Search This Blog

21.5.13

கலைவாணர் போட்ட மந்திரம்!



எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பிலையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள்கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்


நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

40 comments:

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றம் பெண்கள்மீதான முக்கிய தீர்ப்பு


டில்லி, மே 20- பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவர், பெண்ணின் தவறான நடத்தையை ஆதாரமாக காட்டி தப்பிக்க முடியாது' என, உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என, கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில், பாலியல் வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண், தவறான நடத்தை உள்ளவர்; பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார்' என, குறிப்பிட்டு இருந்தார். இம்மனு, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எப்.எம்.அய். கலிபுல்லா ஆகியோர் அடங்கிய, அமர்வு' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பாலியல் வன்முறை என்பது, ஒரு பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றம் அல்ல; ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே எதிரான குற்றம். இந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் கடுமையாகவும், தீவிரமாகவும் கையாள வேண்டும். பாதிக்கப் பட்ட பெண், தவறான நடத்தை கொண்டவர் என்பதை ஆதாரமாக காட்டி, குற்றவாளி தப்பிக்க முடியாது. ஒரு பெண் ஏற்கெனவே தவறாக நடந்தார் என்பதால், அவரை, பாலியல் வன்முறை செய்ய உரிமை உள்ளதாக குற்ற வாளி கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த வழக்கில் குற்றவாளி, வன் முறை செய்தவர்தான்; பாதிக்கப் பட்ட பெண் அல்ல. தவறான நடத்தை உடைய பெண் என்பது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒன்று. அவர் பாலியல் வன் முறைக்கு பயன்படுத்தும் பொருள் அல்ல. பாலியல் உறவுக்கு உடன்பட மறுப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு, நீதி பதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

தமிழ் ஓவியா said...


நட்புக்கும் உண்டு அடைக்குந் தாழ்!


பொதுவாக வாழ்க்கையில் நமக் குப் பெருந் துணை -நண்பர்களும், நல்ல புத்தகங்களும்தான்!

அதிலும் குறிப்பாக முதுமையை நோக்கி நாம் பயணிக்கும்போது, நல்ல நண்பர்கள், நமக்கு மிகவும் தேவை. நல்ல புத்தகங்களும் நம்முடன் உறவாகும்!

நமது வாழ்விணையர்களை, தந்தை பெரியார் அவர்கள் உற்ற நண்பர் களாக வாழ வேண்டும் என்று மணவிழா உறுதி ஏற்பில் கூறுவதும், வாழ்த்தில் விளக்குவதும் இதன் அடிப்படையில்தான்!

நட்பு என்பது ஓர் கிடைத்தற்கரிய சொத்து. நமது வீட்டில் உள்ளவர்களை உறவுக்காரர்களாகப் பார்ப்பதைவிட நண்பர்களைப் போல் நெருங்கிப் பழகு வது இருசாரார் உள்ளத்திலும்கூட ஒரு புது உற்சாகத்தைப் புது வெள்ளம் பாய்வது போலக் கொண்டு வருமே!

ஆனால், நண்பர்களில் பல ரகம் உண்டு. அதில் தான் தெளிவுடன் இருக்க வேண்டும்.

சிலர் காரியவாதிகளாக நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து - லாபம் கருதிப் பழகுவார்கள்; உயிரையே தருகிறார் இவர் எனக்காக என்று அவ சரப்பட்டுக் கூறும் சில அவசர சாமி களுக்கு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் எச்சரிக்கையை நகைச்சுவைத் தேனில் குழைத்துக் கூட்டங்களில் தருவார் - நல்ல அனுபவப் பாடம்.

காலை 10 மணிக்குப் பார்த்து, 12 மணிக்குள் எனக்காக உசரையே தரும் அளவுக்கு என் நண்பர் வந்து விட்டானே என்று நீ சொன்னால் அவன் அடுத்த 2 மணிக்கு உன் உசரையே எடுக்கப் போகிறான் என்பதை மனிதர்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பார்!

எவ்வளவு சரியான அனுபவ அறிவுரை அது! எதிலும் எடை போடுவதிலும் நிதானம் தேவை - அதுதான் பிறகு - நமக்கு நிம்மதியைத் தரும்!

சில நண்பர்கள் வெகு சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து காரிய சாதிப்பாளராக இருப்பார்கள்.

முதல் முறை பார்க்கும் போது பரிந் துரை உதவிகளைக் கேட்க மாட்டார்கள்.

முதலில் பழம், வரிசைகள் இத்தியாதி.

கொடுத்து விட்டு நலம் விசாரித்து மட்டும் விடை பெறுவார்கள். என்னங்க எதற்கு வந்தீங்க. என்ன சேதி சொல் லுங்க என்றால் அதெல்லாம் ஒண்ணு மில்லீங்க, உங்க நலம் விசாரிச்சிட்டுப் போகத்தான் வந்தேன் என்று சொல்லிப் போய் விடுவார்கள்! பிறகு ஒரு இடை வெளி விட்டு, மீண்டும் வந்து பரிந்துரை வேண்டுவர்!

ஆம், மனோதத்துவம் புரிந்த நண் பர்கள்!

எதையோ எதிர்பார்த்து வெகு காலம் பழகியிருந்து, பலன் முழுமையும் சுவைத்து விட்டு, கடைசியில் மேலும் விரும்பியதைப் பெற்றுத் தரவில்லை நாம் என்றவுடன் அவர்கள்,

தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளவர்களாகி விடுவார்கள்!

அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகள் போன்ற நண்பர்களைத்தான் அனை வரும் அறிவார்களே - அதுபற்றி விளக்கம் தேவையில்லை!

நண்பர்களைவிட நாம் அடையாளம் காணும்போது, அதற்கு சரியான அளவுகோல் - உரைகல் என்ன தெரி யுமா?

ஒன்று அவருக்கு நம்மால் கிடைத்த போது அவர் காட்டும் நன்றியோ, விசுவாசமோ அல்ல.

நாம் முயன்றும் அது அவருக்குக் கிடைக்காத நிலையிலும், தொடர்ந்து நம்மிடம் நன்றி விசுவாசம் காட்டு கிறார்களே, அவர்கள்தான் கிடைத்தற் கரிய கிழக்குத் திசைகள்! (சூரிய வெளிச்சம்) - இவர்களை கிழப்பருவத் திலும்கூட நம்பலாம் - மனந்திறக்க லாம்.

பாரத்தை இறக்கி வைக்கலாம்.
---------------veramani

தமிழ் ஓவியா said...


அறிவைப் பயன்படுத்தாமல்...


கடவுளையும், மதத்தையும், சாத்திரங் களையும் சம்பந்தப்படுத்திச் செய் யப்பட்ட காரியங்களாலேயே மனிதர்கள் முட்டாள் களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், மடையர்களாகவும் ஆகி விட்டனர். இப்படிப் பட்ட காரியங்களுக்கு அறிவைப் பயன்படுத் தாமல், கடவுளையும், மதத்தையும் ஒத்துக் கொண்டால், அது நாம் முட்டாளாகவும், மடையர்கள் ஆகவும்தானே பயன்படுகின்றது.
(விடுதலை, 13.2.1961)

தமிழ் ஓவியா said...


கடவுளைக் காக்க நாதியில்லையா?



சிலைகள் உடைப்பு

பூதப்பாண்டி, மே 20-குமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்த கடுக்கரையில் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோயிலில் நாகேஸ்வரி அம்மன் சன்னதியும் உள்ளதாம், அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை கோயிலில் சாமி கும்பிட சென்ற போது கோயில் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனராம்.
கோயிலினுள் நுழைந்த சிலர், சுடலைமாட சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த வேஷ்டியை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் 2 சங்கிலி விளக்குகளையும் அறுத்து, பக்கத்தில் உள்ள வயலில் போட்டிருந்தனர். அவர்கள் சுடலைமாட சுவாமி சிலையின் எதிரே அமைந்துள்ள முண்டன் சுவாமி சிலையையும் உடைத்துசேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

அதே போல், இந்த கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் திடல் செல்லும் வழியில், நொட்டிபாலத் தின் அருகே இசக்கியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள்ளும் சில நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் இசக்கியம்மன், மாடன் சாமி சிலைகளின் தலைப்பகுதிகளை உடைத்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகி மாணிக்கவாசகம் பிள்ளை, பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

தமிழ் ஓவியா said...

திருவிழா சென்றவரின் உயிர் தீர்ந்து போனதே!

கீழ்வேளூர், மே 20- நாகை மாவட்டம், கீழ் வேளூர் அருகே உள்ளது அத்திப்புலியூர் கிராமம். இங்கு பொன் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு சாமி புறப்பாடு மற்றும் வீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண் டனர். திருவிழாவை பார்ப்பதற்காக அத்திப்புலியூரை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் வினோத் கண்ணா (24), கானூரைச் சேர்ந்த முத்துக் குமாரசாமி மகன் சிவசங்கரன் (22) ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில் நடனமாடியதாக கூறப்படுகிறது. பின்னர் களைப்பாக இருந்ததால் அத்திப்புலியூரில் உள்ள ஆள் இல்லா ரயில்வே கேட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் தஞ்சையில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு சரக்கு ரயில் சென்றது. இதனை வினோத் கண்ணா, சிவசங்கரன் கவனிக்கவில்லை. அவர்கள் மீது ரயில் மோதியது. இதில் இருவரும் உடல் துண்டாகி சம்பவ இடத் திலே பலியானார்கள். அவர்களது உடல் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. கோவில் திருவிழா விற்கு வந்தவர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியா னதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந் தனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். திருவாரூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரின் பிணங்களையும் மீட்டு பிண ஆய்வுக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதி பலியான வினோத் கண்ணா அய்.டி.அய். முடித்து உள்ளார். தற்போது ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

பலியான மற்றொருவரான சிவசங்கரன் தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக பணியாற்றி வந்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சற்று தூரத்தில் மேலும் ஒருவர் ரயில் மோதி பலியானார். அவரது பெயர் சேகர் (48). அடியக்கா மங்கலம் நெடுங் குடியை சேர்ந்தவர். இவரும் சரக்கு ரயில் மோதி பலியானதாக கூறப்படுகிறது. இவரும் திருவிழாவிற்கு வந்து விட்டு தண்டவாளத்தில் உட்கார்ந்து இருந்த போது ரெயில் மோதி பலியானதாக தெரிகிறது. அத்திப்புலியூர் ஆள் இல்லா ரயில்வே கேட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற விபத்தில் ரயில் மோதி 2 பேர் பலியானார்கள். அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் ரயில்வே நிர்வாகத் திற்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் தற்போது மேலும் 3 பேர் பலியான சம்பவம் நடைபெற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினனர். கோவில் திருவிழாவிற்கு வந்த 3 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் அத்திப்புலியூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

கோயில் சர்ச்சை: பக்தர்களுக்கிடையே அடிதடி!

