Search This Blog

12.6.13

மோடி அணியும் மூடி!


    2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி - 56 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வன்முறை உலகில் அதற்கு முன் நடத்தப்பட்ட அதி பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெறத் தக்கதே.
    கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது - தொடக்கத்தில் விபத்து என்றே கருதப்பட்டது. ஊடகங்களும் அவ்வாறே செய்தியை வெளியிட்டன.
    விபத்து நடந்த இடத்தையும், பலியானவர்களையும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி நேரில் சென்று பார்த்த பிறகே பிரச்சினை திசை திருப்பப்பட்டது.
    பலியானவர்களை அவரவர் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வது என்ற முடிவும் மாற்றப்பட்டு அனைத்துச் சடலங்களையும் ஊர்வலமாகக் கொண்டு செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அன்று காவல்துறை அதிகாரிகளைக்கூட்டி கலவரத்துக்கான கத்தி தீட்டப்பட்டது.
    நாளை நடக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது. - தலையிடக் கூடாது என ஆணையிடுகிறார் முதல் அமைச்சர்.
    இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உளவுத்துறை அதிகாரி ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
    மோடியின் இந்துத்துவா வெறியாளர்களால் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. சி-ஹ்சான் ஜாப்ரி மனைவி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் பிரமாணப்பத்திரமாகவே (AFFIDAVIT) இதனைத் தாக்கல் செய்தார் என்பது முக்கியமாகும்.
    எந்த அளவுக்கு முதல் அமைச்சர் மோடி சென்றுள்ளார்? தெகல்கா புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டி கண்டு டேப்களை வெளியிட்டுள்ளதே!
    பல்கலைக்கழக தலைமைத் தணிக்கையாளர் திமந்பட் இதோ பேசுகிறார்.

    கோத்ரா சம்பவத்துக்குப் பிறகுதான் இந்த எதிர்வினைகள். பிறகு தகுந்த சூழல் சங்பரிவாரால் உருவாக்கப்பட்டது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பஜ்ரங்தள், துர்காவாசினி ஆகிய அமைப்புகளின் தலைவர்களால்; அதற்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் முழு ஆதரவு கிடைத்தது. இந்துக்கள் இவ்வாறாகக் கொளுத்தப்படுவதை விரும்புவதாக யாராவது தைரியம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்லட்டும். அப்படி இந்துக்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் இருந்ததால்தான் முழு ரயிலையும் எரிக்க முயன்றார்கள். இதற்குப் பின்னும் நாம் எதுவும் செய்யவில்லை யென்றால், இதற்குப் பதிலடி கொடுக்கவில்லை யென்றால் மேலும் ஒரு ரயில் எரிக்கப்படும். இந்த யோசனைதான் முதல்வர் மோடியிடமிருந்து வந்தது. நான் அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டேன் என்று பல்கலைக்கழகத்தின் தலைமைத் தணிக்கையாளர் சொல்கிறார் என்றால் - மோடி எப்படிப்பட்ட மூர்க்கர்- முரடர் - மோசமான மதவெறியர்.
    மோடி கூட்டிய கூட்டத்தில் நடந்ததை நன்கு அறிந்தவர் அமைச்சரவை சகாவான ஹரேன் பாண்டியா; மக்கள் விசாரணை ஆணையத்திடமும் நடந்தவை பற்றி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
    இவரை விட்டுவைத்தால் ஆபத்து என்று நினைக்கிறார்கள்; விளைவு, அந்த அமைச்சர் படுகொலை செய்யப்படுகிறார் - நடைப் பயணத்தில் இருந்தபோது.தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தார். ஆணையம் குறட்டைவிட்டதா, கோட்டைவிட்டதா என்பது யாருக்கோ வெளிச்சம்.
    முதல் அமைச்சர் மோடி பற்றி அவரது கட்சியைச் சேர்ந்தவர்களிடமே (பி.ஜே.பி.) பேட்டி வாங்கி வெளியிட்டது தெகல்கா.
    விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த தலைவர் - அவர் பெயர் ராஜேந்திர வியாஸ் - என்ன சொல்கிறார்? நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறாரே.
    நீங்கள் ஜெய்ராம் என்று சொன்னால் காவல்துறையினர் புரிந்து கொள்வார்கள் என்று சங்பரிவார்க்குச் கூறப்பட்டதாக தவால் ஜெயந்த் பட்டேல் (வி.எச்.பி.) கூறியுள்ளார்.
    காவல்துறையினரே எப்படியும் 70 _ 80 பேர்களைக் கொன்றிருப்பார்கள் என்கிறார் சுரேஷ் ரிச்சர்ட்.
    இன்று பஜ்ரங்தளைச் சேர்ந்த (குரங்குப் பட்டாளம் என்று பொருள்) ஹரேஷ் பட் என்ன கூறுகிறார்? மூன்று நாள்களில் அனைத்தையும் முடித்து விடுங்கள். அதற்குமேல் கால அவகாசம் கேட்காதீர்கள் என்று முதல் அமைச்சர் மோடி உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.
    இன்னொரு பஜ்ரங்தள் சொல்லியிருப்பது - அவர் பெயர் பாபுபஜ்ரங்கி _ பேசுகிறார்: கோத்ரா கலவரங்கள் நடந்தபோது எல்லாவற்றையும் கச்சிதமாக முதல் அமைச்சர் மோடி செய்து முடித்தார். முதல்வர் மோடியின் ஆசிர்வாதத்தால்தான் இவ்வளவையும் செய்து முடிக்க முடிந்தது என்கிறார்.
    குஜராத் கலவரம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?
    மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குஜராத் கலவர வீடியோ காட்சி என்னிடம் காட்டப்பட்டது. அந்தக் காட்சிதான் என்னைப் பயங்கரவாதியாக ஆக்கியது என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றால் குஜராத் குரூரம்தான் எத்தகையது! சிந்திக்க வேண்டிய ஒன்றே.
    குஜராத் கலவரத்தில் மிகவும் கொடுமையானது பேக்கரி அடுப்பில் 14 பேர்களை விறகுக் கட்டைகளைப் போல் கட்டி துடிக்கத் துடிக்கக் கொளுத்திக் குதூகலித்ததாகும்.
    வதோதரா என்ற நகரம் பெஸ்ட் பேக்கரி என்னும் நிலையம். சங்பரிவார் கும்பல் கொலைவெறி ஆட்டம் போட்டு உள்ளே புகுந்து _ பேக்கரியின் உரிமையாளர் ஹபிபுல்லா ஷேக் உட்பட 14 பேர் பேக்கரி அடுப்பில் தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
    அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் எப்படியோ தப்பிப் பிழைத்தார். காவல் நிலையம் சென்று 21 பேர் மீது புகார் கொடுத்தார்.
    பிரச்சினை பெரிதான நிலையில் பெயரளவிற்கு வழக்கைப் பதிவு செய்தனர்; நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிட உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
    முதலில் 21 பேர்களையும் விடுதலை செய்த நீதிபதி எச்.யூ.மகீதா என்பவருக்குச் சன்மானம் கொடுக்க வேண்டாமா? குஜராத் மாநில மின் வாரியத்தில் ஆலோசகர் பதவி அளித்து உபசரிக்கப்பட்டது. மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், கார், பங்களா, தொலைப்பேசி வசதிகள் - உதவியாளர்கள் இத்யாதி... இத்யாதி...
    இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி ராஜு, (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.) அரிஜித் பசாயத் குஜராத் மாநில மோடியை நீரோ மன்னன் என்று எழுதினார்கள்.
    எந்தப் பார்ப்பன ஏடும், இதற்காக மோடி பதவி விலக வேண்டும் என்று நான்கு எழுத்துகள் எழுதவில்லை.
    அத்தோடு நீதிபதிகள் விட்டார்கள் இல்லை. வரைந்து தள்ளியிருக்கிறார்கள் பத்தி பத்தியாக.
    சட்டத்தின் பார்வையில் இது விடுதலையே அல்ல; தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவையல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல.
    மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது அவர் மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப்படுத்தும் படியான அளவிற்குச் சிலர் போய்விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
    எந்தவிதப் பாதுகாப்புமற்ற தப்பான இடத்தில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டது - இந்தச் சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.
    மனிதநேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான் மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய் விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
    குஜராத் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓர வஞ்சகமும், ஒருதலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பாங்கே இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு!
    நீதி வழங்கும் நெறிமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. தான் விரும்பியபடி செய்யும் வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.
    குற்றவியல் புலனாய்வோ கடன்காரத்தனமாக ஏனோ தானோ எனச் செய்யப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற முறையிலே செயல்படவில்லை. உண்மையைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் புலனாய்வு செய்யப்படவில்லை என்றது உச்ச நீதிமன்றம்.
    _இதற்குமேல் ஒரு தீர்ப்பில் சொல்லப்பட என்ன இருக்கிறது? இதைப்பற்றி எந்தப் பத்திரிகை மூச்சுவிட்டது?
    பத்திரிகா தர்மம் பேசும் பார்ப்பனப் பத்திரிகைகளின் பசப்புகளைத் தெரிந்துகொள்ள இந்த இடம் போதுமானதே.
    குஜராத் மாநிலத்தில் வழக்கு நடத்தப்படக் கூடாது. மும்பையில் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு நிற்காமல் மோடி அரசு நியமித்த அரசு வழக்குரைஞர்களையும் அகற்றிவிட்டு வேறு இரு வழக்குரைஞர்களை (பி.ஆர்.வகீல், மஞ்சுளா) நியமித்தது.
    மொத்தம் 4,252 வழக்குகளில் குஜராத் அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டவை 2,000க்கு மேலாம். மறுபடியும் அனைத்து வழக்குகளின் மீதும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று மோடியின் முரட்டுத் தலையில் குட்டு வைத்தது உச்ச நீதிமன்றம்.
    குஜராத் மாநில எல்லைக்குள் சிக்கிய உயர் நீதிமன்றம்வரை எப்படி தன் கைக்குள் போட்டு மடக்கி வைத்திருந்தது மோடியின் குஜராத் அரசு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் பளிச் பளிச்சென்று தெரிகிறதே.
    நடோரா பாட்டியா என்னும் இடத்தில் காவிகள் கூலிகள் 58 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். காவல் நிலையம் வழக்கை எப்படிப் பதிவு செய்தது தெரியுமா?
    கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக்கின்றது என்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன?
    முதல் தகவல் அறிக்கையிலேயே தீர்ப்பும் எழுதப்பட்டுவிட்டது என்றுதானே பொருள்.
    மோடி அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் மாயாபென் கோட் நானி என்னும் பெயர் கொண்ட அமைச்சர். நரோடா பாட்டியா மாவட்டம் _ நரோடா கிராமத்தில் 106 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்தவர் இந்தப் பெண் அமைச்சர். தலைமறைவானவர் பின் சரணடைந்து சிறைவாசம் கண்டவர்.
    முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நரவேட்டையில் 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1,70,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 203 தர்காக்கள், 205 மசூதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. 3 கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களும் தப்பவில்லை. 4,000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு. காவல்துறையினர் 10 ஆயிரம் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.
    காவல்துறையினரே தங்கள் வாகனங்களிலிருந்து பெட்ரோலை எடுத்துக் கொடுத்துக் கொளுத்தச் செய்தனர் என்பது எத்தகு கொடுமை!
    3,800 கோடி ரூபாய் இழப்பு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 12 லட்சம் பேர் களத்தில் இறங்கி வன்முறை வேட்டை நாய்களாக ஆடித் தீர்த்தனர். ஒரு கணம் மனக்கண்முன் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கட்டும் - மனச்சான்று உள்ளவர்கள்.
    61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளைத் துறந்து ஓடிவிட்டனர். 70 ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் அடைக்கலம் தேடிய அவலம்.

