Search This Blog

17.3.15

எந்தக் கோவிலையாவது பார்ப்பான் கட்டியிருக்கிறானா?-கி.வீரமணி

எங்களை, எங்கள் தாய்மார்களை தாசிகள் என்று கூறும்
இந்து மதத்தை எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?


இராவண லீலா கண்ட அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவரின் இனமானப் பேருரை!


சென்னை, மார்ச் 17- எங்கள் தாய்மார்களை வேசிகள் என்று கூறும் இந்து மதம் எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் - ஒருக்காலும் நடக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கொடுங்கையூர் முத்தமிழ்நகர் பகுதியில் அன்னை மணியம்மையார் 37ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 111 ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நேற்று (16.3.2015) மாலை நடைபெற்றது.


நாட்டிலிருந்து ஜாதி வெறி, மத வெறி ஒழித்து மனித நேயத்தைக் காக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரையில் குறிப்பிட்டார்கள்.


அவரது உரை வருமாறு:-


தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுக்காலம் வாழ வைத்து, தன்னுடைய வாழ்க்கையையே தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்து, அதன்மூலம் திராவிட சமுதாயத்தினுடைய மானமீட்புக்குத் தன்னை ஒப்படைத்த புரட்சிகரமான தாயாக, திராவிடர் தாயாக திகழ்ந்த அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாளான இன்றைக்கு அந்த நினைவு நாளையும், ஏற்கெனவே கழகம் அறிவித்த திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டையும் இணைத்து நடைபெறுகிறது.


நண்பர்கள் இங்கே சொன்னதைப்போல, அன்னை மணியம்மையார் அவர்களுடைய 37 ஆவது ஆண்டு நினைவு நாள் ஆகும். அவர்கள் மறைந்து இன்றைக்கு 37 ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.


வடநாட்டைவிட தமிழ்நாடு மோசமாக ஆகியிருக்கும்!


தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று பலர் கேட்டார்கள். இருக்காது என்று சிலர் ஆருடம் கணித்தார்கள். இருக்கக்கூடாது என்று சிலர் ஆசைப்பட் டார்கள். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் எப்படி வாழ வைத்தார்களோ,


அதுபோலவே அன்னை மணியம்மை அவர்கள் மேலும் அய்ந்து ஆண்டு காலம்  மிக சோதனையான காலக்கட்டத்திலே இந்த இயக்கத்தைப் பாதுகாத்து, வளர்த்து, தமிழ் மக்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டு, பெரியார் பணி தொடரக்கூடிய அந்த நிலையை உருவாக்கியிருக்கிறார்.


இப்படிப்பட்ட ஒரு இயக்கம் இல்லாமலிருந்தால்,  பெரியார் பிறக்காமல் இருந்தால், அன்னை மணியம்மையார் அவர்கள் இந்தப் பணியைத் தொடராமல் இருந்தால், இந்தப் பணியை நாமெல்லாம் இந்தக் கொள்கையை நினைவுபடுத்திக் கொள் ளாமல், இந்த மண்ணைப் பக்குவப்படுத்தாமல் இருந்திருந்தால், வடநாட்டைவிட இது மோசமாக ஆகியிருக்கும்.
இப்போதே நம்முடைய மக்கள் திராவிடர் கழகம் நாடாளு மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னாலே கொடுத்த அந்த எச்சரிக்கையை அவர்கள் அலட்சியப்படுத்திய காரணத்தால்,
வளர்ச்சி வளர்ச்சி என்ற மாயையிலே  அவர்கள் மயங்கிய காரணத்தால் தான் இளைஞர்கள் பலர் இந்த உணர்வுகளைப்பற்றித் தெரியாத ஒரு சமுதாயமாக அவர்கள் சிமெண்ட் சாலையிலே கார் ஓட்டக்கூடியவர்கள் எப்படி ஏற்கெனவே இருந்த மேடு பள்ளங் களைப்பற்றிக் கவலைப்படாமல்,
இதுதான் என்றைக்கும் இருக்கின்ற நிலைபோல் இருக்கிறது என்ற நிம்மதியோடு அவர்கள் செல்வார்களோ, அதுபோன்று பல இளைஞர்கள் நினைத்த காரணத்தினாலே அவர்கள் வாக்களித்தார்கள்.


ஆனால், வெகுவிரைவில் தங்களுடைய சுய உருவத்தை மதவாத சக்திகளும், ஜாதி வெறி சக்திகளும் காட்ட ஆரம் பித்தன. திராவிடர் கழகத்தினுடைய வாக்கு என்றைக்கும் பொய்க்காது என்று சொல்லக்கூடிய அனுபவத்தை இன்றைக்கு நாடு பெற்றுக்கொண்டிருக்கிறது.


எல்லோரும் எங்கள் மேடைக்கு வருவதற்கு என்ன காரணம்? எதிரும், புதிருமாக இருக்கக்கூடியவர்களைக்கூட இதில் ஒத்தகருத்துள்ள அத்துணை பேரையும் நாங்கள்  அழைக்கின்றோம்.


இங்கே நான் பழைய தோழர்களையும் பார்க்கிறேன். புதிய இளைஞர்களையும் பார்க்கிறேன். தோழியர்களும் உற்சாகத் தோடு பணியாற்றுகிறார்கள். எங்களுடைய இயக்கம் என்பது, நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியபடி எல்லோருக்கும சொல்லு கிறோம் இங்கே இருக்கிற சில காவல்துறை நண்பர்கள் உள்பட.


இந்த இயக்கம் என்பது யாருக்கும் எதிரி அல்ல. அதேநேரத்தில் யாருக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தம் உடையதும் அல்ல. இதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


எல்லா மக்களுக்காகவும் பாடுபடுகின்ற இயக்கம் திராவிடர் கழகம்


எப்படி ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்தால், அந்தப் பள்ளிக்கூடம் எல்லோருக்கும் சொந்தம். அதிலே இன்னார் தான் படிக்கவேண்டும் என்கிற நியதிகள் கிடையாது. எல் லோருடைய கல்லாமையைப் போக்கி, அதை இல்லாமையாக ஆக்கி, நல்ல அளவுக்குக் கல்வி அறிவைப் பரப்புவதற்காக பள்ளிக்கூடம். எல்லோருக்கும் உரியது.


பள்ளிக்கூடம் வைத்த வர்கள் தனியாராகக்கூட இருப்பார்கள். ஆனால் பள்ளிக்கூடத் தில் மாணவர்களை சேர்க்கின்றபொழுது, எல் லோருக்கும் அங்கு உரிமையும், உறவும் உண்டு. அதுபோலத் தான் நண்பர் களே, திராவிடர் கழகம். இது எல்லா மக்களுக்கும் பாடு படுகின்ற இயக்கம்.


யார் யார் ஒடுக்கப்பட்டவர்களோ, யார் யார் மிதிக்கப்பட்ட வர்களோ, யார் யார் அழுத்தப்பட்டவர்களோ அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், சிறுபான்மைச் சமுதாயமாக இருந்தாலும், வேறு வகையாக இருந்தாலும் எல்லோருக்கும் கதவு திறந்திருக்கிற இயக்கம் ஒன்று இருக்கிறதென்றால், அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய பொது இயக்கமான இந்த கருஞ்சட்டை இயக்கம். இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மருத்துவமனை என்பது எல்லோருக்கும் பொது வானது. யார் யாருக்கு நோய் வந்திருக்கிறதோ, அவர்கள் எல்லாம் மருத்துவமனைக்குப் போவார்கள். கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த 108 இன்றும் அதன் பணி குறைய வில்லை. அதன்மூலம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுபோய் இன்றைக்கு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் கள்.


மருத்துவமனையில் சிகிச்சை செய்து அனுப்புவதுதான் மருத்துவர்களின் கடமை. மருத்துவமனைக்கு போவதற்கு கட்சி உண்டா? மருத்துவமனைக்கு பேதம் உண்டா? மருத்து வர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும்போது அவர்கள் எங்காவது வித்தியாசத்தைப் பார்க்கிறார்களா? அதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அதுபோல்தான் திராவிடர் கழகம்.


நாங்கள் யாரையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. யார் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் யார் மூடநம்பிக்கை நோய்க்கு ஆளாகி இருக்கிறார்களோ, யார் யார் ஜாதி நோய்க்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் யார் மதவெறி நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் சிகிச்சை கொடுக்கின்ற ஒரு மாமருந்து, மருத்துவ நிலையம்தான் தந்தை பெரியார் அவர்களாலே உருவாக்கப்பட்ட இந்த திராவிடர் கழகம்.


அதுபோலவே திடீரென்று தீப்பிடித்தால், எந்த நேரமும் தயாராக இருந்து அது இரவா? பகலா? வெயிலா? மழையா? அது எப்படிப்பட்ட பருவம்? அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் என்றைக்கும் தயாராக இருக்கிற அந்தத் தீயணைப்பு நிலையம்தான், காவல்துறைபோலவே 24 மணிநேரமும் பணியாற்றக்கூடிய ஒரு மிக முக்கியமான பணியாற்றுகின்ற தீயணைப்பு நிலையம்.


எங்கே தீப்பிடித்தாலும் சில மணித் துளிகளிலே ஆயத்தமாகிப் போவார்கள். அதுபோலவே, எங்காவது ஜாதி வெறி, மதவெறி, வகுப்பு வெறி என்று சொல்லிக்கொண்டு யாராவது வெறியாட்டம் ஆடினால், அதைத் தடுப்பதற்கு இந்த கருஞ்சட்டை தீய ணைப்பு நிலையம். சமுதாயத்திலே அந்தத் தீ பரவிவிடக் கூடாது என்று பெரியார் காலத்திலிருந்து செய்த பணிகளால் தான்,
இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் கலவரங்கள்; இரத்த ஆறு ஓடியது. பிணக்குவியல் மலையெனக் குவிந்தது.


தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது

ஆனால், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. இங்கிருந்து காவல்துறையினரை வெளி மாநிலங்களுக்கு அனுப்பினார்கள் உதவுவதற்காக. அப்போது பத்திரிகைகள், ஊடகங்கள் தெளிவாக எழுதின.
இதற்குக் காரணம் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல. இதற்கு மூலகாரணம் என்னவென்றால், தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது. ஆகவே, மதவெறிக் கலவரங்கள் இங்கே வராது என்று சொன்னார்கள்.


காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சே என்ற மராத்திப் பார்ப்பானுக்கு, ஆர்.எஸ்.எஸிலே பயிற்சி எடுத்த பார்ப் பானுக்கு, இந்து மகாசபைக்காரராகத் தன்னை முழுக்க முழுக்க ஆயத்தப்படுத்திக் கொண்ட நாதுராம் விநாயக் கோட்சே என்ற அந்த மராத்திய பார்ப்பான், காந்தியாரைக் கொலை செய்து விட்டு, திசை திருப்புவதற்காக, இந்து - முஸ்லிம் கலவரங்களை உருவாக்கவேண்டும் என்பதற்காக, கையிலே அவன் பச்சைக் குத்திக் கொண்டிருந்த பெயர் இஸ்லாமிய பெயராகும்.


1948 ஜனவரி 30 காந்தியார் சுடப்படுகிறார். அப்படிப்பட்ட நேரத்திலே இரண்டொரு நாள்களிலே இந்தியா முழுவதும் சுட்டவன் ஓர் இசுலாமிய சகோதரன் என்பது மாதிரி தவறாகப் பரப்பி விட்டார்கள்.


வட நாட்டிலே ஏற்கெனவே பேதங்கள். தென்னாட்டிலே அந்தப் பேதங்கள் கிடையாது. உடனடியாக பல கலவரங்கள். ஆனால், இங்கே இருந்தவர்கள் பதம் பார்ப்பதற்காக, ஒத்தி கைக் களமாக அதை மாற்றிக்கொண்டு மதக் கலவரங்களை வாணியம்பாடி, ஈரோடு, ஆம்பூர், திருவண்ணாமலை,
சென்னையில் ஒரு சில பகுதிகள் இப்படி எங்கெங்கெல்லாம் சிறுபான்மைச் சமுதாயச் சகோதரர்கள் வாழுகிறார்களோ, அங்கே இசுலாமியர்கள் தாக்கப்பட்ட ஒரு சூழ்நிலை அரசல்புரசலாக ஏற்பட்டது. வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல அது. அதை நிறுத்தக்கூடிய அளவுக்கு மக்களிடையே செல்வாக்கு வாய்ந்த ஒரு தலைவர் தேவை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் சொன்னால், இன்னொரு அரசியல் கட்சியில் உள்ளவர்கள் கேட்கமாட்டார்கள். அப்போது சென்னை ராஜ்யம்.


தமிழ்நாடு என்று அண்ணா வந்ததற்குப்பின், திராவிடம் வந்ததற்குபின் கிடைத்த பெயர் நமக்கு. அப்போது சென்னை ராஜ்யம். அந்த சென்னை ராஜ்யத்திலே முதலமைச் சராக இருந்தவர் மதிப்பிற்குரிய ஒழுக்கச் சீலர் காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள். ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்டவர். அவருடைய பெயரில் தான் நம்முடைய கலைஞர் அவர்கள் ஓமந்தூரார் தோட்டம் என்று பெயர் வைத்தார்கள்.


முதலமைச்சர் ஓமந்தூரார் என்ன செய்தார்? அவர் பேசவில்லை. மற்றவர்களை, வடநாட்டுத் தலைவர்களைப் பேசவைக்கவில்லை. வானொலி ஒன்றுதான் அப்போது பொது மக்களை இணைக்கக்கூடிய ஒரு சாதனம். இப்பொழுது இருப்பதைப்போல, ஊடகங்கள் வளர்ந்த பகுதிகள் கிடையாது. அந்த சூழ்நிலையில் நண்பர்களே, என்ன நடந்தது என்றால், திருச்சியில் இருந்த தந்தை பெரியாரைத் தான், திருச்சி வானொலி நிலையத்திற்கு அழைத்து அவர்களைப் பேச வைத்தார்கள்.


அய்யா, நீங்கள் பேசினால்தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள் என்று முதலமைச்சர் ஓமந்தூரார் சொன்னார்.


அப்பொழுது பெரியார் அவர்கள் சொன்னார், யாரும் தனிப்பட்ட மனிதர்கள்மீது கோபப்படக்கூடாது; உணர்ச்சி வயப்பட்டு நடந்துகொள்ளக்கூடாது; கலவரங்கள் கூடாது; துப்பாக்கியை நீங்கள் தண்டிக்க முடியுமா? என்று கேட்பதைப் போல, பொறுத்திருந்து அமைதியாக, ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டவேண்டிய தருணம் இது. மிகுந்த அளவிற்குப் பொறுப்புணர்ச்சியோடு பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.


அந்த உரை, இங்கே புத்தகமாகக்கூட கிடைக்கிறது. காந்தியார் கொலை முயற்சியைப்பற்றி ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. அதிலே பதிவாகியிருக்கிறது.

 

எங்கள் தாய்களையும், சகோதரிகளையும் தாசிகள் என்று அழைப்பதா?

அப்படி தந்தை பெரியார் அவர்கள், இந்த இயக்கம், இந்த மண்ணிலே ஜாதி வெறி, மதவெறி இவைகளுக்கு இடமில்லை. மனிதநேயம்தான் தேவை. மதவெறியை மாய்த்து, மனித நேயத்தைக் காப்பாற்றவேண்டும். இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளம். சுயமரியாதை இயக்கம் என்பது வெறும் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கக்கூடிய இயக்கம் அல்ல.
பார்ப்பனர்களை ஏன்?எதிர்க்கிறோம்? ஏன் பார்ப்பன மதமாகிய, சனாதன மதமாகிய இந்து மதம் என்கிற பெயராலே இன்றைக்கு அழைக்கப்படக்கூடிய பார்ப்பன சனாதன வேத மதத்தை, வைதீக மதத்தை எதிர்த்துப் பேசுகிறோம்? அதுதானே நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியதுபோல, எங்களை சூத்திரன் ஆக்கியிருக்கிறது; எங்கள் பெண்களை யெல்லாம் கொச்சைப்படுத்தியிருக்கிறது.

