Search This Blog

7.6.13

பக்தியும் - ஒழுக்கமும்

கடவுளாகட்டும் மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக்கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்குப் பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம்-பொதுச் சொத்து.
நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய்விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை. அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன். நான் போய்விட்டுப் போகிறேன்; உங்களுக்கொன்றும் நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?

ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது, இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்குப் பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால் எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில் யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான். உண்மையாக இல்லை என்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்?
ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத் துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந் தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குச் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை.

பக்தி, கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

-----------------தந்தை பெரியார்  24-11-64-பச்சையப்பன் கல்லூரிப் பேருரை

44 comments:

தமிழ் ஓவியா said...


விபச்சாரம்


விபச்சாரம் என்பது பார்ப்பனர்களுக்குப் பிள்ளை விளையாட்டு! இல்லாவிட்டால் இதற்கென்றே ஒரு பகவானைப் படைத்து இருப்பார்களா?

வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்ஸனம் பாப நாஸம்
சம்பனம் சர்வதீர்த்தானாம்
மைதுனம் மோஷ சாதனம்

வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம், நாசம், முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்கு சமமான புண்ணியம், உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி.

இதுதான் இந்த சுலோகத்தின் பொருள். மோட்சத்தை அடைய இவ்வளவு சுலபமான மார்க்கத்தைக் காட்டி விட்டது சங்கராச் சாரியார் மதம். இந்து மதத்திற்கு ஈடு இணை இந்தப் பூவுலகில் எங்கும் இருக்கமுடியுமா!

தமிழ் ஓவியா said...

வேதங்களின் வண்டவாளம்

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்...

பதினோராவது புருஷனை நியோகத்தில் பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்து கின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர் களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

தமிழ் ஓவியா said...


பாவ விமோசனம்


பகவானிடம் பக்தி காட்டினால் போதும். வைதீகச் சடங்குகளிலே வாயையும், வயிற்றையும் கழுவிக் கொண்டால் போதும் - எதுவும் செய்யலாம் - எப்படியும் நடந்து கொள்ளலாம் - பகவான் அருள் அட்டியின்றிக் கிடைத்துவிடும்.

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் காட்டும் அற்புத மார்க்கம்!

பாவம் மிகப் பெரியது - கழுவாயோ மிகச் சிறிது!

இது வேதாரண்யம் தல வரலாறு இதனை வெளியிட்டது ஸ்ரீ வேதாரண்யேஸ்வரசுவாமி தேவஸ் தானம். வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள ராமச் சந்திரபுரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக் கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான்.

மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தா லல்லவா செய்யக் கூடும். எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கைவரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்குப் பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந் தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள்.

இவனைக் கண்டதும் இவன் இளமை யிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள்.

அவனும் மதுவை இதுவரையறியாதவனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவைக் கொன்றான். காமந்தலைக்கேறி, அவ் விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ்விதவையைப் பார்த்து-நீ யார்? உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் விதிவலி கொடியது, வெல்லுதற்கரியது என வருந்தினான்.

இப்பழி தொலையும் வழி யாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை. வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் அவன்முன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா! இதற்குத் தற்கொலையும் செய்துகொண்டு அப் பாவத்தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக் காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவனேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும். அப்படியே செய் என்றருளினார்.

பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சக்தி பதம் பெற்றாள்.

- இதை எழுதுவதற்கேகூடக் கை கூசுகிறது. ஆனால், வேதாரண்யேஸ்வரம் எழுந்தருளி இருக்கும் இத் தலத்தின் பெருமையும் தீர்த்தத்தின் (குளத்துநீர்) மகிமையும் எத்தகையது என்பதற்கு அளவுகோலை, தாயைப் புணர்ந்த பாவமும் தலைத் தெறிக்க ஓடியது என்பதிலே கொண்டுபோய் வைத் திருக்கிறார்கள் என்றால், இது ஒரு நாடு; இங்கு ஒரு மதம்.

இதனைக் கட்டியழச் சங்கராச்சாரிகள் என்றால் இந்தக் கேவலத்தின் தொகுப்பை - எல்லையை - பக்தி மார்க்கத்தில் ஒழுக்கச் சீலர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள்தான் சீர்தூக்கி எடைபோட்டு பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அம்மையாரை சிக்கலில் மாட்டும் நமது எம்.ஜி.ஆர்.ஏடு


முதுமையை முறியடிக்கிறார் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி விட்டாராம்! கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்கிறது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடாகக் கூறப்படும் நமது எம்.ஜி.ஆர். (6.6.2013, பக்கம் 18).

ஆயுளின் பெருமை என்பது வாழும் வருடங்களைப் பொறுத்ததல்ல! வாழுகிற காலத்தில் மக்களுக்கு ஆற்றிய பெருமை கொண்ட சேவைகளைப் பொறுத்ததே ஒருவனின் பிறப்புப் போற்றப்படுவதும், தூற்றப்படுவதும்! என்று தத்துவார்த்தம் வேறு பேசுகிறது அவ்வேடு.

90 வயதில் கலைஞர் மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யவில்லையா? மக்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களங்களில் குதித்து சிறைத் தண்டனைகளைப் பலமுறை ஏற்கவில்லையா?

அரசியலில் ஈடுபட்டு தோல்வி என்றால் என்ன வென்றே தெரியாத அளவுக்கு (12 முறை வென்று) 50 ஆண்டு சட்டமன்ற பணிகளைச் செய்த ஒரே தீரர் கலைஞர் தானே! இதே நேர்க்கோட்டில் அவர்களின் தலைவியரை வைத்துப் பேச முடியுமா?

கலைஞரின் பணிகளை அண்ணாவே பல வகைகளில் பாராட்டியது கிடையாதா? கலைஞரின் கைக்குக் கணையாழி அணிவித்தது எதற்காக? என்ற வரலாறு எல்லாம் அ.தி.மு.க. எழுத்தாள ருக்குத் தெரியுமா? கட்சியின் பெயரிலும், கொடியிலும் அண்ணா வேறு - அந்த அண்ணா பார்வையில் கலைஞர் எத்தகையவர் என்று முதலில் தெரிந்துகொள்ளட்டும்!

திராவிட இயக்க வீராங்கனைகள் பெயரில் மகளிர் நலத் திட்டங்களைச் செய்தவர் யார்?

பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தவர் யார்?

கலைஞர் செய்த திட்டங்களைத் தாண்டி மகளிர்க்கு அ.இ.அ.தி.மு.க. அரசு சாதித்தது என்ன?

அரவாணி என்று கேவலப்படுத்தப்பட்டவர்களை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்காக நல வாரியம் அமைத்தது யார்? அந்த நலவாரியத்தை முடக்கிய அம்மையார் யார்?

ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலிந்தோர்க்கு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தது யார்? (கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் உள்பட).

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைச் செயல்படுத்தியவர் யார்? அதனால் பொதுமக்கள் பலன் அடையவில்லையா?
20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் அம்மையார் ஆட்சி எங்கே? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்த கலைஞர் ஆட்சி எங்கே?

90 வயதிலும் போராட்டக் களம் கண்டவர் கலைஞர் - 90 ஆவது வயதிலும் போர்! போர்!! போர்!!! என்று அறிவிக்கக்கூடிய திராணி படைத்தவர் கலைஞர். அதனால்தான் முதுமையை முறியடிக்கிறார் கலைஞர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

நினைவாற்றல் இருப்பதால்தான் சொந்தமாகப் பேசுகிறார் - சொந்தமாக எழுதுகிறார் - அந்த உண்மையைத்தான் திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் எதிர்கேள்வி போட்டால் அவர்களின் தலைவரை எந்த இடத்தில் நிறுத்தி வைப்பது?

வரலாறு தெரியாத நுனிப்புல் மேய்பவர் களிடம் எழுத்தாணியைக் கொடுத்தால், எதையாவது கிறுக்கித் தள்ளி - அதன் விளைவு அக்கட்சியின் தலைவியைப் பரிதாபத்திற்குரிய இடத்தில் அல்லவா நகர்த்தும்!

ஒருக்கால் அது நடக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இப்படி வலிய வம்புக்கு வருவதுபோல் காட்டிக் கொள்கிறார்களோ!

இவை எல்லாம் அம்மையாரின் கவனத்திற்குப் போகவா போகிறது என்கிற தைரியத்தில்தான் இப்படி எல்லாம் எதிர்விளைவை நோக்காது கிறுக்குகிறார்களோ!

அந்தோ பரிதாபம்!

- கருஞ்சட்டை- 7-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி தேர்வு முறை: இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது - ஏன்?


தந்தை பெரியார் கொள்கைக்கு விரோதமானது!

தமிழக அரசுக்கு கலைஞர் கேள்வி

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, ஜூன் 7- ஆசிரியர் பணிக் கான தகுதி தேர்வில் தாழ்த்தப் பட்டோர் உட்பட அனைவருக்கும் - ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயித்தது - இடஒதுக்கீடு கொள்கைக்கும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டு தலுக்கும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கும் விரோதம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். முரசொலியில் இன்று அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி :- ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப் படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதே?

கலைஞர் :- மூன்றாவது முறையாக இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்ட தாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர் பார்ப்பதால், 15 இலட்சம் விண்ணப் பங்களை அச்சடித்து விநியோகிக்கப் போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட் டாயக் கல்வி சட்டத்தின்படியான விதி யாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப் பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்தி லிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங் களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி யன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியன்றும் நடக்கவுள்ளன.

தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கனவே நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப் படும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப் பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழ கத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமான தாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதி யினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித் துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர் களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு விரோத மானதுமாகும்.

எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறை யாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வர வேண்டும்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் முரசொலி யில் இன்று எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட்டை ஒழிப்போம்!


இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும், இன்றும் மிகப்பெரிய அளவு கொள் ளைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அக்கொள்ளைகளுள் ஒன்றுதான் கிரிக்கெட்.

இங்கிலாந்தில் உள்ள விம்பிள்டன் எனும் ரயில் நிலையத்தை ஒட்டி பிறந்து வளர்ந்த இவ்விளையாட்டு, இங்கி லாந்து அரசு உலகம் முழுதும் தன் ஆதிக்க அரசை விரித்துக் கொண்டி ருந்தபோது உலகமெங்கும் அது பரப்பப்பட்டது. பரப்பப்பட்ட அளவிற்கு எல்லா நாடுகளும் ஏமாறவில்லை.

அய்ரோப்பாவில் உள்ள 27 நாடுகளும் சகோதர நாடாகிய இங்கிலாந்து விளையாட்டான கிரிக்கெட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் பங் காளி நாடான அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. சுயசிந்தனை நாடான சீனா ஏற்றுக்கொள்ள வில்லை. கிட்டத்தட்ட உலகில் உள்ள 200 நாடுகளில் கிரிக்கெட் இல்லை. 12 நாடுகளில் மட்டும் பழைய இங்கிலாந்து ஆதிக்கத்தின் எச்சமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா, வங்கதேசம், இலங்கை முதலானவை ஏழை நாடுகள் இங்கி லாந்தின் ஒரு காலனி நாடாக இருந்த சிங்கப்பூரில் கிரிக்கெட்டுக்கு இட மில்லை. இந்தியாவில் மட்டும் அவ் விளையாட்டு எப்படி நுழைந்தது? ஒரே விடை சுயநலம் மிகுந்த பணக்காரர் களின் திட்டமிட்ட செயல் இது என் பதே. தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் சரத்பவார் இக்கொள்கை யில் முதல் இடம் வகிப்பவர்.

ஏழை விளையாட்டான கிரிக்கெட் வீரருக்கு (‘Player`) எனும் ஆங்கிலச் சொல்லை எந்தத் தமிழன் வீரன் என்று மொழி பெயர்தான்? அவனுடைய அறிவை மிகப்பாராட்ட வேண்டும்) ஏனென்றால் வீரத்திற்கு இடமே இல்லாத விளை யாட்டு இது. ஆதிமுதல் அந்தம் வரை திருட்டு, சூது, ஏமாற்று. ஒரு வீரர் ஒரு நாள் விளையாடினால் அவருக்குக் கொடுக்கப்படும் சம்பளம் லட்சங்களில்.

தமிழ் ஓவியா said...


