

இன்றைக்குத் தீண்டாமை, ஜாதி ஆணவம் என்பது அதிகார பூர்வமாக சாஸ்திர ரீதியாக சட்ட ரீதியாக குடி கொண்டு கோலோச்சுவது இந்துக் கோயில்களின் கர்ப்பக் கிரகத்தில்தானே!

அதே இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒருவர் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகத் தடை விதிப்பது எந்த வகையில் சரி?

1970இல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் கடந்த 43 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

திண்டுக்கல் பொதுக்குழு இதற்கான போராட்டக் களத்தை அறிவித்து விட்டது. அதன் முதற் கட்டமாகப் பிரச்சாரப் பயணம் வகுக்கப்பட்டுள்ளது.

சுவர் எல்லாம் இந்தப் போராட்டத்தைப் பேசட்டும், தெருமுனைக் கூட்டங்கள் நடக்கட்டும் நடக்கட்டும்!

இந்தப் போராட்டம் ஏன் என்பதுபற்றியும் சிறு வெளியீடு (ரூபாய்2) வருகிறது இலட்சக்கணக்கில் பொது மக்களைச் சென்றடைய வேண்டும்.

கழகத் தலைவர் கூறிவிட்டார், சால்வை வேண்டாம் - போராட்ட வீரர்களின் பட்டியலைத் தாரீர்! தாரீர்!! என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடையில் 40 நாட்களே - எழுவீர் கருஞ்சட்டைத் தோழர்களே - குடும்பம் குடும்பமாக!

தந்தை பெரியார் தொடங்கிய போரை அவரது தலைசிறந்த மாணவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையிலே வெற்றி கரமாக முடித்துக் காட்டுவோம்! காட்டுவோம்!!

ஆயத்தப் பணிகள் நடக்கட்டும்! நடக்கட்டும்!! 17-6-2013

தமிழ் ஓவியா said...


சூதாட்டச் சுரண்டல்


- சிவகாசி மணியம்


சூதாட்டம், சூழ்ச்சி, சூனியம், சுரண்டல் என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும், எந்த உருவில் தலை தூக்கினாலும் அதனை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்தெறிய தந்தை பெரியாரின் பேரியக்கம் திராவிடர் கழகம் தயங்கியதே இல்லை. இது நாடறிந்த செய்தி.

கடவுளின் பெயரைச் சொல்லிச் சுரண்டல், மதத்தைக் காட்டி சுரண்டல்; சாதியிலும் ஏற்றத்தாழ்வைச் சொல்லி சுரண்டல். அரசியலிலோ சொல்லவே வேண்டாம். இப்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம், சுரண்டல்! எல்லா துறைகளிலும் உள்ளே புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டி கோடிகளில் திளைக்க, பலர் கைப்பொருள் இழந்து விளிம்பு நிலை மனிதர்களாக மாறிவிடுகின்றனர். நல்ல மனிதர்களை இச்சமுதாயம் தேடிக் கொண்டிருக்கிறது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நல்லதம்பி படத்தில் இந்திர சபா எனும் கூத்தில் மனித முகங்களை ஒரே வரியில் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுவார். அவர் எதைச் சொன்னாலும் அதில் சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்க வைக்கும் பகுத்தறிவும் பளிச்சிடும்.

டி.ஏ.மதுரத்தைப் பார்த்து பெண்னே நீ சொர்க்க லோகத்துக்குப் போ. ஏன்னா அங்கே கொஞ்ச ஆளுங்க தான் இருப்பாங்க. நரகத்துல ரொம்பப் பேரு இருப்பாங்க. நானும் அங்கே போயி (மது விலக்கு) பிரச்சாரத்தை பண்ணிட்டு சீக்கிரமா வந்து சேருகிறேன் என்பார். இல்லாத சொர்க்கம் நரகத்தை நையாண்டி செய்யும் வேடிக்கை வித்தகம் மட்டுமா இதில் இருக்கிறது? மனிதர்களில் பெரும்பாலோர் குற்றவாளிகள், தவறு செய்யத் தயங்காதவர்கள், கொடியவர்கள், பொய்யர்கள் என்பதை நாசூக்காக, சாமர்த்தியமாகச் சொல்லுகிறார். எவ்வளவு பெரிய உண்மையை உலகுக்குச் சொல்கிறார் பாருங்கள். கோடானு கோடி மக்களில் மிகச்சிலரே நல்லவர்கள் என்பதை போட்டுடைக்க வேறு எவரால் முடியும்!

கவிஞர் கண்ணதாசன் எம்.ஜி.ஆர். வாயசைப்புக்காக எழுதிய திரைப்படப் பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. கலைவாணரின் அரிய கருத்தை அப் படியே வழிமொழிவதாக அமைந் திருப்பதை எண்ணி வியக்க வேண் டியுள்ளது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. என்று தொடங்கும் பாடலில் உலகத்தில் திருடர்கள் சரிபாதி. ஊமைகள் குருடர்கள் அதில் பாதி என்பார். நம் கண் முன்னாலேயே அது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, போர்த் தளவாடங்கள், ரயில்வே காண்ட்ராக்ட் என ஊழல்கள் பல்கிப் பெருகி நாடாளு மன்றமே திணறிக் கொண்டிருக்கிறது.

அனைத்து மட்டத்திலும் லஞ்சம், ஊழல், சூது, சுரண்டல்! நேர்மைத் திறனின்றி மக்களை வஞ்சிப்பது வாழ்க்கை ஆகிவிட்டது. இப்போது கிரிக்கெட் சூதாட்டம்! நாளிதழ்களை விரித்தால் இதுதான் தலைப்புச் செய்தி. ஊடகங் களுக்கு செமதீனி!

பக்தி மூடநம்பிக்கைகளில் கண்ணி ருந்தும் குருடராய் கைக்காசையும், அறிவையும் இழக்கும் பக்த கே()டிகள் ஒரு பக்கம்! கிரிக்கெட் போதையில் கிறு கிறுத்துப்போய் பொருளையும், பொன் னான நேரத்தையும் இழந்து திரியும் பழுத்த அறிவிலிகள் இன்னொரு பக்கம்.

நாடு, பொருள் மட்டுமல்ல, பெண்டாட்டியையும் சூதில் இழந்த மகாபாரதக் கதை இங்கேதானே பிறந்தது. இந்த நாடு எப்படி உருப்படும்?

மே 24-ஆம் நாள் தமிழகமெங்கும் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் எத்தகைய அர்த்தமுள்ளது! அறிவு சார்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

தமிழ் ஓவியா said...


அன்று அண்ணா சொன்னது


ஒருமுறை தில்லி மாநிலங்களவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி அண்ணா மிக உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் குறுக்கிட்டு, நீங்கள் ஏன் வேறு நாட்டு பிரச்சினையை இவ்வளவு அக்கறையுடன் பேசுகிறீர்கள்? இது பிறநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாதா? என்று கேட்டார்.

அதற்கு அண்ணா, அடுத்த வீட்டில் கணவன் - _மனைவி நெருக்கமாக இருக்கும்போது எட்டி பார்ப்பது தவறுதான். ஆனால் அந்த மனைவியை கொடுமைக்கார கணவன் கழுத்தை நெரித்துக் கொல்ல முயலும்போது, அவள் கத்துவதைக் கேட்டு ஓடி உதவுவது எப்படி தவறாகும்? அதிலும் அந்தப் பெண் எனக்குத் தங்கையாக இருக்கும்போது என்றார். இதை கேட்டதும் அமைச்சர் மௌனமாகி விட்டார்.

தமிழ் ஓவியா said...


கொய்யா சாப்பிடலாமே!


