Search This Blog

22.3.15

தாலி ஒரு அடிமைச் சின்னம்!-பெரியார்

தாலி ஒரு அடிமைச் சின்னம்!





சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதைக் கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மையானது என்று சொல்வேன். என்னவெனில் இந்தக் கலியாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது.


பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெரியட்டும். அல்லது புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம், என்றும் உருப்படியாகாது.


நம்மை நாம் சூத்திரர்கள், இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன. ஆதலால், அப்பேர்ப்பட்ட மிருக உணர்ச்சியையும், அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மணமக்களையும், அதற்கு உதவியாயிருந்த பெற்றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன்.


பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்ய வேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ, வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16-பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும், அதுவும் இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடம் பொறுத்துத் தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


அன்றியும், அப்படிப்பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள் போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழவைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல், தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும்படியாய்ச் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவைகளுக்கு ஒழுங்கும் அவசியமான கட்டுப்பாடும் பழகிக் கொடுக்க வேண்டும்.
 

இந்தக் கூட்டத்தில் நான் பேச முடியாதபடி எத்தனை குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகிறது பாருங்கள். அந்தத் தாய்மாரும், தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும், அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமெயல்லாது நிபந்தனையோடும், தனக்கு இஷ்டமில்லாத சௌகரியமில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே, இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும்.


தவிர, அதிக நகை போடாமலும், தாலி கட்டாமலும், மூடச்சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதை திருமணமாகி விடாது. 


பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டு கொடுக்க வேண்டும். புருஷர்களையும் போலவே பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு, தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்கு சொத்துரிமையும் அவசியமானதாகும்.


தவிர, பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வெண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது. 


தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.


வீட்டு வேலை செய்வது தான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்கு தலைவியாய் இருப்பதும், குடும்பத்திற்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்கு தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

-------------------------------------10.07.1930-விருதுநகரில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 13.07.1930- "குடிஅரசு" இதழில் வெளியானது

33 comments:

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு சொந்தக் கட்சி ஆளும் மாநிலமே எதிர்ப்பு!
கோவாவில் மாட்டிறைச்சிக்குத் தடையில்லை!

கோவா முதல் அமைச்சர் அறிவிப்பு

பானாஜி மார்ச் 22_ பாஜக ஆளும் மாநில மான கோவாவில் மாட் டிறைச்சிக்குத் தடை விதிக்க இயலாது என அம்மாநில முதல்வர் லட் சுமிகாந்த் பரோஷ்கர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். பரோஷ்கரின் இந்த அறிவிப்பால் மத்தியில் உள்ள பாஜகவிற்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜக தலைமையில் ஆன அரசு அமைந்த உடனேயே நாடுமுழுவதும் இறைச்சிக்காக மாடு களைவெட்டுவதை தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப் புகள் கோரிக்கை வைத் தன. இதைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள பல் டானா என்ற மாவட் டத்தை மாட்டிறைச்சி இல்லாத மாவட்டமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ் தானில் உள்ள சில மாநக ராட்சிகள், மத்தியப் பிரதேசத்தில் சில மாவட் டங்கள் என மெல்ல மாட்டிறைச்சி தடை விதித்துக் கொண்டே சென்றது, கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதவி ஏற்ற தேவேந்திரபிட்னவிஸ் தடாலடியாக மாநிலம் முழுவதும் மாட்டிறைச் சிக்கு தடைவிதித்தார்.

இதனால் அந்த மாநிலத் தைச் சேர்ந்த 15-லட்சத் திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை ஒரே நாளில் இழந்தனர். இந்த தடையை நாடுமுழுவதும் கொண்டுவரும் முயற் சியில் பல்வேறு பொதுக் கூட்டங்கள் கருத்து கேட்புக்கூட்டங்களை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது, தமிழகத்தில் கூட கோவையில் விளம் பரமில்லாமல் சில இந்து அமைப்புகள் மாட்டி றைச்சி தடை செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற கருத்துகணிப்பை நடத்தியுள்ளன.

மத்திய அரசின் சட்ட திட்டங்கள்பற்றிக் கவலையில்லை

இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான கோவாவில் மாட்டிறைச்சியை தடை செய்யமாட்டோம் என்று கோவா மாநில முதல்வர் அறிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: எங்களுக்கு மத்திய அரசின் சட்ட திட்டங்கள் குறித்து கவலையில்லை எங்களின் மாநிலத்தில் பெரும் பான்மை என்ணிக்கையில் மாட்டிறைச்சி உண்பவர் கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை யில் ஒரு பகுதியாக மாட் டிறைச்சி உள்ளது. ஆகை யால் இந்த மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பதை தடைசெய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மேலும் அவர் கூறிய தாவது, பசு அல்லது காளைகளை சில இந் துக்கள் புனிதமாக கருது கிறார்கள். அதற்காக பெரும்பான்மையான எண்ணிக்கையில் மாட் டிறைச்சி உண்ணும் மக் களின் உணவுப்பழக்கத் தில் கைவைக்கமுடியாது. ஊடகங்கள் பாஜக சிறுபான்மையின விரோத கட்சியாக காட்டிவரு கிறது, ஆனால் நாங்கள் ஊடகங்களின் இந்த போக்கிற்கு பலியாகமாட் டோம். கோவாவில் எக்காரணத்தைக் கொண் டும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கமாட்டோம், என்று கோவா முதல்வர் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி மேளா ஆண்டுதோறும் கோவா விழா ஏப்ரல் மாதம் நடைபெறும் இந்த விழாவில் மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவு வகைகள் முக்கிய இடம் பெறும், இந்த விழாவின் போது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அருகில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்துள்ளதால் கோவாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் அப்படி இங்கும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டால் கோவாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளையே அது எதிரொலிக்கும் இதன் மூலம் கோவாவின் முக்கிய பொருளாதார முதுகெலும்பான சுற்றுலா தடைபட்டுப்போகும் ஆகையால் வருமானம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே கோவா முதல்வர் இந்த அறி விப்பை வெளியிட்டுள் ளார்.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தீவிர உறுப்பினரான கோவாமுதல்வரின் இந்த அறிக்கைக்கு இதுவரை ஆர்.எஸ்.எஸ் தலைமை யில் இருந்து எந்த எதிர்ப் பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Read more: http://viduthalai.in/e-paper/98310.html#ixzz3V79ovfXH

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சித் தடை எதிரொலி: எருமை, ஆட்டிறைச்சி விலை எகிறுகிறது - ஏற்றுமதியும் பாதிப்பு


புதுடில்லி, மார்ச்.22_ மேற்கு வங்கத்திலிருந்து மாதந்தோறும் இரண்டு இலட்சம் முதல் மூன்று இலட்சம் டன் வரையி லான மாட்டிறைச்சி சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியா நாடு களுக்கு ஏற்றுமதி செய் யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள மகாராட்டிரம் மற்றும் அரியானா ஆகிய மாநி லங்களில் மாட்டிறைச்சி யைக் கொண்டு செல்வதற் கும், விற்பனை செய்வதற் கும் விதிக்கப்பட்டுள்ள தடையால், ஆட்டிறைச்சி மற்றும் எருமை இறைச்சி விலையேற்றத்தில் அவ் விரு மாநிலங்களாலும் அச்சுறுத்தல் ஏற்பட்டு, கொல்கத்தா ஏற்றுமதி யாளர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் மேற்கு வங்கத் தில் மாட்டிறைச்சி ஏற்று மதியில் 10 முதல் 15 விழுக் காட்டளவு குறைந்துவிட் டது.

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் கால்நடைகள் இறைச்சிக்காகத் தேவைப்படுவதால், பசு மாடு, எருமைகள், எரு துகள் மற்றும் வண்டி மாடுகள் மற்றும் கால் நடைகளை இறைச்சிக் காக மாடுகளைக் கொல் வதற்கு சில மாநிலங் களிலிருந்து அனுமதிக் கப்பட்டு மேற்கு வங்கம் மூலம் ஏற்றுமதி செய் யப்படுகிறது.

ஏற்றுமதியின்மூலம் வெளி நாடுகளுக்கு மாதந் தோறும் 2,00,000 முதல் 3,00,000 டன் கிலோ எடை வரையில் ஏற்று மதி செய்யப்படுகிறது.

பன்னாட்டுப் பிரச்சினை

கொல்கத்தாவில் உள்ள ஏற்றுமதியாள ரான ஆல்வைரா எண் டர்பிரைசஸ் நிர்வாக மேலாளர் ஆகாஷ் அரோரா கூறுகையில், தற்போது விதிக்கப்பட் டுள்ள தடையின் காரண மாக குறித்த நேரத்திற்கு எங்களால் வழங்க முடி யாது என்று வெளிநாடு களில் உள்ள வாடிக் கையாளர்களாக உள்ள இறைச்சி வாங்குபவர்கள் நினைக்கிறார்கள். அது மட்டுமன்றி பசுமாட்டி றைச்சிக்கு பதிலாக எருமை மாட்டிறைச்சியை அனுப்பிவிடுவோம் என்றும் கருதுகிறார்கள் என்று கூறினார்.

கடந்த பிப்ரவரியில் அலுவலக ரீதியாக தடை நடைமுறைப்படுத்தாத காலக்கட்டத்தில் மும்பை யிலிருந்து கொல்கத்தா வுக்கு மாட்டிறைச்சி விற் பனையில் ஏழு விழுக்காடு கொண்டு செல்லப்பட் டுள்ளது. அதேநேரத்தில் மற்ற மாநிலங்களிலிருந்து இரண்டு விழுக்காடு முதல் மூன்று விழுக்காடு மாட்டிறைச்சி விற்பனைக் காகக் கொண்டு செல்லப் பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் மாட்டிறைச்சி நுகர்வுத் தேவை நாள் ஒன்றுக்கு 1,50,000 கிலோ ஆகும்.