    ஹிட்லரின் மறுபதிப்பான மோடி அச்சூழலில் - கவுரவ யாத்திரை ஒன்று மேற்கொள்கிறார். (இதில் கவுரவம் என்ன வேண்டிக் கிடக்கிறது!) அப்பொழுது அவர் திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?
    நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக்குப் பாடம் படிக்கக் கொடுக்க வேண்டும் - என்று ஒரு முதல் அமைச்சர் பேசுகிறார் என்றால், சீ... இப்படியும் சில மனிதர்களா என்று துக்கப்படத்தான் வேண்டியுள்ளது. பாபர் மசூதியை சங்பரிவார்க் கும்பல் இடித்தபோதுகூட இந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா? பி.ஜே.பி., அலிகள் கட்சியல்ல; ஆண்கள் கட்சி என்று சொன்ன சண்டியர் இவர்.
    21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலைகள் நடத்தப்பட்ட குஜராத் கலவர வழக்கில் முதல் அமைச்சர் மோடி வசமாக மாட்டுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உண்டு.
    ஆனால் என்ன நடந்தது? வழக்குக்குத் தேவைப்பட்ட ஆதாரங்கள் அத்தனையும் 2007இல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன என்று மோடி அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஆணையத்தில் அரசு சார்பாக ஆஜரான குஜராத் அரசு வழக்குரைஞர் எஸ்.பி.வகீல் தெரிவித்துள்ளார்.
    எந்த எல்லைக்கும் சென்று தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் கும்பலின் தலைவனாக மோடி இருப்பது இதன் மூலம் அம்பலமாகவில்லையா?
    பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் மோடியின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாற்று மோடி ஓர் அசிங்கமான மனிதர் என்பதற்கான ஆதாரமாகும்.
    குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
    அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமான குற்றச்சாற்றை மோடி மீது சுமத்தியுள்ளார். காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மூலம் பணம் தருவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தத் தகவலை அந்தக் காவல் துறை அதிகாரி ஸ்ரீகுமார், நானாவதி ஆணையத்திடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார் என்றால் மோடியின் மோசமான குணத்தைத் தெரிந்து கொள்ளலாம். குஜராத்தில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் வழக்குரைஞர் மேமோன் கூறினார்:- குஜராத்தில், பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல;பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் சட்டம் என்றார்.
    இன்னொன்றும் முக்கியமானது. பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்று தனிச் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். இதற்கு குஜராத் உள்துறை அமைச்சரிடமிருந்து பதில் இல்லை என்று கூறினார் அந்த மனித உரிமைக்கான வழக்குரைஞர்.
    மோடி ஆட்சியில் பொடா சட்டத்தின்படி 287 பேர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர்.
    எப்படி இருக்கிறது? படுகொலை செய்யப்பட்ட சமூகத்தவர் மீது சட்டம் பாய்கிறது; படுகொலை செய்தவர்களுக்குச் சட்டம் சரணாகதி. ஆம், இதுதான் மோடி என்னும் மூவாயிரம் மடங்கு ஹிட்லரின் புத்தியும் - சட்டத்தை மிதிக்கும் மிருகத்தனமும்.

    மோடியின் சிந்தனை எத்தகையது. கர்மயோகி என்னும் நூலை 2007ஆம் ஆண்டில் மோடி எழுதினார். அதில் என்ன கூறுகிறார்? சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்களின் வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுள்களின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகும் எனவும் கருதலாம். (THE TIMES OF INDIA 5-5-2010)
    விபரீத துண்டறிக்கைகள் - சுவரொட்டிகள்!
    ஒரு பக்கம் மோடியின் தலைமையில் அரச பயங்கரவாதம் என்ற தன்மையில் காவல்துறையின் தக்க பாதுகாப்போடு முஸ்லிம்கள் வன்முறையாளர்களால் - கூலிகளால் படுகொலை நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம் சங்பரிவார்க் கும்பலால் துண்டு வெளியீடுகளும் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டு இந்த வெறித்தனம் கொம்பு சீவி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அவுட் லுக் ஏட்டில் வந்துள்ள நடுத்தர இந்துக்கள் என்ற பெயரில் வெளியான துண்டறிக்கை இதோ:-

    அன்பார்ந்த நண்பர்களே,
    உங்கள் உயிருக்கு ஆபத்து. நீங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். கிருஷ்ணன், அர்ச்சுனனைப் பார்த்து அறிவுறுத்தினார். இந்துக்களுக்கு எதிரானவர்களை ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயங்காதே என்று.

    தீவிரவாதிகள் உங்களை எங்கு வேண்டுமானாலும், உங்கள் படுக்கை அறையிலோ, வரவேற்பறையிலோ கொல்லுவார்கள்.

    போலீசோ, இராணுவமோ உங்களைக் காப்பாற்றாது.
    இந்து _ முஸ்லிம் ஒற்றுமை என்று பேசுபவர்கள் கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றுபவர்கள். வந்தே மாதரம், பாரத் மாதாக்கீ ஜே என்று சொல்லாத மக்களை நீங்கள் எப்படி நம்புவது?

    எங்கள் முன்னோர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.

    முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டை நம்பாதவர்கள். ஒரு நாள் அவர்கள் மெஜாரிட்டியாகிவிடக் கூடும்.

    பின்லேடன் 5,000 அமெரிக்கர்களைக் கொன்றான். அமெரிக்கர்கள் 10,000 ஆப்கானியர்களைக் கொன்று சரியாகக் கணக்குத் தீர்த்துக் கொண்டனர்!

    முஸ்லிம்கள் ஏ.கே.47-களையும், ஆர்.டி.எக்ஸ்., ராக்கெட் ஏவுகணையும் வைத்துள்ளனர்.

