Search This Blog

24.4.10

பார்ப்பனர்களுக்கு முன்புத்தியே கிடையாது


மனுவாதிகள் புதைந்து போய்விடவில்லை!


‘‘Tale of Two Chief Justices’’ என்ற தலைப்பில் கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான திருவாளர் எஸ். குருமூர்த்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (14.4.2010) கட்டுரை ஒன்றினைத் தீட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வயது மோசடி செய்ததன் காரணமாக, பதவி விலகி ஓடிய திருவாளர் எஸ். இராமச்சந்திர அய்யரையும், கருநாடக மாநில தலைமை நீதிபதி பி.டி. தினகரன் அவர்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களுக்கு முன்புத்தியே கிடையாது; ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிச் சுமக்கும் தன்மையர்கள் என்பதற்கு இது ஒன்று போதும்.

அவர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்லர் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதையும் இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளலாம். ஜஸ்டிஸ் எஸ். இராமச்சந்திர அய்யர்வாளின் பிரச்சினைதான் என்ன? இவருக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். தம்பிக்கு சஷ்டியப்தபூர்த்தி நடந்தது. ஆனால் அவரின் அண்ணனான ஜஸ்டிஸ் ராமச்சந்திர அய்யர் பதவி ஓய்வு பெறாமல் பதவியில் நீடிப்பது எப்படி என்பதுதான் பிரச்சினைக்குக் காரணம்.

இதுகுறித்து அப்பொழுதே விடுதலையில் (20.6.1964) பிரதம நீதிபதியின் வயது மர்மம் எனும் தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கித் தலையங்கமாகவே வெளிவந்திருக்கிறது.

தம்பியின் கல்வி சம்பந்தப்பட்ட பதிவேட்டில் பிறந்த நாள் 21.1.1904 என்று இருக்கிறது. ஆனால் அண்ணனாகிய நீதிபதி இராமச்சந்திர அய்யரின் பிறந்த நாளோ 1.10.1904.

தம்பி முதல் மாதத்தில் பிறந்திருக்கிறார் அண்ணனோ ஒன்பது மாதம் கழித்து அக்டோபர் மாதத்தில் பிறந்திருக்கிறார். (பார்ப்பனர்களின் இந்தப் பித்தலாட்டத்தைக் கண்டு வாயால் சிரிக்க முடியுமா?)

இந்திய அரசின் டில்லி தலைமைச் செயலகத்தில் நீதிபதியின் அண்ணன் பெரும் பொறுப்பில் இருக்கிறாராம். அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தித்-தான் இந்தப் பித்தலாட்டம்.

நீதிபதி இராமச்சந்திர அய்யரின் வயது மோசடி விவகாரத்தை சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (19.4.1964) தந்தை பெரியார் விலா வாரியாக எடுத்துக்காட்டி பார்ப்பனீயப் பித்தலாட்டத்தில் விலா எலும்பை முறித்துக் காட்டினார்.

நியாயமாக தலைமை நீதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர் செய்த இந்த மோசடிமீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் தள்ளியிருக்க வேண்டும். ஓய்வு வயதைத் தாண்டி பணியாற்றிய கால கட்டத்தில் பெறப்பட்ட சம்பளத்தையும் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? சத்தம் போடாமல் அந்தப் பார்ப்பன நீதிபதி விடுப்பில் சென்று விட்டார். அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணனும் பார்ப்பனர்; காதும் காதும் வைத்தாற்போல கதையை முடித்துக் கொண்டனர். ஒன்றுமே நடக்காதது போல பார்ப்பன ஊடகங்கள் பார்த்துக் கொண்டன. இதுபோன்ற குற்றத்தினை பார்ப்பனர் அல்லாத பிரதம நீதிபதியான திரு. ராஜமன்னார் அவர்கள் மீதோ, அல்லது ஓய்வு பெற்றுள்ள மற்ற தமிழர் நீதிபதிகளான சோமசுந்தரம், கணபதியா பிள்ளை போன்றவர்கள் மீதோ அவர்களது பதவிக் காலத்தில் வந்திருக்குமாயின் இந்நேரம் அக்கிரகார ஏட்டினர் இதை அகில உலகத்திற்கும் தெரியும் வண்ணம் தம்பட்டம் அடித்திருக்க மாட்டார்களா? கூப்பாடு போட்டிருக்க மாட்டார்களா? என்று அன்று விடுதலை (20.4.1964) விவேக மிக்க வினாவை எழுப்பியதுண்டு.