ஆட்டுக்கறி விலை உயர்வு

டில்லி மற்றும் டில் லியை ஒட்டியுள்ள பகு திகளில் ஆட்டிறைச்சி யின் விலை தற்போது ரூ.550லிருந்து ரூ.600வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் ஜூன் மாதத்தில் ரூ.700 வரை ஆட்டிறைச்சி பற்றாக் குறை ஏற்பட்டு விலை உயரும் நிலை உள்ளது. மாட்டிறைச்சிக்கு மாற்றாக எருமை மாட் டிறைச்சி பொதுவாக விலை குறைந்து காணப் படும். அதுவும் கடந்த சில வாரங்களாக விலை அதி கரிக்கின்ற நிலை ஏற்பட்டு வருகிறது. மகாராட்டிரத் தில் கடந்த சில நாள் களில் எருமை மாட்டி றைச்சியின் விலையில் ஒரு கிலோவுக்கு ரூ.20லிருந்து ரூ.30 வரை விலை ஏற்றம் அடைந்துள்ளது. எருமை மாட்டிறைச்சி மும்பை மற்றும் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள மற்ற பகுதிகளில் ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.190 வரை விற்பனையாகிறது. பசு மற்றும் எருமை மாடுகளை இறைச்சிக்காக கொல்வதில் சட்டங்களும், நடைமுறைகளும் பெரு வாரியான மாநிலங்களில் உள்ளன.

தமிழ் ஓவியா said...

மகாராட்டிரத்தைத் தொடர்ந்து அரியானா வில் இறைச்சிக்காக பசு மாடுகளைக் கொல்வதும், மாட்டிறைச்சியை விற் பனை செய்வதும் உள் ளிட்ட அனைத்து வகை களிலும் கடந்த திங்கள் கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத னால், எருமை மாட்டி றைச்சியின் விலையில் ரூ.20லிருந்து ரூ.30 வரை உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படு கிறது.

உத்தரப்பிரதேசத்தில் பசுவைக்கொல்வதில் தடை உள்ளதால், எருமை மாட்டிறைச்சி போது மான அளவில் கிடைத்து விடுகிறது. ஆகவே, எருமை மாட்டிறைச்சி விலையில் சிறிதளவே உயர்வு ஏற்பட்டுள்ளது

மீரட்டில் உள்ள இறைச்சி விற்பனையாள ரான லியாகத் அலி கூறுகையில், அரியானா மற்றும் மகாராட்டிர மாநிலங்களில எருமை மாட்டிறைச்சி விலை உயர்ந்து வருவதால், இங்கி ருந்து எருமை மாட்டி றைச்சி அந்த மாநிலங் களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஆனா லும், உத்தரப்பிரதேசத்தில் போதுமான அளவில் எருமை மாட்டிறைச்சி கிடைத்துவருகிறது என்று கூறினார்.

சகரன்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங் களுக்கு இறைச்சிக் கூடங்களுக்கு கால்நடை களை வழங்கிவருபவரான ஹாஜி தன்வீர் எருமை மாட்டிறைச்சி சில்லறை விற்பனையில் சொல்ல முடியாத அளவுக்கு மாறிக்கொண்டே இருக் கிறது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவிலான மாற்றமின்றி ரூ.150 முதல் ரூ.155வரை ஒரு கிலோ எருமைமாட் டிறைச்சி விற்கப்படுகிறது. உத்தரப்பிரதேச நிலை

லியாகத் அலி கூறு கையில், உத்தரப்பிரதேசத் தில் அதிக எண்ணிக் கையில் எருமை மாடுகள் இருப்பதால், அதன் இறைச்சியின் விலை கட் டுக்குள் இருக்கிறது. ஆனால், மாட்டிறைச்சி யின் பற்றாக்குறை பிற மாநிலங்களில் ஏற்பட்டு வருவதால், அதனுடைய தாக்கம் உத்தரப்பிரதேசத் திலும் தெரியக்கூடிய வாய்ப்பு உள்ளது என் றார். மேலும் அவர் கூறும்போது, ஜூன் மாதத்துக்குள் விவசாயி கள் தங்களிடமுள்ள கால்நடைகளை விற் பனை செய்ய முன்வரும் போது, இறைச்சிகளின் விலையில் ஒரு நிலைப் புத்தன்மை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்றார்.

இந்தியாவிலேயே உத் தரப்பிரதேச மாநிலம்தான் எருமை மாட்டிறைச்சியை அதிகஅளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி யில் 67 விழுக்காட்டள வில் உத்தரப்பிரதேச மாநி லம் ஏற்றுமதி செய்கிறது.

2007_2008ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, உத்தரப்பிரதேசத் தில் எருமை மாட்டி றைச்சி 161 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2011_ 2012ஆம் ஆண்டுகளில் 32.42 மில்லியன் அளவில் எருமைகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் எருமைகளின் எண்ணிக் கையில் இந்திய அளவில் 25 விழுக்காடு உள்ள தாகும்.

மலேசியா, பிரேசில், சவுதி அரேபியா, எகிப்து, அல்ஜீரியா சந்தைகளில், பன்னாட்டு சந்தையில் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளு டன் இந்தியா போட்டி போட்டுவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஆண்டுக்கு 15 விழுக்காடு அதிகரித்த வண்ணம் உள்ளது. 2012_ 2013ஆம் ஆண்டுகளில் 3.2 மில்லியன் டாலர் மதிப் பிற்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/98319.html#ixzz3V7AK4QUy

தமிழ் ஓவியா said...

இதுதான் பிரதமர் மோடியின் சாதனை

300 நாட்களில் 600 மதக் கலவரங்கள் 49 பேர் மரணம்!

மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் அதிர்ச்சி அறிக்கை

புதுடில்லி, மார்ச் 22- மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் நடந்துள்ளன; அதில் 49 பேர் மரண மடைந்துள்ளனர் என்று தொழிற்சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித் துள்ளன.

மோடி ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து புதுடில்லியில் நாடாளு மன்ற வீதியில் நாடு முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட தொழிற்சங் கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

அப்போது மோடி ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் என்ற பெயரில் 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி ஆட்சிக்கு வந்து 300 நாட்களில், இன்றைக்கு மார்ச் வரை 600 மதக் கலவரங்கள் நடத்தப்பட் டுள்ளன. இவை திட்ட மிடப்பட்டு சிறுபான்மை யினர் அதிகமாக இருக் கும் பகுதிகளில் நடத்தப் பட்டவையாகும். இந்த கலவரங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 149 தாக்குதல்கள் கிறிஸ் துவர்கள் மீது நடத்தப் பட்டுள்ளன.

மீதி முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவை யாகும். ஆனால், கிறிஸ் தவ அமைப்புகள் 168 வன் முறைகள் நிகழ்ந்துள்ள தாக ஆவணப்படுத்தியுள் ளன. இதில் சத்தீஸ்கரில் தான் அதிகபட்சமாக 28 சம்பவங்கள் நடந்துள் ளன. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 26ம் உத்தரப்பிரதேசத்தில் 18ம் தெலுங்கானாவில் 15ம் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 73 வயது இறைப்பணி செவிலியர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரம் ஒரு திட்டமிட்ட சிறுபான் மையினர் மீதான வன் முறையின் ஒரு பகுதி யாகும்.

இது எங்குமே நடை பெறாத கொடூரம் ஆகும். நேரடியான கலவரங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நீங்கலாக, ஜனநாயக அமைப்புகள் மீது எண்ணற்ற தாக்கு தல்கள் தொடுக்கப்பட் டன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/98312.html#ixzz3V7AfSzhz

தமிழ் ஓவியா said...

சகிப்புத் தன்மை இன்மையால் வன்முறை தலைதூக்கும் ஆபத்து
இந்து நாளிதழின் தலையங்கம்

தமிழ்நாட்டில் முதலில் எழுத்தாளர்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாயினர்; அடுத்து தொலைக் காட்சி நிலையத்தின் மீது வன்முறைத் தாக்குதல் மேற்கொள்ளும் முறை இப்போது வந்துள்ளது. பேச்சு சுதந்திரமும், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் இந்த அளவுக்கு அச்சுறுத்த லுக்கு இதற்கு முன்பு எப்போதுமே உள்ளானதில்லை. வியாழக்கிழமை காலை நேரத்தில் புதிய தலைமுறை தமிழ் தொலைக் காட்சி நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், நமது சமூகத்தில் சகிப்புத் தன்மை இன்மை என்பது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதையே காட்டுவதாக உள்ளது. சமகால இந்தியாவில் திருமணங்களில் தாலி அல்லது மங்களசூத்ரா கட்டுவது எந்த அளவுக்குப் பொருத்தமானது என்பது பற்றிய ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப புதியதலைமுறை தொலைக்காட்சி நிலையம் முடிவு செய்து அந்நிகழ்ச்சி பற்றிய முன்னோட்டம் ஒன்றை ஒளிபரப்பியது.

அது முதற்கொண்டு அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் தொலைகாட்சி நிலையத்துக்கு வரத் தொடங்கின; தொலைபேசியை பெண்கள் எடுக்க நேரும்போது, அவர்கள் மிகமிக இழிவாகத் திட்டப்பட்டனர். ஒளிபரப்ப திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய தொலைக்காட்சி நிலையம் முடிவு செய்தது. அதன் பின்னரும், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் தொலைக்காட்சி நிலைய அலுவலகத்திற்கு வெளியே கண்டனப் பேரணிகளை நடத்தின. அந்த நிகழ்ச்சியை ஒளிப்படமெடுத்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிலைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்தப் போராட்டங்களை நியாயப்படுத்தி, மாநில பா.ஜ.கட்சியும், கட்டுப்பாடு அற்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இவை அனைத்தும் தொலைக்காட்சி நிலையத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப் படுவதில் முடிந்தது.

இந்த குண்டு வெடிப்பினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்; ஆனால் நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத் துக்கு மாபெரும் தீங்கினை அது விளைவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் சில்லறை வன்முறைக் குழுக்கள் நாட்டில் நிலவும் மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை ஆகிய உணர்வுகளுக்கு விட்டுள்ள பெரிய சவாலாக இது விளங்குகிறது. கலாச்சார விவகாரங்கள், விஷயங்கள் பற்றி விவாதிக்கவோ, கேள்வி கேட்கவோ செய்யும் சமூகத்தின் சுதந்திர சிந்தனை உணர்வு கொண்டவர்களை வன்முறை மூலம் பணிய வைக்க இக்குழுக்கள் முயல்கின்றன. தங்கள் கோட்பாடுகளுக்கு விடப்படும் சவால்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமேயன்றி, அவரவர் தங்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டுவிடக்கூடாது. ஊடகங்களையும், சமூகத்தையும் அச்சுறுத்திப் பணியவைக்க முயலும் இத்தகைய தீயசக்தி களை சட்டத்தின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்தேறிவிட்டது என்ற அடையாளத்துக்காக அவரது கழுத்தில் கட்டப்படும் ஒரு அணிகலனாகும் தாலி. அவரது கணவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான அடையாளமாகவும் அது விளங்குகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், கணவனால் அடித்து உதைக்கப்பட்டு மிகமிக இழிவாக நடத்தப்படும் பெண்களும் அந்தத் தாலியைத் தொடர்ந்து அணிந்திருக்க வேண்டுமா என்பது பற்றி இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தாலி அல்லது புர்கா அல்லது திருமண மோதிரம் போன்ற கலாச்சார அடை யாளத்தைப் பெண்கள் அணிந்திருக்க வேண்டுமா என்பது முற்றிலுமாக ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாகும். தங்கள் மதத்தைப் பின்பற்றும் மக்கள் மீது சடங்குகள், மதச்சின்னங்களை திணிப்பது பற்றி மதம் என்ற வகையில், இந்துமதம் தத்துவ ரீதியிலான ஓர் அக்கறையின்மையையே எப்போதும் காட்டி வந்துள்ளது. தனிப்பட்ட விஷயத்தை அரசியலாக்கும் மதவாதிகளின் முயற்சிப் பட்டியல் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டாகும்.

இரண்டாவதாக, ஒளிபரப்ப உத்தேசிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒரு விவாதமாகும்; இரு மாறுபட்ட கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடை அது என்பதே அதன் விளக்கமாகும். ஒரு தலைப்பை முழுமையாக பகுத்தாய்வு செய்ய அனுமதிக் கும் விவாதம் என்பது மக்களாட்சி முறையின் ஒரு மிக முக்கியமான நடைமுறையாகும். திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு கொள்வது பற்றி திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்காக அவர் மீது தரம் தாழ்ந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை தமிழகம் கண்டுள் ளது.

தமிழ் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டனர். டில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண்ணைப் பற்றி பி.பி.சி. தயாரித்த செய்திப்படம் வெளியிடப்படுவதற்கு தேசிய அளவில் தடை விதிக்கப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளிலும், இந்தியாவின் கலாச்சாரம் சீரழிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக போராட்டக்காரர்கள் உரிமை கொண்டாடியுள்ளனர். ஆனால், இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் சகிப்புத்தன்மை, பரந்த மனப்பான்மை, பல்வேறுபட்ட - பல்அடுக்கு கொண்ட கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டி ருக்கும் வரலாறுதான் உண்மையிலேயே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.

நன்றி: இந்து ஆங்கில நாளிதழ் 13-03-2015
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/98323.html#ixzz3V7AumQZ8

தமிழ் ஓவியா said...

பெண் விடுதலை இயக்கம் என்பதையும் கடந்து
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது முக்கியம்
புதிய வழியில் அழைத்து செல்கிறார் வீரமணி
ஆசிரியரின் ஆசிரியர் அனந்தராமன் கருத்துரை


வல்லம், மார்ச் 22_ பெண் விடுதலை இயக்கம் என்ற திசையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மிக முக்கியமானது; அந்த வழியில் உங்கள் கல்லூரியின் நிறுவனத் தலைவர் வீரமணி நடத்தி செல்கிறார் எனவும், வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் வீரமணி என்றார் ஆசிரியரின் ஆசிரியரும் அய்.அய்.டி. முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் அனந்தராமன் அவர்கள்.
7.3.2015 அன்று தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 35ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

வேந்தர் அவர்களே, எனது சக கல்வியாளர்களே, பெற்றோர்களே, மாணவர்களே,

இந்த விழாவில் முக்கியப் பேச்சாளராக உரையைற்று வதற்கு உண்மையிலேயே நான் தகுதி படைத்தவனா என்பதை நானறியேன். ஆண்டு விழாக்களுக்கோ விடுதி விழாக்களுக்கோ நான் தலைமை தாங்கியதில்லை. ஆனால் இத்தகைய விழாக்களை அய்.அய்.டி. யில் ஏற்பாடு செய்து நான் நடத்தி இருக்கிறேன். கல்வி நிறுவனங்களில் இத்தகைய விழாக்களை ஏற்பாடு செய்து நடத்துவதன் நோக்கம் என்ன என்பதை நான் நன்கறிவேன். கடந்த காலத்தில் கல்வி நிறுவனம் என்ன செய்திருக்கிறது. எதிர் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க தொடங்கும் நேரமிது. ஆண்டு விழாக்களின் நோக்கம் இதுவாகவே இருக்கட்டும். உங்கள் முதல்வர் படித்த அறிக்கைகள் உங்களது செயல்பாடுகள் பற்றி முழு மனநிறை வளிப்பவையாக உள்ளன. மூன்று வகை சாதனைகள்

எனவே உங்கள் சாதனைகளைப் பற்றி எனக்கு அய்யமேதுமில்லை. பார்வைக்கு நன்கு தெரியக்கூடிய உங்கள் சாதனைகள் கண்டவர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. உங்கள் சாதனைகள் மூன்று வகையிலானவை. என்னைப் பொறுத்தவரை என்ன செய்ய வேண்டும் என்று நான் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். இத்தகையதொரு கல்வி நிலையத்து மாணவரும் ஆசிரியரும் துணிவு நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது முதலாவது முன்னேறுவதற்கான துணிவு, வெற்றி பெறுவதற்கான துணிவு, சிக்கலான சூழல்கள எதிர் கொள்வதற்கான துணிவு, எதிரிகள சந்திப்பதற்கான துணிவு இன்னும் இது போன்ற மற்ற செயல்கள மேற்கொள்வதற்கான துணிவு ஆகியவை உங்களுக்கு தேவையானது. முன்னாள் மாணவர்களின் உரை


தமிழ் ஓவியா said...

இந்த பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பேசியதை நான் கேட்டேன். இக் கல்லூரியில் இருந்துதான் துணிவுடன் செயலாற்ற அவர்கள் கற்றுக் கொண்டதாக திரும்பத்திரும்ப கூறினார்கள். உங்களின் மதிய உணவை தாமதப்படுத்த விரும்பாததால் விரைந்து எனது உரையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டாவதாக உங்களுக்கு தேவையானது திறமை, வெறும் துணிச்சல் மட்டுமே போதாது. திறமையற்ற துணிவு உங்கள எங்கும் கொண்டு சேர்க்காது. உங்கள் நிறுவனத்தின் பாடத் திட்டத்தை நான் படித்துப் பார்த்தேன். அதில் இன்டர்நெட் தொழில் நுட்பமும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டருந்ததை கண்டேன். என்றாலும் உங்கள் கல்லூரியில் கணினி அறிவு அனைத்து மாணவர்க்கும் கட்டாயமானதாக அறிவிக்கப்படவில்லை என்பதை உங்களில் சிலரிடம் பேசியதில் இருந்து நான் அறிந்து கொண்டேன். தகவல் தொழில் நுட்பத்தைச் சிறப்புப் பாடமாக தேர்வு செய்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே கணினியில் நிபுணர்களாக ஆகிறார்கள் என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் எனது கல்வி நிறுவனம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். சிவில் பொறியாளர் முக்கியம் அய்.அய்.டி.யில் எந்த பாடத்தை தேர்வு செய்து நீங்கள் படித்தாலும் சரி, சிவில் பொறியாளலாக இருக்கட்டும், இயந்திரவியல் பொறியாளராக இருக்கட்டும் அல்லது விமானப் பொறியாளராக இருக்கட்டும். கணினி அறிவியலிலும் மென்பொருள் அறிவியலிலும் நீங்கள் நிபுணர்களாக விளங்குவீர்கள். அதனால் ஏற்படும் நன்மை என்ன? தனது நிறுவனத்தில் பணியாளர்களத் தேர்ந்தெடுக்க மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சென்னை அய்.அய்.டி. க்கு வருகிறார். ஒபாமா அமெரிக்க அதிபராக வந்தபோது இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் நியமிக்கப்படுவது குறைக்கப்படக் கூடும் என்ற பேச்சு எழுந்தது. அய்.அய்.டி. மாணவர்கள உங்களால் நியமிக்க முடியாமல் போனால் என்ன செய்வீர்கள் என்று பில்கேட்சிடம் ஒரு செய்தியாளர் கேட்டபோது தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே சென்னைக்கு மாற்றிவிடுவேன் என்று உடனடியாக பில்கேட்ஸ் பதிலளித்தார். அய்.அய்.டி. மாணவர்களின் திறமைகள் தான் அதன் காரணம். அத்தகைய திறமையை இங்கு பயிலும் மாணவர்களிடையே இந்த நிறுவனத்தால் வளர்க்க இயலும் என்றால், உங்கள் நிறுவனமே உலகில் தலை சிறந்த நிறுவனமாக ஆகிவிடும். இத்தகைய திறமையுடன் நான் பெரிதும் நேசிக்கும் என்னால் உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாட்டையும் சேர்த்து நான் கூற விரும்புகிறேன். தந்தை பெரியார் கோட்பாடு இது எனது கோட்பாடல்ல. தந்தை பெரியார் ராமசாமி அவர்களின் கோட்பாடு தான் அது. தாய்ப்பால் பைத்தியம் என்ற ஒரு புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.

இதன் பொருள் என்னவென்றால் ஆங்கிலத்தைக் கைவிட்டுவிட்டு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று அனைத்து வகையான கல்வியையும் உங்களது தாய்மொழியாகிய தமிழிலேயே பயிலுங்கள் என்பதை வலியுறுத்துவதுதான். இதனால் அயல்நாடுகளிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் அறிவு தடைப்பட்டு நீங்கள் பின்தங்கியவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆங்கில மொழியை உங்களால் புறக்கணிக்க முடியாது. உங்கள் கல்லூரியில் பொறியியல் கல்வி பயில்வோர்க்கு ஆங்கில மொழி பட்டயப் படிப்பும், ஆங்கில மொழிப் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளும் ஆங்கில இலக்கியப் படிப்பும் அளிக்கப்படுவோம் மிகவும் இன்றியமையாததாகும். இவை உங்களிடையே ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கிவிடுவதால் எந்த மாணவர் கூட்டத்திற்கிடையேயும் நீங்கள் எல்லாம் ஆற்றல் மிக்கவராகவும், சிறப்பான பேச்சு எழுத்து நடை கொண்டவராகவும், மதிக்கத்தக்க நாகரிகம் படைத்த வராகவும். அனைவராலும் அங்கீகரித்து ஏற்றுக் கொள் ளப்பட இயன்றவர்களாகவும் தனித்துவம் கொண்ட வர்களாக நீங்கள் பளிச்சிடுவீர்கள். எனவே திறமை என்ற கோணத்தில் இவ்வாறுதான் நான் சிந்திக்கிறேன். துணிவு திறமைக்குப் பிறகு உங் களுக்கு என்ன வேண்டும்? உங்கள் செயல்களுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் தன்மைதான் உங்களுக்கு மூன்றாவது தேவைப்படும் பண்பாகும்.

உங்கள் தலைவர் வீரமணி எத்தகையவர்

தமிழ் ஓவியா said...

உண்மையில் இத்தகைய பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மை குறிப்பாக உங்கள் நிறுவனத்துக்கே சொந்த மானதாகும். பெண்களுக்குக் கல்வி அளிக்கும் மாபெரும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளதே இதன் காரணம். உண்மையில் இப்பல்கலைக்கழக நிறுவனங்கள் பெண்கள் கல்விக்கெனவே உருவாக்கப்பட்டவையாகும். உங்கள் மாபெரும் தலைவர் முனைவர் கி. வீரமணி அவர் களைப் பற்றி அண்மையில் நான் ஒரு கட்டுரை எழுதி யுள்ளன். அக்கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை உங்கள் நிறுவன நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியதாகும். அறிவார்ந்த பேராசிரியரான அவர் அவரது ஆசான் தந்தை பெரியார் அவர்களின் எதிர் பார்ப்புகளயும் மிஞ்சி செயல்படுபவராக விளங்குகிறார் என்பதை நான் எழுதியுள்ளன். பெண் விடுதலையை வலியுறுத்தியவர் தந்தை பெரியார். பெண் விடுதலை என்பது என்ன? அடிமைத் தனம் இன்றி, பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகாமல் அச்சமின்றி, வரதட்சணை சாவு பற்றிய அச்சமின்றி, பெண் அமைதியாக வாழ்வதே பெண் விடுதலை. ஆனால் அந்த பெண் விடுதலை இயக்கம், ஒருபடி மேலே சென்று பெண்களுக்கு அதிகார மளித்தல் என்பதற்குக் கொண்டு செல்கிறது. இந்த வழியில்தான் தன்னை மட்டுமல்லாமல் தனது நிறுவனத்தையும் ஒரு புதிய பாதைக்கு முனைவர் கி. வீரமணி அவர்கள் கொண்டு செல்கிறார்.

பெண்களுக்கு அதிகாரம்.. இந்த பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மிகமிக முக்கியமான ஒன்றாகும். அவர் கூறி நான் எழுதியிருக்கும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது உண்மையிலே பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிறப்புரிமையாகும். பிரச்சினைகளுக்கு விளக்கம் அளித்தல், அவற்றிற்கான தீர்வுகளுக்கு ஆலோசனை கூறுதல், அதனால் ஏற்படும் விளைவுகளுக்குப் பொறுப் பேற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் தன்மை ஆகியவை மிகமிக முக்கியமானவை. எனது சொற்களைக் குறித்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக நீங்கள் இதுவரை எதிர் கொள்ளாமல் இருக்கும் பிரச்சினைகள இனி எதிர்கொண்டு அவற்றின் தீர்வுகளுக்கான முடிவுகள நடைமுறைப்படுத்தும் சுதந்திரம் பெற்றிருப்பதுடன், அதன் விளைவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவியின் சிலை போன்று பெரியார் சிலை

இத்தகைய அதிகாரம் பெற்றிருத்தல் ஆக்கப்பூர்வ மானதாகவும், சமூகத்திற்கும் பெண் இனத்திற்கும் நன்மை செய்வதாகவும் இருக்க வேண்டுமானால், அதற்கு பெண்கள் உயர்கல்வி பெறுவது இன்றியமையாததாகும். எனவே பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் எப்போது சென்றாலும் உங்களால் அங்கு காண இயன்ற முழக்கம் பெண் கல்வி மற்றும் உயர்க்கல்வி மூலம் அதிகாரம் பெறுதல் என்பது தான். பெண்கள் அதிகாரம் பெறு வதற்கு பெண் கல்வியே மிகமிக முக்கியமான தேவையாகும். இச்செய்தியுடன் துணிவு, அறிவு, பொறுப் பேற்றுக் கொள்ளும் தன்மையும் சேர்த்து அவற்றின் மூலம் இந்த நிறுவனத்தின் எதிர்காலத்தில் பெறுவதற்கு இருக்கும் மாபெரும் முன்னேற்றங்கள என் மனக் கண்ணில் கண்டு நான் மகிழ்கிறேன். மாபெரும் பெரியார் சிலையை நிறுவ வேண்டும் என்ற உங்கள் செயல் திட்டத்தையும் நானறிவேன். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போன்று இந்த சிலையும் சுயமரியாதை சிலை என்று அழைக்கப்படட்டும்

Read more: http://viduthalai.in/page-3/98338.html#ixzz3V7BMAPNa

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


ஹோமம்

கேள்வி: என் மனைவி இரண்டரை வருடமாக ருமடாய்டு ஆர்தரைடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின் றாள். எவ்வளவு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. ஏதா வது பரிகாரம் சொல் லுங்கள்.
பதில்: வீட்டில் ஆயுஷ் ஹோமம் மற்றும் பஞ்சகத்தி ஹோமம் செய்து நலம் பெறலாம்.

- கல்கி இதழில் காழியூர் நாராயணன்

குணமாகாவிட்டால் சோதிடர்மீது வழக்குப் போடலாமா? மக்களை மடமையில் ஆழ்த்துவது தான் ஆன்மீகமோ!

Read more: http://viduthalai.in/e-paper/98375.html#ixzz3VD1eey4G

தமிழ் ஓவியா said...

காவிக் கூட்டத்தின் வன்முறை கைவரிசை

மகாராஷ்டிராவில் 300 ஆண்டு பழைமையான தேவாலயம் தாக்கப்பட்டது


பன்வேல்(மகாராஷ்டிரா) மார்ச் 23 நவி மும்பையில் 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. டில்லி, ஹரி யானா, மத்தியபிரதே சத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் காவிகளின் கைவண்ணம் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தேவாலயம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அன்று இரவு நவிமும்பை யில் உள்ள தேவாலயம் ஒன்றும் தாக்குதலுக்கு ஆளானது.

நவிமும்பையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்டது. நவிமும் பையில் முதல்முதலாக பள்ளிக்கூடம் ஒன்றும் இந்த தேவாலயத்தின் நிர்வாகத்தினரால் கட்டப் பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் கல்லூரியாக மாற்றப்பட்ட இந்த தேவாலயத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவ னங்கள் இயங்கி வருகின் றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனைக்காக காலை யில் தேவாலயத்திற்கு வந்தவர்கள் தேவாலயத் தின் வெளிப்புறமுள்ள சிலைகள் உடைந்து கிடப் பதையும் பல இடங்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதற்கான அடை யாளங்களைக் கண்டனர். உடனடியாக இவ்விவ காரம் குறித்து பன்வேல் காண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. இந்த தாக் குதல் குறித்து மாநில கிறிஸ்தவ சிறுபான்மை யினர் அமைப்பின் தலை வர் ஆபிரகாம் மாத்யூ கூறும்போது இந்தப் பகுதியில் உள்ள சில இந்து அமைப்பைச் சேர்ந் தவர்கள் கடந்த சில நாட் களாகவே தேவாலயத் திற்கு வரும் கிறிஸ்தவர் களை அவதூறாக பேசு வதும், மிரட்டுவதுமாக தொடர்ந்தது, இது குறித்து அரசுக்கு எழுத்து மூலமாகவும் புகார் அளித் துள்ளோம். அதே நேரத் தில் காவல்துறையிலும் பல கிறிஸ்தவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் கற்களை தேவாலயத்தின் மீது வீசியுள்ளனர். இதில் தேவாலயத்தின் வாயிலில் வைத்துள்ள செயின்ட் ஜார்ஜ் உருவச்சிலை சேதமடைந்துள்ளது,

புனிதநூல் வைக்கப்படும் பீடத்தில் உள்ள கண்ணா டிகளை உடைத்துள் ளனர். மேலும் கதவின் மேல் உள்ள பரிசுத்த மாதா சிலையின் கண் ணாடிகளையும் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். இது திட்டமிட்ட தாக் குதலே ஆகும். திடீரென இந்த தாக்குதல் நடக்க வில்லை. இந்தப்பகுதியில் உள்ள 4 தலைமுறை மக் களுக்கு மதம் இனம் பாராமல் கல்விபோதித்த எங்கள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த எப்படித்தான் இவர் களுக்கு மனம் வந்ததோ என்று கூறினார். இச்சமபவம் குறித்து பன்வேல் நகர காவல் துறை இணை ஆணையர் சூரியவன்சி கூறும்போது இந்த விவகாரம் தொடர் பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விரை வில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98371.html#ixzz3VD1oJoPZ

தமிழ் ஓவியா said...


பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறியவர் பெரியார்

உயர்நீதிமன்ற நீதிபதி உரை

தஞ்சாவூர், மார்ச்.23 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் நாள் கருத்தரங்கு நடந் தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அங்கயற் கண்ணி தலைமை தாங் கினார். பல்கலைக் கழக இசைத்துறை உதவி பேரா சிரியை மாதவி வரவேற்றார்.

