Search This Blog

28.5.13

இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது! உலகளவிலும் நாத்திகம் வளர்ச்சி!

இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது
உலகளவிலும் நாத்திகம் வளர்ச்சி! கருத்துக் கணிப்பில் தகவல்
லண்டன், மே 28 - உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக கட வுள் நம்பிக்கை கொண் டிருக்கிறார்கள் என்று கடந்த 2005-ஆம் ஆண்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது.
அப்போது இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்ப தாக தெரியவந்தது.

குறைந்தது

8 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் நம்பிக்கை பற்றி சமீபத்தில் உலகம் முழுவதும் மீண் டும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது. 51 ஆயிரத்து 927 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. லண் டனில் நேற்று இந்த கருத்துக் கணிப்பு முடி வுகள் வெளியிடப்பட்டன.
இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியர் களிடம் கடவுள் நம்பிக்கை குறைந்து விட் டது உறுதியாகி உள்ளது. 2005-ஆம் ஆண்டு கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது 6 சதவிகித இந் தியர்கள் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

சீனா முதலிடம்

ஒட்டு மொத்த இந்தியாவில் கணக்கிட்டால் 81 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுட னும் 13 சதவிகிதம் பேர் மத ஈடுபாடு இல்லாம லும், 3 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இல் லாதவர்களாகவும் உள் ளனர். நமது அண்டை நாடான சீனா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளது. அங்கு 48 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

சீனாவில் 14 சதவிகித மக்களே கடவுள் நம்பிக் கையுடன் உள்ளனர். அது போல ஜப்பானில் 16 சதவிகித மக்களே கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் செக் குடியரசு 20 சதவி கிதம், பிரான்சு 37 சதவிகிதம், தென் கொரியா 52 சதவிகிதம் நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

பாகிஸ்தான்

உலக அளவில் பாகிஸ்தானில் கடவுள் நம்பிக்கையுடன் அதிக மக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் தற்போது 6 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இருப்பவர் கள் பட்டியலில் சேர்ந் துள்ளனர்.

ஆனாலும் நாத்திக அமைப்புகளும் முஸ்லிம் நாடுகளில் தோன்றிட ஆரம்பித்துள்ளன.
   -------------------"விடுதலை”28-5-2013

33 comments:

தமிழ் ஓவியா said...


சட்டம் ஒழுங்கு - அபாய நிலை!


நாட்டில் சட்டம் ஒழுங்கு வெகு நேர்த்தியாக இருப்பதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்படு கிறது; அவ்வப்பொழுது அரசு சார்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் அன்றாடம் நாட்டில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் வேறு எப்பொழுதும் கேள்விப்படாதவை - நடக் காதவை.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து கொலை. ஆளுங் கட்சிக்காரர்களேகூட கொல்லப்படுகிறார்கள் - இரவு நேரத்தில் மட்டுமல்ல; பட்டப் பகலிலேயே கொலைகள் பட்டவர்த்தனமாக நடைபெறத் தொடங்கி விட்டன.

ஏதோ குக்கிராமங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைப் பெரு நகரத்திலேயே குலை நடுங்கும் கொலைகள்.

காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தருமபுரி மாவட் டத்தில் தொடங்கப்பட்ட - தாழ்த்தப்பட்டவர் களின் பகுதிகள் எரிப்பு என்பது இப்பொழுது மரக்காணம் வரை பரவி விட்டது.

அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் நிலைமையைச் சமாளித்து விட்டதான நெருப்புக் கோழி மனப்பான்மை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி விடாது.

மக்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் வன்முறையை நேரில் கண்டு கொண்டு தானிருக்கிறார்கள் - ஏடுகளிலும் படித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப்படாது.

வீட்டைப் பூட்டி விட்டு வெளியூருக்குச் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ள பொருள்கள், நகைகள் பணத்திற்கு உத்திரவாதம் கிடையவே கிடையாது.

வெளியூர் சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறையில் ஓய்வும் எடுத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக, எந்தவிதப் பதற்றமுமின்றிப் பொருள்களை வாரிச் சுருட்டிக் கொண்டு, வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி செல்லுகிறார்கள் என்றால் இவை எல்லாம் சினிமாவில் நடப்பதுபோல் தெரியவில்லையா?

காவல் நிலையம் அருகே படுகொலை என்றெல்லாம் செய்தி வருகிறது.

பட்டப்பகலில் நடந்து செல்லும் பெண்களின் நகைகள் பறிக்கப்படுவது சர்வ சாதாரணம். தங்க நகை என்று நினைத்துப் பறித்துச் சென்றவன், அது போலி என்று தெரிந்து கொண்டபிறகு, அந்தப் பெண்ணிடம் திரும்பி வந்து ஓர் அறை அறைந்து விட்டுச் சென்றான் என்று எல்லாம் சேதி வருகிறதே - இது எங்கே கொண்டு போய் விடும்?

கொலைகாரர்களும், கொள்ளைக்காரர் களும் எளிதாக பிணை பெற்று வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக் கிறது. பிணையில் வெளிவந்த ஆளே வெட்டிக் கொல்லப்படும் செய்தியும் வருகின்றது.

இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல - வாய்ச் சவடால் விடுவதற்கு; மக்களின் உயிருக்கும், உடைமைக்கு உத்தரவாதம் என்பது மிகவும் அடிப்படை உரிமைப் பிரச் சினை. இதனைச் செய்து கொடுக்க முடியா விட்டால் அரசாங்கம் இருப்பது என்பதற்கே பொருளில்லாமல் போய் விடும்.

மூல காரணத்தைக் கண்டு அறிவதில் அரசும், காவல்துறையும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.

தேவை வெறும் அறிக்கையல்ல - நடை முறையில் மாற்றம்தான்!

ஊடகங்கள் மவுனசாமியார் ஆகிவிட்டன என்ன பின்னணியோ! யார் அறிவார் பராபரமே!28-5-2013

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது


உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.

(விடுதலை, 28.10.1967)

தமிழ் ஓவியா said...



இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்குமா? கலைஞர் கேள்வி


சென்னை, மே 28- இலங்கையில் அதிபர் ராஜபக்சே, அமைச்சர்கள், ஆளும் கட்சியினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இலங்கையில் 13 ஆவது சட்டத்திருத்தத்தை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் (28.5.2013) முரசொலியில் தனது கேள்வி - பதிலில் கூறியுள்ளதாவது:

கேள்வி: இலங்கை - வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கான தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்திற்கு ஆபத்தை உருவாக்குவ தற்கான முயற்சிகள் வலுப்பெற்று வருகின் றனவே?

கலைஞர்: தமிழீழப் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்கிடும் பிரச் சினை விவாதிக்கப்பட்டு, 1987 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டதே ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் மிக முக்கியமானதொரு மைல்கல் என வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழர்களின் மாகாணத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே வழங்கிடக்கூடிய வகையில், இலங்கை அரசியல் சட்டத் தின் 13 ஆவது திருத்தம் மேற்கொள் ளப்பட்டது. தமிழ் இனம் குறித்து சிங்கள அரசு டன் ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது இல்லை என்ற எதிர்மறைப் பின்னணியைக் கொண்டது இலங்கை அரசியல் வரலாறு.

