Search This Blog

28.1.12

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? இதோ மனுவின் கொள்ளுபேரர்கள்!

இதோ மனுவின் கொள்ளு, கொள்ளுப் பேரர்கள்!


உடையும் இந்தியா ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும் தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.

அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.

அதில் குறிப்பாக திருக்குறளை மனுதர்மத்தின் பதிப்பாகக் காட்ட முயலும் அயோக்கியத்தனம் _ புராணம் என்னும் புதைச் சேற்றில் திணிக்க முயலும் திரிநூல்தனம் - கண்டிப்பாக தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டிய தாகும்.

ஒரு தமிழனிடம் எந்த இலக்கியத்தை 2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஒன்றாகக் கூறுவாய் என்று கேட்டால் உடனடியாகத் தயக்கமின்றி வரும் பதில் திருக்குறள் என்பதாக இருக்கும். குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு ஏதோ தமிழரின் தனித்தன்மை கொண்ட ஒழுக்கவியல் நூலாகக் கருதப்பட்டதும் போல் தனது மிஷனரி செயல் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்

இந்த வரிகளில் உள்ள பார்ப்பனர்களுக்கே உரித்தான விஷமத்தனத்தைக் காணத் தவறக் கூடாது.

ஒரு தமிழனிடம் கேட்டால்.. என்று தொடக்கத்திலேயே ஒரு இடக்கு முடக்கு! அப்படி என்றால் இவர்கள் யார்?... வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்.

அடுத்தது.. ஏதோ தமிழரின் தனித் தன்மை கொண்ட ஒழுக்க நூலாகக் கருதப்பட்டதும்! என்று தெனாவெட் டான எழுத்துகள் தமிழர்களின் ஒழுக்க வியல் நூலாகக் கருதப்பட்டதாம் இதன் பொருள் என்ன? தமிழர்களின் ஒழுக்கவியல் நூலாக இவர்கள் கருதவில்லை என்பது இந்த வரிக்குள் இருக்கும் பூனைப் பதுங்கல்!

மூன்றாவதாக குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாம்...


இங்கேதான் கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்து மியாவ் மியாவ் என்று கத்துகிறது.

ஹிந்துப் பண்பாட்டிலிருந்து திருக்குறள் வெட்டி எடுக்கப்பட்டதே தவிர, தமிழர்களின் ஒழுக்கவியலாகக் கருத முடியாது என்று சொல்ல வருவது - அவர்களுக்கே உரித்தான தமிழ், தமிழன் என்று சொன்னால் அவற்றின் மீது விழுந்து கடிக்கும் துவேஷ நச்சுப் பற்கள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் கோட்பாடு எங்கே? அந்தப் பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் - அத்தியாயம் 1 சுலோகம் 87).

இப்படி பிறப்பின் அடிப்படையில் பேதத்தைக் கற்பித்து அவர்களுக்குத் தனித்தனியாக கருமங்களையும் _ கடவுளே உண்டாக்கினார் என்கிற மனுதர்மம் எங்கே?

வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற
நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி?

என்று சாட்டை கொண்டு முகத்தில் சாத்தினார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. அதற்குப் பிறகாவது பார்ப் பனப் பன்னாடைகளுக்கு நற்புத்தி வரவில்லையே!

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு 10.5.1936) என்றாரே - தந்தை பெரியார் - ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும்.

பல இந்திய வாழ்வியல் நூல்களில் உதாரணமாக அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் (திரிவர்க்க) அதாவது தர்ம (அறம்) அர்த்த (பொருள்) காம (இன்பம்) ஒத்திசைவு இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதை பொருளாதார நிபுணர் ரத்தன்லால் போஸ் சுட்டிக் காட்டுகிறார். நீதியரசர் ராமா ஜோய்ஸ் பிரசித்தி பெற்ற ஹிந்து ஸ்மிருதியான மனுதர்ம சாஸ்திரத்தில் இதே திரி வர்க்கப் பாதையே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆக திருவள்ளுவர் மூன்று புருஷார்த்தங்களை மட்டும் குறிப்பிடுவதில் தனித் தன்மை ஏதுமில்லை. அவர் பாரதம் அளாவிய ஒரு பார்வையையே இதன் மூலம் முன் வைக்கிறார் என்று எழுதுகிறார்கள்.

