tag:blogger.com,1999:blog-1474608369333206681.post735483319081177877..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? இதோ மனுவின் கொள்ளுபேரர்கள்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60249569304344771782012-01-28T20:00:09.002+05:302012-01-28T20:00:09.002+05:30வால் + இ = வாலி!
ஆனந்த விகடனிலிருந்து துக்ளக்கு...வால் + இ = வாலி!<br /><br /><br />ஆனந்த விகடனிலிருந்து துக்ளக்குக்கு வாலி கிளை தாவியுள்ளது. ஆம். கவிஞர் வாலியைத்தான் சொல்லுகிறோம். வாலி என்றால் தாவத்தானே செய்யும்? தாவிய இடமும் அவா ளின்கிளைதானே. கிளை என்றால் உறவு என்பது கவிஞர் வாலிக்குத் தெரியாதா என்ன?<br /><br />வித்வான்சார்! (இலட்சுமணன்) மந்திரி பிறந்த நாளையே மகத் தான நாளாகக் கொண் டாடுகிற இந்த மண்ணுல, கண்ணன் பிறந்த அஷ்ட மியையும், ராமன் பிறந்த நவமியையும் நல்ல நாள் கள் இல்லேன்னு ஒதுக் கிறது அபத்தமாயிருக்கே! என்று வாலி கேட்ட வுடன். . .<br />இருங்கோ வெத் தலெ துப்பிட்டு வந்து சொல்றேன் என்று வெளியே வித்வான் போக . . .<br />(துக்ளக் 1-2-2012 பக்கம் 15)<br /><br />வாலி சார் தொக்கி நிக்கிறதே . . . பதிலைக் காணோமே!<br /><br />வெத்தலெ துப்பப் போன திருவாளர் வித்து வான் இலட்சுமணன் திரும்பியே வரலியா?<br /><br />அப்படியே தொக்கி நிற்கிறதே - கட்டுரையின் கடைசி வரையிலும் பதி லைக் காணோமே!<br />என்ன விசேஷம்? என்று கேட்கத் தோன்று கிறதா?<br /><br />இந்த ரெண்டு கடவுள் களும் செத்துப் போய் விடுகின்றனவே. அதற் காகத்தான் அப்படி என்று சொல்லப் போறேளா?<br /><br />அப்படியென்றால் செத்துப் போவது எப்படி கடவுள் ஆகும் என்ற கேள்வியைக் கேட்டுத் தொலைப்பாளே? (மென்னு முழங்குகிறார் வாலி)<br /><br />அகராதியைப் பார்த்து விட்டு சொன்னாலும் சரி, சங்கராச்சாரியாரைக் கேட்டுட்டு வந்தாலும் சரி . . .<br /><br />வாலி சார், நீங்கள் கேட்ட கேள்வி சரியான கேள்வி - மென்னிப்பிடி கேள்வி.<br /><br />நீங்கள் கேட்ட கேள் வியை 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சுதந்திரம் வாங்கச்சே உங்களை விட சாஸ்தி ரத்தைக் கரைத்துக் குடித்த உங்களவாள் அப்ஜக்சன் பண்ணினா!<br />அஷ்டமி, நவமி இடிக் கிறதே என்றனர். நேரு பகுத்தறிவுவாதிதான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலே. ஆனாலும் அவராலேயே திமிர முடியல . . .<br /><br />கடைசிக் கடைசியா ஒரு சமாதானம். நம்ம பஞ்சாங்கப்படி காலை 5 மணிக்கு தானே நாளே பொறக்குது. ஆகஸ்டு 15இல் இரவு 12 மணிக்குச் சுதந்திரம் வாங்குறதாலே நம்பக் கணக்கில் முதல் நாள் ஆகிவிடுகிறது - அதனாலே தோஷ மில்லை என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம் . . . நம்மளவா சமத்தோ இல்லியோ!<br /><br />- மயிலாடன் 28-1-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88845832459833086332012-01-28T19:57:20.331+05:302012-01-28T19:57:20.331+05:30இவன்தான் அனுமான்
கேள்வி: பறவையான கிளிகூடப் பேசுக...இவன்தான் அனுமான்<br /><br /><br />கேள்வி: பறவையான கிளிகூடப் பேசுகிறது. நமக்கு நெருக்கமான சிம்பன்சி போன்ற குரங்குகளை ஏன் பேச வைக்க முடியவில்லை?<br /><br />பதில்: உண்மையில் குரங்கால் பேச முடியும். ஆனால், அந்தத் திறமையை அது படுரகசியமாக வைத்துக் கொண்டு இருக்கிறது. கடைசி யாகப் பேசியவர் அனுமான் மட்டும்தான் - உடனே அவ ருக்கு முக்கிய வேலை தரப் பட்டது என்பது உங்களுக்கே தெரியும். - ஆனந்தவிகடன் (25.1.2012) கேள்வி பதில்<br /><br />இது ஓர் அறிவுப் பூர்வமான பதிலா? இராமாயணம் என்பது ஒரு கற்பனைக் கதை. கற்பனைக் கதையில் எறும்பைக்கூடப் பேச விட முடியும்; கழுதையைக் கூடப் பாடச் சொல்ல முடியும்.<br /><br />கேட்கும் கேள்விக்கு நாணயமான பதில் சொல்ல முடியா விட்டால் இப்படி சாமர்த்தியமாகத் திசை திருப்புவது ஒரு வகையான தந்திரம். ஆனந்தவிகடனில் பதில் எழுதுபவருக்குத் தந்திரம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.