Search This Blog

29.10.14

ஜாதி நோயைத் தீர்ப்பதற்கு பெரியார் தேவைப்படுகிறார்- கி.வீரமணி

க.ச. என்று இரண்டு எழுத்துக்களால் அன்போடு பொதுமக்களால் மதிக்கப்படும் தலைவர் பொத்தனூர் க.சண்முகம்
இதே ஊரில் நாமே முன்னின்று அவர்தம் நூற்றாண்டு விழாவையும் காண்போம்!
பொத்தனூர் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியான உரை


சென்னை, அக். 27- மிகுந்த மதிப்போடும், அன்போடும் ஊர்ப் பொதுமக்களால் க.ச. என்று அழைக்கப்படும் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் நாமே முன்னின்று இதே ஊரில் நடத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களது புதிய வளாகக் கட்டடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழு உருவச் சிலையை 4.10.2014 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து உரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:

92 வயது இளைஞர் அய்யா க.ச. அவர்கள்
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய நம்முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, இந்தப் பொத்தனூரில் கொள்கை விழா, குடும்ப விழா என்ற சிறப்பான வகையில், நடைபெறக்கூடிய இந்தப் பெரியார் சிலை, பெரியார் வளாகம், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார், சகோதரியார் சுந்தராம்பாள் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவராக இருக்கக்கூடிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்று நம்முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களால், அவர்களுடைய சொத்துக்கள் அத்தனையும் பாதுகாக்கக்கூடிய ஒரு அற்புதமான ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கிய நிலையில், அதனுடைய ஆற்றல்மிகு தலைவராக, அடக்கமும், ஆழமும், கொள்கை உறுதியும் கொண்டவராக இருக்கக்கூடிய, இந்த விழாவிற்கு அவர்தான் நாயகர் என்று குறிப்பிட்டால், அது பெருமையாக இருக்கும்.  அப்படிப் பட்ட அய்யா க.ச. என்று இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களால்,  இரண்டு எழுத்துக்களால் அறியப்படக்கூடிய  அற்புதமான நம்முடைய விழாத் தலைவர் அய்யா பெருமதிப்பிற்குரிய மானமிகு 92 வயது இளைஞர் அய்யா க.ச. அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பிலும் இந்தப் பெருமையைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியை நாங்கள் எல்லோரும் அடைகின்றோம்.

அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இதே ஊரிலே நூற்றாண்டு விழாவையும் நாமே முன்னிருந்து நடத்து வோம் என்று சொல்லி அவருக்கு இந்த சிறப்பைச் செய் கிறேன்.

நம்முடைய தலைவர் க.ச. அவர்கள், இந்த விழா அழைப்பிதழை எனக்கு நேரில் கொண்டு வந்து கொடுத் தார்கள். ஏராளமானோருக்கு இந்த அழைப்பிதழை அவர் கள் அனுப்பியிருக்கிறார்கள்.

ஒரு குடும்ப விழாவாக, கொள்கைக் குடும்ப விழாவாக...

இயக்கத்தின் திருவிழாவாக அவர்கள் இதை கொள் கைத் திருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்றும், இதை அவருடைய வாழ்நாள் லட்சியமாக பொத்தனூரில் அய்யா அவர்களுடைய சிலையை அவர்கள் திறக்க வேண்டும் என்ற ஒரு பேராசையை, வாழ்நாள் முழுவதும் அது பெரிய ஆசை - பேராசை என்று சொன்னால் வேறு ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றை செய்துகாட்ட வேண்டும் என்ற மன உறுதியோடு, இடையில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகள், வேதனைகள் இவைகளை யெல்லாம் தாண்டி இன்றைக்கு இதை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய விழாவாக, ஒரு குடும்ப விழாவாக, கொள்கைக் குடும்ப விழாவாக, இதனை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்,

இந்த விழா அழைப்பிதழை நான் பார்த்தேன்; பொதுவாக நம்முடைய தோழர்கள் இயக்கத்தை முன்னிலைப்படுத்துபவர்களே தவிர, தங்கள் குடும்பத்து உறுப்பினர்களைக்கூட முன்னிலை படுத்துவது கிடையாது. ஏனென்றால் இயக்கம்தான் அவர்களுக்கு மூச்ச, வாழ்வு என்று கருதக்கூடியவர்கள்.

அப்படி நான் இந்த அழைப்பிதழைப் பார்க்கும்பொழுது, இந்த அழைப்பிதழில் ஒரு சின்ன குறையைக் கண்டேன். அது கொஞ்சம் நெருடலாக இருந்தது என் மனதுக்கு. உடனடியாக அவரிடம் பேசவேண்டும் என்று நினைத் தேன். அதற்கொன்றும் பொருள் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில், நான் நினைத்துக்கொண்டே வந்து, அவரிடம் கேட்டேன். ஏனென்றால், இவ்வளவு பெரிய சிறப்புகள் செய்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வாழ்விணையராக இருந்து, எல்லாவகையிலும் பங்கேற்று, அவருடைய இன்ப, துன்பங்கள் அத்தனையிலும் உட னிருந்து, மறைந்த அருமைச் சகோதரியார் சுந்தராம்பாள் அம்மையார் அவருடைய சிறப்புகளும் இதில் அமைந் திருக்கவேண்டும், இவ்வளவு பெரிய விழாவில், அவரைப் பொறுத்தவரை மறைந்தும் மறையாமலும் நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்கிற உணர்வைக் காட்டவேண்டும் என்று நினைத்த நேரத்தில்தான், நான் அதனை நினைத்துக்கொண்டே வந்தேன். இந்த விழாவில் அந்த சிறப்பும்  இணைய வேண்டும். அந்தக் குறைகூட இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களி டத்தில் உரிமை எடுத்துக்கொண்டேன். ஏனென்றால், அவரைத் தலைவர் என்று நாங்கள் அழைக்கக் கூடியவர் கள். அப்படிப்பட்டவர்களிடத்தில் உரிமை எடுத்துக் கொண்டு, அம்மாவின் படத்தை எடுத்துக்கொண்டு வாருங் கள்,  இந்த விழாவில் அந்தப் படத்தையும் திறக்கவேண்டும் என்று சொன்னேன்.

உங்களுக்கு எவ்வளவு சிறப்பு செய்கிறோமோ அதேபோல, அவர்களுக்கும் சிறப்பு செய்யவேண்டும்.

ஏனென்றால், நம்முடைய நாட்டில் மகளிரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவது, இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்தில் சாதாரணமானது. ஆனால், கஷ்டத்தை முழுவதும் மகளிர்தான் அனுபவிக்கிறார்கள்.

இரண்டு பேருக்கும் சேர்த்தே போர்த்திவிடுகிறேன் என்று சொன்னார்கள்!

அதுமட்டுமல்ல, மகளிருக்கு இருக்கக்கூடிய சமயோ சிதம் இருக்கிறது பாருங்கள், அது மிகவும் அற்புதமானது. இங்கே கூட மணியம்மையார் பெயரில் இருக்கக்கூடிய மகளிர் குழு என்று மகளிர், தோழியர்கள் வந்து எனக்கு சிறப்பாடை போர்த்துவதற்கு வந்தார்கள். உடனே நான் சொன்னேன், எனக்கு வேண்டாம்; அய்யாவிற்குப் போடுங்கள் என்று சொன்னேன். ஆனால், அந்த அம்மையார் எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக இரண்டு பேருக்கும் சேர்த்தே போர்த்திவிடுகிறேன் என்று சொன்னார்கள்.

அந்த மாதிரியான சிறப்பு மகளிர் மத்தியில் எல்லோருக் கும் உண்டு என்ற முறையில், அம்மையார் சுந்தராம்பாள் அவர்கள், அய்யா அவர்களுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை, எங்களைப் போன்றவர்களும் சரி, அறிவாசான் தலைவர் தந்தை பெரியாரும் சரி, அதேபோல், அன்னை மணியம்மையாரும் சரி, அதுபோல, திராவிடர் இயக்கத் திலே, திராவிடர் கழகமாக மாறுவதற்குப் முன்பு இருந்து, இங்கே பலர் வந்திருக்கிறார்கள். பல பேச்சாளர்கள், தலைவர் எல்லோரும் பொத்தனூருக்கு வந்திருக்கிறார்கள்.

பொத்தனூர் நம்முடைய இயக்க வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பே பதிவு ஏற்பட்டதென்றால்,  அது அய்யா க.சா. அவர்கள், மாணவர் பருவந்தொட்டே அவர்கள் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டதன் விளைவாகும். நான், ஏ.பி.ஜனார்த்தனம் மற்ற நண்பர்கள் எல்லோரும் வந்திருக்கிறோம். அப்படி வருகின்ற நேரத்தில், அவருடைய வீட்டிற்கு எதிரே உள்ள அறையை அலுவலகமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உணர்வாக, கொள்கையாக...
நம்முடைய சுந்தராம்பாள் அம்மையாரையும், இந்த விழாவில் அவரையும் நினைவு கூர்வது மிகமிக அவசியம் என்ற முறையில், இவர்களைப் பாராட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், அந்த அம்மையாரின் படத் தினையும் திறந்து வைப்பது, ஒரு அற்புதமான, கழகக் கடமை என்று கருதி, அனைவரின் சார்பாகவும், அப்படத் தினைத் திறந்து வைப்பதிலும், இந்தக் குடும்பத்தின் சார்பிலும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நான் அய்யாவிடம் சொன்னதும், உடனே படத்தைக் கொண்டு வருகிறேன்; ஆமாம், எப்படியோ அது விட்டுப் போய்விட்டது என்று சொல்லி, படத்தை எடுத்து வரச் சொன்னார்கள்.

