Search This Blog

12.3.15

இல்லறம் என்பது தொல்லையே!-பெரியார்

இல்லறம் என்பது தொல்லையே!




மனித சமுதாயத்திற்கு இருந்துவரும் தொல்லை என்பவற்றில் மாபெரும் தொல்லையும், மற்றெல்லா தொல்லைகளுக்கும் பிறப்பிடமாவதானது மனிதன் இல்லறம் நடத்துவது, சம்சாரம் நடத்துவது, குடும்பம் நடத்துவது, குடித்தனம் நடத்துவது என்பன போன்ற சொற்களின் பொருளான வாழ்க்கை நடத்துவது தான்.


ஆணுக்குப் பெண் தேவையும், பெண்ணுக்கு ஆண் தேவையும் வெறும் காம இச்சைக்குத்தானே ஒழிய, குடும்பம் நடத்துவதற்கு அல்ல என்பதை மனிதன் உணர வேண்டும்.


இந்தக் "குடும்பம் நடத்துகிறது, இல்லறம் நடத்துகிறது" என்கின்ற தொல்லை மனிதனுக்கு ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் சொத்துரிமை ஏற்பட்டது தான்.


இந்தச் சொத்துரிமையின் தொல்லை குடும்பம் மாத்திரமல்ல, அதைத் தேடுவதிலும், பராமரித்துப் பாதுகாப்பதிலும் உள்ள தொல்லை மனிதனின் பெரும்பாலான நேரத்தை ஈடுபடுத்தி, பெரும் கவலையில் மூழ்கி இருக்க வேண்டியதாகி விடுகிறது. மனித ஜீவனின் வாழ்வு இதற்குத் தானா பயன்பட வேண்டும்?


இப்படி நான் சொல்வது "வாய்ப் பேச்சு வேதாந்த ஞானம்" என்று சொல்லப்பவதில்லை. அனுபவத்தின் பேரால், ஆராய்ச்சியின் பேரால்,
மனித சமுதாய நல்வாழ்வுக்கும், நிம்மதியான, கவலையற்றத் தன்மைக்கும் மனித ஜுவ வளர்ச்சிக்குமாகவே சொல்லுவதாகும்.


மற்றும் மனிதன் இதை நான் சொல்லுவதை ஏற்பதற்கு ஏதோ கஷ்டமிருப்பதாகவும், ஏற்கனவே முடியாது என்றும் யாரும் கருத வேண்டியதில்லை. இல்லறம் வேண்டாம்; குடும்ப வாழ்க்கை வேண்டாம் என்பதற்கு மனிதன் ஆணோ, பெண்ணோ எந்தவிதமான கஷ்டமும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரே ஒரு காரியம் செய்யாமல் இருந்தால் அதுவே போதும்.


அதாவது மனிதன் கல்யாணம், திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்பவற்றில் எதையும் செய்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் மனிதனுக்கு விடுதலை - 'மோட்சம்' என்பது.

அதனால் குடும்பமே ஏற்படாது. தேவையுமிருக்காது. மனிதனுக்கு (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தொல்லையோ, கவலையோ கூட இருக்காது. இருக்க இடமும் ஏற்படாது.

இந்தப்படி இருக்க முடியுமா? என்று கேட்கலாம். முடியும் முடிந்தும் இருக்கிறது. சில நாடுகளில் சமீபகாலம் வரையில் பழக்கத்தில் அனுபவத்தில் இருந்தும் வந்திருக்கிறது. ஓர் அளவுக்கு இருந்தும் வருகிறது.

எங்கே என்றால் மலையாளத்தில் - நாயர் வகுப்பில், 'சம்பந்த முறை' என்ற தத்துவத்தில் இருந்து வந்தது வருகிறது.


ஒரு பெண் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தனது காதலனை (சம்பந்தக்காரனை) வரவேண்டாம் என்று சொல்லி விடலாம். அதுபோலவே ஓர் ஆண் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தன் காதலியிடம் (சம்பந்தக்காரியிடம்) போக்கு வரத்தை நிறுத்திக் கொள்ளலாம்.


இவர்கள் இருவருக்குள் குடும்பத் தொல்லையோ, அதாவது பிள்ளைக்குட்டி சம்பந்தமான ஜீவனாம்சத் தகராறோ, சொத்து தகராறோ ஏற்படுவதில்லை. ஏற்படவும் வழி இல்லை.


இந்த நிலை அங்கு வெகு சகஜமாக இருந்து வந்தது; சில குடும்பங்களில் இருந்து வருகிறது. சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் அங்கு (மலையாளத்தில்) மக்களுக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் அரசாங்க ஆதாரங்களிலும், சமுதாய வாழ்க்கை ஆதாரங்களிலும் தகப்பன் பெயருக்குக் கலமே இல்லை. ஒருவருக்கொருவர் கேட்கவும் மாட்டார்கள். ஆதாரங்களில் குறிப்பதும் இல்லை. திதி செய்தாலும் தகப்பன் பேர் யாரும் சொல்லுவதில்லை.

இதன் பயனாக அவர்களது (நாயர்களுடைய) நாணயம், நேர்மை, ஒழுக்கம் மற்ற நாட்டார்களை விடச் சிறப்பானது; மேலானது என்று சொல்லலாம். இது எனது 60, 70-ஆண்டுகளுக்கு முற்பட்ட அனுபவமாகும்.


இது மாத்திரமல்ல; அங்கு இந்தக் குடும்பத் தொல்லை காரணமாக ஒரு பெண்ணுக்கு 2, 3-கணவன்மார் உண்டு. இவர்கள் இந்தக் கணவர்களின் சகோதரர்களாகவும் இருப்பார்கள். அல்லது ஒருவருக்கெர்ருவர் நெருங்கிய உறவினர்களாகவும் இருப்பார்கள். இதன் பலன் என்னவென்றால் குடும்பத் தொல்லை, இல்லற பாரம் இல்லை என்பதுதான். இருந்தால் 'மனசாட்சி'க்கு விரோதமாய் நடந்துதான் ஆக வேண்டும்.

மனிதன் படிக்க வேண்டும். வருவாய்க்கு ஏற்ற தொழில் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தாயார் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் சாப்பாடு உணவு விடுதிகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் இருப்பிடமாக வருவாய்க்கேற்ப லைன் - வீடுகளில் இரண்டு அறை, அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களும் இப்படியே தான் இருக்க வேண்டும். பிள்ளைகள் பெறுவதை இரண்டுக்கு மேல் இல்லாமல் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குப் படிப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை சர்க்கார் கொடுத்து விடுகிறார்கள். பணம் கையில் மீதி இருக்குமானால் பாங்கியில் போட்டு விட வேண்டும். காதலனிடத்தில் காதலுக்கு ஆக பணம் பெறக் கூடாது. தமது இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த வேண்டும் ஆணை.


இந்த நிலையை 1932-ல் நான் மேல் நாடுகள் பலவற்றில் நேரில் பார்த்தேன். அதாவது பலருக்கு பாஸ்போர்ட் லவ்வர் - லவ்லேடி தான். குடும்பத்துடன் இருப்பவர்களும் உணவு விடுதியில் உணவு கொள்ளுவதையும், வாடகை அறைகளில் தனித்தனியாக வாழ்வதையும் பார்த்தேன்.

நம்மில் உள்ள பெரும் தொல்லைக்குக் காரணம், காதலை இரண்டாகப் பிரித்து விட்டோம். சுதந்திரக் காதல் என்றும், அடிமைக் காதல் என்றும்  பிரித்து விட்டோம். அதாவது "களவு" என்றும், "கற்பு" என்றும். இந்தக் கற்பு, அடிமைக் காதல் ஆசிரியர்களால் ஏற்பட்டதே ஒழிய, நமக்கு இருந்திருக்கவே முடியாது. ஏனென்றால், அந்த அடிமைக் காதல் முறை நம்முடையதாகவே தோன்றவில்லை. ஏனெனில், நமக்கு அந்த அடிமைக் காதலுக்கு அவசியமே இல்லை. ஆண், பெண் சரிநிகர் சமானமாக இருந்தவர்கள். இதுதான் இயற்கையும் சுதந்திரமாகும்.

ஆகவே, பெண்ணை அடிமைப்படுத்துவது தான் கற்பு அடிமைக் காதலாகி விட்டது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் தொல்லை, துன்பம். மனித சமுதாயத்தையே உழவன் கை மாடுகள் போல ஆக்கிவிட்டது.


ஆகவே, திருமணம் என்பது ஒரு பெண்ணைச் சுவாதீனமற்ற அடிமையாக்குவது மாத்திரமல்லாமல், ஓர் ஆணும் இல்லற முறைக்கு - கவலைக்கு அடிமையாகிறான், தன்னைப் பலி கொடுத்து விடுகிறான்.


இதனால் மனித வளர்ச்சி, உலக வளர்ச்சி பெருமளவிற்குத் தடைப்பட்டு விடுகிறது. ஜீவனும், துக்க சாகரத்தில் அழுந்திக் கிடக்க நேரிடுகிறது.

நான் சொல்லுகிறேன், இந்தச் சுதந்திரத்திற்குப் பெண்கள் இசைய மாட்டார்கள். அவர்களுக்கு ஓர் எஜமான் இல்லாவிட்டால் ஆடை நழுவுவது போன்ற உணர்ச்சி இருக்கும்.

ஆனால், ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.

சுயநலமற்ற பொதுத் தொண்டுக்கு ஏராளமான மக்கள் ஏற்படுவார்கள். மக்களுக்கும் நிபந்தனையற்ற பகுத்தறிவு வளர்ச்சி ஏற்பட முடியும். இதனால் ஆயுள் வளரும்.

நாட்டில் மக்களிடம் சமுதாயத்தில், ஒழுக்கமும், நாணயமும், நேர்மையும் பரவும். சாகும் போதும் கவலையற்றுச் சாவான்.

இன்று மக்களிடையில் காணப்படும் அல்ப சுபாவமெல்லாம் மறைந்து ஒழியும். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு சமுதாயமாகிய பெண்கள் சமுதாயம் பேரறிஞர் சமுதாயமாக உயரும். விஞ்ஞான தத்துவப்படிப் பார்த்தால் இல்வாழ்வில் பெண் மாத்திரம் அடிமை அல்ல. ஆணும் அடிமையே ஆவான்.

இல்லறம் என்றாலே சுதந்திரமற்ற வாழ்வு என்பதுதான் தத்துவம்.

---------------------------- "விடுதலை' ஞாயிறு மலர் தந்தை பெரியார் கட்டுரை. "விடுதலை" 02.03.1969

32 comments:

தமிழ் ஓவியா said...

தாளமுத்து


இந்தி எதிர்ப்பு வரலாற்றில் நடராசன் - தாளமுத்து என்ற பெயர்கள் என்றென்றும் எதி ரொலிக்கும் இலட்சியப் பெயர் கள் ஆகும்.

1938 ஜனவரி 15 இல் நட ராசன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரன் மரணத்தைத் தழுவினார். அது போர்க் குரலாக சென்னை சட்டசபையில் வெடித்தபோது ஆணவக்காரரான பிரதமர் ஆச்சாரியார் (ராஜாஜி) என்ன சொன்னார் தெரியுமா?

நடராசன் என்பவர் படிப்பு வாசனை அறியாத ஒரு அரி ஜன்; தன் தாய் மொழியிலும் கூட நடராசனுக்கு எழுதத் தெரியாது என்று பதிலளித்தார்.

படிப்பு வாசனையற்ற கார ணத்தால்தான் நடராசனுக்கு மர ணம் நேர்ந்தது என்று அமைச் சர் கருதுகிறாரா? என்று அப்துல் அமீர்கான் சுடச்சுடக் கேட்டார்.

படிப்பில்லாததால்தான் அந்தக் கைதி மறியல் செய்ய நேர்ந்தது. சிறையில் அவர் இறந்து போனார் என்று ராஜாஜி மமதை அடங்காமல் மறுமொழி கூறினார். அதே சென்னைச் சிறைச் சாலையில் அடுத்து இரு மாதங்கள் கழித்து தாளமுத்து என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த வீரர் மரணத்தைத் தழுவினார் (12.3.1939).

இறுதி ஊர்வலம் கண் ணீரும் கம்பலையுமாகப் புறப் பட்டது. மயானத்தில் தோழர் சி.பாசுதேவ் தலைமையில் இரங்கற்கூட்டம் நடைபெற்றது.

இந்தி எதிர்ப்பு எட்டாவது சர்வாதிகாரி எஸ்.சம்பந்தமும், தளபதி அண்ணா அவர்களும் இரங்கல் உரை ஆற்றினார்கள்.

அண்ணா அவர்கள் அப் போது பேசினார்: நடராசன் அடக்கமான காலத்து மீண்டும் இத்தகைய நிகழ்ச்சி தமிழ் நாட்டில் ஏற்படாதென நினைத் தேன். ஆனால், நாடார் குல திலகம் தாளமுத்து இறந்தது காண மனம் கலங்குகிறது. தோழர்கள் நடராசன் தாளமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகின்றேன். முன்பு நான் சாக்கோட்டை சுய மரி யாதை மாநாட்டில் பேசும் போது, நாடார் சகோதரர்களைத் தமிழர் அறப்போருக்கு வருமாறு வருந்தி அழைத்தேன். ஆனால், அவர்களைத் திருப்பிக் கொடுப் பதாக உறுதி கூற முடியாதெனத் தெரிவித்துத்தான் அழைத் தேன்.... நடராசனை - தாள முத்தை நாம் இழந்தோம். கண்ணீர் விட்டோம், கலங்கி னோம். நெஞ்சு துடித்தோம், நிலை தடுமாறினோம். ஆனால், இதே சமயத்தில் ஆச்சாரியார் மார்தட்டி, கருப்புக் கண்ணாடி யைத் துடைத்த வண்ணம் கலகலவெனப் பேசுவார். ஏன் பேசமாட்டார்? தமிழன் ஆச்சா ரியார் காலின்கீழ் இருக்கிறான்.

இரண்டு மணிகளை இழந் தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே அது எழுப்பப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்பவேண்டும். ஏன் பெரியார் சற்றுத் தளர்ச்சி அடைந்த காலத்திலெல்லாம் இந்த இரு சமூகங்கள்தான் அவருக்கு உதவி செய்து வந் திருக்கின்றன என்று அண்ணா பேசியதை தாள முத்து மறைந்த இந்த நாளில் நினைவு கூர்வோம்.

- மயிலாடன்

குறிப்பு: மானமிகு கலைஞர் அவர் கள் சென்னையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டடத்திற்கு (எம்.எம்.டி.ஏ.) தாளமுத்து- நடராசன் பெயர் சூட்டி வரலாற்றில் பதிவு செய்துள்ளார்).

Read more: http://viduthalai.in/e-paper/97720.html#ixzz3UCCU0n8C

தமிழ் ஓவியா said...

புதிய தலைமுறை அலுவலகம்முன் இன்று காலைகூட டிபன்பாக்ஸ் குண்டு வீச்சு எனும் வன்முறை!

ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று திரண்டு முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

புதிய தலைமுறை அலுவலகம் முன் இந்துத்துவா அடிப்படைவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் வன்முறையைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தாலிபற்றிய விவாதம் ஒன்றினை புதிய தலை முறை தொலைக்காட்சி சில நாள்களுக்குமுன் ஏற்பாடு செய்ததை, மிரட்டி நடக்கவிடாமல் செய்ய, அந்த ஊடகவியலாளர்களான கேமிராமேன் மற்றும் சில ஊழியர்களைப் பின்புறத்தில் சென்று தாக்கி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, கருத்துச் சுதந் திரத்தை எதிர்த்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள் ளனர்; அதுவும் மோடி அரசு மத்தியில் வந்ததை யொட்டி தங்கு தடையின்றி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. அவ்வமைப்புகளின் தலை வர்கள் வன்முறையை நியாயப்படுத்துவது போன்ற அறிக்கைகள் வாயிலாக அச்செயல்களைத் தூண்டு வதும் வெளிப்படையாகி விட்டது.

தாலி அணிதல் மதத்தின் கலாச்சாரமா?

தாலி அணிதல் என்பது ஒரு மதத்தின் கலாச்சாரம் என்றுகூட எவராலும் வாதிட முடியாது; காரணம், மதுரை, தேனி போன்ற சில மாவட்டங்களில் மற்றும் பல பகுதிகளில் தாலி கட்டாத வைதிக திருமணங்களே பலவும் வழமையாக (Customary Marriages) நடை பெற்று வருவது கண்கூடு.

இதை ஒரு விவாதத்திலேயே கொண்டு வரக்கூடாது என்பதற்காக அத்தகைய தொலைக்காட்சி ஊடக ஊழி யர்களைத் தாக்குவது வன்மையான கண்டனத்திற் குரியது. இது அச்சுறுத்திப் பணிய வைக்கும் பாசிச அணுகுமுறையாகும்.

இதுகுறித்து நாம் சில நாள்களுக்கு முன் (9.3.2015) அறிக்கையும் விடுத்தோம்.

புதிய தலைமுறை அலுவலகம்முன் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!

இன்று (12.3.2015) காலை அதே அலுவலகம் (புதிய தலைமுறை) முன்பு இரண்டு டிபன்பாக்ஸ் குண்டு களை வெடிக்கச் செய்துள்ளதானது - மிகமிக வேத னைக்கும், வெட்கத்திற்கும், வன்மையான கண்டனத் திற்கும் உரிய நடத்தை கெட்ட செயல் அல்லவா?
அந்த அலுவலகத்திற்கு முன்பே தக்க பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமையல்லவா?

மதவறியர்களைக் கைது செய்க!

மதவெறியர்களை உடனடியாகக் கைது செய்து, கருத்துச் சுதந்திர உரிமையைக் காவல்துறையும், தமிழ்நாடு அரசும் நிலை நிறுத்த முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருக்கிறது என்று மற்றவர்கள் பேசுவார்களே என்ற கவலை கூடவா இந்த அரசுக்கு இருக்காது?

ஒத்த கருத்துள்ளவர் ஒன்று திரண்டு எதிர்த்திடுவோம்!

இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச் சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது; ஒட்டுமொத்த கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப் பட்ட போர்! இதற்குத் தக்க பதிலடியை - வன்முறையால் அல்ல - ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வரவேண்டும் - முறியடிக்கவேண்டும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
12.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97725.html#ixzz3UCChV07N

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்துத்துவா ஆட்சி

பாலியல் குற்றங்களைவிட மாட்டிறைச்சி தடைக்கு அபராதம் அதிகமாம்

மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு அய்ந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது


புதுடில்லி, மார்ச் 12_ ஏழைகளின் புரதச் சத்து மிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு மகா ராஷ்டிரத்தில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரி ணாமுல் எம்.பி., இந்தத் தடையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தைவிட, பாலியல் வன் முறை வழக்குகளுக்கு விதிக்கப்படும் தொகை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநி லத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வைத்திருப் போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அப ராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரிணாமுல் எம்.பி. தெரீக் ஓப்ரியன், மகா ராஷ்டிரத்தில் மாட்டி றைச்சி விற்பனைக்குத் தடை விதித்திருப்பது குறித்து பேசும்போது, மாட்டிறைச்சி விவ காரத்தை நாம் மதம் சார்ந்த கோணத்தில் பார்க்கக்கூடாது. இந்தத் தடையால் சிறுபான்மை யினர், தலித் மக்கள் என தாழ்த்தப்பட்டச் சமூகத் தைச் சார்ந்த பலர் பாதிக் கப்படுவார்கள். வடகிழக்கு மாநில மக்கள் அனை வரும் மாட்டிறைச்சியை தங்களது முக்கிய உண வாக கொண்டிருக்கின் றனர். ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திக ழும் மாட் டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்கக் கூடியதாக இல்லை.

பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விதிக் கப்படும் தண்டனையை விட இந்தத் தடை உத் தரவு பயங்கரமானதாக உள்ளது. அதில், வழங்கப் படும் அபராதத் தொகை யைக் காட்டிலும் மாட்டி றைச்சி தடைக்கு அபரா தம் அதிகமாக உள்ளது.

இந்த தடையால் மற்ற இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கோழிக்கறி, மீன் உள்ளிட்டவைகளின் விலை ஏற்கெனவே அந்த மாநிலத்தில் உயர்ந்து விட்ட நிலையில் இந்தத் தடை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் ஏற் கெனவே 55 சதவீத அள வுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சட் டத்தால் வயது முதிர்ந்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேறொரு விலங்குக்கு தடை உள் ளது. ஆனால், குறிப் பிட்ட கடைகளில் விற் பனை செய்ய அவர்கள் அனுமதித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

ஓப்ரியன்னின் கருத் துக்கு பாஜக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்களுக்கு எந்த விவகாரத்தையும் எழுப்பும் உரிமை உள்ளது. ஆனால் அதனை முறையாக எழுப்ப வேண்டும். இந்த விஷயத் தில் விவாதத்துக்கு அனு மதிக்கக் கூடாது என்று மாநிலங்களவை அரசி யல் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/97726.html#ixzz3UCCx0ZEB

தமிழ் ஓவியா said...

பிள்ளையால் வரும் தொல்லை


ஒரு மனிதன் தான் பிள்ளை குட்டிகாரானாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும், பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றன. - (குடிஅரசு, 12.8.1928)

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...! (2)

19 டிசம்பர் 1973 அன்று தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவாற்றப் புறப்படுகிறார் தனது வேனில்!

புலவர் கோ.இமயவரம்பனும், நானும் வேனில் உடன் செல்லுகிறோம்;

அந்த வாரத்தில் வெளிவந்த பிரபல இங்கிலீஷ் வார ஏடான தி இல்லஸ்ட் டிரேடட் வீக்லி ஆஃப் இண்டியா (The Illustrated Weekly of India) இதழில், ஆணின் விந்து வங்கி (Semen Bank) என்ற ஒன்றை, ரத்த வங்கி போல - சேமித்து வைக்க ஆய்வாளர்கள் ஆய் வில் வெற்றி கண்டுவிட்டனர்; இதன்படி ஒரு மனிதனுக்குப் பிள்ளை பேறு, அவன் திடீர் விபத்தினாலோ அல்லது எப்படி மறைந்துபோன பின்புகூட அவ் விந்தைச் செலுத்தி, பிள்ளைப் பேறுக்கு வழிவகை செய்யலாம் (அவனது மகள் அல்லது மகன்) என்று இருந்த அறிவி யல் - மருத்துவவியல் முன்னேற்றம் வளர்ச்சிபற்றிப் படித்துக் காட்டினேன்!

அதுபோலவே, mprint என்ற ஆங் கில மாத இதழ் ஒன்றில், வழக்கமான ஆண் - பெண் சேர்க்கையில்லாம லேயே, பரிசோதனைக் குழாய் (Test Tube Baby) குழந்தை முயற்சி வெற்றி பெற்றது என்பதையெல்லாம் அக் கட்டுரையில் (இத்தாலியில் முதல் குழந்தை பிறந்தது) குறிப்பிட்டிருந் ததைக் கேட்டு, மிகவும் பூரிப்புடன் கைதட்டி, மகிழ்ச்சி பொங்க, நம் சிந்தனைகளின் செயலாக்கத்தை நாமே பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்தோங்கி விட்டதே! இன்னமும் எங்கெங்கே, என்னவென்னமோ வெல் லாம்கூட நடக்கும்!

இப்போது நான் யோசிக்கிறேன் - நமக்கு வயதாகிவிட்டதே - ஒரு 10, 20 ஆண்டு கம்மியாக இருந்தால், எவ் வளவு அதிகமாக இன்னமும் பிரச்சாரம் செய்து பகுத்தறிவின் வெற்றிபற்றி மக்களிடம் எடுத்துக் கூறலாமே! வீணாக இந்த முதுமை நமக்கு குறுக்கே வந்து விட்டதே என்று உளப்பூர்வமாக வருந்தினார்!

90 வயதில் உடல்நலம் தளர்ந்து, கழிக்கும் சிறுநீரை ஒரு போத்தலில் பிடித்து, (இணைக்கப்பட்ட இரப்பர் குழாய் வழிவந்த நிலையில்) அந்த கண்ணாடி போத்தலை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து, தன் கையிலே தூக்கிக்கொண்டு, இருபுறமும் இரண்டு பேர்களின் தோள்களைப் பிடித்து எழுந்து நிற்கவும் ஆன நிலையிலும்கூட பயணம் செய்து மணிக்கணக்கில் பேசி அறிவுறுத்திடவும் அய்யா தவறவில் லையே!

முதுமை வாட்டியும், முதிர்ச்சி பீறிட்டுக் கிளம்பிய வண்ணம் இருந்தது!

அப்படி 19.12.1973 அன்று மாலை பயணம் சென்ற வாகனத்தில் குறிப் பிட்டபோது, அய்யா தந்தை பெரியாரின் உணர்வுகள் எப்படி என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இயற்கையின் கோணல் புத்தி அந்த உரைதான் அவரது இறுதிப் பேருரையாக - மரண சாசனமாக ஆகிவிட்டது!

மேலே எழுதிய பல அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி சிலாகித்துப் பேசியது அவ்வுரையில் இடம்பெற்றுள் ளதை அய்யாவின் குரலிலேயே எவரும் ஒலிநாடாவில் இன்றும் கேட்கலாம்!

வயது ஏற ஏற, முதிர்ச்சி நமக்கு ஏற்படவே செய்கிறது. இளமைத் துடிப் புடன் எவரும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று பேசுவது தவிர்க்கப்படக் கூடும்!
முதுமை முத்திரை - தெரிந்தோ தெரியாமலோ முதிர்ச்சி முத்திரையைப் பதிப்பிக்கவே செய்கிறது.

என்னைப் பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட அனுபவம்கூட, பல்வேறு சோதனைகள் வந்தபோது முன்பு இருந்த பதற்றம் - துடிதுடிப்பு இப்போது இருப்ப தில்லையே!

இமயமே இடிந்து நம்மீது விழுந்து விடுவதுபோல பிரச்சினைகள் வந்து விழுந்தாலும், அதை உணர்ச்சிவயப் படாமல், அறிவுப்பூர்வமாக, அணுகி சிந்திக்கவேண்டியவற்றைச் சிந்தித்தும், அறிவுரை கேட்கவேண்டியவர்களிடம் கேட்டும், எதையும் வெல்லும் பகுத் தறிவு அணுகுமுறையை முதிர்ச்சி - முதுமையின் தொடர்ச்சியாக வருகிறது என்பதை (பெரியார் தந்த புத்தி கார ணமாக) உணர்ந்து வருவதால், முதுமை கண்டு அஞ்சாதீர்! முதிர்ச்சியை வர வேற்க ஆயத்தமாயிருங்கள்!

எனவே,

முதுமையே போ! போ!

முதிர்ச்சியே வா! வா! என்று கூவிக் கூத்தாடி குதுகலமாகி வாழ்க்கையை அணுகுங்கள்!

(தொடருகிறது)

Read more: http://viduthalai.in/page-2/97735.html#ixzz3UCDcEQPH

தமிழ் ஓவியா said...

கார்ப்பரேட் கம்பெனி!

இன்றைய மத்திய பி.ஜே.பி. அரசு கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி என்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. மிகவும் எளிதாக எவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஆட்சியின் சட்டங்களும், நடவடிக் கைகளும் - கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? என்ற பழமொழிபோல தெளிவாகவே தெரிவிக்கின்றன

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் இடம்பெற் றுள்ள சோஷலிஸ்ட் என்ற அர்த்தமிக்க முக்கிய சொல்லையே நீக்கிவிட்டு, அரசு செலவில் விளம்பரம் செய்யப்பட்டது என் றால், இதன் முக விலாசத்தைத் தெரிந்துகொள்ள முயற்சிகள் தேவைப்படாது.

எதிர்க்கட்சிகள்தான் மத்திய பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை (NDA) இந்தக் கோணத்தில் விமர்சிக்கின்றன என்று கருதத் தேவையில்லை.

மத்திய பி.ஜே.பி.யின் ஆர்.எஸ்.எஸின் துணை அமைப் பான பாரதீய மஸ்தூர் (பி.எம்.எஸ்.) சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதமே பி.ஜே.பி. அரசின் போக்கு எத்தன்மையது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கும்.