எங்கள் தாய்களை யும், சகோதரிகளையும் தாசிகள் என்று அழைத்திருக்கிறது. தேவடியாள் என்று எழுதி வைத்திருக்கிறானே! நல்ல ரத்தம் உடம்பில் ஓடக்கூடியவர்களுக்கு மான உணர்ச்சி இருக்கக் கூடாதா? தயவு செய்து நீங்கள் சிந்திக்கவேண்டும்.

தந்தை பெரியார் கேட்டார், அன்னை மணியம்மையார் அந்தப் பணியைத் தொடர்ந்தார். சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில், சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியிருக்கின்ற காலகட்டத்தில், எந்த நாட்டிலே இன்னமும் சூத்திரன் இருக்கிறான்; இன்னமும் பஞ்சமன் இருக்கிறான்; பறையன் இருக்கிறான்; பள்ளன் இருக்கிறான்; சக்கிலியன் இருக்கிறான்;
தொட்டால் தீட்டு என்று சொல்கிறவன் இருக்கிறான்; ஒதுங்கிப் போ என்று சொல்கிறான். தேநீர்க் கடையில் காசு கொடுத்துத் தேநீர் வாங்கிக் குடிக்கின்ற நேரத்தில்கூட, இரட்டைக் குவளை முறை ஏன் இருக்கிறது? ஜாதி இருக்கலாமா? இந்த ஜாதிக்கு என்ன அடையாளம்? ஏதாவது அறிவியல் அடையாளம் உண்டா? பின் ஏன் ஜாதி இருக்கிறது? ஜாதி இருக்கக்கூடியவர் களை நாங்கள் அழைக்கிறோர் என்று யாராவது சொல் லட்டுமே?
எங்களுடைய தோழர்கள் எல்லாம், 40, 50, 60 ஆண்டுகளுக்குமேலாக பழகியவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, இன்னார், இன்ன ஜாதி என்று சொல்ல முடியுமா?

இராவண லீலா நடத்தி இந்தியாவையே நடுநடுங்க வைத்தார் அன்னை மணியம்மையார்

பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கும்பொழுதுகூட, பார்ப்பனர்களுக்கு மட்டும் என்று. அவன் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு போனாலும் பரவாயில்லை; என்னை தாழ்ந்தவன் என்று சொல்கிறானே, என்னுடைய தாழ்வை அசிங்கப்படுத்துகிறானே, பிறகு அவனைக் கண்டிக்காமல் இருந்தால், என்னைவிட முட்டாள் வேறு எவன் இருப்பான்?


இதனை நீங்கள் நன்றாக சிந்திக்கவேண்டாமா? இதைத்தானே தந்தை பெரியார் கேட்டார், அன்னை மணியம்மையார் அவர் கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். இராவண லீலா நடத்தி இந்தியாவையே நடுநடுங்க வைத்தார்.


வடநாட்டில் உள்ள மக்களுக்கு இன்னமும் எழுச்சி வரவில்லை. இங்கே 1975 ஆம் ஆண்டு இராவண லீலா நடைபெற்றது. இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கினார்கள்.

டில்லியில் ராமலீலா நடத்தினார்கள்; சரி பரவாயில்லை. ஆனால், அந்த விழாவில், ராவணன் உருவத்தையும், கும்ப கர்ணன் மற்றும் அவர்களுடைய சகோதரர்களின் உருவத் தையும் கொளுத்தினார்கள்.

இதைக் கண்டித்து பல பேர் கேட்டார்கள். இந்திரா காந்திக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதினார்.

அவரால் தெளிவான பதில் சொல்ல முடியவில்லை. ஆதாரபூர்வமாக சொல்கிறேன். ஏனென்றால், 1975 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள், பெரியாரைப் பார்க்காமல், அன்னை மணியம்மையாரைப் பார்க்காமல், இளைஞர்களாக திராவிடர் கழகத்தில், இந்தக் கொள்கைகளை மட்டுமே பார்த்து வந்தவர்கள் இருக்கிறார்கள். இதுபற்றி தெரிந்துகொள்ளாத பொதுமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.


ராம லீலாவை நிறுத்தவேண்டும் என்று சொல்லி அன்னை மணியம்மையார் கடிதம் எழுதினார். அண்ணா அவர்கள் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்திலேயும் எழுதினார், தமிழிலேயும் எழுதினார்.


ராம லீலா என்று ஏன் கொண்டாடவேண்டும்? எங்களைப் புண்படுத்தாதா? பண்டித ஜவகர்லால் நேரு சிறையில் இருக்கும்பொழுது இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதுகிறார்:

வடநாட்டில் இருந்தவர்கள் ஆரியப் பரம்பரையினர்; தென்னாட்டில் இருந்தவர்கள் திராவிடர்கள். திராவிடர்களைக் கொச்சைப்படுத்தத்தான் குரங்குகள் என்றும், அவர்களையெல் லாம் அனுமார்கள் என்று சொல்லி, அசுரர்கள் என்றும் அழைத்தார்கள். எனவே, அவர்கள் இரண்டு பேருக்கும் நிற பேதம் இருந்தது; திராவிடர்கள் கறுப்பாக இருந்தார்கள்.


இவர்களுக்குள் தகராறு நடைபெற்றது. அதற்காகத்தான் ஆரியர்கள்  திராவிடர்களை குரங்குகள் என்று வருணித்து, ராமாயணம் என்பதே, ஆரியர் - திராவிடர் போராட்டம்.


அன்னை மணியம்மையார் எழுதிய கடிதத்தில், ராம லீலாவில், எங்கள் இராவணனை எரிக்கக்கூடாது என்று. இதற்கு இப்பொழுது புதிதாக ஒரு வியாக்கியானம் சொல்கிறார்கள். இராவணன் என்றால் தீமையாம்; ராமன் என்றால் நன்மையாம்.


எங்களிடம், ராமன் செய்த வேலையை விவாதம் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம். எவ்வளவு பெரிய ராமாயண பக்தனாக இருந்தாலும் சரி.

கடவுள் அவதாரம் என்று சொல்கின்ற ராமன் என்ன செய்தான்?

மார்ச் 8 ஆம் தேதிதான் உலக மகளிர் நாளைக் கொண் டாடினோம். மகளிர் உரிமைபற்றி பேசினார்களே; ராமா யணத்தில் ராமராஜ்ஜியம் என்று சொல்லி, கடவுள் அவதாரம் என்று சொல்கின்ற ராமன் என்ன செய்தான், அவனுடைய மனைவியை ஒழுங்காக நடத்தியிருக்கிறானா? கடவுள் அவதாரம் மனிதர்களைவிட, மிகவும் வழிகாட்டக்கூடிய அளவில் அல்லவா இருக்கவேண்டும்.


சீதையை மீட்கிறான், ராமனிடம் சீதை செல்லும்பொழுது, தொடாதே, எட்டி நில்! உன்னைப்பற்றி  எனக்கு நல்ல அபிப் பிராயம் இல்லை. ஊரில் உன்னைப்பற்றி தவறாக சொல் கிறார்கள். ஆகவே, நீ உண்மையானவள் என்று சொன்னால் என்ன செய்யவேண்டும் தெரியுமா? ஒரு பெரிய தீக்குண்டம் வளர்த்து, அந்தத் தீயில் நீ இறங்கவேண்டும்.


நீ பரிசுத்தமானவள்; கற்பு கெடாதவள் என்பதை நிரூபித்து நீ தீயில் இறங்கி வந்தால், நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறானாம்.
தாய்மார்களைக் கேட்கிறோம், பெரியவர்களைக் கேட்கி றோம், உங்கள் வீட்டில் யாராவது உங்களிடம் இப்படிக் கேட்டால், தீக்குண்டம் வளர்த்து அதில் இறங்கி வருகிறேன் என்று எந்தப் பெண்ணாவது சொல்வார்களா? இந்த 21 ஆம் நூற்றாண்டில்! அவர்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தாலும், காவல்துறை சும்மா இருக்குமா?


ஒரு பாட்டில் மண்ணெண் ணெய் கொண்டு சென்றாலே, பின்னாலேயே சென்றுவிடுமே காவல்துறை. தீயில் இறங்குகிறேன் என்று சொன்னால், சும்மா இருப்பார்களா? தீ உண்டாக்கியவனையும் பிடிப்பார்கள்; ராமன்போல கண்டிஷன் போட்டவனையும் கைது செய்து, முதல் குற்றவாளியாக்குவார்கள்.


ராமனிடம் என்ன ஒழுக்கம் இருக்கிறது? எதில் முன்மாதிரி யாக இருந்தான்? இது ஒரு கட்டம்.


நிறைமாத கர்ப்பணியாக இருந்த சீதையை, சந்தேகப்பட்டு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறான். அங்கேதான், ராமனுக்கு லவ, குசா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. யாராவது கர்ப்பிணியை காட்டிற்கு அனுப்பினால், அவனை நல்ல மனிதன் என்று சொல்வீர்களா?

ராமராஜ்ஜியத்தில் அவர் என்ன செய்தார்? உத்திர காண்டம்; ராமாயணத்தில் இருக்கின்ற கடைசி காண்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். எதுவும் நம் கற்பனையல்ல. அவன் எழுதி வைத்திருக்கிறான்.


இன்றைக்கு நாங்கள் ராமராஜ்ஜியத்தை நடத்துகிறோம் என்று சொல்கிறார்களே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பி.ஜே.பி., சிறீராம், ஹரே ராம், ஹே ராம் என்று சொல்கிறார்களே!


பாவம், காந்தியே ராமன் வந்து காப்பாற்றுவான் என்று நினைத்தார்.
அவர்,

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
சீதாராம் ஜெய சீதாராம்!
பஜ து ப்யாரே சீதாராம்!
ஈஸ்வர அல்லா தேரே நாம்!
சப்கோ சன்மதி தே பகவான்!
ரகுபதி ராகவ ராஜா ராம்!
பதீத பாவன சீதாராம்!


கடவுளுக்கே ஒரு கூட்டணி போட்டார். அப்படி இருந் தாலும் காந்தியை என்ன செய்தான் பார்ப்பான், உயிர் வாழ விடவில்லையே! கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக் கொன்ற தால்தானே அவர் 80 வயதைத் தாண்ட முடியவில்லையே!
இன்றைக்குக் கோட்சேவிற்கு சிலை வைக்கவேண்டும் என்று வெளிப்படையாக வந்துவிட்டார்கள். ஒரு பக்கம் கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் லண்டனில் காந்திக்குச் சிலை திறந்தால், அதற்கு நம்முடைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செல்கிறார். இதுதான் இரட்டை வேடம்.


பேசுநா இரண்டுடையாய் போற்றி போற்றி! ஆரிய மாயை பற்றி அண்ணா அவர்கள் எழுதினார்கள் பாருங்கள்; ஒரு பக்கம் இது நடக்கும்; இன்னொரு பக்கம் இன்னொரு வேலை நடக்கும்.


ஆகவே, பார்ப்பனர்கள் ஒரு சின்னக் குழந்தையை ராமனுக்கு முன்பாக போட்டு, ராமா, உன்னுடைய ஆட்சியில் எவ்வளவு பெரிய கேடு நடைபெறுகிறது பார்த்தாரா? என்கிறார்கள்.


ஒன்றும் புரியவில்லை, ராமனுக்கு! என்னவென்று கேட் கிறான்! எனக்குத் தெரிந்து நான் அதர்மம் எதையும் செய்ய வில்லையே என்கிறான். நான் ஆட்சிக்கு வந்த பிறகு அப்படி ஒன்றும் சட்டம் போடவில்லையே, நீங்கள் எல்லாம் பாதிக் கும்படியாக! பார்ப்பனர்களைப் பார்த்து, உங்களுக்காகத்தானே நான் ஆட்சியே நடத்துகிறேன் என்கிறான்.


அப்பொழுது பார்ப்பான் ஒருவன் சொல்கிறான், இதோ பார் என்னுடைய குழந்தை இறந்து போய்விட்டது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த ஊருக்கு வெளியில் சென்று பார்! அங்கே ஒருவன் கண்ணைமூடிக்கொண்டு கடவுளை நோக்கி தவம் செய்கிறான். அவன் பெயர் சம்பூகன், சூத்திரன், கீழ்ஜாதிக்காரன், நாலாஞ்ஜாதிக்காரன்.


அவன் தவம் செய்வது சாஸ்திரத்திற்கு விரோதமானது; மனுதர்மத்திற்கு விரோத மானது; பிராமண தருமத்திற்கு விரோதமானது; வருண தருமத்திற்கு விரோதமானது. மூடனானாலும், ஞானியானாலும், சூத்திரனுக்குப் பிராமணனே தெய்வம்.

எனவே, அவன் யாரைக் கும்பிடவேண்டும்;


இன்றைக்குப் பஞ்சாயத்துத் தலைவர்களிலிருந்து, நாடாளு மன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் எல்லாம் அரசியல் சாசன சட்டத்தின்மீதுதான் பதவிப் பிராமணம் எடுத்துக்கொள் வார்கள். அந்த அரசியல் சாசன சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மனுதர்மத்தை அங்கே வைக்கவேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்கள்.


யார்? டில்லியில், கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி, சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கக் கூடிய, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளில் ஒருவரான அசோக்சிங்கால், விசுவ இந்து பரிசத்தினுடைய உலகத் தலைவர்.
அந்தக் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் என்கிற பார்ப்பன அம்மையார், இவர்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், என்ன சொன்னார் தெரியுமா? பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று சொன்னார். அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மம் இருக்கவேண் டும் என்று சொன்னார்கள். மனுதர்மம் என்றால், குலதர்மம்.


நாங்கள்தான் இதனைப் புரிந்துகொண்டு, உங்களுக்குச் சொல்கிறோம். எங்களுக்கு இந்தப் பணியை விட்டால், வேறு பணி கிடையாதே! நாங்கள் அமைச்சராவதற்காகவா இதனைச் சொல்கிறோம். அப்படி அமைச்சராகி என்ன செய்ய முடியும்?

நான் வெறும் சூத்திரன்; அவர் மாண்புமிகு சூத்திரர்

பெரியார் கேட்டார், தி.மு.க. அமைச்சர்களை மேடையில் வைத்துக்கொண்டு பேசினார். நான் மந்திரியாவது முக்கியமல்ல; அதன்மூலம் சில காரியம் நடக்கவேண்டும்; நம்முடைய எதிரிகள் வரக்கூடாது என்பது வேறு விஷயம். ஆனால், இழி தன்மை ஒழியுமோ! சூத்திரப்பட்டம் ஒழியுமோ! என்று கேட்டார்.
இங்கே மந்திரி உட்கார்ந்திருக்கிறார்! அவரை அழைப்பவர்கள், மாண்புமிகு மந்திரியார் என்று கூப்பிட வேண்டும். எனக்கும், அவருக்கும் என்ன வித்தியாசம்? நான் வெறும் சூத்திரன், சட்டப்படி. அவர் மாண்புமிகு சூத்திரர். இவ்வளவுதானே வித்தியாசம் என்று பெரியார் கேட்டார்.

சூத்திரன் என்றால் என்ன பொருள்?

சூத்திரன் ஏழு வகைப்படும்: 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.  2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்.  3) பிராமணனிடத்தில் பக்தி யினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.

மேற்கண்ட நிலை மீண்டும் வரவேண்டும் என்பதற்காகத் தான் ஆர்.எஸ்.எஸ். அதை மீண்டும் உருவாக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வினுடைய இன்னொரு திட்டம். என்னுடைய தாய் யார்? என்னுடைய சகோதரி யார்? என்னுடைய மகள் யார்? இந்த உணர்வு வராதா? இதைக் கேட்பது என்ன பெரிய தேசியக் குற்றமா?

தந்தை பெரியார் என்னும் மாமனிதர் பிறந்திருக்காவிட்டால், திராவிடர் இயக்கம் தோன்றியிருக்காவிட்டால், இந்த மேடை உங்களுக்குக் கிடைத்திருக்காவிட்டால், இதனைச் சொல்வதற்கு நாதியுண்டா? எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், இந்த இழிநிலை போய்விடுமா? அய்.ஏ.எஸ். அதிகாரியாகி, அய்க் கோர்ட் ஜட்ஜாக ஆகி, அய்.பி.எஸ். ஆகி, அய்.ஜி.யானாலும் இந்த இழிநிலைப் பட்டம் போகுமா?

