Search This Blog

2.6.13

வாரியாருக்கு வாயடைப்பு! -ராமர் பாலம் பற்றி கலைஞர்

ராமர் பாலம் பற்றி கலைஞர்
கேள்வி: ராமர் பாலத்தை இடிக்காமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அய்ந்து மாற்றுத் திட்டங்கள் மத்திய அரசுக்கு தரப்-பட்டுள்ளதாகவும், ராமர் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையைப் பரிசீலிக்-கலாம் என்றும் ஜெய-லலிதா சொல்கிறாரே?

கலைஞர்: இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் இப்படி அறியாமையாக இருக்கிறாரே! இவர் கூறுகிற அய்ந்து பாதைகளும் ஏற்கத்தக்கதல்ல என்று விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது போய் அந்தத் திட்டங்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார் ஜெயலலிதா.

அதுமாத்திரமல்ல; திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குப் பிறகு, திட்டத்தை மாற்றலாம் என்றால் எவ்வளவு நிதி விரயமாகும், மீண்டும் எவ்வளவு காலம் தாமதமாகும் என்பதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் கூறுகிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டிருப்பது _ இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 6ஆவது பாதையைத்தானே? அப்போது அவர்கள் கேட்டுக் கொண்ட பாதையில்தானே இப்போது திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பாதையில் ராமர் பாலம் உள்ளது என்றால் _ அதிமுக தேர்தல் அறிக்கையில் அந்தப் பாதை வழியாக சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டது ஏன்?
-------------------------------------(முரசொலி, 2.10.2007)
சேகர் குப்தா: வாஜ்பாய் ஒப்புதல் அளித்தார் என்று சொல்கிறீர்கள். இப்போது அது மதப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் ஏராளமானவர், இந்தப் பாலத்தை ராமர் கட்டினார் என்று நம்புகிறார்கள். அந்தப் பாலத்தை உடைத்து பாதை அமைக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

கலைஞர்: அது தேவையே இல்லை. அதை உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடைப்பது ராமர் கட்டிய பாலமும் அல்ல. நான் இன்னும் சொல்கிறேன்; அப்படியே இருந்தாலும் என்ன, அதனை அகற்றக் கூடாதா? நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு புதுப்பாலம் கட்டக் கூடாதா?
(முரசொலி, 29.10.2007)

வாரியாருக்கு வாயடைப்பு!
நான் திருவாரூரில் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊருக்கு காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டு மென்பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண்பர்களுடன் செல்வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திருவாரியார் அவர்கள், உயிருள்ள ஒன்றையும்_ மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக்க வில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத்திற்கு கடவுள் என்ன உணவைப் படைத்தார் என அவரிடம் கேட்டேன்.
வாரியார் என்னை உட்காரும்படி அடக்கிவிட்டு தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்தபின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம். இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி? என்று கேட்டேன். மறுபடியும் என்னை அடக்கி உட்கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.
-கலைஞர்

சட்டமன்றத்தில் சுயமரியாதை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய ஓர் எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சரவைக்குள் சுயமரியாதை இருந்தால்..... என்று குறிப்பிட்டபோது முதலமைச்சர் கலைஞர் குறுக்கிட்டார்.
சுயமரியாதை எங்கள் சொத்து, நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் பிள்ளைகள். முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கத்திலேயே வளர்ந்தவர்கள்தான் என்று குறிப்பிட்டார். (8.8.1973)

இது கவிதையல்ல
தருமனும் பீமனும் மற்றும் மூவரும் போதாமல்
கர்ணனையும் காதலித்தாள் பாஞ்சாலி!
அடடா, இலக்குமியும், பார்வதியும்
இசைச்செல்வி கலைமகளும்
கடலை தனை வறுக்க வில்லை
கற்பிழந்த காரணத்தால்
கைச்சரக்கல்ல கதையுண்டு
இத்தனைப் புராணத்தினையும் இந்நாட்டுப் பண்டிதர்கள்
முத்தமிழில் விரித்துத் தந்தார்,
மலை வந்து எதிர்த்தபோதும்
கற்புக் குலையோமென வீரமொழி பேசும் பெண்டிர்
மேற்சொன்ன பெண்களெல்லாம் தெய்வம் என்றால்
ஏற்பாரோ பானத்தார் உங்கள் பேச்சை?
_ கலைஞர்

16 comments:

தமிழ் ஓவியா said...


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா? பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா?

பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை


கலைஞர் அவர்களின் வாழ் விணையர் தயாளு அம்மாள் அவர்களை விசாரணைக்கு டில்லிக்கு அழைப்பது பற்றிய நீதிமன்றத்தின் ஆணை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கலைஞரின் வாழ்விணையர் திருமதி தயாளு அம்மாள் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி இயக்குநராக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவருக்கு எவ் வகையிலும் சம்பந்தமில்லாத 2ஜி அலைக் கற்றை வழக்கில் அவரை விசாரித்த நிலையில், அவரது முதுமை காரணமாக அவரை குற்றம் சுமத்தப்பட்டவராகச் சேர்க்க தேவையில்லை என்று முடிவு செய்தது சி.பி.அய்.

ஏற்படாத இழப்பு என்ற அனுமான இழப்பைக் காரணம் காட்டி முன்னாள் அமைச்சர் ஆ. இராசாவையும், அது போலவே எந்த இயக்குநர் கூட்டத்திற்கும் செல்லாத நிலையில் கவிஞர் கனிமொழி அவர்களையும் குற்றவாளிகளில் ஒருவ ராக்கி, 6 மாதங்களுக்குமேல் டில்லி சிறையில் வதியச் செய்தார்கள்.

அதுபோலவே ஆ. இராசா அவர் களுக்கு ஓராண்டு சிறை வாசத்திற்குப் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இவை ஒருபுறம் இருக்க, சாட்சியமளிக்க திருமதி தயாளு அம்மாள் டில்லிக்கு வர வேண்டும் என்று கோருகின்றனர்; அவருக்கோ உடல் நிலை கடந்த ஓராண் டாகவே சரியில்லாது, தனிக் கவனிப்பில் இருந்து வருகிறார் என்ற நிலையில் அவரை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவரது தரப்பில், மருத்துவர்களின் சான்றிதழ்களோடு டில்லி சி.பி.அய். நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் விளக்கியிருக்கிறார். கலைஞர் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ள விவரம்:

அவரது உடல் நலம் சரியில்லை என் பது தமிழகம் முழுதும் அறிந்த செய்தி யாகும்.

அவரால் விமானத்தில்கூட பயணம் செய்ய முடியாது. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு நேரில் வீட்டிற்கே வந்து, தயாளுவின் உடல் நிலையை பார்த்து அறிக்கை தரலாம் என்று நீதிபதி முன்பு வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, எந்த மருத்துவ மனை என்று கேட்டறிந்து, புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை அழைத்து வரும் செலவினை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினையும் எழுந்து, அந்தச் செலவினையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி கூறப்பட்டது.
அதையெல்லாம் நீதிபதி குறித்துச் கொண்டதோடு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் வரும்போது, எங்கள் குடும்ப மருத்துவரும் உடன் இருக்க அனுமதி கேட்டு, அதுவும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது

சி.பி.அய். தரப்பிலும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களே நேரில் வந்து பரிசோதிக் கலாம் என்று ஒப்புதல் அளித்தனர். ஆனால் 2 நாள்கள் கழித்து சி.பி.அய். நீதிபதி நேரில் வரவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி வழக்குரைஞர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேலும், என் மனைவி, நேரில் தான் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டால், அதனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப் பேற்றுக் கொள்வார்கள்? என்று கலைஞர் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

மனிதநேயத்தோடு அணுக வேண்டிய பிரச்சினை அல்லவா இது?

முதுமை காரணமாக அவர் முன்பே அலைக்கழிக்கப்படாதபோது, இப்போது திடீரென்று இப்படி ஏன் வற்புறுத்தப்பட வேண்டும்?

சி.பி.அய். தரப்பு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது எப்படி? ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, இப்படி ஒரு நிலை ஏன்?

இதனால் மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஒரு அவப்பெயர் பழி, அரசியல் ரீதியாக ஏற்படாதா? ஏனெனில் சி.பி.அய். பிரதமர் கீழ் உள்ள ஒரு துறையாகும். அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படி ஒரு முடிவு என்று நாம் சொல்ல வரவில்லை; ஆனால் இந்தநிலைக்குப் பிறகு, இதுபற்றி மறுபரிசீலனை செய்து மனிதநேயத்தோடு அவர்களை அழைப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

2.6.2013 சென்னை

தமிழ் ஓவியா said...


பெரியார் - அண்ணா ஊட்டிய உணர்வில் பணியாற்றுகிறேன் கவிஞர்கள் பங்கேற்ற விழாவில் கலைஞர்


தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 90 கவிஞர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர்களுடன் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.


சென்னை, ஜூன் 2- பெரியார், அண்ணா மற் றும் பல்வேறு கவிஞர் கள் ஊட்டிய உணர்வா லும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமி ழர்களையும் காப்பாற்ற முடியும் என்று சிந்தித் துக் கொண்டிருக்கிறேன் என்று கலைஞர் நெகிழ்ச்சி உரையாற்றி னார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 90 கவிஞர்கள் கூடி அவருக்குச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நேற்று (1.6.2013) சென்னையில் நடந்தது. விழாவிற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

விழாவில் 90 கவிஞர் கள் தனித்தனியாக கலை ஞருக்கு நினைவுப் பரிசு, பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து கலை ஞர் ஏற்புரை வழங்கி னார். அவர் உரையாற்றிய தாவது:- என்னுடைய 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி கவிஞர் வைரமுத்து ஏற் பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என் னையும், அவரையும், இதற்கெல்லாம் மேலாக தமிழையும் பெருமை படுத்தியுள்ளார். ஏற் புரை என்ற தலைப்பில் நான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை யிட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் என்னை பாராட்டிய சிறப்புரை கள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத் தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண் டால் தமிழ்த்தொண்டு, பொதுத் தொண்டு, சமு தாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காக வும், தமிழர்களுக்காக வும் பணியாற்ற வேண் டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை. பெரியார் - அண்ணா வழியில்...

ஏழ்மையான குடும் பத்தில் பிறந்ததால் வாழ்க்கையில் கஷ்டங் களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துய ரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடி யும். பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு கவி ஞர்கள் ஊட்டிய உணர் வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமிழர் களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித் துக் கொண்டு இருக்கி றேன். இப்போது முழு நிம்மதியாக இல்லை. எனக்கு பல்வேறு வழி களில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின் றன. என்னைப் பொறுத்த வரையில் பொதுவாழ்க் கையில் அவையெல் லாம் ஒரு தூசுதான்.
தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகி றேன். என் உணர்வை யும், வலியையும் பெரி தாக்கும் அளவுக்கு காரி யங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர் களுக்கு கடமை உள் ளது. நம் காலத்தில் தமி ழுக்கு தீங்கு வந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். அச்சத்தைப் போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமி ழுக்கு ஏற்பட்ட கிளர்ச் சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மனநிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண் டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது. நம் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டில்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழித் தகுதியை அளித்ததுடன், வாழ்த் துகளையும், பாராட்டு களையும் சோனியா காந்தி எழுதிய கடிதத் தில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று செம் மொழி என்று சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்கின்றனர். நான் பெற் றுத் தந்ததால் இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளது.
மொழியைக் காப்போம்!
செம்மொழித் தமிழை காப்பாற்றவும், உலகள வில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடு பட வேண்டும். தமிழ் செம்மொழி நிலை நாட்ட அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி செம் மொழித் தகுதியை இழந்துவிடாமல் காப் பாற்ற என்னை அர்ப் பணிப்பதுடன், வாதாட வும், போராடவும் செய் வதுடன் என்னையே ஒப்படைப்பேன். நம்மு டைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வைப் பங் கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப் பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
- இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்



நாத்திகன் என்று சொன் னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?


உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.

மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.

எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

தமிழ் ஓவியா said...


முடைநாற்றம் வீசும் மூட நம்பிக்கைகள்!


குலதெய்வத்தைக் கும்பிடப் போனவர் கோரப் பலி!

விருதுநகர், ஜூன் 3- குலதெய்வ கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற போது பாலத்தில் கார் மோதி நேர்ந்த விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் இறந்தனர். மகன், மகள் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ் (48). திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மளிகை மற்றும் மிட்டாய்க் கடை நடத்தி வந்தார்.

சாத்தான்குளத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக மனைவி உஷாராணி (40), மகள் சவும்யா (21), மகன் பிரபு (18) ஆகியோருடன் வாடகை காரில் செங்கத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பினார் ராஜ். காரை, ஓட்டுநர் அசன் பாட்ஷா (38) ஓட்டினார்.

விருதுநகர் மருளுத்தூர் -பட்டம்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் ராஜ், உஷா ராணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சவும்யா, பிரபு, அசன்பாட்ஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தேர் எரிந்து சாம்பல்

திருப்பூர், ஜூன் 3- திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சிற்பக்கூடம், நேற்று தீப்பிடித்து எரிந்ததில், தேர் சக்கரங்கள் நாசமாயின. திருப்பூர் வீராகவப் பெருமாள் கோவிலில், 50 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கின்றன. புதிதாக அமைக்கப்படும் சன்னதிகளுக்கு, கல் தூண், கல்சிற்பங்கள் செய்யும் பணிக்காக, கோவில் வளாகத்தில், கொட்டகை அமைக்கப் பட்டிருந்தது.

இதில், சிற்பிகள் வேலை செய்து வந்தனர். நேற்று, விடுமுறை தினமானதால், பணிகள் நடக்கவில்லை. பிற்பகல், 3.20 மணியளவில், திடீரென, தென்னை ஓலைக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததோடு, மேற்கூரையும் சரிந்து விழுந்தது. அருகிலிருந்த தேர்களின், பழைய மரச் சக்கரங் கள் எரிந்து தீக்கிரையாயின. தெற்கு மற்றும் வடக்கு தீய ணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்திற் கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

கழுதைக்கும் கழுதைக்கும் டும் டும் டும்மாம்!

கடந்த ஆண்டு, தமிழகம் முழுவதும், தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால், ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில், தண்ணீருக்காக மக்கள் அல்லல்படும் நிலை உள்ளது.

இதற்காக மக்கள் மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே, கழுதைகளுக்குத் திருமணம் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சேலம் ஏற்காடு மலைப்பகுதியை ஒட்டி அமைந் துள்ள செட்டிச்சாவடியில், இரண்டு கழுதைகளை அழைத்து வந்து, ஊர் மக்கள் திருமணம் நடத்தி வைத்தனராம்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்களும், செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட அய்ந்து கிராம பகுதி மக்களும் திரண்டு வந்தனராம். பூ, பழம், மேள தாளம் முழங்க, சித்தர்கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட இரண்டு கழுதைகள், அங்குள்ள ஊரணி மாரியம்மன், காளியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டதாம்.

அங்கு, பூசாரி குழந்தை என்பவர் கழுதை யின் கழுத்தில் மாலையை அணிவித்தாராம். பின்னர், ஆண் கழுதை சார்பில், பெண் கழுதைக்கு தாலியைக் கட்டினா ராம். அங்கிருந்த மக்கள் அனைவரும் அக்கழுதைகள்மீது மலர்களைத் தூவினராம்.