கருத்தரங்கில் பெண் ணிய மஞ்சரி என்ற நூலை வெளியிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி து.அரி பரந்தாமன் பேசும்போது கூறியதாவது:

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக மகளிர் நாள் பெண் விடுதலைக்காக அனுசரிக் கப்படுகிறது.

பண்டைய காலத்தில் பெண்கள் சரி சமமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்து சொத்துக்கு வாரிசு என்ற நிலை உருவானபோது, பெண்கள் பொருளாகவும், பின்னாளில் வெறும் இயந்திரமாகவும் கருதப் பட்டு அடிமைப்படுத்தப் பட்டனர்.

இந்த அடிமைத்தனம் நம்முடைய நில உடைமை சமூகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அடி மைத் தனத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கப் படுகிறது. இந்த அடிமை முறையைப் பெண்களும் அக்காலத்தில் ஏற்றனர். இதனால், பெண்கள் பொருளாகப் பார்க்கப்பட் டதுடன், பாலியல் இயந் திரமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டனர். மன்னர்கள் காலத்தில் உடன் கட்டை ஏறுதல், இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.

உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார்

கடந்த நூற்றாண்டில் தொழில், விஞ்ஞான, சமூக வளர்ச்சி அடைந்த நிலை யில் பெண் விடுதலைக்கும் குரல் எழுப்பப்பட்டது. பெண் விடுதலைக்காகப் பல பேர் குரல் கொடுத் தாலும், உறுதியாகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். மற்ற அடிமைத் தனங்களை விட பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு செயல் எனக் கூறினார் பெரியார்.

இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு முதல் மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றாலும், பெண்களுக்கு இன்னும் சம அளவு உரிமை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும், ஆட்சி முறையில் சம அளவு பங்கு பெறவில்லை. உதா ரணமாக உச்சநீதிமன் றத்தில் உள்ள 31 நீதிபதி களில் ஒரு பெண் மட் டுமே உள்ளார். உயர் நீதி மன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 3 பேர் மட் டுமே பெண்கள்.

இந்த நிலைமை மாற இதுபோன்ற கருத்தரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்று சிந்தனை உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98373.html#ixzz3VD1x7Tyy

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/98378.html#ixzz3VD2IBv25

தமிழ் ஓவியா said...

மார்ச் 23: இன்று உலக வானிலை தினம்

சென்னை, மார்ச் 23- வானிலை மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' தண்ணீருக்காக இருக்கும்' என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக வானிலை தினம், மார்ச் 23 இல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தினத்தில் மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்து வலியுறுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இவ்வாண்டு, வானிலையை அறிவோம், செயல்படுவோம்! எனும் கருத்தை மய்யமாக வைத்து கொண்டாடப்படுகிறது.அதாவது, கடந்த கால வானிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். வருங்கால சந்ததியினரை பாதுகாப்போம் என்பதே இதன் சாராம்சம். விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால், உடனுக்குடன் செய்திகள் பரிமாறுவதில் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளோம்.

வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்பமயமாதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.

இவை, தற்போதைய வானிலையை அறிந்துகொள்ளவும், அதன் தற்காலிக தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. மாறாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில், வானிலை குறித்த அடிப்படையை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, நாம் வாழும் மாநிலத்தின் வானிலை மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும் என, இந்திய வானிலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வானிலையாளர் சுகுமார், அறிவுறுத்துகிறார்.

அவர் கூறியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்று, 67 ஆண்டுகளில் மக்கள்தொகை நான்கு மடங்காகப் பெருகியுள்ளது. ஆனால் நம் தேவைக்கேற்ப மழையின் அளவு பெருகியுள்ளதா என்றால் யாருக்கும் பதில் தெரியாது. பொதுவாக, வானிலை குறித்த அறிவு இதுவாகவே உள்ளது.

வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைபற்றி அறிவது அவசியம்.தமிழகத்தை பொறுத்தவரை, எந்த மாதங்களில் பருவமழை பொழியும், எந்தெந்த பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமீபத்திய, வானிலை மாற்றங்களுக்கான காரணத்தையும், அதற்கான வழிமுறைகளையும் அரசு உணர வேண்டும்; மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நிலத்தடி நீர் சேகரிப்பு, மரம் நடுதல் அதிகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி,

சோலார் வாயிலாக பசுமை வீடுகள், கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட வழிமுறைகளால், இயற்கை பாதுகாக்கப்பட அனைவரும் முனைய வேண்டும். இதற்கு, அரசும், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/98363.html#ixzz3VD3pEx9y

தமிழ் ஓவியா said...

மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்

மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளு றுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம்.

இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.

வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும். மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத் தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணத் தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.

பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது. நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல் களையும் இக்கீரை தணிக்கும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

தமிழ் ஓவியா said...

தாம் பருப்பின் மருத்துவப் பயன்கள்

அதிகமான சத்துக்களை உள்ளடக்கிய பருப்பு வகை களில் பாதாம் பருப்பும் ஒன்று. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சீனியும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது.

இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய பருப்பு வகைகளில் இதுவும் ஒன்று. புரதம், நார்ப்பொருள்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதில் உள்ளது.

இதனைத் தவிர்த்து வைட்டமின் ஈ, துத்தநாகம் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம் பொட்டேஸியம் செலேனியம், நியாஸின் மற்றும் மெக்னீஸியமும் இதில் உள்ளன. பாதாமில் உள்ள கொழுப்பு இருதயத்தின் ஆரோக்கியத்தை அதி கரிக்கும் கொழுப்பாகும்.

25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவிகித வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. இதனோடு சேர்த்து புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.

மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சினைகள், சொரைஸிஸ், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினை களைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.

தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர் களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. வைட்டமின் ஈ என்டிஒக்சிடண்டாக செயல்பட்டு இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது.

பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

பாதாமில் உள்ள சத்துகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம். பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

மங்கனீஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்திக்கு உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும்.

பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திய அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.

Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Gqk6b

தமிழ் ஓவியா said...

இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்

மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.

தொண்டை ரணம்: மாதுளம் பூக்களை மசிய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண் டைக்குள் மெதுவாக விழுங்கவேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு, தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.

தாதுபலம்: தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்த மடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

ரத்த மூலம்: மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக் கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Nr0ua

தமிழ் ஓவியா said...



திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி

நகரி, மார்ச் 23_ திருப் பதி ஏழுமலையான் கோவி லில் யுகாதி நாளை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.

நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்தனராம். அதன்பிற கும் தர்ம தரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டு களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனராம். இவர் களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனதாம். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத் துக்கு 6 மணி நேரம் காத்து இருந்தனராம்.

கூட்டத்தைப் பயன் படுத்தி பக்தர்களிடம் பணம் மோசடி செய்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பிரம்மபுத்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர ராவ் தனது 2 நண்பர் களுடன் கோவிலுக்கு வந்தார்.

அப்போது அவர்களி டம் ஒருவர் அறிமுகமாகி தான் தேவஸ்தான ஊழி யர் என்றும், நபருக்கு ரூ.500 கொடுத்தால் ஏழு மலையானை உடனடி யாக தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேரும் ஆளுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 கொடுத்தனர்.

உடனே அவர் வைகுண் டம் வரிசையில் அனுப்பி உள்ளே ரமணா என்ப வர் இருப்பார் அவர் உங் களை மூலவர் அருகே அழைத்துச் செல்வார் எனக் கூறி நழுவினார்.

ஆனால் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர் களை தரிசனத்துக்கு ஊழி யர்கள் அனுமதிக்க வில்லை. ரமணாவை தேடியபோது அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பதும் தாங்கள் ஏமாற் றப்பட்டோம் என்பதை யும் அவர்கள் உணர்ந் தனர். பின்னர் தர்மதரி சன வரிசையில் நின்று ஏழுமலையானை தரி சித்து திரும்பினார்.

வெளியே வந்தபோது பாஸ்போர்ட் சென்டரில் தங்களை ஏமாற்றிய இடைத்தரகர் நிற்பதை கண்டனர். உடனடியாக 3 பேரும் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.

விசாரணையில் அவ ரது பெயர் பனிக்குமார் (32) என்பதும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பனிக் குமாரை காவல்துறையி னர் கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/98394.html#ixzz3VD58PX5S

தமிழ் ஓவியா said...

இலங்கைமீது பன்னாட்டு விசாரணை: 15 மொழிகளில் கையொப்ப இயக்கம்! அமெரிக்காவில் தொடங்கப்பட்டது!

நியூயார்க், மார்ச் 23_ இலங்கை தமிழினப் படு கொலை குறித்து பன் னாட்டு நீதிமன்றம் விசா ரணை நடத்தக்கோரி அமெரிக்காவில், 15 மொழி களில் கையொப்ப இயக் கம் தொடங்கப்பட்டது.

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக அந் நாட்டு அரசாங்கம் செய்த போர்க் குற்றங்கள், இனப் படுகொலை, மனிதாபிமா னத்துக்கு எதிரான குற் றங்கள் ஆகியவற்றுக்காக இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசா ரணைக்கு உட்படுத்த அய்.நா. சபையை வலி யுறுத்தும் வகையில் அமெ ரிக்காவில் கையொப்பப் பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது.

15 மொழி களில் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற வகை செய்யும் இந்த மாபெரும் பிரச்சாரத்தை அமெரிக் காவின் முன்னாள் அட் டர்னி ஜெனரல் ராம் கிளார்க், நியூயார்க் நகரில் உள்ள அய்.நா.சபை தலைமை அலுவலகத் துக்கு வெளியே தொடங்கி வைத்தார். தமிழர்களின் துயரம் முடிவுக்கு வரவேண்டும்.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தனது கையொப் பத்தை பதிவு செய்து அவர் முறைப்படி பிரச் சாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் தேசிய கீதத்துடன் இந்த பிரச்சார நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நிவேதா ஜெய குமார், சவுமியா கருணா கரன் ஆகியார் பிரச்சார மனுவை தமிழிலும், ஆங் கிலத்திலும் வாசித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன், இனப்படு கொலை, போர்க்குற்றங் கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், இன வெறி ஆகியவற்றிலிருந்து தனது குடிமக்களை பாது காப்பதில் ஒரு நாடு வெளிப்படையாக தோல் வியடையும்போது அந்த மக்களை பாதுகாப்பதற் காக அதில் தலையிடுவது உலக சமுதாயத்தின் கடமை.