முதலில் மசூதிகளை இடிப்பேன்; கிறிஸ்தவர்களை உதைப்பேன் என்கிறார்கள். நேற்றுகூட ஒரு சர்ச்சை உடைத்துவிட்டு, அனுமார் சிலையை வைத்துவிட்டார்கள்; இவையெல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வந்துள்ளன. ஒரு புரோக்கர் சாமி என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார், மசூதிகளையும், சர்ச்சுகளையும் வெறும் கட்டடங்கள் என்று சொல்கிறார்.
அவற்றை உடைத்துப் பாருங்களேன் என்னாகும் என்று தெரியும்? ரத்த ஆறு ஓடும். இரண்டு பேர் மோதிக் கொண்டால், ஆரிய நரி ரத்தம் குடிக்கும்.

இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள் யார்? கிறிஸ்தவர்கள் யார்?

எங்களுக்குள்ள கவலையெல்லாம், இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் என்ன ஹெலிகாப்டர்மூலம் அரேபிய நாட்டிலிருந்து வந்தவர்களா? இங்கே இருக்கின்ற கிறிஸ்தவர்கள் யார்? இஸ்ரேல் நாட்டிலிருந்து வந்தவர்களா? பத்து தலைமுறைக்கு முன்பு, நம்முடைய சொந்த மூதாதை யர்கள். இருபது தலைமுறைக்கு முன்பு, நம்முடைய சொந்தக் காரர்கள்.


அவன், தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன், தொடக்கூடாதவன், எட்டி நில் என்று நீ சொன்னாய். ஆகவே, நீ அப்படி சொன்னதினால், அவன் எவ்வளவு காலம் பொறுத்திருப்பான். ஆடு, மாடுகளைக்கூடத் தொடலாம், எங் களைத் தொடக்கூடாதா? நாயைப் பக்கத்தில் வைத்திருக்கிறீர் கள், பூனையைப் பக்கத்தில் வைத்திருக்கிறீர்கள். ஆறறிவு படைத்த என்னைத் தொட்டால் தீட்டு என்கிறாயே, இது என்ன நியாயம் என்று கேட்டான்.


வெளியில் இருந்து வந்தான் பாருங்கள், அந்த மதத்துக் காரன், என்னை வாருங்கள் என்று கட்டிப் பிடித்துக் கொண் டான்; கட்டிப் பிடிக்கிறவனோடு நான் போகிறேன் என்று அவன் போய்விட்டான். அவனுக்கு மனிதத் தன்மை, சுயமரி யாதை வந்து அவன் சென்றுவிட்டான். இன்றைக்கு நீ அதனை ஒழிக்கவேண்டும் என்கிறாயே!


எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்தையும் நாங்கள் ஏற்காதவர்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அதேநேரத்தில், மற்றவர்களையெல்லாம் மனிதர்களாக மதிக்கின்ற இயக்கம், இந்த இயக்கம். யாரையும் அழிக்கக்கூடாது என்று நினைக்கின்ற இயக்கம் இந்த இயக்கம்.  நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


மனுதர்மத்தை சட்டமாக்கு என்று சொல்கிறார்களே, சிறுபான்மை சமுதாய மக்கள் எல்லாம் இந்துக்கள்தான் என்று நேற்றுகூட ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசுகிறாரே!


கோல்வால்கர் எழுதிய புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறார்?

கோல்வால்கர் எழுதிய நாம் என்கிற புத்தகத்தினுடைய ஒரு பகுதி; பக்கம் 65. பாருங்கள், அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:
இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமு தாயத்தில், மிக முக்கியமாக இருக்கக்கூடிய உங்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்கள் நீங்கள் எல்லோரும் அந்நிய மக்கள். நாட்டில் வாழும் அன்னிய மக்களுக்கு, இரண்டே வழிகள்தான் உள்ளன.


ஒன்று, அவர்கள் சமுதாய இனத்தில் ஒன்றென கலந்து, அவர்கள் பண்பாட்டை தழுவுதல் வேண்டும். அல்லது சமுதாய இனத்தின் தயவு தாட்சண்யத்தில் வாழுபவராக இருக்கவேண் டும். அதுதான் தர்க்கரீதியாக உட்பட்ட சரியான முறையாகும்.

ஒன்றுதான் மிக முக்கியம்,

இந்துஸ்தானத்தில் வாழும் இந்துக்கள் அல்லாதார், இந்து பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, இந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, இந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது.


அதாவது, அவர்கள் இந்த நாடு, அதனுடைய பழைமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மைகளையும், நன்றிகெட்ட தன்மையையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதியான எண்ணத்துடன், அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளவேண்டும். ஒரே வார்த்தையில் கூறவேண்டு மானால், அவர்கள் அன்னியராக இருப்பதை விட்டொழித்து விடவேண்டும்.


அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதிலேயோ அல்லது பிரஜா உரிமையோ கூட அவர் அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து, எதனையும் கோர முடியாத மக்களாக வாழுதல் வேண்டும்.
ராமனைக் கும்பிட்டால்தான், இஸ்லாமியர்களாகிய நீங்கள் இந்த நாட்டில் இருக்க முடியும். கிருஷ்ணனை நீங்கள் வணங்கினால்தான், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் இருக்க முடியும் என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். ஆதாரம் இருக்கிறதே!


இதை எவ்வளவு விரைவாக நம்முடைய ஆட்சியில் செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் செய்யவேண்டும் என்பது தான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அதனுடைய அரசியல் வடிவம்தான் பா.ஜ.க.
மத்திய ஆட்சியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.தானே! யாருக்கு எந்த மந்திரி பதவியைக் கொடுப்பது; மற்ற மற்ற பிரச் சினைகளில் முடிவு எடுப்பது எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.தானே!


ஒரு அமைச்சர் பேசுகிறார், நான்கு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்; 10 பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதற்காகப் பிள்ளைகள் பெறுவதில் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு இந்துவும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார். எல்லோரையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை, இந்துக்கள் மட்டும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டுமாம்! இன்னொரு சங்கராச்சாரி என்ன சொல்கிறார், 10 குழந்தை களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று.


மருத்துவமனைகளில் இல்லாத கருவிகள்கூட சாமியார்கள் ஆசிரமத்தில்! 

சாமியார் பயல்களுக்கு குழந்தைகள் பெறுவதைப்பற்றி என்ன அக்கறை இருக்கிறது. இவன்தான் முற்றும் துறந்த முனிவனாகப் போய்விட்டானே! ஆக, எல்லா சாமியார் பயல்களும் வடநாட்டில் ஆசிரமங்களில் பரிசோதனைக் கூடங்களையே வைத்திருக்கிறார்கள்.


மருத்துவமனைகளில் இல்லாத கருவிகளைக்கூட வைத்திருக்கிறார்கள். அங்கேயுள்ள ஆசிரமத்தில் கருக்கலைப்பில் இருந்து, புதுப்புது அறுவை சிகிச்சை செய்யக்கூடிய கருவிகளையெல்லாம் வைத்திருக் கிறார் என்பதை தொலைக்காட்சிகளில்கூட ஒளிபரப்பினார்கள்.
மனுதர்மத்தில்,


11 ஆவது அத்தியாயம்; 84 ஆவது சுலோகத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்,
பிராமணன் பிறப்பினாலேயே தேவர்களுக்கும் பூசிக்கத் தக்கவனாய் இருக்கிறான். மனிதர்களுக்குள் மிகவும் உயர்ந்திருக்கிறான் என்பது கேட்கவேண்டியதில்லை. இன்னும் உலகத்தாருக்கு நம்பத்தகுந்த பிராமணனாக இருக்கிறான். அவ்விஷயத்தில், அவன் உபதேசிக்கிற வேத மந்திரமே காரணம். அதுமட்டுமல்ல, அவனை யாராவதுத் திட்டினால், தண்டனை சாதாரணமானதல்ல!


சூத்திரன், துவிஜர்களை கொடுமையாகத் திட்டினால், அவனைவிட, இவன் தாழ்ந்தவிதமான காலில் பிறந்தவனா கையால், அவன் நாக்கை அறுக்க. துவிஜர்களின் பெயர், ஜாதி இவைகளைச் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குலம் உள்ள எஃகு கம்பியைக் காய்ச்சி, எரிய எரிய வைக்க.


நீ இதனைச் செய்யவேண்டும் என்று பிராமணனுக்கு தர்மத்தை உபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணெய்யை காய்ச்சி ஊற்றவேண்டியது. இதைத்தான் அரசியல் சட்டமாக கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுதான் இந்துராஷ்டிரம்; அதுதான் மோடி ராஜ்ஜியம்.


எங்களிடம் எவனும் கம்பியை நீட்ட முடியாது!

நீங்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந் தீர்களேயானால், நாங்கள் விழிப்புணர்வு மாநாட்டைப் போட்டுத் தட்டி தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாலும், நீங்கள் திரும்பித் திரும்பிப் படுத்துக் கொண்டே இருந்தால், எங் களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. எப்பொழுது நாங்கள் கறுப்புச் சட்டை போட்டோமே, எங்களிடம் எவனும் கம்பியை நீட்ட முடியாது!
பெரியாருடைய தொண்டர்கள் நாங்கள். அப்படி கடைசி கட்டம் வந்தால், ஒன்றுக்கொன்று நேரே முடித்துவிடுவோம். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்கள் கதி என்னாகும்? உங்கள் சந்ததி நிலை என்னாகும்?

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், படிப்பைக் கொடுக் காதே!
சூத்திரனுக்குக் கற்பு கிடையாது! சூத்திரப் பெண்கள் எங்களுக்கே உரியவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறானே!


தாசி முறையை தந்தை பெரியார் வந்த பிறகுதானே ஒழித்தார்கள். இந்த இயக்கம் இல்லை என்றால், அந்த நிலை ஏற்பட்டிருக்குமா? இப்பொழுது தேவதாசி முறை இருக்கிறதா? கோவிலில் சென்று ஆட முடியுமா?
முன்பெல்லாம் எங்கள் பெண்களைத்தானே ஆட வைத்தார்கள். இப்பொழுது பார்ப்பனப் பெண்கள் ஆடுகிறார்கள் என்றவுடன், அவர்கள் பரத நாட்டியக் கலைக்கு புத்துயிர் ஊட்டுகிறார்கள் என் கிறார்கள். நம் பெண்கள் ஆடினால், சதுர் கச்சேரி ஆடு கிறார்கள் என்றார்கள்.

கீதையின் மறுபக்கம்

என்னுடைய கையில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல். இந்த நூல் லட்சக்கணக்காக இதுவரையில் பரவியிருக்கிறது. இந்த நூல் முதல் பதிவு எப்பொழுது வெளிவந்தது தெரியுமா? 1998 ஆம் ஆண்டு. இந்த நூல் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்பொழுது சில புதிய பகுதிகளைச் சேர்த்து புதிய பதிப்பாக வெளிவந்திருக்கிறது.


பகவான் கிருஷ்ணன் 10 அவதாரம் எடுத்தார். நாவலர் சொல்லியதுபோன்று, சுற்றிச் சுற்றி நம்மூரிலேயே 10 அவதாரத்தையும் எடுத்தார். அதிலே கிருஷ்ண அவதாரம் ஒரு அவதாரமாகும்.

அந்த அவதாரம் அர்ஜூனனுக்கு உபதேசித்தது.
சதுர் வர்ணம் மயாசிருஷ்டம்

நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். நான் நினைத்தாலும் இதனை மாற்ற முடியாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.


மனுர்தமம், கீதை தான் முக்கியம் இந்த மத்திய ஆட்சிக்கு என்று வந்துவிட்டால், இந்த ஆட்சியினுடைய தன்மை, அதிகாரம் பெருகினால், இந்த நாட்டில் மற்றவகள் எல்லோரும்  பழைய காலத்து அடிமைகள் போல இருக்கக்கூடிய சூழ்நிலைதானே ஏற்படும்.


இதனை எதிர்த்துப் பேசக்கூடிய உரிமை இருக்குமா? எங்களைத் தவிர இதைப் பேசுவதற்கு ஆள் இருக்கிறதா? தயவு செய்து இளைஞர்களே, இதனை நீங்கள் நினைத்துப் பாருங்கள். 10 அவதாரம் என்று சொல்கிறார்களே,
10 அவதாரத்தில் ஒன்று மீன் அவதாரம், ஆமை அவதாரம், பன்றி அவதாரம்;
இப்பொழுது பன்றிக் காய்ச்சல் பரவியிருக்கிறதே, மற்ற நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பன்றிக் காய்ச்சல் என்று சொல்லலாம்; ஆனால், நியாயமாக நம் நாட்டில் அதை எப்படி அழைக்கவேண்டும்; மகாவிஷ்ணு காய்ச்சல் என்று அழைக்கவேண்டும். மகாவிஷ்ணுதானே பன்றி அவதாரம் எடுத்திருக்கிறார். பன்றியை விரட்டக்கூடாது; வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து வைக்கவேண்டும் அல்லவா!


ஹிந்து மித்தாலஜி

ஹிந்து மித்தாலஜி Hindu mythology (இந்து புராணங்கள்) இது 2 நூற்றாண்டுக்கு முன்னால் எழுதப்பட்ட பழைய புத்தகம். அவர்கள் சமஸ்கிருதத்தில் படித்துவிட்டு, நாம்தான் படிக்கக்கூடாது, வெளளைக்காரன் படிக்கலாம். அவன் படித்தது விஷ்ணு புராணம், மச்ச புராணம் என்று 18 புராணங்கள்குறித்து எழுதியிருக்கிறார்கள்.


5 அவதாரம். ஒன்று இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், அதற்கும் முன்னால் பலராமன் அவதாரம், அப்படியே வரிசையாக கடைசியாக பத்தாவது அவதாரம். கல்கி அவதாரம், நரசிம்ம அவதாரம். பாதி அப்படி, பாதி இப்படி. தூணை உடைத்தார், சிங்கம் முகத் தோடு வந்தார் என்று எழுதிவைத்துள்ளார்கள்.


இதில் கிருஷ்ண அவதாரம், பலராம அவதாரம் இரண்டு அவதாரத்திலும் என்ன எழுதியிருக்கிறான் தெரியுமா? இதைச் சொல்வதற்கே எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால், தரக்குறைவாக பேசுவதோ, வார்த்தைகளைக்கூட உச்சரிக்காதவர்கள் நாங்கள்.


ஆனால், நாம் இப்போது பகவான் கதையை அல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம். மனிதன் கதையை பேசவில் லையே. மகாவிஷ்ணுவின் கிருஷ்ணன், பலராமன் அவதாரம். தேவர்கள், இந்தப் பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலே போய் முறையிடுகிறார்கள். நிரம்ப அக்கிரமங்கள் நடைபெறுகின்றன என்று படுத்திருக்கும் மகாவிஷ்ணுவிடம் முறையிடுகிறார்கள். என்னய்யா நடக்கிறது என்று கேட்கிறார்.
இந்த சத்திரியர்களும், சூத்திரர்களும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். கூட்டணி வைத்து விட்டார்கள். நமக்கு ரொம்ப ஆபத்து வந்துவிட்டது. அதிலேயே எழுதியிருக்கிறார்கள். அவர்களை அழிக்கவேண்டும். நீங்கள் அவதாரம் எடுத்து வரவேண்டும்.


உடனே அவதாரம் எடுத்துவருவதற்கு நான் செய்கிறேன் என்று கூறி, நான் இரண்டு அவதாரம் எடுத்து அனுப்புகிறேன். ஒரு அவதாரம் சத்திரியர்களை அழிப்பதற்காக பலராம அவதாரம். இன்னொரு அவதாரம் இந்த கிருஷ்ண அவதாரம் எடுத்து நான் அழிக்கிறேன். என்று சொல்லி என்ன செய்கிறான் என்றால், இந்த நூலில் உள்ளதை அப்படியே படிக்கிறேன் பாருங்கள்.

The Vishnu purana from which most following...


