Search This Blog

19.6.13

தமிழ்த் தேசியம் பேசுவோர் கண்களுக்கு 'சோ' பார்ப்பனர்கள் தெரியவே தெரியாதோ!

கே: கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும், சாகித்ய அகாடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு அளித்துள்ளது பற்றி?

ப: எல்லா மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கிட்டி விடும் என்று, தமிழ் மொழிக்கு அந்த அந்தஸ்து தரப்பட்ட போதே நாம் எழுதியிருந்தோம்.

அதுதான் மத்திய அரசின் எண்ணம் என்பது கலைஞர் உட்பட எல்லோருக்கும் அப்போதே தெரிந்துதான் இருந்தது. நியாயமாகப் பார்த்தால், செம்மொழி அந்தஸ்து பெறுகிற எல்லா மொழியினரும் கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு ஒரு குறை; மெட்ராஸ் பாஷை என்ன பாவம் செய்தது? அதற்கும் செம்மொழி அந்தஸ்து தந்தால் என்ன குடியா முழுகி விடும்?

                              -----------------------------------------”துக்ளக்” 19.6.2013 பக்கம் 11)

தமிழைக் கொச்சைப்படுத்துவது என்றால் பார்ப்பனர்களுக்கு பாயசம் சாப்பிடுவது மாதிரி!

தமிழுக்குச் செம்மொழி தகுதி கொடுக்கும்போது  மெட்ராஸ் பாஷைக்கு ஏன் கொடுக்கக் கூடாது என்று கொடுக்கில் விஷத்தைத் தேக்கி பதில் சொல்கிறார் திருவாளர் சோ. ராமசாமி.

தினமலர் என்ன எழுதியது தெரியுமா?

கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஏழை நெசவாளர் வீட்டுக் கைத்தறி நிற்காமல் இயங்கும் ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாத வர்களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். 
                    -------------------------------(தினமலர் 13.6.2004).

தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட் டார்கள்                                                  
                                             ---------------------(துக்ளக் 23.6.2013).

இப்படி எல்லாம் தமிழைக் கொச்சைப்படுத்தி எழுதுவதுபற்றி தமிழ்த் தேசியம் பேசுவோர்களின் வாய்கள் திறக்கவே திறக்காது. எழுதுகோல்கள் வேலை நிறுத்தம் செய்துவிடும்.

பிராமணர் என்றால் அறிவாளி என்று புது அகராதிகளைத் தொகுத்து வைத்திருப்பவர்கள் எப்படி பார்ப்பனர்களை விமர்சிப்பார்கள்?

தமிழை செம்மொழியாக்கினால் பிரியாணி பொட்டலம் வருமா என்று கேட்கிறார்களே. ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறி வித்து மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தபோது கோடிக் கோடியாகப் பணத்தைக் கொட்டினார்களே. அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு குதிரை பிரியாணி வந்ததோ!

தமிழைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக எழுதும் இதே சோ. ராமசாமி கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது துக்ளக்கில் (18.11.1998) என்ன எழுதினார் தெரியுமா?

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை, ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும், புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத் துவம் மொழிக்கல்ல ஒலிக்கு என்று வக்கணையாக எழுதினாரே!

எல்லாவற்றையும் கடந்தவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு அதில் இந்த மொழிதான் கடவுளுக் குப் புரியும். ப்ரீதம் என்று சொல்லும் அரட்டைக் கச்சேரியைக் கவனிக்கத் தவறக்கூடாது.

அவர்கள் ஸம்ஸ்கிருதம்பற்றிப் பேசினால் அது மொழி வெறியாகாது. நாம் தமிழைப்பற்றிப் பேசினால் மொழி நக்ஸலிசம்!

 தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழியைப் பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும் தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத் திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தாய்மொழியெனக் கருது வதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ் கிருதத்தின்மீதுதான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் (2.11.1947) எழுதினாரே - அதுதான் எவ்வளவு பெரிய இமாலய உண்மை.

கூடுதல் தகவல்: (Tail Piece:) அம்மாவை வாடி என்றும், மகளைப் போடி என்றும் தண்ணீரை ஜலம் என்றும் வீட்டுக்குப் போவதை ஆத்துக்குப் போறேன் என்றும் பேசும் அத்திம்பேர் - அம்மாமி - அக்கிர கார பாஷையைவிட மெட்ராஸ் பாஷை கேவலமானதல்ல.
                              ----------------------------” விடுதலை” 19-6-2013


34 comments:

தமிழ் ஓவியா said...


சு...தந்திரம்


நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட்டது என்று ஆடினார்கள் - பாடினார்கள். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கப்படுகிறது - (மன்னிக்கவும், கொஞ்சம் முன்னேறி - சாக்லெட் கொடுக்கப்படுகிறது)

ஆனாலும்.. ஆனாலும்... 2012ஆம் ஆண்டு குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் எனும் அமைப்பு வெளியிட் டுள்ள ஒரு தகவல் நமது தலையை 360 டிகிரியில் சுற்றச் செய்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் 2012ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத் தப்பட்ட வன்கொடுமை வழக்குகள் 33,655; 1.10 லட்சம் வழக்குகள் இன் னும் நிலுவை என்னும் ஊறுகாய்க் கலயத்தில் குறட்டை விட்டுத் தூங் கிக் கொண்டிருக்கின் றன - 5.6 சதவீத வழக் குகளில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண் டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக் கான தங்கப்பூண் அணி விக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்!

இந்த லட்சணத்தில் சில ஜாதீயவாதிகள் இப் பொழுது அக்னியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளார்கள். தலித்களுக்கு எதிரான அணியைத் திரட்டப் போகிறார்களாம். தமிழ் நாட்டில், தந்தை பெரியார் மண்ணில் அது வேகாது என்பதற்கு அடையாளம் அந்த நெருப்பு அதற்குள் அணைந்து சுருண்டது என்பதுதான்.

தீண்டாமைக் குற்றம் செய்பவர்களைத் தண்டிப் பதற்காக இருப்பது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம்; அது தவறாகப் பயன்படுகிறது என்றும், அந்தச் சட்டத்தை அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் நீட்டி முழங்கிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவ ரத்தை ஒரு முறை கவனிக்க வேண்டும்.

இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக் கின்றன. இன்னும் ஜாதி சுடுகாடுகள் இருக் கின்றன. இன்னும் கரு வறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை தாழ்த் தப்பட்ட மக்களுக்குக் கிடையாது. இன்னும் கவுரவக் கொலைகள் - தருமபுரிகள் - நடந்து கொண்டுதான் இருக் கின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந் திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கடவுளைக் கும்பிட போன 71 ஆயிரம் பக்தர்கள் : அந்தோ பரிதாபம்!


வெள்ளத்தில் சிக்கி விழி பிதுங்கித் தவிக்கிறார்கள்

கடவுள்கள் காப்பாற்றவில்லை - இராணுவம் விரைந்துள்ளது

டி.ஆர். பாலு எம்.பி. உதவிக் கரம் நீட்டுகிறார்

புதுடில்லி , ஜூன் 19- வட மாநிலங்களில் உள்ள பத்ரிநாத், கேதாரநாத் முதலிய இடங்களில் உள்ள இந்துக் கோயில் களில் வழிபடச் சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி வேதனைப்படு கின்றனர். ஹெலிகாப்டர் உட்பட இராணுவம் பக்தர் களைக் காப்பாற்ற விரைந்துள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் களும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் பிரதமரைச் சந்தித்து, பாதிக்கப் பட்ட பக்தர்களை மீட் பது குறித்துப் பேச இருக்கிறார்.

வடமாநிலங்களில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள் ளது. ஆங்காங்கு ஏற் பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் காரண மாக கோயில் தலங் களில் மொத்தம் 71,000 பேர் சிக்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட யாத்ரீ கர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரி விக்கின்றன.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிக மாக உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், போன் றவற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 175 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ருத்ரபிரயாக் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கேதாரநாத் மூழ்கியது

பக்தர்கள் அதிகம் செல்லும் கேதார்நாத் கோயில் மழை வெள்ளத் தில் மூழ்கியது. கோயில் மதில் சுவரின் ஒருபகுதி வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கோயில் அருகே சிக்கியுள்ள பக்தர்களை மீட்க நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

உத்தரகண்ட் மாநி லத்துக்கு தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும் என மாநில முதல்வர் விஜய் பகு குணாவிடம், பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறியுள்ளார். மீட்புப் பணி மற்றும் நிவாரண உதவிகள் செய்வதற்காக மத்திய அரசின் பல் வேறு துறைகளுக்கும் பிரதமர் உத்தரவிட் டுள்ளார்.

கங்கோத்திரி நிலையும் அதுதான்!

இமயமலைத் தொடரில் உள்ள பத்ரிநாத்,கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட தலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசி யிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கி உள் ளனர். அவர்களை மீட் கத் தேவையான நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இமாசலப்பிரதேசத்தில் கின்னாவூர் பகுதியில் நிலச்சரிவால் முதல்வர் வீரபத்ரசிங் 60 மணி நேரம் சிக்கிக் கொண் டார். மேலும் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள 1,700 பேர் மீட்கப் படவில்லை. பின்னர் காங்கிரஸ் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் அழைத்து வரப்பட்டார்.