    கோத்ரா என்பது ஒரு டிரய்லர்தான் இனிமேல்தான் முழுத் திரைப்படம் வெளிவர இருக்கிறது. முஸ்லிம்கள் நிறைய கோத்ராக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
    இஸ்லாமிய நாடுகள் அல்லாதவைகளை இஸ்லாமிய நாடுகளாக்கும் முயற்சியில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அண்மையில் கைது செய்யப்பட்ட இராம சேவக்குகள் சமூகத்திற்காக மிகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவிகள் செய்யப்படவேண்டியது அவசியமாகும்!
    விசுவ இந்துபரிஷத்திற்கு வழங்கும் 50 சதவிகிதம் வரிச் சலுகை (80G of IT Act) யைப் பயன்படுத்தி அதற்குத் தாராளமாக நன்கொடை வழங்குங்கள்.
    இப்படிக்கு,
    சினுபாய்பட்டேல்,
    நிதிப் பிரமுக், விசுவ இந்து பரிஷத்
    இந்து மதத்தில் கர்மா பலனை - அவாள் அவாள் தலையெழுத்து என்கிற ஒடுக்குமுறையை நியாயப்படுத்திப் பேசும் நீரோ மன்னன்தான் (உச்ச நீதிமன்றம் கொடுத்த பட்டம்) இந்த மோடி.
    மோடியின் இந்தக் கருத்துக்காக அந்த நூலைக் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. (11.12.2007)
    கலவரம் நடந்த ஓரிரண்டு மாதங்களில் பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட வந்தார். நிவாரண நிதியாக 150 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்தார். ஆனால், அம்மாநில உள்துறை அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?
    இதற்குமுன் 7.3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் தொகையும் தேவையில்லை என்றார். மோடி எள் என்றால் மந்திரி எண்ணெய்யாகத் தானே இருப்பார்!
    இந்த இந்துத்துவா கும்பலால், மோடிகளால் இந்தியாவின் கதை உலகெல்லாம் ஊளை நாற்றம்.
    1992இல் பாபர் மசூதியை இடித்து உலகமே காறி உமிழும் நிலை ஏற்பட்டது என்றால் 2002இல் குஜராத்தில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் மற்றொரு முறை இந்தியாவை மட்டரகமாக நினைக்கும் நிலைக்கு நெட்டித் தள்ளின.
    அய்ரோப்பிய ஒன்றியம் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. குஜராத் வன்கொடுமை ஒரு வகையான இன ஒதுக்கல் - 1930களில் ஜெர்மனியில் நடந்தவற்றிற்கு இணையானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் 15 நாடுகள் கையொப்ப மிட்டுள்ளன.
    கோத்ரா கொலைகள் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டவை - இந்துக்கள் வாழும் பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகள் அவை. கலவரத்தில் தலையிடக் கூடாதென முதல் அமைச்சர் காவல்துறையின் மேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மத்திய மாநில அரசுகள் மனிதநேய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்குத் தவறிவிட்டன. விசுவ இந்து பரிஷத் மற்றும் பிற தீவிரவாத இந்துக் கூட்டத்தினர் வன்முறைக்குக் காரணம், நட்ட ஈடு கொடுப்பதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொண்டது. முழுமையான வெளிப்படையான ஆய்வை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டு தண்டிக்க வேண்டுமென அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியம் (15 நாடுகள்) கேட்டுக்கொண்டதே!
    ஒரு மாநிலத்திற்கு முதல் அமைச்சராக இருக்கும்போதே இந்தக் கேவலம் என்றால், இந்த மோடி பிரதமர் ஆகவேண்டும் என ஒரு சதிக்கும்பல் திட்டம் தீட்டுகிறது என்றால் - இந்த மானக்கேட்டை - குரூர எண்ணத்தை என்னவென்று சொல்லுவது!.
    இன்றைக்கு நரேந்திர மோடியை பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று வெட்கமின்றி பி.ஜே.பி. வகையறாக்கள் - பேச ஆரம்பித்துள்ளனரே. இதே பி.ஜே.பி. தலைவர்கள் குஜராத் படுகொலையின்போது என்ன வெல்லாம் சொன்னார்கள்?
    குஜராத் சம்பவம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட களங்கமே.
    - உத்தரபிரதேசம் காசியாபாத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்கள் கூட்டத்தில் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி (8.3.2004)
    கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் வாஜ்பேயி ஒரு சிறைக்கைதி போலத்தான் இருந்தார். குஜராத்தில் நடந்த மதக்கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு போன்றவற்றில் உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் வாஜ்பேயி எடுக்கத் தவறியதே தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம்.
    விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்கள் போப்பின் கொடும்பாவியை எரித்தபோது வாஜ்பேயி தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.
    குஜராத் கலவரத்தின்போது தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல் போனதையும் வாஜ்பேயி ஒத்துக்கொண்டார்.
    அய்.நா.மன்றத்தின் உதவிக் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதையும், மனித உரிமைக்கான குழுவில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உலக நாடுகள் அளவில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி வேதனை அடைந்தார் வாஜ்பேயி.
    - இவ்வளவையும் சொல்லியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிதான். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் குலுமணாவில் ஓய்வு எடுக்கச் சென்ற அடல்பிகாரி வாஜ்பேயி தேர்தல் தோல்விக்கான காரணத்தில் குஜராத் மதக் கலவரம் முக்கியக் காரணம் என்று சொல்லவில்லையா?
    குஜராத் கொலைகளுக்குப் பிறகு - எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்குச் செல்வேன் என்று வாஜ்பேயி சிணுங்கவில்லையா?
    இங்கிலாந்தும், அமெரிக்காவும் மோடி அந்நாடுகளுக்கு வருவதற்கு விசா மறுக்கவில்லையா?
    விசுவ இந்து பரிஷத்தின் சுவரொட்டிகள்
    இந்துக்களே, விழித்துக் கொள்ளுங்கள்!
    முஸ்லிம் கடைகளுக்குப் போகாதீர்கள்!
    முஸ்லிம் கடைகளில் எந்தச் சாமான்களையும் வாங்காதீர்கள்!
    நம்மிடம் சம்பாதித்துக் கொண்டு, அதை நமக்கே எதிராகப் பயன்படுத்துகிறார்கள்!
    நமது கடைகளுக்கு அவர்கள் வருவதில்லை. பின் ஏன் நாம் அவர்களது கடைகளுக்குச் செல்லவேண்டும்?
    முஸ்லிம்களைக் கொல்ல தனி ஆயுதங்கள் தேவையில்லை. அவர்களுடன் உள்ள வியாபார உறவுகளைத் துண்டியுங்கள்.
    பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்!
    -விசுவ இந்து பரிஷத் சார்பில் பரவலாக விநியோகிக்கப்படும் துண்டறிக்கையின் வாசகங்கள் இவை!
    இவை எல்லாம் சட்டப்படி குற்றமானவை அல்லவா? இந்தத் துண்டு அறிக்கைகளை, சுவரொட்டிகளை வெளியிட்டவர், அச்சிட்டவர்கள் மீது மோடி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?
    காவிக்கும்பலிடம் சட்டம் சரணாகதி ஆட்சிதான் குஜராத்தில். இந்த யோக்கியர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டுமாம். சிந்திப்பீர்!
    உண்மைகளும் நிகழ்வுகளும் இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டில் சோ ராமசாமி போன்றவர்கள் மோடியை உத்தமப்புத்திரர் என்றும், பிரதமராக அவர் வந்தாலே போச்சு என்று துணியைப் போட்டுத் தாண்டுகிறார்கள் என்றால் இந்தப் பார்ப்பனர்களின் இந்துத்துவா குரூரத்தை நாட்டுமக்கள் உணரவேண்டாமா?
    சோ அய்யர் சொல்கிறார்:_ கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்தவை கண்டனத்துக்குரியவைதான் என்றாலும், அந்தச் சம்பவங்களுக்கு பா.ஜ.க. அரசைக் குற்றம் கூறமுடியாது (துக்ளக் 6.5.2009) என்று சொல்கிறார்.
    அப்படியானால் யார்தான் பொறுப்பு? இரண்டாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது அங்கு பா.ஜ.க. வைச் சேர்ந்த மோடி முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இல்லவே இல்லையா? ஒரு ரயில் கவிழ்ந்ததால் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற குரல் எழுகிறது. இவ்வளவு பெரிய கொடுமை நடந்தபோது அங்கு ஆட்சியில் இருந்தவர் பொறுப்பு இல்லை என்று சோ சொல்லுகிறார் என்றால் இவரைவிடப் பொறுப்பற்ற பத்திரிகையாளர் யார்?
    உச்ச நீதிமன்றம் நீரோ மன்னன் என்று மோடிக்குப் பட்டம் கொடுத்துவிட்டது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் அறிக்கை வெளியிட்டுவிட்டன. வாஜ்பேயியும் அத்வானியும்கூட குஜராத் கொடூரங்களுக்கு வேதனைப்பட்டுள்ளனர்.
    இவற்றையெல்லாம் திசை திருப்பிய மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் மக்கள் எல்லாம் மடையர்கள் என்ற ஆணவத்தில்தானே?
    பல கோடி ரூபாய் செலவு செய்து குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் உண்ணாவிரதம் இருந்துவிட்டால் பிரதமர் நாற்காலி தானாகவே நடந்து வந்து அவரை உட்கார வைத்துவிடும் என்ற நப்பாசை இந்த நரேந்திர மோடிகளுக்கு.
    வீராதிவீரர், சூராதிசூரன் என்று ஜாக்கி வைத்துத் தூக்கப்படுகின்ற இந்த மோடியின் உண்மையான வீரம் என்ன? - சூரம் என்ன?
    சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சி சார்பில் பிரபல ஊடக வியலாளரான கரன்தப்பாருடன் பேட்டியில் அமர்ந்த இந்த மோடி என்னும் மனிதனால் நான்கரை நிமிடங்கள்தான் தாக்குப் பிடித்து உட்கார முடிந்தது. கரன்தப்பாரின் சுனையான கேள்விக் கணைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று சொல்லும் வகையில் ஓடினாரா இல்லையா?
    இந்தியா முழுவதையும் குஜராத் ஆக்கவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் நோக்கம்.

    பார்ப்பனர்களுக்கு மீண்டும் ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் தேவைப்படுகிறது.
    எந்தக் கட்சி பார்ப்பனர் அல்லாதாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
    எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!
    ------------------------------- கவிஞர் கலி.பூங்குன்றன்அவர்கள்  ”உண்மை” அக்டோபர் 01-15 2011 இதழில் எழுதிய கட்டுரை

    20 comments:

    தமிழ் ஓவியா said...

    மாலேகான் - மறு தீர்ப்பு!

    மகாராட்டிரத்தில் மாலேகான் நகரத்தில் முசுலிம் அமைப்பான சிமி அலுவலகமுன் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இரு சக்கர மோட்டார் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பயங்கர செயலால் 7 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயமடைந்தனர்.

    பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் _ அபிநவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முன்னாள் இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், இந்நாள் இராணுவ உளவுப் பிரிவு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். சிறீகாந்த் பிரசாத் புரோகித் (பார்ப்பனர்) சுயம்பு சங்கராச்சாரியார் தயானந்த் பாண்டே (பார்ப்பனர்) சிவ நாராயணன் கல்சன்கரா, ஷாம்சாகு, சமர்குல்கர்னி, அஜய ரசிர்கர், ராகேஷ் தாவ்டே, சுதாகர் சதுர்வேதி, ஜெகதீஷ் மார்த்ரே ஆகியோர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர்.

    மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்தக் கும்பலுக்கும் _ பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் நடைபெற்ற குண்டு-வெடிப்பு-களுக்கும் தொடர்புண்டு என்றும் கண்டறியப்பட்டது.

    மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து வெளியில் எங்கும் கிடைக்காதது _ இராணு-வத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதாகும். இதில் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்கள்மூலம் இது கிடைத்திருக்கிறது. சிறுபான்மை-யினரைத் தீர்த்துக் கட்ட இராணுவ வெடிமருந்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

    இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் என்பவர் மகாராட்டிர மாநிலம் நாசிக் நகரில் இராணுவக் கல்லூரி ஒன்றையும் நடத்திக்கொண்டும் வருகிறார். இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவின் முப்படை-களிலும் ஊடுருவியுள்ளனர்.

    இந்த இராணுவக் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலுக்கு வன்முறைப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

    வெடிகுண்டுகளைத் தயாரிப்பது முதற்கொண்டு, எப்படிக் கையாள்வது என்பதுவரை இங்குப் பயிற்சி!.

    இந்தியாவை இந்து மயமாக்கு _ இந்திய இராணுவத்தையும் இந்து மயமாக்கு! என்று இந்துத்துவா கும்பல் குரல் கொடுத்துவரும் பின்னணியையும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.

    பாரதீய ஜனதா தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது இராணுவத்திலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்ட வகையில் திணிக்கப்பட்டனர். விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அப்பொழுதே இந்தக் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியதுண்டு.

    ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர் என்றால், இதன் பின்னணி எவ்வளவு ஆழமானது _ பலமானது _ பயங்கரமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாமே!

    மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திர-தாரியான இராணுவ அதிகாரி புரோகித் என்ற பார்ப்பனர் இசுரேல் நாட்டின் உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக இந்துத்துவா போட்டி அரசு ஒன்றை நிறுவுவதுவரை திட்ட-மிட்டி-ருந்தனர் என்றால், இவர்கள் எத்தகைய சதி-காரர்-கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்கள் கையாண்ட மடிக்கணினியில் இவையெல்லாம் பதிவாகி இருந்தன.

    தமிழ் ஓவியா said...

    இந்த சதிகாரர்கள்மீது 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தயார் செய்வதில் முதன்மை வகித்தவர் ஹேமந்த் கார்கரே என்ற காவல்துறை அதிகாரி ஆவார். ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கும்பலின் ஆணிவேர் வரை சென்று அலசி எடுத்து அறிக்-கையைத் தயாரித்த இந்த அதிகாரிதான் மும்பை தாஜ் ஓட்டல் தாக்கப்பட்ட கலவரத்தில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலே அவர்கள்கூட காவல்துறை அதிகாரி கார்கரே கொல்லப்பட்டதன் பின்-னணியில் சதியிருக்கிறது_ அது விசாரிக்கப்பட-வேண்டும் என்று சொன்னார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    மாலேகான் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் 11 பேர்கள்மீதும் மோக்கா என்னும் மகாராட்டிர அமைப்பு ரீதியான குற்றத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இவர்கள்மீதான வழக்கு நாசிக் நீதிமன்றத்திலிருந்து மும்பை மோக்கா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    ஓர் அதிர்ச்சியான செய்தி _ மும்பை மோக்கா நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக இந்தப் பதினோரு பேர்கள்மீதான குற்றப் பத்திரிகையை நிராகரித்துவிட்டது.

    இந்த அதிர்ச்சி மிகுந்த ஆணையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராட்டிர தீவிரவாத தடுப்புக் காவல்படை மேல்முறையீடு செய்தது.

    மோக்கா சட்டத்தின்கீழ் மாலேகான் குண்டு-வெடிப்புக் குற்றவாளிகள் மீது அரசு எடுத்த நட-வடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கி _ சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியது.

    சிறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாகச் சுற்றித் திரியும் இந்தக் கும்பல் மீண்டும் சிறைக் கொட்டடியில் தள்ளப்பட உள்ளனர்.

    இந்துத்துவா காவிக் கும்பல் மிகப்பெரிய சதிப் பின்னணியோடு (வெளிநாட்டுச் சக்திகளுடன் கூடிய தொடர்-போடு) செயல்பட்டு வருகின்றன என்பது_ மாலே-கான் குண்டுவெடிப்பு மீதான விசாரணை வெளிச்-சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. இராணுவத்துறை, காவல்துறை, நீதித்துறை வரை ஊடுருவியுள்ள இந்தக் கும்பலை சட்ட ரீதியாக ஒரு பக்கத்திலும், பிரச்சார ரீதியாக சமூகத்தில் இன்னொரு பக்கத்திலும் ஒடுக்க-வேண்டியது மிகவும் அவசியமாகும். ------விடுதலை -22-7-2010

    தமிழ் ஓவியா said...

    மோகன் பகவத்தின் முனை முறியாப் பொய்கள்!

    ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

    பயங்கரவாதத்தையும், இந்துக்களையும் தொடர்பு படுத்த முடியாது. பயங்கரவாதம் மற்றும் இந்துக்கள் என்ற சொற்கள் நேர் எதிரான முரண்பாடான பொருள் கொண்டவை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்த முடியாது. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு, குறிப்பிட்ட யாருக்கும் எதிரானதல்ல. எனவே, காவி பயங்கரவாதம் எனக் கூறுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடியவர் இவ்வாறு சொல்லியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இந்துத்துவா அமைப்பின் தலைவர் அவ்வாறு கூறவே கடமைப்பட்டவராகிறார்.

    காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்ல என்று அவர்கள் சொல்லவில்லையா? நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயும், கோபால் கோட்சேயின் மனைவியும் அதனைத் திடமாக மறுத்துள்ளனரே! இருந்தாலும் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன் அல்ல என்று மறுத்துத் தீரவேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு.

    காந்தியாரைச் சுட்டுக் கொல்லுவதற்கு முன் நாதுராம் கோட்சே என்ன செய்தான்? தன்னை ஒரு முசுலிம் என்று திரித்துக் காட்டிக் கொள்வதற்காக சுன்னத் செய்து கொண்டிருக்கிறான் - தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இருக்கிறான். இப்படி கடைந்தெடுத்த பித்தலாட்டம் - மோசடியை இவர்களைத் தவிர வேறு யார்தான் செய்ய முடியும்?

    பயங்கரவாதத்தையும், இந்துத்துவாவையும் தொடர்புபடுத்த முடியாதாம் - அப்படியானால், 1992 டிசம்பர் 6 அன்று 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், விசுவ இந்துபரிசத்தினரும், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலும் வன்முறை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கினார்களே - அதற்கு என்ன பெயராம்?

    இவர்கள் எல்லாம் இந்துத்துவாவாதிகள் அல்லர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறப்போகிறாரா?

    இவர்களின் இந்துத்துவா கதாநாயகனான இராமன், தவம் செய்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அதற்குப் பெயர் வன்முறை யல்லாமல் - நன்முறை என்று பட்டம் கட்டப் போகிறார் களா?

    இந்து மதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் வாளாயுதம், வேலாயுதம், அம்பு, வெட்டரிவாள், கதை, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்கின்றனவே - இவை பலாத்காரத்தின் சின்னங்கள் அல்லவா - கொலை காரக் கருவிகள் அல்லவா!

    சண்டை போடாத இந்து மதக் கடவுள்கள் உண்டா? கொலை செய்யாத சாமிகள் உண்டா?

    தன் உற்றார் உறவினர்களைக் கொல்ல முயன்ற அர்ச்சுனனுக்கு அறிவுரை புகன்று அவர்களைக் கொல்லுமாறு போர்க்களத்தில் அறிவுரை புகன்றானே - அவர்களின் பகவான் கிருஷ்ணன் - அதற்கு என்ன பெயராம்!

    யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால், அதைக் கொள்ளை யிடுவது தர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 7, சுலோகம் 24) என்கிறதே இந்து மத சாத்திரம் - இந்தக் கொள்ளையிடுவது என்பதன் பொருள் என்னவோ!

    செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங் காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளை யிடலாம்!

    (மனுதர்மம் அத்தியாயம் 11, சுலோகம் 13)

    பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் என்ப தற்குத் தனி அகராதியை மோகன் பகவத்துகள் தயார் செய்து வைத்துள்ளார்களோ!

    வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால், பிராம ணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்யவேண்டும்.

    (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 348)

    மனுதர்மம் (வர்ணாசிரமம்) முறைப்படி ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை, அந்தத் தண்டத்தைக் கொண்டே -மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம்.

    (மனுதர்மம் அத்தியாயம் 6, சுலோகம் 26)

    இவை எல்லாம் பலாத்காரம், பயங்கரவாதம், வன்முறை என்ற பட்டியலில் வராது என்று வெளிப் படையாகச் சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்த முடியாது என்று சொல்லட்டும்!

    வன்முறை நடவடிக்கைகளுக்காக மூன்று முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைக்க அடேயப்பா, இத்தனைப் பொய்புரட்டுப் பேச்சா? 20-10-2010

    தமிழ் ஓவியா said...




    இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்

    பிரபாகரன்

    இந்து தீவிரவாதம் என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு-களில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19, 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்-டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடு-கிறோம்.

    2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்-தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதி-களின் செயல் என்று வழக்கை விசா-ரித்துவந்த காவல்துறையும், ஊடகங்-களும் பிரச்சாரம் செய்துவந்தன. முஸ்லிம்களின் புனிதத்தலமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்க-ளுக்கு எழலாம். ஆனால், இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைது-செய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைகாட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அனைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளா-னார்கள். ஆனால் இப்போது இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.

    2007ஆம் ஆண்டு மே மாதம் அய்த ராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி- இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJi) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று அய்தராபாத் காவல்துறை அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டா-யப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள-வைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்-படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஅய் கைது செய்தது.

    அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்-படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்-போனும் சிம் கார்டும் கொண்டு இயக்-கப்பட்ட அதேவகையான வெடிகுண்டு-தான் அய்தராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்-பட்டிருப்பதை சி.பி.அய் கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்பு-முனை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்-பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.அய் இயக்குநர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்ப-தாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.அய். கண்டுபிடிக்-கும்வரை அய்தராபாத் காவல் துறையின்கட்டுக்கதையே தொடர்ந்தது.

    அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்-செய்-துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

    தமிழ் ஓவியா said...


    இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே, ஜெர்மன் பேக்கரி குண்டு-வெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள்மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்பு-களை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்-பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்-பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்புப் படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால், அப்துல் சமது மீது இந்த குண்டு-வெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்-சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஷ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மாலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது; கை-காட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைத்-தான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும். அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 2002 _-03வாக்கில் போபால் இரயில் நிலையத்-தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடி-குண்டுகள் தொடர்பாக இராம்நாராயண் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள்மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து-விட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்-டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதை-வைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடி-குண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டி-னார்.

    தமிழ் ஓவியா said...

    2006ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடி-விபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஷ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டு-வெடிப்புகள் நடந்துள்ளன. நண்-டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்-காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

    இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-- _ ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்த-போது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்க-லாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.

    கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படாமலேயே இருக்கின்றன என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

    மெக்கா மசூதி, மாலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசார-ணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.அய் இப்போதுதான் ஆலோசித்து வருகிறது .

    தமிழ் ஓவியா said...

    2008 செப்டம்பர் 29இல் மாலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்-பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்-தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்க-வைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்-டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் சிறீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உள்பட 13 பேர் கைது-செய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்த-போது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்-கும் ஆர்.டி.-எக்ஸ் வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்-ளான். அய்தராபாத் காவல்துறை ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-- இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்ட-தனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும், மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும். 4,528 பக்கங்களை கொண்ட மாலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகை-யில் அபிநவ் பாரத் அமைப்பின் பிர-மாண்டமான முழுவடிவமும் அத-னோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்து புனிதத்-தலங்களில் நடந்த குண்டுவெடிப்பு-களுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்றும் தனி இந்து தேசத்தை உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும், மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005--_06 ஆண்டு வாக்கில் புனேவில் தற்-போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, தனி இந்து தேசம் அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    மாலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினை-வாக மாலேகானில் ஒரு இடத்திற்கு கர்கரே சந்திப்பு என்று பெயரிட்டுள்-ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலே-கானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்-பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மாலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்-திருக்கவில்லை. ஆனால் காவல் துறை யால் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்-டி-ருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப் பதற்கு ஒரு மாதம் முன்புவரை காவல் துறை காவலில்-தான் இருந்துள்ளார்.

    தமிழ் ஓவியா said...

    அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்-தான் தீவிரவாத ஒழிப்புப் படை நம்பு-கிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்-படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மாலேகான் குண்டுவெடிப்பை நடத்திய-தாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS 68 பாகிஸ்தானியர்கள் கொலை-செய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியி-டப்படாத சாட்சி ஒருவர் புரோகித்-துடன் நடத்திய தொலைபேசி உரை-யாடலை ஆதாரமாகக் காட்டுகிறது .

    இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயண் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உள்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சி-கரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஷ்ட்ரா, இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைது-செய்யப் பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் _ கல்சங்கரா என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மாலேகான், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல குண்டுவெடிப்பு-களும் ஒரு பெரிய சதித் திட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்தச் சம்பவங்களை-யெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஅய் வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.

    (Source: Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, Published in ‘The Outlook’, a weekly news magazine, dated july 19,2010).

    http://www.outlookindia.com/ariticle.aspx?266145


    9-10-2010

    தமிழ் ஓவியா said...



    அசோக் சிங்கால் பேட்டி

    அசீமானந்தர், குஜராத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மதமாற்றத்தை அதிகம் தடுத்தவர். அவரை எப்படியாவது முடக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டது சோனியா அரசு. அதற்கு ஏற்ப கைது செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது.

    ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன் - என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதைப் படிக்கிற விவரம் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க முடியாத அளவுக்குத் திணறுவார்கள். இன்னொரு பழமொழியும் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.

    பிடிச் சோற்றில் பூசனிக்காயை மறைக்கப் பார்க்கும் மோசடி இது என்பது எடுத்த எடுப்பிலேயே புரிந்துவிடும். அதுவும் காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டாம் - அப்படி அவர் நம்புகிறாராம்.
    எந்த எல்லைக்கும் சென்று புளுகுவது, உண்மைகளை திரிப்பது என்பது இந்தத் திரிநூல் கூட்டத்துக்கு கைவந்த கலையாகும்.

    அந்தப் பாணியிலேயே இந்த வி.எச்.பி. முதியவரும் மனம் போன போக்கில் பிதற்றியுள்ளார்.

    தமிழ்நாட்டில் உள்ள பிஜேபியினர், சங்பரிவார்க் கூட்டத்தினர்கூட ஜெயேந்திர சரஸ்வதியின் கைதுக்கு சோனியாதான் காரணம் என்று சொன்னதில்லை.

    அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்ததுகூட கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்கள் வேறு எப்படிதான் சொல்வார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

    அய்தராபாத் மக்கா மஸ்ஜித் 2007 மே 17ஆம் தேதி குண்டு வெடிப்புக்கு இலக்கானது. ஒன்பது பேர் பலியாகினர்.

    தொடக்கத்தில் இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம், சிமி இயக்கத்தைச் சேர்ந்த முசுலிம் தீவிரவாதி கள்தான் என்று 70 பேர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

    அதன்பிறகுதான் காவி தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணமானவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் ஒன்பது பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மிக முக்கியக் குற்றவாளியான சுனில்ஜோஷி, அப்ரூவராக மாறி விடுவாரோ என்ற சந்தேகத்தின் பெயரில் சங்பரிவார்க் கும்பலாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

    ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான அசீமானந்தர் என்ற சாமியார் வசமாக சிக்கிக் கொண்டார்.

    இந்தியன் குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) 164ஆம் பிரிவின்கீழ் மாஜிஸ்டிரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்தச் சாமியார் உண்மைகளைக் கக்கிவிட்டார். இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்றும் அடையாளம் காட்டியுள்ளார்.

    ஆனால் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறுகிறார் - அசீமானந்தர் ஒன்றுமே தெரியாத பாப்பா மாதிரி அவரிடம் தவறாக வாக்குமூலம் வாங்கி விட்ட தாகக் கரடி விடுகிறார்.

    மாலேகான் குண்டுவெடிப்பின் உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடித்த, மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்துத்துவா காவி தீவிரவாதிகள் இருக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் அந்துலேயே கூறிடவில்லையா?

    “Who Killed Karkare?’’ என்னும் விரிவான நூலினை மகாராட்டிர மாநில காவல்துறை முன்னாள் தலைவர் முஷ்ரப் எழுதியுள்ளாரே, இதுவரை மறுப்பு உண்டா?

    தன் உயிருக்குக் குறிவைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுடப்படுவதற்குமுன்புகூட தம்மிடம் கூறியதாக திக் விஜய்சிங் அடித்துச் சொல்லியுள்ளாரே! கார்கரேயின் மனைவிக்கும் அந்த சந்தேகம் இருந்து வருகிறதே!

    அஜ்மீர் தர்கா, அய்தராபாத் மெக்கா மசூதி, மகாராட்டிர மாநில மாலேகான்குண்டு வெடிப்பு - இவை மூன்றுக்கும் காரணமானவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மத்தியப் பிரதேச மால்வா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அத்தனைப் பேரும் இந்துத்துவா காவிக் கும்பல்காரர்கள் என்பதற்கான தடயங்கள் (உரையாடல்கள் உள்பட) வலுவாகக் கிடைத் துள்ளனவே.

    இவற்றிற்குப் பிறகும்கூட விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் காவிக் கும்பலின் கற்புக்கு உத்தரவாதம் கொடுப்பது சொல்லுபவர்களின் யோக்கிய தாம்சத்தின் முகத்திரையைத்தான் கிழித்துக் காட்டும்.

    காந்தியாரைப் படுகொலை செய்தவன் இந்து அல்ல - முசுலிம்தான் என்று பிரச்சாரம் செய்த கும்பல் அல்லவா! நாதுராம்கோட்சே என்ற அந்தக் கொலைகார மராட்டிய பார்ப்பான் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருக்கவில்லையா?

    அதே ரகத்தில்தான் சிங்கால் பேட்டி கொடுத்துள்ளார். இந்தப் பொய் முகங்களை மக்கள் அடையாளம் காண்பார்களாக! 1-2-2011

    தமிழ் ஓவியா said...


    கல்கி


    கேள்வி: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்குப் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என்று அத்வானி கூறியி ருப்பதுபற்றி...

    பதில்: சவுகானை எதற்குக் கொம்பு சீவி விடுகிறாரோ அத்வானி? ஏற்கெனவே நாடெங்கும் நரேந்திரமோடியின் திறமைகள், நிர்வாகத் திறன், செல்வாக்கு ஆகியவை பற்றி நல்ல அபிப்ராயம் உருவாகிக் கொண்டு வரும் வேளையில் இத்தகைய பேச்சு, குழப்பத்தையே ஏற்படுத்தும். மோடியின் சில செயல்பாடுகள் குறித்து அத்வானிக்கு ஆதங்கம் உண்டு. ஆனால் தேர்தல் நெருங்கும் வேளையில் அத்வானியின் தனிப்பட்ட கருத்து (நியாயமிருப்பினும்) கட்சியின் வெற்றிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடக் கூடாது. அளந்து பேசுவதே இன்றைய தேவை.