இந்த கையொப் பப் பிரச்சாரம் அய்.நா. சபைக்கு எதிரானது அல்ல. இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகும் என்று குறிப்பிட்டார் 15 மொழிகளில் கையொப்பப் பிரச்சார மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, உருது, அரபு, மலாய் உள்பட 15 மொழி களில் கையொப்பம் பெறு வதற்காக தனி இணைய தளமும் (www.tgte-ice) உரு வாக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பு தெரிவித்துள் ளது.

Read more: http://viduthalai.in/page-8/98395.html#ixzz3VD5I4Tzn

தமிழ் ஓவியா said...

பலே பலே - பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்!
பார்ப்பனப் புரோகிதனை இணையத்தின் மூலம் வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம்

திருமணம், கிரகப்பிரவேஷம் மற்றும் திதி போன்ற பல்வேறு காரியங் களுக்கு இனிமேல் இணையத்தின் மூலமே பார்ப்பனப் புரோகிதனைப் பதிவு செய்து விட்டிற்கு வரவழைக்க லாம். அறிவியல் உபகரணங்களை எந்த அளவிற்கு ஏளனம் செய்யவேண்டு மென்பதற்கு இந்திய பார்ப்பனர்களைப் போல் வேறு யாரும் கிடையாது.

அயல்நாடுகளில் வாழும் பார்ப்பனர்கள் தங்களின் திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து பார்ப்பனப் புரோகிதர்களை வரவழைத்து மந்திரம் ஓதுவதற்கு செலவு அதிகமாவதால் காணொளி இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மூலையில் கணினி முன்பு அமர்ந்து புரியாத மொழியில் மந்திரம் ஓத அங்கே பார்ப்பனர்கள் மட்டுமல்லாது படித்து அயல்நாடு சென்று வேலைபார்க்கும் பார்ப்பன அடிமைகளும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கியது.

இதற்கு ஆங்காங்கே வரவேற்பு கிடைத்தாலும் பார்ப்பனர்களின் பேராசை யாரைவிட்டது? கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பார்ப்பன புரோகிதர் மாநாட்டில் ஆன்லைனில் மந்திரம் ஓதுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சாஸ்திரப்படி பார்ப்பனப் புரோகிதர்கள் நேரடியாக இருந்து மந்திரம் ஓதினால் தான் எந்த ஒரு காரியமும் முழுமைபெறும் என்று யாரோ ஒரு பேராசைப் பார்ப்பான் கிளப்பிவிட்டான்.

இந்த அய்டியாவில் உதித்தது தான் பார்ப்பனப் புரோகிதர் டாட் காம்.

எதிலும் காசுபார்க்கும் பிரபல பலசரக்கு இணையதளம் ஒன்று இந்த பார்ப்பனபுரோகிதர் இணையதளத்தை வாங்கிவிட்டது.

இப்போது பூசைக்குரிய சாமான்கள் வாங்கும் போதே பார்ப்பனப் புரோகிதரையும் பதிவு செய்யலாம். ஒவ்வோரு பார்ப்பனப் புரோகிதர் புகைப்படத்துடன் அவரது கல்வி மற்றும் அவர் செய்து வைத்த பல்வேறு திருமணங்கள் கிரகப்பிரவேஷ நிகழ்ச்சிகள் இணைத்திருக்கும் இதைப் பார்ப்பவர்கள் தங்களுக்குத் தேவை யான பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம்.

சமீபத்தில் ஆன்லைனில் பூசைப் பொருள் விற்கும் இணையதளம் ஒன்றின் மீது பழனிக் கோவில், திருப்பதி மற்றும் மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகம் பிரசாதம் மற்றும் பூசை சாமான்கள் என்ற பெயரில் போலியான பொருட்களைத் தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாது அயல் நாட்டிலுள்ள இந்துபக்தர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்று கூறி வழக்கு தொடர்ந்தது.

தற்போது திடீரென பார்ப்பனப் புரோகிதனை இணையத் தில் தேடி வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம் துவங்கியுள்ளது.

Read more: http://viduthalai.in/page7/98233.html#ixzz3VD5osAu2

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் மேனாள் அதிபர்
லீக்வான்யூ மறைவிலும் பாடம் போதிக்கப்படுகிறது!

சிங்கப்பூர் என்ற மிகச் சிறிய நாட்டின், பணியாற்றும் - பண் பாடு (கலாச்சாரம்) எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.

அந்நாட்டின் உயர்வுக்கும் - வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் காரணமாக அமைந்த அந்நாட் டின் தந்தை என்று அனைவ ராலும் மதிக்கப்படும் லீக்வான்யூ அவர்கள் நேற்று மறைந்துவிட்ட நிலையில், சிங்கை அரசு சார்பாக ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் வரும் 29.3.2015 ஞாயிறுதான் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

ஒருநாள்கூட அரசு விடுமுறையோ, நிறுவனங்கள் மூடுதலோ இல்லை.

தலைவர்கள் மறைந்தால் துக்கம் அனுசரிக்க வழக்கமான வேலையை நிறுத்தாமல், பணியாற்றுவதே அவர்களது லட்சியங்களுக்கு ஏற்ப நடந்து காட்டும் முறை என்று உலகுக்குக் காட்டுகிறது சிங்கப்பூர். (ஏற்கெனவே ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலும் சில நடைமுறைகள் நிகழ்ந்துள்ளன)

மாறாக நமது ஞான பூமியின் இம்மாதம் அடுத்த மாதம் துவக்கத்தில் உள்ள அரசு விடுமுறைப் பட்டி யலைப் பாரீர்!

மார்ச் 28 - ராமநவமி விடுமுறை

மார்ச் 29 - ஞாயிறு (வார) விடுமுறை

மார்ச் 30&31 - (வங்கிகள் திறந்திருக்கும்)

ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு விடுமுறை

ஏப்ரல் 2 - மகாவீர் ஜெயந்தி விடுமுறை

ஏப்ரல் 3 - புனித வெள்ளிக்கிழமை விடுமுறை

ஏப்ரல் 4 - சனி (அரைநாள்) விடுமுறை

ஏப்ரல் 5 - வார (முழு நாள்) விடுமுறை

ஆறு நாள்களுக்கு தொடர் விடுமுறை; இந்த நாடும் பொருளாதாரமும் எப்படி வளரும்?

அந்தந்த மதத்தவர் அவரவர் தனியே விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே!

உலகிலேயே அதிகமான அரசு விடுமுறை நாள்கள் இந்தியத் திரு நாட்டில்தான்! லீக்யூவான் மறைவை பணி செய்தே துக்கம் அனுசரிக்கும் எடுத்துக்காட்டு எவ்வளவு பின்பற்றத் தக்கது என்று நாம் உணர வேண்டும்.

லீக்வான்யூ அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி - கடவுள் பற்றிக் கவலைப்படாத (Agnostic) அவர் ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98445.html#ixzz3VIqUYOiM

தமிழ் ஓவியா said...

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?

தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
காவிரிப் பிரச்சினையில் கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒத்த குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகாவது தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (கடந்த 21ஆம் தேதி) எடுத்த முடிவின்படி வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள முழு அடைப்புப் போராட் டத்தை வெற்றியாக்கித் தர வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காவிரிப் படுகை விவசாயிகள் தஞ்சை, திருச்சி டெல்டா பகுதியில் பாசனத்திற்குரிய நீர் உரிமைக்காகப் போராடிடும் நிலைக்கு என்றுதான் விடிவு வருமோ என்ற நிலையில், 1980இல் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வேண்டுகோள் - உணர்வைப் புரிந்து, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு நடுவர் மன்றத்தை அமைக்க ஆணை பிறப்பித்தார்.

கால் நூற்றாண்டுக் காலமாக

ஒரு கால் நூற்றாண்டுக்கு மேல், இந்தப் பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி நதி நீர்ப் பங்கீடும் சரியாக தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இதற்கு நிரந்தரமான தீர்வு காண வாய்ப்பிருந்தும், காவிரிப் பிரச்சினைபற்றி முடிவு கூறுவதற்கு வாயப்பான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், புதிதாக கடந்த 10 மாதங் களுக்குமுன் பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான அரசு இன்னமும் காலந் தாழ்த்தி வருவ தினால்தான் அவ்வப்போது தமிழ்நாட்டில் குறுவை, சம்பா சாகுபடிபாதிக்கப்பட்டு விவசாயிகள் பட்டினியும், தற் கொலை எண்ணமும் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக் குத் தள்ளப்படுகின்ற வேதனை தொடர் கதையாகிறது!

கருநாடகாவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு சரியா?

இந்நிலையில், கர்நாடக அரசு, கர்நாடகத்தில் காவிரியின் உபரிநீரைத் தேக்கி மேகதாது, ராசிமணல் ஆகிய விடங்களில் மூன்று அணைகளைக் கட்ட, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கிறது!

மத்திய அரசின் சுற்றுச்சூழல், நீர்வளத் துறையின் அனுமதி எதையும் பெறாமல் பட்ஜெட்டில் அறிவிக்கும் துணிச்சல் கர்நாடக அரசுக்கு எப்படி ஏற்பட்டது? மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பதால்தானே! உச்சநீதி மன்றமும், நடுவர் மன்றமும் ஆணையிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பது ஏன்?

தமிழ்நாட்டு காவிரிப் படுகை விவசாயிகளுக்கு உரிமை பாதுகாக்கப்பட வேண்டாமா?

ஒரு பக்கம் மீத்தேன் வாயு தோண்டுதல் என்ற ஆபத்தும் நிலவளத்தைச் சுரண்டி, வேளாண்மைக்குத் தகுதியற்ற நிலை ஏற்படுத்த, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு உதவிடும் திட்டம்; இதையும் எதிர்த்து அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுத்தும் ஏதோ ஒன்றிரண்டு அறிவிப்புகள் வந்துள்ளன. அவையும் தெளிவாக இல்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை!

