Search This Blog

20.6.13

நீதியரசர் கர்ணன் தீர்ப்பு-பெண்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரத்திற்கு சவுக்கடி!


பேரம் பேசும் ஆண்களின் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி
பெண்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரத்திற்கு சவுக்கடி!
தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை
நீதியரசர் கர்ணன் - பழைய புராண கர்ணன் அல்ல - அவர் அளித்துள்ள தீர்ப்பும் புரட்சிகரமானது; அதனைத் திராவிடர் கழகம் வரவேற்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் அண்மைக்கால அதிரடி புரட்சிகரமான தீர்ப்புகளில் முக்கியமானதும், வரலாற்றில் இடமபெறவேண்டியதுமான தீர்ப்பு ஜஸ்டீஸ் திரு.கர்ணன் அவர்கள் சில நாள்களுக்குமுன் கொடுத்த தீர்ப்பாகும்.

புத்தாக்கச் சிந்தனையின் எதிரிகள்!

பழைய சிந்தனைகள் என்ற சிறைக்குள்ளேயிருந்து வெளியேறிட முடியாத பலர் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்கூட இத்தகைய புரட்சிகர, பெரும்பாலான மதவாதிகள், பழைமையாளர்கள், புரோகித வர்க்கத்தினர், சீர்திருத்தத்தை ஒரு பேஷனாகக் கருதிப் பேசுவோர் பலரானாலும்கூட இத்தீர்ப்பை செரிமானம் செய்து கொள்ள முடியாது. காரணம், புதிய கருவிகளை வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் பலரும் புதிய புத்தாக்கச் சிந்தனைகளைக் கண்டால் ஏற்றுக்கொள்ள அஞ்சும் மனப்பான்மையே!
திருமணம் என்பது நெருப்பைச் சுற்றி ஏழு அடி யெடுத்து வைத்தால்தான் செல்லும்; தாலி கட்டினால் தான் செல்லும்; சடங்கு, சம்பிரதாயங்களைச் செய்தால் தான் சட்டப்படி செல்லும் என்றெல்லாம் முந்தைய பல தீர்ப்புகள் வைதீகபுரியின் வக்கீல்களான நீதிபதிகளால் நமது உயர்நீதிமன்றங்களில் தரப்பட்டுள்ளன.

பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி

யதார்த்தமாகவும், பெண்களிடம் ஆசைகாட்டி மோசம் செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே நாசம் செய்து கைவிட்டு, புது செருப்புப் போட்டுக்கொள்ள பழைய செருப்பைக் கழற்றி எறிவது போன்ற அலட்சியத்துடன் மகளிரிடம் நடந்துகொண்டு அவர்கள் கருவுற்ற போதிலும்கூட, அதற்குப் பொறுப்பேற்க மறுத்து, பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணி அடிக்கும் தீர்ப்பேயாகும் இது!

இந்தத் தீர்ப்பு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும்; கடும் விமர்சனங்களுக்கு ஆளாகக்கூடும். அய்யோ, நமது பாரத கலாச்சாரம், மத ஆச்சார அனுஷ்டானங்களே குழி தோண்டிப் புதைப்பதாகிவிடும் என்று வைதீகபுரியினர் அலறக்கூடும்.

திராவிடர் கழகம் வரவேற்கிறது!

என்றாலும், அதுபற்றிக் கவலைப்படாத பெண்களுக்குப் பாதுகாப்பும், ஆண் களை ஒழுக்கநெறிகளையும், பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்காதவர்களாக ஆக்க வும் பயன்படும் யதார்த்த மான தீர்ப்பு இத் தீர்ப்பு என் பதால் இதனை வரவேற்றுப் பாராட்டுகின்றனர் திராவிடர் கழகமும், தொண்டர்களும்.

கலாச்சாரம் பாழ் என்ற கூக்குரல்!

1. காலம் மாறுகிறது; தீர்ப்புகளின் பார்வையும் பழைமையிலிருந்து மாறுகிறது. இதில் தவறு என்ன?

இதனால் ஆகா, பண்பாடு, கலாச்சாரம் போய் விடுகிறதே என்று அலறலாமா? அலறுவதில் விமர்சிப்பதில் பொருள் உண்டா?

இளம் விதவைகளைக்கூட உயிருடன், கணவன் இறந்தவுடன் இணைத்து சதி என்ற உடன்கட்டை ஏற்றும் கொடிய காட்டுமிராண்டி வழக்கம் சட்டப்படி தடை செய்யப்படவில்லையா?''

2. பால்ய விவாகம் என்பதன் தன்மை என்ன? சங்கராச்சாரியார்கள் முதல் சாதாரண சனாதனிகள்வரை இதனை ஆதரிப்பவர்களாயினும் இது சட்டப்படி இன்று குற்றமல்லவா?

3. விதவைகளுக்கு மறுமணம் சட்டப்படி அங்கீகரிக் கப்பட்டு, அவர்களை உண்மையான ஒழுக்கவாதிகளாக ஆக்கி - பழைய திருட்டு, விபச்சாரப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற முயற்சி வரவேற்கப் படவில்லையா?

பிரம்மா பேன் குத்திக்கொண்டு இருக்கிறாரா?

4. கருத்தடை (Birth Control) என்பது, பகவான் கொடுக்கிறான்; மனிதன் தடுப்பதா? என்று கேட்டதற்கு மாறாக, மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப் படுத்த, பெண்களுக்கான நலவாழ்வு சுதந்திரத்திற்கு ஒரு முக்கிய தேவையாக இன்று அரசுகளின் திட்டமாக, குடும்பநலம் (Family Planning) ஆகிவிட்டதே - இதனால் என்ன குடிமூழ்கிப் போய்விட்டது? பிரம்மா வேலை யில்லாத் திண்டாட்டத்தினால் அவதிப்பட்டு, அங்கே பிரம்மலோகத்தில் பேன் குத்திக்கொண்டு இருக்கிறாரா?

இதனால் எல்லாம் கெடாத கலாச்சாரம் - இத்தீர்ப்பினாலா கெட்டுப் போகப்போகிறது?

பெண்ணுரிமைபற்றி பெரியார் அளவிற்குச் சிந்தித்தது யார்?

தந்தை பெரியார் அளவுக்குப் பெண் சுதந்திரம், சமத்துவம்பற்றிச் சிந்தித்த புரட்சியாளர் உலகிலேயே இல்லை என்றே சொல்லவேண்டும்!

அவர்கள் தொலைநோக்குடன் சொன்னார்கள்; இனி வருங்காலத்தில் திருமணம் என்ற ஏற்பாடே மறையும்; ஏன் அடுத்த கட்டத்தில் அது கிரிமினல் குற்றமாகக்கூட ஆக்கப்படல் வேண்டும் என்றார். பலரால் இன்னமும்கூட இதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.

அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் தொடங்கி கீழை நாடுகள் சீனாவரைகூட, நண்பர்களாக வாழுதல் (Living Together - Living as Friends) என்பது நடைமுறைக்கு வந்து திருமணம் என்ற கருத்து மெல்ல மெல்ல விடைபெறவில்லையா?

ஏன், நமது உச்சநீதிமன்றத் தீர்ப்பேகூட இந்த நண்பர்களாக வாழுவதை சட்டபூர்வமாக அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கிறதே!

நீதிபதி முத்துசாமி அய்யர் என்ன சொன்னார்?

ஒரு காலத்தில், கணவன் மனைவியை அடித்து கை, கால்களை முறிப்பது சட்டப்படி தண்டனைக்குரியதல்ல என்று நீதியரசர் ஜஸ்டீஸ் முத்துசாமி அய்யர் தீர்ப்பு எழுதினார்.

அது இன்று காலாவதியான தீர்ப்பாக, இப்போதுள்ள பெண்ணுரிமைச் சட்டங்களுக்கு முரணாகிவிட வில்லையா?

எனவே, கூச்சல், கடும் விமர்சனங்கள் ஜஸ்டீஸ் கர்ணன் தீர்ப்புப்பற்றி எழுந்தாலும், இது வரவேற் கப்படவேண்டிய தீர்ப்பு, புராணகால கர்ணன்கள் அளித்ததைவிட இது நவீன கால நல்ல பெண்ணியப் பாதுகாப்புக்கென அருங்கொடையாகும்!

தாலி கட்டாத திருமணம் பல ஜாதியில் இன்னமும் உண்டு; குழந்தையை உட்கார வைத்துத் திருமணம் நடத்திக்கொள்ளும் ஜாதி வழக்கமும் உள்ளது. எனவே, பதறுவதில் ஏதும் பொருள் இல்லை. பெரியார் கருத்துகள் உலகமயமாகி வருவதற்கு இதுவும் ஓர் நல்ல எடுத்துக் காட்டாகும்!


---------------------------கி.வீரமணி   தலைவர், திராவிடர் கழகம் சென்னை ---”விடுதலை” 20.6.2013

34 comments:

தமிழ் ஓவியா said...


தமிழக அரசின் தவறான முடிவால் காலியான இடங்கள்


சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் போக்குப் பார்ப்பனீயத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது.

குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் நிலைப் பாட்டை மிகவும் தூக்கிப் பிடிக்கின்றன.

சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதில் இன்றைய மாநில அரசு தொடக்கம்முதலே எதிர்நிலையில் தான் இருந்துவந்தது.

உச்சநீதிமன்றம்வரை சென்று பார்த்த அரசு கடைசியில் வேறு வழியின்றி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது.

சமச்சீர் கல்வி காரணமாக இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர் இருபால் மாணவர்களும்; அதிக மதிப்பெண்களையும் ஈட்டியுள்ளனர். இதனைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன தினமணி உள்ளிட்ட அவாள் ஏடுகள்.

ஒரு காலகட்டத்தில் தேர்வில் பெறும் மதிப் பெண்கள்தான் தகுதி திறமைக்கான அளவுகோல் என்று ஆணி அடித்து எழுதினர்; அந்தக் கால கட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் அபார ஆற்றல் அவர்களிடம்தான் இருந்தது.

இப்பொழுது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஆரம்பித்த நிலையில், மதிப்பெண் தகுதியின் அளவுகோலா என்று பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியின் அடிப்படை ஆணிவேரில் வெந்நீரை ஊற்றிவிட்டது.

மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப் மார்க்) தனித் தனியேதான் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவருக்கும் (உயர்ஜாதிக்காரர்கள் உள்பட) ஒரே அளவு தகுதி மதிப்பெண்கள் - 60 சதவிகிதம் பெறவேண்டும் என்பது சமூகநீதிக்கே நேர் விரோதம் அல்லாமல் வேறு என்னவாம்?

இப்படி அனைவருக்கும் ஒரே அளவு மதிப் பெண்களை வரையறை செய்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள் 1470 இல் 659 காலியாகவே உள்ளன. பழங்குடியினர்க் கான 99 இடங்கள் காலியாகவே உள்ளன. அருந்ததியருக்கான 131 இடங்கள் பூர்த்தி செய்யப் பட முடியவில்லை. முசுலிம்களுக்கான 153 இடங்கள் காலியாகவே உள்ளன.

தமிழ்நாடு அரசின் குளறுபடியான - சமூகநீதிக்கு விரோதமான அணுகுமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவ்வகையில் பெரிய அநீதி நடந்துள்ளது. கேட்டால் இதுதான் அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு என்று சொல்லுகிறார் கல்வி அமைச்சர் - எங்கே போய் முட்டிக்கொள்வது?
இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் கல்விக் கழகம் அகில இந்திய ரீதியில் தகுதித் தேர்வு எப்படி நடத்தப்படவேண்டும் என்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதிக் கண்ணோட்டத் துக்கே விரோதமானது தமிழக அரசின் செயல்பாடு.

ஆந்திரா, கேரளா, பிகார் முதலிய மாநிலங்களில் தனித்தனியே தகுதி மதிப்பெண்களை நிர்ண யித்துள்ளபோது, சமூகநீதி பிறந்த பெரியார் மண்ணில், பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இப்படியொரு கொடுமை - அநீதி இழைக் கப்பட்டுள்ளதே - இதனை எப்படிப் பொறுப்பது?

சமூகநீதியாளர்கள் களம் காணவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தவறைத் திருத்திக் கொள்ளுமா தமிழக அரசு?

எங்கே பார்ப்போம்? 20-06-2013

தமிழ் ஓவியா said...


மோடி அலையை உருவாக்குவது யார்? நிதிஷ் அம்பலப்படுத்துகிறார்


பாட்னா, ஜூன் 20- நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அது போன்ற தோற்றத்தை உரு வாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்த்தின் மீது நிதிஷ்குமார் பதிலளிக் கையில், நரேந்திர மோடியை அவரது பெயரை குறிப் பிடாமல் மறைமுகமாகத் தாக்கியும், குற்றம் சாட்டியும் பேசினார். நிதிஷ் பேசியதாவது:

தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவருக்கு (நரேந்திர மோடி) ஆதரவாக அலை வீசிவருவதாக பா.ஜ. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், அப்படி எதுவும் அலை வீசவில்லை. பெரிய தொழில் நிறுவனங் கள்தான் இதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த போலித்தோற்றம் நீண்ட காலம் நீடிக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் இதனால், எந்த அற்புதமும் நடக்காது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததாலேயே யாரும் அவர்களது தலைவராகி விட முடியாது. பெரிய தொழில் நிறுவனங்களின் நலனை விரும்புகிறவர் பிற்படுத்தப் பட்டோரின் தலைவராக முடியாது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. பீகாரின் வளர்ச்சிக்காக அவர்கள் கூறிய ஆலோசனைகளை நாங்கள் கேட்டோம். ஆனால், எங்கள் யோசனைகளை பா.ஜ.க.வினர் நிராகரித்தனர். கூட்டணி முறிவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

- இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

தமிழ் ஓவியா said...

எருமை போவதுபோல்...



எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


கோவை மன்றல் - ஓர் பார்வை


- வி.சி.வில்வம்

சென்னை மன்றல், திருச்சி மன்றல், மதுரை மன்றல் என ஒவ் வொன்றும் வரலாற்றுப் பதிவுகளான நிலையில், இப்போது கோவை மன்றல் முடிந்துள்ளது. அடுத்த மன்றல் எங்கே எனக் கேட்டுப் போகும் தமிழர்கள் நிறைந்து வருகிறார்கள். சரியான திட்டமிடுதலுக்குச் சாதனைகள் தூரமில்லை. இந்த தேதியில், இந்த ஊரில் மன்றல் என முதலில் முடி வாகிறது. அதற்கான ஆயத்தங்கள் சில ஆகின்றன. குறிப்பிட்ட நாளில், வெவ்வேறு இடங்களில் இருந்து சிலர் ஒன்று சேர்கின்றனர்.

வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கின்றனர். களைப்பும் இல்லை; மலைப்பும் இல்லை! மக்களின் விழிகள் விரிய!

மன்றல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி

இப்படித்தான் முடிந்தது கோவை மன்றலும்! கோயம்புத்தூர் பெரிய நகரம்தான். எனினும் சுவர்கள் முழுக்க மன்றல் வாசகங்கள் அவ்வூரையே அழகுபடுத்தி இருந்தன. திருமணத் துக்குத் தேவை நல்ல மனசுதாங்க... ஜாதி எதுக்குங்க?, மதத்தை விடுங்க, நல்ல மனுசங்களா இருந்தா போதும், துணையை இழந்தால் துவண்டு போவதா? புது வாழ்க்கையை இழந்து விடுவதா?, மணமுறிவு முடக்கமல்ல... புதிய தொடக்கம், மாற்றுத் திறனாளி யுடன் மணவாழ்க்கை அமைத்துக் கொள்ள விருப்பமா? போன்ற வாச கங்களைக் கண்ட கோவை மக்கள் பலருக்கும் விழிகள் விரிய, சமூக ஆர்வலர்கள் உற்சாகத்தில் மிதக் கின்றனர். காரணம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் செய்திட யாரும் முன்வரு வதில்லை. கூடவே தைரியமும் வேண்டும். அதை நாம் செய்கிற போது அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. மற்றொரு முக்கியமான விசயம், நாம் செய்வது முழுக்கவும் பொதுக் காரியம். மற்ற பலரும்தான் செய்கிறார்கள், அவை ஒரு ஜாதி ஜாடிக்குள் மூழ்கிப் போகிறது. சிலரோ பொதுவாகச் செய்கிறோம் எனக் கூறிப் பயனாக்காமல், பணமாக்கி விடுகின்றனர். மன்றலைப் பொறுத்தவரை ஒரு பெரும் சிறப்பு என்ன தெரியுமா? சென்னை மன்றலில் 300 பேர் வந்தார்கள். இந்த 300 பேர் விவரங்களும் திருச்சி மன்றலில் வழங்கப்பட்டன. அடுத்து மதுரையில் நடந்தது. அங்கு சென்னை, திருச்சி விவரங்கள் வழங்கப் பட்டன. இப்போது கோவை. இங்கு மூன்று ஊர்களின் விவரங்களும் வழங்கப் பட்டன. ஆக இந்த விவரங்களின் தொகுப்பை வைத்துதான் பலரும் இங்கே வணிகம் செய்கிறார்கள். நமக்கோ அது நோக்கமல்ல.

மன்றல் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் பிறைநுதல் செல்வி உரை

தமிழ் ஓவியா said...

நம் நிலை என்பது திறந்த மனநிலை. இவைகளைப் பார்த்துதான் மக்கள் பூரித்து, வியக்கிறார்கள். 91767 57083, 91767 57084 இந்த எண்கள் தமிழ்நாடு முழுக்கவும் பிரபலமாகி வரு கின்றன. ஒவ்வொரு மாநகராட்சியிலும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கைப் பேசிகளில் சேமித்து வைத்திருக்கிறார் கள். காரணம் அவர்கள் வாழ்விற்கான வழி அங்கே இருக்கிறது. கைகோத்த பயணம்! கோவை மன்றலை அங்குள்ள லயன்ஸ் கிளப்பில் சொன்னதும், அடடா! என்னே ஒரு வாய்ப்பு! எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார் கள். வாருங்கள் இணைவோம் என்றோம். இணைப்பில்தானே நம் மகிழ்ச்சியே இருக்கிறது.

அதேபோல மன்றலில் பங் கேற்கும் மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றதும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவன இயக்குநர் காரையடி செல்வன் என்பவர் அந்த வாய்ப்பை எனக்கே தாருங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். மன்றல் நிகழ்ச்சிக்கு அரங்கம் வடிவ மைக்கும் அந்த இளைஞரை நாம் மறக்க முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவர்தான் வடிவமைக்கிறார். எவ்வளவோ விழாக்கள், என்னென்னமோ விழாக்கள் பார்த்தாயிற்று. எனினும் வாழ்க்கை இணை தேடல் பெரு விழாவை, தன் வீட்டுத் திருமணமாய் அலங்கரிக்கிறார். ஊடகங்கள் குறித்தும் சொல்ல வேண்டும். மன்றல் நடைபெறுவதை முன்கூட்டியே அறிவிப்பதில் அவர்கள் பங்கும் அளப் பரியது. குறிப்பாக தினத்தந்தி, வானொ லிகள் கைகோத்துப் பயணிக்கிறார்கள். நம்பிக்கைதான் பெரியார் சொத்து!

தமிழ் ஓவியா said...

