Search This Blog

7.6.13

அற்பத்தனமான விமர்சனங்களில் ஈடுபடாமல் அணி திரள்வோம் - வாரீர்! -கி. வீரமணி


ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி நிறைவேற்றப்பட வேண்டிய
13ஆவது சட்டத் திருத்தத்தையும் உருக்குலைக்க இலங்கை சதி!
இந்திய அரசு வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்?
அற்பத்தனமான விமர்சனங்களில் ஈடுபடாமல் அணி திரள்வோம் - வாரீர்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதையும் செய்யாமல், மேலும் மேலும் அவர்களை முற்றாக ஒழிப்பதும், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி நிறைவேற்றப்பட வேண்டிய 13ஆவது அரசமைப்புச் சட்டத்தை நிறை வேற்றாமல், அதனை உருக்குலைக்கும் வகையில் இலங்கை அரசு ஈடுபடு வதையும் சுட்டிக்காட்டி, இந்திய அரசு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன்? என்றும் வினா எழுப்பி, ஈழத் தமிழர்கள் நசுக்கப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட இந்திய அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டும், சிங்கள இராணுவத் தால் குண்டு வீச்சு மூலம் இனப்படுகொலை செய்யப்படும் பொது மக்களாகிய எஞ்சிய ஈழத் தமிழர்கள் பலரையும் கடத்திச் சென்று, காணாமற் போனவர்கள் பட்டியலில் சேர்த்தும், சிங்கள இராஜபக்சேவின் ஆட்சி அதிகாரம் நாளுக்கு நாள், வாழ்வுரிமையை ஈழத் தமிழர் களுக்கு அளிப்பதற்குப் பதிலாக அழிப்பதற்கே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் வாய் மூடி மவுனம் ஏன்?
இந்திய அரசு - ஈழத் தமிழர்களைக் காப் பாற்றுவோம் என்று கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லையே!
ஏறத்தாழ - போர் முடிந்து - 4 ஆண்டுகள் முடியும் தருவாயில், அவர்களுக்குள்ள அடிப் படை உரிமைகள்கூட பறிக்கப்பட்டு வரும் நிலைதானே உள்ளது என்று ஏன் தட்டிக் கேட்காமல் வாய் மூடி மவுனியாக, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?
13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பதேகூட முறையாக செய்யப்படவில்லை - இலங்கை அரசு ஏற்கெனவே இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு விட்டது. குறைந்தபட்ச அந்த உரிமைகள்கூட தரப்படாதது மட்டுமல்ல; ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதற்கொப்ப அதனையே அடியோடு பறித்திட  இப்போது 13A  என்ற ஒரு புதிய சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளை வென்று விட்டோம் என்றும், தலைவர்களைக் கொன்று விட்டோம் என்றும் பெருமிதத்துடன் நாடு திரும்பிய நிலையில், இராஜபக்சே அரசு, இலங்கை மண்ணை முத்தமிட்டு, இனி இந்த நாட்டில் பெரும்பான்மை  - சிறுபான்மை என்ற பிரச்சினையே கிடையாது என்று கூறினாரே, அதற்குப் பொருள் என்னவென்பது, இப்போது இத்தகைய உரிமைப் பறிப்புகளின் மூலம்  வெளிச்சம் போட்டுத் தெரிவிக்கவில்லையா?
இலங்கையில் ஒற்றை சர்வாதிகார ஆட்சி!
ஒற்றைச் சர்வாதிகார ஆட்சி - எஞ்சிய தமிழர்கள் எல்லாம் அங்கே போரில் சிறைப் பிடிக்கப்பட்ட வெளிநாட்டுக் கைதிகளை நடத் துவதுபோலவும், எந்த உரிமைகளும் இல்லாத கொத்தடிமைகளாகவும் தான் இருப்பார்கள் என்று பிரகடனப்படுத்துகிறார்களே - சிங்கள இராஜபக்சே கூட்டத்தினர்.
வேடிக்கை பார்க்கலாமா உலகம்?
உலகம் இதனை வேடிக்கை பார்க்கலாமா? நான் தமிழர்களுக்கு எதிராகப் போர் நடத்தவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டும்தான் போர் நடத்தி, மக்களைக் காப்பாற்றுகிறேன் என்ற இராஜபக்சேவின் கூற்று எத்தகைய மாய்மாலம் - புரட்டின் உச்சம் என்பது இப்போதாவது புரிய வேண்டாமா - உலக நாடுகளுக்கும் இந்திய அரசுக்கும்?
அங்கே உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் குரலைக் கூட கேட்டு, குறைந்தபட்ச உரிமை களைக்கூட  எம் தமிழர்களுக்குத் தர அந் நாட்டு சிங்கள அரசு தயாராக இல்லை.
தமிழர்களை அழிக்க சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சியா?
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று கூறி, சாமர்த்தியமாக இங்குள்ள தமிழர்களை ஏமாற்றலாமா மத்திய அரசு? இந்தியாவின் இதர மாநிலங்களில் நாங்கள் பயிற்சி தருவோம் என்றுதானே சொல்லாமற்  செய்கின்றது - மத்திய அரசும், அதன் இராணுவ அமைச்சும்?
தமிழ் இன அழிப்பு வேலைக்கு தமிழ்நாடு அல்லாத மாநிலங்களில் சிங்கள இராணுவப் படைக்குப் பயிற்சி தந்து அழிக்கலாமா? அது சரியா?
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்னாயிற்று?
இந்நிலையில், அரசியல் தீர்வு எதையும் செய்யாதது மட்டுமல்ல, ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்ற ஒன்றை ஒப்புக்காகக்கூட செயல்படுத்துகிறோம் என்று சொல்லி, 13ஆவது திருத்தத்தை 13A என்ற புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் பறிக்கும் - அல்லது ரத்து செய்யும் நிலைக்கே சென்று கொண்டுள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை.

டெசோ தலைவர் கலைஞரின் வேண்டுகோள்!
1. டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி தரக்கூடாது என்று சரியாகக் கூறியுள்ளார்கள்.
2. அதுபோலவே இங்கிலாந்து நாட்டு இராணியே, இலங்கையில் டிசம்பரில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில்  கலந்து கொள்ளக் கூடாது இந்தி யாவும் கலந்து கொள்ளக் கூடாது - அது இலங் கையில் நடக்கின்ற காரணத்தால் என்றும் டெசோ சார்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் அமைச்சராக உள்ள திரு. ஜி.கே. வாசன்அவர்கள்கூட இதனை வலியுறுத்தியுள்ளார் - அது பாராட்டத்தக்கது!

