Search This Blog

30.3.15

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன? தாலி அறுப்பா? தாலி அகற்றமா?

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன?
புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) புரட்சிகரமான சிந்தனைகளை அரங் கேற்றுவதுதானே பொருத்தமானது!

தலைவரை மதிக்கிறோம் என் றால் தலைவரின் கொள்கைளை மதிப்பதில்தான் அதனைக் காட்ட வேண்டும்.

தாலியைப்பற்றிய விவாதத் தையே நடத்தக் கூடாது என்று இந்துத்துவாவாதிகள் மிரட்டும் போது, வன்முறையை ஏவும்போது, கருத்துச் சுதந்திரம் என்ற அடிப் படையில் நோக்கினாலும் சரி, பெண் ணுரிமைப் பார்வையில் பார்த்தாலும் சரி, அதனை எதிர் கொண்டு முறி யடிப்பதுதான் முற்போக்குச் சிந்தனை - அதனை வீழ்த்துவதுதானே புரட்சி! அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியை அகற்றுவதா என்று சில அருமைத் தோழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமாம். அண்ணலின் பிறந்த நாளில்தான் அவரின் இந்தப் புரட்சி கரமான சிந்தனையைத்தான் செயல் படுத்த வேண்டும்.

தாலியைப்பற்றி அண்ணலின் கருத்து என்ன? இதோ பாபாசாகேப் பேசுகிறார். சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வரு மாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளி களின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது; வேறுபட்ட தன்மை யுடையது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.
அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன்  அல்லது மணவாள னுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவ தற்காகத்தான் தாலி கட்டும் திரு மணம் என்னும் சடங்கு நடத்தப் படுகிறது என்று பொதுவாகக் கருதப் படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல் லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)
(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

இதற்கு விளக்கமும் வேண்டுமோ!
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துக்கும், தகவலுக்கும் பிறகு இணையதளத்தில் விளையாடும் நமது அருமைத் தோழர்கள் தெளிவு பெறுவார்களாக!

இந்து மதக் கொடுமை என்ற தளையிலிருந்து பெண்களை விடுதலை பெறச் செய்யத்தான் அன்று சட்ட அமைச்சராகவிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நிறைவேற் றப்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அமைச்சர் பதவியைத் தலையைச்சுற்றித் தூக்கி எறிந்தார்.

இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொண்ட எவருக்கும் அவர் பிறந்த நாளில் அடிமைத்தளையாம் தாலியை அகற்றுவதன் அவசியமும், பெரு மையும் அருமையாகப் புரியும்.

ஒரு புரட்சியாளர் பிறந்த நாளில் இது போன்ற புரட்சிகரத்தை அரங்கேற்ற வேண்டுமே தவிர - புளியோதரை செய்வது எப்படி? பொரி உருண்டை செய்வது எப்படி? என்பதையா கற்றுத் தர முடியும்?

சிந்திப்பீர்!
இந்த செயல் வெற்றி பெற வீங்கு தோள் கொண்டு எழுவீர்! எழுவீர்!!


- கருஞ்சட்டை
குறிப்பு: பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் தாலி அறுக்கும் போராட்டம் என்று கொச்சைப்படுத்தும்  சிறுமதிக் கூட்டத்திடம் எச்சரிக்கை யாக இருங்கள் தோழர்களே!!
                   ---------------------------- "விடுதலை” 28-03-2015


Read more: http://viduthalai.in/e-paper/98721.html#ixzz3VgIUc8ug

********************************************************************************

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) மாட்டுக் கறி விருந்து, தாலி அகற்றும் நிகழ்ச்சிகள் சென்னை - பெரியார் திடலில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.

இதனைக் கொச்சைப்படுத்தும் வகையில்  தாலி அகற்றும் என்பதை தாலி அறுப்புப் போராட்டம் என்று சில அனாமதேய மதவெறி அமைப்புகள் கொச்சைப்படுத்தி, காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர். சில ஏடுகளும் தாலி அறுப்புப் போராட்டம் என்றே செய்திகள் வெளியிடுகின்றன  -விபீஷணத்தனமாக!


தாலி என்பது பெண்ணடிமைச் சின்னமே! இத்தகு பகுத்தறிவுச் சிந் தனை பெண்ணுரிமைச் சிந்தனைகள் தந்தை பெரியார் அவர்களின் அழுத் தமான கருத்து இன்று நேற்றல்ல; 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கருத்தை திராவிடர் கழகம் பிரச் சாரம்  செய்து  வருகிறது.


திராவிடர் கழக மேடைகளில், ஏற்கெனவே தாலி அணிந்திருந்த வர்கள் துணைவரின் விருப்பத்தோடு தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்று தான் வருகிறது.


அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நிறை வேற்றப்பட்ட சுயமரியாதைத் திரு மணச் சட்டத்திலும் தாலி கட்டாய மில்லை. இந்த நிலையில் திராவிடர் கழகம் முன்னெடுக்கும் பெண் ணுரிமைச் சிந்தனைக் கோட்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் தாலி அறுப்புப் போராட்டம் என்று கூறுவது பித்தலாட்டப் பிரச்சாரமாகும்.


தாலி கட்டிக் கொண்ட பெண்கள், கணவனை இழந்த நிலையில் நடை பெறும் மூடச் சடங்குதான் தாலி அறுப்பு என்பது; தாலிஅகற்றலையும் அறுத்தலையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது.  தாலி அடிமைத்தளை அது வேண்டாம் என்று கருதுகிறவர்கள் விரும்பி வந்து அகற்றும் நிகழ்ச்சி தான் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14 - மாலை 4 மணி) சென்னை பெரியார் திடலில் நடக்க இருக்கிறது.


இது கட்டாயப்படுத்தி நடத்தப் படுவதல்ல - திராவிடர் கழகம் பகுத் தறிவு இயக்கம் - பெண்ணுரிமை இயக்கமாகும்!


பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் அது வேறு வகையில் பெரியார் திடல் நிகழ்ச்சிக்கு விளம்பரமாகத் தான் முடியும்.


தாலி புனிதம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி - கழுதைக்கும் கழு தைக்கும் கல்யாணம் என்று தாலி கட்டுகிறார்களே மத நம்பிக்கை யாளர்கள்  - இது தாலியைக் கொச் சைப்படுத்துவது ஆகாதா? அதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை யாம்?

                               ---------------------------”விடுதலை” 29-03-2015
Read more: http://viduthalai.in/e-paper/98755.html#ixzz3Vlx0RjHu

29 comments:

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சித் தடையால் ஏற்படும் பாதிப்புகள்
மருந்துகளின் விலைகளும் உயருகின்றன!

மும்பை, மார்ச்.30_ ஜெலட்டின் கேப்ஸ்யூல் கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் மருந்துப் பொருள்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாக மருந்து தயாரிக்கும் துறை யினர் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பொருள் களின் விலைகளும் உயரு கின்றன.

மாட்டிறைச்சிக்காகத் தடை கோரி போராடுப வர்கள் இந்த உண்மை தெரியும்போது சற்று கடினமாகவே இருக்கும். ஆனால், கால்நடைகள் கொல்லப்படுவது வெறும் இறைச்சி உண்பவர்களின் மகிழ்வுக்காக மட்டுமல்ல. மருந்து தயாரிக்கும் துறை களிலும் பயன்படுத்துவதற் காக கால்நடைகள் கொல் லப்படுகின்றன.

மருந்துகளை ஜெலட்டின் கேப்ஸ்யூல்களில் (குப்பிகள்) அடைத்து வழங்குகிறார்கள். வைட்ட மின் சத்து மாத்திரைகள், கோழித் தீவனம் எலும் புகள், தோல் மற்றும் கால் நடைகளின் திசுக்களிலி ருந்து தயாரிக்கப்படுகிறது.

மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த செயல்அலுவலராக உள்ள ஒருவர் கூறும்போது, சில வழிகளில் அல்லது மற்ற வழிகளில் நாம் எல்லோ ருமே நம்முடைய அன் றாட வாழ்வில் மாட்டி றைச்சியை எடுத்துக்கொள் கிறோம் என்று கூறினார். மாநில அரசு வழக்கு போட்டுவிடும் என்கிற அச்சத்தால் தம் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண் டுள்ளார்.

இந்தியாவில் பெரும் பாலான ஜெலட்டின் தயாரிக்கும் நிறுவனத்தினர் கூறும்போது, மாட்டின் எலும்புகளைக் கொண்டுதான் ஜெலட் டின் தயாரிக்கிறோம் என்று கூறுகின்றனர். மகாராட்டிரம் மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையில் கடுமையான சட்டங்களின் மூலம் தடை போடப்பட் டுள்ளதால், வரும் நாள் களில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அச் சுறுத்தலாக இருப்பதாக அச்சத்தை வெளிப்படுத் துகின்றனர்.

ஜப்பான் நிறுவனமா கிய நீட்டாவுடன் இணைந்து ஜெலட்டின் உற்பத்தியில் கேரளாவை மய்யமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நீட்டா ஜெலட்டின் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஜ்ஜிவ் மேனன் கூறும்போது, எருமைகளின் எலும்பு களையே நாங்கள் பயன் படுத்துகிறோம். எருமை யின் எலும்பிலிருந்து கிடைக்கும் உறுதியான படிமங்களிலிருந்து எடுத் துக்கொள்கிறோம்.

இதில் உள்ள பிரச் சினை என்னவென்றால், அவைகளை எடுத்துச் செல்லும்போது, நேரடியாக எந்த மாட்டின் எலும்பி லிருந்து எடுக்கப்பட்டது என்பதை அது எருமை மாட்டிலிருந்து எடுக்கப் பட்டதா? பசு மாட்டிலி ருந்து எடுக்கப்பட்டதா? என்று யாரும் சாதாரண மாகக் கூறிவிடமுடியாது. ஆனாலும், இதில் எந்த வகை எலும்பு என்பதில் சிலர் ஏற்படுத்துகிற பிரச் சினை மருந்து உற்பத்தித் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

பசுக்கொலை தடுப்புச் சட்டத்தை விரிவாக்கி எருது, எருமை ஆகிய மாடுகளையும் மகாராட் டிரம் மற்றும் அரியானா அண்மையில் குற்றமாக்கி சட்டங்களை நிறைவேற் றியுள்ளன.

