Search This Blog

18.5.13

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன?

ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இரண்டாண்டுகளைக் கடந்து வந்துள்ளது; ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் - சட்டப் பேரவையில் பாராட்டுக் குவியல்கள்.
இவற்றையெல்லாம் குறையாகச் சொல்ல முடியாது. எந்த ஆட்சியிலும் பொதுவாக இவையெல்லாம் நடக்கக் கூடியவைதான்.

வேண்டுமானால் திகட்டக் கூடியதாக இது இருக்கிறது என்று விமர்சிக்கலாம்.
சட்டமன்றத்தில் குறைகளை சுட்டிக்காட்ட எந்த எதிர்க்கட்சியாலும் முடியவே முடியாது. எதிர்க்கட்சிகளை சட்டப் பேரவையில் இருக்க அனு மதித்தால்தானே அவர்களால் பேச முடியும்? அப்படியே அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தால் ஆயிரம் ஆயிரம் குறுக்கீடுகள்; அதையும் மீறி குறை கூறினால் அவை அவைக் குறிப்பில் இடம் பெறாது.

சட்டசபையில் 110ஆவது விதி என்பது மிகவும் அரிதாகப் பயன் படுத்தப்படுவது; அதன்கீழ் அறிக்கையை முதல் அமைச்சர் படித்தால் அது குறித்து யாரும் எதிர்த்து பேசக் கூடாது - விமர்சனங்களை வைக்க முடியாது, - குறைகூறிப் பேச முடியாது.

இதனை இலாவகமாகப் பயன் படுத்தியதில் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களை வெல்ல யார் இருக்கிறார்கள் இந்த வையத்தில்? அதே நேரத்தில் பாராட்டி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆளும் கட்சியும், ஒத்து ஊதும் கூட்டணிக் கட்சிகளும் பிற்பகல் ஒன்றரை மணி நேரம் பாராட்டுப் பத்திரத்தை வாசித்துக் கொண்டே இருக்க தாராளமான அனுமதி.

பிற்பகல் ஒன்றரை மணி வரை  இந்த பாராட்டுச் சடங்கு தங்குத் தடையின்றி நடந்து கொண்டே இருக்கும். அதற்குமேல் மக்கள் பிரதி நிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் எதைப் பேசுவது!

ஒரு வருடம் வரை குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை அவைக்கு வரக் கூடாது (Suspension)  என்று எந்தக் காலத்தில் எந்த அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்? இந்தச் சாதனையை வேண்டுமானால் மார் தட்டிச் சொல்லலாம் அ.இ. அ.தி.மு.க. அரசு.

எதிர்க்கட்சி என்றால் குறைகளை எடுத்துக் கூறத் தாராளமாக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் அவர்கள் கூறுவதில் நியாயம் இருந்தால் திருத்திக் கொண்டு செயல்பட ஆளும் கட்சி முன்வர வேண்டும். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்று திருவள்ளுவர் சொல்ல வில்லையா?

ஆனால் அதெல்லாம் பழைய காலம்; அ.இ.அ.தி.மு.க. சகாப்தத்தில் அதற்கெல்லாம் இடம் கிடையாது.

இவை ஒருபுறம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவோம் என்று சொன்னார்களே. இரண்டாண்டுக்குப் பிறகும் நிலை என்ன? தி.மு.க. ஆட்சியில் இரண்டே இரண்டு மணி நேரம் மின் தடை இருந்ததற்கே மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவிக் குதித்தார்களே --_ இப்பொழுது நிலை என்ன?

எப்பொழுது மின்சாரம் வரும்? எப்பொழுது போகும் --- என்று யாருக்குத் தெரியும்? மின்சாரம் வருவதும் உண்டு என்று வேண்டுமானால் கூறலாம். 10 மணி; 12 மணி நேரம் என்று மின்தடை!

இரவிலும் விட்டு விட்டு மின்சாரம் வந்தால் யார் நிம்மதியாகத் தூங்க முடியும்? உங்களைத் தூங்க விட மாட்டேன் -_ ஜாக்கிரதை! என்கிறார்களா? 

பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் நிலைமை என்ன? தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் கதி என்ன?

தொழிற்சாலைகள் எப்படி செயல்படும்? அவற்றை இழுத்து மூடும் நிலையில், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பில்தானே கை வைக்கப்படும். வேலை கிட்டாத தொழிலாளர்களின் வீட்டு அடுப்பில் பூனைக் குட்டி தானே தூங்கும்? திருப்பூர் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த ஊரின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கட்டுமே!

சூரியன் மறைந்ததால் ஏற்பட்ட இருட்டுக்கு பெயர்தான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்றே சொல்லத் தோன் றுகிறது.

அறிவிப்புகளை அன்றாடம் மாண்புமிகு முதல் அமைச்சர் அறி வித்துக் கொண்டே இருந்தாலும், அந்த அறிக்கைகளைப் படித்துப் பார்க்கக் கூட மின்சாரத்தைக் கொடுத்தால் தானே முடியும்?

வந்ததும் வராததுமாக மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்ற முப்பிரி சங்கிலியால் மக்களின் முதுகு நார் நாராகக் கிழிக்கப் பட்டாயிற்று.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி அவருக்குப் பொருத்தமாக நினைவு கூரும் - எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.230 கோடி செலவில் விண்ணை முட்ட எழுந்து நிற்கும் அறிவுச் சோலையாம் நூலகம் - திமுக ஆட்சி யில் - அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்து கட்டி முடிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தால் அதனை இட மாற்றம் செய்யத் துடித்த துடிப்புக்கு என்ன பெயர்? ஆரியத் துடிப்புத் தானே! 

அம்மையாருக்கு ஆல வட்டம் சுழற்றும் வேலையை அட்சரம் பிறழாமல் செய்து வந்த திருவாளர் சோ ராமசாமியாலேயேகூட அதனை நியாயப்படுத்த முடியவில்லையே!

அதே போல தி.மு.க. ஆட்சிக் காலத்தில்  9 லட்ச சதுர அடியில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட சட்டமன்றத்தை உள்ளடக்கிய தலைமைச் செயலகத்தை முடக்கியதும், செம்மொழி மாநாட்டை ஒட்டி அறிவிக்கப்பட்டுச் செயல்பட்ட புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தை நொறுக்கிய கொடுமை என்ன? அதில் இடம் பெற்றிருந்த அரிய நூல்களும் பழங்கால ஓலைச் சுவடிகளும் குப்பைமேடாக அல்லவா ஆக்கப்பட்டது. சமச் சீர் கல்வியையும் பிடிவாதமாக அமல்படுத்த மறுத்தபோது உச்சநீதி மன்றம் உச்சந் தலையில் ஓங்கி அடித்த பிறகுதானே ஒட்டாரம் ஓய்ந்தது.

அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணி அடித்துச் சொன்ன வார்த் தைகள் சாதாரணமானவைகளா? The Law must permit change of policy because another political party with different political philosophy coming to power, as it is to the decision of the government. The state is the authority under article 12 of the constitution, and not a particular person or party which is responsible for implementation of the policies என்று உச்சநீதிமன்றம் கூறியதே! 

அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு வழங்கிய தங்கப்பூண் போட்ட பாராட்டுப் பத்திரமா இது? முதலில் இருந்த ஓர் ஆட்சி ஒரு காரியத்தைச் செய்தால் தனிப் பட்ட முறையில் செய்தார்கள் என்று யாரும் கருதிட முடியாது. இன்னொரு ஆட்சி வரும்போது பழைய ஆட்சி யினுடைய தொடர்ச்சி.

சென்ற ஆட்சி யின் செயலைப் பின்பற்ற வேண்டியது தான் _ வந்திருக்கும் ஆட்சியின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அதை உடைப்பதற்குப் புதிய அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் வரை யறுத்த வார்த்தைகளால் வறுத்தெடுத்த பிறகாவது அண்ணா தி.மு.க. ஆட்சி புத்திக் கொள் முதல் பெற வேண்டாமா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலச் சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா கொண்டு வரப்படவில்லையா? (18.8.2011).

ஆரம்பக்கட்ட நிலையிலேயே அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள் எதிர்க்க வில்லையா? கூட்டணி கட்சியாக இருந்தால் என்ன, அறிஞர் அண்ணாவின் பெயரில் இருந்த நூலகமாக இருந்தால் என்ன? - அவை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்தவை _ அதுவும் தன் ஜென்மப் பகைவரான கருணாநிதி செய்தது என்றால், அதன் குடலைக் கிழித்து மாலையாகப் போடாத வரை ஓய மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டவர் ஆட்சி ஆயிற்றே!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண் டென்று கருணாநிதி சட்டம் செய்தாரா? விடப் போவதில்லை சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தலைகீழாகப் புரட்டியடிக்கவில்லையா?

உழவர் திருநாளை கலைஞர் கொண்டாடினார் தைப் பொங்கலை ஒட்டி என்றால் அதனை நான் ஏற்க முடியுமா? கொளுத்தும் கோடையில் உழவர் விழாவை நடத்துவேன் என்று ஏட்டிக்குப் போட்டியாக நடத்த வில்லையா? 

செம்மொழி பூங்காவா? - அந்தப் பெயரை இருட்டடிப்பு செய்! தொல் காப்பியர் பூங்காவா? - தொலைத்துக் கட்டு அந்தப் பெயரை _ என்பதெல் லாம் ஓர் அரசின் மகத்தான சாதனையோ!

2427.40 கோடி ரூபாயில் சேது சமுத்திரத் திட்டம் தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியால் வந்ததா?

மூக்கணாங் கயிறு போட்டு, முற்றுப் புள்ளி வை!

அய்யா சொன்னால் என்ன? அண்ணா விரும்பியிருந்தால் என்ன? அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தால் தான் என்ன? அதெல்லாம் அப் பொழுது; இப்பொழுது நம் முன் உள்ள பிரச்சினை - அது தி.மு.க. ஈடுபட்ட விவகாரம் - விடப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கி இருப்பது எப்படிப்பட்ட சாதனை? இரண்டாண்டுகளில் இப்படிப்பட்ட சாதனைகள் அனந்தம்! அனந்தம்!

சட்ட ஒழுங்கா? அடேயப்பா, ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, வன்முறையின் வாள் வீச்சுகள் நீதிமன்ற வளாகத்துக் குள்ளேயே குத்து வெட்டு கொலை.

இடதுசாரிகள் இவற்றிற்கெல்லாம் ஏற்றப்பாட்டு இசைப் பாட்டுப் பாடுவார்கள்; ஊடகங்கள் ஒலி பெருக்கிகளாகச் செயல்படும்.

ஆனாலும் மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் உணர்வு என்பது மட்டும் வேறுதான். அதிகாரத்தில் இருக்கும்போது அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

மக்கள் உரிய முறையில், சரியான சந்தர்ப்பத்தில் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி! உறுதி!!

                    ----------------மின்சாரம் அவர்கள்  18-5-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

97 comments:

தமிழ் ஓவியா said...

நலம் விளைய நா காக்க


- மு.வி. சோமசுந்தரம்

சிதறிய பாலை எடுக்கவா முடியும்?
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
நுணலும் தன் வாயால் கெடும்
வில்லிலிருந்து வெளியேறிய அம்பு வெளியேறியதுதானே?
நாவினாற் சுட்ட வடு
பெரும் பயன் இல்லாத சொல்
இனிய உளவாக இன்னாத கூறல்

ஊமையாக இல்லாதிருப்பது ஒருவர் பெற்ற அருட்கொடை இந்த இயற்கைப் பிறவிக் கொடையைப் பெற்றதின்பலன், அவர்தம் சிந்தனைக் கருவூலத்திலிருந்து சொல் முத்துக்களை சமூகம் மகிழ அதன் வழிதான் மகிழ் செய்வதாக வழங்குவதில் அமையும். வாய் வழி வரும் சொற்கள், முத்தாக, மணியாக, கோமேதகமாக, தேனாக, தன்மையாக இல்லாமல், தணலாக, முள்ளாக, கள்ளியாக இருக்குமானால், நாம் சமூகக் கேடர்களாகத் தான் கருதப்படுவோம். நாமும் கசங்கிய மலராக, கைபிசைந்து, குழம்பிய மன நிலையில் குனிந்த தலையுடன் தள்ளாடி நடக்க வேண்டியிருக்கும். நிலை ஏற்படுமல்லவா? இது நல்லதல்லவே!

இந்த கருத்தை முன் வைக்கும் வகையில் கட்டுரையின் துவக்கத்தில் எட்டு வரிகள் கூறப்பட்டுள்ளன. அவை வழி காட்டும் வரிகளாகவும், எச்சரிக்கை அறிவிப்புகளாகவும், கருதப்படலாம். இந்த முறையில் மேலும் பல அறிவுரைகள் சேர்க்கப் படலாம்.

குடி குடியைக் கெடுக்கும்

தொப்பை வரும் முந்தி தொல்லை வரும் பிந்தி

இவையும் ஒரு வகை பாது காப் புக்கான முழக்கங்களை அல்லவை களைத் தள்ளி வைத்தால் நல்லவை மாலை சூடலாம்.

சொல் குற்றத்தால் சூழும் கேடுகள் பல. எடுத்துக்காட்டாக, ஜவகர்லால் நேரு அவர்கள் தமிழகத்து இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நான்சென்ஸ் என்று கூறியதையும், இராசகோபாலாச்சாரியார், 1952இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைக் கொச்சைப்படுத்தி, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பேசியதைக் கூறலாம். யானைக்கும் அடிசருக்கும் அல்லவா?

அனைவரும் சொல்லின் செல்வ ராக விளங்குவது இயலாத ஒன்று. நாட்டில் உள்ளவரெல்லாம் நாவல ராக நாட்டம் கொள்வது நடை பெறுமா? பேசும் வழிமுறை பற்றியும், சொல்லின் வலிமை பற்றியும், பிப்ரவரி, 18, இந்து இதழில் வெளிவந்த கட்டுரையின் கருத்துத் தொகுப்பைக் காண்போம். பயன் பெறுவோம்.

பெரும்பாலான மனிதர்கள், சில நேரங்களில், சிந்தனையற்ற, சங்கடத்தை ஏற்படுத்தும், அறிவற்ற, ஆத்திரமூட்டக் கூடிய சொற்களை சிந்தி விடுகிறார்கள். இதன் காரண மாக, எதிர்வரும் பல ஆண்டுகள் தான் அப்படி பேசி இருக்கக் கூடாதே என்று ஏங்கி ஏங்கி அந்த எண்ணத்திலேயே மூழ்கி, ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டவர்களாகி விடுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இப்படி ஏங்கி ஏங்கி கசிந்து கழிக்கும் காலத்தை எண்ணிப் பார்க்க செலவிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமல்லவா? இப்படி சொல்வது எளிதுதான். ஆனால் செயலில் காட்டுவதில்தான் சிக்கல்.

இப்படிபட்ட நிலையில் சொற்களைக் கொட்டிவிட்டு சங்கட நிலையைச் சந்திப்பதும், மன இறுக்கம் அடைவதும் ஒரு பக்கம் இருந்தாலும் நீடித்திருக்க வேண்டிய, நட்பு, உறவு பாதிக்கப்படுகிறது.

அமெரிக்க நரம்பியல் - மனநல மருத்துவர் டாக்டர் டயேன் ஹென் ரிபவுல், நாம் மனதார ஒரு முடிவெ டுப்பதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில், பெரும்பாலான முடிவுகள், நம் ஆழ்மனதில் உருப் பெருகின்றன என்று கூறுகிறார். எனவே, சொற்களை வாயளவில் ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்துவதின் மூலம் முறையான பேச்சை கைக் கொண்டதாகக் கூற முடியாது. இதற்கான தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சிந் தனையை ஒழுங்கில் கொண்டு வர வேண்டும். நம் பழக்கத்துடன் ஒட்டி வந்துள்ள சுடுச் சொல், கடுஞ் சொற்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு கற்பனை எடுத்துக் காட்டு. ஒரு அலுவலகத்தில் அகிலா அலுவலராக உள்ளார். அலுவலக அதிகாரியும் அவருடைய தங்கையும், அகிலாவை சந்திக்கிறார்கள் அகி லாவைத் தங்கைக்கு அறிமுகப் படுத்தும்போது, இவர் எனக்கு என் தாயார் போன்றவர் என்று தங்கையிடம் கூறுகிறார்.

தங்கை முகம் களித்துக் கொள்கிறாள். அகிலா வருந்துகிறாள். அந்த நேரத் தில் ஏதோ பேச வேண்டும் என்பதற் காக பேசி விட்டேன். குற்றமாக எதுவும் கூறவில்லையே. என் அவசர வார்த்தை நடத்தையால் ஒரு சங்கட சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டேனே இதில் பெரிய துன்ப விளைவு ஏற்பட வில்லை. ஆனால் எடுத்த எடுப்பில் ஏதேனும் உளறிக் கொட்டிவிட்டால் விளைவு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கீழ்க்கண்டவற்றைக் கவ னத்தில் கொள்வது நல்லது.

1) திடீரென்று மனதில் தோன்று வதை சொற்களாக வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை.

2) ஒருவருக்கு பதில் கூறும்முன் சிறிது நிதானித்து கூறவும். கூற வேண்டியதை யோசித்து அதனால் ஏற்படும் விளைவையும் நினைத்து பேசவும்.

3. பதற்றப்பட்ட சூழ்நிலையில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறிது நேரம் நீள் மூச்சு இழுத்து, பிறகு பேசவும்.

4. ஒன்றை மறுத்துக் கூற முனை யும்போது நயத்தக்க முறையில், மென்மைக் குரலில் பதிவை ஏற்படுத் தும் வகையில் கூறவும்.

5. விழா,பொது நிகழ்ச்சிகளில் குழுமியிருக்கும் வேளையில், உணர்ச்சி கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்பு ஏற்படும். எனவே எச்சரிக் கையாக பேசுவது நல்லது.

6. சில வேளைகளில், தவறுதலாக, குறைபட்ட சொற்களை கூறிவிட் டால், உடனே மன்னிப்பு கேட்டு விடுங்கள். அது நமது கவுரவத்தைப் பாதிக்காது.

7. எழுத்து மூலம் கருத்தைக் கூறுவது பாதுகாப்பானது. சொற் களை சரியான வகையில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.

8. அமைதியான மன நிலையில், குழுப்பமான தடுமாற்றமான சொற்கள் வராது. மூச்சுப் பயிற்சி, தியானம், அமைதியான மனநிலைக்கு வழி வகுக்கும்.

9. மடத்தனமான சொற்களைக் கூறுவதைவிட, ஏதும் பேசாமல் இருப்பது சிறந்தது.

10. நம்மைப் பார்த்து கூறப்படும் ஒவ்வொரு கருத்துக்கும், மறுப்புத் தருவது தேவையில்லை.

தமிழ் ஓவியா said...


திருடனா குருடனா?


பார்ப்பான் படைத்த புத்தகம்
புரட்டை படைத்தது
பெரியார் புகுத்திய புத்தியால்
பகுத்தறிவை பெற்றது
பார்ப்பன அறிவு பேதலித்து
தீயை உண்டாக்கியது
கை, கால், கண், இல்லா
குருடனா நீ?
கொள்கை இல்லா
திருடனா நீ?

- வணங்காமுடி
தருமபுரி

தமிழ் ஓவியா said...


பக்தியின் பன்னாடைத் தனம் பாரீர்!


திருப்பூர் பல்லடம் சாலையில் நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் முதுகில் கத்திகளைப் பாய்ச்சியும், கொக்கி கம்பிகளைக் குத்தியும் காட்டுமிராண்டி ஊர்வலம் நடத்திய காட்சி.

திருப்பூர் மாநகர், தாராபுரம் கோடு ஜிவிசி (Timpur Mnicipal Corporation) காலனி வாழ் மக்களான திருப்பூர் மாநகரச் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் (அரசு ஊழியர்கள்) தங்கள் பகுதியிலுள்ள அலகு மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவிற்கு அரும்பாடுபட்டு குப்பைகளை அள்ளியும், சாக்கடைகளைச் சுத்தம் செய்தும் சம்பாதித்த காசுகளை பெருமளவில் மூடநம்பிக்கையின் பால் செலவு செய்தும், காட்டுமிராண்டித்தனமாக உடம்பின் பல்வேறு பாகங்களில் அலகுகுத்து என்ற பெயரில் கத்திகள், கொக்கி கம்பிகள் ஆகியவற்றைக் குத்தியும் ஊர்வலம் நடத்தினார்கள்.

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி பெரியார் சொன்னாரே! எத்தனை பொருத்தம். நாங்கள் அறிவில் சளைத்தவர்கள் இல்லை; நாங்கள் கல்வியில் சளைத்தவர்கள் இல்லை; நாங்கள் ஒற்றுமையில் சளைத்தவர்கள் இல்லை; என்ற முழக்கம் தேவையானது. ஆனால் நாங்கள் பக்தியில் (எதற்கும் உதவாத) சளைத்தவர்கள் இல்லை என்று சிந்தனையற்று ஊர்வலம் நடத்துகிறார்கள் என்றால் இம்மக்களுக்குள்ள நோய்க்கு தேவையான மருந்து எது?

திராவிடர் கழகம் நடத்தி வரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் தானே! இல்லை என்று மறுக்க முடியுமா! சிந்தனை: நம் நாட்டு தொழிலாளர்களின் வளர்ச்சி என்பது மூடநம்பிக்கை ஒழிப்பிலும், ஜாதி ஒழிப்பிலும் தான் இருக்கிறது.

- ச. மணிகண்டன், பா.மா. கருணாகரன்

தமிழ் ஓவியா said...

இலண்டனில் ஈழத்தமிழர் பற்றிய உலகத்தமிழர் பேரவை மாநாடு


உலகத்தமிழர் பேரவை மூன்றாம் ஆண்டு மாநாடு பிப்ரவரி திங்கள் 27ஆம் நாளில் லண்டன் நகரில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஸ்லோஹெய்ன் மெக்டொனாக் (Slolehain Mcdonagh M.P.) நிகழ்ச்சி தலைவர் பல்கட்சி தமிழர் நாடாளு மன்ற குழுவின் துணைத்தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருவாளர்கள் ராபர்ட் ஹால்ஃபன் (நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பல்கட்சி தமிழர்கள் பாராளு மன்றக்குழு)

புகழ்பெற்ற பி.பி.சி (B.B.C) வானொ லியின் அயல்நாட்டுச் செய்திகள் நிருபரும், இறந்தவர்களை இன்னமும் எண்ணிக் கொண்டு இருக்கிறோம்(Still Counting Dead) என்ற நூலின் ஆசிரியருமான பிரான்சிஸ் ஹாரிசன் (Frances Harrisen)

ராயல் காமன்வெல்த் சொசைடி யின் தலைவர் பீட்டர் கெஸ்னர், மிடில் செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் எல்விரா டோமின் குயுவஸ் - ரெடோண்டோ (Dr. Elvira Dominguez Redando)

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் பன்னாட்டு உறவு மேலாளர் திருமதி ரிப்பன் மசோலி (Ms. Ribbon Mosholi)

சிறீலங்காவின் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் பாவா அப்துல் காதர் (Bava Abdul Kader) சிவிகஸ் (Sivicus) பொதுச் செயலாளர் டாக்டர் டானி சிறீஸ்கந்தராஜா, அய்க்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் மற்றும் கூண்டு (the cage) என்ற நூலின் ஆசிரியர் எம்.கார்டன் வீய்ஸ் (Gordon Weiss) ஆகியோர் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை உரையாற்றினர்.

மதியம் 12.30 மணியிலிருந்து 2 மணி வரை, வட அயர்லாந்தின் மாநில செயலாளரும், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான தெரசா வில்லியர்ஸ் (Rt. Hon. Theresa Villiers)

பிரிட்டனின் துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலை வருமான நிக் க்ளெக் (Rt. Hon. Mr. Nick Clegg M.P.)

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சக்தி மற்றும் தட்ப வெப்ப மாற்றம் செயலாளர் எட் டேவி (Rt. Hon. Mr. Ed. Davey M.P.)

அய்க்கிய நாடுகள் சங்கத்தின் சிறீலங்கா பற்றிய வல்லுநர்கள் குழு உறுப்பினர் தோழர் திருமதி யாஸ்மின் சூக்கா (Cde Mrs. Yasmin Sooka) மனித உரிமைகள் வழக்கறிஞரும் நாடாளு மன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (Mr. M.A. Sumanthiran M.P.) பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மிலி பாண்ட் (Rt. Hon. Ed. Milliband M.P.) மற்றும் பல்கட்சிப் நாடாளுமன்ற தலைவர் லீஸ்காட் (Mr. Lee Scott M.P.) ஆகியவர்களும் பேசினர்.

மனித உரிமைகள் போராளிகள் (activists) திருவாளர்கள் MCM இக்பாலும், அவரது துணைவியார் திருமதி ஆர்.இக்பாலும் வீடியோ படக்காட்சி யில் வன்னிக்காட்டில் பெண்களுக் கான துயரங்கள் என்ற படத்தின் சில பகுதிகளைத் திரையிட்டனர்.

உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம் என்ற தலைப்பில், சிறீலங்கன் ராணுவத்தினரால் தமிழ்ப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட கொடுமையை மனித உரிமைக் கண் காணிப்புக் குழுவின் புதிய அறிக் கையை அதன் இயக்குநர் டேவிட் மெப்பாம் (Mr. David Mepham) வாசித்தார்.

தமிழ் ஓவியா said...

மற்றும் மிடில் செக்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவர் ஜோஷீவா காஸ்ட்டலினோ சிறீலங்கா ஆம்னெஸடி இன்டர்நேஷ னலின் மூத்த ஆராய்ச்சியாளர் திருமதி யோலண்டா ஃபாஸ்டரும்(Prof. Joshua Castellino and Ms. Yolanda Foster) உரையாற்றினர் மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை நடந்த கூட்டத்தில் பிரிட்டனின் பிரதமர் கேமரூன் கலந்து கொள்வதாக இருந்தது.

எதிர்பாராத விதமாக அவர் வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், கன்சர்வேடிங் கட்சியின் மூத்த தலைவர் என்கிற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் கிராண்ட் சாப்ஸ் Rt. Hon. Grant Shapps M.P.) அவர்களைத் தனக்குப் பதிலாகச் செயலாற்றும்படி கேட்டுக் கொண் டார். நாட்டில் இருந்தால் நிச்சயம் இந்த மாநாட்டிற்கு நான் பங்கு பெற்றிருப்பேன் என்றும் கூடியிருந் தோர்க்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாலை 3.30 மணியிலிருந்து 5 மணி வரை நடந்த நிகழ்வில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கிராண்ட் ஷாப்ஸ் (Rt. Hon. Grant Shapps) பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாகப் பங்கெடுத்துக் கொண்டார். மற்றும் அயல் நாட்டுக் கான நிழல் செயலாளர், டக்ளஸ் அலெக்சாந்தர் (Rt. Hon. Douglas Alexander) உரையாற்றினார்.

நார்வே நாட்டின் அரசாங்க அமைச்சரும் முன்னாள் லங்கா அமைதி செயல் பாட்டிற்கான அமைதிப் பேச்சாளருமான எரிக் சோலிம் (Hon. Mr. Erik Solheim) மிடில் செக்ஸ் பல்கலைக்கழகத்தின் பன்னாட் டுச் சட்ட வல்லுநருமான வில்லியம் ஸ்கபாஸ் (Prof. William Schabas), உள்துறை, அயல் மற்றும் காமன் வெல்த் அலுவல் மூத்த துணை அமைச்சர் பரோனெஸ் வார்சி (Rt. Hon. Baroness) லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் துணைத்தலைவரும் தமிழர் பல்கட்சி நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான சைமன் ஹியூக்ஸ் (Rt. Hon. Mr. Simon Hughes M.P.)

பிரிட்டனின் உள் விவகார செலக்ட் கமிட்டியின் தலைவரும் தமிழர் பல்கட்சி நாடாளுமன்ற குழு உறுப் பினருமான கெயித்வாஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உலகத்தமிழர் பேரவையின் ஆலோசகர் ஜோன்ரயான் (Rt. Hon. Joan Ryan) நன்றியுரை கூறினார்.

தமிழ் ஓவியா said...


கருநாடகத் தேர்தலும் சித்தராமையா தேர்வும்...


- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
(அமைப்புச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)

கருநாடக மாநிலத்தில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாரதீய சனதாக் கட்சி வெற்றி பெற்றதை, தென்னிந்தியாவில் கணக்கைத் தொடங்கி விட்டோம் என்று எக்காளமிட்டனர். ஆனால் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர்களின் காவிச்சாயம் வெளுத்து விட்டது.

பாரதீய சனதாக் கட்சிக் குள்ளேயே பிரச்சினையைத் தொடங்கி வைத்த பெருமை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த குமாரையே சாரும். அனந்தகுமார் என்ற பார்ப்பனர், தான் முதல்வராக வரவேண்டும் என்ற முயற்சியில் தோல்வியடைந்தாலும், முதல்வரான எடியூரப்பா என்கிற சூத்திரருக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டே வந்தார்.

எடியூரப்பாவின் ஊழல் ஒரு புறம் இருக்கட்டும்; அதை இல்லையென கூறமுடியாது. அனந்த குமாரும் எடியூரப்பாவும் மோதிக் கொண்டு, மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும் என்ற கொள்கையில் பாரதீய சனதா ஆட்சியை ஒழிக்கப் பாடுபட்டனர். இது தான் அங்கிருந்த உண்மையான அரசியல் நிலை இப்போட்டியில் இருவருமே வெற்றி பெற்றனர். அவர்களின் கட்சி தோல்வியடைந்தது.

தமிழ் ஓவியா said...

பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களின் கொள்ளை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமானது. இத்தேர்தலிலும் அந்த ரெட்டி சகோதரர்களின் ஆதரவுடன் ஸ்ரீராமுலு என்ற முன்னாள் பி.ஜே.பி. அமைச்சர் ஏழை மக்கள் காங்கிரஸ் (படவரு மக்களு காங்கிரஸ்) என்ற பெயரில் கட்சி அமைத்து, அக்கட்சி சார்பில் பெல்லாரி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்துள்ளனர்.

இத்தேர்தலை காங்கிரஸ் கட்சி மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விருந்து சிறப்பாக பணியாற்றிய, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த - சமூக நீதியில் அக்கறை உள்ள சித்தராமையாதான் காரணம் என்றால் மிகையல்ல.

சட்டமன்றத்தில் பாரதீய சனதா ஆட்சியில் ஊழல் முகமூடியைக் கிழித்தெறிந்தார். தற்பொழுது நடைபெற்ற தேர்தலில் மைசூர் மாவட் டம், வருணா என்ற தொகுதியில் போட்டியிட்டு 29641 வாக்குகள் அதிகம் பெற்று, மதச்சார்பற்ற சனதா தளம், பாரதீய சனதா தளம், கருநாடக ஜனதா கட்சி (எடியூரப்பா கட்சி) மூன்று கட்சிகளைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார்.

சித்தராமையா காங்கிரஸ் கட்சியி லும் கடும் போராட்டத்தையும், எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்ற போதிலும், காங்கிரசிலிருந்த சாதீயசக்தி, சித்தராமையா காங்கிரசில் சேர்ந்து ஆறு ஆண்டுகள் தான் ஆகிறது என்ற எண்ணம் அவருக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...

ஆனால் சித்தராமையாவுக்கிருந்த மக்கள் செல்வாக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஆகிய வற்றால், இவரின் வெற்றியைத் தடுக்க இயலவில்லை. ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த டி.கே.சிவகுமார் எங்கள் சமுதாயத்திற்கு முதல்வர் பதவியைத் தரவேண்டுமென உரிமை கோரினார். இவருக்கு இவர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்னா ஆதரவு அளித்தார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த, தான்தான் முதல்வராக வேண்டும் என்று இன்றைய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்சுன கார்கே முயன்றார்; இவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அடுத்து லிங்காயத்து சமுதாயத்தைச் சார்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே என்பவர் கடுமையாக முயன்றார். ஆனால் இவற் றையெல்லாம் கடந்த - சிறுபான்மைச் சமுதாயமான குரும்பா - என்னும் சமூகத்தைச் சேர்ந்த சித்தராமையா முதல்வரானது சாதாரண செயல்அல்ல.