தமிழ் ஓவியா said...

அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே, ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான உருப்படியான முயற்சிகள் எதையும் ஜெயவர்த்தனாவும் மேற்கொள்ளவில்லை; அவருக்குப் பிறகு இலங்கை அதிபர்களாகப் பொறுப் பேற்றுக் கொண்டவர்களும் மேற் கொள்ளவில்லை.

இலங்கை அதிபர் ராஜபக்சே, 13 ஆவது திருத்தத்திற்கு அதிகமாகவும் அதிகாரம் வழங்கப் போவதாக உறுதிமொழி அளித்து, இந்தியாவையும் உலக நாடுகளையும் நம்பவைத்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா 17.1.2012 இல் அதிபர் ராஜபக் சேவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய தற்குப் பிறகு, அதிபர் ராஜபக்சே அரசி யல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்திற்கு அதிகமாகவும் அதிகாரம் வழங்கும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்'' என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், நாடாளுமன்றத் தேர்வுக்குழு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆலோசனையை வழங்கும் என்று 2012 பிப்ரவரி மாதம் அறிவித்து, தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்தார் அதிபர் ராஜபக்சே. சிங்களப் பேரினவாதிகள் 13 ஆவது சட்டத் திருத்தத்தை எப்படியா வது ரத்து செய்ய வேண்டும் என்பதற் கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை அமைச்சர் சம்பிகே ரணவகா என்பவர், இலங்கை வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத் துவது என்பது போரில் இறந்த இலங்கை ராணுவ வீரர்களை அவமதிக்கும் நிகழ் வாகும் என்று பேசியிருக்கிறார்.

அவர் ஜதிகா ஹேலா உருமயா கட்சி யின் கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வ தற்கும் மாகாண கவுன்சில் திட்டத்தை நீக்கம் செய்வதற்கும் தனிநபர் தீர்மானம் ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக் கிறார். இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி, நிலம் தொடர்பாகவும், காவல்துறை தொடர்பாகவும் அதிகாரம் வழங்குவது என்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தி, தேச ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். இலங்கையில் ஆளும் கூட்டணியில் உள்ள ஜதிகா ஹேமா உருமயா, ஜதிகா நிதாகாஸ் பெரமுனா, தேசிய விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் தொடர்ந்து 13 ஆவது திருத் தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக் கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

இவற்றுக் கிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீ சுடன் 17.5.2013 அன்று பேசி, 13 ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தும் எவ்வித முயற்சியையும் இலங்கை மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் அதிபரும், அமைச்சர் களும், ஆளுங்கட்சியும், அதன் கூட்ட ணிக் கட்சிகளும் தொடர்ந்து மேற் கொண்டு வரும் பிடிவாதமான முயற்சி களின் விளைவாக; இலங்கை வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக் குறி யாகி இருக்கிறது. - இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது கேள்வி பதிலில் கூறியுள்ளார். 28-5-2013

Aashiq Ahamed said...

தமிழ் ஓவியா தளத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

//இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது//

//இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை குறைந்து விட் டது உறுதியாகி உள்ளது.//

உங்கள் தளத்தின் இந்த கருத்து உண்மைக்கு புறம்பானது. முதலில் இந்த ஆய்வு நடத்தியவர்களின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை இங்கு தந்து விடுகின்றேன். பாருங்கள்: http://redcresearch.ie/wp-content/uploads/2012/08/RED-C-press-release-Religion-and-Atheism-25-7-12.pdf

நம் ஊரிலேயே மூன்று வகையான மனிதர்களை பார்த்திருப்போம். 1) மத நம்பிக்கைகள் மீது பற்றுக்கொண்டு அதன்படி நடக்க விரும்புபவர்கள் 2) ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மத கோட்பாடுகளை பின்பற்றாமல் அசட்டையாக இருப்பவர்கள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் சார்ந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில் அலட்சியமாக இருப்பவர்கள். 3) நாத்திகர்கள், அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்.

மேலே சொன்ன மூன்றில் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால்

1) Are you religious?
2) Are you not religious?
3) Are you a convinced Atheist?

இந்த அடிப்படையில் இந்தியர்கள் மூன்று சதவிதம் மட்டுமே தங்களை நாத்திகர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். 2005-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது ஒரு சதவிதம் குறைவே. 81% மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதாகவும், 6% மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை எனவும் (கவனிக்கவும், இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இல்லை).

ஆக மொத்தத்தில், இந்த ஆய்வின் படி, இந்தியாவில், நாத்திகர்களின் எண்ணிக்கை தான் குறைந்திருக்கின்றதே ஒழிய ஆத்திகர்களின் எண்ணிக்கை அல்ல. ஆம், மத கோட்பாடுகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது. அனால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

உங்களின் இந்த பதிவு தலைப்பும், இந்தியா பற்றிய ஆய்வு தகவல்களும் தவறான வழிகாட்டுதலாகும். இதே கட்டுரை விடுதலை பத்திரிக்கையில் வந்திருந்தால், ஆய்வு நடத்தியவர்களின் கருத்தை தவறாக சித்தரித்து அவர்களை கேலிக்குள்ளாக்கும் அணுகுமுறையாகும்.

நானும் என்னை போன்ற பலரும் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியார் அவர்கள் சார்ந்த இயக்கத்தை சிறந்தவர்கள் இப்படியாக செயல்படுவது வருத்தத்தை தருகின்றது. ஆகையால் தாங்கள் இந்த பதிவை திருத்தி, உண்மைக்கு ஏற்றமாறு அமைக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

தங்களின் இந்த பதிவு குறித்த மறுப்பையும் வெளியிட்டுள்ளேன் பார்க்க

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனரா? 'விடுதலை' தள புரட்டுக்கு பதிலடி..http://manithaabimaani.blogspot.com/2013/05/blog-post_28.html

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கேள்வி: மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கலைஞர்: அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பைக் கூறுகிறேன். அந்தக் கருத்துக் கணிப்பு 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதற்கும் தற்போது எடுக்கப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதாக உள்ளது. 2005ஆம் ஆண்டு உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக மத நம்பிக்கை கொண்டி ருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை எடுத்த போது, இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் மத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மத நம்பிக்கைபற்றி அண்மையில் உலகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. 51 ஆயிரத்து 927 பேரிடம் இதுபற்றி கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு மத நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 6 சதவிகித அளவிற்கு இந்தியர்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலுக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தக் கணக் கெடுப்பில் தெரிய வந்திருப்பது, சீனாவில் 47 சதவிகிதம்; ஜப்பானில் 31 சதவிகிதம்; செக் குடியிருப்பில் 30 சதவிகிதம்; பிரான்சில் 29 சதவிகிதம்; இந்தியாவில் 3 சதவிகிதத்தினர் தான் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மே 29- இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டு கோள் என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: தமிழக மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு, தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் திரு. ஏ.கே. அந்தோணி தஞ்சையில் கூறியிருக்கிறாரே?
கலைஞர்: இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வரு கிறது; ஆனால் தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழ கத்தில் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சை யில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத் தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். இந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டு கோளை விடுத்து விளக்கியுள்ளோம். இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்களே, இலங்கையில் தமிழர் மறு வாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்தியாவில் இலங்கை ராணு வத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகா ரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை என்று கூறினார். அப்போதே அதற்குப் பதி லளித்த மத்திய அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை. இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.

அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத் தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் புரிந்து கொண்டு அதற் கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கை யாகும்.

தமிழ் ஓவியா said...


தன் உண்டியலையே காக்க முடியாத வழக்கறுத்தீஸ்வரர்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
புதன், 29 மே 2013 15:51
0 Comments
E-mail Print

காஞ்சிபுரத்தில் திருட்டு நடைபெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவிலையும், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் காணலாம்.

காஞ்சிபுரம்: கோவிலில் மூன்று உண்டியல்கள் உடைத்து திருட்டு காஞ்சிபுரம், மே 29- காஞ்சீபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் உள்ள மூன்று உண்டியல்களை உடைத்து அதில் உள்ள பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த கோவிலுக்கு வந்து, ஒரு மண்டலம் நெய் தீபம் ஏற்றினால் தீராத வழக்குகளில் கூட வெற்றி பெறலாமாம்.

இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் காஞ்சிபுரம் வந்து இந்த கோவிலில் வழிபட்டு செல்கின்றனராம். இந்தக் கோவிலின் உள்ளே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து, கோவிலின் வளாகத்தில் உள்ள மூன்று உண்டியல்களை உடைத்து அதில் உள்ள பணம், சில்லறை நாணயங்களை திருடிச்சென்று விட்டனர். அதிகாலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த குருக்கள், மூன்று உண்டியல்களும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி விஜயனுக்கு தகவல் கொடுத்தார். அவர், சின்ன காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தன் உண்டியலையே காப்பாற்றிக் கொள்ள முடியாத வழக்கறுத்தீஸ்வரர் பக்தர்களின் வழக்குகளை எப்படித் தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்.

தமிழ் ஓவியா said...

தன்னையே காத்துக்கொள்ள முடியாத அம்மன் - பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பாளா?

அம்மன் கோவிலில் சிலை உடைப்பு

தேனியருகே உள்ள குன்னூர் அம்மச்சியாபுரம் மலையடிவாரத்தில் உள்ள வீரகதிரியம்மாள் கோவிலில் உள்ள அம்மன் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டிப்பட்டி, மே 29- தேனி அருகே குன்னூர் அம்மச்சியாபுரம் உள் ளது. இந்தக் கிராமத்தை யொட்டி உள்ள மலை யடிவாரத்தில் வீரகதிரி யம்மாள் கோவில் அமைந்துள்ளது. ஆள் நட மாட்டம் இல்லாத இந்தக் கோவிலுக்கு நேற்று காலையில் சிலர் சாமி கும்பிட சென்றனர். அப் போது கோவிலில் உள்ள அம்மன் சிலையில் தலை மற்றும் கால் பகுதி உடைக்கப்பட்டு இருப் பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் விரைந்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆண்டிப்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயபாஸ்கரன், ஆய்வாளர் நல்லு, உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கூடியிருந்த மக்களை சமாதானப் படுத்தினர். மேலும் சிலையை உடைத்தவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கோவிலில் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து க.விலக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் அமைந்துள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத அம்மன் எப்படி பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பாள். அம்மனுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு தேவைப்படுகிறதே. கடவுளுக்குச் சக்தியில்லை என்பது இங்கே நிரூபணமாகியுள்ளது.

தமிழ் ஓவியா said...

அம்மன் சிலையைக் காணவில்லையாம்!

ஆனைமலை, மே 29- கோவிலில், துர்க்கை அம்மன் சிலை காணாமல் போனதாம். கோவை மாவட்டம், ஆனைமலையில், ஆற்று விநாயகர் கோவில் உள்ளது. இந்தக் கோவில், நான்கு மாதங்களுக்கு முன், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாம்.

நேற்று முன்தினம், இந்தக் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலையை, யாரோ சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனராம். தகவலறிந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் திரண்டனராம். ஆனைமலை சக்தி பாலமுருகன் காவடி குழுச் செயலாளர் குப்புராஜ், ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில், சேதப்படுத்தப்பட்ட சிலை, நேற்று காணாமல் போனதாம். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனராம்.

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியடையும்!



நமக்குப் புதிதாகக் கருத்துச் சொல்லக்கூடியவர்கள் கூட இப்போது தேவையில்லை. நம் கருத்துகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இல்லாமலிருந்தாலே போதும். மனித அறிவும், சமுதாயமும் நல்ல வண்ணம் வளர்ச்சியடையும்.
(விடுதலை, 24.7.1969)

தமிழ் ஓவியா said...


திராவிடக் கட்சிகளுடன் உறவு கிடையாதா? கூட்டணி வைக்க பாமகவை யாரும் அழைக்கவில்லையே: மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை, மே 29-திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட வாரியாக மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம், நேற்று (28.5.2013) காலை அன்பகத்தில் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் மா.சுப்பிர மணியன், அசன் முகமது ஜின்னா, சுபா சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு, துணை அமைப்பா ளர்கள் வடிவேல், ஆனந்தம், சுரேஷ், பிரபாகர் ராஜா, ஆனந்த் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
ஓராண்டுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்தில் விதிக்கப்பட்ட சில விதிமுறைகள் அடிப் படையில் நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்ந் தெடுத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் 5000 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஓராண்டு செயல்பாடு பற்றி கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சரியாக பணியாற்றாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. சில இடங்களில் மாற்றப்பட வேண்டிய நிலையும் இருக்கிறது. அந்த பணியும் முறைப்படுத் தப்படும்.

கேள்வி: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது?

பதில்: சட்டம், ஒழுங்கே இல்லை. பிறகு எப்படி எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியும்.

கேள்வி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளாரே?
பதில்: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. 2006இல் கலைஞர் முதல்வ ரான பிறகு, மீண்டும் அந்த திட்டத்தை முழுவீச்சில் முடுக்கிவிட்டார். நானும், அதிகாரிகளும் ஜப்பான் சென்று தேவையான நிதியை பெற்று வந்தோம். 90 சதவீத பணிகள் திமுக ஆட்சியில் முடிந்துவிட்டது.
2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த பணிகளை தொடர்ந்திருந்தால் 6 மாதத்தில் திட்டம் முழுமையாக முடிந்திருக்கும். ஆனால், அப்படி செய்யாத தால் தேக்க நிலை இருந்தது. இப்போது கூட, பணிகள் முழுமை பெறவில்லை. அவசர கோலத்தில் திறந்து வைக்கப்படுகிறது என்று செய்தி வந்துள்ளது. இதுதான் உண்மை. பல பகுதிகளில் பணிகள் முழுமை அடைய வில்லை. புதிய தலைமைச் செயலகம், சேது சமுத்திர திட்டம் போல், இந்த திட்டத்தையும் கிடப்பில் போடாமல், திறந்து வைப்பது வரவேற்கதக்கது. மீதமுள்ள பணிகளை முழுமையாக முடித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

கேள்வி: ராமதாசை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில்: நான் அவரை சந்திக்கவில்லை. மருத்துவ மனையில் இருந்த துரைமுருகனை சந்தித்து உடல்நலம் விசாரிக்க சென்றேன். அப்போது, எதிர் அறையில் ராமதாஸ் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் கட்சியை சேர்ந்த தனராஜ் இதை தெரிவித்ததால் நான் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தேன்.

கேள்வி: திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அன்புமணி கூறியிருக்கிறாரே?

பதில்: எந்த திராவிட கட்சியினர் இவர்களை அழைத் தார்கள் என்று தெரியவில்லை.

கேள்வி: அய்பிஎல் சூதாட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடுமா?

பதில்: இதுபற்றி கட்சித் தலைவர் கலைஞர் அறிவிப்பார்.

தமிழ் ஓவியா said...


கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற பெண்ணைத் தாக்கி ஆறு பவுன் செயின் பறிப்பு



வேளாங்கண்ணி, மே 29- வேளாங் கண்ணி அருகே வழிவலம் குலப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (35). இவரது மனைவி பாரதி (27). இவர் நேற்று மாலை அருகிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது பாரதி பின்னால் நடந்து வந்த ஒருவர் திடீரென பாரதியின் தலையில் அடித்தார்.
இதில் நிலை தடுமாறி பாரதி கீழே விழுந் தார். அப்போது அந்த நபர் பாரதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துச் சென்றார். இது குறித்து பாரதி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


தடையானவர்கள்



மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் இமயமலை போன்ற தடையானவர்களும், கேடானவர்களும், நமது சோசியர்களும், மந்திரவாதிகளும், மத, புராண, இதிகாசப் பிரச்சாரகர்களும் ஆவார்கள்.
(விடுதலை, 4.4.1968)

தமிழ் ஓவியா said...


பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!



கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாக மோசடி!

திருட்டைக் கண்டுபிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!!


சென்னை, மே 30- திருட்டைக் கண்டு பிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை - மழை பெய்ய கழுதைகளுக்கும் திருமணமாம் - கிடா வெட்டி சிறப்புப் பூஜை யாம் - கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாகக் கூறி பெண் ணிடம் நகை மோசடி செய்தவர் கைது போன்ற பக்தியின் பெயரால் நடக்கும் மோசடிகள் - மூடநம்பிக்கைகளை இங்கே காணலாம்.

தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!

குஜராத்தில் ரூ. 3 லட்சம் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட 10 பேரை தீச்சட்டியில் கையை விட சொன்ன சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட் டத்தின் கனா கிராமத் தில் ஒருவரது வீட்டில் கடந்த ஞாயிறன்று ரூ. 3லட்சம் திருடு போனது. இது குறித்து சந்தேகத் தின் பேரில் அக்கி ராமத்தைச் சேர்ந்த 10 பேரை பிடித்து விசாரித் தனர்.அவர்கள் நாங்கள் திருடவில்லை என கூறினர். அப்படியெனில் அங்குள்ள கோயில் ஒன்றில் தீச்சட்டிக்குள் கையைவிட்டு திருட வில்லை என கூற வேண் டும் என கட்டாயப் படுத்தினர். நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 10 பேரின் கையும் தீயில் கருகின. சம்பவம் தொடர் பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரிக்கின் றனர். தீக்காயங்களுடன் 10 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மந்திரித்துத் தருவதாக கூறி நகை மோசடி

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த வர் காளிமுத்து. ஜவுளிக் கடை அதிபர். இவரது மனைவி சுந்தரம்மாள், (வயது 55). இவர்களின் கடையில் வேலை செய்தவர் மாரிமுத்து, (வயது 26). சில ஆண்டுகள், மாந்த்ரீகம் கற்பதற்காக வெளியூர் சென்று விட்டார். பின், ஊர் திரும்பியவர், சுந்த ரம்மாளிடம், தொழில் அபிவிருத்திக்கும், தோஷம் கழிக்கவும், நகைகளை மந்திரித்து தருவதாக கூறியுள்ளார். சினிமா பாணியில், கொஞ்சம், கொஞ்சமாக பணம், நகை வாங்கி மோசடி செய்துள்ளார். இதற்கு இவர்கள் வீட்டில் வேலை செய்த மாரியம்மாள், (வயது 56), என்பவரும் உடந் தையாக இருந்துள்ளார்.

இருவரும், 118 பவுன் நகை, 7.25 லட்சம் பணம் மோசடி செய்து உள் ளனர். இது பற்றி, சுந்த ரம்மாள் சின்னமனூர் காவல்துறையில் புகார் செய்தார். காவலர்கள், மாரிமுத்துவை கைது செய்தனர்.

கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் கடந்த ஆண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்த தால் நடப்பாண்டு மேட்டூர் அணை வறண்டு விட்டது. தமிழக எல் லையில் மேட்டூர் அணை கரையோரம் கோவிந்தபாடி, செட் டிப்பட்டி, காவேரிபுரம், கருங்கல்லூர் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது.

கடும் வறட்சியால் அணை வறண்டதால் கரையோர கிராமங் களில் நிலத்தடி நீர், 800 அடிக்குக் கீழே சென்று விட்டது. இதனால் விவ சாய பணிகளும் முடங் கியதால் மக்கள் அவதிப் படுகின்றனர். கழுதை களுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம் பிக்கை அப்பகுதியில் நிலவுகிறது.

இதனால், அணை கரையோரம் உள்ள காவேரிபுரம் கிராம மக்கள் நேற்று அங் குள்ள வினாயகர் கோயில் முன், கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். பின், தாரை, தப்பட்டை முழங்க கழுதை தம்பதியரை கிராமங்களில் வீதி, வீதியாய் அழைத்து சென்றனர். வீதிகளில் பெண்கள் கழுதை களுக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினராம்!

கழுதைகளுக்கு திரு மணம் செய்து வைத்த மாணிக்கம் கூறியதா வது: கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற அய்தீகம் எங்கள் பகுதியில் நிலவுகிறது. எங்கள் பகுதியில் ஒரு ஆண் கழுதை இருந்தது. அதற்கு திருமணம் செய்து வைப்பதற்காக சுற்று கிராமங்களில் பெண் கழுதைகள் தேடி யும் கிடைக்கவில்லை.

அருகிலுள்ள கருங் கல்லூர் கிராமத்தில் பெண் கழுதை இருப்ப தாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் கருங் கல்லூர் சென்று நாங் கள் கழுதை உரிமை யாளிடம், "முறைப்படி' பெண் கேட்டோம். ஆனால், அவரது பெண் கழுதைக்கு திருமணம் செய்து வைக்க, அவர் மறுத்து விட்டார். வேறு வழியின்றி நள்ளிரவில் கருங்கல்லூர் சென்று மணப்பெண்ணை (கழுதை) கடத்தி வந்து விட்டோம்.

இதனால், மணப் பெண் தரப்பில் திரும ணத்தில் யாரும் பங்கேற் கவில்லை. திருமணத்தை சிறப்பாக நடத்தியதைத் தொடர்ந்து, பெண் வீட்டார் சமாதானமாகி விட்டனர். முதல் முறை யாக கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதால், எங்கள் பகுதியில் மழை பெய்யும் என நம்பு கிறோம், என்றார். இப் படியும் ஒரு மூடந ம்பிக்கை.

தமிழ் ஓவியா said...