அந்த விளையாட்டை விளம்பரம் செய்யும் கம்பெனிகள் பனியன், சட் டையில் போட்டு விளம்பரம் செய்யும் தொழிலதிபர்கள். ஒவ்வொரு கிரிக்கெட் காரருக்கும் தனியாக பணம் தர வேண்டும். அந்த வரவு வேறு. இதற்கு என்று அமைக்கப்பட்ட கூட்டுக் கொள் ளையின் பெயர்தான் அய்.பி.எல். இதில் உறுப்பினராகவும், தலைவராகவும் நடக் கின்ற தேர்தலில் கோடிக்கணக்காகச் செலவழிப்பார்கள்.

இந்த விளையாட்டின் சூது ரகசியம் என்ன? 11 பேர் கொண்ட இரு அணியாக பிரிந்து விளையாடுவார்கள். இந்த அணி வெற்றி பெறுமா? அந்த அணி வெற்றி பெருமா? என்று பந்தயம் கிரிக்கெட் ரசிகர்களுக்குள் திட்டமிட்டு நடத்தப்படும். ஒவ்வொருவரும் பந்தயம் வைத்து பணம் கட்டு வார்கள். இயல்பான வெற்றி பெறும் போது பணம் அவரவர்க்குப் போய் சேரும்.

தமிழ் ஓவியா said...

ஆனால் உண்மையில் அப்படியில்லை. விளையாட்டு சென்னையில் நடந்தால் மும்பை யில் ஒரு ஓட்ட லில் உட்கார்ந்து கொண்டு பணம் கட்டுவார்கள். தொலைக்காட்சியில் விளையாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். ஓட்டலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் குழுவினரிடையே பந்தயம் நடைபெறும் எந்த குழு வெற்றி பெற்றால் அதிக பணம் வரும் என்று இறுதிக்கட்டத்தில் முடிவு செய்து கொண்டு தொலைபேசி வழியாகவோ, வேறு குறிப்பு வழியாகவோ விளையாடும் இடத்திற்கு தகவல் அனுப்புவார்கள். அதற்குத் தகுந்தவாறு வென்றவர் வேண்டுமென்றே தோற்பவரிடம் வெல்லுவார். இதற்கு ஸ்பாட் பிக்ஸிங் என்று பெயர்.
கியூ பிரிவு போலீசார் கொடுத்த அறிக்கையின்படி அய்.பி.எல். சூதாட் டத்தை நடத்தும் தரகர்கள் ஒரே இணையதத்தில் இணைந்து செயல் படுவது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடும் போட்டியும், மே 5 அன்று இதே இரு அணிகள் மும்பையில் விளையாடிய போட்டியிலும் சூதாட்டத்தில் அதிக அளவு பணம் பரிமாறப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு போட்டிக்கு மட்டும் 3,500 கோடி ரூபாய் சூதாடப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஒவ்வொரு வருக்கும் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வழங்குவது என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது கிரிக்கெட்காரர்கள் பெறும் சம்பளத்தை விட அய்ந்து மடங்கு இது மிகுதியாகும்.

கிரிக்கெட் போட்டியினை தொலைக் காட்சி களில் ஒளிபரப்புவ தாலும், விளம்பரங் களாலும், அடுத்த நான்கு ஆண்டு களுக்கு கிரிக்கெட் வாரியத்திற்கு 3,350 கோடி வருமானம் இதன்றி இணையதள உரிமை, எஸ்.எம்.எஸ். மூலம் ஸ்கோர் வெளி யிடுவது, நுழைவுச்சீட்டு விற்பது மூலம் 2,613 கோடி வருமானம்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி வழியாக வாரியத் திற்கு வரும் வருமானம் 5,977 கோடி. இந்திய அரசும், மாநில அரசும், மத்திய அமைச்சர்கள் சிலரும், மாநில முதலமைச்சர்கள் சிலரும் மி ஈடுபட்டு விடுமுறை விட்டு நடத்தும் இவ்விளையாட்டுப் போட்டிகள் பொது வாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பொதுத் தேர்வு நடக்கும்போது தான் நடப்பது வழக்கம்.
2003-ஆம் ஆண்டு உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. இரவு பகலாக மாணவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை தொலைக்காட்சியில் கண் விழித்துப் பார்த்துப்படிக்கத் தவறிய தால் தேர்ச்சி 5 சதவீதம் குறைந்த தாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் 26 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இரண்டு வேளைகூட உணவில்லாமல் வாழ்ந்து கொண்டே செத்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கூட ஈட்ட முடியாத வறுமை நிலை. இவர்களுக்கு. இக்கணக்கை,

1) பிறப்பு - நோய் முதலிய சமுதாய நிலை
2) மருத்துவ வசதி
3) கல்வி
4) வேலையில்லாமை
5) ஏழ்மை
6) சமூக வாய்ப்பு இழப்பு
என்ற அடிப்படையில் தீர்மானிக் கிறார்கள்.

நம் நாட்டில் 70 சதவீத மக்கள் கிராமங்களில் வேளாண்மையை நம்பி வாழ்கிறார்கள். அவர்களின் தொகை 80 கோடிக்கும் மேல். ஒரு விவசாயத் தொழிலாளி சம்பாதிப்பதை விட 65 மடங்கு கூடுதலான வருவாயை தகவல் தொழில்நுட்ப (அய்.டி.) ஊழியர்கள் பெறுகிறார்கள். இந்தியாவில் இவர்களின் மொத்த தொகை வெறும் 10 லட்சம் தான் (நம் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டது).

நம் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் விளையாடுவோர் அனை வரும் பங்குபெற்று விளையாடுவதே. வேடிக்கை பார்ப்பது என்ற ஒரு கூட்டம் இங்கே இல்லை. கிரிக்கெட் வேடிக்கை பார்ப்போரை நம்பியே நடத்தப்படு கிறது. ஒரு பெரும் சோம்பேறிக் கூட்டத்தைக் கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் இது வளர்த்து வருகிறது என்பது மட்டுமல்லாமல் ஒரு பெரும் கொள்ளைத் தொழிலையும் சேர்த்து நடத்தி வருகிறது.

எனவே, சீனாவைப் போலவும், அமெரிக்காவைப் போலவும் இந்தி யாவை மாற்ற வேண்டும் எனும் கனவில் மிதந்து கொண்டிருக்கும் நம் அரசியல்வாதிகள் கிரிக்கெட்டை ஒட்டு மொத்தமாகத் தடைசெய்வதே நல்லது.

நன்றி: ஜனசக்தி 24.5.2013

தமிழ் ஓவியா said...


இதுதான் பெரியார் திடல்!



29.5.2013 பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக திரு. மா.சு. சம்பந்தம் அவர்களின் 91-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புலவர் வீரமணி தலைமையுரை ஏற்று அவருடன் இவருக்கு இருந்த நட்பு மற்றும் அவரின் சீரிய குணங்களை நினைவு கூர்ந்தார். க. திருநாவுக்கரசு (திராவிட இயக்க ஆய்வாளர்) சம்பந்தத்தின் தமிழ் பணிபற்றியும் முதன் முதலில் திரு. திருமதி என்ற சொற்களை நடைமுறைக்கு கொண்டு வந்தவர் என்ற செய்தியை விரிவாக எடுத் துரைத்தார்.

இந்த சம்பந்தம் 2 ஆண்டுகளுக்கு முன் வாசகர் வட்டத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்றவர். இன்று வரை காணவில்லை. நேரில் அவரைப் பார்க்கவில்லை. எந்த செய்தி ஊடகங் களும் இவரைப் பற்றி உருவான செய்தியை இன்று வரை உலகுக்கு அளிக்கவில்லை. ஆனாலும் தந்தை பெரியார் பாசறையில் ஒன்றான பெரியார் நூலக வாசகர் வட்டம் இவரின் 91-ஆவது பிறந்த நாள் விழாவை அவரது குடும்பத்தாரும் கலந்து கொள்ள சிறப்பாக கொண் டாடியது. சம்பந்தம் வாசகர் வட்ட அங்கத்தினர்களின் அய்ம்புலன் களாலும் அவர் வாழ்வதாகவே நம்பிக் கையுடன் உள்ளது. (திராவிடர் கழகத்தை தவிர வேறு எங்காவது இது போன்ற பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது உண்டா?)

- பாலகிருட்டிணன், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.

தமிழ் ஓவியா said...

ஜூன் 16: மன்றல் இணை தேடல் பெருவிழா களத்தில் நின்று வென்றெடுப்போம்! பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உரை


கோவை, ஜூன் 7- கோவையில் சூன் 16 மன்றல் இணைதேடல் பெருவிழா நடத்துவது சம்பந்தமாக கோவை, ஈரோடு, சேலம் ஆகிய கழக மண்டலங்கள் ஒருங்கிணைந்து ஆலோசனைக் கூட்டம், 5.6.2013 அன்று கோவை, வடகோவை, என்.டி.சி. கல்வி அகத்தில், மாலை 6 மணிக்கு, கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் திருமகள், கோவை மண்டல தி.க. தலைவர் வசந்தம் கு.இராமச்சந் திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வருகை புரிந்த அனைவரையும் மண்டலச் செயலா ளர் பாண்டியன் வரவேற்று உரை யாற்றினார்.

நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் உரையாற்றுகையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக இயங்கிவரும், திருமண நிலையங் களை தொடர்பு கொண்டு, அவர் கள் நடத்திவரும் இணைதேடல் விழாவில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டோம்; அங்கு முன்பதிவுக் கட்டணமே 3000 ரூபாய், அங்குஅமைக்கப்பட்ட அரங்கிலே, ஜோதிடத்திற்கு தனி யாக அரங்கம், ஜாதகம் கணிப்ப தற்கு ஒரு அரங்கம், இன்னும் அந்தந்த ஜாதியர்க்கு தனியாக அரங்கம், ஒரு நாள் முழுவதும் இருந்து எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிந்து கொண்டோம். இதில் இருந்து பெரியார் இயக் கத்தைச் சார்ந்த நாம் எப்படி மக்கள் மத்தியிலே கொண்டு செல் லலாம், என்பதை கழகத் தலைவர், மற்றவர்களோடு ஆலோசித்து நுழைவுக் கட்டணமாக 300 ரூபாயும், நாம் அமைக்கவிருக்கும் அரங்குகள், ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம், மாற்றுத் திற னாளிகள், மணமுறிவு பெற்ற வர்கள், துணையை இழந்தவர்கள் என அய்ந்து அரங்குகள் அமைத்து, கூடவே, மருத்துவர் குழு, வழக்குரை ஞர் குழு ஆகியவைகளை இணைத்து சென்னையிலே துவங்கினோம்!

நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாய், மிகப்பெரிய வெற்றியை அடைந்தது; நாளிதழில் இலவச மாக, சென்னை, திருச்சி, மதுரை யில் விளம்பரம் வெளியிட்டதோடு மட்டுமல்ல; திருமண நிலையம் நடத்தியிருந்தவர்கூட, ஜாதி மறுப்பு, மத மறுப்பு, பெண் ஆண் தேவை என்று விளம்பரம் செய்யு மளவுக்கு நமது மன்றல் நிகழ்ச்சி அமைந்தது. தமிழகம் முழுவதும் இதனை கொண்டு சேர்த்து பெரியார் கண்ட கனவை நினைவாக்கிக் காட்டவேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில், உற்சாகமாய் கழகத் தோழர்கள் உறுதியளித்தது, அனைவரையும் உத்வேகம் கொள்ளச் செய்ததது. நிகழ்ச்சி அன்று மட்டும் கழகத் தோழர் கள் அறிவித்த அறிவிப்புகள்;

1. உள்ளூர் தொலைக்காட்சியில் 3 நாட்கள் தொடர்ந்து நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் கோவை பழ.அன்பரசு.

2. ஈரோடு சண்முகம் - முதல் தவணையாக ரூ.5,000

தமிழ் ஓவியா said...

3. தி.க. செந்தில்நாதன் - விழா அன்று தண்ணீர் பாட்டில் மற்றும் பாக்கெட்.

4. சு.வேலுசாமி - நிகழ்ச்சிக்கான ஏதாவது ஒரு செலவினம், மற்றும் மேட்டுப்பாளையத்தில் விளம்பரத் தட்டி துண்டறிக்கை.

5. வசந்தம் கு.இராமச்சந்திரன் - பல்லடத்தில் - விளம்பரத் தட்டி வைத்தல்.

6. சந்திரசேகர் - நிகழ்ச்சிக்கு கொடி கட்டுதல் மற்றும் ஒரு செலவை ஏற்றுக் கொள்ளுதல்

7. மு.பிரகஸ்பதி - நகரப் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் துண் டறிக்கை பிரச்சாரம்.

8. புலியகுளம் வீரமணி - ரூ.1000

9. பொறியாளர் பரமசிவம் - பொள்ளாச்சியில் தட்டி மற்றும் பிரச்சாரம்.