தமிழர்களின் குரலை அலட்சியப்படுத்தும் இந்தியா!
இந்த நியாயமான கோரிக்கைகளை இந்திய அரசு அலட்சியப்படுத்தி, எங்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் குரலும், உலக மனிதநேயர்களின் கோரிக் கையும் முக்கியமல்ல என்று கூறி அலட்சியப் படுத்திப் போகிறதா? தெளிவுபடுத்த வேண்டியது அவசரம் - அவசியம் அல்லவா?
வெறுமனே 1000 கோடி ரூபாய் அளிப்பும் இராணுவப் பயிற்சியும் தமிழ் இனத்தை வாழ வைக்கவா? அழிக்கவா?
தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதா?
தமிழ்நாட்டு மீனவர்கள் 45 நாள்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நேற்று தங்கள் வாழ்வாதாரத்திற்கான தொழிலான மீன் பிடிக்கச் சென்றுள்ளபோது, இராமேசுவரம் மீனவர்களை இலங்கைக் கப்பற்படை - சிறைபிடித்து தொல்லை கொடுத்து படகுகளை உடைத்தும், மூழ்கடித்தும் தொந்தரவு கொடுக் கும் அன்றாடப் படலத்தை மீண்டும் துவக்கி விட்டார்களே!
கச்சத்தீவு அருகில் இலங்கைக் கப்பற்படை கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி யிருக்கிறதே இலங்கை அரசு. அதற்கு என்ன பொருள்? யாரை நோக்கிய சவால், அச் சுறுத்தல்? தமிழ்நாட்டு மீனவர்களை நோக் கியா? இந்திய அரசினை நோக்கியா?
இதற்கொரு முடிவே கிடையாதா? இந்திய மத்திய அரசின் இந்த மெத்தனப் போக்கு களைக் கண்டு மீனவ சகோதரர்கள் வேதனைத் தீயில் வெந்து கருகுகிறார்கள்.
தேவை - நிரந்தரத் தீர்வு!
இதற்கு ஒரு நிரந்தரத் தீவு காணப்பட வேண்டாமா?
எனவே, ஈழத் தமிழர்கள் வாழ்ந்த வரலாறு இனி பொய்யாய், பழங் கதையாய், கனவாகிப் போக வேண்டும் என்ற சிங்களப் பேரின வாதத்தின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி தேவை! தேவை!!
இங்குள்ளவர்கள் அற்பத்தனமான விமர் சனங்களில் ஈடுபடாமல், இன எதிரிகளின் அடாத செயலை எதிர்த்து அணி திரள ஆயுத்தமாவோம் -  வாரீர்!
-----------------கி. வீரமணி  தலைவர், திராவிடர் கழகம் -6.6.2013 சென்னை

28 comments:

தமிழ் ஓவியா said...


விபச்சாரம்


விபச்சாரம் என்பது பார்ப்பனர்களுக்குப் பிள்ளை விளையாட்டு! இல்லாவிட்டால் இதற்கென்றே ஒரு பகவானைப் படைத்து இருப்பார்களா?

வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்ஸனம் பாப நாஸம்
சம்பனம் சர்வதீர்த்தானாம்
மைதுனம் மோஷ சாதனம்

வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம், நாசம், முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்கு சமமான புண்ணியம், உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி.

இதுதான் இந்த சுலோகத்தின் பொருள். மோட்சத்தை அடைய இவ்வளவு சுலபமான மார்க்கத்தைக் காட்டி விட்டது சங்கராச் சாரியார் மதம். இந்து மதத்திற்கு ஈடு இணை இந்தப் பூவுலகில் எங்கும் இருக்கமுடியுமா!

தமிழ் ஓவியா said...

வேதங்களின் வண்டவாளம்

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்...

பதினோராவது புருஷனை நியோகத்தில் பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்து கின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர் களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

தமிழ் ஓவியா said...


பாவ விமோசனம்


பகவானிடம் பக்தி காட்டினால் போதும். வைதீகச் சடங்குகளிலே வாயையும், வயிற்றையும் கழுவிக் கொண்டால் போதும் - எதுவும் செய்யலாம் - எப்படியும் நடந்து கொள்ளலாம் - பகவான் அருள் அட்டியின்றிக் கிடைத்துவிடும்.

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் காட்டும் அற்புத மார்க்கம்!

பாவம் மிகப் பெரியது - கழுவாயோ மிகச் சிறிது!

இது வேதாரண்யம் தல வரலாறு இதனை வெளியிட்டது ஸ்ரீ வேதாரண்யேஸ்வரசுவாமி தேவஸ் தானம். வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள ராமச் சந்திரபுரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக் கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான்.

மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தா லல்லவா செய்யக் கூடும். எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கைவரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்குப் பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந் தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள்.

இவனைக் கண்டதும் இவன் இளமை யிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள்.

அவனும் மதுவை இதுவரையறியாதவனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவைக் கொன்றான். காமந்தலைக்கேறி, அவ் விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ்விதவையைப் பார்த்து-நீ யார்? உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் விதிவலி கொடியது, வெல்லுதற்கரியது என வருந்தினான்.

இப்பழி தொலையும் வழி யாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை. வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் அவன்முன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா! இதற்குத் தற்கொலையும் செய்துகொண்டு அப் பாவத்தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக் காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவனேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும். அப்படியே செய் என்றருளினார்.

பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சக்தி பதம் பெற்றாள்.

- இதை எழுதுவதற்கேகூடக் கை கூசுகிறது. ஆனால், வேதாரண்யேஸ்வரம் எழுந்தருளி இருக்கும் இத் தலத்தின் பெருமையும் தீர்த்தத்தின் (குளத்துநீர்) மகிமையும் எத்தகையது என்பதற்கு அளவுகோலை, தாயைப் புணர்ந்த பாவமும் தலைத் தெறிக்க ஓடியது என்பதிலே கொண்டுபோய் வைத் திருக்கிறார்கள் என்றால், இது ஒரு நாடு; இங்கு ஒரு மதம்.

இதனைக் கட்டியழச் சங்கராச்சாரிகள் என்றால் இந்தக் கேவலத்தின் தொகுப்பை - எல்லையை - பக்தி மார்க்கத்தில் ஒழுக்கச் சீலர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள்தான் சீர்தூக்கி எடைபோட்டு பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அம்மையாரை சிக்கலில் மாட்டும் நமது எம்.ஜி.ஆர்.ஏடு


முதுமையை முறியடிக்கிறார் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி விட்டாராம்! கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்கிறது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடாகக் கூறப்படும் நமது எம்.ஜி.ஆர். (6.6.2013, பக்கம் 18).

ஆயுளின் பெருமை என்பது வாழும் வருடங்களைப் பொறுத்ததல்ல! வாழுகிற காலத்தில் மக்களுக்கு ஆற்றிய பெருமை கொண்ட சேவைகளைப் பொறுத்ததே ஒருவனின் பிறப்புப் போற்றப்படுவதும், தூற்றப்படுவதும்! என்று தத்துவார்த்தம் வேறு பேசுகிறது அவ்வேடு.

90 வயதில் கலைஞர் மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யவில்லையா? மக்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களங்களில் குதித்து சிறைத் தண்டனைகளைப் பலமுறை ஏற்கவில்லையா?

அரசியலில் ஈடுபட்டு தோல்வி என்றால் என்ன வென்றே தெரியாத அளவுக்கு (12 முறை வென்று) 50 ஆண்டு சட்டமன்ற பணிகளைச் செய்த ஒரே தீரர் கலைஞர் தானே! இதே நேர்க்கோட்டில் அவர்களின் தலைவியரை வைத்துப் பேச முடியுமா?

கலைஞரின் பணிகளை அண்ணாவே பல வகைகளில் பாராட்டியது கிடையாதா? கலைஞரின் கைக்குக் கணையாழி அணிவித்தது எதற்காக? என்ற வரலாறு எல்லாம் அ.தி.மு.க. எழுத்தாள ருக்குத் தெரியுமா? கட்சியின் பெயரிலும், கொடியிலும் அண்ணா வேறு - அந்த அண்ணா பார்வையில் கலைஞர் எத்தகையவர் என்று முதலில் தெரிந்துகொள்ளட்டும்!

திராவிட இயக்க வீராங்கனைகள் பெயரில் மகளிர் நலத் திட்டங்களைச் செய்தவர் யார்?

பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தவர் யார்?

கலைஞர் செய்த திட்டங்களைத் தாண்டி மகளிர்க்கு அ.இ.அ.தி.மு.க. அரசு சாதித்தது என்ன?

அரவாணி என்று கேவலப்படுத்தப்பட்டவர்களை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்காக நல வாரியம் அமைத்தது யார்? அந்த நலவாரியத்தை முடக்கிய அம்மையார் யார்?

ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலிந்தோர்க்கு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தது யார்? (கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் உள்பட).

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைச் செயல்படுத்தியவர் யார்? அதனால் பொதுமக்கள் பலன் அடையவில்லையா?
20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் அம்மையார் ஆட்சி எங்கே? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்த கலைஞர் ஆட்சி எங்கே?

90 வயதிலும் போராட்டக் களம் கண்டவர் கலைஞர் - 90 ஆவது வயதிலும் போர்! போர்!! போர்!!! என்று அறிவிக்கக்கூடிய திராணி படைத்தவர் கலைஞர். அதனால்தான் முதுமையை முறியடிக்கிறார் கலைஞர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

நினைவாற்றல் இருப்பதால்தான் சொந்தமாகப் பேசுகிறார் - சொந்தமாக எழுதுகிறார் - அந்த உண்மையைத்தான் திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் எதிர்கேள்வி போட்டால் அவர்களின் தலைவரை எந்த இடத்தில் நிறுத்தி வைப்பது?

வரலாறு தெரியாத நுனிப்புல் மேய்பவர் களிடம் எழுத்தாணியைக் கொடுத்தால், எதையாவது கிறுக்கித் தள்ளி - அதன் விளைவு அக்கட்சியின் தலைவியைப் பரிதாபத்திற்குரிய இடத்தில் அல்லவா நகர்த்தும்!

ஒருக்கால் அது நடக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இப்படி வலிய வம்புக்கு வருவதுபோல் காட்டிக் கொள்கிறார்களோ!

இவை எல்லாம் அம்மையாரின் கவனத்திற்குப் போகவா போகிறது என்கிற தைரியத்தில்தான் இப்படி எல்லாம் எதிர்விளைவை நோக்காது கிறுக்குகிறார்களோ!

அந்தோ பரிதாபம்!

- கருஞ்சட்டை- 7-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி தேர்வு முறை: இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது - ஏன்?


தந்தை பெரியார் கொள்கைக்கு விரோதமானது!

தமிழக அரசுக்கு கலைஞர் கேள்வி

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, ஜூன் 7- ஆசிரியர் பணிக் கான தகுதி தேர்வில் தாழ்த்தப் பட்டோர் உட்பட அனைவருக்கும் - ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயித்தது - இடஒதுக்கீடு கொள்கைக்கும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டு தலுக்கும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கும் விரோதம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். முரசொலியில் இன்று அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி :- ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப் படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதே?

கலைஞர் :- மூன்றாவது முறையாக இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்ட தாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர் பார்ப்பதால், 15 இலட்சம் விண்ணப் பங்களை அச்சடித்து விநியோகிக்கப் போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட் டாயக் கல்வி சட்டத்தின்படியான விதி யாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப் பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்தி லிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங் களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி யன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியன்றும் நடக்கவுள்ளன.

தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கனவே நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப் படும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப் பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழ கத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமான தாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதி யினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித் துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர் களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு விரோத மானதுமாகும்.

எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறை யாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வர வேண்டும்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் முரசொலி யில் இன்று எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...


மக்களாட்சி முறை


சாக்ரடீஸ் மக்களாட்சி முறையைப் பார்த்துச் சிரித்தார்.

அவர் தனிச் சிலர் ஆட்சிமுறையின் நன்மைகளை வியந்து பாராட்டி பேசினார்.

ஏதென்சின் மக்களாட்சி முறையை எள்ளி நகைப்பதற்கு நிறையக் கார ணங்கள் இருந்தன. நானூறாயிரம் ஆதிக்குடி மக்களில் இருநூற்றைம்பதாயிரம் பேர், அரசியல் உரிமைகளின்றி அடிமைகளாக இருந்தனர்.

உயர் அதிகார அமைப்பான உச்சநீதி மன்றத்தில் குடி மக்களின் பெயர்ப் பட்டியலில் இருந்து அகர வரிசையில் தேர்வு செய்யப் பெற்ற ஓராயிரம் பேருக்கு மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். இதைவிட முட்டாள்தனமான செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

சாக்ரடீஸ் இதைப் பார்த்து நகைத்து ஏதென்சின் மக்களாட்சி முறையைக் குதர்க்கவாதம் செய்யும் சமுதாயத்தோடு ஒப்புமைப்படுத்திக் காட்டினார்.

மக்களாட்சிக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் சிலர் ஆட்சிக் கட்சி பொடியாகிப் போய் விட்டது.

மக்களாட்சி முறையைப் பற்றிய கருத்துக்களுக்காகவும் ஏதென்சு இளைஞர்களிடம் பல கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை விதைத்துப் பரப்பியமைக்காகவும் சாக்ரடீசைத் தீர்த்தக் கட்டுவதென்று மக்களாட்சிக் கட்சி முடிவு செய்தது.

சாக்ரடீஸ் இதிலிருந்து எளிதாகத் தப்பியிருக்க முடியும்.

ஆனால் தத்துவத்தின் தியாகியாக வரலாற்றில் நிலைத்திருக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதன் வாயிலாக, மனித மனம் வளர்ச்சியடைவதற்குச் சிந்தனை விடுதலை என்பது மக இன்றியமையாத உட்கூறு என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

(நாம் ஆராய்ந்து பாராமலே மெய்யென ஏற்றுக் கொள்ளும் பேச்சுரிமையைப் பெற்றுத் தந்த எண்ணற்ற தத்துவ ஞானிகளுக்கு நாம் உண்மையில் நன்றியுடையவர் களாவோம். பேச்சுரிமை நடைமுறையில் இல்லாத அக்காலத்தில் வால்டேர் விடா முயற்சியுடன் பேச்சுரிமையை ஆதரித்து வாதாடினார்.

ரூசோவின் இயற்கை இயல் வாதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது வால்டேர் சொன்னார்:

நீங்கள் சொல்வதனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன்.

ஆனால் அதைச் சொல்லும் உங்கள் பேச்சுரிமையை இறுதிவரை நான் உறுதியாக ஆதரிப்பேன் என்றார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான கொள்கைப் பரப்புரையில் தளராத உறுதியுடனும் துணிவுடனும் பெரியார் அரும்பாடுபட்டார். கீழத்தரமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, பகட்டு ஆரவாரம் கொண்ட, ஆவ ணம் பிடித்த மதம் வெறுமைக்குழியில் விழுந்தது. இதனை அச்சமின்றிப் பெரியார் திறனாய்ந்தார். சாக்டீரசின் காலத்து ஏதென்சு, பல்வேறு தத்துவங்களின் வார்ப்புப் பட்டறையாக விளங்கியது.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 39ஆம் பக்கத்தில்)

- க. பழநிசாமி, கன்னிவாடி

தமிழ் ஓவியா said...


குறும்பா


தீர்ந்ததா?

குருவுக்கு...
அர்ச்சனை...!
குருக்களுக்கு
தட்சிணை....!
பக்தனுக்கு...
தீர்ந்ததா...?
பிரச்சினை...??

குறும்பா

வெறி பிடித்தோர் ஆட்டம்!
நரித் தந்திர ஆட்டம்...!
சொறி பிடித்த வெறி நாயை
ச் சூ விட்டாடும் சூதாட்டம்...!
நெறி கெட்ட
கிரிக்கெட்டால்...
கண்ட பலன்..?
நாட்டு வளம்
வீட்டு நலம்..
கெட்டதுதான்..
இலாபம்.!!

- _ கோ. கலியபெருமாள்
மன்னார்குடி_1

தமிழ் ஓவியா said...


ஞானக் கண்ணோ!


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தில் (14.6.2013) ஒரு கட்டுரை. காஞ்சிபுரத்தில் கண் கொடுத்த வைத்தீஸ்வரன் - என்பது தலைப்பாகும்.