மன்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

மன்றலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணமுறிவு பெற்றோர், துணை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள் என அய்ம்பெரும் பிரிவுகள் உள்ளன. இதில் மற்ற பிரிவினர் பொது இடங்களுக்கு அதிகம் செல்வதும், பத்திரிகை விளம்பரங்கள் பார்ப்பதும் மிகுதி. மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் நண்பர்களே! நம் மன்றல் நிகழ்சிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் அதிகமாகவே வருகின்றனர். அவர் களுக்குச் செய்தி போகும் வண்ணம் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதில் இன்னொரு சிறப்பு, சில ஊர்களில் மாற் றுத் திறனாளிகள் தனியாகவே வந்தனர். கோவையில் கூட இரண்டு கால்களையும் முற்றிலும் இழந்த ஒரு நண்பர் தனியாகவே வந்தார். பெரியார் நிகழ்சிகளுக்குத் தனியாகவும், தைரியமாகவும் செல் லலாம் என்கிற அவர்கள் நம்பிக்கை. பொதுவாகக் கூட்ட நெரிசல் இருக்கிற இடங்களுக்கு இவர்களைப் போன் றோர் துணையுடன் கூட செல்வ தில்லை. மாறாக நம் நிகழ்ச்சிகளின்மீது அவர்கள் பெரும் நம்பிக்கை வைத் துள்ளனர். இதுபோன்ற நம்பிக்கைகள் தான் பெரியாரின் சொத்து! அதிரச் செய்து, குலுங்கச் செய்த மக்கள்!

அதேபோல பக்தி கொண்ட மக்கள் நம் மீது காட்டும் ஆர்வமும், ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. கோவை மன்றலில் நாள் முழுக்க நம் கூடவே இருந்தார்கள். இடையிடையே நம் தோழர்கள் பேசும் கருத்துகளை மிகுந்த உற்சாகத்தோடு வழிமொழி கிறார்கள். எல்லாக் கருத்துகளையும் பொறுமையோடு கேட்கிறார்கள். மக்கள் பழைமையில் ஊறிப் போயுள் ளனர், அவர்களுக்குப் புதுமைகள் பிடிப்பதில்லை என ஊடகங்களும், திரைத்துறையினரும் சொல்லி வருவது மகா மோசடி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இன் னொரு எடுத்துக்காட்டையும் நம்மால் எழுத முடியும். கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மன்றல் நிறைவில் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தார். பிரவீன்குமார் - அமுதா என்பது அந்தத் தோழர்களின் பெயர். அவர்கள் இருவரையும் அறி முகம் செய்துவிட்டு, மாப்பிள்ளை கேரளா நாயர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று கூறினார். உடனே மக்கள் கரவொலியால் அரங்கை அதிரச் செய்தனர். பெண் தாழ்த்தப்பட்ட என்று சொல்லக் கூடிய அருந்ததி இனத்தைச் சார்ந்தவர் என்று சொன்னதுதான் தாமதம், மக்கள் அரங்கத்தையே குலுங்கச் செய்தனர். இதற்கு என்ன பொருள்? அவர்கள் எல்லாவற்றையும் விட்டு வெளிவந்து பல நாட்களாகிறது. ஆனாலும் உள்ளேயே இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் போது வெடித்து வெளிவருவார்கள். அப்படி வெடித்து, வெடித்துத்தான் இவ்வளவு தூரம் சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் வெடிப் பொருளாக, கருப் பொருளாக நம் பெரியார் இருக்கிறார்.

மக்களிடம் கேளுங்கள்!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மன்றல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எதுவுமே இல் லையா எனக் கேட்கிறீர்கள்? இருக் கிறது. அங்கொன்றும், இங்கொன்று மாகக் கைப்பேசி வழியாக வருகிறது. கோவையில் கூட ஒரு நண்பர் கோப மாகக் கேட்டார், ஜாதி மறுப்புத் திரு மணங்கள் செய்ய நீங்கள் யார்? என்றார். நாங்கள் யார் என்பதை மண் டபத்தில் வந்து மக்களிடம் கேளுங்கள் என்றோம், இணைப்பைத் துண்டித்து விட்டார். அவர் மீது நமக்குக் கோபமில்லை. ஏனெனில் வேறொரு மன்றல் நிகழ்ச்சிக்குத் தன் மகளோடும் அவர் வரக்கூடும்.

தமிழ் ஓவியா said...


நாட்டில் வறட்சி நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!


ஒருபுறம் வெள்ளம் - மறுபகுதியில் நாட்டில் வறட்சி

நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!

மத்திய - மாநில அரசுகள் உடனே ஆவன செய்ய வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வடமாநிலங்களான உத்தர காண்ட்/இமாச்சல பிரதேசங் களில் பெரும் மழை காரண மாக நிலச்சரிவு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள நிலையில், மேலும் அங்குள்ள மக்களின் பாது காப்புக்கு போர்க்கால அடிப் படையில் நிவாரணம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என தமிழர் தலைவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த வாரம் பெய்த பெரு மழை காரணமாகவும், அதன் விளைவாக அங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்!

என்னே கொடுமை!

பலியானோர்பற்றிய தகவல்கள் இன்னும் சரியானவை கிடைக்கவில்லை; உயிருடன் இருப்பவர்களை மீட்க மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டுள்ளன.

பக்தி யாத்திரை என்ற பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லும் பக்தர்களைப் பரவசப்படுத்திட, சுற்றுலாத் துறையினர் அமோக விளம்பரம் செய்து ஈர்க்கின்றனர்!

தமிழ் ஓவியா said...

ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் போதிய அளவு கவனம் செலுத்துவதில்லை!

புண்ணியம் கிட்டும் என மூடநம்பிக்கை!

கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தால் புண்ணியம் கிட்டும் என்ற மூடநம்பிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லுகின்றனர்; சுற்றுலா வணிகர்களும் இதைப் பெரிதாக விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆனால் அந்த மாநிலங்களில் (மலைப் பிரதேசங்கள் ஆனபடியால்) மழை வெள்ளம் எதிர்பார்க்க வேண்டிய வைகளே என்ற நிலையில், அங்கே போதிய பாது காப்புடன் கூடிய பாதைகளும், பாலங்களும், தடுப்புச் சுவர்களும் கட்டப்பட்டு, நிரந்தரப் பாதுகாப்பு வசதி செய்யப்படாமலேயே ஆண்டுதோறும் இந்த பக்தி வியாபாரம் நடைபெறுகிறது.

நிரந்தரப் பாதுகாப்பு வசதி தேவை!

கடவுள் கருணையே வடிவானவர் என்ற புரட்டு இந்த சோகப் படலம் மூலம் அம்பலமாகி விட்டது. அதற்காக இத்தனை உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியானது கண்டு, நாத்திகர்களாகிய நாம் தான் அதிக வேதனை அடைகிறோம்; காரணம் மனித உயிர்கள் - அவர்கள் எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் ஆனாலும், காப்பாற்றப்பட வேண்டியவைகள் என்ற மனிதநேயக் கொள்கை உடையவர்கள் பகுத்தறிவாளர்களாகிய நாம்!

எனவே இந்த எஞ்சியோர் போதிய பாதுகாப்புடன் அவரவர் வீடு திரும்ப அனைத்து முயற்சிகளும் அவசர கதியில் - போர்க் கால அடிப்படையில் - மேற்கொள்ளப் பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படல் வேண்டும். இப்படி வடக்கே கங்கோத்ரி, யமுனோத்திரி, யமுனை நதி டெல்லிப் பட்டணத்திலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது என்ற நிலை ஒருபுறம்; தென் மாநிலங் களில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. மாநிலங்களிடையே மிகப் பெரிய சண்டைகளும், ஏன் யுத்தமும்கூட!

குடிநீருக்கும்கூடப் பஞ்சமோ பஞ்சம்!!

இனி எதிர் காலத்தில் வரும் யுத்தங்கள் நீர் உரிமைக்கானவையாகத்தான் இருக்கப் போகிறது என்று நீரியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்!

நிரந்தரத் தீர்வு நதிநீர் இணைப்பு

இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு, நதிநீர் இணைப்பு அல்லவா?

அதுபற்றி மத்திய -மாநில அரசுகள் சிந்தித்து உடனடியாகச் செயல்பட வேண்டாமா?

எத்தனையோ விளம்பரத் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் மத்திய மாநில அரசுகளும் இந்தியாவின் நதிகளை இணைத்து, வெள்ள நீர் வறட்சி மாநிலங்களுக்குக் கிடைத்தால், எல்லா மக்களும் சுகவாழ்வு வாழ்வார்களே, இந்த அறிவியல் யுகத்தில் இது என்ன சாத்தியப்படாத ஒன்றா, இல்லையே!

உச்சநீதிமன்றம் இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்து தீர்ப்பு தந்தும்கூட, இதுவரை தீவிர முயற்சிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுக்கவில்லையே!

இதுபற்றி உடனடியாக நிபுணர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உலக வங்கி போன்றவை மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி - ஏன் கோயில்களில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கூட எடுத்து - கடன் பத்திரங்களை அரசு அக்கோயில்களுக்கு வழங்கி விட்டுக் கூட - செலவழித்து, இந்தியா முழுவதும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகளைப் போட்டு, அவை இப்போது ஆறு வழித் தடங்களாக அகலமாகும் நிலையில், இப்படி நதிகளை இணைக்கும்பணி உடனடியாகத் துவக்கப்படல் வேண்டும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் ஒருமித்த குரலில் ஓங்கிக் கூற வேண்டும். தற்காலிக நிவாரணங்களைவிட நிரந்தரத் தீர்வுகளே நாட்டு மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும்.

கடும் மழை வெள்ளம் ஒரு பகுதியில் - கடும் வறட்சி மறுபகுதியில் ஒரே நாட்டில் என்பது முரண்பாடு அல்லவா? அது களையப்படல் அவசர - அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
21.6.2013

தமிழ் ஓவியா said...


ஸ்ரீசாந்தைக் கொஞ்சம் பாருங்கள்!


மதமானது கடவுளுக்கும் நமக்கும் இடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எந்தவித அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தைவிட மேலானதாக நினைக்கிறது. அன்றியும் மதமானது பணச் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங் களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்ப தாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கிறது என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

- (குடிஅரசு 11.8.1929)

இதனை அப்படியே இப்பொழுது நடந்த நடந்து கொண்டு இருக்கிற நிகழ்வுக்கும் பொருத்திப் பார்த்தால் தந்தை பெரியார் இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன் சொன்னது எந்த அளவுக்குத் துல்லியமாகப் பொருந்து கிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.

அய்.பி.எல். கிரிக்கெட்டை மறந்து விடத்தான் முடியுமா? அதை மறந்தாலும் அதில்கூட இடம் பெற்ற சந்தர்ப்பத்தைத் தான் மறக்க முடியுமா?