<br /><br />அனுமன் பாத்திரம் தம் இன மக்களைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்குப் பக்திப் போதை ஏறியது! என்பதைத்தான் உணர்த்தும்.<br /><br />இராமனுக்காக இலங்கை சென்று, அந்தத் தீவை எரித்தவன், சீதையிடம் தூது சென்றவன் அனுமான் ஆனால் அவனுக்குக் கிடைத்தது என்ன?<br /><br />வால்மீகி இராமாயணம் (உத்தரகாண்டம்) சமஸ்கிருதத்தி லுள்ளதை பதத்துக்குப் பதம் தமிழ் வசன நடையில் காலஞ்சென்ற ராவ் சாஹேப் பி.எஸ். கிருஷ்ணசாமி அய்யரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதை கீழே அப்படியே ஆதாரமாகத் தருகிறோம். இராமாயணப் பிரியர்கள் படித்துப் பார்ப்பார்களாக.<br /><br />மேற்கண்ட புத்தகம் பக்கம் 555இல் ராம பட்டாபிஷேக காலத்தில் வெகுமானிக்கப்பட்டவர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. புருஷோத்தமர் (இராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும், நூறு காளை மாடுகளையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார். (பக்கம் 556).<br /><br />மீண்டும் (இராமர்) பிராமணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங்களையும், மிகவும் விலையுயர்ந்த பொன் ஆபரணங்களையும், வஸ்திரங்களையும் தானம் செய்தார்.<br /><br />தன்னுடன் இராவணன்மீது நடத்தப்பட்ட போரில் உதவிய சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அங்கதனுக்குத் தங்க வளையம் கொடுத்தார்; அனுமானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் கொடுத்தார்; சீதைக்கு ஒரு முத்தாரத்தை ராமர் கொடுத்தார்.<br /><br />இலங்கை பக்கமே தலை வைத்துப் படுக்காத, போர்க் களத் தின் பக்கமே தலைகாட்டாத பார்ப்பனர்களுக்கு முப்பது கோடி பவுனாம், லட்சம் குதிரைகளாம், பசுக்களாம், கடைசிவரை எல் லாக் களத்திலும் துணை நின்ற அனுமானுக்கு இரண்டு வஸ்திரங்களாம்.<br /><br />அண்ணனைக் காட்டிக் கொடுத்ததால்தானே விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும், பதவியும் கிட்ட முடியும்<br /><br />காட்டிக் கொடுத்தவர்களுக்குக் குஞ்சம் கட்டி விடுவது பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுள் ஒன்றே!<br /><br />- மயிலாடன் 28-1-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50946817444214361782012-01-28T19:30:29.134+05:302012-01-28T19:30:29.134+05:30அதற்குப் பதிலாக யாரோ சிலரை சில வண்ணங்கள் தீட்டிக் ...அதற்குப் பதிலாக யாரோ சிலரை சில வண்ணங்கள் தீட்டிக் காட்டலாம் என்று சிலர் நினைத்தால் அதை மக்களுக்குக் காட்டாதீர்கள்!<br /><br />உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டுமே குஜராத் அரசைக் கண்டித் திருக்கின்றன. கண்டனம் தெரிவித்திருக் கின்றன.<br /><br />அதை ஒரு மாடல் அரசு என்று தமிழ் நாட்டிலே சொல்லக்கூடியவர்கள் இருக் கிறார்கள் என்று சொன்னால் இதைவிட மக்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்குவது வேறு இல்லை.<br /><br />கேள்வி: தமிழகத்தில் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் தமிழக அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதே!<br /><br />தமிழர் தலைவர்: நிச்சயமாக அதி லிருந்து பாடம் பெறவேண்டியவர்கள் இனி யாவது பாடம் பெற வேண்டும்.<br /><br />மக்கள் ஒரு புது ஆட்சிக்கு நல்ல வலி மையைக் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி புதிய திட்டங்களை உரு வாக்கி மேலும், மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். சென்ற ஆட்சி என்ன செய் ததோ அதைவிட நாங்கள் மக்களுக்கு அதிகமாக செய்திருக்கிறோம் என்று காட்டுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அதைவிட்டு விட்டு, அதை எல்லாம் நான் மாற்றுகிறேன் என்று சொல்லுவது சரி யானதல்ல.