அந்த வகையில், இந்த அரங்கத்தில் அவர்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உணர்வாக, கொள்கையாக என்ற அந்த உணர்வோடு இந்தப் படத்தினைத் திறந்து வைக்கிறேன். (ஆசிரியர் அவர்கள் அம்மையார் சுந்தராம்பாள் படத்தினை திறந்து வைத்தார்).

மதிக்கத்தகுந்த பெருங்குடும்பமாக அன்றும், இன்றும், என்றும்!

இந்தப் பொத்தனூர் எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு புதிய ஊர் அல்ல. மாணவர் பருவந்தொட்டு, ஏறத்தாழ 70 ஆண்டுகாலத்திற்கு முன்பு, இந்த ஊரில் பல நாள்கள் நாங்கள் எல்லாம் தங்கியிருந்து முகாம் போட்ட ஊராகும். அய்யா சண்முகம் அவர்களுடைய இல்லத்திற்கு வராத திராவிட இயக்கத் தலைவர்களே இல்லை; தொண்டர்களும் அதேபோலத்தான். அவருடைய அன்பு என்பது, வற்றாத அன்பு. அவருடைய வாழ்க்கை என்பது பல்வேறு மேடு பள்ளங்களை சந்தித்த வாழ்க்கை.

இயல்பான மதிக்கத்தகுந்த பெருங்குடும்பமாக அன்றும், இன்றும், என்றும் இருக்கக்கூடிய ஒரு குடும்பம் என்றால், அது அய்யா அவர்களுடைய பொத்தனூர் க.சண்முகம் அவர்களுடைய பெருங்குடும்பமாகும்.
அருமையாக, வழக்குரைஞர் காமராசர் அவர்கள் சொன்னார்; அவருடைய சிறப்புகளைப்பற்றி. நான் நினைத்துக் கொண்டிருந்தேன்; அவர் சொல்லிவிட்டார். ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள்.

அவருடைய இல்லமே ஒரு பண்ணை. அதிலிருந்து வளர்ந்த இளைஞர்கள் ஏராளம்!
இந்த ஊரினுடைய இயல்பிற்கு மாறாக, நம்பவே முடியாத அளவிற்கு கொஞ்ச நாள்களுக்கு முன்பு ஜாதிக் கலவரம் வந்தது. அதைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். வந்திருக்கக்கூடாது, நம்ப முடியாது; ஏனென்றால், அவ்வளவு நல்ல அன்பாகப் பழகக்கூடிய மக்கள் உள்ள ஊர் இது. இங்கே யாரும் கொள்கைக்காக சண்டை போடு பவர்கள் கிடையாது. எவ்வளவுதான் கொள்கையாளர் களாக இருந்தாலும், அவர்கள் சொல்லியதுபோல், முழுக்க முழுக்க திராவிட இயக்கப் பண்ணையாகத்தான் அவர்கள் வளர்த்தார்கள். அவருடைய இல்லமே ஒரு பண்ணை. அதிலிருந்து வளர்ந்த இளைஞர்கள் ஏராளம். அவர் வயது முதிர்ந்தவர் என்றாலும், வயதானவர்களும் அவரிடத்தில் மரியாதை காட்டுவார்கள்; அதேபோல், இளைஞர்களைப் பார்த்தீர்க ளேயானாலும், அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருப் பார்கள். அதுதான் அவருடைய தனித்தன்மையாகும். சில நேரங்களில், இளைஞர்களிடையே, இளைஞராக இருப்பார்; மாணவர்களிடையே மாணவராக அவர்கள் இருப்பார். அதேபோல்தான், மற்ற நேரங்களில் முதியவர்களும், வயதானவர்களும் எல்லோருமே அவரை மதிப்பார்கள்.
உள்ளூர்க்காரர்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆகவே, மிகப்பெரிய அளவில் அவர் மதிக்கக்கூடியவராக இருப்பார். அதுதான் சிறப்பானது.

நீங்கள் தான் நிரந்தரமாகத் தலைவர், துணைத் தலைவரா?
இப்பொழுதுதானே போட்டிகள், ஊராட்சித் தேர்தலில் போட்டியெல்லாம் இருக்கிறது. இந்தப் பொத்தனூர் ஊராட்சி மன்றத்திற்கு என்ன சிறப்பு என்றால் நண்பர்களே, அய்யா குப்பையாண்டி பிள்ளை அவர்கள் காங்கிரஸ்காரர். தந்தை பெரியார் அவர்களிடத்தில் மிகுந்த மரியாதை உடையவர். அவர் 35, 40 ஆண்டுகளுக்குமேல் அவர்தான் தலைவர். அதேபோல், துணைத் தலைவர் என்றால், அய்யா க.ச.தான். நாங்கள் எல்லாம் அவரிடம் வேடிக்கையாகக் கேட்போம், என்னங்க, நீங்கள் தான் நிரந்தரமாகத் தலைவர், துணைத் தலைவரா? இங்கே மாற்றமே கிடையாதா! என்று கேட்போம்.
அவர் உடனே, இல்லீங்க, நாங்கள் வேண்டாம் என்றாலும், யாரும் விடுவதில்லை என்று சொல்வார்.


எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பார்கள். அய்யா அவர்கள் வந்தால், அவருடைய இல்லத்தில்தான் தங்கு வார். மற்ற வசதிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். அம்மா சுந்தராம்பாள் படத்திறப்புக்கு ஒரு காரணம் என்னவென்றால், அந்த அம்மையார் எங்களுக்கெல்லாம் சமைத்துப் போட்டு, அன்பு காட்டி, விருந்தளித்து உபசரித்திருக்கிறார்.

எனவே, இந்த ஊரில் இருக்கின்ற அத்துணை பேரும், இவருடைய மாமா அவர்கள், மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடியவர். அவர் சைவப் பழம் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்ப் பாட்டு, தமிழ் புலவராக இருந்தவர். எங்களிடம் அளவு கடந்த அன்பு காட்டுபவர். நூறாண்டைத் தாண்டி வாழ்ந்தவர்.

சிறந்த ஒழுக்கவாதி என்பதற்கான அடையாளம்தான், நம்முடைய அய்யா க.ச.
அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு அன்பு பாராட்டுப வர்கள். திருவாசகத்திலிருந்து எல்லாவற்றையும் பேசுவார். அய்யா அவர்களிடம் எல்லாக் கட்சிக்காரர்களும், எல்லாக் கருத்துள்ளவர்களும் வந்து பேசுவார்கள். அய்யாவை மதிப்பார்கள்; அய்யாவை பொதுத் தலைவராக நினைப் பார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், இவருடைய ஒழுக்கம்; அதுதான் மிக முக்கியம்.

ஒரு நல்ல நாத்திகர் என்பவர், நல்ல சுயமரியாதைக்காரர் என்பவர், சிறந்த ஒழுக்கவாதியாக இருப்பார் என்பதற்கான அடையாளம்தான், நம்முடைய அய்யா க.ச. அவர்கள். இந்த இயக்கத்திலே மற்றவர்கள் சேருவதற்குரிய பக்குவம் அவர்களுக்கு வருகிறதா, இல்லையா என்பது அவர் களைப் பொறுத்தது. ஏனென்றால், அவரவர்கள் தங்களுக் குள் சிறிய வட்டம் போட்டிருப்பார்கள். ஓகோ, இதிலே இருப்பதற்கு நமக்குத் தகுதியில்லை என்று நினைப்பார்கள். ஏனென்றால், இவ்வியக்கத்தில் இருந்தால், மிகவும் கட்டுப் பாடாக இருக்கவேண்டும். இவ்வியக்கத்தில் இருந்தால், ஒழுக்கத் தவறுகளுக்கு இடம் இல்லாமல் இருக்கவேண்டும்.


இந்த இயக்கத்தினுடைய பெருமை, பெரியார் கொள்கையினுடைய சிறப்பு!

அதையும்தாண்டி, இவ்வளவு இளைஞர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்திருக்கிறார்களே, இவ்வளவு கசப்பு மருந்துகளை சாப்பிடுபவர்கள், இந்த இயக்கத்தினுடைய பெருமை, பெரியார் கொள்கையினுடைய சிறப்பு என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆக, அந்த மாதிரியாக இருக்கக்கூடியவர்கள்கூட, அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களைப் பார்த்து, இந்த இயக்கத்தைப் பார்த்து, அவ்வளவு பெருமையாக நினைப் பார்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு, மிகப்பெரிய அள விற்கு, இந்த சுற்றுவட்டாரத்தில், வேலூராக இருந்தாலும், அதே மாதிரி சுற்றுவட்டாரத்தில் அவருக்கு நண்பர்களாக இருக்கக்கூடியவர்கள். காமராசர் அவர்களுடைய தந்தையார் ஆச்சிக்கண்ணு என்று அழைக்கப்படக்கூடிய அய்யா பழனிமுத்து அவர்கள், அதேபோல், தவுட்டுப் பாளையம் பகுதிகளில், கச்சிப்பாளையம் கணபதி அவர்கள், இப்படி ஒவ்வொரு துறையைப் பார்த்தீர்களேயானால், பல பேர் சுற்றுவட்டாரங்களில் அவர்களுடைய பெருமையை நினைத்து, மிகப்பெரிய அளவிற்கு சொல்வார்கள்.
க.சண்முகம் வந்திருக்கிறாரா? கு.சண்முகம் வந்திருக்கிறாரா? எனக்கு பல நினைவுகள் வருகின்றன; அதைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த ஊரில், அய்யாவைப் பார்க்க வரும்பொழுது, சண்முகம் வந்திருக்கிறார் என்று புலவர் இமயவரம்பன் சொல்வார். உடனே அய்யா அவர்கள், எந்த சண்முகம் வந்திருக்கிறார்? க.சண்முகம் வந்திருக்கிறாரா? கு.சண்முகம் வந்திருக்கிறாரா? என்று கேட்பார்.

