Search This Blog

27.3.15

இராமன் பிறப்பின் லட்சணம் பாரீர்!

இராமன் பிறப்பின் லட்சணம் பாரீர்!
மார்ச் 28 - இராமநவமியாம்!
                                                    (இராமன் பிறந்த நாளாம்!)


ஹிந்து மதம் என்று அழைக்கப்படும் வேத, சனாதன, பார்ப்பனீயத்தில் மட்டும்தான் கடவுள்களுக்கும் அதன் அவதாரங்களுக்கும் (அவதார் என்றால் கீழே இறங்குவது - என்று பொருள்) பிறப்பும் இறப்பும் உண்டு.

மற்ற மதங்களில் கீழே இறங்குவது கடவுள் அல்ல.

அவரது பிள்ளை - ஒரு மதத்தில்

அவரது தூதுவர் - அதுவும் கடைசித் தூதுவர்

- இப்படி இந்தப் பார்ப்பன மதத்தில்கூட (ஹிந்துமதம் என்றால் ஒன்றல்ல. சிவமதம் வேறு, வைணவ மதமும் வேறு).

சிவ மதத்தில் - அவதாரம் கிடையாது! வைஷ்ணவ மதத்தில் மட்டும் அவதாரம் உண்டு

அதிலும் (10) தசஅவதாரமாம்!

5 மிருகங்கள் - 5இல் சில மனித வடிவில்...!

(பாதி மிருகம் பாதி மனித உருவமும் உண்டு)

1)    மச்சம் - மீன்

2)    வராகம் - பன்றி

3)    கூர்மம் - முள்ளம் பன்றி

4)    வாமன அவதாரம் (குட்டைப் பார்ப்பனர்)

5)    நரசிம்ம அவதாரம் (சிங்கமும் மனிதனும்)

6)    பலராம அவதாரம்

7)    கிருஷ்ண அவதாரம்

8)    இராம அவதாரம்

9)    புத்த அவதாரம்

10)    கல்கி (கலியுகத்தில்) அவதாரம்!

இப்படி கூறுவதில் இராமர் பிறப்புதான் இராம நவமி;

கோகுல அஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பு

விநாயகர் சதுர்த்தி - பிள்ளையார் பிறப்பு

ஸ்கந்த சஷ்டி - சுப்ரமணியன் பிறப்பு

எதிலாவது தமிழ்ப் பெயர் உள்ளதா?

எனவே தமிழர்களுக்கும் இக்கடவுள்களுக்கும் என்ன சம்பந்தம்?

இராமன் எப்படிப் பிறந்தான்? வால்மீகி இராமாயணப்படி - அசுவவேத யாகம் நடத்தி.

குதிரையை வெட்டி, மூன்று புரோகிதர்களோடு கோசலை இரவெல்லாம் இருந்து இராமனைப் பெற்றாள் என்று எழுதியுள்ளதே! பிறகுதான் யாகத்தின் மூலம் பூதம் தோன்றி பாயசம் தந்தது; அதைக் குடித்து,  கோசலை கருவுற்றாள் என்று திரித்து எழுதப்பட்டதே  - பிற இராமாயணத்தில் (கம்பன் போன்ற வம்பன்களால்)

எங்காவது பாயசம் குடித்து கருத்தரிக்க முடியுமா?


குடித்த பாயசம் கருப்பைக்குள் செல்லுமா? இரைப்பை - வயிற்றுக்குள் தானே செல்லும் (இரைப்பை முதலிய உறுப்பு வழியாக) என்று எவரும் கேட்க மாட்டார்களா?

பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்று பெரியார் சொன்னதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? இந்த இராமனால் நாடு அமைதி இழந்து அல்லவா இன்று தவிக்கிறது!

 
---------------------”விடுதலை” 27-03-2015

41 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் பாதையில் லீக்வான்யூ

சிங்கப்பூரின் சிற்பி லீயின் 'இறுதி அஞ்சலி நாளன்று அவரவர் இருக்கும் இடங்களில் , கறுப்பு உடை அணிந்து பெருமை மிகு லீ அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்' என்ற வேண்டுகோள், எதிர்பாராத அளவுக்கு மக்கள் மனங்களைத் தொட்டிருக்கிறது. ஆயிரமாயிரம் அன்பர்கள் அந்தச் செய்தியை பெரிய அளவில் பகிர்ந்து கொண்டு, அன்னாரின் புகழை உலகெங்கும் பரப்பியுள்ளனர்.

எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புடை தரித்த அனுதாபக் கூட்டம் உருவாகி வருகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை லீ அவர்கள் மறைமுகமாக ஏற்றவர். உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற பெரியாரின் அரிய கருத்தின் முழு சொந்தக்காரர் லீ.

அதே நேரத்தில் லீயின் தெய்வ நம்பிக்கை, இதுவரை யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாத ஒன்று. செயலாக்கமே நாட்டை முன்னுக் குக் கொண்டு வரும் எனத் திடமாக நம்பிய அவர், தெய்வம் சார்ந்த கொள்கைகளுக்கு நேரம் ஒதுக் காததையும் நம்மால் காண முடிகிறது. ஆனாலும், தன் மக்களின் தெய்வ நம்பிக் கைகளில் என்றைக்குமே அவர் குறுக்கே நின்ற தில்லை. முப்பதுக்கு மேற்பட்ட இந்து கோயில்களை கட்ட அனுமதித்தவர். தைப்பூசத் திருவிழாவுக்கு முக்கியத்துவம் தந்தவர்.

இந்து அறக் கட்டளை வாரியத்தின் வழி, கோயில்கள் ஒழுங்காக நிர்வ கிப்பதை உறுதிப் படுத்திஇருப்பவர். இன்றைய நம் கோயில்கள் பல, சமய ஆராதனைகளுடன், பாலர் பள்ளி போன்ற போதனைக் கூடங்களையும் நடத்தி வருகின்றன. லீயின் மறைவை ஒட்டி ,தந்தை பெரியாரின் கருஞ் சட்டைக் கொள்கையை மக்கள் இங்கே பின்பற்ற நினைப்பது மிகப் பொருத்தமே! நவ நாகரீக சிங்கப் பூக்கு, பெரியார் பார்வை தந்த பெருமையும் லீ அவர்களுக்கே உரியது.

- சிங்கப்பூர் ஏ.பி. இராமன் -

Read more: http://viduthalai.in/e-paper/98593.html#ixzz3VaHtEvB1

தமிழ் ஓவியா said...

கடவுளின் கிருபையோ!
சூடத்தால் ஏற்பட்ட விபரீதம்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், அவரது மகள் விமலாதேவி (வயது 7). கடந்த 7ஆம் தேதி குடும்பத்தோடு கன்னிதேவி கோயிலுக்குச் சென்றனர். சிறுமி விமலாதேவியும் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார். தவறுதலாக அந்தச் சூடம் ஆடையில் பட்டு காயம் அடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்றும் மரணம் அடைந்தார். கடவுளைக் கும்பிடுவோர் சிந்திக்க வேண்டாமா?


Read more: http://viduthalai.in/e-paper/98594.html#ixzz3VaI8Cqqq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


எதிர்காலம்

எதிர்காலத்தைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? அனைத்தையும் திட்ட மிட்டு ஆட்டுவிப்பவன் அதைப் பார்த்துக் கொள்வான் - ரமணரிஷி

உண்மைதானே - ரமணரிஷி புற்றுநோய் வந்து பரிதாபகரமான முறையில் மரணம் அடைந்தது எல்லாம்கூட ஆண்டவன் திட்டமிட் டது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/98595.html#ixzz3VaIIRpvg

தமிழ் ஓவியா said...

உலகக் கிரிக்கெட்(டு) கூத்து!

இந்தியா வெல்லும் என்ற ஆரூடங்களும், யாகங்களும் பலிக்கவில்லை

முட்டி தேய திருப்பதி மலை ஏறியும் பயனில்லை
நாக்கை வெட்டிக் காணிக்கை எல்லாம் வீண்!

சென்னை, மார்ச் 27- உலகக் கிரிக்கெட்டில் இந் தியா வெல்ல செய்யப்பட்ட யாகங்களும், வேண்டுதல் களும், ஆருடங்களும் பலிக்கவில்லை; மூடத் தனத்துக்கு மரண அடி கொடுக்கப்பட்டு விட்டது.

வாஸ்துமீன் சொன்னது என்னாச்சு?

சென்னை ரசிகர்கள் பிள்ளையாரப்பா எப்படியாவது மேட்ச்ல ஜெயிக்க வையப்பா... என்று கிரிக்கெட் பிள் ளையாரே கதி என்று கிடந்தனராம். அரையி றுதி வரை வந்து விட் டோம். இந்த மஞ்சள் சட்டைக்காரர்களை துவைச்சு தொங்கப் போட ணும் என்று லட்சார்ச் சனை ஒருபக்கம் நடத் தினாலும் ஜோசியம் வேறு பார்த்து வெற்றியை உறுதிப்படுத்தினராம் சென்னை ரசிகர்கள்.