ராஜபாளையம், மே. 20- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது சிவலிங்காபுரம். இங்கு பத்ரகாளியம்மன் கோவில் இருந்தது. எல்லா சமூகத்தினரும் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இந்த நிலையில் கோவிலை இடித்து விட்டு புது கோவில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இரு பிரிவினரும் வெவ்வேறு இடங்களில் கோவில் கட்ட அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒரு பிரிவினர் கோவில் கட்டி வழிபாடு நடத்தினர். ஆனால் வேறு பிரிவினர் நாங்கள் பழைய கோவில் இருந்த இடத்தில்தான் கோவில் கட்டுவோம் எனகூறி சுடுகாட்டில் குடிஅமர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் ஊருக்குள் வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சுடுகாட்டில் போராட்டம் நடத்தியவர்கள் வேன்கள், கார்களில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஒரு பிரிவினர் திடீரென்று அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மாரியம்மாள் (வயது 65), லட்சுமி, காசி, கணேசன், உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கற்கள் வீசப்பட்டதில் 4 வீடுகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் காந்தி தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினர். இதுதொடர்பாக 10 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமி உண்டியல் அரோகரா

ஆம்பூர், மே 20- ஆம்பூர் வடபுதுபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கேன்டீன் நடத்துபவர் சக்தி. இவரது வீடு சர்க்கரை ஆலையையொட்டி உள்ளது. நேற்று காலை வீட்டைபூட்டி விட்டு அவர் தனது மனைவி காமாட்சியுடன் கேன்டீனுக்கு வந்தார். மாலையில் வீட்டுக்கு திரும்பி சென்றார். அங்கு வீட்டு கதவு பூட்டு உடைக்கபட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 3 பவுன் நகை, ரொக்கபணம் ரூ.15 ஆயிரம் 2 சாமி உண்டியல்கள் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். அங்கு இருந்த மற்றொரு பீராவில் ரூ.80 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது இதை கொள்ளையர்கள் விட்டு சென்று உள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த துணிகர திருட்டு குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் அதிபர் வீட்டில் நகை பணம் திருடிய மர்மநபர்களை தேடவருகின்றனர்.

தேரோட்டத்தில் மோதல்!

தியாகதுருகம், மே 20- தியாகதுருகத்தை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி நேற்று தேரோட் டம் நடைபெற்றது. இதனை அறிந்த அதே பகு தியை சேர்ந்த அருணாசலம் (வயது 32) என்ற வாலி பர் தேரை வழிமறித்தார். என்னுடன் கலந்தாலோ சிக்காமல் தேரோட்டத்தை நடத்துவது ஏன்? என கேட்டு தகராறு செய்தார். இதனால் அவருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகும் நிலை உண்டானது. இதனை கண்ட அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சேட்டு (40), அருணாசலத்தை சமாதானப் படுத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்து சேட்டுவை அருணாசலம் சரமாரியாக தாக்கினார். இதில் சேட்டுவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் பற்றி தியாகதுருகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அருணாசலத்தை கைது செய்தனர்.
பணத்தைப் பறிகொடுத்த சாமியோ சாமி!
வேலூர், மே 20- அரக்கோணம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் பெரிய பாளையத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் கோவில் பூசாரி வழக்கம்போல் பூஜை வைக்க சென்றபோது கோவில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே பூசாரி கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, மூக்குத்தி உள்ளிட்ட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த காணிக்கை பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் உறுப்பினர் வெங்கடேசன் அரக்கோணம் டவுன் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்நிலை ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

தமிழ் ஓவியா said...


கொட்டாவி ஏன் வருகிறது?


இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி திடீரென்று நிகழும் உடலியல் நிகழ்வுகளுக்கு அறிவி யல் பூர்வமான காரணங்கள் உண்டு. ஆனால், இப்படி, கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக் கிறது. இருப்பினும் ஒருவர் எத்தனை முறை கொட் டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறு கிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உட லின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந் துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!

வெப்ப அளவுக்கும், கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்தத் தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது. ஒரு பருவ காலத்திற்கு 80 பேர் என, கோடைக் காலம் மற்றும் குளிர்காலத்திற்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது.

ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது. இம்முடிவின் அடிப்படையில், வெப்ப மான நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்து விட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட் பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்து விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொட்டாவி ஏன் ஏற்படுகிறது? கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட் டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படு கிறது என்று நம்பப்படுகிறது.

மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத் தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும் போது குளிரான காற்று உள்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப் படுகிறது என்கிறார்கள்.

கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ. மேலும், மிக அதிகமான எண்ணிக்கையில் கொட் டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் நிபுணர்கள்.

தமிழ் ஓவியா said...


நலம் அளிக்கும் வாழைப்பூ!


நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக் கொள்ளும்பூ, வாழைப்பூ. ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக் குணமுள்ள வையே. வாழைப்பூவின் துவர்ப்புச்சுவை நாம் அறிந்த விஷயம்.

அந்தத் துவர்ப்பை போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக்கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள். துவர்ப்பு இருந்தால் சுவைஇருக்காது என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடலுக்கு வைட்ட மின் 'பி' கிடைக்கிறது. பல வியாதிகளும் நிவர்த்தி அடைகின்றன.

தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து,

சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவையான இன்சுலினை சரக்கச் செய்யும், சர்க்கரை நோயும் கட்டுப்படும். மலம் கழிக்கும் போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதை ரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் வெகு விரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும். சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும்
வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச்சாறு பிழிந்து சிறிது மிளகுதூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பணங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.
வெள்ளைப் படுதலால் பெண்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

அவர்கள் வாழைப்பூவை ரசம் வைத்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். கை, கால் எரிச்சலால் அவதிப் படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை, கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் எரிச்சல் குணமாகும். வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் அருந்தி வந்தால் இருமல் நீங்கும்.

வாரம் இருமுறை வாழைப்பூ ரசம் அருந்தி வந்தால் தாது விருத்தி அடையும், சிலர் குழந்தையின்மையால் மனவேதனைக்கு ஆளாவார்கள். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மையைப் போக்கும். இப்படி வகை வகையாய் நன்மைகளை வாரி வழங்கும் வாழைப் பூவை கொஞ்சம் தேடிப்பார்த்து சமைய லில் சேர்த்துச் சாப்பிடலாம்!

தமிழ் ஓவியா said...


குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?


ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார்.

பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு.

அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர்.

பலர் அரசுப் பணிகளில் அமர்ந்து அணி செய்கின்றனர்; இயக்க நோக்கிற்காக மட்டுமல்ல; இந்தப் பட்டறை வாழ்வில் புதிய திருப்பத்துக்கான ஒளிமிக்க பாதையைத் தரக்கூடியது.

மாணவர்களும், இருபால் இளைஞர்களும் கலந்துகொள்ளலாம் - நல்ல பலன்களைத் தரும்.

கழகப் பொறுப்பாளர்களே, கழகத்தின் இந்த மிக முக்கியப் பணியில் ஆர்வம் காட்டுவீர்! மாணவர்களை, இளைஞர்களை அனுப்பி வைப்பீர்!

சென்னை மண்டலத் தலைவரும், செயலாளரும், மாவட்டக் கழகத் தலைவர், செயலாளர்களும், இளைஞரணி, மாணவரணி, மகளிரணியினர் கலந்துகொண்ட கூட்டத்தில் 20 தோழர்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக, தென் மாவட்டங்களிலிருந்து இருபால் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.

மே 29, 30, 31 ஜூன் 1 ஆகிய நாள்களில் குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் திருமண மண்டபத்தில் நடைபெறும். வாரீர்! வாரீர்!!

- தலைமை நிலையம்

குறிப்பு: கழகப் பொறுப்பாளர்களின் பரிந்துரைக் கடிதம் அவசியம்

தமிழ் ஓவியா said...


கோவில் தோன்றியது இப்படித்தான்!

மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.

- தினமலர் செய்தி

ஊர் ஊருக்குக் கோயில்கள் எப்படி உருவாயின என்பது இப்போதாவது புரிகிறதா? இன்று விபத்தில் மடிந்த அந்தக் குழந்தையைத் தான், இன்னும் கொஞ்ச நாட்களில் சர்வசக்தி வாய்ந்த விபத்தம்மன் என்று கொண்டாடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அங்கு ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளையம்பட்டியைச் சேர்ந்தவர் தையற் கலைஞர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு காவியா, தனுஜா என்ற, இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த, 2007 ஆம் ஆண்டு டிசம்பர், 23 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பழனிச்சாமி தன் மனைவி மற்றும் இரு குழந் தைகளையும் இருசக்கர வாகனத்தில் மணப்பாறை யில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பன்னாங்கொம்பு அருகே சென்ற போது, பால்வேன் இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், படுகாயமடைந்த தனுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தனுஜாவின் இறுதி நிகழ்வு முடிந்து, ஒன்பதாம் நாள் சிறீரங்கம் அம்மா மண்டபத்தில், சிறுமிக்கு ஈமக்கிரியைகளை செய்து கொண்டி ருந்தனர்.

