Search This Blog

31.5.13

கடவுள் , மதத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட முடியும்?

கடவுளும், மதமும் கடைத்தேறப் போவதில்லை 

கடவுள் நம்பிக்கை இனி கரையத்தான் செய்யும். ஏதோ எந்தக் காலத்திலோ இடிக்கும் மின்னலுக்கும் பயந்து கற்பித்துக் கொண்ட கடவுள் மீதான பயம் இந்தக் காலத்தில் காலாவதியான ஒன்றாகும்.

கடவுள் படைப்புக் கொள்கை எல்லாம் பழைய பஞ்சாங்கமாகி விட்டது. டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மதம்  தன் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டு விட்டது.

பைபிளுக்கு விரோதமாக உலகம் உருண்டை என்று சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோ தண்டிக்கப்பட்டார். 360 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகன் போப் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இது அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்

 உயிர் களைப் படைத்தான் கடவுள் என்பதுதான் கடவுள் இருப்பதற்குக் கூறப்பட்ட மகத்தான காரணமாகும்.

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) விஞ்ஞானிகள் உண்டாக்கி உலகை வியக்க வைத்து விட்டனர். மதவாதிகளை வியர்க்கவும் வைத்து விட்டனர்.

நகலாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட போதே அந்தக் குலை நடுக்கம் கடவுள் மத வியாபாரிகள் மத்தியில் தொடங்கி விட்டது.

இது ஒரு புறம் இருந்தாலும் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரைச் சொல்லி நாட்டில் ஓட விடப்படும் மனித ரத்த வெள்ளம் கடவுள், மதங்களின் குரூரத்தை மக்கள் உணரும்படிச் செய்து வருகிறது.

ஈராக்கில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ்புஷ் படைஎடுத்து பல லட்ச மக்களைக் கொன்று குவித்ததற்கு என்ன காரணத்தைச் சொன்னார்? 

கடவுளிடம் அனுமதி பெற்றுத்தான் இந்தப் போரைத் தொடுத்தேன்! என்று சொல்லவில்லையா?

ஈழத்திலே பல லட்சக்கணக்கில் தமிழர்களின் உயிரைக் குடித்த வெறி சிங்கள வெறி மட்டு மல்லவே  மத வெறியும் அல்லவா கூட்டணி சேர்ந்து விட்டது! 

இவ்வளவுக்கும் கருணை, அன்பின் வடிவமான பவுத்த நெறி மதவெறியாகக் கூர் தீட்டப்பட்டு தமிழன் கழுத்துகளுக்கல்லவா அரிவாளாக, கோடரியாக மாற்றுருப் பெற்றது? 

இந்தியாவில் இந்துத்துவா கூட்டம் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு ராம் ராம் என்று உச்சரித்து அல்லவா இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தைத் துவம்சம் செய்தது?

குஜராத் மாநிலத்தில் என்ன நடந்தது? எத்தனை இலட்சம் அப்பாவி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டனர். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட வில்லையா? அந்தக் கருவை உருவி நெருப்பில் தூக்கியெறிந்து குதியாட்டம் போடவில்லையா? இந்தக் கொடியவர்களுக்கு வெறியூட்டி எரி நெருப்பைக் கையில் கொடுத்ததும் இந்து மதம் அல்லவா? இஸ்லாம் நாடுகளில்கூட நாத்திகம் முளைக்கக் காரணம் என்ன?

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் மீதும், மதத்தின்மீதும் மக்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட முடியும்?

அதன் விளைவுதான் உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகி வரும் அறிகுறிகள்!

கடவுள் - மதம் கூட்டணி வன்முறைகளை மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை, ஒழுக்கக் கேட்டையும் அல்லவா ஊட்டி வளர்க்கிறது.

சாமியார்களும் சாமியாரிணிகளும் செய்யும் அட்டகாசம் என்ன?

ஜெகத்குரு என்று சொல்லப்படுபவரே கொலைக் குற்றத்திற்கு ஆளாகி சிறையில் கம்பி எண்ணவில்லையா?

தப்பித் தவறி மதங்களும், கடவுள்களும் நிலைத் திருப்பதற்கு என்ன காரணம்?
இதோ தந்தை பெரியார் சொல்லுகிறார்:

மதங்களுக்குச் சீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமும் அல்லாமல் அவற்றின் உயர்ந்த கொள்கைகளோ, தத்துவங் களோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லி விட முடியாது

(தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் - 1928 நவம்பர் 26,27).

இனி அடுத்த கட்டம் பணமும், பிரச்சாரமும்கூட எடுபடாமல் போகும் நிலைதான்; எவ்வளவு காலத்திற்குத் தான் மக்கள் மயக்கத்திலேயே இருப்பார்கள்?
               ------------------------------"விடுதலை” தலையங்கம் 30-5-2013

23 comments:

தமிழ் ஓவியா said...


தடையானவர்கள்



மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் இமயமலை போன்ற தடையானவர்களும், கேடானவர்களும், நமது சோசியர்களும், மந்திரவாதிகளும், மத, புராண, இதிகாசப் பிரச்சாரகர்களும் ஆவார்கள்.
(விடுதலை, 4.4.1968)

தமிழ் ஓவியா said...


பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!



கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாக மோசடி!

திருட்டைக் கண்டுபிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!!


சென்னை, மே 30- திருட்டைக் கண்டு பிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை - மழை பெய்ய கழுதைகளுக்கும் திருமணமாம் - கிடா வெட்டி சிறப்புப் பூஜை யாம் - கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாகக் கூறி பெண் ணிடம் நகை மோசடி செய்தவர் கைது போன்ற பக்தியின் பெயரால் நடக்கும் மோசடிகள் - மூடநம்பிக்கைகளை இங்கே காணலாம்.

தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!

குஜராத்தில் ரூ. 3 லட்சம் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட 10 பேரை தீச்சட்டியில் கையை விட சொன்ன சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட் டத்தின் கனா கிராமத் தில் ஒருவரது வீட்டில் கடந்த ஞாயிறன்று ரூ. 3லட்சம் திருடு போனது. இது குறித்து சந்தேகத் தின் பேரில் அக்கி ராமத்தைச் சேர்ந்த 10 பேரை பிடித்து விசாரித் தனர்.அவர்கள் நாங்கள் திருடவில்லை என கூறினர். அப்படியெனில் அங்குள்ள கோயில் ஒன்றில் தீச்சட்டிக்குள் கையைவிட்டு திருட வில்லை என கூற வேண் டும் என கட்டாயப் படுத்தினர். நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 10 பேரின் கையும் தீயில் கருகின. சம்பவம் தொடர் பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரிக்கின் றனர். தீக்காயங்களுடன் 10 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மந்திரித்துத் தருவதாக கூறி நகை மோசடி

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த வர் காளிமுத்து. ஜவுளிக் கடை அதிபர். இவரது மனைவி சுந்தரம்மாள், (வயது 55). இவர்களின் கடையில் வேலை செய்தவர் மாரிமுத்து, (வயது 26). சில ஆண்டுகள், மாந்த்ரீகம் கற்பதற்காக வெளியூர் சென்று விட்டார். பின், ஊர் திரும்பியவர், சுந்த ரம்மாளிடம், தொழில் அபிவிருத்திக்கும், தோஷம் கழிக்கவும், நகைகளை மந்திரித்து தருவதாக கூறியுள்ளார். சினிமா பாணியில், கொஞ்சம், கொஞ்சமாக பணம், நகை வாங்கி மோசடி செய்துள்ளார். இதற்கு இவர்கள் வீட்டில் வேலை செய்த மாரியம்மாள், (வயது 56), என்பவரும் உடந் தையாக இருந்துள்ளார்.