செட்டிச்சாவடி ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் கோவில் அறங்காவலர் மற்றும் அவ்வூர் முக்கிய பிரமுகர்களும் பலர் கலந்து கொண்டனராம். தொடர்ந்து, திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும் சோறு போடப்பட்டதாம். இதனால் மழை பொழிந்துவிடும் என்று நம்பும் மக்கள் என்றுதான் பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்புவார்களோ?

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை



பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

-(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (1)


உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?

1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.

மிகவும் கடினமானது எது?

பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?

நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!

மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!

மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.

நட்பின் ஆழமான அடையாளம்

அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.

நல்ல தலைமையின் அடையாளம்!

எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!

இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?

இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!

தொண்டர்களின் சரியான இலக்கணம்

சிந்திப்பதற்குத் தலைமை
செயல்படுவதற்கு நாம் என்பதே!

வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?

சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!

வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!

மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!

கல்வியின் சிறப்பு

தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!

பணம் சம்பாதிப்பதன் தேவையா?

ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.

அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!

சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?

நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.

மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?

ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.

இருக்கக் கூடாதது...?

பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.

(தொடரும்)

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அரசாணை எண் - 92


மத்திய அரசின் உதவித் தொகை திட்டத் தின்கீழ் 9.1.2012 அன்று அரசாணை ஒன்று பிறப் பிக்கப்பட்டது. அதன்படி அனைத்து விதமான படிப்புகளுக்கும் பொருளா தாரத்தில் பின் தங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு நூறு விழுக்காடு கல்விக் கட்டணம் ரத்து என்று இந்த ஆணை கூறுகிறது.

இதில் உள்ள அவலம் என்னவென்றால் இப்படி ஓர் ஆணை வெளி வந் துள்ளது என்பது வெளிச் சத்துக்கு வராமலேயே இருட்டில் தூங்குகிறது என்பதாகும்.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த ஆணையினால் பலன் பெற முடியும். 2011-2012ஆம் ஆண்டு முதலே இது அமலுக்கு வந்தது விட்டது.

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத் துறை இந்த ஆணையைச் சரிவர விளம்பரம் செய் யாததால், இந்த ஆணை யின்படி பயன் அடைய வேண்டிய தாழ்த்தப்பட்ட இருபால் மாணவர்களும் பணம் கட்டி விட்டனர்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.
மருத்துவம், பொறி யியல் மற்றும் அனைத்துப் படிப்புகளுக்கும் இந்த ஆணை பொருந்தக் கூடியதே!

கல்விக் கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரி கைகள், மருத்துவப் பரி சோதனை போன்றவற் றிற்கான கட்டணங்களும் இதில் அடங்கும்.

இந்த ஆணை தெரி யாமல் பணம் கட்டியவர் களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல். இந்தச் சலுகையை அறி யாத காரணத்தால் கல்லூரிகளில் சேர முடி யாத நிலைக்குத் தள்ளப் பட்ட தாழ்த்தப்பட்ட மாண வர்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முறைப்படி இது போன்ற ஆணைகளை அரசு, ஏடுகளில், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண் டும்.

ஆட்சியின் சாதனை கள் என்று பக்கம் பக் கமாக விளம்பரங்களை அள்ளிக் கொட்டும் தமிழ் நாடு அரசு, சமூக நீதித் தொடர்பான - தாழ்த் தப்பட்ட மக்களை வாழ் விக்கும் ஒரு ஆணையை விளம்பரப்படுத்துவதில் கமுக்கமாக இருட்ட டிப்புச் செய்தது ஏன்?

இனி மேலாவது தமிழ் நாடு அரசு விளம்பரப் படுத்துமா? தாழ்த்தப் பட்ட மக்கள்தான் விழித் துக் கொள்வார்களா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அத்வானி ஏற்படுத்திய அதிர்வு....


பி.ஜே.பி.யில் மூத்தத் தலைவரும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது (2009) பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளருமான லால்கிஷண் அத்வானி, மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் (1.6.2013) பேசிய பேச்சால் பிஜேபி கூடாரம் அதிர்ந்து போயிருக்கிறது.

தாம்தான் பிஜேபிக்கான அதிகாரப் பூர்வமான பிரதமர் வேட்பாளர் என்று எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த நரேந்திரமோடியின் தலையில் நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார் மூத்தத் தலைவர் அத்வானி!

மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானைப் பாராட்டு மழையால் குளிர வைத்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி போல அடக்கமானவர் என்று அடையாளப்படுத்தினார்.

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியையும் அக்கூட்டத்தில் அவர் பாராட்டியிருந்த போதிலும் ம.பி. முதல்வர் சவுகானுக்கு அதிகார மமதை கிடையாது என்று குறிப்பிட்டார். குஜராத்தைவிட மத்திய பிரதேசத்தில் சாதனைகள் அதிகம் என்று விளாசினார். இதன் மூலம் மோடியை அத்வானி மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது என்று தினமணியே கூறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்பதில் அத்வானிக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அது கிட்டியவுடன் சடார் என்று போட்டு உடைத்து விட்டார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம்; காரணம் அங்குதான் பிஜேபியின் முதல் அமைச்சராக சவுகான் இருக்கிறார்.

குஜராத் மோடி ஆட்சியில் குபீரென்று முன்னேறி விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்ட நிலையில், ம.பி.யில் சவுகான் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அத்வானி ஒரு போடு போட்டதன் மூலம் மோடியும், அவரைத் தோளில் தூக்கி வைத்துள்ள கூட்டத்தாரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டனர்.

அத்வானி, சுஷ்மா சுவராஜ் போட்டி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்து நிலவும் சூழ்நிலையில், மூன்றாவதாக சவுகானை அத்வானி களத்தில் இறக்க முயற்சிப்பதன் சூட்சுமத்தைப் புரியாமல் பிஜேபி வட்டாரம் திகைக்கிறது.

ஒருக்கால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் சவுகானுக்குக் கிடைக்க வேண்டும் என்று அத்வானி நினைக்கிறார் போலும்!

பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள இரு மாநில முதல் அமைச் சர்களை மோத விடுவதுதான் சுவையான காட்சியாகும்.

கருநாடக மாநிலத் தேர்தலில் காயடிக்கப்பட்ட பிஜேபி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் கால கட்டத் தில், உள்நாட்டுப் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கி விட்டது. அடுத்தடுத்த காட்சிகள் வேடிக்கை, விநோதம் நிறைந்ததாக இருக்கக் கூடும்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்றால் ஒட்டு மொத்தமான சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிஜேபிக்கு எதிராக சிந்தாமல் சிதறாமல் செல்லும்.

பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பா.ஜ.க.வை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் கைகோக்க அதிக வாய்ப்புண்டு.

சமூக நீதியாளர்கள், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் பிஜேபிக்கு எதிராகத் திரளவும் அதிக வாய்ப்புண்டு. தலைப்பாகையை மாற்றி னாலும் தலைவலி தீரப் போவதில்லை என்பதுதான் உண்மை.

கடைசி செய்தி (Tail Piece) : என்னைவிட மோடிதான் சிறந்த முதல் அமைச்சர் என்று ம.பி. முதல் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார். இதுவும் ஒரு மோடி மஸ்தான் வேலையாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்வதில் மோடி பலே கில்லாடி ஆயிற்றே!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


வாழ்வியல் சிந்தனை - விருது பெற்றுத் தந்தது!




கடந்த சில நாள்களுக்குமுன், பல நூற்றுக்கணக் கான ரயில் பயணிகளைக் காப்பாற்ற மனோகரன் என்ற ரயில் ஓட்டுநர், கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை அருகில் வண்டியை ஓட்டி வரும்போது, இதயவலி ஏற் பட்டு, சங்கடப்பட்ட நிலையில், ரயிலை நிறுத்தி, பிறகு கீழே இறங்கி சுருண்டு விழுந்த நிலையில், மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார்.

அவரது கடமை உணர்வு, பொறுப்புணர்வைப் பாராட்டி ரயில்வே நிர்வாகம் அவருக்கு விருது வழங்கவேண்டுமென்று வாழ்வியல் சிந்தனையில் எழுதினோம். ரயில்வே நிலைக் குழுத் தலைவரான தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு அவர் களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அவர் உடனே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதைக் கூறினார். கைமேல் பலன் கிடைத்தது!

இன்றைய ஏடுகளில் மனோகரன் மறைந்த நிலையிலும் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது, பாராட்டுக்கள்! -------------விடுதலை” 5-6-2013

தமிழ் ஓவியா said...


தொழிலாளர்களின் புத்தி இப்படியா?


தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போர்க்கொடி தூக்குவார்கள். கோரிக்கை கள் நிறைவேறும்வரை கோடிக் கைகளை உயர்த்துவார்கள். நீதிமன்றமும் செல் வதுண்டு. அவைதான் சரியான வழி முறையும்கூட.

புதுச்சேரியில் என்ன நடந்திருக்கிறது? முதலியார்பேட்டையில் ஏ.எஃப்.பி. (ரோடியர் மில்) துணி நெய்யும் தொழிற்சாலை.

நலிந்த தொழிற்சாலையாகி இழுத்து மூடப்பட்டது (3.2.2013). தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பறிபோனது. 13 மாத சம்பளப் பாக்கியும் நிலுவையில் உள்ளது - என்னே கொடுமை!

அதைவிட இன்னொரு கொடுமை - தொழிலாளர்கள் தரப்பில்,

ஜூன் 2 ஆம் தேதி காலை 9.30 மணி. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்த் தோழர் கள் தொழிற்சாலை முன் கூடினர்.

குதிரைமீது அமர்ந்திருக்கும் அய்யனார் சிலை போன்ற கட்-அவுட் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த அய்யனாருக்கு எலு மிச்சை மாலை, பூ மாலைகளைச் சூட்டினர். அய்யனாருக்கு மிகவும் பிடித்தமானதாகக் கதைக்கிறார்களே - சேவல், சாராயம் (அதுவும் புதுச்சேரி - கேட்கவேண்டுமா?) போன்றவற்றை களேபரமாகப் படைத்தனர். பிறகு உருமி அடித்தனர்.

10 மணி... அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். புதுச்சேரி பேருந்து நிலையத் திற்குள் அமைந்திருக்கும் கலிதீர்த்த அய்ய னார் கோவிலை வந்தடைந்தது ஊர்வலம்.

உருமி அடிக்கப்பட்டது - சிலர் சாமி வந்து(?) ஆடினார்களாம்.

அய்யனாருக்கு விசேடமாகப் பூஜைகள் செய்யப்பட்டனவாம் - கோரிக்கைகள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டினை குதிரைமீது வீற்றிருந்த அய்யனார் பொம்மைக் கையில் உள்ள கத்தியில் வைத்தனராம்.

வேடிக்கை பார்க்க மக்கள் கூடினார் களாம் - எப்படி இருக்கிறது? விவரம் தெரியாதவர்களா இந்தத் தொழிலாளர்கள்? விவரம் தெரியாதவர்களா இவர்களை வழிநடத்தும் தொழிலாளர்த் தலைவர்கள்?

அய்யனாருக்கு அவ்வளவு பெரிய சக்தி இருந்தால், தொடக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது ஏன்? அப் பொழுது அய்யனார் நினைவு வர வில்லையா?

தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் புகாவிடின், அதன் விளைவு இப்படிக் கீழ்த்தரத்தில்தான் சென்று முடியும்.

தந்தை பெரியார் கூறுகிறார்:

இன்று தொழிலாளிகளுக்குப் பாடுபடுவதாகச் சொல்கிற ஸ்தாப னங்கள் எல்லாம் தொழிலாளிக்கு நாத்திகம் தேவையில்லை; அவன் சாமி கும்பிடுவதையோ, கோவில் குளங்களுக்குத் திருவிழாக்களுக்குப் போவதையோ தடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவெல்லாம் சொல்லுகிறார்கள். அந்தப்படி இருப்ப தனால் தொழிலாளி தனக்குக் கிடைக்கும் பணத்தை இந்த மாதிரிக் கோவில், குளம் திருவிழாக்களிலே செலவிட்டே மூடத்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் பலியாவானே தவிர, சேர்த்த பொருளை மீட்காமல் கண்டதுக்கு, கண்மூடித்தனத்திற்குச் செலவிடுவானே தவிர, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவோ வாழ்க்கைத் தரத்தை சரிக் கட்டிக் கொள்ளவோ முடி யாதவனாக ஆகிவிடு கிறான் (விடுதலை, 22.3.1952) என்று தந்தை பெரியார் சொன் னதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் உண்மை வெளிச்சமாய்த் தெரியும்.

கான்பூரிலே செருப்புத் தொழிற் சாலைகளில் ஒருமுறை வேலை நிறுத்தம்; வன்முறைகள் தலைதூக்கின - தீ வைப்பு முதற் கொண்டு அரங்கேறின. காவல் துறையாலும் அடக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தொழிற்சாலை முதலாளி ஒரு தந்திரம் செய்தார். தம் குடும்பப் புரோகி தனைக் களத்தில் இறக்கிவிட்டார்.

அவன் கையிலே ஒரு தட்டு, அதில் கொஞ்சம் கோவில் பிரசாதம்!

இந்தச் சகிதமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தான் புரோகிதன்! அவ்வளவுதான்! ஆர்ப்பரித்த வாய்கள் அடங்கின. பொங்கி எழுந்த தோள்களும் அழுந்தின!

புரோகிதப் பார்ப்பானிடமிருந்து பிரசாதம் பெற தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

தொழிலாளியின் எரிமலைக் குழம்பை ஒரு திருநீறும், குங்குமமும் அணைத்து விட்டதே!

எந்தப் பிரச்சினைக்கும் பெரியார் மருந்து - மூலிகை தேவைப்படுகிறது!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (2)



மனிதர்களிடம் பின்பற்றத் தகுந்த பெரியவை எவை?

எண்ணியவைகளையே, சிந்தித்தவைகளையே பேசுவது,
பேசுவதையே செயல்படுத்துவது
என்பது எல்லாம் ஒன்றாக அமையும்
வாழ்க்கை நெறியே!
காரணம், மனிதரில் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், பேசுவதன் படிகூட நடவாது அதனின்றும் மாறுபட்ட செயல் வகையில் ஈடுபடுவதுமான மூவகை வாழ்வு (இரட்டை வாழ்வு கூட அல்ல) வாழுகின்ற அன்றாட அவலம் நமது கண்முன்னே காணும் காட்சியாகும்!

தவிர்க்கப்படவேண்டியவை எவை?

மற்றவர்களைத் துன்புறுத்தி - அது கேலி, கிண்டல், நக்கல் போன்றவைகள்மூலமும், இதர கேவல முறைகளாலும்கூட அமையலாம் - அதில் இன்பங்காணும் இழிதகைமை.

பின்பற்ற வேண்டிய பெருநெறி எது?

எந்த நிலையிலும் தன்னை விற்றுக் கொள்ளாத அல்லது சுயமரியாதையை விலை பேசாத உயர்நெறியான வாழ்க்கை.

புகழ் வேட்டையாடுதல் பற்றி...?

போதைகளிலேயே மிகப்பெரிய போதை இந்தப் புகழ் போதைதான்.

