பெண்கள் சமையல் செய்யக் கூடாது
தாய்மார்களே! பெரியோர்களே! மண மக்களின் பெற்றோர்களே! தோழர்களே!
இந்நிகழ்ச்சியானது இதுவரை நம்மில் கல்யாணம் - விவாகம் - முகூர்த்தம் என்னும் பெயரால் நடைபெற்றுப் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவும், சொத்துகளாகவும் ஆக்கப்பட்டு வந்திருக்கிறது.
பிறகுதான் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ஆண்களும் பகுத்தறிவு பெற்றுச் சிறந்த வாழ்வு வாழ வேண்டுமெனக் கருதிப் பழைய முறையினை மாற்றி, வாழ்க்கை ஒப்பந்த விழா என்னும் பெயரால் இம்முறையினைத் தோற்றுவித்து இதன்படி நடத்திக் கொண்டு வருகின்றோம். இம்முறையானது கடவுள், மத, சாஸ்திரங்களின் மீதுள்ள வெறுப்பாலோ, சிறுபான்மையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களின் மீது வெறுப்புக் கொண்டோ இந்த நிகழ்ச்சி முறை செய்யப்படுவது கிடையாது. சிலர் பார்ப்பனர்களின் மீது கொண்ட துவேஷத்தால் இது துவக்கப்பட்டது என்று நினைத்துப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அது தவறான பிரசாரமாகும்.
இது பெண்களின் விடுதலையைக் கருதியே ஏற்பாடு செய்து துவக்கப்பட்டதாகும்.
இந்நிகழ்ச்சிக்குச் சுயமரியாதைத் திருமணம் என்று பெயர் வரவேண்டிய அவசியம் என்னவென்றால், இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், மான உணர்ச்சி, சமத்துவம் அளிக்கப்படுகின்றன. ஆண்களுக்குப் பகுத்தறிவு இல்லை. இதன் மூலம் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அறிவைப் பயன்படுத்தாமலிருப்பதற்குக் காரணம் மானம், மரியாதை இல்லாதது தான். அதுபோலவே பெண்களும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று அறிவற்று மானம் மரியாதையற்றிருந்தார்கள். இந்த இருபாலரிடமும் இருந்து வந்த அறிவற்ற தன்மை - மானம் மரியாதை அற்ற தன்மையை நீக்குவதால் தான் இந்நிகழ்ச்சியை சுயமரியாதைத் திருமணம் என்கிறோம்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறியால் தான் வித்தியாசமே தவிர, மற்றப்படி அறிவு, வலிவு, பிறப்பு இவற்றில் எல்லாம் இருவரும் சமமானவர்களே ஆவார்கள். மனித சமுதாயத்தில் சோறு சமைப்பதற்கும், வீட்டு வேலைகளை செய்வதற்கும், குட்டி போடுவதற்கும், தன் புருஷனுக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்வதற்கும், என்றாக்கி அவர்களைக் கல்வி கற்காமலும் வைப்பதே இதுவரை இருந்த முறைகளாகும்.
இந்நிகழ்ச்சியானது இதுவரை சட்ட சம்மதமில்லாத நிகழ்ச்சியாக இருந்து வந்தது என்றாலும், மக்களிடையே பல்லாயிரக்கணக்கில் நடைபெற்று வந்து கொண்டுதானிருந்தது. இவற்றில் சில வழக்கு மன்றங்கள் சென்று இது செல்லுபடியாகாத திருமணம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதும், மக்கள் அதனைப் பற்றி இலட்சியம் செய்யாமல் பலப்பல திருமணங்களை இம்முறையில் நடத்தியே வந்திருக்கின்றனர். இப்போது அமைந்துள்ள (தி.மு.க) ஆட்சியானது மக்கள் ஆட்சியானதாலும், பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதாலும் இம்முறையைச் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டம் செய்து விட்டார்கள்.
இதற்கு முன்னும் இதுபோன்ற முறையில் தான் அரசாங்கத்தால் பதிவுத் திருமணம் என்கிற பெயரால் திருமணம் நடந்து கொண்டிருந்தது. பதிவுத் திருமணத்தில் திருமணம் செய்து கொள்கிற ஆணும், பெண்ணும் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் போய், 'நான் இவரை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன்' என்று பெண்ணும், 'நான் இப்பெண்ணை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று ஆணும் உறுதி கூறிக் கையொப்பமிடுவார்கள். இம்முறையாவது கணவன், மனைவி என்பதை வலியுறுத்தக் கூடியதே ஆகும்.
ஆனால், நாம் செய்கின்ற இம்முறையில் கணவன் - மனைவி என்பது கிடையாது. இருவருக்கும் சமஅந்தஸ்துள்ள நண்பர்கள் என்பதை வலியுறுத்துகிறோம். இதில் ஒருவருக்கொருவர் அடிமை என்கின்ற தன்மை இல்லை.
நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன் ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்பவனாவேன்.
புலவர் அவர்கள் நேற்று, சுமார் அய்ந்து ஆண்டுகளுக்கு முன் நம் கண் முன்னிருந்த பாரதிதாசன் அவர்களின் கதையை எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்கும்போது எனக்கே மிக ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு தெளிவாக உண்மையை எடுத்துக் கூறி இருக்கிறார். நமக்கு என்னென்ன தேவை என்பதை எடுத்து விளக்கி இருக்கிறார். இதையெல்லாம் நம் மக்கள் படித்துத் தெளிவடைய வேண்டும். நம் உண்மை நிலையை உணர வேண்டும், திருந்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?
அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சியடைந்து விட்டது.
தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரர் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?
100-வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.
அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கியபின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று!
நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.
பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான். நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான். கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத்திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.
இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடியவில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!
அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.
இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல் மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான் நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!
தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும். பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150-வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40-ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.
பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டம் கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.
இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21-வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.
தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.
பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.
இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுலபமானதாகும்.
நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.
மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருகின்றார்.
வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசைமொழிகளுக்கு என்ன பலனோ அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும். அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.
இறுதியாகக் குழந்தைகள் அதிகம் பெறுவது பெரும் கேடாகும். இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசாங்கமே இதனை உணர்ந்து, பல திட்டங்களைப் போட்டு அதிகக் குழந்தைகள் பெறாமல் தடுக்க மருத்துவ வசதிகள் செய்திருக்கின்றது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகக் குழந்தைகள் பெறுவதுதான் அவன் தன்னையும் தியாகம் செய்து, தனது மனைவியையும் தியாகம் செய்து ஒழுக்கக் கேடான காரியங்களிலும் ஈடுபடச் செய்கிறது. ஓரளவாவது சுதந்திரத்தோடு, பிறர் கையை எதிர்பார்க்காமல், கவலையற்று வாழ வேண்டுமானால் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது.
இதைவிட இன்னும் பகுத்தறிவாளர்கள் ஆட்சி வந்தால், அரசாங்கமே குழந்தை வளர்ப்தைத் தானே ஏற்றுக் கொள்ளும். ரஷ்யா போன்ற நாடுகளில் அரசாங்கமே குழந்தைகளை வளர்க்கின்றன. நல்ல சுகாதாரத்தோடு 15-வயது வரை வளர்கின்றன.
நான் போய்க் குழந்தைகள் விடுதியைப் பார்க்கப் போன போது, எனது காலில் இருந்த பூட்சைக் கழற்றி விட்டு, அவர்கள் ஒரு பூட்சு கொடுத்தார்கள். என் உடையின் மேல் ஓர் அங்கியை அணிவித்தார்கள். கைகளுக்கு உறை மாட்டினார்கள்.
அதன் பின்தான் விடுதிக்குள் அனுமதித்தார்கள். உள்ளே போனதும் குழந்தைகளைத் தொடக் கூடாது. பார்த்துச் சிரிக்கலாம் என்று சொன்னார்கள். எனக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் தாய், தகப்பனாக இருந்தாலும் இப்படித்தான்! இதனால் நோய்க் கிருமிகள் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கின்றனர்.
தாய், தகப்பனை விட விஞ்ஞானத்தோடு குழந்தைகளை வளர்க்கின்றனர். அதனால் மக்கள் கவலையற்ற வாழ்வு வாழ்கின்றனர்.
நம்மால் குழந்தைகளை அவ்வளவு நல்ல முறையில் வளர்க்க முடியாது. அவ்வளவு ஆரோக்கியத்தோடு வளர்க்கின்றார்கள்.
மேலும் மணமக்கள் மூட நம்பிக்கையான கோயில் - குளம் - பண்டிகை - உற்சவம் இவற்றுக்குச் செல்லக் கூடாது. மிருக உணர்ச்சியைத் தூண்டும் சினிமாவிற்குச் செல்லக் கூடாது. வேண்டுமானால், கண்காட்சிகளுக்குச் சென்று பெரிய பெரிய இயந்திரங்கள் வேலை செய்யும் நெய்வேலி போன்ற நகரங்களுக்குச் சென்று அவை எப்படி வேலை செய்கின்றன என்பதையெல்லாம் பார்த்துத் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
-------------------------09.02.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 20.02.1968
33 comments:
இன்றைய ஆன்மிகம்?
ஹோமம்
கேள்வி: என் மனைவி இரண்டரை வருடமாக ருமடாய்டு ஆர்தரைடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின் றாள். எவ்வளவு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. ஏதா வது பரிகாரம் சொல் லுங்கள்.
பதில்: வீட்டில் ஆயுஷ் ஹோமம் மற்றும் பஞ்சகத்தி ஹோமம் செய்து நலம் பெறலாம்.
- கல்கி இதழில் காழியூர் நாராயணன்
குணமாகாவிட்டால் சோதிடர்மீது வழக்குப் போடலாமா? மக்களை மடமையில் ஆழ்த்துவது தான் ஆன்மீகமோ!
Read more: http://viduthalai.in/e-paper/98375.html#ixzz3VD1eey4G
காவிக் கூட்டத்தின் வன்முறை கைவரிசை
மகாராஷ்டிராவில் 300 ஆண்டு பழைமையான தேவாலயம் தாக்கப்பட்டது
பன்வேல்(மகாராஷ்டிரா) மார்ச் 23 நவி மும்பையில் 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. டில்லி, ஹரி யானா, மத்தியபிரதே சத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் காவிகளின் கைவண்ணம் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தேவாலயம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அன்று இரவு நவிமும்பை யில் உள்ள தேவாலயம் ஒன்றும் தாக்குதலுக்கு ஆளானது.
நவிமும்பையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்டது. நவிமும் பையில் முதல்முதலாக பள்ளிக்கூடம் ஒன்றும் இந்த தேவாலயத்தின் நிர்வாகத்தினரால் கட்டப் பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் கல்லூரியாக மாற்றப்பட்ட இந்த தேவாலயத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவ னங்கள் இயங்கி வருகின் றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனைக்காக காலை யில் தேவாலயத்திற்கு வந்தவர்கள் தேவாலயத் தின் வெளிப்புறமுள்ள சிலைகள் உடைந்து கிடப் பதையும் பல இடங்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதற்கான அடை யாளங்களைக் கண்டனர். உடனடியாக இவ்விவ காரம் குறித்து பன்வேல் காண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. இந்த தாக் குதல் குறித்து மாநில கிறிஸ்தவ சிறுபான்மை யினர் அமைப்பின் தலை வர் ஆபிரகாம் மாத்யூ கூறும்போது இந்தப் பகுதியில் உள்ள சில இந்து அமைப்பைச் சேர்ந் தவர்கள் கடந்த சில நாட் களாகவே தேவாலயத் திற்கு வரும் கிறிஸ்தவர் களை அவதூறாக பேசு வதும், மிரட்டுவதுமாக தொடர்ந்தது, இது குறித்து அரசுக்கு எழுத்து மூலமாகவும் புகார் அளித் துள்ளோம். அதே நேரத் தில் காவல்துறையிலும் பல கிறிஸ்தவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் கற்களை தேவாலயத்தின் மீது வீசியுள்ளனர். இதில் தேவாலயத்தின் வாயிலில் வைத்துள்ள செயின்ட் ஜார்ஜ் உருவச்சிலை சேதமடைந்துள்ளது,
புனிதநூல் வைக்கப்படும் பீடத்தில் உள்ள கண்ணா டிகளை உடைத்துள் ளனர். மேலும் கதவின் மேல் உள்ள பரிசுத்த மாதா சிலையின் கண் ணாடிகளையும் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். இது திட்டமிட்ட தாக் குதலே ஆகும். திடீரென இந்த தாக்குதல் நடக்க வில்லை. இந்தப்பகுதியில் உள்ள 4 தலைமுறை மக் களுக்கு மதம் இனம் பாராமல் கல்விபோதித்த எங்கள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த எப்படித்தான் இவர் களுக்கு மனம் வந்ததோ என்று கூறினார். இச்சமபவம் குறித்து பன்வேல் நகர காவல் துறை இணை ஆணையர் சூரியவன்சி கூறும்போது இந்த விவகாரம் தொடர் பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விரை வில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
Read more: http://viduthalai.in/e-paper/98371.html#ixzz3VD1oJoPZ
பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறியவர் பெரியார்
உயர்நீதிமன்ற நீதிபதி உரை
தஞ்சாவூர், மார்ச்.23 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் நாள் கருத்தரங்கு நடந் தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அங்கயற் கண்ணி தலைமை தாங் கினார். பல்கலைக் கழக இசைத்துறை உதவி பேரா சிரியை மாதவி வரவேற்றார்.
கருத்தரங்கில் பெண் ணிய மஞ்சரி என்ற நூலை வெளியிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி து.அரி பரந்தாமன் பேசும்போது கூறியதாவது:
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக மகளிர் நாள் பெண் விடுதலைக்காக அனுசரிக் கப்படுகிறது.
பண்டைய காலத்தில் பெண்கள் சரி சமமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்து சொத்துக்கு வாரிசு என்ற நிலை உருவானபோது, பெண்கள் பொருளாகவும், பின்னாளில் வெறும் இயந்திரமாகவும் கருதப் பட்டு அடிமைப்படுத்தப் பட்டனர்.
இந்த அடிமைத்தனம் நம்முடைய நில உடைமை சமூகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அடி மைத் தனத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கப் படுகிறது. இந்த அடிமை முறையைப் பெண்களும் அக்காலத்தில் ஏற்றனர். இதனால், பெண்கள் பொருளாகப் பார்க்கப்பட் டதுடன், பாலியல் இயந் திரமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டனர். மன்னர்கள் காலத்தில் உடன் கட்டை ஏறுதல், இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.
உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார்
கடந்த நூற்றாண்டில் தொழில், விஞ்ஞான, சமூக வளர்ச்சி அடைந்த நிலை யில் பெண் விடுதலைக்கும் குரல் எழுப்பப்பட்டது. பெண் விடுதலைக்காகப் பல பேர் குரல் கொடுத் தாலும், உறுதியாகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். மற்ற அடிமைத் தனங்களை விட பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு செயல் எனக் கூறினார் பெரியார்.
இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு முதல் மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றாலும், பெண்களுக்கு இன்னும் சம அளவு உரிமை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும், ஆட்சி முறையில் சம அளவு பங்கு பெறவில்லை. உதா ரணமாக உச்சநீதிமன் றத்தில் உள்ள 31 நீதிபதி களில் ஒரு பெண் மட் டுமே உள்ளார். உயர் நீதி மன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 3 பேர் மட் டுமே பெண்கள்.
இந்த நிலைமை மாற இதுபோன்ற கருத்தரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்று சிந்தனை உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/e-paper/98373.html#ixzz3VD1x7Tyy
முயற்சிக்க வேண்டும்
தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)
Read more: http://viduthalai.in/page-2/98378.html#ixzz3VD2IBv25
மார்ச் 23: இன்று உலக வானிலை தினம்
சென்னை, மார்ச் 23- வானிலை மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' தண்ணீருக்காக இருக்கும்' என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக வானிலை தினம், மார்ச் 23 இல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தினத்தில் மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்து வலியுறுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இவ்வாண்டு, வானிலையை அறிவோம், செயல்படுவோம்! எனும் கருத்தை மய்யமாக வைத்து கொண்டாடப்படுகிறது.அதாவது, கடந்த கால வானிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். வருங்கால சந்ததியினரை பாதுகாப்போம் என்பதே இதன் சாராம்சம். விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால், உடனுக்குடன் செய்திகள் பரிமாறுவதில் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளோம்.
வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்பமயமாதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.
இவை, தற்போதைய வானிலையை அறிந்துகொள்ளவும், அதன் தற்காலிக தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. மாறாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில், வானிலை குறித்த அடிப்படையை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, நாம் வாழும் மாநிலத்தின் வானிலை மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும் என, இந்திய வானிலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வானிலையாளர் சுகுமார், அறிவுறுத்துகிறார்.
அவர் கூறியதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்று, 67 ஆண்டுகளில் மக்கள்தொகை நான்கு மடங்காகப் பெருகியுள்ளது. ஆனால் நம் தேவைக்கேற்ப மழையின் அளவு பெருகியுள்ளதா என்றால் யாருக்கும் பதில் தெரியாது. பொதுவாக, வானிலை குறித்த அறிவு இதுவாகவே உள்ளது.
வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைபற்றி அறிவது அவசியம்.தமிழகத்தை பொறுத்தவரை, எந்த மாதங்களில் பருவமழை பொழியும், எந்தெந்த பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்திய, வானிலை மாற்றங்களுக்கான காரணத்தையும், அதற்கான வழிமுறைகளையும் அரசு உணர வேண்டும்; மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நிலத்தடி நீர் சேகரிப்பு, மரம் நடுதல் அதிகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி,
சோலார் வாயிலாக பசுமை வீடுகள், கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட வழிமுறைகளால், இயற்கை பாதுகாக்கப்பட அனைவரும் முனைய வேண்டும். இதற்கு, அரசும், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/page-4/98363.html#ixzz3VD3pEx9y
மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்
மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளு றுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம்.
இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.
வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும். மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.
கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத் தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணத் தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.
பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.
மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.
உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது. நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல் களையும் இக்கீரை தணிக்கும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
தாம் பருப்பின் மருத்துவப் பயன்கள்
அதிகமான சத்துக்களை உள்ளடக்கிய பருப்பு வகை களில் பாதாம் பருப்பும் ஒன்று. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சீனியும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது.
இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய பருப்பு வகைகளில் இதுவும் ஒன்று. புரதம், நார்ப்பொருள்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதில் உள்ளது.
இதனைத் தவிர்த்து வைட்டமின் ஈ, துத்தநாகம் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம் பொட்டேஸியம் செலேனியம், நியாஸின் மற்றும் மெக்னீஸியமும் இதில் உள்ளன. பாதாமில் உள்ள கொழுப்பு இருதயத்தின் ஆரோக்கியத்தை அதி கரிக்கும் கொழுப்பாகும்.
25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவிகித வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. இதனோடு சேர்த்து புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சினைகள், சொரைஸிஸ், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினை களைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர் களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. வைட்டமின் ஈ என்டிஒக்சிடண்டாக செயல்பட்டு இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது.
பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
பாதாமில் உள்ள சத்துகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம். பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
மங்கனீஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்திக்கு உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும்.
பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திய அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.
Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Gqk6b
இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்
மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
தொண்டை ரணம்: மாதுளம் பூக்களை மசிய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண் டைக்குள் மெதுவாக விழுங்கவேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு, தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.
தாதுபலம்: தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்த மடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.
ரத்த மூலம்: மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக் கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Nr0ua
கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் பதநீர்
நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது.
இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்குநல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம்.
தொழு நோயை நீக்கும் பதநீர்
நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை, மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிறியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடிசையில் 96 நாள்கள் தங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு .
மாதவிடாய் தடை
மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த நோய்களால் பெண்கள் அவதிபடுவார்கள். இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .
இரத்த கடுப்பு
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மி.லி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .
இதில் நார்ச் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேறு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.
Read more: http://viduthalai.in/page-4/98388.html#ixzz3VD4Zvu6M
திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி
நகரி, மார்ச் 23_ திருப் பதி ஏழுமலையான் கோவி லில் யுகாதி நாளை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.
நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்தனராம். அதன்பிற கும் தர்ம தரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டு களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனராம். இவர் களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனதாம். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத் துக்கு 6 மணி நேரம் காத்து இருந்தனராம்.
கூட்டத்தைப் பயன் படுத்தி பக்தர்களிடம் பணம் மோசடி செய்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பிரம்மபுத்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர ராவ் தனது 2 நண்பர் களுடன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அவர்களி டம் ஒருவர் அறிமுகமாகி தான் தேவஸ்தான ஊழி யர் என்றும், நபருக்கு ரூ.500 கொடுத்தால் ஏழு மலையானை உடனடி யாக தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேரும் ஆளுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 கொடுத்தனர்.
உடனே அவர் வைகுண் டம் வரிசையில் அனுப்பி உள்ளே ரமணா என்ப வர் இருப்பார் அவர் உங் களை மூலவர் அருகே அழைத்துச் செல்வார் எனக் கூறி நழுவினார்.
ஆனால் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர் களை தரிசனத்துக்கு ஊழி யர்கள் அனுமதிக்க வில்லை. ரமணாவை தேடியபோது அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பதும் தாங்கள் ஏமாற் றப்பட்டோம் என்பதை யும் அவர்கள் உணர்ந் தனர். பின்னர் தர்மதரி சன வரிசையில் நின்று ஏழுமலையானை தரி சித்து திரும்பினார்.
வெளியே வந்தபோது பாஸ்போர்ட் சென்டரில் தங்களை ஏமாற்றிய இடைத்தரகர் நிற்பதை கண்டனர். உடனடியாக 3 பேரும் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.
விசாரணையில் அவ ரது பெயர் பனிக்குமார் (32) என்பதும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பனிக் குமாரை காவல்துறையி னர் கைது செய்தனர்.
Read more: http://viduthalai.in/page-8/98394.html#ixzz3VD58PX5S
இலங்கைமீது பன்னாட்டு விசாரணை: 15 மொழிகளில் கையொப்ப இயக்கம்! அமெரிக்காவில் தொடங்கப்பட்டது!
நியூயார்க், மார்ச் 23_ இலங்கை தமிழினப் படு கொலை குறித்து பன் னாட்டு நீதிமன்றம் விசா ரணை நடத்தக்கோரி அமெரிக்காவில், 15 மொழி களில் கையொப்ப இயக் கம் தொடங்கப்பட்டது.
இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக அந் நாட்டு அரசாங்கம் செய்த போர்க் குற்றங்கள், இனப் படுகொலை, மனிதாபிமா னத்துக்கு எதிரான குற் றங்கள் ஆகியவற்றுக்காக இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசா ரணைக்கு உட்படுத்த அய்.நா. சபையை வலி யுறுத்தும் வகையில் அமெ ரிக்காவில் கையொப்பப் பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது.
15 மொழி களில் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற வகை செய்யும் இந்த மாபெரும் பிரச்சாரத்தை அமெரிக் காவின் முன்னாள் அட் டர்னி ஜெனரல் ராம் கிளார்க், நியூயார்க் நகரில் உள்ள அய்.நா.சபை தலைமை அலுவலகத் துக்கு வெளியே தொடங்கி வைத்தார். தமிழர்களின் துயரம் முடிவுக்கு வரவேண்டும்.
தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தனது கையொப் பத்தை பதிவு செய்து அவர் முறைப்படி பிரச் சாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் தேசிய கீதத்துடன் இந்த பிரச்சார நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நிவேதா ஜெய குமார், சவுமியா கருணா கரன் ஆகியார் பிரச்சார மனுவை தமிழிலும், ஆங் கிலத்திலும் வாசித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன், இனப்படு கொலை, போர்க்குற்றங் கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், இன வெறி ஆகியவற்றிலிருந்து தனது குடிமக்களை பாது காப்பதில் ஒரு நாடு வெளிப்படையாக தோல் வியடையும்போது அந்த மக்களை பாதுகாப்பதற் காக அதில் தலையிடுவது உலக சமுதாயத்தின் கடமை.
இந்த கையொப் பப் பிரச்சாரம் அய்.நா. சபைக்கு எதிரானது அல்ல. இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகும் என்று குறிப்பிட்டார் 15 மொழிகளில் கையொப்பப் பிரச்சார மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, உருது, அரபு, மலாய் உள்பட 15 மொழி களில் கையொப்பம் பெறு வதற்காக தனி இணைய தளமும் (www.tgte-ice) உரு வாக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பு தெரிவித்துள் ளது.
Read more: http://viduthalai.in/page-8/98395.html#ixzz3VD5I4Tzn
பலே பலே - பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்!
பார்ப்பனப் புரோகிதனை இணையத்தின் மூலம் வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம்
திருமணம், கிரகப்பிரவேஷம் மற்றும் திதி போன்ற பல்வேறு காரியங் களுக்கு இனிமேல் இணையத்தின் மூலமே பார்ப்பனப் புரோகிதனைப் பதிவு செய்து விட்டிற்கு வரவழைக்க லாம். அறிவியல் உபகரணங்களை எந்த அளவிற்கு ஏளனம் செய்யவேண்டு மென்பதற்கு இந்திய பார்ப்பனர்களைப் போல் வேறு யாரும் கிடையாது.
அயல்நாடுகளில் வாழும் பார்ப்பனர்கள் தங்களின் திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து பார்ப்பனப் புரோகிதர்களை வரவழைத்து மந்திரம் ஓதுவதற்கு செலவு அதிகமாவதால் காணொளி இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மூலையில் கணினி முன்பு அமர்ந்து புரியாத மொழியில் மந்திரம் ஓத அங்கே பார்ப்பனர்கள் மட்டுமல்லாது படித்து அயல்நாடு சென்று வேலைபார்க்கும் பார்ப்பன அடிமைகளும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கியது.
இதற்கு ஆங்காங்கே வரவேற்பு கிடைத்தாலும் பார்ப்பனர்களின் பேராசை யாரைவிட்டது? கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பார்ப்பன புரோகிதர் மாநாட்டில் ஆன்லைனில் மந்திரம் ஓதுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சாஸ்திரப்படி பார்ப்பனப் புரோகிதர்கள் நேரடியாக இருந்து மந்திரம் ஓதினால் தான் எந்த ஒரு காரியமும் முழுமைபெறும் என்று யாரோ ஒரு பேராசைப் பார்ப்பான் கிளப்பிவிட்டான்.
இந்த அய்டியாவில் உதித்தது தான் பார்ப்பனப் புரோகிதர் டாட் காம்.
எதிலும் காசுபார்க்கும் பிரபல பலசரக்கு இணையதளம் ஒன்று இந்த பார்ப்பனபுரோகிதர் இணையதளத்தை வாங்கிவிட்டது.
இப்போது பூசைக்குரிய சாமான்கள் வாங்கும் போதே பார்ப்பனப் புரோகிதரையும் பதிவு செய்யலாம். ஒவ்வோரு பார்ப்பனப் புரோகிதர் புகைப்படத்துடன் அவரது கல்வி மற்றும் அவர் செய்து வைத்த பல்வேறு திருமணங்கள் கிரகப்பிரவேஷ நிகழ்ச்சிகள் இணைத்திருக்கும் இதைப் பார்ப்பவர்கள் தங்களுக்குத் தேவை யான பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம்.
சமீபத்தில் ஆன்லைனில் பூசைப் பொருள் விற்கும் இணையதளம் ஒன்றின் மீது பழனிக் கோவில், திருப்பதி மற்றும் மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகம் பிரசாதம் மற்றும் பூசை சாமான்கள் என்ற பெயரில் போலியான பொருட்களைத் தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாது அயல் நாட்டிலுள்ள இந்துபக்தர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்று கூறி வழக்கு தொடர்ந்தது.
தற்போது திடீரென பார்ப்பனப் புரோகிதனை இணையத் தில் தேடி வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம் துவங்கியுள்ளது.
Read more: http://viduthalai.in/page7/98233.html#ixzz3VD5osAu2
சிங்கப்பூர் மேனாள் அதிபர்
லீக்வான்யூ மறைவிலும் பாடம் போதிக்கப்படுகிறது!
சிங்கப்பூர் என்ற மிகச் சிறிய நாட்டின், பணியாற்றும் - பண் பாடு (கலாச்சாரம்) எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.
அந்நாட்டின் உயர்வுக்கும் - வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் காரணமாக அமைந்த அந்நாட் டின் தந்தை என்று அனைவ ராலும் மதிக்கப்படும் லீக்வான்யூ அவர்கள் நேற்று மறைந்துவிட்ட நிலையில், சிங்கை அரசு சார்பாக ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
அவரது உடல் வரும் 29.3.2015 ஞாயிறுதான் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
ஒருநாள்கூட அரசு விடுமுறையோ, நிறுவனங்கள் மூடுதலோ இல்லை.
தலைவர்கள் மறைந்தால் துக்கம் அனுசரிக்க வழக்கமான வேலையை நிறுத்தாமல், பணியாற்றுவதே அவர்களது லட்சியங்களுக்கு ஏற்ப நடந்து காட்டும் முறை என்று உலகுக்குக் காட்டுகிறது சிங்கப்பூர். (ஏற்கெனவே ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலும் சில நடைமுறைகள் நிகழ்ந்துள்ளன)
மாறாக நமது ஞான பூமியின் இம்மாதம் அடுத்த மாதம் துவக்கத்தில் உள்ள அரசு விடுமுறைப் பட்டி யலைப் பாரீர்!
மார்ச் 28 - ராமநவமி விடுமுறை
மார்ச் 29 - ஞாயிறு (வார) விடுமுறை
மார்ச் 30&31 - (வங்கிகள் திறந்திருக்கும்)
ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு விடுமுறை
ஏப்ரல் 2 - மகாவீர் ஜெயந்தி விடுமுறை
ஏப்ரல் 3 - புனித வெள்ளிக்கிழமை விடுமுறை
ஏப்ரல் 4 - சனி (அரைநாள்) விடுமுறை
ஏப்ரல் 5 - வார (முழு நாள்) விடுமுறை
ஆறு நாள்களுக்கு தொடர் விடுமுறை; இந்த நாடும் பொருளாதாரமும் எப்படி வளரும்?
அந்தந்த மதத்தவர் அவரவர் தனியே விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே!
உலகிலேயே அதிகமான அரசு விடுமுறை நாள்கள் இந்தியத் திரு நாட்டில்தான்! லீக்யூவான் மறைவை பணி செய்தே துக்கம் அனுசரிக்கும் எடுத்துக்காட்டு எவ்வளவு பின்பற்றத் தக்கது என்று நாம் உணர வேண்டும்.
லீக்வான்யூ அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி - கடவுள் பற்றிக் கவலைப்படாத (Agnostic) அவர் ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: http://viduthalai.in/e-paper/98445.html#ixzz3VIqUYOiM
நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?
தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
காவிரிப் பிரச்சினையில் கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒத்த குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகாவது தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (கடந்த 21ஆம் தேதி) எடுத்த முடிவின்படி வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள முழு அடைப்புப் போராட் டத்தை வெற்றியாக்கித் தர வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரிப் படுகை விவசாயிகள் தஞ்சை, திருச்சி டெல்டா பகுதியில் பாசனத்திற்குரிய நீர் உரிமைக்காகப் போராடிடும் நிலைக்கு என்றுதான் விடிவு வருமோ என்ற நிலையில், 1980இல் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வேண்டுகோள் - உணர்வைப் புரிந்து, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு நடுவர் மன்றத்தை அமைக்க ஆணை பிறப்பித்தார்.
கால் நூற்றாண்டுக் காலமாக
ஒரு கால் நூற்றாண்டுக்கு மேல், இந்தப் பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி நதி நீர்ப் பங்கீடும் சரியாக தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இதற்கு நிரந்தரமான தீர்வு காண வாய்ப்பிருந்தும், காவிரிப் பிரச்சினைபற்றி முடிவு கூறுவதற்கு வாயப்பான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், புதிதாக கடந்த 10 மாதங் களுக்குமுன் பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான அரசு இன்னமும் காலந் தாழ்த்தி வருவ தினால்தான் அவ்வப்போது தமிழ்நாட்டில் குறுவை, சம்பா சாகுபடிபாதிக்கப்பட்டு விவசாயிகள் பட்டினியும், தற் கொலை எண்ணமும் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக் குத் தள்ளப்படுகின்ற வேதனை தொடர் கதையாகிறது!
கருநாடகாவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு சரியா?
இந்நிலையில், கர்நாடக அரசு, கர்நாடகத்தில் காவிரியின் உபரிநீரைத் தேக்கி மேகதாது, ராசிமணல் ஆகிய விடங்களில் மூன்று அணைகளைக் கட்ட, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கிறது!
மத்திய அரசின் சுற்றுச்சூழல், நீர்வளத் துறையின் அனுமதி எதையும் பெறாமல் பட்ஜெட்டில் அறிவிக்கும் துணிச்சல் கர்நாடக அரசுக்கு எப்படி ஏற்பட்டது? மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பதால்தானே! உச்சநீதி மன்றமும், நடுவர் மன்றமும் ஆணையிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பது ஏன்?
தமிழ்நாட்டு காவிரிப் படுகை விவசாயிகளுக்கு உரிமை பாதுகாக்கப்பட வேண்டாமா?
ஒரு பக்கம் மீத்தேன் வாயு தோண்டுதல் என்ற ஆபத்தும் நிலவளத்தைச் சுரண்டி, வேளாண்மைக்குத் தகுதியற்ற நிலை ஏற்படுத்த, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு உதவிடும் திட்டம்; இதையும் எதிர்த்து அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுத்தும் ஏதோ ஒன்றிரண்டு அறிவிப்புகள் வந்துள்ளன. அவையும் தெளிவாக இல்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை!
தமிழ்நாடு அரசு இதில் முக்கியமாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரது ஒருங்கிணைப்பை மத்திய அரசுக்கும் கர்நாடகத்திற்கும் உணர்த்தியிருக்க வேண்டும். இந்நிலையில், விவசாயிகளே முன் எடுத்துள்ளனர். கட்சிக் கண்ணோட்டம், அரசியல் பார்வைகளை ஒதுக்கி வைத்து விட்டு 23 கட்சிகளும், இயக்கங்களும் கலந்து கொண்ட கூட்டம் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்றுள்ளது. (திராவிடர் கழகமும் கலந்து கொண்டுள்ளது)
ஆளும் அதிமுக கலந்து கொள்ளாதது ஏன்?
ஆளும் அதிமுக கட்சி ரீதியாகக்கூட கலந்து கொள்ளா தது வேதனைக்குரியது என்றாலும் மற்ற அமைப்புகளும் கட்சிகளும் கலந்து கொண்டு 28ஆம் தேதி முழு அடைப்பு மாலை 6 மணி வரை என்று அறிவித்துள்ளனர்!
அதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒரு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்!
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இதில் அரசியல் பாராமல், ஆளுங் கட்சி கடை அடைப்பினை வெற்றிகரமாக நடத்திட ஒததுழைப் புத் தர வேண்டுமென கேட்டுக் கொண்டது - பலரின் சிந்தனையும் அதுவேதான் என்று உள்ளது.
எனவே, அனைத்துக் கட்சியினரும் 28ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் - அறப் போராட்டம், அமை திக்கு எவ்வித கேடும் ஏற்படுத்தாமல், நமது உணர்வினை ஒட்டு மொத்தமாகப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.
கருநாடகத்தின் ஒற்றுமையைக் காணீர்
கருநாடகத்தின் ஒற்றுமை நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
24.3.2015
Read more: http://viduthalai.in/e-paper/98432.html#ixzz3VIqu5hYE
எனது கருத்து
மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)
Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd
எனது கருத்து
மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)
Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd
காடுகள் பாதுகாப்பும் - வீடுகளின் பாதுகாப்பும்!
உலகில் நாடுகளும் மக்களும் நீண்ட நாள் நலவாழ்வு வாழ வேண்டுமானால் காடுகள் பாதுகாக் கப்பட்டாக வேண்டும். எந்த நாட்டில் காடுகள் அழிக்கப்படாமல் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்படுகின் றனவோ அந்நாட்டில்தான், பொருளா தார வளம் மட்டுமல்ல, நீண்ட ஆயுளைக் கொண்ட மக்களையும்கூடக் காண முடியும்.
வறட்சி ஏற்படாமல் விரட்டிட, மழை மிக முக்கியமல்லவா?
வானம் பொய்த்து விட்டது; மக்களுக்கு, மழை இல்லாததால் பயிர்கள் வளரவில்லை; நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் - காணாமலேயே போய் விட்டது, என்றெல்லாம் கூறுவ தற்கு அடிப்படைக் காரணம் காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, சூறை யாடி மனிதர்கள் பண அதிபர்கள் ஆகத் துடித்ததின் விளைவுதான்!
பயிர்கள் வளருவதுகூட பிறகு; உயிர்களுக்குக் குடிக்கவும்கூட குடிநீர் கிட்டவில்லையே!
ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதியாக ஆறுகள் ஓடின. சிற்றோடை களும், மற்ற நீர் நிலைகளும் திரும்பும் பக்கமெல்லாம் வளமையை வாரித் தெளித்த வண்ணம் இருந்தன!
இன்றோ ஒரு போத்தல் தண்ணீர் ரூபாய் 16 முதல் 20 வரை வாங்கிக் குடிக்கும் அவலம் மலிந்து விட்டதே!
பற்பல ஊர்களில், நேரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலையைவிட அதிகமாக ஒரு லிட்டர் தண்ணீர் விலை உள்ளது என்பது மிகவும் வேடிக்கையும் வேதனை யும் தரவில்லையா?
இதற்கு மூல காரணம் என்ன? காடுகள்அழிக்கப்படுவதால், மரங்கள் வெட்டிக் கொள்ளையடிக்கப்படுவதால் தான்!
மழை வேண்டி யாகம் செய்யும் சில புத்திசாலிகள் - யாகத்திற்கென மரத்தை வெட்டிக் கொண்டு வந்து போட்டு யாகம் செய்யும் வேடிக்கையும் விசித்திரமும் மலிவு இங்கே!
காடுகள் ஒரு நாட்டின் இயற்கைச் செல்வம், அவை பற்பல காரணங்களால் சூறையாடப்பட்டதன் விளைவுதான் நவீன உலகில் புவி வெப்பம் (Global Warming) உயர்ந்து, பருவ மழை பொய்த்து, மக்களுக்கு நோய்கள் ஏராளம் பரவும் அபாயமும் ஓங்கி வருகின்றது!
காடுகளை அழித்து பலர் வீடுகள் கட்டுகின்றனர்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காடுகள் போன்ற மரங்கள் சூழ்ந்த மண்ணின் நடுவில் வீடுகளை கட்டி, ஏராளமான உயிர்க் காற்றினை (Oxygen) சுவாசித்து ஆயுள் பெருக்கி வாழுகின்ற முறை உண்டு.
காடுகளை அழித்து வருவதால், காட்டு மிருகங்கள் யானை, புலி, சிறுத்தைகள், ஊர்களுக்குள் வந்து மக்களை அடித்துக் கொல்லும் அவலம் தமிழ்நாட்டிலேயே பற்பல ஊர்களில் அன்றாட அவலங் களாக நிகழ்கின்றனவே! காடுகளை அழிப்பதின் தீய விளைவே இது! இன்று ஒரு நாளேட்டில் ஒரு வாசகர் எழுதியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு தினசரி மூன்று சிலிண்டர் ஆக்சிஜன் (Oxygen) உயிர் காற்று தேவை; ஒரு சிலிண்டர் 700 ரூபாய்; மூன்று சிலிண்டர் விலை ரூ.2100 ஆகும்.
இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதைப் போலவே இனி காற்றையும் காசு கொடுத்து வாங்கும் கொடுமை (இப்போதே சில வணிக நிறுவனங்கள் நுழைந்து விட் டன) விரைவில் வந்துவிடக் கூடும்.
மூங்கில் காடுகளை வளர்க்க வாய்ப்பு இருக்கும் இடங்களில், அவை சிறிய இடங்களாக இருப் பினும் வளருங்கள். ஏராளம் பிராண வாயு இதன் மூலம் கிடைக்கும்.
எனவே காடுகளை பாதுகாப்போம் அதன் மூலம் நம் வீடுகளை - வீட்டில் வாழும் உயிர்களையும் பாது காப்போம்!
ஏதோ காடுதானே என்று அழிக்காதீர்கள்! மேழிச் செல்வம் போலவே, காடுகளும் நாம் பாதுகாக்க வேண்டிய நிரந்தரச் செல்வம் ஆகும். உயிர் காக்கும் தோழர்கள் நம் மரங்களும், காடுகளும் என்பதை மறவாதீர்!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
Read more: http://viduthalai.in/page-2/98423.html#ixzz3VIsPUpTk
தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே!
பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் மற்றும் மனநலம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 13 வயதில் பெண்கள், சுய சுகாதாரம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி (விளையாட்டு) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 13 வயது முதல் 18வயது வரையுள்ள பெண் குழந்தைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.
இந்த வயதில் மிகக்குறைந்த அல்லது அதிக உடல்எடை, பிறப்புறுப்பு பிரச்சினைகள், சிறுநீரக பாதை கோளாறுகள், பூப்படைதலில் கோளாறுகள் என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வயதில் சமூகத்தில் பெண்ணுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தி ஆணுக்கு பெண், நிகரானவள் என்பதை உணர்த்த வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் காலம் என்பதால் பெற்றோர் குழப்பத்தில் இருப்பார்கள். பூப்படைந்தது முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். 19 வயது முதல் 39 வயது வரை திருமணம் மற்றும் குழந்தை பேறு உட்பட வாழ்வின் முக்கிய திருப்பங்கள் நடக்கும் காலகட்டமாகும்.
இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்ட 3மாதங்களுக்கு முன்பாகவே விட்டமின் மருந்தை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம். மகப்பேறு காலத்தில் உரிய பயிற்சி பெற்ற மருத்துவரிடம் காண்பித்து, பிரச்சினைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
40 முதல் 65 வயதுக்குட்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நிற்கும் தறுவாயில் இருப்பதால் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். அதை உணர்ந்து உணவு கட்டுப்பாடு, அதிக சர்க்கரை தவிர்ப்பு, உணவில் சோயா மற்றும் கால்சியம், உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு குடும்பத்தினரின் துணை மிகவும் அவசியம்.
புற்று நோய்க்கான அபாயம் அதிகம் இருக்கும் காலம் இது. எனவே கருப்பை சம்பந்தமான சிறிய சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டு, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்வாழ்வின்பெரும் பகுதியை குடும்பத்திற்காக செலவிடும் பெண்ணின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.
எந்த குடும்பத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத் திருக்கும் என்பது மட்டும் உண்மை.
Read more: http://viduthalai.in/page-7/98443.html#ixzz3VIu8doNJ
பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?
பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.
1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி
இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். ஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர் வில்லாமல் விளையாட்டாக செய்யலாம்.
கைகள் வலுபெற: சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
இடுப்பு வனப்பு பெற: இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக்ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.
தோள்பட்டை...: பெண்களின் தோள்பட்டை அவரவர் களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு வராது.
பாதம் உறுதி பெற: குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெட் மில் பயிற்சியினையும், மெல்லிய நடைப் பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.
Read more: http://viduthalai.in/page-7/98446.html#ixzz3VIuJK2OU
பெண்களுக்கு உகந்த பப்பாளி பழம்
தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும்.
நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.
பெண்கள் பப்பாளிப் பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. 100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது.
அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள். அந்த பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என்ற என்சைம் இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.
Read more: http://viduthalai.in/page-7/98444.html#ixzz3VIuaLXA9
முல்லைவேந்தன் உரை
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உரையாற்றும்பொழுது, கல்விக் கூடத்திலே தந்தை பெரியார் பெயரில் அரங்கம் அமைத்த நமது முனைவர் இராஜேந்திரன் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அந்த அரங்கத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திறந்து வைப்பது என்பது பொருத்தமான ஒன்றாகும்.
தந்தை பெரியாருக்குக்கூட சிலை வைக்கக்கூடாது என சிறுமதி கூட்டத்தினரும் இன்று இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களை நான் கேட்கிறேன், அரசுக்குச் சொந்தமான இடத்தில், நெடுஞ் சாலையோரங்களில் எல்லாம் பூசணிக்காய் போன்ற கண்ணை வைத்து,கத்தியைக் கொடுத்து விழிபிதுங்க காளி என்றும், மாயி என்றும்,
முனியப்பன் என்றும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சிலையை வைத்திருக்கிறார்களே, இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது; அவ்வளவு ஏன், ஓமந்தூரார் தோட்டத்திலேயே இன்றைய ஆட்சியாளர் கள் கோவிலைக் கட்டி வைத்துக்கொண்டு, கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட சட்டமன்றத்தையே இடிக்கிறார் களே இவற்றை யார் கேட்பது?
அரசு இடத்தில் கோவில் கட்டலாம்; ஆனால், சொந்த இடத்தில்கூட பெரியாருக்கோ, தீரன் சின்னமலை போன்ற வர்களுக்கோ இந்த நாட்டில் சிலை வைக்க முடியவில்லை. வெங்கடசமுத்திரத்தில் பெரியாரோடு வாழ்ந்த வி.ஆர்.வேங் கன் அவர்களுடைய சொந்த இடத்தில் சிலை வைக்கத் தடை போடுகிறார்கள்.
இங்கே பெரியார் அரங்கு என்று மட்டும் ஏற் படுத்திவிட்டால், போதாது. அது பகுத்தறிவுப் பாடங் களைச் சொல்லிக் கொடுக் கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும்; மாணவர் களுக்கு அறிவு வெளிச்சத் தைக் காட்டவேண்டும். மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க ஆசிரி யர்கள் நல்ல சிந்தனையா ளர்களாக பகுத்தறிவாளர் களாக இருக்கவேண்டும்.
வீடு கட்டும்போது பூஜை அறை கட்டுவதை விட்டு விட்டு, படிப்பகம் கட்ட வேண்டும்; ஒரு பெண் நினைத்தால் தன் குழந்தை களை நல்ல பகுத்தறிவாளர் களாக ஆக்க முடியும். பகுத்தறிவு பரவ அகிலா எழிலரசனைப்போல வீட் டுக்கு ஒரு வீராங்கனை இருக்கவேண்டும்.
ஆசிரியர்கள் பெரி யாரை கற்கவேண்டும். அண்ணாவைப்பற்றி படிக்கவேண்டும். மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், பகுத்தறிவுப் பாடங்களைப் புகட்டுங்கள். மாணவர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கும் நிலைக்கு மாறவேண்டும்.
பெரியாரின் கொள்கையை 100-க்கு 25 பேர் புரிந்து கொண்டு செயல்பட்டால்கூட, தமிழகத்தில் பெரிய மாற்றம் நிகழும். மாதாமாதம் பகுத்தறிவுப் பாசறை கற்கும் இடமாக இந்த அரங்கம் இருக்கவேண்டும்.
பட்டங்கள், பதவிகள், ஆட்சி அதிகாரங்கள் இருந் தாலும், இல்லாவிட்டாலும் கருப்புச் சட்டைக்குச் சொந்தக் காரனாக என்றைக்கும் இருப்பேன் என்று உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page-8/98458.html#ixzz3VIuzrccG
24-03-2015
நேருவும்- பசுவும்!
இந்தக் கோமாதாவை வைத்துக்கொண்டு இந்த இந்துத்துவாவாதிகள் மார டிப்பது, அரசியலாக்குவது என்பது - நேரு அவர்கள் காலத்திலேயே தொடங்கப் பட்டு விட்டது.
1952 முதல் பொதுத் தேர்தலில் பண்டிட் ஜவகர் லால் நேரு அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் ராம ராஜ்ய பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஷம்பூ நாராயண் என்பவர்.
தம்மை எதிர்த்துக் காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட நேருவிடம், அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். உங்களுக்குப் பசுவின்மீது நேசம் இல்லையா? என்று நேருக்கு நேர் நேருவிடமே கேட்டார்.
கேள்வி வந்த அடுத்த நொடியே பொட்டில் அடித் ததுபோல நேரு பதில் சொன் னார், பசுவை மட்டுமல்ல; குதிரைகளையும் கூட நான் நேசிக்கிறேன்! என்று போட் டாரே ஒரு போடு! அவ் வளவுதான் ஆசாமி வாய டைத்து நின்றார்.
உயிர்களை நேசிப்பது என்கிற காரணத்துக்காக மனிதன் மாமிச உணவைச் சாப்பிடக்கூடாதா? காய்கறி களைக்கூடத்தான் வளர்க் கிறார்கள்; (கவனிக்கவேண் டும் வளர்க்கிறார்கள்) அவை யும் பிராண வாயுவை உட் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அவற் றிற்கும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. அதனால் காய் கறிகளைச் சாப்பிட மறுப்பார் உண்டா?
உயிர்களை வதை செய் யக்கூடாது என்று சொல்லு வதைக்கூடப் புரிந்துகொள் ளலாம்; உயிர்களில் பசுவைத் தவிர மற்றவற்றைக் கொல் லலாம் என்பது எந்தவூர் ஜீவகாரூண்யம்?
ஒரு காலகட்டத்தில் இந்தப் பார்ப்பனர்கள் பசுக் களை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி பசு மாமிசம் தின்று கொழுத்தவர்கள்தான். இடைக்காலத்தில்தான் இவர் களிடம் மாற்றம் ஏற்பட்டது. இதனை வரலாற்று ஆசிரிய ரான இராகுல சாங்கிருத்தி யாயன் எழுதியுள்ளார்.
பிராமணர்கள் பவுத்தர் களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருது கிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்துக்காகவே பசு மாமிசம் தடை செய் யப்பட்டது என்றும், பசு வையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச் சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறார். (நூல்: வால்கா முதல் கங்கை வரை, பக்கம் 76).
இந்த வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், கோமா தாவுக்குள் ஒளிந்திருக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் உள்நோக்கம் என்னவென்று எளிதில் விளங்கிவிடும் அல்லவா! - மயிலாடன் 25-3-2015
இன்றைய ஆன்மிகம்?
என்ன ஆனந்தம்?
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்!
- காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி
அப்படியா?
ராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை யல்லவா செய்துகொண் டான் - ஆகா, என்ன ஆனந்தம்!
Read more: http://viduthalai.in/e-paper/98503.html#ixzz3VOduT5Va
அனுமதியோம்!
செய்தி: பயங்கரவாதம் இல் லாத சூழலை பாகிஸ்தான் உருவாக்கவேண்டும்.
-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
சிந்தனை: ஆமாம், இந்தி யாவுக்குள் அத்தகைய வாதங்களை நடத்த எங் களுக்கு மட்டுமே பிரத்தி யேக உரிமை உண்டு - அதை யாரும் தட்டிப் பறிக்க அனுமதியோம்!
Read more: http://viduthalai.in/e-paper/98506.html#ixzz3VOe4ZXbd
சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துப் பதிவுக்கு கைது செய்யும் சட்டப் பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
புதுடில்லி, மார்ச் 25_ சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்து களைப் பதிவு செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிர டித் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2012-ஆம் ஆண்டு, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே காலமான போது, மகாராஷ்டிரத்தில் கடையடைப்பு நடத்தப்பட் டதை விமர்சித்து முகநூல் பக்கத்தில் கருத்து வெளி யிட்ட இளம்பெண்ணை அந்த மாநில காவல்துறை யினர் கைது செய்தனர். அந்த கருத்தை முகநூல் பக்கத்தில் ஆதரித்த (லைக்) மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். அதேபோல, சமாஜ் வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கானை விமர்சித்து முகநூலில் கருத்து வெளியிட்டதாகக் கூறி பள்ளி மாணவர் ஒருவரைக் கடந்த 18-ஆம் தேதி உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கை களுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இத்தகைய கைது நடவடிக் கைகளுக்கு எதிராக, ஷ்ரேயா சிங்கால் என்ற சட்டக் கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தார்.
சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் ஆட் சேபகரமான விமர்சனங் கள், கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு, ஒருவரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவில் திருத் தம் கொண்டு வரவேண்டும் என்று அவரது மனு வில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. மேலும், இந்தச் சட்டப் பிரிவானது தவறான வகை யில் பயன்படுத்தப்படுவ தாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. சமூக வலை தளப் பக்கங்களில் ஆட் சேபகரமான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களை, காவல்துறைத் தலைவர் அல்லது அய்.ஜி-யிடம் உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என்று அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனா லும்கூட, உச்சநீதிமன்றத் தின் உத்தரவை மீறி, அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந் தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பக் குற்றவியல் சட்டத்தின் 66-அ பிரிவை நீக்கக் கோரும் பொதுநல வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரர், நாரிமன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை வெளி யிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் அவசிய மான ஒன்று. தகவல்
தொழில்நுட்பக் குற்றங்களுக்கான சட்டத்தின் 66-அ பிரிவு மக்களின் கருத்து உரிமையை நேரடியாகப் பாதிக்கச் செய்கிறது. அரசமைப்புக்கு எதிரானது: இந்தச் சட்டப் பிரிவின் மூலம் பேச்சு, கருத்துச் சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. 66-அ பிரிவின்கீழ் ஒருவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஷரத்துகள் அந்தச் சட்டப் பிரிவில் இடம் பெறவில்லை. இந்தச் சட்டப் பிரிவானது அரசமைப்புக்கு முரணான ஒன்று. சமூக வலைதளங்களில் ஆட்சேப கரமான கருத்து வெளியிட்டதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடு இருக்கும்போது, அதை எவ்வாறு சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியும்? சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் ஒருவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றலாம். அதுவே மற்றொருவருக்கு வேறு மாதிரியாகத் தோன்றலாம். மத்தியில் ஆட்சியமைப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இதுபோன்ற சட்டப் பிரிவுகளானது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். மத்தியில் அடுத்து ஆட்சியமைப்பவர் கள் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு தற்போதுள்ள அரசு உறுதியளிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு கோரிக்கை முன்னதாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-அ பிரிவு மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறிக்கும் பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 66-அ பிரிவைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில், முக்கியத் திருத்தங்களையும் வழி முறைகளையும் உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
Read more: http://viduthalai.in/e-paper/98502.html#ixzz3VOeEcrSj
இணைய தளங்களில் கூறப்படும் கருத்துரிமைகளைப் பறிக்கும்
சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!
தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?
இணையதளங்களில் கூறப்படும் கருத்து களின் குரலை நெரிக்கும் மத்திய அரசின் 66ஏ பிரிவு சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இது தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி - அதையொட் டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!
அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!
இந்த விளைச்சலில் சில களைகளும் முளைப்பது தவிர்க்க இயலாததே!
ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங் களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.
அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.
தவறான பிரயோகங்கள்
ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.
இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை யான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் நேற்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!
உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை
இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்சநீதிமன்றம்.
இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதி ராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடா ளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.
தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!
தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.
எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக் கட்டுமானம் குலைக்கப்படாமல் - கருத்துச் சுதந்திரமே அது - காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
25.3.2015
Read more: http://viduthalai.in/e-paper/98500.html#ixzz3VOeYJjod
பரிகார முயற்சி
எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டில் ஒன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். - (குடிஅரசு, 4.10.1931)
மதுரையில் மகளிரணி சிறப்பு வழக்காடு மன்றம்
மதுரை, மார்ச் 25_ 15.03.2015 மாலை 6.00 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தன் சார் பாக 27_ஆவது நகழ்ச்சி யாக மகளிர் தன சறபபு வழக்காடு மன்றம் மாட் டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தயாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னர் கல்லுரி பேராசிரி யர் அ. ஜோதி தலைமை தாங்கினார். ந.சரோசா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரணி தலைவர்), வே.சுசிலா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரண செயலாளர்) மற்றும் மோ.புஷ்பலதா (மதுரை மாநகர தராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர்) ஆகியோ முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சியமளா வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரி யர் க.அகலாகுமாரி (இராசா பொறயயல் கல்லூரி இணைப்புரை வழங்கனார். ''பெணகள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது.'' என்ற வழக்கனைத் தொடுத்து மகேஸ்வரி (அக்ரி) (இணை ஆணையர் வணிகவரித் துறை) வழக்காடினார். அவரது வழககினை மறுத்து வழக்கறிஞர் இன்னிசை (சென்னை உயர்நீதிமன்றம்) எதிர் வழக்காடினார். இருதரப்பு வாதுரையைக் கேட்டு பெண்கள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் ரேணுகா தேவி விரிவான விளளக் கத்தோடு தர்ப்பினை வழங்கனார். நகழ்ச்சியின் இடையே ''மம்மீ.......... எனககு ஒரு டவுட்டு'' என்ற நகழ்ச்சியை பெரியார் பிஞ்சு த.ஓவியா மற்றும் பா.வேல்விழி நடத்திக் காட்டினர். அந்நிகழ்ச்சி யில், 1) ''தருபபுகழைப்பாடப் பாட வாய்மணக்கும்'' என்று பாடுகிறார்களே அவர்கள் பல்துலக்க மாட்டார்களா? 2) ''தருநீறில் மருந்து இருக்கு தெரியுமா?'' என்கிறார் களே மருநது கடையில் அது விற்குமா? 3) ''சரஸ் வதியைக் கும்பட்டால் தான் படிபபு வரும்'' என்கிறீர்களே எங்கள் வகுப்பில் ராபர்ட் முதல் இடத்திலும், இஸ்மாயில் இரண்டாவது இடத்தி லும் இருக்கிறார்களே அவர்கள் சரஸ்வதியை கும்பிட்டார்களா?'' 4) ''பூஜைக்கு முன் கொழுக் கட்டையை தின்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்கிறீர்களே அந்த சாமியையே தருடிச் செல் கிறார்களே சாமி ஏன் அவர்கள் கண்ணை குத்த வில்லை?'' என்ற பகுத்தறிவு வினாக்களை பெரியார் பிஞ்சு த.ஓவியா சுவைபட எழுப்பிய போது அரங் கமே சிரிபபொலியால் அதிர்ந்தது. பார்வையா ளர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்தது. நகழ்ச்சியின் இறுதியில் பா.வேல்விழி நன்றியுரை ஆற்றனார்.
Read more: http://viduthalai.in/page-4/98484.html#ixzz3VOh1sBjK
இன்றைய ஆன்மிகம்?
குழந்தைப் பேறு
மயிலாடுதுறையையடுத்த திருவாலங்காட்டில் உள்ள கோயில் குளமான காமேஸ் வர தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப் பேறு கிடைக் குமாம். - ஒரு நாளேட்டின் செய்தி இது. அந்தத் திருவாலங் காட்டிலேயே குழந் தைகள் இல்லாத தம்பதிகள் இருக் கிறார்களே?
Read more: http://viduthalai.in/e-paper/98552.html#ixzz3VUa7RuPX
கடவுள் சக்தி இவ்வளவுதான்!
பழநி மலை கோயில்
ரோப் கார் அறுந்து விழுந்தது
பழநி, மார்ச் 26:பழநி மலைக்கோயிலுக்கு பஞ்சா மிர்தம் கொண்டு சென்ற மெட்டீரியல் ரோப் கார், பில்லர் சாய்ந்ததால் அறுந்து விழுந்தது.
பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயி லுக்கு செல்வதற்காக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாமிர்தம், அன்ன தானத்துக்கான மளிகை பொருட்கள் கொண்டு செல்வதற்கு தனியாக மெட்டீரியல் ரோப் கார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் நேற்று பிற்பகல் வழக்கம் போல் பஞ்சாமிர்தம் ஏற்றி செல்லப்பட்டது. அப்போது ரோப்கார் வழித்தடத்தில் உள்ள இரும்பு பில்லர் திடீரென சரிந்து வயர்கள் அறுந்து விழுந்தன.
இதில் பஞ்சாமிர்தம் ஏற்றி சென்ற ஒரு பெட்டி சாய்ந்ததால், பஞ்சாமிர்த டப்பாக்கள் கீழே விழுந்தன. காலியாக வந்த பெட்டி அடுத்து கீழே விழுந்தது. உடன் ரோப் கார் இயக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள தால், ஒரு வாரத்திற்கு மெட்டீரியல் ரோப் கார் இயங்காது என்று ஊழி யர்கள் தெரிவித்தனர்.
Read more: http://viduthalai.in/e-paper/98551.html#ixzz3VUaJLRcn
செய்தியும் சிந்தனையும்
கனம்!
செய்தி: நிதி நிலையில் தமிழகம் பாதுகாப்பாகவே உள்ளது.
- முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
சிந்தனை: ஆமாம். தமிழ் நாட்டின் கடன் சுமை ரூ.1.81 லட்சம் கோடி என்ற கனமான நிலைதானே!
Read more: http://viduthalai.in/e-paper/98554.html#ixzz3VUaRvJq6
மனிதத் தன்மை
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)
மாற்றுத் திறனாளிகள் மீது
மனிதநேய அணுகுமுறை தேவை
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 24ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளைப் போராட வைப்பது என்பதே கருணையற்ற - மனித நேயமற்ற ஒன்று என்று எடுத்த எடுப்பிலேயே கூறிட வேண்டும். அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை - பார்வையற்றவர்கள் பிரச் சினையை அரசு திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும்.
காது கேளாதோர் பிரச்சினையை அரசாங்கம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது இயற்கையின் பாற்பட்ட மனித நியதியாகும். அவர்களின் கோரிக்கைதான் என்ன?
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற அரசு கடைப்பிடிக்கும் சட்ட விரோத விதிகளை ரத்து செய்க!
மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே அனைவருக்கும் உதவி தொகை வழங்கிடுக!
40 சதம் ஊனம் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிடுக!
காது கேளாதோர் உதவித் தொகை பெற 80 சதம் என்கிற பாரபட்சத்தை ரத்து செய்க!
உதவித் தொகை நிறுத்தப்பட்ட அனைவருக்கும் நிலுவை தொகையுடன் உடனே வழங்குக!
உத்தரவு பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் காலதாமதமின்றி உதவித் தொகை வழங்கிடுக!
2014 மார்ச் அரசாணை எண்.10-ன் படி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிக்குரிய 1107 பின்னடைவு காலிப் பணியிடங்களில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை பணி நியமனம் செய்க!
அரசாணைப்படி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளச் சான்று வழங்கிடுக!
அரசு காலிப் பணியிடத்தில் 3 சதவிதத்தை மாற்றுத் திறனாளிகளை கொண்டு நிரப்பிடுக!
மேற்கண்ட ஒன்பது கோரிக்கைகளில் அடங்கி யுள்ள நியாயத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகள் இருந்தால் அதில் ஒன்று பிறப்பிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அத்தாயின் கடமை என்பது அந்தக் குழந்தையின்மீது கூடுதல் கவனம் செலுத்துவ தாகும்.
அரசு என்பதும் அந்தத் தாயின் இடத்தி லிருந்து மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினையைப் பார்க்க வேண்டாமா? காது கேட்பதில் என்ன 80 சதவிதம்? விசித்திர மான கேலிக் கூத்து!
இவை எல்லாம் ஒரு பிரச்சினையைத் தட்டிக் கழிக்க வைக்கப்படும் நிபந்தனைகளாகவே தெரிகிறது.
இவர்கள் எல்லாம் என்ன மிட்டா மிராசு தார்களா? செல்வந்தர்களா?
அரசு கொடுக்கும் உதவித் தொகையில் வாழ வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்படுபவர்களாயிற்றே! அவர்கள் விஷயத்தில் தேவையற்ற நிபந்தனைகளைத் திணிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் அய்யமில்லை.
இவர்களில் படித்தவர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய வேலை வாய்ப்பை அளித்திட என்ன தயக்கம்? அப்படி என்ன இவர்களுக்குப் பெரிய தொகை செலவாகப் போகிறது?
அரசு கீழே சிந்தும் பணத்துக்கு ஈடாகுமா இது? அரசு இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றிட முன்வர வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகம் மனிதாபிமான இயக்கமாகும் - மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமும் ஆகும்.
அந்த முறையில்தான் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் போராடும் இடத்திற்குச் சென்று நேற்று சந்தித்தோம். அவர்கள் நியாயமான கோரிக்கை களுக்காக திராவிடர் கழகம் உரத்த முறையில் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறது.
நீதிமன்றம் சென்றுதான் ஆக வேண்டும் என்றாலும், அந்த வகையிலும் உதவிட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.
அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு கருணையோடும், மனிதநேய உணர்வுடனும் அணுக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்து கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
26.3.2015
Read more: http://viduthalai.in/page-2/98557.html#ixzz3VV2Av9w5
Post a Comment