மத்தியில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே, தொழிலாளர்கள், சாமானிய மனிதன், கீழ் நடுத்தர வகுப்பினர், உழவர்கள், கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளிட்டவர்கள் மத்திய அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதக மாகவே மத்திய அரசு கொள்கைகளை வகுக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய ஆலோசகர்களை அதிகாரமிக்க பதவியில் அமர்த்தி வருகிறது. இதற்கு நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர், பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய பதவிகளை உதாரணமாகக் கூறலாம். அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

இப்போது உயர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர்களில் சிலர், உலகப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் சென்றபோது, அமெரிக்காவில் திவாலான நிதி நிறுவனங்களுக்கு ஆலோச கர்களாக இருந்தனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தொழி லாளர் நல சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மேலும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறை வேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது நில உரிமையாளர்களின் நலனைப் பாதிக்கும். பொருளாதார சீரழிவுக்கு வழிவகுக்கும். அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நல்லதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தியும் பி.எம்.எஸ். பொதுச்செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய் பிரத மருக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கும் மேற்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் டாட்டா நிறுவனத்துக்காக விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்ட சூழ்நிலையில் அம்மாநில மக்கள் கிளர்ந்தெழுந்ததன் காரணமாக துண்டைக் காணோம்; வேட்டியைக் காணோம் என்று மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறிய டாட்டா நிறுவனத்திற்கு வெற்றிலைப் பாக்கு வைத்து, ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்தவர் - இன்றைய பிரதமரான அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி.

நிலங்களைத் தாரை வார்த்ததோடு அல்லாமல் ஏராளமான சலுகைகளை டாட்டா குழுமத்திற்கு வாரியும் வழங்கியவர்.

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தவர்தானே இன்றைய பிரதமர். அவரின் நோக்கமும், அணுகுமுறையும் வேறு விதமாக இருக்கும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

பி.ஜே.பி.யின் கூட்டணிக் கட்சியான சிவசேனா நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரிக்கவில்லை; மக்களவை யில் வெளிநடப்பும் செய்துள்ளது.

டில்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. படுதோல்வியை அடைந்ததற்கு முக்கிய காரணங் களுள் முக்கியமானது என்பது குறித்து டெக்கான் கிரானிக்கல் (13.2.2015) எழுதியிருப்பதாவது -

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பது, செல்வந்தர்களுக்கு ஆதரவானவர்கள் என்ற தோற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டதே பி.ஜே.பி. தோல்விக்குக் காரணம் என்று இந்த ஆங்கில ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இன்றைய பி.ஜே.பி. மத்திய அரசு ஏழை - எளிய நடுத்தர மக்களுக்கானதல்ல. மாறாக பெருமுதலாளிகளுக்கானது என்ற கருத்து பெரும் பான்மையான மக்கள் மத்தியில் நாளும் வலுப்பெற்று வருகிறது.

இதில் வருந்தத்தக்கது - பி.ஜே.பி.யின் கூட்டணிக் கட்சியே எதிர்க்கும்போது, பி.ஜே.பி.யின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ். அமைப்பே மாறுபடும்பொழுது தமிழ்நாட்டிலிருந்து 37 இடங்களில் வெற்றி பெற்று மக்களவையில் இடம்பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. பெருமுதலாளிகள் சார்பான விவசாயிகளுக்கு எதிரான மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சரியானது தானா என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது.

இதன் பின்னணியில் அரசியல் காரணம், அரசியல் லாபம் இருக்கிறது என்ற கருத்தும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

அரசியல் எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், வெட்கப்படவேண்டிய ஒரு நிலைதான். ஜனநாயகம் என்று சொல்லுவதெல்லாம் மேம்போக்கான பேச் சாகத்தானிருக்கிறது - மக்கள் நலனைச் சார்ந்ததாக இல்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும்.

இதுபோன்ற சுயநலப் போக்குகளை மக்கள் மன்றம் அறிந்துகொண்டுதான் வருகிறது என்பதையும் மறக்கவேண்டாம்.

Read more: http://viduthalai.in/page-2/97733.html#ixzz3UCDkk2Re

தமிழ் ஓவியா said...

கா(லி)விகளின் அட்டகாசம்!
புதிய தலைமுறை அலுவலகம் மீது குண்டு வீச்சு

சென்னை, மார்ச் 12_ சென்னையிலிருந்து ஒளி பரப்பாகிவரும் புதிய தலைமுறை தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது இன்று அதிகாலையில் வெடி குண்டு வீசப்பட்டது.

அதிகாலை மூன்று மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரத்தில் பொருத்தப்பட்ட குண்டு களை அலுவலகத்தின் மீது வீசிவிட்டுச் சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பொருட்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பாக பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக் கப்பட்டுள்ளனர். வெடி குண்டு நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை; பொருட்களும் சேதமடையவில்லை.

சிசிடிவி கேமராக் களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை வைத்து, குண்டுவீசிய நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவா தம் ஒன்று ஒளிபரப்பாகவி ருந்தது. இந்த விவாதத்தை ஒளிபரப்பக்கூடாது என இந்து அமைப்புகள் சில எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தின.

இந்தப் போராட்டத் தின்போது புதிய தலை முறை தொலைக்காட்சி யின் ஒளிப்பதிவாளர் ஒரு வர் தாக்கப்பட்டார். ஒளிப்பதிவுக் கருவி ஒன்று சேதப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர் பாக 10 பேர் கைது செய் யப்பட்டனர்

Read more: http://viduthalai.in/page-8/97767.html#ixzz3UCEWkHDl

தமிழ் ஓவியா said...

அறுத்தெறியட்டும் ....

பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான்.

இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.

- தந்தை பெரியார் ( ”குடி அரசு” - சொற்பொழிவு - 13.07.1930

தமிழ் ஓவியா said...

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)

தமிழ் ஓவியா said...

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே!

நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன். ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே, என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்ப வனாவேன்.

இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?

அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சி யடைந்து விட்டது.

தமிழ் ஓவியா said...

தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரன் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?

100 வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.

அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கிய பின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று! நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.

பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான்.

நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான்.

கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத் திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.

இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடிய வில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!

அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.

இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல், மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான், நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல், காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!

தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும்.

பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150 வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.

தமிழ் ஓவியா said...

பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டப்படி கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.

இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21 வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல அளவு கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.

தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்கவேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.

பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை, கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.

இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுபலமானதாகும்.

நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.

மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்.

வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசை மொழிகளுக்கு என்ன பலனோ, அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும்.

அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.

--------------------------------------------

9.2.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து... (விடுதலை 20.2.1968).

தமிழ் ஓவியா said...


பெரியார் பார்வையில் "தாலி"

புறநானூற்றின் 77-ஆம் பாடலும், 374-ஆம் பாடலும்; அகநானூற்றின் 54-ஆம் செய்யுளும், சிலப்பதிகாரமும் அய்ம்படைத் தாலி, புலிப்பல்தாலி, வெண்பல் தாலி ஆகியவை பற்றிப் பேசுகின்றன. சிலப்பதி காரத்தில் மங்கல அணி என்று ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் அவை திருமணத்தின் போது மணமகளின் கழுத்தில் கட்டப்பட்டன என்பதற்கான குறிப்பு எதுவும் கிடையாது.

11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.

இதைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டி, தனக்கு அடிமை என நினைத்து, கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவே தானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதன் கருத்து கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும், இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்கு மென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டும் அடையாளம் வேண்டிய தவசியமல்லவா? அதற்காகக் கலியாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்ட வேண்டும். அப்படியில்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேக மில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனையிழந்த கன்னிகை தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப்பாட்டில் கழிக்க வேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமி போல தைரியமாய் முன்வர வேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிகமான செய்கையென்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய எதிர்ப்பையும் இடைஞ்சலையும் மூடக்கட்டுப்பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடு கூடிய செய்கைகளையும் நடவடிக்கைகளையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக்கு அடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.

---------------5.5.1930-இல் ஈரோடு மணவிழாவில் தந்தை பெரியாரின் உரை: குடிஅரசு 11.5.1930


இந்த கலியாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால், தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக் காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம், என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே, பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன.

----------------10.7.1930-இல் விருதுநகர் மணவிழாவில் தந்தை பெரியார் உரை: குடிஅரசு 13.7.1930)

-------------------------ஆதாரம்: தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்"நூலிலிருந்து- பக்கம்: 17-19

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைத் திருமண மேடையை தந்தை பெரியார் பயன்படுத்திய விதமே அலாதி. ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி அது என்றாலும் அந்த மேடையை மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பண்பாட்டுப் படையெடுப்பு, சிக்கனம், மக்கள் பேறு உள்ளடக்கிய ஒட்டுமொத்த சமுதாயத் துக்கே தேவையான - சமுதாய மாற்றத்துக்கு அவசிய மான பல்பொருள் கொள்கலனாகவே இருந்தது.

அந்த மேடையை பெரியார் ஏன் அப்படி பயன் படுத்தினார்? அதற்கு அவரே காரணமும் கூறுகிறார்:

நான் பொதுக்கூட்டம் போட்டால் வராதவர்கள், நான் மாநாடு போட்டால் கேட்க விரும்பாதவர்கள் இந்தத் திருமணத்திற்கு உற்றார் உறவினர்கள் என்கிற முறையில் வந்துள்ளீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும் என்று குறிப்பிட்டு பல மணிநேரம் சிந்தனையும் சிரிப்பும் சேர்ந்து குதூகலிக்கும் உரையை நிகழ்த்துவார் பெரியார்.

செய்யாறுக்குப் பக்கத்தில் வாழ்குடை என்னும் ஊரில் பெரியார் தொண்டர் வி.எஸ்.கிருஷ்ணசாமி என்பவர் போலீஸ்காரர். அவர் திருமணம் பெரியார் தலைமையில் நடந்தது. மணமகன் தாலியும் கட்டினார். பெரியாரே தாலியையும் எடுத்துக் கொடுத்தார்.

அதற்குப் பின் தாலி என்பது அடிமையின் சின்னம்; ஓர் ஆணின் உடைமை என்பதற்கு அடையாளம். பெண்ணுக் குத் திருமணம் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளம்தான் தாலி என்று காரணம் சொல்லப்படுமேயானால், அதே கேள்வி ஆண்கள் மீதும் இருக்க வேண்டாமா என்று வினா எழுப்பினார்.

இதைக் கேட்ட மணமகள் கழுத்தில் கட்டப்பட்ட தாலியைக் கழற்றி மேடை மீது வீசினார். எல்லோருக்கும் அதிர்ச்சி! ஆனாலும் அது நடந்தது.
-----------------------------தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி 24.12.2013 அன்று மாலை கலி. பூங்குன்றன்,துணைத் தலைவர், திராவிடர் கழகம் அவர்களால் வானொலியில் நிகழ்த்தப்பட்ட உரை

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் சிறுபான்மையினர் யாரும் கிடையாதாம்!

அனைவரும் இந்துக்களாம்! ஆர்.எஸ்.எஸின் அடாவடித்தனம்!


நாக்பூர், மார்ச் 14_ இந்தியாவில் சிறுபான் மையினர் என்று யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே என்று ஆர். எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத் தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கூட் டம் மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபாவின் (ஏ.பி.பி.எஸ்) மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங் கியது. நாடு முழுவதும் இருந்து 1,600க்கும் மேற் பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரும் இந்துக் களே இந்தியாவில் சிறு பான்மையினர் என்று யாருமே கிடையாது. இங்கு கலாச்சார அடிப் படையிலும், தேசிய ரீதி யிலும், டி.என்.ஏ. அடிப் படையிலும் அனைவரும் இந்துக்களே. நாங்கள் யாரையும் சிறுபான்மை யினராக கருதவில்லை. இந்தியாவில் சிறுபான்மை கருத்து இருக்கக்கூடாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே என்று மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) 20 தடவை சொல்லி இருக் கிறார். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, ஆனால் கலாச்சார, தேசிய மற்றும் டி.என்.ஏ. அடிப்படையில் அனைவரும் சமமான வர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தபின்னர், அந்த மசோதா மோச மானதாக இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந் தஸ்து அளிக்கும் ஷரத்து 370 மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாட் டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

எச்சரிக்கை

இந்தியாவில் நாள் தோறும் 5000 குழந் தைகள் புகையி லைக்கு அடிமையா கின்றனராம்.

பெற் றோர்களே, ஆசிரியர்களே, கவனியுங்கள்! கவனியுங்கள்!!

Read more: http://viduthalai.in/e-paper/97847.html#ixzz3UMjpdrFG

தமிழ் ஓவியா said...

வகுப்புரிமை


வகுப்புரிமைக்காகப் பாடுபட்டு மானத்தைக் காப்பாற்றக் கொல் லப்படும் செய்கைக்கும் நாம் தயாராக இருக்கவேண்டும். அப்போது நமது உரிமை காக்கப் படுவதுடன், நல் வாழ்வும் பெற முடியும். மானம் காத்தவருமாவோம்.
(விடுதலை, 13.8.1965)

Read more: http://viduthalai.in/page-2/97840.html#ixzz3UMkaYMnp

தமிழ் ஓவியா said...

போலீஸ் யோக்கியதை

உப்புசத்தியாக்கிரக சட்டமறுப்பு காலங்களில் இருந்து போலீசாருக்கு ஒரு புதிய யோக்கியதை ஏற்பட்டுவிட்டது. அதாவது போலீசு எவ்வளவு அக்கிரம மாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித கேள்வியும், கேட் பாடும் கிடையாது என்பதாகும்.

போலீசு இலாகாத் தலைமை அதிகாரிகளுக்கும் நிர்வாக தலைவர்களுக் கும் சட்டசபை அங்கத் தினர்கள் கேட்ட கேள்வி களாலும், தேசியப் பத்திரிகைகள் வைத வசவுகளாலும், பொது ஜனங்கள் மண்ணை வாரித்தூற்றி சாபம் கொடுத்து சபித்ததாலும், புத்தியும் நாணயமும், யோக்கியப் பொறுப்பும் காப்புக்காச்சி மறத்துப் போய் விட்டதுடன் அவர்களது தோல் காண்டாமிருகத் தோலுக்கு சமமாய் போய்விட்டது.

இனி, எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசு இலாகாவை திருத்தவோ, அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவோ யாராலும் முடியாது என்கின்ற பதவியை அது அடைந்து வருவதாகத் தெரிய வருகின்றது.

இது அந்த இலாகாவுக்கு ஒரு கவுரவம் தான் என்றாலும் நம்மைப் பொறுத்தவரை இனி நம்மால் போலீசு இலாகாவைத் திருத்த முடியாவிட்டாலும் போலீசு இலாகாவினால் நாமாவது திருத்துபாடடைந்து இனிமேல் இப்படிப்பட்ட விஷயங்கள் நம் கண்ணில் தென்படாமலும், காதில் கேட்கப் படாமலும் உள்ள நிலையை அடைய வேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம். ஏனெனில். சமீப காலத்துக்குள் இரண்டு இடங்களில் போலீசு அட்டூழியம் ஏற்பட்டு விட்டது.

ஒன்று காரைக்குடியில் ஒரு நாட்டுக் கோட்டை நகரத்து வாலிபரையும் மற்றும் இரு தோழர்களையும் தெருவில் நடக்கும் போது அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்தது. இரண்டு நீடாமங்கலத்தில் தோழர் கே. ராமையாவையும் மற்ற இரு நண்பர்களையும் தெருவில் நடக்கும் போது ஒரு நண்பரை யார் அடிக்கிறார் என்று ஒருவர் தலை நிமிர்ந்து பார்த்ததற்காக அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்து மூன்று நாள் தண்டித்து கொடுமைப்படுத்தியது ஆகிய காரியங்களுக்கும் மற்றும் அவர்கள் குடிகாரன்,

வெறிகாரன் போலும் கீழ் மக்கள் என்பவர்கள் போலும் வைவதும் நடந்து கொள்ளுவது மான காரியங்களைப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

சுயமரியாதைக்காரர்கள் எந்த இடத்திலாவது இதுவரை போலீசு அல்லது நீதி நிர்வாக இலாகா உத்தரவுகளை மீறியோ அல்லது சட்டம் என்பதற்கு விரோதமான காரியங்களைச் செய்தோ இருந்தால் இவ்வித காரியங் களைப்பற்றி பேசவோ, எழுதவோ ஒருநாளும் வெளிவர மாட்டோம்.

அனாவசியமாய் பார்ப்பனர்கள் இடம் கூலி பெறவும் அகஸ்மாத்தாய் தங்கள் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளும் முட்டாள்தனமான நடவடிக்கைகளும் பிரசங்கத்தில் வெளியாய் விட்டதாகக் கருதிக் கொண்டும் இந்தப்படி நடந்து கொண்டால், அதன் எல்லை முழுவதையும் பார்த்து விடவேண்டும் என்றும் அந்த இலாகா வின் யோக்கியதையை வெளிப்படுத்திவிட வேண்டும் என்பது தான் நமது கருத்து.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 16.04.1933

Read more: http://viduthalai.in/page-7/97887.html#ixzz3UMmKQNK9

தமிழ் ஓவியா said...

தீபாவளி முட்டாள்தனம்

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும் முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக்கூட்டமல்லவா?

கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூழ்ச்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர் களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனு கூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை?

மலம் சாப்பிட்டால் மோட்சம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மத தர்மமா? தேசிய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டிருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும்போல் காணப்படுகின்றன.

இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.

குறிப்பு:- ஒவ்வொரு சுயமரியாதைச் சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றிப் பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப் புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக்கோருகிறோம்.

குடிஅரசு - செய்தி - 15.10.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmduRtL

தமிழ் ஓவியா said...

வான நூல்களை எடுத்துக் கொண் டால் மதச் சம்பந்தமானது. புராணச் சம்பந்தமான புளுகுகள், ஆபாசங்கள், அவையும் 100-க்குத் 90 வடவன் கொண்டு வந்து ஜோசியன் பிழைக்கப் புகுத்தினதுடன் காரியத்திற்கு, அனுபவத்திற்குப் பயன்படாத குப்பைக் கூளங்களைத் தவிரத் தெரிந்து கொள்ளவேண்டிய, வளர்ச்சிக்குப் பயன்படக் கூடிய சரக்கு அதில் என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmuIVUy

தமிழ் ஓவியா said...

மன்னிப்புக்கோரும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப் பூர்வ இதழான ஆர்கனைசர் வெளியிட்டு இருந்தது அல்லவா?