தேவேகவுடா ஆசை

இதற்கிடையே முன்னாள் பிரதமர் தேவேகவுடா தன் கட்சியின் உதவி யில்லாமல் யாரும் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற எண்ணத்தில், தன் பெரிய மகன் எச்.டி.ரேவண்ணாவை மைசூர் மாநில ஹேலேநரசிபுரா தொகுதியில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்தார். தன் இரண்டாவது மகனும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமார சாமியை ராம்நகர் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி கண்டார். தன் மரு மகள் அனிதா குமாரசாமியை சென்ன பட்டனா தொகுதியில் நிறுத்தி தோல்வி கண்டார். எனவே தேவேகவுடாவின் ஆசையும் நிராசையானது.

கருநாடக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ள சித்தராமையா அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருடன் நல்ல நட்பு கொண்டவர். கொள்கை வழி யான சமூக நீதியான நட்பாகும். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் தரம்சிங் முதல்வராகவும், மதச்சார்பற்ற சனதா சார்பில் சித்தராமையா துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

மாண்புமிகு சித்தராமையா அவர்களைப் பாராட்ட தமிழர் தலைவர் நேராக பெங்களூர் சென்று 14.6.2004 அன்று பாராட் டினார். உடன் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் அவர்களும் இருந்தார்கள்.

இன்னொரு தேவராஜ் அர்ஸ்

இம்முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டவுடன் மாண்புமிகு சித்தராமையா அவர்கள் - முந்தைய முதல்வர்களைப் போல சுவாமி ஜிக்களை, நாடிச் சென்று ஆசி பெறவில்லை; அதற்குப் பதிலாக கன்னட அறிஞர்களைத் தேடிச்சென்று ஆதரவு கேட்டுள்ளார்.

கருநாடக மாநிலத்தில் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தின் தூணாக விளங்கியவர் தேவராஜ் அர்ஸ் ஆவார். தேவராஜ் அர்ஸ் அவர்கள் தன் இறுதி காலத்தில் தமிழர் தலைவருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். நம் பெரியார் திடலுக்கே திடீரென வந்து ஆசிரியர் அவர்களைச் சந்தித்துள்ளார். தேவராஜ் அர்ஸ் போலவே, கருநாடக மாநிலத்தில் சமூக நீதியில் அதிக நாட்டம் கொண்ட மாண்புமிகு சித்தராமையா அவர்கள் முதல்வராகி உள்ளது. நமக்கு மீண்டும் இன்னொரு தேவராஜ் அர்ஸ் கிடைத்துள்ளார் என்றால் மிகையாகாது

தமிழ் ஓவியா said...


அதிர்ச்சி!


யாழ்ப்பாணம் கொழும்பு முதலிய இடங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்குச் செல்லும் தமிழர்களின் சிறு நீரகங்கள் அகற்றப்பட்டு படுகொலையும் செய் யப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் 29 வயதுடைய இளைஞரும் கொழும்பு மருத்துவமனையில் பெண்ணும் இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


சீறி எழு சிறுத்தையாய்!


சீர்கெட்ட ஜீவன்களை
சீர்படுத்து
பறை அடித்து பறையனாகாதே
செத்த மாட்டைத் தூக்கி
சீர்கெடாதே!
உன் இரத்தம்
ஊர் இரத்தம் ஒன்றே
பொறுத்தது போதும்
பட்டது போதும்
பொங்கி எழு
எல்லோரும் நம் இரத்தம்
பிரிவினை வேண்டாம்
வேத புராணம்
புளுகியது புரட்டு - நீ
இருட்டில் உள்ளாய்
கடவுள் ஒன்றும் இல்லை
கற்பனை கதை - அது
பார்ப்பான் பிழைப்பின் வடிவம்
சூடம் ஏற்றுகிறான்
அசுத்தம் செய்ய - அந்த
நாற்றத்தை பரப்பி
பக்திக்கு வித்திடுகின்றான்
ஏசுநாதர், நபிகள்
கடவுளை பார்த்ததாக
சொல்லவில்லை
சாதியை உண்டாக்கியவன்
கடவுளா?
மனிதனை நினை
கடவுளை மற

மா. சென்றாயன், தருமபுரி

தமிழ் ஓவியா said...


மடமையை நம்பும் மா மனிதர்கள்!


நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூட அங்குள்ள தலைவர்கள் எடுத்துக்கொண்ட மூட முயற்சிகளை விளக்கிச் சொல்ல நேர்ந்தால் விலாநோகச் சிரிக்கத் தோன்றும். தலைவர்களே இந்தளவுக்கு மடமைச் சேற்றை அள்ளி எடுத்து உடலெங்கும் பூசிக்கொள்கிறபோது அவர்களைப் பின் தொடரும் அப்பாவித் தொண்டர்கள் எந்தளவுக்கு மூடக்குழியில் மூழ்க நேரிடும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

நல்ல நேரம் பார்த்து சிமோகாவில் தனது வாக்கைப்பதிவு செய்ய வந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா வாக்குச்சாவடியில் கருவியை வாஸ்து பிரகாரம் வடக்கு நோக்கி நகர்த்தி வைத்துவிட்டு அதன்பின் வாக்களித்தாராம்!

முன்னாள் பிரதமர் தேவகவுடா இவருக்கு சளைத்தவரா என்ன? ஹாசன் வாக்குச் சாவடிக்கு குடும்பத்துடன் வந்து இருபது நிமி டங்கள் காரிலேயே அமர்ந்து பகவத் கீதை பாராயணம் செய்துவிட்டு பிறகே வாக் களித்தார். தகப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயவேண்டும் தானே! தேவகவுடா மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி ராம் நகரில் வாக்களிக்க வந்தார்.

என்ன செய்தார் தெரியுமா? வாக்குச்சாவடி அருகே மூன்று பசுமாடுகளைக் கொண்டு வந்து நிறுத்தினார், கோ பூஜை நடத்தி முடித்தார். அதன் பிறகு தான் உள்ளே நுழைந்து விரலில் மையிட்டுக்கொண்டார்.

பி.ஜே.பிக்காரர்கள் மட்டும் இவர்களுக்கு குறைந்தவர்களா என்ன? மதத்தையும் மடமையையும் முழுமையாய் நம்பியிருப்பவர்கள் ஆயிற்றே. அமைச்சர்களும் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவும் மடாபதி ஒருவரைச் சரணடைந்தார்கள்.

அவரின் வழிக்காட்டுதலின்படி சில சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் அரங்கேற்றிய பின் வாக்களிக்க வந்தார்கள். இவர்களால் தங்கள் கட்சியின் பலத்தை நம்ப முடியவில்லை!

இவர்களிடம் குவிந்துகிடக்கும் பணத்தையும் நம்ப முடியவில்லை!

தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்து நின்ற ஜாதி வாக்குகளையும் நம்ப முடியவில்லை. காலங்காலமாய் வணங்கி வந்த கடவுளையும் நம்ப முடியவில்லை!

கைவசம் இருக்கும் மூட நம்பிக்கைகளை மட்டுமே முழுசாக நம்பி யிருக்கிறார்கள். என்னே அறியாமை!

இவர்களின் சந்ததியினருக்கும் பின் தொடரும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இவர்கள் காட்டும் பாதை இதுதான்.

மக்களை நம்பாமல் மடமையை நம்பும் இந்த மா மனிதர்களால் இந்த நாடு எப்படி முன்னேறும்? பீடு நடை போடும்? மில்லியன் டாலர் கேள்வி இது!

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...


அறிவுரை


நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்


1. ஆப்பிள் : இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது. பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது

2. வாழைப்பழம்: உடல் நலக்குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும், உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப் பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.

3. ஆரஞ்சு: 3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு ஜீரண உறுப்புகளும், நோய் எதிர்ப்புச் சக்தியும் வலுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

4. பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை: இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு களைப் போக்கும்.

5. மாதுளைப் பழம்: இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம் பழம்.

6. பப்பாளி: சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.

7.கொய்யா: இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளிகளுக்கு அரிய மருந்து கொய்யாப்பழம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

8.அன்னாசி: இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற் றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.

9. உலர் திராட்சை: தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளி களுக்கு நல்ல உணவு.

10. சாத்துக்குடி: தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல் படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.

தமிழ் ஓவியா said...

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

மேலும் வீரர்கள் சிக்குகின்றனர்
சென்னையில் 6 தரகர்கள் கைது!
13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல்

மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் பறி முதல் செய்யப்பட்டது.

அய்.பி.எல். 6 போட்டியில் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ் தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிறீகாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா, முன்னாள் வீரர் அபித் சிங் ஆகிய நான்கு பேரிடமும் டில்லி காவல்துறையினர் நேற்று இரண்டாவது நாளாக விசா ரணை நடத்தினர். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ் மேன்களான ரஹானே (இந்திய வீரர்), பிராட்காட்ஜ் (ஆஸ்திரேலியா வீரர்) ஆகிய இருவருக்கும் தொடர்பு உண்டு என்று தெரிய வந்துள்ளதால் அவர்கள் டில்லி காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட் டுள்ளனர்.

இதற்கிடையே மும்பை இணை காவல்ஆணையர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த அய்.பி.எல். சூதாட்டப் புகாரில் மேலும் பல வீரர்களுக்கு தொடர்பு இருக்கும் எனதான் நம்புவதாக கூறினார்.

தமிழ் ஓவியா said...

இதுதொடர்பாக சென்னை யில் அய்.ஜி. மஞ்சுநாதா நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லி காவல்துறையினர் 3 கிரிக்கெட் வீரர்களை கைது செய்ததற்கும், நாங்கள் எடுத் துள்ள நடவடிக்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங் கிய உடனேயே எங்கள் தனிப் படை போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ரகசிய தகவல்களையும் சேகரித்து வந்தனர். நாங்கள் சேகரித்த தகவல் களில், டெல்லியை தலைமையிட மாகக் கொண்டு மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கட்டி சூதாட்டத்தில் ஈடுபடு கிறார்கள் என்பது தெரிய வந்தது.

இவர்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் நவீன வசதிகளுடன் நெட்வொர்க் அமைத்து பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல் படுவது தெரிய வந்தது. சென்னை யில் மட்டும் 20 குழுக்கள் கொண்ட தரகர்கள் செயல்படு வதை கண்டறிந்தோம் இந்த குழுக்களின் தலைவனாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஹரீஸ் பஜாஜ் செயல்படுவது தெரியவந்தது. இவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். சூளை மேட்டில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்தினோம்.

அடுத்து இவரது கூட்டாளிகளான ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வேதாச்சலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற பப்புகவுதம், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் கைது செய்யப்பட்ட னர். இவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அடுத்தபடியாக சைதாப் பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாநகர், காலடிபேட்டை ஆகிய இடங்களி லும் சோதனை மேற்கொள்ளப் பட்டது. இந்த சோதனையில் சுமார் ரூ.14 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 10 லேப்-டாப் கள், 4 கம்ப்யூட்டர் சாதனங்கள், 5 வயர்லஸ் போன்கள், 24 செல் போன்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கைதானவர்களில் ஹரீஸ் பஜாஜும், தீபக் பஜாஜும் உறவினர்கள். கைதான வேதாச் சலம் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் 20 ஓவர் போட்டிகளிலும், ஒரு நாள் போட் டிகளிலும் சூதாட்டம் நடத்துப வர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

இவ்வாறு ஐ.ஜி. மஞ்சு நாதா தெரிவித்தார். கைதான சூதாட்ட தரகர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் பணம் கட்டும் வாடிக்கையாளர் கள் பட்டியலை வைத்து இருந் தனர். போன் மூலம் வாய்மொழி யாகவே சூதாட்டம் நடந்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை கூட பணம் கட்டி இருக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு பந்து வீச்சுக்கு கூட சூதாட்டம் நடந்துள்ளது. பண பரிமாற்றம் கூரியர் சேவை மூலம் நடைபெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந் துள்ளது.

சென்னையில் நடந்த போட்டிகளில் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நடை பெற்ற போட்டிகளிலும் சென் னையில் இருந்து சூதாட்டம் நடந்துள்ளது. இது குறித்து சென்னையில் இருந்து டெல்லி, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுடன் நடைபெற்ற டெலிபோன் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்

சூதாட்டம் : தகவல்கள்

சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் வரி நேற்று மாலை செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செல்போன் மூலம் சென்னை யில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம் முழுக்க, முழுக்க பொதுமக்களை பணம் கட்ட வைத்து அவர்களை ஏமாற்றும் விதத்தில் நடந்துள்ளது. இதை மேட்ச் பிச்சிங் என்றோ, ஸ்பாட் பிச்சிங் என்றோ சொல்ல முடி யாது. பொதுமக்களிடம் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் வீதத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை பணத்தை வசூலித்துள்ள னர். உதாரணமாக ஒரு போட்டியில் குறிப்பட்ட அணிதான் ஜெயிக்கும் என்று ரூ.1,000 பணம் கட்டினால் அந்த அணி ஜெயித்துவிட்டால் பணம் கட்டியவர்களுக்கு ரூ.1,400 கிடைக்கும்.

தோற்றுப்போனால் பணம் பறிபோய்விடும். அனைத் தும் செல்போன் மூலமாகவே சூதாட்டம் நடந்துள்ளது. பணம் கொடுக்கல்-வாங்கல் அனைத் தும் தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் நடந்துள்ளது. பணம் கட்டிய பொதுமக்கள் நிறையபேருக்கு சூதாட்டக் காரர்கள் பணத்தை கொடுக்க வில்லை. இதனால் எங்களிடம் நிறைய புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோதுதான் இந்த சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது. 6 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

தொடர்ந்து தோற்றுப் போகும் அணி ஜெயிக்கும் என்று அதிக ரிஸ்க் எடுத்து பணம் கட்டியவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும் என்று விளம்பரப் படுத்தியுள்ளனர். தோற்றுப் போகும் அணி ஜெயித்துவிட்டால் அதில் வெற்றிபெறுபவர்களுக்கு 80 சதவீதம் லாபத்தொகை கிடைக்கும். தொடர்ந்து ஜெயிக் கும் அணிகளில் பணம் கட்டுபவர் களுக்கு 40 சதவீதம்தான் லாபம் கிடைக்கும்.

சங்கேத பாஷை இந்த லாபக் கணக்கை சங்கேத பாஷையில் தான் சூதாட்டக்காரர்கள் பேசு வார்கள். உதாரணமாக 40 சத வீதம் லாபம் கிடைக்கும் என் பதை 40 காசு என்றும், 80 சதவீதம் லாபம் கிடைக்கும் என்பதை 80 காசு என்றும் சூதாட்டக்காரர்கள் போனில் பேசியுள்ளனர். நாங்கள் சோதனை செய்தபோது பஞ்சாப், டெல்லி அணிகளிடையே நடந்த மோதல் குறித்து சூதாட்டக்காரர் கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந் தனர். அப்போதுதான் நாங்கள் சோதனை போட்டோம். அதில் இரண்டு இடங்களில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது என்றார் அவர்.

தி.க. ஆர்ப்பாட்டம்

மே 24ஆம் தேதி, திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, சார்பில் கிரிக்கெட் போதை சூதாட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டம்பற்றி கண்டனம் - தினமணி ஏடுகூட!


இந்தியன் பிரீமியர் லீக்' (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்' செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் தில்லி போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ள விவகாரம், ஐ.பி.எல். விளை யாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது என் பதைத்தான் மீண்டும் உறுதிப்படுத்து கிறது.

இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணம், கிரிக்கெட் ஒரு மிகப்பெரும் வர்த்தகமாக மாற்றப்பட்டிருப்பதுதான் என்பதையும், அளவுக்கு அதிகமான லாபம் கொழிக்கும் வியாபாரத்தில் முறைகேடுகளும் அதிகமாக மண்டிக் கிடக்கும் என்பதையும் புரிந்துகொண் டால், கிரிக்கெட் ரசிகர்களே இந்த ஐ.பி.எல். விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பு வார்கள்.

டுவிட்டர்', பேஸ்-புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத் துக்குக் கடும் கண்டனம் தெரிவித் திருக்கும் பலரும் கேட்கும் கேள்விகள் நியாயமானவை.

தமிழ் ஓவியா said...

ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா? என்று நாம் கேட்கவில்லை, டுவிட்டரில் கேட்கிறார் ஒருவர்.

குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் மூவரையும் சஸ்பெண்ட் செய்த பி.சி. சி.ஐ.யின் செயல் மிகவும் அவசரமான முடிவு என்று நாம் சொல்லவில்லை, பேஸ்புக்கில் பதிவு செய்கிறார் மற்றொருவர்.

விளையாட்டின் நடுவே, இன்றியமையாத வேளையில், வேண்டுமென்றே தவறு செய்தல் அல்லது சரியாக விளையாடாமல் இருப்பதற்காக (ஸ்பாட் பிக்ஸிங்) முன்பணம் வாங்கியதாக ஸ்ரீசாந்த் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் தில்லி போலீஸாரால் கைது செய்யப் படுவாரேயானால், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பல கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) நிர்வாகிகள், ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என்று நாம் கேட்கவில்லை, விவரம் தெரிந்த அனைவருமே கேட்கிறார்கள்.

ஐ.பி.எல். அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இன்டியன்ஸ் ஆகியன மோரிஷஸ், பகாமா, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகள் வழியாக அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்திருப்பது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையின் அடிப்படையில் இந்தக் குற்றத்துக்காக பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்றக் குழுவால் விசாரிக்கப்பட்டனர்.

ஐ.பி.எல். நடத்திய போட்டிகளின் லாபத்தில் ரூ.160 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருக்கிறது. இதற்காக வருமான வரித் துறை 96 நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் 2011-இல் ஒரு கேள்விக்குப் பதில் அளித்தபோது குறிப்பிட்டார். அன்னிய செலாவணிச் சட்டத்தை மீறி ரூ.1,077 கோடி பணம் ஐ.பி.எல். அணிகளுக்கு வந்துள்ளது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆனால் யார் மீதும் எந்த ஒரு குற்றத்துக்காகவும் இன்றுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்காதீர்கள். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் சசி தரூர், ராஜீவ் சுக்லா, பாஜகவின் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக குடும்பத்தைச் சேர்ந்த சன்' குழுமத் தலைவர் கலாநிதி மாறன் என்று இதில் தொடர்புடையவர்கள் எல்லோரும் அரசியல் பெரும்புள்ளிகள் எனும்போது எப்படி நடவடிக்கை எடுப் பார்கள்?

ஒவ்வொரு ஐ.பி.எல். விளையாட்டின் போதும் ஒளிபரப்பு, பார்வையாளர் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் தொகைக்கு ஏற்ப வரியை முன்கூட்டியே செலுத்த வேண் டும் என்பதை அரசு கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

இந்திய விளையாட்டுக்கும், இந்திய கலாசாரத்துக்கும் பொருந்தாத வகையில் விளையாட்டு அரங்கில் பார்வையாளர் களுக்குக் கிளர்ச்சியூட்ட "சியர் கேர்ள்ஸ்' (கிளுகிளுப்புக் காரிகையர்) நடனம் குறித்து எழுந்த விமர்சனங்களைக்கூட பி.சி.சி.ஐ. கண்டு கொள்ளவில்லை. அரசு இந்த விரசத்தைத் தடுத்திருக்க வேண்டாமா?

ரசிகர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கத் தான் இந்த விளையாட்டு என்றால், ஸ்பாட் பிக்ஸிங்கை'விட மிக மோசமான சூதாட்டம் இவர்களது விளையாட்டல்லவா? அதைத் தடை செய்திருக்க வேண்டாமா அரசு?

இந்த விவகாரத்தில் தகுந்த ஆதா ரங்கள் இருப்பதாகவும், தொலைபேசி உரை யாடல்கள் இந்த ஸ்பாட் பிக்ஸிங்' பேரத்தை, முன்பணத்தை உறுதி செய் திருப்பதாகவும் தில்லி போலீசார் கூறுகின்றனர். இந்த கிரிக்கெட் ஸ்பாட் பிக்ஸிங்' விவகாரத்தில் தலைமறைவுக் குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டத்தின் போதும் ரூ.400 கோடி அளவுக்குப் பந்தயம் கட்டுதல் நடைபெறுவதாகச் சொல்லப் படுகிறது. பந்தயம் கட்டுவதற்கே இந்த அளவுக்குப் பணம் புழங்கும் என்றால் நிச்சயமாக இந்த விளையாட்டில், புக்கிங் ஏஜண்டுகள்' நட்டம் அடையாமல் இருக்க, ஸ்பாட் பிக்ஸிங்', மேட்ச் பிக்ஸிங்' ஆகியவற்றை நடத்தவே செய்வார்கள்.

தாவூத் இப்ராகிம் ஆட்கள் இதில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தன்னளவில் விருப்பம் இல்லாத நிலையிலும், மிரட்டப்பட்டு, அதனால் இத்தகைய ஸ்பாட் பிக்ஸிங்' செய்ய ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந் திருக்கவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியாதா என்ன?

போதும் இந்த சூதாட்ட விபரீதம்; ஐ.பி.எல். உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்!

நன்றி: தினமணி தலையங்கம் 17.5.2013

தமிழ் ஓவியா said...


பாராட்டுரைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!


மனிதர்களை அவர்களின் அரிய சாதனைகளுக்காக பாராட்டுதல், வாழ்த்துதல் மிகவும் அவசியமாகும். அவர்களை அது ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும். மேலும் உழைக்கும் ஆர்வத்தை அவர்களுக்கிடையே தூண்டும்; அது அவர்களுக்கு மட்டு மல்ல; அவர்களது அரிய சாதனைகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் - எழுத்து, பேச்சு, செயல் எவ்வாறாயினும் - சமூகத்திற்கும்கூட அது வாய்ப்பாக அமையும்!

பாராட்ட வேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டி விடுங்கள்; தாமதியாதீர்கள் - பிறகு உங்கள் மனம்கூட மாறிவிடக் கூடும் என்பார் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள்.

முன்பு, இரண்டு மாடிகள் ஏறி வந்து, அறிஞர் அண்ணா விடுதலை ஆசிரியராக ஈரோட்டில் இருந்து எழுதிய ஓர் தலையங்கத்திற்காக தந்தை பெரியார், மூச்சிறைக்கப் பாராட்டியது கண்டு அண்ணா இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இது வரலாறு.

நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள்மீது கோர்ட் அவமதிப்பு (Contempt of Court) வழக்குப் போடப்பட்டு தண்டிக்கப்பட்டதையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் என்பவர்கள் ஊழல் புரிந்ததை யொட்டி எழுந்த விமர்சனங்களைத் திரட்டி, திராவிடர்கள் - நீதிபதி களாகவோ, நிர்வாகஸ்தர்களாகவோ இருந்தால் மட்டும் அவர்களை வலிந்து சிறுசிறு தவறுகளையோ, அல்லது தவறுகள் நடந்ததாக கற்பனையாலேயோ, எழுதி சங்கடப்படுத்தும் பல்வகை வழக்கு ஆதாரங்களுடன் எழுதினேன் அப்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் B.L. வகுப்பில் படித்து வரும் மாணவன்.

சென்னையில் அதை அய்யாவிடம் காட்டினேன். விடுதலையில் போடுவ தற்காக எழுதியுள்ளேன் அய்யா என்று கூறினேன்.

முழுவதும் படித்துப் பார்த்தார்கள்; இறுதியாக அதைப் பாராட்டி விட்டு, இந்தக் கட்டுரையை உன் பெயரில் போட வேண்டாம்; உனக்கு ஏதாவது தொல்லைகள் வரலாம்; அதோடு, அந்த மேட்டருக்கு உரிய வெயிட் உன் பெயரில் வந்தால் அவ்வளவு வராது. ஆகவேதான் என் பெயரிலேயே போடுமாறு விடுதலை அலுவலகத்திற்குக் கூறு கிறேன் என்றார்கள்.

எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆகா தாராளமாகச் செய்யுங்கள் அய்யா என்று கூறி வந்துவிட்டேன்.

மாலை விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக அது வெளி வந்தது! சென்னை மீரான் சாயபுத் தெரு, இல் லத்தில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களுக்குப் பலர் நேரில் வந்து பாராட்டுக்களைக் கூறினார்கள்.

அந்த அறிக்கைகாக!

அவர்களில் ஒரு குழுவினர் - இயக்கத்தவர்கள்தான் வேலூரிலிருந்து வந்தவர்கள் - அய்யாவின் இந்த அறிக்கை மிகப் பிரமாதம் அங்குள்ள வக்கீல்கள், நீதிக் கோர்ட் நியாயாதி பதிகள் எல்லோரும் எங்களிடத்தில் விசாரித்தார்கள்; விடுதலை பேப்பர் கிடைக்குமா என்று கேட்டு நச்சரித்தனர் என்று கூறி அய்யா ஒருவரால்தான் இப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்த, தெளிவு பொதிந்த, அறிக்கைகளைத் தர முடியும் என்று சரமாரி புகழ்ந்தார்கள்!

பொறுமையாக இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அய்யா அவர்கள் கடைசியாக, உங்களுக் கெல்லாம் ஒரு சேதி தெரியுமா? அந்த அறிக்கை நான் எழுதியதில்லை; நம்ம வீரமணி இருக் கிறாரே அவர் சட்டக் கல்லூரியில் B.L. படிக்கிறார். அவர் தான் எழுதினார் - இந்தப் பாராட்டு, உண்மையில் என்னைச் சேராது அவரைத்தான் சேரும் என்றார்.

வந்தவர்களுக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி (தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கசப்பு கொண்டிருந் தவர்கள்தான் அதில் சிலர் - அய்யா வுக்கும் கூட இது தெரியும் - தெரிந்தே சொன்னார்!)

தந்தை பெரியாரின் அறிவு நாண யம் எப்படிப்பட்டது பார்த்தீர்களா?

பிறர் பாராட்டும்போதுகூட அது யாருக்கு உரியது என்பதைக் கூறி, அதை ஏற்க மறுப்பதற்கு எத்தனை பெரிய உள்ளம் பார்த்தீர்களா?

எனவே பாராட்டில் நிதானமும் வேண்டும் - பொய்யுரைகளைத் தவிர்த் தலும் அவசியம்! நாணயத்துடன் அது அமைந்தால் பொன்மலருடன், மணமும் சேர்ந்த பெருமையாகும்!
----கி.வீரமணி- வாழ்வியல் சிந்தனைகள் -18-5-2013

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் பின்னடைவு!


கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக் குப் பிறகு - பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று மிகப் பெரிய உயரத்தில் தூக்கி நிறுத்தப்பட்ட தாமோதரதாஸ் நரேந்திர மோடியின் பிம்பம் பெரும் அளவில் கீழே சாய்ந்து விட்டது.

குஜராத்துக்குள் மோடி, தம் சித்து விளை யாட்டுகளை ஆடி மக்களை மயக்கலாம்; அம்மா நிலத்திற்கு வெளியே அவரைப் பற்றிய படம் அருவருப்பானது.

வெளி நாடுகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம் - விசா கொடுக்க எந்த நாடும் தயாராக இல்லை. அமெரிக்க மண்ணில் காலடி பதித்து, உலகளவில், தம் உருவத்தை உயரத்தில் காட்டலாம் என்று மனப்பால் குடித்தார், அதிலும் மண் விழுந்து விட்டது.

மோடியா - மோசமான மனிதன் - மனித குல விரோதி - சிறுபான்மை மக்களை நரபலியாடிய நவீன இட்லர் என்ற கருத்தோட்டம் உலகளவில் பரவி விட்டது.

கூட்டணிக் கட்சிக்குள்ளேயே கருத்து வேறு பாடுகள்; அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த - பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் மோடியின் முதல் எதிரியாக, தம் முகத்தைக் கம்பீரமாகக் காட்டிக் கொண்டு களத்தில் நிற்கிறார்.

கருநாடக மாநிலத் தேர்தலில் மோடியின் பிரச்சாரம் பி.ஜே.பி.க்குப் பெரிதும் உதவும் என்று ஏடுகள் எல்லாம் எழுதின.

அது எதிர் விளைவை ஏற்படுத்தி விட்டது என்கிற விமர்சனமும் இப்பொழுது எழுந்துள்ளது. பி.ஜே.பி.யின் முக்கிய முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், அனல் பறக்கும் பேச்சாளருமான உமாபாரதி மிகவும் வெளிப்படையாக, மோடிக்கு எதிராகப் போர்க் குரல் கொடுத்துள்ளார்.

கூட்டம் சேர்ப்பவர்கள் எல்லாம் பிரதமர் வேட்பாளருக்குத் தகுதியானவராக ஆகிவிட முடியாது. நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல; நான் செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கும் கூட்டம் கூடுகிறது. நான் பிரதமர் வேட்பாளராகி விட முடியாது. பாரதீய ஜனதாவில் அத்வானி முக்கிய தலைவர், அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது.

பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேறிய நான் மீண்டும் அக்கட்சிக்கு வந்ததற்குக் காரணம் அத்வானியே!

சிலர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய முடியாது; வாஜ்பேயி, அத்வானி போன்ற தலைவர்களுக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. அவர்களுக்குதான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யக் கூடிய தகுதி உண்டு. அவர்கள்தான் எந்தப் பொறுப் புக்கும் தகுதியானவர்கள்; அத்வானி ஒரு துறவி போன்றவர் என்று இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் உமாபாரதி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

உமாபாரதி இடையில் பி.ஜே.பி.யை விட்டு விலகித் தனிக் கட்சியை ஏற்படுத்தி, மறுபடியும் பி.ஜே.பி.க்கு வந்தவர்தான் என்றாலும் அக் கட்சியின் முன்னணி தலைவர் - பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

மத்திய பிரதேசத்தில் பிஜேபியின் உயர் ஜாதி தலைமை அவரை அவமானப்படுத்தி, வெளியேற வைத்தது.

கருநாடக மாநிலத்தில் குறிப்பிட்ட வழக்கில் அவர் சம்பந்தப்பட்டவர் என்பதற்காக மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் பதவியைத் தற்காலிக மாகத் துறந்து, வழக்கைச் சந்தித்தார். வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு கிடைத்தபின் நாணயமாக, மீண்டும் அவரை மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா?

பி.ஜே.பி.யின் அறிவு நாணயமும், உயர் ஜாதித்தனமும் எத்தகையது என்பது அம்பலமாகி விட்டது.

உமாபாரதி பெருமையாகப் பேசும் அந்த அத்வானிகூட அவருக்குக் கை கொடுக்க முன் வரவில்லை என்பது வேறு சங்கதி.

உமாபாரதி அத்வானியைப் பற்றிக் கூறிய கருத்தில் நமக்கு உடன்பாடு கிடையாது. அதேநேரத்தில் பிஜேபிக்குள், மோடிக்கு எதிரான பலம் வாய்ந்த சக்திகள் முஷ்டியைத் தூக்கிக் கிளம்பி விட்டன.

கருநாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு மோடியைப்பற்றி மறுபரிசீலனைக்கு உட்படுத்தி விட்டது என்பது மட்டும் உறுதியான உண்மை யாகும்.

தமிழ் ஓவியா said...


மதமே...


மதமே மனிதனுடைய சுயமரியா தைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்துக்கு விரோதி. மதமே மனி தனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனிதச் சமூகச் சம தர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத் துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.

(புரட்சி, 26.11.1933

தமிழ் ஓவியா said...


கிறித்தவ மதப் பிரசாரமா?


கிறித்தவ மதப் பிரசாரமா? என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப் பொன்றெழுதி, சென்னைக் கடற் கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரக ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத் தகைய கிறித்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிர சிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ள வில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான்.

இக்குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வழிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி தூட்சித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்? என்று எழுதி பொதுவாகக் கிறித்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களி டையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்கியத் தனமும் சூழ்ச்சியுமானதென்று கவனி யுங்கள்.

மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரகங்களிலும் அடங்கிக் கிடக்க வில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறித்தவ மதமோங்கி விடாது. இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறை யனாயிருக்கும் கோவிந்தனை பக்கத் தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோச ஆகிவிட்டால் கைலாகு கொடுப் பான்.

