Search This Blog

25.3.15

பகுத்தறிவும் கடவுள் வாக்கும் - பெரியார்

பகுத்தறிவும் கடவுள் வாக்கும்
தந்தை பெரியார்

வினா:- மதம் என்றால் என்ன?

விடை:- உண்மையில் நம்பிக்கை.
வினா:- உண்மை என்றால் என்ன?
விடை:- ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பரிபூரணமான ஞானமே உண்மை.
வினா:- உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன?
விடை:- அப்பேர்ப்பட்ட பூரண ஞானம் வாழ்க்கையின் உயரிய லட்சி யத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போது மானது என்ற நம்பிக்கையே உண்மை யில் நம்பிக்கை எனப்படும்.
வினா:- உண்மையில் உள்ள நம்பிக் கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது?
விடை:- தன் உயர்வான - தெளிந்த - அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதனால் நிரூபித்துக் காட்டலாம்.
வினா:- உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது?
விடை:- அனுபவத்தினாலும், பயிற்சி யினாலும் அடையலாம்.
வினா:- வேறு வழியில்லையா?
விடை:- இல்லை.
வினா:- மதத்தைப் பற்றி நீ கூறிய வியாக் கியானம் பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்ட வியாக்கியானம் தானா?
விடை:- தெய்வ நம்பிக்கையும், தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள் வகுத்த விதிகளில் நம்பிக்கையுமே பொதுவாக மதம் என மதிக்கப்படுகிறது.
வினா:- தெய்விகம் என்றால் என்ன?
விடை:- தெளிவாய் அறியப்பட்ட இயற்கை விதிகளுக்குப் புறம்பானவை களெல்லாம் தெய்விகமானவைகளே.
வினா:- அத்தகைய விஷயங்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன?
விடை:- அவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றைப் பற்றி தாராளமாக விவாதிக்க இடம் கொடுக்க வேண்டும்.
வினா:- இதர வழிகளில் அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை கடவுள் வாக்கான வேதங்கள் நமக்கு விளக்கிக் கூறவில்லையா?
விடை:- எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. எனவே எந்த வேதம் உண்மையான கடவுள் வாக்கு என்பதை நாம் முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
வினா:- வேதங்களில் சிலவற்றைக் கூறுக.
விடை:- ஜொராஸ்டிரிய வேதம், பிராம்மண வேதம், பவுத்த வேதம், யூத வேதம், கிறிஸ்தவ வேதம், முகமதிய வேதம், மார்மண் வேதம்.
 
வினா:- இந்த வேதங்கள் எல்லாம் தெய்வ வாக்கென உரிமை பாராட்டு கின்றனவா?
விடை:- ஆம்.
வினா:- அந்த வேதங்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்ணியம் செய் கின்றனவா?
விடை:- இல்லை. மாறாக ஒவ்வொன் றும் மற்றவை பொய்யென்று கண்டிக் கின்றன.
வினா:- அதை விளக்குக.
விடை:- எனக்கு நிகராக உலகத் திலோ, சுவர்க்கத்திலோ யாருமில்லை. நானே பூரண ஞானம் பெற்ற புத்தன் என்று புத்தர் கூறியிருக்கிறாராம்.
வினா:- வேறொரு உதாரணம் கூறுக.
விடை:- நானே உண்மையான வழி காட்டி; எனக்கு முன் வந்தவர்கள் எல்லாம் பொய்யர்கள், திருடர்கள், என்னையன்றி வேறு ஒருவருக்கும் என் பிதாவை அணுக முடியாது என்று இயேசு கூறியிருக்கிறாராம்.
வினா:- இதை விட முக்கியமாக மதிக் கக் கூடிய ருசு வேறு ஏதாவதுண்டா?
விடை:- ஒவ்வொரு மதஸ்தரும் பிற மதஸ்தரை, தம் மதத்துக்கு இழுக்க முயல்கிறார்கள்.
வினா:- மதமாற்றம் என்றால் என்ன?
விடை:- நாம் நம்புவது போலப் பிற ரும் நம்பும்படி செய்வதே மதமாற்றம்.
வினா:- அதன் நோக்கம் என்ன?
விடை:- நோக்கம் பலவாக இருக்க லாம். எனினும் அவற்றுள் முக்கியமா னது நம்மைப் போல் மற்றவர்கள் நம் பாவிட்டால் நரக தண்டனை பெறு வார்கள் என்பதே.
வினா:- மேலே கூறப்பட்ட வேதங்களில் எது உண்மையானது?
விடை:- ஒன்றாவது - முழுதும் மெய் யானதோ பொய்யானதோ அல்ல.
வினா:- அவற்றுள் எது பொய், எது மெய் என்று எவ்வாறு அறிவது?
விடை:- பகுத்தறிவினால் அறிந்து கொள்ளலாம்.
வினா:- அப்படியானால் வேதங்களை விடப் பகுத்தறிவு மேலானது என்று ஏற்படாதா?
விடை:- ஆம். ஏற்படத்தான் செய்யும்.
வினா:- அவ்வளவு உயர்வான பகுத் தறிவு நம்மிடம் இருக்கையில், மேலும் நமக்கு மதங்களும், வேதங்களும் வேண் டுமா?
விடை:- நமக்கு வேண்டாம். பகுத் தறிவுக்குப் பொருத்தமான வேதங் களைத்தான் ஒப்புக் கொள்ள முடியும்.
வினா:- ஒரு புத்தகத்தில் கடவுள் வார்த்தை அடங்கியிருப்பதாக நீ நம்பினால், அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருந்தாலும், இல்லா விட்டாலும் நீ அதைப்பூரணமாக நம்ப வேண்டியது தானே?
விடை:- நம்பத் தேவை இல்லை.
வினா:- அது எப்படி?
விடை:- நான் குருட்டுத்தனமாக நம்பினால் அந்த நம்பிக்கைக்கு மதிப்பேயில்லை. கட்டாயத்தின்பேரில் நம்பினால் அது மனப்பூர்வமான நம்பிக் கையுமல்ல. பகுத்தறிவால் தூண்டப் பட்டு நான் நம்பினால் என் நம்பிக் கைக்குப் பாத்திரமானது என் பகுத் தறிவேயன்றி வேதமல்ல.
வினா:- இதற்கு ஒரு உதாரணம் கூறுக.
விடை:- பூமி பரப்பானது என்று எந்த வேதம் கூறினாலும் நாம் நம்ப மாட் டோம். ஏனெனில், நமது அனுபவத் திலும், ஆராய்ச்சியிலும் பூமி பரப்பாக இருக்கவில்லை.
வினா:- பகுத்தறிவுப்படி தப்பானதை யும் நம்ப வேண்டுமென்று வேதம் கட் டளையிட்டால் நீ கடவுள் வாக்கான வேதத்துக்குக் கீழ்ப்படிவாயா? பகுத் தறிவுக்குக் கீழ்ப்படிவாயா?
விடை:- பகுத்தறிவுக்கு ஒத்தபடி நான் நடந்து கொள்ளாவிட்டால் நான் ஒழுக்கமுடையவன் ஆகமாட்டேன்.
வினா:- பகுத்தறிவு பொய் என்று கூறு வதை, மெய் என்று நம்புவது சாத்திய மில்லையா?
விடை:- சாத்தியமே அல்ல. பகுத் தறிவே மேலான ஆதாரம்; அதிகாரி. மெய்யானதை மெய்யென்று நம்பும்படி பகுத்தறிவைக் கட்டாயப்படுத்த யாருக்குமே அதிகாரமில்லை.
வினா:- பகுத்தறிவுக்கு முரணான விஷ யங்களை எந்த வேதமாவது போதனை செய்கிறதா?
விடை:- ஆம். எல்லா வேதங்களும் போதனை செய்கின்றன.
வினா:- உதாரணம் கூறுக.
விடை:- படைப்புக் கதை.
வினா:- வேறொரு உதாரணம்.
விடை:- பிரளயக் கதை.
வினா:- மேலும் ஒரு உதாரணம்.
விடை:- மனிதன் சபிக்கப்பட்டுப் பாபியான கதை.
வினா:- அவற்றைப் பற்றி தற்காலத்திய அபிப்பிராயம் என்ன?
விடை:- வேதங்கள் கூறுகிறபடி மனிதன் சாபத்துக்கு உள்ளாகவில்லை; பிரளயம் உண்டாகவில்லை; கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை என இப்பொழுது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது.
வினா:- வேதங்களில் உள்ள வேறு தப்புகள் எவை?
விடை:- சரித்திரப்படியும், விஞ்ஞான சாஸ்திரப்படியும் தப்பான பல விஷயங்கள் வேதங்களில் அடங்கியிருக் கின்றன. வேதங்களில் கூறப்பட்டவை எல்லாம் பரஸ்பரம் முரணாக இருக் கின்றன. பாபகரமான பல விஷயங் களையும், வேதங்கள் போதனை செய் கின்றன.
வினா:- வேதங்களில் காணப்படும் இத்தகைய தப்புகளுக்குக் காரணம் என்ன?
விடை:- மனிதன் தப்புச் செய்யக் கூடியவன்தானே!
வினா:- அப்படியானால் வேதங்கள் எல்லாம் மனிதன் வகுத்ததுதானா?
விடை:- வேதங்கள் மக்களின் அறிவும், அறியாமையும், நற்குணமும், 
துர்க்குணங் களும் அடங்கிய ஒரு நூலேயன்றி வேறல்ல.
வினா:- அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?
விடை:- நம்மிடமுள்ள ஒளி வழி காட்டுகிறபடி நடக்க வேண்டும்.
வினா:- அது என்ன ஒளி?
விடை:- அதுதான் பகுத்தறிவு.
வினா:- பகுத்தறிவு நம்மைத் தப்பு வழியில் செலுத்தாதா?
விடை:- ஆம். செலுத்தக் கூடும்.
வினா:- அப்படியானால் அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்?
விடை:- ஏனெனில், அதை விடச் சிறந்த வழிகாட்டி நமக்கு வேறில்லை.
வினா:- வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக் காரணம் என்ன?
விடை:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங்கெட்டு விடும் என்ற பயமே அதற்குக் காரணம்.
வினா:- அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா?
விடை:- இல்லவே இல்லை. வேதங் களின் பெயரால் எவ்வளவோ பயங்கரக் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களை நம்பாத அநேகர் உதவியாளராக இருந்திருக்கின்றார்கள்.
வினா:- எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளிய துண்டா?
விடை:- இல்லை. சுமார் 5,000 வருஷங்களுக்கு முன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது.
வினா:- அதற்குமுன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா?
விடை:- நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்கு முன் மக்களும், சமூகங் களும், தேசங்களும் இருந்தே வந்திருக் கின்றன.
வினா:- உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளினாரா?
விடை:- இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது.
வினா:- அப்படியானால் உலக மக் களில் யூதர்கள் மட்டுந்தானா ஒழுக்க முடையவர்கள்.
விடை:- இல்லவே இல்லை. கடவுள் மூலம் வேதம் பெறாத கிரேக்கர் பண்டு மிக்க நாகரிகம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
வினா:- அதனால் விளங்குவது என்ன?
விடை:- வேதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை யென்பது அதனால் விளங்குகிறது.
வினா:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போதிப்ப தனால் நன்மை ஏற்படுமா?
விடை:- ஏற்படாது. முதலில், வேதங் கள் இல்லை. இரண்டாவது வேதங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் ஆகி விட்டால் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாமல் ஆகி விடும்.
வினா:- மெய்யான விஷயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எப்படி?
விடை:- பிரதிபலனை எதிர்பாராமல் நன்மையானதைச் செய்வதனாலும், விரும்புவதனாலும் வலுப்படுத்தலாம்.
வினா:- நல்ல ஒழுக்கத்திற்கு வேறு தூண்டுதல்கள் எவை?
விடை:- முக்கியமான தூண்டுதல் சுயமதிப்பில் விருப்பம்; இரண்டாவது பிற நல விருப்பம்; மூன்றாவது கடமை உணர்ச்சி.
வினா:- கடமையைச் சரிவரச் செய்வது எப்பொழுதும் இன்பகரமாக இருக்குமா?
விடை:- கடமை ஒரு சோதனை என்றும், உத்தமர்களாக இருக்க வேண் டுமானால் நம்மையே நாம் தியாகம் செய்துவிட வேண்டும் என பழைய மதங்கள் போதனை செய்கின்றன.
வினா:- அத்தகைய மத போதனை யினால் விளையும் பயன் என்ன?
விடை:- அதனால் உத்தம வாழ்க்கை நடத்த ஜனங்கள் பயப்படுகிறார்கள். உத்தம வாழ்க்கையைப் பற்றி எண்ணும் போதும் பயமும் மனச்சோர்வுமே அவர்களுக்கு உண்டாகிறது.
வினா:- அவ்வளவுதானா?
விடை:- துஷ்டர்களுக்குத்தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களுக்கு உண்டாகிறது.
வினா:- கடமை என்பதற்குச் சரியான பொருள் என்ன?
விடை:- கடமை ஒரு சோதனை அல்ல; தியாகமுமல்ல, கடமை என்பது ஒற்றுமை, அழகு. மகிழ்ச்சி, சரீர மானச விதிகளை நாம் மீறும்போதுதான் நாம் ஆத்ம தியாகம் செய்து சோதனைக்கு உள்ளாகிறோம்.
                              -------------------------------தந்தை பெரியார் --"குடிஅரசு" 19.4.1936

50 comments:

தமிழ் ஓவியா said...

நேருவும்- பசுவும்!