10. ஆட்டோ சக்தி - நிகழ்ச்சி முடியும் வரை ஆட்டோவில் விளம்பரம்.

நிகழ்ச்சியில் கழக கலைத்துறை செயலாளர், பிரின்ஸ் நிகழ்ச்சி எவ்வாறு அமையவிருக்கிறது என் பதை முன்னோட்டாக எடுத்து ரைத்தார். மற்றும் கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், நீலமலை மாவட்டத் தலைவர் கருணாகரன், சாரதாமணி ஆசான், பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் தென்மொழி ஞானபண்டிதன், ப.க. தலைவர் முனியன், செயலாளர் கண்ணன், மண்டல இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், கோவை புறநகர் மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, நீலமலை மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மாவட்ட அமைப் பாளர் தமிழ்ச்செல்வம், தமிழ்முரசு மாவட்ட துணைத் தலைவர் சிற் றரசு, மேட்டுப்பாளையம் பாலசுப் பிரமணியன், வெள்ளக்கோவில் மணிகண்டன், மாணவரணி கோவை மண்டல செயலாளர் இமயவரம்பரன், பொறியாளர் முருகன், திருப்பூர் நகரத் தலைவர் ஆறுச்சாமி, செயலாளர் பாலகிருட் டிணன், கு.வெ.கி. செந்தில், மே.ப. ரங்கசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கவுதமன், துணைத் தலைவர் திராவிடமணி, புளிய குளம் தருமன், பொள்ளாச்சி சிவ ராஜ், மேடூர்ராஜா, கழக முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்தராசு, குன்னூர் இராவணன், இலைக்கடைசெல்வம், தக்காளி ராஜேந்திரன், கணபதி காமராஜ், கழக மகளிரணி தோழியர்கள் ராஜே சுவரி, கவிதா, கலைச்செல்வி, திலக மணி, ஆலாந்துறை முத்துமணி, ம.ந.க. வீதி, பகவதி, ஜோதிமணி மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கோவையில் கடந்த ஏப்ரலில் நடந்த புரட்சிப் பெண்கள் மாநாடு கழகத்திற்கு வெற்றி முத்திரை பதித் தது. சூன் 16 மன்றல் பெருவிழாவும் கழகத் தோழர்களின் உற்சாகமான அறிவிப்பாலும், உறுதிகுலையா நெஞ்சினாலும், மிகப்பெரிய வெற் றியை கழகத்திற்கு ஈட்டித்தரும் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...


மக்களாட்சி முறை


சாக்ரடீஸ் மக்களாட்சி முறையைப் பார்த்துச் சிரித்தார்.

அவர் தனிச் சிலர் ஆட்சிமுறையின் நன்மைகளை வியந்து பாராட்டி பேசினார்.

ஏதென்சின் மக்களாட்சி முறையை எள்ளி நகைப்பதற்கு நிறையக் கார ணங்கள் இருந்தன. நானூறாயிரம் ஆதிக்குடி மக்களில் இருநூற்றைம்பதாயிரம் பேர், அரசியல் உரிமைகளின்றி அடிமைகளாக இருந்தனர்.

உயர் அதிகார அமைப்பான உச்சநீதி மன்றத்தில் குடி மக்களின் பெயர்ப் பட்டியலில் இருந்து அகர வரிசையில் தேர்வு செய்யப் பெற்ற ஓராயிரம் பேருக்கு மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். இதைவிட முட்டாள்தனமான செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

சாக்ரடீஸ் இதைப் பார்த்து நகைத்து ஏதென்சின் மக்களாட்சி முறையைக் குதர்க்கவாதம் செய்யும் சமுதாயத்தோடு ஒப்புமைப்படுத்திக் காட்டினார்.

மக்களாட்சிக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் சிலர் ஆட்சிக் கட்சி பொடியாகிப் போய் விட்டது.

மக்களாட்சி முறையைப் பற்றிய கருத்துக்களுக்காகவும் ஏதென்சு இளைஞர்களிடம் பல கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை விதைத்துப் பரப்பியமைக்காகவும் சாக்ரடீசைத் தீர்த்தக் கட்டுவதென்று மக்களாட்சிக் கட்சி முடிவு செய்தது.

சாக்ரடீஸ் இதிலிருந்து எளிதாகத் தப்பியிருக்க முடியும்.

ஆனால் தத்துவத்தின் தியாகியாக வரலாற்றில் நிலைத்திருக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதன் வாயிலாக, மனித மனம் வளர்ச்சியடைவதற்குச் சிந்தனை விடுதலை என்பது மக இன்றியமையாத உட்கூறு என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

(நாம் ஆராய்ந்து பாராமலே மெய்யென ஏற்றுக் கொள்ளும் பேச்சுரிமையைப் பெற்றுத் தந்த எண்ணற்ற தத்துவ ஞானிகளுக்கு நாம் உண்மையில் நன்றியுடையவர் களாவோம். பேச்சுரிமை நடைமுறையில் இல்லாத அக்காலத்தில் வால்டேர் விடா முயற்சியுடன் பேச்சுரிமையை ஆதரித்து வாதாடினார்.

ரூசோவின் இயற்கை இயல் வாதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது வால்டேர் சொன்னார்:

நீங்கள் சொல்வதனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன்.

ஆனால் அதைச் சொல்லும் உங்கள் பேச்சுரிமையை இறுதிவரை நான் உறுதியாக ஆதரிப்பேன் என்றார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான கொள்கைப் பரப்புரையில் தளராத உறுதியுடனும் துணிவுடனும் பெரியார் அரும்பாடுபட்டார். கீழத்தரமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, பகட்டு ஆரவாரம் கொண்ட, ஆவ ணம் பிடித்த மதம் வெறுமைக்குழியில் விழுந்தது. இதனை அச்சமின்றிப் பெரியார் திறனாய்ந்தார். சாக்டீரசின் காலத்து ஏதென்சு, பல்வேறு தத்துவங்களின் வார்ப்புப் பட்டறையாக விளங்கியது.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 39ஆம் பக்கத்தில்)

- க. பழநிசாமி, கன்னிவாடி

தமிழ் ஓவியா said...


குறும்பா


தீர்ந்ததா?

குருவுக்கு...
அர்ச்சனை...!
குருக்களுக்கு
தட்சிணை....!
பக்தனுக்கு...
தீர்ந்ததா...?
பிரச்சினை...??

குறும்பா

வெறி பிடித்தோர் ஆட்டம்!
நரித் தந்திர ஆட்டம்...!
சொறி பிடித்த வெறி நாயை
ச் சூ விட்டாடும் சூதாட்டம்...!
நெறி கெட்ட
கிரிக்கெட்டால்...
கண்ட பலன்..?
நாட்டு வளம்
வீட்டு நலம்..
கெட்டதுதான்..
இலாபம்.!!

- _ கோ. கலியபெருமாள்
மன்னார்குடி_1

தமிழ் ஓவியா said...


ஞானக் கண்ணோ!


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தில் (14.6.2013) ஒரு கட்டுரை. காஞ்சிபுரத்தில் கண் கொடுத்த வைத்தீஸ்வரன் - என்பது தலைப்பாகும்.

கேரளப் பெண் ஒருவர் தலையில் அடிபட்டுக் கண் பார்வை பாதிக்கப்பட்டா ராம். குருவாயூர் தொடங்கி கும்பகோணம் வரை க்ஷேத் திராடனம் சென்றால் கண் பார்வை வந்து விடும் என்று சொன்னார்களாம். அவ்வாறே அந்தப் பெண் சென்றாராம்; வைத்தீஸ் வரன் கோயிலில் வழிபடும் போது - எதற்கும் காஞ்சி புரம் சென்று பெரிய வாளைத் தரிசித்தால் பார்வை வரும் என்று கோயில் குருக்கள் கூறினா ராம் (எங்கெங்கெல்லாம் சங் கிலித் தொடர் பார்த்தீர் களா?) அவ்வாறே அங்கு சென்று சந்திரசேகேந்திர சரஸ்வதியைத் தரிசித் தாராம் - பழத்தட்டுக்களுடன்.

அப்பொழுது அந்தப் பெண்ணின் கணவரைப் பார்த்து சங்கராச்சாரியார் என்னைத் தெரியற தான்னு உங்க சம்சாரத் துக்கிட்டேயே கேளுங்க என்றார். அத்துடன் அருகி லிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரிய வாள். (தேஜஸ் என்பது இதுதானோ!) அந்த நேரம் அந்த பெண், குருக்கள் சொன்ன (வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன) சந்நியாசி இதோ தெரிகிறாரே என்றாராம் சத்தமாக பரவசம் பொங்க!

ஆமாம் காஞ்சி தெய் வம் அவளுக்குக் கருணை புரிந்தது. நம்பினார் கெடு வதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு என்று சும் மாவா சொல்லி வைத் தார்கள் என்று விஜயபார தம் அவிழ்த்து விட்டுள்ளது.

அற்புதத்தைச் சொல்லி தான் எந்த மதத்தையும் காப்பாற்ற வேண்டும் என் றாலும் சங்கராச்சாரியார் களைப் பொறுத்தவரை அற்புதங்களை நம்பாத வர்கள், இன்னும் சொல்லப் போனால் கடவுளை ஏற் காதவர்கள். தானே கடவு ளாக, கடவுளே தானாக இருப்பதாக ஸ்மார்த்தர் களின் சித்தாந்தம். அகம் பிரம்மாஸ்மி தத்வம் அஸி என்று சொல்லுவதும் அது தான். அப்படி இருக்கும் போது இது என்ன புதுக் கதை? விஜயபாரதத்தின் 24ஆம் பக்கக் கட்டுரைக்கு 35ஆம் பக்கத்தில் பதில் இருக்கிறது.

கேள்வி: குருடர்கள் கண் பார்வை பெறு கிறார்கள். செவிடர்கள் (காது) கேட்கிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள் என கிறிஸ்தவர்கள் பிரச் சாரம்பற்றி.

பதில்: ஆஹா ரொம்ப நல்லது. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டாம் - டாக் டர்கள் வேண்டாம் - சி.எம்.சி. ஆஸ்பத்திரி வேண்டாம் - மெடிக்கல் ஷாப் வேண்டாம் நல்லது தானே... ஒரே ஒரு சந்தே கம் தெரசா, டி.ஜி.எஸ். தினகரன் போன்றோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றது ஏனோ? இதுதான் விஜயபாரத்தின் பதில்; இதே கேள்வியை சங்கராச்சாரியாரைத் தரிசித்ததால் பெண் பார்வை பெற்றார் என்பதுபற்றியும் கேட்கலாம் அல்லவா!

Tail - Piece: அந்தக் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரா நேத்ராலயாவில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரே - அது ஏனோ?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஈழப் பிரச்சினையும் பி.ஜே.பி.யின் பார்வையும்



ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொருத்த வரையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது.

பிஜேபி.யைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் இலங்கைக்குச் சென்றனர். யாழ்ப்பாணம் பகுதிக்கும் சென்றுள்ளனர். அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் சந்தித்தனர்.

இந்தப் பயணம் குறித்து பிஜேபி குழு என்ன கூறுகிறது? இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா தயா ராகவே உள்ளது. ஆனால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவும் என எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. உள்ளூர் அரசியல் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் சரியானதாக இருக்கும். இலங்கையை இந்தியா நட்பு நாடாகத் தான் பார்க்கிறது ஆகவே அந்த நாடு சீர் குலைவதை இந்தியா அனுமதிக்காது என்று கூறியுள்ளது.

இதைச் சொல்லுவதற்குத்தான் பிஜேபி குழு இலங்கை சென்றதா? தமிழர்கள் அங்குள்ள பிரச்சினைகளை யாரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்?

தமிழினம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்ற வகையில் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தியும், சிங்கள இன வெறியைத் தூண்டியும் செயல்படுகிறவர்களிடம் எந்த வகையில் தமிழர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியும்?

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிட்டது இல்லையா? இந்தியா தலை யிட்டது இல்லையா? பாகிஸ்தான் சம்பந்தப் பட்டதுதானே வங்காள தேசப் பிரச்சினை - அதற்குத் தீர்வு எப்படி கிடைத்தது? இந்தியா வின் பங்கு அதில் கிடையாதா?

அப்படிப் பார்த்தால் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம் பெற்றது எப்படி? இன் றைக்கு அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கும் வகையில் செயல்படும் பொழுது இந்தியா அதில் தலையிட பாத்தியதை உடையது ஆகாதா?