எருது, எருமைகளைக் கொல்வதும் தற்போது தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் அய்ந்து ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அரியானாவில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறி விக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மாட்டிறைச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை எருமைமாடுகள்தான். இது வரையிலும் சட்டத்தின் படி தடை இல்லாமல் இருந்தது. இப்போது அதற்கும் தடை வந்து விட்டதால், தண்டனைக்கு பயந்து ஏராளமான உணவு விடுதிகள், உணவ கங்களில் மாட்டிறைச்சி உணவு வழங்குவதை நிறுத்திவிட்டனர்.

21 லட்சம் கால்நடைகள் பன்னாட்டு வேளாண் முறைமை நிறுவனத்தின் தகவலின்படி, இந்தியா உலகிலேயே கால்நடை களில் அதிக எண்ணிக்கை உள்ள நாடாக இருக்கிறது. 21 இலட்சம் கால்நடை எலும்புகள் தொழிற் சாலைகளில் பயன்படுத் தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக அளவிலான கால் நடைகளின் எண்ணிக்கை இருப்பதால் ஜெலட்டின் ஏற்றுமதியாளர்கள் முன்னணியில் உள்ளனர். குஜராத்தில் இயங்கிவரும் நீட்டா தொழிற்சாலை தான் ஜெலட்டின் உற் பத்தியில் முக்கிய மய்யமாக உள்ளது.

கால்முட்டி வலிக்கு அளிக்கப்படும் புரோட் டின் துணைப்பொருள் கொலோஜென் பெப் டைட், ஜெலட்டினிலி ருந்து உருவாக்கும் தொழில் தற்போது அபாயத்துக் குள்ளாகியுள்ளது.

ஜெலட்டின் உற்பத்தித் தொழிலில் ரூ.5,000 கோடி மதிப்பிலான ஜெலட் டினை வாங்குகிற இடத் தில் உள்ள முதன்மையான பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

மருந்து நிறுவனங்களில் ஒவ்வொரு 10 மாத்திரை கள் விற்பனையாகும்போ தும் ஒரு கேப்ஸ்யூல் விற்பனையாகிறது. ஆஸ்த் துமாவுக்கான மருந்துகளில், கேப்ஸ்யூல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் கூறும்போது, கேப்ஸ் யூல்கள் பயன்பாடு அலோ பதி மருத்துவத்துக்கு மட்டும் என்கிற வரை யறைக்குட்பட்டதல்ல. ஆயுர்வேத மருந்து தயா ரிப்பாளர்களும் கேப்ஸ்யூல் முறையைக் கையாளத் தொடங்கி விட்டார்கள்.

மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் சார்பில் அதன் மூத்த அலுவலர் ஒருவர் கூறும்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பின ராக உள்ளவர்களே எங் களைப்போன்ற மருந்து தொழில் நிறுவனங்களுக்கு கால்நடை எலும்புகளை சேகரித்துக் கொடுத்து வருகிறார்கள். இந்தத் தடையானது அவர்கள் மத்தியில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, இனி நாங்கள் கேப்ஸ்யூல்களை இறக் குமதி செய்ய வேண்டி உள்ளது. அதேநேரத்தில் பலபேருக்கான பணிவாய்ப் பும் இதில் தொடர்புள்ளது என்பதை உணரவேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சியிலிருந்து உற்பத்திப்பொருள்கள்

மருந்துகளில் ஏராள மான அளவில் மாட் டிறைச்சியிலிருந்து பெறப் படக்கூடிய பொருள்கள் (ஙிஷீஸ்வீஸீமீ றிக்ஷீஷீபீநீ) பயன் படுத்தப்படுகின்றன. இது குறித்து அரசுத்துறையில் உள்ளவர்கள் விழிப்பு ணர்வு ஏதும் இல்லாமல் உள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரோட்டாவைரஸ் போன்ற தடுப்பு மருந்துகள் எதிர்ப்பு சக்திக்காக பரிந் துரைக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சையின் போது இரத்தம் உறைந்து போவதைத் தடுப்பதற்கான துரோம்பின் (ஜிலீக்ஷீஷீனீதீவீஸீ) எனும் மருந்து மாட்டின் கருவிலிருந்து பெறப்படும் சீரத்திலிருந்தும் பசு மாட்டின் கருவிலிருந்தும் துணைப்பொருள்களாக பெறப்படுகின்றன.

இல்லினாய்ஸ் பகுதி யில் இயங்கிவரும் பன் னாட்டு செர்ரம் தொழில் கூட்டமைப்பு விலங்குகளி லிருந்து பெறப்படும் சீரம் விற்பனையை முறைப்படுத் திவருகிறது. அந்த அமைப் பின் உறுப்பினர்கள் மருந்து நிறுவனங்களுக்கு பெற்றுத்தருவதற்கும், விற்பனை செய்வதற்கும் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
மாட்டின் கருவிலிருந்து கிடைக்கும் இரத்தம் இந்தியாவிலிருந்து பெறப் படுகிறது. பன்னாட்டு செர்ரம் தொழில் கூட்ட மைப்புடன் இணைந்து இந்தியாவிலிருந்து விநி யோகஸ்தர்கள் அதற்குரிய கால்நடை மருத்துவச் சான்றுகளுடன் அளிப் பார்கள் என்பதை அக்கூட் டமைப்பின் சார்பில் உறுதி செய்துள்ளனர்.

மறுசிந்தனை வேண்டும்

மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்கின்ற மாநில அரசுகள் வெளிநாடுகளி லிருந்து கால்நடைகளின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதையும் தண்ட னைக்கு உரிய குற்றமாக கொண்டுவருவதில், மருத் துவத்துறைக்காக மாட்டி றைச்சி தடைகுறித்து மறு சிந்தனை செய்ய வேண்டும்.

கடந்த பத்தாண்டு களில் மருந்து தொழிலில் கால்நடைகளில் மாற்றாக சிலவற்றைப் பயன்படுத் துவது குறித்து ஆய்வு நடைபெற்றுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தையல் போட பயன் படும் நூலாக, மாட்டின் குடலுக்குப்பதிலாக மருந்து நிறுவனங்கள் செம்மறி ஆடுகளைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. என் றாலும் மாட்டிறைச்சியின் துணைப் பொருளையே பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்

பன்னாட்டளவில் கேப்ஸ்யூல்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இரண்டாமிடத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனமாக உள்ள ஏசிஜி நிறுவனத் தின் தலைவரான அஜீத்சிங் கூறும்போது, சில ஆண்டு களுக்கு முன்பாக தாவரங் களிலிருந்து (கடற்பாசி அல்லது மரக்கூழ்) பெறப் படும் கேப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தினோம். மருந்து நிறுவனங்கள் அதை ஒரு பொருட்டா கவே எடுத்துக்கொள்ள வில்லை. இதற்கெல்லாம் பற்றாக்குறை ஏற்படும் என்று நிறுவனங்கள் கருதவில்லை. அதேபோல், நுகர்வோரும் அதைப் பற்றிக் கவலை கொள்வ தில்லை என்று கூறினார்.

( எக்னாமிக் டைம்ஸ், 24.3.2015)

Read more: http://viduthalai.in/e-paper/98791.html#ixzz3VsdX8SPV

தமிழ் ஓவியா said...

இவர்கள் திருந்தப் போவதில்லை

நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்குமாம்

ராஜ்நாத் சிங் தகவல் புதுடில்லி, மார்ச்.30- நாடு முழுவதும் பசுக் களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற் சிக்கும் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் நேற்று சந் தித்து பேசினர். அப்போது அவர்கள் பசுக்களை கொல்ல தடை விதித்து சட்டம் கொண்டுவருவது டன், எருமைகள் வதை தடை சட்டத்தையும் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொட ரில் நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத் தினர்.

அவர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:-

இந்த நாட்டில் பசு வதையை ஏற்றுக்கொள்ள முடியாது. பசுவதையை தடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளை யும் எடுப்போம். பசுக் களை கொல்வதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வர கருத்தொற்றுமை ஏற்படுத்த கடுமையாக முயற்சி செய்வோம்.

பசுக்களை கொல்வதை தடை செய்ய நாங்கள் உறுதி கொண்டிருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வகையில் ஏற்கெனவே மத்திய பிரதேச மாநில அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மராட்டிய அரசு பசுவதை தடை சட்டம் இயற்றி அனுப்பி வைத்தபோது, அதை குடியரசு தலை வரின் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி வைக்க நேரம் எடுக்கவில்லை.

பசுவதை தடை சட் டத்தை நிறைவேற்றுவ தற்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசுக்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அரசு எப்படியெல்லாம் போரா டுகிறது என்பதை ஊட கங்கள் வாயிலாக நீங்கள் அறியலாம். 2003-ஆம் ஆண்டு நான் விவசாய துறை அமைச்சராக இருந்த போது, பசுவதைக்கு எதி ராக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தேன். அந்த மசோ தாவை நான் அறிமுகம் செய்தபோதே சபையில் அமளி ஏற்பட்டது. அதன் காரணமாக அப்போது அந்த மசோதாவை நிறை வேற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98792.html#ixzz3Vsdgpbu6

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/98796.html#ixzz3Vse6PT00

தமிழ் ஓவியா said...

பாண்டேயின் கேள்வியும், ஆசிரியரின் அதிரடியும்

- குடந்தை கருணா

தந்தி தொலைக்காட்சியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்வில், நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, ஆசிரியரிடம் கேள்வி கேட்ட விதம் பலவித விமர்சனங்களுக்கும், கண் டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

ஆனால், ரங்கராஜ் பாண்டே கேள்விகள் ஒன்றும் புதிதல்ல.

தொடர்ந்து சோ முதல் நாம் அன்றாடம் பேருந்துகளிலும், ரயில் பயணத்திலும் பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கும் அதே கேள்விகள் தான்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பெரியார் காலத்திலிருந்து பதில் சொல்லி, பதில் சொல்லி அலுத்து விட்டது. இருந்தாலும் அதே கேள்வியை இன்றையவரை பாண்டேயை விட்டு கேட்கிறார்கள் என்றால், காரணம் இருக்கிறது தோழர்களே.

பெரியார் எனும் அந்த மானுடத் தத்துவம், அவர்களை இன்றுவரை தூங்கவிடாமல் செய்கிறது தங்களின் ஆளுமையை தகர்த்த, தொடர்ந்து தகர்க்கும் ஒரே ஆயுதமாக, பெரியாரின் தத்துவம் விளங்குகிறதே என்ற ஆத்திரம். அவர்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து மறைக்கிறது.

அதனால்தான், தாலி அகற்றும் கேள்விக்கு பதில் பெறுவதற்கு முன்பாகவே, சடாரென, பர்தா, இஸ்லாமியர், கிறித்துவர் பக்கம் கேள்வி சாய்கிறது.

திராவிடர் கழகத்தின்பால், சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள இன உணர்வுரீதியான பிணைப்பை அறுக்க முடியுமா என்ற நப்பாசை;

பெரியாரும், இயக்கமும், எப்போதும் மிகவும் ஒடுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட மக்களின் பக்கம்தான் என அனைவருக்கும் தெரியும் என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? என்று தொடர்ந்து சொன்னால், அதன் மூலம் அந்த மக்களுக்கு எதிராக திருப்பிவிட முடியுமா என்கிற அந்த விஷ எண்ணம்;

இந்த வகையில்தான், பார்ப்பனர் களின் கேள்வி எப்போதும் இருக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல், இங்கே தமிழ் நாட்டில் தான், இயக்க ரீதியாக, பார்ப் பனர்களின் ஆதிக்கமும் அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக விளங்கும் பார்ப்பன சனாதன ஹிந்து மதமும் கிழித்தெறியப்படுகிறது.

அந்த சிறப்பான பணி, பெரியாரின் இயக்கத் தால் நடைபெறுகிறது என்பதை பார்ப்பன பரிவாரங்களால் சீரணிக்க முடியவில்லை.

அதன் விளைவுதான், சோ முதல், அத்தனை சவுண்டிகளும் ஒரே கோரஸாக, ஒரே மாதிரியான கேள்விகளை தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் தக்க பதிலடி தந்தாலும், தொடர்ந்து இந்த கேள்விகள் தொடரும்.

ரங்கராஜ் பாண்டேவை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அல்லது மாதத்தில் வேறு ஒரு பாண்டேவோ அல்லது பத்ரியோ, சேஷாத்திரியோ இதே கேள்வியைக் கேட்பார்கள்.

அவர்களுக்கு துணை போவதற்கு நம்மூர் தந்தி டிவி போல பல டிவிக்கள் ஆவலுடன் இருக்கின்றன.

ஆனால், அவர்கள் எந்த முறையில் வந்தாலும், எந்தக் காலத்திலும் பெரியாரின் தத்துவத்தை அசைக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிகிறது.

நம்ம மக்களுக்கு புரிந்தால் சரி.

Read more: http://viduthalai.in/page-2/98804.html#ixzz3VseiVVFo

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கான நாடாக இந்தியா இல்லை?

தி இந்து ஆங்கில நாளிதழில் பெண்களுக்கான நாடாக இந்தியா இல்லை என்று எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்:


2012ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இன்று வரையிலும் தேசிய அளவில் பேசப்படுகின்ற ஒன்றாக டில்லியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்முறை நிகழ்வு அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளின் சட்ட சீர் திருத்தங்களை வரவேற்று தீர்மா னங்கள் உள்ளன. சட்டங்களால் மட்டுமே பெண்கள் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

இந்தியாவின் மகள் ஆவணப் படத்தை எடுத்த பிரிட்டிஷ் பட இயக்குநர் லெஸ்லீ உட்வின் நன்றிக்கு உரியவர். இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பெண்கள் குறித்த மனப்பான்மைகள் ஆகியவை இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்கப் படாமல் இருந்துவந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக டில்லியில் மருத்துவக்கல்வி பயிலும் மாணவியான 23 வயது பெண்ணுக்கு 16.12.2012 அன்று நாட்டையே குலுக்கிய, தலைக்குனிவை ஏற்படுத்திய, பாலியல் வன்முறை சம்பவம் நடைபெற்றது. அரசு ஒரு குழுவை அமைத்து பாலி யல் வன்முறைகுறித்தும் அதற்குரிய குற்றவியல் சட்டம்குறித்தும் நட வடிக்கை எடுத்தது.

நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமை யிலான விசாரணைக் குழு பரிந்துரை யின்பேரில் பாலியல் வன்முறைக் குற்றங்கள்மீது சட்டங்களை கடுமை யாகப் பின்பற்றவும், உரிய தண்டனை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அப்படி இருந்தும் வக்கிரங்களுடன் தவறைச் செய்பவர்கள் இருந்து வருகிறார்கள்.

2012ஆம் ஆண்டில் முற்றிலும் அப்பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத வர்களால் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான காரணங்களாக ஏராளம் சொல்லப்பட்டன. புள்ளிவிவரங்களின் தகவல்கள்படி, இந்தியப் பெண்களுக்கு குடும்பத்தவர்களாலேயே வக்கிரமான வன்முறைச் செயல்கள் நடைபெறக் கூடிய நிலை இருந்துவருகிறது.

தேசிய குற்ற ஆவணக் கழகத்தின் அறிக்கையின்படி, குடும்பத்தவர்களால் பொருந்தாத பாலியல் வன்முறைகள் 36.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 392 வழக்குகளி லிருந்து 2013ஆம் ஆண்டில் 536 வழக்குகள் பதிவாகி உள்ளன. 536இல் 108வழக்குகள் 20.1 விழுக்காடு மகா ராட்டிர மாநிலத்தில் பதிவாகி உள்ளன. அதிலும் 117 வழக்குகள் இரத்த உற வுள்ளவர்களாலேயே பாலியல் வன் முறை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மும்பையில் உள்ள பெண்கள் உரிமைகளுக்கான வழக்குரைஞர் ஃபிளாவியா ஆக்னஸ் கூறும்போது, குடும்ப உறுப்பினர்களின் பொருந்தாத பாலியல் வன்முறைகள் ஏராளமாக பதிவாகின்றன. ஆனால், புகார்கள் அவர் களின் குடும்பத்தவர்களின் அழுத்தங் களால் திரும்பப் பெறப்படுகின்றன. மும்பையில் 18 வயது பெண் ஒருவர் தன் தமக்கை மற்றும் தன்னிடமும் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக தன் தந்தையின்மீது புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தண்டிக்கப்படவில்லை. அவர்மீது போக்சோ (றிளிசிஷிளி கிநீ) சட்டத்தின்படி, சம்பவத்தின்போது, அப் பெண் மைனர் அல்ல என்று கூறப்பட்டது. ஆனால், அவள் பள்ளிச்சான்றின்படி, காவல்துறை அவளின் வயதை 17 ஆண்டுகள், 9 மாதங்கள் என்று பதிவு செய்திருந்தது.

ஆனால், அவளின் தாய் பிகாரிலி ருந்து பெற்றுத்தந்த சான்றின்படி அவள் 18 வயது 2 மாதங்கள் நிறைவு செய்தவள் என்று இருந்தது. அரசுத்தரப்பில் அந்த சான்றிதழின் போலித்தன்மைகுறித்து நிரூபிக்க முடியவில்லை. விளைவு அவளின் தமக்கைமீதான பாலியல் வன்முறை குறித்த குற்றச்சாற்றில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். அதுவும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டுவிட்டது. இப்போது நீதிமன்றத்திற்கு சென்றதை குறிப்பிட்டு, வீட்டில் மகள் களை இழிவாக நடத்துகிறார் என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கல்லூரி விடுதியில் அவள் உள்ளாள் என்று ஆக்னஸ் கூறினார்.

மணமானவரிடையே பாலியல் வன்முறை

அனைவராலும் ஒரு பொருட்டாகப் பார்க்கப்படாத பகுதி என்று சொன்னால், அது மணமானவரிடையே உள்ள பாலி யல் வன்முறைதான். காலனியாதிக்கத் துக்கு முந்தைய இந்தியச் சட்டத்தில் மணமானவரிடையே பாலியல் வன்முறை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தண் டனைச் சட்டப்பிரிவுகள் 375, 376 ஆகி யவைகளின்கீழ் பாலியல் வன்முறைகளுக் கான தண்டனையிலிருந்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வர்மா குழுவின் பரிந்துரையின்படி மாற்றப்பட்டது. ஆனால் செயலாக்கத்துக்குவராமல் இருந்துவந்தது.

டில்லியில் கடந்த மாதத்தில் தன் கணவனால் பாலியல் வன்முறையால் பாதிப்புக்கு உள்ளான பெண் அரசமைப்பு கூறும் விதிவிலக்குக்கு முடிவு காணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மனித உரிமைகளுக்கான சட்ட அமைப்புகளின் உதவியுடன் வழக்குத் தொடுத்திருந்தார். பாதிப்புக்கு உள்ளான அப்பெண் மருத்துவ சான்றுகளின்மூலம் நிரூபித்துள்ளார். அவர் கூறும்போது, காவல்துறையும், வழக்குரைஞர்களும் மணவிலக்கு பெற்றிடுமாறு அறிவுறுத்தி னார்கள். அதுமட்டும் போதாது. அவன் தண்டிக்கப்பட வேண்டும். மீண்டும் அவன் திருமணம் செய்து கொள்ள மாட் டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

நீதியை நிலைநாட்டுவதில் சட்டம் ஒரு கருவியாகத்தான் இருக்க முடியும். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட மையும், பொறுப்பும் காவல்துறை, நீதி மன்றம் மற்றும் வழக்குரைஞர்களிடமே உள்ளது.

பெங்களூருவில் செயல்பட்டுவரும் விமோசனாவில் இணைந்து பணியாற்றக் கூடிய பெண் சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணுக்காக 35 ஆண்டுகள் செயல் பட்டுவந்துள்ளேன். பெரும்பாலான பெண்கள் தங்களின் வீட்டில் நடை பெறும் பாலியல் வன்முறைகள்குறித்து சொல்வதில் தயக்கம் காட்டி வருகின் றனர் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, 2005ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச்சட்டம் இருந்த போதிலும், பல பெண்கள் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள் பவர்கள்மீது புகார் அளிப்பதற்கு முன் வருவதில்லை. அவர்கள் தொண்டு நிறுவ னங்களை நாடி தங்களின் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கும்போது, தொண்டு நிறுவனத்தின் உதவியைப் பெறுகிறார்கள் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பெங்களூருவில் கடந்த 12 ஆண்டு களாக கேட்காத குரல் திட்டத்தில் செயல்பட்டுவரும் ஜாஸ்மீன் பத்தேஜா கூறும்போது, பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே நம்பகத்தன்மை இல்லை. அதனாலேயே பெண்கள் மீதான வன்முறைகளை காவல்துறை பதிவு செய்யாமல் இருந்து வந்துள்ளது என்று கூறுகிறார்.