அப்போது, வேதமந்திரங்கள் கூறிக்கொண்டி ருந்தவர், தனக்கு ஈமகாரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், மூன்றாண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் என்று தனுஜா போல பேசி, அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதேபோல், மூன்றாண்டுக்குப்பின் பழனிச்சாமி யின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி, தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பின், தனுஜாவின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே, தனுஜா வுக்கு, ஒரு அடி உயர சிலை எழுப்பி கோவில் கட்டியுள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி நடந்து வருகிறது. இந்தாண்டும் பால்குட விழா, மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு வந்து, கோவில் முன் இருந்த பூக்குழியில் இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலபிஷேகம் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி, ஊர் நாட்டாண்மைகள் பின்னத்தூர் ரெங்கநாதசுவாமி, அழககவுண்டர் மற்றும் வெள்ளையம்பட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா


ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:

சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ கம் பெரும் வளர்ச்சி அடையும். இலங்கை யைச் சுற்றி செல்லும் கப்பல்கள் சேது சமுத் திரக் கால்வாய் வழி யாகச் செல்லும்போது 424 கடல் மைல்கள் தூரம் குறையும் என்ப தால் ஆண்டுக்கு ரூ.130 கோடி செலவு மிச்ச மாகும்.

நீர்வளம் பெருகி, சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். அண்டை நாடுகளின் கப்பல்கள் எளிதில் தென் தமிழகத் தின் துறை முகங்களுக்கு வந்து செல்வதன்மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். இத்திட்டத்தை நிறை வேற்றக் கோரி தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத் தப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து 9 முறை ஆய்வு நடத்தப்பட்டு முடிவில் 1955 ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பயனுள்ள திட் டம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

1957 இல் குளித் தலை எம்.எல்.ஏ.,வாக இருந்த தலைவர் கலை ஞர் சேது சமுத்திரத் திட்டம் குறித்து முதன் முதலாக சட்டமன்றத் தில் பேசினார். 1960 இல் தி.மு.க. உருவான போதும் இத்திட்டத்தை அண்ணா வலியுறுத்தி னார். அதன் பிறகு ஒவ் வொரு முறை தி.மு.க. மாநாடு நடந்தபோதும் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வைகோ, கம்யூ னிஸ்ட தலைவர்கள் வர தராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டவர்களால் கூட சேது சமுத்திரத் திட்டம் வரவேற்கப்பட் டது. 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

தேர்தல் நேரத் தில் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கும் ஜெய லலிதா, எம்.ஜி.ஆரால் வரவேற்கப்பட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திரத் திட்டத் திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பது மதவாதிகளுக்கு துணை போகும் செயல் இல் லையா?

இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.850 கோடி வரை செலவு செய்யப் பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் கருத்துக்கு முரண்படும் வகையில் இத்திட்டத்தை ஜெய லலிதா முடக்க நினைப் பது சரியா? கடந்த 22.8.1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்போ தைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற் றக் கோரி கடிதம் எழு தியது நினைவில்லையா? 2001, 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வோம் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இக் கருத்திலிருந்து முரண் பட காரணம் இத்திட் டத்தால் கலைஞருக்குப் பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் திட் டத்திற்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட நினைக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக் கக்கோரி உச்சநீதிமன்றத் தில் தொடர்ந்துள்ள வழக்கை ஜெயலலிதா திரும்பப் பெறவேண் டும்.

- இவ்வாறு முன் னாள் அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!


சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை

திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!

மே 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்!

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மட்டுமல்ல - பொதுவாகக் கிரிக்கெட்(டு) விளையாட்டில் தொடர்ந்து சூதாட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனை ஒழிக்கும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்

சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!!

1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்!

அதாவது 16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஜாம் ஜாம் என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை - புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பது தானே பொருள்?

அய்.பி.எல். மட்டுமல்ல

அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச் சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?

தமிழ் ஓவியா said...

முன்னாள் மத்திய அமைச்சருக்கும் தொடர்பாம்!

இதில் இன்னொரு மாபெரும் வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு - தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (அவர்கள் இவர் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; மேலும் முக்கிய புள்ளிகள் மூவர் இவருக்குப் பக்கத்துணையாக இருந்துள்ளனராம்!)

சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!

கிரிக்கெட் சூதாட்டம் விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்து விட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த்; இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!

இதற்கிடையில் - நெருக்கடி அவப் பெயரிலிருந்து மீளுவதற்குக் கிரிக்கெட் சங்கத்துக்காரர்கள் சில தந்திர உபாயங்களை - நடவடிக்கைகளை எடுத்துத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர் போலும்!

திசை திருப்பலா?

அதோடு மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா?

ஒவ்வொரு அய்.பி.எல். அணி விளையாட்டுக்காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;

அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி போதை முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.

ஏலம் போகும் விளையாட்டுக்காரர்கள்!

முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு - மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.

வழக்கில் ஓட்டை கூடாது!

இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் காட்டி தப்பிக்க இயலாதபடி சரியான குற்றப் பத்திரிக்கை விலை போகாத வழக்குத் தேவை!

ஓர்ந்து கண்ணோடாத நீதிபரிபாலனம் மூலம் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுத்து, விளையாட்டின் உயர்ந்த உன்னதத் தத்துவங்களை நிலை நிறுத்துவது அவசர அவசியமாகும்.

இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தவிருக்கிறது. (திருச்சி மற்றும் ஈரோட்டில் மட்டும் 25ஆம் தேதி)
அதற்கு ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஈடுபட முன் வர வேண்டும்.

கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை நமது போராட்டம்

நமது கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது;

அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் - அறப் போர் - தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!!



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21.5.2013

தமிழ் ஓவியா said...


கழக முயற்சிக்குக் கைமேல் பலன் வட்டாட்சியர் அலுவலகப் பிள்ளையார் அகற்றப்பட்டார்



கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு சிலர் திடீரென பீடம் அமைத்து ஒரு விநாயகன் சிலையை வைத்து விட்டனர். அரசு விதி முறையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.க. மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் த. சுரேஷ் ஆகியோர் 10.05.2013 அன்று மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடமும் அந்த மனுவின் நகலை கொடுத்தனர்.

மேலும் விடுதலை ஏட்டில் (14.5.2013 விடுதலை) வேலியே பயிரை மேய்கிறது என்ற தலைப்பில் செய்தியும் வெளியாகியது. உடனடியாக திராவிடர் கழக தோழர்களின் வலியுறுத்தலின் பெயரில் வருவாய்துறை அதிகாரிகள் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த விநாயகன் சிலையை பீடத்துடன் அகற்றினர்.
மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து 9 நாட்களுக்குள் விநாயகன் சிலை பீடத்துடன் அகற்றப்பட்டது. இது விடுதலை ஏட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் முயற்சிக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

தமிழ் ஓவியா said...

தெரியுமா சேதி?

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசன் தான் சென்னை சூப்பர் கிங்கின் (அய்.பி.எல்.) முத லாளியாவார். கவர்னரே கலெக்டராகவும் இருக்கிறார் எப்படி?

####

ஒவ்வொரு முறையும் நடக்கும் அய்.பி.எல். கிரிக் கெட்டில் மட்டும் சூதாட்டத்தில் புரளும் தொகை ரூ. மூன்று லட்சம் கோடியாம்!

தமிழ் ஓவியா said...

உருண்ட பக்த கே()டிகள்!


கரூர் மாவட்டம், தெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் 99ஆவது ஆண்டு ஆராதனையில் எச்சில் இலைகள்மீது பக்தர்கள் உருண்டனர். குறிப்பு: மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும் கலந்து கொண்டார். அவர் எச்சில் இலை மேல் உருண்டாரா என்பது பற்றி தகவல் இல்லை.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்



தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


இலங்கை மீது நடுநிலையான பன்னாட்டு விசாரணை தேவை


கருத்து மாறுபடுவோர் மீது இலங்கை அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை

அம்பலமாக்கும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை

இலங்கை அரசு, தன்னை விமர்சிப் பவர்கள் மீது அச்சுறுத்தல், தொல்லைப் படுத்துதல், சிறைவாசம் முதலிய கொடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அண்மையில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மாற்றுக்கருத்துக் கொண்டவர் மீது தாக்குதல் என்று அந்த ஆணவம், அதிபர் ராஜபக்சேயினால் நடத்தப்படும். இலங்கை ஆட்சி எப்படி விமர்சனங்களை, ராஜத்துரோகம் என்ற அதன் அசுரப் பிடியில் வேகப்படுத்தி வருகிறது, என்பது பற்றி விளக்குகிறது.

பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் குறிவைக் கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் அடிக்கடி பாதுகாப்புத் துறை யினராலும், அவர்களுடைய பதிலி களாலும் தாக்கப்படுகின்றனர். ஆம் னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பைச் சேர்ந்த ஆசிய பசிபிக் பகுதியின் துணை ஆணையர் பாலி டிரஸ்காட் என்பவர் இலங்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொடுமையான அடக்குமுறைக்கு ஆட்படுத்துவதிலும், அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதிலும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது என்று கூறி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங் களுக்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. இலங்கையில் உண்மை யிலேயே அச்சமான சூழ்நிலை பரவி வரு கிறது. அரசுக்கு எதிராக துணிச்சலாக பேசக்கூடியவர்கள் மோசமான வேத னைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

மே 29இல் விடுதலைப் புலிகளுட னான ஆயுதப் போர் முடிவுக்கு வந்த வுடனேயே அரசாங்கம் தனது சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டது.

2010 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் பட்ட 18ஆவது அரசியல் திருத்தம், அரசினால் கொண்டு வரப்பட்டவுடனேயே அரசு நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாக அதிபரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது; கொடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளுக்கு அளவில்லாத அதிகாரங்களை குவித்தது. அதே நேரத்தில், அரசுத்தரப்பு, விமர்ச கர்களுக்கு எதிரான தனது பேச்சுக்களை அதிக எதிர்ப்புணர்ச்சியுடன் வெளிப் படுத்திற்று. துரோகிகள் போன்ற வார்த்தைகள் அரசு நடத்தும் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி, மாற்றமில்லாமல் வெளிவந்தன.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், வசைமாரிகளுக்கும் வன் கொடுமை களுக்கும் ஆளானார்கள். சிலர் தாக்கப் பட்டும், சிலர் கொல்லப்பட்டும் போயினர். 2009-க்கு முன்னும் பின்னும், டஜன் கணக்கான அம்மாதிரியான விவரங்களை அந்த அறிக்கை விளக்குகிறது.

நீதித்துறை அடக்குமுறையின் முக்கிய குறியாயிற்று. அரசு தனது சுதந்திரத்தைச் சிறுமைப்படுத்திக் கொள்ளும் விதத்தில் மனித உரிமை மீறல்களுக்காளானவர் களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

ஜனவரி 2013இல் தலைமை நீதிபதி ஷீராணி பண்டார நாயகேயின் தவறான நடத்தை காரணமாக பதவி நீக்கம் செய் யப்பட்டபோது, எதிர்ப்புணர்ச்சி உச்சத்திற் குப் போயிற்று. இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஷீராணி பண்டார நாயகேயின் பதவி பறிப்பு முறையற்றது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறியிருக்கிறது.

ஊடகங்களின் பெரும்பான்மை உறுதி யாக அரசு வசப்பட்டிருந்தாலும் சற்று சுதந்திரமாக உள்ள போரின் போது அரசின் செயல் முறைகள் பற்றியும், அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விமர்சனம் செய்தும் வரும் மற்ற ஊடகங்கள் மீது அரசாங்கம் குறிவைத்துள்ளது.

ஊடக வியலாளர்கள் அரசாங்கத்தின் போக்கு பற்றி விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். அவமானப் படுத்தப்படுகிறார் கள், தாக்கவும்படுகிறார்கள். 2006ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 15 இதழாளர் களாவது கொல்லப்பட்டிருக்கிறார்கள், மற்ற பலர் நாட்டை விட்டு ஓடும்படி துரத்தப் பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

அண்மையில் நிகழ்ந்த, உதாரணமாக சண்டே லீடர் என்ற பத்திரிகையைச் சார்ந்த பஃராஸ் செனகத்தலி என்ற இதழாளர், சில மனிதர்களால் பிப்ரவரி 2013இல் துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கடுமையான காயம் எற்படுத்தப் பட்டுள்ளார்.

2009இல் கைது செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே போன்ற பழைய உயர் மட்டக் கொலைகள் கூட இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.

அரசாங்கத்தைப் பற்றி விமரிசித்துக் கட்டுரைகள் வெளியிடும் இணையங்கள் (website) அடிக்கடி சைபர் அட்டாக் முறைக்கு ஆளாக்கப்படுகின்றன; அவர் களது அலுவலகங்கள் காவல் துறையின ரால் சோதனைகளுக்கு ஆளாக்கப்படு கின்றன; சில நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. அரசாங்கம் கூட சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. அதன் படி அளவுக்கதிகமான பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் இவை விமர்சிக்கும் ஆன்லைன் வெளியீடுகளை மூடப்படுவதற்கான முயற்சிகளாகும்.

டிரஸ்காட், அரசாங்கத்தின் பத்திரிகை களை கட்டுப்படுத்துவது அல்லது சுதந்திர மானவற்றை ஒழிப்பது ஆகிய தொடர்ந்த முயற்சிகள், பத்திரிகை சுதந்திரத்தின் முகத்தில் விழும் பூச்சிகளாகும்; மேலும் உள் நாட்டினராலும் பன்னாட்டினராலும் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்தினை கூட சிதைப்பதாகும் என்று கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தினராலும், விடுதலைப் புலிகளாலும், போரின் இறுதிநிலைகளில் பல்லாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்ட விவரங்களை வெளியிடும் ஊடகங்கள் மீது குறிப்பாக அவற்றை ஒழித்து விடும் பணியில் அரசு இருக்கிறது. முக்கியமான பன்னாட்டு நிகழ்வுகளின் போது விமர்சகர் மீதான அழுத்தங்கள் அதிகப்படுத்தப் படுகின்றன.

உதாரணமாக அண்மையில் நிகழ்ந்த அய்.நா. மனித உரிமை மீறல்கள் பற்றிய குழுவின் 2012, 2013இல் நிகழ்ந்த கூட்டங்களைச் சொல் லலாம்; மனித உரிமைக்கவுன்சில், இலங் கையின் ஆயுதம் கொண்டு நடத்தப்பட்ட போரில், பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டதை ஆராயும் வகையில் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி வெளியிடுவதைத் தடுக்கும் பல தடை தந்திரங்கள் கையாளப்பட்டன.

அய்.நா. கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்களும், அந்நிகழ்ச்சிகளை செய்திப்படுத்த விரும்பிய இலங்கைப் பத்திரிகையாளர்களும், திரும்பத் திரும்ப இலங்கை அரசினரால் ஊடகங்கள் தாக்கப்பட்டன. சில நிகழ்வுகளால் உடல் வன்மை கூட்டியும் தாக்கப்பட்டனர்.

இலங்கை அரசால் குறிவைக்கப் பட்டுள்ள மற்ற பலருள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் அதுவும் குறிப்பாக தமிழர் மிகுந்த பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் முதலியோர்.

2013 நவம்பர் மாதத்தில் அடுத்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு (CGIGM) கொழும்புவில் நடக்க இருக் கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அதன் தலைவராக இலங்கை பங்கு பெறும்.

டிரஸ்காட், இலங்கையில் அச்சுறுத் தும் முறையில் வளர்ந்துவரும் மனித உரிமை மீறலை சரி செய்யச் சொல்லி, இலங்கை அரசிற்கு, நவம்பர் மாதத்திற்கு முன்பு காமன் வெல்த் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி யுள்ளார்.

மனித உரிமைகள் பற்றிய விதி மீறல்கள் படிப்படியாக இலங்கை அரசு நிறுத்தி விட்டது என்பதை தனது செயல் பாடுகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். தனி மனிதர்களின் மீதான தாக்குதல்கள் உடனடியாக வேறு பாடுகள் இல்லாமல் தகுதியான முறையில் ஆரா யப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவையெல்லாம் இலங்கை அரசால் நிருபிக்கப்படும் வரையில் இலங்கையின் கொழும்பு நகரில், காமன்வெல்த் நாட்டுத்தலைவர்களின் மாநாடு நடத்தப்பட அனுமதிக்கக் கூடாது.

இவை தவிர மேலும் நடந்து வரும் விதி மீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது; அவை களை நிறுத்துவதற்கான வாக்குறுதி களை அடிக்கடி அளிக்கிறது; ஒரு பயனுள்ள ஆய்வின் மூலம் பன்னாட்டுச் சட்டப்படியான குற்றங்கள், ராணுவத்தின ராலும், விடுதலைப்புலிகளாலும் ஆயுதப் போரின்போது நடத்தப்பட்டவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏராளமான வெளிப்படையான நிகழ்வு கள் மூலம் இலங்கை அரசு ஒரு நம்பிக் கையான ஆய்வை, பன்னாட்டுச் சட்டப் படியான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உட்பட விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு விரும்பவில்லை. போரின் போது நடந்த குற்றங்கள், குற்ற நிகழ் வுகள் பற்றிய சுதந்திரமான, நடு நிலைமையான, பன்னாட்டுச் சமூகத் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டியது என்பது தான் இன்றைய அவ சியம் என்று டிரஸ்காட் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


பெட்டிக்கடைகளும் - நடைபாதை கோவில்களும்!


சென்னையில் சாலையோரங்களிலும், நடை பாதைகளிலும் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சென்னையில் பெட்டிக்கடைகளால் போக்கு வரத்து இடையூறு என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், அத்தகைய பெட்டிக்கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் திங்களில் ஆணையிட்ட தன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பெட்டிக்கடைகளை அகற்றும் பணியில் இறங்க உள்ளதாம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62, அண்ணாநகர் மண்டலத்தில் 36, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 8, திரு.வி.க. நகரில் 22, தண்டையார்ப்பேட்டையில் 18, ஆலந்தூரில் 6 கடைகளும் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.

உண்மையைச் சொல்லப்போனால், சென் னையில் பெட்டிக்கடைகளைவிட, போக்குவரத் துக்குப் பெரும் இடையூறாக இருப்பது நடைபாதைக் கோவில்கள்தான்.

போக்குவரத்தைக் காரணம் காட்டி இடிக்கப் படவேண்டுமானால், முதலில் அகற்றப்படவேண் டியது நடைபாதைக் கோவில்களும், அனுமதி யின்றிக் கட்டப்பட்டுள்ள கோவில்களும்தான்.

உயர்நீதிமன்றத்தின் ஆணையின் காரண மாகத்தான் பெட்டிக் கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டது என்று சமாதானம் சொல்லப்படுமானால், உயர்நீதிமன்றத்தைவிட பெரும் அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம்தானே!

அந்த உச்சநீதிமன்றம் 2010 செப்டம்பரில் பிறப்பித்த ஆணையின்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டு இருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலா ளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் கூறவேண்டும் என்று 2010 செப்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணை பிறப்பித்ததே!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனுமதி யற்ற வழிபாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். 77,450 கோவில்கள் தமிழ்நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்களாகும்.

இன்னும் சொல்லப்போனால், 2009 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் இந்த ஆணை யைப் பிறப்பித்தது. கடைசியாகப் பிறப்பித்த ஆணைதான் 2010 செப்டம்பர் 14 அன்று பிறப்பிக்கப்பட்டதாகும்.

இதன்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்திட முனைந்துள்ள தமிழ்நாடு அரசு - உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கிடப்பில் போட்டுள்ளதே - இது சரியானதுதானா?

உயர்நீதிமன்றத்தைவிட உச்சநீதிமன்றம் அதிகாரம் அற்றது என்று ஒருக்கால் தமிழ்நாடு அரசு கருதுகிறதோ!