இரண்டு சண்முகமும் பார்த்தீர்களேயானால், இரட்டை யர் போல வருவார்கள்.
அவருடைய நிலை என்பது வேறு; இவருடைய பக்குவம் வேறு.
எனக்கு நன்றாக ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது.

என்னிடம் அவர் எப்பொழுதும் வருத்தப்பட்டது இல்லை. என்னுடைய திருமணத்திற்கே அவர்தான் நோட் புத்தகத்தில் அன்பளிப்புப் பட்டியல் எழுதியவர். திருச்சி பெரியார் மாளிகையில் அது இருக்கிறது. என்னுடைய வாழ்நாளில் அவருடைய பங்களிப்பு எப்போதும் இருக் கிறது. எனது திருமணத்திற்கு, அவர் காண்டேகர் புத்த கத்தை எனக்கு அளித்தார். அந்தப் புத்தகமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அவ்வளவு சிறப்பாக, மாணவர் பருவத்திலிருந்தே என்னிடம் சிறப்பாக இருக்கக்கூடிய வர்கள்.

நான் விடுதலை ஆசிரியர் பொறுப்புக்குச் சென்றவுடன் 1962ஆம் ஆண்டு, நான் சென்னை அடையாறில் அப் பொழுதுதான் குடியேறினேன். அப்பொழுது க.ச.வும், கு.ச.வும், அவருடைய தம்பி டாக்டர் ஆறுமுகம் எங்களு டன் திராவிடர் மாணவர் கழகத்தில் இருந்தவர். நம்முடைய மறைந்த ஆறுமுகம், ரமணி அவர்கள், வீரப்பா அவர் களுடைய மகள்.
அவர்கள் வந்தபொழுது என்ன செய்தார்கள் நண்பர்களே, இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். அப்பொழுது எனக்கு வயது குறைவாக இருந்த சூழ்நிலையில், யாராக இருந்தாலும் எதாவது வாங்கி வந்து கொடுத்தால், ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் இந்தப் பொறுப்பில் இருக்கிறோம். ஏன் என்றால், அதற்கு முன்பு பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இவருக்கு இதைக் கொடுத்தால் சரிப்படுத்தலாம், அதைக் கொடுத்தால் சரிப்படுத்தலாம் என்று நினைக்கின்ற சூழ்நிலைகள் எல்லாம் இருந்தன.

அய்யா அவர்கள் வாங்கிக் கொள்ளமாட்டார்; அதை மறுத்துவிடுவார்
அந்தச் சூழ்நிலையில்,  நான் அந்த உறுதியை மேற் கொண்டிருந்தேன். சாதாரணமாக யாராவது பழம், வாங்கிக் கொடுத்தால் அய்யா வாங்கிக் கொள்வார். ஆனால், பரிந்துரை என்று வரும்பொழுது, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்றால், அதனை அய்யா அவர்கள் வாங்கிக் கொள்ளமாட்டார்; மறுத்துவிடுவார்.

தலைவர் எவ்வழியோ, தொண்டன் அவ்வழியே! அவ்வளவுதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. அந்த உறுதியோடு நான் இருந்த நேரத்தில், இவர்கள் வந்து சேர்ந்தார்கள்; வழக்கமாக நம்மிடம் அன்பு காட்டுபவர்கள்; குடும்ப நண்பர்கள். அவர்கள் பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வந்து கொடுத்ததும், நான் உடனே, மன்னிக்கவேண்டும், நான் பிஸ்கெட் பாக்கெட் வாங்குவதில்லை, அதை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள் என்று சொன்னேன்.

அய்யா அவர்கள் மிகவும் அடக்கமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பார். இவராவது கொஞ்சம் பொறுத்துக் கொள்வார்; ஆனால், கு.ச. அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார். அவரைப் பற்றி உங்களுக்கெல்லாம்கூட தெரியும்.

கு.ச. எழுதிய கடிதம்!
பிறகு, அவர் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை இன்னும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன், குடும்பத்து நண்பர்கள் என்ற முறையில்தான், அன்பிற்காக மட்டும்தான்  நாங்கள் அந்த பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்தோம்; ஆனால், நீங்கள் அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லியதும் எங்களுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. நாங்கள் உங்களிடம் எதையும் எதிர்பார்த்து அதைக் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

உடனே என்னுடைய துணைவியார் அவர்கள், என்னங்க இவ்வளவு மனம் புண்பட்டு எழுதியிருக்கிறார் களே, நீங்கள் விளக்கம் சொல்லவேண்டாமா? சமாதானம் செய்யவேண்டாமா? என்று சொன்னார்கள்.

அப்படியில்லை. எனக்கு சில நேரங்களில் ஒரு முரட்டுத் தனமான சிந்தனை. அவர்களைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், அது நியாயம்தான். ஒரு சிறு ஓட்டையை நாம் சில நேரங்களில் உருவாக்கி விட்டோமேயானால், அந்த ஓட்டை மெல்ல மெல்ல பெரிதாகி, பிறகு யானையே உள்ளே நுழைந்து, வெளியே வரக்கூடிய நிலைக்கு ஆளாகிவிடும். ஆகவே, அந்த மாதிரியான வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். பிறகு அவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

பிறகு, நாங்கள் வழக்கம்போல, சரியாகிவிட்டோம். எதற்காக இதை சொல்லுகிறேன் என்றால், அவ்வளவு நெருக்கமான ஒரு சூழ்நிலை. எனக்கு எவ்வளவுதான் பணிகள் இருந்தாலும், அவருடைய இந்த விழா தள்ளிப் போகக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியம்.

கொள்கை உறவுக்காரர்களையெல்லாம் ஒன்றாக சேர்க்கவேண்டும் என்கிற உணர்வுஇந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்ததும்; அதில் அய்யா சிலையை வைக்கவேண்டும்; அதைப் பெரிய விழாவாக நடத்தவேண்டும். இயக்கத் தோழர்கள், ஊர்ப் பிரமுகர்கள், நண்பர்கள், குடும்பத்தவர்கள், உறவுக்காரர்கள், கொள்கை உறவுக்காரர்களையெல்லாம் ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற உணர்வு இருக்கிறது பாருங்கள், அந்த உற்சாகம்; ஆகவே, அதற்கு இடந்தரவேண்டும் என்பதற்காகத்தான், இப்படிப்பட்ட ஒரு நல்ல விழா இங்கே அமைந்திருக்கிறது. அவருடைய பிறந்த நாளான 90 ஆம் ஆண்டு விழாவினை மிகப்பெரிய அளவிற்கு, இங்கே உள்ள பள்ளிக்கூடத்தில் சிறப்பாகச் செய்தோம். இன்றைக்கு அடுத்த விழாவாக, அதற்குப் போனஸ் விழாவாக நடத்துவதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒரே தலைவர்; ஒரே கொள்கை; ஒரே கொடி!
திருச்சியிலுள்ள நேஷனல் கல்லூரி அது ஒரு அக்கிரகார கல்லூரி அது. அப்படிப்பட்ட ஒரு கல்லூரியில் அவர்கள் படித்த காலத்திலிருந்து இங்கே நண்பர்கள் சொல்லியதுபோல், இந்தக் கொள்கையில் அவர் எந்தக் காலகட்டத்திலும், 70 ஆண்டுகாலத்திற்கு மேலாக, பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள், அன் றைக்கு அணிந்த அதே கருப்புச் சட்டை; அதே கொள்கை; அதே கொடி; அதே தலைமை என்று வந்ததோடு மட்டு மல்ல, என்னைவிட  அவர் பத்து வயது அதிகமானவர்.
ஆனால், அமைப்பு முறையில், இந்த இயக்கத்தை நடத்தவேண்டும் என்கிறபோது, அவருடைய கட்டுப்பாடு உணர்ச்சி; என்ன சொல்கிறோமே அதைக் கேட்டுத்தான் அதன்படி நடப்பார். இந்த இயக்கத்திற்குப் பெருமையே அதுதான். இங்கே மூத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வயதால் மூத்தவர்கள்; அறிவால் மூத்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், ஒரு ராணுவ கட்டுப்பாடு என்று சொன்னால் என்ன? பெரியாரின் தனி மனித ராணுவம் இருக்கிறதே, அது ராணுவக் கட்டுப்பாட்டினையும் தாண்டிய ஒன்று என்ற அளவிலேதான், இங்கே நம்முடைய கருப்புச் சட்டைத் தோழர்கள் சிறப்பாக இருப்பார்கள்.
             --------------------------தொடரும்  -  "விடுதலை”   27-10-2014

 *******************************************

 இரட்டை வாழ்க்கை முறை இல்லாததே பகுத்தறிவு!
பொத்தனூர் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, அக். 28- பகுத்தறிவு என்றால் அங்கு இரட்டை வாழ்க்கை என்பது அறவே கிடையாது - அத்தகு

வாழ்வுக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர் கழகத் தோழர்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமானபொத்தனூர் க.சண்முகம் அவர்களது புதிய வளாகக் கட்டடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழு உருவச்சிலையை 4.10.2014 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு

கருப்புச் சட்டைக்கு இப்பொழுது இருக்கிற மரியாதை என்ன என்று தெளிவாகத் தெரியும். கருப்புச் சட்டைபோடாத கட்சிக்காரர்களே கிடையாது இப்பொழுது. யாருக்காவது நெருக்கடி ஏற்பட்டால், அவர்களுக்குக்
கைகொடுக்கின்ற ஒரே சட்டை கருப்புச் சட்டைதான். தந்தை பெரியார் கொடுத்த கருப்புச்சட்டை. மிச்சம் மீதிஇருப்பவர்கள் அய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள், அவர்களும் கருப்புச் சட்டை.

நீதி வழங்கவேண்டுமா? வழக்குரைஞர்களா? நீதிமன்றமா? அங்கேயும் கருப்புதான். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. எனவே, கருப்புடை தரித்தோர் உண்டு; நறுக்கியே திரும்ப நாட்கள் என்று சொன்ன மாதிரி,
அறிவாயுதமாக தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்!

இன்றைக்குக் கருப்புச் சட்டையினுடைய மதிப்பு, அந்தக் கொள்கையினுடைய மதிப்பு என்பது இருக்கிறதே, அதுஒரு பெரிய பயர் பேக்டர் மாதிரி இருக்கும். மூச்சுத் திணறும்பொழுதெல்லாம், ஆக்சிஜனைக் கொடுப்பதுபோல்
உள்ளது. நெருக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமா? அல்லது யாருக்காவது எச்சரிக்கைகொடுக்கவேண்டுமா? அதற்கெல்லாம் இந்தக் கருப்புச் சட்டைதான் பயன்படும் என்று சொல்லக்கூடிய
அளவிற்கு, ஒரு பெரிய அறிவாயுதமாக தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, அந்த சட்டையை க.ச. அவர்கள் எத்தனைஆண்டுகாலமாக அணிந்துகொண்டிருக்கிறார். சுயமரி யாதை இயக்கம், நீதிக்கட்சி, அந்தக் காலத்தில் இருந்தவர்கள்; பிறகு, சேலத்தில் திராவிடர் கழகமாக மாற்றியமைக்கப் பட்ட காலத்திலிருந்து, எத்தனையோ சலசலப்புகள்,எத் தனையோ புயல்கள்; எத்தனையோ பிரிவுகள்; இயக்கத்தில் இருந்தவர்களின் துரோகங்கள் இவையெல்லாம்இயக்கத்தில் வந்திருக்கின்றன. ஆனால், நம்முடைய தலைவர் அவர்கள், கொஞ்சம்கூட சிறு சபலத்திற்கோ,சலனத்திற்கோ ஆளாகாதவர். அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், அவர்களை அடையாளங்கண்டு,பிரிக்கப்படாத சேலம் மாவட்டத் தலைவராக, பிறகு அம்மா அவர்கள் அடை யாளங்கண்டு, அவர்களைமிகப்பெரிய அளவிற்கு, அறக் கட்டளைக்கு ஆயுட்கால உறுப்பினராக, பிறகு இன்றைக்கு அந்தஅறக்கட்டளையின் தலைவராக உயர்ந்துள்ளதற்கு, அவர்களின் நாணயம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதுதான்

முக்கியம்.

அவர்களுக்கு வந்த சோதனை, சாதாரணமான சோத னைகள் அல்ல. ஒரு கட்டத்தில் அவருடைய துணைவியாரை இழந்த ஒரு கட்டம்; அதேபோல், உடல்நிலையில் சில சங்கடங்கள் ஏற்பட்ட ஒரு கட்டம்; அதுபோல்,
வேறு சில பிரச்சினைகள், வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள், சில சம்பவங்கள் நடைபெறுவது மிகவும்சாதாரணமானது. ஆனால், எதிலும் அவர் தன்னுடைய நிதானத்தையோ, முதிர்ச்சியையோ இழக்கவில்லை.

இதுதான் ஒரு நல்ல பகுத்தறிவுவாதி, சிறந்த சுயமரியாதைக்காரன், உயர்ந்த பெரியார் தொண்டன் என்பதற்குஇலக்கணம். எனவே, அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு நல்லபடிப்பினை. இளைஞர்கள் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும். தாய்மார்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

முன்னாள் சுயமரியாதைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?

சில நேரங்களில் என்ன செய்வார்கள், இந்த இயக்கத் திற்கு என்ன பெருமை? இந்தக் கொள்கைக்கு என்னபெருமை என்று சொன்னால், பதவிக்கு வேண்டுமானால், முன்னாள் என்று சொல்லலாம்; முன்னாள் அமைச்சர்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்று பதவிக்கு வேண்டுமானாலும்போட்டுக் கொள்ளலாம். ஆனால், முன்னாள் சுயமரியாதைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?

முன்னாள் கொள்கைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா? என்று நன்றாக நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும்.

அந்த வகையில்தான், எத்தனையோ நண்பர்கள், அவர்களிடத்தில் பழகியவர்களின் நீண்ட பட்டியல் உண்டு.

அவர்களோடு இருந்தவர்கள் உண்டு; மறைந்தவர்கள் உண்டு. ஆனாலும், அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு,ஒரு கொள்கைக்கு எழுச்சிமிகுந்த ஒரு நிலைப்பாட்டிலிருந்து, தன்னை மாற்றிக் கொள்ளாதவராக,உறுதிப்பாட்டில் நிலைத்தவராக இருக்கிறார்.

ஆகவே, அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும். அவருடைய வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.

கடவுள் மறுப்பாளர்கள் கெட்டுப் போவார்கள். பெரியாரிடத்தில் சென்றவர்கள் எல்லாம் அழிந்துபோய்விடுவார்கள். இந்தக் கட்சிக்காகவே உழைத்தார்; ஒன்றுமில்லாமல் போய்விட்டார் என்று சில பேர்சொல்வார்கள். கட்சிக்காக யாராவது உண்மையாகப் பாடுபட்டிருந்தால், ஒன்றுமில்லாமல் போய் இருக்க

முடியாது. ஒன்றுமில்லாதவர்கள் நன்றாக வளர முடியும். ஏனென்றால், பெரியாருடைய வாழ்வியல் இருக்கிறதே, அது வரவுக்கு உட்பட்டு செலவழி! யோக்கியமாக இரு! நாணயமாக இரு! குறுக்கு வழியில் போகாதே!

மிக முக்கியமாக, ஏதாவது தவறு செய்திருந்தால், தண்டனையை அனுபவிக்கவேண்டும்! தண்டனையைக் கண்டுபயப் படாதே! தண்டனையிலிருந்து தப்பவேண்டும் என்று நினைக்காதே என்பதுதான் தந்தை பெரியாருடையவாழ்வியல் முறையாகும். வாழ்க்கை முறை என்பது இருக் கிறதே, சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்றுசொன்னார்.

திருவள்ளுவரின் திருக்குறள்களின் அடிப்படை அதுதான்.

எற்றென்று இரங்குவ செய்யற்க மற்றன்ன செய்யாமை நன்று - என்ற ஒரு குறள் உண்டு.அக்குறளின் கருத்து என்னவென்றால், இப்படிப்பட்ட காரியத்தை செய்யாதே! அந்தக் காரியத்தை செய்யாமல்இருப்பது நல்லது! அப்படி செய்துவிட்டால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்பதுதான்வள்ளுவர் குறளின் பொருள்.

அந்த அடிப்படையில், சுயமரியாதை வாழ்வு, சுகவாழ்வு என்று சொல்வதன் அடிப்படை என்ன?

அந்த சுயமரியாதை வாழ்க்கையில் எல்லோரும் தவறு செய்வோம்; தவறே செய்யவில்லை என்று யாரும்சொல்ல முடியாது. ஆனால், அந்தத் தவறை செய்தாலும்கூட, தங்களைத் திருத்திக் கொண்டு வாழவேண்டும்.

திருத்துவது என்பதும், திருத்தத்தின்மூலமாக உயர்வு என்பதும், மிகப் பெரிய வாழ்க்கையினுடைய அற்புதமானவிளைச்சல்கள். அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

பழமொழியல்ல; இப்பொழுது புது மொழி!

அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், உன்னுடைய நண்பர் யார் என்று சொல்; நீயார் என்று நான் சொல்கிறேன் என்று.
ஆனால், இப்பொழுது அப்படியில்லை, நீ இருக்கின்ற இயக்கம் எதுவென்று சொல்; நீ யார் என்று நான் சொல்கிறேன் என்பதுதான்.

எனவே, இது ஒரு அற்புதமான விழாவாகும். அறிவா சான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடையசிலையை இங்கே நிறுவவேண்டும் என்று அவர்கள் நினைத்தது, தன்னுடைய தலைவன் என்கிற மரியாதைக்காக
மட்டு மல்ல; இந்தப் பக்கத்தில் செல்கிறபொழுது, பெரியார் அவர் களுடைய சிலையைப் பார்க்கும்பொழுது,கம்பீரமாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவருக்கு வாழ்விணையராக மட்டுமல்ல, இந்த

இயக்கத் தையே காப்பாற்றியவர்களாக, அன்னை நாகம்மையாரும், அன்னை மணியம்மையார் அவர்களும்இருவரும் உறு துணையாக இருந்தது இருக்கிறதே, இதைவிட சுயமரி யாதை இயக்கத்தினுடைய சிறந்த

வெற்றிக்கு யார் அடித் தளமாக இருந்தார்கள் என்று காட்டுவதற்கு, இந்த கொள்கை வெற்றிக்கு, தியாகத்திற்குஎவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டாலும், அவர்களோடு நின்றவர்களுக்கு என்ன என்பதுதான், இந்தப்

பெரியார் வளாகத்தின் கீழே நின்று அந்த சிலையைப் பார்த்தால் தெரியும்.

அண்ணா அவர்கள் சொன்னார்!

அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார். பெரியாருடைய ஒரு போர் முறை. மிகவும் அற்புதமானது.பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு சகாப்தம்; அவர் ஒரு காலகட்டம்; அவர் ஒரு திருப்பம்

என்றெல்லாம் சொன்ன அண்ணா அவர்கள்,

மற்றவர்களுடைய போர் முறைக்கும், பெரியாருடைய போர் முறைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. மற்றவர்களுடைய போர் முறை என்பது, கண்களுக்கு எதிரே உள்ள எதிரிகளோடுதான் போராடுவார்கள். ஆனால்,

பெரியாருடைய பகுத்தறிவுப் போர் முறை இருக்கிறதே, கண்ணுக்கு அப்பாற்பட்டு, கண்களுக்குத் தெரியாதஎதிரிகளையும் அழிக்கக்கூடிய அளவிற்கு அவர்களுடைய போர் முறை இருக்கும்.

மூலபலம் எங்கிருக்கிறது என்று தெரிந்து, அதனை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று

மிகத்தெளிவாகச் சொன்னார்.

யாராவது வந்து உதவி என்று கேட்டால், உடனடியாக செய்வார் அய்யா க.ச.!

இந்தப் பகுதிகளில் அப்படிப்பட்ட தோழர்கள் ஏராளம். அவர்களெல்லாம் தொண்டாற்றினார்கள். உதாரணமாக,நம்முடைய கொம்புப்பாளையம் கே.கே.பொன்னப்பா போன்றவர்கள் உள்பட எத்தனையோ பேர் தலைவரிடத்

தில் வருவார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய உழைப்பு மிகப்பெரிய அளவிற்கு, அய்யா அவர்களுடையசிறப்பு, அய்யா அவர்களிடம் இவர் காட்டிய அன்பு, அதுமட்டு மல்ல, யார் அழைத்தாலும், நம்முடையதலைவர் அவர்கள் அய்யா காலமாக இருந்தாலும் சரி, அன்னை மணியம் மையார் காலமாக இருந்தாலும் சரி,தன்னிடம் யாராவது வந்து உதவி என்று கேட்டால், உடனடியாக செய்வார். எதைப்பற்றியும்கவலைப்படமாட்டார்.

அப்படிப்பட்ட அளவிற்கு, மற்றவர்களும் வாழவேண் டும்; மற்றவர்களும் சிறப்பாக இருக்கவேண்டும் என்றுநினைப்பவர்கள். வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத் துணைப் பேரும் பயன்படவேண்டும் என்று நினைப்பவர்.
இந்தப் பகுதிக்கு நான் வரும்பொழுது இந்த நிலையில், அய்யாவினுடைய கொள்கைகள் எவ்வளவு தேவைஎன்பதை வழக்குரைஞர் காமராசர் சொன்னார்.

செய்தித்தாளைப் பார்த்து வேதனைப்பட்டேன்! 

இன்று காலையில் பத்திரிகையில் நான் ஒரு செய்தியைப் பார்த்து வேதனைப்பட்டேன். இங்கேசுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு கோவிலில், தலையில் தேங்காய் உடைப்பது; சாட்டையால் அடிப்பது; குழந்தை

இல்லையென்றால் இதுபோல் செய்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன்.

இப்பொழுதுதான் எங்கே பார்த்தாலும், Fertility Center என்று உருவாக்கி வைத்திருக்கிறார்களே! ஆணிடம்குறை இருக்கிறதா? பெண்ணிடம் குறை இருக்கிறதா? செயற்கை முறையில் கரு தரிக்கவேண்டுமா?
இதை எவ்வளவு காலத்திற்குமுன்பு சொல்லியிருக் கிறார், இனி வருங்காலத்தில் ஆண், பெண் சேர்க்கைஇல்லாமல் குழந்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று. அது இன்றைக்கு நடைமுறையில் வந்திருக்கிறதா,

இல்லையா!

வளர்ப்புத் தாய் என்றுதான் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், இப்பொழுது வாடகைத்தாய்என்று சொல்கின்ற நிலைமை வந்திருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் இனிவரும் உலகம்!

இதை அய்யா அவர்கள், 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே, இனிவரும் உலகம் என்ற நூலில், இனிமேல்

உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அதனுடைய அடிப்படையை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், அறிவியல் உலகமே வியக்கக்கூடிய அளவிற்கு,அவர் சொல்லியது அத்தனையும் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. உடனே, தந்தை பெரியாரை, தீர்க்கதரிசி,

அவதாரம் என்று நாங்கள் சொல்லமாட்டோம்.

பெரியார் சொன்னார், முழுப் பகுத்தறிவை வைத்து சிந்தித்துப் பார்; உன்னுடைய பகுத்தறிவை தாராளமாக விடு;

இதுவரையில்தான் பகுத்தறிவு, இதற்குமேல் பகுத் தறிவை விடாதே! கடவுளா? கேள்வி கேட்காதே! மதமா?கேள்வி கேட்காதே! சாஸ்திரமா? கேள்வி கேட்காதே! இவற் றுக்கெல்லாம் தடை போட்டார்கள். அந்த
இடத்தில்தான் தந்தை பெரியாருடைய உழைப்பு, யார் சொன்னாலும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்னசொல்லுகிறதோ அதன்படி நட! அறிவுக்கு மட்டும் மரியாதை கொடு என்று சொன்னார். அப்படிசொன்னவர்கள், இவ்வளவு தெளி வாகச் சொன்னவர்கள் மூன்று பேர்தான்.

புத்தர்

ஒன்று, புத்தர்; 2600 ஆண்டுகளுக்கு முன்பாக சொன்னார். அவர் தெளிவாகச் சொன்னார், முன்னோர்கள்நடந்தார்கள் என்பதற்காக நீ நடக்கவேண்டும் என்று அவசியம் அல்ல. முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக, நீ நம்பவேண்டும் என்று அவசியம் அல்ல. முன் னோர்கள் பேசினார்கள் என்பதற்காக, அதனை ஏற்கவேண்டும் என்று அவசியம் இல்லை. உன்னுடைய அறிவு, பகுத்தறிவு என்ன சொல்கிறது என்று பார் என்றார்.

திருவள்ளுவர்

இரண்டாவதாக, வள்ளுவர்; வள்ளுவரும் அதையே தானே சொல்லியிருக்கிறார்,

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு

வள்ளுவர் இந்தக் குறளைச் சொல்லியிருக்கிறாரே, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றுகேட்டார்,

தந்தை பெரியார்

பெரியார் சொன்னார், வள்ளுவரே சொல்லியிருக் கிறாரே, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதே! ஏற்றுக்கொள்ளவேண்டியதை ஏற்றுக்கொள்! உன் அறிவு ஏற்றுக்கொள்ளுமா? அதுவரையில் செய் என்று தெளி வாகச்சொன்னார்.

ஆகவே, இப்படி எல்லாத் துறைகளிலும் பார்த்தீர்களே யானால், பகுத்தறிவு, அந்தப் பகுத்தறிவு சிந்தனைமட்டும் நம் நாட்டில் இருந்தால், மக்களுடைய வாழ்க்கைத் தரமாக இருந்தால், இப்படி தலையில் தேங்காய்
உடைப்பார்களா? மூளை இருக்கின்ற பகுதி அது. வேகமாக தேங்காயை உடைத்தால் என்னாகும்? அதனுடையபாதிப்பை மருத்து வர்கள் சொல்வதையெல்லாம் ஊடகங்களில் பேட்டி எடுத்து வெளியிடுகிறார்கள். ஆனாலும்,மீண்டும் மீண்டும் அங்கே சென்று, அதே செயலையே செய்கிறார்கள். பெண் களை சாட்டையை எடுத்துஅடிப்பது என்றால்,  எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாகும்!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று சொன்னபொழுது, பெரியாரிடம் ஆத்திரப்பட் டார்களே, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்தீர்களேயானால், காட்டுமிராண்டிகளா? இல்லையா? இது நாகரிகமானவர்கள் கடவுளை கும்பிடுகிற முறையா இது

என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை வாழாதே! இரட்டை வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை வாழாதே! என்று சொல்வதுதான் பகுத்தறிவு. எதைப்

பேசுகிறாயோ, அதனைத்தான் செய்யவேண்டும். எதை செய்கிறாயோ, அதனைத்தான் சொல்லவேண்டும் என்பதுதான்.

ஆனால், நம் நாட்டில் இரட்டை வாழ்க்கை முறைகூட அல்ல, மூன்று முறையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளிலிருந்து, லேட்டஸ்ட் அய்யப்பன் சாமி வரையில்இருக்கக்கூடிய இந்தக் காலகட்டம்வரையில், இந்த நாட்டில் எவ்வளவு தூரம் இருக்கிறார்கள் என்று சொன்னால்,
இவர்கள் நினைப்பது ஒன்று; சொல்வது இன்னொன்று; செய்வது அதைவிட வேறு. ஆகவே, மூன்று வகையானவாழ்க்கை முறையை வாழுகிறார்கள்.

இதுபோல் இல்லாமல், நாங்கள் எதை சொல்கிறோமோ, அதை செய்கிறோம்; எதை செய்கிறோமோ, அதையேசொல்கிறோம். இவை அத்தனையும் நிறைந்த வாழ்க்கை தான், பெரியார் கண்ட பகுத்தறிவு நெறி என்ற
மிகப்பெரிய சுயமரியாதை வாழ்க்கை. பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்!

பெரியாருக்காக நாம் அதை யாரும் ஏற்கவேண்டிய அவசியமில்லை. இன்னமும் பெரியார் தேவையா என்றுசிலர் கேட்கிறார்கள். அதற்குத்தான் இந்தச் சம்பவங்கள் எல்லாம் உதாரணமாகும். பெரியார் எப்பொழுதும்

தேவைப்படுவார்.