அப்படி விஷ்ணுவின் இரண்டு மயிரைப்பிடுங்கி எறிந்தா னாம். விஷ்ணு புராணத்தில் இருக்கிற செய்தி இது. கடவுள் எவ்வளவு முக்கியமான வேலையை செய்திருக்கிறான். அவமானப்பட வேண்டியிருக்கிறது. அதிலே ஒன்று வெளளை. இன்னொன்று கருப்பு. நமக்குத்தான் வெளளையும், கருப்பும் சேர்ந்திருக்கிறது. அவர் கடவுள், ஒரே நிறத்தில் இருக்க வேண்டாமா? அவருக்கே இந்த வெளளை கருப்பு பிரச்சினை அப்பவே வந்திருக்கிறது.
இந்த மனிதன் கடவுளை எப்படி உருவாக்கினான் என்றால், கடவுளை உண்டாக்கியவன் மனிதன்தான் என்று பெரியார் சொன்னார். உனக்கு என்னென்ன ஆசாபாசங்கள் இருக் கிறதோ, அத்தனையையும் கடவுளில் சேர்த்துவிட்டாய். கதை எழுதும்போது இவன் அதைச் சொல்லிவிட்டான். அந்த வெளளை மயிரைப் பிடுங்கி போட்டான் பாருங்கள் அவன்தான் பலராம அவதாரம்.


இந்தக் கருப்பு மயிர் இருக்கிறது பாருங்கள்,  அதுதான் கிருஷ்ண அவதாரம். கிருஷ்ணன் என்றாலே கருப்பு என்று வடமொழியிலே அர்த்தம். நம்முடைய கடவுள் யாரென்று வெளிநாட்டுக்காரன் எழுதியிருக்கான் பாருங்கள். இந்த கடவுள் எல்லாம் இப்படிப் பிடுங்கிப்போட்டுத்தான் வந்தார்கள். அதிலே கருப்பு இந்தக் கடவுள்,


வெளளை இந்தக் கடவுள் என்றால், எனக்கு என்ன கவலை என்றால், எங்க அப்பாவுக்கு பெயர் கிருஷ்ணசாமி. நானல்லவா பேச வேண்டும். எங்க அப்பனுக்கு நான் மரியாதை காட்ட வேண்டாமா? ஏனென்றால், நம்மை எவ்வளவு முட்டாள் ஆக்கியிருக்கிறான் பாருங்கள்.


ஆண்கள் எதிலிருந்து வந்தார்கள்?


நல்ல வேளை ஒரு இராமசாமி வந்து என்னைக் காப்பாற் றினார். நம்மை காப்பாற்றினார். உங்களைக் காப்பாற்றினார். அவர் சாமியில்லை நமக்கு. வழிகாட்டி. அவர்தானே நமக்கு மான உணர்வு கொடுத்து இந்தக் கேள்வியைக் கேள் என்று சொன்னார்.


கிருஷ்ண அவதாரத்தில் உபதேசித்தானாம், பெண்கள் எல்லாம் பாவ யோனியில் இருந்து வந்தவர்கள்; ஆண்கள் எதிலிருந்து வந்தார்கள்? என்ற இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார்களா?


ஆகவேதான், இந்த வர்ணம், குலதர்மம், மனுதர்மம் இதேபோல, சாஸ்திரங்கள், கீதைகள் இவைகளை வைத்துக் கொண்டு, இந்துராஷ்டிரம் என்ற பெயராலே வருணசிரம தருமத்தை, ஜாதியை நிலைநாட்டவேண்டும் என்று வருகிற பொழுது, ராமராஜ்ஜியம், கதையினுடைய ஆரம்பித்திற்குப் போகலாம்,


சம்பூகன் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்கிறான், தவம் செய்கிறான்.
ராமன் சென்று அவனிடம் கேட்கிறான், நீ என்ன செய்கிறாய் என்று.
சம்பூகன், நான் தவம் செய்கிறேன், கடவுளைத் தேடுகிறேன் என்றான்.
உடனே ராமன் விசாரணையே செய்யவில்லை, கத்தியை எடுக்கிறான், சம்பூகன் கழுத்தை வெட்டுகிறான்; கண்ட துண்டமாக வெட்டுகிறான்.
சம்பூகன் இறந்தவுடன், இறந்துபோன பார்ப்பனச் சிறுவன் உயிர் பெற்று எழுகிறானாம்.


சூத்திரனைக் கொன்றால், பிராமணச் சிறுவன் உயிர் பெற்று எழுந்தானாம்.
இதற்கு என்ன அர்த்தம்? ராமாயணத்தினுடைய தத்துவம் என்ன? ராமராஜ்ஜியத்தினுடைய தத்துவம் என்ன? ஜாதியைக் காப்பாற்றுவதுதானே!

எந்தக் கோவிலையாவது பார்ப்பான் கட்டியிருக்கிறானா?


எனவே, ஜாதியைக் காப்பாற்ற, மதத்தைக் காப்பாற்ற ராமனை, கிருஷ்ணனை, கடவுளை, புராணத்தை, வழிபாட்டை பயன்படுத்துகிறார்கள்.

எங்களுக்கு அவர்கள் மேல் என்ன கோபம்? நாங்கள் மணி ஆட்டவேண்டும் என்றா நாங்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும் என்று சொல்கிறோம். எந்தக் கோவிலையாவது பார்ப்பான் கட்டியிருக்கிறானா? தயவு செய்து நீங்கள் இதனை எண்ணிப் பார்க்கவேண்டும்.


ஆகவேதான் நண்பர்களே, ஜாதியை ஒழிக்கவேண்டு மானால், மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், எல்லோரும் சமம்; யாரும், யாரோடும் கைகோர்த்துக் கொண்டிருங்கள். அவர்கள் எந்த மதம் என்பது முக்கியமல்ல; எந்த மனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியம். நீங்கள் சகோதரர்களாக எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இருங்கள் என்று சொல்வதற்குத்தான் இந்த இயக்கம்.

ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம்! சிறுபான்மை, பெரும்பான்மையல்ல. எல்லா மக்களும் குடிமக்கள். அப்படிப் பட்டவர்கள் வாழவேண்டும். இன்னுங்கேட்டால், எந்த மக்களுக்கும் அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடாது. எல்லோருக் கும் எல்லாமும் கிடைக்கவேண்டும். அனைவருக்கும் அனைத் தும் என்பதுதான் இந்த இயக்கம்.


அதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்; அதைத்தான் அன்னை மணியம்மையார் முன்னெடுத்துச் சென்றார். அதைத்தான் இந்த இயக்கம் மக்கள் மத்தியிலே பரப்பிக் கொண்டிருக்கிறது.


எனவே, இந்த இயக்கம் உங்களுடைய அறிவுக் கண்களைத் திறக்கின்ற இயக்கம்; உங்களை இருட்டிலிருந்து வெளிச்சத் திற்குக் கொண்டு வரக்கூடிய இயக்கம்; இந்த இயக்கத்தை ஆதரியுங்கள் என்று கேட்டு, சிறப்பாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த இந்தப் பகுதித் தோழர்களுக்கு நன்றியை தெரிவித்து, வாழ்த்துகளைக் கூறி முடிக்கிறேன், வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


முன்னதாக, வீ.பிரபாகரன் தலைமையில் சொ.அன்பு வரவேற்றார். வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டிஸ், வட சென்னை மாவட்டச் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவர், மாவட்டச் செயலாளர் வெ.மு.மோகன்,
மாநிலத் தொழிலாளரணி செயலாளர் செல்வராசு, மேனாள் மாவட்டச் செயலாளர்கள் தங்க மணி, கி.இராமலிங்கம், தெ.சு.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகக் கொடியை மகளிர் பாசறை விமலா ஏற்றிவைத்தார்.

சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை தொடக்கவுரை ஆற்றினார்.  தொடக்க நிகழ்வாக பகுத்தறிவு செயல்விளக்க நிகழ்ச்சி யாக ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நடைபெற்றது.


மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமைக்கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், பெரியார் சட்ட உதவி மய்ய அமைப்பாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் மாநாட்டு உரையாற்றினார்கள்.

கலந்துகொண்டவர்கள்


ஆவடி மாவட்டச் செயலாளர் பா.தென்னரசு, வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் புரசை அன்புச் செல்வன், செயலாளர் தளபதிபாண்டியன், வட சென்னை இளைஞரணி துணைச் செயலாளர் தே.ஒளிவண்ணன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,

மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோ.வீ.இராகவன், சா.தாமோதரன், பன்னீர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த துரைசாமி, ராசு, அரிதாஸ், கழக மகளிரணியைச் சார்ந்த தங்க.தனலட்சுமி, சுமதி, லதா, அமுதவள்ளி, மரகதமணி, ஷெரினா கோபால்,  செயலட்சுமி ராசு, அம்முசுதா வீரா, கஸ்தூரி, பெரியார் களம் இறைவி, மீனாட்சி, கணேசன்,

கருத்தோவியன், கோ.கதிரவன், கருங்குழி கண்ணன், இளைஞரணி ஜோதி இராமலிங்கம், பாலமுருகன், பொழிசை கண்ணன், பெரியாரணி விசுவநாதன், மாணவரணி வ.தமிழ்ச்செல்வன், வ.கலைச்செல்வன், பார்த்திபன், இந்திரஜித், பாலமுருகன், பெரியார் பிஞ்சுகள் வி.பி.அறிவுச்செல்வன், வா.நிலா, வா.மணிமாறன், பா.நதியா, மூர்த்தி மற்றும் கொடுங்கையூர், முத்தமிழ்நகர்,
எருக்கஞ்சேரி, கண்ணதாசன்நகர் பகுதிகள் மற்றும் வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம் மாவட்டக்கழக நிர்வாகிகள் 
ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டு நிறைவாக வாசு நன்றி கூறினார்.

                      --------------------------”விடுதலை” 17-03-2015

41 comments:

தமிழ் ஓவியா said...

நீதிபதி திரு கே. சந்துரு அவர்களே, இது சரியா?


சமூகநீதிக்காகப் போராடுபவர்களை பொய்யர்கள் என்பதா?

நீதிபதி திரு கே. சந்துரு அவர்களே, இது சரியா?

தமிழர் தலைவர் அறிக்கை



உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுபவர்களைப் பொய்யர்கள் என்றும், அறியாமை காரணமாக செய்கிறார்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு அவர்கள் எழுதிய கட்டுரைபற்றியும், தமிழ்நாட்டில் சமூக நீதி வரலாறு. அதன் காரணமாக விளைந்த மாற்றங்கள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. கே. சந்துரு அவர்கள் தி. இந்து (தமிழ்) ஏட்டில் போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு எனும் தலைப்பில் நீண்டதோர் கட்டுரையை எழுதியுள்ளார். (16.3.2015)

1) அந்தக் கட்டுரையில் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 19இல் தலைமை நீதிபதியைச் சந்தித்த சமூக நீதிக்கான போராட்டக் குழுவின் அமைப்பாளர்கள் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்ததாகத் தெரிகிறது. முதல் கோரிக்கை என்னவென்றால், இனி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்குப் பரிந்துரைக்கப்படும் நபர்களின் பட்டியலில் பார்ப்பனர், முதலியார், கவுண்டர், பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெறக் கூடாது என்பதே; இவர்களின் இரண்டாவது கோரிக்கை இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத சாதியைச் சேர்ந்தவர்கள்தான் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது என்று தொடக்கத்திலேயே குறிப்பிட்டுக் கட்டுரையைத் தொடர்கிறார்; ஆனால் நீதிபதி இதுகுறித்து எந்தக் கருத்தையும் விளக்கத்தையும் மிக சாமர்த்தியமாகத் தவிர்த்தது ஏன் என்று தெரியவில்லை. அதில் கை வைத்தால் இந்தக் கட்டுரையே கலகலத்துப் போய் விடும் என்ற எண்ணத்தால் இருக்கக் கூடும்.

2) தமிழகத்தைப் பொறுத்த அளவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக பட்சம் 69 சதவீத இடஒதுக்கீடு என்று திரு கே. சந்துரு அவர்கள் குறிப்பிட்டது சரிதானா? உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் இப்படிக் குறிப்பிட்டு இருப்பது ஆச்சரியமானது; அது குறைந்தபட்சமே தவிர, அதிகபட்சமல்ல; திறந்த போட்டியிலும் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே!

இன்னொன்றையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இட ஒதுக்கீட்டுச் சலுகை என்பது ஒவ்வொரு சாதிக்கும் அளிக்கப்படும் சலுகையல்ல, பல சாதிகளைக் கொண்ட ஒவ்வொரு பிரிவுக்கும் அளிக்கப்படும் சலுகையே என்கிறார். இந்த நீதிபதி பார்வையில் இடஒதுக்கீடு என்பது சலுகையாம்! அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்தில் சலுகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது? இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையே தவிர சலுகையல்ல - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே சமூகநீதிக்குத்தானே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

Justice, Social, Economic and Political என்று தானே சமூகநீதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனை சலுகை என்று நினைக்கிறாரா நீதிபதி?

இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4)(5)16(4) இவையும் கூட எந்த இடத்திலும் சலுகை என்று கூறவில்லையே.

• Article 15(4) in The Constitution of India

Nothing in this article or in clause ( 2 ) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes

• Article 16(4) in The Constitution of India

Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favor of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State

இதில் கூறப்பட்டுள்ள Adequately என்ற சொல்லுக்குப் பொருள் தெரிந்தவராகத் தானே நீதிபதி திரு கே. சந்துரு அவர்கள் இருக்க முடியும்? Adequate என்பது இலத்தீன் சொல்லான Adequatus என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் Till it is equalised மற்றவர்களுக்கு சமமாகும்வரை என்றுதானே பொருள்? இதனை அறியாதவரா நீதிபதி?

வழக்குரைஞர்களைப் பொய்யர்கள் என்று கூறுவதா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவிகளுக்குச் சிபாரிசு செய்யப்படுவதில் பார்ப்பனர் களுக்கு, உயர் ஜாதியினருக்கு அதிகமான இடங்கள் பரிந்துரைக்கப்பட்டது தொடர்பாக வழக்குரைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் - உண்மையை அறியாமலோ அல்லது மறைத்தோ, அல்லது தாமாக ஏற்படுத்திக் கொண்ட மறதியின் காரணமாகவோ பொய்ப் பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ளனர் என்று அக்கட்டுரையில் குறிப் பிட்டுள்ளார்.

வழக்குரைஞர்களின் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர் களுக்குக் கருத்துரிமை உண்டு. ஆனால் ஒட்டு மொத்தமாக வழக்குரைஞர்கள் பெரும் அளவு திரண்டு ஒரு போராட் டத்தை சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு நடத்தும் பொழுது, அவர்களின் சுயமரியாதை உணர்வைப் பாதிக்கும் வகையில் கிண்டலும் கேலியும் கலந்த நாகரீகமற்ற சொற்களைக் கையாண்டுள்ளதோடு, அவர்களைப் பொய்யர்கள் என்று குறிப்பிட்டுவது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவருக்குத் தகுதியாகுமா என்ற கேள்வி கண்டிப்பாக எழத்தான் செய்கிறது.

ஏன் எதிர்ப்புப் போராட்டம்?

44 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதி மன்றத்தில் 6 பேர் பார்ப்பனர்கள் என்பது விகிதாச்சாரப்படி பார்த்தால் அதிகம் என்பதை நீதிபதி ஒப்புக் கொள்வார் என்றே நம்புகிறோம்.

இந்த நிலையில் மேலும் அந்தக் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களைப் பரிந்துரைப்பது மனுதர்மம் அல்லவா?

தலைமை நீதிபதியின் தந்திரம்

தமிழ் ஓவியா said...

இதில் தலைமை நீதிபதி மேற்கொள்ளும் தந்திரத்தை நீதிபதி கே. சந்துரு அவர்கள் வசதியாக மறைப்பானேன்? ஒரே பட்டியலாக அனுப்ப வேண்டும் என்று வழக்குரை ஞர்கள் கோருவதும், இல்லை இல்லை இரண்டுப் பட்டிய லாகத்தான் அனுப்புவேன் என்று தலைமை நீதிபதி மறுப் பதும் ஏன்? இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள சூட்சுமம் கட்டுரை எழுதும் நீதிபதி அவர்களுக்குத் தெரியாதா?

தமிழ் ஓவியா said...

ஒரே பட்டியலில் 6 உயர் ஜாதிக்காரர் என்றால் கண்ணை உறுத்தத்தான் செய்யும். அதையே பிரித்து (Split) தனித்தனியாக ஒவ்வொரு பட்டியலும் தாங்கள் விரும்பும் உயர் ஜாதியினருக்கு மூன்று மூன்றாக அனுப்பினால் அது அவ்வளவாக வெளிப்படாது என்கிற தந்திரத்தை தலைமை நீதிபதி கையாளுகிறார் என்பதைத் தெரிந்த நிலையிலும் தலைமை நீதிபதிக்கு திரு. சந்துரு அவர்கள் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும், பின்னணியும் என்ன என்ற கேள்வி, சந்தேகம் எழத்தான் செய்கிறது.