அதற்காக மனிதர்கள் உண்மை மனிதர் களாக இராமல், நிலை தாழ்ந்து, வீழ்ந்து, ஒப்பனை மனிதர்களாகி உயர நினைக்கும் பேதமை!

இயல்பாக வரும் புகழ் நல்ல இரத்த ஓட்டம்; திணிக்கப்பட்ட அல்லது யாசிக்கப்பட்ட புகழ் இரத்தக் கொதிப்பு போன்றது!

இரத்த ஓட்டம் - ஆரோக்கியமானது; இரத்தக் கொதிப்பு எந்த நேரத்திலும் பல நோய்களுக்கு அடிப்படை - ஆரோக்கியத்தின் வைரியாகும்!

பதவி ஆசை, பதவி வெறி இவைகள்

சர்க்கரை நோயைவிட கொடுமையானது; ஒருமுறை உடலுள் நுழைந்தால், இறுதி மூச்சடங்கும் வரை அது உடலை விட்டு அகலாது; முயன்றால் சிலர் கட்டுக்குள் அதை வைக்கலாமே தவிர, அறவே நீக்கி அதனின்றும் விடுதலை பெற்றுவிட முடியாது; முடியவே முடியாது!

அதுபோலத்தான் பதவி ஆசையாக முதலில் தொடங்கி, பதவி வெறியாக அது தீவிரமாக மய்யங்கொண்டு, பலருக்குப் புதை பூமியாகவும் ஆகிவிடுகிறது!

ஒருமுறை ஆட்பட்டுவிட்டால் அது பிடித்தவர் களை விட்டு அகலாது.

அறிவு நாணயம் என்பது...?

உள்ளதை எக்காரணம் கொண்டும் ஒளிக்காது, மறைக்காது கூறுவதோடு, சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல்போல் வாழ்க்கையை செம்மையாக நடத்துவது,
எமை நத்துவாய் என எதிரிகள்
கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற வைராக்கிய நெஞ்சத்தோடு,
வறுமையின் உச்சத்திலும்
நெறிபிறழாத வாழ்வின் சிறப்பியல்புகளில் முக்கியமான ஒன்று!

உறவுகளில் உயர்ந்தது எது?

ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிடினும் ஒரு கொள்கை வயப்பட்ட நிலையில் அதற்காக, அதைப் பின்பற்றியவருக்காக, உயிரையும் விட எதனையும் ஏற்கத் தயாராகும் உறவே உயர்ந்த உறவு!

தியாகத்தில் சிறந்தது எது?

திணிக்கப்பட்டோ, விபத்தினாலோ வந்து விழும் தியாகம் உண்மை தியாகம் ஆகாது.

தெரிந்தே உயிர் விடுதல் செய்த சாக்ரட்டீஸ், பகத்சிங் போன்றவர்களின் தியாகம்.

அல்லாது கொண்ட கொள்கைக்காக வாழ்வை இழந்து வரலாறாக வாழும் வ.உ.சி. போன்றவர் களின் தியாகம் முதல் தரம்.

- கி.வீரமணி

- (தொடரலாம்)

தமிழ் ஓவியா said...


கலைஞர் என்றாலே வியப்பு - பிரமிப்பு காரணம் அவரின் கடுமையான உழைப்பு - தலைவர்கள் புகழாரம்


சென்னை, ஜூன் 5- கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தோழமைக்கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் 3.6.2013 அன்று மாலை சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது.

இப்பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது:-

தொல்.திருமாவளவன்

கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், அறிவு ஆற்றல் பெற்ற ஒரே தலைவர் கலை ஞர்தான். அவருக்கு போட்டி போடுவதற்கு தகுதி யான தலைவர்கள் யாரும் கிடை யாது. புவி ஈர்ப்பு விசையை போன்று அரசியல் விசையாக கலைஞர் திகழ்கிறார். ஈழம் வென்றெடுக்க தமிழர்கள் வாழ்வுரிமையை மீட் டெடுக்க கலைஞர் அவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாது என கலைஞர் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்திப் பேசினார்.

காதர் மொய்தீன்

கலைஞர் அவர்களின் வாழ் கின்ற காலம் நமக்கு பெருமை. கலைஞருடைய வரலாறு எத்தனை மேடு - பள்ளங்களை யும், காட்டாறுகளையும் கடந்து வந்திருக்கிறது. கலைஞரின் சிந்தனைகளையும், சாதனைகளை யும், எழுத்துக்களையும் தமிழ் அறிஞர்கள் தொகுத்து அவருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கச் செய்தவர் கலைஞர் அவருக்கு முஸ்லிம் சமுதாயம் என்றும் கடமைப் பட்டுள்ளதாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்துரை வழங்கினார்.

சுப.வீரபாண்டியன்

சமூக அரசியலில் 90 வயதிலும் கலைஞர் செய்து இருக்கின்ற சலிப்பில்லாத பணி பேராற்றல் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் வராது. கலைஞரின் கடந்த 70 ஆண்டு வரலாறு நீண்ட நெடிய வரலாறு. அவரின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கடினமானது. அடங்காத பல அரசியல் குதி ரைகளை அடக்கிய அரசியல் அலெக்சாண்டர் நீங்கள்! என்றைக்கும் எந்த நெருக்கடி காலத்திலும் தளராத நெப்போ லியன் நீங்கள்!

ஆட்சியை உயிர் மூச்சாக கருதாமல், மக்கள் பணி செய்கின்ற படைகலனாக கருதுபவர் கலைஞர் அவரை போன்று துணிச்சல், போராட்ட குணம் யாருக்கும் வராது என கலைஞருக்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலைஞரை வாழ்த்திப் பேசினார்.

இவ்விழாவின் இறுதியாக 90ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் கலைஞர் அவர்கள் ஏற்புரை நிகழ்த் தினார். முன்னதாக இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

90-ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன், பேராசிரியர் காதர் மொய்தீன், தொல்.திருமாவளவன் ஜெ.அன்பழகன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.

இவ்விழாவின் தொடக்கத்தில் அனைவரையும் எஸ்.மதன்மோகன் வரவேற்றார். ஏ.ஆர்.பி.எம். காமராஜ் வழி மொழிந்தார். மா.பா.அன்புதுரை நன்றி கூறினார். விழாவின் தொடக்கத்தில் மக்கள் இசை கலைஞர்கள் முனைவர் புஷ்பவனம் குப்பு சாமி, முனைவர் அனிதா இணையர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாமேடை அண்ணா அறிவாலய தோற் றத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அமைக் கப்பட்டிருந்தது. இதை விழா நாயகர் கலைஞர் மற்றும் தோழமைத் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், கலைஞர் குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள், ஆற்காடு நா.வீராசாமி, எ.வ.வேலு, பொன்முடி, துரைமுருகன், சற்குண பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் மற்றும் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆருக்கு... கருஞ்சட்டையிடம் விளையாட வேண்டாம்


பருவம் பாராது, மானம் பாராது தொண்டறம் புரிபவர் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களைப் பாராட்டிவிட்டாராம் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் பறக்கவிட்டுக் கொண்டு பூணூலுக்கும், திருநீறுக்கும் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டு இருக்கும் அக்கிரகார ஆன்மீக ஏடாகவே ஆட்டம் போடும் அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு. அத்திரிபாட்சா கொழுக் கட்டை என்று சாக்கடை எழுத்துக்களை சந்தனமாகக் கருதி உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை பூசிக் கொண்டுள்ளது (5.6.2013).

இந்த ஏட்டுக்கு அனா ஆவன்னா சொல் லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

பருவம் பாராது தொண்டாற்றக் கூடியவர் கலைஞர் என்பதில் என்ன தவறு? இந்தத் தொண்ணூறு வயதிலும் உழைக்கிறார். அன்றாடம், தானே கட்டுரை எழுதுகிறார் - தானே பேசுகிறார் (மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதையல்ல) செய்தியாளர்களைச் சந்திக்கிறார் - அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் - இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் - சுயமரியாதைத் திருமணங் களை நடத்தி வைக்கிறார்.

பொதுத் தொண்டாற்றி மறைந்த பெரு மக்களின் உடலுக்கு ஓடோடிச் சென்று இறுதி மரியாதை செலுத்துகிறார் - போராட்டங்களை அறிவிக்கிறார் - தானே அந்தக் களத்திலும் போய் நிற்கிறார் - இவ்வளவும் இந்தத் தொண்ணூறு வயதில் - இதற்குப் பெயர்தான் பருவம் பாராத தொண்டு என்பது.

அதேபோல மானம் பாராத தொண்டு என்று கழகத் தலைவர் பாராட்டியிருக்கிறார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள் - தன்மான இயக்கத்தின் தத்துவத்தை அறிந்து கொண்டவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

தனி வாழ்வில் மானம் பார்க்கலாம்; பொது வாழ்வில் மானம் பாராது தொண்டாற்ற வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் 1028)

- என்ற குறள், தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறளாகும்.

இதை எல்லாம் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சமாவது பகுத்தறிவும், பொது அறிவும் தேவைப்படும்.

கலைஞரின் மானம் பாராத பொதுத் தொண்டு என்பதற்கு உதாரணம் வெகு தூரம் போய்த் தேட வேண்டாம்.

ஒவ்வொரு நாளும் அதிமுகவின் எம்.ஜி.ஆர் ஏடு அவதூறுகளையும், ஆபாசச் சொற்களை யும், அநாகரிகச் சகதிகளையும் அவர்மீது வீசு கிறதே - அவற்றையெல்லாம் அனாயாசமாகப் புறந்தள்ளி, பொதுத் தொண்டில் 90 வயதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாரே - இந்த ஒன்று போதாதா?

திராவிடர் கழகம் - அதன் தலைவர் யாரை ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் அது கொள்கை அடிப்படையில் தான் இருக்கும் என்பது ஊருக்கும், உலகுக் குமே தெரியும். அதற்குப் பெயர் ஜால்ராவாம்.

கர்ப்பிணிப் பெண்களைக் கூட அவர்கள் முசுலீம்கள் என்றால் அவர்களின் குடலைக் கிழித்தெறிந்த மோடிகளுக்கெல்லாம் ஜால்ரா போடுபவர்கள் யார் என்று தெரியாதா?

எழுதுகோலை எதிர்த்துப் பிடிக்க ஆரம்பித்தால் நமது எம்.ஜி.ஆர். தாங்காது - கருஞ்சட்டையிடம் விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!