Search This Blog

3.5.13

வம்பனுக்கும் - கம்பனுக்கும் சம்பாஷணை - பெரியார் எழுதிய உரையாடல்

 சம்பாஷணை வம்பனுக்கும் - கம்பனுக்கும்

வம்பன்:- என்ன அய்யா கம்பரே! அனாவசியமாக வெள்ளைக் காரர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டு வெளியில்போங்கள் என்று சொல்லுகின்றீரே! இது நியாயமா?

கம்பன்:- சொன்னால் என்ன அய்யா முழுகிப்போய்விட்டது. அவர் களுக்கு இங்கு என்ன வேலை? அவர்கள் என்ன நம்ம மதமா? ஜாதியா? ஜனமா? போ என்றால் போகவேண்டியதுதானே?

வம்பன்:- அப்படிச் சொல்லிவிடலாமா திடீரென்று. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே; இந்த நாட்டுக்கு அவர்கள் வந்து சுமார் 400, 500 வருஷத்துக்கு மேலாகின்றது. அதுமாத்திரமல்ல இந்த நாட்டு அரசாட்சி பெற்று சுமார் 200 வருஷமாகின்றது. அப்படியிருக்க நீ போ வெளியில் என்று சொல்லுவது நியாயமா?

கம்பன்:- 400, 500 வருஷமாய் விட்டதால் ஒருவனுக்குப் பாத்தியம் வந்துவிடுமா? 200 வருஷம் ஆண்டால் அவனுக்கே என்றைக்கும் நிரந்தர மாகிவிடுமா? ஆயிரம் வருஷம் ஐந்நூறு வருஷம் இருந்த மரஞ்செடிகளை வெட்டித்தள்ளி காடுகளைத் திருத்துவதில்லையா? 4000 வருஷம் 5000 வருஷமாய் இருக்கிற பாறைக் கல்லுகளையெல்லாம் டைனாமெட்டு வைத்து உடைத்து தூளாக்கி அப்புரப்படுத்துவதில்லையா? ஆதலால் வேண்டாம் என்றால் போய்விட வேண்டியதுதானே.

வம்பன்:- வேண்டாம் என்றால் போக வேண்டியதுதானே என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டாம் என்பதற்கு ஏதாவது சட்டப்படி நியாயம் சொல்லுகின்றீர்களா? அல்லது கை பலத்தைப் பொறுத்து நியாயம் சொல்லு கின்றீர்களா?

கம்பன்:- சட்டமென்ன? கைபலமென்ன? இந்த இரண்டும் நமக்குக் கிடையாது. நம் இஷ்டம் தான்.

வம்பன்:- அப்படியானால் அந்த இஷ்டத்துக்காவது ஒரு காரணம் வேண்டாமா?

கம்பன்:- காரணம் என்ன? காரணம் அவர்களால் இந்த 200 வருஷ மாய் நமக்கு என்ன பிரயோஜனம் என்ன சாதித்தார்கள்? நமது நாட்டுச் செல்வத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போகின்றார்கள். அவர்களிடத் தில் நியாயம் என்பதில்லை, கருப்பனுக்கு ஒரு நீதி, வெள்ளையனுக்கு ஒரு நீதி, இது போதாதா? அவர்கள் இந்த தேசத்தை விட்டுப் போக வேண்டிய தற்குக் காரணம்?

வம்பன்:- அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொன் னால் போதுமா? (1)இந்த 200 வருஷகாலத்தில் இந்தியா எவ்வளவு நாகரீகம், கல்வி அறிவு பெற்றிருக்கிறது. அவர்கள் வருவதற்கு முன் 100க்கு 99 தற்குறி களாயிருந்தோமே. பார்ப்பான் காலத்தைவிட வெள்ளைக்காரன் காலம் மோசமா? (2) பணம் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் யாருடைய பணம்? பாடுபடுபவர்கள் பணத்தை நம்ம பணக்காரனும் கொள்ளை அடித்தான், வெள்ளைக்காரனும் கொள்ளை அடித்தான், பணக்காரன் கொள்ளை அடிக் கும் பணமும், மோட்டார் பெட்ரோல், ரயில், சீப்பு, சோப்பு, டிரஸ், பிராந்தி, உஸ்கி, பெட்டி, பேழை முதலிய சாமான்கள் வாங்கி எல்லாம் வெளி நாட்டுக் குத்தான் அனுப்பிவிடுகிறான். (3) நீதி விஷயத்திலும், இங்கும் பார்ப்பானுக்கு ஒரு நீதி, பறையனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி, பணக் காரனுக்கு ஒரு நீதி, கோவில், குளம், வீதி, பள்ளிக்கூடத்திலும், மேல் ஜாதிக்கு ஒரு நீதி, கீழ் ஜாதிக்கு ஒரு நீதி, சம்பளத்திலும் ஒருவனுக்கு மாதம் 6000 ரூபாயும், ஒருவனுக்கு மாதம் 6 ரூபாயும், ஒரு ஜாதி பாடுபடவேண்டும், ஒரு ஜாதி சோம்பேரியாய் இருந்து வாழ வேண்டும். இப்படி அநேக வித்தியாசங்கள் அக்கிரமமாய் இருக்கும்போது வெள்ளைக்காரனை மாத்திரம் ஏன் குற்றம் சொல்லுகிறாய்? அவன்போய்விட்டால் இதெல்லாம் திருத்துப்பாடாகி விடுமா?

கம்பன்:- ஆகுதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலையில்லை. நாங்கள் எப்படியோ எங்களுக்குள் அடியோ உதையோ போட்டுக் கொள் ளுகிறோம். வெள்ளைக்காரன் மாத்திரம் இனி அரை நிமிஷமும் வேண்டாம். அவ்வளவுதான் நம்ம சங்கதி.

வம்பன்:- சரி எப்படியோ நடக்கட்டும் எல்லாருக்கும் ஒத்தது எனக்கும் ஆகட்டும். நானும் வேணுமானால் உன்னுடனேயே சேர்ந்து கொள்ளுகிறேன். ஆனால் ஒரு சேதி.

கம்பன்:- என்ன சேதி?

வம்பன்:- இந்தியாவிலிருந்து கொளும்பு, சிங்கப்பூர், பினாங்கு, செய்கோன், கொச்சின், சைனா முதலிய ஊர்களுக்கு நம்ம ஆளுகள் 10-லட்சக்கணக்காகப்போய் அந்த தேசங்களை கொள்ளையடித்து கோடிக் கணக்காக ரூபாய்கள் கொண்டு வந்து இங்கு எத்தனையோ பேர் லட்சாதி பதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் பிழைக்கிறார்களே! அதுமாத்திரமல்ல இன்னும் வெகுபேர் அந்த தேசங்களில் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்களே! இதற்கு என்ன செய்கின்றது?

கம்பன்:- செய்வது என்ன? அந்த ஊர்க்காரர்கள் பார்த்துப் போ என்று சொன்னால் போய்விடவேண்டியதுதான்.

வம்பன்:- அப்படியானால் சைய்கோன் அரசாங்கம் இந்திய “வெள்ளைக்காரர்”களாகிய நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு நோட் டீஸ் கொடுத்துவிட்டதாமே. இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும்.

கம்பன்:- செய்வதென்ன இந்த இரண்டு வருஷ சங்கராந்தி நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மேல் தான் வந்திருக்கின்றது. மரியாதையாய் மூட்டை கட்டிக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பவேண்டியதுதான்.

வம்பன்:- அப்படியானால் இப்பொழுது தேசீயவாதிகள் உள்பட எல்லோரும் சேர்ந்து என்னமோ ஆபத்து வந்துவிட்டதாக இதற்குக் கூச்சல் போடுகிறார்களே அது ஏன்? இதற்கு இந்திய சட்டசபையில் அவசரப் பிரேரேபணை எதற்காக? “போ என்றால் போய்விட வேண்டியதுதானே” “இவர்களால் செய்கோனுக்கு என்ன நன்மை” “செய்கோனை கொள்ளை அடித்து பொருள் திரட்டி இந்தியாவுக்கு கொண்டு வருவது நியாயமா?” என்று செய்கோன்காரர்கள் சொல்வதில் என்ன தப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.

கம்பன்:- எதற்கும் எதற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறீர்? இது உமக்கு ஒரு வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்ததுதானோ? திரைகடலோடியும் திரவியம் தேடு என்று ஒளவை பாடி இருக்கிறாளே திரைகடல் என்றால் இந்தியாவுக்குள் என்றுதான் அருத்தமோ?

வம்பன்:- சரி அப்படியானால் எல்லோருக்கும் எல்லா தேசத்தாருக் கும் இந்த உரிமை உண்டா? இல்லையா?

கம்பன்:- என்ன நியாமய்யா நீர் பேசுகிறது. வெரும்வம்பு பேசுகிறீரே நியாயம் அநியாயம் இல்லையா?

வம்பன்:- சரி அப்படி வாருங்கள் நியாயம் பேசலாம். நியாயம் என்றால் என்ன? கம்பன் சொன்னதா? காளிதாசன் சொன்னதா? ராமன் சொன்னதா? கிருஷ்ணன் சொன்னதா? வள்ளுவன் சொன்னதா? Òபுத்தன் சொன்னதா? கிறிஸ்து சொன்னதா? முஹம்மது சொன்னதா அல்லது காந்தி சொல்வதா?

சங்கராச்சாரி சொல்வதா? சத்தியமூர்த்தி சொல்வதா? மற்றும் யாராரோ சொல்லுவதா? என்பவைகளை நியாயம் என்று வைத்துப் பேசுவதா னால் உலகம் உள்ளவரை நியாயம் பேசித் தீராது.

கம்பன்:- பின்னை என்னதான் பண்ணித் தொலைக்கச் சொல்லுகிறீர்.

வம்பன்:- தங்களுக்குப் புத்தி இருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளு கிறீர்களா?

கம்பன்:- ஆம் ஒப்புக் கொள்ளுகிறேன்.

வம்பன்:- சரி எனக்கு புத்தியிருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளு கின்றீரா?

கம்பன்:- சரி ஒப்புக்கொள்ளுகிறேன்.

வம்பன்:- அப்படியானால் நாம் இருவருமே நம் புத்தியை-அறிவைக் கொண்டு பேசுவோம். நம் இருவர் புத்திக்குட்பட்டதை நாம் சரி நியாயம் என்று ஒப்புக்கொள்ளுவோம். இதில் ஒன்றும் தடை இல்லையே.

கம்பன்:- தடை இல்லை.

வம்பன்:- முதலாவது மக்களை மதத்தின்பேரில் பிரிக்கலாமா? தேசத்தின்பேரால் பிரிக்கலாமா? ஜாதியின்பேரால் பிரிக்கலாமா? அல்லது பாடுபட்டு உழைக்கும் மக்கள் சோம்பேறிகளாய் இருந்து உழைப்பாளிகளை ஏய்த்து வாழுகின்ற மக்கள் என்று இரண்டுவித வகுப்பாய் பிரிக்கலாமா? என்பதை முதலில் முடிவு செய்வோம். ஆகவே எப்படிப் பிரிக்கின்றது சொல்லுங்கள் பார்ப்போம்.

கம்பன்:- இப்படிச் சொன்னால் எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

வம்பன்:- இது உங்களுக்குப் புரியாதல் என்ன? சற்று தயங்குவதாகத் தெரிகின்றது. நியாயம் என்று தோன்றுவதைச் சொல்லவேண்டியதுதானே.

கம்பன்:- நீர்தான் சொல்லுமே.

வம்பன்:- சொல்லுகிறேன் நன்றாய் யோசித்துப்பாரும். என்ன வென்றால் மனிதர்களைப் பிரிக்கவேண்டுமென்றால் இரண்டு வகையாய்த் தான் பிரிக்கலாம்.

கம்பன்:- எப்படி?

வம்பன்:- பாடுபட்டு உழைக்கும் மக்கள் ஒரு வகுப்பு. அப்படிப் பாடுபட்டு உழைக்கும் மக்களின் உழைப்பின் பலனை பல பலவித வழிகளால் ஏமாற்றி அனுபவிக்கிறவர்கள் ஒரு வகுப்பு ஆக இரண்டு வகுப்பாகத் தான் பிரிக்கலாம்.

கம்பன்:- சரி அப்புறம்.

வம்பன்:- இந்தப்படி ஏமாற்றிவாழும் மக்களைப் பார்த்து நீயும் உன் விகிதாச்சாரம் உழைத்து விகிதாச்சாரம் கூலி எடுத்துக்கொள் என்று சொல்ல வேண்டும்.

கம்பன்:- சரி அப்புறம்.

வம்பன்:- அந்தப்படி நாம் சொல்லுவதை அவர்கள் கேட்கா விட் டால் ஊரைவிட்டு நாட்டைவிட்டு தேசத்தைவிட்டு வெளியில் போகிறாயா இல்லையா? என்று கேட்கவேண்டும்.

கம்பன்:- அவன் போகமாட்டேன் என்றால் என்ன செய்வது.

வம்பன்:- வெள்ளைக்காரன் போகமாட்டேன் என்றால் என்னசெய்ய வேண்டுமென்கிறாயோ அதைச்செய்ய வேண்டியதுதான்.

கம்பன்:- இதில் வெள்ளைக்காரனும் சேர்ந்தவன்தானே.

வம்பன்:- அவர்கள் பாட்டன்கூட சேர்ந்தவனேயாவான்.

கம்பன்:- அப்படியானால் சரி.

-------------------------------------

சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதிய உரையாடல்- ”குடி அரசு” - உரையாடல் - 10.09.1933

24 comments:

தமிழ் ஓவியா said...


ஒரு நாள் பயணம் (2)


- உடன் சென்று பார்த்தவன்

வேனிற்கு வந்ததும் மோர் குடித் தார்கள். அதுவும் மிகவும் குறைவாக தொண்டை வறண்டுவிடாமலிருக்க அங்கிருந்து செல்வார்கள். பாவேந்தர் - சிந்தாமணி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடைபெறும் இடத் திற்கு வந்தோம். ஊரெங்கும் நம் முடைய இயக்க கொடி, தோரணங்கள் மணமகளின் வீட்டின் அருகிலேயே பெரிய பந்தல், மேடை அமைத்திருந் தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருந்தார்கள். இருக்கை இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் நின்று கொண்டிருந்தார்கள்.

பெரும் பகுதி மகளிர் அமர்ந்திருந்தார்கள். ஊரே திரண்டு வந்து தமிழர் தலைவர் அவர்களை வரவேற்கிறது. கடுமை யான வெயிலில் வெளிக்காற்று கொஞ் சம்கூட இல்லை. அய்யா அவர்களுக்கு பக்கத்தில் இரண்டு மின்விசிறிகளை நகர்த்தி வைக்கிறோம். வேறு யாரும் பேசவில்லை. வரவேற்புரை முடிந்ததும் அய்யாவே பேச ஆரம்பிக்கிறார்கள். அந்த ஊரில் வாழ்ந்து மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களை எல்லாம் நினைவு கூறுகிறார்கள். 20, 30 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலம் குன்றி மறைந்த டி.எம். ராசப்பா அவர்களைப் பற்றியும், அவர்களின் மறைவிற்குப்பின் அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக கொடுத்ததையும் பெருமையோடு நினைவு கூறுகிறார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த தோழர் வீரமணி அவர்களையும், அவர்களது தொண் டுள்ளத்தையும் பாராட்டுகிறார்கள். தொடர்ந்து மூட பழக்க வழக்கத்தை கைவிடவும் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் அனைவருக் கும் குறிப்பாக குழுமியிருந்த மகளிர்க்கு எடுத்துரைக்கிறார்கள். மகளிர் அனைவரும் கைதட்டி, சிரித்து வரவேற்கிறார்கள். சீக்கிரமாக முடிக்க வேண்டும் என என்னை போன்றவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பேசி வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைக்கிறார்கள். மணமக்களின் பெற் றோர்கள், உறவினர்கள் என அனை வரையும் வரவழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

12 மணி வெயிலில் வாழ்மான பாளையத்திலிருந்து 30 கி.மீ தொலை வில் உள்ள பெருவளப்பூர் என்ற ஊருக்கு பயணம் வழியில் நுங்கு, வெள்ளரி பிஞ்சு, இளநீர் விற்பதை பார்த்து பின்னால் வருகின்ற மாவட் டத் தலைவர் சேகர் அவர்களிடம் அவற்றை வாங்கி வரச் சொல்லு கிறேன்.

இடையில் அவர்கள் வேக வேக மாக இளநீரையும், நுங்கையும் கொண்டு வந்து நாங்கள் வந்த வேனை நிறுத்தி கொடுக்கிறார்கள்.

ஏங்க நாம அடுத்த நிகழ்ச்சிக்கு போக வேண்டும். நேரமாகிவிட்டது ஏன் வண்டியை நிறுத்துறீங்க என கேட்டு 100 மில்லி அளவிற்கு மட்டும் இளநீரை பருகுகிறார்கள். மற்றதை சாப்பிட்டால் வயிறு உபாதை வந்து விடும். எனவே இப்போது வேண்டாம் திரும்பும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள் தமிழர் தலைவர்.

போகும் வழியிலேயே ஏங்க 200 மூட்டை சிமெண்ட் எவ்வளவு ஆகும்? என்றார்கள் நான் சுமாராக ரூ.60,000 ஆகும் என்றேன். உடனே பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தரை தொடர்பு கொண்டு அவர் ஓய்வாக இருந்தால் என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்றார்கள். அவரும் கைபேசியில் பேசினார். அவரிடம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில் நுட்ப திருவிழாவினை பற்றி கேட்டு விட்டு சலுகை விலையில் சிமெண்ட் வாங்கினால் எவ்வளவு ஆகும் என்பதை எல்லாம் விசாரித்து 200 மூட்டை வாங்க ஏற்பாடுகள் செய்யச் சொல்லி பணத்தை தலைமையில் வாங்கிக் கொள்ளவும் சொன்னார்கள். வாழ்மானபாளையத்தில் சொன்னதை நினைவில் வைத்து 30 மணித்துளிகளுக் குள் செய்து முடித்து
சொல்வதைத்தான் செய்வோம்
செய்வதைத்தான் சொல்வோம்
என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.

தமிழ் ஓவியா said...


முதன் முறையாக பெருவளப்பூருக்கு தமிழர் தலைவர் வருகிறார். 12.30 மணிக்கு நல்ல வெயில். ஊரெங்கும் கொடிகள், தோரணங்கள், ஒலி பெருக் கியில் இயக்கப் பாடல்கள், இங்கேயும் இயக்க கட்டடம் ஒன்று. அதில் அய்யா தந்தை பெரியார் அவர்கள் சிறிய அளவில் நின்று கொண்டிருக்கின்ற சிலை ஒன்று. அதற்கு தமிழர் தலைவர் அவர் களை மாலை அணிவிக்க அழைக் கிறார்கள். 105º வெயிலிலும் தமிழர் தலைவர் அவர்கள் வேனை விட்டு இறங்கி செல்கிறார்கள். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், பெருவளப்பூர் சாமிநாதன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், 50 ஆண்டுகளுக்கு முன்பே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவருமான சிதம்பரம் போன்றவர் களும் மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்களையும் ஒலி முழக்கங்களோடு தமிழர் தலைவர் அவர்களை வரவேற் கிறார்கள். பின்பு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கட்டடத்தை சுற்றிப் பார்க்கிறார்கள்.

அங்கிருந்து படத்திறப்பு நடைபெறும் இடத்திற்கு வேனில் செல்கிறார்கள். திருச்சி பெரியார் மாளிகையில் பெரியா ரால் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனமான பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல் ஆண்டு படித்து அண்மையில் இயற்கை எய்திய மானமிகு ஆத்திநாட்டார் அவர்களின் படத்திறப்பு, நினைவு போற்றும் நாள். ஆத்திநாட்டார் அவர்களின் மகளும், பேத்தியும் நமது ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து சிறப்பாக பணிபுரிவர்கள் ஆக மூன்று தலைமுறையாக நம்முடைய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். ஆத்தி நாட்டார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அவருடைய வாழ்வி ணையர் அவர்களும், அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த மகளிர் பலரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து வரவேற்றார்கள்.

வழக்கமாக படத்திறப்பு நிகழ்வுகள் காலையில் அல்லது மாலையில் நடை பெறும். ஆனால் இங்கு ஏப்ரல் மாத கடும் வெயிலில் நண்பகலில் நடைபெற்றது. ஏராளமான பொது மக்களும், உறவி னர்களும், ஆசிரியப் பெருமக்களும் திரளாக வந்திருந்தார்கள்.

ஆத்தி நாட்டார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள். ஆத்தி நாட்டார் அவர்களின் சிறப்பு களையும், அவரது தொண்டுள்ளத்தையும் திராவிடர் கழக கூட்டங்கள் இந்த பகுதியில் எங்கு நடந்தாலும் வந்து விடுதலை சந்தாக்களை கொடுத்து அய்யா அவர்களை சந்திப்பது பற்றியும் நினைவு கூர்ந்தார்கள். பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன் னாள் மாணவர் கழகத்தின் தலைவராக அவர்கள் இருந்ததையும், சின்ன குத்தூசியோடு அவர்கள் படித்ததையும் நினைவு கூர்ந்தார்கள். பெருவளப்பூரில் வாழ்ந்து மறைந்த சாதி மறுப்பு வீரர் களையும் பெரியார் பெருந்தொண் டர்களையும் நினைவு கூர்ந்தார்கள். அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த முதுபெரும் பெரியார் பெரந்தொண்டர்கள்

தமிழ் ஓவியா said...


மானமிகு வெங்கடாசலம் மானமிகு சிதம்பரம்
மானமிகு அழகப்பன்
மானமிகு முத்துசாமி

ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

திரு. ஆத்திநாட்டார் அவர்களின பெயர் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள வகுப்பறை ஒன்றிற்கு வைக்கப்படும் என அறிவித்தார்கள். அனைத்து மக்களும் அதை கைதட்டி வரவேற்றார்கள். ஆத்தி நாட்டார் அவர்கள் வாழ்விணையர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.

இறுதியாக ஆத்தி நாட்டார் அவர்களின் பெயரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அனைவரிடமும் விடை பெற்று வேனிற்கு வந்த தமிழர் தலைவர் அவர்கள் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் அவர்களால் சுத்தம் செய்து வைக்கப் பட்டிருந்த 3 நுங்கு துண்டுகளை மட்டும் சாப்பிட்டு பெரியார் மாளி கைக்கு 3½ மணி அளவில் வந்து மதிய உணவாக தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு ஓய்வெடுத்தார்கள்.

மாலை 5 மணியளவில் தயாராகி வந்திருந்த தோழர்களை சந்தித் தார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பாக விடையளித்த நமது பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவியரை பாராட்டினார்கள்.

பெரியார் மாளிகை வளாகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பெரியார் சமூக பாதுகாப்பு அணியினை சந்தித்து அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டு கூ.னு. வீரப்பா மன்றத்திலும் நடைபெற்ற மாநில பகுத் தறிவாளர்கள் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பகுத் தறிவாளர்களுக்கான பணிகள் குறித்து விரிவாக உரையாற்றி னார்கள்.

தொடர்ந்து பெரியார் மாளிகைக்கு அருகில் உள்ள வெக்காளி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மதவாத எதிர்ப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள். கருத்தரங்கில் பெரியார் விருது பெற்ற நந்தலாலா அவர்கள் இலக்கியத்தில் மதவாதம் என்ற தலைப்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தில் செயலாளர் மானமிகு குமரேசன் அவர்கள் நடைமுறை வாழ்வில் மதவாதம் என்ற தலைப் பிலும், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நேரு அவர்கள் நிர்வாகத்தில் - மதவாதம் என்ற தலைப்பிலும் உரை யாற்றினர். அதன்பின் தமிழர் தலைவர் அவர்கள் 45 நிமிடங்கள் உரையாற் றினார்கள்.

வேனில் திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து வேனிலேயே அமர்ந்து பெரியார் தங்காத்தாள் கொண்டு வந்திருந்த உணவை உண்டு 10.30 மணிக்கு மலைக் கோட்டை தொடர்வண்டியில் சென்னை சென்றார்கள்.

இடையில் நான் தமிழர் தலைவர் அவர்களிடம் அய்யா நாங்கள் ஓரிரு முறை வயிற்று போக்கு ஏற்பட்டாலேயே சோர்ந்து விடுகிறோம். நிற்க, நடக்க முடிவதில்லை. படுக்கைக்கு சென்று விடுகிறோம். நீங்கள் எப்படி அய்யா இத்தனை உடல் உபாதைகளிலும் தொடர்ந்து பயணம் செய்கிறீர்கள்? பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அடுத்தடுத்து நமக்கு இருக்கிற வேலைகளில் உடல் உபாதைகளை நினைத்துப் பார்க்க கூட நேரம் ஏது என சுருக்கமாக விடை யளிக்கிறார்கள். பசி நோக்காது கண் துஞ்சாது பன்னாட்டு அறிஞர் பெரு மக்களோடும், பாமர மக்களோடும் பணி யாற்றுகின்ற தமிழர் தலைவர் அவர்கள்

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் - நாணயமும்!



நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


நாக தேவதையை வணங்கினால்...


உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி என்னும் கிராமத்தில், படமெடுத்து நின்ற பாம்பை அன்புக்கொடி என்ற சிறுமி மண்டியிட்டு வணங் கினாள். அச்சிறுமியை அந்நாகம் மூன்றுமுறை தீண்டி அவளை மாய்த்தது. - இது தினமணி நாளிதழில் 25.11.1982 அன்று வெளியான கட்டச் செய்தியின் சுருக்கம்.

நாக தேவதை என்ற தெய்வம் நம் நாட்டில் உலவுகிறதே; அப்பிஞ்சு உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்த அத் தெய்வ பக்தி - அவர்கள் மொழியில் சொல்வதனால் - அன்புக் கொடிக்கு எமனாகி விட்டது. ஆத்திகப் பெருமக்களே ஆத்திரங் கொள் ளாமல் மூடக் கொள்கையால் விளைந்த விபரீதத்தை எண்ணிப் பாருங்கள்.

- பி.இரத்தினசபாபதி, சென்னை-24.

தமிழ் ஓவியா said...

கிரக சேர்க்கை பற்றி நேருவின் கருத்து



இந்த எட்டு கிரக சேர்க்கை என்னை ஒன்றும் செய்யாது. இதனால் ஆபத்து ஏற்படுமென்று சில சோதிடர் கூறுவதைக் கேட்டு பீதி அடையாதீர்கள். நம்முடைய தலைவிதியை ஆக்குவதோ, அழிப்பதோ இந்தக் கிரகங்களின் வேலையல்ல நம் தலைவிதியை நிர்ணயிப்பது நம் கையில் தான் இருக்கிறது.

- பண்டித நேரு, (விடுதலை - 8.1.1962 அலகாபாத்தில் பேச்சு, 11.1.1962

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். ger Font Smaller Font

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென் ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர். நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர். நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்கள்.

ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். நீங்கள் வானொ லியை கேட்காதீர்கள்.

ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர். நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர். நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர். நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.

நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து அரபு நாடு களுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில் அது முஸ்லிம் நாடு இந்துக்களே! உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்த கிறித்தவர்கள் முஸ்லிம்கள் ஆகி யோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான். (உதகையில் நடந்த இந்து முன்னணி மா நாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு வெளியீடு இது)

தமிழ் ஓவியா said...

நாயுறங்கும்



எவன் படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை எவன் காத்தான்?
காக்கிறான்? காப்பான்? கேளீர்!
தவழ்ந்தெழுந்து நடந்து வளர்குழந்தைபோலும்
தனி, வீடு, தெரு, சிற்றூர், நகரம் ஆக
அவிழ்ந்த தலை முடிவதற்கும் ஓயாக் கையால்
அணி நாட்டைப் பெற்றவர்கள் கண்ணுறங்கிக்
கவிழ்ந்திட ஓர் ஈச்சம்பாய் இல்லை - தங்க
கட்டிலிலே ஆளவந்தார் நாயுறங்கும்

- புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


ஈச்ச மர(த்திலும்) கடவுள்


இந்தியாவில் பரித்பூர் என்றோர் ஊருள்ளது. அங்குள்ள ஒரு கோயிலுக்கருகில் ஓர் ஈச்சமரம் இருக்கின்றது. அக்கோயிலில் வழக்கமாக காலையிலும் மாலையிலும் கடவுள் வழிபாட்டின் போது மணியடிப்பதுண்டு. மாலையில் மணி யடிக்கும் போது அவ்வீச்சமரம் சாய்ந்து விடுவதுண்டு. மறுநாட்காலையில் மணியடிக்கும் போது அம்மரம் நிமிர்ந்து விடும். அம்மரத் தினுடைய செயல் கடவுள் வழிபாட்டின் போது வணங்குவது போன்றிருக்கும்.

இதனைக் கண்ட மக்கள் அம்மரம் மாலையில் கடவுளை வழிபடத் தொடங்கி, இரவு முழுவதும் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு காலையில் எழுந்திருப்பதாகக் கருதி அஃது தெய்வத்தன்மை உள்ளது என்று கடவுளுக்கு வழிபாடு நடத்துவது போல் வழிபாடு நடத்தி வந்தனர்.

நம் நாட்டு விஞ்ஞானிகளில் ஒருவரான ஜகதீச சந்திரபோஸ் இம்மரத்தை கண்டபோது, இம்மரத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினர். பல நாட்கள் வரை ஆராய்ந்து அதன் உண்மையை கண்டு பிடித்தார். இம்மரம் பகலில் உண்டாகிற சூரிய வெப்பத்தால் மாலையில் சாய்ந்து விடுகிறது. இரவில் அவ்வெப்பம் நீங்கி விடுவதால் காலையில் இது நிமிர்ந்து கொள்கிறது.

இம்மரம் மட்டும் இவ்வாறு சாய்ந்து நிமிருவதற்கு காரணம் இதனுடைய சூழ்நிலைதான் என்று மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

- உலக அதிசயங்கள் நூலிலிருந்து
ரவிராஜ், அத்திமலைப்பட்டு - 632315

தமிழ் ஓவியா said...


பிக்பாக்கெட் கடவுள்

சென்ட்ரல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஒரு மணி நேரத்திற்கு, 12,500க்கு மேற்பட்டோர் கடந்து செல்வதால் பிக்பாக்கெட் திருடர்கள் சென்ட்ரல் பகுதியில் பணியாற்று வர். இருட்டும் நேரத்தில், அவர்கள் பாடிகாட் முனீஸ்வரனுக்கு, சுருட் டையும், குவார்ட்டரையும் காணிக்கை செலுத்திய பின்னரே தொழிலுக்குச் செல்வர் என்கின்றனர் கோவில் பணியாளர்கள் - தினமலர் 17.4.2013

கடவுள், பக்தி என்பது எப்படி இருக்கிறது என்ப தற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
எந்தக் குற்றத்தைச் செய்தாலும், ஆன்மிக மொழியில் எந்த பாதகங் களைச் செய்தாலும் பிரார்த்தனை செய்தால், கடவுளுக்கு நேர்த்திக் கடன் கழித்து விட்டால், பிராயச்சித்தம் செய்து விட்டால் பாவங்களிலி ருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருக்கு மட்டும் இது போன்ற குற்றவாளி கள் பெருகத்தானே செய்வார்கள்.

விஷ ஊசி போட்டுக் கொன்றவர்கள் கொள் ளையடித்த பணத்தில் ஒரு பங்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக் குப் போட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க வில்லையா?
அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே!

கள்ளக் கையொப் பக்காரன் கரம் கூப்பு கிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக் கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய் கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்ப வர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? (அறிஞர் அண்ணா வின் நூல்: தீண்டாமை வானொலி உரையிலிருந்து)

பிக்பாக்கெட்காரர்கள் முனீஸ்வரனைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து விட்டு, தங்களின் பிக் பாக்கெட் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டு வருகின்றனர்.

கீழ் மட்டக் கடவுளிடம் தான் இது நடப்பதாக யாரும் நினைக்க வேண் டாம். திருப்பதி கோயி லிலே இது சர்வசாதார ணம்.

திருப்பதி ஏழுமலை யான் உருவம் பொறித்த டாலர் விற்பனையில் மோசடி செய்து பெரும் பணம் குவித்த டாலர் சேஷாத்திரிகள் இன்னும் அந்தக் கோயில் நிரு வாகத்திற்குள் இருக்கத் தானே செய்கிறார்கள்?

ஏழுமலையானுக்கு ஒரு நமஸ்காரம் போட் டால் போகிறது!

- மயிலாடன் 03-05-2013

தமிழ் ஓவியா said...

ஜெயங்கொண்டம், மே 3- தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஈட்ட ஜாதி மதங்களை மறந்து ஒன்றுபட்ட தமிழர் களாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில், அரிய லூர் மாவட்டம் செயல் வீரர்கள் நிறைந்த மாவட்டம். எந்தப் பணிகளை தலைமைக் கழகம் இட்டாலும் விரைந்து முடிக்கக் கூடியவர்கள் அந்த வகையில் குறுகிய கால இடைவெளியில் இந்த மாநாடு அறிவிக்கப் பட்டாலும் சிறப்பாக நடைபெறுகிறது.

யாருக்கோ பதில் சொல் வதற்காக கூட்டப்பட்ட மாநாடு அல்ல. மாறாக நமது கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு. சேது சமுத்திர திட்டம் கிடப்பில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் உரிமை ஆகியவற்றுக்காக போராட வேண்டிய நாம் தரக் குறைவாக பேசும் சிலருக்கு பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டிய தில்லை.

தந்தை பெரி யாரின் கட்டளை ஏற்று ஜாதி ஒழிப்பிற்காக ஏராளமானோர் சிறை சென்ற மாவட்டம் அரி யலூர் மாவட்டம் கலைஞரோ, நாங்களோ சந்திக்காத எதிர்ப்பா? எங்கள் அனுபவத்தைக் கூட வயதாகக் கொள் ளாதவர்கள் சீசனல் வாக்கு வங்கிக்காக ஜாதியைப் பயன்படுத்தி தமிழர்களை கூறு போடலாமா? நாங்கள் உயிரை துச்சமெனக் கருதுபவர்கள் என் உயிருக்கு மம்சாபுரம் சென்னை உட்பட நான்கு இடங்களில் குறி வைக்கப்பட்டது. அதை யும் தாண்டி பணியாற் றுபவர்கள் நாங்கள். பார்ப்பனர்களால் விளம்பரம் செய்யப்படு வதால் எதை வேண்டு மானாலும் பேசுவதா? நாம் அடித்துக் கொள் வதைப் பார்த்து அவர் கள் மகிழ்ச்சியடைகி றார்கள். ஏணியின் சுபாவம் ஏற்றி விடும். தோணியின் சுபாவம் கரை சேர்க்கும். ஆனால் ஏறி வந்த ஏணியையும் கரை சேர்த்த தோணி யையும் எட்டி உதைக் கலாமா? சிந்திக்க வேண் டும்.

50 சதவீதம் வந்தது திராவிட இயக்கத்தால் தானே?

50 சதவீத இட ஒதுக் கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு கிடைக்க காரணமானவர்கள் யார்? சிந்திக்க வேண் டாமா? திராவிட இயக் கத்தலைவர்கள் அல் லவா? 18 சதவீத திமிர் என்று தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து பேசலாமா?

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலை விட ஆபத் தானது பதவிக்காய்ச்சல். பதவிக்காக எதையும் செய்ய முனைவதா? அனைவருக்கும் அனைத்தும் என்பதே எங்கள் கொள்கை.

கருவறைக்குள் ஜாதியை ஒழிக்க போராடிய தலைவர் பெரியார். இன்றைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக முடியவில்லை. ஏராளமான தடைகள் தடைகளை தகர்த்து உரிமைகளை வென் றெடுப்போம். பெரியார் என்ற மூச்சுக்காற்று இல்லையென்றால் தமிழினத்திற்கு எழுச்சி இல்லை. ஜாதி, மதம், கட்சிகளால் பிரியாமல் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தாழ்த்தப்பட் டவர்கள் உள்பட யாரை யும் எதிரிகளாக பா.ம.க. கருதக்கூடாது. தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபடுவோம்! உரி மைகளை வென்றெடுப் போம் என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி னார்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா-?

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

தமிழ் ஓவியா said...


சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!


சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, இவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது.

அஃது இவன் முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரந்தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.

அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம்.

உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடுங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

உத்தம சோழன் சூட்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்
பிற்காலச் சோழர் சரித்திரம்
பகுதி பக்கம் 79-_80

தமிழ் ஓவியா said...


அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


கர்ப்பக்கிருகப் போர்ப்படையில் 18.10.69 - முதல் பதிவு செய்து கொண்டார்கள். சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயிலில் தொடங்குவது.

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும். 17.1.70 -முதல்வர் கலைஞர் அறிக்கை 19.1.70 - போரின் வெற்றி. 12.3.70 - கர்ப்பக் கிருகக் கிளர்ச்சி வெற்றி. 30.11.70 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது. கிளர்ச்சியை ஒரு சிறிது நாட்களுக்கு ஒத்தி வைத்தல். 1974 சனவரி 26ஆம் தேதிக்குள் பதில் எதிர்பார்த்தல். 3.3.74 இழிவு ஒழிப்புக்கிளர்ச்சி முதல் கட்ட தேதி அறிவிப்பு. 15.3.74 போராட்ட வீரர் பட்டியல். 3.4.74 தந்தைக்குப் பின் முதல் போராட்டம். 8.4.74 சட்டமன்றத்தில் நமது போராட்ட எதிரொலி. 15.4.74 சட்டமன்றத்தில் அர்ச்சகர் சட்ட தீர்மானம். 2.5.74 டில்லியில் நமது குரல். 20.8.74 டில்லி அரசு பரிசீலனை. 4.5.75 கோயில் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு. 2.8.75 கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி அம்மா அறிக்கை. 18.9.77 அ.தி.மு.க. வைத்த அய்யா சிலை. 4.6.78 திருச்சியில் மத்திய கமிட்டி பிறவி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே எப்போதும் குறியாக இருக்கும். பார்ப்பனர்கள் பன்னிரெண்டு பேர் உச்சநீதிமன்றத்திற்கு படையெடுத்துச் சென்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அர்ச்சகர் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கும் ஒரு தீர்ப்பினைப் பெற்று விட்டனர்.

நீதிபதி மகராசன் குழு

14.8.82 தஞ்சையில் மாநாடு. 24.8.82 வேண்டுகோள் அறப்போர் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் குழு. 17.9.91 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. 16.5.98 ஈரோட்டுத் தீர்மானம். 24.4.1999 போராட்ட அறிவிப்பு ஆபரேஷன் வெற்றி ஆனால் நோயாளி செத்தார்.

டாக்டர் கலைஞர் அவர்களின் ஆதங்கம்

அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம் என்றாலும் அவர் நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்துப் புதைக்க இயலவில்லையே என்று ஆதங்கப் பட்டார்!
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை ஜாதிக் கலவரமும் வரக் கூடாது மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி




மதுரை, மே 4- தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை, ஜாதிக் கலவரமும் வரக்கூடாது என மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி யளித்தார்.

இதுகுறித்து நேற்று (3.5.2013) மதுரையில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது: மரக்காணம் கலவரம், திட்டமிட்டு ஜாதி வெறியை முன்னிலைப்படுத்தி அரசியலில் வாக்கு வங்கியை பலப்படுத்த சில தலைவர்கள் எடுத்த தவறான நிலை. இது தவிர்க்கப்பட வேண்டும். ஜாதியை இட ஒதுக்கீட்டில் மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை இடஒதுக்கீட்டு படிக்கட்டாகப் பார்க்காமல், காவடியாகத் தூக்கி பெருமை அடையக் கூடாது. தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. தொடர்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழ தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் இங்கு மதவெறி மாய்க்கப்பட்டது, அதன் பின்னர் ஜாதி அரசியலை கொண்டு வந்தனர், அது தேவையில்லை. இங்கு மதக்கலவரம் வருவதில்லை. அதேபோல் ஜாதிக்கலவரமும் வரக் கூடாது.

வன்முறை வேண்டாம்!

வன்முறையால் எதையும் சாதித்து விடமுடியாது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களைத்தான் பாதிக்கும். அதில் அப்பாவி மக்களை பலியிடக்கூடாது. தமிழகத்தில் எப்போதும் ஜாதி அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. இந்தக் கருத்துகளை தெளிவாக மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


நாட்டை விட்டே...


நாட்டில் பார்ப்பனர்கள் களைச் செடிகள் போன்றவர்கள். எப்படி வயலில் தேவை இல்லாத களைச் செடிகள் இருப்பதால் பயிருக்குச் சேதம் என்று கருதிக் களைச் செடியை அகற்று கிறோமோ அதுபோல் நாட்டிற்குச் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் பயனில்லாத பார்ப்பானை இந்த நாட்டைவிட்டே அகற்றிவிட வேண்டும்.
(விடுதலை, 10.7.1961)

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. காட்டில் பண மழை!


குஜராத் மாநிலம் ஜீனகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கோசாலை அமைத்துள்ளது. பசுக்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்பு கடந்த சனியன்று (27.4.2013) விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவில் குஜராத் மாநில அமைச்சர்கள், மாநில பா.ஜ.க. தலைவர் கட்சியின் முன்னணியினர், பெரும் பணக் காரர்கள் எல்லாம் பங்கு கொண்டனர்.