கேரளப் பெண் ஒருவர் தலையில் அடிபட்டுக் கண் பார்வை பாதிக்கப்பட்டா ராம். குருவாயூர் தொடங்கி கும்பகோணம் வரை க்ஷேத் திராடனம் சென்றால் கண் பார்வை வந்து விடும் என்று சொன்னார்களாம். அவ்வாறே அந்தப் பெண் சென்றாராம்; வைத்தீஸ் வரன் கோயிலில் வழிபடும் போது - எதற்கும் காஞ்சி புரம் சென்று பெரிய வாளைத் தரிசித்தால் பார்வை வரும் என்று கோயில் குருக்கள் கூறினா ராம் (எங்கெங்கெல்லாம் சங் கிலித் தொடர் பார்த்தீர் களா?) அவ்வாறே அங்கு சென்று சந்திரசேகேந்திர சரஸ்வதியைத் தரிசித் தாராம் - பழத்தட்டுக்களுடன்.

அப்பொழுது அந்தப் பெண்ணின் கணவரைப் பார்த்து சங்கராச்சாரியார் என்னைத் தெரியற தான்னு உங்க சம்சாரத் துக்கிட்டேயே கேளுங்க என்றார். அத்துடன் அருகி லிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரிய வாள். (தேஜஸ் என்பது இதுதானோ!) அந்த நேரம் அந்த பெண், குருக்கள் சொன்ன (வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன) சந்நியாசி இதோ தெரிகிறாரே என்றாராம் சத்தமாக பரவசம் பொங்க!

ஆமாம் காஞ்சி தெய் வம் அவளுக்குக் கருணை புரிந்தது. நம்பினார் கெடு வதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு என்று சும் மாவா சொல்லி வைத் தார்கள் என்று விஜயபார தம் அவிழ்த்து விட்டுள்ளது.

அற்புதத்தைச் சொல்லி தான் எந்த மதத்தையும் காப்பாற்ற வேண்டும் என் றாலும் சங்கராச்சாரியார் களைப் பொறுத்தவரை அற்புதங்களை நம்பாத வர்கள், இன்னும் சொல்லப் போனால் கடவுளை ஏற் காதவர்கள். தானே கடவு ளாக, கடவுளே தானாக இருப்பதாக ஸ்மார்த்தர் களின் சித்தாந்தம். அகம் பிரம்மாஸ்மி தத்வம் அஸி என்று சொல்லுவதும் அது தான். அப்படி இருக்கும் போது இது என்ன புதுக் கதை? விஜயபாரதத்தின் 24ஆம் பக்கக் கட்டுரைக்கு 35ஆம் பக்கத்தில் பதில் இருக்கிறது.

கேள்வி: குருடர்கள் கண் பார்வை பெறு கிறார்கள். செவிடர்கள் (காது) கேட்கிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள் என கிறிஸ்தவர்கள் பிரச் சாரம்பற்றி.

பதில்: ஆஹா ரொம்ப நல்லது. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டாம் - டாக் டர்கள் வேண்டாம் - சி.எம்.சி. ஆஸ்பத்திரி வேண்டாம் - மெடிக்கல் ஷாப் வேண்டாம் நல்லது தானே... ஒரே ஒரு சந்தே கம் தெரசா, டி.ஜி.எஸ். தினகரன் போன்றோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றது ஏனோ? இதுதான் விஜயபாரத்தின் பதில்; இதே கேள்வியை சங்கராச்சாரியாரைத் தரிசித்ததால் பெண் பார்வை பெற்றார் என்பதுபற்றியும் கேட்கலாம் அல்லவா!

Tail - Piece: அந்தக் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரா நேத்ராலயாவில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரே - அது ஏனோ?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஈழப் பிரச்சினையும் பி.ஜே.பி.யின் பார்வையும்



ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொருத்த வரையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது.

பிஜேபி.யைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் இலங்கைக்குச் சென்றனர். யாழ்ப்பாணம் பகுதிக்கும் சென்றுள்ளனர். அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் சந்தித்தனர்.

இந்தப் பயணம் குறித்து பிஜேபி குழு என்ன கூறுகிறது? இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா தயா ராகவே உள்ளது. ஆனால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவும் என எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. உள்ளூர் அரசியல் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் சரியானதாக இருக்கும். இலங்கையை இந்தியா நட்பு நாடாகத் தான் பார்க்கிறது ஆகவே அந்த நாடு சீர் குலைவதை இந்தியா அனுமதிக்காது என்று கூறியுள்ளது.

இதைச் சொல்லுவதற்குத்தான் பிஜேபி குழு இலங்கை சென்றதா? தமிழர்கள் அங்குள்ள பிரச்சினைகளை யாரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்?

தமிழினம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்ற வகையில் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தியும், சிங்கள இன வெறியைத் தூண்டியும் செயல்படுகிறவர்களிடம் எந்த வகையில் தமிழர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியும்?

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிட்டது இல்லையா? இந்தியா தலை யிட்டது இல்லையா? பாகிஸ்தான் சம்பந்தப் பட்டதுதானே வங்காள தேசப் பிரச்சினை - அதற்குத் தீர்வு எப்படி கிடைத்தது? இந்தியா வின் பங்கு அதில் கிடையாதா?

அப்படிப் பார்த்தால் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம் பெற்றது எப்படி? இன் றைக்கு அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கும் வகையில் செயல்படும் பொழுது இந்தியா அதில் தலையிட பாத்தியதை உடையது ஆகாதா?

ஈழத் தமிழர்களின் பிரச்சினை என்பது வெறும் உணவு, உடை, உறையுள் பிரச்சினை மட்டும் தானா? அதனைத் தாண்டியும் தங் களின் இனம், மொழி, பண்பாட்டு அடை யாளங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுபற்றிய கருத்தென்ன?

இந்தப் பிரச்சினையில் அந்தரங்க சுத்தியோடு பிஜேபி செயல்பட்டது கிடையாதே. இதற்கு முன்பு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை பிஜேபி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்றபோது, அதிபர் ராஜபக்சேவுடன் கலந்து பேசிய பிறகு, தனியே ராஜபக்சேயுடன் சுஷ்மா சுவராஜ் பேசியதுபற்றி சர்ச்சைகள் கிளம்பவில்லையா?

அதன்பின் புத்தர் விழா என்று சொல்லி ராஜ பக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்தது இதே சுஷ்மா சுவராஜ்தானே!

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு அரசு - ஒரு நாடு இந்தியாவிற்கான நட்பு நாடு என்று சொல்ல எப்படி மனம் வருகிறது?

தமிழர்களை மறந்து விடுங்கள் - மனித உரிமைக் கண்ணோட்டத்திலாவது இதனை அணுக வேண்டாமா?

மனித உரிமைகள் ஒரு நாட்டில் பறிக்கப் படுமேயானால், இனப்படுகொலை (Genocide) ஒரு நாட்டில் நடைபெறுமானால், அதில் தலையிட மற்ற நாடுகளுக்கு உரிமை உண்டு என்ற நியதிகூட பிஜேபிக்குத் தெரிய வில்லையா?

இங்குள்ள சோ ராமசாமிக்கு என்ன பார்வையோ, அதே பார்வைதான் பிஜேபிக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்!



புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப் பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

தமிழ் ஓவியா said...


சாலையோரங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல கோயில்களும்தான்


புதுக்கோட்டை டவுனில் பிருந்தா வனம் என்றொரு பகுதி உள்ளது. வடக்கு ராஜவீதியும் தஞ்சை சாலையும் இணை யும் இந்த இடத்தில் எப்போதும் மக்கள் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்த இடத்தில் விபத்துகள் ஏதும் நடைபெறா வண்ணம் சிக்னலும் அமைக்கப்பட்டிருக் கிறது. இன்று காலை 5-மணியளவில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்றும் புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சை சாலையை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் பிருந்தாவனம் முக்கத்தில் அதிவிரைவாக மோதிக் கொள்ள நேர்ந்தது. அதில் இரு லாரிகளின் ஓட்டுனர்களும் தங்களையும் தங்களது வாகனங்களையும் காப்பாற்ற திருப்பியும் விபத்துக்கு உள்ளானது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் ஒரு லாரியின் ஓட்டுநர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச் சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.

உடைந்து நொறுங்கியது அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்ச நேயர் கோயில்தான். பக்தர்களாலும் ஆன்மீகப் பெரியோர்களாலும் ஆஞ்ச நேயரை அவர் ராம பக்தராக இருக்கின்ற காரணத்தாலும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதாலும் ஆஞ்ச நேயருக்கு மிகப் பெரிய வலிமை இருக் கிறது என்றும் வல்லமை பொருந்திய அவரை வணங்கினால் அவருக்கு உரிய சக்தியைத் தம் பக்தர்களுக்கு அருளி பாலித்து வழங்கி விடுவார் என்றும் கற்பிக்கப் பட்டு ஆங்காங்கே அதிக எண்ணிக்கையில் கட்டப் பட்டு வரும் ஆஞ்சநேயரின் சக்தி அவரது இருப் பிடத்தைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது.

அந்த இடத்தில் விளக்குத்தூண் மட்டும் இல்லாதிருந்தால் அருகில் உள்ள கட்டடம் எப்படி உடைந்து சேதாரமாகி இருக்கும் என்பதைக் கற்பனையும் செய்ய இயலாத அளவிற்கு அந்த விபத்து நடந் திருக்கிறது. கோயில் உடைந்து நொறுங்கி விட்டது. இதுதான் ஆஞ்சநேயரின் பலம் என்பதை பக்தர்கள் உணரும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழரின் அடிமை விலங்கொடிக்கும் நாளாக இருக்கும். மேலும் சாலையோரங்களில இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல இது போன்ற பக்திப் போதையை வளர்க்கும் கோயில்களும் தான்.

ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிறப்புரிமை


வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக் கும் டாக்டர் மூஞ்சே அவர்களுக்கும் வங்காளத் திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை மேற்படி இரு கனவான் களும் வீரர்களைப் போல் மீறி நடந்தார்கள். அம்மீறுத லானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தே சித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம்.

அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக்கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி.ரங்காச் சாரியார் முதலிய பார்ப்பனர்கள் அரசப் பிரதிநிதி யிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வருகிறது.

ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்றுவதற்கு மற்றொரு புறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்குப் பிறப்புரிமை என்பது இதனால் விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவதான மசோதவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப் பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக்குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டுமென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப் பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்து நமது டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார்.

அதாவது:-

இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்துமத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசியல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் உள்பட காங்கிரஸ் காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில் காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும்.

ஆதலால் சட்டசபையிலுள்ள சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தவர்கள் கண்டிப்பாய் இது விஷயத்தில் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். அரசியலில் வேற்றுமை இருந்தாலும் சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய் நான் ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்.

அதாவது, வெளியிடப்பட்டிருக்கும் இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனரல்லாதாரும் முழு மனதுடன் ஆதரிக்கிறார்கள். மசோதாவுக்கு விரோதமாய் செய்யப்படும் கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால் நடத்தப்படும் பொய்க் கிளர்ச்சியாகும். இது விஷயமாய் அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கவும் தயாராயிருக்கிறேன் என்று பார்ப்ப னருக்கும் அரசாங்கத்திற்கும் தந்தி கொடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு மேல் ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதை நாம் முழு மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய் ஆதரிக்கவும் செய் கிறோம். இப்பார்ப்பனர்களின் கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத் தீவிர தேசியவாதிகளை ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திரமல்லாமல் சர்க்காரோடும் ஒத்துழைக்கச் செய்கிறது.

இனியும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் கொடுமையும் வெளியாக வெளியாக இன்னமும் என்னென்ன செய்யச் சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான் அறிவாள்.

- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?


பேராசிரியர், முனைவர் பு.இரா சதுரை எம்.ஏ.பிஎச்.டி., அவர்களின் நூலில் (இரண்டாம் பதிப்பு 77 ஆம் பக்கத்தில் இருப்பது)
என்றும் போரே எதிலும் வெற்றியே!

1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வாங்கினார்கள். தான் நிலைநாட்டிய வகுப்புரிமைக்கு அரசியல் சட்டத்தின் பேரால் தீங்கு வந்தபோது பெரியார் பொங்கி எழுந்தார்.

எதற்கும் துணிந்து விட்டோம்;

எதிரிகள் முட்டுக்கட்டை கண்டு கவலையுறோம்;

நம் நாட்டின் வசதிகளில் நமக்குரிய பங்கைக் கேட்பதை யாரும் அநீதி என்று கூறவி யலாது;

எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்பத்திற்கு இந்த வகுப்புப் பிரச்சினையே காரணம்;

நமது உண்மைத் தகுதிக் கும், திறமைக்கும் எந்தப் பார்ப்பானும் ஈடாக மாட்டான் என்று கூறிப் போர் தொடுத் தார். ஊர்தோறும் வகுப்புரிமைப் போர் முரசொலித்துப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

விருதுநகர் செந்திற்குமார் நாடார் கல்லூரியில் 1950இல் இதற்கான போராட்டத்தை நடத்தியவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர்.

- க.பழனிசாமி

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்! (ஆவணக் குறிப்புகளிலிருந்து)

விடுதலை பவள (75-ஆம் ஆண்டு வெளி யீட்டில், 90ஆம் பக்கத்தில் இருப்பது)



சில உறுதியான உண்மைகள்

தாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து அர சாங்கத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வடார்க்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணி யிடங்கள் எல்லாச் ஜாதியார்க்கும் அளிக்கப்பட வில்லை என்று தாங்கள் தங்கள் பத்திரிகையில் ஆசிரிய உரை எழுதியும் வேறு பல கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி இருந்தும் நிலைமை மாறவில்லை என்பது குறித்துத் தாங்கள் பத்திரிகையில் எழுத இடம் அளிக்க வேண்டுகிறேன்.

நிலைமை சீரடையவில்லை என்பது மட்டுமின்றி இன்னும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அடியிற் கண்டவற்றிலிருந்து அறியலாம்.

1. மாவட்டத்தின் 5 டிவிஷன்களிலும், ஹூசூர் கருவூலத்திலும் ஆறு டெபுடி கலெக்டர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.

2. ஹூசூர் சிரஸ்தார் ஒரு பிராமணரே.

3. மொத்தமுள்ள ஏழு தாசில்தார்களும் பிராமணர்களே.

4. மொத்தமுள்ள பதினைந்து டெபுடி தாசில்தார்களில் பத்துப்பேர் பிராமணர்களே.

5. மொத்தமுள்ள நான்கு தலைமைக் கணக்கர்களும் பிராமணர்களே.

6. மொத்தமுள்ள 39 வருவாய் ஆய்வாளர்களில் (Revenue Inspector) 30 பேர் பிராமணர்களே.

7. கோட்ட (டிவிஷனல்) அலுவலகங்களில் உள்ள அய்ந்து தலைமை எழுத்தர்களில் மூவர் பிராமணர்களே.