பாலியல் ரீதியிலான வன்முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு எழுதி வருபவரான பத்திரிகையாளர் நேகா தீக்ஷித் பன்னாட்டளவில் குர்து ஸ்கார்க் விருது பெற்றவர்ஆவார்.

அவர் கூறும்போது, பெரும் பாலான வழக்குகளில் ஆய்வு செய்தபோது, வன்முறையால் பாதிக் கப்படுவோர்மீது காவல்துறை மற்றும் நீதித்துறை செயல் படாமல்தான் இருந்துள்ளன. டில்லியில் 5 வயது குடியா என்கிற சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளானபோது, காந்தி நகரில் உள்ள காவல்நிலைய அலுவல ரிடம் அவள் தந்தை தன் மகளைக் காண வில்லை என்று புகார் அளித்தபோது, வழக்கைப்பதிவு செய்ய மறுத்துள்ளார் என்றார்.

சோனாபட் பகுதியில் தாழ்த்தப் பட்ட பெண் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளானதுகுறித்து நேகா தீக்ஷித் எழுதும்போது, ஆதிக்க ஜாதியினராக உள்ள உயர் ஜாதியியைச் சேர்ந்தவர்களால் உண் மைக்கு மாறான புகார் பதிவானது.

2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தன் மீது வன்முறையில் ஈடுபட்டவர் களுக்கு எதிராக அப்பெண் காவல் துறை புகாரைப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். காப் பஞ்சாயத்தாரின் அழுத்தங் களைத் தாண்டி பாதிக்கப்பட்ட பெண் ணான அந்தப் பெண்ணால் வழக்கில் தொடர்ந்து போராட முடியவில்லை.

நீதியைக் கோருவது மட்டுமன்றி, சட்டத்துக்கு உயிரூட்ட வேண்டியதும் உள்ளது.

தமிழ் ஓவியா said...

வழக்கில் போராட உதவி யின்றி வெற்றிடமாக உள்ளதுடன், மறுவாழ்வுக்கான அளவீடுகள் போது மான அளவில் இல்லாமல் உள்ளன இவை வெளியே தெரிய வேண்டியன வாக உள்ளன என்று குறிப்பிட் டுள்ளார்.

வர்மாக் குழுவின் உறுப்பினராக, சட்ட ஆய்வாளராக குழுவின் பரிந் துரை அறிக்கை தயாரிப்பதில் நீதிபதி வர்மாவுக்கு உதவிகரமாக இருந்த வரான பிரதீகா மாத்தூர் கூறுகையில், இந்தியாவில் பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்கள் ஏராளமாக வெளி வந்த போதும், வர்மாக் குழுப் பரிந் துரைத்துள்ள மணமானவரிடையே உள்ள பாலியல் வன்முறைகளைக் குற்றமாகக் கருதவேண்டும் என்பது போன்ற ஏராளமான சட்ட நடை முறைகள் பின்பற்றப்படாமல் புறந் தள்ளப்பட்டுள்ளன. பாலியல் வன் முறைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவான செயல்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் காவல்துறையில் சீர்தி ருத்தங்கள் எடுத்துக்கொள்ளப்பட வில்லை.

அரசியல்ரீதியான விருப்பங் களும் இல்லாமையால் செயல்படுத்து வதில் சுணக்கம் ஏற்பட்டுவருகிறது என்பது மிகவும் வருத்தத்துக்கு உரிய தாகும் என்று பிரதீகா மாத்தூர் தெரி வித்தார்.

- தி இந்து, ஆங்கில நாளிதழ் 8.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98799.html#ixzz3Vset7zRS

தமிழ் ஓவியா said...

சென்னை, மார்ச் 30_ நம் வீட்டில் என்ன சமைப்பது எதைச் சாப்பிடுவது என்பது முடிவு செய்ய இந்துத் துவவாதிகளுக்கு உரிமை உண்டா? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

செங்கற்பட்டு கழக மாவட்டம் மறைமலைநகர் நகரக் கழகத்தின்சார்பில் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் சுயமரியாதை சுடரொளி அலர்மேலு காவிரிச்செல்வன் நினைவரங்கத்தில் 22.3.2015 அன்று திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நகரச் செயாளர் திருக்குறள் ம.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. சு.கி.கொண்டல் வரவேற்றார். சு.ஆனந்தராசு இணைப்புரை வழங்கினார். மறைமலை நகர் பெரியார் சமூகநீதிப் பேரவைத் தலைவர் ந.பார்த்த சாரதி மாநாட்டைத் திறந்துவைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் பு.எல்லப்பன் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் தொடக்க உரை ஆற்றினார்.

வடக்கு மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் மாவட்டம் கே.எம்.சிகாமணி, செங்கை சுந்தரம் ஆகியோர் உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாநாட்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் ஓவியா said...

ஓய்வு துருவுக்கு சமம்

தந்தை பெரியார் 95ஆண்டுக்காலம் ஓய்வின்றி இந்த சமுதாயத்துக்காக உழைத்தவர். உலகத்திலேயே ஓய்வை துருவுக்குச் சமம் என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார். அவருடைய கடைசிப் பேச்சை (19.12.1973) கேட்டீர்களானால், இவர் 24ஆம் தேதி சாகின்றவரா? இப்படி பேசியுள்ளார்? என்று எண்ணத் தோன்றும். அப்படி ஒரு சிந்தனை வளம்.

இதே மறைமலைநகரில் சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பார்க்கில் ஒரு கல்லை வைத்து கோயி லாக்க முயற்சி செய்யப்பட்ட நேரத்திலே, அதைக் கருஞ் சட்டைப் பட்டாளம் தலைவர் அவர்களின் தலை மையிலே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒரு ஊரிலே ஒரு கல் இருந்தால் போதும் மக்களை மடையனாக ஆக்குவதற்கு. ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தால் போதும் மக்கள் உழைப்பைச் சுரண்டுவதற்கு. ஒரு ஊரிலே ஒரு பார்ப்பான் இருந்தால் போதும் நம் முடைய பண்பாட்டை அழிப்பதற்கு. இதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம்.

இன்றைக்கு காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, தமிழ்நாட்டிலேயே பொதுக்கூட்டங்களை திராவிடர் கழகம்தான் நடத்துகிறது என்கிறார்கள். வேறு அரசியல் கட்சிகள்கூட நடத்துவதில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளுக்கு 5 கூட்டம், 6 கூட்டம் நடத்துகிறீர்களே என்று கூறுகிறார்கள். மடையர்கள், மூடர்கள் அதிகமாக இருக்கிறார்கள். நோயாளிகள் அதிகமானால் மருத்துவர்களுக்கு வேலை உண்டு தானே? எங்களுடைய பணி அதிகம் தேவைப்படுவ தால் தமிழ்நாடு முழுவதும் மாநாடுகள் நடத்தி வருகி றோம்.

பாஜகவின் மதவாத செயல்கள்

பத்து மாதங்களுக்குமுன்னரே பாஜக ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளே செயலாக்கம் பெறும் என்று திராவிடர் கழகம் எச்சரிக்கை செய்தது. அதன்படிதான் இன்றைக்கு மாட்டிறைச்சிக்குத் தடை, மத்திய அரசு அலுவலகங்களில் பினாயிலுக்குப் பதில் மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த மூட நாட்டில், பாஜக ஆட்சியில் 300 நாள்களில் 600 மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன.

தொலைக்காட்சியில் கூட தாலி பெண்களுக்கு பெருமை சேர்க்கிறதா? சிறுமைப்படுத்துகிறதா? என்கிற விவாதம் ஒளிபரப்பு செய்யமுடியாமல் தடை போடுகிறது. வன்முறையில் காவிக் காலிகள் ஈடுபட்டு, பெட்ரோல் குண்டுகளை வீசுகின்றனர். கருத்துரிமை இல்லையா?

தமிழ் ஓவியா said...


நம் வீட்டில் என்ன சாப்பிடுவது என்பதை தீர்மானம் செய்வது யார்?

முக்கியமான ஒரு விஷயத்திலே கைவைத்திருக் கிறார்கள். நம் வீட்டில் என்ன சமைப்பது என்று இராம கோபாலன், இல.கணேசனிடம் கேட்க வேண்டும். இப்போது ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். பசு மாமிசம், காளை மாடு, மாட்டுக்கறி இறைச்சிக்குத் தடை. இது ஒரு அரசின் வேலையா? மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு அரசுக்கு உரிமை உண்டா? நாம் என்ன சாப்பிட வேண்டும்? என்பதை நம் குடும்பத்தில்தான் முடிவு செய்ய வேண்டும். புரதச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய உணவு, ஓரளவுக்கு எளியமக்களாலும் விலைகொடுத்து வாங்கக்கூடியது மாட்டுக்கறிதான். இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் அதிகமான மக்கள் சாப்பிடுகின்ற மாமிச உணவு மாட்டுக்கறிதான். நீங்கள் (பார்ப்பனர் கள்) என்ன மாட்டுக்கறி சாப்பிடாத பரம்பரையைச் சேர்ந்தவர்களா? மாட்டைச் சுட்டு, அந்த மாட்டுக் கறியை எப்படிஎப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்று புராணங்களிலே விரிவாக எழுதப்பட்டிருக் கிறதா? இல்லையா?

தமிழ் ஓவியா said...

அந்தக் காலத்திலேயே பார்ப்பனர்களைப் பார்த்து புத்தர் கேட்டாரே, பசுவைக் கொன்று மோட்சத்துக்கு போகலாம் என்கிறாயே அப்பனைக் கொன்றுவிட்டு புண்ணியம் தேடுவாயா? என்று கேட்டுள்ளார். அதன்பிறகுதான் மாமிச உணவைத் தவிர்த்து காய்கறி உணவுக்கு மாறினார்கள்.

மாட்டிறைச்சி விருந்து

ஆகவேதான், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திராவிடர்கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் மாலை 4 மணிக்கு தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்து நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அன்று மாலை மாட்டிறைச்சி விருந்தும், பெண்களை அடிமைப் படுத்தும் சின்னமான தாலி அகற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அம்பேத்கர் மாட்டிறைச்சி குறித்தும், தாலி குறித்தும் குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தர் மாட்டிறைச்சி குறித்து பேசி உள்ளார். அனைவரும் வாருங்கள்.

தமிழ் ஓவியா said...


1966ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தலைவராக காமராசர் இருந்தபோது, அவர் டில்லியில் இருந்தபோது பட்டப்பகலில் பசுவதைத் தடுப்பு என்று சொல்லிக்கொண்டு நிர்வாண சாமி யார்கள் அன்றைக்கு ஜனசங்கம், இன்றைய பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பூரி சங்கராச்சாரியார் போன்றவர்கள் காமராசர் தங்கியிருந்த பங்களாவை நெருப்புவைத்துக் கொளுத்த முயற்சி செய்தார்கள். எதுக்காக காமராசரைக் கொல்ல முயற்சித்தார்கள்? அவர் பசுவதைத் தடுப்புச்சட்டத்தை எதிர்த்தார்.

அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் கிளர்ந்தெழுந்து நாடுபூராவும் மாட்டுக்கறி விருந்தை நடத்தியதோடு அல்லாமல், அந்த சதித்திட்டங்களை யெல்லாம் திரட்டி, காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்கிற புத்தகத்தை 1966ஆம் ஆண்டிலேயே கொண்டுவந்துள்ளோம்.

தமிழ்த்தேசியம் என்கிற பெயரால் திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். திராவிட இயக்கம், தந்தைபெரியார் இல்லை என்றால், சமுதாயத்தில் இன்றைக்கு மருத்துவர்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் இருக்க முடியுமா? மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்தது. நீதிக்கட்சியில் பனகல் அரசர்தான் அதை நீக்கினார். இப்போதுள்ள மருத் துவர்களுக்குக்கூட இந்த செய்தி தெரியாது. அப்படி திராவிட இயக்கத்தால் அடையாளம் பெற்றவர்களே, திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள்.

குலக்கல்வி

ராஜாஜி 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் துக்கு முதல்வராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை மூடினார். இந்தியைப் புகுத்தினார். சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்காகவே இந்தியைப் புகுத்துவதாக சென்னை லயோலா கல்லூரி யில் பேசும்போது குறிப்பிட்டார். அதன் பின்னரும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 6000 பள்ளிகளை மூடினார். அப்பன் தொழிலை அரை நேரம் செய்ய வேண்டும். அரைநேரம் மட்டுமே படிக்க வேண்டும் என்று குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார். நாகப்பட்டினத்தில் மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றும்போது, தமிழகம் முழுவது மிருந்து படைகள் சென்னை அடைவதற்குள் குலக் கல்வித் திட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் அல் லது ராஜாஜி பதவி விலக வேண்டும். இல்லையேல், ஒரு நாளைக் குறிப்பிடுவேன். அந்த நாளில் பெட் ரோல், தீப்பந்தம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அக்கிரகாரங்களைக் கொளுத்த வேண்டும் என்று பெரியார் கூறினார். உடனே பார்ப்பனர்கள் பெரியாரிடம் வரவில்லை. ராஜாஜியிடம் சென்று அய்யா, உங்கள் ஆட்சியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. உடனே பதவி விலகுங்கள் என்றனர். உடல் நிலை சரியில்லை எனக் காரணத்தைக் கூறிவிட்டு ராஜாஜி பதவி விலகினார்.

அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரசு கமிட்டிக்குத் தலைவர் காமராசர். இன்றைக்கு தலைமைச்செயலகம் இருக்குமிடத்தில் டாக்டர் வரதராஜூலு வீடு இருந்தது. அந்த வீட்டில் தந்தை பெரியார், டாக்டர் வரதராஜூலு நாயுடு, காமராசர், குத்தூசி குருசாமி ஆகிய நான்கு பேர் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்தார்கள். தந்தைபெரியார் காமராசரை முதல்வர் பொறுப்பேற்கச் செய்தார். காமராசர் முதல்வரானதும் ராஜாஜியின் குலக்கல்வித்திட்டத்தை முதலில் நீக்கினார். மூடிய 6000 பள்ளிக்கூடங்களை மீண்டும் திறந்தார். புதிதாக 12,000 பள்ளிகளைத் திறந்தார். இது வரலாறு அல்லவா? அதன்பிறகுதானே மருத்துவர்கள், பொறியாளர்கள், நீதிபதிகள் எல்லாம் வந்தார்கள்.

சென்னையில் சத்தியவாணிமுத்து ஏற்பாடு செய்தார். அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சேர்ந்து தந்தை பெரியாருக்கு பாராட்டுவிழா நடத்தினார்கள். அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சென்னை உயர்நீதிமன்றம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? என்று கேட்டார். நூறு ஆண்டுகள் ஆகின்றன என்றார். இதுவரை தாழ்த்தப் பட்டவர் நீதிபதி ஆகி இருக்கிறாரா? என்று கேட்டார். ஆசிரியர் அவர்கள் இல்லை அய்யா என்று கூறினார்கள். தந்தை பெரியாருக்கு வந்ததே கோபம். சென்னை உயர்நீதிமன்றம் என்ன கோயில் கர்ப்பக் கிருகமா? தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக்கூடாது என்பதற்கு? என்று கேட்டார்கள். இந்த செய்தி மறுநாள் ஏடுகளில் வந்தது. அதைப்படித்த முதல மைச்சர் கலைஞர் அவர்கள் விசாரணை மேற் கொண்டு, கடலூரில் இருந்த நீதிபதி வரதராஜன் எட்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறினாலும், அவரை உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆக்கினார். அவர்தான் உச்சநீதிமன்றத்துக்கு சென்ற முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி ஆவார். இதுதான் வரலாறு. இப்போதுள்ள இளைய தலைமுறையினர் இவைகளை தெரிந்துகொள்ள வேண்டும். இதை நினைவூட்டுவதற்குத்தான் திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்திவருகிறோம்.

இவ்வாறு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-2/98819.html#ixzz3VsftuiAQ

தமிழ் ஓவியா said...

மருத்துவப் பயன் அதிகம் உள்ள கோவைக்காய்

கோவைக்காயில் உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால் வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

பழைமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது இதயத்துக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற காய் இதுவாகும். மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட்டால் விரைவில் குணம் ஏற்படும்.

கோவைக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை காரணமாக கோவைக்காய் மற்றும் செடியிலிருந்து ஆயுர்வேத மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும், வயிறு சார்ந்த செரிமான பிரச்சினை களைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் கோவைக்காய் பயன்படுத்தப்படுகிறது.

விடாரியாடி கஷாயம் எனப்படும் ஆயுர்வேத மருந்து கோவைக்காய் செடியிலிருந்து பெறப்படும் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. பெண் களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும் தரப்படுகிறது.

எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறை பாட்டால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது. இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்சினையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது. வாய்ப்புண்ணை - குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது, எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே.

Read more: http://viduthalai.in/page-2/98837.html#ixzz3VsgjqywX

தமிழ் ஓவியா said...

மிளகின் மருத்துவ குணங்கள்

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது பழமொழி. அப்படியா மிளகில் அவ்வளவு விஷயம் இருக்கா என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த மருந்து பொருளாக மிளகு விளங்குகிறது.

இவை இந்தியாவில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் அனைத்தும் நம்மை நோயில் இருந்து காக்கும் வேலைகளை செய்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கும் வாதத்தை அடக்கும். பசியை அதிகரிக்கும்.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு மிளகு சிறந்த நல்ல மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக் குளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினை களை சரி செய்கிறது.

அதாவது சரியான செரிமானம் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன்மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை எட்டிப் பார்க்காது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே, மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன்மூலம் எடையை குறைக்கலாம். மிளகு தோல் நோயை குணப் படுத்துவதற்கும் பயன்படுகிறது.

இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின்படி மிளகு வெண் புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய் இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினையை எதிர்த்து செயல்படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது.

காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மிளகு மருத்துவத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர்.

உடல் வெப்பத்தை குறைக்கும். இப்படி பல பண்புகளை கொண்டது மிளகு. நரம்புத்தளர்ச்சி, கைகால் நடுக்கம், உதறல், ஞாபகமறதி, முதுமையில் ஏற்படும் தலை சுற்றல் ஆகிய வற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுபகுதியில் என்சைம்களை தூண்டி அதிகம் சுரக்கச் செய்கிறது.

செரிமானத் தன்மையையும் அதிகரிக்க செய்கிறது. நச்சுக் கழிவுகளை உடலில் தங்க விடாமல் செய்வதால்தான் நம் முன்னோர்கள் பத்து மிளகு இருந்தால் என்ற பழமொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன மிளகு வாங்கக் கிளம் பிட்டீங்களா.

Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VsgtCgve

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் 10 இல் ஒருவருக்கு
மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்

மும்பை, மார்ச் 30- இந்தியாவில் 10- இல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 10 இ-ல் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலை களில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

இது தவிர குடிப்பழக்கம், அதிகமாக புகைப்பது கூட மன அழுத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தி யாவில் மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துகொள்வதன் இந்த நோயை தீர்க்க முடியும்.

சமீபத்தில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை யில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்து மதம்:
செத்த பின்னும் ஜாதி

பெங்களூரு, மார்ச் 30_ புற்றுநோய் பாதிப்பால் 11 வயது ஸ்வேதா உயிரிழந்தார். ஜாதிவெறி பாதிப்பு உயிரோடு இருக்கும்போது இருப்பது மட்டுமன்றி உயி ரிழந்த பின்னரும் ஜாதிக்கொடுமை தொடர்ந்துள்ளது.

ஹென்னூர் பகுதியில் சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற்கு அவருடைய ஜாதியைக் காரண மாகக் கூறி இரண்டு நாள்களாக காவல்துறையினர் தலையிட்டும் அனுமதி மறுத்துவிட்டனர்.