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது. இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட்டை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் தமிழர் தலைவர் பேட்டி



திண்டுக்கல், ஜூன் 15- அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 பேர்களுக்கும் பணி நியமனம் வழங்கக் கோரி ஆகஸ்ட் 1இல் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேர் பங்கேற்க பட்டியல் கொடுத்துள்ளனர் என செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் இன்று (15.6.2013) பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது:-

இன்றுவரை 5 ஆயிரம் பேர் பங்கேற்க பட்டியல் கொடுத்துள்ளனர்

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி திட்டத்தின்படி பயிற்சியை முடித்த 206 பேர்களுக்கும் பணி நியமனம் வழங்கக்கோரி, திராவிடர் கழகம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி (1.8.2013) சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவிருக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்க இதுவரையில் 5 ஆயிரம் தோழர்கள் பெயர் பட்டியலை கொடுத்துள்ளனர்.

அய்.பி.எல். போட்டியை ஒழிக்கவேண்டும்

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் என்னும் போதையில் உழன்று வருகின்றனர். கொத்தடிமைகளை மீட்கவேண்டும் என்று சொல்வார்களே, அதுபோல் கிரிக்கெட் போதையில் உள்ள இளைஞர்களை மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம். கிரிக்கெட் என்பது மேல்ஜாதியினர், பணக்காரர்களுடைய விளையாட்டு என்பது ஊரறிந்த விஷயம்.

மாணவர்கள் கல்வியை மறந்துவிட்டு வெறித்தனமாக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்வு நடைபெறும் நேரங்களில் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் கறுப்புப் பணம் வெகுவாகவே புழங்குகிறது. முதற்கட்டமாக அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒழிக்கவேண்டும்; பிறகு கிரிக்கெட்டை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


பிராமணியத்தை ஒழித்தவர்கள் - II

பார்ப்பனரல்லாதார் வைதீகச் சடங்குகள் என்ற பெயர் வைத்துக்கொண்டு தங்கள் குடும்பங்களில் நடக்கும் சுபா சுப காரியங்களுக்கு திதி, திவசம் என்றோ சிரார்த்தம் என்றோ, தங்கள் முன்னோர்களின் ஞாபகார்த்தமாகச் செய்யும் காரியத்தை, முன்னோர் களை மோட்சத்திற்கு அனுப்பச் செய்யப்படும் கிரிகை என்ற மூட நம்பிக்கையால், அக்காரியத்திற்கு பிராமணர்களை அழைத்துஅதை அவர்களைக் கொண்டே செய்ய வேண்டுமென, உடம்போ டொட்டிய அழுக்குபோல் தங்கள் மனத்தில் படியப் பெற்று, ஒரு பார்ப்பனனைக் கூட்டி வந்து பலவகைத் தான சன்மானங்களை அப்பார்ப்பானுக்கு அளித்து, அவன் சொல்லும் பிரகாரமெல்லாம் சொல்லி, அவன் காலில் விழுந்து விழுந்து சாஷ்டாங்க நமகாரம் செய்து வருவதும், அதேபோன்று கலியாணம் முதலிய சுபகாரியங்களுக்கும் பார்ப்பனனை அழைத்து மணமக்களுக்கு ஆயுள் விருத்தியையும் புத்திர சம்பத்தையும் அப்பார்ப்பனன் இரட்சா பந்தனமளித்து வருவதாக பிரேமைக்குள்ளாகி அப்பார்ப்பனனைக் கொண்டு செய்து வருவதும் - வீண் அர்த்தமற்ற - பொருளற்ற - சுயமரியாதையை இழக்கச் செய்யத்தக்க - ஒரு கூட்டத்தார் தங்கள் பிழைப்பைக் கருதி செய்து வைத்து ஏமாற்றிவரும் காரியமாகும்.

இவ்வுண்மையைத் தெரிந்த பலர் சின்னாட்களாக அவ்வித மூடநம்பிக்கைக்குள்ளாகாமல் விழித்துக் கொண்டனர் - விழித்து வருகின்றனர். இவ்வாறு தங்கள் சுபா சுபகாரியங்களுக்குள் பிராமணியம் வந்து நுழையாமல் விரட்டியவர்களுள் 14 கனவான்களின் பெயரை சென்ற இதழில் இதே தலைப்பின் கீழ் வெளியிட்டிருந்தோம். இவ்விதழிலும் பிராமணியத்தை ஒழித்தவர்களுள் சில கனவான்களின் பெயரைக் கீழே வெளியிட்டுள்ளோம். இனியும் அவ்வாறு சடங்குகள் செய்வதில் நம்பிக்கையில் லாதவர்கள் பெயரைத் தெரியப்படுத்தினால் வாரந்தோறும் பத்திரிகையில் பிரசுரித்து வரப்பெறும்.

மேற்கூறிய பிரகாரம் பிராமணியத்தை விரட்டிய மற்ற கனவான்களின் பெயர்களாவன:-

15. எ.எ.கே.கலியப்பெருமாள் நாயுடு, ஆஞ்சிநேய வார்ப்படத் தொழிற்சாலை, திருச்சி.
16. ச.ப.சி.பரமசிவன் செட்டியார், கதர் டெப்போ, திருச்சி.
17. அ.சிவப்பிரகாசம் பிள்ளை, தலைமைத் தமிழாசிரியர், அர்ச் சூசையப்பர் கலாசாலை, திருச்சி.
18. தி.திரவியம் பிள்ளை, முனிசிபல் கவுன்சிலர், திருச்சி.
19. பி.ஏ.சுப்பிரமணிய பிள்ளை, இராகவ செட்டித் தெருவு திருச்சி.
20. ஈ.என்.வெங்கடப் பெருமாள் நாயுடு, பி.ஏ., பென்ஷன் தாசில்தார், ஈரோடு.
21. கு. வீராசாமி நாயுடு, ஈரோடு.
22. சி.கந்தசாமி, திருநெல்வேலி கதர் நெசவுச் சாலை, சாவடியகம், திசையன் விளை.

- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...

முறியடிக்கப்பட்டவர்களுக்கு மித்திரனின் நற்சாட்சிப் பத்திரம்

சென்னைத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத கட்சியாருக்கு வெற்றி ஏற்பட்டதைப் பற்றி மித்திரன் தன்னை திருப்தி செய்து கொள்ளுகையில் சென்னை வெற்றி பார்ப்பனரல்லாத கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றியல்லவென்றும், ஜஸ்டிஸ் அபேட்சகர்களான கனவான்கள் அந்தந்த பேட்டை ஓட்டர்களுக்குச் செய்த சேவையினாலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்த தென்றும் சொல்லுகிறான். இதிலிருந்தே பார்ப்பனக் கட்சியான சுயராஜ்யக் கட்சியாரின் சார்பாய் நிறுத்தப் பட்ட அபேட்சகர்களை ஓட்டர்கள் மதிக்கவில்லை என்றும், இவர்கள் நன்மை செய்வார் கள் என்று ஓட்டர்கள் நினைக்கவில்லை என்றும் ஏற்படுகிறது. இதைப் பார்க்கும்போது, அய்யோ பாவம்! நமது ஸ்ரீமான் ஒத்தக்காசு செட்டியாரை இப்பார்ப்பனர்கள் பழைய குரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்தெந்த விதத்தில் கெடுத்து விட்டார்கள் - கெடுத்து வரு கிறார்கள் என்பதை நினைக்கும் போது செட்டியார் பேரில் அளவு கடந்த பரிதாபமேற் படுகிறது.