அகில இந்திய அளவில் பார்க்கப்பட வேண்டும்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றிப் பேசும் பொழுது அகில இந்திய அளவில் அல்லவா பேசப்பட வேண்டும்! அகில இந்திய அளவில் மொத்த நீதிபதிகள் எத்தனைப் பேர்? அதில் இடஒதுக்கீடு பெறாத உயர் ஜாதியினர் எத்தனைப் பேர், பட்டியல் ஜாதியினர் எத்தனைப் பேர்? பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்? என்று புள்ளி விவர அடிப்படையில் விளக்கி இருக்க வேண்டாமா?

மாவட்ட நீதிபதிகள், முதுநிலை உரிமையியல் நீதிபதிகள் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை எல்லாம் சேகரித்து விலாவாரியாக எழுதத் தெரிந்த திரு. சந்துரு அவர்கள் அகில இந்திய அளவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்பற்றி புள்ளி விவரங்களுடன் ஏன் எழுத முன்வரவில்லை?

அப்படி எழுதினால் அவர் எடுத்துக் கொண்ட நோக்கத் தின் முனை மழுங்கி விடக் கூடுமே!

நீதியரசர் அவர்கள் பட்டுக்கோட்டைக்கு வழிகேட் டால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்று கூறுவது நியாயம்தானா? திசை திருப்புவது நல்லதல்ல.

திராவிடர் கழகத்தின் முக்கிய பங்கு!

சென்னையில் 44 நீதிபதிகளில் 9 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதன் காரணம் சென்னையில் சமூக நீதிக் கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து சமூக நீதி இயக்கமான திராவிடர் கழகம் போராடி வந்ததால் தான்; இதற்குப் பெயர்தான் மண்ணின் மணம் (Soil Psychology) என்பது! அகில இந்திய அளவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 24-அய் தாண்டவில்லையே! இந்தியா முழுமையும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 24 என்பது குறித்து கவலையைத் தெரிவித்திருக்க வேண்டாமா?

கண்டதே காட்சி - கொண்டதே கோலம்!

கீழ் மட்ட நீதிபதிகள் என்று வரும் பொழுது பணி மூப்பு அடிப்படையிலும், தேர்வின் மூலமும் அவர்கள் தேர்ந்தெ டுக்கப்படுவதையும், அந்தத் தடைகள் ஏதுமின்றி தலைமை நீதிபதியும் அதற்கடுத்து மூத்த இரு நீதிபதிகளும் கண்டதே காட்சி - கொண்டதே கோலம் என்ற போக்கில் உயர்நீதி மன்றத்திற்கான நீதிபதிகளைப் பரிந்துரை செய்வதும் சம நிலையில் வைத்துப் பார்க்கத் தக்கது தானா?

2014இல் என்ன நடந்தது?

2014 ஜனவரியில் 12 பேர்களைக் கொண்ட பட்டியல் ஒன்றை தலைமை நீதிபதி தலைமையிலான குழுவினர் தயாரித்த போதும், பெரும் அளவில் எதிர்ப்பு வெடித்ததே! இன்னும் சொல்லப் போனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள மாண்பமை சி.எஸ். கர்ணன் அவர்களே திறந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் மன்றத்தி லேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததை மறக்க முடியுமா?

தேசியவாதியான மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்களே சினந்து வழக்கைத் தொடுத்தாரே - நினை விருக்கிறதா?

அந்தப் பட்டியலிலும் பார்ப்பனர் ஆதிக்கம்தான் தலை தூக்கி நிற்கிறது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பாதி பேருக்கு மேல் 10 முறைகூட உயர்நீதிமன்றங்களில் வழக்காடியவர்கள் இல்லை என்கிற போது எந்தத் தகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு அவர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்?

இன்றைக்குப் போராடும் வழக்குரைஞர்களை பொய்யர்கள் என்று கூறும் கனம் நீதிபதி திரு. கே. சந்துரு அவர்களே அன்றைக்கும் இதே வழக்குரைஞர்கள் போராடித்தானே தடுத்து நிறுத்தினர் - திராவிடர் கழகத்தின் பங்கும் அதில் மிகுதியாக உண்டே!

நூறு ஆண்டுகளுக்குப்பிறகு தானே ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழைய முடிந்தது?

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் நூறு ஆண்டு களுக்குப் பிறகு தானே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் நீதிபதியாக உள்ளே நுழைய முடிந்தது?

இந்தச் சமூக நீதி வரலாற்றையெல்லாம் கீழே தள்ளி விட்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீதிபதி ஒருவர் திசை திருப்பி எழுதுகிறார் என்பதுதான் வேடிக்கை!

நிதானம் தேவை

உண்மையை அறியாதவர்கள் என்றும், மறதி நோய்ப் பீடித்தவர்கள் என்றும்; பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் என்றும் நீதிபதி திரு. கே. சந்துரு அவர்கள் மனம் போன போக்கில் எழுதுவது வழக்குரைஞர்களை மட்டும் அல்ல, சமூக நீதிக்காகப் பாடுபடும் அனை வரையுமே தான்! நிதானம் தேவை என்று நாகரிகமாக எச்சரிக்க வேண்டியது நமது கடமையாகும். சென்னை தலைவர் 17.3.2015 திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/98041.html#ixzz3UdxiOHFb

தமிழ் ஓவியா said...

நல்ல முடிவு!

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் இனம் சேர்க்கப்பட்டது செல்லாது

உச்சநீதிமன்றம்

புதுடில்லி, மார்ச் 17- மத்திய அரசு கடந்த ஆண்டு ஜாட் இனத்தையும் இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (17.3.2015) விசாரணைக்கு வந்தது. அப்போது இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓ.பி.சி.) பட்டியிலில் ஜாட் இனத்தை சேர்த்த மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98043.html#ixzz3Udy7jrAx

தமிழ் ஓவியா said...

காந்திமீதான அவமதிப்பு தொடர்கிறது
காந்தியார் பிறந்த நாள், கோவா அரசின் நாட்காட்டியில் இல்லை

பானாஜி மார்ச் 17_ கோவா அரசு தயார் செய்த நாட்காட்டி மற் றும் நாட்குறிப்பேடுகளில் காந்தியார் பிறந்தநாள் விடுபட்டிருந்தது. இதன் மூலம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவா மாநில பாஜக அரசு, இந்த ஆண்டிற் கான நாட்காட்டி தயா ரித்து வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் காந்தியார் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை. இதனால் கோவா மாநில அரசு அலுவலகங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி வேலை நாளாக கணக் கிடப்பட்டுள்ளது. கோவா மாநில அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கைக்கு, கோவா மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் துர்காதாஸ் காமத் கூறும்போது, காந்தியார் பிறந்த நாளான அக்டோ பர் 2-ஆம் தேதியை கோவா மாநில அரசு விடுமுறை நாட்கள் பட் டியலிலிருந்து நீக்கி யுள்ளது.

இதன்மூலம் பாஜக அரசின் மறைமுகத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடக் கம்தான். வரும் காலத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட் சேவின் பிறந்த நாளை, விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார். இது தொடர் பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, தேசத் தந்தையான காந்தி யாரின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும். இந்த நாளை விடுமுறைப் பட்டியலிலி ருந்து நீக்கக் கூடாது. கடந்த ஆண்டும் காந்தி யார் பிறந்த நாளில் பள் ளிக்கு வருமாறு மாண வர்கள் கட்டாயப்படுத் தப்பட்டார்கள். இது போன்ற செயலைக் கை விட வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98046.html#ixzz3UdyKWfqY

தமிழ் ஓவியா said...

மேற்கு வங்கத்தில் ஒரு கேவலம்?

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம், கங்கனாபூர் பகுதியில் உள்ள கிறித்தவர்கள் நடத்தும் பள்ளியுடன் கூடிய ஆசிரமத்துக்குள் புகுந்து நான்கைந்து காலிகள் கொண்ட ஒரு கும்பல் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியின் கழுத்தைப் பிடித்து நெரித்து, அவரைக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சியைக் கூட்டாகச் செய்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 12 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் என்ற தகவல் நாணித் தலை குனிய வேண்டிய ஒன்றாகும்.

குறிப்பாக மதவாத சக்திகள் தலை தூக்கிய சிறிது காலமாகவே இது போன்ற மாற்று மதத்தைச் சேர்ந்த நிறுவனங்களைச் சூறையாடுவது, அம்மதத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது என்பது தொடர் கதையாகவே இருந்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பெண் சந்நியாசி சாத்வி ரிதம்பரா என்பவர் வழக்கமாக மேடைகளில் பேசுவது என்ன தெரியுமா?

இந்து ஆண்களே! முஸ்லிம் பெண்களைக் கர்ப்பிணியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும்! என்று பேசி வருகிறார். ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி பேசுகிறார்; எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் பெண்தானே! அந்த உணர்வை - அவர்களைப் பிடித்து ஆட்டும் அடிப்படை மதவாதம் மழுங்கடித்து விடுகிறது என்பதுதான் உண்மை.

1998 செப்டம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசம் ஜாடியா கிராமம் கிறித்தவர்கள் நடத்தும் ஒரு மருத்துவமனையில் என்ன நடந்தது? 17 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டதால் பலருக்கு மறந்து கூடப் போயிருக்கலாம்; ஆனால் நடைபெற்ற சம்பவமோ அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாத ஒன்றே!

நள்ளிரவில் கதவைத் தட்டி உள்ளே நுழைந்த சங்பரிவார்க் காமவெறியர்கள் 4 கன்னிகாஸ்திரிகளைக் கதறக் கதறச் சூறையாடினார்களே - நினை விருக்கிறதா!?

இதுகுறித்து பிஜேபியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் வைகுந்தலால் சர்மா என்பவர் (எம்.பி. சர்மா) என்ன கூறினார் தெரியுமா? இப்பொழுது நினைத்தாலும் குருதி உறைந்து விடும். தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்றுமிக்க இந்து இளைஞர்களின் கோபம்! என்று இந்தக் கேவலத்தை மிகப் பெரிய தேசப்பற்றின் வீர சாதனைபோல் பேசினாரே!

மேற்கு வங்காளத்தில் நடந்ததைப் பார்த்தால் அன்று மத்தியப் பிரதேசத்தில் நடந்தது போலவே நள்ளிரவில் அதே பாணியில்தான் நடந்திருக்கிறது.

இரண்டொரு நாட்களில் அனேகமாக இதன் பின்னணித் தகவல்கள் அப்பட்டமாக வெளி வந்து விடக் கூடும்.

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகே இந்தியா முழுமையும் மதக் கலவரங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் மிக அதிக மாகவே தலை விரித்தாடத் தொடங்கிவிட்டன.

இதில் வெட்கக் கேட்டுக்குப் பிறந்த அவலம் என்னவென்றால் பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமாக இருந்த பிஜேபி மற்றும் சங்பரிவார்களை சேர்ந்த பெருந் தலைவர்கள், கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன், இந்தியாவின் துணைப் பிரதம ராகவும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக வும் ஆனார்களே! வேறு எந்த நாட்டிலாவது இந்த ஆபாசச் சகதி வழிந்தோடுமா!?

இன்று அவர்கள் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி அதிகார பூர்வமாகவே 120 கோடி மக்கள் திறனைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டதே!

இந்த அதிகாரப் பீடத்தின் தலைமை அமைச்சராக வந்துள்ளவர் யார் என்றால், ஒரு மாநிலத்தில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது முதல் அமைச்சராக இருந்தவர்

நாடு எந்தப் பாதையில் எக்கேடு கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ளது பார்த்தீர்களா? இது பாரதப் புண்ணிய பூமியாம்.

இது போதாது என்று இந்தியாவையே இந்து நாடாக ஆக்கப் போகிறார்களாம். எப்படி ஆக்குவார்கள்? இரவோடு இரவாக ஒரு சட்டத்தைப் (ளிக்ஷீபீவீஸீணீஸீநீமீ) பிறப்பித்தா?

மன மாற்றத்தால் நிகழ வேண்டிய ஒன்றை மதம் பிடித்த யானைபோன்ற மனிதர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன், எப்படியும் அது நிகழ வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு சூழலில் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள் - அந்தத் தவறை வெகு மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.
எவ்வளவு சீக்கிரத்தில் விடிவு ஏற்படுமோ, அவ் வளவுக் கவ்வளவு நாட்டுக்கும், நாகரிக வாழ்வுக்கும் நல்லது.
மக்கள் மத்தியில் மதவாதப் போக்கினைத் தோலுரிக் கும் கருத்தும் பிரச்சாரமும் திட்டமிட்ட வகையில் நடத்தி ஆக வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும் பயனை விளைவிக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/98029.html#ixzz3UdysLeNh

தமிழ் ஓவியா said...

மூட மக்கள்

ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/98028.html#ixzz3Udz33A9L

தமிழ் ஓவியா said...

இளைஞர்களே, பாடம் கற்றுக் கொள்ளுங்கள்


கடந்த நான்கு நாள்களுக்கு முன் வெளிவந்த ஒரு செய்தி மிகவும் வேதனையையும் வெட்கத்தையும் தரக் கூடிய செய்தியாக அமைந்தது.

தேனி நகரத்தின் ஒரு பகுதி பழனிசெட்டிப்பட்டி என்பதாகும். அதில் ஓய்வு பெற்ற ஓர் ஆசிரிய மூதாட்டி வசித்து வருகிறார்.

அவருக்கு மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் இருவர் எல்லோரும் ஒன்றாகவே வாழுகிறார்கள்.

இந்த இரு பேரப் பிள்ளைகளும் படிக்கிறார்கள். பாட்டியிடம் பாசத் துடன் பழகக் கூடியவர்கள்தான். பாட்டி தரும் பணம் - எடுக்கும்பணம் - இவற்றால் ஆடம்பரமான, வாழ்க் கையை வாழுவது, வெளியில் தங்குவது, கண்டபடி செலவழிப்பது - இப்படி ஒரு உல்லாசப் பொழுது போக்கில் - ஆடம்பர வாழ்வு மோகத் தில் திளைத்திருக்கிறார்கள்.

தற்போதைய இளைஞர்களைத் தவறான முறையில் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கியிருக்கும் சின்னத் திரை விளம்பரங்கள் (இதனால் பல குடும்பங்களில் குடும்ப இல்லத்தரசி களும்கூட சீரழியும்! செய்திகள் ஒரு தனி சோகக் காவியம் படைக்க வேண்டிய தாகும்) போதாக்குறைக்கு நாசப்படுத்தும் குடி - டாஸ்மாக் மதுக் கடைகள் - மதுப் பழக்க வழக்கங்கள் - இதனால் இவர் களுக்குப் பணத் தேவை அதிகமாகி யிருக்கிறது.

அதனைப் பெற இளைஞர்களேகூட பல தீய வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறார்கள்!

தேனி - பழனி செட்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியையின் பரிதாபக் கதைக்கு வருவோம்.

அந்தப் பாட்டியின் பணத்தைக் களவாடி செலவிட இந்த அண்ணனும் - தம்பியும் (பேரப்பிள்ளைகள்) திட்டம் போட்டனர். பாட்டி தூங்கும்போது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்று விட்டு, இவர்களும் துக்கத்தில் பூனைகள் போல் கலந்து கொள்கிறார்கள். பிஞ்சு வயதில் ஏறிய நஞ்சு - மனப்பான்மை - வித்தியாசமான நடத்தை மூலம் - விசாரணையில் இவர்கள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள்.

தங்களது கொலைக் குற்றத்தை தாங்களே ஒப்புக் கொண்டு விடுகிறார்கள்!

இந்தச் செய்தி கேட்டு தன்னுடைய தாய், தன்னுடைய மாமியார் கொலை செய்யப்பட்டது - தனது இரு பிள்ளை களாலே என்ற வேதனை, குடும்பத்தில் இருந்த மூதாட்டியாரை இழந்ததை விடப் பெருத்த அவமானம் நிறைந்த கொடுமை என்பதால் அவ்விருவரும் தற்கொலை செய்து மாண்டு விடுகிறார்கள்!

என்னே விபரீதம்! வருந்தத்தக்க முடிவு. வேதனை இந்த வாழ்ந்த குடும்பத்திற்கு. இச்செய்தியால் இந்த இளை ஞர்கள் இனி, பாடம் பெற்று தான் என்ன பயன்?

இந்த சம்பவம் பலருக்குப் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு ஆகும்!

ஆடம்பர வாழ்க்கை ஒரு மனிதனை கள்ளனாக்கும், குடிகார னாக்கும், சூதாடியாக்கும், சுய கவுரவம்பற்றி மறக்கச் செய்யும்; எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்காத வெறித்தனத்திற்கும் தள்ளி விடும்.

எளிமை வாழ்வும், சிக்கனமும் மனிதர்களை வாழ வைக்கும்; தன் மானம் காக்கும்; தகைசால் மனிதர் களாக உயர்த்தும்!

எனவே இளை ஞர்களே, இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!



- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/98030.html#ixzz3UdzFeQJ3

தமிழ் ஓவியா said...

பிள்ளையார்

பிள்ளையார் பிரம்மச்சாரி என்றும் சொல்கிறார்கள். அவருக்கு 15 மனைவிகள் உண்டு என்று விநாயகப் புராணம் கூறுகிறது. சித்தி, புத்தி, வல்லபை, மேகதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோர்த்தமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, கமத்திபை, நந்தினி காமதை ஆகியோர் மனைவிகளாம்.
எது உண்மை? புராணம் என்றால் சுத்த உளறல் - பிதற்றல் என்பது விளங்கவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/98045.html#ixzz3Ue1B9U38

தமிழ் ஓவியா said...

தங்கம் கடத்தல் அபின் கடத்தல் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கலாம்; இந்தியாவிலிருந்து சாமி சிலைகள் கடத்தல் என்பதில் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாகும். இந்தியாவின் மிகப் பழமையான 11 சாமி சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளன. விஷ்ணு, துர்க்கை, சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தங்கம் கடத்தல் அபின் கடத்தல் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கலாம்; இந்தியாவிலிருந்து சாமி சிலைகள் கடத்தல் என்பதில் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாகும். இந்தியாவின் மிகப் பழமையான 11 சாமி சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளன. விஷ்ணு, துர்க்கை, சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

நமது கழகத் தோழர் திருவொற்றியூர் கணேசன் அவர்களுக்கு பி.ஜே.பி. குறுஞ்செய்தி ஒன்றை (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளது; என்ன தெரியுமா?

From Dm Member Welcome to BJP your primary membership no is 1073426799 sms your Name, Address & Pin Code (If possible Email & Voter ID) to 09242492424 to complete the process என்பதுதான் அந்த குறுஞ்செய்தி.

திராவிடர் கழகத் தோழருக்கே குறுஞ்செய்தி அனுப்பி முதற்கட்ட உறுப்பினராக ஆகியுள்ளீர் கள். மேலும் உங்கள் முகவரி உள்ளிட்ட தகவல் களை அனுப்புங்கள் என்று தகவல் தெரிவிக் கின்றனர் என்றால், மற்றவர்களை உறுப்பினர் ஆக்குவதுபற்றிக் கேட்கவேண்டுமா?

கையில் கிடைத்த கைப்பேசி எண்களைக் கொண்டு இந்தக் கைங்கரியத்தை நடத்தி வருவது வெட்கக்கேடு அல்லவா!

பி.ஜே.பி உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

உஷார்! உஷார்!

இப்படி குறுஞ்செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட எண்ணுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98075.html#ixzz3UkGS75zp

தமிழ் ஓவியா said...

பத்தினி - பதிவிரதை

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச் சொற்களுமல்ல. - (விடுதலை, 4.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/98061.html#ixzz3UkH51Slc

தமிழ் ஓவியா said...

தாலியாம் தாலி!

இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள். தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காய மாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.

கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன? எனவே, நாங்கள் சொல்லுகிறோம். அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்து, இன்னும் கேட்டால், பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லை. ஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம். இங்கேயே இருக்கும் சாதாரணமாக, இங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார். அது அவருடைய கருத்து.

புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)

ஒன்றும் கிடையாது. புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!

ஆனால், இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லை, நீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள். எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லை. அவர்கள் வாக்கு வாங்க வேண்டும். அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.

தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி விருந்து. இதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன். வணக் கம். நன்றி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg1AAWa
தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!

இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்) மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம். அதுமாதிரி சொல்லுங்கள். பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது? ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்) சிந்திக்க வேண்டாமா? ஆகவே, தான் நண்பர்களே, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg5mEhs

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சம்பிரதாயம்

ஒரு முறை அர்ச் சனை செய்தாலே தேங் காய் பிரசாதமாகி விடும். இதை நிர்மால்யம் என் பர். மீண்டும் அந்தத் தேங்காயைப் பயன் படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது. ஓர் ஆன்மீக இதழ்

ஏன் படைத்தால் என்ன? எப்படியும் சுவாமி சாப்பிடப் போவதில்லை. அதில் என்ன சம்பிரதாயம்?

Read more: http://viduthalai.in/e-paper/98120.html#ixzz3UpgYTcmD

தமிழ் ஓவியா said...


மாட்டாரா?
காந்தியாரைப் பற்றித் தவறுகள் பேசியதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூமீது தமிழருவி வழக்குத் தொடுத்துள்ளாராம்.
அவரைவிட ஆளும் பிஜேபி பிரமுகர்கள் காந்தியாரைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுகிறார்களே - அவர்கள்மீதும் வழக்குத் தொடுக்கப் பட வேண்டாமா? பா.ஜ.க. பாசம் இன்னும் அறுபட வில்லையோ!

Read more: http://viduthalai.in/e-paper/98118.html#ixzz3UpgwVGrl

தமிழ் ஓவியா said...

உயர் தர்மம்!

இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக் கிறார்கள்! - (விடுதலை, 11.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/98122.html#ixzz3UphJpjc0

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டைச் சேர்ந்த நோபல்விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்து ராயல் சொசைட்டியில் தலைவரானது வரவேற்கத்தக்கது

மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸில் மூடத்தனங்களுக்கு வக்காலத்தா? இராமகிருஷ்ணன் கண்டனம்

இளைஞர்களே விஞ்ஞான மனப்பான்மை கொள்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்தில் புகழ் பெற்ற ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் வலியுறுத்திவரும் பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தி வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தில் உள்ள பிரபல ராயல் சொசைட்டியின் தலைவராக தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்ற ஒருவர், அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் திரு. வெங்கி ராமகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் தேர்வு செய்யப் பெற்றுள்ளார் என்பது மிகவும் மகிழத்தக்கது ஆகும்.

இதற்குமுன் ஆங்கிலேயர்களான அறிவியல் மேதைகள் மட்டுமே இந்த பெயர் பெற்ற ராயல் சொசைட்டியின் (ஆராய்ச்சி நிறுவனம்) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இப்போது தமிழ்நாட்டுக்காரர் (இவர் பார்ப்பனர்) ஒருவர் வந்துள்ளது ஒரு சிறப்பு வரலாறு ஆகும்.

அவர் தன் மனதில் பட்டதை அறிவியல் சிந்தனை களின் அப்பட்டமான பிரதிபலிப்பாக பளிச் என்று கூற என்றுமே தயங்கியதில்லை.

முன்பு அவருக்கு நோபல் பரிசு அறிவித்து, பெற்ற நிலையில், பலரும் அவரைப் பேட்டி கண்டபோது, அவர் மூடநம்பிக்கைகள் நம் இந்திய நாட்டில் மண்டிக் கிடப்பதைச் சாடினார்; அதோடு ஜோதிடம் என்பது ஒரு போலி விஞ்ஞானம்; அது அறிவியலோ உண்மையோ ஆகாது என்ற கருத்தினை அழுத்தத் திருத்தமாகக் கூறினார். நாமும் அதனை எடுத்துப் போட்டு, வரவேற்று எழுதியுள்ளோம்.

இப்போது அவர் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் தலைவராகி - அறிவியல் உலகத்தின் தலை சிறந்த அறிவாளி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் சாட்டையடி!

அவர் தேர்வு செய்யப்பட்டவுடன் லண்டனில் உள்ள ஹிந்து நாளேட்டின் செய்தியாளர் பார்வதிமேனன் அவர்களிடம் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அரசியலோ, அல்லது மதங்களின் லட்சியங்களோ, அறிவியலுக்குள் ஒரு போதும் வலுக்கட்டாய மாக நுழைந்து விடக் கூடாது.

மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், கலந்து கொண்டு முட்டாள்தனமான பல கருத்துக்களை, அரசியல் கட்சியின் லட்சியங்களாகக் கொண்டுள்ள சிலர் ஊற்றுவாய் மாதிரிப் பேசியுள் ளார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், இந்திய அறிவியல் மாநாட்டினை நடத்திய அந்த அமைப்பாளர் இதற்கு சரியான மறுப்புத் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனியாக இருந்துள்ளார்கள். அப்போதே ஒரு வெளிப் படையான மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு எந்த அரசாங்கத்துடனும், ஏன் இந்த (இந்திய) அர சாங்கத்துடன் கூட எந்தப் பிரச்சினையும் கிடையாது.

அரசியலும் மதக் கொள்கைகளும் அறிவியலுக் குள் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைக்கப்படுவதை எவரும் ஏற்கவே கூடாது என்று ஓங்கி மண்டையில் அடித்ததைப் போலக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, அம்மாநாட்டில் மரபு அணுக்களும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் எங்கள் இந்து புராணங்களில் எங்கள் கடவுள்களாலேயே செய்து காட்டப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானிகள் ஏதோ புதுமை போல கூறுகிறார்கள் என்று அறியாமையான கருத்தும், அறிவியல் துறை அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க.) இதுபோல கருத்துக்களைக் கூறியும், திட்டமிட்டே சில புராணக் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அறிவியலுக்கு மதச் சாயம் பூசியது மகா வெட்கக் கேடு! உலகமே கை கொட்டிச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தியது; இதைத்தான் நோபல் பரிசு பெற்று, இங்கிலாந்தில் ராயல் சொசைட்டி தலைவராக ஆகியுள்ள திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற இந்திய விஞ்ஞானியே துணிந்து கூறி இந்தப் புரட்டை உடைத்துத் தள்ளியுள்ளார்.

முதுகெலும்போடு இப்படி அப்பட்டமான உண்மை களை விஞ்ஞானிகள்தான் வெளியிட வேண்டும். இதற்குப் பிறகாவது ஹிந்துத்துவா கருத்துக்களை விஞ்ஞானத்திற் குள், ஊடுருவச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தங்கள் மரியாதையையும், மதிப்பையும் ஆட்சிப் பொறுப் பில் உள்ளோர் காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

அதைவிட வேடிக்கை இன்று எப்படிப்பட்ட காவிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்களாகி அங்கே பேசுகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு: நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி. கட்சி உறுப்பினர் பி.பி. சவுகான் என்பவர் நேற்று (19.3.2015) ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

புனித கங்கையைக் கொண்டு வந்தவர் யார்?

புனித கங்கை ஆற்றினை இந்த பூமிக்கு யார் அழைத்துக் கொண்டு வந்தது? ஏன் அவர் அதை அழைத்து வந்தார்? அப்படி அழைத்து வந்ததின்நோக்கம் என்ன? அதன் விளைவாக குளியலில் என்ன விளைவை அது ஏற்படுத்தியது? என்னே அறிவுக்கொழுந்து கேள்வி! பதிலளித்த இணையமைச்சர் சன்வார் லால் ஜாட் என்பவர் கங்கையை பகீரதன் என்ற ராஜா அழைத்து வந்தார் (மேல் உலகத்திலிருந்து) மக்களின் சேமத்திற்காக உடனே சபாநாயகரான அம்மையார் சுமித்ரா மகாஜன் (இவரும் பிஜேபிதான்) இது என்ன? இப்படி ஒரு கேள்வியா என்று குட்டி உள்ளார்!

மத்திய அரசு அலுவலகங்களில் பினாயிலுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார் - அதனால் செலவு மிச்சமாகுமாம். இப்படி மோடி தலைமையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடக்கும் பா.ஜ.க.வின் ஆட்சி யின் அலங்கோலங்களை கண்டு அவனியும் அறிவுலகமும் நாணி, நகைக்கிறதே!

இளைஞர்களே, திருந்துவீர்!

இணையத்தினையே பார்த்து ஏமாந்து, வளர்ச்சி மாயையில், மயக்கத்தில் மோடிக்கு - மாற்றத்திற்கென வாக்களித்து குளிக்கப் போய் சேற்றை வாரி பூசிக் கொண்ட இளைஞர் உலகமே!

இனியாவது, இத்தகைய காட்சிகள், நிகழ்வுகள், விமர்சனங்களைக் கேட்டு, கண்ட பிறகாவது, பகுத்தறிவோடு, விஞ்ஞான மனப்பான்மையோடு விழித்து எழக் கூடாதா?

எவ்வளவு பெரிய தேசிய அவமானத்தை நம் நாடு சந்தித்துக் கொண்டுள்ளது என்பதை இனியாவது உணர்ந்து தக்க பரிகாரங்களைத் தேடுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98163.html#ixzz3Uw62fDJc

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு!

தமிழ்நாட்டில் நீதிபதி தாக்கப்படுகிறார் என்றால் மத்திய பிரதேசத்தில் அமைச்சரிடமே மிரட்டிக் கொள்ளை அடித்துள்ளனராம்! இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடோ!

கஞ்சர்களா?

பிஜேபியைச் சேர்ந்த மத்திய கேபினட் அமைச்சர்கள் 27 பேர்களில் 11 அமைச்சர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதுவரை ஒரு பைசாகூட செலவழிக்கவில்லையாம்!

மக்கள் நலத்தை அரசு நலன் (பணத்தை மிச்சப்படுத்தி விட்டார்கள் அல்லவா) தான் இவர்கள் குறிக்கோளோ! சரியான கஞ்சர்களப்பா!

கடும் எச்சரிக்கை!

சமூக வலை தளங்களில் பெண்களின்படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் - 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று காவல்துறை எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/98172.html#ixzz3Uw6wMwRk

தமிழ் ஓவியா said...

இந்த ஏழிசை கேட்டு உயர்வோம்!

அமெரிக்காவில், இலியனாய் மாநிலத்தில் (சிகாகோ உள்ள மாநிலம்) பிரபல கல்வி வள்ளல்களில் ஒருவரும், மிகச் சிறந்த கொடையாளியுமான 104 வயது வரை வாழ்ந்தவர் டாக்டர் அர்னால்ட் பெக்மென் என்பவர். கருமான் என்ற கொல்லுப் பட்டறைத் தொழிலில் மிக எளிமையாகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்.

தெளிந்த சிந்தனை, தீர்க்கமான முடிவு, கடும் உழைப்பு - இவைகளாலும் அவரது கண்டு பிடிப்புகள் மூலம் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் பெல் - ஆகியோர் வரிசையில் வைத்து மிக உயர்வான அறிவியல் தொழில் நுட்ப மேதைகளில் ஒருவராக இன்றும் கருதப்படுகிறார்!

இலியனாய் மாநிலத்தில் சிறிய விவசாயப் பண்ணை ஒன்றைத் துவக்கினார். அதில் பல கருவிகளை தனது நுண்ணறிவின் திறத்தால் கண்டுபிடித்து, உலகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்து புகழும் பொருளும் சம்பாதித்தார்!

ரசாயன அறிவியலில் பி.எச்.மீட்டர் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்திட Analytical chemistry -க்கு பெரிதும் உதவிடும் வாய்ப்பான கருவியை கண்ட றிந்து, ஏராளமான விருதுகளை அக்கண்டுபிடிப்பு களுக்காகப் பெற்றார்!

இவரது தொழில் திறமை, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளைத் தாண்டி, இவரது புகழ் நிலைத்த புகழாக வரலாற்றில் நிற்பதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம் இவர் ஒரு தலை சிறந்த கொடை வள்ளல் என்பதனால் ஆகும்!