உத்தரகண்டில் உள்ள கோவிந்த் காட் குருத் வாராவுக்கு எந்த சேத மும் ஏற்படவில்லை என மாநில சிறுபான்மை யினர் நல ஆணையத் தலைவர் நரீந்தர் ஜீத் சிங் கூறியுள்ளார். அங்குள்ள சீக்கியர்களின் புனித நூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குருத் வாராவில் சிக்கியுள்ள 9000 யாத்ரீகர்களை மீட்க ராணுவத்தினர் உதவியுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேற்கு வங்கம் உதவி உத்தரகண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ள யாத்ரீகர் களை மீட்கத் தேவையான உதவி களை மேற்கு வங்க அரசு செய்யும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களை மீட்பது தொடர்பாக உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகு ணாவுடன் பேச்சு நடத்தியுள்ளேன். இதற்காக சில ஹெலிகாப்டர்களை யும் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்று மம்தா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தனர்!

உத்தரப்பிரதேசத்திலும் பலத்த மழையால் 4 பேர் உயிரிழந்தனர். கங்கை, யமுனை, சாரதா போன்ற நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநில அரசு உஷார் நிலையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலாளர் தீபக் சிங்கால் கூறியது: யமுனை ஆற்றில் 8 லட்சம் கன அடியும், சாரதா ஆற்றில் 4 லட்சம் கன அடி வெள்ளநீரும் வெளி யேற்றப்பட்டுள்ளன. 23 மாவட்டங் களில் மிகவும் அபாய நிலை காணப் படுகிறது.

ஹரியாணாவிலும் யமுனை நகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் மூழ்கியுள்ளன. பஞ்சாப் மாநிலத்திலும் அமிருதசரஸ், பாட்டியாலா, சண்டீகர், நகோட்கர் உள்ளிட்ட நகரங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.

யாத்திரை ரத்து!

மானசரோவர் யாத்திரையில் இரு குழுக்களின் பயணம் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. மோசமான வானி லையால் யாத்திரை ரத்து செய்யப் பட்டது.

ரிஷிகேஷ்-கேதாரநாத் சாலை யிலும் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் தஹோட் பகுதியில் கட்டட கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி உள்பட இருவர் உயிரிழந்தனர். யமுனை ஆற்றில் மழைவெள்ளம் அபாய கட் டத்தைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆந்திர யாத்ரீகர்களை மீட்க நடவடிக்கை: உத்தரகண்ட் மாநிலத் தில் சிக்கியுள்ள 3000-க்கும் மேற் பட்ட ஆந்திர மாநில யாத்ரீகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார். மொத்தம் 12 ஹெலிகாப்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

விரைந்தது விமானப்படை

விமானப்படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உத்தர கண்டில் மீட்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கேதாரநாத்தில் சிக்கி யிருந்த 200 பேர் மீட்கப்பட்டனர்.

சோனியா காந்தி அறிவுறுத்தல்: மழை,வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாசலப் பிரதேசம்,உத்தரகண்ட்டில் தேவையான நிவாரணப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை துரிதமாக மேற்கொள்ளும் படியும் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

டி.ஆர். பாலு நடவடிக்கை சைதாப்பேட்டை மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து கடந்த 8ஆம் தேதி 50 பேர் ரயில் மூலம் டில்லி சென்றனர். இவர்களில் 30 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் அங்கிருந்து ஆக்ரா, ஹரிதுவார், ரிஷிகேஷ் ஆகிய தலங்களுக்குச் சென்றனர்.

பின்னர் உத்தரகாண்ட் மாநிலத் தில் கேதர்நாத் சென்ற அவர்கள் அங்கிருந்து பத்ரிநாத் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதன்படி மலைப்பகுதி வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப் போது அப்பகுதியில் மழை கொட்டியது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மலைப்பகுதியில் ஒரு இடத்தில் வைத்து, இதற்குமேல் செல்ல வேண்டாம் என்று தடுத் துள்ளனர்.

இதையடுத்து அனைவரும் தங் களது பத்ரிநாத் பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு அருகில் உள்ள லாட்ஜில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் சென்னை பக்தர்கள் பரிதவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து உத்தரகாண்ட் பத்ரிநாத்துக்கு சுற் றுலா சென்ற 50 பேரையும் பத்திரமாக அழைத்துவர தி.மு.க. நாடாளு மன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்காக இன்று மத்திய உள் துறை அமைச்சரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழ் ஓவியா said...

50 காவல்துறையினரை காணவில்லை

உத்தரகண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிக்கு சென்ற 50 காவல்துறையினரை காணவில்லை என்று காவல்துறை உயர் அதி காரிக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் மீட்பு பணிக்காகச் சென்ற காவல்துறையினர் வெள்ளத்தில் சிக்கியதாகவும் 5 காவலர்கள் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் மற்ற வர்களை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சந்தி... சிரிக்கிறது!

செய்தி: அத்வானியை நரேந்திர மோடி சந்தித்தார்.

சிந்தனை: விடயம் சந்தி சிரிக்கிறதே - சந்திக்காமல் என்ன செய்வாராம்?

தமிழ் ஓவியா said...


அரசு என்ன செய்ய உத்தேசமோ!


திண்டுக்கல்லில் நடைபெற்ற (15.6.2013) திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் குறிப்பிடத்தக்கது - சமூகநீதித் தொடர்பான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வு பற்றியதாகும். இதுவரை தமிழ்நாட்டில் நடந்திராத அளவுக்கு சமூக அநீதி இதில் கொடி கட்டிப் பறக்கிறது.

தீர்மானம் வருமாறு:

ஆசிரியர் தகுதி தேர்வு - சமூகநீதிக்கு விரோதமான தமிழக அரசின் செயல்பாடு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், சமூக நீதிக்கு விரோதமாகவும், தேசிய கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமாகவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதி அனைவருக்கும் ஒரே அளவு தகுதி மதிப்பெண்ணை (60 சதவிகிதம்) நிர்ணயித்து இருப்பதை திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியும், அதுகுறித்துச் சிந்திக்காமல் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது - சமூகநீதிக்கு வெட்டப்படும் படுகுழி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், செய்த தவறைத் திருத்திக் கொண்டு, தமிழ் மண்ணுக்கே உரிய சமூகநீதி உணர்வைக் கட்டிக் காக்குமாறு தமிழ்நாடு அரசை - குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.

இந்தச் சமூக அநீதி கமுக்கமாகக் கழுத்தறுப்பது போல, மிக மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

முதன் முதலில் இந்தப் பிரச்சினையை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான்; வெளிப்படையாக்கியது விடுதலை - எனும் சமூக நீதிப் போர் வாள்தான்.

அதன் பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி சமாளித்த கல்வி அமைச்சர், தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளாமல், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏதோ சில வார்த்தைகளை பிறகு வெளியிட்டார்.

இது இன்னும் ஆபத்தானது. அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு - சமூகநீதிக்கு விரோத மானதே என்பதே கல்வி அமைச்சர் கூறுவதற்கான பொருளாகும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதுகுறித்து விளக்கமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்; கல்வியாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் கதையாக, ஏற்கனவே 19 ஆயிரம் ஆசிரியர் பணிகள் நியமனத்தில் செய்த அதே தவறினை - வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பான்மை அ.இ.அ.தி.மு.க. அரசிடம் இல்லை என்பது இன்னும் விரிவாக வெளிச்சமாகத் தெரிந்து விட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால், தமிழ்நாடு அரசு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு என்ற ஆணையைப் பிறப்பிக்கப் போய் - 1980 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியை வாரி அணைத்துக் கொண்டார் - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சமூகநீதிக்கு எதிரான அவரது ஆணையை மக்கள் மத்தியில் வலுவாக திராவிடர் கழகம் எடுத்துச் சென்றது - இநதத் தோல்விக்குக் காரணம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிக் கொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அரிய ஆலோசனை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்டது.

அதே முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் இன்றைக்கும் முதல் அமைச்சர் - சமூக நீதிப் பிரச்சினை யில் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டாமா? கோட்டை விட்டு விட்டாரே!

தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியவருக்கும் இடையே உள்ள இடைவெளி கூடத் தெரியாதவரா முதல் அமைச்சர் ஜெயலலிதா? பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் கையணைத்து வீதிகளில் உரிமை முழக்கமிடக் களத்தில் குதிக்க ஆரம்பித்தால் இந்த ஆட்சியின் நிலை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

குதிரை காணாமற் போன பின்பு தான் இலாயத்தை இழுத்துப் பூட்டப் போகிறதா அ.இ.அ.தி.மு.க. அரசு? தமிழ் மண் போராட்டக் களமாக மாற வேண்டுமா?

பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது; என்ன செய்ய உத்தேசம்?

தமிழ் ஓவியா said...

நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)


சில மாதங்களுக்கு முன்பு (ஏன் ஓராண்டுக்கு மேலாகவே கூட இருக்கலாம்); என்னுடன் முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் விடுதியில் தங்கியிருந்தவர் திரு. லட்சுமி நாராயணன் என்ற நண்பர். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர்; பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; அதற்கு முன்பும் இண்டர்மீடீயெட் என்ற இடைநிலை வகுப்பும் அங்கேயே படித்து அறிமுகமான நண்பர் திராவிடர் இயக்கப் பற்றாளர்.