8. செட்டில்மெண்ட் பணி பார்க்கும் அலுவ லர்களில் மொத்தமுள்ள அய்ந்து துணைத் தாசில்தார்களும் இருபது வருவாய் ஆய்வாளர்களில் பதினைந்து ஆய்வாளர்களும் பிராமணர்களே.

தமிழ் ஓவியா said...


மாக்கடலாய் மதுக்கூரில் எழுவீர்! எழுவீர்!!


மதுக்கூர் என்றால் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் தான் நினைவிற்கு வருவார்.

நாகை இரயில்வே பணிமனையில் பணியாற்றியதால் அவர் நாகை காளியப்பன் ஆனார்.

அய்யாவின் நம்பிக்கைக்கு உரிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர் மலேசியாவுக்கு தந்தை பெரியார் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு, குடிஅரசு இதழுக்குச் சந்தாக்களை அங்கு திரட்டினார்.

அவருடைய நூற்றாண்டு விழாவை கழகம், மதுக்கூரில் சீரும் சிறப்புமாக நடத்தியது.

அதே மதுக்கூரில் நாளை மறுநாள் (10.6.2013) வட்டார மாநாடு நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் தன்மான முரசறைய உள்ளார்.

திண்டுக்கல் பொதுக் குழுவுக்குமுன் நடைபெறும் மாநாடு இது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மாநாட்டில் இன்றைய பிரச்சினைகள் குறித்து கழகத்தின் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் கருத்து வாள்களைச் சுழற்ற இருக்கின்றனர்.

ராஜபாளையம் மாநாட்டில் கழகம் அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியும், தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நீர் சிக்கல் குறித்தும், தமிழர்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று புராணம் புளுகும் ராமன் பெயரால் முடக்கப்படும் அநீதி குறித்தும், பற்றி எரியும் ஈழம் பற்றியும் கருத்துக்களம் சூடு பறக்க உள்ளது.

தமிழ்நாட்டில் கழகப் பேரணி எங்கு நடந்தாலும் அதில் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றக் கூடிய அத்திவெட்டி தோழர்கள் அங்குதானே இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்பொழுது மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிபற்றிக் கேட்கவா வேண்டும்?

கழகம் என்றால் இளைஞர்களின் சங்கமம் என்பதை ராஜபாளையம், ராஜபாட்டையில் நடத்திக் காட்டியது.

பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் இளைஞர் பட்டாளம் இருக்கவே இருக்கிறது. அவர்களின் கைத்திறனைக் காணப்போகிறோம்.

தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர இருக்கிறார்கள்.

அலை அலையாக மாநாடுகளை நடத்திக் கொண்டி ருக்கும் உயிர்ப்புள்ள இயக்கமாக (டுஎந றுசைந) திராவிடர் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்ட நாளை, போர்த் தலை வர் தமிழர் தலைவர் ராஜபாளை யம் மாநில இளைஞரணி மாநாட் டில் அறிவித்துவிட்டார். அறி வித்த அந்த சில மணித் துளி களுக்குள் ரத்தக் கையொப்ப மிட்டு ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் போராட்டக் களத்திலே குதிக்கப் பட்டியலைக் கொடுத்து விட்டனர். எந்த இயக்கத்தில் இப்படி நடக்கும் - எதிர்பார்க்கத் தான் முடியும்?

மதுக்கூர் மாநாட்டிலே பெரும் எண்ணிக்கையில் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

தமிழர்கள் இன்னும் நாலாஞ் ஜாதிகளா? தந்தை பெரியாரின் சகாப்தத்திலும் இன்னும் நாம் சூத்திரர்களா?

உங்களைச் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கவில்லையா?

தந்தை பெரியார் நாட்டுக்கு விட்டுச்சென்ற சொத்துக் களிலேயே விலை மதிக்க முடியாத பெருஞ்செல்வம் நமது தலைவர் - தமிழர் தலைவராக வையத்தில் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் அவர்களின் காலத்திலே சூத்திர இழிவை ஒழிப்போம்! ஒழிப்போம்!!

தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் பெயர் கொடுத்ததற்கு அதுதான் காரணம்.

அந்த இழிவு என்பது தமிழன் வீதிகளிலே தமிழன் கட்டிய கோவில்களின் கருவறைக்குள்ளே ஆணவமாக அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரிலே நாம் தோற்கக் கூடாது - தோற்கவும் மாட்டோம்.

சட்டம் ஒரு பக்கம் சவாரி செய்யட்டும் - மக்கள் மத்தியிலே நாம் ஏற்றும் சூடுதான் - நாம் எழுப்பும் உணர்ச்சி எரிமலைதான் நம்மைச் சூழ்ந்துள்ள இன இழிவை - சூத்திர இழிவைச் சுட்டெரிக்க முடியும்.

ஆங்காங்கே நாம் நடத்திக் கொண்டுவரும் மாநாடு கள், அதற்கான ஒத்திகைதான் - போடும் அஸ்திவாரம்தான்.

மதுக்கூர் மாநாடு மகத்தானதாக அமையட்டும்!

மான மீட்க, தமிழர்களே மதுக்கூர் நோக்கி மாக்கடலாய்ப் பொங்கி எழுவீர்! எழுவீர்!!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...

ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்



- அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்

கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? - சுகி சிவம்

புதிய விளக்கம்:

சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைக்கமாட்டார்கள். வீட்டிலேயே பொங்கல் வைத்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.

கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. மற்ற நேர்த்திக்கடன் எல்லாம் கோவில் சொத்தாகிவிடும். பொங்கல் நேர்த்திக்கடன், முழுவதும் தங்கள் சொத்தாகி விடும். இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்கிறார்களே தவிர, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதுபோல உப்புப் பொங்கல் வைப்பதில்லை. அதனால், கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பவர்கள் அனைவருமே இனிப்பு விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.

வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடந்தால் அம்மா சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுபோல் கடவுள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வராதது இருக்கட்டும். தாய் குழந்தைக்கு அன்போடு ஊட்டிவிடுகிறாளே, அதுபோல கடவுள் வந்து பக்தர்களுக்கு ஊட்டிவிடலாம் அல்லவா?

குழந்தை அளைந்து கெடுத்த உணவைத் தாய் சாப்பிடுகிறாள். சில கோயில்களில் பொங்கல் பிரசாதத்தை எல்லாம் குப்பையில் கொட்டப் பார்த்திருக்கிறேன். அதையாவது சாப்பிட வரலாம் அல்லவா?

கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதானே. அப்படி ஒரு சக்தி எங்கும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆன்மீகவாதிகள் கதை அளப்பதெல்லாம் பக்தர்களை மூளைச் சலவை செய்வதற் காகவே தவிர, வேறு காரணம் இல்லை.

தமிழ் ஓவியா said...

குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்

பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் குழந்தைத் திருமணங்கள் வினோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள நம்மியம்பட்டு, ஜமுனாமாத்தூர் கிராமங்களில்.

வயதுக்கு வந்த (12-15 வயது) பெண்கள் மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு நம்மியம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் சந்தையிலும், திங்கட்கிழமை ஜமுனாமாத்தூரில் நடைபெறும் சந்தையிலும் கூடுகிறார்கள். அப்போது 16லிருந்து 20 வயதுக்குள் இருக்கும் ஆண் பிள்ளைகள் வர, அவர்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்பு, இருவரும் சேர்ந்து பையனின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இருவரும் ஒன்றாக - கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்களாம். இல்லையென்றால், அந்தப் பெண் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாளாம்.

வாழ்க்கையைத் தொடர விரும்பினால், திருமணம் செய்து வைப்பதற்கும் விரும்பவில்லை என்றால் பிரித்து வைப்பதற்கும் 14 வயது நிரம்பிய தலைவர் செத்தியராஜ் இருக்கிறார்.