வேறு வழியின்றி கருநாடக மாநிலத்திலிருந்து சொந்த ஊரான தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு சிறுமி ஸ்வேதாவின் உடலைக் கொண்டு வரவேண் டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

கருநாடக மாநிலத்தில் ஹென்னூர் அருகே உள்ள பாபுசபால்யா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஸ்வேதாவின் உறவினரான தேவி சிக்கம்மா கூறும்போது, இதற்கு முன்னர் பல முறை எங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதையை இங்கேயே செய்துள்ளோம். ஆனால், இந்த முறை உள்ளூர் ஜாதிக்காரர்களால் நாங்கள் வேறு ஜாதிக்காரர்கள் என்று காரணம் கூறி அடக்கம் செய்வதற்கு எங்களை விடவில்லை என்று கூறினார்.

உள்ளூர்வாசிகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியாமல் போனதால், காவல்துறை யினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரும் சமாதானம் செய்ய முயற்சித்தும், பிடி வாதமாக அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க மறுத்து விட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/98845.html#ixzz3Vshsc4n9

தமிழ் ஓவியா said...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - திராவிடர் கழகம்
இடையிலான உறவை எவராலும் சிதைக்க முடியாது!
தொல்.திருமாவளவன் அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணல் மார்ச் 28 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அவரை நேர்காணல் செய்த அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு ஓரிரு கேள்விகளை எழுப்பியதைக் காண முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்னும் கருத்தைப் பரப்புவதாக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் கொள்கைப் புரிதலோடு ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே இக்கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் எத்தகைய புரிதலோடும் நட்புறவோடும் இணைந்து பணியாற்றினார்களோ அதே வகையில், அவ்விரு தலைவர்களின் வழியில் இன்றும் இவ்விரு இயக்கங்களும் தோழமை உணர்வோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, சாதி-மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் பெரியாரிய சக்திகளோடு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து களமாடி வருகிறது.

திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழாய் துப்பாக்கி என அழைக்கப்படுவதுண்டு. தற்போது விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியானோம் என ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகுந்த பூரிப்போடு அறிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெற்றிருக்கிறது.

அவ்வுறவில் சிறு கீறலையாவது ஏற்படுத்த வேண்டுமென்னும் தீய உள்நோக்கத்தோடு அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குதர்க்கமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அக்கேள்விக்குப் பதிலளித்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியவரின் திசை திருப்பும் முயற்சியை மிகச் சரியாக அம்பலப்படுத்தினார்.

விடுதலைச் சிறுத்தைகள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் தமது கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சாதிமதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் சான்றோர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் பெயரில் விருது மற்றும் பொற்கிழி வழங்கி வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகளின் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்து வெளியீடுகளும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களின் திருவுருவப் படங்களோடுதான் வெளியிடப்பட்டு வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகளின் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் இருவரும் 'புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் சமூகப் பணி ஆற்றுவோம்!' என உறுதியேற்று வருகின்றனர்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைகளை நிறுவும் இடங்களிலெல்லாம் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைகளையும் நிறுவ வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு கட்சியின் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எனது அரசியல் உந்துசக்திகளாக விளங்கும் மூவரில் ஒருவர் தந்தை பெரியார் என்பதை மிகுந்த பூரிப்போடு அறிவிப்புச் செய்திருக்கிறேன். அதாவது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன் ஆகிய மூவரும்தான் எனது பொதுவாழ்க்கைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்துவரும் தலைவர்கள் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறேன். பெரியார் திடலிலிருந்துதான் என் அரசியல் பயணம் தொடங்கியது என்பதைப் பல முறை பதிவுசெய்திருக்கிறேன்.

இவ்வாறு பெரியாரின் கொள்கைகளோடும் பெரியாரின் இயக்கங்களோடும் இரண்டறக் கலந்து ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் பிற விளம்புநிலை மக்கள் யாவரையும் அமைப்பாக்குவதிலும் அரசியல்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் விடுதலைச் சிறுத்தைகளின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில், அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கேள்விகள் எழுப்பியதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மற்றும் பிற பெரியார் இயக்கங்களுக்கும் இடையிலான நட்புறவை எவராலும் எக்காலத்திலும் சிதைக்க முடியாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் மிகவும் அழுத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறது. மேலும், சாதி-மதவெறி சக்திகளுக்கெதிராக பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களோடு என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து போராடும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தமிழ் ஓவியா said...

உலகிலேயே பிஜேபிதான் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாம்

மோசடி முகத்திரையைக் கிழிக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா


ராஞ்சி மார்ச் 31 மோகன் ஜா என்ற விளையாட்டுப்பிரிவு செய்திப்பத்திரிகையாளர் உலகக் கோப்பை விளையாட்டிற்காக செய்தி சேகரித்துக் கொண்டு இருந்தார், அப்போது அவருக்கு இரண்டு முறை ஒரு எண்ணில் இருந்து (தவறிய) அழைப்பு வந்தது, பத்திரிகையாளர்கள் என்றாலே அவர்களுக்கு வரும் அழைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் அவர் தனது அறையைவிட்டு வெளியே வந்து மீண்டும் அழைப்பு வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.

எதிர்புறம் யாரும் எடுக்கவில்லை, மீண்டும் ஒருமுறை போன் செய்துவிட்டு தனது அறைக்கு திரும்பியவரின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது, அதில் இவ்வாறு எழுதியிருந்தது. வாழ்த்துக்கள் நீங்கள் பாஜகவின் உறுப்பினராகிவிட்டீர்கள். உங்களது உறுப்பினர் எண் 1087369859.

உங்களது முகவரி வோட்டர் அய்டி எண், மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் 09242492424 என்ற எண்ணிற்கு அனுப்பி உங்கள் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் எழுதியிருந்தது.

அவர் மீண்டும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேச முற்பட்டப்போது எதிர்தரப்பில் யாரும் பேசவில்லை. இவரும் பதில் குறுஞ்செய்தி, எனக்கு தேவையில்லை, என்னை வலுக்கட்டாயமாக பாஜக உறுப்பினராக மாற்ற வேண்டாம் என்று அனுப்பினார்.

ஆனால், மீண்டும் அவருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பாஜக உறுப்பினராகிவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு புதிய உறுப்பினர் எண் குறுஞ்செய்தி வந்துசேர்ந்தது. அதாவது சில நிமிடங்களில் ஒரு நபருக்கு இரண்டு உறுப்பினர் எண்களை வழங்கியிருக்கிறார்கள். இறுதியில் மோடியுடன் இணைந்து பாஜகவை வழிநடத்துவோம் வாருங்கள் என்று மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

பட்னாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியோ பாஜகவின் செயலை சந்தி சிரிக்கவைத்துள்ளது. அவருக்கு மொத்தம் 3 மொபைல் போன்கள் மூன்று போன்களில் 13க்கு மேற்பட்ட பாஜக உறுப்பினர் எண்கள் வந்துவிட்டன. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் ஜனவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவிற்கு கிடைத்த மொத்த ஓட்டுக்கள் 1,50,674 மாத்திரமே ஆனால் கடந்த டிசம்பர் மாதம் கோவா பாஜக பத்திரிகையாளர்களை அழைத்து எங்கள் கட்சியில் கோவாவில் மத்திரம் 13 லட்சம் பேர் உறுப்பினராகி விட்டனர், என்று கூறியிருந்தனர்.

இதே நிலைதான் சிறீரங்கத்திலும் அங்கு நடந்த இடைத் தேர்ந்தலுக்கு முன்பு சிறீரங்கத்தில் மாத்திரம் 22 ஆயிரம் பேர் உறுப்பினராகிவிட்டனர். என்று அந்தக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்திருந்தார்.

ஆனால் அங்கு பாஜகவிற்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையோ வெறும் அய்ந்தாயிரம் தான். டில்லியின் நிலையும் இப்படித்தான் டில்லி தேர்தலுக்கு முன்பு டில்லி மக்கள்தொகையில் 90 விழுக்காடு எங்கள் உறுப்பினராகி விட்டனர்.என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தெரிவித்திருந்தார்.

ஆனால் 3 மூன்று பேர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலும் ஒருவர் அகாலிதள் கட்சியைச் சார்ந்தவர், மற்ற இருவரும் தனிப்பட்ட முறையில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள். ஜார்கண்ட் உள்ளாட்சிதேர்தலில் அத்தனை மாநகராட்சி களையும் பாஜக காங்கிரசிடம் இழந்து மூன்றா மிடம் வந்தது.

அங்கேயும் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று உறுப்பினர் அட்டையைக் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் டில்லியில் ராயன் என்று பள்ளியில் 3-வதுபடிக்கும் குழந்தைகளின் கையில் உறுப்பினர் படிவத்தைக் கொடுத்து வீட்டிற்கு சென்று நிரப்பிக்கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் பத்திரிகையில் வந்து பாஜகவின் மட்டமான உறுப்பினர் சேகரிப்பு கூத்தை அம்பலப்படுத்தியது.

(டைம்ஸ் ஆஃப் இந்தியா, மகாராட்டிரா டைம்ஸ், தைனிக் பாஸ்கர் ஏடுகள் வெளியிட்ட தகவல்களிலிருந்து 31.3.2015)

Read more: http://viduthalai.in/page1/98858.html#ixzz3W3alrCDy

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி..


. பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page1/98859.html#ixzz3W3dGyykw

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13_ஆவது மாநில மாநாடு கடந்த 19 ஆம் தேதி திருப்பூர் வாலி பாளையம், ஹார்வி குமா ரசாமி கல்யாண மண்ட பத்தில் சிறப்போடு அமைக் கப்பட்டிருந்த எழுத்தா ளர் ராஜம் கிருஷ்ணன் வளாகம், தி.க.சி. அரங்கில் எழுச்சியோடு துவங்கியது. அதன் ஒரு பகுதியாக 21.3.2014 அன்று இரவு 7 மணியளவில் திருப்பூர் டவுன்ஹால் வளாகத்தில் முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுப்போம் என்ற கருத்துரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் சமூகப் பொறுப்புணர்ச்சி யோடு சிறப்பாக துவங்கி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பேராசி ரியர் அருணன் அவர்கள் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி சிபிஅய்எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலு வரவேற் புரையாற்றினார். தமுஎகச பொறுப்பாளர்கள் மற் றும் படைப்பாளிகள் பல ரும் முன்னிலை வகித்தனர்.

சமுதாயத்தை மேம் படுத்தும் முற்போக்குக் கருத்துக்களைத் தாங்கிய இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங் கேற்ற திராவிடர் கழகத் தின் பிரச்சாரச் செயலா ளரும், சீரிய வழக்குரைஞ ருமான அ.அருள்மொழி அவர்கள் உரைவீச்சு நிகழ்த்தியதாவது; முற் போக்குத் தமிழ்மரபை முன்னெடுப்போம்! என்ற முழக்கத்தோடு நடை பெறுகிற இன்றைய சிறப்பு நிகழ்வில் உங்களை சந் தித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப் பளித்த தமுஎகசவிற்கு நன்றி!

பெண்களுக்கு உரிமை யிருக்கிறதா? என்ற மர பைத்தேடிப் பார்க்கிறேன். நம்முடைய அப்பத்தா, அம்மாயி காலங்களில் பெண்கள் தங்கள் மனக் குமுறலை எடுத்துச் சொல்ல வெளிப்பாடாக இருந்த தாலாட்டையும், ஒப்பாரியையும் தான் நம் முன்னோர்களின் மரபாக பார்க்க முடியும்.

வரலாறுகள் எழுதப் படாத காலத்தில் மக்க ளின் பசிப்பிணி போக்க அட்சயப்பாத்திரம் தாங் கிய மணிமேகலையை நினைவு படுத்தியது 3_ஆம் தமிழ் மரபு. இந்த மரபை மாற்றி பெண்களுக்கு எவ் வித உரிமையும் கொடுக் கக்கூடாது என்ற தடையை மனுதர்மவாதிகள் ஏற் படுத்தியிருந்தார்கள். இந் தத் தடைகளை எல்லாம் தகர்த்து, அவர்களின் மற்ற சீர்கேடுகளை ஒழித்து பெண்ணுரிமை மரபையும், கல்வியையும் மீட்டுக் கொடுத்தது. தமிழ்நாட் டில் தந்தை பெரியார் தொடங்கிய பண்பாட்டுப் புரட்சிஇயக்கம். முற் போக்கு மரபை மீட்டெ டுத்த தந்தை பெரியார் வழியில் இருந்து நான் மரபை தொடங்குகிறேன்.

நம் முன்னே இருப்பது இரு மரபு:

1) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை தான்.

2) சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம்

பாவேந்தர் பாரதி தாசன் கூறுவதுபோல் பிறர் நூல் கொள்கை எது? தமிழ்நூல் கொள்கை எது? என்பதை அறிய சங்கத்தமிழ் நூலைப் படி, காலையில் படி, மாலை யில் படி, கடும் பகல் படி என்று நம் மரபு எது என் பதை படித்து உணர வேண்டும்.

கல்வி என்பதற்கு அளவு கோல் இடஒதுக்கீடு அதை தகுதிக்கு எதிரானது என்று மனுதர்மவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள். அதை முறியடித்து இட ஒதுக்கீட்டை பிடித்தோம். நாம் அனைவரும் கல்வி கற்றோம். நம்முடைய விழிப்புணர்வை பார்த்து இன எதிரிகள் அஞ்சுகி றார்கள்.

யாதும் ஊரே! யாவ ரும் கேளிர்! என்ற தமிழ்க் கோட்பாடு ஒரு புறமும், ஜாதி தர்மம் என்ற மனு நீதிக்கோட்பாடு மறுபுற மும் நம் முன்னே நிறுத் தப்பட்டுள்ளது. நம் மரபு முற்போக்குத் தமிழ் மரபு. பல வித மாறுபட்ட சூழ் நிலைகள் இருப்பினும், முற்போக்குத் தமிழ்மரபு. பலவித மாறுபட்ட சூழ் நிலைகள் இருப்பினும், முற்போக்குத் தமிழ்மரபை முன்னெடுத்து வெற்றி பெற உழைப்போம் என உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/98893.html#ixzz3W3eIPHhY

தமிழ் ஓவியா said...

முக்கிய அறிவிப்பு

தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு ஆதரவு குவிகின்றது

தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டு, திராவிடர் மகளிர் பாசறையால் நடத்தப்படும் தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு கழகத் தோழர்களிடமிருந்தும், மக்களிடம் இருந்தும் ஆதரவு குவிகின்றது.

ஏராளமான தோழர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் இதுவே தவிர்க்க முடியாத விவாதப் பொருளாக மாறிவிட்டது.

இந்த விழாவைப்பற்றி மக்களிடம் கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்கூட தற்போது அதுகுறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளன.

எனவே, இரு நிகழ்வுகளுக்கும் முன்பதிவு அவசியம்.

தொடர்பு கொள்ள:

திராவிடர் மகளிர் பாசறை,

9940348533 - 9841263955 - 9524097177

Read more: http://viduthalai.in/e-paper/98905.html#ixzz3W3er7tM8

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாதா?

மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா?

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பதிலடி!


சென்னை, ஏப்.1- மாட்டுக் கறி உணவு என்பது ஏழைகளின் உணவாகும்; அதனை சாப்பிடக்கூடாது என்று சொன்னால், தடை செய்தால் மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா? என்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவருடைய பேட்டி வருமாறு:

மாட்டுக்கறி என்பது ஏழைகளின் உணவு. அதைச் சாப் பிடக் கூடாது; அதை விற்கக்கூடாது என்று தடை செய்வது, ஏழைகளினுடைய வயிற்றில் அடிப்பது போன்றது. ஏனென் றால், இன்றைக்கு ஆட்டுக்கறி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும்; கோழிக்கறி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கிறது. ஏழை, எளியோர்களின் சத்தான உணவு மாட்டுக்கறி யாகும். மிகவும் விலை குறைவாகவும் கிடைக்கிறது. அது மட்டுமல்ல, மாட்டுக் கறி சுவையை விரும்பி பலர் சாப்பிடு கிறார்கள். நானும் மாட்டுக்கறியை விரும்பிச் சாப்பிடுவேன்.

திடீரென்று நீங்கள் எல்லாம் அரிசி உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ, கோதுமை உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ அதுபோன்றதுதான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது.

மக்கள் என்ன ஆடு, மாடுகள் சாப்பிடுகின்ற புல், பூண்டுகளையா சாப்பிட முடியும்?

உங்களுக்கு சைவ உணவு பிடிக்கும் என்றால், சைவ உணவை சாப்பிட்டுக் கொள்ளுங்கள்; அசைவ உணவு பிடிக்கும் என்றால் அசைவ உணவை சாப்பிட்டுக் கொள் ளுங்கள்; அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. பாம்பைச் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சாப்பிடலாம்; சீனாவில் பாம்புக் கறி உணவை சாப்பிடு கிறார்கள். ஆகவே, மாட்டுக்கறியை நாங்கள் தடை செய்கிறோம் என்று சொல்வது என்பது முழுக்க முழுக்க ஒரு மோசமான செயலாகும்.

தாலி கட்டும் பழக்கம்

இன்னொன்று தாலி கட்டும் பழக்கம் என்பது, உலகத்தில் இந்தியாவில்கூட தமிழ்நாட்டில் நம்முடைய பெண்கள் சிலரிடம்தான் உள்ளது. ஆகவே, தாலி கட்டுவது அவசி யமா? இல்லையா?

என்று விவாதம் நடப்பதில் தவறேதும் கிடையாது. உலகத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான பெண்கள் தாலி கட்டிக்கொள்வது கிடையாது. சில பெண்கள் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள்; சில பேர் தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்கிறார்கள்.

ஆகவே, தாலி அணியவேண்டும் என்று கட்டாயப்படுத் துவது மிகவும் தவறு; அதேநேரத்தில், தாலி கட்டக்கூடாது என்று சொல்வதும் தவறு என்று நினைக்கின்றேன்.

தாலி கட்டுவதும், தாலி கட்டாததும் ஒவ்வொரு வருடைய விருப்பத்தைப் பொறுத்தது. ஆகவே, தாலி வேண்டாம் என்று சொல்வது தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதைத் திருமணங்களில் தாலி கிடை யாது.

ஆகவே, அதற்காக ஊடகங்களை உடைப்போம்; தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்குவோம்; குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு தொலைக் காட்சியில், தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்புகிறோம் என்றவுடன், நாங்கள் அந்தத் தொலைக்காட்சியை உடைப்போம் என்று சொல்வதை, சுதந்திர நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது!

எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு!

- இவ்வாறு தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/98906.html#ixzz3W3ezPykm

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இந்து மதத்தின் லட்சணம் பாரீர்!

தாரகாட்சன், வித்யுன் மாலி, கமலாட்சன் ஆகிய அசுரர்கள் மூவரும் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகள் பெற்று, தேவர்கள், முனிவர்கள், மக்களுக்குத் துன்பம் இழைத்தனராம். தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, சிவன் அசுரர்களை அழித்தானாம்.

இந்து மதத்தில் ஒரு கடவுள் அருள் கொடுக்கிறது; இன்னொரு கடவுள் அதனை அழிக்கிறது - இதுதான் இந்து மதம் கூறும் ஆன்மிகத்தின் லட்சணமா?

Read more: http://viduthalai.in/e-paper/98907.html#ixzz3W3f6pKhs

தமிழ் ஓவியா said...

யார் இந்தப் பாண்டே - அவர் பின்னணியில் உள்ளவர்கள் யார்?

பேரா. அ.மார்க்ஸ் தோலுரிக்கிறார்

தமிழர்களின் பெருமை யாக இன்று தமிழ்த் தேசி யர்களால் தெண்டனிட்டுக் கொண்டாடப்படும் ராஜராஜ சோழன், அவன் மகன் ராஜேந்திர சோழன்... இவன்கள் எல்லோரது காலத்திலும் பீஹாரிலிருந்து பார்ப்பனர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

கோவில் அர்ச்சகர் களாக மட்டுமல்ல, அரச குருக்களாகவும், கோட் டைக் காவலர்களாகவும் (துர்க்கா தண்டநாயகர்கள்) அவர்கள் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து அதிகாரம் செலுத்தியுள்ளனர்.

பீஹாரில் எந்த ஊரிலிருந்து கொண்டுவரப்பட்ட வர்கள் என்கிற விவரங்கள் எல்லாம் சாசனங்களில் உள்ளன. நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவப் பண்டாரத்தார் எல்லோரும் இதைத் தம் சோழர் வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். நண்பரும் வாழும் தமிழறிஞருமான பொ.வேல்சாமியும் தனது 'கோவில் நிலம் சாதி' நூலில் இதைக் குறிப்பிடுவார்.

எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம். இந்த தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டே குறித்து. அது என்ன பாண்டே, தமிழ்ப் பெயராகத் தெரியவில்லையே என. சற்று முன் விசாரித்த போதுதான் இந்த நபரின் பூர்வீகம் தெரிந்தது. பீஹார் பார்ப்பனர்தானாம். இவரது தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு அர்ச்சகராக வந்தவராம். இவர் இங்கு பிறந்து வளர்ந்தவராம்.

இன்னும் கூடவா அர்ச்சகர்கள் பீஹாரிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும்? என்ன பின்னணி எனத் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆசிரியர் வீரமணியிடம் பாண்டே அடி வாங்கியது குறித்து முகநூல் அல்லோகலப் படுகிறது. மகிழ்ச்சி. எனக்குப் பார்க்க இயலவில்லை.

எல்லோரும் ஆசிரியரைப் பாராட்டுகின்றனர். எனக்கு வியப்பில்லை. இது போன்ற கேள்வி களுக்குப் பதில் அளிப்பதையே ஒரு வாழ்வாகக் கொண்டவர்கள் அல்லவா பெரியாரியர்கள்... எத்தனை கேள்விகள்... எத்தனை அவதூறுகள்... எத்தனை கல்லடிகள். தந்தை பெரியார் மீதே செருப்பை வீசவில்லையா இழி பிறவிகள். அவர் எதிர் கொள்ளாத கேள்விகளா?

ஒரு பதிலை நான் மிகவும் ரசித்தேன்.நண்பர் பிரபா அழகரின் பக்கத்திலிருந்தது அது.

"நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லையே..."

இந்தக் கேள்விகள் வழக்கமாகப் பெரியாரியர்கள் எதிர் கொள்வதுதான். என்னிடமும் பல முறை இது கேட்கப்பட்டதுண்டு. இல்லை, அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இந்த மதங்களையும் கூட விமர்சிக்கத் தேவை வரும்போது தவறுவதில்லை.

இவை இன்று இங்கு சிறுபான்மை மதங்களாகவும், பெரும்பான்மை வன்முறைக்கு ஆளாகக் கூடியதாகவும் இருப்பதால் எங்கள் முன்னுரிமை அதற்கு இருப்பதில்லை என்கிற ரீதியில் என் பதில் இருக்கும். பல நேரங்களில் அது எடுபடுவதில்லை.

ஆசிரியர் அட்டகாசமாக இதற்குப் பதில் சொல்லியுள்ளார். யார் எங்களை சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் தீண்டத் தகாதவர் என்றும் இழிவு செய்கிறார்களோ அவர்களை விமர்சிப்பது தான் என் முன்னுரிமை. கிறிஸ்தவமோ. இஸ்லாமோ எங்களை இப்படி இழிவு செய்வதில்லை.

87 சதம் மக்கள் தொகை உள்ள ஒரு மதத்தின் பிரதிநிதியாக நிறுத்திக் கொண்டு அவர்கள் இதை எல்லாம் செய்கிறார்கள். ஆனால் இதர மதத்தினர் இப்படி யெல்லாம் எங்களை இழிவு செய்வதில்லை என்பதோடு சிறுபான்மையினரும் கூட என்கிற ரீதியில் ஆசிரியரின் பதில் நச்.. நச்......

நண்பர்களே. பாண்டே முகம் வெளிறி இருக் கலாம். ஆசிரியர் அந்த நபரின் மூக்கை உடைத் திருக்கலாம். நாமும் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில், அதுவும் "நாம் தமிழர்"

ஆதித்தனாரின் ஊடகம் ஒன்றில் ஒரு பீஹார்ப் பார்ப்பனன் ஆசிரியரிடம் திராவிடர் இயக்கம் குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும் எடுத்தெறிந்து பேசவும், இத்தகைய அபத்தக் கேள்விகளை நேர்காணல் என்கிற பெயரில் ஆசிரியரை நோக்கிக் கேட்கவும் நேர்கிற ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்பது தான் அது.

இன்றும் இந்த நிகழ்விலும், ஆசிரியர் அறிவித் துள்ள தாலி அகற்றும் போராட்டம் குறித்தும் யாரெல்லாம் அதை அவதூறு செய்கிறார்கள், யாரெல்லாம் அதை எதிர்க்கின்றனர் என்பதை ஒரு கணம் கவனிக்கத் தவறாதீர்கள்.

பெரியார் குறித்த அவதூறுகளைக் கடந்த 35 ஆண்டுகளாக மேலெடுத்த சகல தரப்பினருக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள மிக நெருக்கமான உறவையும் மறந்துவிடாதீர்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46XcTtL

தமிழ் ஓவியா said...

அக்கிரகாரச் செருக்கை அய்யாவின் அறிவாயுதத்தால் முறியடிப்போம்

தமிழ் கூறும் நல்லுலகில் மனு தர்ம அடிப் படையில் பெண்களை அடிமைகளாக, பேரிளம் பெண்களை போகப் பொருளாக மொத்தத்தில் பிள்ளை பெறும் இயந்திரமாக ஆக்கி அடிமைப் படுத்திய காலத்தில் மனித உணர்வுகளின் மாட்சிமை தாங்கிய குறளாக அன்று தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கேள்வியை எழுப் பினார். அக்ரகாரத்துப் பெண்களுக்கும் அய்யாவின் கேள்வி சரியாகப் பட்டது.

பொட்டு வைத்து, பூ வைத்து பொட்டுக் கட்டிய தேவதாசி முறையினை ஆவேசமாக எதிர்த்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் ஆவேசக் குரலின் உள்ளே கூட அய்யாவின் கொள்கை ஒலித்தது. அய்யா என்ற அந்த உயிர் எழுத்து, ஆண்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், ஆண்டவனிடத்திலிருந்தும், அக்ரகாரத்திலிருந்தும் பெண்களின் உரிமையைப் பாதுகாத்தது.

தாலி என்பது பெண்களுக்கு எந்த வகையில் வேலியாக உள்ளது? எங்களைக் காப்பதில் தாலி வேலியாக உள்ளதா? பாலியல் வன்முறை செய்யும் போது பெண்களின் கற்புக்கு தாலி வேலியாக இருந்து இருக்கிறதா? கணவனே மனைவியைக் கொலை செய்யும் போது தாலி பாதுகாத்திருக்கிறதா? அரசு அலுவலகத்திலே, காவல் நிலையத்திலே, அங்காடிகளிலே, சிற்றின்ப சீறல்கள் எழுந்த போது தாலி வேலியாக இருந்திருக்கின்றதா?

ஒரு காலத்தில் பெண்கள் கல்வி அறிவு இல்லாத, பகுத்தறிவு சிந்தனை இல்லாத போது, பெண் திருமணம் ஆனாள் என்ற அடையாளமாக தாலி இருந்தது (அடிமையாக்க).

இன்றோ, ஆகாய விமானத்தில் இருந்து அறிவுசார் தொழில்நுட்பம் வரையிலும் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் அளப்பரிய சாதனைகளைச் செய்து வருகிறார்கள்.

தாலியை விரும்பினால் போட்டுக் கொள். விரும்பாவிட்டால் அகற்றி விடு. அறிவாய்ந்து வாழ்வது, அடிமையாக வாழ்வதும் அவரவர் விருப்பம்.

தாலி அகற்றும் நிகழ்ச்சி என்பது அறிவாய்ந்த பெண்களின் விருப்பத்தின்பாற்பட்டது. இதுவே அய்யா வீரமணி அவர்களின் அறைகூவல்.
இதையறியா மழைக்காலத்து மண்டூகங்களாய் தமிழ் நாட்டு அரசியலில் பால பாடம் படிக்கும் பக்குவமற்ற சிலர் (சரத்குமார்) சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களே திரும்பிப் பார்க்கட்டும்.

தாலிக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அவர்களுக்கே தெரியாதே? அய்யாவின் கொள்கைக்கு தமிழ்நாட்டின் பெண்கள் துணையாக நிற்போம்!

அய்யாவைக் கண்டிக்கும் அக்ரகாரச் செருக்கை அய்யா பெரியாரின் அறிவாயுதம் கொண்டு முறியடிப்போம்!

- கலைமகள் இளையபாரதி
பாப்பாநாடு (உரத்தநாடு)
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் (திமுக)

Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46i1YIe

தமிழ் ஓவியா said...

நேர்மைக் குறைவல்ல - அயோக்கியத்தனம்

பெரியார் வினாக்களுக்கோ, விமரிசனத்திற்கோ அப்பாற்பட்டவர் அல்லர். பெரியார் கொள்கைகள் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பெரியாரின் கருத்து குறித்த கேள்விகளைக் கேட்பதோ, அதற்கான ஆதாரங்களை அளிப்பதோ இயல்பானதே!

ஆனால் பேட்டி காணப்படுபவரிடம் அவர் கூறும் கருத்துகளுக்கு எதிரான ஆதாரங்களை கொடுத்து விளக்கம் கேட்பதுதான் ஏற்கத்தகுந்த நேர்மையான ஊடக அறமாக இருக்கும். அதற்கு பதிலாக கருத்துரைப்பவர் இல்லாத நிலையில் அரைகுறை ஆவணங்களை ஆதாரம் என்ற பெயரில் திணிப்பது ஊடக அறமல்ல. அதன் பெயர் நேர்மைக்குறைவுமல்ல. அயோக்கியத்தனம்..!

பத்திரிகை சுதந்திர ஆதரவாளர்கள், கருத்துரி மைக் காவலர்கள் உட்பட எந்த தரப்பினரும் இந்த நேர்மையற்ற செயல் குறித்து சாதிக்கும் மவுனத்தை நான் "கள்ள மவுனம்" என்று சொல்லலாமா?

ஊடக நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை களுக்கு பொங்கி எழுந்து கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் இந்த கருத்துத் திணிப்பு குறித்தும் எதிர்வினை ஆற்றுவார்கள் என்று நம்புகிறேன்...!

- சுந்தரராசன், வழக்குரைஞர்

Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46tJaRS