எப்போதும் என்னிடத்தில் அன் புடன் பழகுபவர்; நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அண்ணாச்சி என்றுதான் அழைத்துக் கொள்வோம்! எனது அறைக்கே வந்து விடுதலை படிப்பார்; பல்வேறு செய்திகளை விவாதிப்பார்.

அதன்பிறகு அவர் பணிக்கு சென் னையில் சேர்ந்தபிறகு அடையாறு காந்திநகர் பகுதியில் குடியிருந்தார்; அவருடைய மகனும், என் மகனும் அங் குள்ள பள்ளியில் வகுப்புத் தோழர்கள்!

சிற்சில நேரங்களில் எங்கள் வீட் டிற்கு வந்து உரையாடிச் செல்வார்; பிறகு அதிக தொடர்பு இல்லை.

திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் அலுவலக முகவரிக்கு வந்தது. அத் துடன் முப்பாதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு, நான் லட்சுமிநாராயணன் எழுது கிறேன் என்று எழுதி, விடுதலையை நாளும் படித்து வருகிறேன். ஓய்வு பெற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி யுள்ளேன் சென்னை புறநகர் பகுதியில்.

தங்களின் பணிகள் சிறக்க விரும்பி, இந்தத் தொகையை நன்கொடையாக அனுப்பியுள்ளேன் பெற்றுக் கொண்டு, தங்கள் விருப்பப்படி இதனை பணி களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட முகவரிக்கு நான், நன்றி தெரிவித்துக் கடிதமும்கூட எழுதினேன்.

தமிழ் ஓவியா said...

இதுபோல் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நண்பர் களைவிட நேரடிப் பார்வையில் இல்லா மலேயே நமது பணிகளைப் பாராட்டி ஊக்க மூட்டி நன்றி தெரிவிக்கும் நண்பர்கள் ஏராளம்! ஏராளம்!! அநேகர் அந்தப் பட்டியலில் உண்டு.

அதுபோலவே மருதூர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - மறைந்தா லும் எப்போதும் நம் நெஞ்சங்களில் நிறைந் தவரான நாகை மாவட்ட முன்னாள் தி.க. தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் - அவர்களது குடும்பம் அம்மா, பிள்ளைகள் உட்பட அனைவருமே மிகுந்த பற்றும் மரியாதையுடன் கழகப் பணிகளைப் பாராட்டிடுவர்.

சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை வளர்ச்சி நிதி திரட்டப்பட்ட கால கட்டத்தில் தங்கள் பங்கு என்று கூறி தந்தது சந்தாக்கள் அல்லாமல், ஒரு தொகையை என்னிடம் நேரில் வந்து தந்து, எதற்குப் பயன்படுத்திட தாங்கள் எண்ணுகிறீர்களோ, அதற்கு இந்த எளிய தொகையைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள் என்று கூறி சென்று விட்டார்கள்!

விடுதலையின் எழுத்தாலும் கழகத் தின் போராட்டத்தினாலும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண் இன்று தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து M.B.B.S. பட்டம் வாங்க இருப்பதாக திண்டுக்கலில் நான் நமது கெழுதகை நண்பரும் பெரியார் சுயரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் டிரஸ்ட்டின் நிர்வாக உறுப்பினருமான வழக்குரைஞர் மானமிகு கொ. சுப்ரமணியம் இல்லத்தில் 15.6.2013 - பொதுக் குழுவுக்குப் போன போது நான் தங்கியிருந்த இடத்தில் - நேரில் வந்து இருவர் கூறி, நன்றி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாநகரில் மிகப் பெரிய புத்தக விற்பனையாளர்களாக இருக்கும் அய்யனார் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர்கள் பெரியவர் பூவலிங்கம், முத்து மாணிக்கம் தந்தையும் தனயனும் ஆவர்.

பெரியார் பற்றாளர்கள் - பகுத்தறி வாளர்கள் அவ்விருவரும்.

அய்யா எனது பேத்தி நல்ல மார்க் வாங்கியிருந்தும், மருத்துவக் கல்லூரிக்கு சேர்ப்பதில் வரிசைப்பட்டியல் வந்தததில் - முறைப்படி தேர்வு செய்ய 100 இடங்கள் - கலைஞரின் ஆட்சியில் சென்ற முறை தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, கட்டுமானங்கள் எல்லாம் முடித்து துவக்க மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லையாதலால் நூறு இடங்களை பூர்த்தி செய்யாமல் நிறுத்தி வைத்து விட்டனர்.

இது குறிப்பிட்ட கல்வி ஆண்டே துவக்கப்பட்டால் தான் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய கிராமப் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு ஏற்படும், என்று மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிகள் மேற் கொண்டு உடனடியாக இவ்வாண்டே துவக்க வேண்டும் என்று விடுதலையில் எழுதினீர்கள்.

தர்மபுரியில் அறப்போராட்டத்தை யும், திராவிடர் கழகம் நடத்திட அறிவித்து நடத்தினீர்கள். அதனால் அவ்வாண்டே மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. 100 இடங்கள் கூடுத லாக வந்ததால், கிடைக்கவில்லை என்று வேறு வேலைக்குச் சென்ற என் பேத்திக்கு M.B.B.S. அட்மிஷன் கார்டு வந்தது - எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது! எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர் இப்பெண். இது விடுதலையாலும், கழகத்தாலும் தான் சாத்தியமானது என்று நன்றி பொங்கக் குறிப்பிட்டார்கள்.

இப்படிப் பலப்பல நிகழ்வுகள்! பெரியார் என்ற பேராசானின் உழைப்பு என்றுமே பலன் தராமல் சென்ற தில்லை, என்றாலும் பயனடைந்தவர் களில் பலர் இல்லாவிட்டாலும் - சிலராவது கூறுகிறார்களே - அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நன்றிப் பெருக்கின் நாயகர்கள் வாழ்க! .

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


தமிழக அரசின் தவறான முடிவால் காலியான இடங்கள்


சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் போக்குப் பார்ப்பனீயத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது.

குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் நிலைப் பாட்டை மிகவும் தூக்கிப் பிடிக்கின்றன.

சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதில் இன்றைய மாநில அரசு தொடக்கம்முதலே எதிர்நிலையில் தான் இருந்துவந்தது.

உச்சநீதிமன்றம்வரை சென்று பார்த்த அரசு கடைசியில் வேறு வழியின்றி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது.

சமச்சீர் கல்வி காரணமாக இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர் இருபால் மாணவர்களும்; அதிக மதிப்பெண்களையும் ஈட்டியுள்ளனர். இதனைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன தினமணி உள்ளிட்ட அவாள் ஏடுகள்.

ஒரு காலகட்டத்தில் தேர்வில் பெறும் மதிப் பெண்கள்தான் தகுதி திறமைக்கான அளவுகோல் என்று ஆணி அடித்து எழுதினர்; அந்தக் கால கட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் அபார ஆற்றல் அவர்களிடம்தான் இருந்தது.

இப்பொழுது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஆரம்பித்த நிலையில், மதிப்பெண் தகுதியின் அளவுகோலா என்று பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியின் அடிப்படை ஆணிவேரில் வெந்நீரை ஊற்றிவிட்டது.

மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப் மார்க்) தனித் தனியேதான் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவருக்கும் (உயர்ஜாதிக்காரர்கள் உள்பட) ஒரே அளவு தகுதி மதிப்பெண்கள் - 60 சதவிகிதம் பெறவேண்டும் என்பது சமூகநீதிக்கே நேர் விரோதம் அல்லாமல் வேறு என்னவாம்?

இப்படி அனைவருக்கும் ஒரே அளவு மதிப் பெண்களை வரையறை செய்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள் 1470 இல் 659 காலியாகவே உள்ளன. பழங்குடியினர்க் கான 99 இடங்கள் காலியாகவே உள்ளன. அருந்ததியருக்கான 131 இடங்கள் பூர்த்தி செய்யப் பட முடியவில்லை. முசுலிம்களுக்கான 153 இடங்கள் காலியாகவே உள்ளன.

தமிழ்நாடு அரசின் குளறுபடியான - சமூகநீதிக்கு விரோதமான அணுகுமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவ்வகையில் பெரிய அநீதி நடந்துள்ளது. கேட்டால் இதுதான் அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு என்று சொல்லுகிறார் கல்வி அமைச்சர் - எங்கே போய் முட்டிக்கொள்வது?
இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் கல்விக் கழகம் அகில இந்திய ரீதியில் தகுதித் தேர்வு எப்படி நடத்தப்படவேண்டும் என்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதிக் கண்ணோட்டத் துக்கே விரோதமானது தமிழக அரசின் செயல்பாடு.

ஆந்திரா, கேரளா, பிகார் முதலிய மாநிலங்களில் தனித்தனியே தகுதி மதிப்பெண்களை நிர்ண யித்துள்ளபோது, சமூகநீதி பிறந்த பெரியார் மண்ணில், பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இப்படியொரு கொடுமை - அநீதி இழைக் கப்பட்டுள்ளதே - இதனை எப்படிப் பொறுப்பது?

சமூகநீதியாளர்கள் களம் காணவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தவறைத் திருத்திக் கொள்ளுமா தமிழக அரசு?

எங்கே பார்ப்போம்? 20-06-2013

தமிழ் ஓவியா said...


மோடி அலையை உருவாக்குவது யார்? நிதிஷ் அம்பலப்படுத்துகிறார்


பாட்னா, ஜூன் 20- நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அது போன்ற தோற்றத்தை உரு வாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்த்தின் மீது நிதிஷ்குமார் பதிலளிக் கையில், நரேந்திர மோடியை அவரது பெயரை குறிப் பிடாமல் மறைமுகமாகத் தாக்கியும், குற்றம் சாட்டியும் பேசினார். நிதிஷ் பேசியதாவது:

தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவருக்கு (நரேந்திர மோடி) ஆதரவாக அலை வீசிவருவதாக பா.ஜ. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், அப்படி எதுவும் அலை வீசவில்லை. பெரிய தொழில் நிறுவனங் கள்தான் இதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த போலித்தோற்றம் நீண்ட காலம் நீடிக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் இதனால், எந்த அற்புதமும் நடக்காது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததாலேயே யாரும் அவர்களது தலைவராகி விட முடியாது. பெரிய தொழில் நிறுவனங்களின் நலனை விரும்புகிறவர் பிற்படுத்தப் பட்டோரின் தலைவராக முடியாது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. பீகாரின் வளர்ச்சிக்காக அவர்கள் கூறிய ஆலோசனைகளை நாங்கள் கேட்டோம். ஆனால், எங்கள் யோசனைகளை பா.ஜ.க.வினர் நிராகரித்தனர். கூட்டணி முறிவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

- இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

தமிழ் ஓவியா said...

எருமை போவதுபோல்...



எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


நாட்டில் வறட்சி நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!


ஒருபுறம் வெள்ளம் - மறுபகுதியில் நாட்டில் வறட்சி

நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!

மத்திய - மாநில அரசுகள் உடனே ஆவன செய்ய வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வடமாநிலங்களான உத்தர காண்ட்/இமாச்சல பிரதேசங் களில் பெரும் மழை காரண மாக நிலச்சரிவு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள நிலையில், மேலும் அங்குள்ள மக்களின் பாது காப்புக்கு போர்க்கால அடிப் படையில் நிவாரணம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என தமிழர் தலைவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த வாரம் பெய்த பெரு மழை காரணமாகவும், அதன் விளைவாக அங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்!

தமிழ் ஓவியா said...

என்னே கொடுமை!

பலியானோர்பற்றிய தகவல்கள் இன்னும் சரியானவை கிடைக்கவில்லை; உயிருடன் இருப்பவர்களை மீட்க மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டுள்ளன.

பக்தி யாத்திரை என்ற பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லும் பக்தர்களைப் பரவசப்படுத்திட, சுற்றுலாத் துறையினர் அமோக விளம்பரம் செய்து ஈர்க்கின்றனர்!

ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் போதிய அளவு கவனம் செலுத்துவதில்லை!

புண்ணியம் கிட்டும் என மூடநம்பிக்கை!

கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தால் புண்ணியம் கிட்டும் என்ற மூடநம்பிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லுகின்றனர்; சுற்றுலா வணிகர்களும் இதைப் பெரிதாக விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆனால் அந்த மாநிலங்களில் (மலைப் பிரதேசங்கள் ஆனபடியால்) மழை வெள்ளம் எதிர்பார்க்க வேண்டிய வைகளே என்ற நிலையில், அங்கே போதிய பாது காப்புடன் கூடிய பாதைகளும், பாலங்களும், தடுப்புச் சுவர்களும் கட்டப்பட்டு, நிரந்தரப் பாதுகாப்பு வசதி செய்யப்படாமலேயே ஆண்டுதோறும் இந்த பக்தி வியாபாரம் நடைபெறுகிறது.

நிரந்தரப் பாதுகாப்பு வசதி தேவை!

கடவுள் கருணையே வடிவானவர் என்ற புரட்டு இந்த சோகப் படலம் மூலம் அம்பலமாகி விட்டது. அதற்காக இத்தனை உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியானது கண்டு, நாத்திகர்களாகிய நாம் தான் அதிக வேதனை அடைகிறோம்; காரணம் மனித உயிர்கள் - அவர்கள் எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் ஆனாலும், காப்பாற்றப்பட வேண்டியவைகள் என்ற மனிதநேயக் கொள்கை உடையவர்கள் பகுத்தறிவாளர்களாகிய நாம்!

எனவே இந்த எஞ்சியோர் போதிய பாதுகாப்புடன் அவரவர் வீடு திரும்ப அனைத்து முயற்சிகளும் அவசர கதியில் - போர்க் கால அடிப்படையில் - மேற்கொள்ளப் பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படல் வேண்டும். இப்படி வடக்கே கங்கோத்ரி, யமுனோத்திரி, யமுனை நதி டெல்லிப் பட்டணத்திலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது என்ற நிலை ஒருபுறம்; தென் மாநிலங் களில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. மாநிலங்களிடையே மிகப் பெரிய சண்டைகளும், ஏன் யுத்தமும்கூட!

குடிநீருக்கும்கூடப் பஞ்சமோ பஞ்சம்!!

இனி எதிர் காலத்தில் வரும் யுத்தங்கள் நீர் உரிமைக்கானவையாகத்தான் இருக்கப் போகிறது என்று நீரியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்!

நிரந்தரத் தீர்வு நதிநீர் இணைப்பு

இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு, நதிநீர் இணைப்பு அல்லவா?

அதுபற்றி மத்திய -மாநில அரசுகள் சிந்தித்து உடனடியாகச் செயல்பட வேண்டாமா?

எத்தனையோ விளம்பரத் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் மத்திய மாநில அரசுகளும் இந்தியாவின் நதிகளை இணைத்து, வெள்ள நீர் வறட்சி மாநிலங்களுக்குக் கிடைத்தால், எல்லா மக்களும் சுகவாழ்வு வாழ்வார்களே, இந்த அறிவியல் யுகத்தில் இது என்ன சாத்தியப்படாத ஒன்றா, இல்லையே!

உச்சநீதிமன்றம் இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்து தீர்ப்பு தந்தும்கூட, இதுவரை தீவிர முயற்சிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுக்கவில்லையே!

இதுபற்றி உடனடியாக நிபுணர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உலக வங்கி போன்றவை மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி - ஏன் கோயில்களில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கூட எடுத்து - கடன் பத்திரங்களை அரசு அக்கோயில்களுக்கு வழங்கி விட்டுக் கூட - செலவழித்து, இந்தியா முழுவதும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகளைப் போட்டு, அவை இப்போது ஆறு வழித் தடங்களாக அகலமாகும் நிலையில், இப்படி நதிகளை இணைக்கும்பணி உடனடியாகத் துவக்கப்படல் வேண்டும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் ஒருமித்த குரலில் ஓங்கிக் கூற வேண்டும். தற்காலிக நிவாரணங்களைவிட நிரந்தரத் தீர்வுகளே நாட்டு மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும்.

கடும் மழை வெள்ளம் ஒரு பகுதியில் - கடும் வறட்சி மறுபகுதியில் ஒரே நாட்டில் என்பது முரண்பாடு அல்லவா? அது களையப்படல் அவசர - அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
21.6.2013

தமிழ் ஓவியா said...


ஸ்ரீசாந்தைக் கொஞ்சம் பாருங்கள்!


மதமானது கடவுளுக்கும் நமக்கும் இடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எந்தவித அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தைவிட மேலானதாக நினைக்கிறது. அன்றியும் மதமானது பணச் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங் களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்ப தாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கிறது என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

- (குடிஅரசு 11.8.1929)

இதனை அப்படியே இப்பொழுது நடந்த நடந்து கொண்டு இருக்கிற நிகழ்வுக்கும் பொருத்திப் பார்த்தால் தந்தை பெரியார் இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன் சொன்னது எந்த அளவுக்குத் துல்லியமாகப் பொருந்து கிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.

அய்.பி.எல். கிரிக்கெட்டை மறந்து விடத்தான் முடியுமா? அதை மறந்தாலும் அதில்கூட இடம் பெற்ற சந்தர்ப்பத்தைத் தான் மறக்க முடியுமா?

சூத்தாட்டத்தையே மறந்தாலும் ஸ்ரீசாந்த், ஸ்ரீசாந்த் எனப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட்காரரைத் தான் மறக்க முடியுமா?

எப்படி எப்படி எல்லாம் சூதாடினார்? விளையாட்டு மைதானத்தில் இந்த மைனர் எந்தெந்த சைகைகளைக் காட்டிப் பந்துகளை வீசினார்! அப்படி வீசப்பட்ட ஒவ்வொரு பந்துக்கும் எவ்வளவுக் கோடி ரூபாய் புரண்டது?

பக்கம் பக்கமாக ஏடுகள், ஊடகங்கள் செய்திகளை அள்ளி அள்ளிக் கொட்டவில்லையா?

ஸ்ரீசாந்த் தங்கி இருந்த அறையில் கைப்பற்றப்பட்ட பணம் ஆவணங்கள், சி.டி.கள் இத்தியாதி.. இத்தியாதி சாட்சிகள் ஸ்ரீசாந்தை விளையாட்டுச் சூதாடி கில்லாடி என்பதை நிரூபித்ததே - ஆசாமி கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அத்தோடு முடிந்ததா? காவல்துறையினர் அவர் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் நுழைந்தபோது அங்கு அழகிகள் இருந்தனர் என்றெல்லாம் படத்துடன் வெளி வரவில்லையா?

அதன்பின் கைது செய்யப்பட்டு சிறைக் குள் நெட்டித் தள்ளப் படவில்லையா?

இவ்வளவுப் பெரிய குற்றவாளி இப்பொ ழுது எங்கே? ஜாமீனில் வெளிவந்து அவசர அவசரமாக எங்கு சென்றார் தெரியுமா?

சபரிமலைக்குச் சென்றுள்ளார்? எதற் காகவாம்? எல்லாம் பிரார்த்தனைக்காகத் தான். என்னை அய்யப்பன் காப்பாற்றுவான் நான் குற்ற மற்றவன் என்று வெளியில் வருவேன் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறாரே!

இப்பொழுது தந்தை பெரியார் கூறிய அந்தத் திருவாசகத்தைக் கொஞ்சம் பொருத்திப் பாருங்கள் பளிச்சென்று புரியும்!

பணச்செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருக்கிறது; எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்மூலம் மன்னிப்பு இருக்கிறது. என்று நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யத் தூண்டுகிறது என்று தந்தை பெரியார் சொன்னதுதான் எவ்வளவு துல்லியமானது! - உண்மையானது!

இது ஒன்றும் புதிதல்ல! மஸ்தான் - மஸ்தான் என்ற கடத்தல் மன்னனைக் கேள்விப்பட்டதில்லையா?

அன்றாடம் அய்ந்து வேளை தொழுபவர்தான் ஒவ்வொரு வருடமும் ரம்ஜானையொட்டி ஒரு மாதம் நோன்பு இருப்பவர்தான்! மெக்காவுக்குச் செல்ல இருந்தோம் - அதற்குள் கைது செய்துவிட்டார்கள் என்று மஸ்தான் மனைவி சொன்னாரே!

பிரபல கடத்தல் புள்ளி வரதன் முனிசாமி மும்பையில் கோளிவாடா என்னும் பகுதியில் சிவன் கோயிலையே கட்டியவர் தானே!

சிங்கம்பட்டி கொலை வழக்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்பதுபோல விஷ ஊசி கொலை வழக்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டில் பிரபலம்!

வைத்தீஸ்வரனும் அவனது கூட்டாளிகளும் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு பணக்காரர்களைக் கடத்திச் சென்று விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டு, பணத்தைக் கொள்ளையடித்துக் குபேரர்களாக வாழ்ந்தனரே!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாய் அந்தக் கும்பல் பிடிபட்டது.

அடித்து உதைத்துக் கேட்ட வுடன் உண்மைகளைக் கக்கினார்களே! கொள்ளை யடித்த பணத்தில் திருப்பதி, பழனி உள்ளிட்ட கோயில் களில் உண்டியலில் போட்டது வரை கணக்குக் கொடுத்தனரே!

தந்தை பெரியார் சொன்னதை இன்னொரு முறை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள். புத்தியைச் செலவழித்தால் இதற்குள்ளிருக்கும் உண்மை புலப்படும்!

கூடுதல் தகவல்: (Tail Piece:) கொலை வழக்கில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் - ஜெயேந்திர சரஸ்வதியைக் கொஞ்சம் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

நாள்தோறும் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பூஜை நடத்திக் கொண்டுதானே இருக்கிறார். பூஜை புனஷ்காரங்களுக்கு பஞ்சமா என்ன?

இவ்வளவையும் செய்யக் கூடிய லோகக் குரு சங்கராச்சாரியார்தான் கொலை வழக்கில் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார். ஆக கடவுள், பக்தி, பிரார்த்தனை, பிராயச்சித்தம் என்றால் என்ன என்பது இப்பொழுது புரிந்திருக்குமே!

தமிழ் ஓவியா said...


நமது பணி...



மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர் களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...

சந்திரோதய நாடகம் பற்றி குடிஅரசு


தோழர் அண்ணாதுரை எம்.ஏ., அவர்களால் எழுதப் பட்டு அண்ணாதுரை அவர்கள் நடிப்பு ஆசிரியராய் இருந்து பழக்கப்பட்ட காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார் சந்திரோதயம் என்னும் நாடகத்தை 19.11.1943இல் ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் நடத்தினார்கள்.

இதன் விவரம் சென்ற வாரம் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும் மானத்திற்கு உயர்தர வழி காட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்பட கூறியதாக ஆகாது.

இன்று ரஷ்ய நாடானது ஸ்டாலினது உருக்கு ஆட்சியின் கீழ் நிலைகுலையாமல் இருந்து உலகத்தைக் காப்பாற்றி வருகிறது என்றால் அது பெரிதும் ஸ்டாலினுடைய வீரமல்ல; வெற்றியல்ல; அறிவல்ல; ஆற்றலல்ல என்று மும்முறை முரசறைகிறோம்.

சிந்தனைப் பிரச்சாரம்

மற்றென்னையெனில், அங்கு அம்மக்களுக்கு தலைவர்களும் உண்மை உணர்ச்சி உள்ளவர்களும் செய்து வரும் இடையறாப் பிரசாரமேயாகும். அங்கு கடவுளைப்பற்றியும் பஜனைப் பாடினால் எட்டி உதைப்பார்கள். மோட்சத்தைப் பற்றிப் பேசினால் காரி உமிழ்வார்கள், தலைவிதியைப் பற்றிப் பேசினால் பிச்சித் தள்ளி அப்பளமாக்கி விடுவார்கள். பின்னை என்னை யெனில், மனிதனுக்கு மனிதன் கண்டவுடன், நீ யார்? உனக்கேன் சோற்றுக்கில்லை? அவனார்? அவனுக்கேன் தொப்பை வயிறு? நீ யார்? உனக்கேன் வீடில்லை? அவனார்? அவனுக்கேன் மாளிகை? நீ யார்? உனக்கேன் கோவணத்துக்கு இழுப்பும் பறிப்புமாய் இருக்கிறது? அவனார்? அவனுக்கு ஏன் பஞ்சகச்சமும் மூலைக்கு மூலை இழுத்து மடித்துச் சொருகுவதுமாய் இருக்கிறது?

ஓ மடையனே! பகுத்தறிவற்ற பதரே!! சிந்தித்துப் பார்.

என்பதாகிய இந்த அமுத வாசகங்கள் தான் பஜனையிலும், பக்தியிலும், பாட்டிலும், சிரிப்பிலும், வேடிக்கையிலும், விகடத்திலும், குலாவுவதிலும், கல்வியிலும், கற்பிலும், கல்லாமையிலும், நந்தவன சிங்காரத்திலும், நாடக நளினத்திலும், சினிமாவிலும், கவியிலும், காவியத்திலும், கலையிலும், இலக்கியத் திலும், ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும்.

காப்பிக் கடைகளிலும் இந்தக் கேள்வி களையும் பதில்களையும் கொண்ட ரேடியோ தான்; ரயில் பிரயாணத்திலும் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் இதே ரேடியோதான்; தொழிற்சாலைகள் முழுவதிலும் இதே ரேடியோதான்; தெருக்கள்தோறும் - கடைகள், மார்க் கெட்டுகள், பார்க்குகள், மக்கள் தங் கும் ஓட்டல்கள், மோட்டார்கள், ரயில் மேடை கள், சதுக்கங்கள், கச்சேரிகள், இராணுவக் கூடங்கள் இன்னும் ஒவ்வொரு இடத்திலும் இந்தப் பிரச் சாரமேதான் பல உருவில் விளங்கிக் கொண்டிருக்கும்.

தமிழ் ஓவியா said...

தாசியின் மோசவலை

எப்படி ஒரு தாசி ஒரு மைனர் பிரபுவை வீட்டிற்குள் வைத்து அவனுக்குத் தன் வீட்டு ஞாபகமோ, வேறு சேதியோ நினைப்பதற்கே இல்லாமல் வேறு யாரையும் பார்ப்பதற்கே இல்லாமல், சதாகாலமும் இடையறாக் கேளிக்கையும், கொஞ்சுதலும், லீலையுமாய் இரண்டற கலந்திருப்பாளோ அதே போலவே இந்தப் பிரச் சாரத்தை தவிர வேறு விஷயம் மக்களுக்கு எட்டுவ தற்கும் நினைப்புக்கு வருவதற்கும் இல்லாமலே நடத்தி வருகிறார்கள். இதன் பயனாலேயேதான் அப்பேர்ப்பட்ட ஜெர்மனி அங்கு தவிடு பொடியாக்கப்பட்டு வருகிறது.

காந்தியாராகட்டும், காங்கிரசாகட்டும், பண்டித நேருவாகட்டும், சாயிபாபாவாகட்டும், ரமண ரிஷியா கட்டும், சீனிவாச சாஸ்திரியாகட்டும் - இவர்கள் எல்லாரும் இவர்களைப் பற்றிய இடையறாப் பிரச்சாரம் இல்லாவிட்டால் இவர்களைப் போன்ற சராசரி மனிதத் தன்மைக்கு மேற்பட்ட ஒரு புதுக்கோட்டை அம்மன் காசு கூடப் பெறுவார்களா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, பிரச்சாரத்திற்கு அவ்வளவு பலம் இருக்கிறது என்பதை காட்டவே குறிப்பிட்டோம்.

அப்படிப் போலவே தான் நமக்குள் இந்துமதமும் சகலத்திலும் பரவி சதா பிரச்சாரத்தினால் நம்மை அடிமை கொண்டு விட்டது. கண்ணிலும் கருத்திலும், கவியிலும், வாக்கிலும், நாக்கிலும், எல்லாவற்றிலும் இடையறாமல் லீலை செய்து கொண்டே இருக்கிறது. இவற்றால்தான் அவைகளுக்குப் பலமிருந்து வரு கிறது. இவற்றை மாற்ற வேண்டுமானால் அவற்றிற் கேற்ற எதிர்ப்பிரச்சாரம்தான் தக்க மருந்தாகும்.

அண்ணாதுரையின் துணிவு

அப்படிப்பட்ட பிரச்சாரங்கள் நடத்துவதில் இந்த மாதிரி நாடகமும் முதன்மையானதாகும். இதைநாம் சுமார் 10, 15 வருஷகாலமாவே சிந்தித்து சிந்தித்து ஒன்றும் சரியாய் கைகூடாமல் இப்பொழுது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும் படியான நிலை ஏற்பட்டிருக் கிறதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்க முடியவில்லை.

சில நண்பர்கள் சில வருஷங்களுக்கு முன்னா லேயே திருச்சியில் முயற்சி செய்து வெளி வந்தார்கள்; என்றாலும், அது குடத்திற்குள் விளக்காய் இருக்கிறது. மற்றும் சில நண்பர்கள் பாரதிதாசன் சித்தரித்த இரண்யன் அல்லது இணையற்ற வீரன் என்ற கதையை பல இடங்களில் நடத்தினார்கள் என்றாலும் அதுவும் ஆமை ஓட்டத்தில் தான் இருந்து வருகிறது.

சென் னையில் சில தோழர்கள், முன்னேற்ற வீரன் என்ற கதையை நடத்திக் காட்டினார்கள். என்றாலும் அதுவும் ஒரே இடத்தில் தேங்கிப் போய் இருக்கிறது. தொழில் முறையில் தோழர்கள் என்.எஸ் கிருஷ்ணன், மதுரம், ராதா முதலிய அறிஞர்கள் உதவிபுரிகிறார்கள் என்ப தோடு இன்னும் சிலரும் இருக்கலாம்; அவை உற்சாகம், பொழுதுபோக்கு என்பவற்றின் பேரால் இல்லாமல் இன்னும் தைரியமாய் வெளியேறி வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

திக் விஜயம் செய்யட்டும்

சந்திரோதயமும் ஒரு காலத்தில் அண்ணாதுரை, சந்திரோதயம் என்னும் நாடகத்தில் நடித்தார். எங்கேயோ பார்த்ததாக எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்லும் நிலைமைக்கு வராமல் தமிழ்நாட்டில் அது (சந்திரோதயம்) திக் விஜயம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

உண்மையில் சந்திரோதயம் நல்ல தொண்டாற்று கிறது. இரண்டு வருஷத்தில் குறைந்தது ரூ.50000 அதற்கு சொந்தப் பொறுப்பில் சேகரம் செய்ய தமிழ் நாட்டில் தாராளமாக இடமிருக்கிறது. சமய சஞ்சீவி களுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லது படாமல் இம் மாதிரி தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியது மாகும் என்று தெரிவித்துக் கொண்டு, அண்ணா துரையையும், காஞ்சித் திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்.

- குடிஅரசு தலையங்கம் - 27.11.1943

தமிழ் ஓவியா said...


பொருளாதாரம் சீர்பட...


மதமும், கடவுளும், அடுத்த ஜென்மும் ஒழிந்தா லொழிய, இந்தியப் பொருளாதாரத்துறை எந்நாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும் நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்.

- தந்தை பெரியார் - பகுத்தறிவு 1-12-1936

தமிழ் ஓவியா said...

சுப்பிரமணியனின் வேண்டுதல்!

வாரிசு இல்லை என்று வள்ளியை மணந்து கொண்டேன். அவளும் அம்போ என்று கைவிட்டாள். என் அப்பனும் (சிவன்) சிவப்பு முக்கோணத்தில் அடங்கி விட்டான். கொள்ளி வைக்க ஒரு ஆணும், குந்தி அழ ஒரு பெண்ணும் எனக்கு வேணும். நல்ல மருத்துவர் விலாசம் ஒன்று தருவீர்களா?

நாத்திகச் செல்வி, பல்லவபுரம்

தமிழ் ஓவியா said...

பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?

சிவனும் பார்வதியும் நூறு தேவ வருடம் புணர்ந்து கொண்டிருந்தும், விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர். ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில், அவர் களின் மனைவிகள் எல்லாம் மலடாகப் போகக்கடவது என்று பார்வதிதேவியார் சாபமிட்டாளாம்.

மற்றும், தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீதும் பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம். கேவலம் அல்லவா?

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்

தமிழ் ஓவியா said...


பிரபஞ்சம் உண்டானது எப்படி?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம்(யுனிவர்ஸ்) எப்படி தோன்றியது என்றால் பெரு வெடிப்பு கொள்கை என்று எளிதாக கூறிவிடுவோம், அதாவது பாரிய அழுத்ததால் சிதறும் அணுத்துகளின் முழுப் பரிமாணம் இந்த பிர பஞ்சம், நாம் அண்ட வெளியை நோக்கி பயணித் தோமானால் இதற்கான விடை கிடைக்கும், ஒளியின் வேகத்தில் நாம் நமது பூமியில் இருந்து பயணித்தோமென் றால், நமது சூரிய குடும்பத்தை கடக்க சுமார் 20 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை ஆகும், சூரிய குடும்பத்தை கடந்து நமது பால்வெளி மண்டலத்தின் எல்லையை கடக்க குறைந்த 200 ஆண்டுகள் வரை ஆகும். நமது பால்வெளிமண்ட லத்தை கடந்து அடுத்து உள்ள கொடுங்கதிர் மையத்தை (காஸ்மிக்) கடக்க 500 வருடங்கள் ஆகும், நமது பயணம் ஒளிவேகம் குறையாமல் தொடர்ந்தால் பால்வெளிமண்டலக் கூட்டங்களை கடந்து நீராவிக்கூட்டு திரள் மண்டலங்களை கடக்க குறைந்த பட்சம் 3000 ஆண்டுகள் வரை பயணம் செய்யவேண்டும், அங்கிருந்து 7000 ஆண்டுகள் பயணிக்க பிர பஞ்சத்தின் எல்லை நமக்கு தெரியவரும், நாம் பிரபஞ்சத்தின் எல்லையை அடையும் போது நாம் ஒளிவேகத்தை விட 400 மடங்கு அதிகம் பயணித்துக் கொண்டு இருப்போம், (அதாவது பூமியில் இருந்து பிரபஞ்ச எல்லையை சென்றடைய சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்) பிரபஞ்சத்தின் விளிம்பை கடக்கும் போது நமது வின்கலத்தின் வேகம் அறிவியல் கணக் கீட்டிற்கு எட்டாத அளவிற்கு கூடிவிடும் (இதற்கு எடுத்துக்காட்டாக அந்த வேகத்தில் நாம் மீண்டும் புறப்பட்டு வந்தால் வெறும் 120 ஆண்டுகளுக்குள் பூமிக்கு வந்து சேர்ந்து விடுவோம்) இந்த வேகத்தில் நாம் பயணித்து அண்டவெளியை (ஸ்பேஸ்) அடைந்த உடன் அங்கு ஏற்படும் அழுத்தம் நம்மை நமது வின்கலத்தோடு சேர்த்து அணுவளவு சிறிய தாக்கிவிடும், அந்த அளவிற்கு அழுத்தம் இந்த அழுததம் தான் புதிய பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. இங்கு ஒரு புதிய கொள்கை ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது, பிக் பாங் என்னும் பெரு வெடிப்பு கொள்கை என்பது தன்னைத்தானே ஏற்பட்ட தல்ல, அண்டவெளியில் மிகவும் அதீத அழுத்ததால் கட்டுக் கடங்காத வேகத்தில் பயணிக்கும் அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி யதால் தான் புதிய ப்ரபஞ்சம் உருவா கிறது. இதை தான் சமீபத்தில் ஸ்வீசர் லாந்தில் மனித குலத்தின் மிகப்பெரிய அணுக்கரு மோதல் சோதனை மூலம் உறுதிபடுத்தியுள்ளனர். ஞிணீக்ஷீளீ னீணீமீக்ஷீ ணீஸீபீ நிஷீபீ ஜீணீக்ஷீவீநீறீமீ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் கட்டுரை. தமிழில்: சரவணா இரா

தமிழ் ஓவியா said...


கடலில் மாசுகலப்பதை நிறுத்தாவிட்டால்..!