தாத்தாவுக்குப் பின் பேரன் நாட்டாரா வர வேண்டும் என்று 9 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு செத்தியராஜ்க்கும் நாட்டாரா பட்டம் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மக்களில் யார் திருமணம் செய்தாலும் இந்த நாட்டாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, இவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை தாலி கட்டுவாராம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு என்று வந்தால் பிரித்து வைத்துவிடுவாராம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொடுப்பார்களாம்.

இதனால் கைக்குழந்தைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் இளம் விதவை களும் அதிகம் காணப்படுகின்றனர். சிறு வயதி லேயே திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைவதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இது நடப்பது மிகவும் தலைக் குனிவானது அல்லவா? ஆண்டாண்டு கால வழக்கம் என்றும்,கடவுள் கட்டளை என்றும் சொல்லி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நியாயப்படுத்த முடியாது.அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது. அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

தமிழ் ஓவியா said...

இதோ...! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்


படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் திராவிட இயக்க உழைப்பின் பயனை இன்று கண்கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கூவித் திரியும் துரோகிகளுக்கும் இந்த விவரங்கள் சமர்ப்பணம். 100 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது எப்படி என்பதில் போட்டி உருவாகிவருகிறது. அந்த அளவுக்கு கல்வி ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளின் ஒப்பீடு இது.

2008 மற்றும் 2011ஆ-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது

OC பிரிவினரின் cut off மதிப்பெண் 1.5% அதிகரித்துள்ளது.

BC பிரிவினரின் cut off மதிப்பெண் 3.25%அதிகரித்துள்ளது.

BCM பிரிவினரின் cut off மதிப்பெண் 3.5% அதிகரித்துள்ளது.

MBC பிரிவினரின் cut off மதிப்பெண் 4.75%அதிகரித்துள்ளது.

SC பிரிவினரின் cut offமதிப்பெண் 6.25% அதிகரித்துள்ளது.

ST பிரிவினரின் cut off மதிப்பெண் 18% அதிகரித்துள்ளது.

35% மார்க் வாங்கிய தலித் மாணவர்கள்.... தகுதி இல்லாத மாணவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்.. திறமைக்கு மதிப்பில்லை என்றெல்லாம்.... இப்படிப் பேசுபவர்களை எல்லாம் பார்த்தா காறித் துப்பனும் போல இருக்கு - இந்த கட்_ஆஃப் லிஸ்ட் பாத்ததும்!!!

(கட்_ஆஃப் என்றால் இந்த மதிப்-பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்று பொருள். எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஷிசி பிரிவினரில் 192.25 மதிப்-பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்தான் இடம்பெற முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இடஒதுக்-கீட்டுக்கு எதிராகப் பேசும் மே(ல்)தாவிக் கும்பல் ஏதோ வெறும் பாஸ் மார்க் மட்டும் எடுத்தவரை எல்லாம் மருத்துவராக்கி உயிருடன் விளையாடுகிறார்கள் என்று பச்சையாகப் பொய் பேசி வருகின்றனர். அதை முறியடிக்கின்றன இந்தப் புள்ளி விவர உண்மைகள்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தியபோது - பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை என்.பி. என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டுப் - பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கலைஞரின் தேவை


செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பயனாளி களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

சிந்தனை : கலைஞர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே தக்க சான்று. கலைஞரின் திட்டங்களை முடக்காமல் தொடரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

கருத்து


இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது.

-கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


கழிவறைகளில் தேவையைவிட பல மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை நம்மிடையே இல்லை. மாற்றுத் திட்டம் கண்டறியப்பட வேண்டும். விண்வெளியில் தண்ணீரற்ற முறையில் கழிவுகள் வெளியேற்றப்-படுகின்றன. நிலத்திலும் இதே போன்றதொரு திட்டம் தேவை.

- சாந்தா ஷீலா நாயர், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர்

தமிழ் ஓவியா said...

கலைஞர் - 90


இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே :

வாரியாரைத் திணறடித்த மாணவர்

திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் தெரியாதா-? என்றார்.

வாரியார்: கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்றவைகளைப் பறித்துத்தான் சாப்பிடுகிறோம். இது உயிர்க்கொலை ஆகாது. ஆட்டையும், மாட்டையும் கொலை செய்து சாப்பிடக்கூடாதென்பதற்காகத்தான் ஆண்டவன் தாவரங்களைப் படைத்தார். தளதளவென்றிருக்கும், வாழைமரத்தை வெட்டி, வாழைத்தண்டை உண்பதும், தழைத்து நிற்கும் கீரைத் தண்டைப் பிடுங்கிச் சாப்பிடு-வதும், உயிர்க்கொலை அல்லவா? நமக்குத்தான் தாவரங்களை ஆண்டவன் படைத்தார் என்றால் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்காக எவைகளைப் படைத்தார்? என்று அந்த மாணவர் கேட்டதும், வாரியார் திக்குமுக்-காடினார் _ திகைத்தார். தன் கையில் அணிந்திருந்த _ முருகா! முருகா! எனப் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தடவிக் கொண்டார். வெள்ளிக் கூஜாவில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தார்.

மேலும் தர்க்கம் நடவாமல் இருக்க, கோயில் அறங்காவலர் வடபாதிமங்கலம் மைனர் வி.எஸ். தியாகராச முதலியார் சில பிரமுகர்களை அனுப்பி அந்த மாணவரை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். 1943ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்கு-வாதத்தின் விளைவாகத் திருவாரூர் இளைஞர்-களிடையே உற்சாகமும், பெரியோர்களிடையே பரபரப்பும், தி.க. தோழர்களிடையே மேலும் நெருக்கமான தொடர்பும், ஒற்றுமையும் ஏற்படுத்திவிட்ட அந்த மாணவர்தான் இன்றைய கலைஞர் என்கிறார் டாக்டர் இரா.விஜயராகவன்.

மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற _ சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். 2004இல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் தம் பிடிக்கச் சொல்லிவிட்டு, மூச்சை நிறுத்துங்கள் என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கேன் என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம்.

சோதனை முடிந்த பிறகு, இப்போது மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் டாக்டர்.

மூச்சை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்-தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர்.

மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வள்ளுவனுக்குக் கோட்டமும், சிலையும் அமைத்தவர், குறளோவியம் வரைந்தவர் குறள் நெறியில்தானே செல்வார்.

தமிழ் ஓவியா said...

வசனத்தை மாற்றமுடியாது; நடிகையை மாற்று

குறவஞ்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். வில்லனிடம் சிக்கிய இளம்பெண், அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. இந்தக் கட்டத்தில் அவள், கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? என்று சொல்லிக் கதற வேண்டும். இளம்பெண்ணாக நடித்த நடிகை, இந்த வசனத்தைச் சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது மாற்றுங்கள் என்றார் திடீரென்று.

நல்லவேளையாக அப்போது செட்டில் கலைஞர் இல்லை.நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், பயனில்லை. கடவுளைத் தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேசமாட்டேன் என்று அடியோடு மறுத்து விட்டார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பண்டரிபாய், நிலைமையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் முறையிடுவது போல்தானே தவிர, தூஷிப்பதாகாது. அந்த வசனத்தைப் பேசி நடியும்மா! என்று எவ்வளவோ சொல்லியும், அவரது அறிவுரைக்கும் அந்த நடிகை இணங்கவில்லை.

அந்த நேரம் பார்த்து, கலைஞர் எதேச்சையாக வந்து விட்டார். நிலைமையை விளக்கினோம். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க மாட்டீர்களா? என்று கலைஞர் கேட்டார்.

வேறு ஏதாவது மாற்றி எழுதுங்கள். பேசுகிறேன்! என்று கலைஞரிடமே கூறிவிட்டார் அந்த நடிகை.