பெண்களிடம் 25 சவரன் பறிப்பு

காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயிலில் நேற்று தேர்த் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கூட்டத்துக்குள் திருடர் கள் புகுந்து கைவரிசை காட்டினர். காஞ்சிபுரம் புத்தாகரத்தை சேர்ந்த பூதேரியம்மாளிடம் நான்கரை பவுன் செயின், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி யிடம் 2 சவரன், ஜோதிமாலா என்பவரி டம் 5 சவரன், ராஜேஸ் வரியிடம் 5 சவரன் செயினை திருடர்கள் பறித்தனர். இதுபோல் சென்னை கூடுவாஞ் சேரியை சேர்ந்த செண் பகத்திடம் 5 சவரன் செயின், சென்னை கொரட்டூரை சேர்ந்த இந்துமதியிடம் மூன் றரை சவரன் செயினை பறித்தனர். செயினை பறி கொடுத்தவர்கள் கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந் திருந்த காவலர்கள் திருடர்களை தேடினர். ஆனால் கூட்டத்தில் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கொடுக் கப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில், சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை வேண்டி அணையில் கிடா வெட்டி சிறப்புப் பூஜையாம்!

நாகர் கோவில் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே நாகர்கோவில் நகரசபை சார்பில், மழை வேண்டி முக்கடல் அணை பகுதியில் உள்ள ஆலமரத்து இசக்கி அம்மன் கோவில் முன்பு யாகம் வளர்த்து வழி பாடு நடத்தப்பட்ட தாம்! பின்னர் கிடா வெட்டி அம்மனுக்கு படைத்து சிறப்புப் பூஜைகளும் நடத்தப் பட்டனவாம்! இந்த சிறப்பு பூஜை குறித்து நகரசபை தலைவி மீனாதேவி கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. அணை களிலும் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வருவ தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியில் உள் ளது. இந்த ஆண்டாவது பருவ மழை பெய்தால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடியும். இதனால் முக் கடல் அணை அருகே உள்ள இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினால் மழை பெய்து பஞ்சம் தீரும் என்று அந்த பகுதி மக்கள் கூறினர். எனவே தான் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்து கிறோம் என்று அவர் கூறியுள் ளார். இப்படி ஒரு மூடநம்பிக்கை.

தமிழ் ஓவியா said...


புலிகளின் மனைவிகளுக்கு இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை!


கொழும்பு, மே 31- இலங்கையில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் மனைவிகள் இலங்கை ராணுவத்தின ரால், பாலியல் வன் கொடுமைக்கு ஆளாவ தாக தெரிய வந்துள்ளது. இலங்கை திரிகோண மலை பகுதியில் வாழும் முன்னாள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அவ்வப்போது விசா ரணை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் படுவது உண்டு, அத் தகைய சூழ்நிலைகளில் அவர்களை காவலில் அடைத்துவிட்டு அந்த குடும்பத்தின் பெண் களிடம் இலங்கை ராணுவத்தினர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொள்வது தற் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியன்று இலங்கை யின் சுதந்திர தின கொண்டாட்டங்களை அடுத்து கட்டாய்-பாரிச்சான் ராணுவ முகாமில் இருந்து வந்த வீரர்களால், மூத்தூர் என்ற இடத்தில் இருந்து 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் திருமணமானவர்கள். சிலரின் மனைவிகள் முன்னாள் பெண் புலிகள். கணவன்மார் களை சிறையில் அடைத்து விட்டு, வீட்டில் தனியாக இருக்கும் அவர்களது மனைவிகளை இலங்கை ராணுவத்தினர் அத் துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றன ராம். இது குறித்து, மூத்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த முன் னாள் பெண் புலியான கந்தபோடி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய ராணுவத்தினர் முயன்றதாக தெரிவித் துள்ளார். மேலும், தங் கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிங்களர்களும் தமிழ் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வும், இரு வாரங்களுக்கு முன்னர், கந்தபோடி தனது குடிசையில் தனி யாக இருந்தபோது நள் ளிரவில் குடிசைக்குள் நுழைந்த நபர் ராணுவ புலனாய்வு துறை அதி காரி என்று கூறிக் கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக வும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங் கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். - (விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...


இராமாயணம்

இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆகவேண்டும். இராமாயணப் பிரசாரம் ஒழுக்கக் கேட்டுப் (கிரிமினல் அண்டு இம்மாரல்) பிரசாரமாகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும் ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய் இரண்டணா ரேட்டுக்குக் குச்சுக்காரியாக இருந்து, தெருவில் போகிற சின்ன பையன்களையெல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன் இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து, ஏண்டா எங்கம்மா இழுத்தால் திமிரிக்கிட்டு ஓடப் பார்க்கிறாய் என்று பையனை அடித்தால், அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, அபிமானம், தாய்ப் பக்தி கொண்டவனாக ஆகிவிடுவானா?

உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப்பற்றி என்ன கருதுவார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது. ------------ தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!

பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள் பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாத வரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை. அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ? - மறைமலை அடிகள்

--------------சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்.

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும். பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும். அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தக சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வாழ வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டுதற்கு, அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு, நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
------------------அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா? - அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன் னகை விளங்குகிறது. நான் எப்பொ ழுதும் சிரித்துக்கொண்டே இருப்ப தால் என்னுடைய மத நம்பிக்கை, என் னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.

(தி இண்டு, 30.11.2002)

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தைப் பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவி உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

தமிழ் ஓவியா said...


சரியான கேள்வி



டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்களின் மதமும் மூடநம்பிக்கையும் நூலில், 55ஆம் பக்கத்தில் இருப்பது:-

ஆஞ்செலோ என்ற சிறந்த ஓவிய நிபுணன் மாதா கோயிலை ஓவியங் களால் அழகுப்படுத்தும்போது, செருப் புப் போட்டுக்கொண்ட தேவதைகளை வரைந்தானாம்.
அந்தப்படத்தைப் பார்த்த பாதிரி யார் ஒருவர், செருப்புப் போட்டுக் கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்தவர் யார்? என்று ஓவியனைப் பார்த்துக் கேட்டாராம்.
அதற்கு ஆஞ்செலோ தேவதை களை வெறுங்காலோடு பார்த்தவர்கள் யார்? என்று மறுமொழியாகக் கேட்டானாம்.

- தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (கி.அ)

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் அலோபதி மருத்துவம்


போர்த்துக்கீசியர்கள் இந்தியாவில் கோவாவிற்கு வந்தடைந்த பின்னரே அங்கு முதன் முதலில் ராயல் எனும் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின் இதன் தொடர்பாக மதச்சார்பற்ற முதல் நூலான இந்தியாவில் தாவரமும் மருந்தும் 1563இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்ப முடியாத நிலையில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் கடற்கரையோர நகரங்களில் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தியுள்ளனர்.

அந்நிலையில் தங்களுக்கும் தங்கள் சிப்பாய்களுக்கும் மருத்துவம் புரிய கிழக் கிந்திய வணிகக்குழுமம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு மருத்துவமனையினை 1664இல் நிறுவியது. இதன் பின்னர் இம்மருத்துவமனை நான்கு இடங்களில் மாற்றப்பட்டு தற்பொழுது சென்னை பொது மருத்துவமனை உள்ள இடத்தில் 1772இல் இரண்டு பகுதிகளாகத் தொடங்கப்பட்டது. 1842இல் இந்தியர்களுக்கும் இங்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனருகிலேயே 1835இல் சென்னை மருத்துவப் பள்ளியும் தொடங்கப்பட்டு பிறகு 1850இல் கல்லூரியாக மலர்ந்தது.

இக்கல்லூரி மாணவர்களுக்கு எல்.எம்.எஸ். என்ற பட்டத்தை வழங்கி நாடெங்கும் அலோபதி மருத்துவம் வளர உதவியது. இக்கல்லூரியே ஆகும்.

இது ஆசியாவின் முதல் மருத்துவக் கல்லூரியாகும்.

பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பதிப்பாசிரியர் முனைவர் இராதா செல்லப்பன்

- தகவல்: க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


இவர் தான் குடியரசு தலைவர்


பட்ஜெட் நிதி ஒதுக்கீடு - நிதி கமிஷனை நியமிக்கும் ஜனாதிபதிக்குத்தான் பட்ஜெட்டில் முதல் செலவு. ஜனாதிபதி மாளிகை தொடர்பான செலவுகளுக்கு சுமார் ரூ. 2,25 கோடியை ஒதுக்குவார்கள். சம்பளம் - மாதம் துல்லியமாக ரூ. 1,47,728 இதுபோக, கைச்செலவுக்கு என ஆண்டுக்கு ரூ. 15 லட்சம். இது பொழுதுபோக்கு, உடை, மற்றும் இன்னபிற செலவினங்களுக்காக.

வீடு அநேகமாக உலகிலேயே மிகப்பெரிய வீட்டில் வசிக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியாகத்தான் இருக்கும். மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் ராஷ்டிரபதி பவனில் சுமார் 340 அறைகள் இருக்கின்றன. பிரணாப் மத்திய அமைச்சராக ராஷ்டிரபதி பவனுக்கு வந்தபோது அங்கு உள்ள குதிரையின் பளபள பராமரிப்பைக் கண்டு அடுத்த ஜென்மத்துல ஜனாதிபதி மாளிகை குதிரையா பிறக்கணும் என்று ஆசை தெரிவித்தவர். ஜனாதிபதி குடும்பத்தினருக்கு எனப் பணிபுரிய 200 பணியாளர்கள் உண்டு.

ஜனாதிபதி பயணிக்க ரூ. 12 கோடி மதிப்பு உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் காரை வழங்குகிறது அரசாங்கம். குண்டு துளைக்காத, வெடி விபத்திலும் பாதிக்காத பாதுகாப்பான கார் அது. பயணச்செலவு - இது ஜனாதிபதியின் பயணங்களைப் பொறுத்தது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடந்த அய்ந்து வருடங்களில் ரூ. 205 கோடிக்குப் பயணச்செலவு காண்பித்து இருக்கிறார்.

விமானங்கள் - எந்த நேரமும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்குத் தேவைப்படும் என்று ஏழு விமானங்கள் தயார் நிலையிலேயே இருக்கும். அதில் நான்கு எம்ப்ரேர் விமானங்கள், மூன்று போயிங் விமானங்கள். இதில் எம்ப்ரேர் வகை விமானம் ஒன்றின் மதிப்பு ரூ. 140 கோடி. போயிங் விமானம் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து ரூ. 934 கோடி மதிப்பு உடையது.

_- ஆனந்தவிகடன் - 1.8.2012

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களால் சாகடிக்கப்பட்ட தெய்வங்கள்

தெய்வங்களைப் பற்றி ஆரியம் நமக்கு கற்பித்து வைத்திருக்கும் பாடங்களை நினைத்துப் பாருங்கள்! அவை வெறும் பயமுறுத்தல்கள். எல்லாம் சர்வ வல்லமை படைத்தவை அவை ஆக்கவும் அழிக்கவுமான பலம் பொருந்தியவை தாம் மட்டும் அழியாமல் என்றென்றும் நிலைத்து நிற்பவை தேங்களைப் போல அன்றும் இன்றும் அழியாதவை.

சரி, வேதப்பாடல்களில் பெரும்பாலும் வழிபட பெறும் இந்திரன், வருணன், அக்னி, பர்ஜள்யன், உஷா, நிஷா ஆகிய தெய்வங்களைப் பாருங்கள் இன்று இந்த தெய்வங்களை யாரேனும் வழிபடுகிறார்களா இவற்றுக்கான கோவில்கள் எங்கேனும் உண்டா இல்லையே அப்படியானால் அவையெல்லாம் செத்துப் போயிவிட்டன என்பதுதானே உண்மை என்றும் அழியாத ஒரு பொருள் இருந்ததுமில்லை இருப்பதுமில்லை. மனிதர்கள் தங்கள் தேவைக்கும் நம்பிக்கைக்கும் பார்ப்பனர்களின் பிழைப்பிற்கும் ஏற்ப உண்டாக்கியவை அவை. மனிதர்களைப் போலவே செத்துப்போய்விட்டன என்பது தான் உண்மை ஆனால் இன்றும் மழை இல்லாத காலங்களில் வருண ஜெபம் நடத்தி பார்ப்பனர்கள் பிழைப்பு தேடிக் கொள்கின்றனர்.

அது போலவே வெள்ளைச்சாமி என்ற பெயரைத் தமிழ் நாட்டில் மக்கட் பெயராக பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரும் இடுகின்றனர். மக்கள் வணங்கிக் கொண்டிருக்கிற தெய்வங்கள் எல்லாம் கருப்பு, கருநீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் தான் இருக்கின்றன ஆனால் வெள்ளை நிறத்தில் ஒரு தெய்வத்தை நாம் எங்கும் பார்த்ததில்லை. பார்ப்பனர்கள் கற்பித்த தெய்வங்களில் ஒன்று தான் இந்த வெள்ளைச்சாமி (ஆடீகூழஹடுடீழுலு) புராண மரபுகளின் படி இந்தத் தெய்வம் கிருஷ்ணனுக்கு அண்ணாவான கிருஷ்ணனை மட்டும் இன்று வரை வழிபடும் பார்ப்பனர்கள் வெள்ளைச்சாமியை மட்டும் ஏன் செத்துப் போகவிட்டு விட்டார்கள்?