சிறுசிறு பெட்டிக் கடைகளை வைத்து அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாடு கிறார்கள். அவர்கள்மீது காட்டும் வேகத்தை - நடைபாதையில் அத்து மீறிக் கோவில்களை எழுப்பி, உண்டியல் மூலம் வசூல் வேட்டை நடத்தி, ஒவ்வொரு நாள் இரவிலும் உண்டியலை உடைத்து, அந்தப் பணத்தின்மூலம் போதை ஸ்நானம் - தீர்த்தம் - செய்யும் பேர்வழிகளிடம் காட்ட வேண்டியதுதானே!

கல்லு சாமிகளிடம் காட்டும் கருணை, மனிதர்களிடத்தில் காட்டப்படுவதில்லையே, ஏன்?

முதலில் இந்த நடைபாதைக் கோவில்களில் கை வைக்கட்டும் - அடுத்ததை அடுத்துப் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...

24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் முக்கியம் பெறுகிறது!

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பி.சி.சி.அய்.) தலைவர் சீனிவாசன் - அய்.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது. தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாது - என்று அடித்துக் கூறியுள்ளார்.

வீரர்களை காவல்துறை போல், எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சூதாட்டம் குறித்த தகவல்கள் வருகின்றன. இதனைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லாமையால் காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் கலந்து பேசி சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம், இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொள்ளைப் போதை - இவை குறித்து திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 16.5.2013).

அய்.பி.எல். கிரிக்கெட் என்பது பெரும் முதலாளிகளின் கருப்புச் சந்தைக் களமாக உள்ளது. வீரர்களை ஏலம் எடுப்பது என்பது கேவலமானது. பல நூறு கோடி ரூபாய் போட்டு இந்தக் களத்தில் இறங்கி உள்ளவர்கள், தாங்கள் வெற்றி பெற குறுக்கு வழியைத் தானே தேர்வு செய்வார்கள். தரகர்களையும் ஏற்பாடு செய்வார்கள்?

ஒரு விளையாட்டில் இவ்வளவுப் பெருந்தொகை நுழைவதுதான் குற்றங்களுக்கெல்லாம் முதற்படி.

கிரிக்கெட் என்றால் பணம் காய்ச்சி மரமாக அல்லவா இருக்கிறது? கிரிக்கெட் விளையாட்டுக் காரர்களுக்கு ஆண்டு சம்பளம் ஒரு புறம் - ஒவ்வொரு நாளும் விளையாடுவதற்குச் சம்பளம் - நான்கு ஓட்டம் எடுத்தால் அதற்கொரு வெகுமதி, ஆறு ஓட்டம் எடுத்தால் அதற்கென்று தனித் தொகை இவையன்றி அரசாங்கத்தின் சலுகைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் - ஒரே ஒரு முறை கூட அவைக்கு அவர் சென்றதாகத் தெரியவில்லை.

இந்த வசீகரம்தான் அந்த விளையாட்டின்மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்படுவதற்கே காரணமாகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல விளையாட்டு என்றால் அதில் திறமை - அர்ப்பணிப்பு இவையல்லவா குடிகொண்டு இருக்க வேண்டும்? அதனை விலை பேசுகிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!

ஒவ்வொரு முறை பந்தை வீசும் பொழுது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதென்ன - கழுத்தில் மாட்டியுள்ள தாயத்தை கண்ணில் ஒற்றிக் கொள்வதென்ன? என்ன....

சாயிபாபா இருந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு வருவ துண்டு. அவர் கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு விளையாடுவதுண்டு. ஆனாலும் சாதனைக்கு அவை துணை நிற்கவில்லை என்பது தெரிந்த சேதியே!

கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பணம் மட்டுமல்ல - பெண்கள் வரை அனுப்பி வைக்கப்படு கின்றனர் என்றால் நாடே தலைகுனிய வேண்டாமா?

இதில் எந்தவித அரசியல் செல்வாக்குக்கும் கட்டுப்படாமல் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்காரர் களையும், சூதாட்டத் தரகர்களையும், அவர்களை இயக்கும் பணத் திமிங்கலங்களையும் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்து, சட்டத்தின் கடமையைத் தங்குத் தடையின்றி செயல்படுத்திட வேண்டும்.

பி.சி.சி.அய். தலைவர் சீனிவாசன் அளித்துள்ள பதில் பொறுப்பற்றதாக உள்ளது. இந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் எந்த அளவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்; வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து திரளாகப் பங்கேற்கவும் அனைவரையும் அழைக் கிறோம்.

-------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

தமிழ் ஓவியா said...


நம் பழைய சூதாட்டத்தைப் பரப்பும் சிகாமணிகளுக்கு பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தரலாமே!




- ஊசி மிளகாய்

நெறிகெட்ட கிரிக்கெட் சூதாட்டம்!

சூதாட்டத்தின்மூலம் கிரிக்கெட்டின் மீது - அய்.பி.எல். என்ற ஒரு வாய்ப்பின் மூலம் - திடீர்க் குபேரர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!

கிரிக்கெட் தரகர் ஒருவர் தினமும் ரூபாய் ஒரு கோடி வீதம் சம்பாதித் துள்ளார். எந்தாடா ஆச்சர்யம்!

இது எவ்வளவு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி - அதுமட்டுமா?

ஏற்கெனவே ஆட்டம் ஆடியவர் களுடன் செய்த ஏற்பாட்டின்படி, பந்தயம் கட்டிய (சூதாட்ட பேரத்தில்) வெறும் ஏழு நிமிடங்களில் இரண்டரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி இன்று வெளியாகியது! எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் இது!

மது, மாது என்பதைவிட இந்தக் கிரிக்கெட் சூது எப்படிப்பட்ட லாபகர மான தொழிலாக பலருடைய ஆதரவின் பேரில் செழித்தோங்கி நடைபெறுகிறது பார்த்தீர்களா? இதைத் தடை செய்ய இதற்குமேலும் காரணங்கள் தேவையா?

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியாரின் பொருள்களை இங்கிலாந்து நாட்டில் ஏலம் விட்டுள்ளனர்.

காந்தி சீடர்களான ஆட்சியாளர் அதை ஏலம் எடுத்து, காந்தி மியூசியத்தில் வைக்கவேண்டும் அல்லது காந்தி சமாதிக்கு அருகில் அவர் பயன்படுத்திய பொருள் கொண்ட ஒரு காட்சியகத்தை அமைக்கவேண்டுமென்ற எண்ணம்கூட இல்லை. எவர் எவரோ ஏலம் எடுத்துள் ளனர்!

இன்று காந்தி என்றாலே எந்த காந்தி என்று கேட்கும் நிலையில், இதற்காக முக்கியத்துவம் வரும்? அது கிடக்கட்டும்!

காந்தி பயன்படுத்திய சில பொருள் களின் மதிப்பு ஏலத்தில் விடப்பட்டு எடுக் கப்பட்டதின்மீது வந்த தொகை 2 கோடியே 30 லட்சம் ரூபாய்தான்.

ஆனால், 7 நிமிட கிரிக்கெட் சூதாட் டத்தின்மீது சம்பாதிக்கப்பட்ட பணம் ரூபாய் இரண்டரை கோடி (2 கோடியே 50 லட்சம்) ஆகும்!

இரண்டு தராசு தட்டுகளில், காந்தி தட்டு வெயிட் இல்லாதது; மேலே நிற்கும்!

கிரிக்கெட் என்ற விளையாட்டு, வெளிநாட்டு விதேசி, (அது சுதேசி விளையாட்டு அல்லவே) என்றாலும், நம் நாட்டில் ஆண்டியை அரசனுக்குமேல் ஆக்கும் நவீன அலாவுதீனின் அற்புத விளக்காக அல்லவா கிடைத்துள்ளது!

ஊழலை ஒழிப்பது, கறுப்புப் பணத்தைத் தடுப்பது என்பதன்கீழ் வராது என்பது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கணக்கோ!

அதுமட்டுமா? கொலைகளுக்கும்கூட இந்த அய்.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் காரணமாக அமைந்துள்ளது என்பது மகாராஷ்டிரத்தில் எம்.பி.ஏ., படித்தவன் 30 லட்சம் ரூபாயை இழந்ததைச் சரி கட்ட, ஆள் கடத்தி கொலை செய்த கதை போலவே ஆந்திராவிலிருந்து மற்றொரு வேதனையான செய்தி!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி, பல் வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என பெற்றோர் கவலை ஒருபுறம், கணவரும், குழந்தை களும் அய்.பி.எல். போட்டிகளை பார்க்க முடியவில்லை என்று சண்டை ஆரம்பித்து, ரிமோட்டை வைத்து ஆரம்பித்து - இதனால் அடிவாங்கிய மனைவி, (சீரியல் பார்க்க அவர் விரும்பினார்;

அய்.பி.எல். பார்க்க கணவர் விரும்பினார்) இதனால் மனமுடைந்த மனைவி, மண் ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்துச் சாகும் நிலையில் உள்ளாராம்! என்னே கொடுமை! பரிதாபம்! (நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இது நடந்தது).
இவ்வளவு ஒழுக்கக்கேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மக்களாட்சியின் கடமை அல்லவா?

சூதாட்டத்தில் பங்கு வாங்கி மகிழ்வதா ஆட்சியின் கடமை என்று மக்கள் கேட்கமாட்டார்களா?

இது ஞானபூமியாம்! நம்ம பாரத கலாச்சாரமே சூதாட்டம்தானே!

மஹாபாரதத்தில், தருமன் உள்பட பஞ்சபாண்டவர்கள் தம் பொது மனைவியை (துரோபதையை) பந்தயமாக வைத்து ஆடித் தோற்றதும்,
அதற்குமுன் வேத காலங்களி லும்கூட ஆரியர் சூதாட்டத்தில் ஈடு பட்டு, ஓய்வு அதிகம் (வேறு விளை யாட்டுத் தெரியாத காலமோ!) என்ப தால் ஆடினார்கள் என்பது உண்மை.

பழைய நம் பாரத கலாச்சாரத்தை நம் கிரிக்கெட் என்ற நவீன விளையாட்டின்மூலம் பரப்புவதற்காக சூதாட்ட வீரர்களுக்கும் பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தந்து கவுரவிக்கலாமே! 22-5-2013

தமிழ் ஓவியா said...


இலங்கையில் மனித உரிமைக்கு இடமில்லை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குழு குற்றச்சாற்று



கொழும்பு, மே 22- இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந் நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந் திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்து கொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங் களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை அரசாங்கம் எடுக்க வில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. யுத்த காலத்திலேயே பல கஷ்டங் களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழிதேடுவார்கள்.

ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ், தொடர்புடைய விடயங்கள், மனித உரிமை தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்ற வர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப் படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல்போனவர்களின் கதி பற்றிய தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப் படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள், ஆனால் ராஜபக்சே அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவ கார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என அய்.நா. தலைமைச் செயலாளருக்கு ராஜபக்சே வழங்கியிருந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் நியமித்த படிப் பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பொறுப்புகூறல் தொடர்பில் செய்த பரிந்துரை களும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.

பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக் கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண் மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழி தேடுவார்கள் என பிராட் ஆடம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்



பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)
சிந்துவெளி - திராவிட நாகரிகம் என்பதில் பெருமிதமடைகிறேன்!
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர், ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆகியோர் ஆதாரங்களுடன் விளக்கம்!

ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார்.

அ.ராமசாமி எழுதிய “A History of Ancient Tamil Civilization” நூலை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

சென்னை, மே 22- இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே (தமிழர்களே!) என்றும், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதில் பெருமிதமடைகிறேன் என்றும் தமிழர்தலைவர் கி.வீரமணி, ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆகியோர் ஆதாரங்களுடன் உரையாற்றினர்.

சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நேற்று (21.5.2013) திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

தமிழில் படித்து அய்.ஏ.எஸ். ஆனவர்

நிகழ்ச்சியில் தலைமையேற்ற பேரா.ராமசாமி, சிறப்புப் பேச்சாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கும் தனக்குமான உறவை நகைச்சுவையுடன் குறிப்பிட்டுவிட்டு, மதுரை யாதவர் கல்லூரியில், தமிழ் இலக்கியம் பயின்று, தமிழிலேயே எழுதி அய்.ஏ.எஸ். ஆனவர் தான் இன்று நம்முன் பேச உள்ளார் என்பதை குறிப்பிட்டுக் காட்டினார்.

அதன் காரணமாகவே தங்களுக்கு நட்பு ஏற்பட்டதையும் தொட்டுக் காட்டினார். தான் படிக்கும் போது பாடத்திட்டத்தில் வேதகால நாகரிகம்தான் இருந்தது என்றும், இப்போது அவை மாற்றப்பட்டிருப்பது திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சாதனை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் சிறப்புப் பேச்சாளரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவரைத் தொடர்ந்து பேரா.ஜெகதீசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

எழுதி வைத்ததுதான் வரலாறு!

அதைத் தொடர்ந்து, சிறப்புப் பேச்சாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். தனது ஆராய்ச்சியை சுருக்கமாக ஒளிப்படங்களின் உதவியுடன் தொகுத்தளித்தார். அவர் தனது உரையில், பொதுவாக எழுதி வைத்ததுதான் இன்று வரலாறாக நமக்கு கிடைத்திருக்கிறது. அப்படியென்றால், எழுதாதது வரலாறு இல்லையா? என்ற வினாவை எழுப்பி, மண்ணைப் பற்றிய வரலாற்றை விட, மக்களைப் பற்றிய வரலாறுதான் முக்கியம். அவர்கள்தான் வரலாற்றை தூக்கி சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவர்கள் என்று விடையும் சொன்னார்.

இடப் பெயர்கள் நாகரிகத்தைவிடத் தொன்மையானது

தமிழ் ஓவியா said...

மேலும் அவர் கூறுகையில், சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளங்களில் 75 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இடப் பெயர்கள் நாகரிகத்தைவிடத் தொன்மையானது என்று கூறிவிட்டு, கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் ஆகிய பெயர்கள் பாகிஸ்தானில் கண்டறிந்ததாக குறிப்பிட்டு விட்டு, இதுதான், தன்னுடைய யுரேகா தருணம் என்பதையும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

மேலும் அவர், குன்று, கோடு, கரை, மலை ஆகிய பெயர்களைப் பற்றியும், அவை இன்று எங்கெங்கு இருந்து வருகின்றன என்பதையும் படக்காட்சிகளோடு சுட்டிக்காட்டி இடப் பெயர்கள் நாகரிகத்தைவிட தொன்மையானது என்பதை விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், ஆரிய நாகரிகத்திற்கும், திராவிட நாகரிகத்திற்கும் தலைகீழ் வேறுபாடு இருப்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினார்.

சங்க கால தமிழ் இலக்கியங்கள் எப்படி சிந்து சமவெளி நாகரிகத்தோடு மிக நெருக்கமாக இருக்கின்றது என்பதையும் அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை. மேலும் தனது ஆய்வுகள், திராவிட மரபுக்கூறுகளில் செய்யப்பட்டு வியக்கத்தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளதை புள்ளி விவரங்களோடு அரங்கத்தினர் முன் வைத்தார். இறுதியாக, சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்று ஆணித்தரமாக கூறிவிட்டு, அதற்காக தான் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறி நிறைவு செய்தார்.

நூற்றாண்டுகளை சிறு குப்பிக்குள் அடைத்தவர்

சிறப்புரையைத் தொடர்ந்து தமிழர் தலைவர் உரையாற்றினார். அவர் தனது உரையை நிறைவுரையாகவும் வாழ்த்துரையாகவும் அமைத்துக் கொண்டார். தொடக்கத்தில் அறிஞர் அண்ணாவை நினைவு கூர்ந்த தமிழர் தலைவர், பெரியாரின் பெரும் பணியைப் பற்றி அண்ணா குறிப்பிட்ட “Putting Centuries in Capsules” இங்கிலீஸ் சொற்றொடரைக் கூறி அதுபோல சிறப்புப் பேச்சாளர், குறுகிய நேரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டு கால வரலாற்றை தொகுத்தளித்திருக்கிறார் என்று பாராட்டினார்.

குருமூர்த்தியின் குதர்க்கம்

தொடர்ந்து பேசிய அவர், அண்மைக் காலத்தில் பேசப்பட்டு வருகிற திராவிடம் வேறு, தமிழ் வேறு என்ற தவறான பிரச்சாரத்தை நினைவு கூர்ந்தார். அப்போது இந்தியன் எக்ஸ்பிரசில் குருமூர்த்தி என்பவர். பொருளாதாரத்தைப் பற்றி எழுதும்போதுகூட, தொடர்பேயில்லாமல் திராவிடம் வேறு, தமிழ் வேறு என்று எழுதுவதை குறிப்பிட்டுவிட்டு இங்கே வரலாறு என்பது அரசியல் ரீதியாக எழுதப்படவில்லை. இனரீதியாக எழுதப்பட்டிருக்கிறது.

அதனால் தான், மொகஞ்சதாரோ, காளைமாடு குதிரையாக மாற்றப்பட்ட அவலம் நேர்ந்தது என்று நமது வரலாறு இனரீதியாக எழுதப்படுகிறது என்பதற்கு சரியான உதாரணத்தையும் எடுத்துக்காட்டினார். பத்தாண்டுகளுக்கு முன்பு நம் கண் முன்பு இப்படிப்பட்ட வரலாற்றுத் திரிபுகள் செய்யப்பட்டன என்றால் - என்று ஒரு கேள்வியைக் கேட்டு, வரலாறு நெடுகிலும் நமது வரலாற்றை அழித்தொழிப்பதற்காக இன ரீதியாக என்னென்ன செய்யப்பட்டிருக்கும் என்ற ஆழமான சிந்தனைக்கு அடிகோலினார்.

தொடர்ந்து அவர், திராவிடர்களான நாகர்கள், இந்தியா முழுமையும் இருந்ததற்கான ஆதாரங்களாக தமிழ்நாட்டில். நாகர்கோயில், நாகப்பட்டினம் என்றும் வடக்கில் நாகாலாந்து என்ற பெயரையும் சுட்டிக்காட்டி இலங்கையில் வாழ்ந்த பூர்வகுடிகளும் நாகர்களே என்றும் அந்த நாகர்கள் திராவிடத் தமிழர்களே என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே இப்படிப்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தனதுரையை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து நாகப்பன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, புலவர் பா.வீரமணி, ஒரிசா பாலு, பெரியார்நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்ய நாராயண சிங், பொருளாளர் மனோகரன், கரிகாலன், அ.பாலகிருஷ்ணன், பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணசாமி, மேனாள் துணைவேந்தர் வேலுச்சாமி, வழக்கறிஞர் வீரமர்த்தினி, கனிமொழி மற்றும் அறிஞர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


ஒரே நாளில் அய்ந்து மைனர் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


தேனி, மே 22- தேனி மாவட்டத் தில் போடி, தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் பகுதிகளில் உள்ள மைனர் பெண் களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் போன்றவற்றிற்கு தகவல்கள் கிடைத்தன.

இந்த மைனர் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற இருந்த தனால் மாவட்ட சமூக நல அலு வலக அலுவலர்கள் மற்றும் குழந் தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர்கள் தனித்தனி குழுக் களாக பிரிந்து மைனர் திருமணங் கள் நடைபெற இருந்த திருமண இடங்களுக்கு விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

தேனி அருகே அல்லிநகரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 16 வயதுடைய பெண்ணிற்கு நடை பெற இருந்த திருமணத்தை தேனி மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிஸா மற்றும் குழந்தை கள் பாதுகாப்பு அலுவலக பணி யாளர் செல்வம் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதுபோல சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை, கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட 4 இடங்களிலும் நடைபெற இருந்த மைனர் பெண் திரும ணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பல குழுக்களாக பிரிந்து சென்று ஒரே நேரத்தில் நடை பெற இருந்து 5 மைனர் திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே போடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் காதலருடன் தனது காதல் திரு மணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, மாவட்ட சமூக நல அலுவலகத் திற்கு வந்தார்.

அவரை விசாரணை செய்த போது அவருக்கு 17 வயது என்பது தெரியவந்தது. பின்னர் சமூக நல அலுவலர்கள் அவரை காப்பகத்தில் ஒப்படைக்க நட வடிக்கை மேற்கொண்டனர். ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் நடைபெற இருந்த 5 மைனர் திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டது குறித்து மாவட்டம் முழுவதும் பரபரப்பாக இருந்தது.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

இட ஒதுக்கீட்டைக் குழி தோண்டிப் புதைப்பதா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி யதில் 10397 இடைநிலை ஆசிரியர் களும், 8,849 பட்டதாரி ஆசிரியர் களும் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக் காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

தமிழ் ஓவியா said...

எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப் போது நடத்தப்படும்? என்று இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில், தகுதித்தேர்வுக் கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதித்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் ஒரே அளவுகோலா?

நடந்து முடிந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் 19 ஆயிரம் ஆசிரியர் கள் பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.

இந்தத் தகுதித் தேர்வின் அடிப் படையில் சமூகநீதிக்கு - இடஒதுக்கீட் டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படையான தவறினை தமிழக அரசு செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் - உயர் ஜாதியினர் அனை வருக்கும் தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது இது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா?

ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத் தொடங்கி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணையை நிர்ண யித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1980 மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார் என்பதை நினைவூட்டுகிறோம். 7 லட்சம் பேர் தேர்வு எழுதும் மிக முக்கிய பிரச் சினையில் அதிமுக அரசு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டுள்ள இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து நடத்தவிருக்கும் தகுதித் தேர்வும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதல்படி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?

தமிழ் ஓவியா said...


இதுதான் மதம் என்பதோ! கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானதாம் சொல்கிறார் சவுதி மத குரு


வாஷிங்டன், மே 23- வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத் துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்து உள்ளார். சவுதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

அவரது ட்வீட், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி.யை பயன்படுத்துவது அவர்கள் வீட் டில் இருப்பதை பிறர் கவனிக்கக் கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூ டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் சன்னி முஸ்லிம் மற் றும் முஸ்லிம் அல்லாத பெண் கள் பாலியல் வன்முறை செய் யப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட்டைத் தடை செய்க! தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!


இளைஞர்களே, மாணவர்களே, போதை தெளிவீர்!

சூதாட்டப் பொருளாகி விட்ட கிரிக்கெட்டைத் தடை செய்க!

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மே 24- சூதாட்ட மாகி விட்ட கிரிக்கெட் விளை யாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக் களிடத்திலும், மாணவர்களி டையே விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும் இன்று (24.5.2013) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் இளைஞரணி, மாண வரணி, மகளிரணி சார்பில் மாவட் டத் தலை நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில் சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளி வரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள் ளது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் மதுவைவிட அதிகம் போதையூட்டக் கூடி யதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப்பதைக் கண் டித்து மக்களிடத்தில் விழிப் புணர்வை ஊட்டும் வகையில் 24.5.2013 அன்று தமிழகம் முழு வதும் மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பல்லாயிரணக் கணக்கான கழகத் தோழர் - தோழியர்கள் பங்கேற்றனர்.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் மாளிகை அருகில் இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் அய்.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்:

சூதாட்டம் சூதாட்டம் கிரிக்கெட் சூதாட்டம்!
மத்திய அரசே! அனுமதிக்காதே; சூதாட்ட விளையாட்டை அனுமதிக்காதே
கிரிக்கெட் விளையாட்டா சூதாட்ட விளை யாட்டா வெற்றி பெறுவது யார்? சூதாட்டக்காரர்களா? விளையாட்டுக்காரர்களா?
அய்.பி.எல். கிரிக்கெட்டா? கறுப்புப் பண சந்தையா?
வெட்கம்! வெட்கம்! விளையாட்டின் பேராலே வர்த்தகச் சூதாட்டமா?
விளையாட்டின் சிறப்பை கொச்சைப்படுத்தும் கிரிக் கெட்டை தடை செய்!
இளைஞர்களே, மாண வர்களே, பலியாகாதீர்! கிரிக்கெட் போதைக்கு!
மத்திய அரசே நடவ டிக்கை எடு! கிரிக்கெட் பேராலே மோசடி செய்யும் பெரிய மனிதர் கள் மீது நடவடிக்கை எடு!
மத்திய அரசே ஆதரவு கொடு சடுகுடு ஆட்டத்துக்கு, ஹாக்கி ஆட்டத்துக்கு ஆதரவு கொடு
வெட்கக் கேடு விளை யாட்டுக்காரர்கள் ஏலம் போவது வெட்கக் கேடு!
தடை செய் - தடை செய்! சூதாட்டக் கிரிக்கெட்டை சூதாட்டக் கிரிக்கெட்டை தடை செய்! தடை செய்!

என்ற ஒலி முழுக்கங்கள் ஆர்ப் பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில மாணவரணிச் செய லாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை தாங்கினார். சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ், சென்னை மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் பா. மணி யம்மை, ஜோதி ராமலிங்கம், மங் களாபுரம் பாஸ்கர், கலைச் செல்வன், செல்வேந்திரன், சண் முகப்பிரியன், சூதன்லீ, விஜய குமார், சிவசாமி, கார்வேந்தன், அன்பு, இளமதி, கலைவேந்தன், ரமேஷ், ரவி, எழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும்!

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன் றன், ஆர்ப்பாட்ட விளக்க கண் டன உரையில்:-

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட் மோசடியை எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக் கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களை புரோக்கர்கள் விலை பேசி, கிரிக்கெட்டை சூதாட்டக் களமாக்கி விட்டார்கள். இந்த கிரிக்கெட் பித்தலாட்டத்தில் சூதாட் டக்காரர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட்டை நடத்துகிறவர்களுமே பங்கு பெற்றிருக்கிறார்கள். இதை காசு கொடுத்து இன்றைய மாண வர்களும், இளைஞர்களும் பார்த்து தங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிரிக்கெட் சூதாட்டக் களமாகி விட்ட சூழலில் இன்றைய மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்த அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் க. பார்வதி, பொதுக் குழு உறுப்பினர் மனோரஞ்சிதம், சி. வெற்றிச்செல்வி, கு. தங்கமணி குணசீலன், இ. இறைவி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாரா யணன், பகுத்தறிவாளர் கழக வட மணப்பாக்கம் வி. வெங்கட்ராமன், விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால், சென்னை மண்டலத் தலைவர் நெய்வேலி வெ. ஞான சேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், செயலாளர் எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் கந்தசாமி, செயலாளர் தென்னரசு, கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் செ. உதயகுமார் மற்றும் திரளான கழக இளைஞரணி, மாணவரணி, தோழர் - தோழியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தை விளக்கும் வீதி நாடகம்

முன்னதாக இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் கிரிக்கெட் சூதாட் டத்தை விளக்கும் வகையிலும், மாணவர்கள் - இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் திராவிடர் கழக மாணவரணி தோழர்கள் விமல், சந்தீப், பிரபாகரன், காரல் மார்க்ஸ், ஆனந்த், சைதை செல்வம், வை. கலையரசன், புரூனோ என்னாரெசு, ஆகியோர் பங்கேற்ற வீதி நாடகம் நடைபெற்றது. இதை சாலையில் சென்ற பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்.

கறுப்புப் பண மழை கொட்டும் விளையாட்டாக கிரிக்கெட் இருப் பதை எடுத்துக்காட்டியும், பன் னாட்டு முதலாளித்துவ நிறுவனங் களின் விளம்பரக் கூலியாக கிரிக் கெட் ஆட்டக்காரர்கள் இருப்பதைப் பற்றியும், விளையாட்டு என்பதைத் தாண்டி சூதாட்டக் கூடாரமாக கிரிக்கெட் திகழ்வதை விளக்கியும், பொருள்களைப் போல மனிதர் களையும் சந்தையில் ஏலம் எடுக்கும் அடிமை முறையைக் கண்டித்தும், இப்படிப்பட்ட மோசமான கிரிக் கெட்டுக்கு ஆதரவு வழங்கும் இந்திய அரசும், நிறுவனங்களும் உண்மை யான விளையாட்டுகளான சடுகுடு ஹாக்கி, கால் பந்து, தடகளம் போன்றவற்றை புறக்கணிப்பதையும் எடுத்துக்காட்டி திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் இந்த வீதி நாடகத்தை நடத்திக் காட் டினர்.

தமிழ் ஓவியா said...


மனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி ஏதும் கிடையாது!

மருத்துவம் என்பதே மனிதநேயம் தான்; (சில நேரங்களில் சிலரின் பணப் பேராசை அதைப் பொய்யாக்கு கிறது என்பது உண்மையேயாயினும்; தத்துவப்படி அப்படி அல்ல)

சென்னையில் ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும், அவரது அறுவை சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் குழுவி னரும் சிறந்த மனித நேயச் சாதனையைச் செய்துள்ளனர்!

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மவுலானா முகம்மது ஜுபேர் ஆஸ்மி. இவர் டைலேட்டர் கார்டியோ மயோபதி என்ற ஒரு வகை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்.

இதன் காரணமாக இவரது இதயத்தின் செயல்பாடுகள் மிகவும் பலவீனமாக இருந்ததால் பாகிஸ் தான் மருத்துவமனைகள் இவருக்கு சிகிச்சை அளிக்கத் தயங்கின.

இதையடுத்து இந்த உயர் சிகிச் சைக்காக இவர் பாகிஸ்தான் லாகூரி லிருந்து சென்னைக்கு வந்தார்.

அவரைப் பரிசோதித்தில் அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பலவீன மாக இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன் இவ ருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயின் காரணமாக, இவரது கல்லீரல், சிறுநீரகங்களின் செய ல்பாடுகள் குறைந்திருந்தன.
இதைத் தவிர இவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் கூட இருந்தன.

இவரின் ரத்த வகை மிகவும் அரிதான ஏபி பாசிட்டிவ் ஆகும்!

இவற்றின் காரணமாக இவருக்குச் சிகிச்சை அளிப்பது டாக்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது!

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 37 வயதான கோயில் அர்ச்ச கருக்கு மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட நிலையில் அர்ச்சகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன் வந்தனர்.

இந்த மூளைச் சாவு ஏற்பட்டவரின் இதயத்தின் செயல்பாடு குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

இவரது - அர்ச்சகரது - இதயத்தை எடுத்து பாகிஸ்தான் நோயாளிக்கு பொருத்திட வேண்டிய சிகிச்சை ஏற்பாடு களை நமது டாக்டர்கள் செய்தனர்!

இன்னொரு சிக்கலும்கூட. இந்த இரு வரது ரத்த வகையும் வெவ்வேறானவை என்பது மற்றொரு பெரிய சவால் - சிகிச்சை அளிக்க முன்வந்த டாக்டர்கள் குழுவுக்கு.

இதையும் தாண்டி அந்த பாகிஸ்தான் ஆசிரியருக்கு, இந்த அர்ச்சகரின் இதயம் மாற்று இதயமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரத்தில் இந்த மருத்துவ மனிதநேய அற்புதம்! நிகழ்த் தப்பட்டுள்ளது!

தற்போது அவர் நலமாக உள்ளாராம்!

ஒரு சில வாரங்கள் கழித்து மருத் துவக் கண்காணிப்புக்குப் பிறகு - அந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கொண்ட இஸ்லாமிய ஆசிரியர் பாகிஸ் தான் - சொந்த நாட்டிற்குத் திரும்ப இருக்கிறாராம்!

இந்த சாதனையை நிகழ்த்திய டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது குழுவினர், அம்மருத்துவ மனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ், எல்லா வற்றிற்கும் மூலா தாரமான Fortus Malar மருத்துவமனை யின் நிர்வாகத் தினர் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

1. மேலை நாடுகளுக்குச் சென்றால் தான் முடியும் என்பதை மாற்றி அதை முறியடித்துள்ளனர் நமது டாக்டர்கள் தங்கள் அறிவு, ஆற்றல், அனுபவம் மூலம்.

2. மனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி, தொழில் வேறுபாடு எதுவும் கிடையாது. அவற்றை மனிதர்கள் செயற்கையாக அறிவியலுக்கு எதிராக தூக்கிப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அலை கின்றனர் என்பதை இந்த நிகழ்வு தெளிவாக்கியிருக்கிறது!

3. மூளைச் சாவு ஏற்பட்டு விட்டதை அறிந்து உறுப்பு தானம் கொடுக்க முன் வந்த அந்த அர்ச்சகர் குடும்பத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.

எனவே ஜாதி, மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டியது மனித நேயம் - மானிடப்பற்று என்று காட்டி யுள்ள இம்மாதிரி நிகழ்வுகள் மேலும் தொடரட்டும்! --கி. வீரமணி 24-5-2013

தமிழ் ஓவியா said...


வாழ்க்கையால்...



ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமையவேண்டும்.
----பெரியார்(விடுதலை, 20.03.1956)

தமிழ் ஓவியா said...

சென்னையில் பேச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி


* கணினி - இணையதள பயிற்சியும் உண்டு

தஞ்சை வல்லத்தில் நடந்த கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

வல்லம், மே 24- திராவிடர் கழக சொற்பொழி வாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 23.5.2013 வியாழன் பகல் 12 மணி முதல் 2.15 மணி வரை தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி கடவுள் மறுப்புக் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்.

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக சொற்பொழிவாளர்கள் முனைவர் அதிரடி க.அன்பழகன், சிவகங்கை சுப்பையா, என்னாரெசு பிராட்லா, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கழக சொற்பொழிவாளர்கள் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப கணினி - இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் அதிகமான செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், பயன்படுத்திட பழகிக் கொள்ள வேண்டும் எனவும், நூல்கள் வாசிப்பு, மீள் வாசிப்பு தேவை எனவும், தலைப்பு வாரியாக குறிப்பெடுத்து வைத்திருப்பது அவசியம் எனவும், பேச்சாளர்கள் என்போர் பேச்சாளர்களாக மட்டுமின்றி - களப்பணியாளர்களாகவும் இருக்க வேண்டும், நூல்கள் பரப்பிடுவோராகவும் திகழ வேண்டும் என்று தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

வழக்குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் புலிகேசி, முத்து.கதிரவன், யாழ்திலீபன், ஆரூர் முனியாண்டி, தஞ்சை இரா.பெரியார் செல்வன், சிவகங்கை சுப்பையா, காஞ்சி கதிர வன், முனைவர் அதிரடி அன்பழகன், வழக்குரை ஞர் அ.அருள்மொழி, முனைவர் துரை.சந்திர சேகரன், கழக செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு, என்னாரெசு பிராட் லா, வழக்குரைஞர் சிங்கார வேலு உள்ளிட்ட கழக சொற் பொழிவாளர்கள் மற்றும் பொதுச் செயலா ளர் இரா.செயக்குமார், அமைப்புச் செயலாளர் இரா.குணசேகரன் ஆகி யோர் பங்கேற்றனர். தஞ்சை இரா. பெரியார் செல்வன் நன்றி கூறினார்.

சொற்பொழிவாளர்களுக்கு தமிழர் தலைவர்...

* வாழ்க்கை முழுவதும் பெரியாரின் மாணவன் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. அதுபோல சொற்பொழிவாளர்கள் ஒவ்வொருவரும் அதே எண்ணத்துடன் திகழ வேண்டும். பெரியாரை, பெரியாரின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். வயது ஏற ஏற நாம் படிக்கும் பெரியாரின் கருத்துகளுக்கான விளக் கங்கள், சிந்தனைகள், நம் மை வியக்க வைப்பதாய மையும்.

* பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட் சமுதாயத்துக்கு தேவையான முன்னேற்றத் துக்கு, விடுதலைக்கு தேவை யான அனைத்துக் கருத்து களும் கிடைக்கும் இடம் அது. மீள் வாசிப்பு அவசியம்.

* நூல்கள் வாசிப்பும், அதையொட்டி தலைப்பு வாரியான குறிப்புகளை தொகுத்து குறிப்பேட்டில் எழுதுவதும் அவசியம். குறிப்புகளுடன் தான் பேச வேண்டும். வானொலி உரைக்கு எப்படி தயார் செய்வோமோ அப்படி குறிப்புகள் இருக்க வேண்டும்.

* விரைவில் பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னையில் நடத்தப்படும். கணினி - இணைய தள பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

* திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புறப்பட்டிருக்கும் தமிழ் தேசிய வாதிகளுக்கு திராவிடத்தால் தான் எழுந்தோம் என்பதை புரிய வைக்கும்படியான கருத்துகளை தெளிவாக பேச வேண்டும்.

* நமது அறக்கட்டளை சார்பில் நடைபெறும் அறப்பணிகள், கல்விப்பணிகள் பற்றி கூட்டங்களில் பேசும் போது எடுத்துக் கூற வேண்டும்.

* நிறைய படிக்க வேண்டும், அய்யாவின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். படிக்கும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்து பழக வேண்டும். பேச்சில் பயன்படுத்த அவை துணை செய்யும்.

* பேச்சாளர்களாக மட்டுமின்றி, நமது தோழர்கள் சீரிய களப்பணியாளர்களாகவும் திகழ வேண்டும். நூல்கள் விற்பனை, பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல், அமைப்பு பணிகள் என அனைத்திலும் திறன்மிக்கவர்களாக திகழ வேண்டும்.

மேற்கண்ட கருத்துகளை தமிழர் தலைவர் தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


சிந்தனைப் பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

##############

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.

##############

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

##############

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

##############

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


அரசும் - அமைச்சும்


அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அரு வருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம் தான் நமக்குத் தேவை என்று கூறுகிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!

இது முறையன்று. நமது நிலைமை சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு-தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ்யமும், ராம ராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.

அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:

ஜாதிமாத்ரோபஜீ வீவா காமம்ஸ்யாத்
ப்ராஹ் மணப்ருவ;
தர்மப்ரவக்தா, ந்ருபதேர்
நது சூத்ர; கதாசன

(மனு)

பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினா லேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒரு போதும் அரச சபைக்கு உரியவனாக மாட்டான்.

இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயி ருந்தால், அந்நாடு சீர்கெடுமெனபதற்கு மனு கூறியதாவது:-

யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம்
நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்

பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கிறானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர் களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்த நாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும்.

கல்வியை விரும்புகிற சூத் திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத் தக்கவனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லி லேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமையில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கியிருக்கின்றன.

(ஞானசூரியன்

தமிழ் ஓவியா said...


உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும். கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

பயந்த மனிதனும் - பரிகாரமும்!

பயந்த மக்கள் பரிகாரம் காண முற்படுகிற போது அந்த இடத்திற்கு வந்து விடுகிறது சோதிடம்! சோதிடர்கள் பிழைப்பாக்கிக் கொள்கிறார்கள்!

திருமணத்தை நடத்தி வைக்க, புதுக்கணக்கு எழுத, கடையை தொழிற்சாலையை திறந்து வைக்க, அடிக்கல் நாட்ட என்று நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள்! குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும், குறத்தி கூறும் வாக்கையும், சோவி உருட்டிச் சோதிடம் கூறுபவனையும், கிளி ஜோசியத்தையும் நம்புகிற நம் மக்களிடத்தில் ஜோதிடமும் இடம் பெற்றுவிட்டது.

மதவாதிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் ஜோதிடம் பரப்பப்பட்டது. அவர்கள் சொல்வதை நம்ப வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.

தமிழ் ஓவியா said...


சோதிட அறியாமை


சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும் அக்கறையும் வந்திருக்கிறது? அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்து கொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு அதை (சோதிடத்தை) ஏற்றுக் கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப்படைக் கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.

விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து இட்டுக் கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
(அக்கினிச் சிறகுகள் நூலில்)