    - கல்கி 16.6.2013 பக்கம் 14

    பார்ப்பனர்களின் இந்தப் பார்வை சுட்டுப் போட்டாலும் நம் மக்களுக்கு வரவே வராது. எல்.கே. அத்வானி என்ன கைசூப்பும் பாப்பா குழந்தையா? எத்தனை ஆண்டு அரசி யலில் கொட்டை போட்டுப் பழம் தின்றிருப்பார்? அவருக்குப் போய் கல்கி அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

    நரேந்திரமோடியின் திறமைகள், நிர்வாகத் திறன், செல்வாக்கு நாட் டில் கொடி கட்டிப் பறக் கிறதாம்!

    பார்ப்பனர்களும், சங்பரிவார்க் கும்பலும் திட்டவட்டமான வகையில் நயவஞ்சகமாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருவதைக் கவனிக்க வேண்டும்.

    மோடியின் திறமைகள் நிர்வாகத் திறன்களைப் பெரிது படுத்திக் காட்டி, வெளிச்சத்தை அதிகமாகக் காட்டி, வெகு மககளின் கண்களைக் கூசச் செய்து அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டைப் பையில் இருப் பதைத் திருடும் யுக்தியைக் கவனிக்கத் தவறக் கூடாது.

    ஹிட்லர்கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஜெர்மனியில் கொடி கட்டிப் பறக்கவில்லையா? இடி அமீன் கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சி பரிபாலனம் செய்யவில்லையா?

    எட்டு லட்சம் கம்யூனிஸ் டுகளைக் கொன்று குவித்த சுகார்தோகூட 30 ஆண்டுகள் ஆட்சிக் கட் டிலில் ஏறி அட்டகாசம் செய்யவில்லையா? இவர்கள் நம்பும் மகாபாரதத்தில்கூட தாயாதி களைக் காட்டுக்கு அனுப்பி விட்டு துரியோ தனன் 14 ஆண்டுகள் ஆட்சி புரியவில்லையா?

    திறமையும் நிர்வாகமும் எதற்குப் பயன்படுகிறது? குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்ப் புட்டு என்று அறிஞர் அண்ணா சொன்னது தான் நினைவிற்கு வரு கிறது.

    இரண்டாயிரம் சிறு பான்மை மக்களைப் படு கொலை செய்வதுதான் அவாளின் அகராதியில் நிர்வாகத் திறனோ!

    பார்ப்பனர்களிடம் பாடம் பயிலுங்கள் தமிழர்களே!

    - மயிலாடன்

    தமிழ் ஓவியா said...


    கோயில், திருடர்களின் குகை!


    விபச்சார விடுதி கோயில் என்று காந்தியார் கூறியது ஒருபுறம் இருக்கட்டும் (தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 533) கோயிலை திருடர்களின் குகை என்று சொன்னவரின் வாயில் சர்க்கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் - பேரளம் பாதையில் திருநள்ளாறு என்னும் கோயில் ஒன்று இருக்கிறது.

    சனி தோஷம் போக்குவதற்கு ஏராளமான பக்தர்கள் தமிழ்நாட்டி லிருந்து மட்டுமல்ல; இந்தியாவின் எல் லாப் பகுதிகளிலிருந்தும் வருவதுண்டு.

    சனி என்றால் என்ன? அது ஒரு கிரகம் தானே அது எங்கே தொலை கிறது என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது; அப்படிக் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனம் - நாத்திகவாதம்.

    இந்தக் கோயிலுக்குப் பணக்கார பக்தர்களைக் கூட்டி வர கோயில் புரோக்கர்கள் உண்டு.

    பணக்காரர்களுக்குப் பணம் ஒரு பொருட்டா! போற கெதிக்கு நல்ல கெதி கிடைக்க வேண்டும்; பரலோகம் போக வேண்டும். என்றால் பணம் ஒரு அற்பம் தானே! இது போதாதா பார்ப்பனப் புரோக்கர்களுக்கு அந்த முட்டாள்தனத்தில் மஞ்சள் குளிக்கிறார்கள்.

    வார இதழ் ஒன்றில் திருநள் ளாறுக்கு வரும் பக்தர்களின் பொருள்கள் திருடு போவதுபற்றி விலாவாரியாக வரிந்து தள்ளியுள்ளது. அது ஒன்றும் பகுத்தறிவு இதழும் அல்ல - திருநள்ளாறுக்கு வரும் பணக் காரப் பக்தர்கள் தங்கள் காருக்குள் பணம், நகை, டேப்ரிக்கார்டர் போன்ற பொருள்களை வைத்து விட்டு காரைப் பூட்டிவிட்டு, திருநள்ளாறு கோயிலில் உள்ள நளன் குளத்தில் குளிக்கச் செல்லும் போது காரை கள்ளச்சாவி போட்டுத் திறந்து பொருள்களைத் திருடிச் சென்று விடுகிறார்களாம்.

    சனிக்கிழமைகளில் மட்டும் கிட்டத்தட்ட நூறு பவுன் திருடு போகிறதாம். சனி பகவானை தரிசித்து வரும் போது பொருள்கள் திருடு போவது குறித்துப் காவல் துறையினருக்குப் புகார் செய்வதுகூட ஒரு வகை குற்றம் - தோஷம் என்று கருதுகிறார்களாம் - இது போன்ற முட்டாள்தனம் இருக்கும் வரை திருடர்கள் பாடு கொண்டாட்டம் தானே

    இது ஒருபுறம் இருக்க கோயில் அர்ச்சகர்கள் தங்களுக்கென்று தனி இணையதளம் (வெப்செட்) வைத்துக் கொண்டு தொழிலை ஜாம் ஜாமென்று நடத்துகிறார்களாம்.

    கோயில் பூனைகள் என்று நாகர்கோயில் வழக்குரைஞர் சிதம் பரம் அவர்கள் நூல் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் வண்டி வண்டியாக அர்ச்சகப் பார்ப்பனர்களின் அயோக் கியத்தனமும், ஒழுக்கக் கேடும், திருட்டுத்தனமும் கொட்டிக் கிடக்கும்.

    கோயில் சாமி திருட்டுகள், சாமி நகை திருட்டுகள் எல்லாம் அர்ச்சகர் பார்ப்பானின் தொடர்பு இல்லாமல் நடப்பதில்லை.

    தமிழ்நாவலர் சரிதை எனும் ஒரு நூல் உண்டு. அதில் ஒரு தகவல்:

    விஜய நகர மன்னர் ஆட்சிக் காலம், மன்னன் கிருஷ்ண தேவ ராயன், திருவாரூர் தியாகராசர் கோயிலில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளுள் இரண்டு சிலைகளை நாகராஜ நம்பி என்ற பார்ப்பான் திருடி விற்று விட்டான். இதை அரசனிடம் சொல்ல அமைச்சர்கள் பயந்தனர். ஒரு புலவர் கிளி ஒன்றுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்து, அதன் மூலம் மன்னனுக்குத் தெரியப்படுத்தினார். மன்னன் உண்மையை அறிந்து திருட்டுப் பார்ப்பானுக்குத் தண்டனை கொடுத்தான்.

    அந்தப் பாடல் வருமாறு: முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார். அவரில் இந்நாள் இரண்டு பேர் ஏகினார் - கண்ணன்

    நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகராஜநம்பி இருக்கின்றான் கிருட்டினராயா

    என்பதுதான் அந்தப் பாடல்.

    ஆக, கோயில் திருடர்களின் குகை என்பது மட்டும் உறுதியாகி விட்டது கிருட்டினராயன் காலத்துத் திருவாரூர் தியாகராசன் கோயில் முதல் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் வரை.
    பக்தர்களின் பொருள்களைக்கூட காப்பாற்றிக் கொடுக்க முடியாத சனீஸ்வரன்தான் பக்தர்களின் தோஷத்தைப் போக்கப் போகிறானாம்!

    வாயாலயா சிரிக்க முடியும்?

    இந்தத் திருநள்ளாறு கோவி லுக்குத்தான் கருநாடக முதலமைச் சராக இருந்த எடியூரப்பா குட்டி யானையை தானமாக கொடுத்தார். இன்றைக்கு அவர் அரசியலில் கண்ட பலன் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும்.

    தமிழ் ஓவியா said...


    தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்


    தி.க., தி.மு.க., மற்றும் வர்த்தக அமைப்புகள் பங்கேற்றன

    தூத்துக்குடி, ஜூன் 12- தமிழர்களின் நீண்ட நாள் கனவு திட்டமான, தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் நேற்று (11.6.2013) கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய, தமிழ்நாட்டிற்கு அன்னியச் செலாவணி வருவாயை ஈட்டித் தரக் கூடிய மாபெரும் திட் டம், தமிழகத்தினுடைய தொழில், வர்த்தகம் பெருகக் கூடிய அள விற்குப் பயன்படக் கூடிய திட்டம்.

    கப்பல்களின் பயண தூரம், நேரம் பெரு மளவு குறையும் என்று சிலாகிக்கப்படுகின்ற திட்டம், தமிழகம் மற் றும் அண்டை மாநிலத் துறைமுகங்களின் சரக் குக் கையாளும் திறனை அதிகரிக்கும் என்கின்ற அளவிற்குப் பாராட்டப் படுகின்ற திட்டம்.

    ராமேஸ்வரம் அல் லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகங்கள் உரு வாகும் என்றெல்லாம் கூறப்படுகின்ற திட்டம். கடல் சார் பொருள் வர்த் தகம் பெருகி மீனவர் களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உய ரும் என்று எல்லோரா லும் கூறப்படுகின்ற திட் டம் சேது சமுத்திர திட்டம்.
    அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து நிறைவேற்றப் பட்ட திட்டமாக இது அமைந்து விடும் எனும் பொறாமை உணர்ச்சி காரணமாகவும், அரசி யல் காழ்ப்பணர்ச்சி காரணமாகவும் தான் நாட்டுக்கு நல்லது செய் யும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத் திற்குச் சென்று அந்தத் திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு காரணம் கற் பனை பாத்திரமான ராமன் பெயரை சொல்லி அது ராமர் கட்டிய பாலம் என்று சொல்கிறார்கள்.