சூத்தாட்டத்தையே மறந்தாலும் ஸ்ரீசாந்த், ஸ்ரீசாந்த் எனப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட்காரரைத் தான் மறக்க முடியுமா?

எப்படி எப்படி எல்லாம் சூதாடினார்? விளையாட்டு மைதானத்தில் இந்த மைனர் எந்தெந்த சைகைகளைக் காட்டிப் பந்துகளை வீசினார்! அப்படி வீசப்பட்ட ஒவ்வொரு பந்துக்கும் எவ்வளவுக் கோடி ரூபாய் புரண்டது?

பக்கம் பக்கமாக ஏடுகள், ஊடகங்கள் செய்திகளை அள்ளி அள்ளிக் கொட்டவில்லையா?

ஸ்ரீசாந்த் தங்கி இருந்த அறையில் கைப்பற்றப்பட்ட பணம் ஆவணங்கள், சி.டி.கள் இத்தியாதி.. இத்தியாதி சாட்சிகள் ஸ்ரீசாந்தை விளையாட்டுச் சூதாடி கில்லாடி என்பதை நிரூபித்ததே - ஆசாமி கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அத்தோடு முடிந்ததா? காவல்துறையினர் அவர் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் நுழைந்தபோது அங்கு அழகிகள் இருந்தனர் என்றெல்லாம் படத்துடன் வெளி வரவில்லையா?

அதன்பின் கைது செய்யப்பட்டு சிறைக் குள் நெட்டித் தள்ளப் படவில்லையா?

இவ்வளவுப் பெரிய குற்றவாளி இப்பொ ழுது எங்கே? ஜாமீனில் வெளிவந்து அவசர அவசரமாக எங்கு சென்றார் தெரியுமா?

சபரிமலைக்குச் சென்றுள்ளார்? எதற் காகவாம்? எல்லாம் பிரார்த்தனைக்காகத் தான். என்னை அய்யப்பன் காப்பாற்றுவான் நான் குற்ற மற்றவன் என்று வெளியில் வருவேன் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறாரே!

இப்பொழுது தந்தை பெரியார் கூறிய அந்தத் திருவாசகத்தைக் கொஞ்சம் பொருத்திப் பாருங்கள் பளிச்சென்று புரியும்!

பணச்செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருக்கிறது; எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்மூலம் மன்னிப்பு இருக்கிறது. என்று நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யத் தூண்டுகிறது என்று தந்தை பெரியார் சொன்னதுதான் எவ்வளவு துல்லியமானது! - உண்மையானது!

இது ஒன்றும் புதிதல்ல! மஸ்தான் - மஸ்தான் என்ற கடத்தல் மன்னனைக் கேள்விப்பட்டதில்லையா?

அன்றாடம் அய்ந்து வேளை தொழுபவர்தான் ஒவ்வொரு வருடமும் ரம்ஜானையொட்டி ஒரு மாதம் நோன்பு இருப்பவர்தான்! மெக்காவுக்குச் செல்ல இருந்தோம் - அதற்குள் கைது செய்துவிட்டார்கள் என்று மஸ்தான் மனைவி சொன்னாரே!

பிரபல கடத்தல் புள்ளி வரதன் முனிசாமி மும்பையில் கோளிவாடா என்னும் பகுதியில் சிவன் கோயிலையே கட்டியவர் தானே!

சிங்கம்பட்டி கொலை வழக்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்பதுபோல விஷ ஊசி கொலை வழக்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டில் பிரபலம்!

வைத்தீஸ்வரனும் அவனது கூட்டாளிகளும் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு பணக்காரர்களைக் கடத்திச் சென்று விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டு, பணத்தைக் கொள்ளையடித்துக் குபேரர்களாக வாழ்ந்தனரே!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாய் அந்தக் கும்பல் பிடிபட்டது.

அடித்து உதைத்துக் கேட்ட வுடன் உண்மைகளைக் கக்கினார்களே! கொள்ளை யடித்த பணத்தில் திருப்பதி, பழனி உள்ளிட்ட கோயில் களில் உண்டியலில் போட்டது வரை கணக்குக் கொடுத்தனரே!

தந்தை பெரியார் சொன்னதை இன்னொரு முறை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள். புத்தியைச் செலவழித்தால் இதற்குள்ளிருக்கும் உண்மை புலப்படும்!

கூடுதல் தகவல்: (Tail Piece:) கொலை வழக்கில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் - ஜெயேந்திர சரஸ்வதியைக் கொஞ்சம் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

நாள்தோறும் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பூஜை நடத்திக் கொண்டுதானே இருக்கிறார். பூஜை புனஷ்காரங்களுக்கு பஞ்சமா என்ன?

இவ்வளவையும் செய்யக் கூடிய லோகக் குரு சங்கராச்சாரியார்தான் கொலை வழக்கில் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார். ஆக கடவுள், பக்தி, பிரார்த்தனை, பிராயச்சித்தம் என்றால் என்ன என்பது இப்பொழுது புரிந்திருக்குமே!

தமிழ் ஓவியா said...


நமது பணி...



மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர் களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...

சந்திரோதய நாடகம் பற்றி குடிஅரசு


தோழர் அண்ணாதுரை எம்.ஏ., அவர்களால் எழுதப் பட்டு அண்ணாதுரை அவர்கள் நடிப்பு ஆசிரியராய் இருந்து பழக்கப்பட்ட காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார் சந்திரோதயம் என்னும் நாடகத்தை 19.11.1943இல் ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் நடத்தினார்கள்.

இதன் விவரம் சென்ற வாரம் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும் மானத்திற்கு உயர்தர வழி காட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்பட கூறியதாக ஆகாது.

இன்று ரஷ்ய நாடானது ஸ்டாலினது உருக்கு ஆட்சியின் கீழ் நிலைகுலையாமல் இருந்து உலகத்தைக் காப்பாற்றி வருகிறது என்றால் அது பெரிதும் ஸ்டாலினுடைய வீரமல்ல; வெற்றியல்ல; அறிவல்ல; ஆற்றலல்ல என்று மும்முறை முரசறைகிறோம்.

சிந்தனைப் பிரச்சாரம்

மற்றென்னையெனில், அங்கு அம்மக்களுக்கு தலைவர்களும் உண்மை உணர்ச்சி உள்ளவர்களும் செய்து வரும் இடையறாப் பிரசாரமேயாகும். அங்கு கடவுளைப்பற்றியும் பஜனைப் பாடினால் எட்டி உதைப்பார்கள். மோட்சத்தைப் பற்றிப் பேசினால் காரி உமிழ்வார்கள், தலைவிதியைப் பற்றிப் பேசினால் பிச்சித் தள்ளி அப்பளமாக்கி விடுவார்கள். பின்னை என்னை யெனில், மனிதனுக்கு மனிதன் கண்டவுடன், நீ யார்? உனக்கேன் சோற்றுக்கில்லை? அவனார்? அவனுக்கேன் தொப்பை வயிறு? நீ யார்? உனக்கேன் வீடில்லை? அவனார்? அவனுக்கேன் மாளிகை? நீ யார்? உனக்கேன் கோவணத்துக்கு இழுப்பும் பறிப்புமாய் இருக்கிறது? அவனார்? அவனுக்கு ஏன் பஞ்சகச்சமும் மூலைக்கு மூலை இழுத்து மடித்துச் சொருகுவதுமாய் இருக்கிறது?

ஓ மடையனே! பகுத்தறிவற்ற பதரே!! சிந்தித்துப் பார்.

என்பதாகிய இந்த அமுத வாசகங்கள் தான் பஜனையிலும், பக்தியிலும், பாட்டிலும், சிரிப்பிலும், வேடிக்கையிலும், விகடத்திலும், குலாவுவதிலும், கல்வியிலும், கற்பிலும், கல்லாமையிலும், நந்தவன சிங்காரத்திலும், நாடக நளினத்திலும், சினிமாவிலும், கவியிலும், காவியத்திலும், கலையிலும், இலக்கியத் திலும், ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும்.

காப்பிக் கடைகளிலும் இந்தக் கேள்வி களையும் பதில்களையும் கொண்ட ரேடியோ தான்; ரயில் பிரயாணத்திலும் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் இதே ரேடியோதான்; தொழிற்சாலைகள் முழுவதிலும் இதே ரேடியோதான்; தெருக்கள்தோறும் - கடைகள், மார்க் கெட்டுகள், பார்க்குகள், மக்கள் தங் கும் ஓட்டல்கள், மோட்டார்கள், ரயில் மேடை கள், சதுக்கங்கள், கச்சேரிகள், இராணுவக் கூடங்கள் இன்னும் ஒவ்வொரு இடத்திலும் இந்தப் பிரச் சாரமேதான் பல உருவில் விளங்கிக் கொண்டிருக்கும்.

தாசியின் மோசவலை

எப்படி ஒரு தாசி ஒரு மைனர் பிரபுவை வீட்டிற்குள் வைத்து அவனுக்குத் தன் வீட்டு ஞாபகமோ, வேறு சேதியோ நினைப்பதற்கே இல்லாமல் வேறு யாரையும் பார்ப்பதற்கே இல்லாமல், சதாகாலமும் இடையறாக் கேளிக்கையும், கொஞ்சுதலும், லீலையுமாய் இரண்டற கலந்திருப்பாளோ அதே போலவே இந்தப் பிரச் சாரத்தை தவிர வேறு விஷயம் மக்களுக்கு எட்டுவ தற்கும் நினைப்புக்கு வருவதற்கும் இல்லாமலே நடத்தி வருகிறார்கள். இதன் பயனாலேயேதான் அப்பேர்ப்பட்ட ஜெர்மனி அங்கு தவிடு பொடியாக்கப்பட்டு வருகிறது.

காந்தியாராகட்டும், காங்கிரசாகட்டும், பண்டித நேருவாகட்டும், சாயிபாபாவாகட்டும், ரமண ரிஷியா கட்டும், சீனிவாச சாஸ்திரியாகட்டும் - இவர்கள் எல்லாரும் இவர்களைப் பற்றிய இடையறாப் பிரச்சாரம் இல்லாவிட்டால் இவர்களைப் போன்ற சராசரி மனிதத் தன்மைக்கு மேற்பட்ட ஒரு புதுக்கோட்டை அம்மன் காசு கூடப் பெறுவார்களா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, பிரச்சாரத்திற்கு அவ்வளவு பலம் இருக்கிறது என்பதை காட்டவே குறிப்பிட்டோம்.

தமிழ் ஓவியா said...

அப்படிப் போலவே தான் நமக்குள் இந்துமதமும் சகலத்திலும் பரவி சதா பிரச்சாரத்தினால் நம்மை அடிமை கொண்டு விட்டது. கண்ணிலும் கருத்திலும், கவியிலும், வாக்கிலும், நாக்கிலும், எல்லாவற்றிலும் இடையறாமல் லீலை செய்து கொண்டே இருக்கிறது. இவற்றால்தான் அவைகளுக்குப் பலமிருந்து வரு கிறது. இவற்றை மாற்ற வேண்டுமானால் அவற்றிற் கேற்ற எதிர்ப்பிரச்சாரம்தான் தக்க மருந்தாகும்.

அண்ணாதுரையின் துணிவு

அப்படிப்பட்ட பிரச்சாரங்கள் நடத்துவதில் இந்த மாதிரி நாடகமும் முதன்மையானதாகும். இதைநாம் சுமார் 10, 15 வருஷகாலமாவே சிந்தித்து சிந்தித்து ஒன்றும் சரியாய் கைகூடாமல் இப்பொழுது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும் படியான நிலை ஏற்பட்டிருக் கிறதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்க முடியவில்லை.

சில நண்பர்கள் சில வருஷங்களுக்கு முன்னா லேயே திருச்சியில் முயற்சி செய்து வெளி வந்தார்கள்; என்றாலும், அது குடத்திற்குள் விளக்காய் இருக்கிறது. மற்றும் சில நண்பர்கள் பாரதிதாசன் சித்தரித்த இரண்யன் அல்லது இணையற்ற வீரன் என்ற கதையை பல இடங்களில் நடத்தினார்கள் என்றாலும் அதுவும் ஆமை ஓட்டத்தில் தான் இருந்து வருகிறது.

சென் னையில் சில தோழர்கள், முன்னேற்ற வீரன் என்ற கதையை நடத்திக் காட்டினார்கள். என்றாலும் அதுவும் ஒரே இடத்தில் தேங்கிப் போய் இருக்கிறது. தொழில் முறையில் தோழர்கள் என்.எஸ் கிருஷ்ணன், மதுரம், ராதா முதலிய அறிஞர்கள் உதவிபுரிகிறார்கள் என்ப தோடு இன்னும் சிலரும் இருக்கலாம்; அவை உற்சாகம், பொழுதுபோக்கு என்பவற்றின் பேரால் இல்லாமல் இன்னும் தைரியமாய் வெளியேறி வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

திக் விஜயம் செய்யட்டும்

சந்திரோதயமும் ஒரு காலத்தில் அண்ணாதுரை, சந்திரோதயம் என்னும் நாடகத்தில் நடித்தார். எங்கேயோ பார்த்ததாக எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்லும் நிலைமைக்கு வராமல் தமிழ்நாட்டில் அது (சந்திரோதயம்) திக் விஜயம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

உண்மையில் சந்திரோதயம் நல்ல தொண்டாற்று கிறது. இரண்டு வருஷத்தில் குறைந்தது ரூ.50000 அதற்கு சொந்தப் பொறுப்பில் சேகரம் செய்ய தமிழ் நாட்டில் தாராளமாக இடமிருக்கிறது. சமய சஞ்சீவி களுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லது படாமல் இம் மாதிரி தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியது மாகும் என்று தெரிவித்துக் கொண்டு, அண்ணா துரையையும், காஞ்சித் திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்.

- குடிஅரசு தலையங்கம் - 27.11.1943

தமிழ் ஓவியா said...


பொருளாதாரம் சீர்பட...


மதமும், கடவுளும், அடுத்த ஜென்மும் ஒழிந்தா லொழிய, இந்தியப் பொருளாதாரத்துறை எந்நாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும் நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்.

- தந்தை பெரியார் - பகுத்தறிவு 1-12-1936

தமிழ் ஓவியா said...

சுப்பிரமணியனின் வேண்டுதல்!

வாரிசு இல்லை என்று வள்ளியை மணந்து கொண்டேன். அவளும் அம்போ என்று கைவிட்டாள். என் அப்பனும் (சிவன்) சிவப்பு முக்கோணத்தில் அடங்கி விட்டான். கொள்ளி வைக்க ஒரு ஆணும், குந்தி அழ ஒரு பெண்ணும் எனக்கு வேணும். நல்ல மருத்துவர் விலாசம் ஒன்று தருவீர்களா?

நாத்திகச் செல்வி, பல்லவபுரம்

தமிழ் ஓவியா said...


பிரபஞ்சம் உண்டானது எப்படி?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம்(யுனிவர்ஸ்) எப்படி தோன்றியது என்றால் பெரு வெடிப்பு கொள்கை என்று எளிதாக கூறிவிடுவோம், அதாவது பாரிய அழுத்ததால் சிதறும் அணுத்துகளின் முழுப் பரிமாணம் இந்த பிர பஞ்சம், நாம் அண்ட வெளியை நோக்கி பயணித் தோமானால் இதற்கான விடை கிடைக்கும், ஒளியின் வேகத்தில் நாம் நமது பூமியில் இருந்து பயணித்தோமென் றால், நமது சூரிய குடும்பத்தை கடக்க சுமார் 20 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை ஆகும், சூரிய குடும்பத்தை கடந்து நமது பால்வெளி மண்டலத்தின் எல்லையை கடக்க குறைந்த 200 ஆண்டுகள் வரை ஆகும். நமது பால்வெளிமண்ட லத்தை கடந்து அடுத்து உள்ள கொடுங்கதிர் மையத்தை (காஸ்மிக்) கடக்க 500 வருடங்கள் ஆகும், நமது பயணம் ஒளிவேகம் குறையாமல் தொடர்ந்தால் பால்வெளிமண்டலக் கூட்டங்களை கடந்து நீராவிக்கூட்டு திரள் மண்டலங்களை கடக்க குறைந்த பட்சம் 3000 ஆண்டுகள் வரை பயணம் செய்யவேண்டும், அங்கிருந்து 7000 ஆண்டுகள் பயணிக்க பிர பஞ்சத்தின் எல்லை நமக்கு தெரியவரும், நாம் பிரபஞ்சத்தின் எல்லையை அடையும் போது நாம் ஒளிவேகத்தை விட 400 மடங்கு அதிகம் பயணித்துக் கொண்டு இருப்போம், (அதாவது பூமியில் இருந்து பிரபஞ்ச எல்லையை சென்றடைய சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்) பிரபஞ்சத்தின் விளிம்பை கடக்கும் போது நமது வின்கலத்தின் வேகம் அறிவியல் கணக் கீட்டிற்கு எட்டாத அளவிற்கு கூடிவிடும் (இதற்கு எடுத்துக்காட்டாக அந்த வேகத்தில் நாம் மீண்டும் புறப்பட்டு வந்தால் வெறும் 120 ஆண்டுகளுக்குள் பூமிக்கு வந்து சேர்ந்து விடுவோம்) இந்த வேகத்தில் நாம் பயணித்து அண்டவெளியை (ஸ்பேஸ்) அடைந்த உடன் அங்கு ஏற்படும் அழுத்தம் நம்மை நமது வின்கலத்தோடு சேர்த்து அணுவளவு சிறிய தாக்கிவிடும், அந்த அளவிற்கு அழுத்தம் இந்த அழுததம் தான் புதிய பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. இங்கு ஒரு புதிய கொள்கை ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது, பிக் பாங் என்னும் பெரு வெடிப்பு கொள்கை என்பது தன்னைத்தானே ஏற்பட்ட தல்ல, அண்டவெளியில் மிகவும் அதீத அழுத்ததால் கட்டுக் கடங்காத வேகத்தில் பயணிக்கும் அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி யதால் தான் புதிய ப்ரபஞ்சம் உருவா கிறது. இதை தான் சமீபத்தில் ஸ்வீசர் லாந்தில் மனித குலத்தின் மிகப்பெரிய அணுக்கரு மோதல் சோதனை மூலம் உறுதிபடுத்தியுள்ளனர். ஞிணீக்ஷீளீ னீணீமீக்ஷீ ணீஸீபீ நிஷீபீ ஜீணீக்ஷீவீநீறீமீ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் கட்டுரை. தமிழில்: சரவணா இரா

தமிழ் ஓவியா said...


கடலில் மாசுகலப்பதை நிறுத்தாவிட்டால்..!


வடதுருவப்பகுதியான ஆர்டிக் கிலும் தென்துருவமான அண்டார்டிக் காவிலும் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையில் சுற்றுபுறச்சூழல் பாதிப்பின் காரணமாக கடுமையான மாற்றம் காணப்படுக்கிறது, முக்கியமாக துருவபகுதியில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்க விகிதம் திடீரென குறைந்துகொண்டே வருகிறது, இதற்கு முக்கிய காரணம் துருவப்பகுதியில் வாழும் உயிரினங்களின் உணவு பிரமீடில் ஏற்படும் பாதிப்பே ஆகும். இணப்பெருக்கம் விகிதம் குறைய காரணமாக இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருவப் பகுதியில் வாழும் உயிரினங்கள் பெரும்பாலும் தாவரங்களை உணவாக உட்கொள்பவைகள் அல்ல இந்த உயிரினங்களின் உணவு பிரமீட்டில் துருவக்கரடி கடற்சிங்கங்களை உண்ணும், கடற்சிங்கம் இறால் மீன்கள் மற்றும் பென்குவிங்களை உண்ணும், இறால் மீன்கள் கிரில்ஸ் எனப்படும் சிறு மீன்களை உண்ணும் சிறுமீன்கள் சில நுண்ணுயிர்களையும் பாசிகளையும் உண்ணும், கிரில்ஸ் மற்றும் சிறிய வகை மீன்கள் உலகம் முழுவதிலும் கடல் நீரோட்டம் வழியாக பயணிக்கிறது, இப்படி பயணிக்கும் போது மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களையும் சேர்த்து உணவாக கொள்கிறது. மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களில் ஈயம், காரியம், பாதரசம் மற்றும் சிலவகை ஆக்ஸி னேற்றம் பெற்ற வேதிப்பொருள்கள் (ஏகா:-தாமிரம்) இவற்றை உண்ணும் மற்றும் சுவாசிக்கும் சூழ்நிலைக்கு பாசிகள், சிறுமீன்கள் ஆளாகின்றன. இந்த நச்சுப்பொருள்கள் இந்த உயிரினங்களில் செல்களில் சேமிக்கப்படு கிறது, இறுதியாக இவற்றைமட்டுமே உணவாக கொள்ளும் துருவ உயிரி னங்கள் கரடி, சீல், மற்றும் திமிங்கிலம் போன்றவற்றின் இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்படுகிறது, விளைவு இவற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடலில் பாசிகள், நுண்ணுயிர்கள் மற்றும் இறால் மீன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இவற்றின் எண்ணிக்கை பெருக்கினால் கடலில் ஆக்ஸிசன் அளவு குறைந்து கடல்வெப்பநிலை கூடுகிறது.
கடல்வெப்பநிலை உயர்வடைவதால் புவிகாந்தப்புலத்தில் பாதிப்பு ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள 0.1 பாதிப்பின் காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு பார்வைத்திறன் குறைவு, காது கேளாமை, இரத்தஓட்டத்தில் மாற்றம் மற்றும் புத்திபேதலிப்பு போன்றவை அதிகமாகியுள்ளது.. கடலில் மாசு கலப் பதை நிறுத்தாவிட்டால் கூடிய விரை வில் மனித இனத்திற்கே பேரழி வைத் தரும் நிலை விரைவில் உருவாகிவிடும். -_ சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...


அதிர்ஷ்டசாலியா?


இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் மார்கரெட் ஹில்டா தாட்சர். இவர் தான் அந் நாட்டின் முதல் பெண் பிரதமரும் கூட!

சிறுவயதில் இருந்தே எல்லா வற்றிலும் முதல் மாணவி தான், தன்னம்பிக்கை அதிகம். ஒரு முறை கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் தாட்சர் முதல் பரிசு பெற்றபோது அவருடைய தலைமை ஆசிரியர் நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று தட்டி கொடுத்தார். தாட்சர் உடனே நான் ஒன்றும் அதிர்ஷ்ட சாலியல்ல. இந்தப் பரிசை பெற நான் தகுதியானவள் என்று வெடுக்கென்று பதில் கூறினார்
- ஆனந்த விகடன் 26.5.1949

தமிழ் ஓவியா said...


ஆபத்தோ ஆபத்து!


உலக வெப்பமயமாதலின் விளைவாக நடப்பு நூற்றாண்டின் இறுதியில் பூமியின் 42 சதவீதம் நிலப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகளவில் ஏற்படும் எனவும் ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. டோக்கியா பல்கலைக்கழகம், இயற்கை தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து நடத்திய ஆய்வில் தற்போதுள்ள உலக வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து 2100-இல் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டினால் வெள்ள அபாயம் 5.6 மில்லியன் முதல் 80 மில்லியன் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் உலகின் 29 முக்கிய நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனவும் இது ஒவ்வொரு 10 முதல் 50 ஆண்டுகளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இந்தோனேசியாவில் பெண்களுக்குப் புதுச்சட்டம்


இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா ஆச்சே மாகாணத்தில் ரியா சட்டம் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுபாடு விதித்துள்ளார்.

பெண்கள் ஒரு புறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்ல வேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுக்காப்பானதும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கடவுளா காப்பாற்றினார்!

செய்தி: இராணுவ வீரர்கள் உதவியால் உயிர் தப்பினோம், தமிழகம் திரும்பிய கேதார்நாத் பயண குழு பேட்டி.

சிந்தனை: உண்மைதானே கேதார்நாத்தில் குடிக் கொண்டிருக்கும் கடவுள் காப்பாற்றினார் என்றா பக்தர்கள் சொல்ல முடியும்?

தமிழ் ஓவியா said...


திருமணம் கிரிமினல் குற்றம் என்ற காலம் வரும்!


சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் திரு சி.எஸ். கர்ணன் அவர்கள் கணவன் - மனைவி தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பினை புரட்சிகரமானது என்று தலைப்பிட்டு விடுதலை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அத்தீர்ப்பினை வரவேற்று சிறப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 20.6.2013) .

பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைப் பேசி, உடலுறவு கொண்டு அதற்குப் பின் அந்தப் பெண்ணைக் கைவிட்டு வேறொரு பெண்ணைத் தேடும் ஆண் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீர்ப்பு அது என்பதை முற்போக்குச் சிந்தனையுடைய எவரும் ஏற்கவே செய்வார்கள்.

யதார்த்தமாகவும் பெண்களிடம் ஆசை காட்டி, மோசம் செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே நாசம் செய்து, புது செருப்புப் போட்டுக் கொள்ள பழைய செருப்பைக் கழற்றி எறிவது போன்ற அலட்சியத்துடன் மகளிரிடம் நடந்து கொண்டு அவர்கள் கருவுற்ற போதிலும் கூட அதற்குப் பொறுப்பு ஏற்க மறுத்து பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணி அடிக்கும் தீர்ப்பேயாகும் என்று மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்.

நீதியரசர் திரு. கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பின் நோக்கத்தையும், ஆழத்தையும் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டாலும் தங்களின் ஆழ் மனத்தில் பதிந்துள்ள இந்துத்துவா குணத்துடன் அணுகிய காரணத்தால் ஆத்திரம் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விட்டனர்.

தமது தீர்ப்பின் தன்மை குறித்தும், நோக்கம் குறித்தும் நீதிபதி தெளிவாக விளக்கம் கொடுத் துள்ளார்.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண் ணிடம் வாக்குறுதி கொடுத்து, பின்னர் உடலுறவு வையும் முடித்துவிட்டு, அந்தப் பெண்ணை விட்டு விட்டுச் சென்றுவிட்டால், அந்த ஆண்மீது கிரிமினல் வழக்கைச் சம்பந்தப்பட்ட பெண் தொடரலாம்; ஆனால் அந்தப் பெண் நிவாரணம் பெறுவதற்கு சிவில் நீதிமன்றங்களை அணுக முடியாது என்ற அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி கூறி யுள்ளது மிகச் சரியானது தானே!

அதனைப் புரிந்து கொள்ளாமல் வேறு வகையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியைச் சுற்றுவது (சப்தபதி) அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை யெல்லாம் மதச் சடங்குகளைப் பின்பற்றி சமுதா யத்தைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் பயன் படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்கு களையும், பின்பற்றித் திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லா விட்டால் அந்தத் திருமணம் சட்டப்படி செல் லாது என்று நீதிபதி கர்ணன் அவர்கள் கூறியுள்ளார்.

இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் தாம்பத்திய உறவை மறுப்பதன் அடிப் படையில் விவாகரத்துக் கோரலாம் என்று தீர்ப்பே இருக்கிறது.

நீதியரசர் கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பை இதனுடனும் சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அந்தத் தீர்ப்பின் சட்ட ரீதியான நுட்பமும் நீதியும் நியாயமாகப் புரியும்.

இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், நுனிப்புல் மேயும் தன்மையில், சடங்குகளைப்பற்றி மலினமாகச் சொல்லியிருக்கிறாரே நீதிபதி என்று கோதாவில் குதித்துள்ளனர்.

கலாச்சாரமும், சடங்கும் மாற்றங்களுக்கு ஆளானதேயில்லையா? குடும்ப அமைப்பு முறையில் மாற்றங்களும் ஏற்படவில்லையா? மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டால் இப்படியெல்லாம் குறுக்குச் சால் ஓட்ட மாட்டார்கள். இந்துத்துவாவாதிகள் கூறுகிறார்களே - அவர்கள் நம்பும் கலாச்சாரம் என்பதுதான் என்ன? அந்த எண் வகைத் திருமணங்களை ஏற்றுக் கொள்கிறார்களா?

அந்த எட்டில் ஒன்று பைசாசம் என்பது; ஒரு கன்னிகை தூங்கும்போதும், மது மயக்கத்தில் இருக்கும் போதும் அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதிருக்கும்போதும், அவருடைய மன சம்மதம் இல்லாமலேயே வலுவில் புணர்ச்சி செய்வதாகும்.

இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள இந்த பைசாச திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்களா?

திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்படும் காலம் வரும் என்றும் தந்தை பெரியார் கூறியுள்ளார். அப்படியொரு காலம் வரத்தான் போகிறது.

இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போக்கு (Living Together) வந்து விட்டதே - சட்ட ரீதியாகவும் அதற்கு அங்கீகாரமும் கிடைத்துவிட்டதே!

காலத்தின் வேகத்தையும், மாற்றத்தையும் புரிந்து கொள்ளாமல் மதவாதக் கண்ணோட்டத்தோடு கருத்துச் சொல்பவர்கள் எதிர் காலத்தில் எள்ளி நகைக்கப் படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை



பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள்?: சித்திரபுத்திரன்


ஈரோடு ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்தர முதலியார், ஆரியா, சக்கரை செட்டியார், தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், பம்பாய் புலி ஜெயகர் ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிர தியாகிகளை யெல்லாம் காங்கிரசை விட்டுப் போகும்படித் துரத்திவிட்டு இவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டுப் போய்விட்டதால் காங்கிர பரிசுத்தமாய் போய் விட்டதென்று சொன்னவரும் இன்னமும் வக்கீல் தொழிலில் மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டு இருப்பவரும், நேற்று காங்கிரசில் வந்து சேர்ந்த வருமான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது பி.ஏ., பி.எல்., 20 வருஷத்திற்கு முன் படித்திருந்தும் நாளது வரை வக்கீல் உத்தியோகத்திற்கு போகாதவரும் பள்ளியில் படிக்கும்போது முதலே தேசத்திற் காகப் பேசி, தேச பக்தராயிருந்த பார்ப் பனரல்லாதார் நன்மை யின் பொருட்டு லண்டனுக்குப் போனவருமான ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் என்கிற பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச் செய் கிறீர்களா?

தேசத்திற்காக 5 வருஷ காலம் ஜெயிலுக்குப் போன ஸ்ரீமான் ஆரியாவை யும், பார்ப்பனரல்லாதார் சுயமரியா தைக்காக மூன்று முறை ஜெயிலுக்குப் போன ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஜெயிலில் போட வேண்டுமென்ற பார்ப்பன அட்வகேட் ஜெனரலையும் பார்ப்பன சட்ட மெம்ப ரையும் கெஞ்சும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்னும் பார்ப்பனருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல் லது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான் சக்க ரைச் செட்டியாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழித்துப் பார்ப்பனரல்லா தார் இப்பொழுது பார்த்து வரும் உத்தியோகங் களை யெல்லாம் பிடுங்கிப் பார்ப்பனர் கையில் கொடுத்து விட்டு பார்ப்பனரல்லாதார் சூத்திரர், பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள் என்னும் கொள்கையை நிலைநிறுத்தப் பாடுபடும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் என்னும் பார்ப்ப னருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

அல்லது பார்ப்பன ரல்லாதார் சுயமரியாதைக்கும், மனுசத் தன்மைக்கும், தேச விடு தலைக்கும் உழைக்கும் ஸ்ரீமான் வி. சக்கரை செட்டி யாரான பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப் போடப் போகி றீர்களா? இதில்தான் உங்கள் மூளையின் தத்துவம் விளங்கப் போகிறது.

- குடிஅரசு - கட்டுரை - 26.09.1926

தமிழ் ஓவியா said...

முளையிலேயே வெறுப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளைச் சிறு பிராயம் முதற் கொண்டே நம்மைத் தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை அடி! அடி!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடி; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களைத் தொட்டுட்டு வந்துட்டையே! போ! போ!

போயி குளிச்சுட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அவர்களுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்குப் போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய்? என்று கேட்டால், என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டு விட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா? என்கிறார்கள்.

இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் அருவருப்பும், அவர்கள் தொடக் கூடாத ஜாதி என்கிற உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கொடுமை களையெல்லாம் நமது பெரியவர்கள் அறிந்தேதான் பார்ப்பனன் என்பது அமங்கலவத்து மென்றும், அவனைக் காண்பதே சகுனத் தடை, அதாவது கெட்ட சகுனம் என்றும்.

நாம் போகும் காரியங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தால்கூட அவற்றைக் கெடுத்துதான் வாழப் பார்ப்பான் என்கிற எண்ணமும் அதில் வைத்து அவ்வளவு தாழ்மையாய்க் கருதி அனுபவத்தில் நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். ஆனால், நாம் அவற்றையெல்லாம் மறந்து அதற்கு நேர் விரோதமாய் பார்ப்பனர் எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும் நம்ம குழந்தைகளுக்கு, அய்யர் மேல் பட்டுவிடாதே, அம்மாமி மேல் பட்டு விடாதே, அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுடன் நாமும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.

ஆதலால் நமது குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் படிப்பிலிருந்தே இதை ஒரு பாடமாய் வைத்து இவைகளின் உண்மைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான் நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்.

- குடிஅரசு - கட்டுரை - 05.09.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஓ.கே.கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான் ஓ.கே. கந்தசாமி செட்டியாரிடம் அனுதாபமிருந்து அவரை முனிசிபல் கவுன்சிலராக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் பார்ப்பனர்கள் ஓட்டு அதிகமாயிருக்கும் திருவல்லிக்கேணி வார்டில் போட்ட கவுன்சிலர் பதவியை ஏன் அவருக்கு செய்து வைத்திருக்ககூடாது? பட்டத் தையும் விட்ட பரிசுத்த மான ஒத்துழையா தத்துவம் கொண்ட காங்கிரஸ்வாதி இப்போது ஸ்ரீமான் அய்யங் கார் கூட்டத்தில் நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட வேறு யார் இருக்கிறார்கள்? அல்லாமலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் இன்னமும் இதற்கு முன்னும் வக்கீல் உத்தியோகம் செய்து வருகிறார்.

சர்க்கார் நியமன பதவிகளும் சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார். இவரைவிட ஸ்ரீமான் சிலவற்றை வைத்துக்கொண்டி ருக்கிறார். இவரை விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் குறைந்தவர்? அல்லாமலும் இந்த பார்ப்பனர் வார்த்தையைக் கேட்டு நடந்ததின் பலனாக பார்ப்ப னரல்லா சமுகத்தில் செட்டியாருக்கு இது சமயம் செல் வாக்கும் குறைந்து போயிருக்கிறது.

இந்த விஷயம் சேப்பாக்கம் டிவிஷனில் செட்டியார் தோல்வியுற்றதி னாலும் ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப் போடாமல் பட்டம் தாங்கும் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஓ.ஏ.ஓ.கே.லட்சுமணன் செட்டியாரை இவர்களே (பார்ப்பனர்கள்) போட்டதினாலேயும் நன்றாய் விளங்குகிறது.

ஆதலால் பார்ப்பனர் அதிகமாயுள்ள வார்டுக்கு இவரை ஏன் போட வில்லை? இது தான் போ கட்டும். சட்டசபைத் தேர்தலிலாவது இந்த பார்ப்பனர் களுக்கு நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாருக்கு ஒரு தானம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்றிருந்தால் பார்ப்பனர்கள் மிகுதியுள்ளதும் கண்டிப்பாய் பார்ப்பனர் சொல்லுகிறபடி ஓட்டுக் கிடைப்பதுமான யூனிவர்சிட்டி தொகுதிக்கு ஏன் நிறுத்தக் கூடாது? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி படிப்பையும் அனுபோகத்தையும்விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? இவற்றை யோசிக்கும்போது உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? என்ற பழமொழிபோல் இந்தப் பார்ப்பனர்களின் சகவாசம் என்பது இதிலிருந்தாவது விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 29.08.1926

தமிழ் ஓவியா said...

இந்து மத பரிபாலன மசோதா

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் நமது பார்ப்பனர் களுக்கு எமனாய் விளங்கும் இந்துமத பரிபாலன மசோதா முக்கால் பாகம் பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுக் கிடை யில் பெரும் பாகம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும் நிறை வேற்றப்பட்டு மலை யாளக் குடிவார மசோதாவைப் போல் பூரண வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்விரண்டு மசோதாவையும் எதிர்த்த வர்களுக்கு அடுத்த தேர்தலில் தக்கபடி புத்தி கற்பிப்பார்கள் என்றே நம்பு கிறோம். -

குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

மலையாளக் குடிவார மசோதா

இவ்வார சட்டசபையில் நமது பார்ப்பனர்கள் கடும் சூழ்ச்சிகளுக் கிடையில் மலையாளக் குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டது. இனி மலை யாளத்தில் உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன் மூலம் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பதையும் சந்தோஷத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

தேவதான மசோதாவுக்கு ஆதரவு

தேச மகாசபையின் பெயரால், இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும், மகந்துகளையும் மடாதிபதிகளையும் தொங்கிக் கொண்டு நிற்கும் சுயநலங் கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படை யாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதாரின் சார்பாக மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.
(பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பட்ட செய்தி)

- குடிஅரசு - செய்தி - 22.08.1926

தமிழ் ஓவியா said...


இதுதான் பாரத புண்ணிய கலாச்சாரமா?


- ஊசி மிளகாய்

பாரத நாடு பழம் பெரும் நாடு - நீர் அதன் புதல்வர் என்று பாடிய பாட்டு - புண்ணிய பூமி, ஞான பூமி, என்று தனக்குத் தானே புகழ்மாலை சூட்டிக் கொண்டுள்ள நம் நாட்டில் வாழும் மனிதர்கள் எவ்வளவு கேவலமான மனிதர்களாக - ஏன் மனசாட்சியே இல்லாத மனித மிருகங்களாக வாழுகின்றனர் என்பதற்கு நேற்றும் இன்றும் தொலைக்காட்சி, ஊடகங்கள் - ஏடுகளில் வருகின்ற நெஞ்சை உலுக்கும் செய்திகளாக வருவன எல்லாம் செந்தேள் கொட்டுவதாக அல்லவா இருக்கின்றன!

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள கேதார்நாத், பத்திரிநாத் போன்ற இடங்களுக்கு புண்ணிய புனித யாத்திரை கடவுள் அருள் கிட்டும்; தெய்வத் தின் கிருபையை மொத்தமாகச் சம்பாதித்து புண்ணியத்தை பிக்செட் டெப்பாசிட்டில் போட்டு மோட்சத்தில் முன் இடம் பிடிக்கலாம் என்று பக்தர்கள் நம் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் சென்றனர். பரிதாபத் திற்குரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர்கள் என்றால் இதில் - கடும் மழை, வெள்ளம் - இமாலய சுனாமி காரணமாக திடீர் வெள்ளத்தில் அடித்துச் சென்றோர், காணாமற் போனவர்கள் சுமார் 13 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்ற சோகச் செய்தி - நம் போன்ற நாத்திகர்கள் உட்பட அனைவரையும் நெஞ்சுருகச் செய்கிறது!

எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரவர் வீடு திரும்பி, கதறி பதறிடும் உற்றார் உறவினருடன் மீண்டும் சந்தித்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டுமே என்று நாம் கவலைப்படுகிறோம்.

தமிழ்நாட்டின் ஒரு பெண்மணி - கவளம் சோறுகூட கிடைக்காமல் பட்டினியால் உயிர் விட்டார்; வேறு வழி இன்றி என்ற செய்தி நம் உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வழியும்படிச் செய்துள்ளது!

நாடே - ஏன் உலகமே திரண்டு இச்சோகத் திலிருந்து பாதிக்கப்பட்ட அம்மக்களை - பக்தர்களை - காப்பாற்றிட வேண்டும் என்று விரும்புகின்றனர்!

ஏராளமான நிதி உதவிகளும் நிவாரணப் பணிகளுக்கு பல தரப்பிலிருந்தும் அளிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு பரிதாபச் சூழலில் அங்கிருந்து வரும் சில செய்திகள் - இப்படியும் பணத்தாசை பிடித்த மனிதத்தைக் கொன்ற - கொல்லுகின்ற மனித உரு மிருகங்களா? என்று வேதனையும் வெட்கமும் படக் கூடிய நிலை உள்ளதாக அல்லவா இருக்கிறது!
வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள், மீட்புக் குழுவினர் வருகைக்காகக் காத்திருக் கின்றனர். அவர்களது சொத்துக்கள் மற்றும் கொண்டு வந்த பொருள்கள் எல்லாம் பறி போன நிலையில், உயிரோடு திரும்பினோமே என்று அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் அவர்களை தண்ணீர்த் தாகத்துடனும் கடும் பசியுடனும் ஜீவ மரணப் போராட்டம் நடத்திடும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தற்காலிகக் கடைகள் வைத்திருக்கும் சிலர்; தங்களது பேராசை விஸ்வரூபம் எடுத்து ஆடுவதுபோல,

ஒரு பரோட்டா - 250 ரூபாய்

ஒரு பாட்டில் தண்ணீர் - 200 ரூபாய்

ஒரு சிறிய சிப்ஸ் பாக்கெட் - 100 ரூபாய்

ஒரு சிறிய சப்பாத்தி - 150 ரூபாய்

ஒரு சிறிய ரொட்டி (சிலைஸ்) - 100 ரூபாய்

ஒரு சிறிய கப் சாதம் - 40 ரூபாய்

என்று விற்பதைவிட, வெட்கப்படத் தகுந்த வேதனை வேறு உண்டா?

மனிதம் இவர்களிடத்தில் மரித்தே விட்டதோ!

இப்படி மனசாட்சியைக் கொன்று சம்பாதிக் கும் பணத்தை இவர்களுடன் சேர்த்துப் புதைக் கப் போகிறார்களா? எரிக்கப் போகிறார்களா?

பக்தி வியாபாரம் என்ற பெயரால் சுரண்டலை ஒரு புறம்; மறுபுறம் இப்படி செத்த பிணங்களைத் தான் கழுகுகள் கொத்தித் தின்கின்றன.

உயிரோடு உள்ளவர்களை - இந்தச் சுயநலப் பேராசைக் கழுகுகள் குத்திக் குத்தி உயிரையும் போக்க அனுமதிக்கலாமா? இவர்களைவிட அந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் மேலானவை அல்லவா!

பாரதக் கலாச்சாரமாம்! வெங்காயமாம்!

கடவுளுக்கு,

அவதாரங்களுக்கு

முனிபுங்கவர்களுக்கு

காவிச் சாமியார்களுக்கு

கோயில்களுக்கு பஞ்சமே இல்லை!

அன்றாடம் கோடிக்கணக்கில் வசூல்களும் கூட? கோயில் உண்டியல்களுக்குப் பஞ்சமில் லாத நாடு அல்லவோ இது! பூமியின் பொது ஒழுக்கமோ எவ்வளவு சீர்கேடடைந்து விட்டது பார்த்தீர்களா?

பக்தி வந்ததே தவிர,

மனிதநேயம் மறைந்து விட்டதே!

இது நாடா? உயிருடன் சக மனிதர்களைக் கொத்தித் தின்னும் மனிதக் கழுகுகள் உலவும் காடா?

தமிழ் ஓவியா said...


சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!


பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி

நிறுவனப் பங்குகளை எதிர்ப்புகளை மீறி தனியாருக்கு விற்பதா?

சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!

தமிழர் தலைவர் அறிக்கை

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது பொருளாதாரத்தில் மட்டும் மக்களுக்கு இழப்பு மட்டுமல்ல; சமூக நீதி - இடஒதுக்கீட்டுப் பறிப்பு என்ற ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி (லிக்னைட்) பழுப்பு நிலக்கரி நிறுவனம், நாட்டிலேயே லாபத்தில் இயங்கும் நவரத்தினங்கள் என்ற 9 பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று.

தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளுவதா?

அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு மெல்ல ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதைப் போல, 5 சதவிகிதம் என்று துவங்கி (ஏற்கெனவே சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது) தனியாருக்கு விற்பதை எதிர்த்து, அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகளும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. உட்பட அத்தனைக் கட்சியினரும் குரல் கொடுத்தனர்; அதைக் கண்டு அத்திட்டத்தைத் தள்ளி வைத்தவர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழிக்கேற்ப, நேற்று முன்தினம் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழக மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி அலட்சியப்படுத்தி விட்டு, 5 சதவிகித பங்குகளை விற்க அனுமதி வழங்கிவிட்டதாம்!

திராவிடர் கழக அறப்போர் நடத்தியுள்ளதே!

ஏற்கெனவே பொன் முட்டை இடும் இந்த வாத்தைக் கொல்லாதீர்கள் என்று திராவிடர் கழகம் அறிக்கைவிட்டு அறப்போர் நடத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு (இந்த விற்பனை மூலம்) வெறும் 466 கோடி ரூபாய்தான் கிடைக்கக் கூடும். அரசுக்கு இது ஒரு பெரும் தொகையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு மிகவும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!

சமூகநீதிக்கும் ஆபத்து!

ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக மாறினால், பொருளாதாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுவது என்பது ஒருபுறம் இருந்தபோதிலும்கூட,

மற்றொரு முக்கிய கண்ணோட்டம் சமூகநீதி - இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைப்பதாகவும் ஆகிவிடும்.
காரணம் தனியார் துறை என்றால் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி நியமனங்கள் செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் (இன்றைய நிலைப்படி) இல்லை; பொதுத்துறை நிறுவனத்தில் சமூகநீதி இடஒதுக்கீடு, கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி உள்ள தாக்கீதாகும்.

எனவே, இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; இதை மறு பரிசீலனை செய்யா விட்டால் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது (நாடாளுமன்ற தேர்தலில்) உறுதி! உறுதி!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
23.6.2013

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

அடுத்த 20-30 ஆண்டுகளில் உலக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும்; அதனால் மக்களுக்குப் பெரும் கஷ்டங்கள் சூழும். இந்தியாவில் கொல்கத்தா, மும்பைப் பகுதிகளில் கடல் மட்டம் உயரும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சியும்; உணவுப் பஞ்சமும் ஏற்படும். தெற்கு ஆசியாவில் மழை பெய்யும் முறை மாறும். சில பகுதிகளில் மின் உற்பத்தி விவசாயம், குடிநீர் இவற்றால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.
இந்த தகவல்களை உலக வங்கி எடுத்துக் கூறி எச்சரித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கோயில்.. குகை!

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் ரூ.62 கோடி செலவில் 1760 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட தேவஸ்தானம் முடிவு! சிந்தனை: கோயில் திருடர்களின் குகை என்று எங்கோ படித்த நினைவு!

தமிழ் ஓவியா said...

கடிகாரம் ரூ.27 கோடி

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் உண்மை தான். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அணிந்திருக்கும் கடிகாரத்தின் மதிப்பு ரூ.27 கோடியாம்!

தமிழ் ஓவியா said...


உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் ஆதிசங்கரரின் சமாதியும் போச்சே!


டேராடூன், ஜூன் 23- உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஆதிசங்கரரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக, அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்துள் ளனர்.

கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர், ஆதிகுரு சங்கராச்சார்யா என, அழைக்கப்படும், ஆதிசங்கரர். பல சமய நூல்களுக்கு விளக்க வுரை எழுதியவர். இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணித்து, அத்வைத பீடங்களை நிறுவியவர். இவரின் சமாதி, உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலின் பின்புறம் இருந்தது. இது, எட் டாம் நூற்றாண்டில் கட் டப்பட்டதாக கூறப்படு கிறது. சமீபத்தில், உத்தர கண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த சமாதியும், அடித் துச் செல்லப்பட்டு விட் டதாக, அங்கிருந்தவர் கள் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் கோவிலில், அர்ச்சகர் ஒருவர் கூறிய தாவது:கடந்த ஞாயிறு இரவில், பலத்த மழை பெய்தது. இதுவரை, இப்படிப்பட்ட மழையை, நான் பார்த் தது இல்லை. நேரம் செல்ல செல்ல, மழை வலுத்தது. கோவிலின் அருகே செல்லும் மந்தா கினி ஆற்றில், வெள்ளம் கரை புரண்டோடியது.

கரையை கடந்து, கோவில் இருந்த பகுதிக்குள்ளும், வெள்ள நீர் புகுந்தது. மிகுந்த வேகத்துடன் வந்த வெள்ளப் பெருக்குடன், சகதியும் சேர்ந்து வந்த தால், கோவிலின் பெரும் பாலான பகுதி, சகதி யால் மூடப்பட்டது. உயிரை பாதுகாத்து கொள்வதற்காக, அங் கும், இங்கும் ஓடினோம். அங்கே, பாதுகாப்பான இடம் என்று, எதுவுமே இல்லை. கோவிலின் ஒரு பகுதியில் வெள்ள நீர் இல்லாததை பார்த்து, அங்கு ஓடினோம்.

வெள்ளச் சீற்றத்தில், எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, ஆதிசங் கரரின் சமாதியும் அடித் துச் செல்லப்பட்டது. ஆதிசங்கரர் சமாதியின் பெரும்பாலான பகுதி களை காணவில்லை. மேலும், அங்கிருந்த ஆதி சங்கரரின் இரண்டு சிலைகள், ஸ்படிக லிங்கம், அனுமன் சிலை ஆகியவையும், வெள் ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. அந்த பகுதி முழுவதும், சகதிகளுக்குள், உடல் கள் புதைந்து கிடந்தன. அங்கிருந்த ஆசிரமமும், இருந்த இடம் தெரி யாமல், வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.