ஈழத் தமிழர்களின் பிரச்சினை என்பது வெறும் உணவு, உடை, உறையுள் பிரச்சினை மட்டும் தானா? அதனைத் தாண்டியும் தங் களின் இனம், மொழி, பண்பாட்டு அடை யாளங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுபற்றிய கருத்தென்ன?

இந்தப் பிரச்சினையில் அந்தரங்க சுத்தியோடு பிஜேபி செயல்பட்டது கிடையாதே. இதற்கு முன்பு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை பிஜேபி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்றபோது, அதிபர் ராஜபக்சேவுடன் கலந்து பேசிய பிறகு, தனியே ராஜபக்சேயுடன் சுஷ்மா சுவராஜ் பேசியதுபற்றி சர்ச்சைகள் கிளம்பவில்லையா?

அதன்பின் புத்தர் விழா என்று சொல்லி ராஜ பக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்தது இதே சுஷ்மா சுவராஜ்தானே!

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு அரசு - ஒரு நாடு இந்தியாவிற்கான நட்பு நாடு என்று சொல்ல எப்படி மனம் வருகிறது?

தமிழர்களை மறந்து விடுங்கள் - மனித உரிமைக் கண்ணோட்டத்திலாவது இதனை அணுக வேண்டாமா?

மனித உரிமைகள் ஒரு நாட்டில் பறிக்கப் படுமேயானால், இனப்படுகொலை (Genocide) ஒரு நாட்டில் நடைபெறுமானால், அதில் தலையிட மற்ற நாடுகளுக்கு உரிமை உண்டு என்ற நியதிகூட பிஜேபிக்குத் தெரிய வில்லையா?

இங்குள்ள சோ ராமசாமிக்கு என்ன பார்வையோ, அதே பார்வைதான் பிஜேபிக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்!



புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப் பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

தமிழ் ஓவியா said...


சாலையோரங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல கோயில்களும்தான்


புதுக்கோட்டை டவுனில் பிருந்தா வனம் என்றொரு பகுதி உள்ளது. வடக்கு ராஜவீதியும் தஞ்சை சாலையும் இணை யும் இந்த இடத்தில் எப்போதும் மக்கள் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்த இடத்தில் விபத்துகள் ஏதும் நடைபெறா வண்ணம் சிக்னலும் அமைக்கப்பட்டிருக் கிறது. இன்று காலை 5-மணியளவில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்றும் புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சை சாலையை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் பிருந்தாவனம் முக்கத்தில் அதிவிரைவாக மோதிக் கொள்ள நேர்ந்தது. அதில் இரு லாரிகளின் ஓட்டுனர்களும் தங்களையும் தங்களது வாகனங்களையும் காப்பாற்ற திருப்பியும் விபத்துக்கு உள்ளானது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் ஒரு லாரியின் ஓட்டுநர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச் சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.

உடைந்து நொறுங்கியது அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்ச நேயர் கோயில்தான். பக்தர்களாலும் ஆன்மீகப் பெரியோர்களாலும் ஆஞ்ச நேயரை அவர் ராம பக்தராக இருக்கின்ற காரணத்தாலும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதாலும் ஆஞ்ச நேயருக்கு மிகப் பெரிய வலிமை இருக் கிறது என்றும் வல்லமை பொருந்திய அவரை வணங்கினால் அவருக்கு உரிய சக்தியைத் தம் பக்தர்களுக்கு அருளி பாலித்து வழங்கி விடுவார் என்றும் கற்பிக்கப் பட்டு ஆங்காங்கே அதிக எண்ணிக்கையில் கட்டப் பட்டு வரும் ஆஞ்சநேயரின் சக்தி அவரது இருப் பிடத்தைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது.

அந்த இடத்தில் விளக்குத்தூண் மட்டும் இல்லாதிருந்தால் அருகில் உள்ள கட்டடம் எப்படி உடைந்து சேதாரமாகி இருக்கும் என்பதைக் கற்பனையும் செய்ய இயலாத அளவிற்கு அந்த விபத்து நடந் திருக்கிறது. கோயில் உடைந்து நொறுங்கி விட்டது. இதுதான் ஆஞ்சநேயரின் பலம் என்பதை பக்தர்கள் உணரும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழரின் அடிமை விலங்கொடிக்கும் நாளாக இருக்கும். மேலும் சாலையோரங்களில இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல இது போன்ற பக்திப் போதையை வளர்க்கும் கோயில்களும் தான்.

ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிறப்புரிமை


வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக் கும் டாக்டர் மூஞ்சே அவர்களுக்கும் வங்காளத் திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை மேற்படி இரு கனவான் களும் வீரர்களைப் போல் மீறி நடந்தார்கள். அம்மீறுத லானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தே சித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம்.

அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக்கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி.ரங்காச் சாரியார் முதலிய பார்ப்பனர்கள் அரசப் பிரதிநிதி யிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வருகிறது.

ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்றுவதற்கு மற்றொரு புறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்குப் பிறப்புரிமை என்பது இதனால் விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவதான மசோதவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப் பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக்குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டுமென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப் பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்து நமது டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார்.

அதாவது:-

இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்துமத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசியல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் உள்பட காங்கிரஸ் காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில் காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும்.

ஆதலால் சட்டசபையிலுள்ள சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தவர்கள் கண்டிப்பாய் இது விஷயத்தில் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். அரசியலில் வேற்றுமை இருந்தாலும் சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய் நான் ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்.

அதாவது, வெளியிடப்பட்டிருக்கும் இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனரல்லாதாரும் முழு மனதுடன் ஆதரிக்கிறார்கள். மசோதாவுக்கு விரோதமாய் செய்யப்படும் கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால் நடத்தப்படும் பொய்க் கிளர்ச்சியாகும். இது விஷயமாய் அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கவும் தயாராயிருக்கிறேன் என்று பார்ப்ப னருக்கும் அரசாங்கத்திற்கும் தந்தி கொடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு மேல் ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதை நாம் முழு மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய் ஆதரிக்கவும் செய் கிறோம். இப்பார்ப்பனர்களின் கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத் தீவிர தேசியவாதிகளை ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திரமல்லாமல் சர்க்காரோடும் ஒத்துழைக்கச் செய்கிறது.

இனியும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் கொடுமையும் வெளியாக வெளியாக இன்னமும் என்னென்ன செய்யச் சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான் அறிவாள்.

- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?


பேராசிரியர், முனைவர் பு.இரா சதுரை எம்.ஏ.பிஎச்.டி., அவர்களின் நூலில் (இரண்டாம் பதிப்பு 77 ஆம் பக்கத்தில் இருப்பது)
என்றும் போரே எதிலும் வெற்றியே!

1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வாங்கினார்கள். தான் நிலைநாட்டிய வகுப்புரிமைக்கு அரசியல் சட்டத்தின் பேரால் தீங்கு வந்தபோது பெரியார் பொங்கி எழுந்தார்.

எதற்கும் துணிந்து விட்டோம்;

எதிரிகள் முட்டுக்கட்டை கண்டு கவலையுறோம்;

நம் நாட்டின் வசதிகளில் நமக்குரிய பங்கைக் கேட்பதை யாரும் அநீதி என்று கூறவி யலாது;

எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்பத்திற்கு இந்த வகுப்புப் பிரச்சினையே காரணம்;

நமது உண்மைத் தகுதிக் கும், திறமைக்கும் எந்தப் பார்ப்பானும் ஈடாக மாட்டான் என்று கூறிப் போர் தொடுத் தார். ஊர்தோறும் வகுப்புரிமைப் போர் முரசொலித்துப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

விருதுநகர் செந்திற்குமார் நாடார் கல்லூரியில் 1950இல் இதற்கான போராட்டத்தை நடத்தியவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர்.

- க.பழனிசாமி

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்! (ஆவணக் குறிப்புகளிலிருந்து)

விடுதலை பவள (75-ஆம் ஆண்டு வெளி யீட்டில், 90ஆம் பக்கத்தில் இருப்பது)



சில உறுதியான உண்மைகள்

தாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து அர சாங்கத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வடார்க்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணி யிடங்கள் எல்லாச் ஜாதியார்க்கும் அளிக்கப்பட வில்லை என்று தாங்கள் தங்கள் பத்திரிகையில் ஆசிரிய உரை எழுதியும் வேறு பல கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி இருந்தும் நிலைமை மாறவில்லை என்பது குறித்துத் தாங்கள் பத்திரிகையில் எழுத இடம் அளிக்க வேண்டுகிறேன்.

நிலைமை சீரடையவில்லை என்பது மட்டுமின்றி இன்னும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அடியிற் கண்டவற்றிலிருந்து அறியலாம்.

1. மாவட்டத்தின் 5 டிவிஷன்களிலும், ஹூசூர் கருவூலத்திலும் ஆறு டெபுடி கலெக்டர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.

2. ஹூசூர் சிரஸ்தார் ஒரு பிராமணரே.

3. மொத்தமுள்ள ஏழு தாசில்தார்களும் பிராமணர்களே.

4. மொத்தமுள்ள பதினைந்து டெபுடி தாசில்தார்களில் பத்துப்பேர் பிராமணர்களே.

5. மொத்தமுள்ள நான்கு தலைமைக் கணக்கர்களும் பிராமணர்களே.

6. மொத்தமுள்ள 39 வருவாய் ஆய்வாளர்களில் (Revenue Inspector) 30 பேர் பிராமணர்களே.

7. கோட்ட (டிவிஷனல்) அலுவலகங்களில் உள்ள அய்ந்து தலைமை எழுத்தர்களில் மூவர் பிராமணர்களே.

8. செட்டில்மெண்ட் பணி பார்க்கும் அலுவ லர்களில் மொத்தமுள்ள அய்ந்து துணைத் தாசில்தார்களும் இருபது வருவாய் ஆய்வாளர்களில் பதினைந்து ஆய்வாளர்களும் பிராமணர்களே.

தமிழ் ஓவியா said...


மாக்கடலாய் மதுக்கூரில் எழுவீர்! எழுவீர்!!


மதுக்கூர் என்றால் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் தான் நினைவிற்கு வருவார்.

நாகை இரயில்வே பணிமனையில் பணியாற்றியதால் அவர் நாகை காளியப்பன் ஆனார்.

அய்யாவின் நம்பிக்கைக்கு உரிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர் மலேசியாவுக்கு தந்தை பெரியார் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு, குடிஅரசு இதழுக்குச் சந்தாக்களை அங்கு திரட்டினார்.

அவருடைய நூற்றாண்டு விழாவை கழகம், மதுக்கூரில் சீரும் சிறப்புமாக நடத்தியது.

அதே மதுக்கூரில் நாளை மறுநாள் (10.6.2013) வட்டார மாநாடு நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் தன்மான முரசறைய உள்ளார்.

திண்டுக்கல் பொதுக் குழுவுக்குமுன் நடைபெறும் மாநாடு இது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மாநாட்டில் இன்றைய பிரச்சினைகள் குறித்து கழகத்தின் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் கருத்து வாள்களைச் சுழற்ற இருக்கின்றனர்.

ராஜபாளையம் மாநாட்டில் கழகம் அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியும், தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நீர் சிக்கல் குறித்தும், தமிழர்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று புராணம் புளுகும் ராமன் பெயரால் முடக்கப்படும் அநீதி குறித்தும், பற்றி எரியும் ஈழம் பற்றியும் கருத்துக்களம் சூடு பறக்க உள்ளது.

தமிழ்நாட்டில் கழகப் பேரணி எங்கு நடந்தாலும் அதில் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றக் கூடிய அத்திவெட்டி தோழர்கள் அங்குதானே இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்பொழுது மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிபற்றிக் கேட்கவா வேண்டும்?

கழகம் என்றால் இளைஞர்களின் சங்கமம் என்பதை ராஜபாளையம், ராஜபாட்டையில் நடத்திக் காட்டியது.

பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் இளைஞர் பட்டாளம் இருக்கவே இருக்கிறது. அவர்களின் கைத்திறனைக் காணப்போகிறோம்.

தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர இருக்கிறார்கள்.

அலை அலையாக மாநாடுகளை நடத்திக் கொண்டி ருக்கும் உயிர்ப்புள்ள இயக்கமாக (டுஎந றுசைந) திராவிடர் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்ட நாளை, போர்த் தலை வர் தமிழர் தலைவர் ராஜபாளை யம் மாநில இளைஞரணி மாநாட் டில் அறிவித்துவிட்டார். அறி வித்த அந்த சில மணித் துளி களுக்குள் ரத்தக் கையொப்ப மிட்டு ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் போராட்டக் களத்திலே குதிக்கப் பட்டியலைக் கொடுத்து விட்டனர். எந்த இயக்கத்தில் இப்படி நடக்கும் - எதிர்பார்க்கத் தான் முடியும்?

மதுக்கூர் மாநாட்டிலே பெரும் எண்ணிக்கையில் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

தமிழர்கள் இன்னும் நாலாஞ் ஜாதிகளா? தந்தை பெரியாரின் சகாப்தத்திலும் இன்னும் நாம் சூத்திரர்களா?

உங்களைச் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கவில்லையா?

தந்தை பெரியார் நாட்டுக்கு விட்டுச்சென்ற சொத்துக் களிலேயே விலை மதிக்க முடியாத பெருஞ்செல்வம் நமது தலைவர் - தமிழர் தலைவராக வையத்தில் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் அவர்களின் காலத்திலே சூத்திர இழிவை ஒழிப்போம்! ஒழிப்போம்!!

தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் பெயர் கொடுத்ததற்கு அதுதான் காரணம்.

அந்த இழிவு என்பது தமிழன் வீதிகளிலே தமிழன் கட்டிய கோவில்களின் கருவறைக்குள்ளே ஆணவமாக அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரிலே நாம் தோற்கக் கூடாது - தோற்கவும் மாட்டோம்.

சட்டம் ஒரு பக்கம் சவாரி செய்யட்டும் - மக்கள் மத்தியிலே நாம் ஏற்றும் சூடுதான் - நாம் எழுப்பும் உணர்ச்சி எரிமலைதான் நம்மைச் சூழ்ந்துள்ள இன இழிவை - சூத்திர இழிவைச் சுட்டெரிக்க முடியும்.

ஆங்காங்கே நாம் நடத்திக் கொண்டுவரும் மாநாடு கள், அதற்கான ஒத்திகைதான் - போடும் அஸ்திவாரம்தான்.

மதுக்கூர் மாநாடு மகத்தானதாக அமையட்டும்!

மான மீட்க, தமிழர்களே மதுக்கூர் நோக்கி மாக்கடலாய்ப் பொங்கி எழுவீர்! எழுவீர்!!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...

ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்



- அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்

கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? - சுகி சிவம்

புதிய விளக்கம்:

சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைக்கமாட்டார்கள். வீட்டிலேயே பொங்கல் வைத்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.

கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. மற்ற நேர்த்திக்கடன் எல்லாம் கோவில் சொத்தாகிவிடும். பொங்கல் நேர்த்திக்கடன், முழுவதும் தங்கள் சொத்தாகி விடும். இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்கிறார்களே தவிர, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதுபோல உப்புப் பொங்கல் வைப்பதில்லை. அதனால், கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பவர்கள் அனைவருமே இனிப்பு விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.

வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடந்தால் அம்மா சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுபோல் கடவுள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வராதது இருக்கட்டும். தாய் குழந்தைக்கு அன்போடு ஊட்டிவிடுகிறாளே, அதுபோல கடவுள் வந்து பக்தர்களுக்கு ஊட்டிவிடலாம் அல்லவா?

குழந்தை அளைந்து கெடுத்த உணவைத் தாய் சாப்பிடுகிறாள். சில கோயில்களில் பொங்கல் பிரசாதத்தை எல்லாம் குப்பையில் கொட்டப் பார்த்திருக்கிறேன். அதையாவது சாப்பிட வரலாம் அல்லவா?

கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதானே. அப்படி ஒரு சக்தி எங்கும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆன்மீகவாதிகள் கதை அளப்பதெல்லாம் பக்தர்களை மூளைச் சலவை செய்வதற் காகவே தவிர, வேறு காரணம் இல்லை.

தமிழ் ஓவியா said...

குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்

பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் குழந்தைத் திருமணங்கள் வினோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள நம்மியம்பட்டு, ஜமுனாமாத்தூர் கிராமங்களில்.

வயதுக்கு வந்த (12-15 வயது) பெண்கள் மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு நம்மியம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் சந்தையிலும், திங்கட்கிழமை ஜமுனாமாத்தூரில் நடைபெறும் சந்தையிலும் கூடுகிறார்கள். அப்போது 16லிருந்து 20 வயதுக்குள் இருக்கும் ஆண் பிள்ளைகள் வர, அவர்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்பு, இருவரும் சேர்ந்து பையனின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இருவரும் ஒன்றாக - கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்களாம். இல்லையென்றால், அந்தப் பெண் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாளாம்.

வாழ்க்கையைத் தொடர விரும்பினால், திருமணம் செய்து வைப்பதற்கும் விரும்பவில்லை என்றால் பிரித்து வைப்பதற்கும் 14 வயது நிரம்பிய தலைவர் செத்தியராஜ் இருக்கிறார்.

தாத்தாவுக்குப் பின் பேரன் நாட்டாரா வர வேண்டும் என்று 9 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு செத்தியராஜ்க்கும் நாட்டாரா பட்டம் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மக்களில் யார் திருமணம் செய்தாலும் இந்த நாட்டாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, இவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை தாலி கட்டுவாராம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு என்று வந்தால் பிரித்து வைத்துவிடுவாராம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொடுப்பார்களாம்.

இதனால் கைக்குழந்தைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் இளம் விதவை களும் அதிகம் காணப்படுகின்றனர். சிறு வயதி லேயே திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைவதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இது நடப்பது மிகவும் தலைக் குனிவானது அல்லவா? ஆண்டாண்டு கால வழக்கம் என்றும்,கடவுள் கட்டளை என்றும் சொல்லி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நியாயப்படுத்த முடியாது.அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது. அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

தமிழ் ஓவியா said...

இதோ...! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்


படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் திராவிட இயக்க உழைப்பின் பயனை இன்று கண்கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கூவித் திரியும் துரோகிகளுக்கும் இந்த விவரங்கள் சமர்ப்பணம். 100 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது எப்படி என்பதில் போட்டி உருவாகிவருகிறது. அந்த அளவுக்கு கல்வி ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளின் ஒப்பீடு இது.

2008 மற்றும் 2011ஆ-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது

OC பிரிவினரின் cut off மதிப்பெண் 1.5% அதிகரித்துள்ளது.

BC பிரிவினரின் cut off மதிப்பெண் 3.25%அதிகரித்துள்ளது.

BCM பிரிவினரின் cut off மதிப்பெண் 3.5% அதிகரித்துள்ளது.

MBC பிரிவினரின் cut off மதிப்பெண் 4.75%அதிகரித்துள்ளது.

SC பிரிவினரின் cut offமதிப்பெண் 6.25% அதிகரித்துள்ளது.

ST பிரிவினரின் cut off மதிப்பெண் 18% அதிகரித்துள்ளது.

35% மார்க் வாங்கிய தலித் மாணவர்கள்.... தகுதி இல்லாத மாணவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்.. திறமைக்கு மதிப்பில்லை என்றெல்லாம்.... இப்படிப் பேசுபவர்களை எல்லாம் பார்த்தா காறித் துப்பனும் போல இருக்கு - இந்த கட்_ஆஃப் லிஸ்ட் பாத்ததும்!!!

(கட்_ஆஃப் என்றால் இந்த மதிப்-பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்று பொருள். எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஷிசி பிரிவினரில் 192.25 மதிப்-பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்தான் இடம்பெற முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இடஒதுக்-கீட்டுக்கு எதிராகப் பேசும் மே(ல்)தாவிக் கும்பல் ஏதோ வெறும் பாஸ் மார்க் மட்டும் எடுத்தவரை எல்லாம் மருத்துவராக்கி உயிருடன் விளையாடுகிறார்கள் என்று பச்சையாகப் பொய் பேசி வருகின்றனர். அதை முறியடிக்கின்றன இந்தப் புள்ளி விவர உண்மைகள்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தியபோது - பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை என்.பி. என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டுப் - பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கலைஞரின் தேவை


செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பயனாளி களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

சிந்தனை : கலைஞர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே தக்க சான்று. கலைஞரின் திட்டங்களை முடக்காமல் தொடரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

கருத்து


இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது.

-கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


கழிவறைகளில் தேவையைவிட பல மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை நம்மிடையே இல்லை. மாற்றுத் திட்டம் கண்டறியப்பட வேண்டும். விண்வெளியில் தண்ணீரற்ற முறையில் கழிவுகள் வெளியேற்றப்-படுகின்றன. நிலத்திலும் இதே போன்றதொரு திட்டம் தேவை.

- சாந்தா ஷீலா நாயர், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர்

தமிழ் ஓவியா said...

கலைஞர் - 90


இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே :

வாரியாரைத் திணறடித்த மாணவர்

திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் தெரியாதா-? என்றார்.

வாரியார்: கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்றவைகளைப் பறித்துத்தான் சாப்பிடுகிறோம். இது உயிர்க்கொலை ஆகாது. ஆட்டையும், மாட்டையும் கொலை செய்து சாப்பிடக்கூடாதென்பதற்காகத்தான் ஆண்டவன் தாவரங்களைப் படைத்தார். தளதளவென்றிருக்கும், வாழைமரத்தை வெட்டி, வாழைத்தண்டை உண்பதும், தழைத்து நிற்கும் கீரைத் தண்டைப் பிடுங்கிச் சாப்பிடு-வதும், உயிர்க்கொலை அல்லவா? நமக்குத்தான் தாவரங்களை ஆண்டவன் படைத்தார் என்றால் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்காக எவைகளைப் படைத்தார்? என்று அந்த மாணவர் கேட்டதும், வாரியார் திக்குமுக்-காடினார் _ திகைத்தார். தன் கையில் அணிந்திருந்த _ முருகா! முருகா! எனப் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தடவிக் கொண்டார். வெள்ளிக் கூஜாவில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தார்.

மேலும் தர்க்கம் நடவாமல் இருக்க, கோயில் அறங்காவலர் வடபாதிமங்கலம் மைனர் வி.எஸ். தியாகராச முதலியார் சில பிரமுகர்களை அனுப்பி அந்த மாணவரை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். 1943ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்கு-வாதத்தின் விளைவாகத் திருவாரூர் இளைஞர்-களிடையே உற்சாகமும், பெரியோர்களிடையே பரபரப்பும், தி.க. தோழர்களிடையே மேலும் நெருக்கமான தொடர்பும், ஒற்றுமையும் ஏற்படுத்திவிட்ட அந்த மாணவர்தான் இன்றைய கலைஞர் என்கிறார் டாக்டர் இரா.விஜயராகவன்.

மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற _ சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். 2004இல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் தம் பிடிக்கச் சொல்லிவிட்டு, மூச்சை நிறுத்துங்கள் என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கேன் என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம்.

சோதனை முடிந்த பிறகு, இப்போது மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் டாக்டர்.

மூச்சை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்-தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர்.

தமிழ் ஓவியா said...

மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வள்ளுவனுக்குக் கோட்டமும், சிலையும் அமைத்தவர், குறளோவியம் வரைந்தவர் குறள் நெறியில்தானே செல்வார்.

வசனத்தை மாற்றமுடியாது; நடிகையை மாற்று

குறவஞ்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். வில்லனிடம் சிக்கிய இளம்பெண், அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. இந்தக் கட்டத்தில் அவள், கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? என்று சொல்லிக் கதற வேண்டும். இளம்பெண்ணாக நடித்த நடிகை, இந்த வசனத்தைச் சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது மாற்றுங்கள் என்றார் திடீரென்று.

நல்லவேளையாக அப்போது செட்டில் கலைஞர் இல்லை.நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், பயனில்லை. கடவுளைத் தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேசமாட்டேன் என்று அடியோடு மறுத்து விட்டார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பண்டரிபாய், நிலைமையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் முறையிடுவது போல்தானே தவிர, தூஷிப்பதாகாது. அந்த வசனத்தைப் பேசி நடியும்மா! என்று எவ்வளவோ சொல்லியும், அவரது அறிவுரைக்கும் அந்த நடிகை இணங்கவில்லை.

அந்த நேரம் பார்த்து, கலைஞர் எதேச்சையாக வந்து விட்டார். நிலைமையை விளக்கினோம். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க மாட்டீர்களா? என்று கலைஞர் கேட்டார்.

வேறு ஏதாவது மாற்றி எழுதுங்கள். பேசுகிறேன்! என்று கலைஞரிடமே கூறிவிட்டார் அந்த நடிகை.

என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவே தேவையில்லை. உங்களை மாற்றி வேறு யாரையாவது போட்டுக் கொள்கிறோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்! என்று கூறிவிட்டார் கலைஞர்.