உண்மைகள் இவ்வாறு இருக்க திருவாளர் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிலே கொஞ்சம்கூட வெட்கமின்றி அறிவு நாணயமின்றி பூணூல் பாசத்துடிப்புடன் என்ன எழுதுகிறார்?

20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்தில் பிறப்புச் சான்றுகள் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லையாம் அதனால்தான் இந்தத் தவறு நேர்ந்து விட்டதாகப் பசப்புகிறார். உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்ட நிலையில், பதிவாளர் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி இராச்சந்திர அய்யருக்கு முறைப்படி தெரிவித்த அடுத்த சில விநாடியே பதவி விலகி விட்டாராம். ஆகா, இவரைப் போன்ற உத்தமர் யார் இருக்க முடியும் என்று சீராட்டுகிறார்.

காலந் தாழ்ந்தால் அய்யர் வாளின் கந்தாயம் மூக்கைத் துளைக்க நாற்றம் எடுத்து விடுமே பிரச்சினை பெரிதாக வெடித்து விடுமே என்பதால்தான் உடனடியாக ஓடினாரே தவிர வேறு அறிவு நாணயத்தால் அல்ல.

பார்ப்பனர்கள் செய்யும் மோசடியைக்கூட திசை திருப்பி பெருமைக்குரியதாக உருமாற்றிக் காட்ட முடியும் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒன்று போதாதா!

ஆகா! எவ்வளவு அருமையாகக் கொலை செய்திருக்கிறான் பார்த்தீர்களா? அடடே, எவ்வளவு கில்லாடித்தனமாக ஜேப்படி செய்திருக்கிறான் என்பதைக் கவனித்தீர்களா? எத்தனை உளவுத்துறை, காவல்துறைக் கண்களில் எல்லாம் மண் தூவிவிட்டு எத்தனைக் கோடிரூபாய் கள்ள நோட்டை விநியோகித்திருக்கிறார்கள் இது இவர்களைத் தவிர வேறு யாரால் சாதிக்க முடியும் என்று சம்பந்தப்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால் இவர்கள் எழுத மாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா?

வேலியே பயிரை மேயும் கதையாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய ஒருவரே ஆவணங்களில் வயது மாற்றி அரசுப் பணத்தையும் சம்பளமாகப் பெற்று, அதிகாரத்தைத் துய்த்து இருக்கிறார் என்ற போது எவ்வளவு ஆவேசமாக பேனாவைத் தூக்கிச் சுழற்றியிருக்க வேண்டும்?

கருநாடக மாநில தலைமை நீதிபதி பாவம் பஞ்சமர் தானே அவரை எப்படி வேண்டுமானாலும் கொச்சைப்படுத்தலாம்!

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒருவர் பார்ப்பனராகவும், இன்னொருவர் பஞ்சமராகவும் இருந்தால், அந்தக் குற்றத்திற்குக்கூட வருணாசிரம வர்ணம் தீட்டும் மனுவாதிகள் மண்ணுக்குள் புதைந்துபோய் விடவில்லை; இதோ குருமூர்த்திகள் சோ ராமசாமிகள் வடிவத்தில் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள் பாழாய்ப் போன இந்தத் தமிழர்கள் என்றுதான் இதை உணர்ந்து தொலைப்பார்களோ!

-----------------------மின்சாரம் அவர்கள் "விடுதலை” 24-4-2010 இல் எழுதிய கட்டுரை

0 comments: