Search This Blog

5.5.13

தமிழ்த்தேசியமும், அதன் பின்னணியும் - மதமற்ற உலகைப் படைப்போம்!

இராஜபாளையம் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 தீர்மானங்கள்
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைத்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டதால்
மீண்டும் புதிய ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும்!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக ஜூலையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்!
இராஜபாளையம் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 தீர்மானங்கள்
இராஜபாளையம், மே 5- தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வளர்ச்சிப் பணிக்களுக்காக புதிய ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும் என்பது உள்பட 20 தீர்மானங்கள் இராஜபாளையத்தில் 4.5.2013 அன்று நடைபெற்ற மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் எண்: 1
மதமற்ற உலகைப் படைப்போம்!
மதம் மக்களைப் பிளவுபடுத்துவதாலும், பகைமையை வளர்ப்பதாலும், அறிவு, காலம், பொருள், உழைப்பு இவற்றை நாசப்படுத்துவதாலும், மனிதப் பண்பு, நேயம், அமைதி மற்றும் நல்லுறவுகளுக்குக் கேடு பயப்பதாலும், பகுத் தறிவுக்கும், சிந்தனைக்கும் பொருந்தி வராமையாலும், தந்தை பெரியார் கூறும் மதமற்ற ஒப்புரவு உலகே மானுட சமூகத்திற்குத் தேவையான உயர்நெறி என்று இம்மாநாடு திடமாகக் கருதி, மக்களிடத்தில் இவ்வகையில் பல்வகை யிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, செயல்படுவது, பக்குவப்படுத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 2
ஆண் - பெண் சமத்துவம்
மானுட சமூகத்தில் ஆண் - பெண் எனும் பேதம் மேற்போக்கானது - உறுப்பு வேறுபாடுகளேயல்லாமல் அறிவில், உணர்வில், ஆற்றலில் எந்த வகையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர்.
வண்டியின் ஓட்டத்துக்கு இரு சக்கரங்கள் தேவை போலவே, மானுட சமூகத்துக்கும், வளர்ச்சிக்கும் ஆண் - பெண் சரி நிகர் சமத்துவம் தேவை என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவிப்பதுடன், அனைத்திலும் ஆண் களுக்குரிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்றும், அவற்றை முற்றிலும் எதிர்பார்க்க பெண் களுக்கு உரிமை உண்டு என்றும், ஆண்கள் மனிதத் தன்மையுடன் இதனை உணர்ந்து ஒத்துழைத்தால் அது அவர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 3 (அ)
பெண்களுக்குப் பாதுகாப்பு
பெண்கள்மீதான பாலியல் வன்முறை கடுமையான சட்டங்களின்மூலம் தடுக்கப்படவேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.
பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள கல்விக் கூடங்களில் கராத்தே உள்ளிட்ட அவசியமான பயிற்சி களைக் கட்டாயமாக அளிக்கவேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 3 (ஆ)
சின்னத் திரைக்கும் சில கட்டுப்பாடு
பெண்களை விளம்பரப் பொருளாகவும், கலையின் பெயரால் ஆபாச வடிவமாகவும் காட்டுவதற்கு இம் மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. இதில் சின்னத் திரைக்கும் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று இம்மாநாடு அறிவிக்கின்றது.
தீர்மானம் எண்: 3 (இ)
பாலியல் கல்வி தேவை
ஆரோக்கியமான பாலியல் தொடர்பான கல்வியைக் கல்லூரிகள் பாடத் திட்டத்திலாவது இருபால் மாணவர் களுக்கும் போதிப்பது அவசியம் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 4 (அ)
ஜாதி - தீண்டாமை ஒழிப்பு
தீண்டாமை - அதற்கு மூலமான ஜாதி ஒழிப்புக் கொள்கையை முதன்மையானதாகக் கொண்டு முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கம், பிரச்சாரம், போராட்டம் முதலிய அணுகுமுறைகளினால் தமிழர் சமுதாயத்தில் மாபெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
ஜாதி உணர்வால் சகோதரத்துவ மனப்பான்மைக்கு மரணக் குழி வெட்டப்படுகிறது. பகைமை உணர்வுக்குப் பச்சைக் கொடி காட்டப்படுகிறது - நாம் ஓர் இனம் - தமிழினம் - திராவிடர் இனம் எனும் உணர்வு ஏற்படாமல் போனதற்கும், அந்த இன ஒற்றுமையின்மையால் பல்வேறு இழப்புகளுக்கு ஆளானதற்கும் நம்மிடையே நிலவி வரும் ஜாதி உணர்வே காரணம் என்பது வெளிப்படை!
பெயருக்கு பின்னால் ஜாதிப் பட்டம் போடுவது அநாகரிகம் என்று உணரும் அளவுக்குத் தமிழ்நாட்டில் நமது பணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
இன ஒற்றுமைக்கும் வழிகோலப்பட்டது; இதனைப் புரட்டிப் போட்டு, இன ஒற்றுமையைச் சிதைப்பதற்குக் காரணமான ஜாதி வெறியைக் கிளப்பி, மீண்டும் தமிழினத்தைக் கூறுபோட்டு, நம்மை என்றென்றும் இந்து மதத்தின் வருணாசிரம வரிசையில் சூத்திரர்களாக, நாலாம் ஜாதி மக்களாக, வேசி மக்களாக நிலை நாட்டு வதற்குச் சில பிற்போக்கு சக்திகள் முயலுவதை முறி யடிப்பது என்றும், தமிழ்நாட்டு மக்கள் ஜாதியை அடையாளம் வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு எந்த வகையிலும் துணை போகக்கூடாது என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஜாதி வெறியைத் தூண்டும் சக்திகள்மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்து கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே ஜாதியைப் புறக்கணிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் இம்மாநாடு சுட்டிக் காட்ட விரும்புகிறது.
தீர்மானம் எண்: 4 (ஆ)
ஜாதி மறுப்புத் திருமணம், விதவைத் திருமணம், மணமுறிவு பெற்றவர்களோடு திருமணம், மாற்றுத் திறனாளிகளோடு திருமணம் எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்திக் காட்டுவது என்று கழக இளைஞரணி மாநாடு தீர்மானிக்கிறது.
காதல் திருமணங்கள் ஜாதி ஒழிப்புக்கு ஆக்கம் தருவதால், அதனை ஆதரிப்பது என்றும், காதல் திருமணம் என்றால் கெட்ட வார்த்தை என்று நினைக்கும் பிரச்சாரம் செய்யும் நிலையை மாற்றி - அது மனம் ஒத்தது - ஒழுக்கமானது - உண்மையான இணையரைத் தேர்வு செய்வது - வாழ்ந்து காட்டுவது எனும் சிறப்பு அம்சங்களைக் கொண்டது என்பதை நிரூபித்துக் காட்டுமாறு இருபால் இளைஞர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 5
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப் பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட முடியாமல் உச்சநீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு உரிய முறையில் சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் கட்டளையை நிறைவேற்றிட முனைப்புக் காட்டவேண்டும் என்றும், இந்த வகையில் பிரச்சாரம், போராட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இது தொடர்பாக மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச் சாரம் செய்வது, ஜூலையில் போராட்டத்தில் ஈடுபடுவது - அதற்கான திட்டத்தைக் கழகத் தலைவர் அறிவிப்பார் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

போராட்ட வீரர்களின் பட்டியலை இப்பொழுது முதலே தயாரிக்கு மாறு கழகத் தோழர்களை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது.

தீர்மானம் எண்: 6
ஈழத் தமிழர் வாழ்வுரிமை
 
இலங்கையில் ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், எந்தவிதமான அரசியல் தீர்வை ஈழ மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு உலகெங் கும் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக் கெடுப்புக்கு வழி செய்யவேண்டும் என்றும் அய்.நா.வை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை போன்ற தமிழர்களின் பொதுப் பிரச்சினைகளை அரசியல் கோணத்தில் அணுகி தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியைச் சீர்குலைத்து அதன் மூலம் உண்மை எதிரிகளைப் பயனடைய - பலமடையச் செய்யவேண்டாம் என்று தமிழ்நாட்டுக் கட்சிகளை, தலைவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 7
கச்சத்தீவை மீட்டிடுக!
தமிழின மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு உரியது என்பதை உறுதிப்படுத்துவதுதான் என்பதால், அதற்கான செயல் பாட்டில் உடனடியாக இறங்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 8
சமூகநீதியில் நமது கோரிக்கைகள் 

1.மத்திய அரசால் அமைக்கப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவின் முதல் அறிக்கை ஜூலை 2012 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அந்த அறிக்கையில் தேசிய பிற்படுத்தப் பட்டோருக்கான ஆணையத்திற்கு, ஏனைய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு நிகரான அதிகாரம் அளித்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எட்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் இன்னும் அந்த அறிக்கையின் மீது எந்த வித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்க வில்லை.

2. மத்திய அரசு பணியாளர்  (UPSC) தேர்வில் அந்தந்த மாநில மொழிகளை புறந்தள்ளும் வகையில் சில மாற்றத்தை, அறிவித்தது; அனைத்து அரசியல், சமூக அமைப்பின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக யு.பி.எஸ்.சி கொண்டு வந்த மாற்றத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. இத்துடன் நில்லாமல், மத்திய அரசு பணிகளுக்கு நடைபெறும் அனைத்துத் தேர்வுகளும் அனைத்து மொழிகளிலும் எழுதிடவும், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் தரப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான், மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், அனைத்து மாநில மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்.

3. பொருளாதாரத் துறையில் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கு மண்டல் குழுப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. பொது வினியோகத் திட்டத்தில், பெட்ரோல் பங்குகள் அமைத்தல், காஸ் வினியோகம் ஆகியவற்றில் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகிய பரிந்துரைகளை உடன் மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும்.

4.தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இதுவரை கிடைத்திட்ட பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உச்ச நீதி மன்ற தீர்ப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அரசியல் சட்ட திருத்தம் மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது. மக்களவையில் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. மேலும் கால தாமதமின்றி, அச்சட்டத்தை நிறைவேற்றுவதுடன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பதவி   உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட, உரிய திருத்தம்   செய்யப்பட வேண்டும்.

5.மத்திய அரசால் அமைக்கப்பட்ட சுதர்சன நாச்சி யப்பன் தலைமையிலான நாடாளுமன்றக்குழு பரிந்துரை யின்படி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக் களுக்கான இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறை வேற்றப்பட்டு, இட ஒதுக்கீட்டினை முறையாக அமுல் படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

6.பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் (கிரிமிலேயர்) என்பது அரசியல் சட்டத்தில் கூறப்படாத ஒன்று; அதனை ரத்து செய்திட வேண்டும்; ஆனால்  நிர்ணயிக்கப்பட்டுள்ள நான்கரை லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை ரூ 12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து ஓராண்டு ஆகிறது. மேலும் தாமதம் செய்யாமல், வருமான வரம்பை உயர்த்தி உடன் ஆணை நிறைவேற்றிட வேண்டும்.