ஸ்ரீமான் செட்டியாரின் மான நஷ்ட வழக்கில் செட்டியார் மானம் ஒத்தக்காசுதான் பெறும் என்று தீர்ப்பு வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஸ்ரீமான் செட்டியார் தனது பேராசையினிமித்தம் தனது பட்டத்தையும் விட்டு ஏமாறினார் என்கிற பெயர் வாங்கிக் கொடுத்து, பட்டத்தையும் பிடுங்கி விட்டார்கள். போதாக் குறைக்கு சென்னைத் தேர்தலில் ஸ்ரீமான் செட்டியார் தோல்வி யுற்றதற்குக் காரணம் ஓட்டர்களுக்கு செட்டியாரிடத்தில், தங்களுக்கு நன்மை செய்வார்கள் என்கிற நம்பிக்கை யில்லாததால்தான் ஓட்டுக் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீமான் செட்டியார் வெற்றி பெற்றிருந்தால் அது செட்டியாரின் நல்ல குணத்திற்கு அல்ல வென்றும் சுயராஜ்யக் கட்சியாரிடத்தில் ஜனங்களுக்குள்ள மதிப்பு என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள். ஸ்ரீமான் செட்டியார் தோற்றதால் அது சுயராஜ்யக் கட்சிக்கு ஜனங்களிடத்தில் உள்ள வெறுப்பும் அவநம்பிக்கையும் அல்லவென்றும் செட்டியாரிடத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கையில்லாத தால்தான் என்றும் சொல்லிவிட்டார்கள். நாளைக்கு சென்னை சட்டசபைத் தேர்தலில் செட்டியார் அவர்கள் அநேகமாய்த் தோற்றுப் போகலாம். அப்போது செட்டியாரைப் பற்றி என்ன சொல்லுவதற்குத் தயாராயிருக்கிறார்களோ தெரியவில்லை.

எப்படியாவது நமது ஸ்ரீமான் செட்டியாருக்கு நாள் கழிந்தால் போதும்; யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை போல் இருக்கிறது. செட்டியாரின் பரிதாப நிலைக்கு நாம் மிகுதியும் இரங்கு கிறோம்!
- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...

இதுவும் ஒரு நன்மைக்கே

காங்கிர தலைவர் பதவி

அஸ்ஸாம் காங்கிர தலைவர் பதவிக்கு இவ்வரு ஷம் ஒரு மகமதிய கனவானையே தெரிந்தெடுக்க வேண்டுமென்பது தற் காலம் தேசத்திலுள்ள எல்லா தேசிய சபைகளினுடையவும் தேசியவாதிகளி னுடையவும் ஒரே கருத்தாயிருந்து வரு கிறது. ஏனெனில் வட நாட்டில் உள்ள இந்து முஸ்லீம் கலவரங்களுக்கும் தென் நாட்டில் உள்ள பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் கலவரத்திற்கும் தக்க உபாயம் சொல்லக் கூடியவர்களும் பொது ஜன நம்பிக்கைக்குப் பாத்திரமான வகுப்பார்களுமே இருந்தால் தான் அந்தக் காங்கிரசையும் அதன் உப தேசத்தையும் பொது ஜனங்கள் மதிக்கக் கூடும். அப்படிக்கில் லாமல் யாரும் பின் பற்று வோரில்லாத ஒரு தனிப்பட்ட நபர், அதுவும் தேசத்தாரின் அவநம்பிக்கைக்கும் வெறுப்புக்கும் துவேஷத்திற்கும் ஆளான வகுப்பைச் சேர்ந்தவரும் சுய நன்மையையும் மூர்த்தியையுமே பிரதானமாய்க் கருதிய வரும் ராஜ்ய வாழ்வில் நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவருமாய் இருக்கும் ஒருவர் போட்டிபோட ஆரம்பித் தால் யோக்கியர்கள் கட்டாயம் விலகியே விடுவார்கள். அது மாத்திரமல் லாமல் காங்கிரஸ் தலைவர், தேர்தலில் தான் வெற்றி பெற சூழ்ச்சிகளும் ஒழுங்கீனமான பிரசாரங்களும் நடந்து வருமேயானால் கண்டிப்பாய் பொறுப்பும் யோக்கியதையும் உள்ளவர்கள் அந்த தானத்தை விரும்ப வேமாட்டார்கள்.

சென்னைப் பார்ப்பனர்கள் தேர்தல் களில் செய்யும் சூழ்ச்சியை உலகம் அறி யாததல்ல உதாரணமாக, திருப்பூர் மா காணக் கான்பரன்சுக்கு டாக்டர் வரதரா ஜுலு நாயுடு காரை தெரிந்தெடுக்காமல் இருப்பதற்குப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியும், காஞ்சீபுரம் மகாநாட்டுக்கு ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலி யாரைத் தேர்ந்தெடுக்காமல் செய்து ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் தலை வராவதற்குப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியும் புரட்டும் பொய்யும் எவ்வளவு என்பதும் தமிழ்நாடு வாசிகள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள்.

நிற்க, இரண்டு பொறுப்புள்ள மகம்மதிய கனவான்கள் இந்த தானத்தின் அபேட்சக தானத்தில் இருந்து விலகக் காரணம் என்ன? ஒருவர் தன்னை விடப் பெரியார் இந்த தானத்தை வகிக்க வேண்டும் என்கிறார்; மற்றொருவர் போட்டியில்லாம லிருந்தால்தான் சம்மதிப்பேன் என்கிறார். இந்த இரண்டு கனவான்களுக்கும் பதில் சொல்லாமல் ஸ்ரீமான் எ. சீனிவாசய் யங்கார் வாயை மூடிக்கொண்டு தனக் காகப் பிரசாரம் செய்கிறார். இதன் கருத் தென்ன? ஸ்ரீமான் டாக்டர் அன்சாரி யைவிட இவர் பெரியவர் என்பதா? அல்லது ஸ்ரீமான் மஷ்ருல் ஹக் அவர்களைவிட தான் போட்டிக்குப் பயப்படவில்லை என்பதா? உண்மையாய் தேசாபிமானமும் மனுஷத்தன்மையும் சுயநலமின்மையும் இவருக்கும் இருந்திருந்தால் இம்மாதிரி பெருந் தன்மையாய்ப் பேசிய மகமதிய கனவான்கள் இருவரில் ஒருவருக்குச் சமாதானம் சொல்லி யாரையாவது ஒருவரைத் தலைவராக்க வேண்டியது அவர் கடமையாகும். அப்படிக் கில்லாமல் மச்சான் இறந்தால் நல்லதாச்சு, அவருடைய கம்பளி நமக்காச்சு என்கிற பழமொழிப்படி, யார் விலகிக் கொண்டாலும் நமக்கு அக்கறையில்லை தேசத்தார் அபிப்பிராயத்தைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை ; எப்படியாவது நமக்கு அந்தப் பதவி கிடைத்தால் போதும் என்று சொல்லுவது எவ்வளவு மனுஷத்தன்மை அற்ற காரியம் என்பது வாசகர்கள்தான் உணர வேண்டும்.

காங்கிரசுக்கு ஏதாவது நல்ல காலம் வருவதாயிருந்தாலல்லவா நல்ல புத்தி தோன்றும். அதற்கு அந்திய காலம் வரப்போவதால், அது யாருடைய கைக்குப் போனால் முடிவு பெறுமோ அவர்கள் கைக்குப் போனால் தானே அது ஒழிய அனுகூலமாயிருக்கும். இதுவும் ஒரு நன்மைக்கே!
- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...


தமிழ்மொழியின் தயவால் சமஸ்கிருதம் செம்மொழி ஆனது! திருவெறும்பூரில் தமிழர் தலைவர்


திருவெறும்பூர், ஜூன் 15- தமிழ்மொழியின் தயவால் சமஸ் கிருதம் செம்மொழி ஆனது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். தமிழின முன்னேற்றத் திற்குப் பெரிதும் தடையாக இருப்பது அகப்பகையே, புறப் பகையே எனும் தலைப்பில் திருவெறும்பூரில் பட்டிமன்றம் நேற்று (14.6.2013) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அடையாளம் முக்கியம்!

