Search This Blog

27.3.15

தாலி பற்றிய சர்ச்சை

தாலிபற்றிய சர்ச்சை



தனியார்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருந்த தாலிபற்றிய சர்ச்சையை மய்யப்படுத்தி இந்துத்துவா மதவாத சக்திகள் அந்தத் தனியார்த் தொலைக்காட்சி பணியாளர்களைத் தாக்கினர், டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர்.


இது தொடர்பாக மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், புரட்சியாளர் அண்ணல் அம்பேத் கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று சென்னை பெரியார் திடலில் மாட்டுக் கறி விருந்தும், பெண் ணடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்வும் நடைபெறும் என்று அறிவித்தார்.


அப்படி அவர் அறிவித்தபோது அங்கு கூடியிருந்த அனைவரும் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றனர். தனியார்த் தொலைக்காட்சிமீது தாங்கள் மேற்கொண்ட வன்முறை எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டதே என்ற அச்சம் அவர்களை உலுக்க ஆரம் பித்து விட்டது. கழகத் தலைவர் அறிவித்த அறிவிப் பினை ஒழுங்கு முறைக்கு உட்பட்ட அறிவார்ந்த விவாத முறையில் விமர்சித்தால் வரவேற்கலாம்; அத்தகு எதிர் விவாதங்களை எதிர் கொள்வதில் திராவிடர் கழகத்துக்கு எப்பொழுதும் சர்க்கரைப் பொங்கல்தான்!


ஆனால், இப்பொழுது என்ன நடந்து வருகிறது? பந்தை அடிக்க முடியாதவன் காலை அடிப்பது போன்ற தவறான விளையாட்டில் இறங்கியுள்ளனர். அவர் களுக்கே உரித்தான கொச்சைத்தனமான அபிசேகங் களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழ்த் தேசியவியாதியஸ்தர்களும் கல்லை விட்டு எறிகின்றனர்.


இந்துத்துவாவாதிகளை நோக்கி ஒரு கேள்வி; அய்ந்து பேருக்கும் மனைவியாக இருந்து ஆறாவதாக கர்ணன்மீதும் காதல் கொண்ட திரவுபதைக்கு எத்தனைப் பேர் தாலி கட்டினார்கள் என்று சொல்ல முடியுமா?


காட்டுக்குச் சென்று புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து காதலியின் கழுத்தில் தாலி கட்டினான் என்ற கதையை நம் தமிழ்த் தேசிய வியாதிகள் ஏற்றுக் கொள்வார்களாயின், இனிமேல் அந்த முறையைத் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தினை வெளியிடுவார்களா? எங்கே பார்ப்போம்!


தமிழர் திருமணம் குறித்து அகநானூற்றில் இரு பாக்கள் இடம் பெற்றுள்ளன. 

86ஆம் எண்ணுள்ள பாமாலை இயற்றியவர் நல்லாவூர் கிழார் என்பவர் ஆவார்.

உழுந்து தலைப் பெய்த என்று தொடங்கும் பாடலும் சரி, விற்றூற்று மூதெயினனார் என்ற புலவர் தீட்டிய 136ஆம் பாவான மைப்புறப் புழுக்கி! என்று தொடங் கப்படும் பாவானாலும்  சரி, எந்த ஒரு இடத்திலும் தாலி பற்றிய குறிப்பு மட்டுமல்ல; ஆரியக் கலாச்சாரமான எரி ஓம்பல் இல்லை; வடமொழி மந்திரங்கள் இல்லை; தீ வலம் வருதல் இல்லை; புரோகிதன் இல்லை; காசி யாத்திரை சமாச்சாரங்கள் எல்லாம் கிடையாது, அம்மி மிதித்தலும் இல்லை; அருந்ததி பார்த்தலும் இல்லை -  உண்மை இவ்வாறு இருக்கும்பொழுது அய்யகோ தாலியை விமர்சிப்பதா? ஏற்கெனவே கட்டிய தாலியை அகற்றச் சொல்லுவதா?


என்று ஆவேசக் கூச்சல் போடுவது - திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் அடிமைத்தளையாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சியை எதிர்த்துக் காவல்துறையில் புகார் கூறுவதெல்லாம் அவர்களிடம் அறிவு சார்ந்த கருத்து வளம் அறவே இல்லாத இயலாமையின் வெளிப்பாடே ஆகும்; அதற்காகப் பரிதாபப்படத்தான் வேண்டும்.


அறியாமை இருளில் விழுந்து தவிக்கும் இவர்களின் கூக்குரலும், இணையதளப் பிரச்சாரமும், காவல்துறை யிடம் அளிக்கும் புகாரும், கழகம் நடத்தவிருக்கும் புரட்சிகர நிகழ்வுக்கான மிகப் பெரிய விளம்பரமே யாகும். 

எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தாலும், அவசரப்பட்டு விளம்பரச் செலவில் ஈடுபடாதீர்கள் - எதிரிகள் அந்த வேலையைச் செய்து விடுவார்கள் என்று தந்தை பெரியார் கூறியதை இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்போம். தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கை எண்ணி வியக்கிறோம்!


தாலிபற்றி சர்ச்சை எழுப்பும் அன்பர்கள் ஒன்றை மறந்து விட்டார்களே, ஏன்?


மஞ்சள் கயிற்றில் தாலியைக் கட்டுவதுதானே அவர்களின் அய்தீகம், அந்த மஞ்சள் கயிறுக்கு ஒரு மகத்துவம் இருப்பதாகத் தானே சொல்லுகிறார்கள். 


அப்படிப்பார்த்தால் இப்பொழுதெல்லாம் யார் மஞ்சள் கயிற்றில் தாலியை இணைக்கிறார்கள்? தங்கத்தில் அல்லவா அணி கிறார்கள்? இது எந்த அய்தீகத்தின்ஒப்புதலைப் பெற்றது? நியாயமாக தாலியை மஞ்சள் கயிற்றில்தான் இணைக்க வேண்டும் என்று போர்க் குரல் எழுப்ப வேண்டியதுதானே தேவைப்பட்டால் போராட்டக் களத்தில் குதிக்க வேண்டியதுதானே!

திமுக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நேரத்தில் தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத் திற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதே (அரசித ழில் பதிவு பெற்றது 20.1.1968) அதில் தாலி கட்டாயம் என்ற நிலை இல்லையே! மாலை அல்லது தாலி அணிவிக்கலாம் என்று தானே இருக்கிறது.


திராவிடர் கழக மேடைகளில் ஏதோ ஒரு சூழ்நிலை யில் தாலி கட்டிய தம்பதிகள் அதனை அகற்றும் நிகழ்வு என்பது சர்வ சாதாரணம் ஆயிற்றே!
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைத் தேர்வு செய்தது - புரட்சிகரமான செயலுக்குப் பொருத்தமான நாள் என்பதால்தான்.


இந்த வாய்ப்பினை மகளிர் உரிமை போற்றும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் பிற்போக்குவாதிகளுக்கு கற்பிக்கும் சரியான பாடமாகவும் இருக்க முடியும்.

தயாராகுங்கள்!

தயாராகுங்கள்!!

                        --------------------”விடுதலை” தலையங்கம்27.03.2015
Read more: http://viduthalai.in/page-2/98599.html#ixzz3VaKJBfT3

29 comments:

தமிழ் ஓவியா said...

காந்தியாரால் அல்ல - சவர்க்காரால்தான் சுதந்திரம் கிடைத்ததாம்!

வீர் சவர்க்காரின் தியாகத்தால் தான் சுதந்திரம் கிடைத்த்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராய்ச்சி கூறியுள்ளார்.

விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50 ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநி லங்களில் கொண்டாடப்பட்டு வரு கிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வோரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசமாநிலம் பாயிரஜ் என்ற இடத் தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறியதாவது:

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட் டமாகும், இந்த போராட்டத்தின் விளைவை ஆங்கிலேயருக்கு உளவு பார்த்து கூற இங்கே பலர் இருந்தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்று வேலை;

அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலேயர் நடத்திய ஊடகங்கள் காந்தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட்டியது. காந்தியின் ஆங்கிலேயப் பாசத்திற்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த சன் மானமாகும், அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ புகழ் மிக்க தலைவர்களைப் போல் பார்க்கப் படுகிறார்.

உண்மையில் அவர் புகழ் மிக்க தலைவராவதற்குத் தகுதியற்றவர். இந்து மக்களின் அடிமைத்தளை களை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவர்கார் அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப்படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத்தந்தையாக பார்க்கவேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிறமதத்தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும், அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்சலிருந்தால் இந்தமேடையிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ்லாமிய நடிகர் களின் திரைப்படங்களைப் புறக்கணி யுங்கள் என்று நான் சொன்னது நன்மைக்காகத்தான்.

அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சைவிதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப்பட நடிகர்களிட மிருந்துதான் ஆரம்பிக்கிறது பாகிஸ் தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுவதையைத் தடைசெய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச்சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத் தரவிட்டார். அதனால் அவரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனை வரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங் குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல்லாம் வெறும் கட் டிடங்கள் மட்டுமே என்று பிராய்ச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

காந்தியாரால் அல்ல - சவர்க்காரால்தான் சுதந்திரம் கிடைத்ததாம்!

வீர் சவர்க்காரின் தியாகத்தால் தான் சுதந்திரம் கிடைத்த்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராய்ச்சி கூறியுள்ளார்.

விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50 ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநி லங்களில் கொண்டாடப்பட்டு வரு கிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வோரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசமாநிலம் பாயிரஜ் என்ற இடத் தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறியதாவது:

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட் டமாகும், இந்த போராட்டத்தின் விளைவை ஆங்கிலேயருக்கு உளவு பார்த்து கூற இங்கே பலர் இருந்தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்று வேலை;

அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலேயர் நடத்திய ஊடகங்கள் காந்தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட்டியது. காந்தியின் ஆங்கிலேயப் பாசத்திற்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த சன் மானமாகும், அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ புகழ் மிக்க தலைவர்களைப் போல் பார்க்கப் படுகிறார்.

உண்மையில் அவர் புகழ் மிக்க தலைவராவதற்குத் தகுதியற்றவர். இந்து மக்களின் அடிமைத்தளை களை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவர்கார் அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப்படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத்தந்தையாக பார்க்கவேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிறமதத்தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும், அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்சலிருந்தால் இந்தமேடையிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ்லாமிய நடிகர் களின் திரைப்படங்களைப் புறக்கணி யுங்கள் என்று நான் சொன்னது நன்மைக்காகத்தான்.

அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சைவிதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப்பட நடிகர்களிட மிருந்துதான் ஆரம்பிக்கிறது பாகிஸ் தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுவதையைத் தடைசெய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச்சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத் தரவிட்டார். அதனால் அவரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனை வரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங் குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல்லாம் வெறும் கட் டிடங்கள் மட்டுமே என்று பிராய்ச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

சோதிடப் புயல்!

Astronomy என்பது வான இயல். இது காரண காரியத்தை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான பூர்வமானது. Astrology என்பது சோதிடம் கூறுதலாகும். இதற்கும் அறிவியலுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது.

ஆனால் மெத்த படித்த சிலரும் இவ்விரண் டையும் ஒன்று என்று எண்ணி குழம்புகின்றனர். Astrology சோதி டம் என்பது வெறும் புரட்டே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மெயில் நாளிதழில் (‘The mail’ Madras) 7_11_1981 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பெரும் புயல் ஒன்று தமிழ்நாட்டு கடலோரத்தையும் வங்காள தேசத்தையும் கடுமையாக தாக்கு மென்றும்; அது 1977ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய புயலைப் போல் பயங்கரமாக இருக்கும் என்றும்;

அப்புயலின் உச்ச கட்டம் 13ஆம் தேதியாக இருக்கும் என்றும் Indian Institute of Astrology யைச் சேர்ந்த டாக்டர். ஹிராலால் பால் என்பவர் சோதிடம் கூறியிருந்ததுடன் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால், அந்தோ பரிதாபம்! அவர் குறிப்பிட்ட நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி முடிய - அது அய்ப்பசி மாதமான போதி லும் (சென்னையில்) ஒரு துளிகூட மழை இல்லாமல் வெயில் அடித்து இரவில் பகல்போல நிலவும் காய்ந் தது.

தமிழ்நாட்டில் எங்கும் புயல் இல்லை. வங்காளதேசத்திலும் புயல் அடித்ததாகச் செய்தி இல்லை.
சோதிடம் பொய் என்பதற்கு சரியான ஆதாரமாகும் இது.

Read more: http://viduthalai.in/page6/98663.html#ixzz3VgDZmA9l

தமிழ் ஓவியா said...

சனாதன அடுக்கில் இந்துவாய் இருப்பதில்
பயனென்ன?

பரிணாம வளர்ச்சியால் பல்லுயிர் உலகம்
படைக்கப் பட்டதன்று; உருவானதே
அறிவியல் முறையில் ஆய்ந்து உலகிற்கு
நாட்டினர் அறிஞர் டார்வின்
பிறப்பொக்கு மென்றார் பெருமகன் வள்ளுவர்
உலகினில் எங்குமே நிலவாத
பிறப்பை வைத்துபேத முரைப்பது
அர்த்த முள்ளஇந்து மதமே!

தொட்டால் தோசம்நிழல் பட்டால் தீட்டு
குலக்கொடுமை கொடிகட்டிப் பறந்தது
நாட்டின் மனுதர்ம நடைமுறை ஆட்சி
அதிகாரம் பெற்றதே காரணம்
முன்பிறப்பு வினையென்று மோசடியால் கடவுள்
மதத்தைக் காட்டிய மதமெது?
தன்னலங் கரம்பிய தான்தோன்றிக் கூட்டம்
நால்வண்ணத்தில் மேல்வண்ண மென்றதே!

ஊர்ப் புறத்தே ஒதுக்கி ஒடுக்கி
தீண்ட மறுத்தது எந்த மதம்?
செருப்பு தெருவில் போடக் கூடாதென
கூனிக் குறுகவைத்தது எந்த மதம்?
தோளில் துண்டு போடக் கூடாது
அக்குளில் வைத்தது எந்தமதம்?
மேலாடை அணியக் கூடா தென்று
பெண்ணைத் தடுத்தது எந்த மதம்?

பித்தளைப் பாத்திரம் புழங்கக் கூடாது
மிதிவண்டி ஓட்டினால் தண்டனை
சூத்திர னுக்கே கல்வியில்லை பஞ்சமன்
நினைத்துப் பார்க்க முடியுமா?
ஆதியில் வராத சாதி ஆரியப்
பார்ப்பனரால் பாதியில் வந்தது
நாதியற்று நடைப் பிணமாய் நடைபாதையில் வதிந்து
நலிந்தவர் தாழ்த்தப் பட்டோரே!

இந்துவாய் என்றும் இருந்த இழிவைச்
சுமக்க வேண்டும் காவிகள்
இந்துவென்று இனிக்கப் பேசுவோர் இருபதாம்
நூற்றாண்டு தொடக்கம் வரை
தாழ்த்தப் பட்டோர் இந்துப் பகுப்பில்லை
என்பதே தமிழக வரலாறு!
ஆழ்ந்து சிந்தித்தால் ஆலகால நஞ்சாம்
ஆர்எஸ்எஸ் கரவு புரியுமே!

தாய்மதம் திரும்ப அழைக்கும் தம்பிரான்கள்
இந்துவானால் எந்தசாதி இயம்புவாயா?
அய்ரோப்பா அரபு நாடுகளில் வந்தவரா?
இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள்
சமத்துவ மில்லா சனாதன அடுக்கில்
இந்துவாய் இருப்பதில் பயனென்ன?
சமத்துவ நோக்கில் சனாதனம் விலக்கி
இணைந்தார் கிருத்துவ இசுலாமிற்கே!

கவிஞர் இனியன், திருச்சி - 13

Read more: http://viduthalai.in/page7/98667.html#ixzz3VgDmoWM3

தமிழ் ஓவியா said...

திருடுவதிலும் வினோதம் - எச்சரிக்கை!

ஆக்ராவில் உள்ள அஜய் சர்மா என்ற ஆயத்த ஆடை வர்த்தகர் தன்னுடைய மோட்டர் சைக்கிளை விற்க பிரபல இணையதளத்தில் படத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்து பலர் வந்தனர். 22 வயது மிக்க கல்லூரி இளைஞர் போல் தோற்றமளித்த ஒருவர் அஜய் சர்மாவிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கூறினார்.

விலை எல்லாம் பேசி முடித்த பிறகு மோட்டர் சைக்கிளை ஓட்டிப்பார்த்துவிட்டு பணம் கொடுக்கிறேன் என்றுகூறியவுடன் நம்பிக் கையுடன் அஜய் சர்மா அவரது மோட்டர் சைக்கிளைத் தந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று விட்டார், நீண்ட நேரம் வரை காத்திருந்த அஜய் சர்மா அந்த இளைஞர் மீண்டும் வராததைக் கண்டு அவரின் அலைபேசியைத் தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தெரியவந்தது இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கொண்ட அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் தேடினார். ஆனால், அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்ற விபரம் தெரியவந்து, அவர் ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இணையதளத்தில் அந்த இளைஞர் போலியான முகவரி மற்றும் வேறு ஒருவரின் படத் தையும் கொடுத்து இருந்ததால் உடனடியாக அவரை அடையாளம் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page8/98671.html#ixzz3VgF69jKz

தமிழ் ஓவியா said...

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) புரட்சிகரமான சிந்தனைகளை அரங் கேற்றுவதுதானே பொருத்தமானது!

தலைவரை மதிக்கிறோம் என் றால் தலைவரின் கொள்கைளை மதிப்பதில்தான் அதனைக் காட்ட வேண்டும்.

தாலியைப்பற்றிய விவாதத் தையே நடத்தக் கூடாது என்று இந்துத்துவாவாதிகள் மிரட்டும் போது, வன்முறையை ஏவும்போது, கருத்துச் சுதந்திரம் என்ற அடிப் படையில் நோக்கினாலும் சரி, பெண் ணுரிமைப் பார்வையில் பார்த்தாலும் சரி, அதனை எதிர் கொண்டு முறி யடிப்பதுதான் முற்போக்குச் சிந்தனை - அதனை வீழ்த்துவதுதானே புரட்சி! அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியை அகற்றுவதா என்று சில அருமைத் தோழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமாம். அண்ணலின் பிறந்த நாளில்தான் அவரின் இந்தப் புரட்சி கரமான சிந்தனையைத்தான் செயல் படுத்த வேண்டும்.

தாலியைப்பற்றி அண்ணலின் கருத்து என்ன? இதோ பாபாசாகேப் பேசுகிறார். சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வரு மாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளி களின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது; வேறுபட்ட தன்மை யுடையது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாள னுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவ தற்காகத்தான் தாலி கட்டும் திரு மணம் என்னும் சடங்கு நடத்தப் படுகிறது என்று பொதுவாகக் கருதப் படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல் லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

இதற்கு விளக்கமும் வேண்டுமோ!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துக்கும், தகவலுக்கும் பிறகு இணையதளத்தில் விளையாடும் நமது அருமைத் தோழர்கள் தெளிவு பெறுவார்களாக!

இந்து மதக் கொடுமை என்ற தளையிலிருந்து பெண்களை விடுதலை பெறச் செய்யத்தான் அன்று சட்ட அமைச்சராகவிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நிறைவேற் றப்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அமைச்சர் பதவியைத் தலையைச்சுற்றித் தூக்கி எறிந்தார்.

இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொண்ட எவருக்கும் அவர் பிறந்த நாளில் அடிமைத்தளையாம் தாலியை அகற்றுவதன் அவசியமும், பெரு மையும் அருமையாகப் புரியும்.

ஒரு புரட்சியாளர் பிறந்த நாளில் இது போன்ற புரட்சிகரத்தை அரங்கேற்ற வேண்டுமே தவிர - புளியோதரை செய்வது எப்படி? பொரி உருண்டை செய்வது எப்படி? என்பதையா கற்றுத் தர முடியும்?

சிந்திப்பீர்!

இந்த செயல் வெற்றி பெற வீங்கு தோள் கொண்டு எழுவீர்! எழுவீர்!!

- கருஞ்சட்டை

குறிப்பு: பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் தாலி அறுக்கும் போராட்டம் என்று கொச்சைப்படுத்தும் சிறுமதிக் கூட்டத்திடம் எச்சரிக்கை யாக இருங்கள் தோழர்களே!!

Read more: http://viduthalai.in/e-paper/98721.html#ixzz3VgIUc8ug

தமிழ் ஓவியா said...

மோடி சம்பளம் வாங்காத பிசிசிஅய் விளம்பரத் தூதரா?

காலையில் வெற்றி பெற வாழ்த்து, நண்பகலில் நன்றாக பேட்டிங் செய்ய வாழ்த்து, மாலையில் தோற்றவுடன் மக்களுக்கு ஆறுதல்?! மோடி சமூக வலைதளத்தின் மூலம் இங்குள்ள கிரிக்கெட் கிளப்பிற்கு சம்பளம் வாங்காத பிராண்ட் அம் பாசிடர் போல் செயல் பட்டு வருகிறார். ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்றபோதும், காமன்வெல்த் போட்டி யில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய விளை யாட்டு வீராங்கனைகள் பதக்கம் வென்றபோதும் இது குறித்து பேசாத மோடி. கிரிக்கெட் போட்டி கள் ஆரம்பித்ததில் இருந்தே சமூகவலைதளத் தில் பிசிசிஅய்க்கு விளம் பரம் செய்தவாறே இருந்தார். பிசிசிஅய் என்ற தனியார் நிறுவனம் தனது விளையாட்டு வியாபா ரத்தை நடத்த ஒப்பந்த அடிப்படையில் சூதுவா தில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கட்ட ளைக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளை களத்தில் இறக்கி விட்டு வியாபாரம் பார்க்கிறது. கிரிக்கெட் விளையாட் டுப் போட்டிகள் தனியார் நிறுவனம் நடத்தும் மேற் படி சூதாட்டம், இதை பிசிசிஅய் நீதிமன்றத்தி லேயே கூறிவிட்டது, நேற்று மாத்திரம் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்த தாக இண்டெர்நேசனல் பிஸ்னஸ் டைம்ஸ் (லீஜீ://ஷ்ஷ்ஷ்.வீதீவீனீமீ.நீஷீ.வீஸீ/) என்னும் செய்தி நிறு வனம் செய்திவெளியிட் டுள்ளது. கடந்த வாரம் கூட 2007-ஆம் ஆண்டு நடந்த அய்.பி.எல் விளையாட் டில் சுமார் 500 கோடிக் கும் மேல் வரிஏய்ப்பு செய்ததாக பிசிசிஅய் மீது உச்சநீதிமன்றத்தில் வரு மானவரித்துறை மற்றும் சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது போன்ற நாட்டிற்கு வரிஏய்ப்பு செய்துவரும் அமைப்பைச் சேர்ந்த வணிகம் தொடர்பான விளையாட்டிற்கு மோடி வலிய வந்து வக்காலத்து வாங்குகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/98715.html#ixzz3VgIrEIaz

தமிழ் ஓவியா said...

இன்று இராம நவமியாம்!

இராமன் பிறந்தானாம்! இராம ராஜ்யம் - இதுதானா?

புரிந்து கொள்வீர் இராம பக்தர்களே!

இராமாயணத்தில் இராமன் ஆட்சி - எப்படி நடந்தது? யாருக்காக நடந்தது?

வால்மீகி இராமாயணத்தின் கடைசிக் காண்டமான உத்தரகாண்டத்தில் இராமராஜ்யம் பற்றிக் கூறப் படுகிறது!

ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்து போனான். அவனது சடலத்தோடு, பார்ப்பனக் கூட்டம், இராமனுடைய தர்பாருக்குள் கும்பலாக நுழைகிறது.

இராமா! உன் ஆட்சியில் அதர்மம் மேலோங்கி விட்டது; (அதாவது மனுதர்மம், குலதர்மம் உள்ளடக் கிய) வர்ணதர்மக் கட்டளைகளை யாரும் சரியாகக் கடைப்பிடித்து ஒழுகுவதில்லை.

ஞானியானாலும், மூடன் ஆனாலும், சூத்திர னுக்குப் பிராமணனே தெய்வம்; அந்த மேலான தெய்வ மாகிய பிராமணனை மட்டும்தான், அல்லது அவன் மூலமாகத்தான் தெய்வத்தைத் தொழ முடியும்; தொழ வேண்டும். இந்த இந்து மத சாஸ்திரங்களைமீறி, சம்பூகன் என்ற சூத்திரன் ஊருக்கு வெளியே காட்டில் கடவுளிடம் வரம் வாங்கிட தவம் செய்கிறான், முயலுகிறான்;

இந்த அதர்மத்தினால் எனது மகன் பாலகன் செத்து விட்டான் என்று கதறி முறையிட,
எந்த விசாரணையும் இன்றி, உடனே ராமன் புறப்பட்டுச் சென்று தவம் செய்து கொண்டிருந்த சம்பூகன் என்ற சூத்திரனை (அசுரன்) நாலாஞ் சாதிக்காரனை கண்டந்துண்டமாக வெட்டி எறிந்தான்.

செத்துப் போன பிராமணச் சிறுவன் உடனே உயிர் பெற்றெழுந்தான் என்றும் கூறப்படுகிறது!

இந்த அடிப்படையில்தான் இன்றும்கூட உச்சநீதி மன்றத்தில் நீதி (ஒரு மும்பை வழக்கில்) சூத்திரர்களுக்கு சந்நியாசம் கொள்ளவும்கூட உரிமையில்லை; காரணம் வர்ண முறைப்படி பிராமணர்களுக்கு மட்டும்தான் மடாதிபதியாக, சந்நியாசம் வாங்கிட உரிமையுண்டு என்று சில ஆண்டுகளுக்குமுன் தீர்ப்பும் வந்து இந்த குலதர்மப் பாதுகாப்பை - வர்ண தர்மப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது!