ஆகவே கிறித்தவ மதத்தை இப்பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது ஸ்ரீமான் ஆரியா ஆதரிக் கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பன னுடைய வாய் வேதாந்தத்தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களை ஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.

- குடிஅரசு, கட்டுரை, 11.07.1926

தமிழ் ஓவியா said...

டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்

முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும்
டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முலீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார்.

1. இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட் டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது.

2.முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்.

3. முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது.

என்று பேசியிருக்கிறார். (இது 5.7.26ல் மித்திரன் 4-வது பக்கம் 5-வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன்னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திர மாய்ப் போய்விட்டது.

ஒன்று நிர்மாணத் திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டிலொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த செய்யப் படும் சூழ்ச்சியாகிய பார்ப்பனக் காங்கிரசோ, சுயராஜ்யக் கட்சியோ தேசத் துரோகத்திற்கும் மற்ற வகுப்புத் துரோகத்திற்கும்தான் உதவும் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அதில் சேரக்கூடாது என்பதும் டாக்டர் கிச்சுலுவின் உபதேசத்தால் விளங்கி விட்டது. ஆதலால் இனியாவது மகமதியர்கள் போலிகளை நம்பி மோசம் போகாமல் கண் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926

தமிழ் ஓவியா said...


தமிழன்

முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத் தியாதாசப் பண்டிதரவர்களால் தமிழன் என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத் திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று.

மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத் திருக்கும் திரு.பி.எம். இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாத முதல் வெளியிடப் படுமென தெரிவிக் கிறோம். திரு. இராஜத் தினம் அவர் களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறு மென நம்புகி றோம்.

- குடிஅரசு - செய்தி 04.07.1926

அயோத்திதாச பண்டிதர் தாழ்த் தப்பட்டோரின் பாதுகாவலர் - பார்ப் பனர்களின் பிறவி எதிரி! ஒரு பைசாத் தமிழன் எனும் இதழ் நடத்தி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை எழுச்சியூட்டியவர்! மிகச் சிறந்த சித்த மருத்துவர்! மிகச் சிறந்த கல்விமான்! மிகச் சிறந்த பட்டறிவாளர்!

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடுகாரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ராஜரிஷி பிர்மரிஷி என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று என்னமாய் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினா மாக்களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை.

எங்கோ ஒரு மூலையில் ஒன்றரை அங்கு லத்தில் பொது ஜனங்கள் ராஜினா மாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்ட வில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுத வில்லை. ஒரு வயிற்றுச் சோத்துப் பார்ப்பனன் ஒரு உத்தி யோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பி யிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டு போய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்.

இது போலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வருகிறார்கள். இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத் தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன்வரலாகாதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்!

பார்ப்பனரல்லாத பத்திரிகைளைப் பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும் போது பத்திரிகையை பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசி யுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச் சாட்சியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை ஸ்ரீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் பிராமணலரல்லா தாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும் பலித்துவிடும்!

- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926

தமிழ் ஓவியா said...

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்! தமிழர் தலைவர்
நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப் போராளி எல்.ஜி. என்ற நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (17.5.2013) நடைபெற்றது. எல்.ஜி.அண்ணா வரவேற்றுப் பேசினார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரின் உரைக்குப் பின்னர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

ஈழத்தமிழர்களை ஒரு போதும் அழிக்க முடியாது; ராஜபக்சே போன்ற சிலர் வேண்டு மானால் ஒழிந்து விட்டார்கள் என்று கூறலாம். தற்போது டெசோ அமைப்பு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. சரித்திரம் மீண்டும் திரும்பும். வீழ்வது முக்கியம் அல்ல.

மீண்டும் எழுவோம். டெசோ அமைப்பு பற்றி யார் கேலி பேசினாலும், டெசோ தனது இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடும். எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலில் ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்களின் போராட்டங்கள் குறித்தும், பிரபாகரன் குறித்தும், தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதிலுள்ள கருத்துகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான இளைஞர் அணியினர் உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு அடுத்த விடியல் எப்போது என்றால், உலக தமிழர்கள் ஆதரவு கொடுப்பதன் மூலம்தான் கிடைக்கும்; அப்பொழுதுதான் ராஜ பக்சே ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தமிழ் ஓவியா said...

இந்தநூல்கள்பற்றி ஆய்வுச்சொற்பொழிவு சிறப் பான முறையில் தஞ்சாவூரில் நடைபெறும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், குத்தாலம் கல்யாணம், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் அறந்தாங்கி ராஜன், புதுக்கோட்டை விஜயா, ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், அத்திவெட்டி வீரையன், கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் இரா.குணசேகரன், சிதம்பரம், ஆர்.எஸ். அன்பழகன், சீனிவாசன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நூலை எழுதிய எல்.கணேசன் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன் னாடை அணிவித்து பாராட்டினார். சிறப்பு விருந் தினர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பொன் னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

நூல் ஆசிரியர் எல்.கணேசன் நன்றி கூறினார்.

தளபதி மு.க. ஸ்டாலின் உரை

அண்ணன் எல்.ஜி. அவர்களாலேயே இந்நூல் தயாரிக்கப்பட்டு, அதனையே பல்வேறு நிகழ்வுகளை எழுதி, ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறார். அதைத்தான் அய்யா ஆசிரியர் பெருந்தகை அவர்கள் பெருமையோடு இங்கே குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள். ஈழம் தமிழ் ஆங்கில நூல். அந்நூலிலே இருக்கக்கூடிய விவரங்களையெல்லாம் அய்யா ஆசிரியர் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். அதைக் குறிப்பாக நான் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டவேண்டுமானால், மாநிலங்களவையிலே அவர் ஆற்றியிருக்கக் கூடிய உரைகள், அந்த உரைகள் மட்டுமல்ல, இன்னும் சில தகவல்களைச் சேர்த்து இந்நூலினை உருவாக்கி இருக்கிறார்.

மிசா சட்டம் வந்து, தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டு, கலைக்கப்பட்ட அடுத்த விநாடியே, ஆசிரியர் அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்கள். நான் ஒருநாள் கழித்துதான் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்; இரவு மணி 12. அப்பொழுது லைட்டெல்லாம் கிடையாது; ஒரே கும்மிருட்டு தான். இப்பொழுது எல்லா வசதிகளும் சிறைச் சாலைகளில் இருக்கிறது.

ஊக்கத்தை, உற்சாகத்தை வழங்கினார் ஆசிரியர்

ஒரு செல்லைத் திறந்து என்னை உள்ளே தள்ளு கிறார்கள். அங்கே ஏற்கெனவே பத்து, பதினைந்து பேர் இருக்கிறார்கள். இருட்டு என்பதால் எதுவுமே தெரியவில்லை. நான் உள்ளே போன உடனே, ஒரு காலினை மிதித்தேன். நான் மிதித்த கால் எது தெரியுமா? அய்யா ஆசிரியரின் கால்தான். அதனால் தான் என்னவோ, இன்றைக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் என்னை எந்த அளவிற்கு உற்சாகப்படுத்த வேண்டுமோ, ஊக்கப்படுத்தவேண்டுமோ, தனிப் பட்ட ஸ்டாலினிற்காக அல்ல, இந்த இயக்கத்திற் காக, இளைய சமுதாயத்தினருக்காக, நீ இன்னும் பணியாற்றவேண்டும்; தொடர்ந்து உன்னுடைய கடமைகளை ஆற்றவேண்டும் என்று ஊக்கத்தை, உற்சாகத்தை தொடர்ந்து ஆசிரியர் அய்யா அவர்கள் எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்தியா


நம் நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம் குழந்தைகள் உள்ளனர். இதில், 150 கோடிக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும், 5 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம், தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், ஆசியக் குழந்தைகள் ஆணையம், குழந்தைகள் தகவல் தொடர்பு மய்யம் ஆகியன ஆய்வு செய்து மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் மேலே உள்ள விவரங்கள் உள்ளன.

மும்பையில் 70 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியப் பெண்கள் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 63 சதவிகிதம் பெண்கள் சிறுவயதில் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.



இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கோவா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெற் றுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் 2012ஆம் ஆண்டு 570 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் டில்லியிலிருந்து 105 புகார்களும், ஆந்திராவிலிருந்து 43 புகார்களும், தமிழகத்திலிருந்து 8ம் வந்துள்ளன என்று மத்திய அமைச்சர் அகமத் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தை களிடம் தவறாக நடந்துள்ளார்கள்-.

சென்ற 10 ஆண்டுகளில் 48,338 இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 12,000 புகார்கள் அதிகரித்து வந்துள்ளதும், மூன்றில் ஒரு பாலியல் வன்முறை குழந்தை மீது நடத்தப்படுவதும் தெரிய வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 32 சதவிகிதக் குழந்தைகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளான 87 சதவிகித குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதே சித்திரவதையை அனுபவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 18 வயதிற்குட்பட்டோர் பாலியல் வன்முறையில் டில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டா மிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

சர்வதேச அளவில் கணக்கெடுத்து வாட்ச் டாக் இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கொடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 33.6 சதவிகிதம் அதிகரித் துள்ளது. உலகின் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக தென்னாப் பிரிக்கா திகழ்கிறது. இங்கு, 3 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது.

11-17 வயது வரையிலான 6 குழந்தைகளில் ஒருவர் அதாவது 16.5 சதவிகிதம் பிரிட்டனில் (U.S) பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க, அய்க்கிய நாடுகளில் (U.K) 1992-2010 வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

இந்தோனேஷியாவில் 2012ஆம் ஆண்டில் குழந்தைகள் மீது பதிவான 2,367 வன்முறை வழக்குகளில் 62 சதவிகிதம் பாலியல் வன்முறை தொடர்பானது என்றும், கனடாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 54 சதவிகிதத் தினர் தேவையில்லாத பாலியல் கவனத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


எஸ்.ஏ. வெங்கட்ராமன் என்ற அய்.சி.எஸ். பார்ப்பனர் லஞ்சம் வாங்கினார் என்பது நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், பார்ப்பன ஏடுகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உலகை உலுக்கும் ஒரு நூல்


போப் மாளிகை மர்மங்கள்

- வெளிச்சம்

போப்புகள் என்றால் கடவுளின் பிரதிநிதிகள், புனிதத்தின் மொத்த உருவமான வர்கள் என்ற பிம்பத்தை, கருத்தாக்கத்தினைப் பல்வேறு காலகட்டங்களில் பல போப்புகள் தங்களது செய்கைகள் மூலமாக உடைத்தெறிந் துள்ளனர்.



போப்புகளின் இருண்ட வாழ்க்கை யினை, அவர்தம் கொடூரச் செயல்களான- கொலை, கொள்ளை, காமக் களியாட்டங்கள், துரோகங் கள், வஞ்சகம், சூழ்ச்சி போன்றவற்றை மற்றவர்கள் அக்காலகட்டத்தில் அறியாமல் இருந்தாலும் உடன் வாழ்ந்த மற்ற போப்புகள் மற்றும் ஏனைய கத்தோலிக்கக் குருமார்கள் தெரிந்து இருந்தனர்.

ஒரு சிலர் அதிர்ச்சி அடைந் துள்ளனர் எனினும் பெரும்பான்மையினர் அவ்வுயர் பதவியினை அடைய மேற்கூறிய வழிகளையே பின்பற்றியுள்ளனர். சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியான A DARK HISTORY: THE POPES VICE, MURDER AND CORRUPTION IN THE VATICAN என்ற நூல் உலகையே உலுக்கி உள்ளது.

தேர்வு முறையில் பதவி பெறுவது என்பது தொன்றுதொட்டு உள்ள பழக்கம். உலகிலேயே ரோம் நாட்டுப் போப்புகள்தான் அவ்வாறு முதன்முதலாக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். ஈராயிரம் ஆண்டுகள் பழமையான போப் மாளிகை அய்ரோப்பிய வரலாற்றினை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளது.

அதே நேரத்தில் அவர்தம் தேர்வு எல்லாக் கட்டத்திலும் நேர்மையாக ஒழுங்காக நடந்தது இல்லை. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுதல், வெறுப்பினை உமிழ்தல், கோபத்தினை வெளிப் படுத்துதல், அரசியல் தந்திரங்கள், ஏமாற்றுதல் என எதற்குமே பஞ்சம் இருந்தது இல்லை. அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சில சுவையான பகுதிகள் இங்கு கொடுக்கப்பட் டுள்ளன. முழு நூலைப் படித்தால் மொத்தச் சுவையினையும் பெற முடியும்.

பத்தாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த போப்புகள்தான் அதிகப்படியாக உல்லாச மற்றும் ஆபாச வாழ்க்கையில் சிக்கிச் சீரழிந்தவர்கள். பெரும்பான்மையினர், விபச்சாரிகளின் பிடியில் சிக்கி அவர்களால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு அவர்களின் கைப்பாவையாக அவர்தம் மடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.

தொலைந்து போன போப்பினைக் கண்டுபிடிப்பது எப்படி?

போப்புகள் திடீரென காணாமல் போய் விடுவது உண்டு. அப்படி யாராவது தொலைந்து போய்விட்டால் தேடுவதற்கு முன்னால், ஏற்கெனவே அதற்கு முன் தொலைந்து போன போப்புகள் அங்ஙனம் தொலைந்ததற்கான காரணங்களின் பட்டியலை ஆராய்வார்கள். அந்தப் பட்டியலின்படி, போப்புகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம், முற்றிலுமாக சிதைக்கப் பட்டிருக்கலாம், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது விபச்சார விடுதிகளில் தஞ்சம் அடைந்திருக்கலாம். ஆதலினால் யாராவது தொலைந்துவிட்டால் முதலில் மேற்கூறிய காரணங்களை ஆராய்ந்து விட்டுத்தான் பின் மற்ற காரணங்களுக்கு வருவார்கள்.

கிறுக்குப் பிடித்த போப் ஏழாம் ஸ்டீபன் என்பவர் மிகக் குறுகிய காலமே பதவி வகித்த போப் ஆவார். அதாவது வெறும் பதினைந்து மாதங்கள்தான் (896 CE and 897 CE). இவர் மனவளம் குன்றியவர். இவரது நாட்டைச் சார்ந்த (மத்திய இத்தாலி) அரசி அஜில்ட்ருதுவுக்கு ஸ்டீபன் போப் ஆவதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய குறையாக கருதவில்லை.

ஏனெனில், அவருக்கு அதற்கு முன் இருந்த போப் போர்மொசுஸ் அவர்களிடம் ஒரு பழைய கணக்கு தீர்க்க வேண்டியிருந்தது. ஆகவே ஏழாம் ஸ்டீபனின் மனநோய், அரசி அஜில்ட்ருதுவுக்கு ஒரு பெரிய தடையாகத் தோன்றவில்லை.

இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 894 CE. அரசி அஜில்ட்ருது தன் மகன் லாம்பேர்ட்அய் ரோம் நாட்டுப் பேரரசனாக்க வேண்டும் என்ற வேண்டு கோளுடன் அப்பொழுது போப்ஆக இருந்த போர்மொசுவைச் சந்திக்க வருகிறார். அஜில்ட்ருது கண்கவரும் அழகி. அவளது அழகு, கண்டவரைச் சொக்க வைக்கக் கூடியது. ஆகவே, அரசியல் தந்திரங்கள் வெற்றி பெறவில்லையென்றால் தன் வாள்விழியால் போப்பை வீழ்த்தி விடலாம் என முடிவு செய்துவிட்டாள்.

ஆனால், போர்மொசுவிற்கு வேறு எண்ணம் இருந்தது. அவர் அடிப்படையில் நல்லவர். ஆகவே அவர் அஜில்ட்ருது மகன் லாம்பேர்ட்அய் தவிர்த்து காரிந்தியா நாட்டு அரசர் அர்னுல்ப் என்பவரை ரோம் நாட்டுப் பேரரசராக முடிசூட்டத் தயாராகிறார். இம்முடிவு அஜில்ட்ருதுவின் கோபத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து அர்னுல்ப் பிடம் உதவி கேட்கிறார்.

அர்னுல்ப் தனது படையுடன் வந்து அரசி அஜில்ட்ருதுவையும் அவரது மகன் லாம்பேர்ட்டையும் அவர்களது நாட்டுக்கு விரட்டியடித்து விடுகிறார். 896 CE பிப்ரவரி 22ஆம் நாள் ரோம் நாட்டுப் பேரரசராக அர்னுல்ப், போப் போர்மொசுவால் முடிசூட்டப்படுகிறார். முடிசூடிய மன்னனுக்கு அடுத்த இலக்கு பேரழகி அஜில்ட்ருதுவை அடைவது.

தமிழ் ஓவியா said...

ஆனால் அவனுக்கு அந்த வாய்ப்புக் கிடைப்பதற்குமுன் முடக்குவாதத்தால் பாதிக்கபட்டு முடங்கி விடுகிறான். இதற்கிடையே ஏப்ரல் 4ஆம் தேதி போப் போர்மொசு உணவில் நஞ்சு கலக்கப்பட்டு கொல்லப்படுகிறார். வேறு யார் கொன்றிருக்க முடியும்? அழகி அஜில்ட்ருதுதான் நயவஞ்சகமாக மோக வலை வீசி தன் நாட்டுக்கு வரவழைத்து விஷம் கொடுத்து போப்பைக் கொன்று விடுகிறாள்.

வாடிகனில் அடுத்த போப் ஆக வரப் போவது யார் என்பது மிக முக்கியக் கேள்வியாக இருந்தது. தனது மகனை ரோம் நாட்டிற்கு முடிசூட்டாத போப் போர்மொசு செத்தொழிந்தது மட்டும் அஜில்ட்ருதுவுக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அவள் இன்னும் அதிகமாக பழி தீர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்த்தாள்.

போர்மொசுவின் பிணத்தை அரியாசனத்தில் அமர வைத்து குற்றச்சாட்டுகளைப் படித்தல்

அதனால் அவளும் அவளை ஒத்த கொடூர குணம் கொண்ட அவளது மகன் இளவரசன் லாம்பேர்ட்டும் வேறு திட்டம் வைத்திருந் தார்கள். தங்களது கைப்பாவையான ஏழாம் ஸ்டீபன் என்பவனைப் போப் ஆக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகின்றனர்.

இதற்குப் பின்னர்தான் வரலாறு காணாத கொடுமைகள் வாடிகன் மாளிகையில் அரங்கேறுகின்றன. இறந்து போன போப் போர்மொசுவின் மேல் பல்வேறு முறைகேடு களுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படு கின்றன.

இறந்து போனவரை என்ன செய்ய முடியும்? பரலோகத்திற்குச் சென்றா குற்றப் பத்திரிகை வாசிக்க முடியும். ஆகவே ஏழாம் ஸ்டீபன்க்கு ஒரு விபரீத யோசனை தோன்றுகிறது. கல்லறை திறக்கப்பட்டு பாதி சிதைந்த போப் போர்மொசுவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அரண்மனைக்கு எடுத்து வரப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

கிறுக்குப் போப் அதுவரை உலகம் காணாத விசித்திரமான விசாரணையை நடத்தினான். பிணத்தை அரியாசனத்தில் அமர வைத்து குற்றச்சாட்டுகளைப் படித்தான். பதினெட்டு வயது இளைஞன் ஒருவன் பிணத்தின் அருகே நின்று இறந்து போன போப்புக்குப் பதிலாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தக் கேலிக்கூத்து முடிந்தவுடன், போப்பின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஏற்கெனவே பாதி சிதைந்து போன பிணத்தின் வலது கையின் நடு மூன்று விரல்கள் வெட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவை வெட்டப்பட்டன. இந்த மூன்று விரல்கள்தான் போப் கத்தோலிக்கக் கிறித்துவர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப் பயன்பட்டவை.

இறந்து போன போர்மொசுவின் போப் பட்டம் பறிக்கப்பட்டு சாமானியனாகக் கருதப்பட்டு எல்லோரும் புதைக்கப்படும் இடத்தில் உடல் புதைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் அரசி அஜில்ட்ருது மாளிகையில் அமர்ந்து ரசித்தார். சிறிது காலத்திலேயே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வாடிகன் மாளிகையில் பெரும் கலவரம் ஏற்பட்டு போப் ஏழாம் ஸ்டீபன் கொல்லப்படுகிறான்.

கத்தோலிக்க மதத்தினைப் பாதுகாப்பது, கிறித்துவத்தைக் கட்டிக் காப்பது என்ற போர்வையில் போப்புகள் எண்ணற்ற அக்கிரமங் களை, கொடூரங்களைத் தங்கள் சுயநலனைக் கருத்தில் கொண்டு அரங்கேற்றியுள்ளனர்.

ஒரு சிலர் தாங்கள் தேர்ந்தெடுக்கபட்டவுடன், வாடிகன் திருச்சபையில் ஏற்கெனவே பணி (ஊழியம்?) செய்பவர்களை விரட்டியடித்து விட்டு, முழுக்க தங்கள் உறவினரையும் நண்பர்களையும் அமர்த்தி தயக்கமின்றிக் கொள்ளை அடித்தனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1492இல் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் 6 ஆம் அலெக்சாண்டர் (ரோட்ரிகோ).

தமிழ் ஓவியா said...


தங்கள் மதத்தை எதிர்ப்பவர்கள், அறிவியலார் மற்றும் பிற மதத்தினரை (குறிப்பாக இசுலாமியர்) சாத்தான்களின் ஏவலாளிகளாகக் கருதி அவர்களைப் பல்வேறு வழிகளில் அழித்தொழிப்பதைப் பிரதானமாகக் கருதினார்கள். மதத்தின் பொருட்டு இனப் படுகொலைகள் பல்வேறு காலகட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

அப்படி இருந்த பொழுதும், கிறித்துவ மதத்தின் கோட்பாடுகள் தொடர்ந்து வெவ்வேறு காலகட்டத்தில் தாக்கப்பட்டு வந்துள்ளது. அப்படி கிறித்தவ மதத்தை முதன்முதலாக எதிர்த்தவர்கள் 1143இல் உருவாகிய கதர்ஸ் என்கிற சமயப் பிரிவினர். போப் தலைமையிலான கிறித்துவ அமைப்புகளுக்கு இவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது பெரும் கவலையாக இருந்தது.

போப் இன்னொசென்ட் என்பவர் தலைமையில் 16 உயர்மட்ட கத்தோலிக்கக் குருமார்கள் (Cardinals) திட்டம் தீட்டி கதர்ஸ் பிரிவினர் மீது இனப் படுகொலையை 1208ஆம் ஆண்டு வாக்கில் பெசியர் என்ற இடத்தில் நடத்தி முடித்தனர். இந்த இன அழிப்பு தற்செயல் போல முதலில் தோன்றினாலும் பின் திட்டமிட்ட சதி என கண்டறியப்பட்டது. இது ஒருவகையில் புனிதப் போராகக் கருதப்பட்டது. விந்தை என்னவென்றால் இந்தப் புனித போர் 1096இல் (ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்) நடந்த முதல் புனிதப் போரினை ஒட்டியே நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஏறத்தாழ 250 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் வாடிகன் மாளிகையின் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது. ஒன்று மட்டும் சரியாக உள்ளது, ஆன்மீக மடங்கள், அமைப்புகள், எந்த மதத்தினருக்குரியது ஆனா லும், அக்கிரமங்களுக்கும் அநியாயத்திற்கும் மொத்தக் குத்தகை எடுத்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை.

போப் மாளிகையினைப் போன்று ஊழலி லும், காமக் களியாட்டங்களிலும், சொத்துக் குவிப்பிலும், அதிகார போதையிலும் திளைத்த திளைக்கின்ற காஞ்சி மடமானாலும், சாய் பாபா ஆசிரமம் ஆனாலும், நவீன 'நாயகன்' நித்தியானாலும், வாரிசுச் சிக்கலில் சிக்கியுள்ள மேல்மருவத்தூரார் ஆனாலும் நாங்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைவது நடைமுறையில் நாம் கண்கூடாகப் பார்க்கும் ஒன்றுதானே.

தமிழ் ஓவியா said...



புதிய ஆடைகளை உடுத்தும்போது........

நகைக்கடைகளில் நகைகளை அணிந்து கண்ணாடியில் பார்த்து வாங்குவதைப் போல ஜவுளிக்கடையில் ஆடைகளை உடுத்திப் பார்த்து வாங்கும் வழக்கத்தைப் பெரும்பாலோர் பின்பற்றுகின்றனர்.

புதிய உடைகளை அணிந்து பார்க்கும் அறையினுள் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி கள் சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடி தானா என்பது இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, உடைகளை அணிந்து பார்க்கும் அறைக்குச் (ட்ரயல் ரூம்) சென்று அணிந்து பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். அணிந்து பார்த்துத்தான் வாங்க வேண்டும் என நினைத்தால், உங்கள் விரல் நுனியைக் கொண்டு கண்ணாடியைத் தொடுங்கள்.

அப்போது உங்கள் விரலுக்கும் கண்ணாடிக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பின், அது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதான். இடைவெளி இல்லாமல், உங்கள் விரல் நுனி படும் இடத்திற்கு அருகிலேயே கண்ணாடியின் பிம்பம் தெரிந்தால், அது உங்களைப் படம் பிடிப்பதற்கு வைக்கப்பட்ட கண்ணாடி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தச் சோதனையில் குழப்பம் இருப்பின், உங்கள் செல்பேசியில் இருந்து யாருக்காவது பேசுவதற்கு எண்ணை அழுத்துங்கள். செல்பேசியிலிருந்து தொடர்பு கிடைக்கவில்லை (கால் போகவில்லை) என்றால், அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பைபர் ஆப்டிக் சிக்னல் செல்பேசியின் சிக்னலைத் தடுக்கக் கூடியது என்பதால், நீங்கள் உஷாராக இருந்து வெளியேறிவிட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

குடும்ப வன்முறைச் சட்டம்

மும்பையில் கல்யாண் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 2010ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஆணையிட்டார். 2011 ஆகஸ்ட் 8 அன்று, கல்யாண் செஷன்ஸ் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து, குடும்ப வன்முறைச் சட்டத்தை, தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார். மேலும், தனது மனைவி குடும்ப வன்முறைச் சட்டத்தின் 23 ஆவது பிரிவின்படி குறிப்பிட்ட படிவத்தில் புகாரைத் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ரோஷன் தால்வி, மனுவைத் தள்ளுபடி செய்து பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார். பெண்களுக்கு நீதியை அதிகரிக்கும் விதமாகவே குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பார்க்க வேண்டும். பெண்களுக்கு ஏமாற்றம் கொடுப்பதாக இருக்கக் கூடாது.

சித்ரவதைக்கு உள்ளாகும் பெண், இந்தச் சட்டத்தைக் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினருக்கு எதிராக மட்டுமின்றி, பெண் உறுப்பினர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம்

தமிழ் ஓவியா said...

என்னை மாற்றிய புத்தகம்

இந்நூலை வாசித்தால்...!

நான் என் இதுநாள் வரையிலான பொதுவெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒரு தருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப் பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன் - ஜெயமோகன்.

சில நாட்களாகவே நம் எழுத்தாளர் களுக்கு உள்ளொளி தரிசனம் போதவில்லை என்பது மாதிரி ஓர் எண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயமோகன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பட்டுப்புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை தானே உருவாக்கிக் கொண்டு, அதுதான் உலகம் என்று நம்புவதைப் போல நம் எழுத்தாளர்கள் ஒரு கற்பனாவாத உலகத்தை உருவாக்கிக் கொண்டு, அவ்வுலகில் அவர்கள் சிந்தனைகளாலேயே நிகழும் சம்பவங்களை உலக யதார்த்தமாக பொதுமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஜெயமோகனின் உலக அனுபவம் எவ்வளவு சிறிய வட்டத்துக்குள் நிகழ்கிறது என்பதற்கு இப்பதிவு நல்ல உதாரணம்.

பெண்களைக் குறித்து இம்மாதிரி அல்லது இதைவிட மோசமான கருத்துகளை ஒரு சாமா னியன் கொண்டிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களைக் குறித்த படுமோசமான, ஆபாசமான கருத்துகளையே கொண்டி ருந்தேன். என் தலையில் நாலு குட்டு குட்டி, இதைப் படிச்சிப்பார் என்றொரு சிறுநூலை வாங்கிப் பரிசளித்தார் அண்ணன் எஸ்.பாலபாரதி.

அந்நூலை வாசித்த பிறகு என் செயல்பாடுகள் பெருமள வில் மாறிவிடவில்லை. ஆனால், பெண்கள் குறித்த என்னுடைய எண்ணங்கள் தவறு என்கிற புரிதல் மட்டும் தோன்றியது. பாலபாரதியிடம் இந்த மனோபாவ மாற்றத் தைச் சொன்னேன். அது போதும், நீ மாறணும்னு அவசியமில்லை.

பெண்ணியப் போராளியா கொடி பிடிக்கணும்னும் தேவை யில்லை. நீ நம்பிக்கிட்டிருக்கிற, செஞ்சிக்கிட்டி ருக்கிற விஷயங்கள் தவறுன்னு உணர்ந்தா போதும். ஒவ்வொரு முறையும் இதே தவறை நீ செய்யும்போதும், குறைந்தபட்சம் ஒரு குற்றவுணர்வு இருக்கும். அது போதும் என்றார்.

அதுவரை கட்டமைத்து வைத்திருந்த பல பிம்பங்களை உடைத்த அந்நூலில் நம் பாட்டி, அம்மா, சகோதரி, பக்கத்து வீட்டுப் பெண், எதிர்த்த வீட்டுப்பெண் என்று உலகின் எல்லாப் பெண்களும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கான விடை இருக்கிறது. மிகச்சிறிய நூல். எழுதியவர் ஜெயமோகன் மாதிரி பெரிய எழுத்தாளரும் அல்ல. அவருக்கு இலக்கியம் தெரியாது.

எழுத்துநடையும்கூட படுசுமார்தான். ஆனால் சவாலாகவே சொல்கிறேன். அந்நூலை வாசிப்பவர்களுக்கு மிகச்சிறிய அளவிலாவது மனமாற்றம் தோன்றியே தீரும். மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வாசித்தே ஆகவேண்டிய புத்தகம். தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?

ஜெயமோகனுக்கு யாராவது இப்புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம்.

- யுவகிருஷ்ணா

தமிழ் ஓவியா said...

நடிகர் நாகேஷ்

வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணங்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு அய்யர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.

எங்கள் குடும்பத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. காரணம், எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்ததுதான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத் தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.

ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை.

இது நெம்பர் 1.

நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை.
அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

- சிட்னி 'தமிழ் முழக்கம்'
வானொலிப் பேட்டியில் நடிகர் நாகேஷ்

தமிழ் ஓவியா said...



முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், பிரதமர், ஜனாதிபதின்னு அனைவருமே பப்ளிக் சர்வண்ட் ஆப் சிவில்தான். அவங்க மக்களுக்காக சேவை செய்ய மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் சாதாரண ஊழியர்கள். அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தில்லை. மக்கள் அவர்களுக்கு அதிக மரியாதை தரவும் அவர்கள் தங்களை ஏதோ தேவதூதர்கள் என்று நினைத்து வானில் பறப்பதும், அட்டூழியங்கள் செய்வதுமாக இருக்கிறார்கள். அந்தத் துணிச்சலில்தான் ஏகப்பட்ட தவறுகள், ஊழல்கள் பண்றாங்க.

நடிகர் கமலஹாசன்

தமிழ் ஓவியா said...



கடந்த 55 ஆண்டுகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கான காரணம் குறித்து அரசோ, அதிகாரிகளோ முழுமையான ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் கம்பெனி விவசாயம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இது வியாபாரிகளின் கையில் விவசாயத்தை அடகு வைக்கும் செயல்.

நம்மாழ்வார், வேளாண் விஞ்ஞானி

தமிழ் ஓவியா said...