தமிழ்நாடு அரசு இதில் முக்கியமாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரது ஒருங்கிணைப்பை மத்திய அரசுக்கும் கர்நாடகத்திற்கும் உணர்த்தியிருக்க வேண்டும். இந்நிலையில், விவசாயிகளே முன் எடுத்துள்ளனர். கட்சிக் கண்ணோட்டம், அரசியல் பார்வைகளை ஒதுக்கி வைத்து விட்டு 23 கட்சிகளும், இயக்கங்களும் கலந்து கொண்ட கூட்டம் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்றுள்ளது. (திராவிடர் கழகமும் கலந்து கொண்டுள்ளது)

ஆளும் அதிமுக கலந்து கொள்ளாதது ஏன்?

ஆளும் அதிமுக கட்சி ரீதியாகக்கூட கலந்து கொள்ளா தது வேதனைக்குரியது என்றாலும் மற்ற அமைப்புகளும் கட்சிகளும் கலந்து கொண்டு 28ஆம் தேதி முழு அடைப்பு மாலை 6 மணி வரை என்று அறிவித்துள்ளனர்!

அதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒரு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்!

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இதில் அரசியல் பாராமல், ஆளுங் கட்சி கடை அடைப்பினை வெற்றிகரமாக நடத்திட ஒததுழைப் புத் தர வேண்டுமென கேட்டுக் கொண்டது - பலரின் சிந்தனையும் அதுவேதான் என்று உள்ளது.

எனவே, அனைத்துக் கட்சியினரும் 28ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் - அறப் போராட்டம், அமை திக்கு எவ்வித கேடும் ஏற்படுத்தாமல், நமது உணர்வினை ஒட்டு மொத்தமாகப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.

கருநாடகத்தின் ஒற்றுமையைக் காணீர்

கருநாடகத்தின் ஒற்றுமை நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
24.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98432.html#ixzz3VIqu5hYE

தமிழ் ஓவியா said...

எனது கருத்து


மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd

தமிழ் ஓவியா said...

காடுகள் பாதுகாப்பும் - வீடுகளின் பாதுகாப்பும்!

உலகில் நாடுகளும் மக்களும் நீண்ட நாள் நலவாழ்வு வாழ வேண்டுமானால் காடுகள் பாதுகாக் கப்பட்டாக வேண்டும். எந்த நாட்டில் காடுகள் அழிக்கப்படாமல் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்படுகின் றனவோ அந்நாட்டில்தான், பொருளா தார வளம் மட்டுமல்ல, நீண்ட ஆயுளைக் கொண்ட மக்களையும்கூடக் காண முடியும்.

வறட்சி ஏற்படாமல் விரட்டிட, மழை மிக முக்கியமல்லவா?

வானம் பொய்த்து விட்டது; மக்களுக்கு, மழை இல்லாததால் பயிர்கள் வளரவில்லை; நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் - காணாமலேயே போய் விட்டது, என்றெல்லாம் கூறுவ தற்கு அடிப்படைக் காரணம் காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, சூறை யாடி மனிதர்கள் பண அதிபர்கள் ஆகத் துடித்ததின் விளைவுதான்!

பயிர்கள் வளருவதுகூட பிறகு; உயிர்களுக்குக் குடிக்கவும்கூட குடிநீர் கிட்டவில்லையே!

ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதியாக ஆறுகள் ஓடின. சிற்றோடை களும், மற்ற நீர் நிலைகளும் திரும்பும் பக்கமெல்லாம் வளமையை வாரித் தெளித்த வண்ணம் இருந்தன!

இன்றோ ஒரு போத்தல் தண்ணீர் ரூபாய் 16 முதல் 20 வரை வாங்கிக் குடிக்கும் அவலம் மலிந்து விட்டதே!

பற்பல ஊர்களில், நேரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலையைவிட அதிகமாக ஒரு லிட்டர் தண்ணீர் விலை உள்ளது என்பது மிகவும் வேடிக்கையும் வேதனை யும் தரவில்லையா?

இதற்கு மூல காரணம் என்ன? காடுகள்அழிக்கப்படுவதால், மரங்கள் வெட்டிக் கொள்ளையடிக்கப்படுவதால் தான்!

மழை வேண்டி யாகம் செய்யும் சில புத்திசாலிகள் - யாகத்திற்கென மரத்தை வெட்டிக் கொண்டு வந்து போட்டு யாகம் செய்யும் வேடிக்கையும் விசித்திரமும் மலிவு இங்கே!

காடுகள் ஒரு நாட்டின் இயற்கைச் செல்வம், அவை பற்பல காரணங்களால் சூறையாடப்பட்டதன் விளைவுதான் நவீன உலகில் புவி வெப்பம் (Global Warming) உயர்ந்து, பருவ மழை பொய்த்து, மக்களுக்கு நோய்கள் ஏராளம் பரவும் அபாயமும் ஓங்கி வருகின்றது!

காடுகளை அழித்து பலர் வீடுகள் கட்டுகின்றனர்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காடுகள் போன்ற மரங்கள் சூழ்ந்த மண்ணின் நடுவில் வீடுகளை கட்டி, ஏராளமான உயிர்க் காற்றினை (Oxygen) சுவாசித்து ஆயுள் பெருக்கி வாழுகின்ற முறை உண்டு.

காடுகளை அழித்து வருவதால், காட்டு மிருகங்கள் யானை, புலி, சிறுத்தைகள், ஊர்களுக்குள் வந்து மக்களை அடித்துக் கொல்லும் அவலம் தமிழ்நாட்டிலேயே பற்பல ஊர்களில் அன்றாட அவலங் களாக நிகழ்கின்றனவே! காடுகளை அழிப்பதின் தீய விளைவே இது! இன்று ஒரு நாளேட்டில் ஒரு வாசகர் எழுதியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு தினசரி மூன்று சிலிண்டர் ஆக்சிஜன் (Oxygen) உயிர் காற்று தேவை; ஒரு சிலிண்டர் 700 ரூபாய்; மூன்று சிலிண்டர் விலை ரூ.2100 ஆகும்.

இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதைப் போலவே இனி காற்றையும் காசு கொடுத்து வாங்கும் கொடுமை (இப்போதே சில வணிக நிறுவனங்கள் நுழைந்து விட் டன) விரைவில் வந்துவிடக் கூடும்.

மூங்கில் காடுகளை வளர்க்க வாய்ப்பு இருக்கும் இடங்களில், அவை சிறிய இடங்களாக இருப் பினும் வளருங்கள். ஏராளம் பிராண வாயு இதன் மூலம் கிடைக்கும்.

எனவே காடுகளை பாதுகாப்போம் அதன் மூலம் நம் வீடுகளை - வீட்டில் வாழும் உயிர்களையும் பாது காப்போம்!

ஏதோ காடுதானே என்று அழிக்காதீர்கள்! மேழிச் செல்வம் போலவே, காடுகளும் நாம் பாதுகாக்க வேண்டிய நிரந்தரச் செல்வம் ஆகும். உயிர் காக்கும் தோழர்கள் நம் மரங்களும், காடுகளும் என்பதை மறவாதீர்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98423.html#ixzz3VIsPUpTk

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே!

பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் மற்றும் மனநலம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 13 வயதில் பெண்கள், சுய சுகாதாரம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி (விளையாட்டு) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 13 வயது முதல் 18வயது வரையுள்ள பெண் குழந்தைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.

இந்த வயதில் மிகக்குறைந்த அல்லது அதிக உடல்எடை, பிறப்புறுப்பு பிரச்சினைகள், சிறுநீரக பாதை கோளாறுகள், பூப்படைதலில் கோளாறுகள் என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வயதில் சமூகத்தில் பெண்ணுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தி ஆணுக்கு பெண், நிகரானவள் என்பதை உணர்த்த வேண்டும்.

மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் காலம் என்பதால் பெற்றோர் குழப்பத்தில் இருப்பார்கள். பூப்படைந்தது முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். 19 வயது முதல் 39 வயது வரை திருமணம் மற்றும் குழந்தை பேறு உட்பட வாழ்வின் முக்கிய திருப்பங்கள் நடக்கும் காலகட்டமாகும்.

இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்ட 3மாதங்களுக்கு முன்பாகவே விட்டமின் மருந்தை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம். மகப்பேறு காலத்தில் உரிய பயிற்சி பெற்ற மருத்துவரிடம் காண்பித்து, பிரச்சினைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

40 முதல் 65 வயதுக்குட்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நிற்கும் தறுவாயில் இருப்பதால் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். அதை உணர்ந்து உணவு கட்டுப்பாடு, அதிக சர்க்கரை தவிர்ப்பு, உணவில் சோயா மற்றும் கால்சியம், உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு குடும்பத்தினரின் துணை மிகவும் அவசியம்.

புற்று நோய்க்கான அபாயம் அதிகம் இருக்கும் காலம் இது. எனவே கருப்பை சம்பந்தமான சிறிய சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டு, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்வாழ்வின்பெரும் பகுதியை குடும்பத்திற்காக செலவிடும் பெண்ணின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.

எந்த குடும்பத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத் திருக்கும் என்பது மட்டும் உண்மை.

Read more: http://viduthalai.in/page-7/98443.html#ixzz3VIu8doNJ

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.

1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.

2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.

3) யோகாசன பயிற்சிகள்.

4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். ஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர் வில்லாமல் விளையாட்டாக செய்யலாம்.

கைகள் வலுபெற: சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இடுப்பு வனப்பு பெற: இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக்ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.

தோள்பட்டை...: பெண்களின் தோள்பட்டை அவரவர் களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு வராது.

பாதம் உறுதி பெற: குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெட் மில் பயிற்சியினையும், மெல்லிய நடைப் பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/98446.html#ixzz3VIuJK2OU

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு உகந்த பப்பாளி பழம்

தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும்.
நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.

பெண்கள் பப்பாளிப் பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. 100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது.

அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள். அந்த பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என்ற என்சைம் இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/98444.html#ixzz3VIuaLXA9

தமிழ் ஓவியா said...

நேருவும்- பசுவும்!



இந்தக் கோமாதாவை வைத்துக்கொண்டு இந்த இந்துத்துவாவாதிகள் மார டிப்பது, அரசியலாக்குவது என்பது - நேரு அவர்கள் காலத்திலேயே தொடங்கப் பட்டு விட்டது.

1952 முதல் பொதுத் தேர்தலில் பண்டிட் ஜவகர் லால் நேரு அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் ராம ராஜ்ய பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஷம்பூ நாராயண் என்பவர்.

தம்மை எதிர்த்துக் காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட நேருவிடம், அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். உங்களுக்குப் பசுவின்மீது நேசம் இல்லையா? என்று நேருக்கு நேர் நேருவிடமே கேட்டார்.

கேள்வி வந்த அடுத்த நொடியே பொட்டில் அடித் ததுபோல நேரு பதில் சொன் னார், பசுவை மட்டுமல்ல; குதிரைகளையும் கூட நான் நேசிக்கிறேன்! என்று போட் டாரே ஒரு போடு! அவ் வளவுதான் ஆசாமி வாய டைத்து நின்றார்.

உயிர்களை நேசிப்பது என்கிற காரணத்துக்காக மனிதன் மாமிச உணவைச் சாப்பிடக்கூடாதா? காய்கறி களைக்கூடத்தான் வளர்க் கிறார்கள்; (கவனிக்கவேண் டும் வளர்க்கிறார்கள்) அவை யும் பிராண வாயுவை உட் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அவற் றிற்கும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. அதனால் காய் கறிகளைச் சாப்பிட மறுப்பார் உண்டா?

உயிர்களை வதை செய் யக்கூடாது என்று சொல்லு வதைக்கூடப் புரிந்துகொள் ளலாம்; உயிர்களில் பசுவைத் தவிர மற்றவற்றைக் கொல் லலாம் என்பது எந்தவூர் ஜீவகாரூண்யம்?

ஒரு காலகட்டத்தில் இந்தப் பார்ப்பனர்கள் பசுக் களை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி பசு மாமிசம் தின்று கொழுத்தவர்கள்தான். இடைக்காலத்தில்தான் இவர் களிடம் மாற்றம் ஏற்பட்டது. இதனை வரலாற்று ஆசிரிய ரான இராகுல சாங்கிருத்தி யாயன் எழுதியுள்ளார்.

பிராமணர்கள் பவுத்தர் களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருது கிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்துக்காகவே பசு மாமிசம் தடை செய் யப்பட்டது என்றும், பசு வையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச் சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறார். (நூல்: வால்கா முதல் கங்கை வரை, பக்கம் 76).

இந்த வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், கோமா தாவுக்குள் ஒளிந்திருக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் உள்நோக்கம் என்னவென்று எளிதில் விளங்கிவிடும் அல்லவா! - மயிலாடன் 25-3-2015

தமிழ் ஓவியா said...

அனுமதியோம்!

செய்தி: பயங்கரவாதம் இல் லாத சூழலை பாகிஸ்தான் உருவாக்கவேண்டும்.
-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சிந்தனை: ஆமாம், இந்தி யாவுக்குள் அத்தகைய வாதங்களை நடத்த எங் களுக்கு மட்டுமே பிரத்தி யேக உரிமை உண்டு - அதை யாரும் தட்டிப் பறிக்க அனுமதியோம்!

Read more: http://viduthalai.in/e-paper/98506.html#ixzz3VOe4ZXbd

தமிழ் ஓவியா said...

சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துப் பதிவுக்கு கைது செய்யும் சட்டப் பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 25_ சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்து களைப் பதிவு செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிர டித் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2012-ஆம் ஆண்டு, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே காலமான போது, மகாராஷ்டிரத்தில் கடையடைப்பு நடத்தப்பட் டதை விமர்சித்து முகநூல் பக்கத்தில் கருத்து வெளி யிட்ட இளம்பெண்ணை அந்த மாநில காவல்துறை யினர் கைது செய்தனர். அந்த கருத்தை முகநூல் பக்கத்தில் ஆதரித்த (லைக்) மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். அதேபோல, சமாஜ் வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கானை விமர்சித்து முகநூலில் கருத்து வெளியிட்டதாகக் கூறி பள்ளி மாணவர் ஒருவரைக் கடந்த 18-ஆம் தேதி உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கை களுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இத்தகைய கைது நடவடிக் கைகளுக்கு எதிராக, ஷ்ரேயா சிங்கால் என்ற சட்டக் கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தார்.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் ஆட் சேபகரமான விமர்சனங் கள், கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு, ஒருவரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவில் திருத் தம் கொண்டு வரவேண்டும் என்று அவரது மனு வில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. மேலும், இந்தச் சட்டப் பிரிவானது தவறான வகை யில் பயன்படுத்தப்படுவ தாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. சமூக வலை தளப் பக்கங்களில் ஆட் சேபகரமான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களை, காவல்துறைத் தலைவர் அல்லது அய்.ஜி-யிடம் உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என்று அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனா லும்கூட, உச்சநீதிமன்றத் தின் உத்தரவை மீறி, அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந் தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பக் குற்றவியல் சட்டத்தின் 66-அ பிரிவை நீக்கக் கோரும் பொதுநல வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரர், நாரிமன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை வெளி யிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் அவசிய மான ஒன்று. தகவல்

தொழில்நுட்பக் குற்றங்களுக்கான சட்டத்தின் 66-அ பிரிவு மக்களின் கருத்து உரிமையை நேரடியாகப் பாதிக்கச் செய்கிறது. அரசமைப்புக்கு எதிரானது: இந்தச் சட்டப் பிரிவின் மூலம் பேச்சு, கருத்துச் சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. 66-அ பிரிவின்கீழ் ஒருவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஷரத்துகள் அந்தச் சட்டப் பிரிவில் இடம் பெறவில்லை. இந்தச் சட்டப் பிரிவானது அரசமைப்புக்கு முரணான ஒன்று. சமூக வலைதளங்களில் ஆட்சேப கரமான கருத்து வெளியிட்டதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடு இருக்கும்போது, அதை எவ்வாறு சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியும்? சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் ஒருவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றலாம். அதுவே மற்றொருவருக்கு வேறு மாதிரியாகத் தோன்றலாம். மத்தியில் ஆட்சியமைப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இதுபோன்ற சட்டப் பிரிவுகளானது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். மத்தியில் அடுத்து ஆட்சியமைப்பவர் கள் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு தற்போதுள்ள அரசு உறுதியளிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு கோரிக்கை முன்னதாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-அ பிரிவு மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறிக்கும் பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 66-அ பிரிவைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில், முக்கியத் திருத்தங்களையும் வழி முறைகளையும் உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98502.html#ixzz3VOeEcrSj

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டில் ஒன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். - (குடிஅரசு, 4.10.1931)

தமிழ் ஓவியா said...

மதுரையில் மகளிரணி சிறப்பு வழக்காடு மன்றம்


மதுரை, மார்ச் 25_ 15.03.2015 மாலை 6.00 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தன் சார் பாக 27_ஆவது நகழ்ச்சி யாக மகளிர் தன சறபபு வழக்காடு மன்றம் மாட் டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தயாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னர் கல்லுரி பேராசிரி யர் அ. ஜோதி தலைமை தாங்கினார். ந.சரோசா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரணி தலைவர்), வே.சுசிலா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரண செயலாளர்) மற்றும் மோ.புஷ்பலதா (மதுரை மாநகர தராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர்) ஆகியோ முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சியமளா வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரி யர் க.அகலாகுமாரி (இராசா பொறயயல் கல்லூரி இணைப்புரை வழங்கனார். ''பெணகள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது.'' என்ற வழக்கனைத் தொடுத்து மகேஸ்வரி (அக்ரி) (இணை ஆணையர் வணிகவரித் துறை) வழக்காடினார். அவரது வழககினை மறுத்து வழக்கறிஞர் இன்னிசை (சென்னை உயர்நீதிமன்றம்) எதிர் வழக்காடினார். இருதரப்பு வாதுரையைக் கேட்டு பெண்கள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் ரேணுகா தேவி விரிவான விளளக் கத்தோடு தர்ப்பினை வழங்கனார். நகழ்ச்சியின் இடையே ''மம்மீ.......... எனககு ஒரு டவுட்டு'' என்ற நகழ்ச்சியை பெரியார் பிஞ்சு த.ஓவியா மற்றும் பா.வேல்விழி நடத்திக் காட்டினர். அந்நிகழ்ச்சி யில், 1) ''தருபபுகழைப்பாடப் பாட வாய்மணக்கும்'' என்று பாடுகிறார்களே அவர்கள் பல்துலக்க மாட்டார்களா? 2) ''தருநீறில் மருந்து இருக்கு தெரியுமா?'' என்கிறார் களே மருநது கடையில் அது விற்குமா? 3) ''சரஸ் வதியைக் கும்பட்டால் தான் படிபபு வரும்'' என்கிறீர்களே எங்கள் வகுப்பில் ராபர்ட் முதல் இடத்திலும், இஸ்மாயில் இரண்டாவது இடத்தி லும் இருக்கிறார்களே அவர்கள் சரஸ்வதியை கும்பிட்டார்களா?'' 4) ''பூஜைக்கு முன் கொழுக் கட்டையை தின்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்கிறீர்களே அந்த சாமியையே தருடிச் செல் கிறார்களே சாமி ஏன் அவர்கள் கண்ணை குத்த வில்லை?'' என்ற பகுத்தறிவு வினாக்களை பெரியார் பிஞ்சு த.ஓவியா சுவைபட எழுப்பிய போது அரங் கமே சிரிபபொலியால் அதிர்ந்தது. பார்வையா ளர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்தது. நகழ்ச்சியின் இறுதியில் பா.வேல்விழி நன்றியுரை ஆற்றனார்.

Read more: http://viduthalai.in/page-4/98484.html#ixzz3VOh1sBjK