இந்தக் கோமாதாவை வைத்துக்கொண்டு இந்த இந்துத்துவாவாதிகள் மார டிப்பது, அரசியலாக்குவது என்பது - நேரு அவர்கள் காலத்திலேயே தொடங்கப் பட்டு விட்டது.

1952 முதல் பொதுத் தேர்தலில் பண்டிட் ஜவகர் லால் நேரு அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் ராம ராஜ்ய பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஷம்பூ நாராயண் என்பவர்.

தம்மை எதிர்த்துக் காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட நேருவிடம், அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். உங்களுக்குப் பசுவின்மீது நேசம் இல்லையா? என்று நேருக்கு நேர் நேருவிடமே கேட்டார்.

கேள்வி வந்த அடுத்த நொடியே பொட்டில் அடித் ததுபோல நேரு பதில் சொன் னார், பசுவை மட்டுமல்ல; குதிரைகளையும் கூட நான் நேசிக்கிறேன்! என்று போட் டாரே ஒரு போடு! அவ் வளவுதான் ஆசாமி வாய டைத்து நின்றார்.

உயிர்களை நேசிப்பது என்கிற காரணத்துக்காக மனிதன் மாமிச உணவைச் சாப்பிடக்கூடாதா? காய்கறி களைக்கூடத்தான் வளர்க் கிறார்கள்; (கவனிக்கவேண் டும் வளர்க்கிறார்கள்) அவை யும் பிராண வாயுவை உட் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அவற் றிற்கும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. அதனால் காய் கறிகளைச் சாப்பிட மறுப்பார் உண்டா?

உயிர்களை வதை செய் யக்கூடாது என்று சொல்லு வதைக்கூடப் புரிந்துகொள் ளலாம்; உயிர்களில் பசுவைத் தவிர மற்றவற்றைக் கொல் லலாம் என்பது எந்தவூர் ஜீவகாரூண்யம்?

ஒரு காலகட்டத்தில் இந்தப் பார்ப்பனர்கள் பசுக் களை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி பசு மாமிசம் தின்று கொழுத்தவர்கள்தான். இடைக்காலத்தில்தான் இவர் களிடம் மாற்றம் ஏற்பட்டது. இதனை வரலாற்று ஆசிரிய ரான இராகுல சாங்கிருத்தி யாயன் எழுதியுள்ளார்.

பிராமணர்கள் பவுத்தர் களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருது கிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்துக்காகவே பசு மாமிசம் தடை செய் யப்பட்டது என்றும், பசு வையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச் சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறார். (நூல்: வால்கா முதல் கங்கை வரை, பக்கம் 76).

இந்த வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், கோமா தாவுக்குள் ஒளிந்திருக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் உள்நோக்கம் என்னவென்று எளிதில் விளங்கிவிடும் அல்லவா! - மயிலாடன் 25-3-2015

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

என்ன ஆனந்தம்?

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்!

- காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி
அப்படியா?

ராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை யல்லவா செய்துகொண் டான் - ஆகா, என்ன ஆனந்தம்!

Read more: http://viduthalai.in/e-paper/98503.html#ixzz3VOduT5Va

தமிழ் ஓவியா said...

சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துப் பதிவுக்கு கைது செய்யும் சட்டப் பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 25_ சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்து களைப் பதிவு செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிர டித் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2012-ஆம் ஆண்டு, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே காலமான போது, மகாராஷ்டிரத்தில் கடையடைப்பு நடத்தப்பட் டதை விமர்சித்து முகநூல் பக்கத்தில் கருத்து வெளி யிட்ட இளம்பெண்ணை அந்த மாநில காவல்துறை யினர் கைது செய்தனர். அந்த கருத்தை முகநூல் பக்கத்தில் ஆதரித்த (லைக்) மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். அதேபோல, சமாஜ் வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கானை விமர்சித்து முகநூலில் கருத்து வெளியிட்டதாகக் கூறி பள்ளி மாணவர் ஒருவரைக் கடந்த 18-ஆம் தேதி உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கை களுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இத்தகைய கைது நடவடிக் கைகளுக்கு எதிராக, ஷ்ரேயா சிங்கால் என்ற சட்டக் கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தார்.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் ஆட் சேபகரமான விமர்சனங் கள், கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு, ஒருவரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவில் திருத் தம் கொண்டு வரவேண்டும் என்று அவரது மனு வில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. மேலும், இந்தச் சட்டப் பிரிவானது தவறான வகை யில் பயன்படுத்தப்படுவ தாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. சமூக வலை தளப் பக்கங்களில் ஆட் சேபகரமான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களை, காவல்துறைத் தலைவர் அல்லது அய்.ஜி-யிடம் உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என்று அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனா லும்கூட, உச்சநீதிமன்றத் தின் உத்தரவை மீறி, அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந் தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பக் குற்றவியல் சட்டத்தின் 66-அ பிரிவை நீக்கக் கோரும் பொதுநல வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரர், நாரிமன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை வெளி யிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் அவசிய மான ஒன்று. தகவல்

தொழில்நுட்பக் குற்றங்களுக்கான சட்டத்தின் 66-அ பிரிவு மக்களின் கருத்து உரிமையை நேரடியாகப் பாதிக்கச் செய்கிறது. அரசமைப்புக்கு எதிரானது: இந்தச் சட்டப் பிரிவின் மூலம் பேச்சு, கருத்துச் சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. 66-அ பிரிவின்கீழ் ஒருவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஷரத்துகள் அந்தச் சட்டப் பிரிவில் இடம் பெறவில்லை. இந்தச் சட்டப் பிரிவானது அரசமைப்புக்கு முரணான ஒன்று. சமூக வலைதளங்களில் ஆட்சேப கரமான கருத்து வெளியிட்டதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடு இருக்கும்போது, அதை எவ்வாறு சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியும்? சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் ஒருவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றலாம். அதுவே மற்றொருவருக்கு வேறு மாதிரியாகத் தோன்றலாம். மத்தியில் ஆட்சியமைப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இதுபோன்ற சட்டப் பிரிவுகளானது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். மத்தியில் அடுத்து ஆட்சியமைப்பவர் கள் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு தற்போதுள்ள அரசு உறுதியளிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு கோரிக்கை முன்னதாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-அ பிரிவு மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறிக்கும் பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 66-அ பிரிவைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில், முக்கியத் திருத்தங்களையும் வழி முறைகளையும் உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98502.html#ixzz3VOeEcrSj

தமிழ் ஓவியா said...

இணைய தளங்களில் கூறப்படும் கருத்துரிமைகளைப் பறிக்கும்

சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!

தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?

இணையதளங்களில் கூறப்படும் கருத்து களின் குரலை நெரிக்கும் மத்திய அரசின் 66ஏ பிரிவு சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இது தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி - அதையொட் டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

இந்த விளைச்சலில் சில களைகளும் முளைப்பது தவிர்க்க இயலாததே!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங் களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

தவறான பிரயோகங்கள்

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை யான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் நேற்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்சநீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதி ராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடா ளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக் கட்டுமானம் குலைக்கப்படாமல் - கருத்துச் சுதந்திரமே அது - காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
25.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98500.html#ixzz3VOeYJjod

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டில் ஒன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். - (குடிஅரசு, 4.10.1931)

தமிழ் ஓவியா said...

வயிறு - நாக்கு - நம் போக்கு- நோக்கு!


எனது வீட்டு நூலகத்திலிருந்து பழைய புத்தகங்கள் சிலவற்றை மீண்டும் புரட்டும் வாய்ப்பு பெற்றேன் - சில நாள்களுக்குமுன்.

5.9.1953 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனர் நாள் கொண் டாட்டத்தையொட்டிய பேச்சுப் போட்டி யில் முதல் பரிசு வாங்கியதற்காக, உதவித் துணைவேந்தர் (திரு.ஓ.இராம நாதன் பிள்ளை) கையொப்பமிட்டு எனக்குப் பரிசாக அளித்த நூல் அந்தக் குறிப்புடன் கண்டேன். அதை மீண்டும் உண்டேன் மகிழ்ச்சியில்.

டாக்டர் மு.வ. என்று தமிழ் மொழி உணர்வாளர்கள், இலக்கியவாதிகளால் பெரிதும் பாராட்டி மதிக்கப்படும் டாக்டர் மு.வரதராசனாரின் தமிழ் நூல்கள் ஒரு காலகட்டத்தில் பல இளை ஞர்கள், தமிழ் வாசிப்பாளர்கள் மத்தி யில் அதிகமான புழக்கத்தில் இருந் தவை.

அவரது சவச் செய்தி பரிசு பெற்ற நூல் கள்ளோ காவியமா முதல் பல புதினங்கள் கரித்துண்டு வரை ஏராள மான பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் பரவி, விரும்பி வாங்கி, படித்துச் சுவைத்து, மு.வ.வின் அன்பர்களாகவே ஆகிவிட்டனர்.

டாக்டர் மு.வ. அவர்களும், நம் இனமானப் பேராசிரியர் க.அன்பழ கனார் அவர்களும், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணி புரிந்த சம காலத்து நண்பர்கள் என்று ஈண்டு குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற டாக்டர் மு.வ.வின் நூல், ஒரு அருமையான, எளிமையான விளக்க நூல். (அவரது திருக்குறள் பொழிப்புரை, சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகத்தவரால் உரிமை பெற்ற பல லட்சம் விற்பனையான முதல் எளிய பொழிப்புரை பையடக்க நூல் ஆகும்).

இந்த நூலில் அவரது குறளுக்கு அளிக்கும் விளக்கம் முதலில் காமத்துப் பால் தொடங்கி, அடுத்து பொருட்பால், அதற்கடுத்து அறத்துப்பால் என்று செல்லும் ஒரு புதுமையைப் புகுத்திய நூல் அப்போது! தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வின் ஆழமான, அழகிய அணிந்துரையைக் கொண்ட நூல் இது!

காதலும், பொருளும் வாழ்க்கைப் படிகள். அறமே வாழ்க்கையில் உயிர் நிலை என்று விளக்கும் நோக்கத்தால் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப் பால் என்னும் முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் மு.வ.

இதைப் படித்தபோது, நம் உடல் அமைப்பின் உறுப்புகளின் முக்கிய பணிபற்றிய வள்ளுவரின் குறள் எவ் வளவு மருத்துவ நுண்ணறிவுடன் அமைந்துள்ளது என்பதை மிகவும் சிறப்பாக விளக்குகிறார் டாக்டர் மு.வ.

மருந்து என்ற தலைப்பில் (எனது பதிப்பில் பக்கம் 219) விளக்கம் எழுது கிறார் நூலாசிரியர் வள்ளுவர் குறளுக்கு.

பொதுவாழ்விற்குக் கருவியாக உள்ளத்தின் உறுதியும், அறிவின் தெளிவும், கெடாமல் காத்துக் கொள்ள வேண்டும். வரைவின் மகளிர், கள், சூது என்பன போல் உடம்பிற்கு வரும் நோயும், உள்ளத்தின் உறுதியையும் அறிவின் தெளிவையும் கெடுக்கவல்ல தாகும். ஆதலின், பொதுவாழ்வில் ஈடுபட்டோர் நோயற்றவராக வாழ வேண்டும் என்றும், நோய் வந்தாலும் உடனே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் திருவள்ளுவர் இங்குக் கூறு கின்றார். முதல் ஏழு குறளில் நோயில் லாமல் வாழ இயற்கை வழியைக் கூறி, பிறகு மூன்று குறளில் நோய் வந்தபின் மருந்தால் அதைத் தீர்த்துக் கொள்ளும் முறையைக் கூறுகின்றார். அதிகாரத் திற்கு மருந்து என்ற தலைப்பையே கொடுத்திருந்தும், ஏழு குறளில் மருந்து வேண்டாத வாழ்வையே அறிவுறுத்து கின்றார்; ஒரு குறளில் வெளிப்படை யாகவே மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்றும் தெளிவிக்கின்றார். ஆனால், இந்த நெறி மிக அரிய நெறி என்றும், எல்லோராலும் எல்லாக் காலத் திலும் இயலாதது என்றும் உணர்ந்து, தவறி நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்தால் தீர்க்கும் முறையை மூன்று குறளால் அறிவிக்கின்றார்.

பழங்காலத்து மருத்துவ முறைப்படி ஒருவனுடைய கையில் நாடி பார்த்து அவன் உற்ற நோய் இன்னது என்று காண முடியும். அவ்வாறு காணும்போது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்றும் மிகாமலும் குறையா மலும் இயற்கையான அளவில் இருந் தால் நோயற்ற நிலை என்று கூறுவார் கள். இந்த மூன்றில் ஒன்றோ, இரண்டோ மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் உண்டாக்கும்:

தமிழ் ஓவியா said...