<br /><br />நீதிமன்றங்கள் கேட்ட கேள்விகள் மிகவும் கடுமையான கேள்விகள். தமிழ் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின் றது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள். அதுபோல பல முறை கேட்டுள்ளார்கள்.<br /><br />ஆட்சி நடத்துவது யார்?<br /><br />13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்விழந்தவர்களாக ஆக்கப்படக் கூடிய மிகப்பெரிய பரிதாபம். நீதிமன்றங்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக் கின்றன.<br /><br />இப்பொழுது மிகப்பெரிய கேள்வி தமிழகத்தில் நீதிமன்றங்கள் ஆட்சி செலுத்துகின்றனவா? அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்று சந்தேகப் படக்கூடிய அளவுக்கு பிரச்சினைகள் வந்திருக்கின்றன.<br /><br />இதற்கு முதலமைச்சர் அவர்கள் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு எஞ்சிய காலத்தில் மக்கள் கொடுத்த வாக்குறுதியை மக்கள் கொடுத்த தீர்ப்பை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி அளித்தார்.<br /> --”விடுதலை” 28-1-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39223107554056452942012-01-28T19:29:56.426+05:302012-01-28T19:29:56.426+05:30தமிழகத்தில் நீதிமன்றத்தின் ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்...தமிழகத்தில் நீதிமன்றத்தின் ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறதா?<br /><br /><br />செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி<br /><br /><br />தமி ழகத்திலே நீதிமன்றங்கள் ஆட்சி நடத்துகின்ற னவா? அல்லது மக்க ளாலே தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ஆட்சி நடைபெறுகிறதா? என்று சந்தேகம் கொண்டு பார்க் கும் அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சியின் நிலை உள் ளது. அ.தி.மு.க. ஆட்சி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத் தார்.<br /><br />தஞ்சை வல்லத்தில் நேற்று (27.1.2012) காலை செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்த பேட்டி வருமாறு:<br /><br />அடிக்கடி மாற்றுவது சரியல்ல<br /><br />தமிழர் தலைவர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அய்ந்தாண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதே போல ஆட்சிகள் நீடிக்க வேண்டும் என்ற தத்துவமே ஜனநாயகத்தில் தொடர் நிகழ்வுகள் தொடர் செயல் பாடுகள் இருக்க வேண்டும் என்ப தற்காகத்தான். அந்த வகையிலே அமைச்சர்களாக வரக் கூடியவர் களை மாற்றுவது அவர்களுடைய இலாக்காக்களை மாற்றுவது என்பது முதலமைச்சருடைய தனிப் பட்ட உரிமை என்பது உண்மையாக இருந்தாலும்கூட, அமைச்சர் களுக்குப் போதிய கால அவகாச வாய்ப்புகளைக் கொடுத்தால் தான் அவர்கள் அத்துறைகளைப் புரிந்து கொள்ள முடியும்.<br /><br />அமைச்சர்கள் மட்டுமல்ல - அந்தந்த துறையிலே இருக்கக் கூடிய அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதினுடைய விளைவு என்ன ஆகும் என்று சொன்னால் ஒரு நிலைத்த வளர்ச்சிக்கு அது இடையூறாக ஆகும். ஒரு வாரம் ஒரு பள்ளிக் கல்வி அமைச்சர் இருந்தார். அடுத்த வாரம் அவர் இல்லை யென்றால் யார் இப்பொழுது அமைச்சர் என்று மக்களுக்கும் தெரி யாது. ஏன் பத்திரிகைகாரர்களுக் கும் தெரியாது.<br /><br />செவிலியர்களை தரதரவென இழுத்துச் செல்வதா?<br /><br />செவிலியர்கள், தங்கள் எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமானதாகும். ஏனென்றால் படித்திருக்கிறார்கள். பாதிப் பேர் பணி மூப்பு அடிப்படையிலே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.