இந்த நடிகையைப் போட்டு அய்யாயிரம் அடி வரை எடுத்திருக்கிறோமே...... என்று அச்சத்துடனேயே கலைஞரிடம் சொன்னேன். அந்த ஃபிலிமைக் கொளுத்திவிட்டு, இந்த காரெக்டருக்கு வேறு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். தன்னுடைய உயிரான எழுத்துகளை நம்மைவிட உயர்வாக மதிப்பவர் கலைஞர் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார் மாயூரம் சௌந்தர்.

தொகுப்பு : சபீதா ஜோசப்
நன்றி : கலைஞர் 100 - நக்கீரன் வெளியீடு



கலைஞர் மொழி :

பிழைப்பு

வயிற்றுப் பிரச்சினையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் எனக் கருதுவது வாழ்வாகாது! அதற்குப் பெயர் பிழைப்பு! வாழ்க்கை அல்ல!

ஆண்டவன்

புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவனுக்குப் பெயர்தான் ஆண்டவன் என்றால்.....
ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவனா?


அனுதாபம்

ஒருவன் சாணத்தை எடுத்து நம்மீது வீசுகிறான். அது நமது சட்டையில் படுகிறது.
அப்போது நமக்கு ஏற்பட வேண்டியது ஆத்திரமல்ல. அதற்குப் பதிலாக சாணம் வீசியவன் தன் கையையல்லவா கறைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அனுதாபம்தான் ஏற்பட வேண்டும்.
இழிமொழிக்கு இழிமொழி எதிர்த்துக் கூறிவிடுவது சுலபம்! அதைத் தாங்கிக் கொள்வதுதான் கடினம்!
அந்தக் கடினமான வேலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


புகழ்

புகழே! நீ பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய், புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை! புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்!

தகுதி

மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளிலேயிருந்து அவர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஞாயிறு, 09 ஜூன் 2013 14:43
E-mail Print

காவிக் கொண்டாட்டம்

செய்தி: குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக் கக்கோரி நாடு முழுவதும் யாத்திரை செய்யப் போகிறேன். - யோகா குரு ராம்தேவ்

சிந்தனை: காவிகளும், பணத் திமிங்கலங் களும் கொடுக்க வேண்டாமா ஆதரவு? சும்மா ஆடுமா சோழியன் குடுமி?

தமிழ் ஓவியா said...


தினமலரே கூறுகிறது திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...!


திருப்பதி, ஜூன் 9- திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.

திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு காவல்துறை பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 காவலர்கள் உண்டு.

ஆனால், தினசரி, 200 காவலர்கள் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 காவல்துறையினரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 காவல்துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவத்தை சேர்ந்த, "ஆக்டோபஸ்' என்ற படைப்பிரிவு, விஜிலென்ஸ், சிறப்பு காவல் படை, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் வரும் போது, காட்டு பகுதியில் சென்று சோதனை செய்ய தனிப்பிரிவு என, திருமலையில், பாதுகாப்பு பணியில் போதிய அளவில், ஆட்கள் உள்ளனர்.

எனினும், திருட்டு, குழந்தைகள் கடத்தல், பெரியவர்களே காணாமல் போவது போன்ற சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், டவுன் - 1 காவல் நிலையத்தில், 300 வழக்குகளும், டவுன் - 2 காவல் நிலையத்தில், 243 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திருமலையில் கூட்ட நெரிசல் சமயத்தில், தங்குவதற்கு வாடகை அறைகள் கிடைக்காததால், வெளியிடங்களில் பக்தர்கள் உறங்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், அதிகமாக நடக்கிறது. பெற்றோரும், உறவினர்களும் புகார் அளித்தாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு வேளையில், பெற்றோர் அருகில் உறங்கும் குழந்தைகளையும், கூட்ட நெரிசல் சமயத்தில், காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க, பாதுகாப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, திருமலையில் காணாமல் போன சென்னையை சேர்ந்த, மூன்று வயது சிறுவன் பிரத்யுத்தை, இன்று வரை கண்டுபிடிக்க வில்லை. மூன்று நாட்களுக்கு முன், நடைபாதை வழியில் காணாமல் போன, அய்ந்து வயது சிறுமி ரோஷினியை கடத்திச் சென்றவன் குறித்த, புகைப்பட தகவல் கிடைத்தும், காவல்துறையினர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

திருமலைக்கு வரும், முக்கிய பிரமுகர்களின் தரிசன ஏற்பாட்டையும், அவர் களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வசதிகளையும் கவனிக்கவே, காவல்துறையினருக்கு நேரம் போதவில்லை. இதனால், பக்தர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள், ரொக்க பணம் திருடு போவது அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து, உறவினர்கள் தகவல் அளித்த உடனே, தேடியிருந்தால், பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

ஆனால், காவல்துறை யினரிடம் புகார் அளிக்க சென்றால், "உங்களால் முடிந்தவரை தேடி பாருங்கள்; கிடைக்கவில்லை என்றால், அப்போது புகார் அளிக்க வாருங்கள்' என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி விடுகின்றனர்.

திருமலை முழுவதும், 2,000 கண்காணிப்பு கேமராக்களை தேவஸ்தானம் பொருத்தி உள்ளது. ஆனால், அதிக திருட்டு சம்பவங்கள் நடைபெறும், முடி காணிக்கை அளிக்கும், "கல்யாண கட்டா' பகுதி, சப்தகிரி வாடகை அறைகள் உள்ள பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

ஒரு சில இடங்களில் இருந்த போதும், அது சரியாக இயங்காத நிலையிலேயே இருக்கும். திருமலையில், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை, ஜி.எம். ஆர்., குழுமம் பராமரித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஜி.எம்.ஆர்., குழுமம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல், தேவஸ்தான நிர்வாகம் அமைதி காக்கிறது.

திருமலையில் காணாமல் போனவர்கள் பற்றி புகார் கிடைத்தவுடன், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க, ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்தவர் அளிக்கும் ஆதாரத்தின் அடிப் படையில் செயல்பட்டால், சுலபமாக இதற்கு ஒரு வழி பிறக்கும். தேவஸ்தான நிர்வாகம், இதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நேர்த்திக் கடன் செலுத்த கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்! கணவன் கண் முன் மனைவி, மாமனார் பலி



துவரங்குறிச்சி, ஜூன் 9- நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு செல்லும் வழியில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கணவன் கண் முன்னே மனைவி, மாமனார் பரிதாபமாக பலியாயினர்.

திருச்சி மாவட்டம், சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி, 32. இவர்களுக்கு, போதும் பொன்னு என்ற, 2 வயது மகள் உள்ளார். முத்துலட்சுமியின் அப்பா, மலையாண்டி, 50. இவர்கள் குடும்பத்துடன், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த, நேற்று காலை, 8:30 மணிக்கு புறப்பட்டனர்.

மலையாண்டி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய மூவரும், இருசக்கர வாகனத்திலும்; தங்கப்பாண்டி, இவரது தம்பி பொன்னுசாமி ஆகியோர், வேறொரு இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.

திருச்சி புறவழிச் சாலை, வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே, மதுரையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற, டவேரா' கார் படுவேகமாக, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மலையாண்டி, முத்துலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கண் முன்னே மனைவியும், மாமனாரும் இறந்ததால், தங்கபாண்டி அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். 108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், இருவரது உடல்கள், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் வேலு (40), என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ் ஓவியா said...


வாஸ்துவமானதா வாஸ்து?


ஏடுளில் ஒரு செய்தி. அது கருநாடக மாநிலத் திலிருந்து வெளிவந்த ஒன்று.

கருநாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கக் கூடியவர் ரமாநாத்ராய்.

கருநாடகத்தில் உள்ள புகழ் பெற்ற சட்டமன்ற கட்டடமான விதான் சவுதாவில் இவருக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை வாஸ்து சாஸ்திரப்படி சரியில்லை என்று எவனோ ஒரு கிறுக்கன் அளந்துவிட, அமைச்சர் ஆடிப் போய் விட்டார். தனது அறைக்கு அடுத்த அறைக்கும் இடையே உள்ள சுவரை இடிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி இடிக்கவும்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கட்டடத்தில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத் தியது.

பிரச்சினையை பிஜேபி கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அமைச்சர் ஏதோ சமாளித்து பதில் சொல்லிக் கொண்டுள்ளார்.

இவ்வளவுக்கும் முதல் அமைச்சர் சித்தராமையா இது போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்க்கக் கூடியவர். பதவிப் பிரமாணத்தில்கூட கடவுளை அவர் துணைக்கழைத்துக் கொள்ளாத பகுத்தறிவுவாதி.

இந்த வாஸ்துக் கிறுக்கு, படித்தவர்களுக்கிடையே கூட உண்டு; கருநாடகத்தில் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பிஜேபி - டில்லியில் என்ன செய்தது?

வாஸ்து சரியில்லை என்று டில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்டடத்தின் வாயிலேயே மாற்றி அமைக்கவில்லையா?

இதே பெங்களூருவில் பிஜேபியின் சார்பில் முதல் அமைச்சராக இருந்த பி.எஸ். எடியூரப்பா வாஸ்து கிறுக்கில் சிக்கி, தமது அறையையே மாற்றி அமைக்கவில்லையா? அதனால் கண்ட பலன் என்ன? பதவி பறி போனது மட்டுமல்ல; இலஞ்சப் பேர் வழி என்ற பட்டம்தானே நிலைத்தது? வாஸ்து பார்த்து தலைமைச் செயலகத்தில் நுழைவு வாயிலை வேறு திசையில் அமைத்தாரே என்.டி. ராமராவ் - அவர் பதவி நாற்காலியை அவருடைய மருமகனே பறித்துக் கொண்டு விடவில்லையா? அப்பொழுது வாஸ்து எங்கே போனதாம்?

வாஸ்துப்படிதானே கோயில்கள் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டன. அய்யப்பன் கோயில் தீப்பற்றி எரிந்ததே ஏன்? சீரங்கம் ரெங்கநாதன் தீயில் சிக்கி வெடித்துச் சிதறியது மறந்து போய் விட்டதா?

காளகஸ்தி கோயில் கோபுரம் விழுந்தது - ஏன்? கலசம் தூள் தூளாக நொறுங்கியது ஏன்?

யார் இந்த வாஸ்து? அதுபற்றிய புராணக் கதையை கேட்டால், கூவம் கூட தூக்கு மாட்டிக் கொள்ளுமே!


தமிழ் ஓவியா said...

ஒரு முறை அண்டகாசுரன் என்னும் அசுரனுக்கும், சிவபெருமானுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டுகளாகக் கடும் போர் நடந்ததாம். சளைக்காமல் இருவரும் சண்டை போட்டார்களாம். சிவன் உடலிலிருந்து வியர்வை வெள்ளமாக ஓடியதாம். சிவன் வழித்து எறிந்தானாம். அது பூமியில் விழுந்த தாம் - பூமிதான் பூமா தேவியாயிற்றே - இரண்டும் ஒன்று கலந்தனவாம். அதில் பிறந்தவன் தான் வாஸ்து புருஷனாம்.

இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறக்கும்.

உடல் மயிரிலும், கொட்டாவியிலும்கூட ரிஷிகள் பிறப்பார்கள்! வெட்கக் கேடு!

இந்த யோக்கியதையில் இந்த வாஸ்து புருஷன் வீடு கட்டும் காலிமனையில் அந்தந்த மாதத்துக்குரிய இராசியில் காலை நீட்டி, அதற்கு எதிரான ஏழாவது இராசியில் தலை வைத்தும்; இடக்கை கீழும், வலக்கை மேலுமாகப் படுத்துக் கிடப்பானாம்.

எப்பொழுது பள்ளி எழுவான் இவன்?: படுத்து கிடந்த வாஸ்து புருஷன் எப்பொழுது எப்பொழுது படுக்கை விட்டு எழுந்திருப்பான்? அந்தப் பள்ளி எழும் பாங்கினையும் வாஸ்து சாஸ்திரம் விளம்புகிறதே! வாஸ்து புருஷன் கீழ்க்கண்ட தேதிகளில் குறிப்பிட்ட நாழிகையில் எழுந்திருப்பானாம்.

மாதம் தேதி நாழிகை
சித்திரை 10 5ஆவது
வைகாசி 21 8ஆவது
ஆடி, அய்ப்பசி 11 2ஆவது
ஆவணி 6 1ஆவது
கார்த்திகை 8 10ஆவது
தை 12 8ஆவது
மாசி 20 8ஆவது

எஞ்சியுள்ள ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் எல்லாம், எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! என்று பூபாள ராகத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடினாலும் வாஸ்து புருஷன் எழுந்திரான் போலிருக்கிறது! அன்றாட அலுவல் திட்டம்: இவ்வண்ணம் வாஸ்து புருஷன் குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட நாழிகையில் எழுந்ததும், தன் காலைக் கடன்கள் உள்ளிட்ட அன்றாட அலுவல் திட்டங்களை வகுத்துக் கொண்டு அவ்வண்ணமே பணிபுரிவானாம்! அதனையும் பார்ப்போமா?

தமிழ் ஓவியா said...

3 3/4 நாழிகை விழித்திருப்பானாம்! இதில் முதல் 3/4 நாழிகையில் குளிப்பானாம்! இரண்டாவது 3/4 நாழிகையில் பூசை செய்வானாம்! மூன்றாவது 3/4 நாழிகையில் சாப்பிடுவானாம்! நான்காவது 3/4 நாழிகையில் தாம்பூலம் போடுவானாம்! (பான்பராக் இருந்திருந்தால் அதனையும் போட்டுக் கொள் வானோ?) அய்ந்தாவது 3/4 நாழிகையில் அரச பரிபாலனம் செய்வானாம்! பிறகு? மீண்டும் பழையடி ஜோர் ஆகப்படுத்து உறங்கி விடுவான்!

ஆகாதய்யா! ஆகாது! வாஸ்து புருஷன் படுத்துக்கிடக்கையில், கால் இருக்கும் பகுதியில் வாசல்கால் விட்டால் மனைவிக்குப் பொல்லாங்கு! தலையில் விட்டால் கணவனுக்கு ஆகாது! முதுகில் விட்டால் அரசால் பயம்! வயிற்றில் வாசல்கால் விட்டால் நல்வாழ்வு! இவ்வாறு வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. என்னே கண்டுபிடிப்பு!

மாதம் ஓர் இராசியில் தலை வைத்தும் அதற்கு 7ஆம் இராசியில் காலை நீட்டியும் வாஸ்து புருஷன் படுத்துக்கிடக்கும் நிலையறிந்து மனை கோலாவிட்டால் வீட்டுக்குரிய தலைவனும், மனைவியும் வீட்டைத் தொடங்கி வைத்த சிற்பியும் இறந்து போய் விடுவார்கள்! என்கிறது வாஸ்து சாஸ்திரம்! முற்றிலும் மூடநம்பிக்கை அடிப்படையில், அமைந்த இந்த வாஸ்து புருஷனின் கிடக்கை, இருக்கை, எழுகை, இவற்றிற்கேற்ப வீட்டுமனை கோலுதல், வாசல் வைத்தல் முதலான செயல்கள் பகுத்தறிவுக் கும், கட்டடக் கலைக்கும் சற்றும் தொடர்பற்றவை யாகும்.

கற்பனைக் கதாநாயகன்! வாஸ்து புருஷன் என்பதே ஒரு கட்டுக்கதை! வாஸ்து புருஷன், எப்போது எப்போது எழுவான்? எப்போது விழிப்பான்? எப்போது பல் துலக்குவான்? எப்போது சாப்பிடுவான்? எப்போது பூசை பண்ணுவான்? எப்போது வெற்றிலைப் பாக்கு போடுவான்? என்பனவற்றையெல்லாம் படித்துப் பார்க்கும் போது இப்படிப்பட்ட வாஸ்து புருஷனை, உண்மையில் இருக்கிறான் என நம்பி, வீடு கட்டத் தொடங்கு வதைப் போல கொடுமை! மடமை! வேறு உண்டா?

அச்சுறுத்துவதா? வாஸ்து புருஷனின் நிலையறிந்து, இயலறிந்து, செயலறிந்து மனை கோலாவிட்டால் வீட்டுக்காரன், அவன் மனைவி, இவர்களோடு பாவம், மனைக்கோலும் சிற்பியும் செத்துப் போவார்கள் என்று அச்சுறுத்தும் அவலப் போக்கைப்பற்றி என்ன சொல்ல? எப்படிச் சொல்ல?

இதைவிட முட்டாள்தனமாக எந்த மதத்திலா வது உளறத்தான் முடியுமா? (நூல்: வாஸ்து அறியலையா? - பேரா.வெற்றியழகன்)

ஏற்கெனவே அவன் பைத்தியம், அவன் சாராயம் குடித்திருந்த நேரத்தில், தேள் கொட் டினால் எப்படி எல்லாம் உளறுவான் என்ற தந்தை பெரியார் கூறியதுதான் இந்த இடத்திற்குப் பொருத்தமானது.

பொறியியல் பட்டம் பெற்ற கிறுக்கர்கள்கூட வாஸ்து பார்க்கிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி. வாஸ்து சாத்திரத்தில் கழி வறைக்கு (Toilet) இடம் உண்டா! கட்டடக் கலைபற்றிய வரலாற்றைப் படிப்பவர் கள் பழங்காலத்தில் வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று இருந்தது. கட்டடம் கட்டுவோர் சிலர், அதனைப் பின்பற்றி கட்டடங்களை எழுப்பினர் என்ற அளவுக்கு அறிந்து கொள்ளலாமே தவிர, வாஸ்து சாஸ்திரத்தை இன்னும் பின்பற்றுவதும் அதனடிப்படையில் இருக்கின்ற கட்டடத்தை இடித்து தகர்த்துப் புதிதாகக் கட்டுவதும் அறிவு டைமை ஆகாது

- அய்தராபாத் ஜே.என். தொழில் நுட்பப் பல்கலைக் கழக கட்டடக் கலைத்துறைப் பேராசிரியர் ஆர்.வி. கோல்ஹ் தாட்தார்.

தமிழ் ஓவியா said...


ஜெ பாராட்டு



கோவாவில் நடை பெற்ற பிஜேபியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்களின் கட்சிக்குள்ளேயே மோதல் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் - அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச் சருமான ஜெயலலிதா அவர்கள், இன்று விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; குறிப் பாக திராவிட இயக்கத்த வர்களும், மதச் சார்பற்ற தன்மையில் மதிப்புடைய வர்களும், சிறப்பாக சிறு பான்மையினரும் கவனிக் கத்தக்கதாகும்.

நரேந்திரமோடி பிஜேபி யின் பிரச்சாரக் குழுத் தலைவராகத் தேர்வு செய் யப்பட்டதற்குத் தம் வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். வெறும் வாழ்த்தோடு நிறுத்திக் கொண்டு இருந்தாலும், ஏதோ சம்பிரதாயம் என்கிற கோட்டுக்குள் அடக்கி விடலாம்.

ஆனால் அதையும் தாண்டி அவர் சிறந்த ஆட்சியாளர் - சிறந்த நிர்வாகி, குஜராத் மாநிலத் தில் நல்லாட்சி புரிகிறார் என் றெல்லாம் சகட்டு மேனிக்கு புகழ்ந்து வார்த் தைகளைக் கொட்டியுள்ளார் - இவ் வளவையும் தெரிவித்து விட்டு, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பாதுகாப்பு வளையம் தேடுவது - ஆகா, எவ்வளவு சாமர்த்தியம்!

தனிப்பட்ட கருத்து என்றால் வெறும் வாழ்த்து களோடு நின்று இருக்க வேண்டும். அதையும் தாண்டி மோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ்வது - அதுவும் அவரின் ஆட் சியை வானளாவ சிலாகிப் பது என்பது எப்படி தனிப் பட்ட கருத்தாகும்? மறை முகமாக மோடியின் இந் துத்வா ஆட்சிக்குக் கொடுக்கும் சான்று பத்திரம் தானே இது! இதனை அ.இ.அ.தி.மு.க. வில் கூட்டு வைத்துள்ள முசுலிம் பிரிவினரும் (மனித நேயக் கட்சி), இடதுசாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்களா?

பி.ஜே.பி. மோடியின் குஜராத் இனப்படு கொலையை துப்பட்டிப் போட்டு மறைப்பதற்குக் கையாளும் யுக்தி - குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்திருக்கிறார் என்பதுதான்.

அதே பாணியைத் தானே நம்மூர் ஜெயலலி தாவும் செய்திருக்கிறார்? மோடி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதற்கு இரு முறை தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா அவர்கள் சென்றதையும், ஜெயலலிதா வின் முதல் அமைச்சர் பதவிப் பிரமாணத்திற்குத் தனி அழைப்பின் பேரில் மோடி வந்து கலந்து கொண்டதையும், தனது போயஸ் தோட்டத்துக்கு மோடியை அழைத்து 40 வகைகளில் சிறப்பு விருந்து அளித்ததையும் நினைவு கொண்டால், மோடியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள் வது தனிப்பட்ட பிரச் சினையா? அதையும் தாண் டிய இந்துத்துவா உணர்வா என்பதை மக்கள்தான் எடை போட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

- மயிலாடன் 10-6-2013

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க....



நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுகாதார கேடு உடையதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ஓராண்டு தண்டனை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


அரசியல் வாழ்வு



நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ் வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத் தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!


குப்பைத் தொட்டியாகிவிட்டது ஐ.பி.எல். கிரிக்கெட், சூதாட்டக்குப் பையைக் கிளறக் கிளற அழுக்கும் துர்நாற்றமுமே வெளிவருகிறது. தரகர் கள், தொழிலதிபர்கள், சினிமாக் காரர்கள், அரசியல்வாதிகள், ஐ.பி.எல். அணி முதலாளிகள் என நீளும் தொடர்புடையோர் பட்டியல், நம் சமூகம் தொலைத்துள்ள நேர்மை, நாணயம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றின் தொகுப்பு. சூதாட்டத்தரகர் தொடர்புக் காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டவுடன், சூப்பர் கிங்ஸில் அவருக்கு முக்கிய பதவி ஏதும் கிடை யாது என்று பூசிமெழுகி என்.சீனி வாசன் வெளியிட்ட அறிக்கை, ஒழுக்கக் கேட்டின் உச்சம்.

தம் மருமகன் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருப்பினும், பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் மூன்று பேர் குழு அமைத்து விசாரிப்பேன் என்றும் என்.சீனிவாசன் சொல்வது, அதர்மத்தின் கொடுமுடி. தம் மருமகன் இத்தகைய தவறுகளில் ஈடுபட்டிருப்பார் என்று சீனிவாசன் எதிர்பார்க்காமல் இருக்கலாம். அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன் தார்மீகப் பொறுப்பேற்று தம் பதவியை ராஜினாமா செய்து, நேர்மையான விசாரணைக்கு வழி செய்திருக்க வேண்டும் சீனிவாசன். பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் பன்சால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது சமீபத்திய எடுத்துக்காட்டு.

ஐ.பி.எல்.லின் ஆரம்பமே தவறு. கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி, போட்டிகள் மூலம் வருமானமும் கண்டன, வெளிநாட்டு நிறுவனங்கள். அதை அப்படியே அடியொற்றி, ஐ.பி.எல். அணிகள் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு வீரர்கள், அந்த அணியில் இடம்பெறுவது போன்ற நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. அதுவும் வீரர்களை, ஏலத்தில் எடுப்பது போல் தேர்வு செய்யும் நடைமுறை உருவானபோதே, பணத்தாசை வேர் கொள்ளத் தொடங்கிவிட்டது. வீரர்கள் மேன்மேலும் தங்கள் இஷ்டப்படி பொரு ளீட்ட நல்ல, அல்ல வழிகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இந்தியாவிலும் சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்க வேண் டும் என்ற கோரிக்கை நம் மதிப்பீடு வீழ்ச்சிக்கு சரியான உதாரணம். இத னால் விளையாட்டில் முறைகேடுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இங்கே விளையாட்டுக்கான உத்வேகம், ஈடு பாட்டு உணர்வு ஆகியவை செத்துப் போய்விட்டன. கிரிக்கெட் மீது ரசிகர்கள் கொண்ட தீராத ஆர்வத்தை மூலதன மாக்கி, சோரம் போன அத்தனை பேர் களுமே இதில் குற்றவாளிகள். பி.சி.சி.ஐ. விஷயத்தில் அரசு தலையிடாது என்று கபில்சிபல் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மக்கள் பணமே பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். ஆகியவற்றின் முதுகெலும்பு. இவ் வமைப்புகளைக் கேள்வி கேட்க மக்கள் மன்றம் அனைத்து உரிமையும் பெற் றுள்ளது.

மக்களை ஏமாற்றும் எந்த அமைப்பும், நிறுவனமும், திட்டமும் சமூக விரோத மானதே. ஐ.பி.எல்.மக்களின் ஆர் வத்தைக் கொச்சைப்படுத்தியது: அவர்களுடைய பொன்னான நேரத்தை, பணத்தைக் கபளீகரம் செய்தது; மன வேதனையை ஏற்படுத்தியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஒழிப்பதன் மூலமே இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற முடியும்.
நன்றி: கல்கி 9.6.2013 (பக்கம் 7)

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (1)



கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழுவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியில் உள்ள கட்சிகள் என்ன கருதுகின்றன என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ளன.

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது பிஜேபி என்று காங் கிரஸ் தரப்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.

மோடியை பிஜேபி பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்க விரும்புகிறது;

அதற்கு முன்னோட்டமாகத்தான் கட்சியில் இந்தப் பதவி மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

2002இல் கோத்ரா நிகழ்வைக் காரணம் காட்டி குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதம் என்பதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான வகையில் வேட்டையாடப்பட்டனர்.

2000-த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 230 தர்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை; 4000 நான்கு சக்கர வாக னங்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் சாம்பல் குவியலாகக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3800 கோடி என்று மதிப்பிடப்பட்டது.

இந்த கலவரத்தில் மலைவாழ் மக்கள் உட்பட 12 லட்சம் பேர் களத்தில் இறக்கி விடப்பட்டனர் என்றால் அந்த உக்கிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.


குஜராத்தில் இனப் படுகொலை செய்யப்பட்டது பற்றி முதல் அமைச்சர் மோடி சொன்ன பதில் என்ன தெரியுமா?

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் தியரியை நினைவூட்டினார். ஒரு முதல் அமைச்சர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகள் தானா இவை? அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு முதல் அமைச்சர் இந்த மனப் போக்கில் இருந்தால் இந்துக்களைத் தவிர்த்த மற்ற மக்களுக்குக் குஜராத்தில் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது? வேலியே பயிரை மேய்ந்தால் பயிருக்குப் பாதுகாப்பு எங்கே? எங்கே?

கோத்ரா சம்பவத்தை நேரில் பார்த்த முதல் அமைச்சர் அந்தக் கணத்தில் எடுத்த முடிவு மிக மிக விபரீதமானது. செத்தவர்களின் உடல் சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு எடுத்துச் செல்லுவது என்ற முடிவை மாற்றி, அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆணையிட்டு, ஏற்பாடு செய்தவர் முதல் அமைச்சர் மோடி. இதன் நோக்கம் என்ன என்பது எளிதிற் புரிந்து கொள்ளத்தக்கதே.

கோத்ரா ரயில் எரிப்பை திட்டமிட்டு நடத்தினார் கள் முசுலிம்கள் என்று பரப்பி, அந்தச் சூழலில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட 56 பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்துக்களின் வெறித்தனம் இஸ்லாமியர்கள் மீது திரும்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதற்குள் இருக்கிறதா - இல்லையா? ஆக இனக் கலவரத்துக்கான விதையை அந்த இடத்திலேயே விதைத்த விஷமிதான் இந்த மோடி.

உடனே அன்றே அரசு அதிகாரிகளைக்கூட்டி நாளை மாநிலத்தில் நடக்க இருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்களை காவல் துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு போட்டவர்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுத் துறை அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் இதனை உறுதிபடுத்தியுள்ளனரே.

இந்த மோடியைப் பற்றி வேறு எவர் சொன்னதை யும்கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மோடி சார்ந்துள்ள பிஜேபியைச் சேர்ந்த சட்டப் பேரவை பெண் உறுப்பினர் ரமிலாபென் ஆன் லுக் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்று போதுமே!
ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர். பொய்களையே பிரகடனங்களாக வெளியிட்டவர் என்று கூறியதைவிடவா மோடிக்கு நற்சான்றுப் பத்திரம் தேவை?

உச்சநீதிமன்றமே இந்த மனிதருக்குக் கொடுத்த பட்டம் நீரோ மன்னன்!

இந்த நிலையில் உள்ளவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் - அதற்கு முன்னோட்டம் தான் பிஜேபி பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டு இருப்பது.

இதன் மூலம் பிஜேபி என்ற அமைப்பே பாசிசத்தின் கொடிய தாய் என்பது அம்பலமாகி விடவில்லையா?

இந்திய ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? அல்லது இனப்படுகொலை மய்யமாக்கப்பட்ட குஜராத்தாக ஆக்கப்பட வேண்டுமா? சிந்திக்க வேண்டியது இந்தியத் துணைக் கண்டத்து வெகு மக்கள்தான்!10-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி! கல்வியாளர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வர்


சென்னை, ஜூன் 10-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக் குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர் களை சந்தித்து கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்ட தாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது. இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய வற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம் செய்யும் போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ் வொரு பாடத்துக்குமான காலி இடங்கள் எண்ணிக்கை, வகுப்பு இனவாரியாக ஒதுக்கப்பட்ட பணி யிடங்களின் எண்ணிக்கை, தேர்ந் தெடுக்கும் முறை ஆகியவை குறிப் பிட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முறையான அறிவிப்பும் செய்யாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. என்சிடிஇ நெறிமுறைகளின்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடிக்கவில்லை.

இட ஒதுக்கீடு மோசடி குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, 19000 ஆசிரியர் பணி நியமனத்தின்போது, பொதுப் பிரிவின் அனைத்து இடங்களையும் முற்பட்ட ஜாதியினருக்கு தாரை வார்த்துள்ளார். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கையை குறைத்துள் ளார். இது மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி. இதை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது விசா ரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்ததை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீடுபடி மதிப்பெண்கள் நிர்ணயித்து புதிய பட்டியல் தயாரித்து 35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதை அரசு செய்யாவிட் டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்.

இவ்வாறு பேராசிரியர்கள் தெரி வித்தனர்.

தமிழ் ஓவியா said...


நோயின்றி நாம் வாழ...


இயற்கை நமக்களிக்கும்
இனிமையான பிறப்பு
புன்னகை பூத்து - இன்முகம்
சிவக்க அரியதோர் வாய்ப்பு
அழுகை ஒலியுடன் அகிலத்தில்
அடிவைத்து அரவணைக்கும்
தாயிடம் - கண்டதோ
ஆனந்தக் களிப்பு

இந்த ஆனந்தக்களிப்பு - நம் வாழ்வில் தொடர நோயின்றி இவ்வுலகில் நாம் வாழ வேண்டும். நோயின்றி மனிதன் தன் வாழ்நாளில் வாழ முடியுமா? இது இன்றைய நவீன வாழ்க்கையில் ஓர் ஆச்சரியக் கேள்விக்குறி? ஏனென்றால் நம் மனமானது.

நோயுடனே வாழ்வதற்கு தன்னைத்தயார்படுத்திக் கொண்டு விட்டது என்று தான் நினைக்க வேண்டி உள்ளது. இயற்கை நமக்களித்த அய்ந்து உயிர் இயக்க சக்திகளான மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் எனக்கூறி அதன்மீது ஓர் மாயை என்னும் பய உணர்வை ஏற்படுத்தி இந்த அய்ந்து உயிர் சக்திகளையும், உயிர்களைக் கொல்லும் உயர் சக்தி என்று பயப்பட்டு, படாதபாடுபட்டு, நல்லதோர் மானிடனை மனித நேயமற்று நமக்குள்ளே பகை உணர்வை பரப்புவதிலே குறியாக செயல்பட்டு குதூகலம் அடைந்த ஒரு கூட்டம் செய்த சதியே இன்று நாம் அடையும், மனநோய்க்கும், உடல் நோய்க்கும், சமூக நோய்க்கும் அடிப்படை என்பதை மனித இனம் அறிவுசார் விளக்கங்கள் மூலமாக தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பெற்றதாய் நமக்கு பாலூட்டி வளர்ப்பாள் இயற்கை தாய் நம்மை நலமாக வளர்ப்பாள். நம் தந்தை நம்மை நல்வழியில் வளர்ப்பார். இருளர் நம்மை எவ்வாறு வளர்ப்பார்? இன்னுமா புரியவில்லை இயற்கையின் சிறப்பை!

மனிதன் நலமாக வாழ ஆறு அடிப்படைத் தேவைகள்

1. சிறந்த சூரிய ஒளி
2. தூய காற்று
3. சுத்தமான நீர்
4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)
5. சத்தான உணவு
6. அமைதியான தூக்கம்

இவை ஆறும் சிறப்பாக அமைந்தால் உடலும் மனமும் ஆறுதல் அடையும். இவ்வாறு சிறப்புப்பெற்றால் நோய் ஆறும் நம்மைவிட்டு அகலும், இவற்றில் நாம்தினம் குளித்தால் எவ்வாறு நோய் உண்டாகும்?

1. சிறந்த சூரிய ஒளி

நம் முன்னோர்கள் இயற்கையை ஆராய்ந்து கூறியதில், காலையில் சூரிய உதயத்தின் முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்து பின், சூரிய உதயத்தின் போது திறந்த வெளியில், சில அடிப்படை உடல் பயிற்சிகளை, காலைக்கதிரவன் ஒளிப்படச் செய்தால், பலவிதமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெளிவுபடக் கூறுகின்றன.

2. தூயக்காற்று

மனிதனின் நோயில்லா வாழ்விற்கு மிக முக்கியமான தேவை சுத்தமான பிராணவாயு, இன்று அந்த பிராண வாயுவிற்கே களங்கம் ஏற்படும் வகையில் நவீன வாகனங்களின் புகைகளும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கலப்படமான விஷ வாயுக்களும் கலந்து பூமியில் வாழும் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக முக்கிய காரணமாகிப் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாகின்றது.

3. சுத்தமான நீர்

நீரில்லையேல் இவ்வுலகே இல்லை. இவ்வுலகே இல்லையேல், இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியவில்லை. எல்லா உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமே நீர்தான் தண்ணீர் இல்லையேல் கண்ணீர் கூட தோன்றாது. எனவே ஆனந்தக் கண்ணீர் வர தண்ணீர் தேவை அடிப்படை தண்ணீர் ஆதாரங்களை நாம் அழித்தால் கண்ணீர் விட்டு அழும் காலம் வெகு விரைவில் இல்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்குவது இன்று கவுரவமாகத் தோன்றுகிறது. இன்று பாட்டில்களில் வரும் தண்ணீரே நோய்களுக்கு காரணமாகிறது என்பதை நாம் அறிந்து கொண்டு, விழிப்படைய வேண்டும்.

4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், அடியெடுத்து நாம் நடந்தால் நோய் நம்மை விட்டு அகலும்
நல்லதோர் நடைப்பயிற்சி
நோயின்றிவாழும் முயற்சி
நல்லதோர் ஓட்டப்பயிற்சி
நோய்களை ஓட்டும் முயற்சி
நல்லதோர் மனப்பழக்கம்
நோயின்றி வாழ பழக்கம்
இனியும் ஏன் தயக்கம்
இன்னும் வேண்டுமோ விளக்கம்?

5. சத்தான உணவு

சுத்தமான, சத்தான உணவு தான் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை இயற்கை உணவுகளான கீரை, காய்கறிகள், மீன், முட்டை, கலப்படமில்லா இறைச்சிகள், பயிறு வகைகள், தானியங்கள், இளநீர் போன்ற இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டால் நாம் நோயின்றி வாழலாம். செயற்கை உணவுகளைத் தவிர்த்தால் செயற்கை சுவாசம் பெற்று உயிர்வாழ கருவிகளிலிருந்து நாம் பிராண வாயு பெறாமல் இயற்கையான காற்றை சுவாசித்து இனிமையாக நோயின்றி வாழலாம்.

6. அமைதியான தூக்கம்

அமைதியான தூக்கமே அனைத்து வித
நோய்களுக்கு அருமருந்து
தூங்காத கண்கள் சோர்வடைந்து தோன்றும்
தூங்காத மனமும் நிலை தளர்ந்து போகும்.
தூக்கமில்லா வாழ்க்கை துக்கமான வாழ்க்கை
சீக்கிரம் தூங்கி விடியற்காலை எழுந்தால் புதுக்காலை
தினமும் பொலிவுடன் புலரும் புதியதாய்
சிந்தனைகள் பூக்களாய் மலரும், நோயில்லா புதுவாழ்வு
நித்தமும் நிகழும் நல்ல நித்திரை முத்திரை
பதிக்கும், அறிவார்ந்த உலகம் அனுதினம்
உதிக்கும், நோயில்லா அகிலம் விரைவில்
பிறக்கும் அனைவரும் முயன்றால்
அகிலமே சிறக்கும்.