அது புயலாக வெடித்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு வழியின்றி மன்னிப்புக் கோரியுள்ளது. மற்றவர்கள் செய்திருந்தால் அடேயப்பா எப்படி எல்லாம் குதித்திருப்பார்கள்?

கண்ணில்லையா முதல்வருக்கு?

கண் பார்வையற்றோர் கடந்த ஆறு நாட்களாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைக் குண்டு கட்டாகக் காவல் துறையினர் தூக்கிச் செல்வதும், பார்வையற்றவர்கள் கதறுவதும் கண்ணுள்ளோர் அனைத்து உள்ளங்களிலும் ரத்தக் கண்ணீரை வர வழைக்கின்றது - கண் பார்வையற்றவர்கள்மீது கண் பார்வைபடாதா தமிழக முதல்வருக்கு?

போனுக்குக் கவசம் - தலைக்கு அலட்சியம்

கைப்பேசிகளுக்கு கவசம் போடும் வாகன ஓட்டிகள் தலைக்குக் கவசம் அணிவதில் கவலையற்றுள்ளனர். 80 சதவீத வாகன ஓட்டிகள் இந்த நிலையில்தான் உள்ளனர் என்று ஆதகங்கப்படுகிறார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். - நியாயமான ஆதங்கம் தானே!

சாதிக்க முடியுமா?

லண்டன் பிபிசி நிறுவனம் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடி என்ற பெயரில் இங்கிலாந்தின் மகள்கள் என்ற பெயரில் வீடியோ டுவிட்டரில் உலா வருகிறதாம். தயாரித்தவர் ஹர்ஷர்தர்சிங் என்பவர்; இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எவ்வளவு மோசம் என்று அதில் காட்டப் படுகிறதாம். இதன் மூலம் புண்ணிய பாரத பூமியில் பாலியல் வன்முறை கிடையவே கிடையாது என்று சாதிக்க முடியுமா?

ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் பதிலாகுமா?

Read more: http://viduthalai.in/e-paper/97909.html#ixzz3USI9rze5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பஞ்சாங்கம்

கேள்வி: பல்லி தலையில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து என்கிறார்களே, உண்மையா?

பதில்: மிக உயரத்தில் இருந்து விழுந்தால் பல்லி வேண்டுமானால் மரணம் அடையலாம் - இப்படி சொல்லியிருப்பவர் காழியூர் நாராயணன் என்ற ஜோதிடர் (கல்கி 15.3.2015)

பரவாயில்லையே - ஜோதிடர்கள்கூட பகுத் தறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்களே கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!

Read more: http://viduthalai.in/e-paper/97910.html#ixzz3USIPHQyz

தமிழ் ஓவியா said...

சு.சாமியின் திமிர்ப் பேச்சு!


மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டடங்களாம்!

கவுஹாத்தி, மார்ச் 15_ மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மசூதிகள் ஒன்று மதம் சார்ந்த இடம் இல்லை. அவை வெறும் கட்டடங்கள் தான். அந்த கட்டடங்களை எந்நேரத்திலும் இடிக்க முடியும். என் கருத்தை ஏற்காத யாருடனும் விவாதிக்க நான் தயார் என்றார்.

சாமியின் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாமியின் கருத்துக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போன்று அஸ்ஸாம் மாநில பாஜக ஒதுங்கிக் கொண்டது. சாமியின் கருத்துக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் உள்ள க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி என்ற விவசாயிகள் அமைப்பு அளித்த புகாரின்பேரில் சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/97907.html#ixzz3USIizK8r

தமிழ் ஓவியா said...

தமிழக அரசின் அழைப்பை ஏற்று சர்வதேச முதலீட்டாளர்கள் வரத் தயங்குவது - ஏன்?
அரசியல் குறுக்கீடும், நன்கொடை வசூலும்தான் காரணமாம்!

சென்னை, மார்ச் 15_ தமிழக அரசின் அழைப்பை ஏற்று பன்னாட்டு முதலீட் டாளர்கள் வருவதற்குத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் குறுக் கீடும், நன்கொடை வசூ லும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச முதலீட்டா ளர் மாநாட்டிற்கு, பங் களிப்பு நாடாக ('பார்ட் னர் நேஷன்') இருக்க, தமிழக அரசு விடுத்த அழைப்பை, பல நாடுகள் புறக்கணித்துள்ளன. தமிழ கத்தில், அன்னிய முத லீட்டை ஈர்க்க, 'குளோபல் இன்வெஸ்டர் மீட்' என்ற பெயரில், சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. சென்னை _ நந்தம்பாக் கம் வர்த்தக மய்யத்தில், மே, 23, 24 தேதிகளில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட, அரசு திட்டமிட் டுள்ளது. இதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு, தமிழக அதி காரிகள் குழுவினர் சென்று, சென்னை மாநாட் டில் பங்கேற்கும்படி, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், சென்னை, சர்வதேச மாநாடு குறித்து, முதலீட்டாளர்களின் சந்தேகத்தை தெளிவு படுத்த, சென்னை _ எழும் பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மான, 'டிட்கோ' அலுவ லகத்தில், 'ஜிம் - செல்' என்ற தனிப்பிரிவு துவங் கப்பட்டுள்ளது. தொழில் துறை இணைச்செயலர் விஜய் பிங்ளே தலைமை யில் செயல்படும், தனிப் பிரிவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமான, 'டிக், டிட்கோ, சிப்காட், டி.என்.பி.எல்.,' என, 10 அரசு நிறுவன ஊழியர்கள் உறுப்பினர் களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மாநில அரசுகள், சர்வதேச முத லீட்டாளர் மாநாடு நடத்தும் போது, பல நாடுகளுக்கு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்) இருக்குமாறு அழைப்பு விடுப்பது வழக் கம். பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') என்பது, முதலீட்டாளர் மாநாடு நடக்கும் போது, ஒரு நாட்டின் அரசு பிரதிநிதி, தன் தலைமை யில், 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை அழைத்து வருவார்.

குஜ ராத் அரசின், 'வைபரன்ட் குஜராத்' என்ற முதலீட் டாளர் மாநாட்டிற்கு, எட்டு நாடுகள், 'பங்களிப்பு நாடாக (பார்ட்னர் நேஷன்') இருந்தன. அதன்படி, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தைவான், மலேசியா, சிங்கப்பூர், பின்லாந்து, ஸ்பெயின், சீனா, கனடா என, 12 நாடுகளுக்கு, தமிழக அரசு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்கும்படி, அழைப்பு விடுத்தது. இதில், ஜப்பான், பிரான்ஸ் என, இரண்டு நாடுகள் மட்டுமே, தமிழக அரசின், அழைப்பிற்கு இசைந்துள் ளன. மற்ற நாடுகள், தங்கள் முடிவை இது வரை தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.

இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச மாநாடு ஏற் பாடு குறித்து, முதலீட்டா ளரிடம் ஆலோசனை பெறுவதற்காக, கடந்த மாதம், சென்னையில், முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் முன்னோட்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில், எதிர்பார்த்த அள விற்கு, முதலீட்டாளர்கள் பங்கேற்காதது, அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது தற்போது, பல நாடுகள், பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்க இசைவு தெரிவிக் காமல், காலம் தாழ்த்தி வருகின்றன. தமிழகத் தின், தற்போதைய அரசி யல் சூழ்நிலை குறித்து, உலக நாடுகள், தெளிவாக தெரிந்து வைத்துள்ளதே இதற்குக் காரணம் என, தெரிகிறது. தமிழக அதி காரிகள், இம்மாத இறு தியில், அமெரிக்கா, ஜெர் மனி; ஏப்ரல் முதல் வாரம், சீனா, தைவான் நாடு களுக்கு சென்று, முதலீட் டாளர்களைச் சந்திக்க உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, முதலீட் டாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில், மற்ற மாநி லங்களை விட தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், அர சியல் குறுக்கீடு, செயற் கையான நில விலை உயர்வு, நன்கொடை வசூல் ஆகிய காரணங்களால், தொழில் துவங்க முடியாத நிலை உள்ளது. இதற்கு, தீர்வு காணாமல், மாநாடு நடத்தினால், மட்டும் முதலீடுகள் குவியப் போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை விளம்பரப்படுத்த, ஆங்கி லம் உள்ளிட்ட, ஆறு மொழிகளில், தனி இணைய தளம் துவங்கப் பட இருக்கிறதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/97906.html#ixzz3USIs39Qg

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் காஷ்மீர் இருப்பதாக படம்

மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு


புதுடில்லி, மார்ச்.15_ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ஆர்கனைசர் ஏட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் எல்லைக்குள் இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மாநிலங் களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. மத்திய அரசு விசாரணை மேற் கொள்வதாக உறுதியளித் துள்ளது. சங் பரிவாரங் களின் நிலைப்பாடு அது அல்ல என்றும் ஆளும் பாஜக கூறியுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத் அவை கூடியதும் ஆர் கனைசர் ஏட்டில் வெளி யாகி உள்ள படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி யாகவே வெளியிட்டுள் ளது குறித்து பிரச்சி னையை எழுப்பினார்.
குலாம் நபி ஆசாத் கூறும்போது, இந்தியா வின் மகுடமாக உள்ளது ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும். இதற் காக எண் ணிலடங்கா தியாகங்களை செய்துள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, வெளி நாட்டு இதழ்களில் பாகிஸ்தா னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி என வரை படத்தில் வெளியிட்டால் அதற்காக பாஜக, ஆர். எஸ்.எஸ். அமைப்புகள் போராட்டங்கள் நடத்து கின்றன. ஆனால், ஆர் கனைசரில் வெளியிட்ட தன்மூலமாக அதை அங்கீ கரித்து விட்டனவா என் பதை அறிய விரும்புவதாக குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகவே உள்ளன. ஆர்கனைசரில் வெளியான தகவல் குறித்து நாங்கள் விசாரணை மேற்கொள்வோம் என்று கூறினார்.

அமைச்சர் இரவிசங்கர் அளித்த பதிலில் திருப்தி கொள்ளாத காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை கோரி தொடர்ச்சியாக வலியுறுத் திய வண்ணம் இருந்தனர். ஆர்கனைசர் ஏட்டில் எழுதியவர்மீது நடவ டிக்கை எடுக்கும் திட்டம் உள்ளதா? என்று நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ் .சதுர்வேதி கேட்டார்.

துணை அவைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறும்போது, அமைச்சர் அய்யத்துக்கு இடமில்லா மல் பதிலில் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும். இதை யாரும் மாற்றிவிட முடியாது என்றார்.

இதனிடையே ஆர் கனைசர் ஏடு தன்னுடைய இணைய பதிப்பில் பதி வான வரைபடத்தை மாற்றிவிட்டது. மார்ச் 15 தேதியிட்ட அச்சுப் பிரதியில் முறைகேடான வரைபடமே இடம் பெற்றுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் வெளிப்படுத்தி உள்ளது.

ஆர்கனைசர் ஏட்டின் ஆசிரியராக உள்ள சிறீ பிரஃபல்ல கேட்கார் கூறும்போது, எதேச் சையாக நடந்தது என் றாலும் ஏற்கமுடியாத தவறுதான். எது எப்படி இருந்தாலும், ஆர்கனை சரில் இடம் பெற்றது ஏற்கமுடியாத தாகும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது, சார்க் இணையத் தில் பங்ளாபீடியா இணை யத்தின் வாயிலாக அந்த வரைபடம் எடுக்கப்பட் டுள்ளது. அடுத்த இதழில் திருத்தம் வெளியிடப் படும் என்று கூறினார்.
_இந்துஸ்தான் டைம்ஸ், 13.3.2015

Read more: http://viduthalai.in/page-2/97918.html#ixzz3USJSmtTT

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. ஆட்சிக்கு மொத்து!
மதச் சுதந்திரத்தில் வழுக்கிடும் இந்தியா அமெரிக்க செனட்டர் சாடல்

வாஷிங்டன், மார்ச்15 பொதுத் தேர்தல் நடை பெற்றுமுடிந்து கடந்த ஓராண்டாகவே மதச்சுதந் திரத்தில் இந்தியா வழுக் கிடும் நிலை ஏற்பட்டுள் ளது என்று அமெரிக்க செனட்டர் சாடியுள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வருகைதந்த போதுகூட அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப் படையாகவே இது குறித்துக் கூறினார். இது போன்ற முக்கியப் பிரச் சினைகளையொட்டியே வெளியுறவுக்கொள்கை அமைகிறது. வாஷிங்டனை மய்ய மாகக்கொண்டு இயங்கக் கூடிய கிறித்தவ பழமை வாதக் குழுவின் குடும்ப ஆய்வுக்குழுவின் தலை வராக உள்ளவரும், அமெ ரிக்க செனட்டருமாகிய டோனி பெர்க்கின்ஸ் செனட்டின் துணைக்குழு வில் பேசும்போது, இந் தியா குறித்துக் குறிப் பிட்டு சொல்லும்போது:- அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நாடு மதச் சுதந்திரத்திலிருந்து வழுக்கி உள்ளது. ஆகவே, கிறித்தவர் என்று மட்டு மன்றி அந் நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையராக உள்ளவர்கள்மீதான செயல்கள்குறித்து அந் நாட்டை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும் போது, பன்னாட்டு மதச் சுதந்திரச் சட்டத்திற்கே வெளியுறவுக்கொள்கையில் முன்னுரிமை அளிக்கப் படும். வெளியுறவுத் துறை யில் பணியாற்றும அலுவ லர்களிடம் இதற்கே முன் னுரிமை அளிக்க வேண் டும் என்பதையே பயிற்சி கொடுத்துவருகிறோம் என்றார்.

செனட்டர் ஸ்டீவ் டான்ஸ் என்பவர் செனட் டர் பெர்க்கின்சிடம் கேட்கும்போது, உங்கள் பார்வையில் தற்போ துள்ள (இந்திய) அரசு நிர் வாகம் மதச்சுதந்திரத்தில் தெளிவாக உள்ளதா? என்று கேட்டார்.

பெர்கின்ஸ் கூறும் போது, நான் அலுவலர் களிடம் பேசும்போது மதச்சுதந்திரம் என்கிற கருத்தில் முன்எப்போதும் இல்லாதவகையில் வெளி யுறவுக் கொள்கையில் முன்னுரிமை கொடுக்கப் பட வேண்டி உள்ளது. உண்மையைக் கூற வேண் டுமானால், இப்போது தான் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, செனட்டர் ஸ்டீவ் கேள் விக்கு பதில் அளிப்பதில் நான் இல்லை என்றேகூற வேண்டியுள்ளது. அந்த நாட்டில்(இந்தியாவில்) அரசால் மதச் சுதந்திரத் துக்கு முன்னுரிமை வழங் கப்படவில்லை என்று பதில் அளித்தார்.

முடிவாக, மதரீதியில் துன்புறுத்தல் குறித்த பதிவுகளைப் பார்க்கலாம். இதுகுறித்து ஆய்வு செய் துள்ளவர்களின் கருத்துப் படி, மதச்சுதந்திரம் உயர் வானதாக இல்லை. தொடர்ச்சியாகவே மதரீதி யிலான துன்புறுத்தல்கள் உள்ளன. மதத்தைக் கட்டாயப்படுத்துவது எதிர்காலத்தில் நன்றாக இருக்காது என்றார்.

புதுடில்லி சிறீக் கோட் டையில் கடந்த ஜனவரி யில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சைச் சுட்டிக் காட்டி ராபி டேவிட் நாதன் சபர்ஸ் டெயின் பேசி னார். அமெரிக்க நாட் டின் பன்னாட்டளவில் மதச்சுதந்திரத்துக்கான தூதராக சபர்ஸ்டெயின் உள்ளார். அவர்கூறும் போது, வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மான பங்கு வகிப்பது மதச்சுதந்திரமாகும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறும் போது, மதச் சுதந்திரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் செயல்களில் சட்டரீதியாக மாறுபட்ட விளக்கங்கள் கூறுவதாக வெளிப்படையாகவே அமைந்துள்ளதாகவே நான் எணணுகிறேன்.

காலைப் பிரார்த் தனைக் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயப் படுத்தப்படுகிறது. தொடக்கநிலையில் தான் செயல்படுவதற்கான அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது, அதன் படியே செயல்படு கிறேன் என்றார். ஆனால், உண்மைநிலை என்ன? அரசின் அனைத்து துறை களிலும் மதச்சுதந்திரம் குறித்த திட்டம் என்ன? முக்கியத்துவம் வாய்ந்த செயல் திட்டமாக அல் லவா இருக்க வேண்டும்? என்று வாதிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பல செயல்கள் நடந்துவிடு கின்றன. உண்மையல் நான் எண்ணுவது என்ன வென்றால், சட்டத்தில் உள்ளபடி, அரசு நிர்வா கம் மற்றும் அரசுத்துறை செயலாளர் மற்றும் தலைவர் ஆழமாக கவனம் செலுத்தவேண்டிய பிரச் சினையாக மதச்சுதந்திரம் உள்ளது என்று சபர்ஸ் டெயின் கூறினார்.

மத்திய அரசின் மதச் சுதந்திரம் குறித்து அமெ ரிக்க செனட்டர்கள் விவா திக்கும் அளவில் பாஜக அரசின் மதவாதச் செயல் பாடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/97917.html#ixzz3USJjAOnf

தமிழ் ஓவியா said...

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழா நெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப் பது இந்த வசம்பைத் தான்.

கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப் பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப் பான் என்று கூறப்படுகிறது.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத் தலாம்.

வசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று தேக்கரண்டி கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.


Read more: http://viduthalai.in/page2/97855.html#ixzz3USLcjD74

தமிழ் ஓவியா said...

கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு
இந்து முன்னணியே கேட்கும் கேள்விகள்

26.1.2015 அன்று வைத்தியநாத சுவாமி ஆலய குடமுழுக்கு நடை பெற்றது. குடமுழுக்குக்கு பொருளுதவி பண உதவி செய்த ஊர் பிரமுகர்கள் மற்றும் கிராம ஆன்மீகவாதிகள் அளித்த தொகைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு முறையாக ரசீது கொடுக்கப்பட்டதா?

செயல் அலுவலரால் ஏற் படுத்தப்பட்ட திருப்பணி குழு எத் தனை? எந்த கட்சி தலைமை வகித் தனர்? அவர்கள் வசூல் செய்த தொகைக்கு கணக்கு உண்டா?

எந்தெந்த உபயதாரர்கள், ஒப்பந் ததாரர்களிடம் ஒப்பந்தம் போடப் பட்டது? யார் யார் எந்தெந்த வேலையை செய்தனர்?
எந்தெந்த வேலையை யார் யார் தனியாக செய்து முடித்தனர் என்ற விபரம்.