    கற்பனை பாத்திர மான ராமன் பெயரைச் சொல்லி இந்த நல்ல திட்டத்தை முடக்கு வதை கண்டித்தும், விரைவில் சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்றகோரி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சி கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் என தி.மு.க. தலைவர் கலைஞர் தனது 90ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2013) விழா சென்னை பொதுக் கூட்டத்தில் அறிவித்தி ருந்தார்.

    தூத்துக்குடியில் கடையடைப்புப் போராட்டம்

    இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தி.க., திமுக., உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் தொடர் போராட்டங்கள் மற்றும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள தி.க., திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூ.,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல் வேறு வர்த்தக அமைப் புகள் இணைந்து சேது கால்வாய் திட்டத்தை ஆதரித்து, தூத்துக் குடியில் புதிதாக சேது கால்வாய் திட்ட போராட்ட குழு துவக் கப்பட்டது.

    இந்த குழு முடி வின்படி, சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று (11.6.2013) கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலை யம், போல்பேட்டை, குறிஞ்சிநகர், டபிள்யூ ஜி.சி. சாலை, பாளை சாலை, அண்ணா நகர், முத்தையாபுரம், நந்த கோபாலபுரம், எட்டை யபுரம் சாலை, ஸ்டேட் பாங்க் காலனி உள் ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. ஒரு சில ஆட்டோ நிறுத்தங் களில் ஆட்டோக்கள் ஓடவில்லை.

    அடைக்கப்பட்டிருந்த கடைகளை திறக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், காவல் துறையினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கடைகளைத் திறக்கு மாறு உத்தரவிட்டனர். இருப்பினும், அதை மீறியும் பல இடங்களில் கடைகள் அடைக் கப்பட்டன. சில இடங் களில் காவல்துறையினர் மற்றும் ஆளுங் கட்சியின் மிரட்டலால் 11 மணிக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட் டன. கடையடைப்பு போராட்டத்தையொட்டி, தூத்துக்குடியில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

    தமிழ் ஓவியா said...


    நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நற்செய்தி!


    நீரிழிவு - சர்க்கரை நோயாளி களுக்கு மிக நல்ல செய்தி, நாளேடு களில் வந்துள்ளது.

    இன்சுலின் என்பது நமது உடலின் கணையத்தில் சுரக்காததினால்தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக, நீரிழிவு Diabetes நோயாக மாறி - பிறகு நாளடைவில் அதுவே உயிர்க் கொல்லியாகவும் மாறி விடுகின்றது!

    இன்சூலினும், குளுக்கோனும் கணையத்தில் உற்பத்தியாகின்றன.

    இன்சுலினை பீட்டா செல்களும், குளுகோனை ஆஃல்பா செல்களும் உற்பத்தி செய்கின்றன.

    கணையம் பாதிக்கப்பட்டாலும் அல்லது கணையத்தின் சுரக்கும் தன்மை குறைந்தாலும் சர்க்கரை நோய் ஒருவரைத் தாக்கக் கூடும்!

    அடிப்படையில் நாம் சாப்பிடும் உணவு சர்க்கரையாக மாறி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை தான் மனிதர்களுக்கு சக்தியை (Energy) அளிக்கிறது!

    எஞ்சியுள்ள சர்க்கரை உடலில் தங்கு கிறது. இந்த எஞ்சிய சர்க்கரையைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் ஹார்மோன் குளுகோன் என்ற இரண்டு சுரப்பிகள் பணியாற்றுகின்றன.

    இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஹோவோர்கா கடந்த 5ஙூ ஆண்டுக ளாக முயற்சி செய்து வந்தார். தற்போது அவரது ஆராய்ச்சி வெற்றியடைந் துள்ளது!

    அவர் ஒரு செயற்கை கணையத்தை உருவாக்கியிருக்கிறார்.

    செயற்கை கணையத்தை முதலில் இரவு நேரங்களில் நான்கு நோயாளி களுக்குப் பொருத்திப் பார்த்தார்கள்; அது வெற்றிகரமாக, சர்க்கரையைக் கட்டுப்படுத்தி இயங்கியது கண்டு மெத்த மகிழ்ச்சியுற்றனர்.

    அதனை மேலும் 24 பேர்களுக்கு செயற்கை கணையத்தைப் பொருத்தி யுள்ளனர்!

    அதுவும் வெற்றிகரமாகி விட்டால் - பெரிதும் நீரிழிவு நோய் இல்லாமலேயே ஆகிவிடும் என்று நம்புகிறார்கள்!

    இது மிகப் பெரிய மருத்துவ சாதனையாகக் கருதப்படக் கூடும்.

    ஏனெனில் சர்க்கரை நோயின் கொடுமை ஒன்று இரண்டல்ல; பல வகைப்பட்டது.

    எனவேதான் இதனை ஒரு சந்திப்பு நோய் Diabetes is a Junction disease) என்று சர்க்கரை நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுமேயானால், அது (Stroke) ஸ்ட்ரோக் - பக்கவாதம், கண்பார்வை இழத்தல், சிறுநீரகப் பழுது, இதய நோயான மாரடைப்பு இவை மூலம் அது உயிரைப் பறிக்கும் நோயாக ஆகி விடுகிறதே!

    மருத்துவ விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் எவ்வளவு அதியற்புத சாதனைகளை அனுதினமும் படைத்து வருகின்றனவே!

    நீரிழிவு நோய், புற்று நோய் - இந்த இரண்டுக்கும் வெற்றிகரமான மருந்து களும், சிகிச்சைகளும் மருத்துவத் துறையில் வந்து விட்டால், உலக மனித குலம் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு நல் வாழ்வு வாழுமே!

    நண்பர்களே, இந்தக் கண்டு பிடிப்புகள் வந்து விட்டன என்பதால், சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விடாதீர்கள்!

    எப்போதும் அளவோடு உண்டு

    நலமோடு வாழுங்கள் -

    இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, இலையில் - தட்டை - விட்டுவிட்டு எழுந்து கை அலம்பி மகிழுங்கள்.

    அதுவே நல்ல ஆரோக்கிய முறையாகும். veramani

    தமிழ் ஓவியா said...


    அரசியல் வாழ்வு


    நமது அரசியல் வாழ்வு என் பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திர வதைக்கு ஆளாகத்தான் நேரிடும். - (விடுதலை, 29.5.1973)

    தமிழ் ஓவியா said...


    ஆடு - ஆடு!


    2011 சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னார்.

    பிள்ளைகளைப் பள் ளிக்கு அனுப்ப வேண்டும் ஆடு மாடுகள் மேய்த்த நம் வீட்டுப் பிள்ளைகளை மறுபடியும் ஆடு மாடுகளை மேய்க்க வைக்க ஏற்பாடா? என்ற வினாவையும் தொடுத்தார்.

    அது ஏதோ அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சொல்லப்பட்டது அல்ல.

    கழிந்த தலைமுறை எப்படியோ போய்த் தொலையட்டும் - நிகழ்கால வருங்கால பஞ்சம - சூத்திரத் தலைமுறைகள் கல்விக்கண் பெறவேண்டாமா? என்ற அக்கறையில் - தந்தை பெரியார் பார்வை யில் சொல்லப்பட்ட கருத்து அது.

    தமிழர் தலைவர் தொலைநோக்கோடு சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. அதுவும் அதிமுக ஆட்சிக்கு அரணாக இருக்கும் தினமலர் ஏட்டிலேயே இன்று வெளிவந்த தகவல் அது.

    குழந்தைத் தொழிலாளர் தினம் பற்றிய கருத் தரங்கு திருப்பூர் பள்ளியில் நடைபெற்றது.

    அந்தக் கருத்தரங்கத் தில் அனுப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்த அந்தத் தகவல் முக்கியமானது.

    நான் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில், என் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

    ஒரு குடும்பத்தில், கணவன், மனைவி இரு வரும் வேலைக்குச் செல்லுவதால் வேறு வழியில்லாமல் அவர்களுடைய மகனை 5ஆம் வகுப்பிலி ருந்து நிறுத்திவிட்டு, ஆடு மேய்க்கச் சொல்லி விட்டனர்.

    அவனும் பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்க்கத் துவங்கினான். அம்மா திட்டத்தால் ஒருவனுக்குப் படிப்புப் பாழாக வேண்டுமா? என எனக்குக் கவலை வாட்டியது. தொடர்ந்து 20 நாட்கள் நடையாய் நடந்து அறி வுறுத்தியும், அவர்கள் கேட்கவில்லை. வேறு வழி யில்லாமல், பள்ளிக்குச் செல்லாவிட்டால், நான்கு ஆடுகளையும், அரசு திரும்பி வாங்கிக் கொள்ளும்? என்று கூறி, மீண் டும் மாணவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது (தினமலர் 14.6.2013 பக்கம் 8).

    சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுதர்மம். இதனை வேறு வழியில் செய்ததால் தான் தமிழர் தலைவர் அன்று எச்சரித்தார். இதோ இப் பொழுது நம் முன்னே! இன்னும் வெளிச்சத்துக்கு வராத எத்தனை அனுப் பட்டிகளோ!

    - மயிலாடன்

    தமிழ் ஓவியா said...


    இதுதான் மதத்தின் குணமா? நாத்திகச் சிறுவனைக் கொன்ற கொடூரம்


    இஸ்லாமிய போராளிகள் 15 வயது சிறுவனை நாத்திகன் என்ற காரணத் தால் முகத்தில் சுட்டுக் கொன்று விட்டனர். அலெப்போ நகரில் ஒரு இஸ்லாமியக் குழு முகமது வாட்டா என்ற 15 வயது சிறுவனைக் கடத்திக் கொண்டு போய், முகத்திலும் கழுத் திலும் சுட்டுக் கொன்று விட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் காஃபி விற்பவன்.