இந்த தெய்வத்திற்கு தமிழகத்தில் எங்குமே கோவில்கள் இல்லை புராண மரபுகளின் படி இவன் ஒரு குடிகாரன். கையில் எப்போதும் மதுக்குவளையை வைத்திருப்பான். வெள்ளை நிறமுடையவன் என்பதால் இவனுக்கு வாலி என்ற பெயருமுண்டு வால் என்ற சொல்லுக்கு வெள்ளை என்று பொருள் எடுத்துக்காட்டாக வால்மிளகைப் பாருங்கள். இராமாயணத்தில் வரும் வாலி வெள்ளை நிறமுடைய குரங்கு. வெள்ளைச்சாமியுடைய கொடி பனைக்கொடி பனை திராவிட நாட்டின் பூர்வ தாவரமாகும். இவனுடைய வாகனம் உலக்கை வட மொழியில் முசலிவாகனம் என்றே இவனுக்குப் பெயர் முசலம் என்ற சொல்லுக்கு உலக்கை என்று பொருள் இவனுடைய ஆயுதம் கலப்பை உழவர்களை அடையாளங் காட்டுவதாகவும், மது குடிப்பதுமான அடையாளங்களாலும் பிற்காலப் பார்ப்பனர்களுடைய ஆசாரங்களுக்கு ஒத்துவரவில்லை என்பதால் இந்த தெய்வங்களை செத்துப் போகவிட்டுவிட்டார்கள். ஆனால் எளிய மக்கள் மட்டும் பலராமன், வெள்ளைச்சாமி, முத்துலக்கையன் ஆகிய பெயர்களோடு இந்த தெய்வத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள். இப்படி செத்துப்போன தெய்வங்களின் பட்டிலை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

- தொ.பரமசிவன்

தமிழ் ஓவியா said...


உறவு முறையில் திருமணம் வேண்டாம்!

குழந்தைகளின் பிறவி காது கேளாமை பிரச்சினைக்கு உறவில் திருமணம் செய்வதே முக்கியக் காரணம் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் நிர்வாக இயக்கு நரும், தலைமை காது-மூக்கு-தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணருமான மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 50 ஆயிரம் குழந்தைகளின் செவித் திறனை சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. ஆய்வு முடிவுகள் தொடர்பாக டாக்டர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

நாட்டிலேயே மிக அதிகமான குழந்தைகளிடம் (50 ஆயிரம் குழந்தைகள்) செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும். தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில், 6 குழந்தைகளுக்கு அதாவது 0.6 சதவீத குழந்தை களுக்கு பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. தேசிய சராசரியை (0.2 சதவீதம்) காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இது ஆறு மடங்கு அதிகமாகும்.

66 சதவீத குழந்தைகளுக்கு: ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது, காது கேளாமை பாதிப்புள்ள குழந்தைகளில் 66 சதவீத குழந்தைகளின் பாதிப்புக்கு உறவில் செய்யப்படும் திருமணமே காரணம் என்பதுதான். பேறு கால தொற்று நோய், எடைக் குறைவான குழந்தை, குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக குழந்தைக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் உறவில் திருமணமே முக்கியக் காரணியாக உள்ளது.

காக்ளியர் கருவி: பிறவிக் காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை காக்ளியர் கருவியை வெற்றி கரமாகப் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளது.
செவித்திறன் குறைபாடு உடைய குழந்தை களுக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள காக்ளியர் கருவியை இலவசமாக பொருத்த தமிழக அரசு உதவி செய்கிறது.
எனினும் உறவில் திருமணத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட செவித்திறன் குறைபாட்டைத் தடுப்ப தற்கான நடவடிக்கைகளில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் ஈடுபடுவது அவசியம் என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.
பிரபல காது, மூக்கு, தொண்டை (நுசூகூ) மருத்துவர் அறிவியல் பூர்வமாகச் சொன்னதற்குப் பிறகாவது பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்னும் ஜாதிக்குள் திருமணம் (ஜாதியைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ள பெரிய மனிதர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்!) செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மருத்துவர் சொன்னதைக் கவனிக்க வேண்டும்.

ஜாதகம் பொருத்தம் பார்க்காதீர் - குருதிப் பொருத்தம் பாரீர் என்று திருமண விழாக்களில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறி வந்துள்ளதன் நியாயத்தை உண்மையான டாக்டர்கள் கூறும்போது பொருத்திப் பார்க்கட்டும்.

ஒட்டு மாம்பழம் தான் இனிக்கும் என்பதுபோல ஜாதி கலப்பு - மறுப்புத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் தாம் நோயற்றும், அறிவு சிலிர்த்துக் காணப்படுவார்கள் என்பது அறிவியல் கூறும் உண்மையாகும்? திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபடுவது மனித சமத்துவத்துக்காக மட்டுமல்ல; விஞ்ஞான பூர்வமான உண்மையை உட்கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பாதையில் மிடுக்குடன், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அடிப்படையிலும்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு! 1-6-2013

தமிழ் ஓவியா said...


வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்


ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர்
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில் ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதில் கடைசியாக பிராமணர் - பிராமணரல்லா தாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக விஷயத்தில் பிராமணரல்லா தாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது. அக் குறையில்லாதபடி பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று பேசியிருக்கிறார். இது மிகவும் சரியான வார்த்தை; நாமும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதற்கு இந்தக் குறைகளைத்தான் சொல்லுகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால்தான் இக்குறைகள் நீங்கும்; அல்லது சுவாமி சிரத்தானந்தர் சொன்னபடிச் செய்தாலாவது கொஞ்சம் நீங்கலாம். இரண்டு மில்லாமல் ஸ்ரீமான்களான குழந்தையையும் ஓ.கந்த சாமி செட்டியாரையும், பாவலரையும், ஜயவேலரையும் பிடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண் டாம் என்று சொல்லக் செய்வதாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களைத் திட்டச் செய்வதினாலும் இக்குறை நீங்கி விடுமா? என்று கேட் கிறோம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

தேசபக்தன்

தேசபக்தன் பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும் வார மும்முறைப் பதிப்பாகும். இதன் ஆசிரியராயிருக்கும் திரு.கோ.நடேசய்யரைப் பற்றி நாம் நன்கு அறிவோம். தஞ்சையினின்று வெளிவந்த வர்த்தகமித்திரன் பத்திரிகையும் திரு.நடேசய் யரையே தன் ஆசிரியராகக் கொண்டிருந்தது. அக் காலை வர்த்தகமித்திரனில் ஒழுங்காகவும் தேச நலங்கருதியும் எழுதப்பட்ட கட்டுரைகளே வெளி வந்தன.

ஆனால் இப்பொழுது அதே திரு.நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட தேசபக்தன் தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்டையாகக் கூறப் புகின் தேசபக்தனும் பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூற வேண்டும். சென்னையில் நடைபெறும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் பார்ப்பனப் பிரசாரம் போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின் குடியைக் கெடுக்க மலாய் நாட்டில் தமிழ்நேசன் என்றும் இலங்கையில் தேசபக்தன் என்றும் இரு பார்ப்பனப் பத்திரிகைகள் தோன்றியுள்ள தென்றே கூறவேண்டும்.

கருப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது போல் பார்ப்பனப் பக்தனாக யிருப்பவன் தேசபக்தன் என்று பெயர் பூண்டு தமிழர்களைப் பாழ்படுத்த முயலுவதை நாம் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால் இதை இனித் தமிழ் மக்கள் ஆதரிப்பது கொள்ளிக்கட்டை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வதாகும்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 08.08.1926

தமிழ் ஓவியா said...

சென்னையில் திரு.எஸ்.ஆர்.தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும்

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர்.தாஸ் அவர்களின் தாயாதி சகோதரர். வங்காளத்தில் மாதம் நாற்பதினாயிரம் அய்ம்பதினாயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர். இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயி ருப்பவர். இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் பத்திரிகைகளின் மூலமாகவும் கோள் சொல்லுவதன் மூலமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தப்பபிப்பிராயங் களை அறிந்த நமது பனகால் அரசர் டெல்லிக்குப் போய் அரசப் பிரதிநிதி யாரிடம் நமது உண்மையான நிலையை எடுத்துச் சொன்னதன் பலனாய் வைசிராய் ஆச்சரிய மடைந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதாரின் உண்மை நிலைமையை நேரில் அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில் ஒரு பொறுப் புள்ள அங்கத்த வரான ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்களை அனுப் பியதாகத் தெரிந்தோம்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் சென் னைக்கு வந்ததும் சென்னை யிலுள்ள பார்ப் பனத் தலைவர்கள் ஒன்றுகூடி ஸ்ரீமான் ரெங் காச்சாரியார் பெயரால் ஸ்ரீமான்கள் திருப்பதி மகந்து, சர்.சதாசிவய்யர், மகாகனம் சீனிவாச சாஸ்திரி, ஜட்ஜுகள் குமாரசாமி சாஸ்திரி, சீனிவாசய்யங்கார், எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம்தாஸ், எ.வி.இராமலிங்கய்யர், வி.டி.கிருஷ்ணமாச்சாரி, சர்.சி.பி.இராமசாமி அய்யர், அட்வகேட் ஜெனரல் வெங்கட்டராம சாஸ்திரியார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.வரதாச்சாரி, கே.பாஷ்யம் அய்யங்கார் ஜி.எ.நடேசன் அய்யர் முதலிய பல பார்ப் பனர்கள் பெரிய விருந்து நடத்தி தாஸ் அவர் களை உற்சாகப்படுத்தினார்கள். இவ்விருந்தின் செலவின் பெரும்பாகம் திருப்பதி மகந்துவினு டையதென்று சொல்லப்படுகிறது.

இந்த விருந்துக்கு தன்னை சன்னியாசி என்று சொல்லிக்கொள்ளும் திருப்பதி மகந்தும், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர் களும் அரசாங்க சம்பந்தமான நபர்களுக்கு நடக்கும் விருந்து முதலியவைகளை பகிஷ்காரம் செய்து முட்டுக்கட்டை போடுகிறவர்களும், ஒத்துழையாமை நாற்றம் தங்கள் மீது வீசப்படு கிறதாகக் கூறிக் கொள்ளுகிறவர்களுமான ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம் தாஸ், கே.பாஷ்யம் அய்யங்கார் முதலிய பாப் பனர்களும் வந்திருந்ததிலிருந்தும், அவ் விருந்தில் வாலிபப் பெண்கள் மூலமாக சங்கீதம் நடத்தி ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசை ரம்மிக்கச் செய்ததிலிருந்தும் இவ்விருந்தின் சூழ்ச்சியும் தந்திரமும் விருந்து நடத்தியவர்களின் கருத் தும் நாம் சொல்லாமலே விளங்கும்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் விருந்துக்கு திருப்பதி மகந்தைத் தருவிக்க வேண்டிய காரணம் என்ன? பெண்களை அழைத்து சங்கீதம் நடத்த வேண்டிய அவசியமென்ன? திருவாடுதுறை மடத்திலிருந்து வந்ததாகச் சில விஷயங்களை ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசுக்கு அறிவிக்க வேண்டிய காரணம் என்ன? சர்க் காரை பகிஷ்கரிக்கும் சுயராஜ்யக் கட்சியார் அங்கு வர வேண்டிய வேலை என்ன? ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் கவர்னருக்குக் கொடுத்த ஒரு விருந்தின் போதே அது சுய ராஜ்யக் கட்சியாருடைய விருந்தல்ல, தனிப்பட்ட நபர் செய்த விருந்துமல்ல என்று சொல்லித் தப்பித்துக்கொண்ட நமது சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்கள் ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் என்கிற ஒரு தனிப்பட்ட நபர் நிர்வாக சபை மெம்பர் என்கிற சர்க்கார் பிரதிநிதி உத்தி யோகஸ்தருக்கு, அவர் சர்க்கார் வேலை சம்பந்த மாய் வந்திருக்கும் சமயத்தில் கொடுக்கப்படும் விருந்திற்கு இவர்கள் எப்படிப் போகக் கூடும்? இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நமது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இந்திய அரசாங்கத்தில் நமது பார்ப்பனர்கள் இதுவரை சொல்லி வந்திருக்கும் கோள்களையும், செய்து வந்திருக்கும் சூழ்ச்சிகளையும், கெடுதிகளையும் உண்மை என்று உறுதிப்படுத்துகிறது.
- குடிஅரசு - கட்டுரை - 08.08.1926

தமிழ் ஓவியா said...

இதற்கென்ன சொல்லுவார்கள்?

ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி யெனவும், மந்திரிகள் தம் நண்பர்களுக்கும் உற்றார் களுக்குமே பதவிகளை வழங்கி வருகிறார் களெனவும், சுயராஜ்யக் கட்சியார் சொல்லாத நாளே கிடையாதெனலாம். ஆனால் உண்மை என்ன? உத்தி யோக வேட்டையாடுபவர்கள் யார்? நண்பர்கட்கும் உற்றார்கட்கும் பாரபட்சமாய் இருப்பவர்கள் யார்? வேலூரில் ஜில்லா கோர்ட்டுக்குப் பப்ளிக் பிராசிகி யூட்டர் பதவிக்கு ஓர் பார்ப்பனர் சமீபத்தில் நியமிக் கப்பட்டிருக்கிறார். அவர் பெயர் திரு. நரசய்யர். ஏற்கனவே இரண்டு முறை களில் இவ்வுத்தியோகங்களிலிருந்தவர். இப்போது மூன்றாம் முறையும் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு வயதே 57. வேலூரில் இவரைத் தவிர தகுதியான வேறு வக்கீல்கள் இல்லையா? இவரை மூன்றாம் முறையும் நியமிக்க வேண்டிய காரணமென்ன? தவிரவும் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பப்ளிக் பிராசிகியூட்டர்களாக நியமிக்கப்படாது என்ற அரசாங்க உத்தரவுமொன்று இருக்கிற தென்று அறிகிறோம். அஃது உண்மையாயின் 57 வயதுள்ள திரு.நரசய்யர் மீண்டும் நிய மிக்கப்படுவானேன்? அந்த அய்யர் சட்ட இலாகா அங்கத்தவருக்குப் பந்து வென்று சொல்லப்படுகிறது. அதுதான் காரணமோ? பிராமணர்கள் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவைகள்கூட நியமிக்கப்படுகையில் பிராமணரல்லாதார்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? திவான் பகதூர் எம்.கோபாலசாமி முதலியாருக்கு மிகுந்த கஷ்டத்துடன் ஆறு மாதகாலம் வரைதான் உத்தியோகம் நீடிக்கப்பட்டது. ஆனால் தஞ்சாவூரிலே இப்போதுள்ள பிராமணப் பப்ளிக் பிராசிகியூட்டர் மூன்று ஆண்டுகளாய் வேலைபார்த்து வருகிறார். உத்தியோக வேட்டையாடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் உற்றார்களுக்கும் பாரபட்சமாய் நடந்துகொள் பவர்களும் யார்? நாமா அல்லது பார்ப்ப னர்களா?
- குடிஅரசு - பெட்டிச் செய்தி - 08.08.1926