பெருமையோடு வாழ்ந்த தமிழினம், தனது அடையா ளத்தை மறந்ததால் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எந்த இனமும் தனது அடையாளங்களை மறக்கக் கூடாது. வளர்ச்சி பெற்ற நாடுகளில், எழுச்சிப் பெற்ற இனங்கள் தங்கள் அடையாளங் களைப் பேணுவதில் முதன்மையாக இருக்கிறார்கள். ஆப் பிரிக்க நாடுகளில் கூட தங்கள் அடையாளங்களைப் பாது காத்துப் பெருமை கொள்கிறார்கள். அடையாளம் என்பது வேர்களுக்குச் சமமானது. வேர்கள் பழுதானால் கிளைகளும், இலைகளும் இருக்காது. வேர்கள் வெளிப்படையாகத் தெரி வதில்லை. ஆனால் அதுதான் முக்கியமானது. கட்டடங்களின் அஸ்திவாரம் கூட வெளியே தெரியாது, ஆழத்தில் பதிந் திருக்கும். ஆனால் அதுவே கட்டடங்களின் அடையாளம். தமிழ் குவியல்! சமஸ்கிருதம் அவியல்!
தமிழ் உருவான காலத்தில், சமஸ்கிருதம் தோன்றவே இல்லை. இந்த வரலாறு பலருக்குத் தெரியாது. பல காய்கறிகள் கொண்ட சமையலுக்கு அவியல் என்று பெயர். சமஸ்கிருதம் கூட பல மொழிகளால் சேர்த்துச் சமைக்கப்பட்ட ஒரு மொழி. அது ஒரு கலவை. அதற்கென்று தனித்தன்மை கிடையாது. பேராசிரியர்களாக இருந்த பார்ப்பனர்களே இதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் அப்படி கிடையாது. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்திலேயே தமிழ் தனித்தன்மையோடு விளங்கியது.
தமிழின் தயவில் சமஸ்கிருதம்!

தனித்தன்மையோடு விளங்கும் தமிழுக்கு, செம்மொழி அங்கீகாரம் வழங்க முடிவு செய்தார்கள். உடனே பார்ப்பனர் கள் சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி வேண்டும் என்றார்கள். செம்மொழி அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உண்டு. அதில் எல்லாவற்றிலும் தமிழுக்கு முதலிடம் உண்டு. ஆனால் சமஸ்கிருத மொழிக்கு அந்தத் தகுதி இல்லை. எனினும் நிபந்தனைகளைத் தளர்த்தி, தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்த நேரத்தில், அதைப் பயன்படுத்தி அவர்களும் செம்மொழித் தகுதியைப் பெற்று விட்டார்கள். சுனித்குமார் சட்டர்ஜி எனும் ஆய்வாளர் கூறுவதுபோல, நிறைய தமிழ்ச் சொற்களைக் கொண்டதுதான் சமஸ்கிருதம். முனைவர் தொ.பரமசிவன் எனும் தமிழ் ஆய்வாளர் இதுகுறித்து நிறைய எழுதியுள்ளார். பூ செய் என்பதைப் பூஜை என்றார்கள், ரசம் என்பதை ரஜம் என்றார்கள், வேட்டி என்பதை வேஷ்டி என்றார்கள். பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். என்பவர் மொழி ஆய்வில் தனி உலக வரைபடமே தயாரித்துள்ளார். தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ, எகிப்து போன்ற பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதை அவர் நிரூபிக்கிறார். இந்த வரலாறுகளை நாம் அறிய வேண்டும்.

துரோகத்தின் தொடக்கம்!

நம் இதிகாசம், நம் புராணம் எனப் பார்ப்பனர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அவற்றை வெள்ளையர்கள் கெடுத்துவிட்ட தாகவும் சொல்வார்கள். என்ன உன் புராணம் என்றால் கண்ணகியைக் காட்டுவார்கள். தீக்குளித்ததைப் பெருமை யாகப் பேசுவார்கள். எங்கே, இப்போது யாரையாவது தீக் குளிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். உன் மீது எனக்கும் சந்தேகம் இருக்கிறது, நீ தீக்குளி என்பார்கள் இன்றைய புரட்சிப் பெண்கள். அதேபோல இராமாயணம். முதன்முதலில் காட்டிக் கொடுத்த வேலையைச் செய்தவன் விபீஷணன். அவனுக்கு ஆழ்வார் பட்டம் வேறு. துரோகம் தொடங்கிய இடமே இராமாயணம்தான். அன்று தொடங்கிய அந்தத் துரோகம் இன்று ஈழத்துக் கருணாவிடம் வந்து நிற்கிறது.

இலங்கையில் தமிழர்களைச் சிறுபான்மையினம் என்று அழைத்து வந்தார்கள். இனி அதற்கும் வழியற்று, 13-ஏ எனும் புதுச் சட்டத்தின் மூலம், தமிழர்களின் ஒட்டு மொத்த அடை யாளங்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள். இதற்கான ஏற் பாட்டை சிங்கள அதிகாரி ஒருவர் செய்கிறார். அவர் யாரென் றால், ராஜீவ் காந்தி, இலங்கை சென்ற போது, துப்பாக்கியின் பின்புறத்தால் ராஜீவை தாக்கியவர். அவர் இன்றைக்கு அங்கு நல்ல நிலையில் இருக்கிறார். எப்படி தமிழர்களைக் காட்டிக் கொடுத்து, கருணா பதவி சுகத்தோடு இருக்கிறாரோ அப்படி. ஆக வெளிப்படையான புறப்பகையை விட, துரோகம் செய்யும் அகப்பகை மிகவும் ஆபத்தானது. எனவே இந்த இருபகை களிலும் நாம் கவனமாக இருந்து, நம் வரலாற்று அடையா ளங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

தமிழ் ஓவியா said...

அரசுக்கு நமது வேண்டுகோள்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது அ.இ.அ.தி.மு.க. அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் (2001-2006) 69 சதவீத அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும் என்று அன்றைய தினம் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதுதான். அதனை நிறைவேற்றும் பொறுப்பு முதல் அமைச்சருக்கு இருக்கிறது. இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும், நோக்கமும் அறவே கிடையாது.

போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தினால் அதனை நாங்கள் வரவேற்போம் - மகிழ்ச்சி அடைவோம் - ஏன், பாராட்டவும் செய்வோம் எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்!

- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 15.6.2013

தமிழ் ஓவியா said...


பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம்


நாம் நடத்தும் பெரியார் பிஞ்சு - குழந்தைகள் பழகு முகாம் பற்றி இங்கே குறிப்பிட்டனர். நான் சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு விழாவிற்குச் சென்றேன். இப்பொழுது அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடியவரின் வீட்டுத் திருமணம். நான் அங்கு சென்றபோது அன்புடன் வரவேற்றனர். அப்பொழுது அவர் பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். இவர் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா என்று கேட்டார். தெரியவில்லையே என்றேன்.

இவர் வல்லத்தில் தாங்கள் நடத்திய குழந்தைகள் முகாமிலே பயிற்சி பெற்றவர். இப்பொழுது பொறியாளர் மிகப் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார் என்று சொன்னார். அதனைக் கேட்ட பொழுது எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் பையனுடைய தாயார் குறுக்கிட்டுச் சொன்னார் குழந்தைகள் முகாமில் நீங்கள் விதைத்த விதை இன்றுவரை நன்கு வேலை செய்கிறது. இவன் பகுத்தறிவுவாதியாகவே இருக்கிறான் என்று தாயார் சொன்னபோது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நம் வீட்டுக் குழந்தைகளை பெரியார் பிஞ்சு முகாமுக்கும், வளர்ந்தவர்களை பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இளைஞர்கள் கணினி பயிற்சி பெற்றாக வேண்டும். இணையதளத்தின் மூலம் நம் கருத்துகளைப் பரப்ப வேண்டும். காலம் மாறி வருகிறது. அதற்கேற்ற வழிமுறைகளையும் நாம் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் 15.6.2013

தமிழ் ஓவியா said...

காவிரித் தீர்ப்பு : திசைத் திருப்பும் கரு’நாடகம்’



தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை நாளுக்கு நாள் சொல்லொணாத சோகத் தொடராக தொடர்ந்து கொண்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா?

குறுவை, சம்பா என்று பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் நடத்திவரும் நமது விவசாயத் தோழர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தின் ஈரமில்லா நெஞ்ச முடிவு காரணமாக நியாயமான உரிமைப்படி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஒருமுறைகூட, நீரை அளித்ததே கிடையாது!



உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், நடுவர் மன்றாக இருந்தாலும்கூட, சட்டத் தீர்ப்புகளைக் கூட மதிக்காது, கர்நாடக அரசு (அங்குள்ள வாக்கு வங்கி அரசியலில் யார் அதி வேகமாக தமிழ்நாட்டுக்கெதிரான குரலை உயர்த்துவது என்ற போட்டியினால்) 6.6.2013 அன்று ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி (அது மத்திய அரசால் கெசட் செய்யப்பட்டதினால் சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகவே கருதப்பட வேண்டும்) முதல் 4 மாதங்கள் (ஜூன் துவங்கி) 134 டி.எம்.சி. தண்ணீர் தர முடியாது. மாறாக 97.82 டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்க இயலும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 12ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கும் காவிரிக் குழுக் (தற்காலிகக் குழு) கூட்டத்தில் இதனைத் தெரிவிக்கப் போவதாகவும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புத் தரப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டதால் _- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்ய அச்சட்டத்தில் இடம் இருப்பதால் மறு பரிசீலனைக்காக மனு போட்டு வழக்கை நடத்தப் போவதாகவும் கூறியிருப்பது

சட்டப்படியும் சரி
நியாயப்படியும் சரி
சரியான நிலைப்பாடு அல்ல.
கண் ஜாடை நடவடிக்கையா?

அதற்குரிய காரணங்கள்:

மத்திய அரசு அமைத்துள்ள குழு ஒரு தற்காலிக ஏற்பாடாகவே உள்ளது. கர்நாடகத் தேர்தலை ஒரு சாக்காக மத்திய அரசு கூறியது. தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும் நிலையில், ஏன் இன்னமும் காலதாமதம் _- கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்குச் சாதகமான கண் ஜாடை நடவடிக்கையா?

இக்குழு தற்காலிகக் குழுவாக அமைந்தபோதே நாம் தெளிவாகச் சுட்டிக் காட்டினோம்; இதனால் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படாது என்று.

அதுபோலவே இது ஒரு கொலு பொம்மைக் காட்சியாகத்தான் அமைந்தது.

உடனடியாக நிரந்தரக் குழுவை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி செயல்படுத்த நிபுணர்களைக் கொண்ட நடுநிலை தன்னாட்சிக் குழுவின் மேற்பார்வை _- கண்காணிப்புக்கு விட்டு, நீரை இரு மாநிலங்களுக்கும் அக்குழுதான் அளிக்க ஆணைகள் ஆண்டுதோறும் பிறப்பிக்கப்பட வேண்டும்.

சட்டப்படி அதுதான் சரியான ஏற்பாடாகவே அமையும்.

இந்நிலையில் கர்நாடக அரசு தனது பல்வேறு முட்டுக்கட்டை முயற்சிகளில் ஏற்கெனவே தோல்வி அடைந்து விட்ட நிலையில், புதுக்கரடி ஒன்றை விட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை மறுக்க நினைக்கிறது!

நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறுபரிசீலனை செய்வோம் என்று கர்நாடக முதல் அமைச்சர் கூறுவது சரியல்ல.

1). இறுதித் தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் *(கெசட்டில்) வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வந்த நாள் பிப்ரவரி 5, 2007; அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013 ஆகும். இதன்படி மறுபரிசீலனை மனு 2018இல்தான் போட முடியும்.

2). 2007 முதல் கணக்கிடப்படக் கூடாது; மேலும், நிரந்தரக் குழுவும் இன்னும் அமையவில்லையே! எனவே இது ஒரு திசைத் திருப்பல் நாடகம் ஆகும் _ -இதனை ஏற்கவியலாது. தமிழக அரசே, கருநாடகத்தைப் பார்!

தமிழ்நாட்டில் -_ அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்பிரச்சினையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை.

எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக் கருத்துகூட கர்நாடகத்தைப்போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனையின் வெந்த புண்ணாகும்!

தமிழ்ச் சமுதாயமே, அந்தோ! உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா?

வேதனை! வெட்கம்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கூழ் முட்டைகள்



மகள் : தமிழ்த் தேசியம்ன்னு சொல்றாங்களே, அப்படீன்னா என்னப்பா ?

அப்பா : ஆம்லேட் எதுல இருந்து வந்தது ?

மகள் : முட்டையில் இருந்து...

அப்பா : இதே கேள்விக்கு ஆம்லேட் தோசைக்கல்லில் இருந்து வந்தது ன்னு பதில் சொல்றதுக்குப் பேருதான் தமிழ்த் தேசியம்.

- ஓவியன், தாம்பரம்

தமிழ் ஓவியா said...

தமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது?



தமிழ்வழிக் கல்வி குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போதைய இளம் தலைமுறை என்ன கருதுகிறது என்பதாக இந்த வாசகரின் எண்ணம் அமைந்துள்ளது. ``சென்ற தலைமுறையினர் செய்த தவறை நாம் இனிமேலும் தொடரக்கூடாது. பிற நாட்டவரின் அறிவியல் தொழில்நுட்பங்களை முந்தைய தலைமுறையினர் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கத் தவறிவிட்டதன் விளைவுதான் இன்று தமிழ்வழிக் கல்வியா அல்லது ஆங்கிலவழிக் கல்வியா என்ற விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தத் தலைமுறையினராகிய நாம் அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்தையும் மொழிபெயர்க்க முழு முயற்சியுடன் களமிறங்க வேண்டும். அனைவரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் பிற நாட்டவரின் அறிவியல் தொழில் நுட்பங்களைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துப் போதிக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலப் பயிற்சியை மேற்கொள்கிறார்களே தவிர, ஆங்கிலக் கல்வி முறையை ஊக்குவிப்பது இல்லை. இன்று நடைமுறையில் பார்த்தோமானால், மெட்ரிக் பள்ளி களில் படித்த பெரும் பாலானவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகுகூட தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை அற்றவர்களாகவே உள்ளனர் என்பது நடைமுறை உண்மை. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத் தெரிவதில்லை என்பதும் நடைமுறை உண்மை. இதுகூட பரவாயில்லை. இவர்களில் எத்தனை நபர்கள் தாங்கள் பயின்ற பாடத்திட்டங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு படித்திருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

நான் இளங்கலை வரையில் தமிழ் வழியில்தான் படித்தேன். முதுகலையில் ஆங்கிலவழிக் கல்வி மட்டும்தான் என்ற நிர்ப்பந்தத்தால் அனைத்துப் பாடங்களையும் தமிழில் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுத பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டேன். இன்றுகூட என்னுடைய விடைத்தாள்களை எடுத்துப் பார்த்தால், நான் என் சொந்த நடையில்தான் எழுதியிருப்பேன். தமிழ்வழிக் கல்வியால் தாழ்வு மனப்பான்மை என்று ஏதேதோ சொல்கிறார்கள். ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் பேசுவதைப் பார்க்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை வரும் என்பது உண்மைதான் என்றாலும், ஆங்கிலம் என்பது ஒரு மொழி, முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் தாழ்வு மனப்பான்மை என்ற சொல் நம் அகராதியில் இருக்காது.

இனிமேலும் தாமதம் செய்யாது நாம் முதலில் மொழிபெயர்ப்பினைத் தொடங்குவோம். பிறகு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்போம்.

- கணேஷ் ஏழுமலை

தமிழ் ஓவியா said...

கலகலக்கும் கடவுள்

இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடுவோர், யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? என்று விடுதலையில் வெளிவந்த செய்தியைப் பார்த்து மதவாதிகள் சிலர் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இறை நம்பிக்கையாளர்கள் 6% குறைந்தால் கடவுள் நம்பிக்கையற்றோரில் 6% கூடியிருக்க வேண்டாமா? என்பது அவர்கள் கேள்வி. இந்தக் கணக்கெடுப்பு ஒன்றும் முழுமையான ஒன்றோ, இதை வைத்து போட்டி போடுவதற்கான ஒன்றோ, எண்ணிக்கை விளையாட்டு விளையாடத் தேவையான ஒன்றோ அல்ல என்றாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றுண்டு. அது என்னவெனில், மதநம்பிக்கையற்றோர் என்றொரு வகையும் இதில் உள்ளது. அதில் இந்தியாவைப் பொறுத்தவரையில் 13% பேர் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கை என்ற கருத்திலிருந்து கடவுள் மறுப்பு என்ற சிந்தனைப் போக்குக்கு வரும் வழியான ஒரு இடைநிலைப் பகுதியே மத நம்பிக்கையற்றோர் என்பதாகும். கடவுள் கருத்து கலகலத்துப் போயிருக்கிறது. அதன் அடிப்படையிலான மத நம்பிக்கையிலிருந்தும் விடுபட்டவர்களாக 13% பேர் இருக்கின்றனர் என்பது, இவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. -_லிருந்து +க்குப் போவதற்கு நடுவில் 0 என்ற இடத்தைத் தாண்டித்தானே ஆகவேண்டும். இந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக மாறுவர் என்பதே இக்கணக்கெடுப்பு கூறும் உண்மை.

- அன்பன்

தமிழ் ஓவியா said...



கடல்லயே இல்லையாம்!

(இந்திய ஒலிம்பிக்கும், வண்டுமுருகன் ஜாமினும்)

உலகெங்கும் ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.. ஒலிம்பிக் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வெல்லுங்கள் அப்படின்னு ஒரு விளம்பரம். சரி, நாமளும்தான் என்ன போட்டின்னு போய்ப் பார்க்கலாமேன்னு பார்த்தேன். உங்களுக்குப் பக்கத்தில எங்க விழா நடக்குதோ, போட்டி நடக்குதோ அங்க போய் கலந்துக்கங்கன்னு போட்டிருந்துச்சு. சரி, நம்மளுக்குப் பக்கத்திலன்னா சென்னை இல்ல பெங்களூரு-வா இருக்கும்னு ஆவலா எடுத்துப் பார்த்தா... அடப் பாவிகளா...

வஞ்சர மீன் இருக்குன்றான்... வால மீன் இருக்குன்றான்...

கெண்டை மீன் இருக்குன்றான்... கெளுத்தி மீன் இருக்குன்றான்...

அவ்வளவு ஏன் சுறா மீன் கூட இருக்குன்றான்... ஆனா... ஜாமீன் மட்டும் இல்லைங்கிறான்...

கடல்லயே இல்லையாம்..னு வடிவேலு படத்தில வர்ற மாதிரி...

பாகிஸ்தான்ல இருக்குன்றான்... பங்களாதேஷ்ல இருக்குன்றான்...

இலங்கைல இருக்குன்றான்... இந்தோனேசியால இருக்குன்றான்...

மியன்மார்ல இருக்குன்றான்... மாலத்தீவுல இருக்குன்றான்...

அவ்வளவு ஏன் நேபாளத்திலகூட இருக்குன்றான்... ஆனா... இந்தியாவுல மட்டும் இல்லைங்கிறான்...

ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டு, இந்தியா ஒலிம்பிக்-லயே இல்லையாம்..னு சொல்றாய்ங்க...

அதிர்ச்சி ஆகாதீங்க.. இது பழைய செய்தி! கடந்த ஆண்டு டிசம்பர்லயே இந்திய ஒலிம்பிக் சங்கத்தைத் தடை பண்ணிருச்சாம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி! இங்க ஒரே ஊழல், அரசின் தலையீடு, முறைகேடு, உறுப்பினர்கள் பலர் மேல கிரிமினல் வழக்குகள் அப்படியிப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லித் தடை பண்ணிட்டாங்க... துப்பாக்கிச் சுடும் போட்டியில பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மாதிரி ஆட்கள் நேரில போய் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை 5 மாதம் கழிச்சுச் சந்திச்சு (கடந்த மே மாதத்தில) தடையை நீக்கக் கேட்டிருக்காங்க... முறையா தேர்தல் நடத்துங்க... அப்புறம் தடையை ரத்து பண்றோம்னு சொல்லிட்டாங்க... நம்மாளுகளும் நம்பிக்கை தெரிவிச்சுட்டு வந்துட்டாங்க...

இதைப் பத்தி எவனுக்காவது தெரியுமா? கிரிக்கெட் - ஒரு விளையாட்டுன்னு அதைக் கட்டிக்கிட்டு அழுது, அதுலயும் சூதாடி, ஊழல் செஞ்சு, அதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கானுக...

இங்க என்னடான்னா, உருப்படியா விளையாட வேண்டிய விளையாட்டுகளுக்கே ஆப்பு வந்திடுச்சு! முழுமையான உடல் தகுதியும், விளையாட்டுத் திறமையும் இருக்கிற, இந்த நாட்டோட மூலை முடுக்குகள்லயும், கிராமங்கள்லயும், மலைப் பகுதியிலயும் இருக்கிற வீரர்கள், வீராங்கனைகளைக் கண்டுக்காம, அவங்களை வளர்த்தெடுக்காம, பணம் - சிபாரிசுன்னு உருப்படாத சாம்பார்களைத் தேர்ந்தெடுக்கிறது - கிரிக்கெட் மாதிரி மொக்கை விளையாட்டுகளுக்கு விளம்பரம், வசதி கொடுக்கிற ஊடகங்கள், அரசுகள் எல்லாம் உருப்படியான விளையாட்டுகளுக்கு வசதி தராம தட்டிக் கழிக்கிறதுன்னு இருந்தா... வௌங்கும் இந்த நாட்டு விளையாட்டு!

கிரிக்கெட் இந்த நாட்டுல மத்த உண்மையான விளையாட்டுகளை எப்படி ஒழிச்சதுன்னு ரொம்பப் பேரு கேட்கிறாங்க... ஒலிம்பிக்-ல நம்ம இல்லைங்கிறதயே தெரியாம வச்சிருக்கே... இதை விடவா ஒரு எடுத்துக்காட்டு வேணும்... அந்த மட்டையைப் புடுங்கி அடுப்புல போட்டாத் தான் நாடு உருப்படும்.

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானிக்கும் . . .


பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். பரவாயில்லை அய்யா, டிக்கெட்டைத் தேட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.

அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து அய்ன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். அய்யா, தாங்களோ உலகப் புகழ் பெற்ற பெரிய விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால்தான் என்ன? ஏன் வீணாகத் தேடிக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்று மீண்டும் சமாதானப்படுத்தினார்.

அய்ன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, உங்களுக்குப் பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..! என்றார்.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...


மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?

- ஊசி மிளகாய்

ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடு ஒன்றில் கீழ்க் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது (21.6.2013).

ஜூன் 21ஆம் தேதி, ஜேஷ்ட, சுக்ல த்ரேயோதசி (ஆனி மாதம் சுக்லபட்சம், த்ரயோதசி திதி) புனித நாளாகும்! இதே நாளில்தான் 1674 ஜூன் 6ஆம் தேதி, சத்ரபதி சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார்.

பிரபல சரித்திர ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ஜதுநாத சர்க்கார் சிவாஜியைப் பற்றி எழுதியுள்ளதில் தங்களுக்கு உகந்த சில பகுதிகளை மட்டும் (இதுதான் ஆரியத்தின் கைதேர்ந்த டெக்னிக்குகளில் ஒன்றாயிற்றே!)

...சிவாஜி ஒரு அவதார புருஷரல்ல. நம்மைப் போன்ற ஒருவர்தான் என்பதை நினைப்போம்!

...சிவாஜி மகாராஜாவைப் போலவே சுதந்திரமான ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக் குவோம் என்று இந்த மங்களகரமான நன்னாளில் விரதமேற்போம் ........என்று முடித்துள்ளார்கள்.