இந்த இராமனை சூத்திரர்களும் பஞ்சமர்களும் அதாவது கீழ் ஜாதியாக்கப்பட்டவர்களும் கும்பிடலாமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள் பக்தர்களே!

குறிப்பு: இந்த உத்திரகாண்டத்தை கம்பன் போன்ற கைக்கூலிகள் எழுதாமல் கைவிட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98717.html#ixzz3VgJ2FfoP

தமிழ் ஓவியா said...

மதம்படுத்தும்பாட்டைப் பாரீர்!

புனித(?) நதியில் மூழ்கி 10 இந்துப் பக்தர்கள் பலி!

டாக்கா, மார்ச் 28-_ வங்காளதேசம் முஸ்லிம் நாடாக இருந்தாலும், அதன் 16 கோடி மக்களில் 10 சதவீதம் பேர் இந் துக்கள் ஆவார்கள். அங்கு தலைநகர் டாக்காவில் இருந்து 25 கி.மீ. தெற்கே பழைய பிரம்மபுத்ரா நதிக்கரையில் லங்கல்பந்த் என்ற இந்து புனித தலம் உள்ளது.

அங்கு ஆண்டு தோறும் பங்குனி அஷ்ட மியின்போது, வங்காள தேசத்தில் இருந்து மட்டு மல்லாது இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கூடுவது வழக்கமாம். பிரம்மபுத்ரா வில் இந்த நாளில் நீராடி தெய்வ தரிசனம் செய்வது நல்லது என இந்துக்கள் கருதுகின்றனராம்.

இந்த ஆண்டும் வழக் கம் போல நேற்று அந்த நதியில் புனித நீராடுவ தற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அதற்காக 15 முனைகள் நீராடுவதற்கு ஏற்ற இடங் களாக அறிவிக்கப்பட் டிருந்தன. நேற்று காலை 5.45 மணிக்கு நீராடல் தொடங்கியது.

சுமார் 9 மணிக்கு புனித நீராடுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது நதியில் புனித நீராடுவ தற்கு பக்தர்கள் ஒருவருக் கொருவர் முந்திச்செல்ல முற்பட்டபோது நெரிசல் ஏற்பட்டது. பலர் கீழே விழுந்தனர். ஒருவரை ஒருவர் மிதித்து செல்லும் நிலை உருவானது.

இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள். 30 பக்தர் கள் படுகாயம் அடைந் தனர். அவர்கள் உடனடி யாக மீட்கப்பட்டு அரு கில் உள்ள மருத்துவம னைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்த தக வல் அறிந்ததும் நாராயண் கஞ்ச் காவல்துறை கண் காணிப்பாளர் கண்டகர் மத் உதீன், டி.அய்.ஜி., முகமது சபீக், கூடுதல் டி.அய்.ஜி. பரூக் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், அவர் களை ஒழுங்குபடுத்தி நீராடுவதற்கு உதவும் வகையில் தேவையான எண்ணிக்கையில் காவல் துறையினரும் தன்னார்வ தொண்டர்களும் பணி அமர்த்தப்படவில்லை என பக்தர்கள் கூறினர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாக அதிகாரி அனிசுர் ரகுமான் கூறும்போது, இந்த ஆண்டு வங்காளதேச தேசிய தினத்தை முன் னிட்டு விடுமுறை விடப் பட்டிருந்ததால், வழக் கத்தை விட கூட்டம் அதிகமாக கூடியது. அத னால்தான் இந்த அள வுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டது என கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளார்.

மத விழாவில் மதம் பிடித்த யானையால் பாகன் பலி!

கேரள மாநிலம் திருச் சூரில் உள்ளது கையப்ப மங்களம். இங் குள்ள சலியன்கோவில் என்ற இடத்தில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திரு விழா நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை பட்டங்கட்டிய யானைகள் ஊர்வலமாக சென்றன. இதில் 1000க்கும் மேற் பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயகிருஷ் ணன் என்ற யானையும் பட்டம் கட்டி ஊர்வல மாக வந்தது. இதன் பாகனாக சிவசங்கரன் (வயது 51) இருந்தார்.

ஊர்வலம் கோவில் அருகே வந்தபோது விஜய கிருஷ்ணன் யானைக்கு மதம் பிடித்தது. பக்தர் களை யானை ஆவேசமாக தாக்க முயன்றது. பக்தர் கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பக்தர்களை காப்பாற்ற சிவசங்கரன் யானையின் அருகே சென்று அடக்க முயன்றார். ஆவேசத்தில் இருந்த யானை பாகன் சிவசங்கரனை தந்தத்தால் குத்தி எறிந்தது. இருந்தா லும் பாகன் மீண்டும் யானையை அடக்க முயன் றார். இதில் ஆத்திர மடைந்த யானை சிவசங் கரனை துதிக்கையால் பிடித்து சுழற்றி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் பாகன் சிவசங்கரனுக்கு நெஞ்சு பிளந்தது.

ரத்தவெள்ளத்தில் சிவசங்கரன் உயிருக்கு போராடினார். அங்கிருந்த கையப்பமங்களம் காவல் துறையினர் சிவசங்கரனை ஜீப்பில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். அங்கு போதிய மருத் துவ வசதி இல்லாததால் திருச்சூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பல னின்றி சிவசங்கரன் பரிதாபமாக இறந்தார்.

யானைக்கு மதம் பிடித்தது குறித்து திருச்சூர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அவர்கள் மயக்க ஊசி செலுத்தி யானை விஜயகிருஷ்ணனை சங் கிலியால் கட்டிப்போட்ட னர். இதுகுறித்து கையப் பமங்களம் காவல்துறை யில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சேர்த்திடுக!

செய்தி: பால் விலை உயர் வால் ஏழைகள் பாதிக்கப் படவில்லை.
- முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சிந்தனை: இரு முறை மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை; போக்குவரத்துக் கட்டண உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை என் பனவற்றையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98712.html#ixzz3VgJM1HoX

தமிழ் ஓவியா said...

தலைகுனியத்தக்கது!

இந்துமதம் என்ற பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் - வளர்க்கும் ஓர் அமைப்பில் தாழ்த்தப்பட் டவர்கள் நிலைமை என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த ஜாதி அமைப்பு முறையில் அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளபடி (Graded Inequality) இந்த ஏணிப்படி ஜாதி அமைப்பு முறையால் தாழ்த்தப்பட்ட வர்களும் அவர்களை அடுத்து மேலே இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களும் மோதிக் கொள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் திண்ணியூரில் தாழ்த்தப்பட்ட தோழர் வாயில் மலம் திணிக்கப்பட்டதும், தற்போது கிருட்டினகிரியை அடுத்த வீராச்சிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கருவானூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் அரவிந்தன் வாயில் சிறுநீர் கழிக்கப் பட்டதுமாகும்.

என்ன காரணம் சொல்லப்பட்டாலும் இந்தக் கொடுமையை ஏற்கவே முடியாது.

இத்தகு கொடுமை இனி ஒரு போதும் நடந்திட அனுமதிக்கக் கூடாது! இந்த அருவருப்பான செயல் நடைபெற்றதற்காக தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வெட்கப்பட்டே தீர வேண்டும்.

இது ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினை என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும் கூடாது. அவர்கள் இந்தச் சமூகத்தின் முக்கிய அங்கமாகும்.

பெங்களூரில் பணியாற்றும் அந்தத் தோழர் நவீன கைப்பேசியை வைத்திருந்தார் என்பதற்காக, அதனைப் பொறுக்க இயலாத ஜாதி வெறியர்கள் இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயர் ஜாதிக்காரர்களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி! என்று கூனிக் குறுகி நிற்க வேண்டும் என்று இன்றைக்கும் எதிர்பார்க்கிறார்களா!?

இதுபோன்ற கொடுஞ்செயல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பி.சி.ஆர். சட்டம் ஒரு தலைபட்சமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று சொல் கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் எண் ணத்தில் ஜாதிவெறி நஞ்சு ஊறி நிற்பதாகத்தான் கருதப்பட வேண்டும்.

இந்தச் சட்டம் சரிவர செயல்பட்டு இருந்தால், இத்தகு குற்றங்கள் அருகிப் போயிருக்க வாய்ப்புண்டு. சட்டம் இருக்கிறதே தவிர, அதனைத் தேவையான இடத்தில் ஒழுங்காகச் செயல்படுத்தத் தவறியதும் இதுபோன்ற அருவருப்பான மனித உரிமைக்கு எதிரான செயல்கள் தொடர்வதற்கும் காரணமாகும்.

