Search This Blog

18.5.13

கிரீமிலேயர் தேவையா? மெத்தப் படித்த நிதி அமைச்சர் சிதம்பரம் உணர்வாரா?

கிரீமிலேயர் தேவையா? 
 
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் பொழுது பொருளாதார அளவுகோல் என்ற நிபந்தனையை (Creamy Layer) உச்சநீதிமன்றம் புதிதாகத் திணித்தது. (16.11.1992)

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் காணப்படாத அளவுகோல் இது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally Backward Classes of Citizens) இட ஒதுக்கீட்டைப் பற்றித்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

நீதிமன்றங்களின் வேலை அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டவைகளைக் காப்பாற்றுவது தானே தவிர, அவற்றை உடைப்பதல்ல; மத்திய அரசோ, மாநில அரசோ சில சட்டங்களை இயற்றும்போது - அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று பேனாவை உளியாக்கிச் செதுக்கும் உச்சநீதிமன்றம், சமூகநீதிப் பிரச்சினை என்று வரும்பொழுது மட்டும் அரசமைப்புச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்ப்புரை வழங்குவது எந்த வகையில் நியாயமோ?

மண்டல் குழு தொடர்பான வழக்கில்தான்  உச்சநீதி மன்றம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தப் பொருளாதார அளவுகோலைப் புகுத்தியது -
தொடக்கத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் அந்தத் தொகை             உயர்த்தப்பட்டு வந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தொகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.
கிராமப்புற மக்களுக்கு ரூ.9 லட்சம், நகர்ப்புற மக்களுக்கு ரூ.12 லட்சம் என்று உயர்த்தப்பட வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது.

ஆனால் கடந்த ஒரு வருடமாக, இந்தப் பிரச்சி னையில் முடிவு செய்யப்படாமல் இழுபறியாக இருந்து வந்திருக்கிறது. அமைச்சர்களின் குழு ஒன்று அமைக் கப்பட்டு அதன் பரிசீலனைக்கு இந்தப் பிரச்சினை விடப்பட்டது.
கடைசிக் கடைசியாக இதரப் பிற்படுத்தப்பட்டோ ருக்கு ஆண்டு வருவாய் ரூ.6 லட்சம் என்று இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் குழுவில் மாறுபட்ட கருத்துகள் இருந்ததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இது நிலுவையில் இருந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் என்.நாராயணசாமி, வீரப்ப மொய்லி, வயலார் ரவி போன்றவர்கள் 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளனர்.

உயர் ஜாதியினரும், சில தொங்கு சதைகளும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சொன்னதைப் புறந் தள்ளி விட்டனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக் கூடிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்களே முட்டுக் கட்டையாக இருந்துள்ளனர் என்பது வேதனைக் குரியதாகும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை விடக் கருத்துச் சொல்ல யாருக்குத் தகுதி உண்டு?

கிரீமிலேயரின் தொகையை உயர்த்தினால் பிற் படுத்தப்பட்டோரில் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று வக்கீல் வாதம் (?) செய்துள்ளார் நிதி அமைச்சர்.
ஓர் உண்மையை மெத்தப் படித்த நிதி அமைச்சர் உணர்வாரா? அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற மத்திய அரசின் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் நுழையக் கூடிய நிலையில் உள்ளவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சி இது.

பிற்படுத்தப்பட்டோர்களில் ஓரளவு வளர்ந்தவர்கள் தாம் இது போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் நுழையும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அவர்களையும் வெளியில் தள்ளி விட்டால், அதன் நிலை என்ன? பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியாகி, அந்த இடங்கள் முழுவதும் உயர் ஜாதியினரின் வயிற்றில் அறுத்துக் வைக்கப்படும் என்பதுதானே யதார்த்த நிலை?

சமூக நீதி பிறந்த தமிழ்நாட்டு மண்ணில் பிறந்து வளர்ந்த சிதம்பரம் போன்றவர்களுக்கு இந்தப் பால பாடம்கூடத் தெரியவில்லையா? அல்லது தெரிந்திருந்தும் உயர் ஜாதி வட்டார மனப்பான்மையின் தாக் கத்துக்கு ஆளானதால் இவ்வாறு நடந்து கொள்கிறாரா?


தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச் சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட வருமான வரம்பு ஆணையால் 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன் முதலாகத் தோல்வியைத் தழுவியது - எம்.ஜி.ஆர் அவர்களின் அ.இ.அ.தி.மு.க.;  அதிலி ருந்தாவது தமிழ் மண்ணின் மனப்பான்மை (Soil Psychology) என்னவென்று தெரிந்திருக்க வேண்டாமா சிதம்பரம் போன்றவர்களுக்கு?

சமூகநீதியில் உண்மைத் துடிப்பு உள்ள காமராசர் போன்றவர்கள்தாம் மக்கள் தலைவராக உயர முடிந்தது என்பதை சிதம்பரங்கள் உணர்ந்தால் நல்லது. இல்லையெனில் மக்கள் எதிர்ப்பு வெள்ளத்தில் சிக்கிட வேண்டிய பரிதாப நிலைதான்!

நான்கு வருடத்துக்கு ஒருமுறை பொருளாதார அளவுகோலை மாற்றியமைப்பதைவிட, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்தக் கிரீமிலேயரைத் தூக்கி எறிவதுதான் சரியாக இருக்கும் என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
                     ----------------------"விடுதலை” தலையங்கம் 17-5-2013

58 comments:

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால் சில சிந்தனைகள் கிரிக்கெட்(டு) எனும் போதை

கிரிக்கெட் போதையை - சூதாட்டத்தை எதிர்த்து, வரும் 24ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது.

வேறு யாரும் கிரிக்கெட்மீதான திமிரும் போதையை எதிர்த்துக் கருத்துக்களைக் கூற முன் வராத நிலையில், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் போராட்டத்தையே அறிவித்துள்ளார்.

சூதாட்டம் எப்படியெல்லாம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதற்கு அடுக்கடுக்காக ஆதாரப் பூர்வமான செய்திகள் நாளேடுகளில் வெளி வந்துள்ளன.

மூன்று முன்னணி கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கைதும் செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப் பட்டுள்ளனர்.

எத்தனையாவது ஓவரில் எந்தப் பந்தை எப்படி வீச வேண்டும் என்பதற்குத் தரகர்களுக்கும், விளையாட்டுக்காரர்களுக்கும் சில சைகைகள் காட்டப்படுமாம். அதன டிப்படையில் பந்து வீசுவார்களாம். இதற்காகப் பேசப்படும் பணம் ரூ.70 லட்சமாம்.

விளையாட்டு என்பது வீரத்தை வெளிப்படுத்தக் கூடியது - ஒழுங்கு நெறிகளை ஊட்டும் உன்னதத் துறை விளையாட்டுத்துறை என்ற எண்ணத்தின்மீது இந்தப் பாழாய்ப் போன கிரிக்கெட் வந்து மண்ணை அடித்து விட்டது.

அதுவும் அய்.பி.எல். கிரிக்கெட் (20 ஓவர்) அறிமுகமானபின் பண முதலைகள் இந்தக் களத்தில் இறங்கி (கறுப்புப் பணம்தான் மண்டிக் கிடக்கிறதே!) கிரிக்கெட் காட்டில் பண மழை கொட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள்.

வீட்டில் துருப்பிடித்துக் கிடந்த கிரிக்கெட்காரர்களுக் கெல்லாம் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது.

என்ன வெட்கக் கேடு தெரியுமா? இவர்கள் பெரு முதலாளிகளால் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.

அடிமைகளைத் தான் அல்லது பொருள்களைத்தான் ஏலம் எடுப்பார்கள்; இங்கு என்னடா என்றால் கிரிக்கெட் வீரர்களை (?) ஏலம் எடுக்கிறார்களாம்.

பணத்துக்காக தன்மானத்தை - விளையாட்டின் வீரியத்தை அடகு வைப்பவர்கள் எப்படி விளையாட்டு வீரர்களாக இருக்க முடியும்?

அதுவும் இந்தியாவில் கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களின் பல்லாங்குழி விளையாட்டாகி விட்டது. இந்திய மண்ணுக்குரிய ஹாக்கி, சடுகுடு போன்ற உழைக்கும் விளையாட்டு களில் இவர்கள் கால் பதிக்க மாட்டார்கள்.

சொகுசானதாக இருக்க வேண் டும்; பணத்தையும் இலாவகமாகச் சுண்டி இழுக்க வேண்டும் - அதற்கு பொருத்தமானது கிரிக்கெட் தானே!

பார்ப்பனர்களின் விளையாட்டாகக் கிரிக்கெட் ஆன பிறகு பார்ப்பன ஊடகங்களும் காற்றடித்து ஊதிப் பெருக்கி விளம்பர வானத்தில் வண்ண வண்ணப் பலூன்களாகப் பறக்க விடுகின்றன.

விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர்கள் வீழ்ந்து விடுகிறார்கள். கிரிக்கெட்டைப் பார்ப்பதற்கு டிக்கட் வாங்கிட மணிக்கணக்கில் வேகாத வெயிலில் நிற்கிறார்கள்.

சூதாட்டம் கொலை வரை சென்று விட்டது! மாணவர்கள் தேர்வுகளைக்கூடத் தூக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் மைதானத்தை நோக்கி ஓடுகிறார்கள். விளையாட்டின்போது அரைகுறை உடையணிந்த ஆரணங்குகளின் அசிங்கமான நெளிவு, சுளிவுகள் நிறைந்த ஆட்ட பாட்டம்; இளைஞர்கள் நடந்து கொள்ளும் போக்கோ அருவருப்பின் உச்சக் கட்டம்!

இவர்களைக் காப்பாற்ற வேண்டாமா?

விளையாட்டின் மூலம் விபரீதம் என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்து!

நாட்டு நலனில், இளைஞர்கள் நலனில், பொது ஒழுக்கத்தில் அக்கறை கொண்ட ஒவ்வோருவரும் திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க முன் வரட்டும்!

மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பதில் என்ன பயன்?

கழகத்தின் முயற்சிக்கு கை கொடுங்கள் - கைலாகு கொடுங்கள்!

கழகத் தோழர்களே களை கட்டட்டும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! 17-5-2013

தமிழ் ஓவியா said...


இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிரீமிலேயர் அளவுகோல் ரூ.6 லட்சம் மத்திய அமைச்சரவை முடிவு


புதுடில்லி, மே.17- மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறு வதற்கான வருவாய் உச்ச வரம்பை ரூ.6 லட்சமாக மத்திய அமைச்சரவை உயர்த்தி உள்ளது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப் பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் முன்னேறிய வர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண் டுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ.12 லட்சமாகவும், கிராமப் புறங்களில் ரூ.9 லட்ச மாகவும் உயர்த்த வேண் டும் என்று இதர பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் சிபாரிசு செய்தது. ஆனால், இது சாத்தியம் இல்லை என் றும், ஒரே மாதிரியாக ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு சிபாரிசு செய்தது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடை பெற்ற மத்திய அமைச் சரவை கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வரு வாய் உச்சவரம்பை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நுகர்வோர் விலை குறி யீட்டு எண்ணை கருத் தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், இதர பிற் படுத்தப்பட்டோரில் இன்னும் அதிகமானோர் பலன் அடைவார்கள்.

இதுதொடர்பாக, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகமும், மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகமும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று மத் திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் சில முடிவுகள்

குடியரசு தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற தேசிய தலை வர்கள் மறையும்போது, அவர்களுக்கு டில்லியில் தனித்தனி நினைவி டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்படி கட்டுவதன் மூலம், டில் லியில் யமுனை ஆற்றங் கரையில் 245 ஏக்கர் நிலம் போய்விட்டது. இதனால் நிலத்துக்கு பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், இனிமேல் தேசிய தலை வர்கள் மறைந்தால், அவர்களுக்கு தனித்தனி நினைவிடம் கட்டுவது இல்லை என்று மத்திய அமைச்சரவை கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது.

அதற்கு பதிலாக, பொதுவான ஒரே வளா கத்தில் அத்தலைவர் களின் நினைவிடங் களுக்கு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, யமுனை ஆற் றங்கரையில், ஜெயில்சிங் நினைவிடம் அமைந் துள்ள ஏக்தா ஸ்தலத் துக்கு அருகே ராஷ்ட்ரீய ஸ்மிரிதி என்ற வளாகம் அமைக்கப்படும். வருங்காலத்தில் தேசிய தலைவர்கள் மறையும் போது, அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கும், நினை விடம் அமைப்பதற்கும், இரங்கல் கூட்டம் நடத் துவதற்கும் அங்கு இடம் ஒதுக்கப்படும்.

வறுமை கோட்டுக்கு...

வறுமைக் கோட் டுக்கு மேலே உள்ள 10 கோடியே 50 லட்சம் குடும்பங்களுக்கு மானிய விலையில் கூடுதலாக 41 லட்சத்து 80 ஆயிரம் டன் கோதுமையும், 19 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியும் ஒதுக்கு வது என்று பொருளா தார விவகாரங்களுக் கான அமைச்சரவை கமிட்டி முடிவு செய்துள் ளது. கடந்த சில ஆண்டுகளாக தானிய உற்பத்தி அதிகரித்து, கையிருப்பு உயர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.9 ஆயிரத்து 500 கோடி மானியம் கூடுத லாக செலவாகும்.

இந்திய மருத்துவ கவுன்சில்...

இந்திய மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க மத்திய அரசு நியமித்த ஆட்சி மன்ற குழுவின் பதவிக்காலம் முடிவ டைந்து விட்டது. எனவே, புதிய நிருவாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக, அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்தை குடியரசு தலைவர் விரைவில் பிறப்பிப்பார். காந்தியாருடன் தொடர் புடைய 2 ஆயிரம் பாரம்பரிய இடங்களை பாதுகாக்கவும், புனர மைக்கவும் ஒரு புதிய திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தமிழ் ஓவியா said...


அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்


செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா?

கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மரபு. அந்த மரபை தங்களுக்குச் சாதகமான கருவியாக வைத்துக் கொண்டு, யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு - அதனால் யாரும் கேள்வி கேட்காமல் பஜனை பாடுகின்றவர்களைத் தவிர வேறு யாரும் வாய் திறக்க முடியாமல், ஒவ்வொரு நாளும் 110ஆவது விதியின்கீழ் அறிக்கையைப் படித்து விட்டுப் போய் விடுகிறார்கள்.

இதிலே விஷயம் அறிந்த - அரசியல் தெரிந்த நண்பர்கள் சட்டமன்றத்திலே இருக்கிறார்கள். அவர்கள்கூட இதுபற்றியெல்லாம் வாய் திறக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

(முரசொலி 17.5.2013 முதல் பக்கம்)

தமிழ் ஓவியா said...


சபாஷ்!


தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கையான குணவதி என்பவருக்குத் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் பாதுகாப்புப் பணி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாதம் ரூ.4000 பெறும் தற்காலிகப் பணிதான் இது என்றாலும் விரைவில் சம்பள உயர்வும், பணி உயர்வும் கிடைக்கும் என்று மருத்துவ இணை இயக்குநர் கூறியுள்ளார். கோவை சுந்தராபுரம் புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திராவிடர் கழகம் வைத்த கோரிக்கைக்கு இது முதல் வெற்றியாகும்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே, பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.

(விடுதலை, 11.9.1953)

தமிழ் ஓவியா said...

கடவுள் ஒரு பொய் நம்பிக்கை


திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று பகுத்தறிவு. 1926இல் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது, அது ஒரு சமூக நீதி-சமத்துவ இயக்கமாகத்தான் உருவெடுத்தது. நீதிக்கட்சியின் வரலா றும் அத்தகையதே. ஆனால் காலப் போக்கில் தன்மான இயக்கமாகவும், அறிவியக்கமாகவும் அது மலர்ந்தது. அறிஞர் அண்ணாவின் தலைமையில், தேசிய இன இயக்க மாகவும் அது வலுப்பெற்றது.

அறிவியக்கங்கள் உலகம் முழு வதும் காணப்படுகின்றன. சாக்ரடீஸ், எபிகூரஸ் தொடங்கி, அறிஞர்கள் பலர் பகுத்தறிவுக் கருத்துகளை முன்வைத் துள்ளனர். இன்று வரை, உலகின் பல பகுதிகளிலும், பகுத்தறிவுச் சிந்தனை யாளர் களையும், அவர்களின் படைப்பு களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற, ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள கூந படின னுநடரளடி என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே, கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை.

ரிச்சர்டு டாகின்ஸ், இங்கிலாந்தின் காலனி நாடாக அன்று இருந்த கென்யாவின், நைரோபி நகரில் பிறந்தவர். எனினும் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த போதே இங்கி லாந்து வந்துவிட்டார். லண்டனுக்கு அருகில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், அமெரிக் காவில் உள்ள கலிபோர்னியா பல் கலைக்கழகத்திலும் தன் படிப்பையும், ஆய்வையும் நிகழ்த்தியர். இப்போது அவருக்கு வயது 72. தன்னுடைய 65ஆம் அகவையில், 2006ஆம் ஆண்டு அவர் எழுதிய நூல்தான் கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்பது.

31 மொழிகளில் பெயர்க்கப்பட் டுள்ள இந்நூலின் ஆங்கிலப் படிகள் மட்டுமே 15 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாகி உள்ளன. ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட இந்நூலை, மறைந்த கு.வெ.கி.ஆசான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசானின் அழகிய மொழிநடை, மொழிபெயர்ப்பு நூலைப் போலன்றி, ஒரு தமிழ் நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற் படுத்துகின்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் பதிப்புரை, படிப்போரின் சிந் தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளது.

நூலாசிரியர் டாகின்ஸ், ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதால், அறிவியல் சான்றுகளுடன் இந்நூலுள் பகுத்தறிவுக் கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன. வெறுமனே வாதம் செய்யும் நூலாக அல்லாமல், அரிய அறிவியல் ஆய்வு நூலாக இந்நூல் நமக்குக் கிடைத்துள்ளது. பத்து இயல் களைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்நூல், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், கடவுள் மறுப்பையும் பல்வேறு கோணங் களில் முன்வைக்கின்றது.

கடவுள் என்னும் கருதுகோள் எப்படி உருவாயிற்று என்னும் வரலாற்றுச் செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை உடையவர்களின் வாதங்களும், மூன்றாவது இயலில் முழுமையாக இடம் பெற்றுள்ளன. உலக இருப்பு சார்ந்தும், தங்களின் சொந்த அனுபவங்கள் சார்ந்தும், மதங்களின் புனித நூல்கள் சார்ந்தும், மத அறிவிய லாளர்களின் கூற்றுகளைச் சார்ந்தும் கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாகக் கூறப்படும் பல்வேறு கருத்துகள், மிக நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடவுள் இல்லை என்பதற்கு நெருக்க மான நிலையாக, இன்று மேலைநாடுகள் பலவற்றில் கிட்டத்தட்டப் பெரும்பாலும் கடவுள் இல்லை என்னும் வாதம் எழுந் துள்ளது. அது குறித்தும் நூலுள், பல செய்திகள் தரப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்த, இருக்கின்ற கடவுள் நம்பிக்கை, மறுப்பு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையிலான, சுவையான பல வாதங்களை டாகின்ஸ் முன்வைத் துள்ளார். பொதுவாக, ஸ்டாலினும், ஹிட்லரும் நாத்திகர்கள் என்று சொல்லப் படுவதுண்டு.

இவ்விரு நாத்திகர்களும் தான், இரண்டாம் உலகப் போருக்கும், இலட்சக்கணக்கான மக்களின் அழி விற்கும் காரணமாக இருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாற்று வைக்கப் படுவதுண்டு. அது குறித்த மிகச் சிறந்த வாதங்களை இந்நூலுள் காண முடிகிறது.

முதலில் இருவரும் நாத்திகர்கள் என்பதே தவறு என்று கூறும் டாகின்ஸ், நாத்திகர்கள் போருக்கும், தீமைகளுக் கும், காரணியர்களாக இருப்பார்கள் என்பது அதைவிடத் தவறு என்கிறார். சோவியத் நாட்டின் அதிபராக இருந்த ஸ்டாலின் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதில் அய்யமில்லை என்று கூறும் நூலாசிரியர், இட்லரைப் பற்றிய செய்தி உண்மையில்லை என்பதைச் சான்று களுடன் மறுக்கிறார்.

தமிழ் ஓவியா said...

இட்லர் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ஆண்டவருக்கு மண்டியிட்டு நன்றி செலுத்தினேன் என்று எழுதியுள்ள இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். 1933ஆம் ஆண்டு, அவர் பெர்லினில் நிகழ்த்திய உரையிலும், நாங்கள் நாத்திக இயக்கத்திற்கு எதிரான போரில் ஈடு பட்டோம். அதனை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று பேசியிருப் பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.

நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டதாகக் கூறும் ஒருவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும் என்று கேட்கிறார் டாகின்ஸ்.
அதனைவிட முதன்மையானது - ஒரு வேளை அவர் நாத்திகராகவே இருந் திருந்தாலும், அவருடைய தீய செயல் களுக்கும், நாத்திகச் சிந்தனைக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும் என்னும் அவருடைய கேள்விதான்.

உலகில் இறைநம்பிக்கை உடையவர்கள் அனைவரும், ஒரு குற்றச் செயலில் கூட ஈடுபடவில்லை என்றோ, நாத்திகர்கள் அனைவரும் குற்றப்பரம்பரையினர் என்றோ கூற முடியுமா என்னும் அவர் வினாவிற்கு எங்கே விடை இருக்கிறது.

தந்தை பெரியார், குற்றம் புரிந்து, அதற்கான தண்டனையை ஏற்று, சிறைச் சாலைகளில் உள்ளவர்களில் எத்தனை பேர் நாத்திகர்கள்? என்று கேட்பார். சமூகத்தின் இன்றை நிலைதான் சிறைச்சாலைகளிலும் உள்ளது. அங்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவே. கடவுள் நம்பிக்கை கொண்ட குற்றவாளிகளே எண்ணிக் கையில் மிகுதி.

அடுத்ததாக, அறிவாளிகள் அனை வரையும் இறைநம்பிக்கை கொண்ட வர்கள் என்று எளிதில் கூறிவிடும் ஒரு போக்கும் இங்கு உள்ளது. அப்படித்தான், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரான அய்ன்ஸ்டைன், மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் என்னும் செய்தி இங்கே பரப்பப்படு கின்றது. அதனைச் சான்றுகளுடன் தகர்த்துப் போடுகிறது, ஆசிரியர் வீரமணி அவர்களின் பதிப்புரை.

1954 சனவரி 3ஆம் நாள், அய்ன்ஸ் டைன் தன் நண்பர் எரிக் குட்கிண்ட் டிற்கு எழுதியுள்ள மடலொன்றில், மனித உள்ளத்தின் வலிமை இன்மை யின் வெளிப்பாடாகவும், விளைவாக வும் இருக்கிறது என்பதற்கு மேலாக எதையும் கடவுள் என்ற சொல் சுட்டுவதாக எனக்குப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மிகச் சிறந்த அறிவாளிகள் பலர், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்துள் ளனர் என்பது தெளிவாகின்றது.

நூலாசிரியர், விலங்கியல் துறை ஆய்வாளர் என்பதால், தன் கருத்து களுக்கு அறிவியல் ஆய்வுகளையே சான்றுகளாகத் தந்துள்ளார். அதுவே இந்நூலின் மிகப் பெரிய சிறப்பு என்று கூறலாம்.

மதம், கடவுள் என்பனவெல்லாம், மற்றொன்றின் உடன் விளையு என்று கூறும் அவர், அதற்குப் பொருத்தமான அறிவியல் செய்தி ஒன்றைத் தருகின் றார். இரவுநேரத்தின் செயற்கை ஒளி, அண்மைக் காலத்தில் ஏற்பட்டதாகும். முன்பு நிலவு மற்றும் விண்மீன்களின் ஒளி மட்டுமே இரவில் இருந்தது.

அந்த ஒளியைப் பின்பற்றி விட்டில் பூச்சிகள் பறந்தன. இன்றைய கால மாற்றத்தில் நெருப்பு விளக்குகளும், மின் விளக் குகளும் வந்துவிட்டன. இம்மாற் றத்தைப் பகுத்தறிவுடைய மனிதர்கள் உணர்வது போல, விட்டில் பூச்சிகள் உணர முடிவதில்லை. அதனால்தான் அவை, நெருப்பின் ஒளியை, நிலவின் ஒளி என்று கருதி, அதனை நோக்கிப் பறந்து தம் வாழ்வை முடித்துக் கொள்கின்றன.

நடைமுறையில், பகுத்தறிவுடைய மனிதர்களும் கூட, தங்களின் ஆறா வது அறிவைப் பயன்படுத்திக் கால மாற்றங்களைப் புரிந்து, அதற்கேற்பத் தங்களின் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளாமல், பழைய பாதையிலேயே பயணம் செய்கின்றனர். எனவே அறிவியல் பூர்வமாக உண்மைகளை உணர்ந்து வாழ்தலே பகுத்தறிவு என்கிறது இந்நூல்.

கடவுள் என்னும் கருதுகோளைப் பல்வேறு வகைகளில் அணுகி, அத னுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், பகுத்தறிவு வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் இந்நூல் பெரிதும் உதவும்!

கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை
வெளியீடு: திராவிடர் கழகம்
பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை - 7
நன்கொடை: ரூ.350/
நன்றி: கருஞ்சட்டை தமிழர் இதழ்

தமிழ் ஓவியா said...


சோதிடம் சொல்லி இராஜகுரு ஆனார்கள்!

தமிழகத்தை ஆண்ட மன்னர் களிடமும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். பார்ப்பனர்களை இராஜ குருவாக மன்னார்கள் ஏற்றிருந்தனர். இராஜகுருவின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது அவர்கள் இட்டதே கட்டளை!

இந்நிலையில் மன்னரை பயமுறுத்தி சோதிடத்தைக் காட்டி மன்னருக்கு தோஷம் இருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறி பெரும் பொருளை பார்ப்பனர்களுக்குக் கொ டுத்து பரிகாரம் செய்தனர். இவ்விதம் செய்யாவிட்டால் மன்னருக்கு ஆபத்து வரும், கேடு விளையும் என்றெல்லாம் கூறி பயம்காட்டி சுகபோக வாழ்வை அன்றைக்குப் பெற்று வந்தனர்.

700, 800 ஆண்டுகளுக்கு முன் செய்த அதே காரியத்தை இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள். 22.4.05 தினமணியில் காலம் உங்கள் கையில் பகுதியில் திண்டிவனத்து நண்பர் ஒருவர் திதி கொடுக்க புரோகிதர் கிடைக்க வில்லை. எப்படிச் செய்ய வேண்டு மென்று கேள்வி கேட் கிறார்! அதற்கு, புரோகி தர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு தானியம் உணவுப் பொருட்களைத் தானமாக அளிக்க வேண்டும்.

கோயிலுக்குச் சென்று அங்குள்ள அந்தணரை வணங்கி தானியப் பொருட்களை கொடுத்து வரவும் என்று பதில் அளித்திருக்கிறார். யாராவது நான்கு ஏழைகட்கு உணவுப் பொருள் கொடுத்து உதவுங்கள் என்று எழுத அவர்களுக்கு மனம் வரவில்லை. பார்ப்பனர்களுக்கு உதவுங்கள் என்று இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், தமிழர்களே சிந்தி யுங்கள்.

தமிழன் எக்காலமும் முட்டா ளாக இருக்க வேண்டும், அதன் மூலம் பார்ப்பன இனம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது தானே அவர்கள் எண்ணம்! அந்த சூழ்ச்சி எண்ணத்தில் ஒன்றுதான் சோதிடமும் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பனர்களைப் பொறுத்த வரை தான் வாழ தன் இனம் சிறப்புப் பெற எதையும் செய்வார்கள் என்பதே வர லாறு! தமிழ்மொழியின் அறிவுப் பெட்ட கங்களையெல்லாம் வடமொழியில் எழுதி தனதாக்கிக் கொண்டார்கள்! அகத் தியர் திருவள்ளுவரை ஆரிய இனம் என்று கூறிப்பார்த்தார்கள்.

திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் நெல்லை மாவட்டத்தில் பிறந்து தூத்துக்குடி மாவட்டம் கீழஈராலில் அடக்கமானவர். அவர் பரம்பரை (நாடார் இனம்) இன்றும் இருக்கிறார்கள். அந்தப் பரிமேலழகரை ஆரிய இனம் என்று துணிந்து பொய்யு ரைத்தனர்.

திடீரென்று பிள்ளையாரை நடுத் தெருவில் தோன்ற வைத்துதண்ணீர் கொட்டுவதாக கதை கட்டுவார்கள். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்து லாபம் பெறுவார்கள். இவர்கள்தான் சோதிடத் திலேயும் அறிவியல் இருக்கிறது என்று மக்களை நம்ப வைத்து லாபம் பெறு வதற்கு வழி வகுத்து விட்டனர்.

மக்களின் பலவீனத்தை சோதி டர்கள் பிழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்!

தமிழ் ஓவியா said...


திருமணப் பொருத்தம்!


திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்! முதலில் அந்தக் குடும்பம், அவர்கள் பூர்வீகம், கல்வி மற்றைய விவரம், மணமகனாக இருந்தால் நிலையான வருமானமுள்ள நிரந்தரப்பணியா, ஒழுக்க முடையவனா, அவன் பழகும் நண்பர்கள் பழக்க வழக்கங்கள், பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றும் திறனுடையவனா என்றும், மணமகளாய் இருந்தால் குடும்பத்திற்கு ஏற்ற குணநலம் கொண்டவளா, பண்புடையவளா, அனுசரித்துப் போகும் இயல்புடையவளா என்றெல்லாம் பார்த்து விட்டு பேச்சுவார்த்தை தொடங்குவதுதான் முறையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

இப்போது பெற்றோர்கள் எடுத்த எடுப்பில் ஜாதகப் பொருத்தம் என்று பார்க்கிறார்கள். ஜாதகம் முதலிடம் பெறுகிறது. சில நேரங்கில் நல்ல வரனைக் கூட ஜாதகம் பொருந்தவில்லை என்று கைவிட்டு விடுகிறார்கள். சிலர் நல்ல வரை எல்லாம் கழித்து விட்டு பொருந்தக் கூடிய ஜாதகத்தைத் தேடி ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் சிறப்பாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு கஷ்டம் நஷ்டம் ஏற்படவில்லையா? நோய் நொடி வந்ததில்லையா? குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இல்லையா? ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் சிறப்போடு வாழத்தானே செய்கிறார்கள்! ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் வாழ்ந்து விடவில்லை! ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் தாழ்ந்து விடவும் இல்லை.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தமல்ல! இரத்தப் பொருத்தம். இரத்தப் பரிசோதனை!

ஏனெனில் கணவன் இரத்த குரூப் Rh +ve ஆகவும் மனைவியின் இரத்த குரூப் Rh- ve ஆகவும் இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. எனவே, மணமக்களின் இரத்தப் பொருத்தம் பார்ப்பதே சிறந்தது. அதை விட்டு விட்டு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது பயனற்றது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


வென்றது அறிவியல்


5.5.2005 சிறீ ஹரிகோட்டா விலிருந்து 2 செயற்கை கோ ளுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. வானிலை தெளிவாக இருந்ததால் திட்ட மிட்டபடி ராக்கெட் வெற்றி கரமாகச் செலுத்தப்பட்டது.