கிளி ஜோசியம்... எலி ஜோசியம் அல்ல சாணக்யா என்ற மீன் (வாஸ்துமீன்) இந்தியா நிச்சயம் வெல் லும் என்று ஜோதிடம் சொன்னது. ஆனால் அத் தனையும் பொய்யாப் போச்சே என்கின்றனர் ரசிகர்கள்.

ஜோசியம் பார்க்கலயோ!

இந்நிலையில் சென்னை, அண்ணா நகரில் அமைந் துள்ள மிசிகீளி என்னும் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தினர் வளர்த்து வரும் 'சாணக்யா' என்னும் மீன் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி எது எனக் கணித்தது. கச்சிதமாக கவ்வி மீன் தொட்டிக்குள் இந்தியா மற்றும் ஆஸ்தி ரேலியா ஆகிய நாடு களின் கொடி பொறித்த அட்டைகளைப் போட, சாணக்யா மெல்ல கொடி அட்டைகளை நோக்கி வந்தது. அனைவரும் ஆர் வத்துடன் சாணக்யாவைப் பார்த்தபடி இருக்க, சாணக்யா இந்தியக் கொடி பொறித்த அட் டையைக் கவ்வியது. சொன்னது பலிக்கலையே!

தமிழ் ஓவியா said...

முன்னதாக, இலங்கை- தென் ஆப்பிரிக்கா, இந் தியா - பங்களாதேஷ், பாகிஸ்தான் - ஆஸ்திரே லியா, நியூசிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா -_ நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவைச் சரியாக கணித்ததாம் இந்த சாணக்யா. ஆனால் இம் முறை இந்தியா_ஆஸ்தி ரேலியா இடையேயான போட்டியைப் பற்றி சாணக்யா கணித்த முடிவு பொய்யாகிவிட்டதே என்று கவலையில் ஆழ்ந் துள்ளனராம் ரசிகர்கள்...

மீன் தொட்டியில் உணவு போடப்பட்டா லும், வேறு எதைப் போட்டாலும் அதை உணவு என்று எண்ணி அதை உண்ண எத்தனிக் கும் மீன். இதில் எப்படி ஜோதிடம் புகுந்தது?

ஆப்கானிஸ்தானத்திலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஆரூடம் கணித்து ஆச் சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பெட்டிங் கில் யாரும் ஆப்கானிஸ் தானை எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆரூடத்தை கூறியதாம்.

தமிழ் ஓவியா said...


நியூசிலாந்தின் கான்டெர்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனை வர் பட்ட ஆய்வு மாண வர் எடியூர்டோ சன் டோவல் உருவாக்கிய இந்த ரோபோட்டுக்கு இக்ரம் என பெயரிடப் பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகள் குறித்து ஆரூ டம் கணித்த பால் என்ற ஆக்டோபஸை உருவாக் கியவர் இக்ரம் என்பதால் அவரது பெயரையே தமது புதிய ஆரூட ரோபோட் டுக்கும் சூட்டியிருக்கிறார். இந்தியா, மேற்கிந்திய தீவுகள் என பல நாடு களின் கொடிகளைப் பார் வையிட்டு வந்த ரோபோட் திடீரென ஆப்கானிஸ் தான் கொடியை தேர்வு செய்ததாம்.

கிரிக்கெட் போட்டி யில் கத்துக் குட்டி நாடாக கருதப்படும் ஆப்கானிஸ் தான் உலகக் கோப்பையை வென்றுவிடும் எனில் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது. ஆனால், முடிவு என்ன ஆனது? ஆஸ்திரே லியாதானே வென்றுள் ளது.

நாக்கை அறுத்துக் காணிக்கையாம்!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர் (வயது 27). கட்டிட தொழிலாளி யான இவர், தீவிர கிரிக் கெட் ரசிகர். சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், கமலேசன் (2) என்ற மகனும் உள்ளனர்.

இவரது மாமியார் வீடு ஜோலார்பேட்டையை அடுத்த பெரியமோட் டூரில் உள்ளது. நேற்று ஆஸ்திரேலியா _ இந்தியா அணிகளுக்கு இடையே யான அரையிறுதி போட் டியை சுதாகர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஜோலார் பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியில் உள்ள வேடியப்பன் கோவிலுக்கு சென்று இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண் டுதல் செய்துவிட்டு, வருவ தாக கூறி வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் கோவிலுக்கு சென்ற சுதாகர் அங்கு பூஜை செய்து விட்டு, கற்பூரம் ஏற்றினார். பின் னர் பிளேடால் தன்னு டைய நாக்கை அறுத்து துண்டாக்கினார். வலி தாங்க முடியாத நிலையி லும், அறுத்து துண்டித்த தனது நாக்கை கோவில் முன்பு வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கடவுளிடம் வேண்டினார்.

அதைக்கண்டு அக் கம்பக்கத்தினர் பதறிய டித்து ஓடி வந்து, சுதா கரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

முட்டி தேய்ந்ததுதான் மிச்சம்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளதாம். இந்தியா வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனராம்.

ஆந்திராவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு முழங்காலிட்டு ஏறிச் சென்று ஏழுமலையானை வேண்டி னாராம் அவரது பெயர் சாணக்கியா. திருப்பதி முத்தியால் ரெட்டி பள்ளியை சேர்ந்தவர்.

9ஆம் வகுப்பு படித்து வரும் இவர் ஆந்திரா கிரிக்கெட் அசோசியே ஷனில் பயிற்சி பெற்ற இளம் கிரிக் கெட் வீரர். தேசிய அளவிலான கிரிக் கெட் போட்டியில் ஆந்திர அணி சார்பில் விளையாடி வருகிறார்.

இவர் கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை பெற ஏழுமலையானை நம்பியிருக்கிறார். தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அலிபிரியில் இருந்து திருமலைக்கு முழங்காலிட்டு சென்றாராம். நேற்று மாலை 5.45 மணிக்கு அலிபிரியில் இருந்து புறப்பட்ட அவர் இரவு 11 மணி அளவில் திருமலையை அடைந்து ஏழுமலையானை வேண்டி னாராம். (அதற்குள் கிரிக்கெட் போட் டியே முடிந்து விட்டது).

பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்த சிவாச்சாரியார்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட் டிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக, மதுரையைச் சேர்ந்த சிவாச்சாரி யார்கள் சிலர், ஆடி வீதியில் உள்ள பிள்ளையாருக்கு 108 தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைத்தார்களாம்.

Read more: http://viduthalai.in/e-paper/98591.html#ixzz3VaIerbfp

தமிழ் ஓவியா said...

அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியமா?

மத்திய அமைச்சர் கருத்துக்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை, மார்ச் 27_ அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருப்பது சாத்திய மற்றது என அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும்போது, பினாயில் பயன்படுத் துவதைவிட கோமியத்தால் தயாரிக் கப்படும் திரவத்தை பயன்படுத் தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மற்ற துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

அமைச்சர் கூறியது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும், இது பாஜகவின் அரசியல் தந்திரம் என்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகி கள் கூறுகின்றனர். அவர்கள் கூறிய தாவது:

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன்: இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால், மத்திய அமைச்சரே கூறுகிறார் என்றால் ஒட்டுமொத்த அமைச்சகமே ஆர். எஸ்.எஸ். கருத்தியலை அமல்படுத் ததான் முயல்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜே.கணேசன்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினந்தோறும் கோமியம் பயன்படுத் துவது என்பது நடைமுறைச் சாத்திய மற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி: தமிழகத் தில் சுமார் ஆயிரம் அரசு அலுவலக வளாகங்கள், 10 ஆயிரம் அலுவலக கட்டிடங்கள் உள்ளன. பல அலுவ லகங்கள் பராமரிப்பின்றி கிடக்கின் றன. குறைந்தபட்சம் பினாயில் பயன்படுத்திதான் சுத்தம் செய்து வருகின்றனர்.

திடீரென்று அனைத்து அலுவலகங்களிலும் கோமியம் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது. மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன்: சுற்றுச்சூழ லுக்கு நல்லது என்றால் இத்தனை ஆண்டுகள் இதுபற்றி ஏன் கூற வில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தைரியமாக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/98601.html#ixzz3VaJN9b80

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaJpqbuo

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.
(குடிஅரசு, 15.4.1928)

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaK5J7gP

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.
(குடிஅரசு, 15.4.1928)

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaK5J7gP

தமிழ் ஓவியா said...

தாலிபற்றிய சர்ச்சை


தனியார்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருந்த தாலிபற்றிய சர்ச்சையை மய்யப்படுத்தி இந்துத்துவா மதவாத சக்திகள் அந்தத் தனியார்த் தொலைக்காட்சி பணியாளர்களைத் தாக்கினர், டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர்.

இது தொடர்பாக மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், புரட்சியாளர் அண்ணல் அம்பேத் கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று சென்னை பெரியார் திடலில் மாட்டுக் கறி விருந்தும், பெண் ணடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்வும் நடைபெறும் என்று அறிவித்தார்.

அப்படி அவர் அறிவித்தபோது அங்கு கூடியிருந்த அனைவரும் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றனர். தனியார்த் தொலைக்காட்சிமீது தாங்கள் மேற்கொண்ட வன்முறை எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டதே என்ற அச்சம் அவர்களை உலுக்க ஆரம் பித்து விட்டது. கழகத் தலைவர் அறிவித்த அறிவிப் பினை ஒழுங்கு முறைக்கு உட்பட்ட அறிவார்ந்த விவாத முறையில் விமர்சித்தால் வரவேற்கலாம்; அத்தகு எதிர் விவாதங்களை எதிர் கொள்வதில் திராவிடர் கழகத்துக்கு எப்பொழுதும் சர்க்கரைப் பொங்கல்தான்!

ஆனால், இப்பொழுது என்ன நடந்து வருகிறது? பந்தை அடிக்க முடியாதவன் காலை அடிப்பது போன்ற தவறான விளையாட்டில் இறங்கியுள்ளனர். அவர் களுக்கே உரித்தான கொச்சைத்தனமான அபிசேகங் களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழ்த் தேசியவியாதியஸ்தர்களும் கல்லை விட்டு எறிகின்றனர்.

இந்துத்துவாவாதிகளை நோக்கி ஒரு கேள்வி; அய்ந்து பேருக்கும் மனைவியாக இருந்து ஆறாவதாக கர்ணன்மீதும் காதல் கொண்ட திரவுபதைக்கு எத் தனைப் பேர் தாலி கட்டினார்கள் என்று சொல்ல முடியுமா?

காட்டுக்குச் சென்று புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து காதலியின் கழுத்தில் தாலி கட்டினான் என்ற கதையை நம் தமிழ்த் தேசிய வியாதிகள் ஏற்றுக் கொள்வார்களாயின், இனிமேல் அந்த முறையைத் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தினை வெளியிடுவார்களா? எங்கே பார்ப்போம்!

தமிழர் திருமணம் குறித்து அகநானூற்றில் இரு பாக்கள் இடம் பெற்றுள்ளன. 86ஆம் எண்ணுள்ள பாமாலை இயற்றியவர் நல்லாவூர் கிழார் என்பவர் ஆவார்.

உழுந்து தலைப் பெய்த என்று தொடங்கும் பாடலும் சரி, விற்றூற்று மூதெயினனார் என்ற புலவர் தீட்டிய 136ஆம் பாவான மைப்புறப் புழுக்கி! என்று தொடங் கப்படும் பாவானாலும் சரி, எந்த ஒரு இடத்திலும் தாலி பற்றிய குறிப்பு மட்டுமல்ல; ஆரியக் கலாச்சாரமான எரி ஓம்பல் இல்லை; வடமொழி மந்திரங்கள் இல்லை; தீ வலம் வருதல் இல்லை; புரோகிதன் இல்லை; காசி யாத்திரை சமாச்சாரங்கள் எல்லாம் கிடையாது, அம்மி மிதித்தலும் இல்லை; அருந்ததி பார்த்தலும் இல்லை - உண்மை இவ்வாறு இருக்கும்பொழுது அய்யகோ தாலியை விமர்சிப்பதா? ஏற்கெனவே கட்டிய தாலியை அகற்றச் சொல்லுவதா?

என்று ஆவேசக் கூச்சல் போடுவது - திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் அடிமைத்தளையாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சியை எதிர்த்துக் காவல்துறையில் புகார் கூறுவதெல்லாம் அவர்களிடம் அறிவு சார்ந்த கருத்து வளம் அறவே இல்லாத இயலாமையின் வெளிப்பாடே ஆகும்; அதற்காகப் பரிதாபப்படத்தான் வேண்டும்.

அறியாமை இருளில் விழுந்து தவிக்கும் இவர்களின் கூக்குரலும், இணையதளப் பிரச்சாரமும், காவல்துறை யிடம் அளிக்கும் புகாரும், கழகம் நடத்தவிருக்கும் புரட்சிகர நிகழ்வுக்கான மிகப் பெரிய விளம்பரமே யாகும். எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தாலும், அவசரப்பட்டு விளம்பரச் செலவில் ஈடுபடாதீர்கள் - எதிரிகள் அந்த வேலையைச் செய்து விடுவார்கள் என்று தந்தை பெரியார் கூறியதை இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்போம். தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கை எண்ணி வியக்கிறோம்!

தமிழ் ஓவியா said...

தாலிபற்றி சர்ச்சை எழுப்பும் அன்பர்கள் ஒன்றை மறந்து விட்டார்களே, ஏன்?

மஞ்சள் கயிற்றில் தாலியைக் கட்டுவதுதானே அவர்களின் அய்தீகம், அந்த மஞ்சள் கயிறுக்கு ஒரு மகத்துவம் இருப்பதாகத் தானே சொல்லுகிறார்கள். அப்படிப்பார்த்தால் இப்பொழுதெல்லாம் யார் மஞ்சள் கயிற்றில் தாலியை இணைக்கிறார்கள்? தங்கத்தில் அல்லவா அணி கிறார்கள்? இது எந்த அய்தீகத்தின்ஒப்புதலைப் பெற்றது? நியாயமாக தாலியை மஞ்சள் கயிற்றில்தான் இணைக்க வேண்டும் என்று போர்க் குரல் எழுப்ப வேண்டியதுதானே தேவைப்பட்டால் போராட்டக் களத்தில் குதிக்க வேண்டியதுதானே!

திமுக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நேரத்தில் தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத் திற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதே (அரசித ழில் பதிவு பெற்றது 20.1.1968) அதில் தாலி கட்டாயம் என்ற நிலை இல்லையே! மாலை அல்லது தாலி அணிவிக்கலாம் என்று தானே இருக்கிறது.

திராவிடர் கழக மேடைகளில் ஏதோ ஒரு சூழ்நிலை யில் தாலி கட்டிய தம்பதிகள் அதனை அகற்றும் நிகழ்வு என்பது சர்வ சாதாரணம் ஆயிற்றே!

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைத் தேர்வு செய்தது - புரட்சிகரமான செயலுக்குப் பொருத்தமான நாள் என்பதால்தான்.

இந்த வாய்ப்பினை மகளிர் உரிமை போற்றும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் பிற்போக்குவாதிகளுக்கு கற்பிக்கும் சரியான பாடமாகவும் இருக்க முடியும்.

தயாராகுங்கள்!
தயாராகுங்கள்!!

Read more: http://viduthalai.in/page-2/98599.html#ixzz3VaKJBfT3

தமிழ் ஓவியா said...

சட்டமன்றத்தில் இன்று!

கருநாடகத்தில் கட்டப்படும் அணையைத் தடுத்து நிறுத்துக!
மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

சென்னை, மார்ச் 27_ கருநாடக அரசு மேக தாதுவில் புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத் தின் கவலையையும்,

நிலைப்பாட்டையும் எடுத் துரைக்கவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் இன்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப் பட்டு அனைத்துக்கட்சியினர் ஒத்துழைப்போடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத்தில் இன்று (27.3.2015) கேள்வி நேரம் முடிந்தவுடன் பேரவைத் தலைவர் ப.தனபால் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை பேரவையில் முதல்வர் முன் மொழிவார் என அறிவித்தார்.

இதை அடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து கூறியதாவது:

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மாதாந்திர வாரியாக பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய வற்றை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண் டும் என்றும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கருநாடக அரசு மேகதாதுவில் இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதையும்,

குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் காவிரி நீரவாரி நிகமம் வாயிலாக மேற்கொண்டுள்ள திட்டங்களை யும் தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்துக்கு வரும்வரை மற்றும் தமிழ்நாட்டின் அனுமதி இன்றியும்,

மேகதாதுவில் அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கருநாடகம் செயல் படுத்த முனையக்கூடாது என்பதை கருநாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் 5.12.2014 அன்று இந்த மாமன் றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தின்மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் இருந்து வருவதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததன் காரண மாக தமிழகத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ள தற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது.

கருநாடக அரசு மேகதாது நீர் மின்திட்டம் மற்றும் வேறுபல திட்டங்களை எடுத்துக்கொள்வதை நிறுத்திவைக்கும்படி கருநாடகத்துக்கு அறிவுரை வழங்க முதலமைச்சர் அவர்கள் அன்றைய பிரதமர் அவர்களை 2.9.2013 அன்று கடிதம் வாயிலாக வலி யுறுத்திக் கேட்டுக்கொண்டதறகும்,

கருநாடக அரசு காவிரி நீரவாரி நிகமம் என்ற அமைப்பின்மூலமாக பல நவீன மயமாக்கும் திட்டங்களை நிறுத்தி வைக்க கருநாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி பிரதமர் அவர்களுக்கு முதலமைச்சர் 3.9.2013 அன்று கடிதம் அனுப்பியதற்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரையிலும் தமிழகத்தின் அனுமதி இல்லாமலும் இத்திட்டங்களை கர்நாடகம் மேற் கொள்ள தடை விதிக்கக்கோரியும் மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு ஏற்படும்வரையிலும் காவேரி மேலாண்மை அமைக்கப்படும்வரையிலும் தற் போதைய நிலை (Status quo)

கடைப்பிடிக்க வேண் டும் என கருநாடக அரசுக்கு உத்தரவு வழங்கக்கோரி ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அவர்களின் ஆணைப்படி 11.4.2014 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதற்கும், மேகதாதுவில் புதிய அணைகள் கட்டத் தொழில்நுட்ப சாத்திய அறிக்கை தயார் செய் வதற்காக கருநாடக அரசின் விருப்பம் கோரும்

அறிவிப்பை நிறுத்திவைத்திடவும் குடிநீர் வழங்கல் என்ற போர்வையின் அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கருநாடக அரசுக்கு அறிவுரை வழங்கவும் பிரதமரை தமிழக முதல்வர் 12.11.2014

தமிழ் ஓவியா said...

அன்று நாளிட்ட கடிதத்தில் கேட்டுக்கொண்டதற்கும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 18.11.2014 அன்று இடைக்கால மனு ஒன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தமைக்கும் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்காக ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கரு நாடக அரசு தனது 2015_2016ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்ததை சுட்டிக் காட்டி தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல்

எந்தத் திட்டத்தையும் கருநாடகம் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்க 21.3.2015 அன்று தமிழக முதல்வர் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்துக்கும் இது தொடர்பாக 26.3.2015 அன்று மனு ஒன்றை (Additional affidavit) உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததற்கும் தனது பாராட்டுதலையும், நன்றியையும் இந்த மாமன்றம் தெரிவித்துக்கொள்கிறது.

மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை கருநாடகத்தால் தயாரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்துக்கு வரும்வரை யிலும், மற்றும் தமிழ்நாட்டின் அனுமதி இன்றியும் மேகதாதுவில் அணை,

தமிழ் ஓவியா said...

நீர்த்தேக்கம் போன்ற எந்த ஒருதிட்டத்தையும் செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்கக்கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுததி கேட்டுக்கொள்கிறது.

பேரவைத் தலைவர் அவர்களே, அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படி உறுப்பினர்களை பேரவைத் தலைவர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சார்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை நேரில் சந்தித்து இந்தத் தீர்மானத்தை அவரிடம் வழங்கி தமிழகத்தின் கவலையையும், நிலைப்பாட்டையும் பிரத மரிடம் எடுத்துரைக்கும்படி நாடாளுமன்ற உறுப் பினர்களை நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள் கிறேன் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இத்தீர்மானத்தை வாசித்தார்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு....

இதை அடுத்து இந்த தீர்மானத்தின்மீது திமுக, சிபிஎம், சிபிஅய், காங்கிரசு, புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஒருமித்த கருத்துகளை தெரிவித்ததை அடுத்து அவையில் தீர்மானம் நிறைவேற்றப்
பட்டது.

Read more: http://viduthalai.in/page-4/98612.html#ixzz3VaLkyLGR

தமிழ் ஓவியா said...

அண்ணா கூறுகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaMjHDSH

தமிழ் ஓவியா said...

குன்னமிர்தல் கூறுகிறார்!

மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சமமின்மையும் ஆகும்.

சமமற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமுதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)

இந்திய சமுதாய பழக்க வழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது

(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னமிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது)

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaNiZI3r

தமிழ் ஓவியா said...

கீதைப் பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா?

என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்

ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaO064Af

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியு டையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை.

நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOQ1tFa

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் என்று சொல்லப் படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பன ரல்லாத மக்கள் அனைவருக்குமான கழக மாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.


Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOhFjkz

தமிழ் ஓவியா said...

பகையைப் புகைக்காதீர்!

அமெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அமெரிக்க துணைக் கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

உலக அய்க்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆனால் வாஷிங் டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த மதிப்பீடு ஆகும். புகையிலையால் புதிதாக 5 நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேகப்ஸ் கூறியதாவது:-

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம்.

இங்கிலாந்து மருத்துவ ஆய்வில் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர இந்த பழக்கம் காரணமாக புதிதாக அய்ந்து வகை நோய்கள் தாக்கி பலர் இறந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நோய்கள் ஆய்வின் போது கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதை ஆராய்ச்சியாளர்கள் தனிக் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் புகைப்பழக்கத்தால் ரத்த நாளம் சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகள் இரு மடங்காக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

குடலுக்கு சரியாக ரத்த ஓட்டம் ஏற்படாதநிலையில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவிதமான நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தகவல்: சீ. இலட்சுமிபதி

Read more: http://viduthalai.in/page3/98656.html#ixzz3VgBw4XBE

தமிழ் ஓவியா said...

காந்தியாரால் அல்ல - சவர்க்காரால்தான் சுதந்திரம் கிடைத்ததாம்!

வீர் சவர்க்காரின் தியாகத்தால் தான் சுதந்திரம் கிடைத்த்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராய்ச்சி கூறியுள்ளார்.

விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50 ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநி லங்களில் கொண்டாடப்பட்டு வரு கிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வோரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசமாநிலம் பாயிரஜ் என்ற இடத் தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறியதாவது:

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட் டமாகும், இந்த போராட்டத்தின் விளைவை ஆங்கிலேயருக்கு உளவு பார்த்து கூற இங்கே பலர் இருந்தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்று வேலை;

அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலேயர் நடத்திய ஊடகங்கள் காந்தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட்டியது. காந்தியின் ஆங்கிலேயப் பாசத்திற்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த சன் மானமாகும், அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ புகழ் மிக்க தலைவர்களைப் போல் பார்க்கப் படுகிறார்.

உண்மையில் அவர் புகழ் மிக்க தலைவராவதற்குத் தகுதியற்றவர். இந்து மக்களின் அடிமைத்தளை களை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவர்கார் அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப்படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத்தந்தையாக பார்க்கவேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிறமதத்தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும், அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்சலிருந்தால் இந்தமேடையிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ்லாமிய நடிகர் களின் திரைப்படங்களைப் புறக்கணி யுங்கள் என்று நான் சொன்னது நன்மைக்காகத்தான்.

அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சைவிதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப்பட நடிகர்களிட மிருந்துதான் ஆரம்பிக்கிறது பாகிஸ் தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுவதையைத் தடைசெய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச்சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத் தரவிட்டார். அதனால் அவரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனை வரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங் குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல்லாம் வெறும் கட் டிடங்கள் மட்டுமே என்று பிராய்ச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

மாநில அரசு இணையதளத்தில் இன்றளவும் ஜெயலலிதா தான் முதல்வர்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் கூட புலம்பும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. அதற்கேற்பத்தான் ஆட்சியும் காட்சிகளும் உள்ளன.

தமிழகத்தில் அதிமுகவினர்தான் ஜெயலலிதாவை விடாமல் மக்களின் முதல்வர் என்று கூறி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அரசுத் துறையும் கூட அவரை இன்னும் முதல்வராகவே பார்க்கிறது, பாவிக்கிறது என்பதுதான் வேடிக்கையானது.

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூஜைகளும் சிறப்பு யாகங்களும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சியை நடத்தினர். அதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படம் மருந்துக்குக் கூட வைக்கவில்லை. மாறாக ஜெயலலிதா படம்தான் நிறைந்திருந்தது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்னும் கூட அகற்றப்படவில்லை. தற்போது தமிழக அரசின் மக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை இணையதளத்தில் ஜெயலலிதாவை இன்னும் முதல்வராகவே வைத்துள்ளனர். அந்தத் தளத்தை கிட்டத்தட்ட அப்படியே போட்டு விட்டு போய் விட்டது போலவே தெரிகிறது.

எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்தத் தளத்தைப் பார்த்தபோது. அதில் அமைச்சரவைப் பட்டியலில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா என்று போட்டு வைத்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராகவே நீடிக்கிறார். மேலும் அந்தத் தளம் முழுவதும் ஜெயலலிதா படம்தான்.

Read more: http://viduthalai.in/page5/98662.html#ixzz3VgDNz8Qw

தமிழ் ஓவியா said...

சனாதன அடுக்கில் இந்துவாய் இருப்பதில்
பயனென்ன?

பரிணாம வளர்ச்சியால் பல்லுயிர் உலகம்
படைக்கப் பட்டதன்று; உருவானதே
அறிவியல் முறையில் ஆய்ந்து உலகிற்கு
நாட்டினர் அறிஞர் டார்வின்
பிறப்பொக்கு மென்றார் பெருமகன் வள்ளுவர்
உலகினில் எங்குமே நிலவாத
பிறப்பை வைத்துபேத முரைப்பது
அர்த்த முள்ளஇந்து மதமே!

தொட்டால் தோசம்நிழல் பட்டால் தீட்டு
குலக்கொடுமை கொடிகட்டிப் பறந்தது
நாட்டின் மனுதர்ம நடைமுறை ஆட்சி
அதிகாரம் பெற்றதே காரணம்
முன்பிறப்பு வினையென்று மோசடியால் கடவுள்
மதத்தைக் காட்டிய மதமெது?
தன்னலங் கரம்பிய தான்தோன்றிக் கூட்டம்
நால்வண்ணத்தில் மேல்வண்ண மென்றதே!

ஊர்ப் புறத்தே ஒதுக்கி ஒடுக்கி
தீண்ட மறுத்தது எந்த மதம்?
செருப்பு தெருவில் போடக் கூடாதென
கூனிக் குறுகவைத்தது எந்த மதம்?
தோளில் துண்டு போடக் கூடாது
அக்குளில் வைத்தது எந்தமதம்?
மேலாடை அணியக் கூடா தென்று
பெண்ணைத் தடுத்தது எந்த மதம்?

பித்தளைப் பாத்திரம் புழங்கக் கூடாது
மிதிவண்டி ஓட்டினால் தண்டனை
சூத்திர னுக்கே கல்வியில்லை பஞ்சமன்
நினைத்துப் பார்க்க முடியுமா?
ஆதியில் வராத சாதி ஆரியப்
பார்ப்பனரால் பாதியில் வந்தது
நாதியற்று நடைப் பிணமாய் நடைபாதையில் வதிந்து
நலிந்தவர் தாழ்த்தப் பட்டோரே!

இந்துவாய் என்றும் இருந்த இழிவைச்
சுமக்க வேண்டும் காவிகள்
இந்துவென்று இனிக்கப் பேசுவோர் இருபதாம்
நூற்றாண்டு தொடக்கம் வரை
தாழ்த்தப் பட்டோர் இந்துப் பகுப்பில்லை
என்பதே தமிழக வரலாறு!
ஆழ்ந்து சிந்தித்தால் ஆலகால நஞ்சாம்
ஆர்எஸ்எஸ் கரவு புரியுமே!

தாய்மதம் திரும்ப அழைக்கும் தம்பிரான்கள்
இந்துவானால் எந்தசாதி இயம்புவாயா?
அய்ரோப்பா அரபு நாடுகளில் வந்தவரா?
இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள்
சமத்துவ மில்லா சனாதன அடுக்கில்
இந்துவாய் இருப்பதில் பயனென்ன?
சமத்துவ நோக்கில் சனாதனம் விலக்கி
இணைந்தார் கிருத்துவ இசுலாமிற்கே!

கவிஞர் இனியன், திருச்சி - 13

Read more: http://viduthalai.in/page7/98667.html#ixzz3VgDmoWM3

தமிழ் ஓவியா said...

திரு. மாளவியாவின் புரோகிதம்

பிரபல வருணாசிரம தரும வாதியாகிய பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண்ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதிகர் என்பது தெரியும்.

சூத்திரன் என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் அவன் இருபத்தொரு ஜென் மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிரா மணனாகப் பிறந்துதான் மோட்சம் பெறவேண்டும் என்ற பிராமணிய மதக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை யுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதிகர் என்பது அவரு டைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய வைதிக மாளவியா அவர்கள் அரசியல் சீர்த்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த தசாஸ்வமேதக் கூட்டத்தில் இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி மந்திரதீட்சை கொடுத்தாராம்! அப்போது 150 பேர்களுக்குமேல் 500 பேர்களுக்குள் அடங்கிய தீண்டாதார்களுக்குச் சமயதீட்சை கொடுத்தாராம்!

இவ்விஷயங்கள் பத்திரிகைகளிளெல்லாம் வெளி யாகியிருக்கின்றன. என்றுமில்லாமல் இப்பொழுது திடீரெனத் தீண்டாத வகுப்பினர்மேல் திரு.மாளவியா அவர்களுக்குக் கருணைபிறந்து சமயதீட்சை அளிக்கப் புறப்பட்டது எதற்காக? அவர்கள் இந்த உலகத்தி லிருந்து கொண்டு சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருணாசிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர்.

ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்ச லோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தின் பேரிலா? அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா? என்று கேட்கின்றோம். அல்லது தீண் டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர் களைத் தனியாகப் பிரிக்கக்கூடாது.

அவர்களுக்கும், அரசியல் சீர்திருத் தத்தில் பொதுத் தொகுதிதான் அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்க வில்லை. அவர்களுக்குவேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்று இந்துமகா சபைக்காரர்களும், காங்கிரஸ் காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாரா? என்று கேட்கின்றோம்.

இவ்வாறு சமய தீட்சை கொடுக்கப்பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு.மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக்கிறார்களா? என்றும் கேட்கிறோம். ஒரு நாளும் அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆகவே தீண்டாதார்களை ஏமாற்றும் பொருட்டுச் சமயத்திற்குத் தகுந்தபடி செய்யப்படும் ஒரு தந்திரந் தான் திரு. மாளவியா அவர்களால் செய்யப்பட்ட சமயதீட்சை என்பதை உணரவேண்டும்.

இவ்வாறு திரு. மாளவியா போன்றவர்கள், தீண்டா தார்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் புரோகிதங் களைக் கண்டு ஏமாறாமலிருக்குமாறு தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இந்துமத நம்பிக்கையும், இந்துமத வேதங்களில் நம்பிக்கையும் உள்ள எந்த இந்துக்களும்,

பிறப்பினால் எல்லோரும் சமம் என்பதை ஒத்துக் கொண்டு எல்லா வகுப்பினர்களுக்கும் சமத்துவம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். வீணாக யாரும், சமய தீட்சை, மந்திர தீட்சை என்ற பெயர்களைக் கேட்டு, வருணாசிரம தருமவாதிகளின் வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 13.03.1932

Read more: http://viduthalai.in/page7/98666.html#ixzz3VgE4Hspj

தமிழ் ஓவியா said...

திருடுவதிலும் வினோதம் - எச்சரிக்கை!

ஆக்ராவில் உள்ள அஜய் சர்மா என்ற ஆயத்த ஆடை வர்த்தகர் தன்னுடைய மோட்டர் சைக்கிளை விற்க பிரபல இணையதளத்தில் படத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்து பலர் வந்தனர். 22 வயது மிக்க கல்லூரி இளைஞர் போல் தோற்றமளித்த ஒருவர் அஜய் சர்மாவிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கூறினார்.

விலை எல்லாம் பேசி முடித்த பிறகு மோட்டர் சைக்கிளை ஓட்டிப்பார்த்துவிட்டு பணம் கொடுக்கிறேன் என்றுகூறியவுடன் நம்பிக் கையுடன் அஜய் சர்மா அவரது மோட்டர் சைக்கிளைத் தந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று விட்டார், நீண்ட நேரம் வரை காத்திருந்த அஜய் சர்மா அந்த இளைஞர் மீண்டும் வராததைக் கண்டு அவரின் அலைபேசியைத் தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தெரியவந்தது இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கொண்ட அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் தேடினார். ஆனால், அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்ற விபரம் தெரியவந்து, அவர் ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இணையதளத்தில் அந்த இளைஞர் போலியான முகவரி மற்றும் வேறு ஒருவரின் படத் தையும் கொடுத்து இருந்ததால் உடனடியாக அவரை அடையாளம் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page8/98671.html#ixzz3VgF69jKz

தமிழ் ஓவியா said...

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) புரட்சிகரமான சிந்தனைகளை அரங் கேற்றுவதுதானே பொருத்தமானது!

தலைவரை மதிக்கிறோம் என் றால் தலைவரின் கொள்கைளை மதிப்பதில்தான் அதனைக் காட்ட வேண்டும்.

தாலியைப்பற்றிய விவாதத் தையே நடத்தக் கூடாது என்று இந்துத்துவாவாதிகள் மிரட்டும் போது, வன்முறையை ஏவும்போது, கருத்துச் சுதந்திரம் என்ற அடிப் படையில் நோக்கினாலும் சரி, பெண் ணுரிமைப் பார்வையில் பார்த்தாலும் சரி, அதனை எதிர் கொண்டு முறி யடிப்பதுதான் முற்போக்குச் சிந்தனை - அதனை வீழ்த்துவதுதானே புரட்சி! அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியை அகற்றுவதா என்று சில அருமைத் தோழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமாம். அண்ணலின் பிறந்த நாளில்தான் அவரின் இந்தப் புரட்சி கரமான சிந்தனையைத்தான் செயல் படுத்த வேண்டும்.

தாலியைப்பற்றி அண்ணலின் கருத்து என்ன? இதோ பாபாசாகேப் பேசுகிறார். சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வரு மாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளி களின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது; வேறுபட்ட தன்மை யுடையது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாள னுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவ தற்காகத்தான் தாலி கட்டும் திரு மணம் என்னும் சடங்கு நடத்தப் படுகிறது என்று பொதுவாகக் கருதப் படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல் லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

இதற்கு விளக்கமும் வேண்டுமோ!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துக்கும், தகவலுக்கும் பிறகு இணையதளத்தில் விளையாடும் நமது அருமைத் தோழர்கள் தெளிவு பெறுவார்களாக!

இந்து மதக் கொடுமை என்ற தளையிலிருந்து பெண்களை விடுதலை பெறச் செய்யத்தான் அன்று சட்ட அமைச்சராகவிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நிறைவேற் றப்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அமைச்சர் பதவியைத் தலையைச்சுற்றித் தூக்கி எறிந்தார்.

இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொண்ட எவருக்கும் அவர் பிறந்த நாளில் அடிமைத்தளையாம் தாலியை அகற்றுவதன் அவசியமும், பெரு மையும் அருமையாகப் புரியும்.

ஒரு புரட்சியாளர் பிறந்த நாளில் இது போன்ற புரட்சிகரத்தை அரங்கேற்ற வேண்டுமே தவிர - புளியோதரை செய்வது எப்படி? பொரி உருண்டை செய்வது எப்படி? என்பதையா கற்றுத் தர முடியும்?

சிந்திப்பீர்!

இந்த செயல் வெற்றி பெற வீங்கு தோள் கொண்டு எழுவீர்! எழுவீர்!!

- கருஞ்சட்டை

குறிப்பு: பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் தாலி அறுக்கும் போராட்டம் என்று கொச்சைப்படுத்தும் சிறுமதிக் கூட்டத்திடம் எச்சரிக்கை யாக இருங்கள் தோழர்களே!!

Read more: http://viduthalai.in/e-paper/98721.html#ixzz3VgIUc8ug

தமிழ் ஓவியா said...

மோடி சம்பளம் வாங்காத பிசிசிஅய் விளம்பரத் தூதரா?

காலையில் வெற்றி பெற வாழ்த்து, நண்பகலில் நன்றாக பேட்டிங் செய்ய வாழ்த்து, மாலையில் தோற்றவுடன் மக்களுக்கு ஆறுதல்?! மோடி சமூக வலைதளத்தின் மூலம் இங்குள்ள கிரிக்கெட் கிளப்பிற்கு சம்பளம் வாங்காத பிராண்ட் அம் பாசிடர் போல் செயல் பட்டு வருகிறார். ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்றபோதும், காமன்வெல்த் போட்டி யில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய விளை யாட்டு வீராங்கனைகள் பதக்கம் வென்றபோதும் இது குறித்து பேசாத மோடி. கிரிக்கெட் போட்டி கள் ஆரம்பித்ததில் இருந்தே சமூகவலைதளத் தில் பிசிசிஅய்க்கு விளம் பரம் செய்தவாறே இருந்தார். பிசிசிஅய் என்ற தனியார் நிறுவனம் தனது விளையாட்டு வியாபா ரத்தை நடத்த ஒப்பந்த அடிப்படையில் சூதுவா தில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கட்ட ளைக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளை களத்தில் இறக்கி விட்டு வியாபாரம் பார்க்கிறது. கிரிக்கெட் விளையாட் டுப் போட்டிகள் தனியார் நிறுவனம் நடத்தும் மேற் படி சூதாட்டம், இதை பிசிசிஅய் நீதிமன்றத்தி லேயே கூறிவிட்டது, நேற்று மாத்திரம் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்த தாக இண்டெர்நேசனல் பிஸ்னஸ் டைம்ஸ் (லீஜீ://ஷ்ஷ்ஷ்.வீதீவீனீமீ.நீஷீ.வீஸீ/) என்னும் செய்தி நிறு வனம் செய்திவெளியிட் டுள்ளது. கடந்த வாரம் கூட 2007-ஆம் ஆண்டு நடந்த அய்.பி.எல் விளையாட் டில் சுமார் 500 கோடிக் கும் மேல் வரிஏய்ப்பு செய்ததாக பிசிசிஅய் மீது உச்சநீதிமன்றத்தில் வரு மானவரித்துறை மற்றும் சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது போன்ற நாட்டிற்கு வரிஏய்ப்பு செய்துவரும் அமைப்பைச் சேர்ந்த வணிகம் தொடர்பான விளையாட்டிற்கு மோடி வலிய வந்து வக்காலத்து வாங்குகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/98715.html#ixzz3VgIrEIaz

தமிழ் ஓவியா said...

மதம்படுத்தும்பாட்டைப் பாரீர்!

புனித(?) நதியில் மூழ்கி 10 இந்துப் பக்தர்கள் பலி!

டாக்கா, மார்ச் 28-_ வங்காளதேசம் முஸ்லிம் நாடாக இருந்தாலும், அதன் 16 கோடி மக்களில் 10 சதவீதம் பேர் இந் துக்கள் ஆவார்கள். அங்கு தலைநகர் டாக்காவில் இருந்து 25 கி.மீ. தெற்கே பழைய பிரம்மபுத்ரா நதிக்கரையில் லங்கல்பந்த் என்ற இந்து புனித தலம் உள்ளது.

அங்கு ஆண்டு தோறும் பங்குனி அஷ்ட மியின்போது, வங்காள தேசத்தில் இருந்து மட்டு மல்லாது இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கூடுவது வழக்கமாம். பிரம்மபுத்ரா வில் இந்த நாளில் நீராடி தெய்வ தரிசனம் செய்வது நல்லது என இந்துக்கள் கருதுகின்றனராம்.

இந்த ஆண்டும் வழக் கம் போல நேற்று அந்த நதியில் புனித நீராடுவ தற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அதற்காக 15 முனைகள் நீராடுவதற்கு ஏற்ற இடங் களாக அறிவிக்கப்பட் டிருந்தன. நேற்று காலை 5.45 மணிக்கு நீராடல் தொடங்கியது.

சுமார் 9 மணிக்கு புனித நீராடுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது நதியில் புனித நீராடுவ தற்கு பக்தர்கள் ஒருவருக் கொருவர் முந்திச்செல்ல முற்பட்டபோது நெரிசல் ஏற்பட்டது. பலர் கீழே விழுந்தனர். ஒருவரை ஒருவர் மிதித்து செல்லும் நிலை உருவானது.

இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள். 30 பக்தர் கள் படுகாயம் அடைந் தனர். அவர்கள் உடனடி யாக மீட்கப்பட்டு அரு கில் உள்ள மருத்துவம னைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்த தக வல் அறிந்ததும் நாராயண் கஞ்ச் காவல்துறை கண் காணிப்பாளர் கண்டகர் மத் உதீன், டி.அய்.ஜி., முகமது சபீக், கூடுதல் டி.அய்.ஜி. பரூக் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், அவர் களை ஒழுங்குபடுத்தி நீராடுவதற்கு உதவும் வகையில் தேவையான எண்ணிக்கையில் காவல் துறையினரும் தன்னார்வ தொண்டர்களும் பணி அமர்த்தப்படவில்லை என பக்தர்கள் கூறினர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாக அதிகாரி அனிசுர் ரகுமான் கூறும்போது, இந்த ஆண்டு வங்காளதேச தேசிய தினத்தை முன் னிட்டு விடுமுறை விடப் பட்டிருந்ததால், வழக் கத்தை விட கூட்டம் அதிகமாக கூடியது. அத னால்தான் இந்த அள வுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டது என கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளார்.

மத விழாவில் மதம் பிடித்த யானையால் பாகன் பலி!

கேரள மாநிலம் திருச் சூரில் உள்ளது கையப்ப மங்களம். இங் குள்ள சலியன்கோவில் என்ற இடத்தில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திரு விழா நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை பட்டங்கட்டிய யானைகள் ஊர்வலமாக சென்றன. இதில் 1000க்கும் மேற் பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயகிருஷ் ணன் என்ற யானையும் பட்டம் கட்டி ஊர்வல மாக வந்தது. இதன் பாகனாக சிவசங்கரன் (வயது 51) இருந்தார்.

ஊர்வலம் கோவில் அருகே வந்தபோது விஜய கிருஷ்ணன் யானைக்கு மதம் பிடித்தது. பக்தர் களை யானை ஆவேசமாக தாக்க முயன்றது. பக்தர் கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பக்தர்களை காப்பாற்ற சிவசங்கரன் யானையின் அருகே சென்று அடக்க முயன்றார். ஆவேசத்தில் இருந்த யானை பாகன் சிவசங்கரனை தந்தத்தால் குத்தி எறிந்தது. இருந்தா லும் பாகன் மீண்டும் யானையை அடக்க முயன் றார். இதில் ஆத்திர மடைந்த யானை சிவசங் கரனை துதிக்கையால் பிடித்து சுழற்றி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் பாகன் சிவசங்கரனுக்கு நெஞ்சு பிளந்தது.

ரத்தவெள்ளத்தில் சிவசங்கரன் உயிருக்கு போராடினார். அங்கிருந்த கையப்பமங்களம் காவல் துறையினர் சிவசங்கரனை ஜீப்பில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். அங்கு போதிய மருத் துவ வசதி இல்லாததால் திருச்சூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பல னின்றி சிவசங்கரன் பரிதாபமாக இறந்தார்.

யானைக்கு மதம் பிடித்தது குறித்து திருச்சூர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அவர்கள் மயக்க ஊசி செலுத்தி யானை விஜயகிருஷ்ணனை சங் கிலியால் கட்டிப்போட்ட னர். இதுகுறித்து கையப் பமங்களம் காவல்துறை யில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சேர்த்திடுக!

செய்தி: பால் விலை உயர் வால் ஏழைகள் பாதிக்கப் படவில்லை.
- முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சிந்தனை: இரு முறை மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை; போக்குவரத்துக் கட்டண உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை என் பனவற்றையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98712.html#ixzz3VgJM1HoX

தமிழ் ஓவியா said...

தலைகுனியத்தக்கது!

இந்துமதம் என்ற பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் - வளர்க்கும் ஓர் அமைப்பில் தாழ்த்தப்பட் டவர்கள் நிலைமை என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த ஜாதி அமைப்பு முறையில் அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளபடி (Graded Inequality) இந்த ஏணிப்படி ஜாதி அமைப்பு முறையால் தாழ்த்தப்பட்ட வர்களும் அவர்களை அடுத்து மேலே இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களும் மோதிக் கொள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் திண்ணியூரில் தாழ்த்தப்பட்ட தோழர் வாயில் மலம் திணிக்கப்பட்டதும், தற்போது கிருட்டினகிரியை அடுத்த வீராச்சிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கருவானூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் அரவிந்தன் வாயில் சிறுநீர் கழிக்கப் பட்டதுமாகும்.

என்ன காரணம் சொல்லப்பட்டாலும் இந்தக் கொடுமையை ஏற்கவே முடியாது.

இத்தகு கொடுமை இனி ஒரு போதும் நடந்திட அனுமதிக்கக் கூடாது! இந்த அருவருப்பான செயல் நடைபெற்றதற்காக தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வெட்கப்பட்டே தீர வேண்டும்.

இது ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினை என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும் கூடாது. அவர்கள் இந்தச் சமூகத்தின் முக்கிய அங்கமாகும்.

பெங்களூரில் பணியாற்றும் அந்தத் தோழர் நவீன கைப்பேசியை வைத்திருந்தார் என்பதற்காக, அதனைப் பொறுக்க இயலாத ஜாதி வெறியர்கள் இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயர் ஜாதிக்காரர்களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி! என்று கூனிக் குறுகி நிற்க வேண்டும் என்று இன்றைக்கும் எதிர்பார்க்கிறார்களா!?

இதுபோன்ற கொடுஞ்செயல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பி.சி.ஆர். சட்டம் ஒரு தலைபட்சமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று சொல் கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் எண் ணத்தில் ஜாதிவெறி நஞ்சு ஊறி நிற்பதாகத்தான் கருதப்பட வேண்டும்.

இந்தச் சட்டம் சரிவர செயல்பட்டு இருந்தால், இத்தகு குற்றங்கள் அருகிப் போயிருக்க வாய்ப்புண்டு. சட்டம் இருக்கிறதே தவிர, அதனைத் தேவையான இடத்தில் ஒழுங்காகச் செயல்படுத்தத் தவறியதும் இதுபோன்ற அருவருப்பான மனித உரிமைக்கு எதிரான செயல்கள் தொடர்வதற்கும் காரணமாகும்.

கீழ வெண்மணியில் 42 தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட பொழுது, மருத்துவ மனையில் இருந்த தந்தை பெரியார் வெகுண்டெழுந்து

இந்தக் கொடுமைகளையும், இது போன்ற அராஜகங்களையும், சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இந்தி யாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை. இதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை (விடுதலை 28.12.1968) என்று தந்தை பெரியார் ஆழமான கருத்தினை வெளியிட்டார். இந்த அளவுக்கு அழுத்தமான கருத்தினை யாரும் தெரிவிக்கவில்லை.

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டபோது அந்தப் பகுதி களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் கருஞ் சட்டைத் தோழர்கள் திரண்டு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளையும் செய்ததோடு, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து தருமபுரியில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தியது திராவிடர் கழகமே!

சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் அவசியம் தேவைப்படுகிறது.

சில கட்சிகள் அரசியல் அபிலாஷைகள் காரணமாக ஜாதிக் கட்சிகளை ஒன்றிணைத்து, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதாரின் கூட்டணியை அமைத்தது மன்னிக்கப் பட முடியாத ஒன்றாகும். (அது வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்!)

அந்த முடிவையும் கடுமையாக விமர்சித்தது திராவிடர் கழகமே! இந்த ஜாதி ஒழிப்புத் திசையில் தந்தை பெரியார் அறிவித்த - திராவிடர் கழகம் கையில் எடுத்துக் கொண்டுள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற பிரச்சினை செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த ஜாதி நம்பிக்கையின் தலைமீது பேரிடி தாக்கி, ஜாதியின் ஆணி வேர்கள், பக்க வேர்கள் வரை பொசுங்கிப் போய் விடும் என்பதில் அய்ய மில்லை. சங்கரமடத்திலும் சங்கராச்சாரியராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வர வேண்டும்.

மூலபலத்தோடு போர்ப் புரிய வேண்டும் - அந்த மூலத்தை அழிக்காத வரை ஜாதி வெறி அதன் தீய குணாம்சத்தோடு ஆட்டம் போடத்தான் செய்யும் என்றாலும் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியே தீர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

Read more: http://viduthalai.in/page-2/98700.html#ixzz3VgJbT3NX

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98697.html#ixzz3VgJpWi6g

தமிழ் ஓவியா said...

ஊழியர்களை மிரட்டி இந்தித் திணிப்பா?

சென்னை, மார்ச் 28_ சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியா ழனன்று நிறுவனங்கள் விவகாரத் துறைஇந்தி நாள் கொண்டாடி யிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14 அன்று தான் இந்தி நாள் கொண் டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தத்துறை, செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண் டாடியிருக்கிறது. அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச் சகத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கே.பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார்.

இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாடவேண்டும் என்றும், இந்திதெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.இதை தமிழ்மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பது டன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன் படுத்தப்படுவதை தடைசெய்யவேண்டும் என்று அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள் ளார்.

சட்டம் சொல்வது என்ன?

இந்திய அரசியல்சாசனம் இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழி என்று கூறவில்லை. மாறாக ஆங்கிலத்தையும் அது ஏற்கிறது. அது மட்டும் போதாது, அனைத்துத் தேசிய இனங்களின் மொழியையும் இந்தியா வின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை இப்போது இந்தியா முழுவதிலும் வந்துகொண்டிருக்கிறது. அதை விட முக்கியமாக, இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம்1-1963இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் விதிமுறைகள் 1976 மிகத் தெளிவாகவே இந்தி அலுவல் மொழி என்பது தமிழகத்துக்குப் பொருந்தாது என்று வரையறுத்திருக்கிறது.

அதாவது இந்தி அலுவல் மொழி யாக பயன்படும் இடங்கள் எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இந்தி அவ் வாறாக பயன்படுத்தப்படவேண்டிய தில்லை என்பதே அந்தச் சட்டத்தின் கருத்தாகும்.இன்னும் தெளிவாக, எந்தெந்த அமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தால் அவற்றுக்குப் பொருந்தாது என்பதும் சட்ட விதிகளில் வரையறுக் கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் ஒரு ஆணையம், குழு, தீர்ப்பாயம், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற தொழில் நிறுவனம் ஆகிய அனைத் துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

நன்றி: தீக்கதிர் 28.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98704.html#ixzz3VgJy4sib

தமிழ் ஓவியா said...

தாஜ்மகால் யாருக்குச் சொந்தம்? இந்துத்துவாவாதிகளுக்கு மூக்குடைப்பு!


லக்னோ, மார்ச் 28- உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்ம ஹாலை முன்னாள் சிவன் கோயில் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத் தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் மேலும் அய்வர், நேற்று மனு ஒன் றினை தாக்கல் செய்திருந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்ன தாக அந்த இடத்தில் அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் கடவுளுக்கு அர்ப் பணிக்கப்பட்ட பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களி டம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன என அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாக தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர், இந்த கோரிக்கை தொடர் பாக அலகாபாத் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/98705.html#ixzz3VgKAxQfq

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு
புகார்களைப் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 28_ பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.

மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உள்ளிட்ட 69 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் இவ்வாறு உத்தரவிட்டார். காவல் நிலையங்களில் தாங்கள் அளித்த புகார் கள் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தர விட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந் தனர்.

இம்மனுக்களை விசா ரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: புகார்களில் கூறப்படும் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கத் தகுந்ததாக இருந்தால் காவல்துறை யினர் உடனடியாக வழக் குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இருப்பினும் காவல்துறையினர் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வது கவலையளிக் கிறது. புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது புகார்தாருக்கும் வழக்கு விசாரணையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மைகளைத் திரித்து வழக்குப்பதிவு செய்வது, சாதாரண குற்றங்களை கடுமையான குற்றங்களாகவும், கடுமை யான குற்றங்களை சாதா ரண குற்றங்களாகவும் மாற்றுவது போன்ற தவ றுகளில் காவல்துறையி னர் ஈடுபடுவதாகத் தெரி கிறது. இந்திய அளவில் காவல்துறையிடம் அளிக் கப்படும் புகார்களில் பாதி யளவு பதிவு செய்யப்படு வதில்லை என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே கீழ்க்கண்ட பரிந்துரைகளை காவல் துறைக்கு அளிக்கிறோம். புகாரில் கூறப்படும் குற் றம் வெளிப்படையாகப் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரியாத போது, விசாரணை நடத்தி சம்பவம் நடந்துள் ளதா எனக் கண்டறிய வேண்டும்.

முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென் றால் வழக்கை முடிக்க வேண்டும். வழக்கு முடிக் கப்பட்டது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் புகார்தாரரிடம் ஒரு வார காலத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த கடமையில் இருந்து தவறும் காவல் துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீதான விசா ரணை முடித்து வைக்கப் பட்டது.

நீதிபதி தனது உத் தரவில், குடும்பத்தகராறு, வணிக ரீதியான குற்றங் கள், மருத்துவ சிகிச்சை யில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக அளிக் கப்படும் புகார் ஆகியவற் றில் முதற்கட்ட விசா ரணை நடத்தப்பட வேண் டும். விசாரணையை 7 நாள்களில் முடிக்க வேண் டும். விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து டைரியில் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் அனைத்தையும் பொது டைரி, நிலைய டைரி, தினசரி டைரி ஆகியவற்றில் எழுத வேண்டும்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு விழிப் புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் தவறிழைக்கும் காவல் துறையினரைக் கண் காணிக்க குழு அமைக்க வேண்டும்.

தவறு கண்டுபிடிக்கப் பட்டால் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98690.html#ixzz3VgLpQB8n

தமிழ் ஓவியா said...

கேள்வியும் பதிலும்

- சித்திரபுத்திரன் -

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படு கின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப் போகாது.

அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாகவேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgLzS3qe

தமிழ் ஓவியா said...

குடிஅரசுக்குப் பாணம்

குடிஅரசு பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுரகர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும்,

இருக் கின்றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையில் இப்படிச் செய்யாமல் விட்டு வைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.

முதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங் கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொருவாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசய மேயாகும்.

குடிஅரசு தோன்றி இந்த 8 1/2 வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளைக் கண்ணாடி போல் வெளிப் படுத்தும் தொண்டை பிரதான மாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக்காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

சிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பது போல் குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடிய வில்லை யானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரி யன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுர கர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் குடிஅரசு மறைவதில் அதிகக் கவலையி ருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது.

மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணி னோம். இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின் றனவோ பார்ப்போம்.

நிற்க இதன் பயனாய் குடி அரசின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவதுயாரும் பயப்பட வேண்டியதில்லை. நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றி விட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது.

குடி அரசோ சுயமரியாதைக்காரரோதான் கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. குடிஅரசும் சு.ம.காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக்கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக்கொள்கையைச் சொல்லவும், பிரச்சாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விவரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 12.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgMATHjv

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைச் சுடரொளி
சுயமரியாதை இயக்க திராவிடர் கழக தளபதியான
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின்
நினைவு நாள் இன்று (1949)

இளைஞர்களே, அழகிரி பேசுகிறார் கேளுங்கள்

பெரியார் அவர்களை நான் ஏறக்குறைய 30 வருடங்களாக அறிந்திருக்கிறேன். நெருங்கிப் பழகி இருக்கிறேன். என்றாலும், அவரது நம்பிக்கைக்கு இன்றுவரை நான் பாத்திரம் ஆனேனில்லை. கொள்கையைப் பொறுத்தா? இல்லை. இயக்கத்தைப் பொறுத்தா? இல்லை. பின் எதைப் பொறுத்து என்னிடம் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை? என்னுடைய சொந்த நிலையைப் பொறுத்துத்தான்.

அவர் போடும் காகிதத்துக்குக்கூடச் சரியாகப் பதில் அனுப்பியிருக்கமாட்டேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுத்துவிட்டாரா? இல்லை. அதுதான் அவரிடமுள்ள சிறப்பான பண்பு. தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.

பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும், செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டுவிடுவார். ஆனால், இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சிறிது தவறு செய்துவிட்டாலும், உளம் பொறார். சுலபத்தில் ஆத்திரம் கொள்வார்.

தயைதாட்சண்யமின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள், போக்கிரி, சோம்பேறிப் பயல் என்றெல்லாம்கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப் பற்றுதல் தான் இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக் கொண்டு நமது இளைஞர்களை பெரியார் வாழ்க வாழ்க என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படி தூண்டுகிறது.

குறிப்பு: இன்றைக்கு 68 ஆண்டுகளுக்குமுன் திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், அஞ்சாநெஞ்சன் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. (இதோ பெரியாரில் பெரியார் என்ற இயக்க வெளியீட்டை வாங்கிப் படியுங்கள்!).

Read more: http://viduthalai.in/page-4/98728.html#ixzz3VgMmYaLd

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி என்பது வடமொழி. இதற்கு ஏற்ற சொல் தமிழில் இல்லை. எனவே, ஜாதி என்பது தமிழரிடை முன்பு இருந்த தில்லை. தமிழர்களுக்குள் ஜாதி என்பது இருந்து இருக்கு மானால் அதற்குத் தமிழில் ஒரு சொல் இருந்து இருக்க வேண் டுமே? இல்லையே! எப்படி காபி என்பது அன்னிய நாட்டுப் பொருளானதால் அதற்குத் தமிழில் சொல் இல்லையோ அதுபோல் ஜாதி என்பதற்கும் சொல் இல்லை.

ஆரிய எதிர்ப்புணர்ச்சியும் அவர்கள் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வும் இந்தியாவிலேயே தமிழன் என்கிறவனுக்குத் தான். தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது... நம்முடைய கலை, சிற்பம் என்பது நாம் எவ்வளவு நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைப் பெற்று அந்தக் காலத்திலேயே நாம் எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டும். இந்தியாவின் மற்றெந்தப் பகுதியிலும் இப்படிப்பட்ட உயர்ந்த அறிவும் சக்தியும் அந்தக் காலத்தில் இருந்ததாகவே தெரியவில்லை.


Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgNEsEt1

தமிழ் ஓவியா said...

தமிழர் சமுதாயம் 100-க்கு 100 மக்கள் படித்தவர்களாக வேண்டும்; ஆக்கப்பட வேண்டும். பத்தாண்டு களிலாவது தமிழன் சமுதாயம் ஆணும் பெண்ணும் தன் ஜனத் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அரசியல், தொழிலியல் முதலிய சகல துறைகளிலும் விகிதாச்சாரம் பதவி - இடம்பெற வேண்டும். தமிழனைப் பற்றிய வேறு எந்தக் காரியத்தைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgNmsOHI

தமிழ் ஓவியா said...

மதம் தேவை இல்லை 110 ஆண்டு கால கிறித்துவ சர்ச் ஹோட்டல் ஆகிறது


நியூயார்க், மார்ச்.29_ நியூயார்ககில் 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கிறித்தவர்களின் நினைவுச் சின்னமாக விளங்கிவரும் சர்ச் தற்போது விடுதியாக மாற்றப்படுகிறது. மேற்கு 36ஆவது தெரு, எட்டு மற்றும் ஒன்பதாவது நிழற்சாலைகளைப் பகுதியில் உள்ள அந்த சர்சை இடித்துவிட்டு, மெக் சாம் என்கிற விடுதிக் குழுமத்தின் சார்பில் 20 அடுக்குகள், 406 அறைகள் கொண்டுள்ள புதிய விடு தியை அமைக்க உள்ளது. பிராட்டஸ்டன்ட் கிறித்த வர்கள் வழிபட்டுவந்த சர்ச் பகுதிக்குள் 1975 ஆம் ஆண்டுவரையிலும் சர்ச், சமுதாயக் கூடம் மற்றும் அரங்குகள் செயல்பட்டு வந்துள்ளன. மன நல மருத் துவத்துறை பட்ட மேற் படிப்புக்கான பகுதி இயங்கிவந்தது. 50.8 மில்லியன் டாலர் மதிப்பில் கடந்த ஆண்டில் அதை மாற்றுவதற்காக விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா லும், அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டு வதற்கான அனுமதி கிடப் பில் இருந்தது. ஆய்வா ளர்கள் குறிப்பிடும்போது, நூற்றாண்டு கால பழமை வாய்ந்த சர்ச் முடிவுக்கு வருகிறது என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/98752.html#ixzz3VlyKVzBD