<br /><br />அப்படிப்பட்ட நிலையிலே மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண் டிய செய்தி என்னவென்று சொன் னால் எஞ்சியவர்களுக்கும் அந்த வாய்ப்புகளை கொடுத்து இரண் டாண்டுகளுக்குப் பிறகு புதிய முறைகள் வரலாம் என்று சொன் னால் அந்த பிள்ளைகள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப் பார்கள். அவர்கள் தங்களுடைய குறைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு போவதற்காக பட்டினிப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது காவல் துறையினர் தரதரவென பெண்களை இழுத்துக் கொண்டு போவது - கைது செய்து கொண்டு செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் மிகக் கொடூரமாக இருக்கின்றன. எனவே ஆட்சியினர் இந்த முறைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.<br /><br />தெளிவாகவே எந்த பிரச்சினையையும் உரியவர்களை அழைத்துப் பேசினால் சுலபமான தீர்வு காண முடியும். அந்தப் பிரச்சினை சிறு பொறியாக இருக்கும் பொழுதே தீர்க்கப்பட வேண்டும். அது நெருப்பாக மாறுவதற்கு முன்னாலேயே தீர்க்கப்பட வேண்டும்.<br /><br />அதற்குத்தானே உளவுத்துறை இருக் கிறது. மற்ற துறைகள் இருக்கின்றன. நல்ல ஆட்சி என்பதற்கு அடையாளமே ஒரு பிரச்சினை துவங்கப்படுவதற்கு முன்னா லேயே அந்த பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்குப் பயன்படும்படியாக செய்தல் வேண்டும்.<br /><br />மோடி அரசு மாடல் அரசா?<br /><br />அதோடு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். சில காலத்துக்கு முன்பு மோடி அரசுதான் இந்தியாவுக்கே மாடல் அரசாகத் திகழ்கிறது என்று மோடியைப் பற்றி தமிழ்நாட்டில் ஒருவர் தோடி ராகம் பாடினார்.<br /><br />ஆனால் இன்றைக்கு என்ன சூழல் என்று சொன்னால் நேற்று பத்திரிகையிலே வந்திருக்கிறது.<br /><br />ஏற்கனவே உயர்நீதிமன்றம் மோடி மீது கடுமையான கண்டனத்தை சுமத்தி யிருக்கிறது.<br />22 போலி என்கவுண்டர்களை நடத் தியதற்காக உச்சநீதிமன்றம் ஒரு மானிட் டரிங் ஏஜென்சி நடத்தி அதன் மூலமாக விசாரிக்க வேண்டும் என்று சொன்ன திருக்கிறதே இது மிகப்பெரிய வெட்கக் கேடாகும்.<br /><br />ஒரு ஆட்சி என்பது மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றன, நடத்தப்படு கின்றன என்பதுதான் ஜனநாயகத்திலே மிக முக்கியம்.<br /><br />அந்த வகையில் குஜராத்திலே எவ் வளவு பெரிய கொடுமைகள் நடந்திருக் கின்றன என்பது தெரியும்.<br /><br />மக்களைத் தவறான பாதைக்கு<br /><br />ஆகவே தான் ஊடகங்களுக்கு எங்க ளுடைய வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து உண்மைகளை மக்களுக்குக் கொண்டு வாருங்கள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36404049803646187222012-01-28T19:28:27.773+05:302012-01-28T19:28:27.773+05:30அப்படி என்ன திடீர் குபீர் போலீஸ் கெடுபிடி?
கேள்வ...அப்படி என்ன திடீர் குபீர் போலீஸ் கெடுபிடி?<br /><br /><br />கேள்வி: இயல்பாக சுதந்திரமாக நடக்க வேண்டிய துக்ளக் ஆண்டு விழா, சமீப காலமாக போலீஸ் பாதுகாப்பு என்ற பெயரில், பயங்கரக் கெடுபிடிகளோடு நடப்பது ஆரோக்கியமான விஷயமா?<br /><br />பதில்: எனக்கேகூட இதுபற்றி ஒரு மன நெருடல் ஏற்பட்டிருக்கிறது. இனி இந்தமாதிரி நிலை தோன்று வதைத் தவிர்ப்பது பற்றி யோசிக்கிறேன். - (துக்ளக் 1.2.2012 - பக்கம் 24)<br /><br />சோ என்ன முதல் அமைச்சரா? அல்லது குறைந்த பட்சம் துணை அமைச்சரா? போலீஸ் கெடுபிடிக்கு என்ன காரணம்? இந்த ஆண்டு மட்டும் ஏனிந்த குபீர் அலட்டல்? திடீர் போலீஸ் குவிப்பு? என்னதான் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, நான் ஒன்றும் ஆலோசகர் இல்லை. நான் சொல்லி யார் கேட்பா... அப்படி கேட்டவர் யார் உருப்பட்டு இருக்கா... இதெல்லாம் சோவின் வழக்கமான பாணிதான். துக்ளக் ஆண்டு விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்தவருக்கு பதவி லாட்டரி அடிக்குது என்றால் சாதாரணமா? இவ்வளவு செல்வாக்கு இருக்கும்போது, இது சிவன் கழுத்துப் பாம்பு என்று போலீசுக்குத் தெரியாதா, என்ன?<br /> --"விடுதலை” 28-1-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com