இருவரும், 118 பவுன் நகை, 7.25 லட்சம் பணம் மோசடி செய்து உள் ளனர். இது பற்றி, சுந்த ரம்மாள் சின்னமனூர் காவல்துறையில் புகார் செய்தார். காவலர்கள், மாரிமுத்துவை கைது செய்தனர்.

கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் கடந்த ஆண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்த தால் நடப்பாண்டு மேட்டூர் அணை வறண்டு விட்டது. தமிழக எல் லையில் மேட்டூர் அணை கரையோரம் கோவிந்தபாடி, செட் டிப்பட்டி, காவேரிபுரம், கருங்கல்லூர் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது.

கடும் வறட்சியால் அணை வறண்டதால் கரையோர கிராமங் களில் நிலத்தடி நீர், 800 அடிக்குக் கீழே சென்று விட்டது. இதனால் விவ சாய பணிகளும் முடங் கியதால் மக்கள் அவதிப் படுகின்றனர். கழுதை களுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம் பிக்கை அப்பகுதியில் நிலவுகிறது.

இதனால், அணை கரையோரம் உள்ள காவேரிபுரம் கிராம மக்கள் நேற்று அங் குள்ள வினாயகர் கோயில் முன், கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். பின், தாரை, தப்பட்டை முழங்க கழுதை தம்பதியரை கிராமங்களில் வீதி, வீதியாய் அழைத்து சென்றனர். வீதிகளில் பெண்கள் கழுதை களுக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினராம்!

கழுதைகளுக்கு திரு மணம் செய்து வைத்த மாணிக்கம் கூறியதா வது: கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற அய்தீகம் எங்கள் பகுதியில் நிலவுகிறது. எங்கள் பகுதியில் ஒரு ஆண் கழுதை இருந்தது. அதற்கு திருமணம் செய்து வைப்பதற்காக சுற்று கிராமங்களில் பெண் கழுதைகள் தேடி யும் கிடைக்கவில்லை.

அருகிலுள்ள கருங் கல்லூர் கிராமத்தில் பெண் கழுதை இருப்ப தாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் கருங் கல்லூர் சென்று நாங் கள் கழுதை உரிமை யாளிடம், "முறைப்படி' பெண் கேட்டோம். ஆனால், அவரது பெண் கழுதைக்கு திருமணம் செய்து வைக்க, அவர் மறுத்து விட்டார். வேறு வழியின்றி நள்ளிரவில் கருங்கல்லூர் சென்று மணப்பெண்ணை (கழுதை) கடத்தி வந்து விட்டோம்.

இதனால், மணப் பெண் தரப்பில் திரும ணத்தில் யாரும் பங்கேற் கவில்லை. திருமணத்தை சிறப்பாக நடத்தியதைத் தொடர்ந்து, பெண் வீட்டார் சமாதானமாகி விட்டனர். முதல் முறை யாக கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதால், எங்கள் பகுதியில் மழை பெய்யும் என நம்பு கிறோம், என்றார். இப் படியும் ஒரு மூடந ம்பிக்கை.

தமிழ் ஓவியா said...

பெண்களிடம் 25 சவரன் பறிப்பு

காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயிலில் நேற்று தேர்த் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கூட்டத்துக்குள் திருடர் கள் புகுந்து கைவரிசை காட்டினர். காஞ்சிபுரம் புத்தாகரத்தை சேர்ந்த பூதேரியம்மாளிடம் நான்கரை பவுன் செயின், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி யிடம் 2 சவரன், ஜோதிமாலா என்பவரி டம் 5 சவரன், ராஜேஸ் வரியிடம் 5 சவரன் செயினை திருடர்கள் பறித்தனர். இதுபோல் சென்னை கூடுவாஞ் சேரியை சேர்ந்த செண் பகத்திடம் 5 சவரன் செயின், சென்னை கொரட்டூரை சேர்ந்த இந்துமதியிடம் மூன் றரை சவரன் செயினை பறித்தனர். செயினை பறி கொடுத்தவர்கள் கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந் திருந்த காவலர்கள் திருடர்களை தேடினர். ஆனால் கூட்டத்தில் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கொடுக் கப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில், சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை வேண்டி அணையில் கிடா வெட்டி சிறப்புப் பூஜையாம்!

நாகர் கோவில் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே நாகர்கோவில் நகரசபை சார்பில், மழை வேண்டி முக்கடல் அணை பகுதியில் உள்ள ஆலமரத்து இசக்கி அம்மன் கோவில் முன்பு யாகம் வளர்த்து வழி பாடு நடத்தப்பட்ட தாம்! பின்னர் கிடா வெட்டி அம்மனுக்கு படைத்து சிறப்புப் பூஜைகளும் நடத்தப் பட்டனவாம்! இந்த சிறப்பு பூஜை குறித்து நகரசபை தலைவி மீனாதேவி கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. அணை களிலும் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வருவ தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியில் உள் ளது. இந்த ஆண்டாவது பருவ மழை பெய்தால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடியும். இதனால் முக் கடல் அணை அருகே உள்ள இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினால் மழை பெய்து பஞ்சம் தீரும் என்று அந்த பகுதி மக்கள் கூறினர். எனவே தான் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்து கிறோம் என்று அவர் கூறியுள் ளார். இப்படி ஒரு மூடநம்பிக்கை.

தமிழ் ஓவியா said...


புலிகளின் மனைவிகளுக்கு இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை!


கொழும்பு, மே 31- இலங்கையில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் மனைவிகள் இலங்கை ராணுவத்தின ரால், பாலியல் வன் கொடுமைக்கு ஆளாவ தாக தெரிய வந்துள்ளது. இலங்கை திரிகோண மலை பகுதியில் வாழும் முன்னாள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அவ்வப்போது விசா ரணை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் படுவது உண்டு, அத் தகைய சூழ்நிலைகளில் அவர்களை காவலில் அடைத்துவிட்டு அந்த குடும்பத்தின் பெண் களிடம் இலங்கை ராணுவத்தினர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொள்வது தற் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியன்று இலங்கை யின் சுதந்திர தின கொண்டாட்டங்களை அடுத்து கட்டாய்-பாரிச்சான் ராணுவ முகாமில் இருந்து வந்த வீரர்களால், மூத்தூர் என்ற இடத்தில் இருந்து 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் திருமணமானவர்கள். சிலரின் மனைவிகள் முன்னாள் பெண் புலிகள். கணவன்மார் களை சிறையில் அடைத்து விட்டு, வீட்டில் தனியாக இருக்கும் அவர்களது மனைவிகளை இலங்கை ராணுவத்தினர் அத் துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றன ராம். இது குறித்து, மூத்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த முன் னாள் பெண் புலியான கந்தபோடி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய ராணுவத்தினர் முயன்றதாக தெரிவித் துள்ளார். மேலும், தங் கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிங்களர்களும் தமிழ் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வும், இரு வாரங்களுக்கு முன்னர், கந்தபோடி தனது குடிசையில் தனி யாக இருந்தபோது நள் ளிரவில் குடிசைக்குள் நுழைந்த நபர் ராணுவ புலனாய்வு துறை அதி காரி என்று கூறிக் கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக வும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


குற்றாலத்தில் கழகத்தின் பயிற்சி முகாம் எழுச்சியுடன் தொடங்கியது



ஜாதி ஒழிப்பதற்காகத்தான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்
பயிற்சி முகாமில் இளைஞர்களிடையே கழகப் பொருளாளர் கொள்கை விளக்கம்

குற்றாலம், மே 30- தந்தை பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்பதற்காகத்தான் சுயமரியாதை இயக் கத்தை தொடங்கினார் என கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள் குற்றாலம் பயிற்சி முகாமின் முதல் நாளில் கொள்கை விளக்கவுரையாற்றினார்.

பெரியார் ஓர் அறிமுகம்

35ஆண்டாக தொடர்ந்து நடைபெற்றுவரும் குற்றாலம் பயிற்சி முகாம் இந்த ஆண்டும் 29-05-2013 முதல் 01-06-2013 வரை நான்கு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு நேற்று(29-05-2013) எழுச்சிகர மாக குற்றாலம் வள்ளல் வீகேயென் கட்டடத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவைத் தொடர்ந்து, பெரியார் ஓர் அறி முகம் என்னும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் பாடம் நடத்தினார், அவர் தனது வகுப் பில், மாணவர்களிடம் பெரியாரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி கேட்டு அவர்களிடம் பதிலைப் பெற்று, அதன் தொடர்ச்சியாகவே பெரியாரைப் பற்றி ஒரு முழுமையான அறிமுகத்தைக் கொடுத்தார்.

சமுதாய இழிவை உணர்த்த கறுப்புச் சட்டை

அவரைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சி வரலாறு, திராவிடர் கழகம் என்ற தலைப்புகளில் கழகத்தின் செயலவைத் தலைவர் சு,அறிவுக்கரசு வகுப்பெடுத்தார், அவர் தனது வகுப்பில், நீதிக்கட்சி வரலாற்றிலிருந்து தொடங்கி, மொழிப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் இருந்தபோது, நீதிக்கட்சி தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப் பட்டதையும், 1944 இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றப்பட்டதையும் கூறி, சுயமரியாதை இயக்கம் + நீதிக்கட்சி = திராவிடர் கழகம் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்காக ஃபார்முலாவும் சொன்னார், தொடர்ந்து மதுரை கறுப்புச் சட்டை மாநாட்டைப் பற்றிச் சொல்லி,
29-09-1945 இல் சமுதாய இழிவை உணர்த்த கறுப்புச் சட்டை அணியத் தொடங்கியதையும் சுட்டிக் காட்டினார். அதைத் தொடர்ந்து, இராமாயண எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, இடஒதுக்கீடு போராட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டம் போன்ற வற்றை புள்ளி விவரங்களோடு விளக்கினார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் தமிழனில்லை என்றால் வேறு யார் தமிழன் ?

செயலவைத் தலைவரைத் தொடர்ந்து, பேரா சிரியர் காளிமுத்து தமிழ்- தமிழர்-திராவிடர் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா திராவிட இனத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசியதைக் கேட்டு பாபு ஜகஜீவன்ராம் அண்ணாவைப் பார்த்து, நானும் திராவிட இனத்தைச் சார்ந்தவன்தான் என்று குறிப்பிட்ட தையும், ஜவகர்லால் நேரு சிறையிலிருந்தபோது தன் மகளான இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத் தில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவை ஆரிய திராவிடப் போர்தான் என்று குறிப்பிட் டதையும் எடுத்துக்காட்டினார்.

சிலர் பெரியாரை கன்னடன் என்று பேசுவதை கடுமையாகக் கண்டித்த பேராசிரியர், திராவிட மொழிகள் 40-க்கும் மேல் பேசப்பட்டன என்றும் தமிழர்கள் இந்தியா முழுமையும் இருந்தனர் என்பதையும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை தமிழாக இருந்து சமஸ்கிருதத்தின் தாக்குதலால் தப்பமுடியாமல் போய் சிதைந் ததையும், தமிழ் மட்டும் தான் தப்பிப் பிழைத்தது என்று கூறி பெரியார் தமிழன் தான் என்று நிறுவினார், அடுத்து, பெரியார் தமிழன் இல்லை யென்றால் வேறு யார் தமிழன் என்று மாண வர்கள் மத்தியில் கேள்வியையும் எழுப்பி தொடர்ந்து பல்வேறு விளக்கங்களையும் சொல்லி, திராவிடன், தமிழன் இரண்டும் ஒன்றுதான் என்று கூறி விட்டு, திராவிடன் என்றால் பகுத்தறிவாளன், பெண்விடுதலைப் போராளி, மூடநம்பிக்கையை ஒழிப்பவன் என்று தந்தைபெரியாரே சொன்னதைச் சொல்லி தனது வகுப்பை முடித்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மீண்டும் வகுப்பெடுத்தார். பிறகு கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் கடவுள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர் களைப் பார்த்து உங்களில் கடவுளைப் பார்த்தது யார் என்ற கேள்வியை எழுப்பினார். யாரு மில்லை என்று மாணவர்கள் தலையாட்டியவுடன் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால், பெற்றோர்கள் சொல்லி கேட்டிருப் பீர்கள் என்று சொல்லிவிட்டு, கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று ஆன் மிகவாதிகள் சொல்வதை எடுத்துக் காட்டி, இது எப்படி சாத்தியமாகும் என்று சிந்திக்க வைத்தார். அதன் தொடர்ச்சியாகப் பேசும் போதுதான் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை கடவுள் மறுப்பு மட்டுமல்ல, ஜாதி ஒழிப்புதான் என்று குறிப்பிட்டார். அப்படி ஜாதியை ஒழிக்கும்போது கடவுள் குறுக்கே வந்தது; மதம் குறுக்கே வந்தது. ஜாதியை ஒழிப்பதற்காக இவற்றை ஒழிக்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு வந்தது என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகு, இதிகாசங்கள் மதிமோசங்கள் என்ற தலைப்பில் பேராசிரியர் காளிமுத்து வகுப்பெடுத்தார்.
இனி வரும் உலகம்
இரவு உணவுக்குப் பிறகு பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறை மூலம் இனி வரும் உலகம் என்ற காணொளிப் புத்தகம் திரையிடப்பட்டது. மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதற்கான கருவிகளை சுரண்டை பொன்னுதுரை அவர்கள் வழங்கினார்கள். திரையிடலை உடுமலை, பிரபாகரன் ஆகி யோர் ஒருங்கிணத்தனர். பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப் பாடுகளைப் பற்றி சாமிதிராவிடமணி,பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் அவ்வப்போது அறிவிப்பு செய்து வந்தனர். முன்னதாக, மாணவர்களுக்கு கணினி பயிற்சி கொடுப்பதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக மாணவர்களிடம் அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாண வர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து பயிற்சி கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட இப்பணிகளை ஜெகன், பழனி மேகம், பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத் தனர். காலையிலிருந்து இரவு வரையிலும் வீகேயென் கட்டட பொறுப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்துப் பார்த்துச் செய்தனர். மாவட்டத் தலைவர் டேவிட் செல்லதுரை, மாநில இளைஞரணிச் செயலாளர் இல.திருப் பதி, பால்ராசேந்திரம் ஆகியோரும் பயிற்சிப் பட்டறையை நல்ல ஒத்துழைப்புக் கொடுத்துச் சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங் கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். - (விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...


இராமாயணம்

இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆகவேண்டும். இராமாயணப் பிரசாரம் ஒழுக்கக் கேட்டுப் (கிரிமினல் அண்டு இம்மாரல்) பிரசாரமாகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும் ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய் இரண்டணா ரேட்டுக்குக் குச்சுக்காரியாக இருந்து, தெருவில் போகிற சின்ன பையன்களையெல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன் இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து, ஏண்டா எங்கம்மா இழுத்தால் திமிரிக்கிட்டு ஓடப் பார்க்கிறாய் என்று பையனை அடித்தால், அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, அபிமானம், தாய்ப் பக்தி கொண்டவனாக ஆகிவிடுவானா?

உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப்பற்றி என்ன கருதுவார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது. ------------ தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!

பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள் பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாத வரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை. அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ? - மறைமலை அடிகள்

--------------சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்.

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும். பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும். அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தக சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வாழ வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டுதற்கு, அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு, நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
------------------அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா? - அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன் னகை விளங்குகிறது. நான் எப்பொ ழுதும் சிரித்துக்கொண்டே இருப்ப தால் என்னுடைய மத நம்பிக்கை, என் னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.

(தி இண்டு, 30.11.2002)

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தைப் பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவி உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

தமிழ் ஓவியா said...


சரியான கேள்வி



டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்களின் மதமும் மூடநம்பிக்கையும் நூலில், 55ஆம் பக்கத்தில் இருப்பது:-

ஆஞ்செலோ என்ற சிறந்த ஓவிய நிபுணன் மாதா கோயிலை ஓவியங் களால் அழகுப்படுத்தும்போது, செருப் புப் போட்டுக்கொண்ட தேவதைகளை வரைந்தானாம்.
அந்தப்படத்தைப் பார்த்த பாதிரி யார் ஒருவர், செருப்புப் போட்டுக் கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்தவர் யார்? என்று ஓவியனைப் பார்த்துக் கேட்டாராம்.
அதற்கு ஆஞ்செலோ தேவதை களை வெறுங்காலோடு பார்த்தவர்கள் யார்? என்று மறுமொழியாகக் கேட்டானாம்.

- தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (கி.அ)

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் அலோபதி மருத்துவம்


போர்த்துக்கீசியர்கள் இந்தியாவில் கோவாவிற்கு வந்தடைந்த பின்னரே அங்கு முதன் முதலில் ராயல் எனும் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின் இதன் தொடர்பாக மதச்சார்பற்ற முதல் நூலான இந்தியாவில் தாவரமும் மருந்தும் 1563இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்ப முடியாத நிலையில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் கடற்கரையோர நகரங்களில் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தியுள்ளனர்.

அந்நிலையில் தங்களுக்கும் தங்கள் சிப்பாய்களுக்கும் மருத்துவம் புரிய கிழக் கிந்திய வணிகக்குழுமம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு மருத்துவமனையினை 1664இல் நிறுவியது. இதன் பின்னர் இம்மருத்துவமனை நான்கு இடங்களில் மாற்றப்பட்டு தற்பொழுது சென்னை பொது மருத்துவமனை உள்ள இடத்தில் 1772இல் இரண்டு பகுதிகளாகத் தொடங்கப்பட்டது. 1842இல் இந்தியர்களுக்கும் இங்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனருகிலேயே 1835இல் சென்னை மருத்துவப் பள்ளியும் தொடங்கப்பட்டு பிறகு 1850இல் கல்லூரியாக மலர்ந்தது.

இக்கல்லூரி மாணவர்களுக்கு எல்.எம்.எஸ். என்ற பட்டத்தை வழங்கி நாடெங்கும் அலோபதி மருத்துவம் வளர உதவியது. இக்கல்லூரியே ஆகும்.

இது ஆசியாவின் முதல் மருத்துவக் கல்லூரியாகும்.

பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பதிப்பாசிரியர் முனைவர் இராதா செல்லப்பன்

- தகவல்: க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


இவர் தான் குடியரசு தலைவர்


பட்ஜெட் நிதி ஒதுக்கீடு - நிதி கமிஷனை நியமிக்கும் ஜனாதிபதிக்குத்தான் பட்ஜெட்டில் முதல் செலவு. ஜனாதிபதி மாளிகை தொடர்பான செலவுகளுக்கு சுமார் ரூ. 2,25 கோடியை ஒதுக்குவார்கள். சம்பளம் - மாதம் துல்லியமாக ரூ. 1,47,728 இதுபோக, கைச்செலவுக்கு என ஆண்டுக்கு ரூ. 15 லட்சம். இது பொழுதுபோக்கு, உடை, மற்றும் இன்னபிற செலவினங்களுக்காக.

வீடு அநேகமாக உலகிலேயே மிகப்பெரிய வீட்டில் வசிக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியாகத்தான் இருக்கும். மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் ராஷ்டிரபதி பவனில் சுமார் 340 அறைகள் இருக்கின்றன. பிரணாப் மத்திய அமைச்சராக ராஷ்டிரபதி பவனுக்கு வந்தபோது அங்கு உள்ள குதிரையின் பளபள பராமரிப்பைக் கண்டு அடுத்த ஜென்மத்துல ஜனாதிபதி மாளிகை குதிரையா பிறக்கணும் என்று ஆசை தெரிவித்தவர். ஜனாதிபதி குடும்பத்தினருக்கு எனப் பணிபுரிய 200 பணியாளர்கள் உண்டு.

ஜனாதிபதி பயணிக்க ரூ. 12 கோடி மதிப்பு உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் காரை வழங்குகிறது அரசாங்கம். குண்டு துளைக்காத, வெடி விபத்திலும் பாதிக்காத பாதுகாப்பான கார் அது. பயணச்செலவு - இது ஜனாதிபதியின் பயணங்களைப் பொறுத்தது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடந்த அய்ந்து வருடங்களில் ரூ. 205 கோடிக்குப் பயணச்செலவு காண்பித்து இருக்கிறார்.

விமானங்கள் - எந்த நேரமும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்குத் தேவைப்படும் என்று ஏழு விமானங்கள் தயார் நிலையிலேயே இருக்கும். அதில் நான்கு எம்ப்ரேர் விமானங்கள், மூன்று போயிங் விமானங்கள். இதில் எம்ப்ரேர் வகை விமானம் ஒன்றின் மதிப்பு ரூ. 140 கோடி. போயிங் விமானம் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து ரூ. 934 கோடி மதிப்பு உடையது.

_- ஆனந்தவிகடன் - 1.8.2012

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களால் சாகடிக்கப்பட்ட தெய்வங்கள்

தெய்வங்களைப் பற்றி ஆரியம் நமக்கு கற்பித்து வைத்திருக்கும் பாடங்களை நினைத்துப் பாருங்கள்! அவை வெறும் பயமுறுத்தல்கள். எல்லாம் சர்வ வல்லமை படைத்தவை அவை ஆக்கவும் அழிக்கவுமான பலம் பொருந்தியவை தாம் மட்டும் அழியாமல் என்றென்றும் நிலைத்து நிற்பவை தேங்களைப் போல அன்றும் இன்றும் அழியாதவை.

சரி, வேதப்பாடல்களில் பெரும்பாலும் வழிபட பெறும் இந்திரன், வருணன், அக்னி, பர்ஜள்யன், உஷா, நிஷா ஆகிய தெய்வங்களைப் பாருங்கள் இன்று இந்த தெய்வங்களை யாரேனும் வழிபடுகிறார்களா இவற்றுக்கான கோவில்கள் எங்கேனும் உண்டா இல்லையே அப்படியானால் அவையெல்லாம் செத்துப் போயிவிட்டன என்பதுதானே உண்மை என்றும் அழியாத ஒரு பொருள் இருந்ததுமில்லை இருப்பதுமில்லை. மனிதர்கள் தங்கள் தேவைக்கும் நம்பிக்கைக்கும் பார்ப்பனர்களின் பிழைப்பிற்கும் ஏற்ப உண்டாக்கியவை அவை. மனிதர்களைப் போலவே செத்துப்போய்விட்டன என்பது தான் உண்மை ஆனால் இன்றும் மழை இல்லாத காலங்களில் வருண ஜெபம் நடத்தி பார்ப்பனர்கள் பிழைப்பு தேடிக் கொள்கின்றனர்.

அது போலவே வெள்ளைச்சாமி என்ற பெயரைத் தமிழ் நாட்டில் மக்கட் பெயராக பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரும் இடுகின்றனர். மக்கள் வணங்கிக் கொண்டிருக்கிற தெய்வங்கள் எல்லாம் கருப்பு, கருநீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் தான் இருக்கின்றன ஆனால் வெள்ளை நிறத்தில் ஒரு தெய்வத்தை நாம் எங்கும் பார்த்ததில்லை. பார்ப்பனர்கள் கற்பித்த தெய்வங்களில் ஒன்று தான் இந்த வெள்ளைச்சாமி (ஆடீகூழஹடுடீழுலு) புராண மரபுகளின் படி இந்தத் தெய்வம் கிருஷ்ணனுக்கு அண்ணாவான கிருஷ்ணனை மட்டும் இன்று வரை வழிபடும் பார்ப்பனர்கள் வெள்ளைச்சாமியை மட்டும் ஏன் செத்துப் போகவிட்டு விட்டார்கள்?

இந்த தெய்வத்திற்கு தமிழகத்தில் எங்குமே கோவில்கள் இல்லை புராண மரபுகளின் படி இவன் ஒரு குடிகாரன். கையில் எப்போதும் மதுக்குவளையை வைத்திருப்பான். வெள்ளை நிறமுடையவன் என்பதால் இவனுக்கு வாலி என்ற பெயருமுண்டு வால் என்ற சொல்லுக்கு வெள்ளை என்று பொருள் எடுத்துக்காட்டாக வால்மிளகைப் பாருங்கள். இராமாயணத்தில் வரும் வாலி வெள்ளை நிறமுடைய குரங்கு. வெள்ளைச்சாமியுடைய கொடி பனைக்கொடி பனை திராவிட நாட்டின் பூர்வ தாவரமாகும். இவனுடைய வாகனம் உலக்கை வட மொழியில் முசலிவாகனம் என்றே இவனுக்குப் பெயர் முசலம் என்ற சொல்லுக்கு உலக்கை என்று பொருள் இவனுடைய ஆயுதம் கலப்பை உழவர்களை அடையாளங் காட்டுவதாகவும், மது குடிப்பதுமான அடையாளங்களாலும் பிற்காலப் பார்ப்பனர்களுடைய ஆசாரங்களுக்கு ஒத்துவரவில்லை என்பதால் இந்த தெய்வங்களை செத்துப் போகவிட்டுவிட்டார்கள். ஆனால் எளிய மக்கள் மட்டும் பலராமன், வெள்ளைச்சாமி, முத்துலக்கையன் ஆகிய பெயர்களோடு இந்த தெய்வத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள். இப்படி செத்துப்போன தெய்வங்களின் பட்டிலை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

- தொ.பரமசிவன்

தமிழ் ஓவியா said...


உறவு முறையில் திருமணம் வேண்டாம்!

குழந்தைகளின் பிறவி காது கேளாமை பிரச்சினைக்கு உறவில் திருமணம் செய்வதே முக்கியக் காரணம் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் நிர்வாக இயக்கு நரும், தலைமை காது-மூக்கு-தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணருமான மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 50 ஆயிரம் குழந்தைகளின் செவித் திறனை சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. ஆய்வு முடிவுகள் தொடர்பாக டாக்டர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

நாட்டிலேயே மிக அதிகமான குழந்தைகளிடம் (50 ஆயிரம் குழந்தைகள்) செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும். தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில், 6 குழந்தைகளுக்கு அதாவது 0.6 சதவீத குழந்தை களுக்கு பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. தேசிய சராசரியை (0.2 சதவீதம்) காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இது ஆறு மடங்கு அதிகமாகும்.

66 சதவீத குழந்தைகளுக்கு: ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது, காது கேளாமை பாதிப்புள்ள குழந்தைகளில் 66 சதவீத குழந்தைகளின் பாதிப்புக்கு உறவில் செய்யப்படும் திருமணமே காரணம் என்பதுதான். பேறு கால தொற்று நோய், எடைக் குறைவான குழந்தை, குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக குழந்தைக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் உறவில் திருமணமே முக்கியக் காரணியாக உள்ளது.

காக்ளியர் கருவி: பிறவிக் காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை காக்ளியர் கருவியை வெற்றி கரமாகப் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளது.
செவித்திறன் குறைபாடு உடைய குழந்தை களுக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள காக்ளியர் கருவியை இலவசமாக பொருத்த தமிழக அரசு உதவி செய்கிறது.
எனினும் உறவில் திருமணத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட செவித்திறன் குறைபாட்டைத் தடுப்ப தற்கான நடவடிக்கைகளில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் ஈடுபடுவது அவசியம் என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.
பிரபல காது, மூக்கு, தொண்டை (நுசூகூ) மருத்துவர் அறிவியல் பூர்வமாகச் சொன்னதற்குப் பிறகாவது பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்னும் ஜாதிக்குள் திருமணம் (ஜாதியைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ள பெரிய மனிதர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்!) செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மருத்துவர் சொன்னதைக் கவனிக்க வேண்டும்.

ஜாதகம் பொருத்தம் பார்க்காதீர் - குருதிப் பொருத்தம் பாரீர் என்று திருமண விழாக்களில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறி வந்துள்ளதன் நியாயத்தை உண்மையான டாக்டர்கள் கூறும்போது பொருத்திப் பார்க்கட்டும்.

ஒட்டு மாம்பழம் தான் இனிக்கும் என்பதுபோல ஜாதி கலப்பு - மறுப்புத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் தாம் நோயற்றும், அறிவு சிலிர்த்துக் காணப்படுவார்கள் என்பது அறிவியல் கூறும் உண்மையாகும்? திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபடுவது மனித சமத்துவத்துக்காக மட்டுமல்ல; விஞ்ஞான பூர்வமான உண்மையை உட்கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பாதையில் மிடுக்குடன், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அடிப்படையிலும்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு! 1-6-2013

தமிழ் ஓவியா said...


வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்


ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர்
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில் ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதில் கடைசியாக பிராமணர் - பிராமணரல்லா தாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக விஷயத்தில் பிராமணரல்லா தாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது. அக் குறையில்லாதபடி பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று பேசியிருக்கிறார். இது மிகவும் சரியான வார்த்தை; நாமும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதற்கு இந்தக் குறைகளைத்தான் சொல்லுகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால்தான் இக்குறைகள் நீங்கும்; அல்லது சுவாமி சிரத்தானந்தர் சொன்னபடிச் செய்தாலாவது கொஞ்சம் நீங்கலாம். இரண்டு மில்லாமல் ஸ்ரீமான்களான குழந்தையையும் ஓ.கந்த சாமி செட்டியாரையும், பாவலரையும், ஜயவேலரையும் பிடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண் டாம் என்று சொல்லக் செய்வதாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களைத் திட்டச் செய்வதினாலும் இக்குறை நீங்கி விடுமா? என்று கேட் கிறோம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

தேசபக்தன்

தேசபக்தன் பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும் வார மும்முறைப் பதிப்பாகும். இதன் ஆசிரியராயிருக்கும் திரு.கோ.நடேசய்யரைப் பற்றி நாம் நன்கு அறிவோம். தஞ்சையினின்று வெளிவந்த வர்த்தகமித்திரன் பத்திரிகையும் திரு.நடேசய் யரையே தன் ஆசிரியராகக் கொண்டிருந்தது. அக் காலை வர்த்தகமித்திரனில் ஒழுங்காகவும் தேச நலங்கருதியும் எழுதப்பட்ட கட்டுரைகளே வெளி வந்தன.

ஆனால் இப்பொழுது அதே திரு.நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட தேசபக்தன் தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்டையாகக் கூறப் புகின் தேசபக்தனும் பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூற வேண்டும். சென்னையில் நடைபெறும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் பார்ப்பனப் பிரசாரம் போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின் குடியைக் கெடுக்க மலாய் நாட்டில் தமிழ்நேசன் என்றும் இலங்கையில் தேசபக்தன் என்றும் இரு பார்ப்பனப் பத்திரிகைகள் தோன்றியுள்ள தென்றே கூறவேண்டும்.

கருப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது போல் பார்ப்பனப் பக்தனாக யிருப்பவன் தேசபக்தன் என்று பெயர் பூண்டு தமிழர்களைப் பாழ்படுத்த முயலுவதை நாம் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால் இதை இனித் தமிழ் மக்கள் ஆதரிப்பது கொள்ளிக்கட்டை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வதாகும்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 08.08.1926

தமிழ் ஓவியா said...

சென்னையில் திரு.எஸ்.ஆர்.தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும்

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர்.தாஸ் அவர்களின் தாயாதி சகோதரர். வங்காளத்தில் மாதம் நாற்பதினாயிரம் அய்ம்பதினாயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர். இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயி ருப்பவர். இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் பத்திரிகைகளின் மூலமாகவும் கோள் சொல்லுவதன் மூலமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தப்பபிப்பிராயங் களை அறிந்த நமது பனகால் அரசர் டெல்லிக்குப் போய் அரசப் பிரதிநிதி யாரிடம் நமது உண்மையான நிலையை எடுத்துச் சொன்னதன் பலனாய் வைசிராய் ஆச்சரிய மடைந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதாரின் உண்மை நிலைமையை நேரில் அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில் ஒரு பொறுப் புள்ள அங்கத்த வரான ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்களை அனுப் பியதாகத் தெரிந்தோம்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் சென் னைக்கு வந்ததும் சென்னை யிலுள்ள பார்ப் பனத் தலைவர்கள் ஒன்றுகூடி ஸ்ரீமான் ரெங் காச்சாரியார் பெயரால் ஸ்ரீமான்கள் திருப்பதி மகந்து, சர்.சதாசிவய்யர், மகாகனம் சீனிவாச சாஸ்திரி, ஜட்ஜுகள் குமாரசாமி சாஸ்திரி, சீனிவாசய்யங்கார், எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம்தாஸ், எ.வி.இராமலிங்கய்யர், வி.டி.கிருஷ்ணமாச்சாரி, சர்.சி.பி.இராமசாமி அய்யர், அட்வகேட் ஜெனரல் வெங்கட்டராம சாஸ்திரியார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.வரதாச்சாரி, கே.பாஷ்யம் அய்யங்கார் ஜி.எ.நடேசன் அய்யர் முதலிய பல பார்ப் பனர்கள் பெரிய விருந்து நடத்தி தாஸ் அவர் களை உற்சாகப்படுத்தினார்கள். இவ்விருந்தின் செலவின் பெரும்பாகம் திருப்பதி மகந்துவினு டையதென்று சொல்லப்படுகிறது.

இந்த விருந்துக்கு தன்னை சன்னியாசி என்று சொல்லிக்கொள்ளும் திருப்பதி மகந்தும், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர் களும் அரசாங்க சம்பந்தமான நபர்களுக்கு நடக்கும் விருந்து முதலியவைகளை பகிஷ்காரம் செய்து முட்டுக்கட்டை போடுகிறவர்களும், ஒத்துழையாமை நாற்றம் தங்கள் மீது வீசப்படு கிறதாகக் கூறிக் கொள்ளுகிறவர்களுமான ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம் தாஸ், கே.பாஷ்யம் அய்யங்கார் முதலிய பாப் பனர்களும் வந்திருந்ததிலிருந்தும், அவ் விருந்தில் வாலிபப் பெண்கள் மூலமாக சங்கீதம் நடத்தி ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசை ரம்மிக்கச் செய்ததிலிருந்தும் இவ்விருந்தின் சூழ்ச்சியும் தந்திரமும் விருந்து நடத்தியவர்களின் கருத் தும் நாம் சொல்லாமலே விளங்கும்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் விருந்துக்கு திருப்பதி மகந்தைத் தருவிக்க வேண்டிய காரணம் என்ன? பெண்களை அழைத்து சங்கீதம் நடத்த வேண்டிய அவசியமென்ன? திருவாடுதுறை மடத்திலிருந்து வந்ததாகச் சில விஷயங்களை ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசுக்கு அறிவிக்க வேண்டிய காரணம் என்ன? சர்க் காரை பகிஷ்கரிக்கும் சுயராஜ்யக் கட்சியார் அங்கு வர வேண்டிய வேலை என்ன? ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் கவர்னருக்குக் கொடுத்த ஒரு விருந்தின் போதே அது சுய ராஜ்யக் கட்சியாருடைய விருந்தல்ல, தனிப்பட்ட நபர் செய்த விருந்துமல்ல என்று சொல்லித் தப்பித்துக்கொண்ட நமது சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்கள் ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் என்கிற ஒரு தனிப்பட்ட நபர் நிர்வாக சபை மெம்பர் என்கிற சர்க்கார் பிரதிநிதி உத்தி யோகஸ்தருக்கு, அவர் சர்க்கார் வேலை சம்பந்த மாய் வந்திருக்கும் சமயத்தில் கொடுக்கப்படும் விருந்திற்கு இவர்கள் எப்படிப் போகக் கூடும்? இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நமது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இந்திய அரசாங்கத்தில் நமது பார்ப்பனர்கள் இதுவரை சொல்லி வந்திருக்கும் கோள்களையும், செய்து வந்திருக்கும் சூழ்ச்சிகளையும், கெடுதிகளையும் உண்மை என்று உறுதிப்படுத்துகிறது.
- குடிஅரசு - கட்டுரை - 08.08.1926

தமிழ் ஓவியா said...

இதற்கென்ன சொல்லுவார்கள்?

ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி யெனவும், மந்திரிகள் தம் நண்பர்களுக்கும் உற்றார் களுக்குமே பதவிகளை வழங்கி வருகிறார் களெனவும், சுயராஜ்யக் கட்சியார் சொல்லாத நாளே கிடையாதெனலாம். ஆனால் உண்மை என்ன? உத்தி யோக வேட்டையாடுபவர்கள் யார்? நண்பர்கட்கும் உற்றார்கட்கும் பாரபட்சமாய் இருப்பவர்கள் யார்? வேலூரில் ஜில்லா கோர்ட்டுக்குப் பப்ளிக் பிராசிகி யூட்டர் பதவிக்கு ஓர் பார்ப்பனர் சமீபத்தில் நியமிக் கப்பட்டிருக்கிறார். அவர் பெயர் திரு. நரசய்யர். ஏற்கனவே இரண்டு முறை களில் இவ்வுத்தியோகங்களிலிருந்தவர். இப்போது மூன்றாம் முறையும் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு வயதே 57. வேலூரில் இவரைத் தவிர தகுதியான வேறு வக்கீல்கள் இல்லையா? இவரை மூன்றாம் முறையும் நியமிக்க வேண்டிய காரணமென்ன? தவிரவும் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பப்ளிக் பிராசிகியூட்டர்களாக நியமிக்கப்படாது என்ற அரசாங்க உத்தரவுமொன்று இருக்கிற தென்று அறிகிறோம். அஃது உண்மையாயின் 57 வயதுள்ள திரு.நரசய்யர் மீண்டும் நிய மிக்கப்படுவானேன்? அந்த அய்யர் சட்ட இலாகா அங்கத்தவருக்குப் பந்து வென்று சொல்லப்படுகிறது. அதுதான் காரணமோ? பிராமணர்கள் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவைகள்கூட நியமிக்கப்படுகையில் பிராமணரல்லாதார்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? திவான் பகதூர் எம்.கோபாலசாமி முதலியாருக்கு மிகுந்த கஷ்டத்துடன் ஆறு மாதகாலம் வரைதான் உத்தியோகம் நீடிக்கப்பட்டது. ஆனால் தஞ்சாவூரிலே இப்போதுள்ள பிராமணப் பப்ளிக் பிராசிகியூட்டர் மூன்று ஆண்டுகளாய் வேலைபார்த்து வருகிறார். உத்தியோக வேட்டையாடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் உற்றார்களுக்கும் பாரபட்சமாய் நடந்துகொள் பவர்களும் யார்? நாமா அல்லது பார்ப்ப னர்களா?
- குடிஅரசு - பெட்டிச் செய்தி - 08.08.1926

தமிழ் ஓவியா said...


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா? பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா?

பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை


கலைஞர் அவர்களின் வாழ் விணையர் தயாளு அம்மாள் அவர்களை விசாரணைக்கு டில்லிக்கு அழைப்பது பற்றிய நீதிமன்றத்தின் ஆணை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கலைஞரின் வாழ்விணையர் திருமதி தயாளு அம்மாள் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி இயக்குநராக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவருக்கு எவ் வகையிலும் சம்பந்தமில்லாத 2ஜி அலைக் கற்றை வழக்கில் அவரை விசாரித்த நிலையில், அவரது முதுமை காரணமாக அவரை குற்றம் சுமத்தப்பட்டவராகச் சேர்க்க தேவையில்லை என்று முடிவு செய்தது சி.பி.அய்.

ஏற்படாத இழப்பு என்ற அனுமான இழப்பைக் காரணம் காட்டி முன்னாள் அமைச்சர் ஆ. இராசாவையும், அது போலவே எந்த இயக்குநர் கூட்டத்திற்கும் செல்லாத நிலையில் கவிஞர் கனிமொழி அவர்களையும் குற்றவாளிகளில் ஒருவ ராக்கி, 6 மாதங்களுக்குமேல் டில்லி சிறையில் வதியச் செய்தார்கள்.

அதுபோலவே ஆ. இராசா அவர் களுக்கு ஓராண்டு சிறை வாசத்திற்குப் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இவை ஒருபுறம் இருக்க, சாட்சியமளிக்க திருமதி தயாளு அம்மாள் டில்லிக்கு வர வேண்டும் என்று கோருகின்றனர்; அவருக்கோ உடல் நிலை கடந்த ஓராண் டாகவே சரியில்லாது, தனிக் கவனிப்பில் இருந்து வருகிறார் என்ற நிலையில் அவரை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவரது தரப்பில், மருத்துவர்களின் சான்றிதழ்களோடு டில்லி சி.பி.அய். நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் விளக்கியிருக்கிறார். கலைஞர் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ள விவரம்:

அவரது உடல் நலம் சரியில்லை என் பது தமிழகம் முழுதும் அறிந்த செய்தி யாகும்.

அவரால் விமானத்தில்கூட பயணம் செய்ய முடியாது. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு நேரில் வீட்டிற்கே வந்து, தயாளுவின் உடல் நிலையை பார்த்து அறிக்கை தரலாம் என்று நீதிபதி முன்பு வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, எந்த மருத்துவ மனை என்று கேட்டறிந்து, புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை அழைத்து வரும் செலவினை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினையும் எழுந்து, அந்தச் செலவினையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி கூறப்பட்டது.
அதையெல்லாம் நீதிபதி குறித்துச் கொண்டதோடு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் வரும்போது, எங்கள் குடும்ப மருத்துவரும் உடன் இருக்க அனுமதி கேட்டு, அதுவும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது

சி.பி.அய். தரப்பிலும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களே நேரில் வந்து பரிசோதிக் கலாம் என்று ஒப்புதல் அளித்தனர். ஆனால் 2 நாள்கள் கழித்து சி.பி.அய். நீதிபதி நேரில் வரவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி வழக்குரைஞர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேலும், என் மனைவி, நேரில் தான் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டால், அதனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப் பேற்றுக் கொள்வார்கள்? என்று கலைஞர் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

மனிதநேயத்தோடு அணுக வேண்டிய பிரச்சினை அல்லவா இது?

முதுமை காரணமாக அவர் முன்பே அலைக்கழிக்கப்படாதபோது, இப்போது திடீரென்று இப்படி ஏன் வற்புறுத்தப்பட வேண்டும்?

சி.பி.அய். தரப்பு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது எப்படி? ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, இப்படி ஒரு நிலை ஏன்?

இதனால் மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஒரு அவப்பெயர் பழி, அரசியல் ரீதியாக ஏற்படாதா? ஏனெனில் சி.பி.அய். பிரதமர் கீழ் உள்ள ஒரு துறையாகும். அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படி ஒரு முடிவு என்று நாம் சொல்ல வரவில்லை; ஆனால் இந்தநிலைக்குப் பிறகு, இதுபற்றி மறுபரிசீலனை செய்து மனிதநேயத்தோடு அவர்களை அழைப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

2.6.2013 சென்னை

தமிழ் ஓவியா said...


பெரியார் - அண்ணா ஊட்டிய உணர்வில் பணியாற்றுகிறேன் கவிஞர்கள் பங்கேற்ற விழாவில் கலைஞர்


தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 90 கவிஞர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர்களுடன் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.


சென்னை, ஜூன் 2- பெரியார், அண்ணா மற் றும் பல்வேறு கவிஞர் கள் ஊட்டிய உணர்வா லும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமி ழர்களையும் காப்பாற்ற முடியும் என்று சிந்தித் துக் கொண்டிருக்கிறேன் என்று கலைஞர் நெகிழ்ச்சி உரையாற்றி னார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 90 கவிஞர்கள் கூடி அவருக்குச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நேற்று (1.6.2013) சென்னையில் நடந்தது. விழாவிற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

விழாவில் 90 கவிஞர் கள் தனித்தனியாக கலை ஞருக்கு நினைவுப் பரிசு, பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து கலை ஞர் ஏற்புரை வழங்கி னார். அவர் உரையாற்றிய தாவது:- என்னுடைய 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி கவிஞர் வைரமுத்து ஏற் பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என் னையும், அவரையும், இதற்கெல்லாம் மேலாக தமிழையும் பெருமை படுத்தியுள்ளார். ஏற் புரை என்ற தலைப்பில் நான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை யிட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் என்னை பாராட்டிய சிறப்புரை கள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத் தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண் டால் தமிழ்த்தொண்டு, பொதுத் தொண்டு, சமு தாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காக வும், தமிழர்களுக்காக வும் பணியாற்ற வேண் டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை. பெரியார் - அண்ணா வழியில்...

ஏழ்மையான குடும் பத்தில் பிறந்ததால் வாழ்க்கையில் கஷ்டங் களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துய ரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடி யும். பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு கவி ஞர்கள் ஊட்டிய உணர் வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமிழர் களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித் துக் கொண்டு இருக்கி றேன். இப்போது முழு நிம்மதியாக இல்லை. எனக்கு பல்வேறு வழி களில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின் றன. என்னைப் பொறுத்த வரையில் பொதுவாழ்க் கையில் அவையெல் லாம் ஒரு தூசுதான்.
தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகி றேன். என் உணர்வை யும், வலியையும் பெரி தாக்கும் அளவுக்கு காரி யங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர் களுக்கு கடமை உள் ளது. நம் காலத்தில் தமி ழுக்கு தீங்கு வந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். அச்சத்தைப் போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமி ழுக்கு ஏற்பட்ட கிளர்ச் சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மனநிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண் டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது. நம் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டில்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழித் தகுதியை அளித்ததுடன், வாழ்த் துகளையும், பாராட்டு களையும் சோனியா காந்தி எழுதிய கடிதத் தில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று செம் மொழி என்று சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்கின்றனர். நான் பெற் றுத் தந்ததால் இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளது.
மொழியைக் காப்போம்!
செம்மொழித் தமிழை காப்பாற்றவும், உலகள வில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடு பட வேண்டும். தமிழ் செம்மொழி நிலை நாட்ட அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி செம் மொழித் தகுதியை இழந்துவிடாமல் காப் பாற்ற என்னை அர்ப் பணிப்பதுடன், வாதாட வும், போராடவும் செய் வதுடன் என்னையே ஒப்படைப்பேன். நம்மு டைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வைப் பங் கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப் பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
- இவ்வாறு அவர் பேசினார்.