இன்னமும் மருந்துக் கடைகள் தேவையா? என்று மருந்து கடைகளை மூடிவிட முடியுமா?  இன்னமும்மருத்துவக் கல்லூரிகள் தேவையில்லை. மருத்துவர்கள் உருவாகத் தேவையில்லை என்று யாராவது சொல்ல

முடியுமா?

நீண்ட காலமாக அம்மை நோய் இருந்தது; அதனை அறவே ஒழித்துவிட்டோம் என்று சொல்லி,மருத்துவர்களே தேவையில்லை என்று சொல்ல முடியுமா?

அந்த நோயை ஒழித்துவிட்டால், புதிதாக இன்னொரு நோய் வருகிறது. இப்பொழுது எபோலா என்ற புதியநோய் ஒன்று வந்திருக்கிறது. பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், நம்மூரில் பதவிக் காய்ச்சல் ஆகவே

இதுபோன்ற பல வகையான காய்ச்சல்கள் இருக்கின்ற சூழ்நிலையில், இவ்வளவுக்கும் மருந்து பெரியார் என்றமாமருந்து.

மருந்து எதற்காக? மருந்தை கண்டுபிடித்தவருக்கு மரியாதை காட்டுவதற்காகவா? ஏங்க மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், மருந்துக் கடையை திறந்து வைத்திருக்கிறாரே, மருந்து சாப்பிடாவிட்டால் அவர்

வருத்தப்படுவாரே என்பதற்காகவா? அல்ல, நம்முடைய நோயைத் தீர்ப்பதற்காக!

அதுபோல், அறியாமை நோயைத் தீர்ப்பதற்கு, ஜாதி நோயைத் தீர்ப்பதற்குத்தான் பெரியார் தேவைப்படுகிறார்.தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஒரு முதலமைச்சருக்கே இந்தக் கொடுமை!

பீகாரில் ஒரு முதலமைச்சராக இருக்கக்கூடிய தாழ்த்தப் பட்டவர் கோவிலில் சாமி கும்பிட்டார் என்பதற்காக,அவர் சென்றதும் அந்தக் கோவிலை கழுவி விடுகிறார்களே?

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் கழுவி விடுகிறான்; அவன்தான், மோடிக்கு முன்பாகவே, சுத்தப்படுத்து கின்ற வேலையை ஆரம்பித்துவிட்டான். மோடி
துடைப் பத்தை எடுத்தார்; அவன் தண்ணீர்க் குடத்தை எடுத்தான்.

ஆகவேதான், ஜாதி, தீண்டாமை, மனிதர்கள் ஒருவருக் கொருவர் எட்டி நிற்கவேண்டும் என்று சொல்வது,வேற்றுமை காட்டுவது, படிப்பு இன்னாருக்குத்தான் சொந்தம் என்று சொல்வது, இவற்றையெல்லாம் மாற்றியபெருமை யாரைச் சார்ந்தது என்றால், இதோ சிலையாக நிற்கிறாரே, அவர் தந்த சீலத்தினுடைய நெறிகள்தான்என்று போவோர், வருவோர் எல்லோருமே உயர்ந்து பார்த்து, தந்தை பெரியாருடைய சிலையைப் பார்த்து

பாடம் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

மற்றபடி, நீங்கள் எதை வேண்டிக்கொண்டாலும், ஒரு சுற்று சுற்றிவந்தால் நடைபெற்றுவிடும் என்று சொல்வதற்காக இந்த சிலையை வைக்கவில்லை.

பெரியாருடைய கொள்கைக்கு ஒரு நல்ல பிரச்சாரமாக அமைந்த விழா இது!

எனவேதான், நண்பர்களே, இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சியை, ஒரு நல்லகுடும்ப விழாவாக மட்டுமே இருக்கக்கூடிய நிகழ்ச்சியை, ஒரு குடும்பத்தினுடைய நிகழ்ச்சியாக மட்டும் ஆக்கிக்கொள்ளாமல், கொள்கைத் திருவிழாவாக மாற்றி, அதன் மூலம் மீண்டும் பெரியாருடைய கொள்கைக்கு ஒருநல்ல பிரச்சாரத்தை அமைக்கவேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்த நம்முடைய க.ச. அவர்களுக்கும்,செங்குட்டுவன் அவர்களுக்கும், மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக் கின்ற அத்துணை குடும்பத்து
உறுப்பினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், எல்லோருக்கும் என்னுடைய மனமுவந்த பாராட்டுதல்களையும்,நன்றிகளையும் தெரிவித்து விடை பெறுகிறேன். வணக்கம்!

அய்யா க.ச. அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்துவோம்!

மீண்டும் இந்த ஊரில் நூற்றாண்டு விழாவை அவருக்கு நடத்துவோம், கொண்டாடுவோம் என்றநம்பிக்கையோடு, நூற்றாண்டு விழா என்பது இப்பொழுது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏனென்றால்,
இப்பொழுது மருத்துவ முறை களும், கண்டுபிடிப்புகளும் வேகமாக வளர்ந்துகொண்டு, வந்துகொண்டிருக்கின்றகாலம்; அந்த நம்பிக்கையோடு விடைபெறுவோம்! நன்றி,வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                    -----------------------”விடுதலை” 28-10-2014
Read more: http://viduthalai.in/page-4/90135.html#ixzz3HUiKjkbL

13 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


1932 இல் காஞ்சி பெரியவாள் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி தஞ்சாவூரிலிருந்து காசிக்கு நடந்தே போனாராம். ஆறு மாதம் நடந்தாராம். எவ்வளவோ கேட்டுக் கொண்டும், மறுபடியும் நடந்தே திரும்பினாராம்.

அப்படியென்றால், விமானத்தில் பறந்து திரி யும் ஜெயேந்திர சரஸ்வதி சாஸ்திரத்தை மீறியவர் ஆகவில்லையா!

நடந்து போனவரும் ஜெகத்குரு, விமானத்தில் பறப்பவரும் ஜெகத்குரு தானா?

என்னே, பார்ப்பனப் பற்று!

தமிழ் ஓவியா said...


மதவாதம் - அறிஞர்களின் மவுனம் ஆபத்தானது!

வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் எச்சரிக்கை!

புதுடில்லி, அக்.29_- மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப் படுவது குறித்தும், மதச் சார்பின்மை அடிப்படை யிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்பவேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற் புறுத்தினார். புதுடில்லியில் நிகில்சக் கரவர்த்தி நினைவு அறக் கட்டளை சார்பில், கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? -இதுதான் இப்போதைய கேள்வி என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

முன்பை விட இப் போது ஏராளமான அறி ஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக் கப்படும்போதுகூட அவர் கள் மவுனம் சாதிக்கின் றனர். ஏனெனில் அவர் கள் சர்ச்சையற்ற முறை யில் இயங்க விரும்புகின் றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின் றனர் என்று அவர் குறிப்பிட்டார்.பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர் கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத் தப்பட்டு ஒடுக்கப்பட்ட னர். தற்போது இந்துத் துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத் தனை பேரும் மார்க்சிஸ்ட் டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படு கின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப் பிட்டார்.

பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப் பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக் கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்கவேண்டும் என் றார்.

மவுன சாட்சியாகி விடுகின்றனர்

இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்.

அதிகாரத்தில் உள்ளவர் கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சி யாகி விடுகின்றனர் என் றார் அவர்.

மதச்சார்பற்ற கோட் பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய் யப்படுகின்றன. பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன.

மத மற்றும் அரசியல் தலை யீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சு வதால்தான் சிறு எதிர் வினையைகூட செய்வ தற்கு இவர்கள் தயங்கு கின்றனர் என்று குறிப் பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக் களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படு கிறது. அறிஞர்கள் இத் தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறி வுத்தளத்தில் போர்புரிய வேண்டும். ஆனால், இதுமிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட் டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90194.html#ixzz3HaOgZcvR

தமிழ் ஓவியா said...

பேயை விரட்ட பிரார்த்தனையாம் குமரியில் இளம்பெண் சாவு!


கன்னியாகுமரி, அக்.29- குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள சாலூர் பகுதியைச் சேர்ந்த ரூபனின் மனைவி சுபிதா (வயது 27) உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சுபிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் உடல் நிலை சரியாகாததால் அவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என சந்தேகப்பட்டு காட்டா விளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அவரை தங்கவைத்து ஜெபம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜெபக்கூட வளாகத்தில் தீயில் உடல் கருகிய நிலையில் சுபிதா பிணமாகக் கிடந்தார். இந்தத் தகவல் அறிந்ததும் பொது மக்கள் கடையாலு மூடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சுபிதாவின் உடல் அருகே மண்ணெண்ணெய் கேன் இருந்தது. அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

பேய் என்பது இல்லாத ஒன்று. பேய் அந்தப்பெண்ணுக்கு (சுபிதா) பிடித்திருப்பதாகக் கூறி அந்த பெண்ணை ஜெபக்கூட்டத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். ஜெபக்கூட்டங்களுக்குச் சென்றால் நோய் குணமாகி விடுமா?

பேய், ஜெபக்கூட்டம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்பாமல் உரிய முறையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்திருந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம். மூடநம்பிக்கை என்ற பெயரால் அந்தப் பெண் சாகடிக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. இனியாவது திருந்துவார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/90191.html#ixzz3HaP0NmVg

தமிழ் ஓவியா said...

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தகவல்


டில்லி, அக்.29- பாலியல் தொழிலுக்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு பணி நேர வரையறை, ஊதியம், உடல் நலம் மற்றும் அவர்களின் குடும்பத் தினருக்கு கல்வி மற்றும் பொருளாதார மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் National Commission for Women (NCW) தலைவர் லலிதா குமாரமங்கலம் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக முறைப் படுத்தி, அத்தொழிலில் பணத்துக்காக ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றப்போவதாகவும், பாலியல் தொழிலை சட்டப்படியாக ஒரு தொழிலாக அங்கீகரிப்பதுடன், பாலியலில் ஈடுபட்ட பெண்கள் எச்.அய்.வி. நோய் மற்றும் பாலியல் நோய்களிலிருந்தும் பாதிக்கப்படு வதைக் குறைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, பெண் களுக்கான தேசிய ஆணையத்தின் சார்பில் 8.11.2014 அன்று அதிகாரமுள்ள குழுக்கூட்டம் நடைபெறும். அக்கூட்டத் தில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தை வாங்கி ஒரு தொழிலாகவும் முறைப்படுத் தப்படும். ஏராளமான பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர். சட்ட அங்கீகாரம் வழங்கியபிறகு, பாலியல் தொழிலில் கட்டாயமாகத் தள்ளப்படுவது கடும்நடவடிக்கைகளால் குறைந்துவிடும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

பாலியல் தொழில் முறைப்படுத்தப் படாமல் இருப்பதால் அத்தொழிலில் உள்ள பெண்கள் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆணு றைகள் இல்லாமல் சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. எச்.அய்.வி. மற்றும் பிற எஸ்.டி.டி. போன்ற பாலியல் நோய்கள் பரவிவிடும்.

கொல்கட்டாவில் உள்ள சோனாகச்சி (பாலியல் தொழிலுக்கான பகுதி)யில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கம் நன்றாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. வாடிக்கை யாளர்களாக வருபவர்கள் வழக்கத்துக்கு மாறாக ஆணுறைகளைப் பயன்படுத்த விரும்பாததால் நோய்களைப் பரப்புபவர் களாக உள்ளனர். பாலியல் தொழிலாக முறைப்படுத்தப்படும்போது இவை யாவும் மாற்றப்படும்.

பணிநேர வரையறை, ஊதியமுறை, உடல்நலம் ஆகியவை பாலியல் தொழி லாளர்களுக்கு வரையறுக்கப்படும். அவர்கள் குடும்பத்தாருக்கு கல்வி, பொருளாதார மாற்று ஏற்பாடுகள் உரு வாக்கப்படும். பெண்களுக்கு பாலியலைத் தவிர்த்து மற்ற பணிவாய்ப்புகளும் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திவரும் இடைத்தரகர்கள், பாலியல் முகவர்கள் ஆகியோர் பெண்களைப்பயன்படுத்தி வருகின்றனர்.

பாலியல் தொழிலாக, சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படும்போது, அவர்களுக்கு இடமில்லாமல் போகும். பெண்களுக்காகப் போராடிவருபவர்கள் பாலியல் தொழிலாக அங்கீகரிப்பதை ஏற்காமல், எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அப்னே ஆப் விமன் வேர்ல்ட்வைட் Apne Aap Women Worldwide என்னும் பாலியல் தொழிலை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஆணிவேர் போன்ற அமைப் பின் சார்பில் டிங்கு கன்னா கூறுகையில்,

பாலியல் தொழிலாக சட்ட அங்கீகாரம் அளித்தால் விபச்சாரத்தை ஊக்கப்படுத்திவிடும். எங்கள் அனுபவத் தின் அடிப்படையில் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர் களின் விருப்பமில்லாதநிலையிலும் பாலி யல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் உள்ள பெண்கள் அவர்களுக்காக மட்டும் வேலை செய் வதில்லை. அவர்களும் அத்தொழிலில் ஒருவர் என்றுதான் உள்ளனர். இடைத் தரகர்கள் தொழிலில் இருக்கிறார்கள். அவர்கள் பாலியல் தொழிலால் லாப மடைகிறார்கள். சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால், அப்பெண் களுக்காகப் பணியாற்றிவரும் நாங்கள் எங்கள் பணிகளை முடித்துக் கொள் ளுவோம். என்றார்.

உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞரும், தொண்டு நிறுவனத் தலைவருமாகிய சக்தி வாகினி ரவி காந்த் பாலியல் தொழிலை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டு மின்றி, பெண்களை பாலியல் தொழிலில் தள்ளுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனையும் அளிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறும்போது, இதுபோன்ற மோசமான சமூகக் கேட் டைக் களைவதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு சிபாரிசுகளை செய்துவந்தாலும், எந்த அரசும் உரிய நடவடிக்கையை எடுப்பதே இல்லை என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/90176.html#ixzz3HaPGxGJV

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


திண்டுக்கல், அக்.29 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குள்ளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் ரம்யா (வயது13). நிலக்கோட் டையில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலை யில் ரம்யாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த உறவுக் காரர் மகனுக்கு ரம்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட் டது. இதையடுத்து இரு வீட்டாரும் நிச்சயதார்த்தம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிய வந்தது. இதையடுத்து ஆட் சியர் வெங்கடாசலத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சிறுமி ரம்யாவுக்கு ஏற்பாடு செய் திருந்த திருமணத்தை தடுத்து நிறுத் தினர். பின்னர் ரம்யாவின் பெற் றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் துன் பங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ரம்யாவை தொடர்ந்து படிக்க வைப்பதுடன் உரிய வயது வந்தபின்னரே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது.

இதுபோன்று பழனி அருகே கீரனூரிலும் ஒரு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவ்வூரை சேர்ந்த முகமது என்பவர் மகள் மஜிதா பானுவுக்கும் (15). அதே பகுதியை சேர்ந்த முகமது உசேனுக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக் கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று மஜிதாபானுவின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

அவரின் பெற்றோருக்கும் ஆலோ சனை கூறிய அதிகாரிகள் குழந்தை களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை எழுதி வாங்கினர்.

Read more: http://viduthalai.in/page-2/90179.html#ixzz3HaPSOde6

தமிழ் ஓவியா said...

மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

- (குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/90174.html#ixzz3HaPaSImt

தமிழ் ஓவியா said...

உணவுக்குழாய் புற்றுநோயை தடுக்க உடற்பயிற்சி அவசியம்

சென்னை, அக். 29_ உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் சந்திரமோகன் தெரிவித்தார்.

கனடாவில் நடந்த சர்வதேச மாநாட்டில், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 6 பேர் 14 ஆய்வுக் கட்டு ரைகளைச் சமர்ப்பித்தனர்.

இந்த ஆய்வுக் கட்டுரை களில் முக்கியமாக பழைய சாதத்துடன் ஊறுகாய், கருவாடு, உப்புக் கண்டம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உணவுக் குழாய் புற்றுநோய் வருவ தற்கு வாய்ப்புள்ளது என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர் மருத்து வர் சந்திரமோகன் கூறிய தாவது:_ என்னுடைய தலைமையில் சென்று தான் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பித்தோம்.

உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி செய்யும் உணவு களை சாப்பிடக்கூடாது. நெருப்பில் நேரடியாக இறைச்சியை சுட்டு சாப் பிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. அதனை பின்பற்றித்தான் ஆய்வு நடத்தினோம்.

அந்த காலத் தில் பழைய சாதத்துடன் கருவாடு, ஊறுகாய் போன் றவற்றை சாப்பிட்ட மக்கள் 90, 100 வயது வரை வாழ்ந்துள்ளனர். அதற்கு முக்கிய கார ணம், அவர்களிடம் உடல் உழைப்பு அந்த அளவுக்கு இருந்தது. அதனால் அவர் களுக்கு உடலில் எவ்வித மான பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த காலத்தில் மக்களிடம் உடல் உழைப்பு இல்லை. சரியான உடற்பயிற்சியும் செய்வதில்லை.

கம்ப்யூட் டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பது, சாப் பிடுவது, தூங்குவதுமாக இருக்கின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. முக் கியமாக உடல் பருமன் நோயால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது. ஆரோக்கியமான உடலுக்கும், வாழ்விற்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/90187.html#ixzz3HaR26W5I

தமிழ் ஓவியா said...

இராமகிருஷ்ணர்

ராமகிருஷ்ண பரம ஹம்சர் பூசாரியாக இருந்த காளிகோயில் ராணி ராசாமணி என்பவருக்குச் சொந்தமானது. ராணியின் மருமகனான மதுரா னந்தா பிஸ்வாஸ் என்ப வரே தக்ஷிணேசுவரத்தில் உள்ள காளி கோவிலைக் கட்டியவர்.

ராணியின் எண்ணற்ற சொத்துகளை நிர்வாக மும் செய்துவந்தார். 1868-ஆம் ஆண்டில் அவர் காசிக்கு ஒரு புனித யாத் திரையை ஏற்பாடு செய் தார். அந்த யாத்திரைக் குழுவில் 125 அன்பர்கள் அடங்கியிருந்தனர். இந்தக் குழு முதலில் தியோகரில் தங்கி, அங் குள்ள பரமேசுவரனின் ஆலயத்திற்குச் செல்ல முடிவானது. அந்த இடத்தை அடுத்த கிராமம் ஒன்று கடும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ராம கிருஷ்ணர் அளவுக்கதிக மான துயரமும் பாதிப்பும் அடைந்தார்.

அவர் மதுரரிடம், ராணி மாதாவின் அனைத் துச் சொத்துகளுக்கும் நீங் கள்தான் நிர்வாகி. இந்த ஏழைகளுக்கு உடுத்த ஒரு ஆடையும், ஒரு வேளைச் சோறும், தலைக் குச் சிறிது எண்ணெயும் கொடுக்க ஏற்பாடு செய் யுங்கள் என்றார்.

மதுரரோ பகவானே! இந்த யாத்திரைக்குப் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த யாத்திரையில் நூற்றுக் கணக்கான அன்பர்கள் உள்ளனர். உங்கள் வேண் டுகோளை ஏற்றால் யாத்திரைக்குச் செலவு செய்ய வைத்திருக்கும் கையிருப்பு குறைந்து விடும் என்றார்.

மதுரரின் மறுமொ ழியைக் கேட்ட பரமஹம் சர் வேதனையில் கதறி னார்: மூடனே! நான் வாரணாசி வரவில்லை. இவர்களுடன் இருக்கி றேன். இவர்களுக்குக் கவலைப்பட எவரு மில்லை. நான் இவர் களை விட்டு நீங்குவதாக இல்லை என்றார்.

மதுரர் வேறு வழியின்றிப் பணிந்தார். தேவைப்பட்ட ஆடை களைக் கல்கத்தாவிலி ருந்து தருவித்தார். மேலும் பரமஹம்சர் பணித்ததை எல்லாம் செய்தார். அதன் பின்னரே யாத்திரை வார ணாசி நோக்கித் தொடர்ந் தது. இப்படி எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அவர் மனநலம் சரியில்லாதவர்!

மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட் டவர்! தன் மலத்தையே தின்றார். பிணம் தின்றார் என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன்.

(ஆதாரம்: இராமகிருஷ்ணர் வாழ்வும் கொள்கைகளும் தபஸ்யானந்தா)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/90228.html#ixzz3Hie4INrN

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கந்த சஷ்டி கவசம்

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நிலவும் இந்தக் கால கட்டத்தில் கந்த சஷ்டி கவசம் படித்தால் பாது காப்பைத் தருமாம்.

அடடே, இவ்வளவு சுலபமாக வழியிருக்கும் போது காவல்துறை ஏன்? நீதிமன்றம் ஏன்? சிறைச் சாலைதான் ஏன்? ஏன்? ஏன்?? பெண்கள் இனி வெளியில் செல்லும் பொழுதெல்லாம் கந்த சஷ்டியைப் படித்துக் கொண்டே போனால் (எதிரில் வாகனம் வந்தா லும்) எந்தச் சிக்கலும் இல்லை - அப்படித்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/90236.html#ixzz3HieRLYt1

தமிழ் ஓவியா said...

மூட நம்பிக்கை

மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதி யையும் ஆராயும்படிச் செய்து விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

- (விடுதலை, 16.10.1960)

Read more: http://viduthalai.in/e-paper/90221.html#ixzz3Hiew6HHW

தமிழ் ஓவியா said...

மெட்ராஸ் அய் எனப்படும் கண்நோய்


தற்போது நிறைய ஊர் களில் மெட்ராஸ் அய் என் றழைக்கப்படும் கண்நோய் பரவி வருகிறது.

மெட்ராஸ் அய் என்றால் என்ன?

கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் அய் எனப்படுகிறது. அடினோ வைரஸ் (Adeno virus - conjunctivitis) என்ற கிருமியே இதற்கு பெரும்பாலும் காரணம்.

பருவநிலை மாறுபாட் டால் வரும் நோய்பரப்பும் இந்த வைரஸ் சூடான, ஈரப்பதமான நிலையில் மிக வேகமாக பரவக்கூடி யது. இது காற்று மற்றும் நாம் பயன்படுத்தும் பொதுவான பொருட்கள் மூலம் (கர்சிப், துண்டு, பேனா, பென்சில், அழிப் பான், காகிதம்) பரவும் நோய் ஆகும். கை குலுக் குவதாலும் இது விரை வாக மற்றவர்களுக்குப் பரவும்.

கருப்புக் கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு. கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும்.

ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்தக் கூடாது கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனைப் படி போடவேண்டும். கண் களை கசக்கக் கூடாது.

தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும், எனவே மற்றவர் களுக்குப் பரவாமல் இருக்க இருமல் வரும் போது வாயில் துணி வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும்.

கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும், ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும்.

மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத் தடம் கொடுக்கவும்.

நேருக்கு நேர் பார்த் தால் வராது. ஆனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவானவர்களும், குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சுக் காற்று மூலம் தொற்று ஏற்படும். மெட்ராஸ் அய் வந்த வர்கள் தங்களது உடை மைகளை ஈரப்பதமில்லாத உலர்ந்த நிலையில் தூய் மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்களை ஒரே கைக்குட்டையில் மீண்டும் மீண்டும் துடைக் காமல் பேப்பர் நாப்கின் களைப் பயன்படுத்தும் போது மெட்ராஸ் அய் யின் பாதிப்பு விரைவில் குறைந்து விடுகிறது.

மெட்ராஸ் அய் வந்த வர்களுக்கு சிறப்பு உணவு என்று ஒன்றுமில்லை, எரிச்சல் அதிகம் இருந் தால் எரிச்சல் குறைவ தற்கு மருத்துவர்கள் சில நோய் எதிர்ப்பு மருந்து களைக் கொடுப்பார்கள், தூய்மையாக, கவனமுடன் இருந்தால் இரண்டு அல் லது மூன்று நாட்களில் குணமாக வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/e-paper/90267.html#ixzz3HigOtSDt

தமிழ் ஓவியா said...

நாம் சுவாசிக்க நாள்தோறும் 16 கிலோ காற்று!

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சத விகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகி தமும் உள்ளன.

நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

உடலின் மிகப்பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாது காக்கும் போர்வையாக விளங்குகிறது.

நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும். ர் மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

Read more: http://viduthalai.in/e-paper/90258.html#ixzz3Hii1RCji

தமிழ் ஓவியா said...

முதல்வகை நீரிழிவு நோய்க்கான ஆய்வில் முன்னேற்றம்

முதலாவது வகை நீரிழிவு நோயை சுகப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்மைக்காலத்தில் உலக விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட கலங்களை உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நிர்மூலம் செய்வதால் இந்த வகை நீரிழிவு வருகிறது.

இரண்டாவது வகை நீரிழிவு நோய் இதிலிருந்து வேறுபட்டது. அது பெரும்பாலும் சீரற்ற வாழ்க்கை முறையால் வருவதாகும்.

ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஆய்வுகூடத்தில் குருத்துக்கலங்களில் இருந்து பல மில்லியன் கணக்கான பீட்டா கலங்களை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.

கணையத்தில் இருக்கும் பீட்டா கலங்கள் இன்சுலினை சுரக்கின்றன. அந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

ஆனால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியானது சிலருக்கு அவர்களது கணையத்தில் உள்ள பீட்டா கலங்களை அழித்துவிடுகிறது. இதனால் அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காது போய் விடுகிறது. இதனையே டைப் 2 வகை நீரிழிவு என்கிறார்கள்.

பேராசிரியர் டவுக் மெல்ட்டன் தலைமையிலான ஹவார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு 23 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த முதலாவது வகை நீரிழிவுக்கான சிகிச்சையை கண்டுபிடிக்கும் முயற்சியை ஆரம்பித்தது.

பேராசிரியர் டவுக் அவர்களின் மகனுக்கு இந்த நோய் இருந்ததை அடுத்தே அவர் இந்த ஆராய்ச்சியை ஆரம்பித்தார். பின்னர் அவரது மகளுக்கும் இந்த நோய் வந்துவிட்டது.

நோயெதிர்ப்புச் சக்தியால் அழிக்கப்பட்ட 15 கோடி பீட்டா கலங்களுக்கு மாற்றீடான கலங்களை, குருத்துக் கல தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தயாரித்தார்.

ஒரு வகை நுட்பமான இரசாயனங்களின் கலவை, கருக்குருத்துக்கலங்களை பீட்டாக் கலங்களாக மாற்றுகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.

சோதனை எலிகளில் இந்தக் கலங்களை பரிசோதித்துப் பார்த்தபோது அவை இன்சுலினை உற்பத்தி செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அது பல மாதங்களுக்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தியது.

சாத்தியம் என்று நாம் எப்போதும் நினைத்தால், அதனை ஒரு நாள் சாத்தியமாக்கலாம் என்று தனது சோதனை குறித்து மருத்துவர் மெல்ட்டன் கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் இறுதி வெற்றியைக் காண்பதற்கு மருத்துவ ரீதியாக இன்னமும் ஒரு படி முன்னேறியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்தாலும், ''இந்தக் கண்டுபிடிப்பை முதலாவது வகை நீரிழிவு நோயை முற்றாக குணமாக்குவதற்கான திசையில் ஒரு படி முன்னேற்றமாக கருதலாமே, ஒழிய இதுதான் இறுதி தீர்வு என்று கருத முடியாது'' என்று இந்தச் சோதனைக்கு நிதி வழங்கிய தொண்டு நிறுவனமான ஜே டி ஆர் எஃப்பின் சாரா ஜோண்சன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மாற்றீடு செய்யப்படும் கலங்கள் இன்சுலினை சுரப்பதுடன், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் தாக்குதலை தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக அமைய முடியும்.

''ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை குணமாக்கலாம், ஆனால், மருத்துவ ரீதியில் அது முழுமையான வெற்றிய பெற வேண்டுமானால், அந்த மருத்தை பெருமளவில் உற்பத்தி செய்து பல லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கக் கூடிய நிலை வரவேண்டும்'' என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் குருத்துக்கல ஆய்வு விஞ்ஞானியான பேராசிரியர் கிறிஸ் மேசன் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக இந்தக் கலங்களை உடலினுள் வைத்து பராமரித்து, அவற்றின் மூலம் இன்சுலினை சுரக்கச் செய்வதற்கான வழியையும் கண்டுபிடித்தாகவேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/90257.html#ixzz3HiiEXmq0