கீழ வெண்மணியில் 42 தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட பொழுது, மருத்துவ மனையில் இருந்த தந்தை பெரியார் வெகுண்டெழுந்து

இந்தக் கொடுமைகளையும், இது போன்ற அராஜகங்களையும், சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இந்தி யாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை. இதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை (விடுதலை 28.12.1968) என்று தந்தை பெரியார் ஆழமான கருத்தினை வெளியிட்டார். இந்த அளவுக்கு அழுத்தமான கருத்தினை யாரும் தெரிவிக்கவில்லை.

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டபோது அந்தப் பகுதி களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் கருஞ் சட்டைத் தோழர்கள் திரண்டு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளையும் செய்ததோடு, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து தருமபுரியில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தியது திராவிடர் கழகமே!

சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் அவசியம் தேவைப்படுகிறது.

சில கட்சிகள் அரசியல் அபிலாஷைகள் காரணமாக ஜாதிக் கட்சிகளை ஒன்றிணைத்து, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதாரின் கூட்டணியை அமைத்தது மன்னிக்கப் பட முடியாத ஒன்றாகும். (அது வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்!)

அந்த முடிவையும் கடுமையாக விமர்சித்தது திராவிடர் கழகமே! இந்த ஜாதி ஒழிப்புத் திசையில் தந்தை பெரியார் அறிவித்த - திராவிடர் கழகம் கையில் எடுத்துக் கொண்டுள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற பிரச்சினை செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த ஜாதி நம்பிக்கையின் தலைமீது பேரிடி தாக்கி, ஜாதியின் ஆணி வேர்கள், பக்க வேர்கள் வரை பொசுங்கிப் போய் விடும் என்பதில் அய்ய மில்லை. சங்கரமடத்திலும் சங்கராச்சாரியராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வர வேண்டும்.

மூலபலத்தோடு போர்ப் புரிய வேண்டும் - அந்த மூலத்தை அழிக்காத வரை ஜாதி வெறி அதன் தீய குணாம்சத்தோடு ஆட்டம் போடத்தான் செய்யும் என்றாலும் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியே தீர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

Read more: http://viduthalai.in/page-2/98700.html#ixzz3VgJbT3NX

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98697.html#ixzz3VgJpWi6g

தமிழ் ஓவியா said...

ஊழியர்களை மிரட்டி இந்தித் திணிப்பா?

சென்னை, மார்ச் 28_ சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியா ழனன்று நிறுவனங்கள் விவகாரத் துறைஇந்தி நாள் கொண்டாடி யிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14 அன்று தான் இந்தி நாள் கொண் டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தத்துறை, செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண் டாடியிருக்கிறது. அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச் சகத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கே.பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார்.

இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாடவேண்டும் என்றும், இந்திதெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.இதை தமிழ்மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பது டன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன் படுத்தப்படுவதை தடைசெய்யவேண்டும் என்று அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள் ளார்.

சட்டம் சொல்வது என்ன?

இந்திய அரசியல்சாசனம் இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழி என்று கூறவில்லை. மாறாக ஆங்கிலத்தையும் அது ஏற்கிறது. அது மட்டும் போதாது, அனைத்துத் தேசிய இனங்களின் மொழியையும் இந்தியா வின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை இப்போது இந்தியா முழுவதிலும் வந்துகொண்டிருக்கிறது. அதை விட முக்கியமாக, இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம்1-1963இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் விதிமுறைகள் 1976 மிகத் தெளிவாகவே இந்தி அலுவல் மொழி என்பது தமிழகத்துக்குப் பொருந்தாது என்று வரையறுத்திருக்கிறது.

அதாவது இந்தி அலுவல் மொழி யாக பயன்படும் இடங்கள் எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இந்தி அவ் வாறாக பயன்படுத்தப்படவேண்டிய தில்லை என்பதே அந்தச் சட்டத்தின் கருத்தாகும்.இன்னும் தெளிவாக, எந்தெந்த அமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தால் அவற்றுக்குப் பொருந்தாது என்பதும் சட்ட விதிகளில் வரையறுக் கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் ஒரு ஆணையம், குழு, தீர்ப்பாயம், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற தொழில் நிறுவனம் ஆகிய அனைத் துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

நன்றி: தீக்கதிர் 28.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98704.html#ixzz3VgJy4sib

தமிழ் ஓவியா said...

தாஜ்மகால் யாருக்குச் சொந்தம்? இந்துத்துவாவாதிகளுக்கு மூக்குடைப்பு!


லக்னோ, மார்ச் 28- உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்ம ஹாலை முன்னாள் சிவன் கோயில் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத் தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் மேலும் அய்வர், நேற்று மனு ஒன் றினை தாக்கல் செய்திருந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்ன தாக அந்த இடத்தில் அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் கடவுளுக்கு அர்ப் பணிக்கப்பட்ட பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களி டம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன என அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாக தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர், இந்த கோரிக்கை தொடர் பாக அலகாபாத் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/98705.html#ixzz3VgKAxQfq

தமிழ் ஓவியா said...

சர்ச்சைக்குரிய 66-ஏ சட்டப்பிரிவு
முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில்

சென்னை, மார்ச் 28_ சர்ச் சைக்குரிய 66-ஏ சட்டப் பிரிவை தொடங்கியது நானா? என முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைத் தளங் களில் கருத்து வெளியிடுகிற சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு அமைந்தது என்று கூறி, உச்சநீதிமன்றம் அந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து கடந்த 24- ஆம் தேதி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டது.

அந்தத் தீர்ப்பினை அனைத்துத் தரப்பினரும் பெரிதும் வரவேற்கின்ற நேரத்தில், உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள அந்த சர்ச்சைக்குரிய சட்டப் பிரி வுக்கான கருத்தை உருவாக் கியவனே நான் தான் என் பதைப் போல, முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது, எனக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் வருத்தத் தையும் தருகிறது.

ஒரு சட்ட முன்வரைவு ஒரு அமைச்சகத்தால் ஆய் வுக்கு பிறகு தயாரிக்கப் பட்டு, அது சட்ட அமைச் சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். சட்ட அமைச்சகம், அதனை விரி வாக எல்லா கோணங்களி லும் ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் தரும். அதற்கு பிறகு தான் அந்த சட்ட முன்வரைவு மத்திய அமைச் சரவையின் பரிசீலனைக்கு வைக்கப்படும். அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கிய பிறகு தான் அந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் படும்.

அப்போது கூட, அந்த சட்டத்தை விவாதத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளலாமா? வேண் டாமா? என்பதை முடிவு செய்ய போதுமான விதி களின் பாதுகாப்பும், அவைத் தலைவரின் ஒப்புத லும் அவசியம் தேவையா கும். அந்த நிலையில் கூட, அந்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு இருக்குமானால், அந்த சட்ட முன் வரைவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வழி வகை உள்ளது.

இப்படி எல்லாம் படிப்படியாக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உட் படுத்தப்பட்ட பிறகு தான் இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலே கூட, இந் தச் சட்டம் தவறாக கொண்டுவரப்பட்டது என்று எந்த உள்நோக்கத் தையும் என்மீதோ, அல் லது நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதோ குற் றமாக எதுவும் கூறாத போது, சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் சட்டம் நிறைவேற ஒரு காரணமாக இருந்துவிட்டு, இப்போது எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் என்மீது பழி சுமத்துவதைப் போல ஒரு கருத்தினை வெளியிட் டிருப்பது, அவர் வகித்த பதவிக்கு உகந்ததல்ல.

இதுபோன்ற சட்டங் கள் உருவாகும்போது, அது ஒட்டு மொத்த அமைச்ச ரவையின் முடிவாகத்தான் கருதப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜன நாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98684.html#ixzz3VgLRet2N

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு
புகார்களைப் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 28_ பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.

மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உள்ளிட்ட 69 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் இவ்வாறு உத்தரவிட்டார். காவல் நிலையங்களில் தாங்கள் அளித்த புகார் கள் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தர விட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந் தனர்.

