Search This Blog

24.1.12

சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக! -பெரியார்


சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!

இறுதியாக தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப்படவே இல்லை. இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத்தையும் உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.

எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது.

மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியேகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான். அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட் டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.

அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்? நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.

1925லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும். சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன். சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

--------------10.7.1965 அன்று முதுகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை -”விடுதலை” 7.8.1965.

2 comments:

தமிழ் ஓவியா said...

"மாட்டுக்கறி தின்னும் புலையா - உனக்கு
மார்கழித் திருநாளா?'' - என்ற கேள்வியால்தான் அன்று நந்தன் முகத்தில் அறைந்தனர். இன்றும் தொடர்கிறது நந்தன் கதை.

உண்ணும் உணவு, செய்யும் தொழில் எல்லா வற்றுடனும் சாதி முடிச்சைச் சலிக்காமல் போட்டது, இந்துத்வாவின் வருண சமூகம். உண்ணும் உணவில் ஒருவருக்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதும், உண்ணும் உணவைக் கொண்டு ஒருவரின் சாதி நிர்ண யிக்கப்பட்டதும், உலகிலேயே இங்கு மட்டும்தான்.

brahmins_321ரத்தக்கண்ணீர் படத்தில் ராதா சொல்வார் - இங்கதான்டா சாப்பிடறதுல கூட ரெண்டு கட்சி வச்சிருக்கான் - என்று. அது கட்சியன்று, சாதி. இரண்டல்ல இரண்டாயிரம். பார்ப்பனர்கள் புலால் உண்ணாதவர்களாம். அதனால் உயர்ந்தவர்களாம். அவர்களைப் பார்த்து சைவப் பிள்ளை, சைவச் செட்டியார், சைவ முதலியார் என ஒரு வரிசை. பெரியார் சொல்வார், "இவனுங்க எல்லாம் ஒன்றரைப் பார்ப்பானுக்குச் சமம்'' வரலாற்றைப் புரட்டினால், புலால் உண்ணும் பழக்கமே எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தது என்பது புரியும். யாகம் நடத்தி, அந்த யாகத்தீயில் மாடுகளையும், குதிரைகளையும் வெட்டிப்போட்டு, நெய் வழிய வழிய புலால் உண்ட கூட்டம் எது என்பதைப் "புனித வேதங்கள்' புகலும்.

"ரிக்வேதகால ஆரியர்கள்' என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், "அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரி´கள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்'' என்று எழுதியுள்ளார்.

"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' என்கிறது பிரகதாரண்ய (6-4-18) உபநிடதம்.

அன்று வாழ்ந்த ஜீவகாருண்ய சீலர் புத்தர் மட்டுமே. "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என உரைத்தவர் வள்ளுவர் மட்டுமே. மற்ற அனைவரும் மாட்டுக்கறி தின்ற மகானுபாவர்கள் தாம்!

தமிழ் ஓவியா said...

அவர்கள் தின்ற போதெல்லாம், மாட்டுக்கறி என்பது மாமுனிவர்களின் உணவாய் இருந்தது. அதனையே நாம் தின்னத் தொடங்கிய பின், அது அருவெறுக் கத்தக்க உணவாகிவிட்டது. கொல்லாமை அறம் கூறி அன்று பெளத்தமும், சமணமும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதை அறிந்த ஆதி சங்கரர், அதனைத் தன் கொள்கையாக வரித்துக் கொள்ள முயன்றார்.

பெளத்தத்தின் பல சிறப்புக் கூறுகளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, தன் மதமே அஹிம்சை போற்றும் அரிய மதம் என ஆரவாரம் செய்தார். அதனால்தான்அவரைப் "பிரசன்ன பெளத்தர்' (பெளத்தத்தின் பின்னால் மறைந்து நிற்பவர்) என்று இன்றும் கூறுகின்றனர். இப்படித்தான் பார்ப்பனர்கள் "சைவர்களாக' ஆயினர். அவர்கள் சைவர்கள் ஆனவுடன், அசைவர்கள் ஈனப்பிறவிகள் என்று அறிவிக் கப்பட்டனர்.

அசைவம் என்று சொல் லப்படும் புலால் உண்ணும் பழக்கத் திலும் பல நிலைகள் கற்பிக்கப் பட்டன. ஆடு, மீன், கோழி தின்பவர்கள் சற்று உயர்தரம். "கோமாதா' என்று போற்றப்படும் மாட்டின் கறியை உண்பவர்கள் புலையர்கள், கீழானவர்கள். அவர்களைத் தீண்டவே கூடாது. பன்றிக்கறி தின்பவர்களோ அவரினும் கீழான வர்கள். பூனைக்கறி, நரிக்கறி தின்பவர் கள் எல்லோரும் இழிவானவர்கள்.

எழுதப்படாத சட்டமாக இன்றுவரை நம் சமூகத்தில் இதுதானே நிலவுகிறது? உழைக்கும் மக்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்பதற்கான காரணம் என்ன? குறைந்த செலவில், நிறைந்த புரதம் அதில் உள்ளது என்பதுதான். வெயிலில் போராடி, வியர்வை சிந்தி உழைப்போர் தங்களுக்குத் தேவையான புரதச் சத்தைப் பெறுவதற்கு அந்த உணவை நாடுகின்றனர். அதிலென்ன குற்றம்? அதிலென்ன அருவெறுப்பு? கோழி, கண்டதையும் தின்கிறது. மீனோ அழுக்கையே ஆகாரமாகக் கொள்கிறது. அவற்றை எல்லாம் தின்னலாமாம். அது நாகரிகமாம். ஆனால், புல், வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு ஆகியனவற்றை மட்டும் உண்டு வளரும் பசு மாட்டின் கறி அருவெறுப்பாம். எந்த ஊர் நியாயம் இது! அவாளின் அந்த ஊர் நியாயம்தான்...வேறென்ன?

மேலை நாடுகளில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு மேல், மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்தான் உண்கிறார்கள். அமெரிக்காவில் வான்கோழிக் கறிதான் சிறப்பு விருந்து. தென் அமெரிக்காவில் குதிரைக் கறியும், அரபு நாடுகளில் ஒட்டகக் கறியும் சாதாரணமானவை. சீனாவில் தவளை, பாம்பு எல்லாம் உணவு வகைகளே. கொரிய நாட்டின் தலைநகரில் (சீயோல்) நாய்க்கறிக்குத் தனி வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் உள்ளது. அவரவரின் தேவை, சுவையைப் பொறுத்ததாகவும், அந்தந்த நாட்டுச் சூழல், பருவநிலைகளைப் பொறுத்த தாகவும் உணவுப் பழக்கம் அமைகின் றது. ஆனால் உணவை வைத்து உயர்வு தாழ்வு எங்கும் கற்பிக்கப்படுவதில்லை, இந்தியாவைத் தவிர.

அதனால்தான், ஜெயலலிதா மாட்டுக்கறி தின்னும் பழக்கமுடையவர் என்று நக்கீரன் எழுதியவுடன், அவர்களின் அலுவலகத்தைக் கல்லால் அடிக்கின்றனர். எங்கள் தலைவியை எப்படி இழிவுபடுத் தலாம் என்கின்றனர்.

இதிலே இழிவு எங்கிருந்து வந்தது. ஒரு வேளை அவருக்கு அந்தப் பழக்கம் இல்லையயன்றால், நக்கீரன் தவறான செய்தி வெளியிட்டதாய்ச் சொல்லி, அதற்குரிய சட்ட நடவடிக்கையை எடுத்துக்கொள்ளட்டும். ஜெயலலி தாவை நக்கீரன் இழிவுபடுத்தி விட்ட தாக ஏன் சொல்ல வேண்டும்?

அப்படிச் சொல்வதன் மூலம், மாட்டுக்கறி தின்பது இழிவு என்று தானே ஆகிறது. அப்படியானால் மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்பதுதானே பொருள். அப்படிச் சொல்வது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் என்பது ஒருபுறமிருக்க, மாட்டுக்கறி தின்னும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை இழிவானவர்கள் என்று சொல்ல எவனுக்கும் உரிமை யில்லை என்பதை உணர வேண்டும்.

மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்றால், அந்த இழிந்தவர்களின் வாக்குகள் இனி எங்களுக்கு வேண்டாம் என்று அவர்கள் முதலில் அறிவிக்கட்டும். அதன்பின், நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கலாம். அப்படித் தாக்குகிறவர்களும், மாட்டுக் கறி சாப்பிடாத "அவாளாகவே' மட்டும் இருக்க வேண்டும் !
---------சுப.வீரபாண்டியன் கருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி16_2012