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள் 941)

வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றும் மிகாமலும், குறையாமலும் தம் அளவில் நிற்கவேண்டுமானால், என்ன செய்வது? வாதம் மிகுந்தால் வாயுப் பொருளை உண்ணாமல் விடுதல், பித்தம் மிகுந்தால் பித்தப் பொருளை உண்ணாமல் விடுதல், சிலேத்துமம் மிகுந்தால் கபம் உண்டாக்கும் ஈரப் பொருளை உண்ணாமல் விடுதல், இவ் வாறே ஒன்று குறைந்தால் அதை ஈடு செய்யும் பொருளைத் தேடி உண்ணுதல் ஆகிய இந்த முறையைச் சிலர் கையாள் வது உண்டு. இது அவ்வளவு சிறந்த முறை அன்று. ஏன்? உண்ணுகின்ற உணவுக்கு ஏற்ப வாதம் முதலியவை ஏற்படுகின்றன என்பது மட்டும் முழு உண்மை அன்று; உண்கின்ற உணவைச் செரிக்கச் செய்து ஏற்றுக்கொள்ளும் வயிற்றையும் பொறுத்தே அவை ஏற்படு கின்றன. ஒருவர் உடம்பில் இனிப்பு (சர்க்கரை) மிகுதியாவதாக வைத்துக் கொள்வோம். அவர் இனிப்பற்ற உணவையே தேடி உண்டாலும், எல்லாவற்றையும் இனிப்பாகவே மாற்றிக்கொள்ளும் ஆற்றல் வயிற்றுக்கு உள்ளது. ஆகையால், இனிப்புப் பொருளை மட்டும் விட்டுவிடுவதால் பயன் ஏற்படுவதில்லை. அவ்வாறே புளிப்பு உடம்பில் மிகுந்துவிட்டபோது, புளிப்பான பொருள்களை விட்டுவிடு வதால் பயன் விளைவது குறைவே; புளிப்பற்ற பொருள்களையே தேடி உண்டாலும் அவற்றை எல்லாம் புளிக்க வைத்துப் புளிப்பாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் வயிற்றுக்கு உள்ளது. மற்றச் சுவைகளுக்கும் இவ்வாறே காணலாம். சுவைகளை ஒட்டியே வாதம் முதலி யனவும் அமைந்துள்ளன என்று வகுப்பார்கள். அந்த முறைப்படி, சுவைப் பொருள்களை மாற்றி மாற்றி உண்பதால் வாதம் முதலியவற்றின் மாறுபாட்டால் வந்த நோய் தீர்ந்துவிடும் என்று நம்பு வார்கள். அது தவறு. விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே தம் உடலுக்கு ஏற்ற உணவையும், அதன் அளவையும் அறிந்து தின்கின்றன. அவற்றின் நாக்கு அளவறிந்து உண் ணும் கருவியாக அமைந்துள்ளது. மக்கள் நாக்கும் தொடக்கத்தில் அந்த ஆற்றல் பெற்றிருந்தது. ஆனால், பகுத்தறிவும் எண்ணும் ஆற்றலும் வளர வளர புலன்களின் இயற்கை ஆற்றல் குன்றிவிட்டது. அன்றியும், சமைத்து உண்ணும் செயற்கை முறை வேரூன்றி விட்ட பிறகு, இயற்கை ஆற்றல் அழிவுபட்டது. ஆகையால், இன்று ஏற்ற உணவையும், ஏலாத உணவை யும் உணர்ந்து அறிவிக்கும் ஆற்றல் நாக்கிற்கு இல்லை. இன்றும் குழந்தை களிடத்திலும் சிலவகை நோயாளி களிடத்திலும் அந்த ஆற்றல் ஒருவாறு அமைந்திருத்தலை உய்த்துணரலாம். உடலுக்கு ஏலாத சில பொருள்களை அவர்கள் காரணமில்லாமலே விலக்கு கின்றார்கள். ஆயினும், உடலுக்கு ஏலாத சில பொருள்களை விரும்பவும் விரும்புகின்றார்கள்; உடல் கெடும் என்று பிறர் சொன்னாலும் கேளாமல் விரும்புகின்றார்கள்; அதனால் அந்த இயற்கை ஆற்றல் இன்று நாக்கிற்கு உள்ள அளவு போதாது; நம்பத் தகாததாகவும் உள்ளது.

தமிழ் ஓவியா said...

இன்று நாக்கு இயற்கை உணர்வி னால் ஆளப்படும் தன்மை குறைந்து, மனிதனுடைய விருப்பு, வெறுப்பினால் ஆளப்படும் தன்மை மிகுந்துள்ளது. ஆயினும் இன்றும் உடம்பில் மற்றோர் உறுப்பு அந்த ஆற்றலை இழக்காமல் காத்து வருகின்றது; அது மனிதனுடைய விருப்பு வெறுப்புக்குக் கட்டுப்படாமல் வேலை செய்து வருகின்றது; அதுதான் வயிறு. அது ஒன்றே இன்றும் நம்பத்தக்கதாக உள்ளது. தக்க உணவை நன்கு செரித்து, தகாத உணவை நன்கு செரிக்காமல் தள்ளுகின்றது; மனிதன் ஆசை வயப்பட்டவனாய்த் தகாத உணவையே திணித்து வற்புறுத்து வானானால், அதற்காக அந்த வயிறு மாறி அமைவதில்லை; மனிதனுக்கு அடிமையாவதில்லை; வேலை செய்ய மறுக்கின்றது; திணிப்பும், வற்புறுத்தலும் மேலும் மிகுமானால், (செரிப்புக்கு மருந்து முதலியவை உண்டு வற்புறுத் தினால்) மறுக்கும் நிலைமையும் கடந்து மானமுள்ளவர்போல் தானே கெட்டு அழிகின்றது. ஆகவே, அது நன்றாக வேலை செய்கின்றதா, செரிப்பு வேலை சீராக நடைபெறுகின்றதா என்று ஆராயக் கற்றுக்கொண்டால், உடல் நலத்தைக் காத்துக் கொள்வது எளி தாகும். இந்த ஆராய்ச்சியை ஜெர்மனி யில் வாழ்ந்த டாக்டர் லூயி கூன் முதலான அறிஞர்கள் பலர் விளக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளனர். இதையே பல நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவள்ளுவரும் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன் உண்ட உணவு எவ்வாறு அற்றது (சீரணமானது) என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவைக் கடைப்பிடித்துப் போற்றிப் பிறகு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்; அவ்வாறு உண்டால், உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை. முன் உண்ட உணவு அற்ற பிறகு, உண்ண வேண்டியதை இன்ன அளவு வேண்டும் என்று அறிந்து உண்பதே கடமை. அதுவே உடம்பைப் பெற்றவன் அந்த உடம்பை நெடுங்காலம் காத்துச் செல்லும் வழியாகும். முன் உண்டது எவ்வாறு செரித்தது என்று செரித்த தன்மையை ஆராய்ந்து அதனால் அறிந்து உண்மை யைக் கடைப்பிடித்து, மாறுகொள்ளாத (உடம்புக்கு ஒத்துக்கொள்கின்ற) உணவை உண்ணவேண்டும்; அதையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும். இவ்வாறு மாறுபாடு இல்லாத உணவையும், தன் மனம் விரும்பும் அளவு உண்ண மறுத்து உடலுக்குத் தேவையான அளவே உண்ணவேண் டும்; அவ்வாறு உண்டால், உயிர் வாழ்க் கைக்கு நோயால் வரும் இடையூறு இல்லையாகும். உடலுக்குத் தேவை யான உணவை ஆராய்ந்து குறைந்த அளவு இன்னது என்று அறிந்து உண்கின்றவனிடம் இன்பம் (உடல்நலம்) நிற்கும்; அதுபோல, மனத்தின் விருப் பத்திற்கு இயைந்து அளவு மீறி மிகுதியாக உண்கின்றவனிடம் நோய் நிற்கும். பசித்தீயின் அளவிற்கு ஏற்ற வாறு உண்ணாமல் ஒன்றையும் ஆரா யாமல் அளவு மீறி மிகுதியாக உண்டால், நோயும் அளவு கடந்து வரும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (குறள் 942)

அற்றல் அளவறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு (குறள் 943)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து (குறள் 944)

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (குறள் 945)

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (குறள் 946)

தீயளவு இன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோய்அள வின்றிப் படும் (குறள் 947)

ஒருகால் நோய் வந்தால், நோயைத் தீர்க்க என்ன செய்யவேண்டும்? அது என்ன நோய் என்று ஆராய்ந்து, அந்த நோய் என்ன காரணத்தால் வந்தது என்று நாடி, அதைத் தணிக்கும் வழி என்ன என்று அறிந்து, பொருத்தமான முறையில் முயற்சி செய்யவேண்டும். மருத்துவன் உதவி செய்வதற்குமுன் நோயாளியின் உடல் நிலைமை, வலிமை, வயது முதலியவைகளையும், நோயின் தன்மையையும், தீர்ப்பதற்கு உரிய காலத்தின் வாய்ப்பையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)

உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (குறள் 949) இதில் வயிறு எப்படி நமக்குக் கட்டுப்படாமல் நம் நலனைக் கருதி எவ்வளவு அருமையான எச்சரிக்கை களை தன்னகத்தே வைத்து, நம்மை காப்பாற்றி, வாழச் செய்கிறது பார்த்தீர் களா?

அதையும் அடக்கி வைக்கும் நாம் சர்வாதிகாரியாக மாறி கண்டதை யெல்லாம் நாக்கு சுவைக்காக சாப்பிட்டு கெடுத்துக் கொள்ளலாமா?



- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98512.html#ixzz3VOfDH8LU

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மையை மாய்க்கும் மத்திய ஆட்சி



திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (24.3.2015) நிறைவேற்றப்பட்ட ஆறாவது தீர்மானம் - இன்றைய மத்திய அரசு கடைப்பிடித்துவரும் மதச்சார்பின்மைக்கு விரோத மான நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது. தீர்மானம் வருமாறு:

மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு 2014 மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த 10 மாதங்களில் 600 மதக் கலவரங்கள் நடை பெற்றுள்ளதற்குக் காரணங்கள் இவ்வாட்சியின் இந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படையிலான செயல்பாடுகளும், ஆளும் பி.ஜே.பி.யை சேர்ந்தவர்களும், அதன் சங் பரிவார்களும் மேற்கொண்டுவரும் வெறித்தனமான பிரச்சாரமும்தான் என்று இச்செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் தன் முகவுரையில் வலியுறுத் தியுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான இந்தப் போக்கை இச்செயற்குழு கண்டிக்கிறது.

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைத்துச் சக்திகளும் ஓரணியில் திரண்டு நின்று இதனை முறியடிக்க முன்வரவேண்டுமாய்த் திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுக் கிறது. இவ்வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்திவரும் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு நல்ல பலனை அளித்துள்ளது என்று தெரிவிப்பதோடு, இந்த வட்டார மாநாடுகளை சிறப்பாக நடத்திவரும் கழகப் பொறுப்பாளர் களையும், தோழர்களையும் இச்செயற்குழு வெகுவாகப் பாராட்டுகிறது.

மத்திய பி.ஜே.பி. அரசின் இந்துத்துவா போக்கினாலும், அதன் சங் பரிவாரங்களின் வெறி கக்கும் பேச்சுகள், செயல்பாடுகளால் நாட்டில் மதக்கலவரங்கள் அன்றாட நடவடிக்கைகளாகவே ஆகிவிட்டன.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. மத்திய அரசு அதிகாரத்துக்கு வந்த இந்த 300 நாள்களில் 600 மதக்கலவரங்கள் நடந்துள்ளன என்பது எத்தகைய விபரீதப் போக்கு!

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடியை அருகில் வைத்துக் கொண்டே இந்தியாவின் மதவெறிப் போக்கை இலாவகமாக, நாகரிகமாகச் சுட்டிக்காட்டினாரே! அமெரிக்கா சென்ற பிறகும்கூட அதே கருத்தை வெளிப்படுத்தினாரே - அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பல நாடுகளிலிருந்தும் கலந்துகொண்ட அனைத்து மத நல்லிணக்க சிறப்புக் கூட்டத்தில் பேசியபோது, சமீபகாலமாக இந்தியாவில் நடந்துவரும் சிறுபான்மையினர்மீதான தாக்குதல் களை காந்தியார் இருந்து பார்த்திருந்தால் அதிர்ச்சி அடைந் திருப்பார் என்று சொன்னாரே!

இவற்றிற்குப் பிறகாவது மத்திய அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் வரவேண்டாமா? சங் பரிவாரங்களின் சிறுபான்மை மக்களுக்கு விரோதமான பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டாமா?

ஆனால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் என்ன சொன் னார்? மதச் சுதந்திரம் தொடர்பான ஒபாமாவின் கருத்து துரதிர்ஷ் டமானது என்றுதானே கூறினார். இவர்கள் திருந்தப் போவதில்லை என்பது உள்துறை அமைச்சரின் கருத்து தெளிவாக்குகிறது.

இதன்மூலம் இந்தியாவின் இந்துத்துவா மதவெறிப் போக்கு உலகம் முழுவதும் கைகட்டிக் கேலி செய்யும் நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டுவிட்டது.

இந்தியாவில் பிறந்தவர்களின் டி.என்.ஏ.யைப் பரிசோதித்தால், அனைவரும் இந்துக்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என் றும், இஸ்லாமிய இளைஞர்களிடம் தேச விரோதச் செயல் என்பது அவர்களின் உடலில் ஓடும் ரத்தத்தில் கலந்துள்ளது (Anti-National Activities Breed) என்றும் பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற உறுப்பின ராக இருக்கக்கூடிய ஆதித்யனாத் என்பவர் பச்சையாகப் பேசினாரே!

தமிழ் ஓவியா said...

உத்தரப்பிரதேசம் மேற்குப் பகுதியில் தரம் ஜக்ரன் சமிதி என்ற இந்து வெறி அமைப்பு துண்டு அறிக்கைகளை வெளியிட்டது.

வேற்று மதங்களில் உள்ள ஏழைகளை இந்துக்களாக மாற்றி னால் வேற்று மதக்காரர்களின் எண்ணிக்கை குறையும்; முஸ்லிம் களில் ஏழைகளாக இருந்தால், மதம் மாறுவதற்காக தலா 5 லட்சம் ரூபாயும், கிருத்தவர்களாக இருந்தால் ரூ.2 லட்சம் தரப்படும் என்று துண்டறிக்கை விட்டுள்ளனரே! தொடர்பு கொள்ளவேண்டிய தொலைப்பேசி எண்ணும் அந்தத் துண்டறிக்கையில் வெளியிடப் பட்டு இருந்தது.

சாம, பேத, தான, தண்டம் என்று சொல்லப்படும் அத்தனை வகைகளையும் கையாண்டு இந்து மதத்திற்கு மாற்றும் ஒரு வேலையில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் புனித நூலாக கீதை அறிவிக்கப்படும் என்று அறிவிக்கிறார்; பி.ஜே.பி. ஆளும் அரியானாவில் கீதை பள்ளிப் பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. பகவத் கீதை படித்தால் மன அழுத்தம் குறையும் என்றும் மருத்துவ மேதை போல கருத்துச் சொல்லுகிறார் சுஷ்மா சுவராஜ்.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் பசு மாமிசம், காளை மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை இந்திய அளவில் விரிவுபடுத்த இருப்பதாகவும் அறிவிக்கிறார்கள்.

உணவுப் பிரச்சினை - தனி மனிதர் பிரச்சினை, அதில் தலை யிடுவதற்கு யாருக்கும், எந்த அமைப்புக்கும் உரிமை கிடையாது. ஆனால், பசு என்பது இந்து மதத்தின் கோமாதா என்று சொல்லப் படுவதால், அந்த மதவாத அடிப்படையில்தான் மாட்டிறைச்சிக்குத் தடைச் சட்டம் கொண்டு வருகின்றனர்.

குடியரசு தின விழாவையொட்டி அரசு வெளியிடும் விளம் பரத்தில், அரசமைப்புச் சட்டம் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செக்குலர், சோசலிஸ்ட் என்ற பொருள் பொதிந்த சொற்களைத் திட்டமிட்டு நீக்கிவிட்டு, விளம்பரம் கொடுக்கிறார்கள். (இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் இதனை எந்த அளவு கண்டித்தன என்பதை எண்ணுகிறபோது வெட்கக்கேடாகத்தானிருக்கிறது).

மத்திய அரசு அலுவலகங்களில் கிருமி நாசினியாக இனி பினாயிலைப் பயன்படுத்தக்கூடாது; அதற்குப் பதிலாக கோமாதா வின் (பசுவின்) கோமியத்தை (மூத்திரத்தை) பயன்படுத்தவேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி மத்திய அரசுத் துறை களுக்குச் சுற்றறிக்கை அனுப்புகிறார்.


அமெரிக்க அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துகொண் டிருக்கும் காலகட்டத்திலேயே இந்தியாவின் தலைநகரமான டில்லியில் காவிகள் சர்ச்சுகளைத் தாக்கினார்கள்.

மத்திய அரசுக்குச் சொந்தமான வானொலியைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்தியா என்பது இந்துக்களின் நாடே என்று பிரச்சாரம் செய்தாரா, இல்லையா?

டில்லி பேராசிரியர் கிலானி, டில்லியில் உள்ள நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது, அவர் முசுலிம் என்ற ஒரே காரணத்திற்காக டில்லி பல்கலைக் கழக வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. யினர் தாக்கினார்களே, என்னே காட்டுவிலங்காண்டித்தனம்!

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள் கைக்கு நேர் எதிரான போக்கை மத்திய பி.ஜே.பி. அரசு பின்பற்று வதைத்தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு சுட்டிக்காட் டியுள்ளது. இந்த நிலையில், மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நின்று, மதவாத பிற்போக்குச் சக்திகளை முறியடிக்க வேண் டும் என்பதுதான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானமாகும்.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே திராவிடர் கழகம் சுட்டிக்காட்டிய அபாயத்தைப் புரிந்துகொள்ளத் தவறியதால்தான் ஒரு மதவெறி ஆட்சியின்கீழ் மக்கள் அவதிப்படுகிறார்கள் - காலங் கடந்த நிலையில், இப்பொழுதாவது வெகுமக்கள் திராவிடர் கழகத்தின் தீர்மானத்தைப் புரிந்துகொள்வார்களாக! அதன்படி நடந்துகொள்வார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/98510.html#ixzz3VOfXxai3

தமிழ் ஓவியா said...

மதுரையில் மகளிரணி சிறப்பு வழக்காடு மன்றம்


மதுரை, மார்ச் 25_ 15.03.2015 மாலை 6.00 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தன் சார் பாக 27_ஆவது நகழ்ச்சி யாக மகளிர் தன சறபபு வழக்காடு மன்றம் மாட் டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தயாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னர் கல்லுரி பேராசிரி யர் அ. ஜோதி தலைமை தாங்கினார். ந.சரோசா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரணி தலைவர்), வே.சுசிலா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரண செயலாளர்) மற்றும் மோ.புஷ்பலதா (மதுரை மாநகர தராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர்) ஆகியோ முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சியமளா வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரி யர் க.அகலாகுமாரி (இராசா பொறயயல் கல்லூரி இணைப்புரை வழங்கனார். ''பெணகள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது.'' என்ற வழக்கனைத் தொடுத்து மகேஸ்வரி (அக்ரி) (இணை ஆணையர் வணிகவரித் துறை) வழக்காடினார். அவரது வழககினை மறுத்து வழக்கறிஞர் இன்னிசை (சென்னை உயர்நீதிமன்றம்) எதிர் வழக்காடினார். இருதரப்பு வாதுரையைக் கேட்டு பெண்கள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் ரேணுகா தேவி விரிவான விளளக் கத்தோடு தர்ப்பினை வழங்கனார். நகழ்ச்சியின் இடையே ''மம்மீ.......... எனககு ஒரு டவுட்டு'' என்ற நகழ்ச்சியை பெரியார் பிஞ்சு த.ஓவியா மற்றும் பா.வேல்விழி நடத்திக் காட்டினர். அந்நிகழ்ச்சி யில், 1) ''தருபபுகழைப்பாடப் பாட வாய்மணக்கும்'' என்று பாடுகிறார்களே அவர்கள் பல்துலக்க மாட்டார்களா? 2) ''தருநீறில் மருந்து இருக்கு தெரியுமா?'' என்கிறார் களே மருநது கடையில் அது விற்குமா? 3) ''சரஸ் வதியைக் கும்பட்டால் தான் படிபபு வரும்'' என்கிறீர்களே எங்கள் வகுப்பில் ராபர்ட் முதல் இடத்திலும், இஸ்மாயில் இரண்டாவது இடத்தி லும் இருக்கிறார்களே அவர்கள் சரஸ்வதியை கும்பிட்டார்களா?'' 4) ''பூஜைக்கு முன் கொழுக் கட்டையை தின்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்கிறீர்களே அந்த சாமியையே தருடிச் செல் கிறார்களே சாமி ஏன் அவர்கள் கண்ணை குத்த வில்லை?'' என்ற பகுத்தறிவு வினாக்களை பெரியார் பிஞ்சு த.ஓவியா சுவைபட எழுப்பிய போது அரங் கமே சிரிபபொலியால் அதிர்ந்தது. பார்வையா ளர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்தது. நகழ்ச்சியின் இறுதியில் பா.வேல்விழி நன்றியுரை ஆற்றனார்.

Read more: http://viduthalai.in/page-4/98484.html#ixzz3VOh1sBjK

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குழந்தைப் பேறு

மயிலாடுதுறையையடுத்த திருவாலங்காட்டில் உள்ள கோயில் குளமான காமேஸ் வர தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப் பேறு கிடைக் குமாம். - ஒரு நாளேட்டின் செய்தி இது. அந்தத் திருவாலங் காட்டிலேயே குழந் தைகள் இல்லாத தம்பதிகள் இருக் கிறார்களே?

Read more: http://viduthalai.in/e-paper/98552.html#ixzz3VUa7RuPX

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதான்!
பழநி மலை கோயில்
ரோப் கார் அறுந்து விழுந்தது

பழநி, மார்ச் 26:பழநி மலைக்கோயிலுக்கு பஞ்சா மிர்தம் கொண்டு சென்ற மெட்டீரியல் ரோப் கார், பில்லர் சாய்ந்ததால் அறுந்து விழுந்தது.

பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயி லுக்கு செல்வதற்காக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாமிர்தம், அன்ன தானத்துக்கான மளிகை பொருட்கள் கொண்டு செல்வதற்கு தனியாக மெட்டீரியல் ரோப் கார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் நேற்று பிற்பகல் வழக்கம் போல் பஞ்சாமிர்தம் ஏற்றி செல்லப்பட்டது. அப்போது ரோப்கார் வழித்தடத்தில் உள்ள இரும்பு பில்லர் திடீரென சரிந்து வயர்கள் அறுந்து விழுந்தன.

இதில் பஞ்சாமிர்தம் ஏற்றி சென்ற ஒரு பெட்டி சாய்ந்ததால், பஞ்சாமிர்த டப்பாக்கள் கீழே விழுந்தன. காலியாக வந்த பெட்டி அடுத்து கீழே விழுந்தது. உடன் ரோப் கார் இயக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள தால், ஒரு வாரத்திற்கு மெட்டீரியல் ரோப் கார் இயங்காது என்று ஊழி யர்கள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98551.html#ixzz3VUaJLRcn

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கனம்!

செய்தி: நிதி நிலையில் தமிழகம் பாதுகாப்பாகவே உள்ளது.
- முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சிந்தனை: ஆமாம். தமிழ் நாட்டின் கடன் சுமை ரூ.1.81 லட்சம் கோடி என்ற கனமான நிலைதானே!

Read more: http://viduthalai.in/e-paper/98554.html#ixzz3VUaRvJq6

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகள் மீது
மனிதநேய அணுகுமுறை தேவை

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 24ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளைப் போராட வைப்பது என்பதே கருணையற்ற - மனித நேயமற்ற ஒன்று என்று எடுத்த எடுப்பிலேயே கூறிட வேண்டும். அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை - பார்வையற்றவர்கள் பிரச் சினையை அரசு திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும்.

காது கேளாதோர் பிரச்சினையை அரசாங்கம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது இயற்கையின் பாற்பட்ட மனித நியதியாகும். அவர்களின் கோரிக்கைதான் என்ன?

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற அரசு கடைப்பிடிக்கும் சட்ட விரோத விதிகளை ரத்து செய்க!

மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே அனைவருக்கும் உதவி தொகை வழங்கிடுக!

40 சதம் ஊனம் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிடுக!

காது கேளாதோர் உதவித் தொகை பெற 80 சதம் என்கிற பாரபட்சத்தை ரத்து செய்க!

உதவித் தொகை நிறுத்தப்பட்ட அனைவருக்கும் நிலுவை தொகையுடன் உடனே வழங்குக!

உத்தரவு பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் காலதாமதமின்றி உதவித் தொகை வழங்கிடுக!

2014 மார்ச் அரசாணை எண்.10-ன் படி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிக்குரிய 1107 பின்னடைவு காலிப் பணியிடங்களில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை பணி நியமனம் செய்க!

அரசாணைப்படி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளச் சான்று வழங்கிடுக!

அரசு காலிப் பணியிடத்தில் 3 சதவிதத்தை மாற்றுத் திறனாளிகளை கொண்டு நிரப்பிடுக!


மேற்கண்ட ஒன்பது கோரிக்கைகளில் அடங்கி யுள்ள நியாயத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகள் இருந்தால் அதில் ஒன்று பிறப்பிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அத்தாயின் கடமை என்பது அந்தக் குழந்தையின்மீது கூடுதல் கவனம் செலுத்துவ தாகும்.

அரசு என்பதும் அந்தத் தாயின் இடத்தி லிருந்து மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினையைப் பார்க்க வேண்டாமா? காது கேட்பதில் என்ன 80 சதவிதம்? விசித்திர மான கேலிக் கூத்து!

இவை எல்லாம் ஒரு பிரச்சினையைத் தட்டிக் கழிக்க வைக்கப்படும் நிபந்தனைகளாகவே தெரிகிறது.

இவர்கள் எல்லாம் என்ன மிட்டா மிராசு தார்களா? செல்வந்தர்களா?

அரசு கொடுக்கும் உதவித் தொகையில் வாழ வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்படுபவர்களாயிற்றே! அவர்கள் விஷயத்தில் தேவையற்ற நிபந்தனைகளைத் திணிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் அய்யமில்லை.

இவர்களில் படித்தவர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய வேலை வாய்ப்பை அளித்திட என்ன தயக்கம்? அப்படி என்ன இவர்களுக்குப் பெரிய தொகை செலவாகப் போகிறது?

அரசு கீழே சிந்தும் பணத்துக்கு ஈடாகுமா இது? அரசு இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றிட முன்வர வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகம் மனிதாபிமான இயக்கமாகும் - மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமும் ஆகும்.

அந்த முறையில்தான் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் போராடும் இடத்திற்குச் சென்று நேற்று சந்தித்தோம். அவர்கள் நியாயமான கோரிக்கை களுக்காக திராவிடர் கழகம் உரத்த முறையில் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறது.

நீதிமன்றம் சென்றுதான் ஆக வேண்டும் என்றாலும், அந்த வகையிலும் உதவிட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு கருணையோடும், மனிதநேய உணர்வுடனும் அணுக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்து கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

26.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98557.html#ixzz3VV2Av9w5

தமிழ் ஓவியா said...

பெரியார் பாதையில் லீக்வான்யூ

சிங்கப்பூரின் சிற்பி லீயின் 'இறுதி அஞ்சலி நாளன்று அவரவர் இருக்கும் இடங்களில் , கறுப்பு உடை அணிந்து பெருமை மிகு லீ அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்' என்ற வேண்டுகோள், எதிர்பாராத அளவுக்கு மக்கள் மனங்களைத் தொட்டிருக்கிறது. ஆயிரமாயிரம் அன்பர்கள் அந்தச் செய்தியை பெரிய அளவில் பகிர்ந்து கொண்டு, அன்னாரின் புகழை உலகெங்கும் பரப்பியுள்ளனர்.

எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புடை தரித்த அனுதாபக் கூட்டம் உருவாகி வருகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை லீ அவர்கள் மறைமுகமாக ஏற்றவர். உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற பெரியாரின் அரிய கருத்தின் முழு சொந்தக்காரர் லீ.

அதே நேரத்தில் லீயின் தெய்வ நம்பிக்கை, இதுவரை யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாத ஒன்று. செயலாக்கமே நாட்டை முன்னுக் குக் கொண்டு வரும் எனத் திடமாக நம்பிய அவர், தெய்வம் சார்ந்த கொள்கைகளுக்கு நேரம் ஒதுக் காததையும் நம்மால் காண முடிகிறது. ஆனாலும், தன் மக்களின் தெய்வ நம்பிக் கைகளில் என்றைக்குமே அவர் குறுக்கே நின்ற தில்லை. முப்பதுக்கு மேற்பட்ட இந்து கோயில்களை கட்ட அனுமதித்தவர். தைப்பூசத் திருவிழாவுக்கு முக்கியத்துவம் தந்தவர்.

இந்து அறக் கட்டளை வாரியத்தின் வழி, கோயில்கள் ஒழுங்காக நிர்வ கிப்பதை உறுதிப் படுத்திஇருப்பவர். இன்றைய நம் கோயில்கள் பல, சமய ஆராதனைகளுடன், பாலர் பள்ளி போன்ற போதனைக் கூடங்களையும் நடத்தி வருகின்றன. லீயின் மறைவை ஒட்டி ,தந்தை பெரியாரின் கருஞ் சட்டைக் கொள்கையை மக்கள் இங்கே பின்பற்ற நினைப்பது மிகப் பொருத்தமே! நவ நாகரீக சிங்கப் பூக்கு, பெரியார் பார்வை தந்த பெருமையும் லீ அவர்களுக்கே உரியது.

- சிங்கப்பூர் ஏ.பி. இராமன் -

Read more: http://viduthalai.in/e-paper/98593.html#ixzz3VaHtEvB1

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


எதிர்காலம்

எதிர்காலத்தைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? அனைத்தையும் திட்ட மிட்டு ஆட்டுவிப்பவன் அதைப் பார்த்துக் கொள்வான் - ரமணரிஷி

உண்மைதானே - ரமணரிஷி புற்றுநோய் வந்து பரிதாபகரமான முறையில் மரணம் அடைந்தது எல்லாம்கூட ஆண்டவன் திட்டமிட் டது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/98595.html#ixzz3VaIIRpvg

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaJpqbuo

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.
(குடிஅரசு, 15.4.1928)

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaK5J7gP

தமிழ் ஓவியா said...

அண்ணா கூறுகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaMjHDSH

தமிழ் ஓவியா said...

குன்னமிர்தல் கூறுகிறார்!

மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சமமின்மையும் ஆகும்.

சமமற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமுதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)

இந்திய சமுதாய பழக்க வழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது

(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னமிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது)

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaNiZI3r

தமிழ் ஓவியா said...

மந்திரம் - தந்திரம் - யந்திரம்

மனிதன் ஒரு காந்தம். அவன் உடல் உறுப்புகளில் காந்த சக்தி உள்ளது என்பதைப் பகுத்தறிவாளர்கள் கூட மறுக்க முடியாது. ஏனென்றால், அது விஞ்ஞானி களால் நிரூபிக்கப் பட்ட உண்மை.

இந்த உண்மையின் அடிப் படையில் அமைந்தது தான் தாந்த்ரிக சாஸ்திரம். சரியான சாதனையாலும், பயிற்சியாலும் இந்த காந்த சக்தியை ஓர் ஆக்க சக்தியாக்கி அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியிருக் கின்றனர். (ஞான பூமி, பிப்ரவரி 1982, பக்கம் 29)

தேஹரியில் கொஞ்சகாலம் தங்கினேன், அப்போது பண்டிதரிடம் எனக்குப் படிக்கச் சில புத்தகங்களையும் ஏடுகளையும் கேட்டேன். அவர் சில இலக்கணங்கள், இலக் கியங்கள், நிகண்டுகள், தாந்திர நூல்கள் கிடைக்குமென்றார். தாந்திர நூல்களை நான் அதுகாறும் பார்த்ததில்லை. அதைப் படிக்கக் கேட்டேன். பண்டிதர் பல தாந்திர நூல்களைத் தந்தார்.

புத்தகத்தைத் திறந்ததுமே நம்பமுடியாதபடி அவ்வளவு அசுத்த, ஆபாச, அபத்த, அசங்கியச் சரக்குகளைக் கண்டு அருவருத்தேன். தாந்திர நூல் தாய், மகள், அக்கா, தங்கை, சண்டாளி, சாமரி என்ற விவஸ்தை இல்லாமல் ஸஹகமனம் (புணர்ச்சி) செய்யத் தூண்டுகிறது.

அதில் நிர்வாண ஸ்திரீயை பூஜை செய்யச் சொல்லியிருக்கிறது. எல்லா பிராணிகளையும் கொன்று புலாலுண்ணலாம். மீனுண்ணலாம், மதுபானம் செய்யலாம்; இவையெல்லாம் பூஜா விதியாம்.

பிராமணன் முதல் சாமரன் வரையில், விவஸ்தை இல்லாமல் பஞ்ச மகாரானுஷ்டானம் செய்யச் சொல்லுகிறது. மாமிசம், மது, மத்ஸ்யம், முத்திரை, மைதுனம் ஆகியவை பஞ்சமகாரங்கள். இந்தப் பைசாச அனுஷ்டானங்கள் முக்தி தருமாம். ஆனந்த முக்திக்கு இவை வழியாம்.

இந்தத் தாந்திர நூல்களை படித்து முடித்தபோது, என் அருவருப்பிற்கும் வியப்பிற்கும் அளவில்லை. இப்படிப்பட்ட ஆபாசக் குப்பை களை எழுதி தர்ம சாஸ்திரம் என்று பிரச்சாரம் செய்யும் தூர்த்தரை வெறுத்து, அங்கிருந்து சிறீநகரம் சென்றேன்.

- (பக்கம் 24, நூல்: தயானந்த ஜோதி, ஆரிய சமாஜம், சென்னை

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaNrvBmP

தமிழ் ஓவியா said...

கீதைப் பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா?

என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்

ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaO064Af

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.

மனிதனால் - எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

பொதுஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு பொது ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்கக் கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaOFIKrM

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியு டையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை.

நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOQ1tFa

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் என்று சொல்லப் படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பன ரல்லாத மக்கள் அனைவருக்குமான கழக மாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.


Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOhFjkz

தமிழ் ஓவியா said...

நாட்டையே அழிக்கும் ஆபத்து: மிகப்பெரிய விண்கல் நாளை பூமியை கடக்கிறது

லண்டன், மார்ச் 27_ சுமார் 1000 மீட்டர் அக லம் கொண்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று நாளை (27 ஆம் தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள் ளது.

அந்த விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர் கள் பெயர் சூட்டியுள் ளனர். இந்தக்கல் பூமியின் 28 லட்சம் மைல்களை கடந்து பயணிக்கும்.

இந்த மிகப்பெரிய கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் கேட் டலினா ஸ்கை சர்வே மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியை கடப்பது 5 ஆயி ரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய மாகும். இந்த மிகப்பெரிய விண்கல் மணிக்கு 37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வருகிறது.

இந்த விண்கல் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்து விடும். மேலும் இதனால் பருவநிலை மாற்றம், நில நடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா பகுதியில் விழுந்த விண் கல்லால் ஏற்பட்ட பாதிப் புகளை விட இந்த புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதுதொடர்பாக பக் கிங்காம் ஷைர் பல்கலைக் கழகத்தின் வானியல் பேராசிரியர் பில் நேப்பி யர் கூறுகையில், 2014 ஒய்.பி.35 போன்ற விண்கற்கள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வுதான் என்றாலும் அவை ஏற்படுத்தும் ஆபத் துகளை நாம் சாதாரண மாக எடை போட்டு விட முடியாது என்றார்.

Read more: http://viduthalai.in/page-4/98642.html#ixzz3VaPOMTIn

தமிழ் ஓவியா said...

பகையைப் புகைக்காதீர்!

அமெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அமெரிக்க துணைக் கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

உலக அய்க்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆனால் வாஷிங் டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த மதிப்பீடு ஆகும். புகையிலையால் புதிதாக 5 நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேகப்ஸ் கூறியதாவது:-

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம்.

இங்கிலாந்து மருத்துவ ஆய்வில் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர இந்த பழக்கம் காரணமாக புதிதாக அய்ந்து வகை நோய்கள் தாக்கி பலர் இறந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நோய்கள் ஆய்வின் போது கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதை ஆராய்ச்சியாளர்கள் தனிக் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் புகைப்பழக்கத்தால் ரத்த நாளம் சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகள் இரு மடங்காக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

குடலுக்கு சரியாக ரத்த ஓட்டம் ஏற்படாதநிலையில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவிதமான நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தகவல்: சீ. இலட்சுமிபதி

Read more: http://viduthalai.in/page3/98656.html#ixzz3VgBw4XBE

தமிழ் ஓவியா said...

காந்தியாரால் அல்ல - சவர்க்காரால்தான் சுதந்திரம் கிடைத்ததாம்!

வீர் சவர்க்காரின் தியாகத்தால் தான் சுதந்திரம் கிடைத்த்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராய்ச்சி கூறியுள்ளார்.

விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50 ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநி லங்களில் கொண்டாடப்பட்டு வரு கிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வோரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசமாநிலம் பாயிரஜ் என்ற இடத் தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறியதாவது:

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட் டமாகும், இந்த போராட்டத்தின் விளைவை ஆங்கிலேயருக்கு உளவு பார்த்து கூற இங்கே பலர் இருந்தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்று வேலை;

அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலேயர் நடத்திய ஊடகங்கள் காந்தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட்டியது. காந்தியின் ஆங்கிலேயப் பாசத்திற்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த சன் மானமாகும், அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ புகழ் மிக்க தலைவர்களைப் போல் பார்க்கப் படுகிறார்.

உண்மையில் அவர் புகழ் மிக்க தலைவராவதற்குத் தகுதியற்றவர். இந்து மக்களின் அடிமைத்தளை களை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவர்கார் அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப்படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத்தந்தையாக பார்க்கவேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிறமதத்தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும், அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்சலிருந்தால் இந்தமேடையிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ்லாமிய நடிகர் களின் திரைப்படங்களைப் புறக்கணி யுங்கள் என்று நான் சொன்னது நன்மைக்காகத்தான்.

அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சைவிதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப்பட நடிகர்களிட மிருந்துதான் ஆரம்பிக்கிறது பாகிஸ் தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுவதையைத் தடைசெய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச்சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத் தரவிட்டார். அதனால் அவரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனை வரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங் குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல்லாம் வெறும் கட் டிடங்கள் மட்டுமே என்று பிராய்ச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தால் தமிழும் தமிழரும் வளர்ந்தனரா? இல்லையா?

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் அன்றைய மவுண்ட்ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் (Hotel and Mess) பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாது என்று போர்டு வைத்திருந்தார்கள்.

பிராமணரல்லாத தமிழர்கள் - அதாவது பஞ்சம, சூத்திர மாணவர்கள் விடுதிகளில் தங்கிப்படிக்க அனுமதி கிடையாது.

அடையாளம் தெரியாத நபர் என்று ஒருவரைக் குறிப்பிடுவது போல் பிராமணரல்லாதார் என்பது தான் தமிழரின் அடையாளமாக இருந்தது.

1915 - ஆம் ஆண்டில் தமிழர்கள் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே படித்திருந்தனர். திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு தமிழன் இப்படித்தான் வாழ்ந்தான்.

2000 ஆண்டு காலமாக நீடித்த இந்த பிறவி பேதத்தை மனித நேயமற்ற கொடுமையை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவத்தை உருவாக்கவே திராவிடர் இயக்கம் தோன்றியது. தந்தை பெரியார் போராடினார்; வெற்றிவாகை சூடினார்.

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் எனும் கொடையால் கன்னித்தமிழ் இன்று கணினித்தமிழாக வளர்ந்திருப்பதும் சுட்டுரையில் (டுவிட்டர்) இந்திய அளவில் # தமிழ் வாழ்க முதலிடம் பிடித்துள்ளதும், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்து தமிழைக் காப்பற்றியதும், திருக்குறளை உலகறியச் செய்திருப்பதும், தமிழ் இன்று செம்மொழியாக பெருமைப்படுத்தப் பட்டிருப்பதும் திராவிடர் இயக்கத்தின் சாதனைகளே.

1) தமிழ் பெண்கள், 2) தாழ்த்தப்பட்ட தமிழர்கள், 3) பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் என வகைப்படுத்தி தனித்தனியே அவரவர்கள் வளர்ச்சியைக் கவனித்தால் திராவிடர் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் போராடிய பின் தமிழர்கள் அடைந்துள்ள வளர்ச்சியை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழும், தமிழரும் வளர்ந்துள்ளனர் என்பதற்குத் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழே தக்க ஆதாரமாகும். 100 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழில் தமிழ் தமிழாக இருக்காது. அழைப்பிதழில் ஒரு தமிழர் கூட பட்டதாரியாக இருக்கமாட்டார். இன்றுள்ள அழைப்பிதழில் தமிழன் உயர்படிப்பும், உயர் பதவியும் பெற்றிருப்பதைக் காணலாம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழரை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தியது திராவிடர் இயக்கம்.

லோக குரு குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது தமிழன் நீதிபதி ஆசனத்தில் உட்காரும் நிலைக்கு உயர்த்தியதும் திராவிடர் இயக்கமே!

இன்றுள்ள தமிழ் நாட்டில் 12-ஆம் வகுப்புத் தேர்வில் ஆண்களை விட பெண்கள் அதிக சதவீதம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களும் பெறுகின்றனர். செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் அந்த மாணவிகள் அளிக்கும் பேட்டியே பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதற்குத் தக்க ஆதாரமாகும்.

ஆண்களுக்குள்ள உரிமைகள் அனைத்தும் இன்று பெண்களுக்குக் கிடைத்துள்ளன. தமிழ் வாழ்கின்றது, தமிழன் வாழ்கின்றான், தமிழ் வளர்ந்துள்ளது, தமிழனும் வளர்ந்துள்ளான். பெரியாரின் விருப்பமும், போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. வாழ்க பெரியார்.-மு.ந.மதியழகன் (சென்னை-33)


Read more: http://viduthalai.in/page5/98661.html#ixzz3VgDAEBD6

தமிழ் ஓவியா said...

மாநில அரசு இணையதளத்தில் இன்றளவும் ஜெயலலிதா தான் முதல்வர்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் கூட புலம்பும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. அதற்கேற்பத்தான் ஆட்சியும் காட்சிகளும் உள்ளன.

தமிழகத்தில் அதிமுகவினர்தான் ஜெயலலிதாவை விடாமல் மக்களின் முதல்வர் என்று கூறி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அரசுத் துறையும் கூட அவரை இன்னும் முதல்வராகவே பார்க்கிறது, பாவிக்கிறது என்பதுதான் வேடிக்கையானது.

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூஜைகளும் சிறப்பு யாகங்களும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சியை நடத்தினர். அதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படம் மருந்துக்குக் கூட வைக்கவில்லை. மாறாக ஜெயலலிதா படம்தான் நிறைந்திருந்தது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்னும் கூட அகற்றப்படவில்லை. தற்போது தமிழக அரசின் மக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை இணையதளத்தில் ஜெயலலிதாவை இன்னும் முதல்வராகவே வைத்துள்ளனர். அந்தத் தளத்தை கிட்டத்தட்ட அப்படியே போட்டு விட்டு போய் விட்டது போலவே தெரிகிறது.

எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்தத் தளத்தைப் பார்த்தபோது. அதில் அமைச்சரவைப் பட்டியலில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா என்று போட்டு வைத்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராகவே நீடிக்கிறார். மேலும் அந்தத் தளம் முழுவதும் ஜெயலலிதா படம்தான்.

Read more: http://viduthalai.in/page5/98662.html#ixzz3VgDNz8Qw

தமிழ் ஓவியா said...

திரு. மாளவியாவின் புரோகிதம்

பிரபல வருணாசிரம தரும வாதியாகிய பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண்ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதிகர் என்பது தெரியும்.

சூத்திரன் என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் அவன் இருபத்தொரு ஜென் மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிரா மணனாகப் பிறந்துதான் மோட்சம் பெறவேண்டும் என்ற பிராமணிய மதக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை யுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதிகர் என்பது அவரு டைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய வைதிக மாளவியா அவர்கள் அரசியல் சீர்த்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த தசாஸ்வமேதக் கூட்டத்தில் இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி மந்திரதீட்சை கொடுத்தாராம்! அப்போது 150 பேர்களுக்குமேல் 500 பேர்களுக்குள் அடங்கிய தீண்டாதார்களுக்குச் சமயதீட்சை கொடுத்தாராம்!

இவ்விஷயங்கள் பத்திரிகைகளிளெல்லாம் வெளி யாகியிருக்கின்றன. என்றுமில்லாமல் இப்பொழுது திடீரெனத் தீண்டாத வகுப்பினர்மேல் திரு.மாளவியா அவர்களுக்குக் கருணைபிறந்து சமயதீட்சை அளிக்கப் புறப்பட்டது எதற்காக? அவர்கள் இந்த உலகத்தி லிருந்து கொண்டு சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருணாசிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர்.

ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்ச லோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தின் பேரிலா? அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா? என்று கேட்கின்றோம். அல்லது தீண் டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர் களைத் தனியாகப் பிரிக்கக்கூடாது.

அவர்களுக்கும், அரசியல் சீர்திருத் தத்தில் பொதுத் தொகுதிதான் அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்க வில்லை. அவர்களுக்குவேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்று இந்துமகா சபைக்காரர்களும், காங்கிரஸ் காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாரா? என்று கேட்கின்றோம்.

இவ்வாறு சமய தீட்சை கொடுக்கப்பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு.மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக்கிறார்களா? என்றும் கேட்கிறோம். ஒரு நாளும் அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆகவே தீண்டாதார்களை ஏமாற்றும் பொருட்டுச் சமயத்திற்குத் தகுந்தபடி செய்யப்படும் ஒரு தந்திரந் தான் திரு. மாளவியா அவர்களால் செய்யப்பட்ட சமயதீட்சை என்பதை உணரவேண்டும்.

இவ்வாறு திரு. மாளவியா போன்றவர்கள், தீண்டா தார்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் புரோகிதங் களைக் கண்டு ஏமாறாமலிருக்குமாறு தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இந்துமத நம்பிக்கையும், இந்துமத வேதங்களில் நம்பிக்கையும் உள்ள எந்த இந்துக்களும்,

பிறப்பினால் எல்லோரும் சமம் என்பதை ஒத்துக் கொண்டு எல்லா வகுப்பினர்களுக்கும் சமத்துவம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். வீணாக யாரும், சமய தீட்சை, மந்திர தீட்சை என்ற பெயர்களைக் கேட்டு, வருணாசிரம தருமவாதிகளின் வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 13.03.1932

Read more: http://viduthalai.in/page7/98666.html#ixzz3VgE4Hspj

தமிழ் ஓவியா said...

திருடுவதிலும் வினோதம் - எச்சரிக்கை!

ஆக்ராவில் உள்ள அஜய் சர்மா என்ற ஆயத்த ஆடை வர்த்தகர் தன்னுடைய மோட்டர் சைக்கிளை விற்க பிரபல இணையதளத்தில் படத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்து பலர் வந்தனர். 22 வயது மிக்க கல்லூரி இளைஞர் போல் தோற்றமளித்த ஒருவர் அஜய் சர்மாவிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கூறினார்.

விலை எல்லாம் பேசி முடித்த பிறகு மோட்டர் சைக்கிளை ஓட்டிப்பார்த்துவிட்டு பணம் கொடுக்கிறேன் என்றுகூறியவுடன் நம்பிக் கையுடன் அஜய் சர்மா அவரது மோட்டர் சைக்கிளைத் தந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று விட்டார், நீண்ட நேரம் வரை காத்திருந்த அஜய் சர்மா அந்த இளைஞர் மீண்டும் வராததைக் கண்டு அவரின் அலைபேசியைத் தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தெரியவந்தது இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கொண்ட அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் தேடினார். ஆனால், அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்ற விபரம் தெரியவந்து, அவர் ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இணையதளத்தில் அந்த இளைஞர் போலியான முகவரி மற்றும் வேறு ஒருவரின் படத் தையும் கொடுத்து இருந்ததால் உடனடியாக அவரை அடையாளம் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page8/98671.html#ixzz3VgF69jKz

தமிழ் ஓவியா said...

தேவாலயத்தில் வைக்கப்பட்ட அனுமான் சிலை காவல்நிலைய லாக்கப்பில்!

அரியானா மாநிலம் ஹிஸ்ஸார் புறநகரில் உள்ள ஒரு தேவாலயத்தை இடித்து அதன் பீடத்தில் அனுமார் சிலைவைத்த சம்பத்தைத் தொடர்ந்து சில இந்து அமைப்பச்சேர்ந்த அடை யாளம் தெரியாத 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீடத்தில் இருந்த அனுமான் சிலையை கைப் பற்றி ஹிஸ்ஸார் புறநகர் கபாரி காவல்நிலையத்தில் சிறை வைத்தனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார் மாவட் டம் புறநகர் பகுதியில் பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்றில் பராமரிப்புப் பணி கள் நடந்து கொண்டு இருக்கும் போது அந்தத் தேவாலயம் இந்து அமைப்பினரால் தாக்குதலுக் குள்ளானது. தாக்கியவர்கள் தேவாலயத்தில் இருந்த கிறிஸ்தவ படங் களையும் சிலைகளையும் உடைத்தனர்.

அந்த இடத்தில் ராமர் படங்களும், அனு மான் சிலையும் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அடுத்து அரியான காவல்துறையினர் பஜ்ரங்க தள் அமைப்பைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில காவல்துறை இணை ஆணையர் சவுரப் சிங் கூறியதாவது, இந்த தேவாலயம் ஸ்கார்ஹார்ட் என்ற பெயரில் செயல் பட்டுவந்தது, பிறகு இது டிவில்யர்ஸ் தேவாலயம் என பதிவுசெய்யப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

கடந்த ஒரு மாதமாக தேவாலயத்தின் போதகர் சுபாஷ்சந்திற்கு மிரட்டல்கள் வந்துகொண்டு இருந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு முடிந்து அனைவரும் திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தேவா லயம் ஊருக்கு வெளியே இருப்பதால் தாக்குதல் நடத்தியவர்களை அடை யாளம் காணமுடியவில்லை என்றார்.

மேலும் அதிரடி நடவடிக் கையாக பீடத்தில் வைக்கப் பட்ட அனுமான் சிலை ஹிஸ்ஸார் புறநகர் காபரி காவல்நிலைய லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டது. இது குறித்து காபரி காவல் நிலைய சீனியர் சப்-இன்ஸ் பெக்டர் ஊடகவியாளர் களிடம் எதுவும் கூற மறுத்து விட்டார்.

அரியானா சட்டமன்றத்தில் வெடித்த தேவாலய இடிப்பு பிரச்சனை

அரியானா சட்டமன்றத் தில் ஹிஸ்ஸார் தேவாலய இடிப்பு விவகாரத்தை காங் கிரஸ் உறுப்பினர்கள் எழுப் பினார்கள். இதற்கு பதில ளித்த முதல்வர் மனோகர் லால் கூறியதாவது: அடை யாளம் தெரியாத நபர்கள் தேவாலயத்தை இடித்து உள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறினார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சூழ்ச்சி என்று கூறி முழக்கமிட்டனர்.

உண்மை என்ன?

அரியானாவில் விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தற்போ தைய நிலையில் ஆளும் கட்சியான பாஜகவிற்கு மக்களிடம் ஆதரவு மிகவும் குறைந்துவிட்டது.

இதனை நிவர்த்தி செய்ய இந்துக்களின் வாக்குகளைப் பெற சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருக்கவும் வாய்ப் புள்ளதாகவும் காரணம் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி இருந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயம் புதுப்பிக்கப் படும் போது நடத்தப்பட்ட தாக்குதல் சமூக மோதலை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அன்றி வேறு எந்த காரணமும் இருப்ப தாக தெரியவில்லை என்றும் தைனிக் ஜாகரன் என்ற இந்திப் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/98670.html#ixzz3VgHxstLw

தமிழ் ஓவியா said...

மோடி சம்பளம் வாங்காத பிசிசிஅய் விளம்பரத் தூதரா?

காலையில் வெற்றி பெற வாழ்த்து, நண்பகலில் நன்றாக பேட்டிங் செய்ய வாழ்த்து, மாலையில் தோற்றவுடன் மக்களுக்கு ஆறுதல்?! மோடி சமூக வலைதளத்தின் மூலம் இங்குள்ள கிரிக்கெட் கிளப்பிற்கு சம்பளம் வாங்காத பிராண்ட் அம் பாசிடர் போல் செயல் பட்டு வருகிறார். ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்றபோதும், காமன்வெல்த் போட்டி யில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய விளை யாட்டு வீராங்கனைகள் பதக்கம் வென்றபோதும் இது குறித்து பேசாத மோடி. கிரிக்கெட் போட்டி கள் ஆரம்பித்ததில் இருந்தே சமூகவலைதளத் தில் பிசிசிஅய்க்கு விளம் பரம் செய்தவாறே இருந்தார். பிசிசிஅய் என்ற தனியார் நிறுவனம் தனது விளையாட்டு வியாபா ரத்தை நடத்த ஒப்பந்த அடிப்படையில் சூதுவா தில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கட்ட ளைக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளை களத்தில் இறக்கி விட்டு வியாபாரம் பார்க்கிறது. கிரிக்கெட் விளையாட் டுப் போட்டிகள் தனியார் நிறுவனம் நடத்தும் மேற் படி சூதாட்டம், இதை பிசிசிஅய் நீதிமன்றத்தி லேயே கூறிவிட்டது, நேற்று மாத்திரம் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்த தாக இண்டெர்நேசனல் பிஸ்னஸ் டைம்ஸ் (லீஜீ://ஷ்ஷ்ஷ்.வீதீவீனீமீ.நீஷீ.வீஸீ/) என்னும் செய்தி நிறு வனம் செய்திவெளியிட் டுள்ளது. கடந்த வாரம் கூட 2007-ஆம் ஆண்டு நடந்த அய்.பி.எல் விளையாட் டில் சுமார் 500 கோடிக் கும் மேல் வரிஏய்ப்பு செய்ததாக பிசிசிஅய் மீது உச்சநீதிமன்றத்தில் வரு மானவரித்துறை மற்றும் சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது போன்ற நாட்டிற்கு வரிஏய்ப்பு செய்துவரும் அமைப்பைச் சேர்ந்த வணிகம் தொடர்பான விளையாட்டிற்கு மோடி வலிய வந்து வக்காலத்து வாங்குகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/98715.html#ixzz3VgIrEIaz

தமிழ் ஓவியா said...

இன்று இராம நவமியாம்!

இராமன் பிறந்தானாம்! இராம ராஜ்யம் - இதுதானா?

புரிந்து கொள்வீர் இராம பக்தர்களே!

இராமாயணத்தில் இராமன் ஆட்சி - எப்படி நடந்தது? யாருக்காக நடந்தது?

வால்மீகி இராமாயணத்தின் கடைசிக் காண்டமான உத்தரகாண்டத்தில் இராமராஜ்யம் பற்றிக் கூறப் படுகிறது!

ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்து போனான். அவனது சடலத்தோடு, பார்ப்பனக் கூட்டம், இராமனுடைய தர்பாருக்குள் கும்பலாக நுழைகிறது.

இராமா! உன் ஆட்சியில் அதர்மம் மேலோங்கி விட்டது; (அதாவது மனுதர்மம், குலதர்மம் உள்ளடக் கிய) வர்ணதர்மக் கட்டளைகளை யாரும் சரியாகக் கடைப்பிடித்து ஒழுகுவதில்லை.

ஞானியானாலும், மூடன் ஆனாலும், சூத்திர னுக்குப் பிராமணனே தெய்வம்; அந்த மேலான தெய்வ மாகிய பிராமணனை மட்டும்தான், அல்லது அவன் மூலமாகத்தான் தெய்வத்தைத் தொழ முடியும்; தொழ வேண்டும். இந்த இந்து மத சாஸ்திரங்களைமீறி, சம்பூகன் என்ற சூத்திரன் ஊருக்கு வெளியே காட்டில் கடவுளிடம் வரம் வாங்கிட தவம் செய்கிறான், முயலுகிறான்;

இந்த அதர்மத்தினால் எனது மகன் பாலகன் செத்து விட்டான் என்று கதறி முறையிட,
எந்த விசாரணையும் இன்றி, உடனே ராமன் புறப்பட்டுச் சென்று தவம் செய்து கொண்டிருந்த சம்பூகன் என்ற சூத்திரனை (அசுரன்) நாலாஞ் சாதிக்காரனை கண்டந்துண்டமாக வெட்டி எறிந்தான்.

செத்துப் போன பிராமணச் சிறுவன் உடனே உயிர் பெற்றெழுந்தான் என்றும் கூறப்படுகிறது!

இந்த அடிப்படையில்தான் இன்றும்கூட உச்சநீதி மன்றத்தில் நீதி (ஒரு மும்பை வழக்கில்) சூத்திரர்களுக்கு சந்நியாசம் கொள்ளவும்கூட உரிமையில்லை; காரணம் வர்ண முறைப்படி பிராமணர்களுக்கு மட்டும்தான் மடாதிபதியாக, சந்நியாசம் வாங்கிட உரிமையுண்டு என்று சில ஆண்டுகளுக்குமுன் தீர்ப்பும் வந்து இந்த குலதர்மப் பாதுகாப்பை - வர்ண தர்மப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது!

இந்த இராமனை சூத்திரர்களும் பஞ்சமர்களும் அதாவது கீழ் ஜாதியாக்கப்பட்டவர்களும் கும்பிடலாமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள் பக்தர்களே!

குறிப்பு: இந்த உத்திரகாண்டத்தை கம்பன் போன்ற கைக்கூலிகள் எழுதாமல் கைவிட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98717.html#ixzz3VgJ2FfoP

தமிழ் ஓவியா said...

மதம்படுத்தும்பாட்டைப் பாரீர்!

புனித(?) நதியில் மூழ்கி 10 இந்துப் பக்தர்கள் பலி!

டாக்கா, மார்ச் 28-_ வங்காளதேசம் முஸ்லிம் நாடாக இருந்தாலும், அதன் 16 கோடி மக்களில் 10 சதவீதம் பேர் இந் துக்கள் ஆவார்கள். அங்கு தலைநகர் டாக்காவில் இருந்து 25 கி.மீ. தெற்கே பழைய பிரம்மபுத்ரா நதிக்கரையில் லங்கல்பந்த் என்ற இந்து புனித தலம் உள்ளது.

அங்கு ஆண்டு தோறும் பங்குனி அஷ்ட மியின்போது, வங்காள தேசத்தில் இருந்து மட்டு மல்லாது இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கூடுவது வழக்கமாம். பிரம்மபுத்ரா வில் இந்த நாளில் நீராடி தெய்வ தரிசனம் செய்வது நல்லது என இந்துக்கள் கருதுகின்றனராம்.

இந்த ஆண்டும் வழக் கம் போல நேற்று அந்த நதியில் புனித நீராடுவ தற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அதற்காக 15 முனைகள் நீராடுவதற்கு ஏற்ற இடங் களாக அறிவிக்கப்பட் டிருந்தன. நேற்று காலை 5.45 மணிக்கு நீராடல் தொடங்கியது.

சுமார் 9 மணிக்கு புனித நீராடுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது நதியில் புனித நீராடுவ தற்கு பக்தர்கள் ஒருவருக் கொருவர் முந்திச்செல்ல முற்பட்டபோது நெரிசல் ஏற்பட்டது. பலர் கீழே விழுந்தனர். ஒருவரை ஒருவர் மிதித்து செல்லும் நிலை உருவானது.

இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள். 30 பக்தர் கள் படுகாயம் அடைந் தனர். அவர்கள் உடனடி யாக மீட்கப்பட்டு அரு கில் உள்ள மருத்துவம னைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்த தக வல் அறிந்ததும் நாராயண் கஞ்ச் காவல்துறை கண் காணிப்பாளர் கண்டகர் மத் உதீன், டி.அய்.ஜி., முகமது சபீக், கூடுதல் டி.அய்.ஜி. பரூக் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், அவர் களை ஒழுங்குபடுத்தி நீராடுவதற்கு உதவும் வகையில் தேவையான எண்ணிக்கையில் காவல் துறையினரும் தன்னார்வ தொண்டர்களும் பணி அமர்த்தப்படவில்லை என பக்தர்கள் கூறினர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாக அதிகாரி அனிசுர் ரகுமான் கூறும்போது, இந்த ஆண்டு வங்காளதேச தேசிய தினத்தை முன் னிட்டு விடுமுறை விடப் பட்டிருந்ததால், வழக் கத்தை விட கூட்டம் அதிகமாக கூடியது. அத னால்தான் இந்த அள வுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டது என கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளார்.

மத விழாவில் மதம் பிடித்த யானையால் பாகன் பலி!

கேரள மாநிலம் திருச் சூரில் உள்ளது கையப்ப மங்களம். இங் குள்ள சலியன்கோவில் என்ற இடத்தில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திரு விழா நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை பட்டங்கட்டிய யானைகள் ஊர்வலமாக சென்றன. இதில் 1000க்கும் மேற் பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயகிருஷ் ணன் என்ற யானையும் பட்டம் கட்டி ஊர்வல மாக வந்தது. இதன் பாகனாக சிவசங்கரன் (வயது 51) இருந்தார்.

ஊர்வலம் கோவில் அருகே வந்தபோது விஜய கிருஷ்ணன் யானைக்கு மதம் பிடித்தது. பக்தர் களை யானை ஆவேசமாக தாக்க முயன்றது. பக்தர் கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பக்தர்களை காப்பாற்ற சிவசங்கரன் யானையின் அருகே சென்று அடக்க முயன்றார். ஆவேசத்தில் இருந்த யானை பாகன் சிவசங்கரனை தந்தத்தால் குத்தி எறிந்தது. இருந்தா லும் பாகன் மீண்டும் யானையை அடக்க முயன் றார். இதில் ஆத்திர மடைந்த யானை சிவசங் கரனை துதிக்கையால் பிடித்து சுழற்றி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் பாகன் சிவசங்கரனுக்கு நெஞ்சு பிளந்தது.

ரத்தவெள்ளத்தில் சிவசங்கரன் உயிருக்கு போராடினார். அங்கிருந்த கையப்பமங்களம் காவல் துறையினர் சிவசங்கரனை ஜீப்பில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். அங்கு போதிய மருத் துவ வசதி இல்லாததால் திருச்சூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பல னின்றி சிவசங்கரன் பரிதாபமாக இறந்தார்.

யானைக்கு மதம் பிடித்தது குறித்து திருச்சூர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அவர்கள் மயக்க ஊசி செலுத்தி யானை விஜயகிருஷ்ணனை சங் கிலியால் கட்டிப்போட்ட னர். இதுகுறித்து கையப் பமங்களம் காவல்துறை யில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

தலைகுனியத்தக்கது!

இந்துமதம் என்ற பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் - வளர்க்கும் ஓர் அமைப்பில் தாழ்த்தப்பட் டவர்கள் நிலைமை என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த ஜாதி அமைப்பு முறையில் அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளபடி (Graded Inequality) இந்த ஏணிப்படி ஜாதி அமைப்பு முறையால் தாழ்த்தப்பட்ட வர்களும் அவர்களை அடுத்து மேலே இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களும் மோதிக் கொள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் திண்ணியூரில் தாழ்த்தப்பட்ட தோழர் வாயில் மலம் திணிக்கப்பட்டதும், தற்போது கிருட்டினகிரியை அடுத்த வீராச்சிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கருவானூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் அரவிந்தன் வாயில் சிறுநீர் கழிக்கப் பட்டதுமாகும்.

என்ன காரணம் சொல்லப்பட்டாலும் இந்தக் கொடுமையை ஏற்கவே முடியாது.

இத்தகு கொடுமை இனி ஒரு போதும் நடந்திட அனுமதிக்கக் கூடாது! இந்த அருவருப்பான செயல் நடைபெற்றதற்காக தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வெட்கப்பட்டே தீர வேண்டும்.

இது ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினை என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும் கூடாது. அவர்கள் இந்தச் சமூகத்தின் முக்கிய அங்கமாகும்.

பெங்களூரில் பணியாற்றும் அந்தத் தோழர் நவீன கைப்பேசியை வைத்திருந்தார் என்பதற்காக, அதனைப் பொறுக்க இயலாத ஜாதி வெறியர்கள் இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயர் ஜாதிக்காரர்களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி! என்று கூனிக் குறுகி நிற்க வேண்டும் என்று இன்றைக்கும் எதிர்பார்க்கிறார்களா!?

இதுபோன்ற கொடுஞ்செயல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பி.சி.ஆர். சட்டம் ஒரு தலைபட்சமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று சொல் கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் எண் ணத்தில் ஜாதிவெறி நஞ்சு ஊறி நிற்பதாகத்தான் கருதப்பட வேண்டும்.

இந்தச் சட்டம் சரிவர செயல்பட்டு இருந்தால், இத்தகு குற்றங்கள் அருகிப் போயிருக்க வாய்ப்புண்டு. சட்டம் இருக்கிறதே தவிர, அதனைத் தேவையான இடத்தில் ஒழுங்காகச் செயல்படுத்தத் தவறியதும் இதுபோன்ற அருவருப்பான மனித உரிமைக்கு எதிரான செயல்கள் தொடர்வதற்கும் காரணமாகும்.

கீழ வெண்மணியில் 42 தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட பொழுது, மருத்துவ மனையில் இருந்த தந்தை பெரியார் வெகுண்டெழுந்து

இந்தக் கொடுமைகளையும், இது போன்ற அராஜகங்களையும், சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இந்தி யாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை. இதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை (விடுதலை 28.12.1968) என்று தந்தை பெரியார் ஆழமான கருத்தினை வெளியிட்டார். இந்த அளவுக்கு அழுத்தமான கருத்தினை யாரும் தெரிவிக்கவில்லை.

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டபோது அந்தப் பகுதி களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் கருஞ் சட்டைத் தோழர்கள் திரண்டு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளையும் செய்ததோடு, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து தருமபுரியில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தியது திராவிடர் கழகமே!

சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் அவசியம் தேவைப்படுகிறது.

சில கட்சிகள் அரசியல் அபிலாஷைகள் காரணமாக ஜாதிக் கட்சிகளை ஒன்றிணைத்து, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதாரின் கூட்டணியை அமைத்தது மன்னிக்கப் பட முடியாத ஒன்றாகும். (அது வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்!)

அந்த முடிவையும் கடுமையாக விமர்சித்தது திராவிடர் கழகமே! இந்த ஜாதி ஒழிப்புத் திசையில் தந்தை பெரியார் அறிவித்த - திராவிடர் கழகம் கையில் எடுத்துக் கொண்டுள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற பிரச்சினை செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த ஜாதி நம்பிக்கையின் தலைமீது பேரிடி தாக்கி, ஜாதியின் ஆணி வேர்கள், பக்க வேர்கள் வரை பொசுங்கிப் போய் விடும் என்பதில் அய்ய மில்லை. சங்கரமடத்திலும் சங்கராச்சாரியராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வர வேண்டும்.

மூலபலத்தோடு போர்ப் புரிய வேண்டும் - அந்த மூலத்தை அழிக்காத வரை ஜாதி வெறி அதன் தீய குணாம்சத்தோடு ஆட்டம் போடத்தான் செய்யும் என்றாலும் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியே தீர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

Read more: http://viduthalai.in/page-2/98700.html#ixzz3VgJbT3NX

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98697.html#ixzz3VgJpWi6g

தமிழ் ஓவியா said...

ஊழியர்களை மிரட்டி இந்தித் திணிப்பா?

சென்னை, மார்ச் 28_ சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியா ழனன்று நிறுவனங்கள் விவகாரத் துறைஇந்தி நாள் கொண்டாடி யிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14 அன்று தான் இந்தி நாள் கொண் டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தத்துறை, செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண் டாடியிருக்கிறது. அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச் சகத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கே.பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார்.

இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாடவேண்டும் என்றும், இந்திதெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.இதை தமிழ்மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பது டன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன் படுத்தப்படுவதை தடைசெய்யவேண்டும் என்று அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள் ளார்.

சட்டம் சொல்வது என்ன?

இந்திய அரசியல்சாசனம் இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழி என்று கூறவில்லை. மாறாக ஆங்கிலத்தையும் அது ஏற்கிறது. அது மட்டும் போதாது, அனைத்துத் தேசிய இனங்களின் மொழியையும் இந்தியா வின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை இப்போது இந்தியா முழுவதிலும் வந்துகொண்டிருக்கிறது. அதை விட முக்கியமாக, இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம்1-1963இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் விதிமுறைகள் 1976 மிகத் தெளிவாகவே இந்தி அலுவல் மொழி என்பது தமிழகத்துக்குப் பொருந்தாது என்று வரையறுத்திருக்கிறது.

அதாவது இந்தி அலுவல் மொழி யாக பயன்படும் இடங்கள் எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இந்தி அவ் வாறாக பயன்படுத்தப்படவேண்டிய தில்லை என்பதே அந்தச் சட்டத்தின் கருத்தாகும்.இன்னும் தெளிவாக, எந்தெந்த அமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தால் அவற்றுக்குப் பொருந்தாது என்பதும் சட்ட விதிகளில் வரையறுக் கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் ஒரு ஆணையம், குழு, தீர்ப்பாயம், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற தொழில் நிறுவனம் ஆகிய அனைத் துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

நன்றி: தீக்கதிர் 28.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98704.html#ixzz3VgJy4sib

தமிழ் ஓவியா said...

தாஜ்மகால் யாருக்குச் சொந்தம்? இந்துத்துவாவாதிகளுக்கு மூக்குடைப்பு!


லக்னோ, மார்ச் 28- உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்ம ஹாலை முன்னாள் சிவன் கோயில் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத் தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் மேலும் அய்வர், நேற்று மனு ஒன் றினை தாக்கல் செய்திருந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்ன தாக அந்த இடத்தில் அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் கடவுளுக்கு அர்ப் பணிக்கப்பட்ட பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களி டம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன என அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாக தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர், இந்த கோரிக்கை தொடர் பாக அலகாபாத் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/98705.html#ixzz3VgKAxQfq

தமிழ் ஓவியா said...

சர்ச்சைக்குரிய 66-ஏ சட்டப்பிரிவு
முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில்

சென்னை, மார்ச் 28_ சர்ச் சைக்குரிய 66-ஏ சட்டப் பிரிவை தொடங்கியது நானா? என முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைத் தளங் களில் கருத்து வெளியிடுகிற சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு அமைந்தது என்று கூறி, உச்சநீதிமன்றம் அந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து கடந்த 24- ஆம் தேதி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டது.

அந்தத் தீர்ப்பினை அனைத்துத் தரப்பினரும் பெரிதும் வரவேற்கின்ற நேரத்தில், உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள அந்த சர்ச்சைக்குரிய சட்டப் பிரி வுக்கான கருத்தை உருவாக் கியவனே நான் தான் என் பதைப் போல, முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது, எனக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் வருத்தத் தையும் தருகிறது.

ஒரு சட்ட முன்வரைவு ஒரு அமைச்சகத்தால் ஆய் வுக்கு பிறகு தயாரிக்கப் பட்டு, அது சட்ட அமைச் சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். சட்ட அமைச்சகம், அதனை விரி வாக எல்லா கோணங்களி லும் ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் தரும். அதற்கு பிறகு தான் அந்த சட்ட முன்வரைவு மத்திய அமைச் சரவையின் பரிசீலனைக்கு வைக்கப்படும். அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கிய பிறகு தான் அந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் படும்.

அப்போது கூட, அந்த சட்டத்தை விவாதத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளலாமா? வேண் டாமா? என்பதை முடிவு செய்ய போதுமான விதி களின் பாதுகாப்பும், அவைத் தலைவரின் ஒப்புத லும் அவசியம் தேவையா கும். அந்த நிலையில் கூட, அந்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு இருக்குமானால், அந்த சட்ட முன் வரைவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வழி வகை உள்ளது.

இப்படி எல்லாம் படிப்படியாக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உட் படுத்தப்பட்ட பிறகு தான் இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலே கூட, இந் தச் சட்டம் தவறாக கொண்டுவரப்பட்டது என்று எந்த உள்நோக்கத் தையும் என்மீதோ, அல் லது நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதோ குற் றமாக எதுவும் கூறாத போது, சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் சட்டம் நிறைவேற ஒரு காரணமாக இருந்துவிட்டு, இப்போது எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் என்மீது பழி சுமத்துவதைப் போல ஒரு கருத்தினை வெளியிட் டிருப்பது, அவர் வகித்த பதவிக்கு உகந்ததல்ல.

இதுபோன்ற சட்டங் கள் உருவாகும்போது, அது ஒட்டு மொத்த அமைச்ச ரவையின் முடிவாகத்தான் கருதப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜன நாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98684.html#ixzz3VgLRet2N

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு
புகார்களைப் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 28_ பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.

மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உள்ளிட்ட 69 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் இவ்வாறு உத்தரவிட்டார். காவல் நிலையங்களில் தாங்கள் அளித்த புகார் கள் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தர விட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந் தனர்.

இம்மனுக்களை விசா ரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: புகார்களில் கூறப்படும் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கத் தகுந்ததாக இருந்தால் காவல்துறை யினர் உடனடியாக வழக் குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இருப்பினும் காவல்துறையினர் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வது கவலையளிக் கிறது. புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது புகார்தாருக்கும் வழக்கு விசாரணையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மைகளைத் திரித்து வழக்குப்பதிவு செய்வது, சாதாரண குற்றங்களை கடுமையான குற்றங்களாகவும், கடுமை யான குற்றங்களை சாதா ரண குற்றங்களாகவும் மாற்றுவது போன்ற தவ றுகளில் காவல்துறையி னர் ஈடுபடுவதாகத் தெரி கிறது. இந்திய அளவில் காவல்துறையிடம் அளிக் கப்படும் புகார்களில் பாதி யளவு பதிவு செய்யப்படு வதில்லை என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே கீழ்க்கண்ட பரிந்துரைகளை காவல் துறைக்கு அளிக்கிறோம். புகாரில் கூறப்படும் குற் றம் வெளிப்படையாகப் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரியாத போது, விசாரணை நடத்தி சம்பவம் நடந்துள் ளதா எனக் கண்டறிய வேண்டும்.

முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென் றால் வழக்கை முடிக்க வேண்டும். வழக்கு முடிக் கப்பட்டது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் புகார்தாரரிடம் ஒரு வார காலத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த கடமையில் இருந்து தவறும் காவல் துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீதான விசா ரணை முடித்து வைக்கப் பட்டது.

நீதிபதி தனது உத் தரவில், குடும்பத்தகராறு, வணிக ரீதியான குற்றங் கள், மருத்துவ சிகிச்சை யில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக அளிக் கப்படும் புகார் ஆகியவற் றில் முதற்கட்ட விசா ரணை நடத்தப்பட வேண் டும். விசாரணையை 7 நாள்களில் முடிக்க வேண் டும். விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து டைரியில் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் அனைத்தையும் பொது டைரி, நிலைய டைரி, தினசரி டைரி ஆகியவற்றில் எழுத வேண்டும்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு விழிப் புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் தவறிழைக்கும் காவல் துறையினரைக் கண் காணிக்க குழு அமைக்க வேண்டும்.

தவறு கண்டுபிடிக்கப் பட்டால் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98690.html#ixzz3VgLpQB8n

தமிழ் ஓவியா said...

கேள்வியும் பதிலும்

- சித்திரபுத்திரன் -

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படு கின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப் போகாது.

அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாகவேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgLzS3qe

தமிழ் ஓவியா said...

குடிஅரசுக்குப் பாணம்

குடிஅரசு பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுரகர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும்,

இருக் கின்றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையில் இப்படிச் செய்யாமல் விட்டு வைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.

முதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங் கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொருவாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசய மேயாகும்.

குடிஅரசு தோன்றி இந்த 8 1/2 வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளைக் கண்ணாடி போல் வெளிப் படுத்தும் தொண்டை பிரதான மாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக்காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

சிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பது போல் குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடிய வில்லை யானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரி யன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுர கர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் குடிஅரசு மறைவதில் அதிகக் கவலையி ருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது.

மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணி னோம். இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின் றனவோ பார்ப்போம்.

நிற்க இதன் பயனாய் குடி அரசின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவதுயாரும் பயப்பட வேண்டியதில்லை. நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றி விட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது.

குடி அரசோ சுயமரியாதைக்காரரோதான் கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. குடிஅரசும் சு.ம.காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக்கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக்கொள்கையைச் சொல்லவும், பிரச்சாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விவரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 12.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgMATHjv

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைச் சுடரொளி
சுயமரியாதை இயக்க திராவிடர் கழக தளபதியான
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின்
நினைவு நாள் இன்று (1949)

இளைஞர்களே, அழகிரி பேசுகிறார் கேளுங்கள்

பெரியார் அவர்களை நான் ஏறக்குறைய 30 வருடங்களாக அறிந்திருக்கிறேன். நெருங்கிப் பழகி இருக்கிறேன். என்றாலும், அவரது நம்பிக்கைக்கு இன்றுவரை நான் பாத்திரம் ஆனேனில்லை. கொள்கையைப் பொறுத்தா? இல்லை. இயக்கத்தைப் பொறுத்தா? இல்லை. பின் எதைப் பொறுத்து என்னிடம் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை? என்னுடைய சொந்த நிலையைப் பொறுத்துத்தான்.

அவர் போடும் காகிதத்துக்குக்கூடச் சரியாகப் பதில் அனுப்பியிருக்கமாட்டேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுத்துவிட்டாரா? இல்லை. அதுதான் அவரிடமுள்ள சிறப்பான பண்பு. தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.

பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும், செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டுவிடுவார். ஆனால், இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சிறிது தவறு செய்துவிட்டாலும், உளம் பொறார். சுலபத்தில் ஆத்திரம் கொள்வார்.

தயைதாட்சண்யமின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள், போக்கிரி, சோம்பேறிப் பயல் என்றெல்லாம்கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப் பற்றுதல் தான் இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக் கொண்டு நமது இளைஞர்களை பெரியார் வாழ்க வாழ்க என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படி தூண்டுகிறது.

குறிப்பு: இன்றைக்கு 68 ஆண்டுகளுக்குமுன் திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், அஞ்சாநெஞ்சன் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. (இதோ பெரியாரில் பெரியார் என்ற இயக்க வெளியீட்டை வாங்கிப் படியுங்கள்!).

Read more: http://viduthalai.in/page-4/98728.html#ixzz3VgMmYaLd

தமிழ் ஓவியா said...

புரட்சி

குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆகவேண்டும்.

அந்த அய்தீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் புரட்சியைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. நமது முதலாளி வர்க்க ஆட்சியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியிருப்பதால் குடிஅரசை அதன் முதுகுப் புறத்தில் குத்திவிட்டது.

இந்தக் குத்தானது பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும் என்ற ஞானபோதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது புரட்சியானது குடிஅரசைக் காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப் பிரச்சார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவர வேண்டியதாகிவிட்டது. இதன் காரணமாய்ப் புரட்சி எந்த நிமிஷத்தில் குத்துப் பட்டாலும் படலாம். எந்த விநாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம்.

ஆனால் சுயமரியாதைப் புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது. அது வெற்றி பெரும்வரை ஒரு கணமும் ஒய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி. காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமாறவருந்தியும், மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமுக சமதர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங் கோலாட்சிக்கு உற்ற துணை.

மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே உழைப் பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காத வனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சித் தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.

ஆதலால் மனிதசமூகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டு பிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடை கின்றோம்.

சோம் பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர் களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள் அடையக்கருதி சுய மரியாதை இயக்கப்போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர் களுடையவும் ஆதரவு நம் புரட்சிக்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே புரட்சி தோன்றி யிருக்கிறது.

ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினியாயும் சமுக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே புரட்சி எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று புரட்சி வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த புரட்சி தோன்றவில்லை.

அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து,

மக்கள் யாவரும் சுய மரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவ மாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே புரட்சி தோன்றியி ருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில், ஆர்வமுள்ள மக்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.

புரட்சி - தலையங்கம் - 26.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98722.html#ixzz3VgNP3VNI

தமிழ் ஓவியா said...

தமிழர் சமுதாயம் 100-க்கு 100 மக்கள் படித்தவர்களாக வேண்டும்; ஆக்கப்பட வேண்டும். பத்தாண்டு களிலாவது தமிழன் சமுதாயம் ஆணும் பெண்ணும் தன் ஜனத் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அரசியல், தொழிலியல் முதலிய சகல துறைகளிலும் விகிதாச்சாரம் பதவி - இடம்பெற வேண்டும். தமிழனைப் பற்றிய வேறு எந்தக் காரியத்தைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgNmsOHI