Search This Blog

29.10.14

ஏது சார் ஜாதி? எங்கே இருக்குதுங்க தீண்டாமை?வக்கணை பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை!



சங்கர மடங்கள் உள்ள வரை, வேத, இதிகாச, புராண சாஸ்திரக் குப்பைகள் உள்ள வரை பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி ஆதிக்கத்தினை ஒரு போதும் கெல்லி எறியப் போவதில்லை.

நெஞ்சை நிமிர்த்தி நீ தீண்டத்தகாதவன், எட்டி நில்! தூர விலகி ஓடு! என்று  இன்று சொல்ல முடியவில்லை என்பது உண்மை தான் என்றாலும், பார்ப்பனர் களின் சிந்தனையின் ஓரத்தில்கூட தீண்டாமை தவறு தானே -
மனித உரிமைக்கும், நேயத் துக்கும் எதிரானதுதானே என்று எண்ணம் கசியாது.

வெகுதூரம் போகவேண் டாம்; அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற மனித சமத்துவம். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையாக திராவிடர் கழகத்தின் தீவிர முயற்சியால் சட்டரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்டிருப்பினும், ஏன் தடைப்பட்டு நிற்கிறது? எந்த இடத்தில் முட்டுக்கட்டை முறுக்கிக் கொண்டு நிற்கிறது?

கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் கட்டளையை ஏற்று சட்டம் செய்தாரே - ஆணை பிறப்பித்தாரே!

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குப் பார்ப்பனர் கள் சென்றநேரத்தில், அதற் குத் தூண்டுதல் பீடமாக இருந்தவர் காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிதானே? பிரபல வழக்குரைஞர் பல்கிவாலா
வுக்குச் சிபாரிசு செய்ததும், கனம் ராஜகோபாலாச்சாரி யார்தானே? (ராஜாஜி).

ஆனால், பார்ப்பன ஊடகங்களும் சரி, அவாளில் பெரிய மனிதர்களும் சரி, சங் பரிவார் பேர்வழிகளும் சரி பேசுவதைப் பாருங்கள், இந்தக் காலத்தில் ஏது சார் ஜாதி? எங்கே இருக்குதுங்க தீண்டாமை? என்று

வக்கணை எச்சில் ஒழுகப் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.


இவர்களுக்கெல்லாம் யார் வழிகாட்டி என்றால், மறைந்த மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தான்!

அவர் பேசினால் அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் தெய்வத்தின் குரல்!

பரணீதரன் என்ற புனைப் பெயரில் பார்ப்பனர் ஒருவர் ஆனந்தவிகடனில் தொடர் எழுதி வந்தார். அதில் ஒன்று

இதோ: (ஆனந்தவிகடன், 14.4.1974)

கடியாவிலிருந்து பெக்னி தார் என்ற இடத்துக்கு இமய மலையில் சங்கராச்சாரியார் பயணம், கரடு முரடான பாதை; தரை அரிப்புக் காலைக் குத்தும்; கற்களும், ஜல்லிகளும் - மலையேற்றம் - வெயில் ஏற்றம்... இப்
பாதையில் செருப்பில்லாத வெற்றுக்காலுடன் நடந்த தால், சங்கராச்சாரியார் காலி லிருந்து சிறிது ரத்தம்

கசிந்தது. இதனால்  உடனிருந்த பக்தர் கள் வேண்டிக் கொண்ட தால், அவர் தண்டிகையில் (பல் லக்கில்) ஏறிக் கொண்டாராம்.

தண்டிகையைச் சுமந்து வந்தவர்களுக்கு மடி விழுப்பு என்றால், என்ன வென்று தெரி யவில்லை. அவர்கள் இஷ்டத் துக்கு கைகளை வீசிக் கொண் டிருந்தார்கள் என்று எழுதுகிறார்.

விவரம் புரிகிறதா? தண் டியில் சங்கராச்சாரியார் அமர்ந்துள்ளார் என்று தெரி யாமல், சங்கராச்சாரியார் உடம்பில் இவர்களின் கைபட் டால் தீட்டு என்று தெரியாமல் கைகளை வீசி நடந்து கொண்டார்களாம்.

எப்படி இருக்கிறது? சங் கராச்சாரியார் காலில் சிறிது ரத்தம் கசிந்ததற்கே கசிந்து ருகிய பரணீதரன்கள், அதே கல்லில், முள்ளில் செருப்பு அணியாமல், தடியரைத் தண்டியில் வைத்துத் தூக்கிச் சென்றதுபற்றி ஒரே ஒரு வார்த்தை உண்டா? அவர் களின் மெய்வருத்தம் பற்றிச் சிந்திக்காதது ஏன்? கேட்டால், கர்ம பலன் என்று கூறி மடக்கி விடுவார்கள். 

சங்கராச்சாரிமீது கைபட்டால் அது என்ன சாதாரண தீண்டாமையா? மிகவும் விலை உயர்ந்த (காஸ்ட்லி) தீண்டாமை - அப்படித் தானே?
மடி - தீட்டு இல்லாத நிலை; விழுப்பு - தீட்டு

          ------------------ மயிலாடன் அவர்கள் 28-10-2014 -”விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23 comments:

தமிழ் ஓவியா said...

டிவிட்டரை நாத்திகர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்! ஆய்வுத் தகவல்


வாஷிங்டன், அக்.28-_ டிவிட்டர் சமூக வலைத் தளத்தில் ஆத்திகர்களை விட நாத்திகர்களே அதி கமாக

செயல்படுகின்றனர் என ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.

நாத்திகர்கள் பொது வாக சிறுபான்மையராக இருப்பதாக கருதப்பட்டா லும், சமூக வலைத்தள மான

டிவிட்டரில் நுழை யும்போது, நாத்திகர் களுக்கு ஏராளமான நண் பர்களும், அவர்களைப் பின்பற்றுவோர் உள்ள

தாகவும், டிவிட்டரில் அதிகமாக கருத்துக்களை யும் பதிவிடுகிறார்கள் என்றும் அமெரிக்க ஆய் வுத்தகவல்

கூறுகிறது.

அதேபோன்று ஆய் வுத்தகவலில் ஒரு குறிப் பிட்ட மத நம்பிக்கையா ளர்களாக அடையாளப் படுத்திக்கொண்டு

இருப்ப வர்கள், அவர்களைப் போன்றே அதே நம்பிக் கையில் இருப்பவர்களு டன் மட்டுமே மற்றவர்

களைக்காட்டிலும் பதிய விட்டுக் கொள்கிறார்கள் என ஆய்வுத்தகவல் கூறு கிறது.

டிவிட்டர் பயன்படுத் துவோர் குறித்த தகவல் களை ஆய்வு செய்த போது, கிறித்துவர், யூதர், முசுலீம், புத்தம்,

இந்து மற்றும் நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை ஆய் வில் கண்டறியப்பட்டுள் ளது.

இந்த 6 அடையாளங் களைக் கொண்டுள்ளவர் கள் அடிக்கடி பதியவிட் டுக் கொண்டுள்ளார்கள். அவர்களில்

அமெரிக்க மக்கள் தொகையின் எண் ணிக்கையில் சிறுபான்மை யராக உள்ள நாத்திகர்கள் சிறப்பானவர்களாக

அறி வார்ந்தவர்களாக உள்ள தாக பியீயீவீஸீரீஷீஸீ றிஷீ இத ழில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சார்ந்த ரைட் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட் டத்துக்கான மாணவர்

லூசென் என்பவர் கூறும் போது, சராசரியாக நாம் சொல்ல வேண்டுமானால், நாத்திகர்கள் ஏராளமான

நண்பர்களைக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் பதிவைப் பின்பற்றுபவர் கள் அதிகமானவர்கள் உள்ளனர்.

அவர்கள் ஏரா ளமாக பதிவுகளையும் செய்கின்றனர் என்றார்.

டிவிட்டர் சமூக வலைத் தளத்தைப் பயன்படுத்துப வர்கள் குறித்து ஆய்வா ளர்கள் ஆராயும்போது,

2,50,000பேர் டிவிட்டர் பயன்படுத்துகிறார்கள். 9,60,00,000 பதிவுகளை செய்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும், டிவிட்டரைப் பயன்படுத்துவோர் டிவிட் டரில் யாரைப் பின்பற்று கிறார்கள், அவர்களைப்

பின்பற்றுபவர்கள் யார் என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

டிவிட்டர் சமூக வலைத் தளத்தைப் பயன்படுத்துப வர்கள் தங்களைப்பற்றிய அடையாளங்களைக்

குறிப்பிடும்போது, மதத் தைச் சார்ந்தவராகவோ, நாத்திகராகவோ அடை யாளப்படுத்தியுள்ளனர். ஆய்வு

மேற்கொண்ட வர்கள் அமெரிக்காவில் உள்ள டிவிட்டர் பய னாளிகள்குறித்தே ஆய் வுத் தகவல்கள் அளித்

துள்ளனர்.

யாரெல்லாம் மதமற்ற வர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளார்கள் என்கிற அடிப்படையில் ஆய்வு

மேற்கொண்டனர். டிவிட்டர் பயன்படுத்து பவர்கள் பெரும்பாலும் அன்பு, வாழ்வு, பணி மற்றும் மகிழ்ச்சி ஆகிய

சொற்களையே பயன் படுத்தி உள்ளனர்.

லூசென் கூறும்போது, மனிதர்களில் பலரும் எந்த விஷயத்தில் பெரி தாக நம்பிக்கொண்டிருக் கிறார்களோ,

அப்படி எதுவும் இல்லை என்று கூறுகிறார்.

கத்தார் கணினிமுறை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இங்மார் வெபெர் மற்றும் கேம்டன் ரட் ஜர்ஸ்

பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த ஆதாம் ஒக் குலிக்ஸ்-கோஸரைன் ஆகி யோருடன் இணைந்து லூசென் இந்த

ஆய்வை நடத்தியுள்ளார்.

மக்கள் அவர்களின் அன்றாட வாழ்வு குறித்து அதிக அக்கறை கொள் கின்றனர். அதேபோல், அன்பு,

நல்வாழ்வு, உலகு குறித்து அக்கறை, மற்ற வர்கள்குறித்து அக்கறை எடுத்துக்கொள்வதைப் போன்றதுதான்

இதுவும் என்கிறார் லூசென்.

Read more: http://viduthalai.in/e-paper/90122.html#ixzz3HUgU2WJ3

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதானா?

குமரி மாவட்டத்தில் கோவில்கள் கொள்ளையோ கொள்ளை!

குமரி மாவட்டம், குளச்சல் அருகே மேற்கு நெய்யூரில் இருக்கும் இசக்கி அம்மன் கோவிலுக்கு நேற்று காலை

கோவில் நிர்வாகி சிவராம் சென்று பார்க்கும்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த

நகை திருட்டுப் போயி ருந்தது.

உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்

தனது நகையைக் கூட பாதுகாக்க இயலாத இந்தக் கடவுளா பக்தர்களைப் பாதுகாக்கப் போகிறது?

ராஜாக்க மங்கலத்தில்...

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் பண்ணயூரில் உள்ள இசக்கியம்மன் கோவில் பூசாரி ராஜேஷ் நேற்று

முன்தினம் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு பின்னர் கோவிலுக்குள் வந்து பார்க்கும்போது கோவில்

உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ2ஆயிரம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்தார்
உடனே ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதுபோல ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன் விளையில் உள்ள விநாயகன் கோவிலிலும் பூட்டு உடக்கப்பட்டு

பணம் திருட்டுப் போய் உள்ளது. அந்த கோவில் பூசாரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்

தொடர்ச்சியாக கோவிலில் பணம் திருடப்பட்ட போதும் இந்த சக்தியற்ற கடவுளர்களை நம்பி கோவிலுக்குப்

போவதை பக்தர்கள் என்றுதான் நிறுத்துவார்களோ.


கும்மிடிப்பூண்டி:

கோவில் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டியை அடுத்த காட்டுக்குளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பொற்காளியம்மன் கோவில் உள்ளது.

நேற்று காலை கோவில் பூசாரி ராஜீ(வயது 50) கோவிலை திறக்கச் சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க

இரும்பு கதவு மற்றும் அதனை அடுத்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி

அடைந்தார்.

யாரோ சிலர் கோவிலின் 2 கதவு பூட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த இரண்டு

உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்று

உள்ளனர். மேலும் அங்கு இருந்த இரும்பு பெட்டியை தூக்கிச்சென்று சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள

வயல்வெளியில் வைத்து அதனை உடைத்து அதில் இருந்த அரை பவுன் எடை உள்ள தங்கக் காசுகளையும்

அவர்கள்அள்ளிச்சென்று விட்டனர். இதுபற்றி கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்தாண்டு இந்தக் கோவிலின் கோபுரத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ளஅய்ம்பொன் கலசங் களை யாரோ

சிலர் திருடிச்சென்று விட்டது குறிப் பிடத்தக்கது.


Read more: http://viduthalai.in/e-paper/90124.html#ixzz3HUgd3OVv

தமிழ் ஓவியா said...

மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு மரபணு மாற்றம் கத்திரிக்காய் அனுமதி!


புதுடில்லி, அக். 28- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் பற்றி கள ஆய்வு நடத்த மத்திய அரசு

அனுமதி அளித்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்கள் பற்றி கள ஆய்வு நடத்த முந்திய அய்க் கிய

முற்போக்குக் கூட்டணி அரசில் தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு தற் போது

இந்தத் தடையை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் மற்றும் கடுகு

ஆகியவை பற்றி கள ஆய்வு நடத்த சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு சுற்றுசூழல் அமைச்சகம் பதிலளித் துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுபற்றி ஆய்வு நடத்துவதற்கு டில்லி பல்கலைக்கழகத்துக்கு அனுமதி

அளிக்கப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்திரிக்காய் பற்றி ஆய்வு நடத்த மராட்டிய மாநிலத்தைச்

சேர்ந்த பிஜோ சீட்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப் பட் டது. கடந்த ஆகஸ்டு

21 இல் இவ்வாறு அனுமதி அளித் தோம் என சுற்றுசூழல் அமகம் பதிலளித்துள்ளது.


Read more: http://viduthalai.in/e-paper/90123.html#ixzz3HUglL3Cp

தமிழ் ஓவியா said...

வாழ்க்கைக்கேற்ற அறிவுரை


நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில்

நன்மை தீமைகளைக் கற்பிப்பதின்மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க

முடியாதா? - (குடிஅரசு, 7.4.1929)

Read more: http://viduthalai.in/page-2/90129.html#ixzz3HUhIMkBh

தமிழ் ஓவியா said...

காஞ்சியில் களம்!

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் சர்ச்சைக்குப் பெயர்போனது போலும்! அந்தக் கோவிலின் மேலாளராக

இருந்த சங்கரராமன் ஒரு பட்டப்பகலில் கோவில் சன்னதியிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். என்ன செய்வார்

வரதராஜப் பெருமாள்? சிற்பி அடித்து வைத்த ஒரு ஜடப்பொருள் அவ்வளவே!

அது ஒருபுறம் இருக்கட்டும்; அந்தக் கோவிலில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை தலைதூக்கி

நிற்கிறது.

இந்தப் பிரச்சினைக்குக் காரணம் கண்டிப்பாக பார்ப்பனர் அல்லாதார் அல்ல; வீண் கவுரவம் பார்க்கும் ஜாதி

வெறிபிடித்த அய்யங்கார்ப் பார்ப்பனர்களே- இந்தப் பிரச்சினை பேருரு எடுக்க முக்கிய காரணமாகும்.
இந்தக் கோவிலில் இரு வாசல்கள் உள்ளன; பார்ப்பனர்கள் மட்டுமே குறிப்பிட்ட வாயிலில் நுழைய வேண்டும்;

இன்னொரு வாசலில் பார்ப்பனரல்லாதார் நுழையவேண்டுமாம். பார்ப்பனர் நுழையும் வாயிலில் பார்ப்பனர்

அல்லாதார் நுழைந்தால் பார்ப்பனர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பும். ஏன்,

வன்முறைகளில்கூட இறங்கப் பார்ப்பனர்கள் தயாராவதும் உண்டு.

ஆண்டுதோறும் அய்ப்பசி மாதத்தில் 10 நாள்கள் இக்கோவிலில் உற்சவம். மற்ற மாதங்களில் மூல நட்சத்திரம்

நாளிலும் உற்சவம் நடக்கும்.

கோவிலுக்குச் செல்வதற்குத்தான் இரண்டு தனித்தனிப் பாதைகள் என்றால், கோவில் பிரசாதம் அளிப்பதிலும்

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் வேறுபாடு பச்சையாக அனுசரிக்கப்படுகிறது. பிரசாதம், தீர்த்தம்

வழங்கும்போது, பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு அவற்றை பெற்றுக்கொள்ளலாம்; பார்ப்பனர் அல்லாதாரோ

எழுந்து நின்று அர்ச்சகர்ப் பார்ப்பனர் அளிக்கும் பிரசாதத்தைப் மரியாதையுடன் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இந்தப் பாரபட்சத்தை எதிர்த்து அவ்வப்போது குரல்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.அனைத்து ஜாதி

யினருக்கும் அர்ச்சகருக்கான பயிற்சிப் பள்ளியில் முறையாகப் படித்து வெற்றி பெற்றவரும், திருக்கச்சி நம்பி

திருமால் சேவை அடியார்கள் சங்கத்தின் நிர்வாகியுமான மாதவன் என்ன கூறுகிறார்? நானும் வைணவன்தான்;

ஆனால், பார்ப்பனர் அல்லர்; நாலாயிரம் திவ்விய பிரபந்தப் பாடல்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி,

எனக்குப் பாடவும் வரும்; ஆனால், நான் பார்ப்பனர் அல்லாதான் என்பதாலும், திவ்யபிரபந்தம் தமிழில் இருக்

கிறது என்பதாலும் அதனைப் பாட முடியாமல் நாங்கள் தடுக்கப்படுகிறோம்.

ஒருமுறை நானும், சுந்தரவல்லி என்ற மூதாட்டியும் தென்கலைப் பார்ப்பனர்கள் செல்லும் வழியாக செல்ல

முயன்றபோது, எங்கள் இருவரின் கழுத்தில் கையைக் கொடுத்து வெளியில் தள்ளினார்கள் என்று கூறுகிறார்.
இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் முறைப்படி வரதராஜப்பெருமாள் கோவிலில் நடக்கும் சட்ட

விரோத நடவடிக்கைபற்றிப் புகார் அளிக்கப்பட்டது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்துக் கூறியும்,

அர்ச்சகப் பார்ப்பனர்கள் அதிகாரிகளைப் பொருட் படுத்துவது கிடையாது.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டு, நீதிமன்றமும், அக்கோவிலில் நிலவும் தீண்டாமைக்கு

முடிவு கட்ட ஆணை பிறப்பித்திருந்தும், நீதிமன்ற ஆணையும் நிராகரிக்கப்பட்டு விட்டது.

தந்தை பெரியார் கூறிய அந்தப் பிராமினோகிரசியின் பூணூலும், சிண்டும் தலைக்கொழுத்துத் தாண்டவம்

ஆடுகின்றன!

பாரதி அண்ணா மாதவன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோர் இந்து அறநிலையத் துறை

ஆணையர் தனபால் அவர்களை நேரில் சந்தித்துப் புகார் மனு கொடுத்தனர். ஆணையரும் அதனை ஏற்றுக்

கொண்டு ஆணை பிறப்பித்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...

அதன்படி கடந்த 21 ஆம் தேதி கோவிலுக்குள் செல்ல முயன்றபோது, அதற்கு முன்னதாகவே கோவில்

நுழைவு வாயிலை திரையிட்டு மறைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள்.

காவல்துறையோ, உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது. போராட்டக் குழு

அமைக்கப்பட்டு செயல்பாடுகள் முறையாகத் தொடங்கப் படுவதற்குத் திராவிடர் கழகம் முனைப்பாக செயல்பட

உள்ளது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டம் செயல்படுத்தப்பட முடியாமல் பார்ப்பனர்களால்

உச்சநீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அதை நோக்கி திராவிடர் கழகம் பயணிக்கும் இந்தக்

காலகட்டத்தில், அதற்கு முன்னோட்டமாக காஞ்சீபுரம் பிரச்சினையையும் கையில் எடுத்துக்கொள்ள கழகத்

தலைவர் ஆணையை விரைவில் எதிர்பாருங்கள்.

காஞ்சீபுரத்திலிருந்துதானே தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

அன்றைக்குப் பார்ப்பனர்களின் அற்பப் புத்தியினால், தமிழ்நாட்டிலே பார்ப்பனர் எதிர்ப்புணர்வு என்ற பூகம்பமே

வெடித்தது - அதன் பலனைப் பார்ப்பனர் தலையில் சுமக்கும் பரிதாப நிலை!

இப்பொழுது இன்னொரு வகையில் முன்புத்தியில்லா மல் பார்ப்பனர்கள் நடந்துகொள்கிறார்கள்; அதன்

பலனையும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உண்மை - இது கல்லின்மேல் செதுக்கப்பட்ட வெற்றி

எழுத்துக்கள்.

தோழர்களே, தயாராவீர்!

Read more: http://viduthalai.in/page-2/90130.html#ixzz3HUhUhYfm

தமிழ் ஓவியா said...

இந்நாள்: போலியோவுக்குத் தடுப்பூசி கண்ட பெருமகன் எட்வார்ட் சாக் பிறந்த நாள்


(போலியோவிற்கான தடுப்பூசியைக் கண்டறிந்த ஜொன்ஸ் எட்வார்ட் சாக் அவர்களுக்கு நூற்றாண்டு விழா;

பிறந்த நாள் அக்டோபர் 28, 1914)

மனித இனம் தோன்றிய நாள் முதல் பல்வேறு நோய்களுக்காட்பட்டு மரண மடைந்து வந்தான். ஆனால் ஒரு

நோய் மரணமடையவும் விடாமல், வாழவும் விடாமல் வாழ்நாள் முழுவதும் மனி தனை அலைக்கழித்து வந்தது,

அது இளம்பிள்ளைவாதம் என்றழைக் கப்படும் போலியோ நோயாகும்.

வனவிலங்குகளின் மலத்தின் மூலம் மனித இனத்திற்கு பரவிய இந்த வைரஸ் கிருமி ஏற்படுத்திய பாதிப்பு

எகிப்திய மம்மிகளிடமும் காணப்படுகிறது. டுடங் காமன் என்ற மன்னனின் (கி.மு 4000) இளவரசர் ஒருவரின்

மம்மியை ஆய்வு செய்தபோது அந்த மம்மி போலியோ வால் பாதிக்கப்பட்டது எனத் தெரிய வந்ததுள்ளது.

வியர்வை, மலம், சிறுநீர்மூலம் இந்தக் கிருமி நீர் நிலைகளில் கலந்து பரவுகிறது. போலியோவை உண்டாக்கும்

வைரஸ் தண்டுவடத்தை பாதித்து நரம் புகளை செயலிழக்கச் செய்கிறது. போலியோ பெரும்பாலும் இடுப்புக்கு

கீழ் பகுதி நரம்பு மண்டலத்தை கடு மையாக பாதித்து, அவரின் வாழ்க் கையை முடக்கி விடுகிறது.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இந்த நோய் குறித்து அறிவியலாளர்கள், இந்த நோய் அணுகுண்டைவிட

ஆபத்தானது என் பர். இரண்டு உலகப்போர்களாலும் பாதிக் கப்பட்ட மக்களைவிட போலியோ நோயினால்

பாதிக்கப்பட்டவர்களே அதிகம். போலியோ நோய்பரப்பும் வைரஸ்கள் குறித்த இயக்கங்கள் நவீன

நுண்ணோக்கிகள் கண்டறியப்படாத நிலையில் சரியாக அடையாளங்காண இயலவில்லை. அமெரிக்காவைச்

சேர்ந்த ஜோன்ஸ் எட்வர்ட் சாக் என்பவர் தன்னுடைய சிறுவயதில் தனது தங்கைக்கு போலியோ தொற்றி

அவள் முடமாகி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். சிறுவயதில் இருந்தே போலியோ நோயின்

கொடுமையை அறிந்த கார ணத்தால் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்ததும் மருத்துவம் பயிலத் துவங்

கினார். முக்கியமாக அவர் நோய்களை ஏற்படுத்தும் நச்சுக்கிருமிகள் குறித்து இரவு பகலாக ஆய்வு செய்தார்.

பெரி யம்மை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவலான பிறகு போலியோ குறித்த ஆய்வும்

உலக அறிவியலாளர்களால் முன்னேடுக்கப் பட்டது. ஜோன்ஸ் எட்வர்ச் சாக் பெரி யம்மை தடுப்பூசி

போன்றே போலியோ விற்கும் தடுப்பூசி கண்டறியும் ஆய்வை தொடர்ந்து செய்துவந்தார்.

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை நீண்ட ஆய்வில் ஈடுபட்ட அவர் அமெரிக்காவில் ஒரு

லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தான் கண்டுபிடித்த தடுப்பூசியை போட்டு நோய் பரவாமல் தடுப்பதில்

வெற்றியும் கண்டார். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட வர்களை முழுமையாக குணப்படுத்தா விடினும்

நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியை 1955 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு

ஏப்ரல் 12 ஆம் தேதி இவரது தடுப்பூசி உலகிற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது இவர்

உலகின் அதிசய மனிதர் என்றே கரு தப்பட்டார். காரணம் உலகெங்கிலும் போலியோ பாதிக்கப்பட்டவர்கள்

கடவு ளின் சாபத்தால் பிறந்தவர்கள் என்று கருதப்பட்டது. அந்தக் கடவுளின் சாபத்தை முறியடித்துக்

காட்டியவர் என்று அமெரிக்க இதழ்கள் புகழாரம் சூட்டின.

எந்த ஒரு தனிப்பட்டவருக்கும் உரிமையானதல்ல...

தொலைக்காட்சி ஒன்றின் நேர் காணலின்போது இந்தத் தடுப்பூசிக்கான உரிமையை நீங்கள் கோருவீர்களா என்ற

கேள்விக்கு, ஜோன்ஸ் அளித்த பதில் சூரியனுக்கு யாரும் உரிமை கோர முடியுமா அது உலகத்திற்கு பொது

வானது அதுபோலவே, என்னுடைய போலியோ தடுப்பூசி கண்டுபிடிப்பும் எந்த ஒரு தனிப்பட்டவருக்கும்

உரிமை யானதல்ல; இது மனித குலத்திற்கே உரிமையானது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/90133.html#ixzz3HUhr65mW

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் 10 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமாம்! சொல்லுகிறார் சிவசேனை தலைவர்

லக்னோ, அக். 28 இந்துக்கள் பெரும்பான்மை யினர் தகுதியை தக்க வைத்துக் கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தை களுக்கும் மேல் பெற்றெ டுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச சிவசேனா தலைவர் அனில் சிங் தெரி

வித்திருப்பது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் பெரும்பான் மையினர் என்ற தகுதியை தக்க வைத்துக்கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்க வேண்டும். அவ்வாறு பத்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட குழந் தைகள்

பெற்றுக்கொள்ளும் குடும்பத்திற்கு தலா ரூ.21,000 வெகுமதி வழங் கப்படும். அக்குடும்பங் களுக்கு தேசிய நலன்

கருதி மக்கள் தொகையை அதி கரித்ததற்காக பாராட்டு சான்றிதழும் அளிக்கப் படும் என அனில் சிங்

கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனா தலைவரின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மற்றொரு தலைவரான சுரேந்திர

ஷர்மா, இந்துக் களின் எண்ணிக்கை குறைந் தால் நமது தேசத்தில் நாமே சிறுபான்மையின ராக மாறிவிடுவோம்

என கூறியிருக்கிறார்.

இக்கருத்திற்கு பிற கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரீட்டா

பகுகுணா ஜோஷி, உத்தரப்பிரதேசத்தில் வகுப்புவாத கலவரங்களை தூண்டும் வகையில் நடந்து கொள்ளும்

சிவசேனா வெட்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த் ஷாகித் சித்திக்கி கூறுகையில், 10 குழந்தைகளை பெற்றுக் கொள்வது

பெண்களுக்கு வேதனையானது. சிவசேனா இதற்காக ரூ.21,000 மட்டும் தருவதாக தெரிவித்துள்ளது. அவர்கள்

ரூ.21 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படி அதிக தொகை கொடுத்தாலும் இந்த எண்ணம் தவறானது.

வளர்ந்த நாடுகள் மக்கள் தொகையை குறைக்க நட வடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில், சிவ சேனா

மக்கள் தொகையை அதிகரிக்க ஆலோசனை கூறியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/90136.html#ixzz3HUi5fTLg

தமிழ் ஓவியா said...

ஹிட்லரை எதிர்த்த சோபி ஸ்கால்


உலகம் முழுவதுமே மிக மோசமான பின் விளைவு களை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் காலகட்டம்... ஹிட்லர் தலைமையில் ஜெர்மனிதான் இந்தப் போருக்குத் தலைமை தாங்கியது. ஆனாலும், எல்லா ஜெர்மனியர்களும் போருக்கு ஆதரவாக இல்லை. அப்படி, சொந்த நாடாக இருந்தாலும், சொந்த நாட்டு அதிபராக இருந்தாலும் ஹிட்லரை எதிர்த்தவர்களில் ஒருவர் சோபி ஸ்கால்!

1921 மே 9 அன்று பிறந்தார் சோபி. சோபி நிறையப் படிப்பார்... ஓவியங்கள் தீட்டுவார்... இசையிலும் ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்து, திறமையாகச் செயல்பட்டார். நாஜி இளைஞர் படை, பெண்கள் படை போன்றவற்றில் இணைந்து பணி புரிந்தார். பள்ளி இறுதி முடித்தவர்கள் கட்டாயம் தேசச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று சட்டம் இருந்தது.

அதற்காக பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஆசிரியராக சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தார் சோபி. பிறகு, முனிச் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றார். அங்கேதான் சோபியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

யூதர்களுக்குத் தனிப் பள்ளி, தனிக் கடைகள், உடையில் சின்னம் அணிந்திருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரங் களில்தான் வெளியில் வரவேண்டும், மற்றவர்களுடன் பேசக்கூடாது என்றெல்லாம் நாஜிகள் மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வந்தனர். இவற்றைக் கண்டு அதிர்ந்து போனார் சோபி.

இன்னொரு பக்கம் ஹிட்லரை எதிர்த்தவர் களுக்குக் கிடைத்த தண்டனைகளும் அவரை நிலைகுலையச் செய்தன. சோபியின் அப்பா ஹிட்லரின் நடவடிக்கைகளை எதிர்த்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தனிநபரின் கைகளில் முழு அதிகாரமும் இருந்தால், அவர் எந்த அளவுக்கு சர்வாதிகாரியாக நடந்துகொள்வார் என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணன் ஹான்ஸ் மற்றும் அவர் தோழர்களுடன் சேர்ந்து ஹிட்லரை எதிர்க்கும் போராட்டங்களில் பங்கேற்றார் சோபி.

ஒயிட் ரோஸ் என்ற அமைப்பு உருவானது. 1942 ஜூன் முதல் 1943 பிப்ரவரி வரை இந்த அமைப்பு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டது. ஹிட்லருக்கு எதிரான செயல்களில் ஈடுபட் டதாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. வெகு விரைவில் விசாரணை முடிந்தது. சோபி, ஹான்ஸ் மற்றும் தோழர்களுக்கு கெல்லட்டின் கொண்டு தலை வெட்டும் தண்டனை வழங்கப் பட்டது.

1943 பிப்ரவரி 22... ஹான்ஸ், நண்பர் கிறிஸ்டோப் ப்ராப்ஸ்ட், சோபி மூவரையும் தண்டனை அளிப்பதற்காக அழைத்துச் சென்றனர், வேண்டும் சுதந்திரம் என்றபடி ஹான்ஸ் கொலை மேடைக்குச் சென்றார். அவர் தலை துண்டிக்கப்பட்டது. 21 வயதே நிரம்பிய சோபி, துணிச்சலுடன் கண்களை இமைக்காமல் மரணத்தை எதிர்கொண்டார்.

Read more: http://viduthalai.in/page-7/90156.html#ixzz3HUilLc6O

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


1932 இல் காஞ்சி பெரியவாள் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி தஞ்சாவூரிலிருந்து காசிக்கு நடந்தே போனாராம். ஆறு மாதம் நடந்தாராம். எவ்வளவோ கேட்டுக் கொண்டும், மறுபடியும் நடந்தே திரும்பினாராம்.

அப்படியென்றால், விமானத்தில் பறந்து திரி யும் ஜெயேந்திர சரஸ்வதி சாஸ்திரத்தை மீறியவர் ஆகவில்லையா!

நடந்து போனவரும் ஜெகத்குரு, விமானத்தில் பறப்பவரும் ஜெகத்குரு தானா?

என்னே, பார்ப்பனப் பற்று!

தமிழ் ஓவியா said...


மதவாதம் - அறிஞர்களின் மவுனம் ஆபத்தானது!

வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் எச்சரிக்கை!

புதுடில்லி, அக்.29_- மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப் படுவது குறித்தும், மதச் சார்பின்மை அடிப்படை யிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்பவேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற் புறுத்தினார். புதுடில்லியில் நிகில்சக் கரவர்த்தி நினைவு அறக் கட்டளை சார்பில், கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? -இதுதான் இப்போதைய கேள்வி என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

முன்பை விட இப் போது ஏராளமான அறி ஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக் கப்படும்போதுகூட அவர் கள் மவுனம் சாதிக்கின் றனர். ஏனெனில் அவர் கள் சர்ச்சையற்ற முறை யில் இயங்க விரும்புகின் றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின் றனர் என்று அவர் குறிப்பிட்டார்.பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர் கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத் தப்பட்டு ஒடுக்கப்பட்ட னர். தற்போது இந்துத் துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத் தனை பேரும் மார்க்சிஸ்ட் டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படு கின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப் பிட்டார்.

பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப் பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக் கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்கவேண்டும் என் றார்.

மவுன சாட்சியாகி விடுகின்றனர்

இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்.

அதிகாரத்தில் உள்ளவர் கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சி யாகி விடுகின்றனர் என் றார் அவர்.

மதச்சார்பற்ற கோட் பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய் யப்படுகின்றன. பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன.

மத மற்றும் அரசியல் தலை யீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சு வதால்தான் சிறு எதிர் வினையைகூட செய்வ தற்கு இவர்கள் தயங்கு கின்றனர் என்று குறிப் பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக் களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படு கிறது. அறிஞர்கள் இத் தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறி வுத்தளத்தில் போர்புரிய வேண்டும். ஆனால், இதுமிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட் டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90194.html#ixzz3HaOgZcvR

தமிழ் ஓவியா said...

காஞ்சி சங்கர மடத்தில் ரூ.3992 கோடி கருப்புப் பணம்! திடுக்கிடும் தகவல்!


காஞ்சி சங்கர மடத்தில்
ரூ.3992 கோடி கருப்புப் பணம்!
திடுக்கிடும் தகவல்!

விசாரணை தொடங்குகிறது!

காஞ்சிபுரம், அக்.29_ காஞ்சிபுரம் சங்கர மடத் திற்கு ரூ.3992 கோடி ரூபாய் வங்கிகளில் வைக் கப்பட்டுள்ளது. இந்தப் பண வருவாய்க்கான விவரங்கள் இல்லை; கணக்கில் வராத இந்தக் கருப்புப் பணம் குறித்து விசாரணை தொடங்கப் படுகிறது.

2011_2012 ஆம் ஆண் டில் சங்கர மடத்திற்கு ரூபாய் 3992 கோடி நன் கொடையாக வந்த விவரம் குறித்து மத்தியப் புலனாய் வுத்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது. தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரைத் தலை வராகக் கொண்டு காஞ்சி காமகோடி மடம் செயல் பட்டு வருகிறது. இம்மடத் திற்கு சொந்தமான வங்கிக் கணக்கில் 2011_2012 ஆம் ஆண்டிற்கான வரவாக ரூபாய் 3992 கோடி வைப்பு நிதியாக செலுத்தப்பட் டது. இதை காஞ்சி மடத் தின் தலைமைக் கணக் காளர் எஸ்.சிறீதர் உறுதி செய்தார்.

இதுகுறித்து மத்திய வருமான ஆய்வுக்குழுத் தலைவர் அசோக்குமார் என்பவருக்கு காஞ்சி சங் கரமடம் எழுதிய கடிதத் தில் 2011_2012 ஆம் ஆண்டு எங்களுக்கு நன்கொடை மூலம் ரூ.3992 கோடி வரு வாய் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ரூபாயை காஞ்சி மடத்தின் மூன்று வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு சரியான வரு வாய் ஆதாராமுமின்றி 3992 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், காஞ்சி சங்கர மடத்தின் நன்கொடையா ளர்கள் பட்டியலில் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் நன்கொடை கொடுத்தவர்களின் பெயர் தான் உள்ளது.

இதில் யாரும் லட்சங்கள்கூட கொடுக்கவில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டு களாக மடத்தின் கணக்கில் 15 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள் ளது.

ஆனால், திடீரென 2011_2012 ஆம் ஆண்டில் சங்கரமடத்தின்சார்பில் ஆக்ஸிஸ் வங்கி, அய்.சி. அய்.சி.அய் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்கில் 3992 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் நேரடியாக நன் கொடை பெற இயலாத நிலையில் சங்கரமடம் எப்படி கோடிக்கணக்கில் அதுவும் ஓர் ஆண்டிற்குள் நன்கொடையாக பெற்றி ருக்க முடியும்? இந்த நன் கொடையாகப் பெற்ற பணம் யாரிடமிருந்து வந்தது என்பதையும் சரிவர கணக்கில் காட்டவில்லை என்று புகாரில் கூறப்பட் டுள்ளது. இப்புகாரைக் குறித்து விசாரணை செய்து வரும் மத்திய புலனாய்வுத் துறை யின் இணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) அபிசேக் கோயல் கூறும்போது,

சங்கரமடத்தில் நடந்த இந்தப் பண மோசடி தொடர்பாக தனிப்பிரிவு அமைத்து விசாரணை செய்து வருகிறோம்.

ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள நீலகண்டாச்சாரியா ஸ்வாமிகள் மற்றும் எட்டு நபர்கள் எங்களின் விசா ரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். பெங்களூரு மற்றும் சென்னையில் பல் வேறு இடங்களில் சோதனை நடத்தியுள் ளோம். இது தொடர்பாக விஜயநகர் காவல்நிலை யத்தில் 15 பேர்மீது பண மோசடி மற்றும் தவறான வழியில் பணம் சேர்த்தல் தொடர்பான குற்றப்பிரி வில் வழக்கு பதிவு செய் துள்ளோம்.

சங்கர மடத்தில் நடக்கும் இந்த பண மோசடி சில கருப்புப் பண முதலைகளுக்கு தங்களது பணத்தை வெள்ளையாக்க உதவி புரிந்துள்ளது. அத்துடன் சங்கரமடத்திற்கும் தரகுத் தொகைக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது, என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/90183.html#ixzz3HaOqrDmr

தமிழ் ஓவியா said...

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தகவல்


டில்லி, அக்.29- பாலியல் தொழிலுக்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு பணி நேர வரையறை, ஊதியம், உடல் நலம் மற்றும் அவர்களின் குடும்பத் தினருக்கு கல்வி மற்றும் பொருளாதார மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் National Commission for Women (NCW) தலைவர் லலிதா குமாரமங்கலம் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக முறைப் படுத்தி, அத்தொழிலில் பணத்துக்காக ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றப்போவதாகவும், பாலியல் தொழிலை சட்டப்படியாக ஒரு தொழிலாக அங்கீகரிப்பதுடன், பாலியலில் ஈடுபட்ட பெண்கள் எச்.அய்.வி. நோய் மற்றும் பாலியல் நோய்களிலிருந்தும் பாதிக்கப்படு வதைக் குறைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, பெண் களுக்கான தேசிய ஆணையத்தின் சார்பில் 8.11.2014 அன்று அதிகாரமுள்ள குழுக்கூட்டம் நடைபெறும். அக்கூட்டத் தில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தை வாங்கி ஒரு தொழிலாகவும் முறைப்படுத் தப்படும். ஏராளமான பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர். சட்ட அங்கீகாரம் வழங்கியபிறகு, பாலியல் தொழிலில் கட்டாயமாகத் தள்ளப்படுவது கடும்நடவடிக்கைகளால் குறைந்துவிடும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

பாலியல் தொழில் முறைப்படுத்தப் படாமல் இருப்பதால் அத்தொழிலில் உள்ள பெண்கள் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆணு றைகள் இல்லாமல் சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. எச்.அய்.வி. மற்றும் பிற எஸ்.டி.டி. போன்ற பாலியல் நோய்கள் பரவிவிடும்.

கொல்கட்டாவில் உள்ள சோனாகச்சி (பாலியல் தொழிலுக்கான பகுதி)யில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கம் நன்றாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. வாடிக்கை யாளர்களாக வருபவர்கள் வழக்கத்துக்கு மாறாக ஆணுறைகளைப் பயன்படுத்த விரும்பாததால் நோய்களைப் பரப்புபவர் களாக உள்ளனர். பாலியல் தொழிலாக முறைப்படுத்தப்படும்போது இவை யாவும் மாற்றப்படும்.

பணிநேர வரையறை, ஊதியமுறை, உடல்நலம் ஆகியவை பாலியல் தொழி லாளர்களுக்கு வரையறுக்கப்படும். அவர்கள் குடும்பத்தாருக்கு கல்வி, பொருளாதார மாற்று ஏற்பாடுகள் உரு வாக்கப்படும். பெண்களுக்கு பாலியலைத் தவிர்த்து மற்ற பணிவாய்ப்புகளும் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திவரும் இடைத்தரகர்கள், பாலியல் முகவர்கள் ஆகியோர் பெண்களைப்பயன்படுத்தி வருகின்றனர்.

பாலியல் தொழிலாக, சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படும்போது, அவர்களுக்கு இடமில்லாமல் போகும். பெண்களுக்காகப் போராடிவருபவர்கள் பாலியல் தொழிலாக அங்கீகரிப்பதை ஏற்காமல், எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அப்னே ஆப் விமன் வேர்ல்ட்வைட் Apne Aap Women Worldwide என்னும் பாலியல் தொழிலை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஆணிவேர் போன்ற அமைப் பின் சார்பில் டிங்கு கன்னா கூறுகையில்,

பாலியல் தொழிலாக சட்ட அங்கீகாரம் அளித்தால் விபச்சாரத்தை ஊக்கப்படுத்திவிடும். எங்கள் அனுபவத் தின் அடிப்படையில் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர் களின் விருப்பமில்லாதநிலையிலும் பாலி யல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் உள்ள பெண்கள் அவர்களுக்காக மட்டும் வேலை செய் வதில்லை. அவர்களும் அத்தொழிலில் ஒருவர் என்றுதான் உள்ளனர். இடைத் தரகர்கள் தொழிலில் இருக்கிறார்கள். அவர்கள் பாலியல் தொழிலால் லாப மடைகிறார்கள். சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால், அப்பெண் களுக்காகப் பணியாற்றிவரும் நாங்கள் எங்கள் பணிகளை முடித்துக் கொள் ளுவோம். என்றார்.

உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞரும், தொண்டு நிறுவனத் தலைவருமாகிய சக்தி வாகினி ரவி காந்த் பாலியல் தொழிலை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டு மின்றி, பெண்களை பாலியல் தொழிலில் தள்ளுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனையும் அளிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறும்போது, இதுபோன்ற மோசமான சமூகக் கேட் டைக் களைவதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு சிபாரிசுகளை செய்துவந்தாலும், எந்த அரசும் உரிய நடவடிக்கையை எடுப்பதே இல்லை என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/90176.html#ixzz3HaPGxGJV

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


திண்டுக்கல், அக்.29 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குள்ளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் ரம்யா (வயது13). நிலக்கோட் டையில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலை யில் ரம்யாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த உறவுக் காரர் மகனுக்கு ரம்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட் டது. இதையடுத்து இரு வீட்டாரும் நிச்சயதார்த்தம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிய வந்தது. இதையடுத்து ஆட் சியர் வெங்கடாசலத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சிறுமி ரம்யாவுக்கு ஏற்பாடு செய் திருந்த திருமணத்தை தடுத்து நிறுத் தினர். பின்னர் ரம்யாவின் பெற் றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் துன் பங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ரம்யாவை தொடர்ந்து படிக்க வைப்பதுடன் உரிய வயது வந்தபின்னரே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது.

இதுபோன்று பழனி அருகே கீரனூரிலும் ஒரு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவ்வூரை சேர்ந்த முகமது என்பவர் மகள் மஜிதா பானுவுக்கும் (15). அதே பகுதியை சேர்ந்த முகமது உசேனுக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக் கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று மஜிதாபானுவின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

அவரின் பெற்றோருக்கும் ஆலோ சனை கூறிய அதிகாரிகள் குழந்தை களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை எழுதி வாங்கினர்.

Read more: http://viduthalai.in/page-2/90179.html#ixzz3HaPSOde6

தமிழ் ஓவியா said...

மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

- (குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/90174.html#ixzz3HaPaSImt

தமிழ் ஓவியா said...

உணவுக்குழாய் புற்றுநோயை தடுக்க உடற்பயிற்சி அவசியம்

சென்னை, அக். 29_ உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் சந்திரமோகன் தெரிவித்தார்.

கனடாவில் நடந்த சர்வதேச மாநாட்டில், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 6 பேர் 14 ஆய்வுக் கட்டு ரைகளைச் சமர்ப்பித்தனர்.

இந்த ஆய்வுக் கட்டுரை களில் முக்கியமாக பழைய சாதத்துடன் ஊறுகாய், கருவாடு, உப்புக் கண்டம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உணவுக் குழாய் புற்றுநோய் வருவ தற்கு வாய்ப்புள்ளது என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர் மருத்து வர் சந்திரமோகன் கூறிய தாவது:_ என்னுடைய தலைமையில் சென்று தான் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பித்தோம்.

உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி செய்யும் உணவு களை சாப்பிடக்கூடாது. நெருப்பில் நேரடியாக இறைச்சியை சுட்டு சாப் பிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. அதனை பின்பற்றித்தான் ஆய்வு நடத்தினோம்.

அந்த காலத் தில் பழைய சாதத்துடன் கருவாடு, ஊறுகாய் போன் றவற்றை சாப்பிட்ட மக்கள் 90, 100 வயது வரை வாழ்ந்துள்ளனர். அதற்கு முக்கிய கார ணம், அவர்களிடம் உடல் உழைப்பு அந்த அளவுக்கு இருந்தது. அதனால் அவர் களுக்கு உடலில் எவ்வித மான பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த காலத்தில் மக்களிடம் உடல் உழைப்பு இல்லை. சரியான உடற்பயிற்சியும் செய்வதில்லை.

கம்ப்யூட் டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பது, சாப் பிடுவது, தூங்குவதுமாக இருக்கின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. முக் கியமாக உடல் பருமன் நோயால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது. ஆரோக்கியமான உடலுக்கும், வாழ்விற்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/90187.html#ixzz3HaR26W5I

தமிழ் ஓவியா said...

இராமகிருஷ்ணர்

ராமகிருஷ்ண பரம ஹம்சர் பூசாரியாக இருந்த காளிகோயில் ராணி ராசாமணி என்பவருக்குச் சொந்தமானது. ராணியின் மருமகனான மதுரா னந்தா பிஸ்வாஸ் என்ப வரே தக்ஷிணேசுவரத்தில் உள்ள காளி கோவிலைக் கட்டியவர்.

ராணியின் எண்ணற்ற சொத்துகளை நிர்வாக மும் செய்துவந்தார். 1868-ஆம் ஆண்டில் அவர் காசிக்கு ஒரு புனித யாத் திரையை ஏற்பாடு செய் தார். அந்த யாத்திரைக் குழுவில் 125 அன்பர்கள் அடங்கியிருந்தனர். இந்தக் குழு முதலில் தியோகரில் தங்கி, அங் குள்ள பரமேசுவரனின் ஆலயத்திற்குச் செல்ல முடிவானது. அந்த இடத்தை அடுத்த கிராமம் ஒன்று கடும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ராம கிருஷ்ணர் அளவுக்கதிக மான துயரமும் பாதிப்பும் அடைந்தார்.

அவர் மதுரரிடம், ராணி மாதாவின் அனைத் துச் சொத்துகளுக்கும் நீங் கள்தான் நிர்வாகி. இந்த ஏழைகளுக்கு உடுத்த ஒரு ஆடையும், ஒரு வேளைச் சோறும், தலைக் குச் சிறிது எண்ணெயும் கொடுக்க ஏற்பாடு செய் யுங்கள் என்றார்.

மதுரரோ பகவானே! இந்த யாத்திரைக்குப் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த யாத்திரையில் நூற்றுக் கணக்கான அன்பர்கள் உள்ளனர். உங்கள் வேண் டுகோளை ஏற்றால் யாத்திரைக்குச் செலவு செய்ய வைத்திருக்கும் கையிருப்பு குறைந்து விடும் என்றார்.

மதுரரின் மறுமொ ழியைக் கேட்ட பரமஹம் சர் வேதனையில் கதறி னார்: மூடனே! நான் வாரணாசி வரவில்லை. இவர்களுடன் இருக்கி றேன். இவர்களுக்குக் கவலைப்பட எவரு மில்லை. நான் இவர் களை விட்டு நீங்குவதாக இல்லை என்றார்.

மதுரர் வேறு வழியின்றிப் பணிந்தார். தேவைப்பட்ட ஆடை களைக் கல்கத்தாவிலி ருந்து தருவித்தார். மேலும் பரமஹம்சர் பணித்ததை எல்லாம் செய்தார். அதன் பின்னரே யாத்திரை வார ணாசி நோக்கித் தொடர்ந் தது. இப்படி எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அவர் மனநலம் சரியில்லாதவர்!

மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட் டவர்! தன் மலத்தையே தின்றார். பிணம் தின்றார் என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன்.

(ஆதாரம்: இராமகிருஷ்ணர் வாழ்வும் கொள்கைகளும் தபஸ்யானந்தா)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/90228.html#ixzz3Hie4INrN

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கந்த சஷ்டி கவசம்

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நிலவும் இந்தக் கால கட்டத்தில் கந்த சஷ்டி கவசம் படித்தால் பாது காப்பைத் தருமாம்.

அடடே, இவ்வளவு சுலபமாக வழியிருக்கும் போது காவல்துறை ஏன்? நீதிமன்றம் ஏன்? சிறைச் சாலைதான் ஏன்? ஏன்? ஏன்?? பெண்கள் இனி வெளியில் செல்லும் பொழுதெல்லாம் கந்த சஷ்டியைப் படித்துக் கொண்டே போனால் (எதிரில் வாகனம் வந்தா லும்) எந்தச் சிக்கலும் இல்லை - அப்படித்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/90236.html#ixzz3HieRLYt1

தமிழ் ஓவியா said...

மூட நம்பிக்கை

மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதி யையும் ஆராயும்படிச் செய்து விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

- (விடுதலை, 16.10.1960)

Read more: http://viduthalai.in/e-paper/90221.html#ixzz3Hiew6HHW

தமிழ் ஓவியா said...

மெட்ராஸ் அய் எனப்படும் கண்நோய்


தற்போது நிறைய ஊர் களில் மெட்ராஸ் அய் என் றழைக்கப்படும் கண்நோய் பரவி வருகிறது.

மெட்ராஸ் அய் என்றால் என்ன?

கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் அய் எனப்படுகிறது. அடினோ வைரஸ் (Adeno virus - conjunctivitis) என்ற கிருமியே இதற்கு பெரும்பாலும் காரணம்.

பருவநிலை மாறுபாட் டால் வரும் நோய்பரப்பும் இந்த வைரஸ் சூடான, ஈரப்பதமான நிலையில் மிக வேகமாக பரவக்கூடி யது. இது காற்று மற்றும் நாம் பயன்படுத்தும் பொதுவான பொருட்கள் மூலம் (கர்சிப், துண்டு, பேனா, பென்சில், அழிப் பான், காகிதம்) பரவும் நோய் ஆகும். கை குலுக் குவதாலும் இது விரை வாக மற்றவர்களுக்குப் பரவும்.

கருப்புக் கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு. கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும்.

ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்தக் கூடாது கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனைப் படி போடவேண்டும். கண் களை கசக்கக் கூடாது.

தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும், எனவே மற்றவர் களுக்குப் பரவாமல் இருக்க இருமல் வரும் போது வாயில் துணி வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும்.

கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும், ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும்.

மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத் தடம் கொடுக்கவும்.

நேருக்கு நேர் பார்த் தால் வராது. ஆனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவானவர்களும், குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சுக் காற்று மூலம் தொற்று ஏற்படும். மெட்ராஸ் அய் வந்த வர்கள் தங்களது உடை மைகளை ஈரப்பதமில்லாத உலர்ந்த நிலையில் தூய் மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்களை ஒரே கைக்குட்டையில் மீண்டும் மீண்டும் துடைக் காமல் பேப்பர் நாப்கின் களைப் பயன்படுத்தும் போது மெட்ராஸ் அய் யின் பாதிப்பு விரைவில் குறைந்து விடுகிறது.

மெட்ராஸ் அய் வந்த வர்களுக்கு சிறப்பு உணவு என்று ஒன்றுமில்லை, எரிச்சல் அதிகம் இருந் தால் எரிச்சல் குறைவ தற்கு மருத்துவர்கள் சில நோய் எதிர்ப்பு மருந்து களைக் கொடுப்பார்கள், தூய்மையாக, கவனமுடன் இருந்தால் இரண்டு அல் லது மூன்று நாட்களில் குணமாக வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/e-paper/90267.html#ixzz3HigOtSDt

தமிழ் ஓவியா said...

நாம் சுவாசிக்க நாள்தோறும் 16 கிலோ காற்று!

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சத விகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகி தமும் உள்ளன.

நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

உடலின் மிகப்பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாது காக்கும் போர்வையாக விளங்குகிறது.

நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும். ர் மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

Read more: http://viduthalai.in/e-paper/90258.html#ixzz3Hii1RCji

தமிழ் ஓவியா said...

விழுமா விண்கல்?

உண்மையில் பூமியைத் தாக்கக்கூடிய விண்கற்கள் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால், பெருங்கேடு விளைவிக்கக்கூடிய பிரமாண்டமான விண்கற்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

டைனோசர்களை இவ்வுலகை விட்டு நீங்கச் செய்ததைப் போன்ற அசுர விண்கற்கள் 10 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விழக்கூடும். 100 மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது காணக் கிடைக்கிறது. ஆனாலும், ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட விண்கற்கள் ஒவ்வொரு நாளுமே பூமியை அடைகின்றன.

அவை மக்கள் நெருக்கம் இல்லாத பகுதிகளிலோ, கடலிலோ விழுவதால், பரபரப்பை ஏற்படுத்துவதில்லை. விண்கல் தாக்கி ஒருவர் மரண மடைவது என்பது சாலையைக் கடக்கும்போது ஏற்படும் அபாயத்தை விட குறைவானது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/90257.html#ixzz3Hii8Ai3U

தமிழ் ஓவியா said...

முதல்வகை நீரிழிவு நோய்க்கான ஆய்வில் முன்னேற்றம்

முதலாவது வகை நீரிழிவு நோயை சுகப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்மைக்காலத்தில் உலக விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட கலங்களை உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நிர்மூலம் செய்வதால் இந்த வகை நீரிழிவு வருகிறது.

இரண்டாவது வகை நீரிழிவு நோய் இதிலிருந்து வேறுபட்டது. அது பெரும்பாலும் சீரற்ற வாழ்க்கை முறையால் வருவதாகும்.

ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஆய்வுகூடத்தில் குருத்துக்கலங்களில் இருந்து பல மில்லியன் கணக்கான பீட்டா கலங்களை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.

கணையத்தில் இருக்கும் பீட்டா கலங்கள் இன்சுலினை சுரக்கின்றன. அந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

ஆனால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியானது சிலருக்கு அவர்களது கணையத்தில் உள்ள பீட்டா கலங்களை அழித்துவிடுகிறது. இதனால் அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காது போய் விடுகிறது. இதனையே டைப் 2 வகை நீரிழிவு என்கிறார்கள்.

பேராசிரியர் டவுக் மெல்ட்டன் தலைமையிலான ஹவார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு 23 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த முதலாவது வகை நீரிழிவுக்கான சிகிச்சையை கண்டுபிடிக்கும் முயற்சியை ஆரம்பித்தது.

பேராசிரியர் டவுக் அவர்களின் மகனுக்கு இந்த நோய் இருந்ததை அடுத்தே அவர் இந்த ஆராய்ச்சியை ஆரம்பித்தார். பின்னர் அவரது மகளுக்கும் இந்த நோய் வந்துவிட்டது.

நோயெதிர்ப்புச் சக்தியால் அழிக்கப்பட்ட 15 கோடி பீட்டா கலங்களுக்கு மாற்றீடான கலங்களை, குருத்துக் கல தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தயாரித்தார்.

ஒரு வகை நுட்பமான இரசாயனங்களின் கலவை, கருக்குருத்துக்கலங்களை பீட்டாக் கலங்களாக மாற்றுகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.

சோதனை எலிகளில் இந்தக் கலங்களை பரிசோதித்துப் பார்த்தபோது அவை இன்சுலினை உற்பத்தி செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அது பல மாதங்களுக்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தியது.

சாத்தியம் என்று நாம் எப்போதும் நினைத்தால், அதனை ஒரு நாள் சாத்தியமாக்கலாம் என்று தனது சோதனை குறித்து மருத்துவர் மெல்ட்டன் கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் இறுதி வெற்றியைக் காண்பதற்கு மருத்துவ ரீதியாக இன்னமும் ஒரு படி முன்னேறியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்தாலும், ''இந்தக் கண்டுபிடிப்பை முதலாவது வகை நீரிழிவு நோயை முற்றாக குணமாக்குவதற்கான திசையில் ஒரு படி முன்னேற்றமாக கருதலாமே, ஒழிய இதுதான் இறுதி தீர்வு என்று கருத முடியாது'' என்று இந்தச் சோதனைக்கு நிதி வழங்கிய தொண்டு நிறுவனமான ஜே டி ஆர் எஃப்பின் சாரா ஜோண்சன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மாற்றீடு செய்யப்படும் கலங்கள் இன்சுலினை சுரப்பதுடன், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் தாக்குதலை தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக அமைய முடியும்.

''ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை குணமாக்கலாம், ஆனால், மருத்துவ ரீதியில் அது முழுமையான வெற்றிய பெற வேண்டுமானால், அந்த மருத்தை பெருமளவில் உற்பத்தி செய்து பல லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கக் கூடிய நிலை வரவேண்டும்'' என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் குருத்துக்கல ஆய்வு விஞ்ஞானியான பேராசிரியர் கிறிஸ் மேசன் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக இந்தக் கலங்களை உடலினுள் வைத்து பராமரித்து, அவற்றின் மூலம் இன்சுலினை சுரக்கச் செய்வதற்கான வழியையும் கண்டுபிடித்தாகவேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/90257.html#ixzz3HiiEXmq0