வடதுருவப்பகுதியான ஆர்டிக் கிலும் தென்துருவமான அண்டார்டிக் காவிலும் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையில் சுற்றுபுறச்சூழல் பாதிப்பின் காரணமாக கடுமையான மாற்றம் காணப்படுக்கிறது, முக்கியமாக துருவபகுதியில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்க விகிதம் திடீரென குறைந்துகொண்டே வருகிறது, இதற்கு முக்கிய காரணம் துருவப்பகுதியில் வாழும் உயிரினங்களின் உணவு பிரமீடில் ஏற்படும் பாதிப்பே ஆகும். இணப்பெருக்கம் விகிதம் குறைய காரணமாக இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருவப் பகுதியில் வாழும் உயிரினங்கள் பெரும்பாலும் தாவரங்களை உணவாக உட்கொள்பவைகள் அல்ல இந்த உயிரினங்களின் உணவு பிரமீட்டில் துருவக்கரடி கடற்சிங்கங்களை உண்ணும், கடற்சிங்கம் இறால் மீன்கள் மற்றும் பென்குவிங்களை உண்ணும், இறால் மீன்கள் கிரில்ஸ் எனப்படும் சிறு மீன்களை உண்ணும் சிறுமீன்கள் சில நுண்ணுயிர்களையும் பாசிகளையும் உண்ணும், கிரில்ஸ் மற்றும் சிறிய வகை மீன்கள் உலகம் முழுவதிலும் கடல் நீரோட்டம் வழியாக பயணிக்கிறது, இப்படி பயணிக்கும் போது மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களையும் சேர்த்து உணவாக கொள்கிறது. மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களில் ஈயம், காரியம், பாதரசம் மற்றும் சிலவகை ஆக்ஸி னேற்றம் பெற்ற வேதிப்பொருள்கள் (ஏகா:-தாமிரம்) இவற்றை உண்ணும் மற்றும் சுவாசிக்கும் சூழ்நிலைக்கு பாசிகள், சிறுமீன்கள் ஆளாகின்றன. இந்த நச்சுப்பொருள்கள் இந்த உயிரினங்களில் செல்களில் சேமிக்கப்படு கிறது, இறுதியாக இவற்றைமட்டுமே உணவாக கொள்ளும் துருவ உயிரி னங்கள் கரடி, சீல், மற்றும் திமிங்கிலம் போன்றவற்றின் இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்படுகிறது, விளைவு இவற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடலில் பாசிகள், நுண்ணுயிர்கள் மற்றும் இறால் மீன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இவற்றின் எண்ணிக்கை பெருக்கினால் கடலில் ஆக்ஸிசன் அளவு குறைந்து கடல்வெப்பநிலை கூடுகிறது.
கடல்வெப்பநிலை உயர்வடைவதால் புவிகாந்தப்புலத்தில் பாதிப்பு ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள 0.1 பாதிப்பின் காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு பார்வைத்திறன் குறைவு, காது கேளாமை, இரத்தஓட்டத்தில் மாற்றம் மற்றும் புத்திபேதலிப்பு போன்றவை அதிகமாகியுள்ளது.. கடலில் மாசு கலப் பதை நிறுத்தாவிட்டால் கூடிய விரை வில் மனித இனத்திற்கே பேரழி வைத் தரும் நிலை விரைவில் உருவாகிவிடும். -_ சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...


அதிர்ஷ்டசாலியா?


இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் மார்கரெட் ஹில்டா தாட்சர். இவர் தான் அந் நாட்டின் முதல் பெண் பிரதமரும் கூட!

சிறுவயதில் இருந்தே எல்லா வற்றிலும் முதல் மாணவி தான், தன்னம்பிக்கை அதிகம். ஒரு முறை கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் தாட்சர் முதல் பரிசு பெற்றபோது அவருடைய தலைமை ஆசிரியர் நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று தட்டி கொடுத்தார். தாட்சர் உடனே நான் ஒன்றும் அதிர்ஷ்ட சாலியல்ல. இந்தப் பரிசை பெற நான் தகுதியானவள் என்று வெடுக்கென்று பதில் கூறினார்
- ஆனந்த விகடன் 26.5.1949

தமிழ் ஓவியா said...


ஆபத்தோ ஆபத்து!


உலக வெப்பமயமாதலின் விளைவாக நடப்பு நூற்றாண்டின் இறுதியில் பூமியின் 42 சதவீதம் நிலப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகளவில் ஏற்படும் எனவும் ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. டோக்கியா பல்கலைக்கழகம், இயற்கை தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து நடத்திய ஆய்வில் தற்போதுள்ள உலக வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து 2100-இல் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டினால் வெள்ள அபாயம் 5.6 மில்லியன் முதல் 80 மில்லியன் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் உலகின் 29 முக்கிய நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனவும் இது ஒவ்வொரு 10 முதல் 50 ஆண்டுகளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இந்தோனேசியாவில் பெண்களுக்குப் புதுச்சட்டம்


இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா ஆச்சே மாகாணத்தில் ரியா சட்டம் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுபாடு விதித்துள்ளார்.

பெண்கள் ஒரு புறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்ல வேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுக்காப்பானதும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கடவுளா காப்பாற்றினார்!

செய்தி: இராணுவ வீரர்கள் உதவியால் உயிர் தப்பினோம், தமிழகம் திரும்பிய கேதார்நாத் பயண குழு பேட்டி.

சிந்தனை: உண்மைதானே கேதார்நாத்தில் குடிக் கொண்டிருக்கும் கடவுள் காப்பாற்றினார் என்றா பக்தர்கள் சொல்ல முடியும்?

தமிழ் ஓவியா said...


திருமணம் கிரிமினல் குற்றம் என்ற காலம் வரும்!


சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் திரு சி.எஸ். கர்ணன் அவர்கள் கணவன் - மனைவி தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பினை புரட்சிகரமானது என்று தலைப்பிட்டு விடுதலை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அத்தீர்ப்பினை வரவேற்று சிறப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 20.6.2013) .

பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைப் பேசி, உடலுறவு கொண்டு அதற்குப் பின் அந்தப் பெண்ணைக் கைவிட்டு வேறொரு பெண்ணைத் தேடும் ஆண் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீர்ப்பு அது என்பதை முற்போக்குச் சிந்தனையுடைய எவரும் ஏற்கவே செய்வார்கள்.

யதார்த்தமாகவும் பெண்களிடம் ஆசை காட்டி, மோசம் செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே நாசம் செய்து, புது செருப்புப் போட்டுக் கொள்ள பழைய செருப்பைக் கழற்றி எறிவது போன்ற அலட்சியத்துடன் மகளிரிடம் நடந்து கொண்டு அவர்கள் கருவுற்ற போதிலும் கூட அதற்குப் பொறுப்பு ஏற்க மறுத்து பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணி அடிக்கும் தீர்ப்பேயாகும் என்று மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்.

நீதியரசர் திரு. கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பின் நோக்கத்தையும், ஆழத்தையும் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டாலும் தங்களின் ஆழ் மனத்தில் பதிந்துள்ள இந்துத்துவா குணத்துடன் அணுகிய காரணத்தால் ஆத்திரம் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விட்டனர்.

தமது தீர்ப்பின் தன்மை குறித்தும், நோக்கம் குறித்தும் நீதிபதி தெளிவாக விளக்கம் கொடுத் துள்ளார்.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண் ணிடம் வாக்குறுதி கொடுத்து, பின்னர் உடலுறவு வையும் முடித்துவிட்டு, அந்தப் பெண்ணை விட்டு விட்டுச் சென்றுவிட்டால், அந்த ஆண்மீது கிரிமினல் வழக்கைச் சம்பந்தப்பட்ட பெண் தொடரலாம்; ஆனால் அந்தப் பெண் நிவாரணம் பெறுவதற்கு சிவில் நீதிமன்றங்களை அணுக முடியாது என்ற அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி கூறி யுள்ளது மிகச் சரியானது தானே!

அதனைப் புரிந்து கொள்ளாமல் வேறு வகையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியைச் சுற்றுவது (சப்தபதி) அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை யெல்லாம் மதச் சடங்குகளைப் பின்பற்றி சமுதா யத்தைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் பயன் படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்கு களையும், பின்பற்றித் திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லா விட்டால் அந்தத் திருமணம் சட்டப்படி செல் லாது என்று நீதிபதி கர்ணன் அவர்கள் கூறியுள்ளார்.

இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் தாம்பத்திய உறவை மறுப்பதன் அடிப் படையில் விவாகரத்துக் கோரலாம் என்று தீர்ப்பே இருக்கிறது.

நீதியரசர் கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பை இதனுடனும் சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அந்தத் தீர்ப்பின் சட்ட ரீதியான நுட்பமும் நீதியும் நியாயமாகப் புரியும்.

இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், நுனிப்புல் மேயும் தன்மையில், சடங்குகளைப்பற்றி மலினமாகச் சொல்லியிருக்கிறாரே நீதிபதி என்று கோதாவில் குதித்துள்ளனர்.

கலாச்சாரமும், சடங்கும் மாற்றங்களுக்கு ஆளானதேயில்லையா? குடும்ப அமைப்பு முறையில் மாற்றங்களும் ஏற்படவில்லையா? மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டால் இப்படியெல்லாம் குறுக்குச் சால் ஓட்ட மாட்டார்கள். இந்துத்துவாவாதிகள் கூறுகிறார்களே - அவர்கள் நம்பும் கலாச்சாரம் என்பதுதான் என்ன? அந்த எண் வகைத் திருமணங்களை ஏற்றுக் கொள்கிறார்களா?

அந்த எட்டில் ஒன்று பைசாசம் என்பது; ஒரு கன்னிகை தூங்கும்போதும், மது மயக்கத்தில் இருக்கும் போதும் அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதிருக்கும்போதும், அவருடைய மன சம்மதம் இல்லாமலேயே வலுவில் புணர்ச்சி செய்வதாகும்.

இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள இந்த பைசாச திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்களா?

திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்படும் காலம் வரும் என்றும் தந்தை பெரியார் கூறியுள்ளார். அப்படியொரு காலம் வரத்தான் போகிறது.

இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போக்கு (Living Together) வந்து விட்டதே - சட்ட ரீதியாகவும் அதற்கு அங்கீகாரமும் கிடைத்துவிட்டதே!

காலத்தின் வேகத்தையும், மாற்றத்தையும் புரிந்து கொள்ளாமல் மதவாதக் கண்ணோட்டத்தோடு கருத்துச் சொல்பவர்கள் எதிர் காலத்தில் எள்ளி நகைக்கப் படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை



பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள்?: சித்திரபுத்திரன்


ஈரோடு ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்தர முதலியார், ஆரியா, சக்கரை செட்டியார், தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், பம்பாய் புலி ஜெயகர் ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிர தியாகிகளை யெல்லாம் காங்கிரசை விட்டுப் போகும்படித் துரத்திவிட்டு இவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டுப் போய்விட்டதால் காங்கிர பரிசுத்தமாய் போய் விட்டதென்று சொன்னவரும் இன்னமும் வக்கீல் தொழிலில் மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டு இருப்பவரும், நேற்று காங்கிரசில் வந்து சேர்ந்த வருமான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது பி.ஏ., பி.எல்., 20 வருஷத்திற்கு முன் படித்திருந்தும் நாளது வரை வக்கீல் உத்தியோகத்திற்கு போகாதவரும் பள்ளியில் படிக்கும்போது முதலே தேசத்திற் காகப் பேசி, தேச பக்தராயிருந்த பார்ப் பனரல்லாதார் நன்மை யின் பொருட்டு லண்டனுக்குப் போனவருமான ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் என்கிற பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச் செய் கிறீர்களா?

தேசத்திற்காக 5 வருஷ காலம் ஜெயிலுக்குப் போன ஸ்ரீமான் ஆரியாவை யும், பார்ப்பனரல்லாதார் சுயமரியா தைக்காக மூன்று முறை ஜெயிலுக்குப் போன ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஜெயிலில் போட வேண்டுமென்ற பார்ப்பன அட்வகேட் ஜெனரலையும் பார்ப்பன சட்ட மெம்ப ரையும் கெஞ்சும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்னும் பார்ப்பனருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல் லது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான் சக்க ரைச் செட்டியாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழித்துப் பார்ப்பனரல்லா தார் இப்பொழுது பார்த்து வரும் உத்தியோகங் களை யெல்லாம் பிடுங்கிப் பார்ப்பனர் கையில் கொடுத்து விட்டு பார்ப்பனரல்லாதார் சூத்திரர், பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள் என்னும் கொள்கையை நிலைநிறுத்தப் பாடுபடும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் என்னும் பார்ப்ப னருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

அல்லது பார்ப்பன ரல்லாதார் சுயமரியாதைக்கும், மனுசத் தன்மைக்கும், தேச விடு தலைக்கும் உழைக்கும் ஸ்ரீமான் வி. சக்கரை செட்டி யாரான பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப் போடப் போகி றீர்களா? இதில்தான் உங்கள் மூளையின் தத்துவம் விளங்கப் போகிறது.

- குடிஅரசு - கட்டுரை - 26.09.1926

தமிழ் ஓவியா said...

முளையிலேயே வெறுப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளைச் சிறு பிராயம் முதற் கொண்டே நம்மைத் தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை அடி! அடி!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடி; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களைத் தொட்டுட்டு வந்துட்டையே! போ! போ!

போயி குளிச்சுட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அவர்களுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்குப் போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய்? என்று கேட்டால், என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டு விட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா? என்கிறார்கள்.

இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் அருவருப்பும், அவர்கள் தொடக் கூடாத ஜாதி என்கிற உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கொடுமை களையெல்லாம் நமது பெரியவர்கள் அறிந்தேதான் பார்ப்பனன் என்பது அமங்கலவத்து மென்றும், அவனைக் காண்பதே சகுனத் தடை, அதாவது கெட்ட சகுனம் என்றும்.

நாம் போகும் காரியங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தால்கூட அவற்றைக் கெடுத்துதான் வாழப் பார்ப்பான் என்கிற எண்ணமும் அதில் வைத்து அவ்வளவு தாழ்மையாய்க் கருதி அனுபவத்தில் நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். ஆனால், நாம் அவற்றையெல்லாம் மறந்து அதற்கு நேர் விரோதமாய் பார்ப்பனர் எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும் நம்ம குழந்தைகளுக்கு, அய்யர் மேல் பட்டுவிடாதே, அம்மாமி மேல் பட்டு விடாதே, அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுடன் நாமும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.

ஆதலால் நமது குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் படிப்பிலிருந்தே இதை ஒரு பாடமாய் வைத்து இவைகளின் உண்மைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான் நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்.

- குடிஅரசு - கட்டுரை - 05.09.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஓ.கே.கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான் ஓ.கே. கந்தசாமி செட்டியாரிடம் அனுதாபமிருந்து அவரை முனிசிபல் கவுன்சிலராக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் பார்ப்பனர்கள் ஓட்டு அதிகமாயிருக்கும் திருவல்லிக்கேணி வார்டில் போட்ட கவுன்சிலர் பதவியை ஏன் அவருக்கு செய்து வைத்திருக்ககூடாது? பட்டத் தையும் விட்ட பரிசுத்த மான ஒத்துழையா தத்துவம் கொண்ட காங்கிரஸ்வாதி இப்போது ஸ்ரீமான் அய்யங் கார் கூட்டத்தில் நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட வேறு யார் இருக்கிறார்கள்? அல்லாமலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் இன்னமும் இதற்கு முன்னும் வக்கீல் உத்தியோகம் செய்து வருகிறார்.

சர்க்கார் நியமன பதவிகளும் சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார். இவரைவிட ஸ்ரீமான் சிலவற்றை வைத்துக்கொண்டி ருக்கிறார். இவரை விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் குறைந்தவர்? அல்லாமலும் இந்த பார்ப்பனர் வார்த்தையைக் கேட்டு நடந்ததின் பலனாக பார்ப்ப னரல்லா சமுகத்தில் செட்டியாருக்கு இது சமயம் செல் வாக்கும் குறைந்து போயிருக்கிறது.

இந்த விஷயம் சேப்பாக்கம் டிவிஷனில் செட்டியார் தோல்வியுற்றதி னாலும் ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப் போடாமல் பட்டம் தாங்கும் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஓ.ஏ.ஓ.கே.லட்சுமணன் செட்டியாரை இவர்களே (பார்ப்பனர்கள்) போட்டதினாலேயும் நன்றாய் விளங்குகிறது.

ஆதலால் பார்ப்பனர் அதிகமாயுள்ள வார்டுக்கு இவரை ஏன் போட வில்லை? இது தான் போ கட்டும். சட்டசபைத் தேர்தலிலாவது இந்த பார்ப்பனர் களுக்கு நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாருக்கு ஒரு தானம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்றிருந்தால் பார்ப்பனர்கள் மிகுதியுள்ளதும் கண்டிப்பாய் பார்ப்பனர் சொல்லுகிறபடி ஓட்டுக் கிடைப்பதுமான யூனிவர்சிட்டி தொகுதிக்கு ஏன் நிறுத்தக் கூடாது? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி படிப்பையும் அனுபோகத்தையும்விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? இவற்றை யோசிக்கும்போது உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? என்ற பழமொழிபோல் இந்தப் பார்ப்பனர்களின் சகவாசம் என்பது இதிலிருந்தாவது விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 29.08.1926

தமிழ் ஓவியா said...

இந்து மத பரிபாலன மசோதா

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் நமது பார்ப்பனர் களுக்கு எமனாய் விளங்கும் இந்துமத பரிபாலன மசோதா முக்கால் பாகம் பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுக் கிடை யில் பெரும் பாகம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும் நிறை வேற்றப்பட்டு மலை யாளக் குடிவார மசோதாவைப் போல் பூரண வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்விரண்டு மசோதாவையும் எதிர்த்த வர்களுக்கு அடுத்த தேர்தலில் தக்கபடி புத்தி கற்பிப்பார்கள் என்றே நம்பு கிறோம். -

குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

மலையாளக் குடிவார மசோதா

இவ்வார சட்டசபையில் நமது பார்ப்பனர்கள் கடும் சூழ்ச்சிகளுக் கிடையில் மலையாளக் குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டது. இனி மலை யாளத்தில் உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன் மூலம் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பதையும் சந்தோஷத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

தேவதான மசோதாவுக்கு ஆதரவு

தேச மகாசபையின் பெயரால், இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும், மகந்துகளையும் மடாதிபதிகளையும் தொங்கிக் கொண்டு நிற்கும் சுயநலங் கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படை யாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதாரின் சார்பாக மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.
(பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பட்ட செய்தி)

- குடிஅரசு - செய்தி - 22.08.1926