டாக்டர் பெக்மென் அவர்களது தனித்த, படைப்பாற்றல், அறிவியல் நுண்மாண் நுழைபுலம் இவரது வாழ்வை வளப்படுத்தினால் மட்டும் போதாது: தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, குடும்பம் என்ற சின்ன கடுகு உள்ளத்தை விரட்டிவிட்டே தொல்லுலக மக்கள் எல்லாம் எம்மால் பயன்பெற்று வாழ பணி செய்வதே தனது கடன் என்று எண்ணி, 1977-இல் இவர் சுமார் 40 கோடி டாலர்களை ஒதுக்கி தனது வாழ் விணையர் மேபல் என்ற அம்மையாரும் இணைந்த அர்னால்ட் அண்ட் மேபல் பெக்மேன் பவுண்டேஷன் என்ற ஒரு பொது அறக்கட்டளைத் துவக்கினார்.

இலியனாய் பல்கலைக் கழகத்திற்கு 4 கோடி டாலர் நன்கொடை அளித்து மிக பிரம்மாண்டமான 3,13,000 ச.அடி உள்ள மாபெரும் கட்டடம் ஒன்றை கட்டிடக் கொடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி யாளர்கள் வந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறிவியல் (Inter-disciplinary research) ஆராய்ச்சி நடைபெற உதவியுள்ளார்!

ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு! (குறள் - 231)

என்ற குறளுக்கேற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது! நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதால் பெருமை வராது;

நாம் எவ்வளவு புகழ், பெருமைக்குரிய அறிவாளியாய் உயர்ந்துள்ளோம் என்பதாலும் உண்மையான சிறப்பு வராது; மாறாக, நாம் உலகத்திற்கும் சமுதாயத் தொண்டறத்திற்காகவும் எவ்வளவு உதவினோம் என்பதைப் பொறுத்ததே நிலைத்த புகழும் பெருமையும்!
அத்தகைய மாமனிதர்தம் வாழ்க்கையில் அவர் கையாண்டு உயர்ந்தமைக்குக் காரணமாக அமைந் தவை அவரால் கூறப்பட்ட ஏழு விதிகள்!

நம்மைப் பொறுத்தவரை நமக்கு அவை ஏழிசைகளாகவே இன்பத்தைப் பாய்ச்சுகின்றன!

பெக்மேன் அவர்கள் கூறுகிறார்:

1. எந்தக் கால கட்டத்திலும் நேர்மையையே(integrity) கடைப்பிடித்து ஒழுகுதல்.

2. எந்தப் பணியை எடுத்துக் கொண்டு செய்தா லும், அரை மனதோடு அதில் ஈடுபடாமல், முழு விருப்பத்தோடு செய்யவே பழக வேண்டும்.

எதில் முழுதாய் ஈடுபட முடியாதோ அதை ஏற்காமல் வெளியேறிட வேண்டும்.

விருப்பத்துடன் உள்ளே அல்லது விருப்ப மில்லா விட்டால் வெளியே என்பதே தம் கொள்கையாக இருக்க வேண்டும்.

3. பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதையும் செய்யாமல் இருப்பது முக்கியம்.

4. எந்தக் காரியத்தைச் செய்தாலும் பின்னால் அதனால் பிறகு அவமானம் ஏற்படக் கூடிய எதனையும் செய்ய முனையவே கூடாது.

5. எதையும் மிக நேர்த்தியுடன் (Excellence) (மற்றவர் மிக மிக விரும்புவதே நேர்த்தி) அதற்கு வேறு மாற்று கிடையவே கிடையாது!

6. எதிலும் தன்னடக்கமும் நிதானமும் கடைப் பிடித்தல் மிக நன்று.
(சிற்சில நேரங்களில் இது சற்று கூடுதல் ஆனாலும் பரவாயில்லை)

7. உங்களை நீங்கள் எப்போதும் பெரிய ஆளாக எண்ணி இறுமாறாதீர்கள்!

இப்படி இந்த ஏழு இசைகளை இசைத்த இந்தப் பெருமகனாரின் படத்துடன் அக்கட்டடத்தில் அவரது வாழ்வு : பிறப்பு: 10.4.1900 மறைவு: 18.5.2004 என்று செதுக்கப்பட்டுள்ளது.

இவைகளை நாமும் பின்பற்றலாமே!

(சிகாகோவிலிருந்து இதை அனுப்பிய திருமதி அருள்பாலுவுக்கு என் நன்றி!)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98184.html#ixzz3Uw7LlgY4

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம் >>>

திருச்செந்தூர் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு ஒரு வரலாற்றுத் திருப்பம்

திருச்செந்தூர்... சற்று நின்று திரும்பிப் பார்த்தால் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று யோசிக்க வைக்கும் இடம்! காரணம், இங்கே வருகின்ற பக்தர்களின் கூட்டத்தில் ஒருவராவது நாகரிகச் சிந்தனை உடையவரா என்பது தெரியாததுதான், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே காட்டுமிராண்டிக் காலத்தை நினைவூட்டும் வகையில் பக்தர்கள் நடந்து கொள்கின்றார்கள். இந்த ஊரிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் தங்கும் வசதி பிற ஊர்களில் இல்லாத அளவுக்கு உள்ளது. உணவுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு திருமண மண்டபமாகச் சுற்றிக் கொண்டிருந்தால் முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை இலவசமாக உணவு கிடைக்கும். இதனால் குற்றவாளிகளின் புகலிடம் இந்தக் கோயில் எனலாம்.

சனாதன இந்து மதத்தின் உறைவிடம் திருச்செந்தூர். இங்கேயுள்ள மக்கள், கடவுள் என்று நம்புகின்ற சுப்பிரமணிய சாமியை விட அதிக சக்தி படைத்தவன் பார்ப்பனன் தான் என்று உறுதியாக நம்புகின்றனர். அதனால் பார்ப்பனர்களை வைத்து பல வழிபாடுகளை தங்கள் வீடுகளில் நடத்து கின்றனர். இதனால் பார்ப்பனர்களின் வீடுகளில் பணம் கரைபுரண்டோடுகின்றது.

இங்கே சில நாத்திக அமைப்புகள் ஓரிரு நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும், பார்ப் பனர்கள் கலங்கவில்லை. காரணம், அவற் றால் தங்களை வீழ்த்த முடியாது என்பது தான். அவர்கள் அஞ்சுகின்ற ஒரே எதிரி தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் தலைவரான நமது தமிழர் தலைவர் அவர்கள் தான்.

திருச்செந்தூர் பார்ப்பனர்களின் 19 ஆம் நூற்றாண்டு எதிரி முத்துக்குட்டி (வைகுண்ட சுவாமிகள்) 20 ஆம் நூற்றாண்டு எதிரி தந்தை பெரியார்; இன்று நமது தமிழர் தலைவர் அவர்கள்.

19 ஆம் நூற்றாண்டு மத்தியில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த முத்துக்குட்டியை கடலில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றவர்கள் பார்ப்பனர்கள்தான். அவரை அதிலிருந்து காப்பாற்றியவர்கள் சில முற் போக்கு சிந்தனை கொண்ட துறவிகள்தான்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழர் தலைவர் அவர்கள் திருச்செந்தூர் வந்த பொழுது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

எனவே மாநாட்டு நாளான மார்ச் 12 அன்று காவல் துணைக்கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் தூத்துக்குடியி லிருந்து திருச்செந்தூர்வரை தமிழர் தலைவருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கிய துடன், மாநாட்டுக்கும் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழர் தலைவரின் எழுச்சி மிகு உரையால் திருச்செந்தூரில் சனாதன இந்துமதம் ஆட்டம் கண்டு விட்டது. உங்கள் தலைவரையும் தெரியும், தலைவரின் மகனையும் தெரியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர்கள் இன்று மலைத்துப்போய் நிற்கின்றார்கள்.

திருச்செந்தூர் வட்டார மாநாடு மிகப்பெரிய வரலாற்றுத்திருப்பத்தை உருவாக்கப் போவது உறுதி.

மாநாடு நடைபெற்ற மறுநாள் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்த போது அவர் கூறினார். யாருமே இதுவரை இப்படிப் பாராட்டியது இல்லை.

யார் நல்லது செய்தாலும் பாராட்ட வேண்டும். இதை தந்தை பெரியாரின் வரலாற்றிலிருந்தும் எங்கள் தலைவரிடமி ருந்தும் கற்றுக் கொண்டோம் என்றேன்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/98188.html#ixzz3Uw7WXh9E

தமிழ் ஓவியா said...

விதியைப் பற்றி...

மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே. மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியி னின்று விடுதலை அடைகிறான்.

மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெ றும் பிரமை என்று நிரூபிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது. பல மற்றவர்கள், பாதகர்கள் - இவர் களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள். - எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/98183.html#ixzz3Uw9rpvSw

தமிழ் ஓவியா said...

சொர்க்கமா - நரகமா?

தன்னை எதிர்த்து பார்லி மென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடை யில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப்படுத்த வேண்டும் என எண்ணினார்.

லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார். நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன் னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3Uw9zGwDX

தமிழ் ஓவியா said...

என்னை அழைக்கின்ற கோவிலின் சாமி
எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி

தன்னை விளக்கிடுமோ இதை யோசிப்பீர்
சமூக நிலை புரியும்.

என்னை அளித்தவர் ஓர் கடவுள் மற்றும்
ஏழையர்க்கோர் கடவுள் - எனில்

முன்னம் இரண்டையும் சேர்த்துருக்குங்கள் முளைக்கும் பொதுக் கடவுள்.

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3UwA72nzs

தமிழ் ஓவியா said...

தரித்திரம் ஏன்?

சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத் திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனி செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்கு பார்த்தால், மனிதனின் மொத்த வரும்படி யில், ஒரு குறிப்பிட்ட பாகம் வீணா வதைக் காணலாம்.

மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும் பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலியவை களால் ஏற்பட்ட கடனின் பேரிலே வாழ்க் கையைத் தொடர வேண்டியிருக்கிறது.

இவை எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது

- தந்தை பெரியார் (27.12.1930 களக்காட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3UwAEYTmJ

தமிழ் ஓவியா said...

மக்களை ஏமாற்றும் பில்லி சூனியம், மாந்திரீகம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் எங்கே?
பெரியார் மண்ணில் ஏன் கொண்டு வரவில்லை? தமுஎகச மாநாட்டில் கேள்வி

திருப்பூர், மார்ச் 20_ மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பூரில் வியாழனன்று பேரெழுச்சியுடன் துவங்கிய தமுஎகச மாநில மாநாட்டின் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

சமூகத்தில் நிலவும் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களால் மக்களுக்கு பெரும் பொருட்செலவும், ஆரோக்கியக்கேடும், நம்பிக்கையின்மையும் ஏற் படுகிறது. நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் என்ற பல்வேறு பெயர்களில் மக்கள் ஏமாற்றப்படு கிறார்கள்.

இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைக் கோளை அனுப்பிய பிறகும் செவ்வாய் தோஷம் என்ற பெயரில் சோதிடர்கள் இளம் பெண்களின் வாழ்வை கேள்விக் குறியாக்குகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கெதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய நரேந்திர தபோல்கர் 20.8.2013 அன்று மதவெறி சமூக விரோதக் கும்பலால் படு கொலை செய்யப்பட்டார். மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மராட்டிய மாநில அரசு நிறைவேற்ற வேண்டுமென அவர் தொடர்ந்து போராடி வந்தார்.

தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து பிருதி விராஜ் சவாண் தலைமையிலான முந்தைய மகா ராஷ்டிர மாநில அரசு 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை அவசரச் சட்டமாக பிறப்பித்து பின்னர் சட்டமாக இயற்றியது.

இதன்படி மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடு வோர் கைதானால் பிணையில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். நரேந்திர தபோல்கரைத் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கப் போராளி தோழர் கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரி 16 ஆம் தேதி மதவெறி பிற்போக்குக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தோழர் பன்சாரே, ஷ்ரமிக் பிர திஸ்தான் என்ற பண்பாட்டு அமைப்பை உருவாக்கி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வந்ததால்தான் கொல்லப்பட்டார். சித்தராமையா தலைமையிலான கருநாடக அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தனது வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படாதது வேதனைக்குரியது, வெட்கப்படத்தக்கது.

நாம் மீள வேண்டுமானால் சுயமரியாதை பெற்ற மக்களாக வாழவேண்டுமென்று நினைத்தால் அடிமைப்படுத்தும் மூட நம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்கவழக்கங்களையும் முதலில் விட்டுவிடவேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 51-ஏ(எச்) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப் பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படைக் கடமை என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதை இந்த மாநாடு வன்மையாகக் கண் டிக்கிறது. இந்தப் போக்கை கைவிடவேண்டுமென மோடி அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் என மாநாடு வலியுறுத்து கிறது.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமுஎகச-வினர் பண்பாட்டுத்தளத்தில் அயர்வற்ற போராட்டத்தை நடத்துவது என்று இந்த மாநாடு உறுதி ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/98198.html#ixzz3UwAPweW4

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மஞ்சள் நீர்

கடை திறக்கும்போது வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது எல்லாம் பிற் காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட் சுமிக்கு விருப்பமான மஞ்சளைக் கால்படும் விதமாக கீழே தெளிப்பது தவறு என்கிறது ஓர் ஆன் மிக இதழ்.

ஒருவர் சரி என்பது இன்னொருவர் தவறு என்பார். இதெல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம். பூமிகூட பூமாதேவிதான் அதில் என்னென்னவெல் லமோ நடக்கிறதே!

Read more: http://viduthalai.in/e-paper/98240.html#ixzz3V1UqoPw2

தமிழ் ஓவியா said...

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி மார்ச் 21 பகவத் கீதைஎன்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மத அமைப்புசார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளி விவகாரத்துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் பேசும் போது; விரைவில் பகவத் கீதையை தேசிய நூலாக அரசு அறிவிக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தியது. சில இந்துமத அமைப்புகள் கூட மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் இதற்கு வலு ஊட்டுவதுபோல் மோடி வெளிநாட்டிற்கு செல் லும் போதெல்லாம் அங் குள்ள தலைவர்களின் கையில் வலுக்கட்டாய மாக பகவத்கீதையை திணித்துவிட்டு வருகிறார்.

அரசின் தேசிய நூல் பற்றிய கொள்கை முடிவுகள் தெளிவில்லாத பட்சத்தில் வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் என்பவர் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் என்று அரசுக்கு ஆணையிடக்கோரி பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொதுநலமனு வெள்ளிக் கிழமையன்று விசார னைக்கு வந்தது. இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதா வது:

ஒரு நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் அல்லது அதை தவிர்க்கவேண்டும் என் பதை நீதி மன்றம் வலி யுறுத்த முடியாது. இந்திய சமூகம் என்பது பல்வேறு மதம் மற்றும் இனங் களைக் கொண்ட நாடு. அரசு எடுக்கும் எந்த ஒரு செயலும் அனைத்து சமூகத்தினருக்கும் இணக்கமான ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். சமூக நல்லிணக்கம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் முடிவு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும்.

பகவத் கீதை என்பது ஒரு மதத் தினரின் புனித நூல், நீதி மன்றம் இந்த விவகாரத் தில் எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாது. அரசு அரசியல் சாசனப்படி செயல்படும், ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய் கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98243.html#ixzz3V1V2itGs

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சதி


பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/e-paper/98252.html#ixzz3V1VSThdI

தமிழ் ஓவியா said...

நாகம்மாள் தகனம்

தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனிதாங்காது என்ற நிலையில் ஆஸ்பத் திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசி ஸ்திதியில் செய்யக்கூடிய சிகிச்சைகளை செய்து பார்த்ததும் இரவு 7-45 மணிக்கு அம்மையார் ஆவி நீத்தார்கள்.

உடனே அம்மையாரின் உடல் சுத்தம் செய்யப் பட்டு நன்கு அலங்கரித்து ஈ.வெ.ரா. அவர்கள் இல்லத்தின் முன் மண்டபத்தில் யாவரும் எளிதில் பார்த்துச்செல்ல வசதியுடன் அழகிய பெட்டியில் அடக்கம் செய்து வைக்கப்பட்டது. உடனே 8-30 மணிக்கு யாவருக்கும் (ஈ.வெ.ரா. உள்பட) சாப்பாடு நடந்தது. ஊர் பிரமுகர்களும், வெளியூர் தோழர்களும் இரவு முழுவதும் வந்து கொண்டே இருந்தார்கள்.

அநேகமாக எல்லோரும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கேளிக்கையாய் இருந்ததோடு இடை இடையே டீ வழங்கப்பட்டு வந்தது. முக்கியமாய் யாவரும் கவனிக்க வேண்டியதும், கவனித்ததுமான சம்பவம் யாதெனில் நெருங்கிய உறவினர் முதல் உற்ற தோழர்கள் வரை யாவரும் அழுதல் என்னும் அநாகரிகமான காரியத்தை அறவே ஒழித்து ஆண் பெண் அடங்கலும் ஒற்றுமையாய் பேசிக்கொண்டும் நாளைய காரியங்கள் கவனித்தும் வந்ததே.

மறுநாள் காலை 9 மணி அளவிற்கு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று இரவே துண்டுப் பிரசுரம் ஊரெல்லாம் வழங்கப்பட்டது. அந்தப்படிக்கே மறுநாள் காலையில் எவ்வித சடங்கும் இல்லாமல் ஒரு இரதத்திற்கு ஒப்பான ஒர் அழகிய நாலு சக்கரவண்டியில் அம்மாளின் உடல் மூடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டு பெட்டியை பட்டாடைகளாலும், புஷ்பங் களாலும்,

அலங்கரித்து வைத்து பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் பின்தொடர தகனம் செய்ய குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி வண்டி மெல்ல தள்ளிக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல ஆரம்பத்தில் போட்டோ படக்காரர்கள் பலர் படம் எடுத்தார்கள்.

வழிநெடுக அநேக கடைகளிலும், முக்கியமாய் சுயமரியாதை வாலிபர் சங்கத்தின் முன்னிலும் (மகாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் தலைவருக்கு மாலைகள் சூட்டி உபசரிப்பதை போல்) நிறுத்தி நிறுத்தி மாலைகள் போடப்பட்டு புஷ்பங்கள் வாரி வாரி இறைக்கப்பட்டன.

தகனம் நடக்கும் இடமாகிய காவேரிக்கரை அணுகியதும் உடனே தகன ஏற்பாடுகள் நடந்து

கொண்டேயிருக்கும் போது தோழர் எஸ். மீனாட்சி சுந்தரம் பி.ஏ., எல்.டி., அவர்கள் தலைமையில் ஒர் கூட்டம் கூடி வந்திருந்த பிரமுகர்களும், இயக்க தோழர்களும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் தோழர்கள் சாமி சிதம்பரனார், ராவணதாஸ், சேலம் நடேசன், டாக்டர் கிருஷ்ணசாமி, மாயவரம் சி. நடராஜன், ஈ.வி.நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, மைதீன் பாட்சா முதலியவர்கள் அம்மையாரின் குணாதிசயங்களைப் பற்றியும்,

வரலாற்றைப் பற்றியும் பேசினார்கள். பின் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் பதில் சொல்லி முடித்தவுடன் கூட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். வெளியூர் பிரமுகர்கள் வந்துகொண்டே இருப்பதுடன், தந்திகளும், கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. தகனம் செய்த பின்பு எவ்வித சடங்கும் அது சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை. ஈ.வெ.ரா. சனிக்கிழமை இரவு சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திருச்சிக்குப் புறப்பட்டு விட்டார்.

குடி அரசு - கட்டுரை - 14.05.1933

Read more: http://viduthalai.in/page-4/98291.html#ixzz3V1Wg6Zt1

தமிழ் ஓவியா said...

பெசண்டம்மையாரின் முடிவு

தோழர் அன்னிபெசண்டம்மையார் 20.09.1933 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண் மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் ஆகும்.

பெண்கள் பாவஜென்மம் என்றும், பேதமையென்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக் குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந் துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்க வென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்.

தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவி யாவார் பாதிரிகளின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம்இல்லை என்று பிரச்சாரம் செய்யும்படி செய்தது பிறகு புருஷனைவிட்டு பிரிந்தார். பிறகு கர்ப்பத் தடையை யாவருக்கும் பிரச்சாரம் செய்துவந்தார் கர்ப்பத்தடையை சட்டசம்பந்த மாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரமும் செய்தார்.

பின்னர் தனது 32ஆம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் வந்து அச்சபையின் உலக தலைவரானார். பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரச்சாரம் என்னும் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தார்.

இதனால் சென்னையில் உள்ள விபூதி பூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். அய்க்கோர்ட்டு ஜட்ஜ்கள் உள்பட அநேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும் ஒரளவு செல்வாக்குப் பெற்று. விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார்.

தமிழ் ஓவியா said...

இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரச்சாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.

காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் அய்யங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார்.

இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச் சாரியாராகிய அய்யங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியா மலேயே போய்விட்டது.

இந்தக் காரணத்தால் சென்னை அய்யங்கார்கள் அரசியலில் மிதவாதிகள் ஆகி தோழர்கள் சி.எஸ். கஸ்தூரிரங்கய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபா லாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள்,

இதற்கு பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜீலு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும் பயன்படுத்திக் கொண்டு, அம்மையாரை எதிர்த்து அம்மை யாருக்கு பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்கு சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தியாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.

இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனா கவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின்மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவு கடந்த உதவி செய்து கொண்டே வந்தார்.

தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப் பட்டவர்கள் ஆவார்கள், அம்மையாரின் அபார சத்தியை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன், தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும்,

உலகமத (போப்) குருவேலை யை உபவேலை யாகவும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமாவார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86ஆவது வயதில் முடிவெய்தியதுபற்றி யாரும் வருந்த வேண்டியதே இல்லை.

ஏனெனில் இனி தன்னால் யாதொரு காரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியதுதான் நல்லறிவின் குறிப்பாகும்.

ஆகவே அம்மையாரைத் தாயைப்போலவும் குருவைப் போலவும் தெய்வத்தைப் போலவும் கருதி அம்மையாரைப் போற்றிவந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனித ஜீவ இயற்கையை உணர்ந்த ஞான வான்கள் ஆதலால் அப்படிப் பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.

குடிஅரசு - துணை தலையங்கம் - 24.09.1933

Read more: http://viduthalai.in/page-4/98290.html#ixzz3V1WpNjrX

தமிழ் ஓவியா said...

தமிழின் தனித் தன்மை

உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ். இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன.

இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந் தியது. ஆனால், அதில் உள்ள சொற் களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம்.

உதாரணம்: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத் தில் பத்து கோடி, நூறு கோடி என்று தான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.

வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)

ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. மேலும், இலங்கையில் நாடாளுமன்ற மொழியாகவும் உள்ளது.

Read more: http://viduthalai.in/page3/98223.html#ixzz3V1YNM7pD

தமிழ் ஓவியா said...

கச்சனம் - கருஞ்சட்டை வீரர் ப. ஆத்மநாதன்

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் கச்சனம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எனக்கு இப்ப எண்பத்தி ரெண்டு வயது ஆகிறது. எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் ஏழ்மையான விவசாய குடும்பம்.

எனக்கு எலெக்டிரிக்கல் வேலையில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். லைன் மேனுக்கு உதவியா போவேன். கோயில் திருவிழாவுக்கு லைட் கட் டுவேன். அப்ப கோயிலில் நடக்கும் சில தவறான செயல்களை காண முடிந்தது.

அந்த காலத்திலே எங்க அப்பா திராவிட நாடு பத்திரிகை வாங்குவார். நான் படிச்சு பல விவசயங்களை தெரிந்து கொண்டேன்.

வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை இவைகளைப்பற்றி நண்பர்களிடம் பேசுவேன். அதனால நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என அப்பகுதியிலேயே அறிமுகமானேன்.

அந்த சமயத்தில் தான் தோலி. ஆர்.எஸ். (ஆர். சுப்பிரமணி) சாந்தன் ஆகியோர் என்னை வந்து சந்திச்சு எங்க பகுதிக்கு என்னை பொறுப்பாள ராக நியமிச்சாங்க மிலிடரி வைத்திய நாதன் எனக்கு அப்போது உதவியாக இருந்தார்.

முதன் முதலாக வடபாதி மங்கலம் திருஞானசம்பந்தத்தை அழைத்து எங்க ஊரில் கூட்டம் போட்டோம். ஒரு முறை எங்க ஊரில் வைத்து இருந்த வெங்கடாசலபதி படத் துக்கு செருப்பு மாலை போட்டு விட்டேன்.

எனக்கு 33ஆவது வயதில் திருமணம் அதில் என்னானா அந்த பொண்ணு வேறு ஒரு வருக்கு நிச்சயம் செய்யப் பட்டது. ஏதோ காரணத் தால் அந்த பையன் இறந்து விட்டான். உடனே அந்த பொண்ணு ராசி இல்லாத பொண்ணு. அதான் நிச்சயம் செய்யப்பட்ட பையன் செத்துப் போயிட்டான் என செய்தியை பரப்பி விட்டார்கள். அதை அறிந்து நான் போய் அந்த பெண்ணை மணந்தேன். இன்னிக்கு வரைக்கும் நான் சாக வில்லை.

திருத்துறைப்பூண்டியில் நடந்த தீக் குண்டம் இறங்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீயில் இறங்கினேன். தஞ்சை பெரியார் சிலை திறப்பு விழா உட்பட பல வெளியூர் நிகழ்ச்சிக்கு போய் உள்ளேன். தனித் தமிழ்நாடு போராட் டம் சட்ட எரிப்பு போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். நான் சிறுவன் எனக் கூறி கைது செய்யவில்லை. சிறைக்கு போகாதது வருத்தம்தான். இனி வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன்.

கச்சனத்தில் ஆர்.எஸ்., சாந்தன் கோவிந்தசாமி, வைத்தியநாதன் மற்றவர்களோடு சேர்ந்து ஜாதி ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஆப்பரக்குடி மீனாட்சி தியேட்டரில் நடத்தினோம். அந்த மாநாட்டில் அய்யா, ஆசிரியர், பாலதண்டாயுதம், எஸ்.எஸ். பாஷா, யாதுப், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் தலைமையில் அம்பகரத் தூரில் கோயிலில் எருமை மாடு வெட் டுவதைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடந்தது. அதிலும் கலந்து கொண்டேன். நம்ம போராட்டத்துக்கு பின் அங்கே கிடா வெட்டுவது தடை செய்யப் பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அய்யாவுடன் சேர்ந்து சில நாட்கள் வேனில் பிரச்சாரத்திற்கு சென்றது வாழ்வில் மறக்க முடியாத வாய்ப்பு
எனது மூத்த மகளுக்கு அய்யா அறிவுக்கண்ணு என்று பெயர் வைத் தார். மயிலாடுதுறையில் அய்யா தலை மையில் நடைபெற்ற கவிஞர் திருமணத் துக்கு போய் வந்தேன். அய்யா காலம் முதல் இன்று வரை முடிந்த வரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன்.

கடைசியா நான் கூற விரும்புவது ஆசிரியரைப் பற்றி அய்யா அவர்கள் ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆசிரியர் நம் இயக்கத் தின் ஈடில்லா சொத்து. ஓய்வு இல்லாமல் கொள்கைக்காக உழைக்கிறார். தனி மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் ஆசிரியர்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வைத் தது பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டியது.

வாழ்க பெரியார் தொடர்க ஆசிரியர் பணி

சந்திப்பு: தி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி

Read more: http://viduthalai.in/page3/98222.html#ixzz3V1YXLF78

தமிழ் ஓவியா said...

யார் தேசத் துரோகிகள்?

இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.

நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ இந்து தேசத்துக்குத் துரோகம் செய்ததாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும். நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.

வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும் அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும் நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா?

அவர்கள் ஒழித்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு நாங்களும் கையொப்பம் போடுகிறோம்.

அதற்குச் சக பார்ப்பனர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம்.

அதை விட்டுவிட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினை த்தால் அது முடியுமா? என்று தான் கேட்கின்றேன்.

சேலம் விக்டோரியா மார்க்கெட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு குடிஅரசு 14.06.1936

Read more: http://viduthalai.in/page2/98221.html#ixzz3V1Yv2LBR

தமிழ் ஓவியா said...

கம்பராமாயணத்திற்கு ஒரு சவுக்கடி!

கம்பரின் பயனற்ற கற்பனை களுக்கும் பொருளற்ற பாடல் களுக்கும் அடிகள் கடல் தாவு படலத்தை அடுத்தடுத்து எடுத்துக் காட்டுவார். அவர்கள் கூற்றை யான் ஏற்றுக் கொண்டு ஆயினும், சாமி! கம்பரின் நல்ல பாட்டுக்களைப் பாருங்கள் என்று மீண்டும் யான் சுவைக்கும் பாடல்களை எடுத் தெடுத்து மொழிவேன். கடைசியில் வழக்கின் முடிவென்ன?

திருநாவு! அதெல்லாம் சரிதான். கம்பரால் பண்டைத் தண்டதமிழ் மரபு, தனித்தமிழ், தமிழர் இன, நாகரிகச் சிறப்பெல்லாம் மறக்கடிக் கப்பட்டன. சைவ வைணவத்திரு முறைகள் சிறப்புக்களெல்லாம் குறைந்தன. தமிழ்ப் பெருங்காவியங் கட்கும், தமிழிற்குமுள்ள சிறப்புகள் குன்றின. தமிழ்ப்பற்றும் குறைந்தது. ஆரிய நாகரிகமும், வடமொழியும் அதன் காவியங்களும் எங்கும் போற்றப்பட்டன.

பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதி காரம், சிந்தாமணி, மணிமேகலை முதலிய தமிழ்நாட்டாருக்கே உரிய தமிழ்க்காவியங்களைப் பிராம ணர்கள் பயிலாதும் பாராட்டாதும் இகழ்ந்து ஒதுக்குகின்றனர், பிரா மணர்களில் மிகப்பெரும்பாலோர் தேவார திருவாசகத் திருமுறைகளை ஓதுதலும், பாராட்டுதலும் இல்லை. தமிழ்நாட்டுக் கதைகள், வரலாறு களைப் போற்றுவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் கம்பராமாயணமே!

இவ்வாறு பிராமணர்களால் கம்பராமாயணமும், அதன் சார்பான ஆரிய வடநாட்டுக் கதைகளான பாரதம், பாகவதம், கீதை, பஜனை, சாதி, சடங்கு, மூடப்பழக்க வழக் கங்கள், கடவுள் நிலைக்கு மாறான கருத்துக்களும் எங்கும் பரவிவிட்டன.

பிராமணர்களின் இப்பரப்புதல் களால் பார்ப்பனரல்லாதவர்களும் அவர் முறைகளை மேற்கொண்டு நம் தமிழ், தனித்தமிழ் - தமிழின நாகரிகத்திற்கே மாறு பட்டவர் களாய்ப் பொய்க் கதைகளை நம்பி, பயனில்லாச் சடங்குகளைச் செய்து தாமும் ஏமாறி அறிவிலிகளாய் வறிதே வாணாளை வீணாளாக்கு கின்றனர்.

தம்மை சார்ந்த ஏனையோரையும், அவ்வாறாக்கி விடுகின்றனர். ஆதலால் இவற்றிற்கெல்லாம் முதற் காரணமான கம்பராமாயணப் பயிற்சியையும், பரப்புதலையும் புலவர்கள் கைவிட்டாக வேண்டும்.

(மறைமலை அடிகளாரின் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு தீட்டிய - மறைமலை அடிகளின் வரலாறு என்ற நூலில் பக்கம் 648)

குறிப்பு: இதில் நாவு என்று குறிக்கப்பெறுவது மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு ஆவார்.

Read more: http://viduthalai.in/page4/98224.html#ixzz3V1Z9wCJZ

தமிழ் ஓவியா said...

பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.

அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Read more: http://viduthalai.in/page4/98225.html#ixzz3V1ZGx0bE

தமிழ் ஓவியா said...

தாலி வந்தது ஏன்?

சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது.

புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்கு வதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப் பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

Read more: http://viduthalai.in/page4/98229.html#ixzz3V1ZqbbAz

தமிழ் ஓவியா said...

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு

மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.

அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.

கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.

இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.

மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.

பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.

மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page4/98230.html#ixzz3V1a999Es