வைத்தியநாத சுவாமி நில குத்தகை தாரர்களிடம் ஏக்கருக்கு ரூ.15,000/- வசூல் செய்யப்பட்டது. எவ்வளவு வசூல் செய்யப்பட்டது. யாருக்கும் ரசீது கொடுக்காதது ஏன்?

எத்தனை கோடி வசூல் செய்யப்பட் டது? எத்தனை கோடி இருப்பு உள்ளது?

அர்ச்சனை சீட்டு ரூ.2 கொடுத்தால் தான் அர்ச்சனை செய்வேன் என்று கூறும்போது, லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது கொடுக் காதது ஏன்?

பல தரப்பு மக்களிடம் கட்டாய வசூல் செய்த நீங்கள் ஒருவருக்குகூட ரசீது கொடுக்காதது ஏன்? கொள்ளை யர்களின் கூடாரமாக வைத்தியநாத சுவாமி ஆலயம் போவதற்கு காரணம் இந்து அறநிலைய துறையா? அரசியல் வாதிகளா? திருப்பணிக் குழுவா?
கணக்கு காட்டுவதற்கு துணிவு உண்டா?

திருக்குளத்தைப் பற்றியும் தேரடியைப் பற்றியும் ஊர் முக்கியஸ் தர்கள், அரசியல்வாதிகள்அக்கறை கொள்ளாதது ஏன்?
யாக சாலையில் ஒரு குடும்பத்திற்கு ரூ.7,000/- கொடுத்தால்தான் அனுமதி என்று கூறினீர்கள் எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எவ்வளவு செலவு? எவ்வளவு இருப்பு?

அரசுப் பள்ளி ஆசிரியர்களை வைத்து கோவிலில் உட்கார்ந்து பொது வசூல் என்று வசூலித்தனர். எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எந்த வங்கியில் யார் பேருக்கு போடப்பட்டது? அந்த வங்கி இருப்பு செயல் அலுவலர் உடையதா? இந்து அறநிலைய துறை யுடையதா? அரசியல்வாதியுடையதா? திருப்பணிக் குழுவுடையதா?

கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள தேக்கு மரம், தென்னை மரம், நாவல் மரம், வேப்ப மரம், அத்தி மரம், இலவ மரம், வாகை மரங்களை வெட்டியதற்கு சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற்றீர்களா? எந்த தேதியில் ஏலம் விடப்பட்டது? யாருக்கு ஏலம் விடப்பட்டது? யார் ஏலம் கூறினர்?

பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
செலவு கணக்கை கூறவில்லை என்றால் மண்டல பூஜை அன்று இந்து முன்னணி சார்பாக அனைத்து கட்சி மற்றும் பொது மக்களை ஒன்று திரட்டி 18.03.2015 புதன்கிழமை அன்று காலை 8 மணியளவில் அடையாள உண்ணவிரதம் நடைபெறும்.

நன்கொடையாக தங்கம், வெள்ளி வழங்கியவர்கள் விவரங்களை உடனே வெளியிட வேண்டும்.
2005 தகவல் அறியும் உரிமை சட் டத்தின்கீழ் நன்கொடை வழங்கிய வர்கள் மற்றும் பொது மக்கள் தகவல் பெற உரிமை உண்டு.

சர்வே எண் 122, 123 தேரடி தனியார் நபரிடம் பட்டா கொடுத்தது, சன்மானம் பெற்றுக் கொண்ட அறநிலையத்துறைக்கும், வருவாய் துறைக்கும் கூட்டுக் கொள்ளை நடந்தது எப்படி?

தகவல்: திட்டக்குடி அறிவு

Read more: http://viduthalai.in/page3/97856.html#ixzz3USMJrOcO

தமிழ் ஓவியா said...

மோடிக்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை

பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன் கொடையாக வாரி இறைத்திருக்கின்றன. இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசி யல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன் கொடையை திரட்டுகின்றன. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போ தும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார்.

ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது. டில்லி தேர்தலை யொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதீய ஜனதா கட்சி மொத் தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை யில் கடந்த 2013_-2014ஆ-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள் ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங் களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
-பாரதீய ஜனதா கட்சி கடந்த 2012-_13-ஆம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது. இது கடந்த 2013-_2014-ஆம் ஆண்டில் ரூ.87.67 கோடியாக வும், 2014_-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது.

அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012_-2013ஆ-ம் ஆண்டை விட 2014-_2015-ஆம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக் கிறது. பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012_-2013ஆ-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.

இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது. சரத் பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் அளித்து உள்ளது.

தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன் கொடையாக பெற்றுள்ளன. இது கடந்த 2012_-2013-ஆம் ஆண்டை விட 158 சதவிகிதம் அதிக மாகும்.

மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதீய ஜனதா கட்சி தான் அதிக நன் கொடை வசூலித்தது தெரியவந்துள் ளது. குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது.

இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரதிபல னாகவே, தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார்.

மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெ ரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/97858.html#ixzz3USMXYfNp

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையாரும் சாவித்திரிபாய் புலேயும்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 -_ 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கவிஞர் ஆவார். இவர் தம் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவியவர்கள் ஆவர்.

வாழ்க்கை: இவர் 1831இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர்தம் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார்.

ஜோதிராவ் புலே அவர்கள் தமது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

கல்விப் பணிகள்: ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

பிற பணிகள்: விதவைப் பெண்களின் தலையை மொட்டை யடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம்ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதை களான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

கவிதை நூல்: 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத் தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள். கவிதை வரிகளில் சில: கல்வி கற்றுக் கொள். போ.

சுய சார்புள்ளவராக சுறுசுறுப்பானவராக இருங்கள்: வேலை செய்யுங்கள் அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் . அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் . அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.

சும்மா இராதீர்கள். போய் இனியேனும் கல்வியைப் பெறுங்கள் ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர் அனைவரது துன்பங்களையும் போக்குங்கள்.

படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம் எனவே படியுங்கள்!

குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்ததிலும் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதிலும் சாவித்திரிபாய் புலே _- அன்னை மணியம்மையார் அவர்களை ஒத்திருப்பதைக் காண முடிகிறது. ஒருவருடைய பிறந்த நாள் (மார்ச் 10) மற்றொருவருடைய மறைந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page5/97861.html#ixzz3USNEE8D7

தமிழ் ஓவியா said...

என்று மறந்தோம்?

அறுபதைத் தொடுமுன்
அறுந்து விட்ட பம்பரம்
இளமைத் தென்றல் தேனை
எட்டி உதைத்த புத்தகம்

சுயமரியாதை ஏணியில் ஏறி
சூரியனிடம் வந்து சேர்ந்த நட்சத்திரம்
அந்தச் சூரிய வெப்பத்தில்
சுடப்பட்ட வைரக் கல்!

பெரும் பொறுப்பு மலையை
பொறுப்போடு சுமந்த தோள்!

ஏழை விட்டுப் பிள்ளைகளை
தோள் தொட்டியில் தாலாட்டிய அன்னை
எளிமை என்ற அணிகலனை

இயல்பாய்ப் பெற்ற வசீகரம்
அமைதியான தோற்றம் - அதற்குள்
அடங்கியிருக்கும் புலியின் சீற்றம்!

போராட்டப் பெருங் குணம்
போர்ப்பாட்டின் புதுமணம்!

நெருக்கடிக்கு நெருக்கடி
கொடுக்கும் கொள்கைச் சவுக்கடி
ஆழமான சிந்தனைக் கடல்
அதில் மூழ்கியிருக்கும் முழு உடல்!

தலைவரைக் காத்திடவே
தன்னலம் துறந்துள்ள தற்கொலை!

எங்கள் அன்னையே ஈடில்லா
மணியம்மையே!

என்று மறந்தோம்
உங்களை நினைப்பதற்கு?

- கவிஞர் கலி. பூங்குன்றன்
(மார்ச்சு 16 - அன்னை மணியம்மையார் நினைவு நாள் (1978).


Read more: http://viduthalai.in/page5/97862.html#ixzz3USNQd1po

தமிழ் ஓவியா said...

வளர்கிறார்கள் கோடீசுவரர்கள்

போர்ப்ஸ் பத்திரிகையின் தர வரிசைப்படி அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் பெரும் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 56 ஆக இருந்தது; இந்த ஆண்டு 90 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

சீனா மற்றும் ஜெர்மனி முறையே 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன.போர்ப்ஸ் பத்திரிகை ஆய்வின் படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில், 90 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 29,400 கோடி டாலராகும். சென்ற ஆண்டில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 56 ஆகவும், அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 19,150 கோடி டாலராகவும் இருந்தது.உலக அளவில் மொத்தம் 1,826 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 6.4 லட்சம் கோடி டாலரிலிருந்து 7.05 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 536 கோடீஸ்வரர்கள் உள்ளனர். சீனாவில் 213 கோடீஸ்வரர்களும், ஜெர்மனியில் 103 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.

பிரிக் நாடுகளில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 213 கோடீஸ்வரர்கள் மற்றும் 56,500 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 90 கோடீஸ்வரர்கள் மற்றும் 29,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பிரேசில் (54 பேர்-18,100 கோடி டாலர் மற்றும் ரஷ்யா (88 பேர்- 33,700 கோடி டாலர்) ஆகிய நாடுகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

ரஷ்யாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 111 லிருந்து 88 ஆக குறைந்துள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டில் 2 இந்தியப் பெண்கள் இடம் பெற்றிருந் தனர்.

உலக அளவில் 100 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page7/97865.html#ixzz3USNw2KT1