இம்மனுக்களை விசா ரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: புகார்களில் கூறப்படும் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கத் தகுந்ததாக இருந்தால் காவல்துறை யினர் உடனடியாக வழக் குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இருப்பினும் காவல்துறையினர் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வது கவலையளிக் கிறது. புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது புகார்தாருக்கும் வழக்கு விசாரணையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மைகளைத் திரித்து வழக்குப்பதிவு செய்வது, சாதாரண குற்றங்களை கடுமையான குற்றங்களாகவும், கடுமை யான குற்றங்களை சாதா ரண குற்றங்களாகவும் மாற்றுவது போன்ற தவ றுகளில் காவல்துறையி னர் ஈடுபடுவதாகத் தெரி கிறது. இந்திய அளவில் காவல்துறையிடம் அளிக் கப்படும் புகார்களில் பாதி யளவு பதிவு செய்யப்படு வதில்லை என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே கீழ்க்கண்ட பரிந்துரைகளை காவல் துறைக்கு அளிக்கிறோம். புகாரில் கூறப்படும் குற் றம் வெளிப்படையாகப் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரியாத போது, விசாரணை நடத்தி சம்பவம் நடந்துள் ளதா எனக் கண்டறிய வேண்டும்.

முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென் றால் வழக்கை முடிக்க வேண்டும். வழக்கு முடிக் கப்பட்டது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் புகார்தாரரிடம் ஒரு வார காலத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த கடமையில் இருந்து தவறும் காவல் துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீதான விசா ரணை முடித்து வைக்கப் பட்டது.

நீதிபதி தனது உத் தரவில், குடும்பத்தகராறு, வணிக ரீதியான குற்றங் கள், மருத்துவ சிகிச்சை யில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக அளிக் கப்படும் புகார் ஆகியவற் றில் முதற்கட்ட விசா ரணை நடத்தப்பட வேண் டும். விசாரணையை 7 நாள்களில் முடிக்க வேண் டும். விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து டைரியில் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் அனைத்தையும் பொது டைரி, நிலைய டைரி, தினசரி டைரி ஆகியவற்றில் எழுத வேண்டும்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு விழிப் புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் தவறிழைக்கும் காவல் துறையினரைக் கண் காணிக்க குழு அமைக்க வேண்டும்.

தவறு கண்டுபிடிக்கப் பட்டால் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98690.html#ixzz3VgLpQB8n

தமிழ் ஓவியா said...

கேள்வியும் பதிலும்

- சித்திரபுத்திரன் -

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படு கின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப் போகாது.

அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாகவேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgLzS3qe

தமிழ் ஓவியா said...

குடிஅரசுக்குப் பாணம்

குடிஅரசு பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுரகர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும்,

இருக் கின்றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையில் இப்படிச் செய்யாமல் விட்டு வைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.

முதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங் கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொருவாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசய மேயாகும்.

குடிஅரசு தோன்றி இந்த 8 1/2 வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளைக் கண்ணாடி போல் வெளிப் படுத்தும் தொண்டை பிரதான மாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக்காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

சிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பது போல் குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடிய வில்லை யானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரி யன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுர கர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் குடிஅரசு மறைவதில் அதிகக் கவலையி ருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது.

மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணி னோம். இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின் றனவோ பார்ப்போம்.

நிற்க இதன் பயனாய் குடி அரசின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவதுயாரும் பயப்பட வேண்டியதில்லை. நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றி விட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது.

குடி அரசோ சுயமரியாதைக்காரரோதான் கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. குடிஅரசும் சு.ம.காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக்கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக்கொள்கையைச் சொல்லவும், பிரச்சாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விவரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 12.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgMATHjv

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி என்பது வடமொழி. இதற்கு ஏற்ற சொல் தமிழில் இல்லை. எனவே, ஜாதி என்பது தமிழரிடை முன்பு இருந்த தில்லை. தமிழர்களுக்குள் ஜாதி என்பது இருந்து இருக்கு மானால் அதற்குத் தமிழில் ஒரு சொல் இருந்து இருக்க வேண் டுமே? இல்லையே! எப்படி காபி என்பது அன்னிய நாட்டுப் பொருளானதால் அதற்குத் தமிழில் சொல் இல்லையோ அதுபோல் ஜாதி என்பதற்கும் சொல் இல்லை.

ஆரிய எதிர்ப்புணர்ச்சியும் அவர்கள் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வும் இந்தியாவிலேயே தமிழன் என்கிறவனுக்குத் தான். தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது... நம்முடைய கலை, சிற்பம் என்பது நாம் எவ்வளவு நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைப் பெற்று அந்தக் காலத்திலேயே நாம் எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டும். இந்தியாவின் மற்றெந்தப் பகுதியிலும் இப்படிப்பட்ட உயர்ந்த அறிவும் சக்தியும் அந்தக் காலத்தில் இருந்ததாகவே தெரியவில்லை.


Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgNEsEt1

தமிழ் ஓவியா said...

புரட்சி

குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆகவேண்டும்.

அந்த அய்தீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் புரட்சியைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. நமது முதலாளி வர்க்க ஆட்சியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியிருப்பதால் குடிஅரசை அதன் முதுகுப் புறத்தில் குத்திவிட்டது.

இந்தக் குத்தானது பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும் என்ற ஞானபோதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது புரட்சியானது குடிஅரசைக் காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப் பிரச்சார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவர வேண்டியதாகிவிட்டது. இதன் காரணமாய்ப் புரட்சி எந்த நிமிஷத்தில் குத்துப் பட்டாலும் படலாம். எந்த விநாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம்.

ஆனால் சுயமரியாதைப் புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது. அது வெற்றி பெரும்வரை ஒரு கணமும் ஒய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி. காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமாறவருந்தியும், மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமுக சமதர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங் கோலாட்சிக்கு உற்ற துணை.

மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே உழைப் பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காத வனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சித் தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.

ஆதலால் மனிதசமூகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டு பிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடை கின்றோம்.

சோம் பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர் களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள் அடையக்கருதி சுய மரியாதை இயக்கப்போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர் களுடையவும் ஆதரவு நம் புரட்சிக்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே புரட்சி தோன்றி யிருக்கிறது.

ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினியாயும் சமுக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே புரட்சி எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று புரட்சி வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த புரட்சி தோன்றவில்லை.

அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து,

மக்கள் யாவரும் சுய மரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவ மாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே புரட்சி தோன்றியி ருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில், ஆர்வமுள்ள மக்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.

புரட்சி - தலையங்கம் - 26.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98722.html#ixzz3VgNP3VNI

தமிழ் ஓவியா said...

தமிழர் சமுதாயம் 100-க்கு 100 மக்கள் படித்தவர்களாக வேண்டும்; ஆக்கப்பட வேண்டும். பத்தாண்டு களிலாவது தமிழன் சமுதாயம் ஆணும் பெண்ணும் தன் ஜனத் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அரசியல், தொழிலியல் முதலிய சகல துறைகளிலும் விகிதாச்சாரம் பதவி - இடம்பெற வேண்டும். தமிழனைப் பற்றிய வேறு எந்தக் காரியத்தைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgNmsOHI

தமிழ் ஓவியா said...

மதம் தேவை இல்லை 110 ஆண்டு கால கிறித்துவ சர்ச் ஹோட்டல் ஆகிறது


நியூயார்க், மார்ச்.29_ நியூயார்ககில் 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கிறித்தவர்களின் நினைவுச் சின்னமாக விளங்கிவரும் சர்ச் தற்போது விடுதியாக மாற்றப்படுகிறது. மேற்கு 36ஆவது தெரு, எட்டு மற்றும் ஒன்பதாவது நிழற்சாலைகளைப் பகுதியில் உள்ள அந்த சர்சை இடித்துவிட்டு, மெக் சாம் என்கிற விடுதிக் குழுமத்தின் சார்பில் 20 அடுக்குகள், 406 அறைகள் கொண்டுள்ள புதிய விடு தியை அமைக்க உள்ளது. பிராட்டஸ்டன்ட் கிறித்த வர்கள் வழிபட்டுவந்த சர்ச் பகுதிக்குள் 1975 ஆம் ஆண்டுவரையிலும் சர்ச், சமுதாயக் கூடம் மற்றும் அரங்குகள் செயல்பட்டு வந்துள்ளன. மன நல மருத் துவத்துறை பட்ட மேற் படிப்புக்கான பகுதி இயங்கிவந்தது. 50.8 மில்லியன் டாலர் மதிப்பில் கடந்த ஆண்டில் அதை மாற்றுவதற்காக விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா லும், அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டு வதற்கான அனுமதி கிடப் பில் இருந்தது. ஆய்வா ளர்கள் குறிப்பிடும்போது, நூற்றாண்டு கால பழமை வாய்ந்த சர்ச் முடிவுக்கு வருகிறது என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/98752.html#ixzz3VlyKVzBD

தமிழ் ஓவியா said...

தஞ்சாவூர், மார்ச் 29_ தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு நூல் வெளியீட்டு விழா 28.3.2015 அன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை குழந்தை ஏசு திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.


கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவர் வாழ்வும், பணியும் நூல் வெளியீட்டு விழாவை தஞ்சையில் முதலாவதாக சிறப்பாக நடத்திய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களை பாராட்டி உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வ.நேரு தொடக்கவுரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அறிமுக உரையாற்றினார்.

டாக்டர் இரா.இளங்கோவன் உரை

முதல் பிரதியை பெற்றுக்கொண்ட தஞ்சை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் இரா.இளங்கோவன் உரையாற் றினார். அவர் தனது உரையில்:

ஒப்பற்ற சுய சிந்தனை யாளர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வாரிசு ஆசிரியர் வீரமணியின் வாழ்வும், பணியும் நூலினை நம்.சீனிவாசன் மிகவும் அருமையாக கடுமையாக உழைத்து நமக்கு பல தகவல்களை திரட்டித் தந்துள்ளார். அவரை வெகுவாக பாராட்டி பல்வேறு வரலாற்று செய்திகளை எடுத்துக் கூறி உரை யாற்றினார்.

நம்.சீனிவாசன் உரை

நூலாசிரியர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் தனது உரையில்: நம்.சீனிவாசனுக்கு பேசத் தெரியாதே அப்படி இருந்தும் ஏன் உங்களை எங்கும் பேச அழைக்கிறார்கள் என்பார்கள் அவர் சீக்கிரம் பேச்சை முடித்து விடுவார்.

அதனால்தான் என்றனர், இங்கே. மேனாள் துணைவேந்தர் அவர்களும் இன்னாள் துணைவேந்தர் அவர்களும் பேச உள்ளார்கள் அவர்கள் பேச்சைக் கேட்போம், தந்தை பெரியாரின் தத்துவவாரிசு தமிழர் தலைவர் வீரமணி அவர்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரும் பேறு என குறிப்பட்டார்.

முனைவர் நல்.இராமச்சந்திரன் உரை

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் நூலாசிரியர் நம்.சீனிவாசன் அவர்களை பாராட்டி உரையாற்றினார். அவர் தனது உரையில்: பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் எளிமையானவர், பண்பானவர், விருந்தோம்பலுக்கு சிறந்தவர்.

கல்லூரிப் பேராசிரியர் தமிழர் தலைவர் வீரமணியின் பால் மிக்க மரியாதையும் அன்பும் கொண்ட அவரது தனது கடுமையான உழைப்பின் பயனாக ஒரு ஆய்வுப் பெட்டகத்தை நமக்கு தந்துள்ளார். அவர்களை வெளிநாட்டுப் பாணியில் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி பாராட்டு செய்ய கேட்டுக் கொண்டார். அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி பாராட்டினர்.

முனைவர் ம.இராசேந்திரன் உரை

தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும், பணியும் நூலினை வெளியிட்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரையில்: இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு பேர் வந்துள்ளோம் என்றால் தஞ்சை மாவட்டத்துக்காரர் நம்.சீனிவாசன் எழுதியதாலா? இல்லை.

இந்த நூல் யாரைப் பற்றியது? தந்தை பெரியாருக்கு பிறகு இந்த இனத்திற்கு தொண்டாற்றக் கூடிய விடுதலை ஆசிரியர் வீரமணியைப் பற்றியது. அவரின் வாழ்வையும், பணியையும் விளக்கக்கூடியது அதன் காரணமாக நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம்.

தமிழர் தலைவர் அவர்கள் அய்யாவின் அடிச்சுவட்டில் நூலில் தன்னுடைய வாழ்வும் இயக்கப் பணியையும் இணைத்து நமக்கு தந்துள்ளார். பின் ஏன் இந்த நூல், ஒருவர் தன்னைப் பற்றி எழுதும்போது தயக்கம், கூச்சம் ஏற்படும். மற்றவர் எழுதும் பொழுது உள்ளதை உள்ளவாறு எழுத முடியும். அந்த அடிப்படையில் நம்.சீனிவாசன் இடஒதுக்கீடு முதல், பல்வேறு தகவல்களை 5 இயல்களாக நமக்கு தந்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா தஞ்சையில் நடத்துவது குறித்து அனைவரும் பேசினார்கள். தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்கு பிறகு இந்த இயக்கத்தின் முழு பொறுப்பையும் தலைவர் வீரமணி அவர்கள்தான். ஏற்கவேண்டும் என்று தஞ்சையை சேர்ந்த கா.மா.குப்புசாமியிடம் தான் கடிதத்தை தந்துள்ளனர்.

உலகிலேயே இரண்டு நாத்திகர்கள் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் பெயரால் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதும் தஞ்சையில்தான் ஆசிரியர் வீரமணிக்கும் தஞ்சைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே இந்த நூல் வெளியீட்டு விழாவினை தஞ்சையில் நடத்துவது பொருத்த மானதாகும் என்று உரையாற்றினார்.



Read more: http://viduthalai.in/page-8/98787.html#ixzz3VlzzpD5z

தமிழ் ஓவியா said...

இவர்கள் திருந்தப் போவதில்லை

நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்குமாம்

ராஜ்நாத் சிங் தகவல் புதுடில்லி, மார்ச்.30- நாடு முழுவதும் பசுக் களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற் சிக்கும் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் நேற்று சந் தித்து பேசினர். அப்போது அவர்கள் பசுக்களை கொல்ல தடை விதித்து சட்டம் கொண்டுவருவது டன், எருமைகள் வதை தடை சட்டத்தையும் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொட ரில் நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத் தினர்.

அவர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:-

இந்த நாட்டில் பசு வதையை ஏற்றுக்கொள்ள முடியாது. பசுவதையை தடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளை யும் எடுப்போம். பசுக் களை கொல்வதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வர கருத்தொற்றுமை ஏற்படுத்த கடுமையாக முயற்சி செய்வோம்.

பசுக்களை கொல்வதை தடை செய்ய நாங்கள் உறுதி கொண்டிருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வகையில் ஏற்கெனவே மத்திய பிரதேச மாநில அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மராட்டிய அரசு பசுவதை தடை சட்டம் இயற்றி அனுப்பி வைத்தபோது, அதை குடியரசு தலை வரின் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி வைக்க நேரம் எடுக்கவில்லை.

பசுவதை தடை சட் டத்தை நிறைவேற்றுவ தற்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசுக்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அரசு எப்படியெல்லாம் போரா டுகிறது என்பதை ஊட கங்கள் வாயிலாக நீங்கள் அறியலாம். 2003-ஆம் ஆண்டு நான் விவசாய துறை அமைச்சராக இருந்த போது, பசுவதைக்கு எதி ராக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தேன். அந்த மசோ தாவை நான் அறிமுகம் செய்தபோதே சபையில் அமளி ஏற்பட்டது. அதன் காரணமாக அப்போது அந்த மசோதாவை நிறை வேற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98792.html#ixzz3Vsdgpbu6

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/98796.html#ixzz3Vse6PT00

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் சிறுபான்மையினர்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியுரிமை பெற்று வாழும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் மற்றும் அவர்களுக்கு எதிராக விரோதப் பேச்சுக்கள்மீது அமெரிக்காவின் முக்கிய புலனாய்வுக் குழுவான எஃப்.பி.அய் (திஙிமி) கண்காணிக்கத் துவங்கியுள்ளது. 2014 முதல் 2015 வரை தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் சீக்கியர்களும், இந்துக்களும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

வழிபாட்டுத்தலங்களின் மீதும் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயில்மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பராக் ஒபாமா தலைமையிலான அரசு அமெரிக்காவின் புகழ்வாய்ந்த எஃப்.பி.அய் (திஙிமி) புலனாய்வுக் குழுவிடம் இந்த விசாரணையை ஒப்படைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க சட்டத்துறை நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவின் குடியுரிமை பெற்று இங்கு வசிக்கும் அனைவரும் இந்த நாட்டின் அரசியல் சட்டவிதிகளுக்குட்பட்டு பாதுகாப்பிற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் உரிமை பெற்றவர்கள். சமீபகாலமாக சில மதத்தவர்களின் மீது நடக்கும் தாக்குதல்கள் அரசியலமைப்புச் சட்டவிதிகளை மதிக்காதவர்கள் செய்யும் செயலாகும், இந்த செயலால் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்கவாழ் சீக்கிய அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது அரசின் இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில மாதங்களாகவே எங்களுக்குப் பாதுகாப்பின்மை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது உண்மைதான் என்று கூறினார்.

விசாரணையைக் கையிலெடுத்த எஃப்.பி.அய் தரப்பில் கூறப்படுவதாவது, இந்துக்கள் மற்றும் சீக்கியர் களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு என்ன காரணம் என்று முதலில் கண்டறியவேண்டும், இதன் மூலமே தாக் குதல்களை நிறுத்தமுடியும். தாக்குதல்களை நடத்துப வர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். வெளிநாட்டில் சிறுபான்மையராக இருக்கக் கூடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகள் இந்தப் பிரச்சினை மூலம் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துக்களைத் தவிர மற்றவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்.