கருத்து


தந்தையோ, கணவனோ, காதலனோ, நண்பனோ, அண்ணனோ, தம்பியோ ஓர் ஆணின் முடிவுக்குக் கட்டுப்படும் நிலைமையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். இந்த மனப்பான்மைதான் பெண்கள்மீது ஆசிட் வீச்சு வரையில் நிலைமையைச் சிக்கலாக்கி வைத்திருக்கிறது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களைக் குறை சொல்பவர்களும் இங்கேதானே இருக்கிறார்கள். ஆணோ, பெண்ணோ தனி மனித மனப்பான்மை மாறுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும்.



கவிஞர் கனிமொழி
நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்

தமிழ் ஓவியா said...

கீதை: சில கேள்விகள்


பாபு பீ.கே.

பகவத்கீதை என்பதே நம் புழக்கத் தில் இருப்பதால் அப்படியே குறிப் பிடுகிறேன். ஏனெனில், இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால்.

1. முதலில் இதன் காலம் வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது?

மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. அதாவது திரேதாயுகத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாக.

யுகங்கள் ஒரு வரிசைப் பார்வை

சத்ய யுகம் 1,728,000

திரேத யுகம் 1,296,000

துவாபர யுகம் 864,000

கலியுகம் 432,000

நாம் கலியுகத்தின் முதல் வருடத்தில் இருக்கின்றோம் என்று கொண்டால்கூட 21,60,000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வு புவிமாறுதல்களுக்கு உட்படாமல் இன்றைக்கு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்றிருந்த நிலப்பரப்பின் தொடர்புகள் எப்படி இருந்தன?

2. இரண்டாவது, நிகழ்விடம்.

ஒரு அக்குரோணி படை என்பது 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 காலாட்படை வீரர்கள் கொண்டதாம். அப்படி மொத்தம் 18 அக்குரோணிப் படைகள் குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்றதாம்.

தேர்ப்படை 21,870 x 18 = 3,93,660

யானைப்படை 21,870 x 18 = 3,93,660

குதிரைப்படை 65,610 x 18 = 11,80,980

காலாட்படை 1,09,350 x 18 = 19,68,300

அக்காலத்தில் இருந்த மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அத்தனை பேருக்கான உணவு உற்பத்தி இருந்திருக்குமா? அப்படி 18 அக்குரோணிப் படைகளும் நிற்குமளவிற்கு குருசேத்திரம் அத்தனை பெரிய இடமா? அத்தனை பெரிய மைதானமா?

3. மூன்றாவது, கிருஷ்ணன் யார்? அத்தனைப் பெரிய போர்ப்படைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் 18 அத்தியாயங்கள் வரக்கூடிய இந்த பகவத்கீதையை உபதேசிப்பது... உபதேசனை கூட இல்லை... ஒரு கேள்வி _- பதில் விவாதம் சாத்தியமா? அதுவரையில் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேலும், இந்தக் கிருஷ்ணரைப் பற்றியும் வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.)

4. இனி பகவத்கீதைக்குள் செல்வோம். சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம் (அத் 4 -_ சுலோ 13)
நான்கு வர்ணங்களைப் படைத்து ஏன் செயலற்றவராகிறார்?

5. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ (அத் 10 -_ சுலோ 21)
சந்திரன் நட்சத்திரமா?

6. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:| ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: (அத் 18- _ சுலோ 70)

எழுதி வைத்துப் படிக்கப்போகின்றார்கள் என்று எப்படி முன்னரே தெரிந்தது? அர்ஜுனனுக்கு இது அத்தனையும் மனப்பாடமாகி விட்டதா? அர்ஜுனன்தான் இதனை எழுதினாரா அல்லது எழுதச் சொன்னாரா? இல்லை ஞானதிருஷ்டியில் ஒட்டுக்கேட்ட சஞ்சயன்தான் காரணமா?

7. யேப்யந்யதே வதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: |
தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் (அத் 9 - சுலோ 23)
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: (அத் 9- _ சுலோ 30)

23ஆம் சுலோகத்தில், அந்நிய தேவதைகளைத் தொழுபவர்கள் (அப்படியென்றால் அப்பொழுது பல கடவுள்கள் இருந்திருக்கின்றனர்.) அறியாமையில்கூட என்னையே தொழுகின்றனர் என்ற உண்மையைக் கூறிய கிருஷ்ணன் பின்,

30ஆம் சுலோகத்தில், மற்ற தெய்வங்களை வணங்காது என்னை வணங்குபவனையே நல்லவன் என்று கொள் என்று ஏன் முரண்பட்டுச் சொல்கிறார்? யாரை வணங்கினாலும், இவரைத்தானே வந்தடைகின்றது, பின் எப்படி அவர்கள் கெட்டவர்களாவார்கள்?

8. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்ட வாநாம் தநஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: (அத் 10-சுலோ 37)

பாண்டவர்களில் இவர் அர்ஜுனன் என்றால்... எதிரில் இருக்கும் அர்ஜுனன் யார்? முனிவர்களின் வியாசர் என்றால், பல ஆயிரம் வருடங்கள் கழித்து மகாபாரதத்தைத் தொகுக்கப் போகும் முனிவரைப் பற்றி முன்னரே தீர்க்கதரிசனம் கூறியுள்ளாரோ?

இன்னும் நிறைய இருக்கின்றது. நினைவில் இருப்பனவற்றைக் கேட்டிருக்கிறேன். வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்தால், மற்றவைகள் நினைவுக்கு வருவதோடு இன்னும் புதிய கேள்விகளும் கிடைக்கலாம்.

இன்னொரு பொதுவான கேள்வி. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றங்களில் ஏன் பகவத்கீதையைக் கொண்டு சத்தியம் வாங்குகின்றார்கள்? அப்படிச் சத்தியம் செய்தவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?

தமிழ் ஓவியா said...

கொல்லப்படும் சாமியார்கள் தீர்வு என்ன?


எந்தக் கல்வித்தகுதியோ, முன்அனுபவமோ, முதலீடோ இல்லாமல் ஒருவர் மக்களிடம் செல்வாக்கும் புகழும் பெற்று பணமும் சம்பாதிக்க எளிய வழி சாமியார் தொழில்தான். மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் மட்டுமே சாமியார் ஆவதற்கான தகுதியும் மூலதனமும்.

மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்ய, பிரிந்த தம்பதியர் சேர, சேர்ந்திருப்பவர் பிரிய, வியாபாரத்தில் லாபம் பெருக, எதிரிகளை அழிக்க, கல்வித் தடை நீங்க, பில்லி சூனியம் வைக்க--_எடுக்க என்று வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினை களுக்கும் மருந்தாக - சகலகலா வல்லவர் களாக(?)அறியாமைக் குடி கொண்ட மக்களால் பார்க்கப்படுபவர்கள் இன்றைய சாமியார்களே.

ஆடு, மாடு, சேவல் என்ற உயிரினங்களைப் பலி கொடுத்தது போதாது என்று குழந்தைகளை நரபலி கொடுத்தால்தான் இந்தக் காரியம் வெற்றியடையும் என்று சாமியார் சொல்லிவிட்டால்... அதனைத் தலைமேற் கொண்டு நிறைவேற்றத் துடிக்கும் மக்கள் இன்று நிறையவே உள்ளனர் என்பதை ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மூலம் அறியமுடிகிறது.

பிற உயிர்களைப் பதம் பார்த்து தங்கள் பிழைப்பை ஜாம் ஜாம் என்று நடத்தி வந்த சாமியார்களின் மனதில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்ற மாதம் சென்னை சூளைமேட்டில் குறிசொல்லி வந்த ஜானகிராமன் என்ற சாமியார் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்.

சிறீபாச்சி சுவாமிகள் என்ற பெயரினைக் கொண்ட ஜானகிராமன் சூளைமேட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் அவரது வீட்டின் முன்புறம் உள்ள பவானியம்மன் கோவில்களில் 15 வருடங்களாக சாமியாடி குறி சொல்லி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

இரவு நேரங்களில் உடுக்கை அடித்துப் பூஜை செய்ததாலும், பில்லி சூனியம் வைப்பது எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாலும் அவரது வீட்டின் பின்புறம் குடியிருந்த சாரதி என்பவருக்கும் ஜானகிராமனுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சாரதியின் உறவினர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கு, ஜானகிராமனின் மாந்திரீக வேலைதான் காரணம் என நினைத்த சாரதி, இனி பூஜை எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனைக் கேட்ட சாமியார், சித்ரா பவுர்ணமி அன்று ஒரு காவு வாங்குவேன் என்று கூறியுள்ளார். சாமியாரின் பதிலைக் கேட்டுக் கோபம் அடைந்த சாரதி உள்ளிட்ட அய்வர் சாமியாரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சூளைமேட்டில் உள்ள பால் முனீஸ்வரன் கோவிலில் இருந்து வீட்டருகே உள்ள பவானியம்மன் கோவிலுக்குப் பால்குட ஊர்வலம் நடத்துவதற்கு, பெரிய அளவிலான விளம்பரத் தட்டிகள் அமைத்து அதில் தனது புகைப்படங்களை இடம்பெறச் செய்து ஒட்டியிருந்தார் சாமியார்.

தன்னை நாடி வந்த பக்தர்களின் எதிர்காலத்தை _ எதிர்காலப் பிரச்சினைகளை முறியடிப்பது பற்றிய அருள்வாக்குக் கூறிய சாமியாரால் நடக்காத பால்குட ஊர்வலத்திற்கு விளம்பரம் செய்யத் தோன்றியது ஏனோ?

சித்ரா பவுர்ணமியன்று காவு வாங்குவேன் என்று கூறிய சிறீபாச்சி சுவாமிகளுக்கு, அந்தக் காவில் தானே பலியாவோம் என்று தெரியாமல் போய்விட்டது.

இது சென்னையில் நடந்த ஒரு சம்பவம். இதுதவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆங்காங்கே சாமியார்களின் சுயரூபமறிந்த மக்கள் அடித்து உதைத்து ஊரைவிட்டே சாமியார்களைத் துரத்திவிட்ட சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. சாமியார்களை மக்கள் தலைமேல் தூக்கி வைத் துக் கொண்டாட அடிப்படைக் காரணம் என்ன?

தமிழ் ஓவியா said...

நாகரிக சமூகத்தில் அறிவியல் மனப்பான் மையை வளர்க்க வேண்டிய ஊடகங்களும் பத்திரிகைகளும் ஏமாற்றுப் பேர்வழிகளான சாமியார்களுக்கு விளம்பரம் அளிக்கின்றன. சட்டத்தையும் நீதியையும் காப்பாற்றவேண்டிய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், காவல் துறையினர் என முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களே சாமியார்களின் காலில் விழுகிறார்கள்.

இந்தக் காட்சிகளைப் பார்க்கும் அப்பாவி மக்கள் தமது மூடநம்பிக் கையால் இத்தகைய சாமியார்களை நம்பும் மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்

பொதுமக்களுக்கு எந்தவிதச் சந்தேகமும் ஏற்படாத வகையில் சாமியார்கள் வளர்ந்து பெயரும் புகழும் பணமும் பெற்றுவிடுகிறார்கள். புகழ்பெற்ற சாமியார்களைக் கொலை செய்யும் அளவிற்கு எண்ணம் ஏற்பட மக்களின் மனதில் சாமியார்களால் ஏற்பட்ட ஏமாற்றமும் விரக்தியும் முக்கியக் காரணங்களாகின்றன.

கடந்த மாதம் சென்னையில் ஒரு குழந்தை நரபலி சம்பவமும் நடந்தது. சின்னஞ்சிறு உயிரைக் கொல்லும் அளவுக்கு மனித மனத்தை மூடநம்பிக்கை ஆட்கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை! இந்தக் கொடுமைகளைத் தடுக்க சாமியாரைக் கொல்வதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா?

சட்டமும் நீதியும் எந்தப் பக்கமும் சாயாமல் மக்களின் முழு நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட்டால் இந்தக் கொடுமைகள் நடக்குமா?

கணினி வழிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள் ஆகியவற்றுக்கு காவல்துறையில் தனிப்பிரிவுகள் இருப்பது போல ஜோதிட, ஜாதக, மாந்திரீக, சாமியார் குற்றங்களைத் தடுக்கவும் மாவட்டத்திற்கு ஒரு தனிப்பிரிவாவது அமைக்கப்பட வேண்டும்.

அப்பிரிவில் இருப்போர் அறிவியல் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். குற்றத்தின் தன்மைக்கேற்ப அதற்கான காரணத்தைக் கண்டறிய துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடவுள், மதம், ஜாதி போன்றவையின் பின்னணியில் நடக்கும் அநீதிகளைத் தயவுதாட்சண்யமின்றித் தண்டிக்கும் நிலை வந்தால் ஒழிய மனித இழப்புகளைத் தடுக்க முடியாது.

தமிழ் ஓவியா said...

சாரயக் கிடங்குச் சாமியாரின் அறிவியல் சாதனைகள்


- பேராசிரியர் ந.வெற்றியழகன்

என்னமோ நடக்குது ஒன்னுமே புரியலே:

ஒரு கிறித்துவ மதகுரு சாமியார், அவர் சாராயம் காய்ச்சும் கிடங்குக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தார்.

வேறு இடமே அவருக்குக் கிடைக்கவில்லையா--?

ஜோசப் பிரிஸ்ட்லி சிலை

அன்றைக்கு எவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

அந்தச் சாராயம் கிடங்குக் கட்டடமும் சுற்றுச்சூழலும் கெட்ட நாற்றமும் வீசியபடியே இருக்கும். இங்கேதான் ஏசுபிரானின் தூயநெறிகளைப் பரப்புரை செய்யும் சாமியார் வாழ்ந்து வந்தார்.

ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு:

லீட்ஸ் என்னும் நகரில் இருந்த மாதா கோவிலிலே அவர் செலவிட்டது ஒரு பகுதி நேரமே! மதகுரு பணிக்குச் செல்வது கொஞ்ச நேரமே! மற்ற நேரங்களில், கையில் சாராயக் குடுவை! தீ நாற்றம்!

இவற்றோடுதான் தம் பொழுதைக் கழித்து வந்தார் நல்ல சாமியார்!

குருசாமியா? குடிசாமியா?

இப்படிப்பட்ட இந்தச் சாமியாரை மக்கள் அருவெறுத்தனர்; அவரை வெறுத்தனர்; கண்டித்தனர்; வெகுண்டெழுந்தனர். பொதுவாக சாராயக்கடைக்கு யார் போவார்கள்? மதகுரு அங்கே போகிறார்; தங்குகிறார் என்றால் என்ன பொருள்?

தமிழ் ஓவியா said...


சாராயக் கலவைத் தொட்டி

என்றெல்லாம், வினாக்கள் பல கணைகள் போல எழுந்தன. அவர் அங்கு போவதும், தங்குவதும், வருவதும் சிலருக்கு விந்தையாகவும், நிந்தையாகவும் இருந்தன. ஆனால், சாமியாரோ சாராயக் கிடங்கு முதலாளி யோடு நட்பு மட்டுமே கொண்டிருந்தார். வேறு எந்தக் குடிப்பழக்கமும் அவருக்குக் கிடையாது.

சிந்தனைச் சிக்கல்:

ஒருநாள், சாராயக் கிடங்கின் முதலாளியின் அனுமதி பெற்று, சாராயக் கலவைகளிலே இருந்துவரும் காற்றை ஒரு பாத்திரத்தில் ஏந்திப் பிடித்தார். அந்தக் காற்றைப் பல நாள்களாக, பல ஆய்வுகளாகச் செய்து பார்த்தார்; ஆய்வுகள் செய்து கொண்டே வந்தார். சாராயப் பொருளில் இருந்து வெளியாகும் காற்று அவருக்குச் சிந்தனைச் சிக்கலை உண்டாக்கியது.

என்ன அப்படிப்பட்ட சிந்தனைச் சிக்கல்? அதில் உள்ள மர்மம் என்ன?

இதற்காக அவர் பகல் இரவு பாராது தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருந்தார். ஆய்வு! ஆய்வு!! ஒரே ஆய்வுதான்!!!

அவிந்து போயிற்றே! - நெருப்பு அவிந்து போயிற்றே!

ஒருநாள், எரியும் மரச்சுள்ளி ஒன்றைக் கையிலே எடுத்தார். அந்தச் சாராயக் காற்றிலே தூக்கிப் பிடித்தார்.

என்ன வியப்பு? உடனே, அந்த எரியும் சுள்ளி அவிந்து போயிற்று! ஏன் அவ்வண்ணம் அவிந்து போயிற்று? காரணம் என்ன? மறுபடியும், மறுபடியும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்! ஆய்ந்த சிந்தனையில் தோய்ந்தார் மதகுரு.

கூடாதய்யா, கூடாது!

ஜோசப் பிரிஸ்ட்லி

இதற்குள், மாதாகோவில் மதகுரு சாராயக் கிடங்கே கதி - எனக் கிடக்கி றார் என்ற செய்தி காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது. குடிகார மதகுருவை, கோவிலில் நுழைய விடவே கூடாது என்று அப்பகுதியின் பெரும்பாலான மக்கள் குரல் எழுப்பினர்; கூக்குரலிட்டனர்; ஆர்ப்பாட்டம் செய்தனர்; ஆவேசப்பட்டனர்.

நம்ப முடியவில்லை, இல்லை!

தான் சாராயம் பருகுவதில்லை; சாராயத்தை வைத்து ஆராய்ச்சி செய்வதாக மட்டுமே அந்த மதகுரு தன் உளம் திறந்து கூறினார்.


தமிழ் ஓவியா said...

இதனைக் கேட்ட குறை கூறும் மக்கள் கொல் எனச் சிரித்தனர்; கலகல என நகைத் தனர்; எள்ளிப் பேசினர்; ஏகடியம் செய்தனர்.

கொஞ்சமும் கூச்ச நாச்சம் இன்றி, வெட்கமில்லாமல் இந்தக் குருசாமியார் கூறுவதை மக்கள் கேட்க வேண்டுமாம்! நம்ப வேண்டுமாம்! நல்ல நகைச்சுவை! இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று ஏளனம் செய்ததோடு அவர்கள் நிற்கவில்லை!

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்!

அதாவது, மதகுரு வேலையினின்றும் நீக்கிவிட்டனர். என் செய்ய? எங்கே போய்ச் சொல்வது? பகுதி நேர வருமானமும் போய்விட்டது! ஆனால், இதற்காக எல்லாம் சாமியார் மனம் குலையவில்லை; உள்ளம் உடைந்து போகவில்லை!

மீண்டும் அதே சாராயக் குடுவை கையிலே! முழுநேரமும் அதே சிந்தனையிலே!

குருசாமி சென்ற அறிவியல் கூட்டங்கள்!

அறிவியலாளர்கள், எந்த இடத்தில் பேசினாலும், கருத்துரை வழங்கினாலும், ஆய்வுரைகள் நிகழ்த்தினாலும் தவறாது அங்கே எல்லாம் மதகுரு செல்வார். அவர்களின் கருத்துரைகளைச் செவிமடுப்பார்; சிந்தனையில் ஈடுபடுவார்! சிந்தனையில் பல புதிய சிக்கல் கள் தோன்றும்.

தோன்றினால் என்ன?

அறிவியலாளர்கள் நண்பர்கள் ஆயினரே!

ஆய்வுக் கூடம்

இவ்வண்ணம், அடிக்கடி அறிவியல் கூட்டங்களுக்கு, இவர் சென்று வருவதால் நல்ல அறிவியலாளர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. தொடர்பு உண்டாயிற்று.

அந்த நட்பை, அரிய தொடர்பை, தன் சிந்தனைக்கேற்ப, பயன்படுத்திக் கொண்டார் சாமியார். வெறும் சாமியாரா இவர்? இல்லை! அறிவியல் சாமியார்!!

கடுமையான கலகங்கள்!

இந்தக் காலகட்டத்தில் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது.

பிரெஞ்சுக் கலகக்காரர்களால் நாடெங்கும் வன்முறைச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் பயங்கர மோதல்கள்!

இல்லத்தில் இருந்த எல்லாம் போயின!

ஒருநாள், அந்தக் கலகக்காரர் கூட்டம், திடீரென அந்த மதகுருவின் இல்லத்தை முற்றுகையிட்டது.

சாராயச் சாமியார் ஒழிக! மதுகுடிக்கும் மதகுரு ஒழிக!! ஒழிக!! என்ற எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன!

எதிர்ப்புக்குரல் மட்டுமா-? மதகுருவின் வீட்டை நெருப்பிட்டுக் கொளுத்தினர் கலகக்காரர்கள்.

சரிந்து போன சாராய சாம்ராஜ்யம்!

எரிந்தது இல்லம்! சாம்பலாகிப் போயின இல்லத்தில் இருந்த எல்லாப் பொருட்களும்!!

சாராயப் புட்டிகள் உடைத்து எறியப்பட்டன.

அவரது, நூலகத்தில் இருந்த அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்தியது அந்தக் கலகக் கும்பல்!

ஆய்வகத்தில் கருவிகள் குறிப்பேடுகள், ஆய்வுக்கலங்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை, அழித்தனர்.

தப்பித்துச் சென்றாரம்மா!

அவரது கையேட்டுக் குறிப்புகளின் ஏடுகளை எல்லாம் சுக்கு நூறாகக் கிழித்து, வழி நெடுக அவற்றை வீசி எறிந்தபடியே அவர்கள் போனார்கள்.

புரட்சியின் போது அடிக்கடி இவ்வண்ணம் நடக்கத்தான் செய்யும் என்று முன்கூட்டியே அறிந்த சாமியார் குடும்பத்தோடு தப்பித்து வேறோர் இடத்திற்குச் சென்றுவிட்டார்.

போனால் போகட்டும் போடா!

தமிழ் ஓவியா said...

தன் ஆய்வகமும், ஆய்வுக் கருவிகளும், குறிப்பேடுகளும் அழிந்து போய்விட்டதை அறிந்த அந்த அறிவியல் வித்தகர், கண்ணீர் விட்டுக் கதறினார்; அழுதார்; புலம்பினார்.

ஆனாலும் மனத்திட்பம் இழந்தாரில்லை!

கடுமையான - கொடுமையான இழப்புக்குப் பிறகும்கூட அந்தச் சாமியார், போனால் போகட்டும் போடா! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! என்று உறுதி கொண்டார். உள்ளம் அசரவில்லை; சும்மா இருப்பதே சுகம் என்று சோர்ந்து விடவில்லை; மூலையில் அமர்ந்து முடங்கிக் கிடக்கவில்லை. போச்சு! எல்லாம் போச்சு! இனி என்ன செய்வேன்? எனத் தளர்ந்து போய்விடவில்லை!

அயராத ஆய்வு:

ஒருநாள், புதிய தன் ஆய்வுக்களத்தில் அமர்ந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?

ஏற்கெனவே, சாராயக் கலவைத் தொட்டியின் காற்றிலே எரியும் மரச்சுள்ளியைப் பிடித்தபோது, அது அவிந்து போயிற்று அல்லவா?

இப்போது, அந்தக் காற்றை விடாமல் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருந்தார்.

அந்தத் தொடர்ஆய்விலேதான் அந்தச் சாமியார் அறிவியல் சாதனை நிகழ்த்தினார். நிகழ்த்தியது கி.பி. 1770இல்.

கண்டுபிடித்தேன்! நான் கண்டுபிடித்தேன்!

அந்தக் காற்றுதான் இன்று நாம் அறிவியல் உலகிலே பெயரிட்டு அழைக்கும், பயன்படுத்தும் கரிம -_ அமில இருமை வளி - கார்பன்-டை-ஆக்சைடு (Carbon di Oxide) .

அது மட்டுமா? அந்தக் காற்று நீரில் கரையுமா? ஆய்வு செய்தார் அவர்.

நீரில் அந்தக் காற்றைக் கரைத்தார்; அது கரைந்தது. இதுவும் ஒரு கண்டுபிடிப்பு.

கார்பன்-டை-ஆக்சைடு கரைந்த நீரைத்தான் சோடாநீர் (Soda water) எனப் பெயரிட்டார்.

நீர் விடாய் எடுத்தால் மூடியை விடுவித்து, குடித்து, யேவ் என ஏப்பம் இடுகிறோம் நாம் எளிதாக! அதைக் கண்டுபிடிக்க என்ன பாடுபட்டார் சாமியார்!

கொக்கோகோலா, ஜிஞ்சர், ஏல் போன்ற நீர்மங்களைத் தாராளமாக நாம் பயன்படுத்துவதைச் சற்று நினைவுபடுத்திக் கொள்வோம்.

தங்கப்பதக்கம் தரப்பட்டது!

இந்த அறிவியல் விந்தையைச் சாராயக் கலவையிலே கண்டுபிடித்ததற்காக - அந்தச் சோடா நீரைப் பருகிய லண்டன் அரசுக் கழகம் (Royal Society) சாமியாருக்கு, தங்கப்பதக்கம் அளித்துப் பாராட்டி, மதிப்புச் செய்தது!

இன்று, அறிவியல் உலகம் அவரைச் சாராயச் சாமியாராகப் பார்க்காமல் அறிவியலாளராக அண்ணாந்து நோக்குகிறது.

வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!

கார்பன்-டை-ஆக்சைடு என்னும் வளியை மட்டுமா இந்தச் சாமியார் கண்டுபிடித்தார்?

சாராயக் குடுவையிலிருந்து வீசிய கெட்ட வாசனையை ஊற்றி, ஆழ்ந்து நோக்கி ஆய்ந்து கண்டுபிடித்து கி.பி. 1775இல் மீண்டும் ஒரு வகை புதிய காற்றினைக் கண்டுபிடித்தார் சாமியார்.

ஜிஸ்டான் என்ற உயிர்க்காற்றுதான் அது!

அதுதான் இன்று உயிரியவளி - ஆக்சிஜன் (Oxygen) என, நாம் அழைப்பது!

கண்ணீரைச் சிந்த வைத்த காட்சி!

கி.பி. 1804இல் இவர் இயற்கை எய்தினார். சரியான சாதனைச் சாமியார் ஆகிய அறிவியலாளர். இறுதிச்சடங்கில், பெஞ்சமின் பிராங்ளின் என்னும் மாபெரும் அறிவியல் மேதை கலந்து கொண்டார்.

தாமஸ் ஜெஸ்பர்சன் என்னும் அறிஞர், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் முதலானவர்களும் கலந்து கொண்டனர். தங்களின் இறுதிக் கண்ணீர் மரியாதை செய்தனர்.

சாராயச் சாமியாரின் அறிவியல் சாதனைகள் வாழ்க!

சாராயச் சாமியாரின் அறிவியல் சாதனைகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை! அறிவியல் உலகம் அவர்தம் கண்டுபிடிப்புகளைக் கண்டு வியக்கிறது. அவர்தம் பெயரை நயக்கிறது! நமக்கெல்லாம் எழுச்சியையும், இன்பத்தையும் பயக்கிறது!

யாரோ? அவர் யாரோ? என்ன பேரோ?

அவர்தாம் ஜோசப் பிரிஸ்ட்லி என்னும் மாமேதை; பேரறிஞர்; அறிவியல் துறவி; இங்கிலாந்தில் லீட்ஸ் என்னும் நகரத்தவர். வாழ்க! ஜோசப் பிரிஸ்ட்லி!

வளர்க! அவர்தம் மறையாப் புகழ்!!

(தகவல்கள் நூல்: விஞ்ஞானச் சிக்கல்கள்)

தமிழ் ஓவியா said...




1. பாடப் புத்தகங்களைப் பார்த்து பொதுத் தேர்வை எழுதும் புதிய திட்டம் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளது.

2. ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் கால அவகாசம் 4 மாதத்திலிருந்து 2 மாதமாக (60 நாள்கள்) மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

3.மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதைத் தடுக்கும் சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை மே 1 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

4. கருணை மனுமீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கத் தாமதமானதால், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர தாசின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



5. பிளஸ்2 தேர்வில் 35 சதவிகித மதிப்பெண்கள் எடுக்கும் ஆதிதிராவிட பழங்குடி இன மாணவ மாணவிகள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் அறிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கலப்புத் திருமணங்கள்



கலப்புத் திருமணம் செய்து கொள்பவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபாய் பரிசுத்தொகையினை உயர்த்தி 75,000 ரூபாயாக உயர்த்தி இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீரபத்திர சிங் அறிவித்துள்ளார்.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 68.50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 25 சதவிகிதம் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர்.

கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் ஜாதிகள் ஒழிய வாய்ப்பு உள்ளது. 2009_2013ஆம் ஆண்டு தற்போது வரை 1,113 கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

ஜாதி என்ற தடையை மீறி இளம்பெண் களும், வாலிபர்களும் கலப்புத் திருமணம் செய்வதை ஊக்கப்படுத்தவே பரிசுத் தொகை வழங்கப்படுவதாக சமூக நீதித்துறைச் சிறப்புச் செயலர் சூட் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பிரிட்டனில் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கீகாரம்


பிரிட்டன் நாட்டில் வசிக்கும் 4 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டப் பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் ஜாதி அடிப்படையில் வேற்றுமை காட்டுவது சட்டப்படிக் குற்றம் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு ராணியின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

2010ஆம் ஆண்டின் சமத்துவச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஜாதியையும் ஒரு பிரிவாக்கி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஜாதி வேறுபாட்டுக்கு எதிராக தெற்கு ஆசியாவிற்கு வெளியே இதுபோன்ற சட்டங்கள் இயற்றுவதில் பிரிட்டன் முதல் நாடாகும் என்ற பெருமையையும் பெறுகிறது.

வருங்காலத்தில் ஜாதியானது இனத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும் பிரிட்டனில் உள்ள ஆசிரியர்களின் வாழ்க்கை இந்த ஜாதி வெறுப்பு உணர்ச்சிகளால் மங்கிப்போய் இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் இனி புது நம்பிக்கை ஏற்படும் என்று தேசிய ஜாதி மதமற்ற அமைப்பின் ஆணையர் கெய்த் போர்டியஸ்வுட் கூறியுள்ளார்.

பன்னாட்டுத் தலித்களின் ஒன்றிணைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ரிக்கி நோர்லிண்ட், இந்த முடிவானது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஜாதி வேறுபாடு ஓர் உலகளாவிய பிரச்சினை. உலகத்தின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஃபுல்லர், இது ஒரு நேரடிப் பிரச்சினை. வேலை செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவது தவறு. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு உண்டு. முடிவும் முதலுமாக இது இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

புதிய மூடநம்பிக்கையால் பொருள் இழக்கும் மக்கள்!


அட்சய திருதியை நாளில்

தங்கச் சங்கிலி

வாங்கச் சென்ற

அங்கம்மாளின்

கழுத்து நகை

களவு போனது

என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகைகளில் வருவது வழக்கமாகிவிட்டது. அங்கம்மாக்களின் பெயர்கள்தான் மாறுகின் றனவே அன்றி, செய்தி இன்னும் தொடரத்தான் செய்கிறது.

பழைய மூடநம்பிக்கைகள் காலாவதியாகிப் போக புதிய மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன. வளர்ந்துவிட்ட அறிவியல் ஊடகங்கள் காசு பண்ண இதனை மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றன. நாய் விற்ற காசு குரைப்பதில்லையே.



நல்ல நாளில் தங்கம் வாங்கப்போகும் ஒருவித மூடநம்பிக்கை நம் சமூகத்தில் நீண்ட நாட்களாவே உண்டு. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் நகைக்கடைகள் கூட்டமில் லாமல் இருக்கும். மக்கள் தொகை பெருகப் பெருக கடைகளும் அதிகரித்தன. அவர்கள் தமது வணிகத்தைப் பெருக்க நகைச்சீட்டு சேர்க்கும் திட்டம் போல சில கவர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவரத் தொடங்கினார்கள்.

பின்னர் திருமண சீசன் இல்லாத காலங்களில் வணிகம் செய்ய கிராமுக்கு இவ்வளவு குறைவு என்றோ, சில அன்பளிப்புகளை அளித்தோ வாடிக்கை யாளர்களை ஈர்த்தார்கள். சென்னையில் ஒரு புகழ் பெற்ற தங்க நகை அங்காடியின் வார விடுமுறையே செவ்வாய்க் கிழமைதான்.

ஆனால், இன்று அந்தக் கடை பல கிளைகளைத் திறந்தும் கூட்டம் அலைமோத, வார விடுமுறை இல்லாமலேயே அந்தக் கடைகள் இயங்குகின்றன. வாடிக்கையாளர்களும் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நகை வாங்குகிறார்கள்.