அதே வரலாற்று ஆசிரியர் ஜதுநாத் சர்க்காரின் எழுத்துக்களையும், இன்னும் சில சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டே அறிஞர் அண்ணா அவர்கள், தானே எழுதி நடித்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் -

பார்ப்பனர்களின் பக்திச் சுரண்டல்கள், எப்படி சிவாஜியின் கஜானாவையே, யாகயோகம் என்று கூறி மொட்டையடித்தது என்பதை மிகத் துல்லியமாக, தானே ஏற்று நடித்த காகபட்டர் வேடத்தின் மூலமும் அவரது சீடன் கங்குபட்டர் மூலமும் விளக்கி யுள்ளார்களே!

தோனார், புரந்தர், கல்யாண் போன்ற எண்ணற்ற மலைக்கோட்டைகளை வென்ற மலைஎலி என்று புகழப்பட்ட சிவாஜி முடி சூட்டிக் கொள்ள முனைந்த நேரத்தில், அது முடியாத காரியம் என்று தடுத்தது ஹிந்துமத சனாதன சாம்ராஜ்யம் அல்லவா!

சிவாஜி நீ சூத்திரன் - நாலாம் ஜாதிக் காரன் அடிமை வேலையை பிராமணருக்குச் செய்ய ஆண்டவனால் உண்டாக்கப்பட்டவன், நீ எப்படி மன்னனாக முடியும்?

க்ஷத்திரியர்கள் அல்லவோ நாடாளப் பிறந்தவர்கள். நாடாள அவர்கள் ஆசைப்பட்டால் அதுதான் வர்ண தர்மப்படி நியாயமானது; நீ விரும்புவது அதர்மம், என்றவுடன், மனம் வெதும்பி, இதை மாற்ற வேறு மார்க்கமில்லையா குருதேவா? என்று கேட்க, கங்கை நதிப் புரத்திலிருந்து காகபட்டர் என்ற பெரும் பிராம்மண முனிவரை அழைத்து வந்து பெருத்த யாகம் செய்து, அவர் அழைக்கும் ஆயிரக்கணக்கான பிராம்மணர் களுக்கும் பொன்னும், வைரமும், மற்றவை களையும் தானமாக தாராளமாகக் கொடுத்து, 45 நாள் யாகம் தொடர்ந்து செய்தால் உன்னைத் தற்காலிகமாக க்ஷத்திரி யனாக்கி மன்னனாக்கி முடி சூட்டலாம் என்று ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட அந்த சிவாஜி பரம்பரை எப்படி வீழ்ந்து, பார்ப்பன சாம்ராஜ்யமாகவே - பேஷ்வாக்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பச்சை வர்ணாசிரம ஆட்சியாகியது என்ற வரலாற்றை அருமையாக 3 மணி நேரத்தில் நாடகமாக்கினார் - அறிவு வெளிச்சம் ஏற்பட்டது.

அதில் சிவாஜி ஒப்பனையோடு சிவாஜி யாகவே மாறி சிறப்பாக நடித்த வி.சி. கணேசனுக்கு தந்தை பெரியார் இன்று முதல் சிவாஜிகணேசன் என்று கூற, அதுவே அவரது பெயராக இறுதிவரை ஆகிவிட்ட கதை சில பேருக்காவது தெரிந்தால் நல்லது.

சிவாஜி கண்ட ஹிந்து ராம்ராஜ்யம் பார்ப்பனர்களின் பகற் கொள்ளை சாம்ராஜ்யம், யாகங்கள் என்ற பெயரால் சோம்பேறிப் பார்ப்பனர்கள் கூட்டம் பொன்னையும், பொருளையும் அள்ளிச் சென்று அக்கிர காரத்தில் ஆட்டம் போட்டு, செல்வச் செழிப்பில் புரண்ட காலம் தான் ஹிந்து சாம்ராஜ்ய வர்ணதர்மக் கொடி பறந்த கொடுமையான காலம்!

அந்த நாடகத்தில் மிக அருமையாக எளிய முறையில் அண்ணா காகபட்டராக நடித்துக் காட்டுவார்! கங்குபட்டர் என்ற ஒரு அப்பாவி சீடன் கேள்வி கேட்பான்.

அவனை வைத்து அருமையான பாடங்களை கூறுவார்.

டேய் கங்கு, நான் எதன்மீது அமர்ந்துள்ளேன் பார்த்தாயா?

ஹம் தெரியாதா - ஆசனத்தில்....

டே - மண்டு அதல்லடா - ஆசனத்தில் எதன்மீது?

புலித்தோல்மீது...!

பார்த்தாயா அந்த புலியை உயிருக்குத் துணிந்து வேட்டையாடியவன் எவனோ?

நான் புலித்தோல்மீது சுகமாய் அமர்ந்துள்ளேன் இதுதாண்டா நம்மவாளின் சாமர்த்தியம் புரிந்ததோ என்பார்.

இப்படி ஆரியத்தின் தோலை உரித்து மறைந்த வரலாற்று உண்மைகளை நாடகமாக்கி சிந்திக்க வைத்து எழுச்சி உண்டாக்கினார் அண்ணா.

சிவாஜிக்கு நல்ல புத்தி கூறிய தளபதி சந்திரமோகனை விரட்டி விட்டான் சிவாஜி ஆரியர் பேச்சைக் கேட்டு.

அதுபோல ஹிந்து சாம்ராஜ்யம் மீண்டும் வர வேண்டுமாம்

எவ்வளவு பேராசை பார்த்தீர்களா?

'' பேராசைக்காரனடா பார்ப்பான்!

பிச்சுப்பணங் கொடு என்றே தீர்ப்பான்?"

- பார்ப்பன பாரதியார்

தமிழ் ஓவியா said...


திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் அல்ல!


ஆண் - பெண் இருபாலருக்குமிடையே நிலவும் பாலியல் உறவே!


சென்னை, ஜூன் 18- திருமணம் என்பது தாலி கட்டுவதும், மதச் சடங் குகள் செய்வது அல்ல. ஆண் - பெண் இருவருக் கிடையே நிலவும் பாலி யல் உறவே கணவர் மனைவி என்பதை நிச்ச யிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் புதிய சிந்தனையின் அடிப் படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயா ரித்து விற்பனை செய் பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லா மிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந் தைகள் பிறந்தன.

1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண் டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமது வுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வரு கிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் பாத்திமா வழக்கு தாக் கல் செய்தார்.

இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் விசாரித்தது. விசார ணையின்போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தை களின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதா ரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. செருப்பு குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதி டப்பட்டது.

கையொப்பமே ஆதாரம்

இரண்டாவது குழந் தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட் டுள்ளதை டாக்டர் சாட் சியாகக் கூறினார்.

இரு தரப்பு வாதங் களையும், ஆதாரங் களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந் தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தர விட்டார்.

ஆனாலும், முகம துவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எது வும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பரா மரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்த ரவை எதிர்த்து நீதிமன் றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

நீதியரசர் கர்ணன்

இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித் தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழ் ஓவியா said...

தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுத யத்தில் பாதிப்பு ஏற் படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.

இந்த இரண்டு குழந் தைகளையும், முகம துக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனை வியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவ துண்டு. அந்த ஆவணத் தில் கணவன், மனை விக்காக குறிக்கப் பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.
திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல.
இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.

பாலியல் உறவு முக்கியம்

ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.

ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக் காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்ட பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.

ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்ப தால், அவரிடம் இருந்து சட்ட பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது.

சட்ட பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடு கின்றனர்.

அப்படி சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாத வர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்ட பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப் படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.

தாலி கட்டுவதும் சடங்குகளும் மட்டும் திருமணமல்ல

தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின் பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கிய மான சட்ட பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணை யர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப் பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலி யல் உறவு இருந்ததற்கான ஆதாரங் களை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.

அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளு டன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.

திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.

பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்

ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-அய் பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


எழுத்தாளர் இராமகிருஷ்ணன் :
எழுத்துரு அளவு Larger Font



சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியதாவது:

கோயில்களில், சிலைகளின் அழகைப் பார்க்காமல் குங்குமமும், விபூதியும் அவற்றில் கொட்டிப் பாழாக்குகிறோமே என்றார்.

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட முடிவுதான்!



திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யமாகக் கொண்டது என்றும், இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியதோடு, அதனைத் தமிழக அரசு செயல்படுத்தினால், மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு, பாராட்டவும் தயங்க மாட்டோம் என்று மனந்திறந்து பேசினார்.

தி.மு.க.வோடு சம்பந்தப்படுத்தி அரசியல் கண்ணோட் டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த போது, அதற்கான போராட்டத்தை அறிவித்த நேரத்தில், உங்களுடைய சீடர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? அதற்கான சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று சொல்லி அதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். அவர்களும், அதனை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி நீதியரசர் எஸ். மகராஜன் தலைமையில் 12 பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பரிந்துரையும் பெறப்பட்டது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கு ஆகமவிதிகள் தடையாக இல்லை என்றும் அந்த அறிக்கை காரண காரியத்துடன் தெளிவுபடுத்தியது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். நியமித்தார் (செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத் (செ.வை) துறை - செய்தி வெளியீடு எண் 339 நாள்: 8.9.1984).

தமிழ் ஓவியா said...


அந்தக் குழுவும் மூன்று மாதத்தில் அதற்கான அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.

அறிவிப்புகள் இருந்தாலும் எந்தக் காரணத்தாலோ அது நடைமுறைக்கு வராமல் தள்ளிக் கொண்டே போனது. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடல் நல பாதிப்பும் ஒரு காரணம். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் 113 ஆம் ஆண்டு விழாவில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பினை உருவாக்கும் கோரிக்கையினை முதல் அமைச்சர் முன் வைத்தார். (17.9.1991).

அ.இ.அ.தி.மு.க.வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஹேமமாலினி மண்டபத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழக அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அதுபற்றிப் பல பிரச்சினைகளும் எழுப்பப் பட்டுள்ளன. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசால் திறக்கப்படவிருக்கும் வேத ஆகம கல்லூரியில் தாழ்த்தப் பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்களாக ஆக்கப் படுவார்கள். இதன் மூலம் பெரியார், அண்ணா கனவுகள் நனவாக்கப்படும் என்று பேசினார். (17.10.1991).

அது ஆகமக் கல்லூரியாக இருக்க வேண்டுமே தவிர வேத ஆகமக் கல்லூரியாக இருக்கக் கூடாது என்று கழகப் பொதுச் செயலாளர் கூறினார். அதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது உரையாற்றிய போது தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில் ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தாரே! (9.4.1992) திருச்சியை அடுத்த கம்பரசம் பேட்டையில் அதற்கான இடமும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டதே!

இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணமே - இந்தப் பிரச்சினை அஇஅதிமுகவுக்கு - அதன் ஆட்சிக்கு - முதல் அமைச்சருக்கு உடன்பாடான ஒன்றே என்பதை நினைவூட்டவும், செயல்படுத்திட தார்மீகக் கடமை இருக்கிறது என்பதை வலியுறுத்தவும்தான்; உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதே நமது மிக முக்கியமான வேண்டுகோள்.

தமிழ் ஓவியா said...


பவுத்தம் விடுத்த பகுத்தறிவுக் கேள்விகள்


அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஜைனர்களையும், பவுத்தர்களையும் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்து கொன்ற கொலை பாதகங்களைத் திருவத்திபுரம், காஞ்சிபுரம் கோயில்களில் இன்றைக்கும் சிற்பங்களாகக் காணலாமே!

யதாஹிசவ்ர;
ஸ்யத தயாஹி புத்த;
ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி

என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறதே - இதற்குப் பொருளென்ன?

திருடனும் புத்தனும் ஒன்றாவான். அவன் நாத்திகன் என்று இந்துமதத்தின் இதிகாசம் கூறி இருக்கிறதே. இந்த நிலையில் மாஜி சங்கராச்சாரியார் புத்தரின் நாத்திகவாதத்தையும், ஜைனர்களின் நாத்திகத் தத்துவத்தையும் போற்றிப் புது அகவல் பாடுகின்றார் என்றால், பார்ப்பனர்களின் சந்தர்ப்பவாதப் பாசாங்குத் தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பவுத்தர்களையும், ஜைனர்களையும் வாதில் வெல்ல யோக்கியதை இல்லாத திருஞான சம்பந்தப் பார்ப்பனர் - சூழ்ச்சி வலைகளைப் பின்னி, சூதாக அவர்களைக் கொன்றொழித்த கதை எல்லாம் வரலாற்றில் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன என்று சங்கர மடங்கள் மனப்பால் குடிக்கின்றனவா?
கையில் சரக்கு இருந்திருந்தால் உட்கார்ந்து மணிக்கணக்கில் பவுத்தர்கள், ஜைனர்களுடன் விவாதப் போர் நடத்தி இருக்கலாம்.

கையாலாகாத் திருஞான சம்பந்தரோ கடவுளிடம் போய் அல்லவா மன்றாடுகின்றார், மடிப்பிச்சைக் கேட்கின்றார்.

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லிய மணோடு தேரரை
வாதில் வென்றழிக்கத்
திருவுள்ளமே.

இவர்களோடு வாதில் வெல்லக் கடவுள் அருள்புரிய வேண்டும் என்று மன்றாடுவதிலிருந்து இவர்களின் கோழைத்தனம் புரியவில்லையா?

வாதில் வெல்ல மட்டுமா ஆண்டவனிடம் அடிபணிந்து கிடக்கின்றார்? ஜைன பவுத்தர்களின் அழகிய பெண்களின் கற்பினை அழிக்கவும் கடவுளிடம் வரம் கேட்கின்றார் திருஞான சம்பந்தர்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

என்று பாடுகின்றார் என்றால், பர்ப்பனீய வேதமதக் கொடுங்கோலர்களின் கேவலப் புத்தி எந்த எல்லை வரை தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பக்தியின் யோக்கியதையையும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவும் செய்துவிட்டு, இன்றைய தினம் ஆரியம் மாஜி சங்கராச்சாரியார் உருவில் பவுத்த, ஜைன நாத்திக வாதங்கள் பற்றிக் கசிந்துருகுகிறது என்றால்-இது எவ்வளவு நீலித்தனம்! போலித்தனம்!! போக்கிரித்தனம்!!!

பவுத்தர்களும், ஜைனர்களும், புனல்வாதம், அனல்வாதம், புத்திவாதம் எல்லாம் செய்தனர் என்று மாஜி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

பவுத்தர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளிக்க முடியாமல் விழி பிதுங்கினார்கள்.

யாகத்தில் கொல்லப்படுகின்ற பசு சொர்க்கத்தை அடைவது உண்மையானால் யாகம் செய்கிறவன் தன் தந்தையைக் கொன்று சொர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைத்துக் கொல்லப்படுகின்ற பசுவைக் கட்டி வைக்கின்ற தூண்) உண்டுபண்ணிப் பசுக்களைக் கொன்று ரத்தச் சேற்றை உண்டுபண்ணுபவன் சொர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்?

என்பதுபோன்ற அறிவு பொருந்திய ஆற்றல் கணைகளை அடுக்கடுக்காக ஆரியத்தை நோக்கிப் பவுத்தம் விடுத்தது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம்



அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கைக் கணக்கெடுக்கும் சென்ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்றே சொல்ல வேண்டுமென்றும், இந்துக்கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக்காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.

(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும்.

இன்று எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணு கிறோமோ, அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் என தள்ளப்படும்.

நாம் கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக்களெனத் தள்ளி விடவில்லையா?

-குடிஅரசு, தொகுதி 32, பக்கம் 22