இந்தியாவில் இந்துக்களைத் தவிர்த்த மற்ற சிறுபான் மையினரைத் தாக்க ஆரம்பித்தால், அதன் எதிரொலி வேறு நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அமெரிக்க அரசு சிறுபான்மையினரை அங்கீகரிக்கிறது; அவர்கள்மீது வன்முறையை ஏவினால் அவர்களைப் பாதுகாக்க முனைகிறது.

இந்தியாவின் நிலை என்ன? இந்தியாவில் சிறுபான்மையினர் என்பதே கிடையாது - இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று பி.ஜே.பி.யில் உள்ள முன்னணியினரிலிருந்து சங்பரிவாரங்கள் வரை அரட்டை அடிக்கின்றனர்.

அப்படி சொல்லிக் கொண்டே, ஆளும் பிஜேபி வட்டாரத்தினர் சிறுபான்மை மக்கள்மீது அவதூறு கக்கும் நெருப்புக் கணைகளை வீசுகின்றனர். அடிதடி, கொலை வரை அது நீண்டு கொண்டே போகிறது. சிறுபான்மையினர்தம் வழிபாட்டுத் தலங்களை அடித்து நொறுக்குகின்றனர். வணிக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கி வருகின்றனர்.

அமெரிக்க அரசின் அணுகுமுறையையும், இந்திய அரசின் அணுகுமுறையையும் ஒப்பிட்டால் இந்தியா வின் அவலம் எத்தகையது என்பது எளிதில் விளங்கி விடும். குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த போது அரசப் பயங்கரவாதத்தைக் கொம்பு சீவி சிறு பான்மை யினர்மீது ஏவிவிட்டு ஆயிரக்கணக்கானோர் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்; அந்த முதல் அமைச்சர்தான் இப்பொழுது இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார்.

காரில் பயணம் செய்யும்போது நாய்க்குட்டி அடி படுவதையும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும் ஒப்பிட்டு பேசியவர் தான் இன்று இந்தியா வின் பிரதமர்; வெளிநாடுகளைப் பார்த்தாவது இந்துத் துவாவாதிகள், ஆட்சியாளர்கள் திருந்துவார்களா?

இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில் சுற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டு விட்ட பிரதமர் நரேந்திரமோடி சில பாடங்களைக் கற்றுக் கொண்டு திரும்புவது நல்லது!

Read more: http://viduthalai.in/page-2/98797.html#ixzz3VseL4Ehn

தமிழ் ஓவியா said...

பாண்டேயின் கேள்வியும், ஆசிரியரின் அதிரடியும்

- குடந்தை கருணா

தந்தி தொலைக்காட்சியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்வில், நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, ஆசிரியரிடம் கேள்வி கேட்ட விதம் பலவித விமர்சனங்களுக்கும், கண் டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

ஆனால், ரங்கராஜ் பாண்டே கேள்விகள் ஒன்றும் புதிதல்ல.

தொடர்ந்து சோ முதல் நாம் அன்றாடம் பேருந்துகளிலும், ரயில் பயணத்திலும் பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கும் அதே கேள்விகள் தான்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பெரியார் காலத்திலிருந்து பதில் சொல்லி, பதில் சொல்லி அலுத்து விட்டது. இருந்தாலும் அதே கேள்வியை இன்றையவரை பாண்டேயை விட்டு கேட்கிறார்கள் என்றால், காரணம் இருக்கிறது தோழர்களே.

பெரியார் எனும் அந்த மானுடத் தத்துவம், அவர்களை இன்றுவரை தூங்கவிடாமல் செய்கிறது தங்களின் ஆளுமையை தகர்த்த, தொடர்ந்து தகர்க்கும் ஒரே ஆயுதமாக, பெரியாரின் தத்துவம் விளங்குகிறதே என்ற ஆத்திரம். அவர்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து மறைக்கிறது.

அதனால்தான், தாலி அகற்றும் கேள்விக்கு பதில் பெறுவதற்கு முன்பாகவே, சடாரென, பர்தா, இஸ்லாமியர், கிறித்துவர் பக்கம் கேள்வி சாய்கிறது.

திராவிடர் கழகத்தின்பால், சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள இன உணர்வுரீதியான பிணைப்பை அறுக்க முடியுமா என்ற நப்பாசை;

பெரியாரும், இயக்கமும், எப்போதும் மிகவும் ஒடுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட மக்களின் பக்கம்தான் என அனைவருக்கும் தெரியும் என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? என்று தொடர்ந்து சொன்னால், அதன் மூலம் அந்த மக்களுக்கு எதிராக திருப்பிவிட முடியுமா என்கிற அந்த விஷ எண்ணம்;

இந்த வகையில்தான், பார்ப்பனர் களின் கேள்வி எப்போதும் இருக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல், இங்கே தமிழ் நாட்டில் தான், இயக்க ரீதியாக, பார்ப் பனர்களின் ஆதிக்கமும் அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக விளங்கும் பார்ப்பன சனாதன ஹிந்து மதமும் கிழித்தெறியப்படுகிறது.

அந்த சிறப்பான பணி, பெரியாரின் இயக்கத் தால் நடைபெறுகிறது என்பதை பார்ப்பன பரிவாரங்களால் சீரணிக்க முடியவில்லை.

அதன் விளைவுதான், சோ முதல், அத்தனை சவுண்டிகளும் ஒரே கோரஸாக, ஒரே மாதிரியான கேள்விகளை தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் தக்க பதிலடி தந்தாலும், தொடர்ந்து இந்த கேள்விகள் தொடரும்.

ரங்கராஜ் பாண்டேவை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அல்லது மாதத்தில் வேறு ஒரு பாண்டேவோ அல்லது பத்ரியோ, சேஷாத்திரியோ இதே கேள்வியைக் கேட்பார்கள்.

அவர்களுக்கு துணை போவதற்கு நம்மூர் தந்தி டிவி போல பல டிவிக்கள் ஆவலுடன் இருக்கின்றன.

ஆனால், அவர்கள் எந்த முறையில் வந்தாலும், எந்தக் காலத்திலும் பெரியாரின் தத்துவத்தை அசைக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிகிறது.

நம்ம மக்களுக்கு புரிந்தால் சரி.

Read more: http://viduthalai.in/page-2/98804.html#ixzz3VseiVVFo

தமிழ் ஓவியா said...

மிளகின் மருத்துவ குணங்கள்

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது பழமொழி. அப்படியா மிளகில் அவ்வளவு விஷயம் இருக்கா என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த மருந்து பொருளாக மிளகு விளங்குகிறது.

இவை இந்தியாவில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் அனைத்தும் நம்மை நோயில் இருந்து காக்கும் வேலைகளை செய்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கும் வாதத்தை அடக்கும். பசியை அதிகரிக்கும்.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு மிளகு சிறந்த நல்ல மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக் குளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினை களை சரி செய்கிறது.

அதாவது சரியான செரிமானம் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன்மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை எட்டிப் பார்க்காது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே, மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன்மூலம் எடையை குறைக்கலாம். மிளகு தோல் நோயை குணப் படுத்துவதற்கும் பயன்படுகிறது.

இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின்படி மிளகு வெண் புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய் இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினையை எதிர்த்து செயல்படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது.

காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மிளகு மருத்துவத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர்.

உடல் வெப்பத்தை குறைக்கும். இப்படி பல பண்புகளை கொண்டது மிளகு. நரம்புத்தளர்ச்சி, கைகால் நடுக்கம், உதறல், ஞாபகமறதி, முதுமையில் ஏற்படும் தலை சுற்றல் ஆகிய வற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுபகுதியில் என்சைம்களை தூண்டி அதிகம் சுரக்கச் செய்கிறது.

செரிமானத் தன்மையையும் அதிகரிக்க செய்கிறது. நச்சுக் கழிவுகளை உடலில் தங்க விடாமல் செய்வதால்தான் நம் முன்னோர்கள் பத்து மிளகு இருந்தால் என்ற பழமொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன மிளகு வாங்கக் கிளம் பிட்டீங்களா.

Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VsgtCgve

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் 10 இல் ஒருவருக்கு
மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்

மும்பை, மார்ச் 30- இந்தியாவில் 10- இல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 10 இ-ல் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலை களில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

இது தவிர குடிப்பழக்கம், அதிகமாக புகைப்பது கூட மன அழுத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தி யாவில் மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துகொள்வதன் இந்த நோயை தீர்க்க முடியும்.

சமீபத்தில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை யில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.