7.மண்டல் குழுவில் பரிந்துரைக்கப்பட்டு இன்னும் மத்திய அரசால் நிறைவேற்றப்படாத பரிந்துரைகளான:

அ) பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
ஆ) நீதித் துறையில் இட ஒதுக்கீடு
இ) தனியார் துறையில் இட ஒதுக்கீடு

இவற்றை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8. மத்திய பணியாளர் தேர்வாணையம் (IAS IPS) நடத்தும் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று பொதுப் போட்டியில் தேர்வு பெறும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் தாங்கள் விரும்பும் பணிக்கு இடஒதுக்கீடு இடங்களில் தேர்வு செய்து மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடஒதுக்கீட்டின் வழியே தேர்வு பெறும் வாய்ப்பு உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றும், வெளியேற்றப்படுகிற நிலைமை உள்ளது. மேலும், இந்த முறையினால் காலியாக உள்ள பொதுப் போட்டி இடங்களை, காத்திருக்கும் பட்டியலில், வெளியேற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர் களுக்கு பணி வழங்கிடும் அவல நிலையும் உள்ளது. குடிமைப் பணியின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் துறை சார்ந்த பணியிடங்களை (IAS IPS) தனித்தனியாக பாகு படுத்தி இடஒதுககீடு அளித்தால், இந்த சிக்கலுக்கு உரிய தீர்வாக அமையும் என்பதால், மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வினை IAS, IPS என தனித் தனித் துறைக்காக தனியே தேர்வு செய்திட வேண்டும், இதுவே சமூகநீதியை உறுதிப்படுத்தும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

9. பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணியிடங்களுக்காக BSRB
என்கிற வங்கி தேர்வு குழுமம் நடத்துகிற தேர்வில், அந்தந்த மாநில மக்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில், எழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட் டில் தேர்வு எழுத வேண்டுமெனில், தமிழ் படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நடை பெறும் தேர்வுகளில், இந்த விதியைக் கட்டாயப்படுத்தாமல், தளர்த்தப்படுவதாகத் தெரிகிறது. இது மாநில இளை ஞர்களின் வேலை வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் என்ப தோடு தாய்மொழி தெரியாத பணியாளர்களோடு வாடிக் கையாளர்கள் உறவாடுவது பாதிக்கப்படும். இந்நிலையில் அந்தந்த மாநில மொழியில் பயிற்சி பெற்றிருத்தல் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்தி எழுத்தர் பணியாளர் களை நிரப்ப வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 9
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஆணையம் அமைக்கக் கோருதல்

இந்திய அரசமைப்புச் சட்டம் 339 இன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 340-இன்படி பிற்படுத்தப்பட்ட வர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆணையம் அமைக்கப்பட்டு, அவற்றிடமிருந்து பரிந்துரைகள் பெறப் பட்டு, அவற்றைச் செயல்படுத்தவேண்டும்.
பல பத்தாண்டுகள் கழிந்த பிறகும் மீண்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையம் அமைக்கப்படவில்லை.
இந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் பகுதியினருக்கு மேலும் பல வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைக்கப் பெறவேண்டிய நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தனித்தனியே தக்கவர்களின் தலைமையில் ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும் இப்பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது.

தீர்மானம் எண்: 10

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரக் கோருதல்
பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 11

 வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்குக!
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக ஆக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண்: 12 (அ)

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு உத்தரவாதம்
காவிரி நதிநீர்ப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், முல்லை பெரியாறில் 142 அடி நீர்த் தேக்குதல், பாலாற்றில் ஆந்திர மாநில அரசு அணை கட்டும் முயுற்சி - இவற்றில் தமிழ்நாட்டுக்குரிய உரிமை கள் நிலைநாட்டப்படவேண்டும் என்றும், இதற்கு மத்திய - மாநில அரசுகள் சட்டப்படி, நியாயப்படி சரியாக நடந்து தமிழ்நாட்டுக்குரிய உரிமைகளை நிலை நாட்டவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இவற்றின் உரிமைகளை நிலைநாட்டுவதில் கட்சிகளை மறந்து அனைவரும் ஓரணியில் நின்று போராட முன்வர வேண்டும் என்றும் தமிழர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 12 (ஆ)

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் அவசியம்
தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக தென்மாவட்ட மக் களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் காரணமாக பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புப் பெருகும் என்பது வெளிப்படை! தமிழ்நாட்டில் உள்ள மற்ற மற்ற துறைமுகங் களும் வளர்ச்சி பெறும்; அந்நிய செலாவணியையும் பெரும் அளவில் ஈட்டித்தரும்.
இந்தத் திட்டம் நீரி (Neeri) என்ற தொழில்நுட்ப நிறு வனத்தால் விஞ்ஞான ரீதியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 22 கிலோ மீட்டர் அளவுதான் பணி முடிக்கப்பட வேண்டிய நிலையில், அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் சொல்லிக் கொண்டு இருக்கும் அ.இ.அ.தி. மு.க. மற்றும் ஆட்சியின் சார்பில், ராமன் பாலம் என்றும், அதனைப் புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் ஜெயலலிதா அவர்கள் மதம் சார்ந்தும், மூட நம்பிக் கையைச் சார்ந்தும், விஞ்ஞான மனப்பான்மைக்கு எதி ராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.

2001 சட்டமன்ற தேர்தல் 2004 மக்களவைத் தேர்த லின்போது இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, இப்பொழுது இதற்கு முரணாக நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

2001 அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1991 இல் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் விருப்பத்திற்கு எதிராக செயல் படும் முடிவை கைவிடவேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 12 (இ)

தேவை நதிநீர் இணைப்பு!
இந்திய நதிகளை இணைப்பதில் சிரமங்கள் இருக்குமே யானால், குறைந்தபட்சம் தென்னக நதிகளை இணைக் கும் திட்டத்திற்கு உடனடியாக வழி செய்யவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 தீர்மானம் எண்: 13
தேவை ஏழை மக்களுக்கான பொருளாதாரத் திட்டம்
நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் ஊதியம் பெறும் மக்கள் இந்தியாவில் 77 விழுக்காடு இருப்பதாகச் சொல்லப்படு வதால், இந்த அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதார நிலை மேம்படுவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
குறிப்பாக சில்லறை வணிகத்தில்கூட வெளிநாட்டு முதலீட்டைக் கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் பொருளாதாரக் கொள்கையைக் கைவிடவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 14 (அ)
மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்குக!
இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்ட வணையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அத்தனை மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவித்திட உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 14 (ஆ)
வழக்காடு மொழியாக தமிழ்
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கவேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் ஆவன செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்:15

தூக்குத் தண்டனையை ரத்து செய்க!

இந்தியாவில் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 16

மதச் சார்பின்மைக் கோட்பாடு
மதச் சார்பின்மைக்கு எதிராக அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவதை எதிர்த் துத் தொடுக்கப்பட்ட வழக்கில், அவ்வாறு கொண்டாடு வது மதச்சார்பற்ற தன்மையைப் பாதிக்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய அமர்வு கூறி இருப்பது - அரசு அலுவலகங்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்த வர்கள், மதங்களைச் சாராதவர்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதாலும், மதச்சார்பற்ற தன்மை என்பது எந்த மதத்துக்கும் சம்பந்தமில்லாதது - தொடர்பற்றது என்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பதாலும், இதன்மீது மேல் முறையீடு செய்து உண்மையான மதச்சார்பின்மையை நிலை நாட்ட ஆவன செய்யுமாறு திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 17

போதைகளிலிருந்து விடுபடுக! 

மதப் போதை, மதுப் போதை, சினிமா போதை, கிரிக் கெட் போதைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று இளை ஞர்களை - மாணவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 18
நடைபாதைக் கோயில்களை அகற்றுக!
நடைபாதைகளிலும், பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் எந்த மத வழிபாட்டு நிலையங்களும் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக ஆணை பிறப்பித்திருந்தும், இன்னும் தமிழ்நாட்டில் அந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டி, உடனடியாக அவற்றை அகற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 19
சோதிடத்தைத் தடை செய்க!
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரச மைப்புச் சட்டம்  கூறுவதற்கேற்பவும் இந்தோனேசிய அரசு மூடநம்பிக்கைகளையும், சோம்பேறித்தனத்தையும் வளர்க்கும் ஜோதிடத்தைத் தடை செய்தது போலவும் இந்திய அரசு இந்தியாவில் ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 20

தமிழ்த்தேசியமும், அதன் பின்னணியும்

தமிழ்த்தேசியம் என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும், திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தக் கிளம்பியுள்ளவர்களைப் புறக்கணிக்குமாறு பார்ப்பனர் அல்லாத கோடானுகோடி மக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் பார்ப்பனர் களின் எல்லா வகையான ஆதிக்கங்களையும் எதிர்த்து நடத்திய இயக்கத்தால்தான் - பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி உரிமை; வேலை வாய்ப்புரிமை இவற்றைப் பெற்று வருவதோடு அல்லாமல், பார்ப்பனீயப் பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடும் எழுச்சியும் பெற்று வந்துள்ளனர்.

குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் தங்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை பெறும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது.
ஜாதி உணர்வு புறந்தள்ளப்பட்டு, தமிழரின ஒற்றுமை என்னும் ஓரின கோட்பாடு உருவாக்கப்பட்டது.

திராவிடர் என்ற வரலாற்று ரீதியான இனச்சொல் ஆரியர் - பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புக்கான குறியீடாகக் கொள்ளப்பட்டு வெற்றியும் காணப்பட்டு வருகிறது.
இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத ஊடுருவல் எதிர்ப்பும் இதன் உள்ளடக்கமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்த்தேசியம் எனும் போர்வையில் தந்தை பெரியார் அவர்களையும், திராவிடர் இயக்கத்தை யும் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல் பார்ப்பனர் களையும் தமிழர்கள் எனும் போர்வையில் ஊடுருவச் செய்வதும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பைக் கைவிட்டும், ஜாதி முறைகளைக் காப்பாற்றியும் வரும் போக்கினை அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டும் என்றும் தமிழினப் பெருமக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஈழத் தமிழர்களுக்காக இவர்கள் பாடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி, அந்தத் திரைமறைவில் இத்தகைய எதிர்மறைப் போக்கினைக் கடைபிடிப்பதில் உள்ள சூழ்ச்சியைத் தமிழின இளைஞர்கள் புரிந்து கொண்டு புறந்தள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் தளங்களில் அனைத்து உரிமைகளுக்காகவும் பாடுபட்டு வந்ததும், பாடுபட்டு வருவதும், பாடுபடப் போவதும் தந்தை பெரியார் அவர் களின் அடிப்படைக் கொள்கையும், உண்மை திராவிடர் இயக்கமுமேதான் என்பதை இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது.

             --------------------------------"விடுதலை” 05-05-2013


28 comments:

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு 1 - சிறை நிரப்பும் போராட்டம்!



இராஜபாளையம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

தமிழர் தலைவர் அறிவித்த ஆகஸ்டு -1 சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கு பெறும் இளைஞரணி தோழர்களின் ரத்த கையொப்பமிட்ட முதல் பட்டியலை மாநில இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் கு. தென்னரசு ஆகியோர் உள்ளனர் (4.5.2013).

இராஜபாளையம், மே 5- வரும் ஆகஸ்டு முதல் தேதி அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமைக் கான சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

இராஜபாளையத்தில் கடல் இல்லை. ஆனால் இங்கே கருஞ்சட்டைக் கடல் பொங்கி நிற்கிறது.

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோழர்கள், இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக கூடி யுள்ளீர்கள். எல்லா வயதி னரும் வந்துள்ளீர்கள்.
யார் இளைஞர்?

இளைஞர் என்பது வயதைப் பொறுத்ததல்ல உணர்வைப் பொறுத்தது - உணர்ச்சியைப் பொறுத்தது - இலட்சியத்தில் கொண்டி ருக்கும் பிடிப்பைப் பொறுத் தது.

முதியவர்களுக்குப் பின்னால் இளைஞர்கள்

எனக்குப் பின்னால் நமது தளபதி ஸ்டாலின் உரையாற்றிட உள்ளார். இளைஞர்களுக்குப் பின் னால் முதியோர் இருக் கிறார்கள் என்பதைவிட முதியவர்களுக்குப் பின் னால் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனக் குப் பின்னால் தளபதி உரையாற்ற இருக்கிறார்.

இராஜபாளையம் என்று வருகிறபோது 1982-க்கு என் நினைவு செல்லுகிறது.

அந்த மம்சாபுரம்

மம்சாபுரத்திற்கு மருத் துவமனையைத் திறப்பதற்கு நான் காரில் சென்றபோது தி.மு.க. கொடியைக் காட்டி, மாலையைக் கையில் வைத் துக் கொண்டு என்னை வரவேற்பது போல பாசாங்கு காட்டி என்னைத் தாக்கி னார்கள். ரத்தம் கொட்டியது. உடம்பெல்லாம் காரின் கண்ணாடித் தூள்கள், ஓட்டுநரின் சாமர்த்தியத் தால் தப்பினேன். ஆனாலும் ஒப்புக் கொண்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு முடித்த பிறகு தான் திருச்சிக்குச் சென் றேன் என்ற தகவலை கழ கத் தலைவர் குறிப்பிட்டார். 31 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற வன்முறை அது (மேலும் மூன்று முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப் பட்டதுண்டு)

தமிழ் ஓவியா said...

ஆயிரம் ஆயிரம் எதிர்ப் புகள், அடக்கு முறைகள் சிறைச் சாலைகளைச் சந் திக்க நேரிட்டாலும் தந்தை பெரியார் அவர்களும் சரி, அவர்கள் கண்ட இந்த இயக்கமும் சரி இலட்சியப் பாதையை விட்டு விலகாது என்பதைக் குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

போராட்ட அறிவிப்பு! இந்த மாநாட்டில் போராட்டத் திட்டம் அறி விக்கப்படும் என்று கூறி யிருந்தேன். தீர்மானமும் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும். மனிதன் சந்திர மண்டலத்துக்குள் கூடப் போய்த் திரும்பும் கால கட்டம் இது. இத்தகைய கால கட்டத்தில் தமிழன் கட்டிய கோயிலுக்குத் தமிழன் அர்ச்சகனாகப் போக முடியாது. கோயில் கருவறை என்பது பார்ப்பனர்கள் மட்டுமே செல்லக் கூடிய இடமாக இருக்கிறது. இது மதத்தின் பெயரால் திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையாகும்.

இதனை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டார். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளோடு அய்யாவைப் புதைத்து விட்டோமே என்று மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார்.

கழகம் தொடர்ந்து இந்த உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை முதல் அமைச்சர் கலைஞர் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றாலும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கி வருகின்றனர். சுமுகத் தீர்வு என்றால் என்ன?

உச்சநீதிமன்றத்திலே தமிழ்நாடு அரசு சார்பிலே மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அந்தச் சுமுகம் என்றால் என்ன? விளக்கம் தேவை கிராமக் கோயில் பூசாரிகளாக பார்ப்பனர் அல்லாதார் இருப்பார்கள். ஆகமவிதிகளுக்கு உட்பட்ட பெரிய பெரிய கோயில்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்று சுமுகமாக தீர்வு காணலாம் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால் அதனை ஏற்க மாட்டோம் - கடுமையாக எதிர்ப்போம்! போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இரண்டு மாதங்கள் இதுபற்றி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம், இலட்சியம் நிறைவேறும் வரை ஓய்ந்திட மாட்டோம்.

ஆகஸ்டு 1 சிறை நிரப்பும் போராட்டம்!

ஆகஸ்டு முதல் தேதி என்பது - தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம், போராட்டத்தை நடத்தும் வரலாற்றுக் குறிப்பாகும்.

அதே போல வரும் ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் (பலத்த கைதட்டல்).
ரத்தக் கையொப்பம்

தமிழ் ஓவியா said...

நான் இதனை அறிவிப்பதற்கு முன்னதாகவே எனது அறிக்கையின் அடிப்படையில் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களின் பட்டியலோடு தயாராக இருக்கிறார்கள். ரத்தக் கையொப்பம் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். இதற்கெல்லாம் நாம் ரத்தம் சிந்தக் கூடாது. அந்த ரத்தம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது இயக்கம் மனிதாபிமான இயக்கம். எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்படுவதாக அமைய வேண்டும்.

வன்முறைக்கு இடம் இல்லை

நாம் நடத்தும் போராட்டத்தில் எப்பொழுதுமே வன்முறைக்கு இடம் இருக்காது. பேருந்துகளுக்குச் சேதம் ஏற்படாது - பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இருக்காது.
சுதந்திரப் போராட்டம் என்று கூறி காங்கிரஸ்காரர்கள் தண்டவாளத்தைப் பெயர்த்த போதும், போஸ்டாபீஸைக் கொளுத்திய போதும்கூட அப்பொழுதே தந்தை பெரியார் அதனைக் கண்டித்துள்ளார்.

எந்த ஒரு இலட்சியத்தை அடைவதாக இருந்தாலும் அதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

தோழர்களே தயாராகுங்கள் - இங்கே நமது அழைப்பை ஏற்று தி.மு.க. பொருளாளர் தளபதி கலந்து கொண்டு இருக்கிறார்.

மிசா கைதியாக...

1976 நெருக்கடி காலத்தின்போது மிசா கைதிகளாக சென்னை மத்திய சிறைச்சாலையில் நாங்கள் அடைக்கப் பட்டபோது ஒரு நாள் இரவு - தளபதி ஸ்டாலினை அடித்துத் துவைத்து நாங்கள் இருந்த அறையில் தான் போட்டார்கள். என்மீது தான் விழுந்தார். அப்பொழுது அவரைத் தூக்கி நிறுத்தி - பொது வாழ்வில் இவை எல்லாம் சகஜம்தான் அதற்கொரு பயிற்சிதான், தளராதீர்கள் என்று அன்று சொன்னேன்.

தளரவில்லை தளபதி

அவர் தளர்ந்து விடவில்லை - வளர்ந்திருக்கிறார் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிருகிறார். அவரை வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.



போராட்ட வீரர் பட்டியல் ரத்தக் கையொப்பத்துடன்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆகஸ்டு முதல் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க போராட்ட வீரர்களின் பட்டியல் முதல் பட்டியல் கழகத் தலைவரிடம் இராஜபாளையம் இளைஞரணி மாநில மாநாட்டில் அளிக்கப்பட்டது.

1081 பேர் அதில் கையொப்பமிட்டி ருந்தனர். பலர் ரத்தக் கையொப்பமும் போட்டிருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலை தமிழர் தலைவரிடம் வழங்கியபோது கடல் அலை ஓசையாக கையொலி எழுந்தது.

தமிழ் ஓவியா said...


நசுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் - தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சியுரை


இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் (4.5.2013)

இராஜபாளையம் மே 5- நசுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் என்றார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.

இராஜபாளையத்தில் நேற்று (4.5.2013) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்று தி.மு.க. பொருளாளர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது: திராவிடர் கழக இளைஞரணி 1978இல் தொடங்கப்பட்டுள்ளது தி.மு.க. இளைஞரணி 1980இல் மதுரையில் ஜான் சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.

தி.க. இளைஞரணியின் குறிக்கோள்கள் உன்னதமானவை

திராவிடர் கழக இளைஞரணியினரின் குறிக்கோள்கள் மிகவும் உயர்ந்தவை.

பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் விதவைத் திருமணங்கள் வரதட்சணையற்ற திருமணங்களைச் செய்து கொள்வது என்பதெல்லாம் அறிவார்ந்த முற்போக்குத்தனம் கொண்டதாகும்.

கலைஞரின் அறிவுரை

தி.மு.க. இளைஞரணியினருக்காக ஒரு சின்னம் (Emblem) ஒன்றைத் தயாரித்து தலைவர் கலைஞரிடம் அளித்தோம். அதில் அண்ணா, கலைஞர் உருவம் இடம் பெற்றிருந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் அதில் தந்தை பெரியார் உருவம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார். அதற்கு விளக்கம் சொன்னதுதான் முக்கியம்.

பதவிக்கு ஆசைப்படாதே - கொள்கைக்கு முன்னுரிமை கொடு என்பதற்காகத்தான் அய்யா படம் இடம் பெற வேண்டும் என்று சொன்னேன் என்று கலைஞர் அவர்கள் சொன்னது நமது இளைஞர்களுக்கு முக்கியமான, தேவையான வழிகாட்டுதல் ஆகும். நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறு வயதிலேயே மேடை ஏற்றப்பட்டு உரையாற்றப் பயிற்சி அளிக்கப்பட்டவர். அண்ணா அவர்களே அந்த சிறுவன் உரையைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்தச் சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உருத்திராட்சம் அணிந்திருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என்றிடு வார்கள். ஆனால் இவர் அருந்திய ஞானப்பால் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு ஈரோட்டுப்பால் என்று 1943ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டவர் தான் நமது ஆசிரியர் பெருந்தகை.

வழிகாட்டுகிறார் ஆசிரியர்

அவரின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடியவை.
இதே ராஜபாளையத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதற்குமுன் நான் கலந்து கொண்டு இருந்தாலும் தாய்க் கழகத்தில் மாநில இளைஞரணி மாநாட்டில், நான் பங்கு பெறுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மாநில இளைஞரணி மாநாடு தோழர்கள் முழக்கம்


4.5.2013 சனி மாலை 7 மணிக்கு ஜவகர் திடலில் சுயமரியாதைச் சுடரொளி ஏ.எஸ்.ஆர். தங்கராசா நினைவரங்கில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன் குழுவினரின் திக்கெட்டும் பரவட்டும் திராவிடம் எனும் வீதி நாட கங்களுடன் தொடங்கப்பட்டது. பெரும் வரவேற்பு மக்கள் கடலில் கிடைத்தது. பேரணி திடலில் நுழைந்தபோதே மக்கள் கடல் நிரம்பி வழிந்தது. இரா. திருப்பதி,

மாநாட்டுத் தலைவர்

மாநாட்டுக்கு இளைஞரணி மாநில செயலாளர் இரா. திருப்பதி தலைமை வகித்தார். மாநில மாணவரணி செய லாளர் த.சீ. இளந்திரையன் அனைவரை யும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் தலைவரை முன்மொழிந்தார். விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. கோவிந் தன், விருதுநகர் கழக மாவட்ட இளை ஞரணி செயலாளர் இரா. அழகர் ஆகியோர் தலைவரை வழி மொழிந்தனர்.

மதுரை மண்டலக் கழகத் தலைவர் வே. செல்வம், விருதுநகர் கழக மாவட்ட தலைவர் வானவில் வ. மணி, மாவட்ட செயலாளர் தி. ஆதவன் ஆகியோர் முன் னிலை வைத்தனர்.

பழனி மாவட்ட மாணவரணி செய லாளர் சே.மெ. காவியா கழகத் தோழர் களின் முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

தஞ்சை இரா. செயக்குமார்

மாநாட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் உரையாற்றினார்.

தீர்மானங்கள் - டாக்டர் துரை. சந்திரசேகரன்

காலத்தை வெல்லும் 20 தீர்மானங் களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் முன்மொ ழிந்தார். பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி உரையாற் றுகையில், ஜாதியைக் காப்பாற்றத் துடிக் கும் சக்திகளை எதிர்த்து இதோ இளைஞர் பட்டாளம் தயாராகி விட்டது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தமது உரையில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நம் பிரச்சாரம் நடைபெற வேண்டும். நமது இளைஞர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் தமது உரையில் கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் கூடாதா? இந்தி யாவுக்கு இரண்டு அரசியல் சட்டங்கள் இருக்கின்றனவா? என்ற வினாவை எழுப்பினார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு

2400 கோடி ரூபாய் செலவில் தொடங் கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனை ராமனைக் காட்டி முடக்குவது என்ன நியாயம்? என்ற நியாயமான வினாவை எழுப்பினார் செயலவைத் தலைவர்.

ச.அமுதன்

தி.மு.க. இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் திருவல்லிபுத்தூர் ச. அமுதன் தன் உரையில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் தலைமையில் திரா விடர் கழகப் பணிகள் எழுச்சியுடன் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

பார்ப்பனர் எதிர்ப்பு தான் தன்னை நாத்திகவாதியாக ஆக்கியது என்றார் தந்தை பெரியார். அந்த உணர்ச்சிதான் நம் மக்களுக்குக் கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தது - உத்தியோக உரிமையைப் பெற்று தந்தது. அதனைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது பார்ப்பனர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடோ தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும் திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்து பவர்களை தமிழின இளைஞர்கள் புறக் கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தங்கம் கு. தென்னரசு

முன்னாள் கல்வி அமைச்சரும், தி.மு.க. நெசவாளர் அணியின் தலைவருமான தங்கம் தென்னரசு அவர்கள் தமது உரையில், இம்மாநாடு தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது உண்மையே என்பதை நிரூபித்துக் காட்டும் மாநாடு என்று குறிப்பிட்டார் கோடையிலே இளைப்பாறக் கிடைத்த குளிர் தருவதாக ஆசிரியர் அவர்கள் கழகத் தலைவர் கலைஞருக்கு இருக் கிறார் என்றார். இந்தியா டுடே என்ற இதழ் தி.மு.க. வில் இளைஞரணியினை வலுவாக்கி அதன் மூலம் நல்ல தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் வளர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டதை எடுத்துக்காட் டினார்.

நன்றியுரை

இதையடுத்து மாநாட்டு வரவேற்புக் குழு பொருளாளர் பூ. சிவக்குமார் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது.

தமிழ் ஓவியா said...


டெசோ அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் பேரவையில் கச்சத்தீவு பற்றி தீர்மானம் கொண்டு வர உசுப்பி விட்டிருக்கிறது தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்



சேதுசமுத்திர திட்டம்: அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக? தி.மு.க. தலைவர் கலைஞர்

சென்னை, மே 5- கடந்த மாதம் 15.4.2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் பேரவையில் கச்சத்தீவு பற்றி தீர்மானம் கொண்டு வர உசுப்பி விடப்பட்டிருக்கிறது போலும்! என கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் முர சொலியில் (5.5.2013) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

3-5-2013 அன்று என்ன காரணத்தாலோ முதலமைச்சர் பேரவையில் 110ஆவது விதியை விட்டு விட்டார். கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை முதல் அமைச்சரே முன்மொழிந்து, அவரே அந்தத் தீர்மானத்தின் மீது நீண்ட நேரம் பேசி நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்றால், அதைப் பற்றி முன்கூட்டியே உறுப்பினர்களுக்குத் தெரிவித் திருந்தால், அந்தப் பொருள் பற்றி அவையிலே பேசுவதற்கு உறுப்பினர்கள் தயாராக வந்திருப்பார்கள். ஆனால் முதல் நாள் இரவுதான் மன்ற உறுப்பினர் களுக்கே தெரிவித்து மறுநாள் முதலமைச்சர் தனக்கென ஓர் உரையைத் தயாரித்து வைத்துக் கொண்டு, அவையிலே உள்ள மற்றவர்கள் அந்தப் பொருள் பற்றி விரிவாகப் பேசுவதற்கு இடமே அளிக்காமல், அந்த உரையைப் படித்து முடித்து விட்டார்.

முதலமைச்சர் பேரவையிலே படித்த உரையை தமிழ்நாட்டு மக்களை ஒருமுறை கவனிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த உரையில்; தொடக்கம் முதல் முடிகின்ற வரையில் எனக்குச் செய்யப்பட்ட அர்ச்சனை தான்! கச்சத்தீவை மீட்க வேண்டு மென் றால் மீட்க வேண்டியதுதானே? அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் வேண்டு கோள் அவர்களுக்கு விடுக்க வேண்டியதுதானே? இதிலே என்மீது புகழ்(?) பாடுவதற்காகப் பேரவை யிலே ஒரு தீர்மானமா? திடீரென்று கச்சத்தீவு பற்றிய தீர்மானம் அம்மையாருக்கு எப்படி நினைவுக்கு வந்தது? கடந்த மாதம் 15-4-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் பேரவையில் கச்சத்தீவு பற்றி தீர்மானம் கொண்டுவர உசுப்பி விட்டிருக்கிறது போலும்! டெசோ நிறைவேற்றிய தீர்மானத்தின் இறுதியாக; இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368ஆவது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப் பட வேண்டும். கச்சத் தீவைப் பொறுத்த வரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறை வேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவ தென முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் ஜெயலலிதாவைப் பற்றியோ, அவரது கட்சியைப் பற்றியோ நாம் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் ஜெய லலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் இவ்வளவு நேரம் செலவிட்டு என்னைப் பற்றி புராணம் பாட வேண்டுமா என்ன?

தமிழ் ஓவியா said...

இலங்கைத் தமிழர்களுக்காக - தமிழக மீனவர் களுக்காக என் வாழ்நாளில் நான் பாடுபட்டேனா இல்லையா என்பதை அவர்களே அறிவார்கள், தமிழ்நாட்டு மக்களே அறிவார்கள். அதற்காக நான் தமிழக முதலமைச்சரிடம் சான்றிதழா கேட்டேன்? கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 1991ஆம் ஆண்டு சூளுரைத் ததைப்போல நானா சூளுரைத்தேன்? அவர் சபதம் செய்துதான் 22 ஆண்டுகள் ஓடிவிட்டன! என்ன செய்து முடித்து விட்டார்? 15-8-1991 அன்று ஜெய லலிதா என்ன பேசினார்? கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது என்று முழங்கியது நானா? ஜெயலலிதாவா? அப்படி சவால் விட்டுவிட்டு தற்போது என்னைப் பார்த்து, ஏன் போராடவில்லை என்றும், துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்றும் குற்றம் சாட்டுவது நியாயம்தானா?

தமிழ் ஓவியா said...

25-12-1990 அன்று சங்கராச்சாரியாரைச் சந்திக்க வந்த அன்றைய பிரதமர் சந்திரசேகர் அவர்களை தனது வீட்டிற்கே அழைத்து ஜெயலலிதா தேனீர் விருந்து கொடுத்து, தொடர்ந்து டெல்லி சென்று பிரதமரிடமும், குடியரசுத் தலை வராக இருந்த ஆர். வெங்கட்ராமனிடமும் தி.மு. கழக ஆட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படு கிறது. எனவே அந்த ஆட்சியைக் கலைக்க வேண்டு மென்று நேரில் புகார் மனுக் கொடுத்தாரே ஜெயலலிதா, அதைப்போல கச்சத் தீவுப் பிரச் சினைக்காக டெல்லி சென்று பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் எத்தனை முறை சந்தித்தார்? என்னென்ன போராட்டங்களை, எந்தெந்தத் தேதி யிலே நடத்தினார் என்று பட்டியலிட முடியுமா? 20-4-1992 அன்று இதே சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை என்று கூறினாரே, அதை மறந்துவிட்டு தற்போது நான் கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை, எதை மீட்டிக் கொண்டிருந்தேன் என்று கேள்வி கேட்டால் என்ன செய்வது? சட்டப்பேரவையிலேயே; கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை என்று ஜெயலலிதாவே பேசிவிட்டு, இப்போது என்மீது குறை கூறுவது என்ன வேடிக்கை?

ஜெயலலிதா மேலும் அப்போது பேசும்போது, மீனவர்கள் இண்டர்நேஷனல் பவுண்டரி லைனைக் கடந்து சென்று கச்சத் தீவு அருகில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்தால்தான் அவர்களுக்குப் போதிய அளவு நல்ல வகை மீன்கள் கிடைக்கின்றன. நம் முடைய இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்றால், அவர்களுக்குத் தேவையான அளவு நல்ல ரக மீன்கள் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பலமுறை இண்டர் நேஷனல் பவுண்டரி லைனைக் கடந்து செல்லும் போது இலங்கைக் கடற்படையினர் அவர்களு டைய படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்கள் பிடித்து வைத்திருக்கின்ற மீன்களை எல்லாம் கைப் பற்றிக் கொண்டு, அவர்களுடைய படகுகளை எரித்து, இப்படிப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன என்று பேரவையில் குறிப்பிட் டாரா இல்லையா? கச்சத் தீவை தாரை வார்க்க தி.மு.க. எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு.கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவுப் பிரச்சினையை எழுப்பி கச்சத் தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை.

கச்சத் தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப் படுவதை எடுத்துக்காட்டி அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை. ஒன்றைச் சொல்ல வேண்டுமே யானால் - 30-9-1994இல் தமிழக முதல மைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் கூந உநனபே டிக வாளை வலே ளைடயனே வடி வாந ஐளடயனே சூயவடி யன நெந னடிநே லெ வாந ழுடிஎநசஅநவே டிக ஐனேயை வாந வேநசநளவ டிக நெவவநச டையவநசயட சநடயவடிளே அதாவது தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ் சிறிய தீவினை (கச்சத்தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடை யிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத் தான் - என்று அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறிப்பிட்டது உண்டா இல்லையா? முதலமைச்சர் ஜெயலலிதா தனது உரையில், ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கப்போவது தெரிந்திருந்தும் ஏன் எந்தவிதமான நடவடிக்கையையும் கருணாநிதி உடனே எடுக்கவில்லை என்று கேள்வி கேட்டிருக் கிறார். ஒப்பந்தம் 26/28-6-1974 அன்று கையெழுத் தான உடனேயே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினேன். அதில் பொன்னப்ப நாடார், ஏ.ஆர். மாரிமுத்து, ஆறுமுக சாமி, திருப்பூர் மொய்தீன், அப்துல் வகாப், அரங்கநாயகம், வெங்கடசாமி, ஜி. சாமிநாதன், ஈ.எஸ். தியாகராசன், ஏ.ஆர். பெருமாள், சக்திமோகன், மணலி கந்தசாமி, ம.பொ.சி., ஏ.ஆர். தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு கச்சத் தீவு பற்றி தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத் திட அப்போதே மறுத்துவிட்டது. ஆனால் அதே 29ஆம் தேதியன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,

தமிழ் ஓவியா said...

Dear Prime Minister,
On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri Lanka Agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India. May I express the hope that you will take into consideration the decision contained in the Resolution and take appropriate action?

என்று எழுதியிருக்கிறேன். இதுதான் கச்சத் தீவினை நான் தாரை வார்த்துவிட்டேன் என்ப தற்கான ஆதாரமா? துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா சொல்லி யிருக் கிறாரே; துரும் பைக் கிள்ளிப் போட்ட தற்கான ஆதாரம்தான் இது!

அதுமாத்திரமல்ல; 24-7-1974 அன்று கச்சத்தீவுப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களிலே முதல மைச்சராக இருந்த நானே கலந்து கொண்டேன். 23-7-1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை வந்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அப்போது தி.மு. கழக உறுப்பினராக இருந்த நண்பர் இரா. செழியன் குறிப்பிட்டார்.

தமிழக அரசைக் கலந்தாலோசிக் காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோதப் போக்காகும் என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் நண்பர் எஸ்.எஸ். மாரிசாமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் திலேயே அதாவது 21-8-1974 அன்று பேர வையில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப் பட்ட தீர்மானம், இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டது மான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து, கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது

என்பதாகும். ஆனால் இந்தத் தீர்மானத்தை ஜெய லலிதா, பெயரளவிலே தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக தற்போது சொல்லியிருக்கிறார். நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் பெயரளவிலே நிறை வேற்றப்பட்டது, அம்மையார் நிறைவேற்றினால் மட்டும் முழு மனதோடு நிறைவேற்றப்படுவதா?

அடுத்து ஜெயலலிதா தனது நீண்ட உரையில் எடுத்து வைத்திருக்கும் மற்றொரு வாதம் - 1974இல் திரு. கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார். ஆனால் 2013இல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார். இது என்ன பித்தலாட்டம் என்று பேரவையில் பேசி யிருக்கிறார். பித்தலாட்டம் என்று யாரோ ஒரு உறுப்பினர் அல்ல; முதல் அமைச்சரே இப்படிப் பேசி அவை நடவடிக்கைக் குறிப்பிலே இடம் பெற்றுள் ளது.

தமிழ் ஓவியா said...

15-4-2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தில், 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டபோது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, குறைந்தபட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற் கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டு மென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா நேற்றையதினம் பேரவையில், ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, கருணாநிதி சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்; இது என்ன பித்தலாட்டம் என்று கேட்டிருக் கிறார். தீர்மானத்தில் ஒப்பந்தம் கையெழுத் தானபோது என்றுதான் இருக்கிறதே தவிர, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே என்று குறிப்பிடப் படவில்லை. இதில் இருந்து யார் செய்தது பித்த லாட்டம் என்பதையும், பேரவையில் முதல மைச்சரே உண்மையை மறைத்து தவறான தகவலைத் தெரிவித் திருக்கிறார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

அடுத்து, ஜெயலலிதா தனது உரையில் கச்சத் தீவுப் பிரச்சினையில் திரு. கருணாநிதி யின் செயலற்ற தன்மை காரணமாக, இரட்டை நிலை காரணமாக, தனக்கே இயல்பான கபட வேடம் காரணமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். சட்டப் பேரவையில் ஒரு முதலமைச் சரே இந்த அளவிற்குக் கடுமையாக என்னைத் தாக்கிப் பேசுவது முறைதானா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எது இரட்டை நிலை? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்துவிட்டு, தற்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறாரே; அதுவல்லவா இரட்டை நிலை!

தமிழ் ஓவியா said...

இலங்கையிலே அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று பேரவையில் ஜெயலலிதா முழங்கினாரே, அதற்குப் பெயர் இரட்டை நிலையா? கபட நாடகமா? ஏதோ எப்படியோ பதவியிலே இருக்கிறோம், நம்மை எதிர்க்க யாரும் இல்லை, நாம் எதை வேண்டு மானாலும், எங்கே வேண்டுமானாலும் பேசலாம், நாம் பேசி முடித்து விட்டு திரும்பிப் பார்த்தால், கைதட்டி அதற்கு தலையாட்டுவோர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் இப்படியெல்லாம் பேசலாமா? ஜெயலலிதா திரும்பத் திரும்ப தனது உரையில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகப்போவது எனக்குத் தெரியும் என்பதைப் போலக் கருதிக் கொண்டு பேசியிருக்கிறார்.

இதற்கு நான் விளக்கம் சொல்வதை விட 17-8-1991 அன்றே தினமணி நாளேடு எழுதிய தலையங்கத்தில், 1974இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, திருமதி பண்டார நாயகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமுன்னர் இதைப் பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று அப்போதே எழுதியிருந்தது. அதே தலை யங்கத்தில், 1976இல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களைக் கலந்தாலோ சிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற் றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவின் அருகில் மீன் பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருப்பதில் இருந்தே, தி.மு. கழகம் ஆட்சி யிலே இருந்த போது மீன் பிடிக்கும் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறுவது சுத்தப்பொய், பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

1996ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலும், பிறகு 2006 முதல் 2011 வரையிலும் தி.மு. கழகம் தானே ஆட்சியிலே இருந்தது, அப்போது கருணாநிதி கச்சத் தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். நான் திரும்ப 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதலும் ஜெயலலிதாதானே ஆட்சியிலே இருக்கிறார், இவர் ஏன் கச்சத் தீவை மீட்க வில்லை என்று கேட்டால் இவர் எங்கே கொண்டு போய் முகத்தை வைத்துக் கொள்வார்?

2006ஆம் ஆண்டு முதலமைச்சராக திரு. மு. கரு ணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார், இருந்தாலும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட, கச்சத் தீவுப் பிரச்சினையில் அ.தி.மு.க. ஆட்சி 1991ஆம் ஆண்டு பேரவையிலே கொண்டு வந்த தீர்மானத்தையும் நினைவூட்டி 22-9-2006 அன்று நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் -

“I am sure you are also aware of the fact that the Legislative Assembly of Tamil Nadu had passed a Resolution in 1991 on this issue wherein the Tamil Nadu Legislative Assembly called upon the Government of India to take all urgent action and efforts necessary to get back Katchathivu and restore it to the Indian territory apart from moving the Sri Lankan Government to pay compensation for families of fishermen killed by the Sri Lankan Navy as well as those who have lost their belongings in the attacks by them. Government of India was also requested to move the Sri Lankan Government to create “Congenial conditions for Tamil Nadu fishermen to lead a peaceful life”

என்றும் நினைவூட்டியிருக்கிறேன். கிறித்தவர்களும், மற்றவர்களும் ஆண்டு தோறும் கச்சத் தீவுக்குச் சென்று அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தத் திருவிழாவே நடக்கவில்லை. 2010ஆம் ஆண்டு கழக ஆட்சியிலேதான் நான் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசிடம் இதுபற்றிப் பேசி மீண்டும் அந்தக் கோவில் திருவிழா நடைபெற்றது.

23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக் கிடையே நல்லுறவு பேணவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகளைக் காப்பாற்ற வும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும் எழுதியிருக்கிறார். “The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theevu could be upheld at the same time.”

அதாவது, கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் - என்று இப்படியெல்லாம் அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைக்கு நம்மைப் பார்த்து கேள்விக் கணை தொடுக்கிறார்; பாவம்!
ஜெயலலிதா ஏற்கெனவே ஒருமுறை வெளியிட்ட அறிக்கையிலே ஒன்றைச் சொல்லியிருக்கிறார். கச்சத் தீவுப் பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதலமைச் சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும் என்று அவரே வெளியிட்டிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு, தான்தான் இலங்கைத் தமிழர்களுக் காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் அவதாரம் எடுத்ததைப் போலவும், மற்றவர்கள் எல்லாம் எதுவுமே செய்யவில்லை என்பதைப் போலவும் கருதிக் கொண்டு, தனக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக சட்டப்பேரவையில் சண்ட மாருதம் செய்து விட்டுப் போகட்டும்; அதற்காக என்னைப் பற்றி வாய் நீளம் காட்டிப் பேசினால், அவர் அதில் தோற்றுத்தான் போவார்! வாய்மையே வெல்லும் என்பதை நாம் நிலைநாட்டியே தீருவோம்.
அன்புள்ள, மு.க.

தமிழ் ஓவியா said...

சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ.75,000 பரிசு: இமாச்சல பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு


சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சாதி பேதத்தை ஒழிக்க சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ. 75,000 பரிசு அளிக்கப்படும் என்று வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சாதி விட்டு சாதியோ, மதம் விட்டு மதமோ திருமணம் செய்தால் காப் பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சாதி பிரச்சனையை போக்க வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் ஜோடிக்கு ரூ.75,000 பரிசு அளிக்கப்பட்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு திருமணம் செய்யும் ஜோடியில் ஒருவர் எஸ்.சி.யாக இருக்க வேண்டும். முன்னதாக இந்த வகை திருமணத்திற்கு ரூ.25,000 பரிசு அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சிறப்பு செயலாளர் எம்.பி. சூத் கூறுகையில்,

சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 25,000 பரிசுத் தொகை ஊக்கமளிப்பதாக இல்லை. அதனால் தான் அந்த தொகையை அதிகரிக்க முடிவு செய்தோம். இந்த புதிய அறிவிப்பை அடுத்து ஏராளமான இளம் ஜோடிகள் அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

புதிதாக திருமணம் செய்துள்ள சிம்லாவை சேர்ந்த அனீஷ் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா கூறுகையில், திருமணம் அவரவர் விருப்பம் என்றனர். வங்கியில் பணிபுரியும் அனீஷ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தார். அவரது மனைவி ஸ்வேதா பிராமணர்.
--------------http://tamil.oneindia.in/news/2013/05/05/india-marry-outside-caste-himachal-get-rs-75000-174680.html

தமிழ் ஓவியா said...


ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தும் பாராட்டத்தக்க இமாச்சல் அரசு


சிம்லா, மே, 6 - ஜாதி ஒழிப்புக்கு வித் திடும் கலப்புத் திரு மணத்தை ஊக்கப்படுத் தும் வகையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்க ளுக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப் படும் என இமாச்சல் அரசு பாராட்டத்தக்க திட்டத்தை அறிவித் துள்ளது.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு, 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என, இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித் துள்ளது, அரியானா மாநிலத் தில் உள்ள, ஜாதி பஞ் சாயத்துகள் எல்லாம், கலப்புத் திருமணங்க ளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, கீழ் ஜாதி யைச் சேர்ந்த பெண் ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்பவர்களுக்குக் கடும் தண்டனையும் விதிக்கிறது.

இந்த நிலையில், அண்டை மாநிலமான, இமாச்சல பிரதேசத்தில் உள்ள, முதல்வர் வீர்பத் திர சிங் தலைமையி லான, காங்கிரஸ் அரசு, கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தி வருகிறது.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு, இதுவரை, 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட் டது. தற்போது அந்த பரிசுத் தொகை, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் பரிசுத் தொகையைப் பெற, கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடி களில் ஒருவர், தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சலில், கடந்த 2009-10ல், 232; 2010-11ல் 300; 2011-12ல், 304, 2012-13ல், 277 என, நான்கு ஆண்டுகளில், 1,113 கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன.

ஜாதி என்ற தடையை மீறி, இளம் பெண்களும், வாலிபர்களும் கலப்புத் திருமணம் செய்து கொள்வதை ஊக்கப்படுத்துவதற்காக, இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக, அம்மாநில, சமூக நீதித் துறை சிறப்புச் செயலர், சூட் தெரிவித்து உள் ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை, 68.50 லட்சம். இவர்களில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 25 சதவீதம் பேர். கலப்புத் திருமணங் களை ஊக்கப்படுத்தும் போது, ஜாதி முறைகள் வரும் காலங்களில் ஒழிந்து விடும் என்ப தால், இந்தப் பரிசுத் திட்டத்தை, இமாச்சல பிரதேச அரசு அமல் படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
06-05-2013

தமிழ் ஓவியா said...


இராஜபாளையம் மாநாடு



4.5.2013 சனியன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு கழக வரலாற்றில் முத்திரை பொறித்த ஒன்றாக அமைந்து விட்டது!

தன்மான இயக்கக் காலந்தொடங்கி, திராவிடர் கழகம் என்ற வகையில் இவ்வூரில் பொதுக் கூட்டங்கள் பல நடைபெற்றதுண்டு, மாநாடு என்னும் வகையில் இந்த மாநாடுதான் அந்த மண்ணில் மிகப் பெரியது - எழுச்சி மிக்கது!

கடந்த இரு மாதங்களாக மாநில இளைஞரணி செயலாளர் மானமிகு இல. திருப்பதி அவர்களுடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு தஞ்சை இரா. செயக்குமார் - அவருடன் பத்துத் தோழர்கள், இராஜபாளையம் தோழர்கள் மானமிகு சிவக்குமார், மானமிகு கோவிந்தன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாண்டி முருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு சிகரத்தை எட்டியது என்றே கூற வேண்டும். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வானவில் வ. மணி அவர்களின் துணை அருந் துணையாக இருந்தது.

எத்தனைப் பேர் இருந்து நடத்தினார்கள் என்பதைவிட இருப்பவர்கள் எப்படி திட்டமிட்டுப் பணியாற்றினார்கள் என்பதுதான் முக்கியம்! இதற்கொரு எடுத்துக்காட்டுதான் இராஜபாளையம் மாநாடு!

ஆன்மிகம் நிரம்பி வழியும் இராஜபாளையத்தில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கும் உரிய இடம் தந்தனர் என்றே கூற வேண்டும். கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, கழகத் தின் சமுதாயப் பணியால் ஏற்பட்ட பலன்களை அன் றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களால், எப்படி அவற்றைப் புறந்தள்ள முடியும்? அதன் வீச்சைக் காண அங்கு முடிந்தது.

கொளுத்தும் வெயில் கால மன்றோ! மாலை நேரத்தில் பேரணி என்றாலும் தாகத்திற்குத் தவிக்காதவர்கள் இருக்க முடியாதே! அதுவும் தொண்டை வற்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு வந்த நிலையில், தாகத்திற்குக் கேட்கவா வேண்டும்?

ஆங்காங்கே தாய்மார்கள் குடும்பத் தலைவர்கள் குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு, தண்ணீரை வழங்கிய அந்தத் தன்மையை என்ன சொல்லுவது!

பக்தியைத் தாண்டி இந்தப் பகுத்தறிவு இயக்கத் தின்பால் தமிழர்கள் வைத்துள்ள அந்தப் பாசம், அன்பு மெய்ச் சிலிர்க்கக் கூடியதே!

பல கட்சிக்காரர்களின் மாநாட்டையும், பேரணி யையும் அவ்வூர் மக்கள் பார்த்தவர்கள்தான்; திரா விடர் கழக மாநாட்டில் ஊர்வலத்தில் பல வித்தியாச மான காட்சிகளை அவர்கள் கண்டதுதான் அவர்களின் ஆச்சரியத்துக்குக் காரணம்.

கழகத்தின் எந்த ஒரு செயலும் வீணானதல்லவே! மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிகள் பெண்கள் உட்பட பங்கேற்று நடத்திக் காட்டியது அவர்களின் ஆச்சரியத்துக்கான வித்தியாசமான பார்வைக்கான காரணம் ஆகும். அங்கு நடைபெற்ற எந்த ஊர்வலத்திலும் காணப்படாதவை அவை.

மானாவாரியாக முழக்கங்களை முழங்கிச் செல்லாமல் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த ஒலி பெருக்கிமூலம் குறிப்பிட்ட இளைஞரணி தோழர்கள் அச்சிட்டு வழங்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட முழக்கங்களை எடுத்துச் சொன்னதும், பேரணியிலே பங்கு கொண்ட தோழர்கள் அவற்றைத் தொடுத்துச் சொன்னதும் நம் கொள்கைகளைப் பொது மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. பெரியார் சமூகக் காப்பு அணியின் அணி வகுப்பு (இருபால் இளைஞர்கள்) தமிழில் கட்டளைச் சொற்கள் காவல்துறையினர் உட்பட அனைவரையும் பெரிதும் ஈர்த்தன.

இளைஞரணியினரின் சீருடையுடன் கூடிய அணி வகுப்பின் நேர்த்தி பெரியார் பிஞ்சுகள் முதல் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை கையில் கழகக் கொடியை ஏந்தி முழக்கமிட்டு வந்த அந்தக் கட்டுப்பாடு பலே பலே என்று பாராட்ட வைத்தது.

பல அரசியல் கட்சிகளின் நண்பர்கள்கூட ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களை நடத்துங்கள் என்று தாங்களாகவே முன்வந்து தெரிவித்ததையும் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.

பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் எங்கே இருக்கப் போகிறது என்று சொன்னவர்கள் உண்டு.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்கிறது. பலமாக இருக்கிறது - இளைஞர்களின் கோட்டமாக இருக்கிறது என்று மக்களுக்கு உணர்த்திய மாபெரும் மாநாட்டினை நடத்திக் காட்டிய தோழர் களுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்களுக் கும், ஆதரவுக்கரம் நீட்டிய தமிழர்களுக்கும் பாராட் டையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

தமிழ் ஓவியா said...


நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்..!


சென்னையின் மக்கள் நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட் டுக்கு தேவையான பொருட் களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார். பகலெல் லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட் டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொது கழிப்பறைகள் எதுவும் கிடை யாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை.

ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும் போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட் டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார். அதன் பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள். நேற்று இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்த போது ஆத்திரமாக விவரித்தார். அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான். ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத் தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமான கரமாக உணர்ந்திருப்பார்.

சென்னையில் மக்கள் நெருக் கடியான பகுதிகளுக்குள் சுற்றும் போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.. வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ?

பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் சாராயக்கடையை திறந்து வைத் திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொது கழிப்பறைகளை திறந்து வைக்க வில்லை. அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான். ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் நிலை? பள்ளி கல்லூரிகளில் பெண் பிள்ளைகளின் நிலை இன்னும் பரிதாபம்.

மேலோட்டமாக பார்த் தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க கழிப்பறையை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மன நிலை எவ்வளவு மோசமானது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவை யான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி. கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்சினை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை. மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு கழிப்பறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக, சாக்குதான் இருக்கும். அதே மும்பை யில் பணக்கொழுப்பெடுத்த அம் பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் கழிப்பறையும் (வித்தியாசமா கக்கா இருப்பாய்ங்களோ !)

இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக் களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுங் கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்..

எப்போதாவது செல்லும் இறை வழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவ சியமான கழிவறைகளுக்கு இட மில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்க முமில்லை.. - கார்ட்டூனிஸ்ட் பாலா

தமிழ் ஓவியா said...


அறிவுப் பிரச்சாரம்


மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
(விடுதலை, 5.1.1972)

தமிழ் ஓவியா said...


உலகில் வளர்ந்த நாடு என்பதற்கு எது சரியான அளவுகோல்?


- ஊசி மிளகாய்

உலக அரங்கில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர வேண்டிய நாடுகள் என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகின்றனர்.

மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் - இவற்றையே, உலக வல்லுநர்கள் அளவுகோல்களாகக் கொண்டு, மேற்காட்டிய மூவகை களைப் பிரித்து வகைப்படுத்து கின்றனர்.

பொருளாதாரத்தில், தொழில் முன்னேற்றத்தில் வாழ்க்கைத் தரத் தில் மட்டும் வளர்ந்தால் போதுமா?

பகுத்தறிவுத் துறையில் வளர்ந் தால் தானே அவற்றை உண்மை யாகவே வளர்ந்த நாடுகள் என்று அழைக்க முடியும்?

அவ்வகையில் நமது நாட்டின் தென் பகுதியில் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், மக்கள் மத்தியில் செய்த அறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகள், மதவெறியை எதிர்த்து மனிதநேயத்தைப் பரப்பிய தன் விளைவாக, - மற்ற வழிகளில் பிற்போக்காக இருந்தாலும் கூட இந்தியா - சில விஷயங்களில் இந்த வளர்ந்த நாடுகள் என்று அழைக் கப்படும் நாடுகளைவிட கூடுதலாக வளர்ந்துள்ள நாடாகவே காட்சி யளிக்கின்றது!

எடுத்துக்காட்டாக, கொடிய நோயான புற்று நோய்க்கு Cancer) நவீன மருத்துவத்துறை சிகிச்சை யான மரபு அணுக்கள் மூலம் ‘Stem Cell’ சிகிச்சைக்கு இங்கே வரு கிறார்கள் அமெரிக்காவிலிருந்து புற்று நோய்க்கு ஆளான நோயாளி கள். காரணம் கத்தோலிக்க மத நம்பிக்கை, கிறித்துவ மத நம்பிக் கைக் காரணமாக இந்த சிகிச் சையை இவ்வளவு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ந்த அமெரிக்காவில் அனுமதிக்க வில்லை. அந்நோயாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதன் விளைவு அதனைத் திறம்படச் செய்யும் நமது நாட்டுத் தனியார் மருத்துவமனைகளுக்கு அல்லவா வருகின்றனர்!

நம் நாட்டு கரன்சிநோட்டில் மத நம்பிக்கைக்கோ, கடவுள் நம்பிக் கைக்கோ இடமில்லை. ஆனால் அமெரிக்காவில் அதன் ஆரம்ப கால அரசியல் சட்ட வரைவாளர்கள், எண்ணத்திற்கு எதிரிடையாகவே ‘In the God we trust’ என்று அச்சிடப்பட்டி ருக்கிறதே!

கடவுளை நம்பாதவர்கள் அங்கும் ஏராளம் உண்டே! இங்கர்சால் களின் பிரச்சாரம் உண்டு. கருத்துச் சுதந்தரம் - மதச் சார்பின்மை பற்றிக் கூறிவிட்டு இப்படி அரசின் கரன்சி நோட்டுகளில் போடலாமா?

அது மட்டுமா? அறிவியல், புவியியல் தத்துவங்களுக்கும், உண்மைகளுக்கும் விரோதமாக சில மாநிலங்களில் வகுப்புகளில் Creationism பூமியைக் கடவுள் ஆறு நாள்களில் படைத்தார்; என்றும் பாடத்தில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து போதிப்பதைவிட அசல் பிற்போக்குத்தனம் வேறு உண்டா?

இதை எதில் வளர்ந்த நாடு என்று கூறுவது?

அதுபோலவே மிகவும் சுதந்திரக் காற்று வீசிய, இங்கிலாந்து நாட்டை யொட்டிய அயர்லாந்து நாட்டில் கத்தோலிக்க மதவெறி கருச் சிதைவை ஏற்றுக் கொள்ள - சட்ட பூர்வ அனுமதியின்றி சட்ட திட் டங்கள் உள்ள நிலை காரணமாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு தாய் - அதைச் செய்ய மருத்துவ மனைகளும் டாக்டர்களும் மறுத்த தால் உயிர்விட நேர்ந்தது, மிகப் பெரிய மனிதாபிமானத்திற்கு நேர் எதிரிடையானதல்லவா?

அது கிளப்பிய எதிர்ப்பினை - சுவர் எழுத்துப் படிப்பினையாகப் பெற்ற அந்நாட்டு ஆட்சியாளர் அண் மையில் ஒரு குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே கருச்சிதைவை (Abortion) நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

அதற்கு அந்நாட்டு கத்தோலிக்க மதக் குருக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மதவெறி கொண்ட அவர் களுக்கு மனித உயிர்கள் காப் பாற்றப்படுவது முக்கியமல்ல; மதம் தான் காப்பாற்றப்பட வேண்டுமாம்! என்னே அறிவர்களின் அறியாமை - மதவெறி!

ஆனால் நாம் பல மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களின் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பே MTP Medical Termination of Pregrency) Act சட்டம் கருச்சிதைவு சட்டபூர்வம் என்று வந்துவிட்டதே!

அதன்படி நாம் முன்னேறிய அளவு அயர்லாந்து - முன்னேற வில்லையே!

இப்படி எத்தனையோ பிற்போக் குத்தனங்கள் - அறிவியல் தொழில் நுட்பவியல் வளர்ந்த நாடுகளில் இன்னமும்!

காரணம் அங்கு பெரியார்கள் தோன்றி, மக்கள் இயக்கங்களை நடத்தி ஆட்சிகளுக்கு முன்னோடி யாக வழிகாட்ட வரவில்லை என்பதே!

தமிழ் ஓவியா said...

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி!
போராட்டத்தை அறிவித்த ராஜபாட்டை மாநாடு!
வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு - நன்றி!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ராஜபாளையம் மாநாடு போராட்ட அறிவிப்பு கொடுத்த ராஜபாட்டை மாநாடு என்றும், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக் கும் பாராட்டு, நன்றி என்றும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ராஜபாளையத்தில் 4.5.2013 சனிக்கிழமையன்று கூடிய திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு உண்மையிலேயே ஒரு வரலாறு படைத்த மாநாடாகும்!

ராஜபாளையத்தில் கழக கருஞ்சட்டை இளைஞர் பட்டாளம் ஏராளம் திரண்டு வந்திருந்தனர். இயக்கக் குடும்பத்தவர்களும் கூடி பல்லாயிரக்கணக்கில் உணர்ச்சி கொப்பளிக்க, உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!

ராஜபாளையத்தில் கழக மாநாடா? அதுவும் இளைஞர் மாநாடா? என்று சற்று சந்தேகம் கலந்த அச்சத்துடன் கேள்வி கேட்ட அப்பகுதி மக்களில் சிலர் திகைத்து விட்டனர்; காரணம் கூடிய மக்கள் கடலால் திண்டாடியது அந்நகரம்!

தென் திசையில் ஏற்பட்ட புத்துணர்ச்சி வெள்ளம் எங்களை எல்லாம் பூரிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று, புளகாங்கிதம் அடையச் செய்தது!

கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள...

தாகமுற்ற மக்கள் தண்ணீர் பந்தலை நோக்கி தணியாத தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக கூடி திராவிடப் பெருங்குடி மக்கள், கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அன்று காலை முதலே அந்நகரில் திரண்டனர்!

மக்கள் கடலும் கருங்கடலும் இணைந்த காட்சியைக் கண்டவர் வியந்தனர்!

தந்தை பெரியார் என்பவர் வற்றாது ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதி;

தலைவர் பெரியார் திராவிடர் சமுதாயம் திணறும் போதெல்லாம் அதன் (மூச்சுத்) திணறலை மாற்றி வாழ வைக்கும் மூச்சுக் காற்று என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு ராஜபாளையம் ஓர் சான்று! இயக்கக் குடும்பங்களுக்கோ இது ஓர் இன்பமயமான கொள்கைச் சங்கம கோலாகலத் திருவிழா - பெருவிழா.

தமிழ் ஓவியா said...

விடுத்த வேண்டுகோள் கண்டு விரைந்தோடி வந்து எங்களை உற்சாக மூட்டிய எங்களின் ஈடு இணையற்ற கழகக் குடும்பத்தினர்களே, உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி - கூறுவது தெரியாமல் திகைக்கிறோம்!

மிகப் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல எம் கழகக் குடும்பத்தினர். என்றாலும் அறிக்கை வந்துவிட்டதே ராஜபாளையம் செல்லாமல் இருப்போமா? என்று கேட்டு, உற்சாகத்துடன் அவ்வூர் காணாத காட்சியின் மாட்சியை உருவாக்கினார்கள்!

ராஜபாளையம் மாநாடு குறித்து முன்கூட்டியே நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், மதுரை மண்டலத் தலைவர், செயலாளர், தென் மாவட்டப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அனைவருமே, மாவட்டப் பொறுப்பாளர்க ளுடன், பொதுச் செயலாளர், மாநில இளைஞரணிச் செயலாளர் ஆகிய அனைவரும் கலந்துரையாடி சிறப்பான திட்டங்களைத் தீட்டினர்.

கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான மானமிகு தோழர் ஜெயக்குமார்; அவருடன் 10 இளைஞர்கள் மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் இல. திருப்பதி, மாவட்டத் தலைவர் சிவகாசி வ. மணி, ராஜபாளையம் தோழர் சிவக்குமார், தோழர் கோவிந்தன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பாண்டிமுருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் சுமார் இரண்டு திங்களாக, தேனீக்களாகச் சுற்றிச் சுற்றிப் பறந்து பணியாற்றி இந்த மாபெரும் வெற்றிச் சரித்திரத்தைப் படைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற நமது இலக்குச் சொல்லுக்கேற்ப இச்சாதனை சிறப்பாக வாகை சூடியதாக சாதாரண மக்கள், நடுத்தர மக்களை கடைகடையாக, வீதி வீதியாக அந்நகரத்திலும், சுற்று வட்டாரத்திலும் சென்று மாநாட்டுத் துண்டறிக்கைகளைக் கொடுத்து, எளிய தொகைகளை அன்பு பொங்க அவர்கள் தர, இவர்கள் பெற்றே இம்மாபெரும் மாநாட்டை நடத்தி, இளைஞர்கள் வரலாறு படைத்தனர்!

நல்ல இளம் போத்துக்களைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் பெரியார் சமூகக் காப்பணி புது முறுக்குடன் வீர நடை போட்டது.

அதன் பயிற்சியாளர்களான மானமிகு தோழர்கள் இரா. பெரியார்செல்வன் (இயக்குநர்), துணை இயக்குநர்கள்: சித. வீரமணி, தே. பொய்யாமொழி, ப. நாத்திக செழியன், பயிற்றுநர்கள்: அண்ணாசரவணன், கி. கார்வண்ணன், ச. விஜய்யோகானந்த், ம. திராவிடராசன், வ. ஆறுமுகம், அ. சித்தார்த்தன், இராம. சகாதேவன், அ. திருநாவுக்கரசு, விசுவநாதன், சி. அம்பேத்கர், கி. முரளி அனைவருமே குறுகிய காலப் பயிற்சியில் மிக அருமையான பணியைச் செய்து கட்டுப்பாட்டுக்குரியதே கருஞ்சட்டைப் படை என்பதைக் காட்டினர். அதிலும் குறிப்பாக திராவிடர் மகளிர் அதில் தனி அணியாகப் பங்கு பெற்று அணி வகுத்த காட்சி கண்டோரை மெய் சிலிர்க்க வைத்தது!

நமது உளப்பூர்வ நன்றி!

அந்நகரம் இதுவரை காணாத மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை பல்லாயிரம் மக்கள் இரு மருங்கிலும் திரண்டு நின்று வியந்து பார்த்து பக்தி மோசடிபற்றிச் சிந்திக்கத் துவங்கினர்!

விருதுநகர் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மிகவும் திறமையுடனும், பொது உணர்வுடனும் தங்கள் கடமையாற்றினர். அவர்களுக்கு நமது உளப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

மிகப் பிரமாண்டமான அந்த மாநாட்டுக் கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்போ, அசம்பாவிதமோ எதுவும் நிகழவில்லை என்பதும் பேரணி வந்தபோதும் கடைகள் எல்லாம் திறந்தே இருந்ததோடு, மகிழ்ந்து பார்த்தனர்! இதையே ஊரில் உள்ள பல மக்கள் பேசி வியந்தனராம்!

அழகுக்கு அழகு சேர்த்த தளபதி மு.க. ஸ்டாலின் உரை

ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தினை செயல்பட வைக்க - அரசினை வற்புறுத்தும் வகையில் அறவழிப் போராட்டம் என்பதை அறிவித்த ராஜபாளையம் மாநாடு, கழகத்தின் பாட்டை ராஜபாட்டை என்பதை உணர்த்தும் மாநாடாக அமைந்தது.

சிறப்புரையாற்றிட்ட நம் இனமானத் தளபதி மு.க. ஸ்டாலின் அரியதோர் உரையாற்றி அழகுக்கு அழகு சேர்த்தார். அவர்களுக்கும் நமது தாய்க் கழகத்தின் சார்பில் நன்றி.

பணிகள் தொடரட்டும்; பிரச்சாரம் பெருகட்டும்!

சென்னை
7.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


இன இழிவை ஒழிக்கும் போராட்டத்துக்குத் தயாராவீர்!


இராஜபாளையம் மாநாட்டின் சிறப்பு அம்சங்களுள், அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களும் காலத்தை வென்று நிற்கக் கூடியவையாகும்.

முதல் தீர்மானம் முதல் 20 ஆம் தீர்மானம் வரை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கப்பட வேண்டியவை!

அனேகமாக நம் சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகள் மீதும், ஊடுருவியும், கவனம் செலுத்தியும், கருத்தூன்றியும், தொலைநோக்கோடும், நடைமுறைக் கண்ணோட்டத்தோடும் தீட்டப்பட்டவை அவையாகும்.

ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டம் - தீண்டாமை ஒழிப்பு நோக்கம் இவற்றின் அடிப்படையிலும், இன இழிவைத் துடைத்தெறியும் ஓர் இனத்தின் சுயமரியாதைக் கண்ணோட்டத்திலும், தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

கடவுளே இல்லை என்று சொல்லும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்தான் இதற்காகவும் பாடுபட வேண்டிய - போராட வேண்டிய கடமையை முன்னிறுத்தியுள்ளது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

காரணம் கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை என்றாலும் அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை யாகும்.

கல்வி உரிமைக்காகவோ, வேலை வாய்ப்பு உரிமைக் காகவோ திராவிடர் கழகம் போராடும் போது இதனால் பலன் பெறுகிறவர்கள் பகுத்தறிவுவாதிகளா? பக்திமான்களா? என்று கழகம் பார்ப்பதில்லை.

எங்கள் இனத்தைச் சேர்ந்த பக்தியுள்ள தமிழன் அதற்குரிய பயிற்சியைப் பெற்றாலும்கூட அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி இல்லை என்று வெளியிலே பிடித்துத் தள்ளுவது - எந்த அடிப்படையில்? தமிழன் - இந்துமத அடிப்படையில் நாலாம் ஜாதி - சூத்திரன் - பிறவி அடிமை - பார்ப்பனர்களின் வேசி மக்கள் - அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி கிடையாது.

அவன் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுப் போய்விடும். அதற்காக பிராயச் சித்தம் செய்யப்பட வேண்டும் - சுத்திகரிக்க வேண்டும். 108 கலசங்களைச் செய்து வைக்க வேண்டும், பிராமண போஜனம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அடுக் கடுக்காக நிபந்தனைகளை விதிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் தமிழர்கள் தங்கள் சூத்திரத் தன்மையை ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்? இந்தப் போராட்டத்தை பக்திமான்களாக இருக்கக் கூடிய தமிழர்கள் கையில் எடுத்துக் கொண்டிருந்தால் கருப்புச்சட்டைக்காரர்களுக்கு வேலை இருந்திருக்காதே!

தமிழர்களுடைய மான உணர்வைக் காப்பாற்றும் கடமை திராவிடர் கழகத்திற்கென்று ஆன நிலையில், அதற்கான களத்தில் நிற்க வேண்டியவர்களாகி விட்டோமே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை உண்டு என சட்டம் இயற்றப்பட்ட பிறகும்கூட, பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று அதனை முடக்குகிறார்கள் என்றால் இதன் நிலையைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இந்த 2013 ஆம் ஆண்டிலும் தமிழர்களைச் சூத்திரர்களாக நிலை நிறுத்துவதிலும், பார்ப்பனர்கள் தங்களைப் பிராமணர் என்ற பிறவி ஆதிக்கத் திமிரி லிருந்து சற்றும் இறங்கி வரத் தயாராக இல்லை என்பதிலும் உறுதியாகவே இருக்கிறார்கள் என்பது விளங்கிடவில்லையா?

பார்ப்பனர்கள் எவ்வளவோ திருந்தி விட்டார்கள். இனி மேலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் தேவை தானா என்று அதிமேதாவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் பார்ப் பனர்கள் நடந்து கொள்ளும் தன்மையையும், போக்கையும் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் போதுமே, அந்தத் தருணத்திலேயே பார்ப்பனர்கள் பற்றி திராவிடர் கழகம் முன்னிறுத்தும் கருத்து நூற்றுக்கு நூறு மிக மிகத் துல்லியமாகவே சூரிய வெளிச்சம் போல உண்மை - உண்மையிலும் உண்மை என்பது விளங்கி விடுமே!

இந்த நிலையில் இராஜபாளையம் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு தீர்மானத்திலும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் மாநாட்டு உரையிலும் குறிப்பிட்டுள்ளபடி அடுத்த இரு மாதங்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இதுகுறித்து விளக்கமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று (தந்தை பெரியார் பெரும்பாலும் போராட்டம் நடத்திடத் தேர்வு செய்யும் நாளிது) பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் பங்கேற்கும் போராட்டத்தை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிக்க உள்ளார்.

கழகத் தோழர்களே தயாராக இருங்கள்! இருங்கள்!! போராட்ட வீரர்களின் பட்டியல் தயாராகட்டும்! தயாரா கட்டும்!

இன இழிவை ஒழிக்கும் போரிலே இன்னுயிரையும் இழக்கத் தயாராவோம்! தயாராவோம்!! வாழ்க பெரியார்!

வளர்க இன உணர்வு!!

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும் கழுதைக்கும் டும்! டும்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை யடுத்த கோழிக்கால் நத்தம் பகுதியில் நடந்துள்ள ஒரு நிகழ்வு - மக்கள் இன்னும் கற்காலத்தில்தான் உழலுகிறார்களோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்துகிறது.

மழை பொழியவில்லையாம் - கடும் வறட்சி ஏற்பட்டுவிட்டதாம் - விவசாயம் செய்ய முடிய வில்லையாம்.

என்ன செய்தார்கள் தெரியுமா? கழுதைக் கும், கழுதைக்கும் கல்யாண ஏற்பாடாம்.

சாதாரணமாக அல்ல - கல்யாணப் பத்திரிகை அடித்து அழைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. நாள் நட்சத்திரம் பார்க்கப்பட் டுள்ளது (ஒரு சந்தேகம் கழுதைக்குத் தாலி கட்டிய அந்தவூர் பிரமுகருக்கும், அந்தக் கழுதைக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கப் பட்டதா என்ற விவரம் தெரியவில்லை).

அய்தீக முறைப்படி சடங்குகள் நடந்தன வாம்! ஆண் கழுதைக்கு ஸ்ரீஹரி என்றும், பெண் கழுதைக்கு ஸ்ரீயோக லட்சுமி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்னிகுண்டம் இடம்பெற்றதாம் (அய்யர் வந்து மந்திரம் சொன்னதுபற்றித் தகவல் இல்லை).

அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பெண் கழுதைக்குத் தாலி கட்டியுள் ளார்.

நீ முதலில் ஸோமனுக்கு மனைவியாக இருந்தாய்; இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாய்; மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்தாய்; நான் காவதாகத்தான் எனக்கு மனைவியாக வந்துள்ளாய் என்ற கல்யாண மந்திரத்தை பெண் கழுதையை நோக்கி சொன்னார்களா என்பதும் தெரியவில்லை.

இன்னொரு தகவல் சாந்தி முகூர்த்தம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

மனிதன் பகுத்தறிவு பெறவில்லையென் றால் கழுதைக்குக் கூடக் கல்யாணம் செய்வான் என்பதைப் புரிய வைக்கவேண்டும். மற்ற எந்தப் பிரச்சாரத்தையும்விட பகுத்தறிவுப் பிரச்சாரம்தான் முதன்மையானது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் எத்தகைய முக்கியத் துவம் வாய்ந்தது என்பதும் தெரியவில்லையா?

மதம் மனிதனைக் கழுதையாக்கும் - பகுத்தறிவு மனிதனை செழுமையாக்கும் புரிகிறதோ! (ஆமாம், கழுதைக்கும் கழுதைக் கும் கல்யாணம் ஆகிவிட்டதே - மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து விட்டதோ!)

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அட்டங்கி என்ற ஊரைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். எதற்கு?

எந்த வாகனத்தில் வந்தனர்? சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியில் ஏறி வந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சிங்கராய கொண்டா அருகே லாரி வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்தது - கவிழ்ந்தது! சிமெண்டு மூட்டைகளுக்குள் சிக்கி அந்த பத்துப் பக்தர்களும் பரிதாபகரமாக மடிந்தனர் என்பது ஏடுகளில் வெளிவந்த செய்தி!

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் கடவுளைக் கும்பிட வந்தபோது விபத்தில் சிக்கிச் செத்துப் போய்விட்டனரே!

ஒருகணம் பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? கடவுளைத் தேடி வந்தவர்களை குறைந்தபட்சம் அந்தக் கோவில், அந்தக் கடவுள் பக்தர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கவேண்டாமா?

ஏன் காப்பாற்றவில்லை? கடவுள் என்ற ஒன்று இல்லை - எனவே, காப்பாற்றவில்லை.

திருப்பதி கோவில், அய்யப்பன் கோவில் என்று சொல்லி சாமி கும்பிடச் செல்லும் பக்தர்கள் மரணம்பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

அப்பொழுதுகூடப் பக்தர்கள் புத்தி கொள்முதல் பெறவில்லையே - ஆம், பக்தி வந்தால் புத்தி போயே போகுதே!

கூடுதல் தகவல்: (Tail Piece) திருச்சி அருகே சிறுகனூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட நான்கு பேர் சாவு!

எந்த மதக் கடவுளுக்கும் சக்தி இல்லவே யில்லை - போதுமா?

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரர் துறவறம் பூண்டவரா?

காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி துறவறம் பூண்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்! அதை முன்னிட்டு 60 தம்பதிகளைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் ஒரு மண்டபத்தில் நடைபெற்றதாம்.

அந்த நிகழ்ச்சியில் அந்த சாட்சாத் ஜெயேந்திரரும், அவரின் சீடர் விஜயேந் திரரும் கலந்துகொண்டனராம்.

60 ஜோடிகளுக்கும், பக்தர்களுக்கும் ஜெயேந்திர சரஸ்வதி அருளாசி வழங்கினா ராம். இந்த விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப் பட்டதாம்.

பார்ப்பனர்களின் இனப்பற்றுக்கு இது ஒரு சான்று. ஜெயேந்திர சரஸ்வதி அனைத்தையும் துறந்தவரா? அவர் 60 ஆண்டுகாலமாகத் துறவியாகத்தான் வாழ்ந்து வருகிறாரா?

இந்தப் பத்திரிகை செய்தியைப் படித்தவர் கள் யாராவது வாயால்தான் சிரிக்க முடியுமா?

ஊருக்கு ஊர் காதலிகள், காமகோடியின் சங்கர மடமே காமக்கோட்டமாக, ஆபாசச் சேட்டையின் பஞ்சு மெத்தையாக இருந்து வந்துள்ளதை பார்ப்பன எழுத்தாளரான அனுராதா ரமணன் ஊர் சிரிக்க வைத்தாரே! நக்கீரன் வார இதழ் தோரணம் கட்டி தொங்கவிட்டதே!

இவ்வளவுக்குப் பிறகும் இந்தப் பார்ப் பனர்கள் அந்த வெட்கம் கெட்ட மனிதரை ஜெகத்குரு என்பதும், முற்றும் துறந்தவர் என்பதும் அவாளிடத்தில் உள்ள இனப் பற்றைத்தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...


திராவிட மாணவர், இளைஞரணி கழகத் தோழர், தோழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு


திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண்டும். அதனடிப்படையில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச்சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ‘The Modern Rationalist’ ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும்,

நமது இயக்க நடவடிக்கைகள், முக்கிய உரைகள், தீர்மானங்கள்பற்றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுதுவது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல் படுவது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம்.

திராவிடர் மாணவர் மாநில கழகச் செயலாளர் பிரின்ஸ் அவர்கள் தலைமையில் இதற்கென ஒரு சிறப்புக்

குழு விரைவில் அமைக்கப்பட விருக்கிறது.


சென்னை
7.5.2013

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சமூகநீதியாளர்கள் ஓரணியில் திரளட்டும்!

இராஜபாளையம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமுமே அதனதன் தன்மையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமூகநீதி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எட்டில் ஒன்பது உள்தலைப்புகள் கொண்டவை.

இந்திய பணியாளர்த் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளிலும் எழுதிடும் வாய்ப்பு, தாழ்த் தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை (கிரீமிலேயர்) ஒட்டுமொத்தமாக அகற்றுதல், மத்திய தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொதுத் தொகுதியில் (Open Competition) இடம்பெறவேண்டிய பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் இட ஒதுக்கீடு பிரிவில் கொண்டு போய் வைப்பதும், அதனால் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றவர்களை வெளியேற்றுவது என்னும் சதி அரங்கேற்றப்படுவதைத் தடுத்தல், பத்தாண்டு களுக்கு ஒருமுறை தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைக்கவேண்டிய நிலையில், பல பத்தாண்டுகள் பறந்துபோன நிலையிலும், அத்தகைய ஆணையங் களை நியமனம் செய்யாமை - மண்டல் குழுப் பரிந்துரையில் கல்வி, வேலை வாய்ப்பு மட்டுமன்றி பொருளாதாரத் துறையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அளிக்கப்படவேண்டிய வாய்ப்புகள்பற்றி அரசு சிந்திக்காமல் இருக்கும் போக்கு உள்ளிட்ட பல்வேறு சமூகநீதித் தொடர்பான, நியாயமான சட்ட ரீதியான பிரச்சினைகளை இராஜபாளையம் மாநாடு மிகவும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டி குறிப்பாக மத்திய அரசினை வலியுறுத்தியுள்ளது தீர்மானம்.
குறிப்பாக இட ஒதுக்கீட்டின் அளவுகோல் என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னடைந் துள்ள நிலையைச் சுட்டிக்காட்டுவதாகும். சமூக ரீதியாக என்பதில் ஜாதிதான் முக்கிய இடம் பெறுகிறது.

ஜாதியின் காரணமாகத்தான் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, ஜாதியின் அளவுகோல் என்பது முற்றிலும் சரியானதே! இதில் பொருளாதார அளவுகோல் எங்கிருந்து குதித்தது? அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கோ, குழு உறுப்பினர்களுக்கோ தெரியாத விடயமா?

அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலாவது பொருளாதார அளவுகோல் பற்றிப் பேசப்பட்டுள் ளதா? இட ஒதுக்கீடு இத்தனை சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தானடித்த மூப்பாக இவற்றைத் திணித்தது சட்டப்படி சரியானதுதானா?

இவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவேண்டும். இதனை இந்தியத் துணைக் கண்டத்திலேயே முழுமையாக மிகவும் துல்லியமாகச் செய்யக்கூடிய ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்பட வைத்ததற்கும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு) ஒழிக்கப்பட்டதற்கும், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு நிலை பெறச் செய்வதற்கான வழிமுறை களைச் சொல்லி அ.இ.அ.தி.மு.க. அரசைச் செயல்பட வைத்ததற்கும் முழு முதற்காரணம் திராவிடர் கழகம் அல்லவா!

அந்த நிலையில்தான் சமூக நீதியில் இன்னும் எட்டப்படவேண்டியவை குறித்து துறை வாரியாகச் சுட்டிக்காட்டி மாநில - மத்திய அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட இராஜபாளையம் மாநில இளை ஞரணி மாநாட்டுத் தீர்மானங்கள் என்றென்றும் பேசப்படக்கூடியவை.

தீர்மானத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை களை நிறைவேற்ற, சமூகநீதி சக்திகளை இந்திய அளவில் ஒன்று திரட்டித் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செயல்படுவார். சமூகநீதியாளர்கள் கட்சிகளை மறந்து அணி திரளட்டும்!

தமிழ் ஓவியா said...


புத்தகமல்ல... அது ஒரு பூக்காடு!


அண்மையில் அருமையானதொரு சுயசிந்தனையின் மலர்த்தோட்டமாக, எண்ண ஓட்டங்கள், ஜீவநதிபோல் பிரவாகம் எடுத்து ஓடிடும் ஓர் அற்புதமான நூல் கிடைக்கப் பெற்று படித்தோம் - சுவைத்தோம் - மகிழ்ந்தோம்!

எழுதியவர் முதிர்ந்த பேராசிரியர்; வரலாற்றுத் துறையில் துறைபோகிய நல்லாசான்; தமிழ் இலக்கியத்தைப் படித்து, ஆய்வு செய்து, எதிலும் தனித்தன்மையோடு கருத்துக் கூறும் தமிழறிஞர்; எல்லாவற்றையும்விட, மற்ற பற்றுகளை இல்லறத்திலிருந்து கொண்டே விட்டுவிட்டு, மனிதப்பற்று, வளர்ச்சி பற்று மட்டுமே முக்கியம் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களைப் போன்று, மனிதநேயப் பற்றாளர்!

99 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியம் அவர்கள்!

இயற்கையை எதிர்த்து வெற்றி பெற்று வரும் இடையறாத கருத்தாளரான எழுத்தாளர் அவர்!

மதுரைப் பல்கலைக் கழகம், வடகிழக்கு கவுகாதி பல்கலைக் கழகங்களில் பணியாற்றி (வரலாற்றுத் துறைத் தலைவராக) ஓய்வு பெற்று உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து வருபவர்.

இன்றும் இந்த வயதிலும் தானே எழுதுகிறார்; தனித்தே சிந்திக்கிறார்!

உட்கார்ந்த இடத்தைவிட்டு அதிகம் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும், மனோ வேகமோ என்று சொல்ல முடியாத வேகத்தில் செல்லும் நிலை!

இதில் முக்கால் வயதுள்ள பலருக்கும் இக்காலத்தில் மறதி நோய் - Alzheimer, Amnesia, Demenia - இப்படிப் பல வந்து குழந்தைகளைவிட மோசமான எடுத்து தடுத்து வழி நடத்தும் நிலையான பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆனால், இவரோ, உரையாடும்போது காட்டும் உற்சாகம், எதையும் உள்வாங்கி பதில் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை நாங்கள் குடும்பத்துடன் சென்று அளவளாவி, அன்பில் விளைந்த அமுதம் பருகி மகிழ்ச்சியுடன் திரும்புவோம்.

எங்கள் நட்பு ஒரு விசித்திர நட்பு!

தனித்த சிந்தனை உள்ளவர்களைக் காண்பது நம் நாட்டில் அரிது. படித்தவைகளை வாந்தி எடுப்பதுதான் கற்றறிந்த மேதை(?)களின் வாடிக்கை இங்கே! இவர்களோ அதற்கு முற்றிலும் விலக்கு.

எல்லாவற்றிலும் புத்தாக்க சிந்தனை, புதுப்புது கேள்விக் கணைகள் - உண்மைகளை பெரியார் பாணியில் சொல்லவேண்டுமானால் - அதன் நிர்வாணத் தன்மையில் எடுத்துரைப்பது.

அவர்களுடன் உரையாடினால் காலம் பறப்பதே தெரியாது!

கோவை வானொலியின் அதிகாரியாக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் இவர்களைப் பேட்டி கண்டு வாராவாரம் ஒலிப்பதிவினை ஒலிபரப்பினார்.

அற்புதமான நவில்தொறும் இலக்கியம் போன்று உரத்த சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளது. நேற்றுதான் எனக்குக் கிடைத்தது!

படிக்கப் படிக்க பல புதிய சிந்தனைச் சுரங்கத்தின் கருவூலத்திற்கு புகுந்து புதையல் கண்டெடுப்பதுபோல் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சியது.

உரத்த சிந்தனை என்று தலைப்பிட்டாலும்கூட உயரிய சுயசிந்தனைப் பூக்காடு அது!

வாழ்வியல் பாடங்கள்! வைகறை வெளிச்சங்கள்!!

நாளை ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா!

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள் களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, 22.6.191973