என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவே தேவையில்லை. உங்களை மாற்றி வேறு யாரையாவது போட்டுக் கொள்கிறோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்! என்று கூறிவிட்டார் கலைஞர்.

இந்த நடிகையைப் போட்டு அய்யாயிரம் அடி வரை எடுத்திருக்கிறோமே...... என்று அச்சத்துடனேயே கலைஞரிடம் சொன்னேன். அந்த ஃபிலிமைக் கொளுத்திவிட்டு, இந்த காரெக்டருக்கு வேறு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். தன்னுடைய உயிரான எழுத்துகளை நம்மைவிட உயர்வாக மதிப்பவர் கலைஞர் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார் மாயூரம் சௌந்தர்.

தொகுப்பு : சபீதா ஜோசப்
நன்றி : கலைஞர் 100 - நக்கீரன் வெளியீடு



கலைஞர் மொழி :

பிழைப்பு

வயிற்றுப் பிரச்சினையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் எனக் கருதுவது வாழ்வாகாது! அதற்குப் பெயர் பிழைப்பு! வாழ்க்கை அல்ல!

ஆண்டவன்

புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவனுக்குப் பெயர்தான் ஆண்டவன் என்றால்.....
ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவனா?


அனுதாபம்

ஒருவன் சாணத்தை எடுத்து நம்மீது வீசுகிறான். அது நமது சட்டையில் படுகிறது.
அப்போது நமக்கு ஏற்பட வேண்டியது ஆத்திரமல்ல. அதற்குப் பதிலாக சாணம் வீசியவன் தன் கையையல்லவா கறைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அனுதாபம்தான் ஏற்பட வேண்டும்.
இழிமொழிக்கு இழிமொழி எதிர்த்துக் கூறிவிடுவது சுலபம்! அதைத் தாங்கிக் கொள்வதுதான் கடினம்!
அந்தக் கடினமான வேலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


புகழ்

புகழே! நீ பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய், புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை! புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்!

தகுதி

மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளிலேயிருந்து அவர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஞாயிறு, 09 ஜூன் 2013 14:43
E-mail Print

காவிக் கொண்டாட்டம்

செய்தி: குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக் கக்கோரி நாடு முழுவதும் யாத்திரை செய்யப் போகிறேன். - யோகா குரு ராம்தேவ்

சிந்தனை: காவிகளும், பணத் திமிங்கலங் களும் கொடுக்க வேண்டாமா ஆதரவு? சும்மா ஆடுமா சோழியன் குடுமி?

தமிழ் ஓவியா said...


தினமலரே கூறுகிறது திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...!


திருப்பதி, ஜூன் 9- திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.

திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு காவல்துறை பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 காவலர்கள் உண்டு.

ஆனால், தினசரி, 200 காவலர்கள் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 காவல்துறையினரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 காவல்துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவத்தை சேர்ந்த, "ஆக்டோபஸ்' என்ற படைப்பிரிவு, விஜிலென்ஸ், சிறப்பு காவல் படை, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் வரும் போது, காட்டு பகுதியில் சென்று சோதனை செய்ய தனிப்பிரிவு என, திருமலையில், பாதுகாப்பு பணியில் போதிய அளவில், ஆட்கள் உள்ளனர்.

எனினும், திருட்டு, குழந்தைகள் கடத்தல், பெரியவர்களே காணாமல் போவது போன்ற சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், டவுன் - 1 காவல் நிலையத்தில், 300 வழக்குகளும், டவுன் - 2 காவல் நிலையத்தில், 243 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திருமலையில் கூட்ட நெரிசல் சமயத்தில், தங்குவதற்கு வாடகை அறைகள் கிடைக்காததால், வெளியிடங்களில் பக்தர்கள் உறங்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், அதிகமாக நடக்கிறது. பெற்றோரும், உறவினர்களும் புகார் அளித்தாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு வேளையில், பெற்றோர் அருகில் உறங்கும் குழந்தைகளையும், கூட்ட நெரிசல் சமயத்தில், காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க, பாதுகாப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, திருமலையில் காணாமல் போன சென்னையை சேர்ந்த, மூன்று வயது சிறுவன் பிரத்யுத்தை, இன்று வரை கண்டுபிடிக்க வில்லை. மூன்று நாட்களுக்கு முன், நடைபாதை வழியில் காணாமல் போன, அய்ந்து வயது சிறுமி ரோஷினியை கடத்திச் சென்றவன் குறித்த, புகைப்பட தகவல் கிடைத்தும், காவல்துறையினர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

திருமலைக்கு வரும், முக்கிய பிரமுகர்களின் தரிசன ஏற்பாட்டையும், அவர் களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வசதிகளையும் கவனிக்கவே, காவல்துறையினருக்கு நேரம் போதவில்லை. இதனால், பக்தர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள், ரொக்க பணம் திருடு போவது அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து, உறவினர்கள் தகவல் அளித்த உடனே, தேடியிருந்தால், பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

ஆனால், காவல்துறை யினரிடம் புகார் அளிக்க சென்றால், "உங்களால் முடிந்தவரை தேடி பாருங்கள்; கிடைக்கவில்லை என்றால், அப்போது புகார் அளிக்க வாருங்கள்' என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி விடுகின்றனர்.

திருமலை முழுவதும், 2,000 கண்காணிப்பு கேமராக்களை தேவஸ்தானம் பொருத்தி உள்ளது. ஆனால், அதிக திருட்டு சம்பவங்கள் நடைபெறும், முடி காணிக்கை அளிக்கும், "கல்யாண கட்டா' பகுதி, சப்தகிரி வாடகை அறைகள் உள்ள பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

ஒரு சில இடங்களில் இருந்த போதும், அது சரியாக இயங்காத நிலையிலேயே இருக்கும். திருமலையில், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை, ஜி.எம். ஆர்., குழுமம் பராமரித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஜி.எம்.ஆர்., குழுமம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல், தேவஸ்தான நிர்வாகம் அமைதி காக்கிறது.

திருமலையில் காணாமல் போனவர்கள் பற்றி புகார் கிடைத்தவுடன், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க, ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்தவர் அளிக்கும் ஆதாரத்தின் அடிப் படையில் செயல்பட்டால், சுலபமாக இதற்கு ஒரு வழி பிறக்கும். தேவஸ்தான நிர்வாகம், இதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நேர்த்திக் கடன் செலுத்த கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்! கணவன் கண் முன் மனைவி, மாமனார் பலி



துவரங்குறிச்சி, ஜூன் 9- நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு செல்லும் வழியில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கணவன் கண் முன்னே மனைவி, மாமனார் பரிதாபமாக பலியாயினர்.

திருச்சி மாவட்டம், சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி, 32. இவர்களுக்கு, போதும் பொன்னு என்ற, 2 வயது மகள் உள்ளார். முத்துலட்சுமியின் அப்பா, மலையாண்டி, 50. இவர்கள் குடும்பத்துடன், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த, நேற்று காலை, 8:30 மணிக்கு புறப்பட்டனர்.

மலையாண்டி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய மூவரும், இருசக்கர வாகனத்திலும்; தங்கப்பாண்டி, இவரது தம்பி பொன்னுசாமி ஆகியோர், வேறொரு இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.

திருச்சி புறவழிச் சாலை, வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே, மதுரையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற, டவேரா' கார் படுவேகமாக, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மலையாண்டி, முத்துலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கண் முன்னே மனைவியும், மாமனாரும் இறந்ததால், தங்கபாண்டி அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். 108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், இருவரது உடல்கள், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் வேலு (40), என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.