பிரபல சோதிடர் எஸ்.இராமச் சந்திரன் என்பவர் 5.5.2005இல் வானிலை மிக மோசமாக இருக் கும். பயங்கர சூறாவளிக் காற்று வீசும். ஆகையால் ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியாது என்று கூறியிருந்தார். அவர் கூறிய சோதிடம் பொய்த்தது.

வானிலை தெளிவாக இருந்து எந்த இடையூறு மின்றி ராக்கெட் செலுத்தப்பட்டதை அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி படித்தோம்! இந்தியர் களின் அறிவியல் நுட்பம் பாராட்டப் பட்டது.

சோதிடம் தோற்றது. அறிவியல் வென்றது! அறிவியல் நம்மை உலக அரங்கில் உயர்த்தியது. சோதிடத்தை நம்பிக் கொண்டிருந்ததால் உலக அரங்கில் தாழ்ந்து போவோம் என்பதையே மேற்படி சம்பவம் உணர்த்துகிறது.

அறிவியல் சிந்தனை மக்களிடையே வேகமாகப் பரவ ஆரம்பித்தால் அந்த வேகத்தில் சோதிடம் போன்ற பிற்போக்குத் தனமும் அறி யாமையும் அடித்துச் செல்லப் பட்டு விடும்! அறிவியல் கருத்து பரவாமல் தடுத்திடும் வேலையை சோதிடர் இராமச் சந்திரன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கி றார்கள்.

தமிழ் ஓவியா said...

போலந்தும் - லெனினும்!

நமது கல்விப்புரட்சி வேலைகளில் மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும்.

தொழிலாளருடைய ஆதிக் கத்தில் கோவிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது. பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு எதிராக செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்கவும் வேண்டும். - லெனின்

தமிழ் ஓவியா said...

நலம் விளைய நா காக்க


- மு.வி. சோமசுந்தரம்

சிதறிய பாலை எடுக்கவா முடியும்?
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
நுணலும் தன் வாயால் கெடும்
வில்லிலிருந்து வெளியேறிய அம்பு வெளியேறியதுதானே?
நாவினாற் சுட்ட வடு
பெரும் பயன் இல்லாத சொல்
இனிய உளவாக இன்னாத கூறல்

ஊமையாக இல்லாதிருப்பது ஒருவர் பெற்ற அருட்கொடை இந்த இயற்கைப் பிறவிக் கொடையைப் பெற்றதின்பலன், அவர்தம் சிந்தனைக் கருவூலத்திலிருந்து சொல் முத்துக்களை சமூகம் மகிழ அதன் வழிதான் மகிழ் செய்வதாக வழங்குவதில் அமையும். வாய் வழி வரும் சொற்கள், முத்தாக, மணியாக, கோமேதகமாக, தேனாக, தன்மையாக இல்லாமல், தணலாக, முள்ளாக, கள்ளியாக இருக்குமானால், நாம் சமூகக் கேடர்களாகத் தான் கருதப்படுவோம். நாமும் கசங்கிய மலராக, கைபிசைந்து, குழம்பிய மன நிலையில் குனிந்த தலையுடன் தள்ளாடி நடக்க வேண்டியிருக்கும். நிலை ஏற்படுமல்லவா? இது நல்லதல்லவே!

இந்த கருத்தை முன் வைக்கும் வகையில் கட்டுரையின் துவக்கத்தில் எட்டு வரிகள் கூறப்பட்டுள்ளன. அவை வழி காட்டும் வரிகளாகவும், எச்சரிக்கை அறிவிப்புகளாகவும், கருதப்படலாம். இந்த முறையில் மேலும் பல அறிவுரைகள் சேர்க்கப் படலாம்.

குடி குடியைக் கெடுக்கும்

தொப்பை வரும் முந்தி தொல்லை வரும் பிந்தி

இவையும் ஒரு வகை பாது காப் புக்கான முழக்கங்களை அல்லவை களைத் தள்ளி வைத்தால் நல்லவை மாலை சூடலாம்.

சொல் குற்றத்தால் சூழும் கேடுகள் பல. எடுத்துக்காட்டாக, ஜவகர்லால் நேரு அவர்கள் தமிழகத்து இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நான்சென்ஸ் என்று கூறியதையும், இராசகோபாலாச்சாரியார், 1952இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைக் கொச்சைப்படுத்தி, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பேசியதைக் கூறலாம். யானைக்கும் அடிசருக்கும் அல்லவா?

அனைவரும் சொல்லின் செல்வ ராக விளங்குவது இயலாத ஒன்று. நாட்டில் உள்ளவரெல்லாம் நாவல ராக நாட்டம் கொள்வது நடை பெறுமா? பேசும் வழிமுறை பற்றியும், சொல்லின் வலிமை பற்றியும், பிப்ரவரி, 18, இந்து இதழில் வெளிவந்த கட்டுரையின் கருத்துத் தொகுப்பைக் காண்போம். பயன் பெறுவோம்.

பெரும்பாலான மனிதர்கள், சில நேரங்களில், சிந்தனையற்ற, சங்கடத்தை ஏற்படுத்தும், அறிவற்ற, ஆத்திரமூட்டக் கூடிய சொற்களை சிந்தி விடுகிறார்கள். இதன் காரண மாக, எதிர்வரும் பல ஆண்டுகள் தான் அப்படி பேசி இருக்கக் கூடாதே என்று ஏங்கி ஏங்கி அந்த எண்ணத்திலேயே மூழ்கி, ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டவர்களாகி விடுகின்றனர்.

இப்படி ஏங்கி ஏங்கி கசிந்து கழிக்கும் காலத்தை எண்ணிப் பார்க்க செலவிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமல்லவா? இப்படி சொல்வது எளிதுதான். ஆனால் செயலில் காட்டுவதில்தான் சிக்கல்.

இப்படிபட்ட நிலையில் சொற்களைக் கொட்டிவிட்டு சங்கட நிலையைச் சந்திப்பதும், மன இறுக்கம் அடைவதும் ஒரு பக்கம் இருந்தாலும் நீடித்திருக்க வேண்டிய, நட்பு, உறவு பாதிக்கப்படுகிறது.

அமெரிக்க நரம்பியல் - மனநல மருத்துவர் டாக்டர் டயேன் ஹென் ரிபவுல், நாம் மனதார ஒரு முடிவெ டுப்பதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில், பெரும்பாலான முடிவுகள், நம் ஆழ்மனதில் உருப் பெருகின்றன என்று கூறுகிறார். எனவே, சொற்களை வாயளவில் ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்துவதின் மூலம் முறையான பேச்சை கைக் கொண்டதாகக் கூற முடியாது. இதற்கான தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

சிந் தனையை ஒழுங்கில் கொண்டு வர வேண்டும். நம் பழக்கத்துடன் ஒட்டி வந்துள்ள சுடுச் சொல், கடுஞ் சொற்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு கற்பனை எடுத்துக் காட்டு. ஒரு அலுவலகத்தில் அகிலா அலுவலராக உள்ளார். அலுவலக அதிகாரியும் அவருடைய தங்கையும், அகிலாவை சந்திக்கிறார்கள் அகி லாவைத் தங்கைக்கு அறிமுகப் படுத்தும்போது, இவர் எனக்கு என் தாயார் போன்றவர் என்று தங்கையிடம் கூறுகிறார்.

தங்கை முகம் களித்துக் கொள்கிறாள். அகிலா வருந்துகிறாள். அந்த நேரத் தில் ஏதோ பேச வேண்டும் என்பதற் காக பேசி விட்டேன். குற்றமாக எதுவும் கூறவில்லையே. என் அவசர வார்த்தை நடத்தையால் ஒரு சங்கட சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டேனே இதில் பெரிய துன்ப விளைவு ஏற்பட வில்லை. ஆனால் எடுத்த எடுப்பில் ஏதேனும் உளறிக் கொட்டிவிட்டால் விளைவு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கீழ்க்கண்டவற்றைக் கவ னத்தில் கொள்வது நல்லது.

1) திடீரென்று மனதில் தோன்று வதை சொற்களாக வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை.

2) ஒருவருக்கு பதில் கூறும்முன் சிறிது நிதானித்து கூறவும். கூற வேண்டியதை யோசித்து அதனால் ஏற்படும் விளைவையும் நினைத்து பேசவும்.

3. பதற்றப்பட்ட சூழ்நிலையில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறிது நேரம் நீள் மூச்சு இழுத்து, பிறகு பேசவும்.

4. ஒன்றை மறுத்துக் கூற முனை யும்போது நயத்தக்க முறையில், மென்மைக் குரலில் பதிவை ஏற்படுத் தும் வகையில் கூறவும்.

5. விழா,பொது நிகழ்ச்சிகளில் குழுமியிருக்கும் வேளையில், உணர்ச்சி கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்பு ஏற்படும். எனவே எச்சரிக் கையாக பேசுவது நல்லது.

6. சில வேளைகளில், தவறுதலாக, குறைபட்ட சொற்களை கூறிவிட் டால், உடனே மன்னிப்பு கேட்டு விடுங்கள். அது நமது கவுரவத்தைப் பாதிக்காது.

7. எழுத்து மூலம் கருத்தைக் கூறுவது பாதுகாப்பானது. சொற் களை சரியான வகையில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.

8. அமைதியான மன நிலையில், குழுப்பமான தடுமாற்றமான சொற்கள் வராது. மூச்சுப் பயிற்சி, தியானம், அமைதியான மனநிலைக்கு வழி வகுக்கும்.

9. மடத்தனமான சொற்களைக் கூறுவதைவிட, ஏதும் பேசாமல் இருப்பது சிறந்தது.

10. நம்மைப் பார்த்து கூறப்படும் ஒவ்வொரு கருத்துக்கும், மறுப்புத் தருவது தேவையில்லை.

தமிழ் ஓவியா said...


திருடனா குருடனா?


பார்ப்பான் படைத்த புத்தகம்
புரட்டை படைத்தது
பெரியார் புகுத்திய புத்தியால்
பகுத்தறிவை பெற்றது
பார்ப்பன அறிவு பேதலித்து
தீயை உண்டாக்கியது
கை, கால், கண், இல்லா
குருடனா நீ?
கொள்கை இல்லா
திருடனா நீ?

- வணங்காமுடி
தருமபுரி

தமிழ் ஓவியா said...


அறிவுரை


நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்


1. ஆப்பிள் : இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது. பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது

2. வாழைப்பழம்: உடல் நலக்குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும், உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப் பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.

3. ஆரஞ்சு: 3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு ஜீரண உறுப்புகளும், நோய் எதிர்ப்புச் சக்தியும் வலுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

4. பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை: இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு களைப் போக்கும்.

5. மாதுளைப் பழம்: இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம் பழம்.

6. பப்பாளி: சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.

7.கொய்யா: இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளிகளுக்கு அரிய மருந்து கொய்யாப்பழம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

8.அன்னாசி: இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற் றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.

9. உலர் திராட்சை: தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளி களுக்கு நல்ல உணவு.

10. சாத்துக்குடி: தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல் படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டம்பற்றி கண்டனம் - தினமணி ஏடுகூட!


இந்தியன் பிரீமியர் லீக்' (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்' செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் தில்லி போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ள விவகாரம், ஐ.பி.எல். விளை யாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது என் பதைத்தான் மீண்டும் உறுதிப்படுத்து கிறது.

இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணம், கிரிக்கெட் ஒரு மிகப்பெரும் வர்த்தகமாக மாற்றப்பட்டிருப்பதுதான் என்பதையும், அளவுக்கு அதிகமான லாபம் கொழிக்கும் வியாபாரத்தில் முறைகேடுகளும் அதிகமாக மண்டிக் கிடக்கும் என்பதையும் புரிந்துகொண் டால், கிரிக்கெட் ரசிகர்களே இந்த ஐ.பி.எல். விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பு வார்கள்.

டுவிட்டர்', பேஸ்-புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத் துக்குக் கடும் கண்டனம் தெரிவித் திருக்கும் பலரும் கேட்கும் கேள்விகள் நியாயமானவை.

ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா? என்று நாம் கேட்கவில்லை, டுவிட்டரில் கேட்கிறார் ஒருவர்.

குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் மூவரையும் சஸ்பெண்ட் செய்த பி.சி. சி.ஐ.யின் செயல் மிகவும் அவசரமான முடிவு என்று நாம் சொல்லவில்லை, பேஸ்புக்கில் பதிவு செய்கிறார் மற்றொருவர்.

விளையாட்டின் நடுவே, இன்றியமையாத வேளையில், வேண்டுமென்றே தவறு செய்தல் அல்லது சரியாக விளையாடாமல் இருப்பதற்காக (ஸ்பாட் பிக்ஸிங்) முன்பணம் வாங்கியதாக ஸ்ரீசாந்த் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் தில்லி போலீஸாரால் கைது செய்யப் படுவாரேயானால், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பல கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) நிர்வாகிகள், ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என்று நாம் கேட்கவில்லை, விவரம் தெரிந்த அனைவருமே கேட்கிறார்கள்.

ஐ.பி.எல். அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இன்டியன்ஸ் ஆகியன மோரிஷஸ், பகாமா, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகள் வழியாக அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்திருப்பது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையின் அடிப்படையில் இந்தக் குற்றத்துக்காக பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்றக் குழுவால் விசாரிக்கப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஐ.பி.எல். நடத்திய போட்டிகளின் லாபத்தில் ரூ.160 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருக்கிறது. இதற்காக வருமான வரித் துறை 96 நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் 2011-இல் ஒரு கேள்விக்குப் பதில் அளித்தபோது குறிப்பிட்டார். அன்னிய செலாவணிச் சட்டத்தை மீறி ரூ.1,077 கோடி பணம் ஐ.பி.எல். அணிகளுக்கு வந்துள்ளது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆனால் யார் மீதும் எந்த ஒரு குற்றத்துக்காகவும் இன்றுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்காதீர்கள். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் சசி தரூர், ராஜீவ் சுக்லா, பாஜகவின் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக குடும்பத்தைச் சேர்ந்த சன்' குழுமத் தலைவர் கலாநிதி மாறன் என்று இதில் தொடர்புடையவர்கள் எல்லோரும் அரசியல் பெரும்புள்ளிகள் எனும்போது எப்படி நடவடிக்கை எடுப் பார்கள்?

ஒவ்வொரு ஐ.பி.எல். விளையாட்டின் போதும் ஒளிபரப்பு, பார்வையாளர் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் தொகைக்கு ஏற்ப வரியை முன்கூட்டியே செலுத்த வேண் டும் என்பதை அரசு கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

இந்திய விளையாட்டுக்கும், இந்திய கலாசாரத்துக்கும் பொருந்தாத வகையில் விளையாட்டு அரங்கில் பார்வையாளர் களுக்குக் கிளர்ச்சியூட்ட "சியர் கேர்ள்ஸ்' (கிளுகிளுப்புக் காரிகையர்) நடனம் குறித்து எழுந்த விமர்சனங்களைக்கூட பி.சி.சி.ஐ. கண்டு கொள்ளவில்லை. அரசு இந்த விரசத்தைத் தடுத்திருக்க வேண்டாமா?

ரசிகர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கத் தான் இந்த விளையாட்டு என்றால், ஸ்பாட் பிக்ஸிங்கை'விட மிக மோசமான சூதாட்டம் இவர்களது விளையாட்டல்லவா? அதைத் தடை செய்திருக்க வேண்டாமா அரசு?