    சமீபத்தில் அந்தப் படம் வெளி யிடப்பட்டுள்ளது. அதில், இரத்தம் ஒழுகும் வாயுடனும், கன்னங்கள் தகர்த்தெறியப்பட்டு, கழுத்தில் துப் பாக்கி குண்டு காயங்களுடனும் அந்தச் சிறுவன் காணப்பட்டான். மனித உரிமைக்களைக் கண்காணிக் கும் ஒரு பிரிட்டிஷ் அமைப்பு அந்த சிறுவன் யாருடனோ கடவுள் இருக் கிறாரா என்று வாதத்தில் ஈடுபட்டு இருந்தான். அப்பொழுது முகமது நபியே திரும்பி வந்தால்கூட, நான் கடவுள் நம்பிக்கையுடையவனாக மாற மாட்டேன் என்று அவன் கூறியதை சிலர் கேட்டுள்ளனர்.

    ஆனால் வேறு சிலர், அவன் சொன்னது சரியாகக் கேட்கப்பட வில்லை. அந்தப் பையன் ஒரு வாடிக்கையாளரிடம் இலவச காஃபி கேட்டதற்கு முகமது நபியே திரும்ப வந்தாலும் கூட நான் உனக்கு இலவச காஃபி கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். இதுபற்றி, பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

    அல்கொய்தா இயக்கம் அந்தப் பையனைக் கடத்திக் கொண்டு போய் 24 மணி நேரம் சித்திரவதை செய்து உள்ளது. பிறகு, பொது மக்கள் கூடியுள்ள வீதியின் மத்தியில் அவன் இழுத்து வரப்பட்டு அவன் தாயின் கண்ணெதிரே கொல்லப்பட்டான். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அக்கொடுஞ் செயலைப் புரிந்தவர்கள் சிரியர்களாகத் தோன்றவில்லை என்று கூறியுள்ளனர்.

    மேலும், உணவைத் தேடி அலைந்த இரண்டு 10,16 வயதுப் பையன்கள் தாலிபான்களால் வெட்டிக் கொல் லப்பட்டனர்.

    அபுசக்கார் என்ற சிரிய போராளித் தலைவர் ஒரு ராணுவ வீரரின் இதயம் துண்டாக்கப்பட்டு உண்பதை வீடியோ படம் பிடித்துள்ளார். இந்த அபுசாக கரின் இதயத்தை உண்ணும் வீடியோ படம் அயல் நாட்டு அலுவலகத்திட மிருந்து பெறப்பட்டுள்ளது.

    நாத்திகம் பேசியதற்காக சிறுவன் கொல்லப்பட்டதைப்பற்றி பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு மேலும் விளக் கமாக தகவல் கொடுத்துள்ளது. அதன்படி,

    அந்தப் பையனைச் சுற்றி கூட்டம் கூடிற்று. போர் அணியைச் சேர்ந்த ஒருவன் அலெப்போ நகரத்து இரக்க முள்ள குடி மக்களே, கடவுளை நம்பாததும் பல கடவுட் கொள்கை பற்றிப் பேசுவதும் - முகமது நபியைக் குற்றம் சாட்டு தலாகும், யார் அவ்விதம் நபியைக் குறை சொல் கிறார்களோ, அவர்கள் இவ்விதம் தண்டிக்கப்படுவார்கள் பிறகு அவன் இரண்டு குண்டு களை, பொது மக்கள், சிறுவனின் தாய் தந்தையர் கண் முன்னிலையிலேயே தானியங்கி துப்பாக்கியிலிருந்து சுட்டான். பின் ஒரு காரில் ஏறிக் கொண்டு போய் விட்டான்.

    ராமி அப்துல் ரகுமான் என்பவர், பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு இந்தக் குற்றங்களைப் புறக்கணிக்க முடியாது. கண்டிக்காவிட்டால் இது புரட்சியின் எதிரிகளுக்கும், மனிதா பிமான எதிரிகளுக்கும் வசதியாகப் போய் விடும் என்று சொன்னார்.

    தமிழ் ஓவியா said...


    இதுதான் மதத்தின் குணமா? நாத்திகச் சிறுவனைக் கொன்ற கொடூரம்


    இஸ்லாமிய போராளிகள் 15 வயது சிறுவனை நாத்திகன் என்ற காரணத் தால் முகத்தில் சுட்டுக் கொன்று விட்டனர். அலெப்போ நகரில் ஒரு இஸ்லாமியக் குழு முகமது வாட்டா என்ற 15 வயது சிறுவனைக் கடத்திக் கொண்டு போய், முகத்திலும் கழுத் திலும் சுட்டுக் கொன்று விட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் காஃபி விற்பவன்.

    சமீபத்தில் அந்தப் படம் வெளி யிடப்பட்டுள்ளது. அதில், இரத்தம் ஒழுகும் வாயுடனும், கன்னங்கள் தகர்த்தெறியப்பட்டு, கழுத்தில் துப் பாக்கி குண்டு காயங்களுடனும் அந்தச் சிறுவன் காணப்பட்டான். மனித உரிமைக்களைக் கண்காணிக் கும் ஒரு பிரிட்டிஷ் அமைப்பு அந்த சிறுவன் யாருடனோ கடவுள் இருக் கிறாரா என்று வாதத்தில் ஈடுபட்டு இருந்தான். அப்பொழுது முகமது நபியே திரும்பி வந்தால்கூட, நான் கடவுள் நம்பிக்கையுடையவனாக மாற மாட்டேன் என்று அவன் கூறியதை சிலர் கேட்டுள்ளனர்.

    ஆனால் வேறு சிலர், அவன் சொன்னது சரியாகக் கேட்கப்பட வில்லை. அந்தப் பையன் ஒரு வாடிக்கையாளரிடம் இலவச காஃபி கேட்டதற்கு முகமது நபியே திரும்ப வந்தாலும் கூட நான் உனக்கு இலவச காஃபி கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். இதுபற்றி, பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

    அல்கொய்தா இயக்கம் அந்தப் பையனைக் கடத்திக் கொண்டு போய் 24 மணி நேரம் சித்திரவதை செய்து உள்ளது. பிறகு, பொது மக்கள் கூடியுள்ள வீதியின் மத்தியில் அவன் இழுத்து வரப்பட்டு அவன் தாயின் கண்ணெதிரே கொல்லப்பட்டான். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அக்கொடுஞ் செயலைப் புரிந்தவர்கள் சிரியர்களாகத் தோன்றவில்லை என்று கூறியுள்ளனர்.

    மேலும், உணவைத் தேடி அலைந்த இரண்டு 10,16 வயதுப் பையன்கள் தாலிபான்களால் வெட்டிக் கொல் லப்பட்டனர்.

    அபுசக்கார் என்ற சிரிய போராளித் தலைவர் ஒரு ராணுவ வீரரின் இதயம் துண்டாக்கப்பட்டு உண்பதை வீடியோ படம் பிடித்துள்ளார். இந்த அபுசாக கரின் இதயத்தை உண்ணும் வீடியோ படம் அயல் நாட்டு அலுவலகத்திட மிருந்து பெறப்பட்டுள்ளது.

    நாத்திகம் பேசியதற்காக சிறுவன் கொல்லப்பட்டதைப்பற்றி பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு மேலும் விளக் கமாக தகவல் கொடுத்துள்ளது. அதன்படி,

    அந்தப் பையனைச் சுற்றி கூட்டம் கூடிற்று. போர் அணியைச் சேர்ந்த ஒருவன் அலெப்போ நகரத்து இரக்க முள்ள குடி மக்களே, கடவுளை நம்பாததும் பல கடவுட் கொள்கை பற்றிப் பேசுவதும் - முகமது நபியைக் குற்றம் சாட்டு தலாகும், யார் அவ்விதம் நபியைக் குறை சொல் கிறார்களோ, அவர்கள் இவ்விதம் தண்டிக்கப்படுவார்கள் பிறகு அவன் இரண்டு குண்டு களை, பொது மக்கள், சிறுவனின் தாய் தந்தையர் கண் முன்னிலையிலேயே தானியங்கி துப்பாக்கியிலிருந்து சுட்டான். பின் ஒரு காரில் ஏறிக் கொண்டு போய் விட்டான்.

    ராமி அப்துல் ரகுமான் என்பவர், பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு இந்தக் குற்றங்களைப் புறக்கணிக்க முடியாது. கண்டிக்காவிட்டால் இது புரட்சியின் எதிரிகளுக்கும், மனிதா பிமான எதிரிகளுக்கும் வசதியாகப் போய் விடும் என்று சொன்னார்.

    தமிழ் ஓவியா said...


    செய்தியும் சிந்தனையும்


    கடவுள் தூங்கினால்..

    செய்தி: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளிமஞ்சம் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் அளிப்பு.

    சிந்தனை: மஞ்சத்தில் படுத்துக் கடவுள் தூங்குவதும் உண்டோ? அப்படி தூங்கும் நேரத்தில் இந்த லோகத்தை வேறு யார் காப்பாற்றுவார்களாம்?

    தமிழ் ஓவியா said...


    பெருமை



    மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வது தான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வது தான் பெருமை.
    (விடுதலை, 10.10.1973)

    தமிழ் ஓவியா said...


    டேப்லெட் கணினிகள் நல்லதா, கெட்டதா?


    டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.

    இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக் கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந் தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.

    எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அவை எதிர்மறை யாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.

    கற்றலை பாதிக்கின்றன

    ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.

    தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக் கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.

    இவரது ஆய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்.

    அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னால் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.

    இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.

    இரு ஆலோசனைகள்

    இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.

    முதலாவது, சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை.அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடு திரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.

    இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.

    தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்து கிறார்கள்.