அமைச்சர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் பிஜேபி தொண்டர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசிப் பண மழை பொழிந்தனராம். அதனைக் கண்டு அமைச் சர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்களாம்.

கோசாலைக்கும் நிறைய நன்கொடைகளை அமைச்சர்களும், பிரமுகர்களும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து என்.டி. டி.வி. தெரிவித்துள்ள செய்தி மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சி நடந்த பகுதியைச் சுற்றியும் உள்ள கிராமங்கள் கடுமையான வறட்சிக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் ஆளாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட பகுதியில் இயற்கை மழை பொழியவில்லை என்பதற்காகப் பண மழையைப் பொழிய வைத்துள்ளனர் போலும்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிஜேபி ஆட்சி யும், அமைச்சர்களும், பிஜேபி பிரமுகர்களும் எத்தகைய மனப்பான்மையில் குளிர் காய்கின் றனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி மேல் தட்டு மக்களுக்கான ஆட்சி, நகர்ப்புற மக்களுக்கான ஆட்சி என்ற விமர்சனம் உண்டு.

பார்ப்பன மற்றும் இந்துத்துவா ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து - இந்தியா விலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலம் தான் என்று விளம்பரக் காற்றை ஊதி ஊதி ஆகாயத்தில் பறக்க வைக்கின்றனர். உலகம் விளம்பரத்துக்குக் கட்டுப்பட்டது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை வைத் துள்ளவர் நரேந்திரமோடி.

சவுராஷ்டிரா மாநிலத்தில் சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் கோதாவரி முதலிய கிராமங்கள் வறட்சியின் உச்சக் கட்டத்தில் உள்ளன.

ஊருக்குப் பொதுவான தண்ணீர்த் தொட்டி யில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கொளுத்தும் கொடிய வெயிலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரைச் சுமந்து வரும் அவலநிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் குஜராத்தின் உண்மையான நிலை. உண்மையான இந்தியா கிராமத்தில்தான் இருக்கிறது என்று வக்கணையாகச் சொல்லிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

கிராமத்தின் உண்மை நிலையோ இந்தப் பரிதாப நிலையில்தான் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு சோமாலியா என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த நிலையைப்பற்றி செய்தி வருகிறது.

என்ன கொடுமை இது! தனது மாநிலத்தில் உண்மையான நிலையை மறைத்து, பொய்யாக ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கக் கூடிய ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சொல்லும் துணிவு எங்கிருந்து குதித்தது?

பொய்ப் பேசுவதிலும், பொய்யைப் பரப்புவ திலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களை வெல்ல உலகில் யார் தான் இருக்க முடியும்?

பண மழை பொழியும் அளவுக்கு பா.ஜ.க. வினர் அங்கே இருக்கிறார்கள் என்றால் ஆட்சி அதிகாரம் யாருக்குப் பயன்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை அவசியம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சேதுசமுத்திர திட்டம்: அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக? தி.மு.க. தலைவர் கலைஞர்

சென்னை, மே 4- தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்களின் ஒற்றுமை அவசியம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று (3.5.2013) அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை கடலூர் மாவட்டத்திலும், மதுரை மாவட்டத் திலும் நுழையக் கூடாது என்ற போது, அதற்கு மறுப்பு தெரிவித்தவன் நான். அதற்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் அவர்களும், அவரைச் சார்ந்த நண்பர்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கே இடமில்லை, திராவிடக் கட்சிகளே இருக்கக் கூடாது என்ற அளவில் தங்கள் பிரச் சாரத்தை முடுக்கிவிட்டு, அந்தச் சூழ்நிலையிலே நடைபெற்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் வன்முறைப் பேச்சுகள் தலை தூக்கிய காரணத்தால் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், சிறை யிலே அடைக்கப்பட்டிருப்பதாகவும் அறியும் போது உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன். பா.ம.க. வினரும் இது போல கடுமையாக, நாகரிகமற்ற முறையிலும், நாவடக்கம் இல்லாமல் எதிர்க்கட்சிகளை, மற்றக் கட்சிகளைத் தாக்கிப் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. ஒரு சுமூகமான சூழ்நிலையை இந்தப் பிரச்சினையிலே உருவாக்குவதற்கு அது வழி வகுக்கும். வழக்குக்கு மேல் வழக்கு போடுவதும், எப்போதோ பேசினார் என்பதற்காக தற்போது அன்புமணி மீது வழக்கு போட்டுக் கைது செய்வதும் சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதாபிமானத்தோடு டாக்டர் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

ஒற்றுமை அவசியம்

பொதுவாக ஜாதிக் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள், மதக் கலவரங்கள் - இவை எல்லாம் தலையெடுக்காத வகையில், தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், குடிமக்கள் என்போரும் எல்லோருமே ஒன்றாக வாழ்வது தான் சமதர்மம். அந்தச் சம தர்மத்தை நோக்கி எல் லோரும் செயல்பட வேண்டும். எல்லா கட்சிகளும் பயணம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக ஜாதி வேறுபாடுகளை, சண்டைகளை, போராட்டங் களை ஊக்குவிப்பது, அதற்குப் பக்க பலமாக இருப்பது சரியாகத் தோன்றவில்லை. நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது பொன் மொழி. எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், கடிதோச்சினாலும் கூட, அணுகும்போதும், நெருங் கும் போதும் மெல்ல எறிக என்ற வாக்கியத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அந்த மொழிக்கேற்ப அரசு நடந்து கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பா.ம.க.வினருக்கு....

அரசும் தன்னுடைய அடக்குமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறையிலே உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். பா.ம.க. வினரும் இனியாவது கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய கருத்து.

செய்தியாளர் :- அரசு சார்பில் என்ன சொல் கிறார்கள் என்றால், தாங்கள் கொடுத்த எந்த விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை, அதனால் தான் இந்த நடவடிக்கை எடுத்திருக் கிறோம், ராமதாஸ் அவர்களிடமே போராட்டத் திற்கு வந்தால் கைது செய்வோம் என்று சொல் லியிருந்தும் அவர் மீறி வந்து கைதாகியிருக்கிறார் என்று கூறுகிறார்களே?

கலைஞர் :- இந்தக் கருத்துகளையெல்லாம் படித்து விட்டுத் தான் நான் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அதனால் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் நுற்றுக்கணக்கானவர்கள், ஆயிரக்கணக் கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிற சூழ் நிலையைத் தவிர்ப்பதும், நாள்தோறும் அங்கே பஸ் எரிந்தது, இங்கே பஸ் எரிந்தது, அங்கே வீடு எரிந்தது, கடை எரிந்தது என்ற இந்தப் பேச்சுக்கள் எங்குமே வராமலும், பொதுவாக அமைதியாக தமிழகத்தை அனைவரும் காண வேண்டும் என்ற ஆசையோடு இந்தக் கருத்துகளை நான் சொல்லுகிறேன்.

சட்டம் ஒழுங்கு படும்பாடு

செய்தியாளர் :- வட மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்கள் என்று கருதுகிறீர்களா? சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என்பது உங்கள் கருத்தா?

கலைஞர் :- சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது என்னுடைய நீண்ட நாள் வாதம். நான் அதை பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். அந்தச் சட்டம், ஒழுங்கு சரியில்லாத இந்தச் சூழ்நிலையிலே தான் இந்தக் காரியங்கள் மேலும் அவைகளை அதிகப்படுத்தும் வகையிலே நடைபெற்றிருக் கின்றன. அதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அது சரியில்லாமலே இருக்க வேண்டும் என்ற கருத்தோடு இருக்கக் கூடாது. நாமாவது சட்டம் ஒழுங்கைச் சரிப்படுத்த தமிழ்நாட்டில் அமைதியைக் காத்திட, உருவாக்கிடப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதைச் சொல்கிறேன். சட்டம், ஒழுங்கு தமிழ்நாட்டில் ஒழுங்காக இருக்கிறது, சரியாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் அதற் கிடையே இந்தக் கருத்துகளைச் சொல்வது, நண்பர் டாக்டர் ராமதாஸ் அவர்களையும், அன்புமணி அவர்களையும் சிறையிலே போட்டு தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாக்க வேண்டாம் என்ற இந்தக் கருத்தை நான் இந்த அரசுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கச்சத்தீவு

செய்தியாளர் :- தமிழகச் சட்டப் பேரவையில் கச்சத் தீவினை மீண்டும் பெற வேண்டுமென்று அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்திருப் பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதிலே என்னுடைய பொதுவான கருத்து, கச்சத் தீவினை திரும்பப் பெற வேண்டும் என்பது ஏற்கத் தக்க கருத்து. நாங்களும் உச்ச நீதி மன்றத்திலே டெசோ சார்பிலே வழக்கு தொடர் வோம் என்று கூறி, அதற்கான ஆதாரங் களையெல்லாம் திரட்டி வைத்திருக்கிறோம்.

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை சிறையிலே சென்று தி.மு.க. வினர் யாராவது சந்திப்பார்களா?

கலைஞர் :- அவர் எங்களைச் சந்திக்க விரும்ப மாட்டாரே? அவருக்குத்தான் தி.மு.க. வினரையே பிடிக்காதே?

தமிழ் ஓவியா said...


எங்கும் இராமசாமி நாயக்கர்


பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு:

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் வகுப்புத் துவேஷமும் ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங்களைக் கற்பித்து பிராமணர்களும் பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் - பேசும் சிப்பந்தி கோடிகளும், அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய தொண்டை கிழிய எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹா ராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகா நாடுகள் என்றும் வகுப்புத் துவேஷங்கள் வளர்ந்து வருகிறது.பஞ்சாபிலும் கல்கத்தா விலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லா விட்டால் அங்கும் பிராமணர்-பிராமணரல் லாதார் வகுப்புத் துவேஷங்கள் வளரும்.

ஆதலால் இராமசாமி நாயக்கர் சென்னையில் மாத்திரம் இல்லை; இந்தியாவெங்கும் இராமசாமி நாயக்கர் மயமாய்த்தான் இருக்கிறது. சென்னையில் 4 பேர் கூலிக்கு மாரடிப்பதால் இராமசாமியை ஒழித்துவிட முடியாது. சின்னாட்களுக்கு முன் இவர்கள் சென்னையில் சில காலிகளை ஏவிவிட்டு ஸ்ரீமான் சர். தியாகராயச் செட்டியாரை அடிக்க முயற்சித்து அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் முதலியவற்றையும் உடைத்தார்கள். அதிலும் இந்த இயக்கம் அழிந்து விடவில்லை.

அதற்குப் பிறகு ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும் அடிக்கும்படி செய்தார்கள். அதனாலும் இவர்களுக்குப் பயந்துகொண்டு இயக்கம் போய்விடவில்லை. சமீபத்தில் பேரார் மாகாணத்தைச் சேர்ந்த அமராவதியில் 2ஆவது அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸின் காரிய தரிசியாயும், பிராமணரல்லாதாரின் பேருழைப் பாளராகவுமிருக்கும் ஸ்ரீமான் அமிர்த்காரை சில காலிகளைக் கொண்டு பலமாய் அடித்து விட்டார்கள்.

இதனாலும் பிராமணரல்லாதார் இயக்கம் ஒழிந்து விடவில்லை. இவர்கள் கெட்ட எண்ணங்கொண்டு தூற்றத் தூற்ற, அடிக்க அடிக்க பந்து கிளம்புவதைப்போல் இயக்கம் இந்தியாவெங்கும் கிளம்பி பரவிக்கொண்டு தான் வருகிறது.

- குடிஅரசு - அறிக்கை - 9.5.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப்பட்டிருப்பதாகக் காங்கிரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அறிவிக்கிறார் என்று சுதேசமித்திரனில் குறிப்பிட்டிருக்கிறது. பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித்தார்கள்? ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் நியமித்தார், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்.

யாருடைய பணம்? ஊரார் பொதுப்பணம். என்ன பிரச்சாரம்? பிராமணத் தேர்தல் பிரச்சாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம்ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது;

பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள், மகாபுத்தி சாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி அய்யங்காரும், எஸ்.சீனி வாசய் யங்காரும் சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்காரும், எம்.கே.ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது நாங்கள் தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய தியாகம் செய்தவர்கள்; கதர், மது விலக்கு, தீண்டாமை முதலிய வைகளில் அதிக நம்பிக் கையுடையவர்கள்; காரியத்திலும் நடத்து கிறவர்கள்;

அதனால் தான் தமிழ்நாட்டு உண்மை தேச பக்தர்களான ஸ்ரீமான் கலியாண சுந்தர முதலியார் போன்றவர்கள் எங்கள் அய்வர்களையே தமிழ்நாட்டிற்குத் தலைவர்களாகத் தெரிந்தெடுத்து எங்களையே பின்பற்றுகிறார்கள்; நாங்கள்தான் தமிழ் நாட்டுக்குத் தலைமை வகிக்க யோக்கியதை உள்ளவர்கள்.

எங்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தேசத் துரோகிகளும் வகுப்பு நலன் நாடுபவர் களுமான குறுகிய புத்தியுடையவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் எல்லா இந்தியத் தலைவராவார்கள். மற்றபடி வேறு என்ன பிரச்சாரம் செய்யக் கூடும்? தமிழ்நாடே! உன் தலைவிதிதான் என்ன? உன்னை இத்தலைவர் களுக்குக் காட்டிக் கொடுத்த தர்மசீலர்களுக்கு ஆயுள்தான் எவ்வளவோ?

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 16.5.1926

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டது போல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர்.

எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.

குடிஅரசு - வேண்டுகோள் - 23.05.1926

தமிழ் ஓவியா said...


தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி குடியரசு பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணா திக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.

அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கி யிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை,

சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு - விமர்சனம் - 6.6.1926