இந்த விவகாரத்தில் தகுந்த ஆதா ரங்கள் இருப்பதாகவும், தொலைபேசி உரை யாடல்கள் இந்த ஸ்பாட் பிக்ஸிங்' பேரத்தை, முன்பணத்தை உறுதி செய் திருப்பதாகவும் தில்லி போலீசார் கூறுகின்றனர். இந்த கிரிக்கெட் ஸ்பாட் பிக்ஸிங்' விவகாரத்தில் தலைமறைவுக் குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டத்தின் போதும் ரூ.400 கோடி அளவுக்குப் பந்தயம் கட்டுதல் நடைபெறுவதாகச் சொல்லப் படுகிறது. பந்தயம் கட்டுவதற்கே இந்த அளவுக்குப் பணம் புழங்கும் என்றால் நிச்சயமாக இந்த விளையாட்டில், புக்கிங் ஏஜண்டுகள்' நட்டம் அடையாமல் இருக்க, ஸ்பாட் பிக்ஸிங்', மேட்ச் பிக்ஸிங்' ஆகியவற்றை நடத்தவே செய்வார்கள்.

தாவூத் இப்ராகிம் ஆட்கள் இதில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தன்னளவில் விருப்பம் இல்லாத நிலையிலும், மிரட்டப்பட்டு, அதனால் இத்தகைய ஸ்பாட் பிக்ஸிங்' செய்ய ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந் திருக்கவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியாதா என்ன?

போதும் இந்த சூதாட்ட விபரீதம்; ஐ.பி.எல். உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்!

நன்றி: தினமணி தலையங்கம் 17.5.2013

தமிழ் ஓவியா said...

பாராட்டுரைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!


மனிதர்களை அவர்களின் அரிய சாதனைகளுக்காக பாராட்டுதல், வாழ்த்துதல் மிகவும் அவசியமாகும். அவர்களை அது ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும். மேலும் உழைக்கும் ஆர்வத்தை அவர்களுக்கிடையே தூண்டும்; அது அவர்களுக்கு மட்டு மல்ல; அவர்களது அரிய சாதனைகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் - எழுத்து, பேச்சு, செயல் எவ்வாறாயினும் - சமூகத்திற்கும்கூட அது வாய்ப்பாக அமையும்!

பாராட்ட வேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டி விடுங்கள்; தாமதியாதீர்கள் - பிறகு உங்கள் மனம்கூட மாறிவிடக் கூடும் என்பார் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள்.

முன்பு, இரண்டு மாடிகள் ஏறி வந்து, அறிஞர் அண்ணா விடுதலை ஆசிரியராக ஈரோட்டில் இருந்து எழுதிய ஓர் தலையங்கத்திற்காக தந்தை பெரியார், மூச்சிறைக்கப் பாராட்டியது கண்டு அண்ணா இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இது வரலாறு.

நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள்மீது கோர்ட் அவமதிப்பு (Contempt of Court) வழக்குப் போடப்பட்டு தண்டிக்கப்பட்டதையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் என்பவர்கள் ஊழல் புரிந்ததை யொட்டி எழுந்த விமர்சனங்களைத் திரட்டி, திராவிடர்கள் - நீதிபதி களாகவோ, நிர்வாகஸ்தர்களாகவோ இருந்தால் மட்டும் அவர்களை வலிந்து சிறுசிறு தவறுகளையோ, அல்லது தவறுகள் நடந்ததாக கற்பனையாலேயோ, எழுதி சங்கடப்படுத்தும் பல்வகை வழக்கு ஆதாரங்களுடன் எழுதினேன் அப்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் B.L. வகுப்பில் படித்து வரும் மாணவன்.

சென்னையில் அதை அய்யாவிடம் காட்டினேன். விடுதலையில் போடுவ தற்காக எழுதியுள்ளேன் அய்யா என்று கூறினேன்.

முழுவதும் படித்துப் பார்த்தார்கள்; இறுதியாக அதைப் பாராட்டி விட்டு, இந்தக் கட்டுரையை உன் பெயரில் போட வேண்டாம்; உனக்கு ஏதாவது தொல்லைகள் வரலாம்; அதோடு, அந்த மேட்டருக்கு உரிய வெயிட் உன் பெயரில் வந்தால் அவ்வளவு வராது. ஆகவேதான் என் பெயரிலேயே போடுமாறு விடுதலை அலுவலகத்திற்குக் கூறு கிறேன் என்றார்கள்.

எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆகா தாராளமாகச் செய்யுங்கள் அய்யா என்று கூறி வந்துவிட்டேன்.

மாலை விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக அது வெளி வந்தது! சென்னை மீரான் சாயபுத் தெரு, இல் லத்தில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களுக்குப் பலர் நேரில் வந்து பாராட்டுக்களைக் கூறினார்கள்.

அந்த அறிக்கைகாக!

அவர்களில் ஒரு குழுவினர் - இயக்கத்தவர்கள்தான் வேலூரிலிருந்து வந்தவர்கள் - அய்யாவின் இந்த அறிக்கை மிகப் பிரமாதம் அங்குள்ள வக்கீல்கள், நீதிக் கோர்ட் நியாயாதி பதிகள் எல்லோரும் எங்களிடத்தில் விசாரித்தார்கள்; விடுதலை பேப்பர் கிடைக்குமா என்று கேட்டு நச்சரித்தனர் என்று கூறி அய்யா ஒருவரால்தான் இப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்த, தெளிவு பொதிந்த, அறிக்கைகளைத் தர முடியும் என்று சரமாரி புகழ்ந்தார்கள்!

பொறுமையாக இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அய்யா அவர்கள் கடைசியாக, உங்களுக் கெல்லாம் ஒரு சேதி தெரியுமா? அந்த அறிக்கை நான் எழுதியதில்லை; நம்ம வீரமணி இருக் கிறாரே அவர் சட்டக் கல்லூரியில் B.L. படிக்கிறார். அவர் தான் எழுதினார் - இந்தப் பாராட்டு, உண்மையில் என்னைச் சேராது அவரைத்தான் சேரும் என்றார்.

வந்தவர்களுக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி (தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கசப்பு கொண்டிருந் தவர்கள்தான் அதில் சிலர் - அய்யா வுக்கும் கூட இது தெரியும் - தெரிந்தே சொன்னார்!)

தந்தை பெரியாரின் அறிவு நாண யம் எப்படிப்பட்டது பார்த்தீர்களா?

பிறர் பாராட்டும்போதுகூட அது யாருக்கு உரியது என்பதைக் கூறி, அதை ஏற்க மறுப்பதற்கு எத்தனை பெரிய உள்ளம் பார்த்தீர்களா?

எனவே பாராட்டில் நிதானமும் வேண்டும் - பொய்யுரைகளைத் தவிர்த் தலும் அவசியம்! நாணயத்துடன் அது அமைந்தால் பொன்மலருடன், மணமும் சேர்ந்த பெருமையாகும்!
----கி.வீரமணி- வாழ்வியல் சிந்தனைகள் -18-5-2013

தமிழ் ஓவியா said...


மதமே...


மதமே மனிதனுடைய சுயமரியா தைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்துக்கு விரோதி. மதமே மனி தனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனிதச் சமூகச் சம தர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத் துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.

(புரட்சி, 26.11.1933

தமிழ் ஓவியா said...


கிறித்தவ மதப் பிரசாரமா?


கிறித்தவ மதப் பிரசாரமா? என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப் பொன்றெழுதி, சென்னைக் கடற் கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரக ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத் தகைய கிறித்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிர சிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ள வில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான்.

இக்குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வழிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி தூட்சித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்? என்று எழுதி பொதுவாகக் கிறித்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களி டையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்கியத் தனமும் சூழ்ச்சியுமானதென்று கவனி யுங்கள்.

மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரகங்களிலும் அடங்கிக் கிடக்க வில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறித்தவ மதமோங்கி விடாது. இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறை யனாயிருக்கும் கோவிந்தனை பக்கத் தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோச ஆகிவிட்டால் கைலாகு கொடுப் பான்.

ஆகவே கிறித்தவ மதத்தை இப்பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது ஸ்ரீமான் ஆரியா ஆதரிக் கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பன னுடைய வாய் வேதாந்தத்தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களை ஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.

- குடிஅரசு, கட்டுரை, 11.07.1926

தமிழ் ஓவியா said...

டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்

முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும்
டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முலீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார்.

1. இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட் டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது.

2.முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்.

3. முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது.

என்று பேசியிருக்கிறார். (இது 5.7.26ல் மித்திரன் 4-வது பக்கம் 5-வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன்னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திர மாய்ப் போய்விட்டது.

ஒன்று நிர்மாணத் திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டிலொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த செய்யப் படும் சூழ்ச்சியாகிய பார்ப்பனக் காங்கிரசோ, சுயராஜ்யக் கட்சியோ தேசத் துரோகத்திற்கும் மற்ற வகுப்புத் துரோகத்திற்கும்தான் உதவும் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அதில் சேரக்கூடாது என்பதும் டாக்டர் கிச்சுலுவின் உபதேசத்தால் விளங்கி விட்டது. ஆதலால் இனியாவது மகமதியர்கள் போலிகளை நம்பி மோசம் போகாமல் கண் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926

தமிழ் ஓவியா said...


தமிழன்

முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத் தியாதாசப் பண்டிதரவர்களால் தமிழன் என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத் திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று.

மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத் திருக்கும் திரு.பி.எம். இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாத முதல் வெளியிடப் படுமென தெரிவிக் கிறோம். திரு. இராஜத் தினம் அவர் களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறு மென நம்புகி றோம்.

- குடிஅரசு - செய்தி 04.07.1926

அயோத்திதாச பண்டிதர் தாழ்த் தப்பட்டோரின் பாதுகாவலர் - பார்ப் பனர்களின் பிறவி எதிரி! ஒரு பைசாத் தமிழன் எனும் இதழ் நடத்தி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை எழுச்சியூட்டியவர்! மிகச் சிறந்த சித்த மருத்துவர்! மிகச் சிறந்த கல்விமான்! மிகச் சிறந்த பட்டறிவாளர்!

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடுகாரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ராஜரிஷி பிர்மரிஷி என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று என்னமாய் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினா மாக்களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை.

எங்கோ ஒரு மூலையில் ஒன்றரை அங்கு லத்தில் பொது ஜனங்கள் ராஜினா மாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்ட வில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுத வில்லை. ஒரு வயிற்றுச் சோத்துப் பார்ப்பனன் ஒரு உத்தி யோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பி யிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டு போய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்.

இது போலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வருகிறார்கள். இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத் தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன்வரலாகாதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்!

பார்ப்பனரல்லாத பத்திரிகைளைப் பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும் போது பத்திரிகையை பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசி யுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச் சாட்சியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை ஸ்ரீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் பிராமணலரல்லா தாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும் பலித்துவிடும்!

- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926

தமிழ் ஓவியா said...

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்! தமிழர் தலைவர்
நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப் போராளி எல்.ஜி. என்ற நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (17.5.2013) நடைபெற்றது. எல்.ஜி.அண்ணா வரவேற்றுப் பேசினார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரின் உரைக்குப் பின்னர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

ஈழத்தமிழர்களை ஒரு போதும் அழிக்க முடியாது; ராஜபக்சே போன்ற சிலர் வேண்டு மானால் ஒழிந்து விட்டார்கள் என்று கூறலாம். தற்போது டெசோ அமைப்பு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. சரித்திரம் மீண்டும் திரும்பும். வீழ்வது முக்கியம் அல்ல.

மீண்டும் எழுவோம். டெசோ அமைப்பு பற்றி யார் கேலி பேசினாலும், டெசோ தனது இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடும். எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலில் ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்களின் போராட்டங்கள் குறித்தும், பிரபாகரன் குறித்தும், தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

இதிலுள்ள கருத்துகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான இளைஞர் அணியினர் உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு அடுத்த விடியல் எப்போது என்றால், உலக தமிழர்கள் ஆதரவு கொடுப்பதன் மூலம்தான் கிடைக்கும்; அப்பொழுதுதான் ராஜ பக்சே ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்தநூல்கள்பற்றி ஆய்வுச்சொற்பொழிவு சிறப் பான முறையில் தஞ்சாவூரில் நடைபெறும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், குத்தாலம் கல்யாணம், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் அறந்தாங்கி ராஜன், புதுக்கோட்டை விஜயா, ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், அத்திவெட்டி வீரையன், கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் இரா.குணசேகரன், சிதம்பரம், ஆர்.எஸ். அன்பழகன், சீனிவாசன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நூலை எழுதிய எல்.கணேசன் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன் னாடை அணிவித்து பாராட்டினார். சிறப்பு விருந் தினர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பொன் னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

நூல் ஆசிரியர் எல்.கணேசன் நன்றி கூறினார்.

தளபதி மு.க. ஸ்டாலின் உரை

அண்ணன் எல்.ஜி. அவர்களாலேயே இந்நூல் தயாரிக்கப்பட்டு, அதனையே பல்வேறு நிகழ்வுகளை எழுதி, ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறார். அதைத்தான் அய்யா ஆசிரியர் பெருந்தகை அவர்கள் பெருமையோடு இங்கே குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள். ஈழம் தமிழ் ஆங்கில நூல். அந்நூலிலே இருக்கக்கூடிய விவரங்களையெல்லாம் அய்யா ஆசிரியர் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். அதைக் குறிப்பாக நான் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டவேண்டுமானால், மாநிலங்களவையிலே அவர் ஆற்றியிருக்கக் கூடிய உரைகள், அந்த உரைகள் மட்டுமல்ல, இன்னும் சில தகவல்களைச் சேர்த்து இந்நூலினை உருவாக்கி இருக்கிறார்.

மிசா சட்டம் வந்து, தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டு, கலைக்கப்பட்ட அடுத்த விநாடியே, ஆசிரியர் அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்கள். நான் ஒருநாள் கழித்துதான் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்; இரவு மணி 12. அப்பொழுது லைட்டெல்லாம் கிடையாது; ஒரே கும்மிருட்டு தான். இப்பொழுது எல்லா வசதிகளும் சிறைச் சாலைகளில் இருக்கிறது.

ஊக்கத்தை, உற்சாகத்தை வழங்கினார் ஆசிரியர்

ஒரு செல்லைத் திறந்து என்னை உள்ளே தள்ளு கிறார்கள். அங்கே ஏற்கெனவே பத்து, பதினைந்து பேர் இருக்கிறார்கள். இருட்டு என்பதால் எதுவுமே தெரியவில்லை. நான் உள்ளே போன உடனே, ஒரு காலினை மிதித்தேன். நான் மிதித்த கால் எது தெரியுமா? அய்யா ஆசிரியரின் கால்தான். அதனால் தான் என்னவோ, இன்றைக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் என்னை எந்த அளவிற்கு உற்சாகப்படுத்த வேண்டுமோ, ஊக்கப்படுத்தவேண்டுமோ, தனிப் பட்ட ஸ்டாலினிற்காக அல்ல, இந்த இயக்கத்திற் காக, இளைய சமுதாயத்தினருக்காக, நீ இன்னும் பணியாற்றவேண்டும்; தொடர்ந்து உன்னுடைய கடமைகளை ஆற்றவேண்டும் என்று ஊக்கத்தை, உற்சாகத்தை தொடர்ந்து ஆசிரியர் அய்யா அவர்கள் எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்தியா


நம் நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம் குழந்தைகள் உள்ளனர். இதில், 150 கோடிக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும், 5 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம், தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், ஆசியக் குழந்தைகள் ஆணையம், குழந்தைகள் தகவல் தொடர்பு மய்யம் ஆகியன ஆய்வு செய்து மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் மேலே உள்ள விவரங்கள் உள்ளன.

மும்பையில் 70 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியப் பெண்கள் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 63 சதவிகிதம் பெண்கள் சிறுவயதில் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.



இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கோவா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெற் றுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் 2012ஆம் ஆண்டு 570 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் டில்லியிலிருந்து 105 புகார்களும், ஆந்திராவிலிருந்து 43 புகார்களும், தமிழகத்திலிருந்து 8ம் வந்துள்ளன என்று மத்திய அமைச்சர் அகமத் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தை களிடம் தவறாக நடந்துள்ளார்கள்-.