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று சொல்லப்படுவது அவாளின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட் டவையாம். இது உண்மைக்கு மாறானது என்பது ஒருபுறம் இருக்கட்டும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு உண்மைக்கு மாறாகப் புரட்டுத்தனமாக வக்காலத்து வாங்குவது மூலம் இவர்கள் யார்? இவர்களின் நிறம் என்ன என்பது எளிதில் விளங்கும்.

பரிமேலழகர் என்ற பார்ப்பனர் முதல் அவரின் பாதந்தாங்கிய மனிதர்கள் வரை குறளின்மீது ஆரிய முத்திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி கொண்டு திரிகின்றனர்.

திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம் என்று கூறுகிறார் என்றால் பரிமேலழகருக்கு எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும் - அது பச்சையான பாசிசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

மக்கள் பேறு என்பதைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியுள்ளார். பரிமேலழகருக்கு முன் உரை எழுதிய மணக்குடவர்கூட மக்கள் பேறு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.

பரிமேலழகர் என்னும் மனுவின் மகாபுத்திரரோ அதனைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியமைத்ததற்குக் காரணம் _ அவரின் மனுதர்மப் புத்தி.

தந்தையை புத் என்னும் நரகத்திற் சாராமல் காக்கின்றபடியால் மைந்தனுக்கு புத்திரன் என்ற பெயராயிற்று இது பிரமனாலேயே கூறப்பட்டது என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 9 - சுலோகம் 138).

இதற்காகத்தான் அதிகாரத்தில் தலைப்பையே மாற்றிய தில்லுமுல்லுத் தனத்தை செய்துள்ளார்.

கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களைப் பாயிரத்தில் அடக்கிக் காட்டுகிறார் பரிமேலழகர்; பாயிரத்தை வள்ளுவரே இயற்றவில்லை என்பது ஆய்வறிஞர் வ.உ.சி. அவர்களின் கருத்தாகும்.

இன்னும் சொல்லப் போனால் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லோ கோவில் என்ற சொல்லோ கிடையாது.

சமயக்கணக்கா மதிவழி கூறாது
உலகியல் கூறி பொருளிது வென்ற
வள்ளுவன் என்கிறது கல்லாடம்

திருவள்ளுவர் யார் தெரியுமா? பகவன் என்ற பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று கதை கட்டுவதும் பார்ப்பனரே! ஏன் என்றால் அவாளின் அகராதிப்படி அறிவாளி பார்ப்பன விந்துக்குத் தவிர வேறு யாருக்கும் பிறக்க முடியாது என்பதாகும்.

இது தொடர்பாக பார்ப்பனப் பண்டிதருக்கு நேருக்கு நேர் சூடு கொடுத்தவர் அயோத்திதாசப்பண்டிதர் பெருமகனார் ஆவார்.

1892இல் சென்னையில் மகாஜன சபை கூட்டம் திரு. சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்கு பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார் சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார். நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் பறையர்கள், என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந் திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

திரு.சிவ.நாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு.பி.அரங்கைய நாயுடும், திரு.எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதரை அமைதிபடுத்தினார்கள்.

திரு.சிவ நாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். திரு.சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத் திலிருந்து நழுவி விட்டார்.

1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும் பினர்ர்.

அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப் பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென்றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத் தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.

ஏன் இப்படி பிராமணர்கள் கருகிறார்கள் என்று கந்த சாமியை அழைத்து எல்லீஸ்துரை கேட்க எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.

எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.

(ஆதாரம்: குறளும் அயோத்திசாசரும் என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி மார்ச் 2000)

இப்படியாக தொன்றுதொட்டுப் பார்ப்பனர்களுக்கு தமிழையும், திருக்குறளையும் திட்டுவதில் இழிவுப் படுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்!

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் திருப்பாவையில் இடம் பெற்ற தீக்குறளைச் சென்றோதோம் என்னும் வரிக்கு எப்படி பொருள் சொன்னார்?

தீய திருக்குறளை படிக்க மாட்டோம் என்று வீம்புக்கு வம்பு இழுத்துக் கூறினார்.

குறளை என்றால் குள்ளம், கோள் சொல்லல், குற்றம் என்று பொருள் (உ.வே. சாமிநாதய்யர் முன்னுரையுடன் கூடிய மதுரைத் தமிழ்ப் பேரகராதி).

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு குள்ள உணர்வும், கோள் சொல்லும் புத்தியும், குற்றவாளியாகவும் இருந்திருந்தால் ஆண்டாளின் பாடல் வரிக்கு இப்படிப் பாட பேதம் செய்வார்?

இப்படித்தான் கொலைக் குற்றத் துக்காக நீதிக் கூண்டில் நின்று வேலூர் சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி உளறித் தொலைத்து நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்.

திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை அதிலும் முதல் பத்து குறட் பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட் பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று காஞ்சிமடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைச் கூறயிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளை பற்றிப் புறங்கூறுவதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது. (திருக்குறள் முனுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் - தீர்மானம் 12.4.1982).

இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்த பராசுர அய்யங்காரின் தந்தையாரான கேசவ அய்யங்கார் என்பாரும் ஸ்ரீவள்ளுவர் உள்ளம் என்ற நூலில் சமஸ்கிருதத்திலிருந்து தொகுக்கப்பட்டதுதான் திருக்குறள் என்று எழுதியதற்காக _ சென்னைப் பெரியார் திடலில் அன்றைய பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்கள் சிறப்பான மறுப்புரையை ஆதாரக் குவியல்களுடன் தந்தார் (4.3.1986 மற்றும் 5.3.1986).

பெரிய வாச்சான் என்பவர் ஒரு வைணவ அய்யங்கார் பார்ப்பனர்; அவர் பெரிய திருமடல் கண்ணிக்கு உரை எழுதினார்.
தென்னுரையில் கேட்டதுண்டு என்ற வரிக்கு அவர் எழுதிய உரை என்ன?

மிலேச்ச சாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு என்று எழுதவில்லையா?

பார்ப்பனர் தமிழின் பால், தமிழன்பால் கொண்டிருக்கும் இந்தப் பிறவித் துவேஷ நஞ்சு என்பது அவர் கள் கூறும் ஆலகால விஷத்தைவிடக் கொடுமையானது.

உண்மையைச் சொல்லப் போனால் ஆரிய பண்பாட்டை, தர்மத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக் குறள் என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.

வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் ஆழ்ந்து கிடந்த காலம்;

குறள் தோன்ற வேண் டிய அவசியம்கூட ஆரிய ஆதிக்கம் தோன்றி மக்களை அழித்து நமது கலாச்சாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் வள்ளுவர் குறளை எழுதினார் என்கிறார்.

தந்தை பெரியார் (ஆதாரம்: திருக்குறளும் பெரியாரும் பக்கம் 46-47).

மனு மாண்டு விட்டார்; ஆனால் அவரின் கொள்ளுக் கொள்ளுப் பேரர்கள் இன்னும் பூணூலோடு திரிந்து கொண்டு இருக்கிறார்கள் - எச்சரிக்கை!

--------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 28-1-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

5 comments:

தமிழ் ஓவியா said...

அப்படி என்ன திடீர் குபீர் போலீஸ் கெடுபிடி?


கேள்வி: இயல்பாக சுதந்திரமாக நடக்க வேண்டிய துக்ளக் ஆண்டு விழா, சமீப காலமாக போலீஸ் பாதுகாப்பு என்ற பெயரில், பயங்கரக் கெடுபிடிகளோடு நடப்பது ஆரோக்கியமான விஷயமா?

பதில்: எனக்கேகூட இதுபற்றி ஒரு மன நெருடல் ஏற்பட்டிருக்கிறது. இனி இந்தமாதிரி நிலை தோன்று வதைத் தவிர்ப்பது பற்றி யோசிக்கிறேன். - (துக்ளக் 1.2.2012 - பக்கம் 24)

சோ என்ன முதல் அமைச்சரா? அல்லது குறைந்த பட்சம் துணை அமைச்சரா? போலீஸ் கெடுபிடிக்கு என்ன காரணம்? இந்த ஆண்டு மட்டும் ஏனிந்த குபீர் அலட்டல்? திடீர் போலீஸ் குவிப்பு? என்னதான் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, நான் ஒன்றும் ஆலோசகர் இல்லை. நான் சொல்லி யார் கேட்பா... அப்படி கேட்டவர் யார் உருப்பட்டு இருக்கா... இதெல்லாம் சோவின் வழக்கமான பாணிதான். துக்ளக் ஆண்டு விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்தவருக்கு பதவி லாட்டரி அடிக்குது என்றால் சாதாரணமா? இவ்வளவு செல்வாக்கு இருக்கும்போது, இது சிவன் கழுத்துப் பாம்பு என்று போலீசுக்குத் தெரியாதா, என்ன?
--"விடுதலை” 28-1-2012

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் நீதிமன்றத்தின் ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறதா?


செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி


தமி ழகத்திலே நீதிமன்றங்கள் ஆட்சி நடத்துகின்ற னவா? அல்லது மக்க ளாலே தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ஆட்சி நடைபெறுகிறதா? என்று சந்தேகம் கொண்டு பார்க் கும் அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சியின் நிலை உள் ளது. அ.தி.மு.க. ஆட்சி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத் தார்.

தஞ்சை வல்லத்தில் நேற்று (27.1.2012) காலை செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்த பேட்டி வருமாறு:

அடிக்கடி மாற்றுவது சரியல்ல

தமிழர் தலைவர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அய்ந்தாண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதே போல ஆட்சிகள் நீடிக்க வேண்டும் என்ற தத்துவமே ஜனநாயகத்தில் தொடர் நிகழ்வுகள் தொடர் செயல் பாடுகள் இருக்க வேண்டும் என்ப தற்காகத்தான். அந்த வகையிலே அமைச்சர்களாக வரக் கூடியவர் களை மாற்றுவது அவர்களுடைய இலாக்காக்களை மாற்றுவது என்பது முதலமைச்சருடைய தனிப் பட்ட உரிமை என்பது உண்மையாக இருந்தாலும்கூட, அமைச்சர் களுக்குப் போதிய கால அவகாச வாய்ப்புகளைக் கொடுத்தால் தான் அவர்கள் அத்துறைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

அமைச்சர்கள் மட்டுமல்ல - அந்தந்த துறையிலே இருக்கக் கூடிய அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதினுடைய விளைவு என்ன ஆகும் என்று சொன்னால் ஒரு நிலைத்த வளர்ச்சிக்கு அது இடையூறாக ஆகும். ஒரு வாரம் ஒரு பள்ளிக் கல்வி அமைச்சர் இருந்தார். அடுத்த வாரம் அவர் இல்லை யென்றால் யார் இப்பொழுது அமைச்சர் என்று மக்களுக்கும் தெரி யாது. ஏன் பத்திரிகைகாரர்களுக் கும் தெரியாது.

செவிலியர்களை தரதரவென இழுத்துச் செல்வதா?

செவிலியர்கள், தங்கள் எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமானதாகும். ஏனென்றால் படித்திருக்கிறார்கள். பாதிப் பேர் பணி மூப்பு அடிப்படையிலே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையிலே மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண் டிய செய்தி என்னவென்று சொன் னால் எஞ்சியவர்களுக்கும் அந்த வாய்ப்புகளை கொடுத்து இரண் டாண்டுகளுக்குப் பிறகு புதிய முறைகள் வரலாம் என்று சொன் னால் அந்த பிள்ளைகள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப் பார்கள். அவர்கள் தங்களுடைய குறைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு போவதற்காக பட்டினிப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது காவல் துறையினர் தரதரவென பெண்களை இழுத்துக் கொண்டு போவது - கைது செய்து கொண்டு செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் மிகக் கொடூரமாக இருக்கின்றன. எனவே ஆட்சியினர் இந்த முறைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தெளிவாகவே எந்த பிரச்சினையையும் உரியவர்களை அழைத்துப் பேசினால் சுலபமான தீர்வு காண முடியும். அந்தப் பிரச்சினை சிறு பொறியாக இருக்கும் பொழுதே தீர்க்கப்பட வேண்டும். அது நெருப்பாக மாறுவதற்கு முன்னாலேயே தீர்க்கப்பட வேண்டும்.

அதற்குத்தானே உளவுத்துறை இருக் கிறது. மற்ற துறைகள் இருக்கின்றன. நல்ல ஆட்சி என்பதற்கு அடையாளமே ஒரு பிரச்சினை துவங்கப்படுவதற்கு முன்னா லேயே அந்த பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்குப் பயன்படும்படியாக செய்தல் வேண்டும்.

மோடி அரசு மாடல் அரசா?

அதோடு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். சில காலத்துக்கு முன்பு மோடி அரசுதான் இந்தியாவுக்கே மாடல் அரசாகத் திகழ்கிறது என்று மோடியைப் பற்றி தமிழ்நாட்டில் ஒருவர் தோடி ராகம் பாடினார்.

ஆனால் இன்றைக்கு என்ன சூழல் என்று சொன்னால் நேற்று பத்திரிகையிலே வந்திருக்கிறது.

ஏற்கனவே உயர்நீதிமன்றம் மோடி மீது கடுமையான கண்டனத்தை சுமத்தி யிருக்கிறது.
22 போலி என்கவுண்டர்களை நடத் தியதற்காக உச்சநீதிமன்றம் ஒரு மானிட் டரிங் ஏஜென்சி நடத்தி அதன் மூலமாக விசாரிக்க வேண்டும் என்று சொன்ன திருக்கிறதே இது மிகப்பெரிய வெட்கக் கேடாகும்.

ஒரு ஆட்சி என்பது மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றன, நடத்தப்படு கின்றன என்பதுதான் ஜனநாயகத்திலே மிக முக்கியம்.

அந்த வகையில் குஜராத்திலே எவ் வளவு பெரிய கொடுமைகள் நடந்திருக் கின்றன என்பது தெரியும்.

மக்களைத் தவறான பாதைக்கு

ஆகவே தான் ஊடகங்களுக்கு எங்க ளுடைய வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து உண்மைகளை மக்களுக்குக் கொண்டு வாருங்கள்.

தமிழ் ஓவியா said...

அதற்குப் பதிலாக யாரோ சிலரை சில வண்ணங்கள் தீட்டிக் காட்டலாம் என்று சிலர் நினைத்தால் அதை மக்களுக்குக் காட்டாதீர்கள்!

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டுமே குஜராத் அரசைக் கண்டித் திருக்கின்றன. கண்டனம் தெரிவித்திருக் கின்றன.

அதை ஒரு மாடல் அரசு என்று தமிழ் நாட்டிலே சொல்லக்கூடியவர்கள் இருக் கிறார்கள் என்று சொன்னால் இதைவிட மக்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்குவது வேறு இல்லை.

கேள்வி: தமிழகத்தில் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் தமிழக அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதே!

தமிழர் தலைவர்: நிச்சயமாக அதி லிருந்து பாடம் பெறவேண்டியவர்கள் இனி யாவது பாடம் பெற வேண்டும்.

மக்கள் ஒரு புது ஆட்சிக்கு நல்ல வலி மையைக் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி புதிய திட்டங்களை உரு வாக்கி மேலும், மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். சென்ற ஆட்சி என்ன செய் ததோ அதைவிட நாங்கள் மக்களுக்கு அதிகமாக செய்திருக்கிறோம் என்று காட்டுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அதைவிட்டு விட்டு, அதை எல்லாம் நான் மாற்றுகிறேன் என்று சொல்லுவது சரி யானதல்ல.

நீதிமன்றங்கள் கேட்ட கேள்விகள் மிகவும் கடுமையான கேள்விகள். தமிழ் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின் றது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள். அதுபோல பல முறை கேட்டுள்ளார்கள்.

ஆட்சி நடத்துவது யார்?

13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்விழந்தவர்களாக ஆக்கப்படக் கூடிய மிகப்பெரிய பரிதாபம். நீதிமன்றங்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக் கின்றன.

இப்பொழுது மிகப்பெரிய கேள்வி தமிழகத்தில் நீதிமன்றங்கள் ஆட்சி செலுத்துகின்றனவா? அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்று சந்தேகப் படக்கூடிய அளவுக்கு பிரச்சினைகள் வந்திருக்கின்றன.

இதற்கு முதலமைச்சர் அவர்கள் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு எஞ்சிய காலத்தில் மக்கள் கொடுத்த வாக்குறுதியை மக்கள் கொடுத்த தீர்ப்பை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி அளித்தார்.
--”விடுதலை” 28-1-2012

தமிழ் ஓவியா said...

இவன்தான் அனுமான்


கேள்வி: பறவையான கிளிகூடப் பேசுகிறது. நமக்கு நெருக்கமான சிம்பன்சி போன்ற குரங்குகளை ஏன் பேச வைக்க முடியவில்லை?

பதில்: உண்மையில் குரங்கால் பேச முடியும். ஆனால், அந்தத் திறமையை அது படுரகசியமாக வைத்துக் கொண்டு இருக்கிறது. கடைசி யாகப் பேசியவர் அனுமான் மட்டும்தான் - உடனே அவ ருக்கு முக்கிய வேலை தரப் பட்டது என்பது உங்களுக்கே தெரியும். - ஆனந்தவிகடன் (25.1.2012) கேள்வி பதில்

இது ஓர் அறிவுப் பூர்வமான பதிலா? இராமாயணம் என்பது ஒரு கற்பனைக் கதை. கற்பனைக் கதையில் எறும்பைக்கூடப் பேச விட முடியும்; கழுதையைக் கூடப் பாடச் சொல்ல முடியும்.

கேட்கும் கேள்விக்கு நாணயமான பதில் சொல்ல முடியா விட்டால் இப்படி சாமர்த்தியமாகத் திசை திருப்புவது ஒரு வகையான தந்திரம். ஆனந்தவிகடனில் பதில் எழுதுபவருக்குத் தந்திரம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

அனுமன் பாத்திரம் தம் இன மக்களைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்குப் பக்திப் போதை ஏறியது! என்பதைத்தான் உணர்த்தும்.

இராமனுக்காக இலங்கை சென்று, அந்தத் தீவை எரித்தவன், சீதையிடம் தூது சென்றவன் அனுமான் ஆனால் அவனுக்குக் கிடைத்தது என்ன?

வால்மீகி இராமாயணம் (உத்தரகாண்டம்) சமஸ்கிருதத்தி லுள்ளதை பதத்துக்குப் பதம் தமிழ் வசன நடையில் காலஞ்சென்ற ராவ் சாஹேப் பி.எஸ். கிருஷ்ணசாமி அய்யரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதை கீழே அப்படியே ஆதாரமாகத் தருகிறோம். இராமாயணப் பிரியர்கள் படித்துப் பார்ப்பார்களாக.

மேற்கண்ட புத்தகம் பக்கம் 555இல் ராம பட்டாபிஷேக காலத்தில் வெகுமானிக்கப்பட்டவர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. புருஷோத்தமர் (இராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும், நூறு காளை மாடுகளையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார். (பக்கம் 556).

மீண்டும் (இராமர்) பிராமணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங்களையும், மிகவும் விலையுயர்ந்த பொன் ஆபரணங்களையும், வஸ்திரங்களையும் தானம் செய்தார்.

தன்னுடன் இராவணன்மீது நடத்தப்பட்ட போரில் உதவிய சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அங்கதனுக்குத் தங்க வளையம் கொடுத்தார்; அனுமானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் கொடுத்தார்; சீதைக்கு ஒரு முத்தாரத்தை ராமர் கொடுத்தார்.

இலங்கை பக்கமே தலை வைத்துப் படுக்காத, போர்க் களத் தின் பக்கமே தலைகாட்டாத பார்ப்பனர்களுக்கு முப்பது கோடி பவுனாம், லட்சம் குதிரைகளாம், பசுக்களாம், கடைசிவரை எல் லாக் களத்திலும் துணை நின்ற அனுமானுக்கு இரண்டு வஸ்திரங்களாம்.

அண்ணனைக் காட்டிக் கொடுத்ததால்தானே விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும், பதவியும் கிட்ட முடியும்

காட்டிக் கொடுத்தவர்களுக்குக் குஞ்சம் கட்டி விடுவது பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுள் ஒன்றே!

- மயிலாடன் 28-1-2012

தமிழ் ஓவியா said...

வால் + இ = வாலி!


ஆனந்த விகடனிலிருந்து துக்ளக்குக்கு வாலி கிளை தாவியுள்ளது. ஆம். கவிஞர் வாலியைத்தான் சொல்லுகிறோம். வாலி என்றால் தாவத்தானே செய்யும்? தாவிய இடமும் அவா ளின்கிளைதானே. கிளை என்றால் உறவு என்பது கவிஞர் வாலிக்குத் தெரியாதா என்ன?

வித்வான்சார்! (இலட்சுமணன்) மந்திரி பிறந்த நாளையே மகத் தான நாளாகக் கொண் டாடுகிற இந்த மண்ணுல, கண்ணன் பிறந்த அஷ்ட மியையும், ராமன் பிறந்த நவமியையும் நல்ல நாள் கள் இல்லேன்னு ஒதுக் கிறது அபத்தமாயிருக்கே! என்று வாலி கேட்ட வுடன். . .
இருங்கோ வெத் தலெ துப்பிட்டு வந்து சொல்றேன் என்று வெளியே வித்வான் போக . . .
(துக்ளக் 1-2-2012 பக்கம் 15)

வாலி சார் தொக்கி நிக்கிறதே . . . பதிலைக் காணோமே!

வெத்தலெ துப்பப் போன திருவாளர் வித்து வான் இலட்சுமணன் திரும்பியே வரலியா?

அப்படியே தொக்கி நிற்கிறதே - கட்டுரையின் கடைசி வரையிலும் பதி லைக் காணோமே!
என்ன விசேஷம்? என்று கேட்கத் தோன்று கிறதா?

இந்த ரெண்டு கடவுள் களும் செத்துப் போய் விடுகின்றனவே. அதற் காகத்தான் அப்படி என்று சொல்லப் போறேளா?

அப்படியென்றால் செத்துப் போவது எப்படி கடவுள் ஆகும் என்ற கேள்வியைக் கேட்டுத் தொலைப்பாளே? (மென்னு முழங்குகிறார் வாலி)

அகராதியைப் பார்த்து விட்டு சொன்னாலும் சரி, சங்கராச்சாரியாரைக் கேட்டுட்டு வந்தாலும் சரி . . .

வாலி சார், நீங்கள் கேட்ட கேள்வி சரியான கேள்வி - மென்னிப்பிடி கேள்வி.

நீங்கள் கேட்ட கேள் வியை 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சுதந்திரம் வாங்கச்சே உங்களை விட சாஸ்தி ரத்தைக் கரைத்துக் குடித்த உங்களவாள் அப்ஜக்சன் பண்ணினா!
அஷ்டமி, நவமி இடிக் கிறதே என்றனர். நேரு பகுத்தறிவுவாதிதான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலே. ஆனாலும் அவராலேயே திமிர முடியல . . .

கடைசிக் கடைசியா ஒரு சமாதானம். நம்ம பஞ்சாங்கப்படி காலை 5 மணிக்கு தானே நாளே பொறக்குது. ஆகஸ்டு 15இல் இரவு 12 மணிக்குச் சுதந்திரம் வாங்குறதாலே நம்பக் கணக்கில் முதல் நாள் ஆகிவிடுகிறது - அதனாலே தோஷ மில்லை என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம் . . . நம்மளவா சமத்தோ இல்லியோ!

- மயிலாடன் 28-1-2012