இத்தகைய சூழலில்தான் 10 ஆண்டுகளுக்கு முன் அட்சய திருதியை என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள் தங்க வணிகர்கள். அந்த நாளில் நகை வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கிவிடுவது என பெண்கள் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. இப்போது முன் நாட்களிலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு நாள் அட்சய திருதியை என்பது கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை வாரமாகிவிட்டது. (எப்படி ஆனதோ?) அட்சய திருதியை ஆஃபரெல்லாம் வந்துவிட்டது.

இந்த மே 9 அன்று நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டது. `கடவுளின் பெயரில் ஏமா(ற்)றலாமா? என்பது அதன் தலைப்பு. ``அட்சய திருதியை நாளை முன்னிட்டு கிராமுக்கு இவ்வளவு தள்ளுபடி, இலவசப் பரிசு, அட்சய திருதியை ஆஃபர் என்பதைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்கள் கடையில் அப்படியெல்லாம் இல்லை என்கிறது அந்த விளம்பரம்.

தமிழ் ஓவியா said...

அட்சய திருதியையைப் பயன்படுத்தி நகைக்கடைகள் செய்யும் தில்லு முல்லுகளை ஒரு நகைக்கடையே போட்டுக் கொடுத்துவிட்டது.

தங்கம் வாங்கும் போது அதன் தரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, நல்ல நாள்,- நேரம்,-அட்சய திருதியை போன்றவற்றைப் பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம்தானே! நகை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணா. அவர் 2013 மே 8 -10 நக்கீரனில் கூறியுள்ள தகவல்கள் இதோ:

காய்கறிக்காரரிடம் அடித்துப் பிடித்து சண்டை போட்டு கறாராக அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என விலை குறைத்து காய்கறிகள் வாங்கும் திறமை கொண்ட பெண்கள்... பல்லாயிரங்களைக் கொடுத்து, நகை வாங்குவதில் ஏமாந்துவிடுகிறார்கள். பலரும் நகை வாங்கும்போது... அதுல இந்திய தர நிர்ணய அமைப்பான பி.அய்.எஸ். (Berua of Indian Standard) நகைகளுக்கு வழங்கும் ஹால் மார்க் (Hall Mark) முத்திரை இருந்தாலே 24 கேரட் தங்கம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால், 24 கேரட் தங்கம் என்பது நகைகளாக வடிவமைக்கும்போது 22 கேரட்தான் இருக்கும். ஆக, ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட 22 கேரட் தங்க நகை 916 அளவு துல்லியம் இருக்கும். அதேபோல் 21 கேரட்- 875 துல்லியம். 18 கேரட் - 750 துல்லியம், 17 கேரட்-708 துல்லியம், 14 கேரட்- 585 துல்லியம் என குறைந்த க்வாலிட்டி நகைகளுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பினரால் (பிஅய்.எஸ்.) ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால், இதைப் பலரும் கவனிப்பதில்லை. லென்ஸ் மூலம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

விலை குறைய குறைய அந்த நகையின் துல்லியமும் குறைந்திருக்கும். அதனால்தான் ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடைக்குக் கொண்டு போய் விற்கும்போது அதே ரேட்டுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் வெறும் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருக்கிறதா என்று பார்க்காமல் எவ்வளவு துல்லியம் என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து நகைக்கடைக்காரர்களின் சேதாரம் என்ற சீட்டிங் என்று கூறியுள்ளார்.

பகுத்தறிவு என்பது நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் உரசிப்பார்க்கும் உரைக்கல். பகுத்தறிவு என்றவுடன் கடவுள் மறுப்பு மட்டுமே பலரது நினைவுக்கு வருகிறது. கூட்டமில்லாத நாளில் கடைவீதிக்குச் சென்று பொருள் வாங்குவதுகூட பகுத்தறிவுதான். தங்கத் தின் மதிப்பை உலகம் உயர்த்தி வைத்துள்ளதால் அது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.

அதனால், இப்போது ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவோரைவிட முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோர் அதிகமாகிவிட்டனர். இச்சூழலில் தான் அட்சய திருதியை போன்ற மூடநம்பிக்கை களை தங்க நகை வணிகம் செய்வோர் பயன் படுத்துகின்றனர்.

அட்சய திருதியை நாள் உருவாக்கப்பட்டதிலிருந்து நகைக் கடைக் காரர்களுக்கு வேண்டுமானால் பணம் குவியுமே தவிர நகை வாங்கியவனுக்குக் குவியுமா? கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நகை வாங்கியோரெல்லாம் கோடீசுவரர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா? அந்த நாளில் கூடிய கூட்டத்தில், உள்ள நகையையும் பறிகொடுத்தவர்களுக்கு அட்சய திருதியை அந்த நகையைத் திருப்பிக் கொடுக்குமா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அட்சய திருதியை மூடநம்பிக்கை என்பது இல்லை. அப்போதும் மக்கள் நகை வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கு வளம் இல்லாமல் போய்விட்டதா? அல்லது வளம் பெருகாமல் போய்விட்டதா?

தமிழகத்தின் பிரபல கோவில் பட்டர் ஒருவர் ஆருடம் கூறியிருக்கிறார். அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட 3 மணிநேரத்தில் நகை வாங்கி ஆண்டவன் முன் வைத்து வணங்கி னால் வளம் பெருகுமாம். அந்த 3 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் வாங்கினால் என்னாகும் என்று ஏனோ அவர் சொல்லவில்லை.

உழைப்புதான் மனிதனை உயர்த்தும்; அறிவுதான் மனிதனைக் காக்கும் என்பதை உணரும் காலம் வரும் வரை இந்த மூடநம்பிக்கைகளால் மக்கள் தமது செல்வத்தை இழந்துகொண்டுதான் இருப்பார்கள்.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

பொறுமைக்கு வலிமை உண்டு


விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை

நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள் ரத்தம் சிந்தக்கூடாது. எல்லோரும் சகோதரர்கள் - சிறை யிலே அவர்கள் இருக்கவேண்டும் - அவர்களைப் பழிவாங்க வேண்டும் என நினைத்து, அந்தத் துன்பத்திலே மகிழக்கூடியவர்கள் அல்லர். தயவு செய்து அமைதியாக யோசியுங்கள்.



நீங்கள் எடுத்த நிலைப்பாடு இருக்கிறதே, அது சரியான நிலைப்பாடு அல்ல. தவறான பாதை. சில நேரங்களிலே சில இலக்குகளை விசாரித்துக் கொண்டு ஊருக்குச் செல்லலாம். போகிற நேரத்திலே கொஞ்சதூரம் போனதும்தான் தவறான பாதை எனத் தெரிகிறது. தவறான பாதையாக இருந்தாலும், கடைசிவரைப் போவேன் என்றால், அது அறிவுடைமை அல்ல.

கொஞ்சதூரம் போய் தவறான பாதை என நினைத்தால், சரியான பாதைக்கு வரவேண்டும். எனவே, தவறான பாதைக்குப் போனவர்களையும், சரியான பாதைக்குக் கொண்டு வரவும். அதேநேரத்தில் நல்லொழுக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கி தமிழ்நாடு என்பதிருக்கிறதே, இது சமத்துவ பூமி, சமூகநீதிக் கொடி பறக்கக் கூடிய பெரியாரின் மண் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த வாய்ப்புக்காக இந்த மாநாடு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்தக் காரணத்தாலும் தோழர்களே நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள்; உங்கள் பொறுமைக்கு வலிமை உண்டு. மேடையில் பேசுவதைவிட, அமைதிக்கு மிக ஆழமான சொல்வன்மை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த வகையிலே உங்களுடைய சகிப்புத் தன்மை வரவேற்கத்தகுந்தது. பின்பற்றத் தகுந்தது. சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும். எல்லோரும் கைகோர்க்க வேண்டும். யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்ற காரணத்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.

பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக்கூடாது. காரணம், பொதுச்சொத்து நம்முடைய சொத்து. அது யாருடைய சொத்தும் அல்ல. அதற்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு வரி கட்ட வேண்டியவர்கள் நாம்தான் என்கிற உணர்வைப் பெற்று ஒரு புது ஒழுங்கை உருவாக்குவோம்.

இந்த மாநாடு பொதுச் சொத்தைப் பாதுகாக்கிற மாநாடு; பொது ஒழுங்கை நிலை நிறுத்துகிற மாநாடு; பொது உறவைக் கட்டுகிற மாநாடு. எனவே, இந்த மாநாடு வாழ்க, வளர்க! அந்த நோக்கம் நிறைவேறுக!!

- சென்னை,பெரியார் திடலில் 7.5.2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி?


இரண்டாம் எலிசபெத்

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது அய்.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கை.

இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்பற்றி, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது - இரண்டாம் முறையாக.

முன்பு, முதற்கூட்டத்தில் - நடுநிலை வகித்த இந்தத் தீர்மானம் குறித்து 47 நாடுகளில், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே - அதன் வன்மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளன.

இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது.

காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளாகும்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது; ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத்தினர்.

டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.

வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மவுனியாகவே - இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப்போல் இருந்தது!

எப்படியோ காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திடவேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துவிட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!

உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த இராஜபக்சே அரசு ஏதோ பெரிய சாதனையாளர்களைப்போல காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.

என்றாலும், இதை உணர்ந்துதான்போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார்; அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்குச் சற்று ஆறுதல் தருகிறது!

1973 ஆம் ஆண்டுக்குப்பின், பிரிட்டிஷ் இராணியார் (அவர்தான் அதன் தலைவர்) கலந்துகொள்ளாமல் - பங்கேற்காமல் நடைபெறு வதே முதல் முறையாகும்!

ராஜரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுட்பா

பேரிடர்மிகுத் துயர் வாழ்வு குன்றி பூர்வீகம்
சீர்கெட நிலத்தில் மனுநீதி பிதிர்லோகம் அபேட்சகர்
காரியதரிசி எனவஞ்சக காரிருள் சூழ்ந்த நாளில்
யாரிடம் செல்வேன் துணை யாரெனகேட்ட மக்கள்
பெரியாரிடம் சேர்ந்தார் சமதர்ம வாழ்வு பொருட்டே
சீர்மிகு தாயிடம் நோக்கி சேய்கள் வருதல்போல
திராவிடம் நோக்கி வந்தார் மாந்தர் ஜாதிஒழிப்பு
கடவுள் மறுப்பு பெண்ணுரிமை துணை கொண்டார்

தந்தை பெரியார் அடித்துப் பார்த்தார் அம்பேத்கர்
மருத்துவராய் கிழித்துப் பார்த்தார் என்றாலும்
சிந்தைபுகும் ஜாதியெண்ணம் வண்ணம் மாறி
வாழ்கிறதிங்கு அன்பை உடைத்து அறனெறிஅழித்து
சந்தைப் பொருளாய் மலிந்துக்கிடக்கிறதே என்செய்க
சீர்திருத்தவாதிகளே இன்னமும் உயிர்வாழும் பூமிப்
பந்தை போர்புறநோய் கொண்டாடுதல்போல அகநோய்
பிடித்தாட்டுகிறதே ஜாதிநோயகழும் நாள் என்நாளோ?

அண்டிருந்த மக்களும் கைவிட்டார் அனுதினமும்
தொழுது வணங்கிய கடவுளும் கைவிட்டார்புதராய்
மண்டியிருந்த ஜாதிப்பேய்கள் ஆல மரமாய்
விழுதுகள் பெருக்கி வீதிகளில் அனுமதிமறுத்தார்
கண்டிக்க யாருமின்றி இதுவிதியென் றிருந்தபோது
கொடுமையிலும் கொடுமையென பெருங்காற்றாய் சீறி
தண்டிக்க புறப்பட்டார் ஈரோட்டுச்சிங்கம்
ஜாதித் தண்டியாத்திரை வைக்கம் சென்றார் - வெற்றிகண்டார்

புண்ணாகி புரையாகி வெட்கை நோய்வந்த உடம்பாகி
கண்ணாக வளர்த்தஊன் இரையாகி மெலிந்த நூலாகி
உண்ணும் வலிவின்றி உயிர்வீணாகி அன்னை வளர்த்தகரு
மண்ணாகி போயிடினும் இழிவில்லை தமிழாஜாதிப்
புண்ணாக வெண்மணி பரமக்குடி தருமபுரி உருவாக்கிஜாதி
உண்டியலாய் தமிழ் நாட்டை உருமாற்றும் தலைவன்கீழ்
பிண்டமாய் அவனடி தொழுதுநின்று மானுடம் மறந்து
தொண்டனாய் இருப்பதே இழிவினும் இழிவெனக் கொள்

முற்றிய கதிர்வீடு திரும்பும் முழுநிலவாய் சுற்றிய
ஒளி மீண்டும் இருட்டடையும்
பெற்ற வெற்றி சரித்திரம்புகும் பெருவாழ்வில்
உற்ற நட்புஉடல் எரியும் வரைதொடரும்
மற்றஎதையும் சொல்ல முடியும் முடியாதே
கற்றொருவன் ஜாதியம் பூசி ஆயுதம்தறித்து
சுற்றம் போலவாழ்ந்த மக்களை அச்சுறுத்துவானென்று
ஏற்றம் தரும்கனவில் தீவைத்து மகிழ்வானென்று

எத்தனைக் காலம்தான் இத்திரை மீதினில்
இன்னுயிர் வலித்து பெருதுயர் உழல்வதோ
முத்தமிழ்ச் சங்கம் வளர்ந்தெடுத்த நாட்டில்
தனி ஜாதிச்சங்கம் வளர்த்தல் முறையோ
புத்தன்மூட்டிய எதிர்ப்பில் சாகாமல் தமிழ்ச்
சித்தர்கள் அடித்தும் உடல்வேகாமல் பேதப்
பித்தமேறி பிதற்றும் ஜாதி தமிழர்உடலில்
வாழ்தல் தகுமோ வளர்தெடுத்தல் முறையோ?

மொழியாய் முறையாய் தருமேல் வளராய்
முடமாய் உயிர்மேல் இடையாய் நுழைந்து
இழிவாய் நிலைத்து உயர்மானுடம் பிரித்து
விடமாய் குருதியில் தனியாய் நிலைத்து
கழிவாய் நெளியும் ஜாதிச்சருக் கொழித்து
அறம் உயர்ந்தோங்கும் தனித்தமிழ் நாடு
விழியாய் ஒளியாய் மணம்தரும் மலராய்
வாழிய வாழியென்று வாழ்த்தும்நாள் எந்தநாளோ?

தமிழ் ஓவியா said...

நூல்: கலகக்காரர் பெரியார்

ஆசிரியர்: கவிஞர் இரா. ஜீவா

வெளியீடு: அஞ்சுகம் பதிப்பகம், 65, மேலப்பச்சேரி, திருப்பரங்குன்றம், மதுரை - 625 005.

செல்பேசி: 8608341428

பக்கங்கள்: 56 விலை: ரூ.40/-

தந்தை பெரியாரின் எண்ணங்களை - செயல்படுத்திய கருத்தோட்டங்களை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் குட்டிக் குட்டிக் கவிதைகளாக கொடுத்துள்ள விதம் அருமை!

கண்கள் இருந்தும்/குருடனாக இருந்தவனுக்கு/உன் கைத்தடிதானே/வழித்தடம் காட்டியது என்ற வரிகளின் ஆழ்ந்த உண்மை, நீ மேடையேறிய போதெல்லாம்/ பாடை ஏறியது ஆரியம்/ என்ற வரிகளின் யதார்த்தம் படிப்போரைச் சிந்திக்க வைப்பன.

பெரியாரின் கொள்கைகள் - சீர்திருத்தக் கருத்துகள் - ஏற்பட்ட சமூக மாற்றங்கள், தமிழை - தமிழனைப் பண்படுத்திய விதம் போன்றனவற்றைக் கவிதை வடிவில், எளிய நடையில் - கவினுறப் படம் பிடித்துக் காட்டியிருப்பதே கலகக்காரர் பெரியார்.

தமிழ் ஓவியா said...

தண்ணீர்.... தண்ணீர்.....


பூமியில் உள்ள தண்ணீரில் 97 சதவிகிதம் கடல் நீராகவே உள்ளது. மீதியுள்ள 3 சதவிகிதத்தில் 2.25 சதவிகிதம் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாகவும், 0.75 சதவிகிதம் பூமியில் ஆறு, ஏரி, குளங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

பூமியில் உள்ள 1.4 பில்லியன் கன கி.மீ. நீரில் நன்னீரின் அளவு 35 மில்லியன் க.கி.மீ. ஆகும். அதாவது, மொத்த நீரின் அளவில் 2.5 சதவிகிதம் மட்டுமே. உலகில் உள்ள 600 கோடி மக்களும் ஆறு, ஏரி, குளம் மற்றும் நிலத்தடியில் கிடைக்கும் 54 சதவிகித நல்ல நீரையே உபயோகப்படுத்துகின்றனர்.

உலகில் உள்ள நீர் ஆதாரங்களில் 4 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. நீரின் தரவரிசையில் 122 நாடுகளில் இந்தியா 120ஆவது நாடாக உள்ளது. நீர் கிடைக்கக்கூடிய 180 நாடுகளில் 133ஆவது நாடாக உள்ளது.

நீரில் தொழிற்சாலைக் கழிவுகள், அழுக்கு, சேறு ஆகியன சேரும்போது கலங்கலாக மாறுகிறது. கலங்கிய நீரில் நுண்ணுயிர் நாசினிகளான குளோரின், பிளீச்சிங் பவுடர் ஆகியன நுண்ணுயிர்களை முழுமையாக அழிக்க முடியாது.

மண்ணின் தன்மை, மாசுபட்ட நீர், கடல் நீர் இவற்றைப் பொறுத்து கரைந்துள்ள உப்புகளின் அளவு வேறுபடும். கரைந்துள்ள உப்புகளின் தன்மை அதிகமாக இருந்தால், நீரின் சுவை கெடுவதுடன் வயிற்றுப் பிரச்சினைகளும் ஏற்படும். நீர் மாசுபடுதல் மற்றும் உப்புகளின் தன்மையைப் பொறுத்து அமில காரத் தன்மைகளின் அளவு வேறுபடும்.

அதிக அமிலத் தன்மை கொண்ட நீரினால் உணவுக்குழாய் சவ்வு பாதிக்கப்படுவதுடன் நீர் வழங்கும் குழாய்களில் பாதிப்பும் ஏற்படலாம். மண்ணின் தன்மை, மாசு நீர், கடல் நீர் மற்றும் பாறைகளிலிருந்து வெளிப்படும் சல்பேட்டினால் வயிற்றுத் தொல்லைகள் ஏற்படும்.

அழுகும் பொருள்கள் மற்றும் இரசாயன உரங்களால் நைட்ரேட்டு படிகிறது. இதனால் Blue baby discase உண்டாகிறது. 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் விரைவில் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடலாம்.

பாறைகளிலிருந்து உண்டாகும் ஃபுளுரைடு அதிக அளவு உள்ள நீரைப் பருகுவதால் ஃபுளுரோசிஸ் என்ற நோய் ஏற்படும். இது, பல் மற்றும் எலும்பு மண்டலத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

கால்சியம் மற்றும் மக்னீசியம் உப்புகள் பாறைகளில் 300/600 மி.கி/லி.க்கு மேல் இருப்பின் நீர் கடினத்தன்மை அடைகிறது. இதனால் சோப்பு நுரை வராததுடன், குழாய்களில் உப்பு படிந்து அடைப்பு ஏற்படும்.

கார்பனேட், பைகார்பனேட், 200/600 மி.கி/லி. அளவுக்கு மேல் காரத்தன்மை உண்டாகிறது. இது வழவழப்புத் தன்மையையும் குழாய்களில் அரிப்பையும் ஏற்படுத்தும்.

பாறைகளிலிருந்து இரும்புத் தாது 0.3/1.0 என்ற அளவுக்கு மேல் கரைந்து சேரும்போது நீர் பழுப்பு நிறமாக மாறிவிடும். இதன் காரணமாக, குடிநீரின் சுவை மாறுபடுவதுடன், நீர்த்தேக்கத் தொட்டி, பாத்திரங்கள், துணிகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

கிணற்று நீரைச் சேகரித்தாலோ அல்லது கொதிக்க வைத்தாலோ நீரில் மிகுதியாக உள்ள பைகார்பனேட், கால்சியம் கார்பனேட் என்ற இரண்டும் உப்பு வடிவில் வெளிப்பட்டு வெண்மை நிறமாகப் படிகிறது.

இதனால் உடலுக்கு எவ்விதக் கெடுதலும் கிடையாது. கலங்கலான நீரை மட்டுமே படிகாரம் போட்டுச் சுத்தப்படுத்தலாம். படிகாரத்தின் அளவு அதிகமானால், அலுமினியத்தின் அளவு அதிகமாகி-விடும். இது உடல் நலத்திற்குக் கெடுதல் விளைவிக்கும்.

காற்று, சூரிய ஒளி படும்பொழுது பாசி ஏற்படுகிறது. மேல்நிலைத் தொட்டிகளை மூடி வைப்பதலால் இதனைத் தவிர்க்-கலாம். கிணறுகளையும் நீர் சேகரிக்கும் தொட்டிகளையும் நன்கு மூடிப் பாதுகாக்கலாம். தகுந்த அளவில் பிளீச்சிங் பவுடரும் சேர்க்கலாம். (100 லிட்டர் நீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம்).

கழிவறைத் தொட்டி மற்றும் கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு இவற்றிற்கிடையே சுமார் 50 அடி இடைவெளியாவது இருக்க வேண்டும்.

சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருப்பதற்கும், பருப்பு சரியாக வேகாததற்கும் நீரில் காரத்தன்மை (Alkalinity) அதிகமாக இருப்பதே காரணமாகும்.

நீரில் இரும்பு (Iron) உப்பு அதிகமாக இருந்தால், சேகரித்து வைத்த நீர் மஞ்சள் நிறமாக இருக்கும். மேலும், துணிமணிகளில் காவி அல்லது பழுப்பு நிறக் கறை ஏற்படும். இதனை நீக்க, எளிமையான வடிவமைப்புக் கொண்ட சுத்திகரிப்பு நீர்த் தொட்டிகளைப் பயன்படுத்தலாம்.

கிணற்று நீரில் இருக்கும் உப்புத் தன்மையை நீக்க துவர்ப்புச் சுவையுடைய தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையைப் பயன்படுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. துவர்ப்பும் உப்புச் சுவையும் இருக்கும்போது நீர் உப்புக் குறைந்ததாக உணரப்படலாம். ஆனால், நீரில் கரைந்துள்ள பொருள்களின் அளவில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

நன்றி: மாநில நீர் ஆதார மேலாண்மை முகமை
தமிழ்நாடு அரசு

தமிழ் ஓவியா said...

மாயன்களின் கணிப்பு எதுவரை


கி.மு. 2000 முதல் கி.பி. 250 வரை வாழ்ந்தவர்கள் மாயன் இனத்தவர் எனப்படுகின்றனர். இவர்கள் பலவகையான காலண்டர்களை உருவாக்கியுள்ளனர். அதாவது, வருடத்திற்கு 240 நாள்கள், 300 நாள்கள், 360 நாள்கள் என அவற்றில் ஒன்று மாதத்திற்கு 20 நாள்கள் மட்டும் உள்ளது.

20 நாள்கள் - 1 உய்னூல் (மாதம்)

மாதங்கள்-->18 உய்னூல் - 1 துன் (1 -ஆண்டு 360 (20x18=360) நாள்கள் கொண்டது)

20 துன் - 1 காதுன்
20 காதுன் - 1 பக்துன் என்று கணக்கிட்டுள்ளார்கள்.

இப்போது நடப்பது 13ஆவது பக்துன் என்றும் அது 21.12.2012இல் நிறைவடையும் என்றுதான் சொல்லியுள்ளார்களே தவிர, உலகம் அழியும் என்றோ, பாதிக்கும் என்றோ சொல்லவே இல்லை.

வாழும் பூமி சூரியனைச் சுற்றும் பெயர்ச்சியின் காரணமாக சூரியனை 6 மாதங்கள் ஒருபுறமும் (நீள்வட்டப்பாதை) அதாவது, இந்த 6 மாதங்கள் சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதைப் போல் தோன்றும். இது காட்சிப் பிழை அல்லது பூமிப்பெயர்ச்சியின் இடமாறு தோற்றப்பிழை. உண்மையில் பூமி தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றதே உண்மை.

டிசம்பர் 21இல் நீள்வட்டப் பாதையில் 6 மாதப் பெயர்ச்சியை முடித்து சூரியனுக்கு மறுபுறம் திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும். ஆனால், நமக்குச் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வதைப்போல் தெரியும். சங்க இலக்கியங்களில் வடசெலவு, தென் செலவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருவெடிப்பு நிகழ்ந்து 1370 கோடி ஆண்டுகள் ஆகிறது.

நமது சூரியன் உருவாகி 500 கோடி ஆண்டுகள் ஆகிறது.

நாம் வாழும் பூமி உருவாகி 460- கோடி ஆண்டுகள் ஆகிறது.

ஒரு செல் உயிரி அமீபா உருவாகி 200 கோடி ஆண்டுகள் ஆகிறது.

ஆக்ஸிஜன் தோன்றிய ஆண்டு

குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய ஆண்டு

விண்வெளிக்கு மனிதன் சென்ற ஆண்டு (அதற்குமுன் விலங்குகளை அனுப்பிய ஆண்டு)

தொலைநோக்கி உருவாக்கிய ஆண்டு

செயற்கைக்கோள் உருவாக்கிய ஆண்டு

தமிழ் ஓவியா said...

வானூர்தி உருவாக்கிய ஆண்டு

ஆடைகள் உருவாக்கிய ஆண்டு

பட்டு, கப்பல் உருவாக்கிய ஆண்டு

கேமரா உருவாக்கிய ஆண்டு

கண்டிப்பாக உலக உருண்டை எத்தனை முடியுமோ அத்தனை கையில் உயர்த்திக் காட்டுவோம். மாயன்களும் டிசம்பர் 21ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வடக்கில் திரும்புவதையும், ஜூன் 21ஆம் தேதி தெற்கில் திரும்புவதையும் உற்று நோக்கியுள்ளனர்.

ஆனால், பூமிப்பெயர்ச்சியால்தான் இந்த நிகழ்வு என்பதை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்போல் தெரிகிறது. இப்போதும் பூமியில் பல நாடுகளில் பலர் அறிந்திருக்கவில்லை.

கோபர் நிகஸ் தத்துவம் இதனை விளக்கும். என்னவோ உலகில் எல்லோரும் 2012 இப்போதுதான் வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மகாவீரர் தோன்றி 2600 ஆண்டுகள் ஆகிறது. புத்தர் தோன்றி 25-00 ஆண்டுகள் ஆகிறது. திருவள்ளுவர் தோன்றி 2043 ஆண்டுகள் ஆகிறது.

இப்போது நடைமுறையில் 2012 என்பது இயேசு கிறித்துவிற்குப் பிறகான கி.பி. 2012. ஆனால், வரலாற்றில் ஏற்கெனவே 2012 முடிந்துவிட்டது (கி.மு.விலும்). ஓர் அணுவிலிருந்து பிரபஞ்சம் தோன்றி 1370 கோடி ஆண்டுகள் ஆகிறது. நமது சூரியன் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகிறது. (சூரியனின் ஆயுள் 1000 கோடி ஆண்டுகள் என 20 ஆண்டுகள் ஆய்வு செய்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.)

நாம் வாழும் பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிறது. (சென்ற ஆண்டு ஓசூரில் வந்து விழுந்த விண்கல்லை ஆய்வு செய்து 460 கோடி வயதுடைய கல் என்று அறிவித்தார்கள்.) சூரியக்குடும்பத்திற்கு வெளியில் இருந்து எந்தப் பாதிப்பு வந்தாலும் கண்டறிந்து கொள்ள வல்லமையுடன் மனிதன் பல செயற்கைக்கோள்களை சூரியக்குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அனுப்பி வாகை சூடி கண்காணித்து வருகிறான்.

பொதுவாக கோள்களின் இயக்கத்தைப் பழிப்பதற்கு மனிதனுக்கு அருகதை இல்லை. போற்றுவதற்கே உரிமையுண்டு. மார்ச் 21, செப்டம்பர் 20 ஆகிய நாள்கள் இரவும் பகலும் சமமான நாள்கள் ஆகும். ஜூன் 21, டிசம்பர் 21 ஆகிய நாள்கள் நீள்வட்டப் பாதையில் பூமி சூரியனைச் சுற்றித் திரும்பும் நாள்கள். இது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கைதான்.

சனிப்பெயர்ச்சியையும், குருப்பெயர்ச்சியையும் விட்டுவிட்டு பூமி சுழற்சியையும், பூமிப்பெயர்ச்சி-யையும் புரிந்து கொண்டால் புரட்சிக்கவிஞரின் அறிவை விரிவு செய்/ அகண்டமாக்கு/ விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை/ மானுட சமுத்திரம் நானென்று கூவு
என்று கூவலாம். பாரதியாரும்,

விரியும் அறிவுநிலை காட்டுவீர் - அங்கு

வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் என்கிறார்.

வள்ளுவரோ, அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நனிய துடைத்து. - என்றும்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றுங்

கல்லார் அறிவிலா தார் என்கிறார்.

பாரதியின் ஆத்திச்சூடியில்,

ஜோதிடம் தனை இகழ்

வானநூல் பயிற்சி கொள்

அறியாமையைக் கொல் என்கிறார்.

வானநூல் பயிற்சி கொள்வோம், மூடநம்பிக்கைப் புராணங்களை, வேதங்களை வெல்வோம். உலகம் அழியவே அழியாது.

- செந்தமிழ் சேகுவேரா

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை


புதுமுக நடிகர் என புது அத்தியாயம் படைத்திருக்கிறது கௌரவம்....

திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் பிரமாண்டமாகவும், வர்த்தகரீதியில் லாபம் சம்பாதிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்-படுகின்றன. அதில் சில படங்கள் வெற்றி பெறவும் செய்கின்றன. சில தோல்வி-யடைந்தும் உள்ளன.

பிரம்மாண்டமாய் எடுக்கப்படுகின்ற படங்கள் ஏன் வெற்றி பெறுகின்றன என்றால், இன்றைய சமுதாயம் அதைப் போன்ற ஒரு மாய பிம்பத்தைத்தான் விரும்புகிறது. திரையில் கதையில்லாமல் எடுக்கப்படுகிற பல படங்கள் வெற்றி பெற்றாலும், கதையை சொல்லுகிற படங்கள் அதுவும் சமூக சிக்கல்களைச் சொல்லுகிற சில படங்கள் மட்டும்தான் வெற்றியடைகின்றன.

இந்தச் சூழலில் தற்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிற கௌரவம் திரைப்படம், நாட்டில் சமூகத்தில் குறிப்பாக தமிழகத்தில் நிலவுகின்ற -_ நிலவிய ஜாதிய சிக்கல்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. ஓர் அழகான கிராமத்தில் மேல்ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞன் காதலிக்கிறான்.

இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்தபோது வளர்ந்த காதல், திருமணம் வரை செல்வதை இயக்குநர் ராதாமோகன் படத்தில் கதையாக சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு தன்னுடன் படித்த இளைஞனைத் தேடி அவனுடன் படித்த பட்டணத்து நண்பன் (ஹீரோ) வருகிறான். தன் நண்பனைப்பற்றி அவனது பெற்றோரிடம் விசாரிக்கிறான்.

அப்போது அவனது நண்பனும், அதே கிராமத்தைச் சேர்ந்த மேல்ஜாதி பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதற்காக ஊரை விட்டு ஓடிவிட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து ஹீரோ தன் நண்பனைத் தேடும் படலத்தைத் தொடங்குகிறான்.

தன் நண்பனின் தந்தை தன் மகனை எப்படியாவது தேடி கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கேட்கும் காட்சி அந்தக் கணத்தில் நம் அனைவரையும் கண்கலங்கத்தான் வைக்கிறது. இதனையடுத்து ஹீரோ அந்தக் கிராமத்திலேயே குடில் அமைத்து தேடுதலைத் தொடங்குகிறான். இதற்கு அந்தக் கிராமத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்புகிறது.

குறிப்பாக அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது. போலீசாரும் எதிராகவே இருக்கிறார்கள். தங்களது எதிர்ப்பைக் காட்ட மேல்ஜாதி-யினர் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் வீடுகளைச் சூறையாடுகிறார்கள். இருப்பினும் ஹீரோ பயங்கொள்ளாமல் தொடர்ந்து தேடுதல் பணியில் நண்பர்களுடன் ஈடுபடுகிறான். தேடுதல், மாணவர்கள் மத்தியில் போராட்ட வடிவமாக மாறுகிறது. இது ஒரு புதுமை.

இதனிடையே அவனுக்கு சட்டரீதியில் உதவ பொதுவுடைமைவாதியான நாசரின்

தமிழ் ஓவியா said...

மகள் உதவி செய்கிறார். நண்பனின் கிராமத்து வீட்டில் வளரும் சிறுவன் வரைந்த ஓவியத்தை வைத்து, தன் நண்பனும் அவன் காதலித்த பெண்ணும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதி, சிறுவன் வரைந்த ஓவியத்தில் சுட்டிக்காட்டியுள்ள கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் தோன்றி பார்த்த-போது அவர்களது உடல் கிடைக்கின்றன. இதையடுத்து வழக்கு, நீதிமன்றம் என குற்றவாளிகளைக் கண்டு அறியும் படலம் என தொடர்கிறது கதை......

உணர்ச்சிமிகுந்த கதையோடு தொடங்கும் திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது என்றே சொல்ல வேண்டும். இது படம் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஃபோராக இருந்தாலும் நேர்த்தியான உயிரோட்டமான கதை. அனைவரையும் உட்கார வைக்கிறது.

உலகில் எங்கும் இல்லாத வருணாசிரம ஜாதிக் கொடுமைகள் நம் நாட்டில் நிலவுவதையும் அதனால் மனிதர்கள் தனது மனிதநேயத்தையும், அன்பையும் அடமானம் வைத்துவிட்டு, தான் பெற்ற பிள்ளையையோ, தங்கையையோ வெட்டிக் கொல்லுகின்ற மனநலப் போக்கு இங்குதான் அதிகம் நிலவுகின்றது.

அந்த நிகழ்வுகளை தத்ரூபமாக, தைரியமாக அதுவும் அந்த மண்வாசனையோடு நேர்த்திக் குறையாமல் திரைப்படத்திற்கு உரிய பாணியில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக பெண்ணைப் பெற்ற தந்தையான பிரகாஷ்ராஜ் நடிப்பு மிக நேர்த்தி.ஜாதிய பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர் போராட்டம். என்ற ஒரு புதிய கோணத்தை இயக்குநர் ராதாமோகன் படத்தில் சொல்லி-யிருக்கிறார்.மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் காட்சி உண்மை-யிலேயே சற்று உணர்ச்சியைத்தான் வரச் செய்கிறது.

இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்கள் நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கிறது. திரைப்படத்தில் இதுபோன்ற கதைகளையும், சமூக பிரச்சினைகளையும் எடுத்துக்காட்ட முடியும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி என்றே கூறவேண்டும்.

வர்த்தகத்திற்காக எடுக்கப்படும் படங்களைத் தாண்டி அடித்தளத்தில் வாழும் மக்களின் வாழ்வுக்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்தக் கௌரவம் திரைப்படம். இதுபோன்ற சமூக பிரச்சினைகளைச் சொல்லும் படங்களால் திரைத்துறையே கௌரவம் அடையும் என்பதில் அய்யமில்லை.

- இரா.கருணாகரன்

தமிழ் ஓவியா said...

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்


மணவாழ்க்கை இனிக்க....

நூல்: மனம் திருமணம்
ஆசிரியர்: டாக்டர். மா. திருநாவுக்கரசு
வெளியீடு: அம்ருதா பப்ளிகேஷன்ஸ்
No - 12, 3ஆவது மெயின் ரோடு,
2ஆவது குறுக்குத் தெரு,
கோவிந்த் ராயல் நெஸ்ட், சி.அய்.டி. நகர் கிழக்கு, சென்னை - 600 035.
பக்கங்கள்: 248 விலை: ரூ.190/-

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனநல மருத்துவராக பணி (Profession) செய்த அனுபவம், அதன் மூலமாக சந்தித்த நபர்கள், அவர்களுடைய பிரச்சினைகள், அதை மக்கள் அணுகும்விதம் ஆகியவற்றை உணர வாய்ப்புக் கிடைத்தது.

ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. திருமணத்திற்காக மக்கள் படும் சிரமங்கள் மேலும் திருமணத்தினால் அனுபவிக்கும் சிரமங்கள் என்று பலவற்றையும் நான் சந்தித்திருக்கிறேன். இது தவிர, திருமணம் எனும் கருத்தும் அதன் அடிப்படைகளும் படும்பாட்டையும் நான் பார்த்திருக்கிறேன்.

நான் பயிற்சிக்காக, அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்த அமெரிக்கர்கள் -_ எப்படி முன்பின் தெரியாமல் - பார்த்துப் பழகாமல் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதன் பிறகு நான் சந்தித்த பலரையும் எதற்காக திருமணம் செய்து கொள்கிறீர்கள், திருமணத்தின் அவசியம் என்ன, அது தேவைதானா, எதற்காக இன்னமும் இத்திருமணத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்கள் என்று கேட்டதுண்டு.

எந்தப் பிரச்சினையுமின்றி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளிடம் இதைக் கேட்டபோது பெரும்பாலும் தெரியாது நாங்கள் அதைப்பற்றி யோசித்ததேயில்லை என்ற பதில்தான் கிடைத்தது.

அதேசமயம் திருமணம் பிரச்சினைக்-குள்ளான தம்பதிகளை இப்படிக் கேட்டபோது விரிவான, தெளிவான பதில்கள் கிடைத்தன. அதுவும் அப்பதில்கள் பலதரப்-பட்டதாக இருந்தன. எதிர்பார்ப்பு-களும், கனவுகளும் உள்ள நபர்கள்தான் திருமணத்தில் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

எதார்த்தமாக, இயல்பாக, எவ்வித நோக்கமோ, சிந்தனையோ, கருத்தோ, எதிர்பார்ப்போ இல்லாத நபர்கள் பெரும்பாலும் பிரச்சினையே சந்திப்பதில்லை என்பது என் கணிப்பு. இது எனக்கு ஓர் ஆச்சரியத்தைத் தோற்றுவித்தது. ஒன்றும் தெரியாமல் குடும்பம் நடத்துவது உன்னதமானதாகவும் பட்டது.

தமிழ் ஓவியா said...

திருமணம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் சம்மந்தப்பட்டவர்களால்தான் தீர்க்கப்படுவதாகவும், தானாகவேதான் அவை தீர்ந்துபோவதாகவும் ஓர் உணர்வு இப்போதும் என்னில் உண்டு. அதுவரை தம்பதிகள் தாக்குப்பிடித்தாலே போதுமானது என்பது எனது பணிவான கருத்தாகும்.

உள்ளது உள்ளபடி, உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் தெளிவு தானாகவே பிறக்கும். திருமணத்தில் நமது கடமை என்ன? திருமணத்தைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் முக்கியமாகும். திருமணம் எனக்கு என்ன செய்தது? அது எனக்கு என்ன கொடுத்தது? என்று கேட்டுக் கொண்டிருந்தால், அதற்கு ஒரு முடிவே இருக்காது. திருப்தியென்பது யாரோ கொடுப்பதல்ல.

நாமாக அடைவது என்பது போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டு-மென்று தோன்றியது. அதைத்தான் இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன்.

* * *

பெண்ணின் கட்டாயம்:

நமது கலாச்சாரத்தைப்பற்றி, நமது வாழ்வியல் கருத்துகளைப்பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்குத் தன்னிச்சையாக, தன் விருப்பம்போல் ஒருவரிடம் பாலியல் உறவை வைத்துக்கொள்ள சமூகத்தில் அங்கீகாரம் கிடையாது. செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமானால் அல்லது செக்ஸில் ஈடுபட வேண்டுமென்றால் திருமணம் மூலம்தான் அது சாத்தியமாகும்.

ஒரு பெண் தனது உடலியல் தேவைகளைத் திருமணம் மூலம்தான் அடைய வேண்டும் அல்லது பெற வேண்டும். அதற்கு அப்பாற்பட்டு பெறும் செக்ஸ்க்கு மரியாதை கிடையாது. அது கீழ்த்தரமானதாக நோக்கப்-படும். அப்படி ஏதேனும் முறை தவறிய, விதி மீறிய, அங்கீகரிக்கப்படாத செக்ஸில் ஈடுபட்டால் அது கண்டனத்திற்கு உரியதாகும்.

சில நேரங்களில் அது தண்டனைக்கும் ஏதுவானதாகக் கருதப்படுகிறது. அவமானமாக கருதப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அப்படியே தெரிந்தாலும், கண்டுபிடிக்கப்பட்டாலும் ஏற்க முடியாத, கீழ்த்தரமான உறவை அல்லது செயலைத் திருமணம் புனிதப்படுத்தி விடுகிறது என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய ஏற்க முடியாத நிகழ்வுகளுக்குப் பரிகாரமாக அல்லது தீர்வாக திருமணமே தண்டனையாக விதிக்கப்படுகிறது. திருமணமான அடுத்த நாளே பாதிக்கப்பட்டவள் புனிதப்பட்டுப் போகிறார்கள்.

நமது பெண்கள் இக்காரணத்திற்காகவே திருமணத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய ஓர் ஆண் தேவை. இவன் சரியில்லையென்றால் அல்லது விலக்கி வைத்தால் வேறொருவன் தேவை. அப்படி மாற்றாக வருபவன் பெரும்பாலும் அவளுக்குத் தக்க உரிமை அல்லது மரியாதையைக் கொடுப்பானா என்பது சந்தேகமே.

எனவே தெரியாத தேவதையைவிட தெரிந்த சைத்தானே தேவலாம் என்ற சித்தாந்தத்தில் சகித்துக் கொள்கிறாள். ஓர் ஆண் தனக்குத் துணையாக இருக்கிறான் என்பதைப் பாதுகாப்பாகக் கருதுகிறாள். இன்னொரு ஆண் பாதுகாப்புத் தருவானா என்பது சந்தேகமானது. இழிவுபடுத்தத்தான் வாய்ப்புகள் அதிகம் என்று நம்புகிறாள். எனவே, அத்தகைய இழிவுகளைத் தவிர்ப்பதற்காகவாவது அவனுடனே தொடர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்றும் முடிவு செய்கிறாள்.

பெண்ணுக்குச் சம உரிமை கொடுக்கப்பட்டதாகக் கூறினாலும் சமத்துவம் கிடைத்துவிட்டதாகப் பீற்றிக்கொண்டாலும், சமத்துவம் கிடைத்ததா என்றால், இல்லை. பெண் சுய சிந்தனையுடன் செயல்படுகிறாள் என்று சொல்லிக்கொள்கிறோம். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டதாகப் பேசிப் பேசி மாய்கிறோம். உண்மையா? அது சந்தேகத்துக்-குரியது.

பெண்ணின் உடலமைப்பு, உள அமைப்புப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் ஆளப்பட வேண்டிய அமைப்புடை-யவள். அவளை ஆளுவதற்கு உடலியல் ரீதியாக ஓர் ஆள் தேவை. எனவே, துணை அவசி-யமாகிறது. அத்துணை தனது தேவைகளை, தனது உணர்வுகளைப் புரிந்தவனாக இருக்க வேண்டுமென்று அவள் நினைக்கிறாள்.

அப்படிப் புரிந்தவனாக இருந்தால் தனக்கு இசைவாக இருக்கும் என்று நம்புகிறாள். உறவில் ஈடுபடும்போது தன்னை மீட்டுபவனாக, தன்னை ஆளுபவனாக, தன்னை வீழ்த்துபவனாக இருக்க வேண்டும். இதற்கு, தன்னை அறிந்தவன்தான் பொருத்தம். அறியாதவனிடம் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து, கற்பிப்பது என்பது ஆயாசம் தரும் ஒன்றாகும்.

எனவே அறிந்தவன், தெரிந்தவன், புரிந்தவனிடம் தன்னை ஒப்படைப்பது இலகுவானது மற்றும் ஆயாசமற்றது என்று நினைக்கிறாள் மற்றும் நம்புகிறாள். இத்தகைய காரியங்கள் ரகசியமாகவும், தனிமையாகவும், பகிரங்கப்-படுத்தப்படாமலும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாள். எனவே தெரிந்தவன், அறிந்தவன் பேயாக இருந்தாலும், ஒருவனாக இருக்கும்-போது ரகசியம் காப்பாற்றப்படுகிறது. பெண் செக்ஸ் வேண்டுமென்று கேட்பதை அவமான-மாகக் கருதுகிறாள்.

தமிழ் ஓவியா said...


எனவே, புதிதாக வரும் நபரிடம் தன்னைப் புரிய வைத்து தன்னைப் படைப்பது சலிப்பாகப் போய்-விடுகிறது. அதனால்தான் தெரிந்த சனியனே பரவாயில்லை என்று நினைக்கிறாள்.

இப்படி இருக்கையில், அவள் எதைக் கொண்டு ஓர் ஆடவனைத் தேர்ந்தெடுக்க முடியும்? பொருளாதாரரீதியாக, ஒழுக்கரீதியாக, உடல்வாகு மற்றும் வசீகரரீதியாக என்று எதைக் கணிக்க முடியும்? என்ன உத்திரவாதம் இருக்கிறது? என்ன அளவுகோல் இருக்கிறது? என்ன குறியீடு இருக்கிறது? எதை வைத்து முடிவு செய்வாள்? என்ன அனுபவம் இருக்கிறது? ஆனால் முடிவு செய்ய இப்போது அதிகாரம் இருக்கிறது, அங்கீகாரம் இருக்கிறது.

வாய்ப்பு இருக்கிறது-. பெண் தேர்வு செய்வது என்பது கடல் ஆழம் பார்ப்பது போன்றாகும். கண்ணுக்குத் தெரியாமல் கருத்துக்குத் தெரியாமல் உள்ள ஒன்றை வைத்துத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாள். எனவே பரவலாகப் பேசப்படுவது, சொல்லப்படுவது, கூறப்படுவதை வைத்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறாள். வெற்றி வாய்ப்பு அதிர்ஷ்டக் குலுக்கல் போலத்தான். விரும்பியது கிடைப்பதைவிட கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

* * *

தம்பதிகளே..... கீழே சொல்லப்படுபவை-களைப் பலமுறை படித்துப் புரிந்து கொள்ளவும். துணை நல்லவர்களாக இருக்கும்போது திருப்தியடையக் கற்றுக் கொள்ளுங்கள். நல்லவராக இருப்பதுதான் இன்றியமை-யாததாகும். இனிமையாக இல்லையென்று வெகுண்டெழாதீர்கள். உதாசீனப்படுத்தாதீர்கள். இனிமையைக் கொண்டு வருவது எளிதாகும்.

இனிமை இல்லாததையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போது ஒன்றை ரசிக்க ஆரம்பிக்கிறோமோ, ரசிக்க முடிகிறதோ அது அப்போது இனிதாகத் தோன்ற ஆரம்பிக்கும். எது ஒன்று இனிதாகத் தோன்ற ஆரம்பிக்-கிறதோ அது இனிதாக மாறிவிடும். நல்லதுதான் நிலையானது. கிடைத்தற்கு அரியது. இனியது எங்கும் கிடைக்கும். ஆனால் நிலையானதல்ல. அது, ஆரோக்கியமானதென்று உறுதியளிக்க முடியாது.

அதேசமயம், நல்லவர்களே இனிமையாக இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். பழகிக் கொள்ளுங்கள். நன்றாக இருப்பது வாழ்க்கை-யைக் கொடுக்கும். இனிமையாக இருப்பது ருசியையும், அர்த்தத்தையும் கொடுக்கும். இனிமை என்பது தேவையான ஒன்று, விருப்பமான ஒன்று. வாழ்வது மட்டும் முக்கியமல்ல.

தரமாகவும் வாழத் தெரிய வேண்டும். வாழ்க்கை கொடுப்பது மட்டும் முக்கியமல்ல. தரமான வாழ்க்கையையும் சேர்த்துக் கொடுக்கத் தெரிய வேண்டும். எனவே, இனிமையாக இருப்பதும் தேவைதான் எனப் புரிந்து கொள்ளுங்கள்.

விருப்பமானதைக் கொடுக்க வேண்டியது கடமைதான் என்று புரிந்து கொள்ளுங்கள். நல்லவனாக இருப்பது இன்றியமையாதது. இனிமையானவனாக இருக்க வேண்டியது தேவையானது. நல்லவனாகவும், இனிமையானவனாகவும் இருக்கும்பட்சத்தில் தாம்பத்தியம் எவ்வளவு ருசிகரமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

இதற்குப் பெயர்தான் விட்டுக் கொடுப்-பதாகும். விட்டுக்கொடுப்பதென்பது யாருக்கோ அல்லது யாரிடமோ விட்டுக் கொடுப்பதில்லை. நம்மிடமே நம்மை விட்டுக் கொடுப்பதாகும். நமது கொள்கைகள், கோட்பாடுகள், கௌரவங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் என்று இறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை விட்டுக் கொடுக்க வேண்டும்.

விட்டுக் கொடுத்துப் பாருங்கள். இழப்பு ஒன்றுமில்லை என்பது தெரிய வரும். ஆதாயம் எவ்வளவு என்று புரிய வரும். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை. கெட்டுப் போனவன் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை.

தமிழ் ஓவியா said...

இன்பம் எங்கே?

- ந.ஆனந்தம்

மகிழ்ச்சி என்பது நிரந்தர இன்பத்தைக் குறிக்கிறது. நினைக்கும போதெல்லாம் இன்பம் தருவதைக் குறிக்கிறது. இது மன உணர்வும், மன திருப்தியும் சம்பந்தப்பட்டதாகும். மன மகிழ்ச்சி என்ற உணர்வை எளிதில் விளக்க இயலாது. மகிழ்ச்சி என்ற உணர்வு மனிதர்களிடம் ஒரே தன்மையில் இருப்பது இல்லை.

அது மனிதனுக்கு மனிதன் வேறு-படுகிறது. அதனால்தான், ஒரு செயலைச் செய்து அல்லது அனுபவித்து ஒரு மனிதன் மகிழ்ச்சியடைகிறான். இன்னொரு மனிதன் அதே செயல்பாட்டிற்கு அதே மகிழ்ச்சி உணர்வைப் பெறுவதில்லை. மனிதனின் நம்பிக்கை, அறிவு, மனவளர்ச்சி, இட காலச் சூழல் போன்ற பல காரணிகள் இவ்வேறு-பாட்டிற்கு காரணிகளாக அமைகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மனிதனின் மகிழ்ச்சியை அவனின் மனம்தான் தீர்மானிக்கிறது.

சுவையான உணவு உண்ணுதல், மது அருந்துதல், சூதாட்டம் ஆடுதல், உடலுறவு கொள்தல் போன்ற கிளர்ச்சியூட்டும் செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இச்சரீர இன்பங்கள் மனித வாழ்விற்கு அவசியமானதெனக் கருதலாமே தவிர, வாழ்க்கையின் இலக்காக அவைகளைக் கொள்ள இயலாது. இவைகளால் பேரானந்த உணர்வை, நினைந்து மகிழும் இன்பத்தை அளிக்க இயலாது. எனவே, அவைகள் மட்டுமே மகிழ்ச்சிக்கான கருவிகள் எனக் கருதக்கூடாது.

போதை வஸ்துகளைப் பயன்படுத்துபவர்கள் அவைகளை உட்கொண்டவுடன் ஒரு இனிய மனக்கிளர்ச்சியை அனுபவிக்கிறார்கள். அனைத்து மதுபானங்களும், போதைப் பொருட்களும் மனிதனது நரம்பு மண்டலத்தைத் தூண்டி ஒரு விதமான பரவச நிலையை உண்டாக்குகின்றன. அக்கிளர்ச்சியையும், அவை உண்டாக்கும் மயக்க நிலையையும் அவர்கள் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

மதுவிற்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமை-யானவர்கள் மனநோயாளிகள் என்பது மனோதத்துவ மருத்துவர்களின் கருத்தாகும். போதைப் பொருட்களை உட்கொண்டு யதார்த்த உலகிலிருந்து விலகி விடுகிறார்கள். எனவே, எத்தகைய, போதைப்பொருட்களும் மனிதனுக்கு நிரந்தர இன்பம் அளிப்பவை அல்ல. அவைகளுக்கு மனிதன் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

மகிழ்ச்சிக்கான தேடலில் தன்னுடைய மகிழ்ச்சியே பிரதானம் என்று கருதுவது இன்னொரு பொதுக் கருத்தாகும். இக்கருத்து தன்னலத்தையும், தன் முன்னேற்றத்தையும் மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. பொதுநல நோக்கைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. சமூக ஒழுங்கீனத்திற்கு வித்திடுகிறது. சகமனிதர்களின் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் சம முக்கி-யத்துவம் அளிப்பதே சரியான ஒழுக்கமாகும்.

தம்முடைய மகிழ்ச்சிக்காக அடுத்தவருடைய உரிமைகளில் குறுக்கிடுவதும், உரிமைகளை மறுப்பதும் ஒழுக்கமற்ற செயலாகும். சமூக பொதுவிதியை மீறும் செயலாகும். எனவே, தன்னலத்தை மேன்மைப்படுத்தும் எச்செயலையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். மகிழ்ச்சியை அடைய ஒழுக்க விழுமியங்-களை நேர்மையாகக் கடைப்பிடிப்பதே சரியான வழிமுறை என்பது ஒழுக்கவாதிகளின் கருத்தாகும். இது உண்மையென்றாலும் இதற்கும் ஒரு வரையரை அல்லது எல்லை உண்டு.

ஏனெனில், அனைத்து ஒழுக்கவிதிகளும் நிரந்தரமானவை அல்ல; மாறுதல்களுக்குட்-பட்டவையே. மகிழ்ச்சியும், அதற்குரிய செயல்பாடுகளும் பிரிக்க முடியாதவண்ணம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; ஒன்றையொன்று சார்ந்தவை. அவற்றின் சார்புத்தன்மையை விவரிக்கும் தத்துவ அறிஞர் டிஸ்ரேலி செயல்பாடு மகிழ்ச்சி அளிக்காமலிருக்கலாம்; ஆனால் செயல்பாடில்லாமல் மகிழ்ச்சி இல்லை என்று சொல்கிறார்.

சோம்பேறி வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை அன்று. உதாரணமாக, மனிதனுக்கு உணவு மட்டும் அளித்து-விட்டு ஒரு வேலையும் அளிக்கா-விட்டால் அவன் சந்தோஷமாக இருப்பதில்லை. தொடர்ந்து அதே நிலையில் வைக்கப்பட்டால் அவன் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு உள்ளாகிவிடுகிறான். இது உணர்த்தும் உண்மை என்னவென்றால், சராசரி மனிதன் ஏதாவதொரு வேலையைச் செய்ய மனதளவில் தயாராகவேயிருக்கிறான் என்பதுதான்!

தமிழ் ஓவியா said...


அவன் வேலையில் எப்பொழுது வெறுப்படைகிறான் என்றால், தான் செய்யும் வேலை எந்தவித நல்விளைவுகளையும் உண்டாக்கவில்லை என்று உணரும்போதுதான் என்பது மனோதத்து-வர்களின் கருத்தாகும். எந்த வேலையும் செய்யக்கூடாது என்று நினைப்பவன்தான் இயற்கை விதிக்கு முரண்பட்டவன் என்பது அவர்களின் கருத்தாகும். ஆகவே, பணியில் ஈடுபடுவதே இயற்கை நியதி. மனிதனை ஆக்கபூர்வமான செயல்களில் நேர்மையாகச் செயல்படச் செய்வதே ஒழுக்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.

எச்செயல்களையும் உயர்ந்தவை, தாழ்ந்தவை என்று தரம் பிரித்தல் தவறானது. எல்லாச் செயல்பாடுகளும் மனித சமுதாயம் செம்மையாக இயங்க தேவையானவையாகும். ஈடுபாடோடு ஆக்கபூர்வமான வேலை செய்வது மகிழ்ச்சியை அடைவதற்கான முதற்படியாகும். சிந்தனை செய்து படைப்புகளைப் படைப்பது மனிதனுக்கு ஓர் இனிய, மகிழ்ச்சியான அனுபவமாகும். ஏனெனில், மனிதன் படைப்பாற்றல் செய்ய ஆற்றலுள்ளவன்.

எப்பொருள் பற்றியும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து புதியன படைக்க வல்லவன். ஒவ்வொருவரும் தன்னுடைய ஆர்வம், விருப்பத்திற்கேற்ப பொருளைத் தேர்ந்தெடுத்து அப்பொருளில் படைப்புகளைச் செய்யக் கடமைப்பட்டவர்கள். எப்பொருள் ஆய்விற்கு ஏற்றது என்று கணிப்பது ஒரு கடினமான காரியமாகும். ஏனெனில், வரலாற்று ரீதியாக மிகச் சிறந்த படைப்புகள் அறிஞர்களால் பயனற்றது என்று கருதப்பட்டிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

உதாரணமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்-காலத்திலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திலும் (கி.பி. 1880-_1910) சுய உந்துசக்தி கொண்ட வாகனத்தையும், பறக்கும் வாகனத்-தையும் கண்டுபிடிக்கும் முயற்சிகளைப் பயனற்ற செயல்கள் என்று பெரும்பான்மையோர் கருதினர். எனினும், விமர்சனங்களைச் சட்டை செய்யாமல், சிலர் ஆய்வை மேற்கொண்டனர். அதனால் பயனுள்ள வாகனங்கள் கண்டுபிடிக்கப்-பட்டன.

கார்ல் பென்ஸ் என்ற ஜெர்மானியர் பெட்ரோல் எரிசக்தியால் இயங்கும் இன்ஜினை 1885ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ருடால்ஃப் டீசல் 1898ஆம் ஆண்டு டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்தார். ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற இருவரும் இணைந்து 1903ஆம் ஆண்டு ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தனர்.

1896ஆம் ஆண்டு அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்த மொத்த கார்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான். அக்காலகட்டத்தில், குதிரையில்லாமல் ஓடும் வாகனத்தை ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் பார்த்தார்கள். அது மனித சமுதாயத்தில் பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. மிகக் குறுகிய காலத்தில் பலரும் அந்த இயந்திரத்தை செம்மைப்படுத்தி வெகு உபயோகமான சாதனமாக உருவாக்கி-விட்டார்கள்.

அந்த இயந்திரத்தைக் கொண்ட வாகனங்கள் இன்று மனித சமுதாயத்திற்கு மிக அவசியமான சாதனமாக மாறிவிட்டன. இவ்வரலாற்று நிகழ்வுகள் உணர்த்தும் உண்மை என்னவென்றால் ஆய்வில் எந்த ஆய்வு பயனுள்ளவை, எவை பயனற்றவை என்று பிரித்துணர்வது கடினமான செயல் என்பதாகும். இது மற்றொரு உண்மையையும் உணர்த்துகிறது. இயற்கையின் ரகசியங்களை அறிவதும், புதிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து பிரச்சினை-களுக்குத் தீர்வு காண்பதும் ஓர் இனிய, மகிழ்ச்சியான அனுபவமாகும்.

புதியன சிந்தித்து, புதிய இயந்திரங்களைப் படைத்தவர்கள், அவை ஏற்படுத்தும் அரிய பலன்களைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்கள். அதுபோல, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். ஆகவே, படைப்புச் செயல்களில் ஈடுபாடோடு செயல்படுவது நிரந்தர மகிழ்ச்சியை அடைவதற்கான சரியான கருவியாகும்.

எதிலும் மெய்ம்மை காண்பதும், அதைக் கொண்டு புதியன படைப்பதும் மிகவும் மேன்மையான செயல்களாகும். வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏதாவதொரு வேலை செய்ய நேரிட்டாலும், படைப்புச் செயல்பாட்டை ஓய்வு நேரப்பணியாக செய்யலாம். ஓய்வு நேரப் பணியாகச் செய்ததன் மூலமாகத்தான் மனித சமுதாயத்தில், உலகில் மிகச் சிறந்த படைப்புகள் படைக்கப்பட்டிருக்-கின்றன. மிகச் சிறந்த மெய்ம்மைகள் உணரப்பட்டிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

தொழில் வளர்ச்சிகளுக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் முன்னேற்ற-மடைந்த உலகில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாதென்ற தாழ்வு மனப்-பான்மையுடன் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்றனர். மனிதன் மனிதநேயத்துடனும் விரிந்த பார்வையோடும், துணிவோடும் சிந்தித்தால் எவரும் சாதனை புரிய முடியும். ஆய்வுக்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலக நடப்புகளைக் கவனிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளைக் கருத்துடன் கவனிக்க வேண்டும்.

விஞ்ஞான, தத்துவ, அரசியல் களங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கருத்தாடல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனிக்கும்போது ஆய்வுக்கான பொருளைத் தேர்வு செய்ய முடியும். நிரந்தர மகிழ்ச்சியைப் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்பது பலருடைய நினைப்பாகும். அவ்வுணர்வுடன் பலர் பணம் சேர்ப்பதையே வாழ்வின் இலக்காகக் கொள்கின்றனர். அவர்களுடைய பணவெறியும், பேராசையும் தவறான இலக்குக்கு இட்டுச் செல்கின்றன.

நற்பண்புகளும், மகிழ்ச்சியும் ஒன்றையொன்று நீக்கமற சார்ந்தவை. உயர்ந்த பண்புகள் நிறைவான மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. தரமான, நிறைவான மகிழ்ச்சி பெரும்பாலும் உயர்ந்த பண்புகளைக் கடைபிடிப்பதால் உண்டாகின்றன. ஆகவே, மகிழ்ச்சி அடைய நற்பண்புகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஆகவே, சகமனிதர்களின் உரிமை-களைப் பாதுகாக்கும் விழுமியங்களை நேர்மையாகக் கடைபிடிப்பதே மனநிறைவான மகிழ்ச்சி பெற ஒருவன் செய்ய வேண்டிய காரியமாகும். சமுதாயத்தில் மகிழ்ச்சி நிலவ அன்பிற்கும், அறிவிற்கும் சம முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும். இக்கருத்தைத் தத்துவமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் வலியுறுத்தி-யுள்ளார்.

நிறைவான, இனிய வாழ்வு என்பது மனித நேயத்தையும், அறிவையும் அடிப்-படையாகக் கொண்டது என்று கூறியுள்ளார். அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்காத மனிதநேயமும், அன்பிற்கு முக்கியத்துவம் அளிக்காத அறிவும் நல்வாழ்க்கையை அளிக்காது என்கிறார். அன்பும், அறிவும் வளர்ந்தோங்குவதற்கான செயல்பாடுகளைச் செய்யாமல், பெரும்-பான்மையான மக்கள் பல பயனற்ற செயல்களை மிகுந்த ஈடுபாடோடு செய்து கொண்டிருக்-கிறார்கள்.

பிரார்த்தனை செய்தல், மதச்சடங்கு-களைச் செய்தல், உடலை வருத்துதல் விழா நடத்துதல் போன்ற செயல்கள் யாவும் இதற்குள் அடங்கும். இச்செயல்கள் உள்ளக் கிளர்ச்சி-யூட்டி சிறிது நேரத்திற்கு இன்ப உணர்வை உண்டாக்குகின்றன.

மக்களை பக்தி என்ற போதைக்கு உட்படுத்தி, ஒரு போலியான கற்பனை உலகில் சிறிது நேரம் சஞ்சரிக்க வைக்கின்றன; மெய்சிலிர்க்க வைக்கின்றன. இவைகளால் மக்கள் எந்த நலனையும், நெடிய இன்பத்தையும் அடைய முடியாது. எனவே, நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிக்க இச்செயல்-களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

மனிதநேயத்தையும் அழகுணர்ச்சியையும் பிரதிபலிக்கும் ரசனை மன மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. எல்லையற்ற மகிழ்ச்சியை எவை உண்டாக்குகிறது என்றால் மனிதநேயம், அறிவு, நீதி, ஒழுக்கம் சம்பந்தமான விழுமி-யங்களை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகள்தாம். ஆகவே, அவ்விழுமியங்களை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். எல்லையற்ற, நெடிய மகிழ்ச்சியை அடைய இவைதான் சரியன வழிமுறைகளாகும்.

தமிழ் ஓவியா said...

அந்த வார்த்தை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்பு களுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...


உ.பி.யில் பார்ப்பனர் காட்டில் மழையா?


இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத் தில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள்; அவர்கள் கரங்களில்தான் அதிகாரம் வர வேண்டும் என்று ஓர் இயக்கத்தை அகில இந்திய அளவில் உருவாக்கியவர் கன்ஷிராம்!

உத்தரப்பிரதேச அரசியலில் அது கையும் கொடுத்தது. அதன் அடிப்படையில்தான் லக்னோவில் மூன்று நாட்கள் மிகப் பெரிய அளவில் பெரியார் மேளாவும் நடத்தப்பட்டது - மாயாவதி அப்பொழுது முதல் அமைச்சராகவும் இருந்தார். (1995).

மாயாவதி எந்த அளவுக்குச் சென் றார் தெரியுமா? பார்ப்பனர்களைச் செருப்பால் அடியுங்கள் என்று கூறும் அளவுக்கு அவரது வார்த்தைகள் எகிறிப் பாய்ந்தன.

உ.பி.யைப் பொறுத்தவரை 14 விழுக்காடு வாக்காளர்கள் பார்ப் பனர்கள்; மாயாவதியின் மூளையில் குயுக்தியாக ஒரு பொறி தட்டியது. பகுஜன் என்பதைவிட வெகுஜன் என்று தலை கீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனர்களின் வாக்கு வங்கியைத் தம் பக்கம் ஈர்க்கலாம் என்று கணக் குப் போட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராகவே சதீஷ் சந்திரா மிஸ்ரா என்ற பார்ப்பனரை நியமித்தார்.

2007 சட்டப் பேரவைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு 51 இடங்களை லட்டாகத் தூக்கிக் கொடுத்தார். 2009இல் நடைபெற்ற மக்கள வைத் தேர்தலிலே பார்ப்பனர்களுக்கு 20 இடங்களைத் தாரை வார்த்தார். தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுத்த இடங்களோ வெறும் 17 தான். (வாழ்க சமூக நீதி!)

2007இல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2012 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.

2014இல் மக்களவைத் தேர்தல் நடப்பதையொட்டி உத்தரப்பிரதேசத் தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2007இல் பின்பற்றிய யுக்தியை - தற்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் இப்படி ஒரு வியூகம் வகுத்துள்ளார். பரசுராமன் விழா என்று பெயரில் விழா ஏற்பாடு செய் யப்பட்டது.

பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் பார்ப் பனர்களுக்குச் சரமாரியான சலுகை களை வாரிக் கொட்டியுள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை நாடாளு மன்றத்தில் தோற்கடித்தது சமாஜ் வாடி கட்சிதான் என்று மார் தட்டியுள்ளார்.

பிராமணர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதலிடத்தில் இருப் பது எங்கள் கட்சிதான்; கடந்த ஆட்சி யில் பிராமணர்கள்மீது போடப்பட் டுள்ள வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படும் என்று நாக்கில் தேன் தடவியுள்ளார்.

உ.பி.யின் இன்னொரு பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநாட்டைக் கூட்டி அதில் கட்சியின் பொதுச் செயலாளரான சதீஷ்சந்திரமிஸ்ரா பிராமணர்களுக்கு பாதுகாப்பான கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே! என்று கூறியுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சார்ந்த முதல் அமைச்சரும் சரி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதியும் சரி, உயர் ஜாதி பார்ப்பனர்களைத் தாஜா செய்வதற் காகக் களத்தில் குதித்து விட்டனர்! (இதில் மற்றும் ஒற்றுமைக் கூட்டு!)

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரின் கொழுத்த ஆதர வைப் பெற்று மஞ்சள் குளிப்பது மட்டும் பார்ப்பனர்கள்தாம்.

ஆம், உ.பி.யில் பார்ப்பனர்கள் காட்டில்தான் மழை பெய்கிறது. ஆனாலும் இதனையும் தாண்டி, கான்ஷிராம் அடித்தளம் போட்டுக் கொடுத்த - விதை ஊன்றிய அந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினரின் அந்த அழுத்தமான பெரும்பாலான மக்கள் இந்த இரு அரசியல் கட்சி களையும் தூக்கி எறிந்தால் ஆச்சரி யப்படுவதற்கில்லை.

இன்றைய நிலையில் பிற கட்சிகள் - ஏன் காங்கிரஸ்கூட இந்தக் கோணத்தில் சிந்திக்கலாமே! அறு வடை சுலபமாகக் கிடைக்குமே!

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்த வரை ஓகோ என்று வளர்ச்சி அடைந்து விட்ட மாநிலம் அல்ல.

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்த இடத்தில் கால் ஊன்றிடவில்லை. கல்வி, பொருளாதாரம் இவற்றில் பாதாள பள்ளத்தில்தான் கிடக்கின்றனர்.

அவர்களுக்காக யார் குரலை கொடுக்க முன் வருவார்களோ அவர்கள் பக்கம் அரசியல் காற்றடிக்க வாய்ப்பு உண்டே!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

ஞானோதயம்

செய்தி: விவசாய நாடு என்ற பெருமையை இந்தியா இழந்து விட்டது வருத்தம் அளிக்கிறது.
குஜராத் முதல்வர் மோடி

சிந்தனை: மோடி விரும்பும் இந்துத்துவாவில் விவசாயம்தான் பாவத் தொழில் ஆயிற்றே - இப் பொழுது என்ன திடீர் ஞானோதயம்?

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் போதை - சூதாட்டம் கழக ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (24.5.2013)



1 சூதாட்டம் சூதாட்டம்
கிரிக்கெட் சூதாட்டம்!

2. மத்திய அரசே மத்திய அரசே!
அனுமதிக்காதே, அனுமதிக்காதே
சூதாட்ட விளையாட்டை சூதாட்ட விளையாட்டை
அனுமதிக்காதே, அனுமதிக்காதே!

3. கிரிக்கெட் விளையாட்டா
சூதாட்ட விளையாட்டா
வெற்றி பெறுவது யார்?
வெற்றி பெறுவது யார்?
சூதாட்டக்காரர்களா?
விளையாட்டுக்காரர்களா?

4. அய்பிஎல் கிரிக்கெட்டா
கறுப்புப்பண சந்தையா?
கறுப்புப்பண சந்தையா?

5. வெட்கம்! வெட்கம்!
விளையாட்டின் பேராலே
விளையாட்டின் பேராலே
வர்த்தகச் சூதாட்டமா?
வர்த்தகச் சூதாட்டமா?

6. விளையாட்டின் சிறப்பை
விளையாட்டின் சிறப்பை
கொச்சைப்படுத்தும்
கொச்சைப்படுத்தும்
கிரிக்கெட்டை, கிரிக்கெட்டை
தடைசெய்! தடை செய்!
கிரிக்கெட்டைத் தடை செய்!

7. இளைஞர்களே, இளைஞர்களே,
மாணவர்களே, மாணவர்களே,
பலியாகாதீர்! பலியாகாதீர்!!
கிரிக்கெட் போதைக்கு
கிரிக்கெட் போதைக்கு
பலியாகாதீர்! பலியாகாதீர்!

8. மத்திய அரசே, மத்திய அரசே!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
கிரிக்கெட் பேராலே
கிரிக்கெட் பேராலே
மோசடி செய்யும், மோசடி செய்யும்
பெரிய மனிதர்கள் மீது
பெரிய மனிதர்கள் மீது
நடவடிக்கை எடு - நடவடிக்கை எடு!

9. மத்திய அரசே, மத்திய அரசே
ஆதரவு கொடு, ஆதரவு கொடு!
சடுகுடு ஆட்டத்துக்கு
சடுகுடு ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஆதரவு கொடு! ஆதரவு கொடு!

10. பிரச்சாரம் பிரச்சாரம்!
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
பிரச்சாரம் பிரச்சாரம்!
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்!

11. கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
முதலாளிகளின், முதலாளிகளின்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?

12. வெட்கக் கேடு, வெட்கக்கேடு
விளையாட்டுக்காரர்கள்
விளையாட்டுக்காரர்கள்
ஏலம் போவது - ஏலம் போவது
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!

13. தடை செய் - தடை செய்!
சூதாட்டக் கிரிக்கெட்டை
சூதாட்டக் கிரிக்கெட்டை
தடை செய்! தடை செய்!

- திராவிடர் கழகம் -

தமிழ் ஓவியா said...


தமிழர்களாக மாறிய பார்ப்பனர்கள்! இது சிறீரங்கம் அதிரடி!


பார்ப்பனர்கள் தமிழர்களாக மாறிய வர லாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 12.05.2013 அன்று சிறீரங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு வயிறு குலுங்கச் சிரிங்க என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஒரு கண்ணியம் கருதி நாம் அப்படிச் செய்யவில்லை. சில நாள்களுக்கு முன், சிறீரங்கத்தில் வசிக்கும் நம் தோழர்கள் காலையில் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் கண்ணில் பளிச்சிடுகிறது அந்தச் சுவரொட்டி. பார்ப்பனர்கள் தமிழர் களா? ஆம்! அவர்களும் தமிழர்களே! பிராமணர் சங்க விளக்கப் பொதுக் கூட்டம்! எனச் சொல்கிறது அந்தச் சுவரொட்டி.

அதன்படி மாலை பொதுக் கூட்டமும் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன், திராவிடர் எழுச்சி மாநாடு நடத்தினோமே, அதே இடம். மாலை 6.30 மணிக்கு நாம் சிறீரங்கத்தில் நுழை கிறோம். அங்கே ஒரு பிளெக்ஸ் விளம்பரம் நம்மைத் தடுக்கிறது. அதில் சில படங்கள் இருந்தன, பேச்சாளர்களின் பெயர்கள் இருந்தன, கூட்டத்திற்கான விளக்கமும் இருந்தது. அவற் றிற்குக் கீழே ஆகவே பிராமணர்களே திரள்வீர்! திரள்வீர்! சிறீரங்கம் திணறத் திரள்வீர்!! என்கிற உற்சாக வரியும் இருந்தது.

அதைப் படித்து விட்டு வேக, வேகமாக நாம் கூட்ட இடத்திற்கு விரைகிறோம். அங்கே போனால் மேடையில் இரண்டு பேர், ஆங்காங்கே 4 பேர், 30 காலி இருக்கைகள் இருந்தன. சரி! இன்னும் நேரம் இருக்கிறது போல, ஆட்கள் வருவார்கள் என்று ஓரமாய் காத்திருந்தோம். நமக்கு இருக்கிற பொறுப்புணர்வுகூட அவர்களுக்கு இல்லை. கூட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வராமல் அப்படி என்ன வேலை? இப்படியான சூழலில் மணி ஏழானது. கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு இருபது பேர் இருப்பார்கள் எனத் தூரத்திலிருந்து கணித் தோம்.

நம் கணிப்புப் பொய்யானது. காரணம் கூட்டத்தின் அருகில் சென்று பார்த்தால் இருபத்தி மூன்று பேர் இருந்தார்கள். இச்சூழலில் பேச்சாளர்கள் அய்ந்து பேர் மேடை ஏறினார்கள். கூட்டமும் தொடங்கியது. முதலில் ஒருவர் வந்தார். இருபது நிமிடம் வேக, வேகமாக, சத்தம், சத்தமாகப் பேசினார். பின்னர் சொன்னார், ஆகவே இந்துக்களே! இப்போது என் உரை யைத் தொடங்குகிறேன், என்றார். அப்ப, இருபது நிமிடம் பேசியது என்னண்ணே? என்று யாராவது கேட்க முடியுமா? இரண்டாவது ஒருவர் வந்தார்.

இந்த மேடையைப் பாருங்கள் என்றார். எல்லோரும் மேடையைப் பார்த்தார்கள். மேடைக்குப் பின்னால் உள்ள ப்ளெக்ஸில் அம்பேத்கர், முத்துராமலிங்கம், ஜெயலலிதா படங்கள் இருந்தன. படங்களுக்கான காரணங் களை விளக்கினார். அம்பேத்கர் அவர்களை வளர்த்தது ஒரு பிராமணப் பெண். இந்து மதத்தை வளர்த்தவர் முத்துராமலிங்கம். ஜெயலலிதா எங்கள் குலப்பெண். அவர் முதல்வர் என்பது முக்கியமல்ல. அவர் ஓர் பிராமணர். எனவே இந்தப் படங்களை வைத்திருக்கிறோம் என்றார். மேலும் அவர் பேசும்போது, இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் என, ஒரு பதினைந்துப் பேரை வாசித்தார். எல்லோரும் பார்ப்பனர்கள்.

தமிழ் ஓவியா said...

நாங்களும் தமிழர்களே எனக் கூறினாலும், அவர்களைப் பற்றியே பேசியதுதான், அவர்களாலே தவிர்க்க முடியவில்லை. மூன்றாமவர் வந்தார். அவர் ஓர் தமிழர். பிராமணர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா என்றார்? (என்ன ஒரு அய்ந்து கிலோ நல்லவர்களா? எனக் கேட்கத் தோன்றியது) இந்தத் தி.க.காரங்களுக்கு வேலையே இல்லாமப் போச்சு. எப்பப் பார்த்தாலும் நெற்றியில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்கிறார்கள். எங்கு பிறந்தால் என்ன? ஒரு மனிதரின் எல்லா உறுப்புகளும் சமமானதே. இதில் தலை என்ன? கால் என்ன? ஒரு மனிதரை வணங்கும்போது காலில்தானே விழுந்து வணங்கு கிறோம்.

கால்கள் ஒன்றும் மோசமானது இல்லை? என்று கூறிப் பார்ப்பனர்களை அசர வைத்தார். முடிவில், பிராமணக் கலாச்சாரமே இந்துக் கலாச்சாரம். அதுதான் எங்கள் கலாச்சாரம்! என்று கூறி நம்மையும் அசர வைத்தார். அடுத்து அவாளில் ஒருவர் வந்தார். கடவுளைப் பார்த்துக் கல், கல் என்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா அது கல்லென்று! இதை இவர்கள் தான் சொல்ல வேண்டுமா? என நியாயமாகத் தொடங் கினார். ஊருக்கு நான்கு பேர் இருந்தால் நீங்கள் அறிவாளிகளா? நீங்கள் நிறைய புத்தகம் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே இந்து மக்கள் கட்சியில்தான் ஜாதியே இல்லை. இராஜகோபுரம் முன்பாக பெரியார் சிலை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஒரு தீர்மானம் போட்டுள்ளோம்.

தி.க. அலுவலகங்கள் முன் ஆஞ்சநேயர் அல்லது பிள் ளையார் சிலை வைக்கப் போகிறோம். எங்கள் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனைச் செய்வ தென்று எங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குச் சமஸ்கிருதம் தெரியாவிட்டால் நாங்கள் என்ன செய்வது? இந்து மதத்தைக் கண்டுபிடித்த நாங் களும் பகுத்தறிவாளர்களே! தி.க.வுக்கு விளக்கம் சொல்வதால் எங்கள் நேரமே வீணாகிப் போகிறது. இருந்தாலும் 2013 ஆண்டில் பதில் சொல்ல ஒரு படை புறப்படுகிறது. தமிழர்களை அழிக்கவும், தமிழ்மொழி, சமஸ் கிருதம் ஆகியவற்றை ஒழிக்கவும் வெள்ளையர் களால் கண்டுபிடிக்கப்பட்டதே திராவிடர் கழகம்.

இனிமேல் எங்கள் குறைகளை ரெங்கநாதர், பெரு மாளிடம் முறையிட மாட்டோம். நேரடியாகக் கூட்டம் போட்டுப் பேசுவோம். இந்துக்களே இனி யாரும் வெளிநாட்டிற்குப் போகாதீர்கள். இங்குதான் நம் சிவபெருமான், ரங்கநாதர் இருக்கிறார்கள். வெளிநாட்டில் அவர்கள் இல்லை. நம் மதத்தைக் காப்பாற்ற நாம் இங்கேயே இருந்து போராட வேண்டும் என்று அறிவியல்பூர்வமாகப் பேசினார்(?).

இறுதியாகச் சிறப்புரையாற்ற சிறீதரன்ஜி என்பவர் வந்தார். அவர் பேசுவதற்கு முன், தொகுப் பாளர் வந்து, நம் சிறீதரன்ஜி அவர்களுக்கு, இன்று முதல் இனமானத் தளபதி என்கிற பட்டத்தை வழங்குகிறோம், என்று அறிவித்தார். (ஒரே கைத்தட்டல் என்றெல்லாம் நாம் பொய் சொல்ல முடியாது) இதோ சிறீதரன்ஜி பேசுகிறார் கேளுங்கள். தமிழக முதல்வர் தொகுதியில் தமிழில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு நன்றி கூறு கிறேன். திராவிடர் கழகக் கருஞ்சட்டைகளைவிட, தமிழ்நாட்டில் உண்மையான சுயமரியாதை வீரர் ஒருவர் மட்டுமே உண்டு. அவர்தான் பாரதியார். காந்தியைவிட உயர்ந்த மனிதர் பாரதி. காந்தியைச் சுட்டவன் கோட்சே என்று தி.க.வினர் அடிக்கடி கூறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

காந்தியைக் கொன்றதற்கான நியாயத்தைக் கோட்சே சொல்லிவிட்டான். உலகிலேயே ஒரு வாக்குமூலத்தைக் கேட்டு நீதிபதி அழுதார் என்றால் அது கோட்சேவின் வாக்குமூலம்தான். புராணக் காலத்திலிருந்து இன்றுவரை ஆயுதம் பிடித்தவர் களுக்கு வித்தைச் சொல்லிக் கொடுத்தது பிராமணர் களே. எனக்கு இந்தியாவின் சட்டம் புரியவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தை, அதுவும் பிராமணர்கள் நிறைந்த சிறீரங்கத்தில் பெரியார் சிலை வைத்து அதில் கடவுள் இல்லை என்று எழுத, எந்தச் சட்டத்தில் இடம் உள்ளது? பிராமணர்களை அனாதை என்று நினைத்து விடாதீர்கள். இந்து மதம் என்பது ஆலமரம். அதில் ஒரு கிளை பாதித்தாலும், அதன் வேராகிய நாங்கள் கேள்வி கேட்போம்.

தமிழ் குறித்து இங்கு பேசுகிறார்கள். தமிழ் மொழியின் தந்தை உ.வே.சாமிநாத அய்யர்தானே. பாரதி எவ்வளவு பாடுபட்டான். ஆனால் அவரைத் தூக்குவதற்கு ஆளில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் துரோகம் செய்துவிட்டது. அதே போல பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஸ்பெச லிஸ்ட் எங்கள் இராஜாஜி. அடுத்த பிறப்புக் குறித்துச் சிந்திக்கும் புத்திசாலிகள் பிராமணர் களே. முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் இந்து மதப் பொக்கிசங்களைக் காக்க ஜாதி அமைப்புகள் வேண்டும். கடவுளால் இங்கு என்ன பிரச்சினை? கடவுள் மட்டும் இல்லாவிட்டால் 99 விழுக்காடு மனிதர்கள் பைத்தியமாய் போயிருப் பார்கள்.

மனைவியிடம், நண்பர்களிடம் பேச முடியாத விசயங்களைக் கடவுளிடம்தானே பேச முடியும்? கடவுளுக்கு அர்ச்சனை செய்ய எல் லோருக்கும் அனுமதி கேட்கிறார்கள். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் யார் வேண்டு மானாலும் ஊசி போட முடியுமா? அதற்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும். அதேபோல அர்ச்சனை செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. காலை நான்கு மணிக்கே எழுந்து சுத்தம் பேணி, அர்ச்சனை செய்ய வேண்டும். பிராமணப் பையன்கள் மிகப் பெரிய படிப்பை முடித்து, அர்ச்சனை செய்கிறார்கள். அவர்கள் வேறு வேலைக்குப் போனால் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம். ஆனால் அதைத் துறந்து, தியாகம் செய்கிறார்கள்.

அதேபோல தமிழில் அர்ச்சனை கேட் கிறார்கள். கடவுளுக்கு இனம், மொழிப் பாகுபாடுகள் கிடையாது. நாளைக்கே அமெரிக்க அதிபர் ஒபாமா சிறீரங்கம் வந்து ரெங்கநாதரை வழிபட்டால், அவர் ஆங்கிலத்தில்தான் முறை யிடுவார். ரெங்கநாதரும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார். தீரத்தின் விளைநிலம் பார்ப்பனர்கள். எதையும் எதிர்கொள்வோம் என சிறீதரன்ஜி முடித்தார்.

இந்தக் கூட்டத்தின் தலைப்பே பிராமணர்களும் தமிழர்களே என்பதுதான். அதுகுறித்து யாரும் பேசவில்லை. ஏதேதோ பேசி, இறுதியில் ஒபாமாவை சிறீரங்கத்திற்கு அழைத்து வந்ததுதான் மிச்சம். இப்படியாகப் பிராமணர் சங்கப் பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது. எதிரில் 23 பேர் அமர்ந்திருந்தார்களே, அவர்களில் எத்தனைப் பேர் பார்ப்பனர்கள் என்கிறீர்களா? ஒருவர்கூட இல்லை. நன்றி!

தொகுப்பு: வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார்.

விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந் தது.

வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங் கினார். விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

விடுதலை போராட் டத்தில் உயிரிழப்பு என் பது எதிர்பாராத ஒன் றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர் களை மட்டும் படு கொலை செய்யாமல், பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளையும், பெண் களையும், முதியவர்களை யும், மாற்றுத்திறனாளி களையும் கொன்று குவித்துள்ளனர்.

விடு தலை உணர்வு உள்ள யாரும் மிஞ்சக்கூடாது என்பதற்காக பிஞ்சு குழந்தைகளைக்கூட கொன்று குவித்தது தான் இனப்படுகொலைக்கு சாட்சியாக மாறி உள்ளது. போர் நடக்கும் போது உலக நாடுகள் வேடிக்கை பார்த்தா லும், மனித உரிமை ஆர் வலர்களும், ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ள வர்களும் சிங்கள இன வெறியர்கள் நடத்தியது இனப்படுகொலை என் பதை உணர்ந்து வரு கிறார்கள்.

தனிஈழம் தேவை என் பதையும் உணரத் தொடங்கி உள்ளனர். அதற்கு முன்னோட்ட மாக தான் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் சிங்கள அரசுக்கு எதி ரான தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு சூழல் வளர்ந்து உள்ளது.

ஆயுதம் ஏந்தி போராடி ஈழத்தை வென் றெடுக்க முயற்சிப்பதை விட சர்வ நாடுகளின் சமுதாயத்தின் ஆதரவை திரட்டி அறவழியில் ஈழத்தை பெறவும், நீதியை பெறுவதுடன், நம் முன்னால் 3 முக்கிய கடமைகள் உள்ளன.

எஞ்சிய தமிழர்க ளுக்கு மறுவாழ்வு, இனப் படுகொலை குற்றவாளி களுக்கு தண்டனை, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற 3 சவால்களை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாமல், உலக தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

அதற்காக விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடுவ துடன், ஒருமித்த கருத்து கொண்டவர்களிடம் கைகோத்து நிற்கும். பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் ஈழ விடுதலை போராட் டத்திற்கான ஆதரவை சர்வதேச அளவில் திரட் டுவோம். சர்வதேச நாடு களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழ பிரச்சி னைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. எனவே நமக்கிடையே உள்ள முரண்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு ஜாதி, மத வேறுபாடு களை களைந்து தமிழர் களாக அணிதிரள் வோம். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுச்செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி யரசு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள் பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றம் பெண்கள்மீதான முக்கிய தீர்ப்பு


டில்லி, மே 20- பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவர், பெண்ணின் தவறான நடத்தையை ஆதாரமாக காட்டி தப்பிக்க முடியாது' என, உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என, கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில், பாலியல் வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண், தவறான நடத்தை உள்ளவர்; பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார்' என, குறிப்பிட்டு இருந்தார். இம்மனு, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எப்.எம்.அய். கலிபுல்லா ஆகியோர் அடங்கிய, அமர்வு' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பாலியல் வன்முறை என்பது, ஒரு பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றம் அல்ல; ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே எதிரான குற்றம். இந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் கடுமையாகவும், தீவிரமாகவும் கையாள வேண்டும். பாதிக்கப் பட்ட பெண், தவறான நடத்தை கொண்டவர் என்பதை ஆதாரமாக காட்டி, குற்றவாளி தப்பிக்க முடியாது. ஒரு பெண் ஏற்கெனவே தவறாக நடந்தார் என்பதால், அவரை, பாலியல் வன்முறை செய்ய உரிமை உள்ளதாக குற்ற வாளி கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த வழக்கில் குற்றவாளி, வன் முறை செய்தவர்தான்; பாதிக்கப் பட்ட பெண் அல்ல. தவறான நடத்தை உடைய பெண் என்பது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒன்று. அவர் பாலியல் வன் முறைக்கு பயன்படுத்தும் பொருள் அல்ல. பாலியல் உறவுக்கு உடன்பட மறுப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு, நீதி பதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

தமிழ் ஓவியா said...


நட்புக்கும் உண்டு அடைக்குந் தாழ்!


பொதுவாக வாழ்க்கையில் நமக் குப் பெருந் துணை -நண்பர்களும், நல்ல புத்தகங்களும்தான்!

அதிலும் குறிப்பாக முதுமையை நோக்கி நாம் பயணிக்கும்போது, நல்ல நண்பர்கள், நமக்கு மிகவும் தேவை. நல்ல புத்தகங்களும் நம்முடன் உறவாகும்!

நமது வாழ்விணையர்களை, தந்தை பெரியார் அவர்கள் உற்ற நண்பர் களாக வாழ வேண்டும் என்று மணவிழா உறுதி ஏற்பில் கூறுவதும், வாழ்த்தில் விளக்குவதும் இதன் அடிப்படையில்தான்!

நட்பு என்பது ஓர் கிடைத்தற்கரிய சொத்து. நமது வீட்டில் உள்ளவர்களை உறவுக்காரர்களாகப் பார்ப்பதைவிட நண்பர்களைப் போல் நெருங்கிப் பழகு வது இருசாரார் உள்ளத்திலும்கூட ஒரு புது உற்சாகத்தைப் புது வெள்ளம் பாய்வது போலக் கொண்டு வருமே!

ஆனால், நண்பர்களில் பல ரகம் உண்டு. அதில் தான் தெளிவுடன் இருக்க வேண்டும்.

சிலர் காரியவாதிகளாக நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து - லாபம் கருதிப் பழகுவார்கள்; உயிரையே தருகிறார் இவர் எனக்காக என்று அவ சரப்பட்டுக் கூறும் சில அவசர சாமி களுக்கு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் எச்சரிக்கையை நகைச்சுவைத் தேனில் குழைத்துக் கூட்டங்களில் தருவார் - நல்ல அனுபவப் பாடம்.

காலை 10 மணிக்குப் பார்த்து, 12 மணிக்குள் எனக்காக உசரையே தரும் அளவுக்கு என் நண்பர் வந்து விட்டானே என்று நீ சொன்னால் அவன் அடுத்த 2 மணிக்கு உன் உசரையே எடுக்கப் போகிறான் என்பதை மனிதர்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பார்!

எவ்வளவு சரியான அனுபவ அறிவுரை அது! எதிலும் எடை போடுவதிலும் நிதானம் தேவை - அதுதான் பிறகு - நமக்கு நிம்மதியைத் தரும்!

சில நண்பர்கள் வெகு சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து காரிய சாதிப்பாளராக இருப்பார்கள்.

முதல் முறை பார்க்கும் போது பரிந் துரை உதவிகளைக் கேட்க மாட்டார்கள்.

முதலில் பழம், வரிசைகள் இத்தியாதி.

கொடுத்து விட்டு நலம் விசாரித்து மட்டும் விடை பெறுவார்கள். என்னங்க எதற்கு வந்தீங்க. என்ன சேதி சொல் லுங்க என்றால் அதெல்லாம் ஒண்ணு மில்லீங்க, உங்க நலம் விசாரிச்சிட்டுப் போகத்தான் வந்தேன் என்று சொல்லிப் போய் விடுவார்கள்! பிறகு ஒரு இடை வெளி விட்டு, மீண்டும் வந்து பரிந்துரை வேண்டுவர்!

ஆம், மனோதத்துவம் புரிந்த நண் பர்கள்!

எதையோ எதிர்பார்த்து வெகு காலம் பழகியிருந்து, பலன் முழுமையும் சுவைத்து விட்டு, கடைசியில் மேலும் விரும்பியதைப் பெற்றுத் தரவில்லை நாம் என்றவுடன் அவர்கள்,

தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளவர்களாகி விடுவார்கள்!

அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகள் போன்ற நண்பர்களைத்தான் அனை வரும் அறிவார்களே - அதுபற்றி விளக்கம் தேவையில்லை!

நண்பர்களைவிட நாம் அடையாளம் காணும்போது, அதற்கு சரியான அளவுகோல் - உரைகல் என்ன தெரி யுமா?

ஒன்று அவருக்கு நம்மால் கிடைத்த போது அவர் காட்டும் நன்றியோ, விசுவாசமோ அல்ல.

நாம் முயன்றும் அது அவருக்குக் கிடைக்காத நிலையிலும், தொடர்ந்து நம்மிடம் நன்றி விசுவாசம் காட்டு கிறார்களே, அவர்கள்தான் கிடைத்தற் கரிய கிழக்குத் திசைகள்! (சூரிய வெளிச்சம்) - இவர்களை கிழப்பருவத் திலும்கூட நம்பலாம் - மனந்திறக்க லாம்.

பாரத்தை இறக்கி வைக்கலாம்.
---------------veramani

தமிழ் ஓவியா said...


அறிவைப் பயன்படுத்தாமல்...


கடவுளையும், மதத்தையும், சாத்திரங் களையும் சம்பந்தப்படுத்திச் செய் யப்பட்ட காரியங்களாலேயே மனிதர்கள் முட்டாள் களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், மடையர்களாகவும் ஆகி விட்டனர். இப்படிப் பட்ட காரியங்களுக்கு அறிவைப் பயன்படுத் தாமல், கடவுளையும், மதத்தையும் ஒத்துக் கொண்டால், அது நாம் முட்டாளாகவும், மடையர்கள் ஆகவும்தானே பயன்படுகின்றது.
(விடுதலை, 13.2.1961)

தமிழ் ஓவியா said...


குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?


ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார்.

பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு.

அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர்.

பலர் அரசுப் பணிகளில் அமர்ந்து அணி செய்கின்றனர்; இயக்க நோக்கிற்காக மட்டுமல்ல; இந்தப் பட்டறை வாழ்வில் புதிய திருப்பத்துக்கான ஒளிமிக்க பாதையைத் தரக்கூடியது.

மாணவர்களும், இருபால் இளைஞர்களும் கலந்துகொள்ளலாம் - நல்ல பலன்களைத் தரும்.

கழகப் பொறுப்பாளர்களே, கழகத்தின் இந்த மிக முக்கியப் பணியில் ஆர்வம் காட்டுவீர்! மாணவர்களை, இளைஞர்களை அனுப்பி வைப்பீர்!

சென்னை மண்டலத் தலைவரும், செயலாளரும், மாவட்டக் கழகத் தலைவர், செயலாளர்களும், இளைஞரணி, மாணவரணி, மகளிரணியினர் கலந்துகொண்ட கூட்டத்தில் 20 தோழர்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக, தென் மாவட்டங்களிலிருந்து இருபால் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.

மே 29, 30, 31 ஜூன் 1 ஆகிய நாள்களில் குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் திருமண மண்டபத்தில் நடைபெறும். வாரீர்! வாரீர்!!

- தலைமை நிலையம்

குறிப்பு: கழகப் பொறுப்பாளர்களின் பரிந்துரைக் கடிதம் அவசியம்

தமிழ் ஓவியா said...


கோவில் தோன்றியது இப்படித்தான்!

மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.

- தினமலர் செய்தி

ஊர் ஊருக்குக் கோயில்கள் எப்படி உருவாயின என்பது இப்போதாவது புரிகிறதா? இன்று விபத்தில் மடிந்த அந்தக் குழந்தையைத் தான், இன்னும் கொஞ்ச நாட்களில் சர்வசக்தி வாய்ந்த விபத்தம்மன் என்று கொண்டாடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அங்கு ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளையம்பட்டியைச் சேர்ந்தவர் தையற் கலைஞர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு காவியா, தனுஜா என்ற, இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த, 2007 ஆம் ஆண்டு டிசம்பர், 23 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பழனிச்சாமி தன் மனைவி மற்றும் இரு குழந் தைகளையும் இருசக்கர வாகனத்தில் மணப்பாறை யில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பன்னாங்கொம்பு அருகே சென்ற போது, பால்வேன் இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், படுகாயமடைந்த தனுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தனுஜாவின் இறுதி நிகழ்வு முடிந்து, ஒன்பதாம் நாள் சிறீரங்கம் அம்மா மண்டபத்தில், சிறுமிக்கு ஈமக்கிரியைகளை செய்து கொண்டி ருந்தனர்.

அப்போது, வேதமந்திரங்கள் கூறிக்கொண்டி ருந்தவர், தனக்கு ஈமகாரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், மூன்றாண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் என்று தனுஜா போல பேசி, அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதேபோல், மூன்றாண்டுக்குப்பின் பழனிச்சாமி யின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி, தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பின், தனுஜாவின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே, தனுஜா வுக்கு, ஒரு அடி உயர சிலை எழுப்பி கோவில் கட்டியுள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி நடந்து வருகிறது. இந்தாண்டும் பால்குட விழா, மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு வந்து, கோவில் முன் இருந்த பூக்குழியில் இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலபிஷேகம் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி, ஊர் நாட்டாண்மைகள் பின்னத்தூர் ரெங்கநாதசுவாமி, அழககவுண்டர் மற்றும் வெள்ளையம்பட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா


ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:

சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ கம் பெரும் வளர்ச்சி அடையும். இலங்கை யைச் சுற்றி செல்லும் கப்பல்கள் சேது சமுத் திரக் கால்வாய் வழி யாகச் செல்லும்போது 424 கடல் மைல்கள் தூரம் குறையும் என்ப தால் ஆண்டுக்கு ரூ.130 கோடி செலவு மிச்ச மாகும்.

நீர்வளம் பெருகி, சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். அண்டை நாடுகளின் கப்பல்கள் எளிதில் தென் தமிழகத் தின் துறை முகங்களுக்கு வந்து செல்வதன்மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். இத்திட்டத்தை நிறை வேற்றக் கோரி தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத் தப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து 9 முறை ஆய்வு நடத்தப்பட்டு முடிவில் 1955 ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பயனுள்ள திட் டம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

1957 இல் குளித் தலை எம்.எல்.ஏ.,வாக இருந்த தலைவர் கலை ஞர் சேது சமுத்திரத் திட்டம் குறித்து முதன் முதலாக சட்டமன்றத் தில் பேசினார். 1960 இல் தி.மு.க. உருவான போதும் இத்திட்டத்தை அண்ணா வலியுறுத்தி னார். அதன் பிறகு ஒவ் வொரு முறை தி.மு.க. மாநாடு நடந்தபோதும் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வைகோ, கம்யூ னிஸ்ட தலைவர்கள் வர தராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டவர்களால் கூட சேது சமுத்திரத் திட்டம் வரவேற்கப்பட் டது. 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

தேர்தல் நேரத் தில் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கும் ஜெய லலிதா, எம்.ஜி.ஆரால் வரவேற்கப்பட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திரத் திட்டத் திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பது மதவாதிகளுக்கு துணை போகும் செயல் இல் லையா?

இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.850 கோடி வரை செலவு செய்யப் பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் கருத்துக்கு முரண்படும் வகையில் இத்திட்டத்தை ஜெய லலிதா முடக்க நினைப் பது சரியா? கடந்த 22.8.1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்போ தைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற் றக் கோரி கடிதம் எழு தியது நினைவில்லையா? 2001, 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வோம் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இக் கருத்திலிருந்து முரண் பட காரணம் இத்திட் டத்தால் கலைஞருக்குப் பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் திட் டத்திற்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட நினைக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக் கக்கோரி உச்சநீதிமன்றத் தில் தொடர்ந்துள்ள வழக்கை ஜெயலலிதா திரும்பப் பெறவேண் டும்.

- இவ்வாறு முன் னாள் அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!


சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை

திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!

மே 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்!

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மட்டுமல்ல - பொதுவாகக் கிரிக்கெட்(டு) விளையாட்டில் தொடர்ந்து சூதாட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனை ஒழிக்கும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்

சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!!

1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்!

அதாவது 16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஜாம் ஜாம் என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை - புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பது தானே பொருள்?

அய்.பி.எல். மட்டுமல்ல

தமிழ் ஓவியா said...

அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச் சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?

முன்னாள் மத்திய அமைச்சருக்கும் தொடர்பாம்!

இதில் இன்னொரு மாபெரும் வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு - தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (அவர்கள் இவர் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; மேலும் முக்கிய புள்ளிகள் மூவர் இவருக்குப் பக்கத்துணையாக இருந்துள்ளனராம்!)

சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!

கிரிக்கெட் சூதாட்டம் விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்து விட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த்; இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!

இதற்கிடையில் - நெருக்கடி அவப் பெயரிலிருந்து மீளுவதற்குக் கிரிக்கெட் சங்கத்துக்காரர்கள் சில தந்திர உபாயங்களை - நடவடிக்கைகளை எடுத்துத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர் போலும்!

திசை திருப்பலா?

அதோடு மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா?

ஒவ்வொரு அய்.பி.எல். அணி விளையாட்டுக்காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;

அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி போதை முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.

ஏலம் போகும் விளையாட்டுக்காரர்கள்!

முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு - மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.

வழக்கில் ஓட்டை கூடாது!

இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் காட்டி தப்பிக்க இயலாதபடி சரியான குற்றப் பத்திரிக்கை விலை போகாத வழக்குத் தேவை!

ஓர்ந்து கண்ணோடாத நீதிபரிபாலனம் மூலம் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுத்து, விளையாட்டின் உயர்ந்த உன்னதத் தத்துவங்களை நிலை நிறுத்துவது அவசர அவசியமாகும்.

இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தவிருக்கிறது. (திருச்சி மற்றும் ஈரோட்டில் மட்டும் 25ஆம் தேதி)
அதற்கு ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஈடுபட முன் வர வேண்டும்.

கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை நமது போராட்டம்

நமது கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது;

அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் - அறப் போர் - தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!!



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21.5.2013

தமிழ் ஓவியா said...


கழக முயற்சிக்குக் கைமேல் பலன் வட்டாட்சியர் அலுவலகப் பிள்ளையார் அகற்றப்பட்டார்



கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு சிலர் திடீரென பீடம் அமைத்து ஒரு விநாயகன் சிலையை வைத்து விட்டனர். அரசு விதி முறையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.க. மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் த. சுரேஷ் ஆகியோர் 10.05.2013 அன்று மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடமும் அந்த மனுவின் நகலை கொடுத்தனர்.

மேலும் விடுதலை ஏட்டில் (14.5.2013 விடுதலை) வேலியே பயிரை மேய்கிறது என்ற தலைப்பில் செய்தியும் வெளியாகியது. உடனடியாக திராவிடர் கழக தோழர்களின் வலியுறுத்தலின் பெயரில் வருவாய்துறை அதிகாரிகள் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த விநாயகன் சிலையை பீடத்துடன் அகற்றினர்.
மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து 9 நாட்களுக்குள் விநாயகன் சிலை பீடத்துடன் அகற்றப்பட்டது. இது விடுதலை ஏட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் முயற்சிக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

தமிழ் ஓவியா said...

தெரியுமா சேதி?

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசன் தான் சென்னை சூப்பர் கிங்கின் (அய்.பி.எல்.) முத லாளியாவார். கவர்னரே கலெக்டராகவும் இருக்கிறார் எப்படி?

####

ஒவ்வொரு முறையும் நடக்கும் அய்.பி.எல். கிரிக் கெட்டில் மட்டும் சூதாட்டத்தில் புரளும் தொகை ரூ. மூன்று லட்சம் கோடியாம்!

தமிழ் ஓவியா said...

உருண்ட பக்த கே()டிகள்!


கரூர் மாவட்டம், தெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் 99ஆவது ஆண்டு ஆராதனையில் எச்சில் இலைகள்மீது பக்தர்கள் உருண்டனர். குறிப்பு: மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும் கலந்து கொண்டார். அவர் எச்சில் இலை மேல் உருண்டாரா என்பது பற்றி தகவல் இல்லை.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்



தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


இலங்கை மீது நடுநிலையான பன்னாட்டு விசாரணை தேவை


கருத்து மாறுபடுவோர் மீது இலங்கை அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை

அம்பலமாக்கும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை

இலங்கை அரசு, தன்னை விமர்சிப் பவர்கள் மீது அச்சுறுத்தல், தொல்லைப் படுத்துதல், சிறைவாசம் முதலிய கொடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அண்மையில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மாற்றுக்கருத்துக் கொண்டவர் மீது தாக்குதல் என்று அந்த ஆணவம், அதிபர் ராஜபக்சேயினால் நடத்தப்படும். இலங்கை ஆட்சி எப்படி விமர்சனங்களை, ராஜத்துரோகம் என்ற அதன் அசுரப் பிடியில் வேகப்படுத்தி வருகிறது, என்பது பற்றி விளக்குகிறது.

பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் குறிவைக் கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் அடிக்கடி பாதுகாப்புத் துறை யினராலும், அவர்களுடைய பதிலி களாலும் தாக்கப்படுகின்றனர். ஆம் னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பைச் சேர்ந்த ஆசிய பசிபிக் பகுதியின் துணை ஆணையர் பாலி டிரஸ்காட் என்பவர் இலங்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொடுமையான அடக்குமுறைக்கு ஆட்படுத்துவதிலும், அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதிலும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது என்று கூறி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங் களுக்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. இலங்கையில் உண்மை யிலேயே அச்சமான சூழ்நிலை பரவி வரு கிறது. அரசுக்கு எதிராக துணிச்சலாக பேசக்கூடியவர்கள் மோசமான வேத னைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

மே 29இல் விடுதலைப் புலிகளுட னான ஆயுதப் போர் முடிவுக்கு வந்த வுடனேயே அரசாங்கம் தனது சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டது.

2010 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் பட்ட 18ஆவது அரசியல் திருத்தம், அரசினால் கொண்டு வரப்பட்டவுடனேயே அரசு நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாக அதிபரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது; கொடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளுக்கு அளவில்லாத அதிகாரங்களை குவித்தது. அதே நேரத்தில், அரசுத்தரப்பு, விமர்ச கர்களுக்கு எதிரான தனது பேச்சுக்களை அதிக எதிர்ப்புணர்ச்சியுடன் வெளிப் படுத்திற்று. துரோகிகள் போன்ற வார்த்தைகள் அரசு நடத்தும் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி, மாற்றமில்லாமல் வெளிவந்தன.

தமிழ் ஓவியா said...

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், வசைமாரிகளுக்கும் வன் கொடுமை களுக்கும் ஆளானார்கள். சிலர் தாக்கப் பட்டும், சிலர் கொல்லப்பட்டும் போயினர். 2009-க்கு முன்னும் பின்னும், டஜன் கணக்கான அம்மாதிரியான விவரங்களை அந்த அறிக்கை விளக்குகிறது.

நீதித்துறை அடக்குமுறையின் முக்கிய குறியாயிற்று. அரசு தனது சுதந்திரத்தைச் சிறுமைப்படுத்திக் கொள்ளும் விதத்தில் மனித உரிமை மீறல்களுக்காளானவர் களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

ஜனவரி 2013இல் தலைமை நீதிபதி ஷீராணி பண்டார நாயகேயின் தவறான நடத்தை காரணமாக பதவி நீக்கம் செய் யப்பட்டபோது, எதிர்ப்புணர்ச்சி உச்சத்திற் குப் போயிற்று. இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஷீராணி பண்டார நாயகேயின் பதவி பறிப்பு முறையற்றது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறியிருக்கிறது.

ஊடகங்களின் பெரும்பான்மை உறுதி யாக அரசு வசப்பட்டிருந்தாலும் சற்று சுதந்திரமாக உள்ள போரின் போது அரசின் செயல் முறைகள் பற்றியும், அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விமர்சனம் செய்தும் வரும் மற்ற ஊடகங்கள் மீது அரசாங்கம் குறிவைத்துள்ளது.

ஊடக வியலாளர்கள் அரசாங்கத்தின் போக்கு பற்றி விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். அவமானப் படுத்தப்படுகிறார் கள், தாக்கவும்படுகிறார்கள். 2006ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 15 இதழாளர் களாவது கொல்லப்பட்டிருக்கிறார்கள், மற்ற பலர் நாட்டை விட்டு ஓடும்படி துரத்தப் பட்டுள்ளனர்.

அண்மையில் நிகழ்ந்த, உதாரணமாக சண்டே லீடர் என்ற பத்திரிகையைச் சார்ந்த பஃராஸ் செனகத்தலி என்ற இதழாளர், சில மனிதர்களால் பிப்ரவரி 2013இல் துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கடுமையான காயம் எற்படுத்தப் பட்டுள்ளார்.

2009இல் கைது செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே போன்ற பழைய உயர் மட்டக் கொலைகள் கூட இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.

அரசாங்கத்தைப் பற்றி விமரிசித்துக் கட்டுரைகள் வெளியிடும் இணையங்கள் (website) அடிக்கடி சைபர் அட்டாக் முறைக்கு ஆளாக்கப்படுகின்றன; அவர் களது அலுவலகங்கள் காவல் துறையின ரால் சோதனைகளுக்கு ஆளாக்கப்படு கின்றன; சில நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. அரசாங்கம் கூட சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. அதன் படி அளவுக்கதிகமான பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் இவை விமர்சிக்கும் ஆன்லைன் வெளியீடுகளை மூடப்படுவதற்கான முயற்சிகளாகும்.

தமிழ் ஓவியா said...


டிரஸ்காட், அரசாங்கத்தின் பத்திரிகை களை கட்டுப்படுத்துவது அல்லது சுதந்திர மானவற்றை ஒழிப்பது ஆகிய தொடர்ந்த முயற்சிகள், பத்திரிகை சுதந்திரத்தின் முகத்தில் விழும் பூச்சிகளாகும்; மேலும் உள் நாட்டினராலும் பன்னாட்டினராலும் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்தினை கூட சிதைப்பதாகும் என்று கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தினராலும், விடுதலைப் புலிகளாலும், போரின் இறுதிநிலைகளில் பல்லாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்ட விவரங்களை வெளியிடும் ஊடகங்கள் மீது குறிப்பாக அவற்றை ஒழித்து விடும் பணியில் அரசு இருக்கிறது. முக்கியமான பன்னாட்டு நிகழ்வுகளின் போது விமர்சகர் மீதான அழுத்தங்கள் அதிகப்படுத்தப் படுகின்றன.

உதாரணமாக அண்மையில் நிகழ்ந்த அய்.நா. மனித உரிமை மீறல்கள் பற்றிய குழுவின் 2012, 2013இல் நிகழ்ந்த கூட்டங்களைச் சொல் லலாம்; மனித உரிமைக்கவுன்சில், இலங் கையின் ஆயுதம் கொண்டு நடத்தப்பட்ட போரில், பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டதை ஆராயும் வகையில் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி வெளியிடுவதைத் தடுக்கும் பல தடை தந்திரங்கள் கையாளப்பட்டன.

அய்.நா. கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்களும், அந்நிகழ்ச்சிகளை செய்திப்படுத்த விரும்பிய இலங்கைப் பத்திரிகையாளர்களும், திரும்பத் திரும்ப இலங்கை அரசினரால் ஊடகங்கள் தாக்கப்பட்டன. சில நிகழ்வுகளால் உடல் வன்மை கூட்டியும் தாக்கப்பட்டனர்.

இலங்கை அரசால் குறிவைக்கப் பட்டுள்ள மற்ற பலருள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் அதுவும் குறிப்பாக தமிழர் மிகுந்த பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் முதலியோர்.

2013 நவம்பர் மாதத்தில் அடுத்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு (CGIGM) கொழும்புவில் நடக்க இருக் கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அதன் தலைவராக இலங்கை பங்கு பெறும்.

டிரஸ்காட், இலங்கையில் அச்சுறுத் தும் முறையில் வளர்ந்துவரும் மனித உரிமை மீறலை சரி செய்யச் சொல்லி, இலங்கை அரசிற்கு, நவம்பர் மாதத்திற்கு முன்பு காமன் வெல்த் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி யுள்ளார்.

மனித உரிமைகள் பற்றிய விதி மீறல்கள் படிப்படியாக இலங்கை அரசு நிறுத்தி விட்டது என்பதை தனது செயல் பாடுகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். தனி மனிதர்களின் மீதான தாக்குதல்கள் உடனடியாக வேறு பாடுகள் இல்லாமல் தகுதியான முறையில் ஆரா யப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவையெல்லாம் இலங்கை அரசால் நிருபிக்கப்படும் வரையில் இலங்கையின் கொழும்பு நகரில், காமன்வெல்த் நாட்டுத்தலைவர்களின் மாநாடு நடத்தப்பட அனுமதிக்கக் கூடாது.

இவை தவிர மேலும் நடந்து வரும் விதி மீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது; அவை களை நிறுத்துவதற்கான வாக்குறுதி களை அடிக்கடி அளிக்கிறது; ஒரு பயனுள்ள ஆய்வின் மூலம் பன்னாட்டுச் சட்டப்படியான குற்றங்கள், ராணுவத்தின ராலும், விடுதலைப்புலிகளாலும் ஆயுதப் போரின்போது நடத்தப்பட்டவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏராளமான வெளிப்படையான நிகழ்வு கள் மூலம் இலங்கை அரசு ஒரு நம்பிக் கையான ஆய்வை, பன்னாட்டுச் சட்டப் படியான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உட்பட விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு விரும்பவில்லை. போரின் போது நடந்த குற்றங்கள், குற்ற நிகழ் வுகள் பற்றிய சுதந்திரமான, நடு நிலைமையான, பன்னாட்டுச் சமூகத் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டியது என்பது தான் இன்றைய அவ சியம் என்று டிரஸ்காட் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


பெட்டிக்கடைகளும் - நடைபாதை கோவில்களும்!


சென்னையில் சாலையோரங்களிலும், நடை பாதைகளிலும் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சென்னையில் பெட்டிக்கடைகளால் போக்கு வரத்து இடையூறு என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், அத்தகைய பெட்டிக்கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் திங்களில் ஆணையிட்ட தன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பெட்டிக்கடைகளை அகற்றும் பணியில் இறங்க உள்ளதாம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62, அண்ணாநகர் மண்டலத்தில் 36, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 8, திரு.வி.க. நகரில் 22, தண்டையார்ப்பேட்டையில் 18, ஆலந்தூரில் 6 கடைகளும் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.

உண்மையைச் சொல்லப்போனால், சென் னையில் பெட்டிக்கடைகளைவிட, போக்குவரத் துக்குப் பெரும் இடையூறாக இருப்பது நடைபாதைக் கோவில்கள்தான்.

போக்குவரத்தைக் காரணம் காட்டி இடிக்கப் படவேண்டுமானால், முதலில் அகற்றப்படவேண் டியது நடைபாதைக் கோவில்களும், அனுமதி யின்றிக் கட்டப்பட்டுள்ள கோவில்களும்தான்.

உயர்நீதிமன்றத்தின் ஆணையின் காரண மாகத்தான் பெட்டிக் கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டது என்று சமாதானம் சொல்லப்படுமானால், உயர்நீதிமன்றத்தைவிட பெரும் அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம்தானே!

அந்த உச்சநீதிமன்றம் 2010 செப்டம்பரில் பிறப்பித்த ஆணையின்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டு இருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலா ளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் கூறவேண்டும் என்று 2010 செப்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணை பிறப்பித்ததே!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனுமதி யற்ற வழிபாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். 77,450 கோவில்கள் தமிழ்நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்களாகும்.

இன்னும் சொல்லப்போனால், 2009 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் இந்த ஆணை யைப் பிறப்பித்தது. கடைசியாகப் பிறப்பித்த ஆணைதான் 2010 செப்டம்பர் 14 அன்று பிறப்பிக்கப்பட்டதாகும்.

இதன்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்திட முனைந்துள்ள தமிழ்நாடு அரசு - உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கிடப்பில் போட்டுள்ளதே - இது சரியானதுதானா?

உயர்நீதிமன்றத்தைவிட உச்சநீதிமன்றம் அதிகாரம் அற்றது என்று ஒருக்கால் தமிழ்நாடு அரசு கருதுகிறதோ!

சிறுசிறு பெட்டிக் கடைகளை வைத்து அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாடு கிறார்கள். அவர்கள்மீது காட்டும் வேகத்தை - நடைபாதையில் அத்து மீறிக் கோவில்களை எழுப்பி, உண்டியல் மூலம் வசூல் வேட்டை நடத்தி, ஒவ்வொரு நாள் இரவிலும் உண்டியலை உடைத்து, அந்தப் பணத்தின்மூலம் போதை ஸ்நானம் - தீர்த்தம் - செய்யும் பேர்வழிகளிடம் காட்ட வேண்டியதுதானே!

கல்லு சாமிகளிடம் காட்டும் கருணை, மனிதர்களிடத்தில் காட்டப்படுவதில்லையே, ஏன்?

முதலில் இந்த நடைபாதைக் கோவில்களில் கை வைக்கட்டும் - அடுத்ததை அடுத்துப் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...

24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் முக்கியம் பெறுகிறது!

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பி.சி.சி.அய்.) தலைவர் சீனிவாசன் - அய்.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது. தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாது - என்று அடித்துக் கூறியுள்ளார்.

வீரர்களை காவல்துறை போல், எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சூதாட்டம் குறித்த தகவல்கள் வருகின்றன. இதனைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லாமையால் காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் கலந்து பேசி சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம், இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொள்ளைப் போதை - இவை குறித்து திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 16.5.2013).

அய்.பி.எல். கிரிக்கெட் என்பது பெரும் முதலாளிகளின் கருப்புச் சந்தைக் களமாக உள்ளது. வீரர்களை ஏலம் எடுப்பது என்பது கேவலமானது. பல நூறு கோடி ரூபாய் போட்டு இந்தக் களத்தில் இறங்கி உள்ளவர்கள், தாங்கள் வெற்றி பெற குறுக்கு வழியைத் தானே தேர்வு செய்வார்கள். தரகர்களையும் ஏற்பாடு செய்வார்கள்?

ஒரு விளையாட்டில் இவ்வளவுப் பெருந்தொகை நுழைவதுதான் குற்றங்களுக்கெல்லாம் முதற்படி.

கிரிக்கெட் என்றால் பணம் காய்ச்சி மரமாக அல்லவா இருக்கிறது? கிரிக்கெட் விளையாட்டுக் காரர்களுக்கு ஆண்டு சம்பளம் ஒரு புறம் - ஒவ்வொரு நாளும் விளையாடுவதற்குச் சம்பளம் - நான்கு ஓட்டம் எடுத்தால் அதற்கொரு வெகுமதி, ஆறு ஓட்டம் எடுத்தால் அதற்கென்று தனித் தொகை இவையன்றி அரசாங்கத்தின் சலுகைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் - ஒரே ஒரு முறை கூட அவைக்கு அவர் சென்றதாகத் தெரியவில்லை.

இந்த வசீகரம்தான் அந்த விளையாட்டின்மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்படுவதற்கே காரணமாகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல விளையாட்டு என்றால் அதில் திறமை - அர்ப்பணிப்பு இவையல்லவா குடிகொண்டு இருக்க வேண்டும்? அதனை விலை பேசுகிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!

ஒவ்வொரு முறை பந்தை வீசும் பொழுது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதென்ன - கழுத்தில் மாட்டியுள்ள தாயத்தை கண்ணில் ஒற்றிக் கொள்வதென்ன? என்ன....

சாயிபாபா இருந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு வருவ துண்டு. அவர் கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு விளையாடுவதுண்டு. ஆனாலும் சாதனைக்கு அவை துணை நிற்கவில்லை என்பது தெரிந்த சேதியே!

கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பணம் மட்டுமல்ல - பெண்கள் வரை அனுப்பி வைக்கப்படு கின்றனர் என்றால் நாடே தலைகுனிய வேண்டாமா?

இதில் எந்தவித அரசியல் செல்வாக்குக்கும் கட்டுப்படாமல் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்காரர் களையும், சூதாட்டத் தரகர்களையும், அவர்களை இயக்கும் பணத் திமிங்கலங்களையும் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்து, சட்டத்தின் கடமையைத் தங்குத் தடையின்றி செயல்படுத்திட வேண்டும்.

பி.சி.சி.அய். தலைவர் சீனிவாசன் அளித்துள்ள பதில் பொறுப்பற்றதாக உள்ளது. இந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் எந்த அளவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்; வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து திரளாகப் பங்கேற்கவும் அனைவரையும் அழைக் கிறோம்.

-------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

தமிழ் ஓவியா said...


நம் பழைய சூதாட்டத்தைப் பரப்பும் சிகாமணிகளுக்கு பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தரலாமே!




- ஊசி மிளகாய்

நெறிகெட்ட கிரிக்கெட் சூதாட்டம்!

சூதாட்டத்தின்மூலம் கிரிக்கெட்டின் மீது - அய்.பி.எல். என்ற ஒரு வாய்ப்பின் மூலம் - திடீர்க் குபேரர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!

கிரிக்கெட் தரகர் ஒருவர் தினமும் ரூபாய் ஒரு கோடி வீதம் சம்பாதித் துள்ளார். எந்தாடா ஆச்சர்யம்!

இது எவ்வளவு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி - அதுமட்டுமா?

ஏற்கெனவே ஆட்டம் ஆடியவர் களுடன் செய்த ஏற்பாட்டின்படி, பந்தயம் கட்டிய (சூதாட்ட பேரத்தில்) வெறும் ஏழு நிமிடங்களில் இரண்டரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி இன்று வெளியாகியது! எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் இது!

மது, மாது என்பதைவிட இந்தக் கிரிக்கெட் சூது எப்படிப்பட்ட லாபகர மான தொழிலாக பலருடைய ஆதரவின் பேரில் செழித்தோங்கி நடைபெறுகிறது பார்த்தீர்களா? இதைத் தடை செய்ய இதற்குமேலும் காரணங்கள் தேவையா?

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியாரின் பொருள்களை இங்கிலாந்து நாட்டில் ஏலம் விட்டுள்ளனர்.

காந்தி சீடர்களான ஆட்சியாளர் அதை ஏலம் எடுத்து, காந்தி மியூசியத்தில் வைக்கவேண்டும் அல்லது காந்தி சமாதிக்கு அருகில் அவர் பயன்படுத்திய பொருள் கொண்ட ஒரு காட்சியகத்தை அமைக்கவேண்டுமென்ற எண்ணம்கூட இல்லை. எவர் எவரோ ஏலம் எடுத்துள் ளனர்!

இன்று காந்தி என்றாலே எந்த காந்தி என்று கேட்கும் நிலையில், இதற்காக முக்கியத்துவம் வரும்? அது கிடக்கட்டும்!

காந்தி பயன்படுத்திய சில பொருள் களின் மதிப்பு ஏலத்தில் விடப்பட்டு எடுக் கப்பட்டதின்மீது வந்த தொகை 2 கோடியே 30 லட்சம் ரூபாய்தான்.

ஆனால், 7 நிமிட கிரிக்கெட் சூதாட் டத்தின்மீது சம்பாதிக்கப்பட்ட பணம் ரூபாய் இரண்டரை கோடி (2 கோடியே 50 லட்சம்) ஆகும்!

இரண்டு தராசு தட்டுகளில், காந்தி தட்டு வெயிட் இல்லாதது; மேலே நிற்கும்!

கிரிக்கெட் என்ற விளையாட்டு, வெளிநாட்டு விதேசி, (அது சுதேசி விளையாட்டு அல்லவே) என்றாலும், நம் நாட்டில் ஆண்டியை அரசனுக்குமேல் ஆக்கும் நவீன அலாவுதீனின் அற்புத விளக்காக அல்லவா கிடைத்துள்ளது!

ஊழலை ஒழிப்பது, கறுப்புப் பணத்தைத் தடுப்பது என்பதன்கீழ் வராது என்பது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கணக்கோ!

அதுமட்டுமா? கொலைகளுக்கும்கூட இந்த அய்.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் காரணமாக அமைந்துள்ளது என்பது மகாராஷ்டிரத்தில் எம்.பி.ஏ., படித்தவன் 30 லட்சம் ரூபாயை இழந்ததைச் சரி கட்ட, ஆள் கடத்தி கொலை செய்த கதை போலவே ஆந்திராவிலிருந்து மற்றொரு வேதனையான செய்தி!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி, பல் வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என பெற்றோர் கவலை ஒருபுறம், கணவரும், குழந்தை களும் அய்.பி.எல். போட்டிகளை பார்க்க முடியவில்லை என்று சண்டை ஆரம்பித்து, ரிமோட்டை வைத்து ஆரம்பித்து - இதனால் அடிவாங்கிய மனைவி, (சீரியல் பார்க்க அவர் விரும்பினார்;

அய்.பி.எல். பார்க்க கணவர் விரும்பினார்) இதனால் மனமுடைந்த மனைவி, மண் ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்துச் சாகும் நிலையில் உள்ளாராம்! என்னே கொடுமை! பரிதாபம்! (நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இது நடந்தது).
இவ்வளவு ஒழுக்கக்கேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மக்களாட்சியின் கடமை அல்லவா?

சூதாட்டத்தில் பங்கு வாங்கி மகிழ்வதா ஆட்சியின் கடமை என்று மக்கள் கேட்கமாட்டார்களா?

இது ஞானபூமியாம்! நம்ம பாரத கலாச்சாரமே சூதாட்டம்தானே!

மஹாபாரதத்தில், தருமன் உள்பட பஞ்சபாண்டவர்கள் தம் பொது மனைவியை (துரோபதையை) பந்தயமாக வைத்து ஆடித் தோற்றதும்,
அதற்குமுன் வேத காலங்களி லும்கூட ஆரியர் சூதாட்டத்தில் ஈடு பட்டு, ஓய்வு அதிகம் (வேறு விளை யாட்டுத் தெரியாத காலமோ!) என்ப தால் ஆடினார்கள் என்பது உண்மை.

பழைய நம் பாரத கலாச்சாரத்தை நம் கிரிக்கெட் என்ற நவீன விளையாட்டின்மூலம் பரப்புவதற்காக சூதாட்ட வீரர்களுக்கும் பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தந்து கவுரவிக்கலாமே! 22-5-2013

தமிழ் ஓவியா said...


இலங்கையில் மனித உரிமைக்கு இடமில்லை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குழு குற்றச்சாற்று



கொழும்பு, மே 22- இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந் நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந் திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்து கொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங் களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை அரசாங்கம் எடுக்க வில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. யுத்த காலத்திலேயே பல கஷ்டங் களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழிதேடுவார்கள்.

ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ், தொடர்புடைய விடயங்கள், மனித உரிமை தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்ற வர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப் படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல்போனவர்களின் கதி பற்றிய தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப் படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள், ஆனால் ராஜபக்சே அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவ கார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என அய்.நா. தலைமைச் செயலாளருக்கு ராஜபக்சே வழங்கியிருந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் நியமித்த படிப் பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பொறுப்புகூறல் தொடர்பில் செய்த பரிந்துரை களும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.

பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக் கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண் மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழி தேடுவார்கள் என பிராட் ஆடம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்



பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)