சென்ற 10 ஆண்டுகளில் 48,338 இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 12,000 புகார்கள் அதிகரித்து வந்துள்ளதும், மூன்றில் ஒரு பாலியல் வன்முறை குழந்தை மீது நடத்தப்படுவதும் தெரிய வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 32 சதவிகிதக் குழந்தைகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளான 87 சதவிகித குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதே சித்திரவதையை அனுபவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 18 வயதிற்குட்பட்டோர் பாலியல் வன்முறையில் டில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டா மிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

சர்வதேச அளவில் கணக்கெடுத்து வாட்ச் டாக் இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கொடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 33.6 சதவிகிதம் அதிகரித் துள்ளது. உலகின் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக தென்னாப் பிரிக்கா திகழ்கிறது. இங்கு, 3 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது.

11-17 வயது வரையிலான 6 குழந்தைகளில் ஒருவர் அதாவது 16.5 சதவிகிதம் பிரிட்டனில் (U.S) பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க, அய்க்கிய நாடுகளில் (U.K) 1992-2010 வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

இந்தோனேஷியாவில் 2012ஆம் ஆண்டில் குழந்தைகள் மீது பதிவான 2,367 வன்முறை வழக்குகளில் 62 சதவிகிதம் பாலியல் வன்முறை தொடர்பானது என்றும், கனடாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 54 சதவிகிதத் தினர் தேவையில்லாத பாலியல் கவனத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


எஸ்.ஏ. வெங்கட்ராமன் என்ற அய்.சி.எஸ். பார்ப்பனர் லஞ்சம் வாங்கினார் என்பது நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், பார்ப்பன ஏடுகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

என்னை மாற்றிய புத்தகம்

இந்நூலை வாசித்தால்...!

நான் என் இதுநாள் வரையிலான பொதுவெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒரு தருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப் பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன் - ஜெயமோகன்.

சில நாட்களாகவே நம் எழுத்தாளர் களுக்கு உள்ளொளி தரிசனம் போதவில்லை என்பது மாதிரி ஓர் எண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயமோகன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பட்டுப்புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை தானே உருவாக்கிக் கொண்டு, அதுதான் உலகம் என்று நம்புவதைப் போல நம் எழுத்தாளர்கள் ஒரு கற்பனாவாத உலகத்தை உருவாக்கிக் கொண்டு, அவ்வுலகில் அவர்கள் சிந்தனைகளாலேயே நிகழும் சம்பவங்களை உலக யதார்த்தமாக பொதுமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஜெயமோகனின் உலக அனுபவம் எவ்வளவு சிறிய வட்டத்துக்குள் நிகழ்கிறது என்பதற்கு இப்பதிவு நல்ல உதாரணம்.

பெண்களைக் குறித்து இம்மாதிரி அல்லது இதைவிட மோசமான கருத்துகளை ஒரு சாமா னியன் கொண்டிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களைக் குறித்த படுமோசமான, ஆபாசமான கருத்துகளையே கொண்டி ருந்தேன். என் தலையில் நாலு குட்டு குட்டி, இதைப் படிச்சிப்பார் என்றொரு சிறுநூலை வாங்கிப் பரிசளித்தார் அண்ணன் எஸ்.பாலபாரதி.

அந்நூலை வாசித்த பிறகு என் செயல்பாடுகள் பெருமள வில் மாறிவிடவில்லை. ஆனால், பெண்கள் குறித்த என்னுடைய எண்ணங்கள் தவறு என்கிற புரிதல் மட்டும் தோன்றியது. பாலபாரதியிடம் இந்த மனோபாவ மாற்றத் தைச் சொன்னேன். அது போதும், நீ மாறணும்னு அவசியமில்லை.

பெண்ணியப் போராளியா கொடி பிடிக்கணும்னும் தேவை யில்லை. நீ நம்பிக்கிட்டிருக்கிற, செஞ்சிக்கிட்டி ருக்கிற விஷயங்கள் தவறுன்னு உணர்ந்தா போதும். ஒவ்வொரு முறையும் இதே தவறை நீ செய்யும்போதும், குறைந்தபட்சம் ஒரு குற்றவுணர்வு இருக்கும். அது போதும் என்றார்.

அதுவரை கட்டமைத்து வைத்திருந்த பல பிம்பங்களை உடைத்த அந்நூலில் நம் பாட்டி, அம்மா, சகோதரி, பக்கத்து வீட்டுப் பெண், எதிர்த்த வீட்டுப்பெண் என்று உலகின் எல்லாப் பெண்களும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கான விடை இருக்கிறது. மிகச்சிறிய நூல். எழுதியவர் ஜெயமோகன் மாதிரி பெரிய எழுத்தாளரும் அல்ல. அவருக்கு இலக்கியம் தெரியாது.

எழுத்துநடையும்கூட படுசுமார்தான். ஆனால் சவாலாகவே சொல்கிறேன். அந்நூலை வாசிப்பவர்களுக்கு மிகச்சிறிய அளவிலாவது மனமாற்றம் தோன்றியே தீரும். மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வாசித்தே ஆகவேண்டிய புத்தகம். தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?

ஜெயமோகனுக்கு யாராவது இப்புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம்.

- யுவகிருஷ்ணா

தமிழ் ஓவியா said...

நடிகர் நாகேஷ்

வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணங்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு அய்யர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.

எங்கள் குடும்பத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. காரணம், எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்ததுதான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத் தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.

ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை.

இது நெம்பர் 1.

நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை.
அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

- சிட்னி 'தமிழ் முழக்கம்'
வானொலிப் பேட்டியில் நடிகர் நாகேஷ்

தமிழ் ஓவியா said...



முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், பிரதமர், ஜனாதிபதின்னு அனைவருமே பப்ளிக் சர்வண்ட் ஆப் சிவில்தான். அவங்க மக்களுக்காக சேவை செய்ய மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் சாதாரண ஊழியர்கள். அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தில்லை. மக்கள் அவர்களுக்கு அதிக மரியாதை தரவும் அவர்கள் தங்களை ஏதோ தேவதூதர்கள் என்று நினைத்து வானில் பறப்பதும், அட்டூழியங்கள் செய்வதுமாக இருக்கிறார்கள். அந்தத் துணிச்சலில்தான் ஏகப்பட்ட தவறுகள், ஊழல்கள் பண்றாங்க.

நடிகர் கமலஹாசன்

தமிழ் ஓவியா said...

கீதை: சில கேள்விகள்


பாபு பீ.கே.

பகவத்கீதை என்பதே நம் புழக்கத் தில் இருப்பதால் அப்படியே குறிப் பிடுகிறேன். ஏனெனில், இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால்.

1. முதலில் இதன் காலம் வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது?

மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. அதாவது திரேதாயுகத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாக.

யுகங்கள் ஒரு வரிசைப் பார்வை

சத்ய யுகம் 1,728,000

திரேத யுகம் 1,296,000

துவாபர யுகம் 864,000

கலியுகம் 432,000

நாம் கலியுகத்தின் முதல் வருடத்தில் இருக்கின்றோம் என்று கொண்டால்கூட 21,60,000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வு புவிமாறுதல்களுக்கு உட்படாமல் இன்றைக்கு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்றிருந்த நிலப்பரப்பின் தொடர்புகள் எப்படி இருந்தன?

2. இரண்டாவது, நிகழ்விடம்.

ஒரு அக்குரோணி படை என்பது 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 காலாட்படை வீரர்கள் கொண்டதாம். அப்படி மொத்தம் 18 அக்குரோணிப் படைகள் குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்றதாம்.

தேர்ப்படை 21,870 x 18 = 3,93,660

யானைப்படை 21,870 x 18 = 3,93,660

குதிரைப்படை 65,610 x 18 = 11,80,980

காலாட்படை 1,09,350 x 18 = 19,68,300

அக்காலத்தில் இருந்த மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அத்தனை பேருக்கான உணவு உற்பத்தி இருந்திருக்குமா? அப்படி 18 அக்குரோணிப் படைகளும் நிற்குமளவிற்கு குருசேத்திரம் அத்தனை பெரிய இடமா? அத்தனை பெரிய மைதானமா?

3. மூன்றாவது, கிருஷ்ணன் யார்? அத்தனைப் பெரிய போர்ப்படைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் 18 அத்தியாயங்கள் வரக்கூடிய இந்த பகவத்கீதையை உபதேசிப்பது... உபதேசனை கூட இல்லை... ஒரு கேள்வி _- பதில் விவாதம் சாத்தியமா? அதுவரையில் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேலும், இந்தக் கிருஷ்ணரைப் பற்றியும் வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.)

4. இனி பகவத்கீதைக்குள் செல்வோம். சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம் (அத் 4 -_ சுலோ 13)
நான்கு வர்ணங்களைப் படைத்து ஏன் செயலற்றவராகிறார்?

5. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ (அத் 10 -_ சுலோ 21)
சந்திரன் நட்சத்திரமா?

6. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:| ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: (அத் 18- _ சுலோ 70)

எழுதி வைத்துப் படிக்கப்போகின்றார்கள் என்று எப்படி முன்னரே தெரிந்தது? அர்ஜுனனுக்கு இது அத்தனையும் மனப்பாடமாகி விட்டதா? அர்ஜுனன்தான் இதனை எழுதினாரா அல்லது எழுதச் சொன்னாரா? இல்லை ஞானதிருஷ்டியில் ஒட்டுக்கேட்ட சஞ்சயன்தான் காரணமா?

7. யேப்யந்யதே வதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: |
தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் (அத் 9 - சுலோ 23)
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: (அத் 9- _ சுலோ 30)

23ஆம் சுலோகத்தில், அந்நிய தேவதைகளைத் தொழுபவர்கள் (அப்படியென்றால் அப்பொழுது பல கடவுள்கள் இருந்திருக்கின்றனர்.) அறியாமையில்கூட என்னையே தொழுகின்றனர் என்ற உண்மையைக் கூறிய கிருஷ்ணன் பின்,

30ஆம் சுலோகத்தில், மற்ற தெய்வங்களை வணங்காது என்னை வணங்குபவனையே நல்லவன் என்று கொள் என்று ஏன் முரண்பட்டுச் சொல்கிறார்? யாரை வணங்கினாலும், இவரைத்தானே வந்தடைகின்றது, பின் எப்படி அவர்கள் கெட்டவர்களாவார்கள்?

8. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்ட வாநாம் தநஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: (அத் 10-சுலோ 37)

பாண்டவர்களில் இவர் அர்ஜுனன் என்றால்... எதிரில் இருக்கும் அர்ஜுனன் யார்? முனிவர்களின் வியாசர் என்றால், பல ஆயிரம் வருடங்கள் கழித்து மகாபாரதத்தைத் தொகுக்கப் போகும் முனிவரைப் பற்றி முன்னரே தீர்க்கதரிசனம் கூறியுள்ளாரோ?

இன்னும் நிறைய இருக்கின்றது. நினைவில் இருப்பனவற்றைக் கேட்டிருக்கிறேன். வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்தால், மற்றவைகள் நினைவுக்கு வருவதோடு இன்னும் புதிய கேள்விகளும் கிடைக்கலாம்.

இன்னொரு பொதுவான கேள்வி. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றங்களில் ஏன் பகவத்கீதையைக் கொண்டு சத்தியம் வாங்குகின்றார்கள்? அப்படிச் சத்தியம் செய்தவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?

தமிழ் ஓவியா said...

கலப்புத் திருமணங்கள்



கலப்புத் திருமணம் செய்து கொள்பவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபாய் பரிசுத்தொகையினை உயர்த்தி 75,000 ரூபாயாக உயர்த்தி இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீரபத்திர சிங் அறிவித்துள்ளார்.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 68.50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 25 சதவிகிதம் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர்.

கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் ஜாதிகள் ஒழிய வாய்ப்பு உள்ளது. 2009_2013ஆம் ஆண்டு தற்போது வரை 1,113 கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

ஜாதி என்ற தடையை மீறி இளம்பெண் களும், வாலிபர்களும் கலப்புத் திருமணம் செய்வதை ஊக்கப்படுத்தவே பரிசுத் தொகை வழங்கப்படுவதாக சமூக நீதித்துறைச் சிறப்புச் செயலர் சூட் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பிரிட்டனில் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கீகாரம்


பிரிட்டன் நாட்டில் வசிக்கும் 4 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டப் பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் ஜாதி அடிப்படையில் வேற்றுமை காட்டுவது சட்டப்படிக் குற்றம் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு ராணியின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

2010ஆம் ஆண்டின் சமத்துவச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஜாதியையும் ஒரு பிரிவாக்கி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஜாதி வேறுபாட்டுக்கு எதிராக தெற்கு ஆசியாவிற்கு வெளியே இதுபோன்ற சட்டங்கள் இயற்றுவதில் பிரிட்டன் முதல் நாடாகும் என்ற பெருமையையும் பெறுகிறது.

வருங்காலத்தில் ஜாதியானது இனத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும் பிரிட்டனில் உள்ள ஆசிரியர்களின் வாழ்க்கை இந்த ஜாதி வெறுப்பு உணர்ச்சிகளால் மங்கிப்போய் இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் இனி புது நம்பிக்கை ஏற்படும் என்று தேசிய ஜாதி மதமற்ற அமைப்பின் ஆணையர் கெய்த் போர்டியஸ்வுட் கூறியுள்ளார்.

பன்னாட்டுத் தலித்களின் ஒன்றிணைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ரிக்கி நோர்லிண்ட், இந்த முடிவானது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஜாதி வேறுபாடு ஓர் உலகளாவிய பிரச்சினை. உலகத்தின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஃபுல்லர், இது ஒரு நேரடிப் பிரச்சினை. வேலை செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவது தவறு. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு உண்டு. முடிவும் முதலுமாக இது இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

புதிய மூடநம்பிக்கையால் பொருள் இழக்கும் மக்கள்!


அட்சய திருதியை நாளில்

தங்கச் சங்கிலி

வாங்கச் சென்ற

அங்கம்மாளின்

கழுத்து நகை

களவு போனது

என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகைகளில் வருவது வழக்கமாகிவிட்டது. அங்கம்மாக்களின் பெயர்கள்தான் மாறுகின் றனவே அன்றி, செய்தி இன்னும் தொடரத்தான் செய்கிறது.

பழைய மூடநம்பிக்கைகள் காலாவதியாகிப் போக புதிய மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன. வளர்ந்துவிட்ட அறிவியல் ஊடகங்கள் காசு பண்ண இதனை மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றன. நாய் விற்ற காசு குரைப்பதில்லையே.



நல்ல நாளில் தங்கம் வாங்கப்போகும் ஒருவித மூடநம்பிக்கை நம் சமூகத்தில் நீண்ட நாட்களாவே உண்டு. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் நகைக்கடைகள் கூட்டமில் லாமல் இருக்கும். மக்கள் தொகை பெருகப் பெருக கடைகளும் அதிகரித்தன. அவர்கள் தமது வணிகத்தைப் பெருக்க நகைச்சீட்டு சேர்க்கும் திட்டம் போல சில கவர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவரத் தொடங்கினார்கள்.

பின்னர் திருமண சீசன் இல்லாத காலங்களில் வணிகம் செய்ய கிராமுக்கு இவ்வளவு குறைவு என்றோ, சில அன்பளிப்புகளை அளித்தோ வாடிக்கை யாளர்களை ஈர்த்தார்கள். சென்னையில் ஒரு புகழ் பெற்ற தங்க நகை அங்காடியின் வார விடுமுறையே செவ்வாய்க் கிழமைதான்.

ஆனால், இன்று அந்தக் கடை பல கிளைகளைத் திறந்தும் கூட்டம் அலைமோத, வார விடுமுறை இல்லாமலேயே அந்தக் கடைகள் இயங்குகின்றன. வாடிக்கையாளர்களும் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நகை வாங்குகிறார்கள்.

இத்தகைய சூழலில்தான் 10 ஆண்டுகளுக்கு முன் அட்சய திருதியை என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள் தங்க வணிகர்கள். அந்த நாளில் நகை வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கிவிடுவது என பெண்கள் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. இப்போது முன் நாட்களிலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு நாள் அட்சய திருதியை என்பது கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை வாரமாகிவிட்டது. (எப்படி ஆனதோ?) அட்சய திருதியை ஆஃபரெல்லாம் வந்துவிட்டது.

இந்த மே 9 அன்று நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டது. `கடவுளின் பெயரில் ஏமா(ற்)றலாமா? என்பது அதன் தலைப்பு. ``அட்சய திருதியை நாளை முன்னிட்டு கிராமுக்கு இவ்வளவு தள்ளுபடி, இலவசப் பரிசு, அட்சய திருதியை ஆஃபர் என்பதைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்கள் கடையில் அப்படியெல்லாம் இல்லை என்கிறது அந்த விளம்பரம்.

தமிழ் ஓவியா said...

அட்சய திருதியையைப் பயன்படுத்தி நகைக்கடைகள் செய்யும் தில்லு முல்லுகளை ஒரு நகைக்கடையே போட்டுக் கொடுத்துவிட்டது.

தங்கம் வாங்கும் போது அதன் தரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, நல்ல நாள்,- நேரம்,-அட்சய திருதியை போன்றவற்றைப் பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம்தானே! நகை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணா. அவர் 2013 மே 8 -10 நக்கீரனில் கூறியுள்ள தகவல்கள் இதோ:

காய்கறிக்காரரிடம் அடித்துப் பிடித்து சண்டை போட்டு கறாராக அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என விலை குறைத்து காய்கறிகள் வாங்கும் திறமை கொண்ட பெண்கள்... பல்லாயிரங்களைக் கொடுத்து, நகை வாங்குவதில் ஏமாந்துவிடுகிறார்கள். பலரும் நகை வாங்கும்போது... அதுல இந்திய தர நிர்ணய அமைப்பான பி.அய்.எஸ். (Berua of Indian Standard) நகைகளுக்கு வழங்கும் ஹால் மார்க் (Hall Mark) முத்திரை இருந்தாலே 24 கேரட் தங்கம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால், 24 கேரட் தங்கம் என்பது நகைகளாக வடிவமைக்கும்போது 22 கேரட்தான் இருக்கும். ஆக, ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட 22 கேரட் தங்க நகை 916 அளவு துல்லியம் இருக்கும். அதேபோல் 21 கேரட்- 875 துல்லியம். 18 கேரட் - 750 துல்லியம், 17 கேரட்-708 துல்லியம், 14 கேரட்- 585 துல்லியம் என குறைந்த க்வாலிட்டி நகைகளுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பினரால் (பிஅய்.எஸ்.) ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால், இதைப் பலரும் கவனிப்பதில்லை. லென்ஸ் மூலம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

விலை குறைய குறைய அந்த நகையின் துல்லியமும் குறைந்திருக்கும். அதனால்தான் ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடைக்குக் கொண்டு போய் விற்கும்போது அதே ரேட்டுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் வெறும் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருக்கிறதா என்று பார்க்காமல் எவ்வளவு துல்லியம் என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து நகைக்கடைக்காரர்களின் சேதாரம் என்ற சீட்டிங் என்று கூறியுள்ளார்.

பகுத்தறிவு என்பது நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் உரசிப்பார்க்கும் உரைக்கல். பகுத்தறிவு என்றவுடன் கடவுள் மறுப்பு மட்டுமே பலரது நினைவுக்கு வருகிறது. கூட்டமில்லாத நாளில் கடைவீதிக்குச் சென்று பொருள் வாங்குவதுகூட பகுத்தறிவுதான். தங்கத் தின் மதிப்பை உலகம் உயர்த்தி வைத்துள்ளதால் அது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.

அதனால், இப்போது ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவோரைவிட முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோர் அதிகமாகிவிட்டனர். இச்சூழலில் தான் அட்சய திருதியை போன்ற மூடநம்பிக்கை களை தங்க நகை வணிகம் செய்வோர் பயன் படுத்துகின்றனர்.

அட்சய திருதியை நாள் உருவாக்கப்பட்டதிலிருந்து நகைக் கடைக் காரர்களுக்கு வேண்டுமானால் பணம் குவியுமே தவிர நகை வாங்கியவனுக்குக் குவியுமா? கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நகை வாங்கியோரெல்லாம் கோடீசுவரர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா? அந்த நாளில் கூடிய கூட்டத்தில், உள்ள நகையையும் பறிகொடுத்தவர்களுக்கு அட்சய திருதியை அந்த நகையைத் திருப்பிக் கொடுக்குமா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அட்சய திருதியை மூடநம்பிக்கை என்பது இல்லை. அப்போதும் மக்கள் நகை வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கு வளம் இல்லாமல் போய்விட்டதா? அல்லது வளம் பெருகாமல் போய்விட்டதா?

தமிழகத்தின் பிரபல கோவில் பட்டர் ஒருவர் ஆருடம் கூறியிருக்கிறார். அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட 3 மணிநேரத்தில் நகை வாங்கி ஆண்டவன் முன் வைத்து வணங்கி னால் வளம் பெருகுமாம். அந்த 3 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் வாங்கினால் என்னாகும் என்று ஏனோ அவர் சொல்லவில்லை.

உழைப்புதான் மனிதனை உயர்த்தும்; அறிவுதான் மனிதனைக் காக்கும் என்பதை உணரும் காலம் வரும் வரை இந்த மூடநம்பிக்கைகளால் மக்கள் தமது செல்வத்தை இழந்துகொண்டுதான் இருப்பார்கள்.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

பொறுமைக்கு வலிமை உண்டு


விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை

நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள் ரத்தம் சிந்தக்கூடாது. எல்லோரும் சகோதரர்கள் - சிறை யிலே அவர்கள் இருக்கவேண்டும் - அவர்களைப் பழிவாங்க வேண்டும் என நினைத்து, அந்தத் துன்பத்திலே மகிழக்கூடியவர்கள் அல்லர். தயவு செய்து அமைதியாக யோசியுங்கள்.



நீங்கள் எடுத்த நிலைப்பாடு இருக்கிறதே, அது சரியான நிலைப்பாடு அல்ல. தவறான பாதை. சில நேரங்களிலே சில இலக்குகளை விசாரித்துக் கொண்டு ஊருக்குச் செல்லலாம். போகிற நேரத்திலே கொஞ்சதூரம் போனதும்தான் தவறான பாதை எனத் தெரிகிறது. தவறான பாதையாக இருந்தாலும், கடைசிவரைப் போவேன் என்றால், அது அறிவுடைமை அல்ல.

கொஞ்சதூரம் போய் தவறான பாதை என நினைத்தால், சரியான பாதைக்கு வரவேண்டும். எனவே, தவறான பாதைக்குப் போனவர்களையும், சரியான பாதைக்குக் கொண்டு வரவும். அதேநேரத்தில் நல்லொழுக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கி தமிழ்நாடு என்பதிருக்கிறதே, இது சமத்துவ பூமி, சமூகநீதிக் கொடி பறக்கக் கூடிய பெரியாரின் மண் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த வாய்ப்புக்காக இந்த மாநாடு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்தக் காரணத்தாலும் தோழர்களே நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள்; உங்கள் பொறுமைக்கு வலிமை உண்டு. மேடையில் பேசுவதைவிட, அமைதிக்கு மிக ஆழமான சொல்வன்மை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த வகையிலே உங்களுடைய சகிப்புத் தன்மை வரவேற்கத்தகுந்தது. பின்பற்றத் தகுந்தது. சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும். எல்லோரும் கைகோர்க்க வேண்டும். யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்ற காரணத்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.

பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக்கூடாது. காரணம், பொதுச்சொத்து நம்முடைய சொத்து. அது யாருடைய சொத்தும் அல்ல. அதற்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு வரி கட்ட வேண்டியவர்கள் நாம்தான் என்கிற உணர்வைப் பெற்று ஒரு புது ஒழுங்கை உருவாக்குவோம்.

இந்த மாநாடு பொதுச் சொத்தைப் பாதுகாக்கிற மாநாடு; பொது ஒழுங்கை நிலை நிறுத்துகிற மாநாடு; பொது உறவைக் கட்டுகிற மாநாடு. எனவே, இந்த மாநாடு வாழ்க, வளர்க! அந்த நோக்கம் நிறைவேறுக!!

- சென்னை,பெரியார் திடலில் 7.5.2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி?


இரண்டாம் எலிசபெத்

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது அய்.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கை.

இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்பற்றி, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது - இரண்டாம் முறையாக.

முன்பு, முதற்கூட்டத்தில் - நடுநிலை வகித்த இந்தத் தீர்மானம் குறித்து 47 நாடுகளில், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே - அதன் வன்மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளன.

இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது.

காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளாகும்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது; ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத்தினர்.

டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.

வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மவுனியாகவே - இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப்போல் இருந்தது!

எப்படியோ காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திடவேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துவிட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!

உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த இராஜபக்சே அரசு ஏதோ பெரிய சாதனையாளர்களைப்போல காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.

என்றாலும், இதை உணர்ந்துதான்போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார்; அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்குச் சற்று ஆறுதல் தருகிறது!

1973 ஆம் ஆண்டுக்குப்பின், பிரிட்டிஷ் இராணியார் (அவர்தான் அதன் தலைவர்) கலந்துகொள்ளாமல் - பங்கேற்காமல் நடைபெறு வதே முதல் முறையாகும்!

ராஜரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அந்த வார்த்தை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்பு களுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...


உ.பி.யில் பார்ப்பனர் காட்டில் மழையா?


இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத் தில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள்; அவர்கள் கரங்களில்தான் அதிகாரம் வர வேண்டும் என்று ஓர் இயக்கத்தை அகில இந்திய அளவில் உருவாக்கியவர் கன்ஷிராம்!

உத்தரப்பிரதேச அரசியலில் அது கையும் கொடுத்தது. அதன் அடிப்படையில்தான் லக்னோவில் மூன்று நாட்கள் மிகப் பெரிய அளவில் பெரியார் மேளாவும் நடத்தப்பட்டது - மாயாவதி அப்பொழுது முதல் அமைச்சராகவும் இருந்தார். (1995).

மாயாவதி எந்த அளவுக்குச் சென் றார் தெரியுமா? பார்ப்பனர்களைச் செருப்பால் அடியுங்கள் என்று கூறும் அளவுக்கு அவரது வார்த்தைகள் எகிறிப் பாய்ந்தன.

உ.பி.யைப் பொறுத்தவரை 14 விழுக்காடு வாக்காளர்கள் பார்ப் பனர்கள்; மாயாவதியின் மூளையில் குயுக்தியாக ஒரு பொறி தட்டியது. பகுஜன் என்பதைவிட வெகுஜன் என்று தலை கீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனர்களின் வாக்கு வங்கியைத் தம் பக்கம் ஈர்க்கலாம் என்று கணக் குப் போட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராகவே சதீஷ் சந்திரா மிஸ்ரா என்ற பார்ப்பனரை நியமித்தார்.

2007 சட்டப் பேரவைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு 51 இடங்களை லட்டாகத் தூக்கிக் கொடுத்தார். 2009இல் நடைபெற்ற மக்கள வைத் தேர்தலிலே பார்ப்பனர்களுக்கு 20 இடங்களைத் தாரை வார்த்தார். தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுத்த இடங்களோ வெறும் 17 தான். (வாழ்க சமூக நீதி!)

2007இல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2012 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.

2014இல் மக்களவைத் தேர்தல் நடப்பதையொட்டி உத்தரப்பிரதேசத் தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2007இல் பின்பற்றிய யுக்தியை - தற்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் இப்படி ஒரு வியூகம் வகுத்துள்ளார். பரசுராமன் விழா என்று பெயரில் விழா ஏற்பாடு செய் யப்பட்டது.

பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் பார்ப் பனர்களுக்குச் சரமாரியான சலுகை களை வாரிக் கொட்டியுள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை நாடாளு மன்றத்தில் தோற்கடித்தது சமாஜ் வாடி கட்சிதான் என்று மார் தட்டியுள்ளார்.

பிராமணர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதலிடத்தில் இருப் பது எங்கள் கட்சிதான்; கடந்த ஆட்சி யில் பிராமணர்கள்மீது போடப்பட் டுள்ள வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படும் என்று நாக்கில் தேன் தடவியுள்ளார்.

உ.பி.யின் இன்னொரு பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநாட்டைக் கூட்டி அதில் கட்சியின் பொதுச் செயலாளரான சதீஷ்சந்திரமிஸ்ரா பிராமணர்களுக்கு பாதுகாப்பான கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே! என்று கூறியுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சார்ந்த முதல் அமைச்சரும் சரி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதியும் சரி, உயர் ஜாதி பார்ப்பனர்களைத் தாஜா செய்வதற் காகக் களத்தில் குதித்து விட்டனர்! (இதில் மற்றும் ஒற்றுமைக் கூட்டு!)

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரின் கொழுத்த ஆதர வைப் பெற்று மஞ்சள் குளிப்பது மட்டும் பார்ப்பனர்கள்தாம்.

ஆம், உ.பி.யில் பார்ப்பனர்கள் காட்டில்தான் மழை பெய்கிறது. ஆனாலும் இதனையும் தாண்டி, கான்ஷிராம் அடித்தளம் போட்டுக் கொடுத்த - விதை ஊன்றிய அந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினரின் அந்த அழுத்தமான பெரும்பாலான மக்கள் இந்த இரு அரசியல் கட்சி களையும் தூக்கி எறிந்தால் ஆச்சரி யப்படுவதற்கில்லை.

இன்றைய நிலையில் பிற கட்சிகள் - ஏன் காங்கிரஸ்கூட இந்தக் கோணத்தில் சிந்திக்கலாமே! அறு வடை சுலபமாகக் கிடைக்குமே!

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்த வரை ஓகோ என்று வளர்ச்சி அடைந்து விட்ட மாநிலம் அல்ல.

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்த இடத்தில் கால் ஊன்றிடவில்லை. கல்வி, பொருளாதாரம் இவற்றில் பாதாள பள்ளத்தில்தான் கிடக்கின்றனர்.

அவர்களுக்காக யார் குரலை கொடுக்க முன் வருவார்களோ அவர்கள் பக்கம் அரசியல் காற்றடிக்க வாய்ப்பு உண்டே!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

ஞானோதயம்

செய்தி: விவசாய நாடு என்ற பெருமையை இந்தியா இழந்து விட்டது வருத்தம் அளிக்கிறது.
குஜராத் முதல்வர் மோடி

சிந்தனை: மோடி விரும்பும் இந்துத்துவாவில் விவசாயம்தான் பாவத் தொழில் ஆயிற்றே - இப் பொழுது என்ன திடீர் ஞானோதயம்?

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் போதை - சூதாட்டம் கழக ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (24.5.2013)



1 சூதாட்டம் சூதாட்டம்
கிரிக்கெட் சூதாட்டம்!

2. மத்திய அரசே மத்திய அரசே!
அனுமதிக்காதே, அனுமதிக்காதே
சூதாட்ட விளையாட்டை சூதாட்ட விளையாட்டை
அனுமதிக்காதே, அனுமதிக்காதே!

3. கிரிக்கெட் விளையாட்டா
சூதாட்ட விளையாட்டா
வெற்றி பெறுவது யார்?
வெற்றி பெறுவது யார்?
சூதாட்டக்காரர்களா?
விளையாட்டுக்காரர்களா?

4. அய்பிஎல் கிரிக்கெட்டா
கறுப்புப்பண சந்தையா?
கறுப்புப்பண சந்தையா?

5. வெட்கம்! வெட்கம்!
விளையாட்டின் பேராலே
விளையாட்டின் பேராலே
வர்த்தகச் சூதாட்டமா?
வர்த்தகச் சூதாட்டமா?

6. விளையாட்டின் சிறப்பை
விளையாட்டின் சிறப்பை
கொச்சைப்படுத்தும்
கொச்சைப்படுத்தும்
கிரிக்கெட்டை, கிரிக்கெட்டை
தடைசெய்! தடை செய்!
கிரிக்கெட்டைத் தடை செய்!

7. இளைஞர்களே, இளைஞர்களே,
மாணவர்களே, மாணவர்களே,
பலியாகாதீர்! பலியாகாதீர்!!
கிரிக்கெட் போதைக்கு
கிரிக்கெட் போதைக்கு
பலியாகாதீர்! பலியாகாதீர்!

8. மத்திய அரசே, மத்திய அரசே!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
கிரிக்கெட் பேராலே
கிரிக்கெட் பேராலே
மோசடி செய்யும், மோசடி செய்யும்
பெரிய மனிதர்கள் மீது
பெரிய மனிதர்கள் மீது
நடவடிக்கை எடு - நடவடிக்கை எடு!

9. மத்திய அரசே, மத்திய அரசே
ஆதரவு கொடு, ஆதரவு கொடு!
சடுகுடு ஆட்டத்துக்கு
சடுகுடு ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஆதரவு கொடு! ஆதரவு கொடு!

10. பிரச்சாரம் பிரச்சாரம்!
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
பிரச்சாரம் பிரச்சாரம்!
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்!

11. கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
முதலாளிகளின், முதலாளிகளின்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?

12. வெட்கக் கேடு, வெட்கக்கேடு
விளையாட்டுக்காரர்கள்
விளையாட்டுக்காரர்கள்
ஏலம் போவது - ஏலம் போவது
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!

13. தடை செய் - தடை செய்!
சூதாட்டக் கிரிக்கெட்டை
சூதாட்டக் கிரிக்கெட்டை
தடை செய்! தடை செய்!

- திராவிடர் கழகம் -

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார்.

விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந் தது.

வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங் கினார். விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

விடுதலை போராட் டத்தில் உயிரிழப்பு என் பது எதிர்பாராத ஒன் றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர் களை மட்டும் படு கொலை செய்யாமல், பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளையும், பெண் களையும், முதியவர்களை யும், மாற்றுத்திறனாளி களையும் கொன்று குவித்துள்ளனர்.

விடு தலை உணர்வு உள்ள யாரும் மிஞ்சக்கூடாது என்பதற்காக பிஞ்சு குழந்தைகளைக்கூட கொன்று குவித்தது தான் இனப்படுகொலைக்கு சாட்சியாக மாறி உள்ளது. போர் நடக்கும் போது உலக நாடுகள் வேடிக்கை பார்த்தா லும், மனித உரிமை ஆர் வலர்களும், ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ள வர்களும் சிங்கள இன வெறியர்கள் நடத்தியது இனப்படுகொலை என் பதை உணர்ந்து வரு கிறார்கள்.

தனிஈழம் தேவை என் பதையும் உணரத் தொடங்கி உள்ளனர். அதற்கு முன்னோட்ட மாக தான் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் சிங்கள அரசுக்கு எதி ரான தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு சூழல் வளர்ந்து உள்ளது.

ஆயுதம் ஏந்தி போராடி ஈழத்தை வென் றெடுக்க முயற்சிப்பதை விட சர்வ நாடுகளின் சமுதாயத்தின் ஆதரவை திரட்டி அறவழியில் ஈழத்தை பெறவும், நீதியை பெறுவதுடன், நம் முன்னால் 3 முக்கிய கடமைகள் உள்ளன.

எஞ்சிய தமிழர்க ளுக்கு மறுவாழ்வு, இனப் படுகொலை குற்றவாளி களுக்கு தண்டனை, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற 3 சவால்களை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாமல், உலக தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

அதற்காக விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடுவ துடன், ஒருமித்த கருத்து கொண்டவர்களிடம் கைகோத்து நிற்கும். பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் ஈழ விடுதலை போராட் டத்திற்கான ஆதரவை சர்வதேச அளவில் திரட் டுவோம். சர்வதேச நாடு களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழ பிரச்சி னைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. எனவே நமக்கிடையே உள்ள முரண்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு ஜாதி, மத வேறுபாடு களை களைந்து தமிழர் களாக அணிதிரள் வோம். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுச்செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி யரசு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள் பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றம் பெண்கள்மீதான முக்கிய தீர்ப்பு


டில்லி, மே 20- பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவர், பெண்ணின் தவறான நடத்தையை ஆதாரமாக காட்டி தப்பிக்க முடியாது' என, உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என, கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில், பாலியல் வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண், தவறான நடத்தை உள்ளவர்; பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார்' என, குறிப்பிட்டு இருந்தார். இம்மனு, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எப்.எம்.அய். கலிபுல்லா ஆகியோர் அடங்கிய, அமர்வு' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பாலியல் வன்முறை என்பது, ஒரு பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றம் அல்ல; ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே எதிரான குற்றம். இந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் கடுமையாகவும், தீவிரமாகவும் கையாள வேண்டும். பாதிக்கப் பட்ட பெண், தவறான நடத்தை கொண்டவர் என்பதை ஆதாரமாக காட்டி, குற்றவாளி தப்பிக்க முடியாது. ஒரு பெண் ஏற்கெனவே தவறாக நடந்தார் என்பதால், அவரை, பாலியல் வன்முறை செய்ய உரிமை உள்ளதாக குற்ற வாளி கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த வழக்கில் குற்றவாளி, வன் முறை செய்தவர்தான்; பாதிக்கப் பட்ட பெண் அல்ல. தவறான நடத்தை உடைய பெண் என்பது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒன்று. அவர் பாலியல் வன் முறைக்கு பயன்படுத்தும் பொருள் அல்ல. பாலியல் உறவுக்கு உடன்பட மறுப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு, நீதி பதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

தமிழ் ஓவியா said...


நட்புக்கும் உண்டு அடைக்குந் தாழ்!


பொதுவாக வாழ்க்கையில் நமக் குப் பெருந் துணை -நண்பர்களும், நல்ல புத்தகங்களும்தான்!

அதிலும் குறிப்பாக முதுமையை நோக்கி நாம் பயணிக்கும்போது, நல்ல நண்பர்கள், நமக்கு மிகவும் தேவை. நல்ல புத்தகங்களும் நம்முடன் உறவாகும்!

நமது வாழ்விணையர்களை, தந்தை பெரியார் அவர்கள் உற்ற நண்பர் களாக வாழ வேண்டும் என்று மணவிழா உறுதி ஏற்பில் கூறுவதும், வாழ்த்தில் விளக்குவதும் இதன் அடிப்படையில்தான்!

நட்பு என்பது ஓர் கிடைத்தற்கரிய சொத்து. நமது வீட்டில் உள்ளவர்களை உறவுக்காரர்களாகப் பார்ப்பதைவிட நண்பர்களைப் போல் நெருங்கிப் பழகு வது இருசாரார் உள்ளத்திலும்கூட ஒரு புது உற்சாகத்தைப் புது வெள்ளம் பாய்வது போலக் கொண்டு வருமே!

ஆனால், நண்பர்களில் பல ரகம் உண்டு. அதில் தான் தெளிவுடன் இருக்க வேண்டும்.

சிலர் காரியவாதிகளாக நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து - லாபம் கருதிப் பழகுவார்கள்; உயிரையே தருகிறார் இவர் எனக்காக என்று அவ சரப்பட்டுக் கூறும் சில அவசர சாமி களுக்கு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் எச்சரிக்கையை நகைச்சுவைத் தேனில் குழைத்துக் கூட்டங்களில் தருவார் - நல்ல அனுபவப் பாடம்.

காலை 10 மணிக்குப் பார்த்து, 12 மணிக்குள் எனக்காக உசரையே தரும் அளவுக்கு என் நண்பர் வந்து விட்டானே என்று நீ சொன்னால் அவன் அடுத்த 2 மணிக்கு உன் உசரையே எடுக்கப் போகிறான் என்பதை மனிதர்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பார்!

எவ்வளவு சரியான அனுபவ அறிவுரை அது! எதிலும் எடை போடுவதிலும் நிதானம் தேவை - அதுதான் பிறகு - நமக்கு நிம்மதியைத் தரும்!

சில நண்பர்கள் வெகு சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து காரிய சாதிப்பாளராக இருப்பார்கள்.

முதல் முறை பார்க்கும் போது பரிந் துரை உதவிகளைக் கேட்க மாட்டார்கள்.

முதலில் பழம், வரிசைகள் இத்தியாதி.

கொடுத்து விட்டு நலம் விசாரித்து மட்டும் விடை பெறுவார்கள். என்னங்க எதற்கு வந்தீங்க. என்ன சேதி சொல் லுங்க என்றால் அதெல்லாம் ஒண்ணு மில்லீங்க, உங்க நலம் விசாரிச்சிட்டுப் போகத்தான் வந்தேன் என்று சொல்லிப் போய் விடுவார்கள்! பிறகு ஒரு இடை வெளி விட்டு, மீண்டும் வந்து பரிந்துரை வேண்டுவர்!

ஆம், மனோதத்துவம் புரிந்த நண் பர்கள்!

எதையோ எதிர்பார்த்து வெகு காலம் பழகியிருந்து, பலன் முழுமையும் சுவைத்து விட்டு, கடைசியில் மேலும் விரும்பியதைப் பெற்றுத் தரவில்லை நாம் என்றவுடன் அவர்கள்,

தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளவர்களாகி விடுவார்கள்!

அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகள் போன்ற நண்பர்களைத்தான் அனை வரும் அறிவார்களே - அதுபற்றி விளக்கம் தேவையில்லை!

நண்பர்களைவிட நாம் அடையாளம் காணும்போது, அதற்கு சரியான அளவுகோல் - உரைகல் என்ன தெரி யுமா?

ஒன்று அவருக்கு நம்மால் கிடைத்த போது அவர் காட்டும் நன்றியோ, விசுவாசமோ அல்ல.

நாம் முயன்றும் அது அவருக்குக் கிடைக்காத நிலையிலும், தொடர்ந்து நம்மிடம் நன்றி விசுவாசம் காட்டு கிறார்களே, அவர்கள்தான் கிடைத்தற் கரிய கிழக்குத் திசைகள்! (சூரிய வெளிச்சம்) - இவர்களை கிழப்பருவத் திலும்கூட நம்பலாம் - மனந்திறக்க லாம்.

பாரத்தை இறக்கி வைக்கலாம்.
---------------veramani

தமிழ் ஓவியா said...


அறிவைப் பயன்படுத்தாமல்...


கடவுளையும், மதத்தையும், சாத்திரங் களையும் சம்பந்தப்படுத்திச் செய் யப்பட்ட காரியங்களாலேயே மனிதர்கள் முட்டாள் களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், மடையர்களாகவும் ஆகி விட்டனர். இப்படிப் பட்ட காரியங்களுக்கு அறிவைப் பயன்படுத் தாமல், கடவுளையும், மதத்தையும் ஒத்துக் கொண்டால், அது நாம் முட்டாளாகவும், மடையர்கள் ஆகவும்தானே பயன்படுகின்றது.
(விடுதலை, 13.2.1961)

தமிழ் ஓவியா said...


குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?


ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார்.

பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு.

அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர்.

பலர் அரசுப் பணிகளில் அமர்ந்து அணி செய்கின்றனர்; இயக்க நோக்கிற்காக மட்டுமல்ல; இந்தப் பட்டறை வாழ்வில் புதிய திருப்பத்துக்கான ஒளிமிக்க பாதையைத் தரக்கூடியது.

மாணவர்களும், இருபால் இளைஞர்களும் கலந்துகொள்ளலாம் - நல்ல பலன்களைத் தரும்.

கழகப் பொறுப்பாளர்களே, கழகத்தின் இந்த மிக முக்கியப் பணியில் ஆர்வம் காட்டுவீர்! மாணவர்களை, இளைஞர்களை அனுப்பி வைப்பீர்!

சென்னை மண்டலத் தலைவரும், செயலாளரும், மாவட்டக் கழகத் தலைவர், செயலாளர்களும், இளைஞரணி, மாணவரணி, மகளிரணியினர் கலந்துகொண்ட கூட்டத்தில் 20 தோழர்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக, தென் மாவட்டங்களிலிருந்து இருபால் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.

மே 29, 30, 31 ஜூன் 1 ஆகிய நாள்களில் குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் திருமண மண்டபத்தில் நடைபெறும். வாரீர்! வாரீர்!!

- தலைமை நிலையம்

குறிப்பு: கழகப் பொறுப்பாளர்களின் பரிந்துரைக் கடிதம் அவசியம்

தமிழ் ஓவியா said...


கோவில் தோன்றியது இப்படித்தான்!

மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.

- தினமலர் செய்தி

ஊர் ஊருக்குக் கோயில்கள் எப்படி உருவாயின என்பது இப்போதாவது புரிகிறதா? இன்று விபத்தில் மடிந்த அந்தக் குழந்தையைத் தான், இன்னும் கொஞ்ச நாட்களில் சர்வசக்தி வாய்ந்த விபத்தம்மன் என்று கொண்டாடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அங்கு ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளையம்பட்டியைச் சேர்ந்தவர் தையற் கலைஞர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு காவியா, தனுஜா என்ற, இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த, 2007 ஆம் ஆண்டு டிசம்பர், 23 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பழனிச்சாமி தன் மனைவி மற்றும் இரு குழந் தைகளையும் இருசக்கர வாகனத்தில் மணப்பாறை யில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பன்னாங்கொம்பு அருகே சென்ற போது, பால்வேன் இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், படுகாயமடைந்த தனுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தனுஜாவின் இறுதி நிகழ்வு முடிந்து, ஒன்பதாம் நாள் சிறீரங்கம் அம்மா மண்டபத்தில், சிறுமிக்கு ஈமக்கிரியைகளை செய்து கொண்டி ருந்தனர்.

அப்போது, வேதமந்திரங்கள் கூறிக்கொண்டி ருந்தவர், தனக்கு ஈமகாரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், மூன்றாண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் என்று தனுஜா போல பேசி, அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதேபோல், மூன்றாண்டுக்குப்பின் பழனிச்சாமி யின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி, தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பின், தனுஜாவின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே, தனுஜா வுக்கு, ஒரு அடி உயர சிலை எழுப்பி கோவில் கட்டியுள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி நடந்து வருகிறது. இந்தாண்டும் பால்குட விழா, மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு வந்து, கோவில் முன் இருந்த பூக்குழியில் இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலபிஷேகம் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி, ஊர் நாட்டாண்மைகள் பின்னத்தூர் ரெங்கநாதசுவாமி, அழககவுண்டர் மற்றும் வெள்ளையம்பட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா


ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:

சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ கம் பெரும் வளர்ச்சி அடையும். இலங்கை யைச் சுற்றி செல்லும் கப்பல்கள் சேது சமுத் திரக் கால்வாய் வழி யாகச் செல்லும்போது 424 கடல் மைல்கள் தூரம் குறையும் என்ப தால் ஆண்டுக்கு ரூ.130 கோடி செலவு மிச்ச மாகும்.

நீர்வளம் பெருகி, சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். அண்டை நாடுகளின் கப்பல்கள் எளிதில் தென் தமிழகத் தின் துறை முகங்களுக்கு வந்து செல்வதன்மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். இத்திட்டத்தை நிறை வேற்றக் கோரி தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத் தப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து 9 முறை ஆய்வு நடத்தப்பட்டு முடிவில் 1955 ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பயனுள்ள திட் டம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

1957 இல் குளித் தலை எம்.எல்.ஏ.,வாக இருந்த தலைவர் கலை ஞர் சேது சமுத்திரத் திட்டம் குறித்து முதன் முதலாக சட்டமன்றத் தில் பேசினார். 1960 இல் தி.மு.க. உருவான போதும் இத்திட்டத்தை அண்ணா வலியுறுத்தி னார். அதன் பிறகு ஒவ் வொரு முறை தி.மு.க. மாநாடு நடந்தபோதும் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வைகோ, கம்யூ னிஸ்ட தலைவர்கள் வர தராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டவர்களால் கூட சேது சமுத்திரத் திட்டம் வரவேற்கப்பட் டது. 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

தேர்தல் நேரத் தில் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கும் ஜெய லலிதா, எம்.ஜி.ஆரால் வரவேற்கப்பட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திரத் திட்டத் திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பது மதவாதிகளுக்கு துணை போகும் செயல் இல் லையா?

இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.850 கோடி வரை செலவு செய்யப் பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் கருத்துக்கு முரண்படும் வகையில் இத்திட்டத்தை ஜெய லலிதா முடக்க நினைப் பது சரியா? கடந்த 22.8.1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்போ தைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற் றக் கோரி கடிதம் எழு தியது நினைவில்லையா? 2001, 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வோம் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இக் கருத்திலிருந்து முரண் பட காரணம் இத்திட் டத்தால் கலைஞருக்குப் பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் திட் டத்திற்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட நினைக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக் கக்கோரி உச்சநீதிமன்றத் தில் தொடர்ந்துள்ள வழக்கை ஜெயலலிதா திரும்பப் பெறவேண் டும்.

- இவ்வாறு முன் னாள் அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!


சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை

திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!

மே 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்!

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மட்டுமல்ல - பொதுவாகக் கிரிக்கெட்(டு) விளையாட்டில் தொடர்ந்து சூதாட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனை ஒழிக்கும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்

சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!!

1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்!

அதாவது 16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஜாம் ஜாம் என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை - புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பது தானே பொருள்?

அய்.பி.எல். மட்டுமல்ல

அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச் சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?

முன்னாள் மத்திய அமைச்சருக்கும் தொடர்பாம்!

தமிழ் ஓவியா said...

இதில் இன்னொரு மாபெரும் வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு - தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (அவர்கள் இவர் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; மேலும் முக்கிய புள்ளிகள் மூவர் இவருக்குப் பக்கத்துணையாக இருந்துள்ளனராம்!)

சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!

கிரிக்கெட் சூதாட்டம் விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்து விட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த்; இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!

இதற்கிடையில் - நெருக்கடி அவப் பெயரிலிருந்து மீளுவதற்குக் கிரிக்கெட் சங்கத்துக்காரர்கள் சில தந்திர உபாயங்களை - நடவடிக்கைகளை எடுத்துத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர் போலும்!

திசை திருப்பலா?

அதோடு மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா?

ஒவ்வொரு அய்.பி.எல். அணி விளையாட்டுக்காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;

அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி போதை முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.

ஏலம் போகும் விளையாட்டுக்காரர்கள்!

முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு - மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.

வழக்கில் ஓட்டை கூடாது!

இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் காட்டி தப்பிக்க இயலாதபடி சரியான குற்றப் பத்திரிக்கை விலை போகாத வழக்குத் தேவை!

ஓர்ந்து கண்ணோடாத நீதிபரிபாலனம் மூலம் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுத்து, விளையாட்டின் உயர்ந்த உன்னதத் தத்துவங்களை நிலை நிறுத்துவது அவசர அவசியமாகும்.

இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தவிருக்கிறது. (திருச்சி மற்றும் ஈரோட்டில் மட்டும் 25ஆம் தேதி)
அதற்கு ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஈடுபட முன் வர வேண்டும்.

கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை நமது போராட்டம்

நமது கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது;

அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் - அறப் போர் - தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!!



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21.5.2013

தமிழ் ஓவியா said...


கழக முயற்சிக்குக் கைமேல் பலன் வட்டாட்சியர் அலுவலகப் பிள்ளையார் அகற்றப்பட்டார்



கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு சிலர் திடீரென பீடம் அமைத்து ஒரு விநாயகன் சிலையை வைத்து விட்டனர். அரசு விதி முறையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.க. மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் த. சுரேஷ் ஆகியோர் 10.05.2013 அன்று மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடமும் அந்த மனுவின் நகலை கொடுத்தனர்.

மேலும் விடுதலை ஏட்டில் (14.5.2013 விடுதலை) வேலியே பயிரை மேய்கிறது என்ற தலைப்பில் செய்தியும் வெளியாகியது. உடனடியாக திராவிடர் கழக தோழர்களின் வலியுறுத்தலின் பெயரில் வருவாய்துறை அதிகாரிகள் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த விநாயகன் சிலையை பீடத்துடன் அகற்றினர்.
மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து 9 நாட்களுக்குள் விநாயகன் சிலை பீடத்துடன் அகற்றப்பட்டது. இது விடுதலை ஏட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் முயற்சிக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

தமிழ் ஓவியா said...

தெரியுமா சேதி?

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசன் தான் சென்னை சூப்பர் கிங்கின் (அய்.பி.எல்.) முத லாளியாவார். கவர்னரே கலெக்டராகவும் இருக்கிறார் எப்படி?

####

ஒவ்வொரு முறையும் நடக்கும் அய்.பி.எல். கிரிக் கெட்டில் மட்டும் சூதாட்டத்தில் புரளும் தொகை ரூ. மூன்று லட்சம் கோடியாம்!

தமிழ் ஓவியா said...

உருண்ட பக்த கே()டிகள்!


கரூர் மாவட்டம், தெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் 99ஆவது ஆண்டு ஆராதனையில் எச்சில் இலைகள்மீது பக்தர்கள் உருண்டனர். குறிப்பு: மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும் கலந்து கொண்டார். அவர் எச்சில் இலை மேல் உருண்டாரா என்பது பற்றி தகவல் இல்லை.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்



தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


இலங்கை மீது நடுநிலையான பன்னாட்டு விசாரணை தேவை


கருத்து மாறுபடுவோர் மீது இலங்கை அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை

அம்பலமாக்கும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை

இலங்கை அரசு, தன்னை விமர்சிப் பவர்கள் மீது அச்சுறுத்தல், தொல்லைப் படுத்துதல், சிறைவாசம் முதலிய கொடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அண்மையில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மாற்றுக்கருத்துக் கொண்டவர் மீது தாக்குதல் என்று அந்த ஆணவம், அதிபர் ராஜபக்சேயினால் நடத்தப்படும். இலங்கை ஆட்சி எப்படி விமர்சனங்களை, ராஜத்துரோகம் என்ற அதன் அசுரப் பிடியில் வேகப்படுத்தி வருகிறது, என்பது பற்றி விளக்குகிறது.

பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் குறிவைக் கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் அடிக்கடி பாதுகாப்புத் துறை யினராலும், அவர்களுடைய பதிலி களாலும் தாக்கப்படுகின்றனர். ஆம் னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பைச் சேர்ந்த ஆசிய பசிபிக் பகுதியின் துணை ஆணையர் பாலி டிரஸ்காட் என்பவர் இலங்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொடுமையான அடக்குமுறைக்கு ஆட்படுத்துவதிலும், அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதிலும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது என்று கூறி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங் களுக்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. இலங்கையில் உண்மை யிலேயே அச்சமான சூழ்நிலை பரவி வரு கிறது. அரசுக்கு எதிராக துணிச்சலாக பேசக்கூடியவர்கள் மோசமான வேத னைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

மே 29இல் விடுதலைப் புலிகளுட னான ஆயுதப் போர் முடிவுக்கு வந்த வுடனேயே அரசாங்கம் தனது சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டது.

2010 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் பட்ட 18ஆவது அரசியல் திருத்தம், அரசினால் கொண்டு வரப்பட்டவுடனேயே அரசு நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாக அதிபரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது; கொடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளுக்கு அளவில்லாத அதிகாரங்களை குவித்தது. அதே நேரத்தில், அரசுத்தரப்பு, விமர்ச கர்களுக்கு எதிரான தனது பேச்சுக்களை அதிக எதிர்ப்புணர்ச்சியுடன் வெளிப் படுத்திற்று. துரோகிகள் போன்ற வார்த்தைகள் அரசு நடத்தும் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி, மாற்றமில்லாமல் வெளிவந்தன.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், வசைமாரிகளுக்கும் வன் கொடுமை களுக்கும் ஆளானார்கள். சிலர் தாக்கப் பட்டும், சிலர் கொல்லப்பட்டும் போயினர். 2009-க்கு முன்னும் பின்னும், டஜன் கணக்கான அம்மாதிரியான விவரங்களை அந்த அறிக்கை விளக்குகிறது.

தமிழ் ஓவியா said...

நீதித்துறை அடக்குமுறையின் முக்கிய குறியாயிற்று. அரசு தனது சுதந்திரத்தைச் சிறுமைப்படுத்திக் கொள்ளும் விதத்தில் மனித உரிமை மீறல்களுக்காளானவர் களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

ஜனவரி 2013இல் தலைமை நீதிபதி ஷீராணி பண்டார நாயகேயின் தவறான நடத்தை காரணமாக பதவி நீக்கம் செய் யப்பட்டபோது, எதிர்ப்புணர்ச்சி உச்சத்திற் குப் போயிற்று. இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஷீராணி பண்டார நாயகேயின் பதவி பறிப்பு முறையற்றது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறியிருக்கிறது.

ஊடகங்களின் பெரும்பான்மை உறுதி யாக அரசு வசப்பட்டிருந்தாலும் சற்று சுதந்திரமாக உள்ள போரின் போது அரசின் செயல் முறைகள் பற்றியும், அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விமர்சனம் செய்தும் வரும் மற்ற ஊடகங்கள் மீது அரசாங்கம் குறிவைத்துள்ளது.

ஊடக வியலாளர்கள் அரசாங்கத்தின் போக்கு பற்றி விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். அவமானப் படுத்தப்படுகிறார் கள், தாக்கவும்படுகிறார்கள். 2006ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 15 இதழாளர் களாவது கொல்லப்பட்டிருக்கிறார்கள், மற்ற பலர் நாட்டை விட்டு ஓடும்படி துரத்தப் பட்டுள்ளனர்.

அண்மையில் நிகழ்ந்த, உதாரணமாக சண்டே லீடர் என்ற பத்திரிகையைச் சார்ந்த பஃராஸ் செனகத்தலி என்ற இதழாளர், சில மனிதர்களால் பிப்ரவரி 2013இல் துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கடுமையான காயம் எற்படுத்தப் பட்டுள்ளார்.

2009இல் கைது செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே போன்ற பழைய உயர் மட்டக் கொலைகள் கூட இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.

அரசாங்கத்தைப் பற்றி விமரிசித்துக் கட்டுரைகள் வெளியிடும் இணையங்கள் (website) அடிக்கடி சைபர் அட்டாக் முறைக்கு ஆளாக்கப்படுகின்றன; அவர் களது அலுவலகங்கள் காவல் துறையின ரால் சோதனைகளுக்கு ஆளாக்கப்படு கின்றன; சில நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. அரசாங்கம் கூட சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. அதன் படி அளவுக்கதிகமான பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் இவை விமர்சிக்கும் ஆன்லைன் வெளியீடுகளை மூடப்படுவதற்கான முயற்சிகளாகும்.

தமிழ் ஓவியா said...


டிரஸ்காட், அரசாங்கத்தின் பத்திரிகை களை கட்டுப்படுத்துவது அல்லது சுதந்திர மானவற்றை ஒழிப்பது ஆகிய தொடர்ந்த முயற்சிகள், பத்திரிகை சுதந்திரத்தின் முகத்தில் விழும் பூச்சிகளாகும்; மேலும் உள் நாட்டினராலும் பன்னாட்டினராலும் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்தினை கூட சிதைப்பதாகும் என்று கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தினராலும், விடுதலைப் புலிகளாலும், போரின் இறுதிநிலைகளில் பல்லாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்ட விவரங்களை வெளியிடும் ஊடகங்கள் மீது குறிப்பாக அவற்றை ஒழித்து விடும் பணியில் அரசு இருக்கிறது. முக்கியமான பன்னாட்டு நிகழ்வுகளின் போது விமர்சகர் மீதான அழுத்தங்கள் அதிகப்படுத்தப் படுகின்றன.

உதாரணமாக அண்மையில் நிகழ்ந்த அய்.நா. மனித உரிமை மீறல்கள் பற்றிய குழுவின் 2012, 2013இல் நிகழ்ந்த கூட்டங்களைச் சொல் லலாம்; மனித உரிமைக்கவுன்சில், இலங் கையின் ஆயுதம் கொண்டு நடத்தப்பட்ட போரில், பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டதை ஆராயும் வகையில் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி வெளியிடுவதைத் தடுக்கும் பல தடை தந்திரங்கள் கையாளப்பட்டன.

அய்.நா. கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்களும், அந்நிகழ்ச்சிகளை செய்திப்படுத்த விரும்பிய இலங்கைப் பத்திரிகையாளர்களும், திரும்பத் திரும்ப இலங்கை அரசினரால் ஊடகங்கள் தாக்கப்பட்டன. சில நிகழ்வுகளால் உடல் வன்மை கூட்டியும் தாக்கப்பட்டனர்.

இலங்கை அரசால் குறிவைக்கப் பட்டுள்ள மற்ற பலருள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் அதுவும் குறிப்பாக தமிழர் மிகுந்த பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் முதலியோர்.

2013 நவம்பர் மாதத்தில் அடுத்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு (CGIGM) கொழும்புவில் நடக்க இருக் கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அதன் தலைவராக இலங்கை பங்கு பெறும்.

டிரஸ்காட், இலங்கையில் அச்சுறுத் தும் முறையில் வளர்ந்துவரும் மனித உரிமை மீறலை சரி செய்யச் சொல்லி, இலங்கை அரசிற்கு, நவம்பர் மாதத்திற்கு முன்பு காமன் வெல்த் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி யுள்ளார்.

மனித உரிமைகள் பற்றிய விதி மீறல்கள் படிப்படியாக இலங்கை அரசு நிறுத்தி விட்டது என்பதை தனது செயல் பாடுகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். தனி மனிதர்களின் மீதான தாக்குதல்கள் உடனடியாக வேறு பாடுகள் இல்லாமல் தகுதியான முறையில் ஆரா யப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவையெல்லாம் இலங்கை அரசால் நிருபிக்கப்படும் வரையில் இலங்கையின் கொழும்பு நகரில், காமன்வெல்த் நாட்டுத்தலைவர்களின் மாநாடு நடத்தப்பட அனுமதிக்கக் கூடாது.

இவை தவிர மேலும் நடந்து வரும் விதி மீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது; அவை களை நிறுத்துவதற்கான வாக்குறுதி களை அடிக்கடி அளிக்கிறது; ஒரு பயனுள்ள ஆய்வின் மூலம் பன்னாட்டுச் சட்டப்படியான குற்றங்கள், ராணுவத்தின ராலும், விடுதலைப்புலிகளாலும் ஆயுதப் போரின்போது நடத்தப்பட்டவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏராளமான வெளிப்படையான நிகழ்வு கள் மூலம் இலங்கை அரசு ஒரு நம்பிக் கையான ஆய்வை, பன்னாட்டுச் சட்டப் படியான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உட்பட விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு விரும்பவில்லை. போரின் போது நடந்த குற்றங்கள், குற்ற நிகழ் வுகள் பற்றிய சுதந்திரமான, நடு நிலைமையான, பன்னாட்டுச் சமூகத் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டியது என்பது தான் இன்றைய அவ சியம் என்று டிரஸ்காட் கூறியுள்ளார்.