Search This Blog

24.3.15

நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா?-பெரியார்

ஹிந்துமதம்- தந்தை பெரியார் 


ஹிந்து மதம் என்பதும் ஹிந்து மத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலி யவை எல்லாம் தமிழனுக்கோ தமிழ் நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்ட வையும் அல்ல. அவற்றுள் எவையும் எதுவும் தமிழ் மொழியில்- தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.


இவை யாவும் அந்நிய மொழியாகிய வடமொழியிலும், தமிழன்- தமிழ்நாட் டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும், வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத் தப்பட்டவை- செய்யப்பட்டவையுமே ஆகும்.


அதுபோலவே தான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பும் என்பதும் தமிழ் நாட்டிற்கோ, தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல. தமிழர் பழக்கவழக்கங்களுக்குத் தமிழர் வாழ் விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால் இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ் மொழியில் அல்ல என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையும் அல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையும் அல்ல.


ஜாதியானது, எப்படி வெள்ளைக் காரன் நம் நாட்டுக்கு வந்து துரை ஆனானோ, முஸ்லிம் எப்படி நம் நாட்டுக்கு வந்து சாயபு ஆனானோ, அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து அய்யர் ஆனான்; பிராமணன் ஆனான்; பிராமணாள் ஆனான்.


பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொருள். அந்த வேதம் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டது மல்ல.
எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள் தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும், கெட்டுப் போகும் என்று சொல்லப்படு கிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித் தாலும், காதில் கேட்டாலும் அது கெட்டுவிடும். பார்ப்பான் அல்லாதவன் பார்த்துக் கேட்டுவிட்டால் அவன் குருட னாக ஆக வேண்டும். செவிடனாக ஆக வேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.


இதையே தான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர, தரும சாஸ்திர, புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவை தாம் இந்து மத தருமம் ஆகவும், இந்து மதக்கொள்கை ஆகவும் இன்றும் தமிழ் நாட்டில் நடப்பில் இருந்து வருவன ஆகும்; இவைதான் இந்து மத, தருமமும் ஆகும்.


இவற்றிற்குக் கட்டுபட்டவன் தான், இந்த நிபந்தனையை ஏற்றவன் தான் ஹிந்து ஆவான். தமிழ்நாட்டாரே! தமிழ்ச் சமுதாயத்தாரே! தமிழர்களே! இப்பொழுது சிந்தியுங்கள்.


நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத- வேத சாஸ்திர, புராண- இதிகாச, தருமங்கள், ஜாதி முறைகள், அமைப்புகள். இவை சம்பந்தமான கோயில்- குளம், அவற்றின் கதைகள், சிறப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவையா என்று சிந்தித்துப் பாருங்கள்.


ஹிந்து மதம் நம் மதமாயிருந்தால் அதில் நாம் நம்மை ஈனஜாதி, இழிபிறவி, நாலாம் ஜாதி, சூத்திரன், பார்ப்பானின் அடிமை, பார்ப்பானின் தாசி மக்கள், நம் பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?


நிற்க, ஹிந்து என்றோ, இந்து மதம் என்றோ, இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஓர் இடத்திலாவது, ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணப்படுவன எல்லாம் பரதகண்டம், பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கு ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும்  தான் குறிப்பிடப்பட்டு இருக்கின் றனவே ஒழிய, இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்தச் சாஸ்திர- புராண இதி காசங்களிலும், மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காண முடிவதில்லை.


தவிரவும் இந்தியா என்ற சொல், இந்து என்ற சொல், சிந்து என்னும் ஒரு நதியின் காரணமாக, அதன் கரையில் வாழ்ந்தவர் களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வட மொழியில் சி என்பதும் ஹி என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள்.


பிறகு ஹிந்துகளைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டது என்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாம் ஆனவர்களாலும், வெள்ளையர் களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.


அதுவும் எந்த விதத்திலும் தமிழர் களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத் தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
ஹிந்து என்ற சொல்லுக்கு ஆரியர்கள் என்ற பொருள் மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும் ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்ஷனரிகள்) கூறுகின்றன.


The Concise Oxford Dictionary of Current English   (1968-ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516-இல் Hindu என்பதற்கு “Aryan of N India who (also anyone who) professes Hinduism”   என்று போட்டிருப்பதுடன், இதற்கு சமஸ்கிருத ரூட் என்று குறிப்பிட்டு ‘Sindu River’   குறிப்பிடப்பட்டுள்ளது.


ஹிந்து என்ற சொல்லையும், இந் துக்கள் என்ற குழுவினரையும் மேனாட் டவர்களும் முஸ்லிம்களும் மிக மிக இழிவாகவே கருதுகிறார்கள். அதாவது அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும், கருதுகிறார்கள். அவர்களது ஆதாரங்களிலும் இந்தப் படியே குறிப்பிட்டிருக்கிறார்கள்.


ஆகவே அன்பர்களே! நாம் ஹிந்துக்கள் அல்ல. ஹிந்து மத வேத சாஸ்திர தருமங்கள் நமக்குச் சம்பந்தப் பட்டவை அல்ல. ஹிந்து மதக் கட வுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள், அவற்றின் கதைகளான புராண- இதி காசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதை சிந்தித்துத் தெளியுங்கள்.


                          -------------------6.7.1971 விடுதலையில் தந்தை பெரியார்அவர்கள் தலையங்கம் -"விடுதலை", 6.7.1971.

41 comments:

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் மேனாள் அதிபர்
லீக்வான்யூ மறைவிலும் பாடம் போதிக்கப்படுகிறது!

சிங்கப்பூர் என்ற மிகச் சிறிய நாட்டின், பணியாற்றும் - பண் பாடு (கலாச்சாரம்) எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.

அந்நாட்டின் உயர்வுக்கும் - வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் காரணமாக அமைந்த அந்நாட் டின் தந்தை என்று அனைவ ராலும் மதிக்கப்படும் லீக்வான்யூ அவர்கள் நேற்று மறைந்துவிட்ட நிலையில், சிங்கை அரசு சார்பாக ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் வரும் 29.3.2015 ஞாயிறுதான் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

ஒருநாள்கூட அரசு விடுமுறையோ, நிறுவனங்கள் மூடுதலோ இல்லை.

தலைவர்கள் மறைந்தால் துக்கம் அனுசரிக்க வழக்கமான வேலையை நிறுத்தாமல், பணியாற்றுவதே அவர்களது லட்சியங்களுக்கு ஏற்ப நடந்து காட்டும் முறை என்று உலகுக்குக் காட்டுகிறது சிங்கப்பூர். (ஏற்கெனவே ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலும் சில நடைமுறைகள் நிகழ்ந்துள்ளன)

மாறாக நமது ஞான பூமியின் இம்மாதம் அடுத்த மாதம் துவக்கத்தில் உள்ள அரசு விடுமுறைப் பட்டி யலைப் பாரீர்!

மார்ச் 28 - ராமநவமி விடுமுறை

மார்ச் 29 - ஞாயிறு (வார) விடுமுறை

மார்ச் 30&31 - (வங்கிகள் திறந்திருக்கும்)

ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு விடுமுறை

ஏப்ரல் 2 - மகாவீர் ஜெயந்தி விடுமுறை

ஏப்ரல் 3 - புனித வெள்ளிக்கிழமை விடுமுறை

ஏப்ரல் 4 - சனி (அரைநாள்) விடுமுறை

ஏப்ரல் 5 - வார (முழு நாள்) விடுமுறை

ஆறு நாள்களுக்கு தொடர் விடுமுறை; இந்த நாடும் பொருளாதாரமும் எப்படி வளரும்?

அந்தந்த மதத்தவர் அவரவர் தனியே விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே!

உலகிலேயே அதிகமான அரசு விடுமுறை நாள்கள் இந்தியத் திரு நாட்டில்தான்! லீக்யூவான் மறைவை பணி செய்தே துக்கம் அனுசரிக்கும் எடுத்துக்காட்டு எவ்வளவு பின்பற்றத் தக்கது என்று நாம் உணர வேண்டும்.

லீக்வான்யூ அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி - கடவுள் பற்றிக் கவலைப்படாத (Agnostic) அவர் ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98445.html#ixzz3VIqUYOiM

தமிழ் ஓவியா said...

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?

தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
காவிரிப் பிரச்சினையில் கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒத்த குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகாவது தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (கடந்த 21ஆம் தேதி) எடுத்த முடிவின்படி வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள முழு அடைப்புப் போராட் டத்தை வெற்றியாக்கித் தர வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காவிரிப் படுகை விவசாயிகள் தஞ்சை, திருச்சி டெல்டா பகுதியில் பாசனத்திற்குரிய நீர் உரிமைக்காகப் போராடிடும் நிலைக்கு என்றுதான் விடிவு வருமோ என்ற நிலையில், 1980இல் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வேண்டுகோள் - உணர்வைப் புரிந்து, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு நடுவர் மன்றத்தை அமைக்க ஆணை பிறப்பித்தார்.

கால் நூற்றாண்டுக் காலமாக

ஒரு கால் நூற்றாண்டுக்கு மேல், இந்தப் பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி நதி நீர்ப் பங்கீடும் சரியாக தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இதற்கு நிரந்தரமான தீர்வு காண வாய்ப்பிருந்தும், காவிரிப் பிரச்சினைபற்றி முடிவு கூறுவதற்கு வாயப்பான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், புதிதாக கடந்த 10 மாதங் களுக்குமுன் பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான அரசு இன்னமும் காலந் தாழ்த்தி வருவ தினால்தான் அவ்வப்போது தமிழ்நாட்டில் குறுவை, சம்பா சாகுபடிபாதிக்கப்பட்டு விவசாயிகள் பட்டினியும், தற் கொலை எண்ணமும் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக் குத் தள்ளப்படுகின்ற வேதனை தொடர் கதையாகிறது!

கருநாடகாவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு சரியா?

இந்நிலையில், கர்நாடக அரசு, கர்நாடகத்தில் காவிரியின் உபரிநீரைத் தேக்கி மேகதாது, ராசிமணல் ஆகிய விடங்களில் மூன்று அணைகளைக் கட்ட, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கிறது!

மத்திய அரசின் சுற்றுச்சூழல், நீர்வளத் துறையின் அனுமதி எதையும் பெறாமல் பட்ஜெட்டில் அறிவிக்கும் துணிச்சல் கர்நாடக அரசுக்கு எப்படி ஏற்பட்டது? மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பதால்தானே! உச்சநீதி மன்றமும், நடுவர் மன்றமும் ஆணையிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பது ஏன்?

தமிழ்நாட்டு காவிரிப் படுகை விவசாயிகளுக்கு உரிமை பாதுகாக்கப்பட வேண்டாமா?

ஒரு பக்கம் மீத்தேன் வாயு தோண்டுதல் என்ற ஆபத்தும் நிலவளத்தைச் சுரண்டி, வேளாண்மைக்குத் தகுதியற்ற நிலை ஏற்படுத்த, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு உதவிடும் திட்டம்; இதையும் எதிர்த்து அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுத்தும் ஏதோ ஒன்றிரண்டு அறிவிப்புகள் வந்துள்ளன. அவையும் தெளிவாக இல்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை!

தமிழ்நாடு அரசு இதில் முக்கியமாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரது ஒருங்கிணைப்பை மத்திய அரசுக்கும் கர்நாடகத்திற்கும் உணர்த்தியிருக்க வேண்டும். இந்நிலையில், விவசாயிகளே முன் எடுத்துள்ளனர். கட்சிக் கண்ணோட்டம், அரசியல் பார்வைகளை ஒதுக்கி வைத்து விட்டு 23 கட்சிகளும், இயக்கங்களும் கலந்து கொண்ட கூட்டம் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்றுள்ளது. (திராவிடர் கழகமும் கலந்து கொண்டுள்ளது)

ஆளும் அதிமுக கலந்து கொள்ளாதது ஏன்?

ஆளும் அதிமுக கட்சி ரீதியாகக்கூட கலந்து கொள்ளா தது வேதனைக்குரியது என்றாலும் மற்ற அமைப்புகளும் கட்சிகளும் கலந்து கொண்டு 28ஆம் தேதி முழு அடைப்பு மாலை 6 மணி வரை என்று அறிவித்துள்ளனர்!

அதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒரு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்!

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இதில் அரசியல் பாராமல், ஆளுங் கட்சி கடை அடைப்பினை வெற்றிகரமாக நடத்திட ஒததுழைப் புத் தர வேண்டுமென கேட்டுக் கொண்டது - பலரின் சிந்தனையும் அதுவேதான் என்று உள்ளது.

எனவே, அனைத்துக் கட்சியினரும் 28ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் - அறப் போராட்டம், அமை திக்கு எவ்வித கேடும் ஏற்படுத்தாமல், நமது உணர்வினை ஒட்டு மொத்தமாகப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.

கருநாடகத்தின் ஒற்றுமையைக் காணீர்

கருநாடகத்தின் ஒற்றுமை நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
24.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98432.html#ixzz3VIqu5hYE

தமிழ் ஓவியா said...

24.3.2015 - திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்த நாளன்று சென்னை பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து - அடிமைத்தளையாம் தாலி அகற்றும் நிகழ்வுகள்

ஏப்ரல் 25,26 புரட்சிக் கவிஞர் விழா - சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு மற்றும் தமிழர் பண்பாடு மீட்டுருவாக்கம் கருத்தரங்கம்

மதவாத மத்திய அரசை எதிர்த்து ஓரணியில் திரளுவோம்!

காவிரி, தமிழக மீனவர் பிரச்சினைகளுக்குத் தேவை நிரந்தரத் தீர்வு!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

24.3.2015 செவ்வாய்க்கிழமையன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

தீர்மானம் 2:

தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தமிழ் ஓவியா said...

கருத்துரிமைக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டுவரும் வன்முறையை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் மீதும், ஊடகங்கள்மீதும் இத்தகு வன்முறைகளை மேற்கொண்டவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பதில் தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டி வருவது, வன்முறையாளர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுவதாக அமையும் என்பதால், தமிழ்நாடு அரசு இதில் சட்ட ரீதியான கடமையை ஆற்றவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:

மாட்டிறைச்சிக்குத் தடையா? மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்

இந்திய மக்களின் மிக முக்கியமான, குறைந்த விலை யில் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த உணவான மாட்டிறைச்சியை குறிப்பாக பசு - காளை மாமிசத்தை பி.ஜே.பி. ஆளும் பல மாநிலங்கள் தடை செய்திருப்ப தோடு, தேசிய அளவிலும் இத்தகைய தடைச் சட்டம் செய்ய முயலுவது கண்டிக்கத்தக்கதாகும். உணவுப் பழக்கம் என்பது தனி மனித உணர்வைச் சார்ந்ததாகும். இதில் தலையிட எந்த அரசுக்கும் உரிமை இல்லை என்பதோடு, இந்தத் தடையால் ஏழை - எளிய மக்களுக்கு மலிவாகக் கிடைக்கும் சத்துணவுக்குத் தடை ஏற்படுத்தப்படுகிறது; இத்தொழிலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வும் பெரிய பாதிப்புக்கு ஆளாகிறது; இறைச்சி ஏற்றுமதியில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு அந்நிய செலாவணியில் பேரிழப்பும் ஏற்படுகிறது.

மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு தனது இந்துத்துவா கோட்பாட்டை வெகுமக்கள்மேல் திணிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும், இந்த இந்துத்துவா நடவடிக்கையை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும் என்றும், இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது என்றும் இச்செயற்குழு தீர் மானிக்கிறது.

தமிழ் ஓவியா said...


தீர்மானம் 4:

ஏப்ரல் 14: தாலி அகற்றும் நிகழ்வும் - மாட்டுக்கறி விருந்தும்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று சென்னை பெரியார் திடலில், தாலி பற்றிய சர்ச்சையில் இந்துத்துவா மேற்கொண்டுவரும் வன்முறையைக் கண்டிக்கும் வகையில், எதிர்நடவடிக்கையாக தாலி அகற்றும் நிகழ்ச் சியையும், மத்திய அரசின் மாட்டிறைச்சிக்குத் தடை செய்யும் திட்டத்திற்கு எதிர்வினையாக மாட்டுக்கறி விருந்தையும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இதற்குக் கழகத் தோழர்களும், வெகுமக்களும் ஆதரவு கொடுக்கவேண்டுமாய் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:

புரட்சிக்கவிஞர் 125 ஆம் ஆண்டு விழாவை - திராவிடர் மறுமலர்ச்சி விழாவாக நடத்துவது!
மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைத் திணிப்பதிலும், கல்வியில் இந்துத்துவாவை ஊடுருவச் செய்வதிலும் தீவிரமாகச் செயல்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை - சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு (வடமொழி வல்லாண்மை) மற்றும் தமிழர் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்ற முறையில் வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில், விரிவான வகையில் திராவிடர் மறுமலர்ச்சி நிகழ்ச்சிகளாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6:

மத்திய அரசின் மதச்சார்பின்மைக்கு விரோதமான போக்கை கண்டிக்கிறோம்!

மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014 மே மாதம் பொறுப் பேற்றுக் கொண்ட கடந்த 10 மாதங்களில் 600 மதக் கலவ ரங்கள் நடைபெற்றுள்ளதற்குக் காரணங்கள் இவ்வாட்சியின் இந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படையிலான செயல் பாடுகளும், ஆளும் பி.ஜே.பி.யை சேர்ந்தவர்களும், அதன் சங் பரிவார்களும் மேற்கொண்டுவரும் வெறித்தனமான பிரச்சாரமும்தான் என்று இச்செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் தன் முகவுரையில் வலியுறுத்தியுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான இந்தப் போக்கை இச்செயற்குழு கண்டிக்கிறது.

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைத் துச் சக்திகளும் ஓரணியில் திரண்டு நின்று இதனை முறியடிக்க முன்வரவேண்டுமாய்த் திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்திவரும் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு நல்ல பலனை அளித்துள்ளது என்று தெரிவிப்பதோடு, இந்த வட்டார மாநாடுகளை சிறப்பாக நடத்திவரும் கழகப் பொறுப்பாளர்களையும், தோழர்களையும் இச்செயற்குழு வெகுவாகப் பாராட்டுகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 7:

மூட நம்பிக்கை ஒழிப்புத் திட்டம்

வரும் கோடை காலத்தில் கோவில் திருவிழாக்கள்மூலம் மூட நம்பிக்கை பரப்பும் போக்குத் தலைதூக்குவதை மனதிற்கொண்டு, கிராமப் பகுதிகளில் கோவில் திருவிழா நேரத்தில் அல்லாமல், தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை - செய்முறையாக (Demonstration) நடத்திக் காட்டுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், சீர்திருத்த உணர்வைப் பரப்பவேண்டும் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியும் (51-ஏ(எச்)) இதனைச் செய்யவேண்டியது நமது கடமை என்பதையும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 8:

விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் துணைபோகும் மத்திய அரசு

இன்றைய மத்திய அரசு விவசாய வளர்ச்சிபற்றிச் சிறிதும் அக்கறை செலுத்தாததோடு, விவசாயப் பெருநாடான இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக விவசாய நிலங்களையே தங்கள் வாழ்வின் ஆதாரமாகக்

கொண்டு வாழ்ந்துவரும் மக்களின் நிலங்களை, பெரு முதலாளிகளாகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையில், தான்தோன்றித்தனமாக - அத்துமீறல் என்று சொல்லத்தக்கவண்ணம் கையகப்படுத்துவதற்கு இச்செயற்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இல்லையேல், கட்சிகளைக் கடந்து ஓரணியில் திரண்டு வெற்றி கிட்டும்வரை போராடவேண்டும் என்று இச்செயற்குழு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. மத்திய அரசின் இந்த விபரீத முடிவுக்கு அ.இ.அ.தி.மு.க. அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 9:

தமிழக மீனவர்கள் உரிமைக்கும், ஈழத் தமிழரின் சமத்துவ வாழ்வுக்கும் உத்தரவாதம் தேவை
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தொழிலுக்கான ஆதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இதில் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தலையிட்டு தமிழக மீனவர்களின் பாதுகாப்பு, மீன்பிடி உரிமைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வகை செய்யவேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

ஈழத்தில் முதற்கட்டமாக தமிழர்கள் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் விலக்கப்படவேண்டும் என்றும், 13 ஆவது சட்டத் திருத்தம் உள்பட தமிழர்களின் சகல உரிமைகளுக்கும், சுயமரியாதைக்கும் குந்தகமற்ற ஒரு நிலையை உருவாக்க இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு உத்தரவாதம் செய்யவேண்டும் என்றும், இந்திய அரசு இதில் இலங்கை அரசுக்குத் தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10:

மார்ச் 28 இல் நடைபெறும் முழு அடைப்புக்கு திராவிடர் கழகம் ஒத்துழைப்பு!

விவசாயத் தொழிலை மட்டுமல்ல, பொதுமக்களுக்குப் பல வகைகளிலும் தீங்கு இழைக்கும் மீத்தேன் திட்டத்தை நிரந்தரமாக மத்திய அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாகவும் உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் தீர்ப்புகளுக்கு எதிராகவும் மேகதாது, ராசி மணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகளைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கத் தோடும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி நீர்ப் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகிய தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு களை மத்திய அரசு மேலும் காலந்தாழ்த்தாமல் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,

சென்னையில் கடந்த 21.3.2015 அன்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை இச்செயற்குழு வரவேற் கிறது. அத்தீர்மானப்படி வரும் மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வது என்றும், அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தித் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்குப் புரிய வைத்து செயல்பட வைக்க கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் ஒருமனதாக ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.

காவிரி நீர் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலி யுறுத்துகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/98453.html#ixzz3VIrAgVxE

தமிழ் ஓவியா said...

தலைமைச் செயற்குழுவின் முக்கிய தீர்மானம்

காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக ஒருபுறம் தமிழ்நாட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பிஜேபி தலைமையி லான மத்திய அரசு நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தினால் மறுபுறம் விவசாயம் என்பது இறந்த காலம் என்னும் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாகத் தான் அமையும் என்பதில் அய்யமில்லை சென்னையில் கடந்த 21ஆம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருநாடக அரசு மேகதாது, ராசி மணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகள் கட்டி, தமிழ்நாட்டிற்குக் கிடைத்து வரும் நீரையும் முற்றாகத் தடுக்கும் சதி வேலையில் இறங்கியுள்ளது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திட்டவட்டமாக இரு காரியங்களைச் செய்யுமாறு மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகிய வற்றை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட பிறகும் மத்திய பிஜேபி அரசு இதனை ஏன் செய்யவில்லை என்பது மிக முக்கியமான வினாவாகும்.

கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகம் இதனைத்தான் முதன்மைப்படுத்திக் கருத்துத் தெரிவித்தது.

நடுவர் மன்ற தீர்ப்பாக செயல்படுத்த வேண்டும், மத்திய அரசே சட்டப்படி செயல்படு என்று சொல்லும் நிலை என்பது இந்தியாவில் சட்ட ஆட்சி என்ற ஒன்று இல்லையோ என்ற அய்யப்பாட்டைத் தானே ஏற்படுத்தும்? இது போல் உலகில் வேறு எங்காவது உண்டா? ஓர் அரசைப் பார்த்து சட்டப்படி நடந்து கொள் என்று குடி மக்கள் கோரிக்கை வைக்கும் நிலையில்தான் மத்திய அரசு பரிதாப நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது.

கருநாடக மாநிலத்தைப் பொறுத்தவரை காங் கிரசைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவாக இருந்தாலும் சரி, சித்தராமையாவாக இருந்தாலும் சரி. பிஜேபியைச் சேர்ந்த ஜெகதிஷ் சட்டர், எடியூரப்பா, மதச் சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த குமாரசாமி, தேவேகவுடா (முன்னாள் பிரதமர்) இவர்கள் அத்தனைப் பேரும் கட்சி வேலிகளைத் தாண்டி ஒத்த குரலில் சுருதி பேதம் இல்லாமல் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவதில்லை என்பதில் உருக்குமலையாக எழுந்து நிற்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் அந்த நிலை இல்லையே! 21ஆம் தேதி கூட்டப்பட்ட கூட்டத்தில் ஆளும் அஇஅதிமுகவும் இடதுசாரிகளும் கலந்து கொள்ள வில்லை. சி.பி.எம். கட்சியைப் பொறுத்தவரை அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் 28ஆம் தேதி முழு கடை அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது - வரவேற்கத்தக்கதே!

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டு விவசாயத்திற்கு மூடு விழா நடத்தி விட்டு இங்கு யார் அரசியல் நடத்தப் போகிறார்களாம்?

பாலைவனத்தில் அரசியல் நடத்தப் போகிறார்களா என்பதுதான் முக்கிய வினாவாகும்.

கருநாடகத்தில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள அணைகளுக்காக 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கால கட்டங்களில் கருநாடக மாநிலத்தில் பிஜேபி அரசும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும் இருந்துள்ளன. இன்றோ கருநாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசும் மத்தியில் பிஜேபி அரசும் நடந்து வருகின்றன.

கட்சிகள் மாறி இருக்கின்றனவே தவிர, காட்சிகள் மட்டும் மாறவே கிடையாது. சட்டமீறல் என்று தெரிந்திருந்தும் கண் மூடித்தனமாக கருநாடக மாநில அரசு நடந்து கொள்கிறது என்பது அப்பட்டமான உண்மையாகும்.

என்ன சொல்லுகிறார் கருநாடக அரசின் சட்ட மேதை திருவாளர் நாரிமன்? கருநாடக அரசு தெரிவித் துள்ள இந்தத் திட்டம் கருநாடக அரசின் எல்லைக்குள் தானே இருக்கிறது; தமிழ்நாட்டு அரசுக்கு இதனைத் தடுக்கும் உரிமை ஏது? மேலும் இதுகுடிநீர்த் திட்டம் தான். எனவே மத்திய நீர்வள ஆணையம் இதற்கு அனுமதியளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று சட்ட மேதை நாரிமன் சாமர்த்தியமாகப் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் என்ன செய்தாலும் பிஜேபி என்ற பிள்ளை பிழைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிந்து கொண்ட மத்திய பிஜேபி அரசு, தமிழ்நாட்டிற்குச் சட்டப்படியான அளவுகோலில் தண்ணீர் கொடுத்தாலும் அரசியல் ரீதியாக பிஜேபிக்கு பலன் அளிக்கப் போவதில்லை; அதே நேரத்தில் கருநாடக மாநிலத்தில் ஓரளவு அரசியல் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள கொஞ்சமாவது வாய்ப்புண்டு; அதனைக் கெடுத்துக் கொள்வானேன் என்கிற பிஜேபியின் அரசியல் யுக்தியைத்தான் இது நிதர்சனமாகக் காட்டுகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பிஜேபி தலைவரோ தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம்?

தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவைகூட மாநிலத்திற்கு ஒரு கொள்கை வைத்துக் கூத்தாடும் காட்சியைத் தான் காண முடிகிறது.

தேசியம் பேசும் அண்ணாச்சி, காவிரி நீர் என்னாச்சி? என்று திராவிடர்கழகப் பேரணிகளில் முழக்கமிடுவது கேலிக்காக அல்ல - உண்மையின் வெளிப்பாடு அது.
எந்த விலை கொடுத்தேனும் தமிழ்நாட்டு உரிமையை நிலை நாட்டுவதில் தமிழகம் ஓரணியில் நிற்கட்டும்.

அதனை வரும் 28ஆம் தேதி முழு வேலை நிறுத்தத்தில் நிரூபித்துக் காட்டுவோமாக!

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு இன்று சென்னை பெரியார் திடலில் கூடி இதுகுறித்து நிறை வேற்றப்பட்ட தீர்மானம் (3ஆம் பக்கம் காண்க) மிகவும் முக்கியமானதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/98421.html#ixzz3VIs10NBm

தமிழ் ஓவியா said...

எனது கருத்து


மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd

தமிழ் ஓவியா said...

காடுகள் பாதுகாப்பும் - வீடுகளின் பாதுகாப்பும்!

உலகில் நாடுகளும் மக்களும் நீண்ட நாள் நலவாழ்வு வாழ வேண்டுமானால் காடுகள் பாதுகாக் கப்பட்டாக வேண்டும். எந்த நாட்டில் காடுகள் அழிக்கப்படாமல் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்படுகின் றனவோ அந்நாட்டில்தான், பொருளா தார வளம் மட்டுமல்ல, நீண்ட ஆயுளைக் கொண்ட மக்களையும்கூடக் காண முடியும்.

வறட்சி ஏற்படாமல் விரட்டிட, மழை மிக முக்கியமல்லவா?

வானம் பொய்த்து விட்டது; மக்களுக்கு, மழை இல்லாததால் பயிர்கள் வளரவில்லை; நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் - காணாமலேயே போய் விட்டது, என்றெல்லாம் கூறுவ தற்கு அடிப்படைக் காரணம் காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, சூறை யாடி மனிதர்கள் பண அதிபர்கள் ஆகத் துடித்ததின் விளைவுதான்!

பயிர்கள் வளருவதுகூட பிறகு; உயிர்களுக்குக் குடிக்கவும்கூட குடிநீர் கிட்டவில்லையே!

ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதியாக ஆறுகள் ஓடின. சிற்றோடை களும், மற்ற நீர் நிலைகளும் திரும்பும் பக்கமெல்லாம் வளமையை வாரித் தெளித்த வண்ணம் இருந்தன!

இன்றோ ஒரு போத்தல் தண்ணீர் ரூபாய் 16 முதல் 20 வரை வாங்கிக் குடிக்கும் அவலம் மலிந்து விட்டதே!

பற்பல ஊர்களில், நேரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலையைவிட அதிகமாக ஒரு லிட்டர் தண்ணீர் விலை உள்ளது என்பது மிகவும் வேடிக்கையும் வேதனை யும் தரவில்லையா?

இதற்கு மூல காரணம் என்ன? காடுகள்அழிக்கப்படுவதால், மரங்கள் வெட்டிக் கொள்ளையடிக்கப்படுவதால் தான்!

மழை வேண்டி யாகம் செய்யும் சில புத்திசாலிகள் - யாகத்திற்கென மரத்தை வெட்டிக் கொண்டு வந்து போட்டு யாகம் செய்யும் வேடிக்கையும் விசித்திரமும் மலிவு இங்கே!

காடுகள் ஒரு நாட்டின் இயற்கைச் செல்வம், அவை பற்பல காரணங்களால் சூறையாடப்பட்டதன் விளைவுதான் நவீன உலகில் புவி வெப்பம் (Global Warming) உயர்ந்து, பருவ மழை பொய்த்து, மக்களுக்கு நோய்கள் ஏராளம் பரவும் அபாயமும் ஓங்கி வருகின்றது!

காடுகளை அழித்து பலர் வீடுகள் கட்டுகின்றனர்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காடுகள் போன்ற மரங்கள் சூழ்ந்த மண்ணின் நடுவில் வீடுகளை கட்டி, ஏராளமான உயிர்க் காற்றினை (Oxygen) சுவாசித்து ஆயுள் பெருக்கி வாழுகின்ற முறை உண்டு.

காடுகளை அழித்து வருவதால், காட்டு மிருகங்கள் யானை, புலி, சிறுத்தைகள், ஊர்களுக்குள் வந்து மக்களை அடித்துக் கொல்லும் அவலம் தமிழ்நாட்டிலேயே பற்பல ஊர்களில் அன்றாட அவலங் களாக நிகழ்கின்றனவே! காடுகளை அழிப்பதின் தீய விளைவே இது! இன்று ஒரு நாளேட்டில் ஒரு வாசகர் எழுதியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு தினசரி மூன்று சிலிண்டர் ஆக்சிஜன் (Oxygen) உயிர் காற்று தேவை; ஒரு சிலிண்டர் 700 ரூபாய்; மூன்று சிலிண்டர் விலை ரூ.2100 ஆகும்.

இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதைப் போலவே இனி காற்றையும் காசு கொடுத்து வாங்கும் கொடுமை (இப்போதே சில வணிக நிறுவனங்கள் நுழைந்து விட் டன) விரைவில் வந்துவிடக் கூடும்.

மூங்கில் காடுகளை வளர்க்க வாய்ப்பு இருக்கும் இடங்களில், அவை சிறிய இடங்களாக இருப் பினும் வளருங்கள். ஏராளம் பிராண வாயு இதன் மூலம் கிடைக்கும்.

எனவே காடுகளை பாதுகாப்போம் அதன் மூலம் நம் வீடுகளை - வீட்டில் வாழும் உயிர்களையும் பாது காப்போம்!

ஏதோ காடுதானே என்று அழிக்காதீர்கள்! மேழிச் செல்வம் போலவே, காடுகளும் நாம் பாதுகாக்க வேண்டிய நிரந்தரச் செல்வம் ஆகும். உயிர் காக்கும் தோழர்கள் நம் மரங்களும், காடுகளும் என்பதை மறவாதீர்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98423.html#ixzz3VIsPUpTk

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே!

பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் மற்றும் மனநலம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 13 வயதில் பெண்கள், சுய சுகாதாரம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி (விளையாட்டு) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 13 வயது முதல் 18வயது வரையுள்ள பெண் குழந்தைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.

இந்த வயதில் மிகக்குறைந்த அல்லது அதிக உடல்எடை, பிறப்புறுப்பு பிரச்சினைகள், சிறுநீரக பாதை கோளாறுகள், பூப்படைதலில் கோளாறுகள் என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வயதில் சமூகத்தில் பெண்ணுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தி ஆணுக்கு பெண், நிகரானவள் என்பதை உணர்த்த வேண்டும்.

மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் காலம் என்பதால் பெற்றோர் குழப்பத்தில் இருப்பார்கள். பூப்படைந்தது முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். 19 வயது முதல் 39 வயது வரை திருமணம் மற்றும் குழந்தை பேறு உட்பட வாழ்வின் முக்கிய திருப்பங்கள் நடக்கும் காலகட்டமாகும்.

இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்ட 3மாதங்களுக்கு முன்பாகவே விட்டமின் மருந்தை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம். மகப்பேறு காலத்தில் உரிய பயிற்சி பெற்ற மருத்துவரிடம் காண்பித்து, பிரச்சினைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

40 முதல் 65 வயதுக்குட்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நிற்கும் தறுவாயில் இருப்பதால் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். அதை உணர்ந்து உணவு கட்டுப்பாடு, அதிக சர்க்கரை தவிர்ப்பு, உணவில் சோயா மற்றும் கால்சியம், உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு குடும்பத்தினரின் துணை மிகவும் அவசியம்.

புற்று நோய்க்கான அபாயம் அதிகம் இருக்கும் காலம் இது. எனவே கருப்பை சம்பந்தமான சிறிய சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டு, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்வாழ்வின்பெரும் பகுதியை குடும்பத்திற்காக செலவிடும் பெண்ணின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.

எந்த குடும்பத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத் திருக்கும் என்பது மட்டும் உண்மை.

Read more: http://viduthalai.in/page-7/98443.html#ixzz3VIu8doNJ

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.

1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.

2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.

3) யோகாசன பயிற்சிகள்.

4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். ஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர் வில்லாமல் விளையாட்டாக செய்யலாம்.

கைகள் வலுபெற: சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இடுப்பு வனப்பு பெற: இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக்ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.

தோள்பட்டை...: பெண்களின் தோள்பட்டை அவரவர் களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு வராது.

பாதம் உறுதி பெற: குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெட் மில் பயிற்சியினையும், மெல்லிய நடைப் பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/98446.html#ixzz3VIuJK2OU

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு உகந்த பப்பாளி பழம்

தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும்.
நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.

பெண்கள் பப்பாளிப் பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. 100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது.

அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள். அந்த பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என்ற என்சைம் இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/98444.html#ixzz3VIuaLXA9

தமிழ் ஓவியா said...

முல்லைவேந்தன் உரை

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உரையாற்றும்பொழுது, கல்விக் கூடத்திலே தந்தை பெரியார் பெயரில் அரங்கம் அமைத்த நமது முனைவர் இராஜேந்திரன் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அந்த அரங்கத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திறந்து வைப்பது என்பது பொருத்தமான ஒன்றாகும்.

தந்தை பெரியாருக்குக்கூட சிலை வைக்கக்கூடாது என சிறுமதி கூட்டத்தினரும் இன்று இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களை நான் கேட்கிறேன், அரசுக்குச் சொந்தமான இடத்தில், நெடுஞ் சாலையோரங்களில் எல்லாம் பூசணிக்காய் போன்ற கண்ணை வைத்து,கத்தியைக் கொடுத்து விழிபிதுங்க காளி என்றும், மாயி என்றும்,

முனியப்பன் என்றும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சிலையை வைத்திருக்கிறார்களே, இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது; அவ்வளவு ஏன், ஓமந்தூரார் தோட்டத்திலேயே இன்றைய ஆட்சியாளர் கள் கோவிலைக் கட்டி வைத்துக்கொண்டு, கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட சட்டமன்றத்தையே இடிக்கிறார் களே இவற்றை யார் கேட்பது?

அரசு இடத்தில் கோவில் கட்டலாம்; ஆனால், சொந்த இடத்தில்கூட பெரியாருக்கோ, தீரன் சின்னமலை போன்ற வர்களுக்கோ இந்த நாட்டில் சிலை வைக்க முடியவில்லை. வெங்கடசமுத்திரத்தில் பெரியாரோடு வாழ்ந்த வி.ஆர்.வேங் கன் அவர்களுடைய சொந்த இடத்தில் சிலை வைக்கத் தடை போடுகிறார்கள்.

இங்கே பெரியார் அரங்கு என்று மட்டும் ஏற் படுத்திவிட்டால், போதாது. அது பகுத்தறிவுப் பாடங் களைச் சொல்லிக் கொடுக் கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும்; மாணவர் களுக்கு அறிவு வெளிச்சத் தைக் காட்டவேண்டும். மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க ஆசிரி யர்கள் நல்ல சிந்தனையா ளர்களாக பகுத்தறிவாளர் களாக இருக்கவேண்டும்.

வீடு கட்டும்போது பூஜை அறை கட்டுவதை விட்டு விட்டு, படிப்பகம் கட்ட வேண்டும்; ஒரு பெண் நினைத்தால் தன் குழந்தை களை நல்ல பகுத்தறிவாளர் களாக ஆக்க முடியும். பகுத்தறிவு பரவ அகிலா எழிலரசனைப்போல வீட் டுக்கு ஒரு வீராங்கனை இருக்கவேண்டும்.

ஆசிரியர்கள் பெரி யாரை கற்கவேண்டும். அண்ணாவைப்பற்றி படிக்கவேண்டும். மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், பகுத்தறிவுப் பாடங்களைப் புகட்டுங்கள். மாணவர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கும் நிலைக்கு மாறவேண்டும்.

பெரியாரின் கொள்கையை 100-க்கு 25 பேர் புரிந்து கொண்டு செயல்பட்டால்கூட, தமிழகத்தில் பெரிய மாற்றம் நிகழும். மாதாமாதம் பகுத்தறிவுப் பாசறை கற்கும் இடமாக இந்த அரங்கம் இருக்கவேண்டும்.

பட்டங்கள், பதவிகள், ஆட்சி அதிகாரங்கள் இருந் தாலும், இல்லாவிட்டாலும் கருப்புச் சட்டைக்குச் சொந்தக் காரனாக என்றைக்கும் இருப்பேன் என்று உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/98458.html#ixzz3VIuzrccG

தமிழ் ஓவியா said...

ராமன்குடி



மாட்டுக்கறி பற்றி பிரபலமாகப் பேசப்படும் காலம். மக்களின் உணவுப் பிரச்சினையில் மத்தியில் உள்ள பிஜேபி தலைமையி லான ஆட்சி மூக்கை நுழைப்பதால், பல தகவல் களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பசு - இந்துக்களின் புனித தெய்வம் என்றும் நீட்டி முழங்குகிறார்கள். இந்து என்பவர் யார்? சைவம் வைணவம் என் பவை இந்து மதத்தைக் குறிக்குமா?

இந்து மதத்திற்குள் ளேயே சிவனை ஏற்கும் ஸ்மார்த்தர், விஷ்ணுவை ஏற்கும் வைஷ்ணவர்கள் - இவர்களுக்குள்ளேயே வட கலை, தென்கலை குஸ்தி என்ற விவகாரங்கள் உண்டு.

அது ஒருபுறம் இருக் கட்டும்; இராமன் மரக்கறி உண்பவனா? புலால் உண் பவனா? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடித் திரிய வேண்டியதில்லை.
வைஷ்ணவரான கனம் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்களின் வாயாலேயே அறிவோம்.

இவ்விடத்தில் இன்னும் பல இடங்களி லும் இராம லட்சுமணர் வேட்டையாடி, பூஜைக் குத் தகுந்த அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த வேட்டையாகா ரம் சம்பாதித்து உண் டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக் கிறார். சந்தேகத்துக்கு இடமில்லாமல் விளக்க மாக எழுதியிருக்கிறார். இதைப்பற்றி நாம் குழப் பம் அடைய வேண்டிய தில்லை. க்ஷத்திரியர் களின் ஆசாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை. காலத்துக் கும் குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப்பதற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜையில் வைத்து, அளவுக்கு மிஞ்சாமல் உண்பதால் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத் துக்குப் பொது தருமம் என்று சொல்கிறார் சக்ர வர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) ஆதாரம்: நூல்: சக்ரவர்த்தித் திரு மகன் - பக்கம் 88).

இராமனும் வைஷ்ண வர்களால் பூஜிக்கத் தக் கவன் - ராஜாஜியும் அந்தப் பிரிவு மதத்தைச் சேர்ந்தவர் - இராமனை அவதூறு செய்ய வேண்டும் என்று எண்ணம் எள் மூக்கு அளவுக்கும் இல்லாதவர்.

இராமன் மாமிச பட்சிணி மட்டுமல்ல; மது அருந்தியவனும்கூட! ஸ்ரீமத் வால்மீகி ராமா யணம் ஸுந்தர காண்டம் (தமிழில்) சி.ஆர். சீனிவா சய்யங்கர் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. வெளியீடு: தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, தியாக ராயர் நகர் சென்னை - 17. நூல் பக்கம் 17. (சீதையைப் பிரிந்த ராமன் நிலை என்ன) 140ஆவது சுலோ கத்தில் ராமன் மது மாம் ஸங்களை விட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே!

இதற்கு விளக்கம் தேவையில்லை.

இராமாயண கால மது வகைகள் பல உண்டு. அவற்றுள் சில கீதைசுரா - இது காய்ச்சி இறக்கப்படும் சாராயம். மைரேயோ - இது வாசனைப்பூ ஒட்டப் பட்ட மது. சௌவீரசா - மட்ட ரகப் பானம். சுரா பானம் - இயற்கைச் சாராயம் (கேரவான் 15.8.1954) இராமாயணத்தில் மதுக்குடி எனும் தலைப்பில் எஸ்.என். வியாஸ்).
புரிகிறதா இராமன் குடி?

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/97791.html#ixzz3VKI33RG0

தமிழ் ஓவியா said...

நேருவும்- பசுவும்!



இந்தக் கோமாதாவை வைத்துக்கொண்டு இந்த இந்துத்துவாவாதிகள் மார டிப்பது, அரசியலாக்குவது என்பது - நேரு அவர்கள் காலத்திலேயே தொடங்கப் பட்டு விட்டது.

1952 முதல் பொதுத் தேர்தலில் பண்டிட் ஜவகர் லால் நேரு அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் ராம ராஜ்ய பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஷம்பூ நாராயண் என்பவர்.

தம்மை எதிர்த்துக் காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட நேருவிடம், அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். உங்களுக்குப் பசுவின்மீது நேசம் இல்லையா? என்று நேருக்கு நேர் நேருவிடமே கேட்டார்.

கேள்வி வந்த அடுத்த நொடியே பொட்டில் அடித் ததுபோல நேரு பதில் சொன் னார், பசுவை மட்டுமல்ல; குதிரைகளையும் கூட நான் நேசிக்கிறேன்! என்று போட் டாரே ஒரு போடு! அவ் வளவுதான் ஆசாமி வாய டைத்து நின்றார்.

உயிர்களை நேசிப்பது என்கிற காரணத்துக்காக மனிதன் மாமிச உணவைச் சாப்பிடக்கூடாதா? காய்கறி களைக்கூடத்தான் வளர்க் கிறார்கள்; (கவனிக்கவேண் டும் வளர்க்கிறார்கள்) அவை யும் பிராண வாயுவை உட் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அவற் றிற்கும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. அதனால் காய் கறிகளைச் சாப்பிட மறுப்பார் உண்டா?

உயிர்களை வதை செய் யக்கூடாது என்று சொல்லு வதைக்கூடப் புரிந்துகொள் ளலாம்; உயிர்களில் பசுவைத் தவிர மற்றவற்றைக் கொல் லலாம் என்பது எந்தவூர் ஜீவகாரூண்யம்?

ஒரு காலகட்டத்தில் இந்தப் பார்ப்பனர்கள் பசுக் களை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி பசு மாமிசம் தின்று கொழுத்தவர்கள்தான். இடைக்காலத்தில்தான் இவர் களிடம் மாற்றம் ஏற்பட்டது. இதனை வரலாற்று ஆசிரிய ரான இராகுல சாங்கிருத்தி யாயன் எழுதியுள்ளார்.

பிராமணர்கள் பவுத்தர் களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருது கிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்துக்காகவே பசு மாமிசம் தடை செய் யப்பட்டது என்றும், பசு வையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச் சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறார். (நூல்: வால்கா முதல் கங்கை வரை, பக்கம் 76).

இந்த வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், கோமா தாவுக்குள் ஒளிந்திருக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் உள்நோக்கம் என்னவென்று எளிதில் விளங்கிவிடும் அல்லவா! - மயிலாடன் 25-3-2015

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

என்ன ஆனந்தம்?

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்!

- காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி
அப்படியா?

ராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை யல்லவா செய்துகொண் டான் - ஆகா, என்ன ஆனந்தம்!

Read more: http://viduthalai.in/e-paper/98503.html#ixzz3VOduT5Va

தமிழ் ஓவியா said...

அனுமதியோம்!

செய்தி: பயங்கரவாதம் இல் லாத சூழலை பாகிஸ்தான் உருவாக்கவேண்டும்.
-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சிந்தனை: ஆமாம், இந்தி யாவுக்குள் அத்தகைய வாதங்களை நடத்த எங் களுக்கு மட்டுமே பிரத்தி யேக உரிமை உண்டு - அதை யாரும் தட்டிப் பறிக்க அனுமதியோம்!

Read more: http://viduthalai.in/e-paper/98506.html#ixzz3VOe4ZXbd

தமிழ் ஓவியா said...

சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துப் பதிவுக்கு கைது செய்யும் சட்டப் பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 25_ சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்து களைப் பதிவு செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிர டித் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2012-ஆம் ஆண்டு, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே காலமான போது, மகாராஷ்டிரத்தில் கடையடைப்பு நடத்தப்பட் டதை விமர்சித்து முகநூல் பக்கத்தில் கருத்து வெளி யிட்ட இளம்பெண்ணை அந்த மாநில காவல்துறை யினர் கைது செய்தனர். அந்த கருத்தை முகநூல் பக்கத்தில் ஆதரித்த (லைக்) மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். அதேபோல, சமாஜ் வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கானை விமர்சித்து முகநூலில் கருத்து வெளியிட்டதாகக் கூறி பள்ளி மாணவர் ஒருவரைக் கடந்த 18-ஆம் தேதி உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கை களுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இத்தகைய கைது நடவடிக் கைகளுக்கு எதிராக, ஷ்ரேயா சிங்கால் என்ற சட்டக் கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தார்.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் ஆட் சேபகரமான விமர்சனங் கள், கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு, ஒருவரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவில் திருத் தம் கொண்டு வரவேண்டும் என்று அவரது மனு வில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. மேலும், இந்தச் சட்டப் பிரிவானது தவறான வகை யில் பயன்படுத்தப்படுவ தாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. சமூக வலை தளப் பக்கங்களில் ஆட் சேபகரமான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களை, காவல்துறைத் தலைவர் அல்லது அய்.ஜி-யிடம் உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என்று அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனா லும்கூட, உச்சநீதிமன்றத் தின் உத்தரவை மீறி, அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந் தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பக் குற்றவியல் சட்டத்தின் 66-அ பிரிவை நீக்கக் கோரும் பொதுநல வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரர், நாரிமன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை வெளி யிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் அவசிய மான ஒன்று. தகவல்

தொழில்நுட்பக் குற்றங்களுக்கான சட்டத்தின் 66-அ பிரிவு மக்களின் கருத்து உரிமையை நேரடியாகப் பாதிக்கச் செய்கிறது. அரசமைப்புக்கு எதிரானது: இந்தச் சட்டப் பிரிவின் மூலம் பேச்சு, கருத்துச் சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. 66-அ பிரிவின்கீழ் ஒருவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஷரத்துகள் அந்தச் சட்டப் பிரிவில் இடம் பெறவில்லை. இந்தச் சட்டப் பிரிவானது அரசமைப்புக்கு முரணான ஒன்று. சமூக வலைதளங்களில் ஆட்சேப கரமான கருத்து வெளியிட்டதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடு இருக்கும்போது, அதை எவ்வாறு சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியும்? சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் ஒருவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றலாம். அதுவே மற்றொருவருக்கு வேறு மாதிரியாகத் தோன்றலாம். மத்தியில் ஆட்சியமைப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இதுபோன்ற சட்டப் பிரிவுகளானது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். மத்தியில் அடுத்து ஆட்சியமைப்பவர் கள் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு தற்போதுள்ள அரசு உறுதியளிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு கோரிக்கை முன்னதாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-அ பிரிவு மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறிக்கும் பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 66-அ பிரிவைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில், முக்கியத் திருத்தங்களையும் வழி முறைகளையும் உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98502.html#ixzz3VOeEcrSj

தமிழ் ஓவியா said...

இணைய தளங்களில் கூறப்படும் கருத்துரிமைகளைப் பறிக்கும்

சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!

தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?

இணையதளங்களில் கூறப்படும் கருத்து களின் குரலை நெரிக்கும் மத்திய அரசின் 66ஏ பிரிவு சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இது தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி - அதையொட் டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

இந்த விளைச்சலில் சில களைகளும் முளைப்பது தவிர்க்க இயலாததே!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங் களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

தவறான பிரயோகங்கள்

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை யான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் நேற்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்சநீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதி ராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடா ளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக் கட்டுமானம் குலைக்கப்படாமல் - கருத்துச் சுதந்திரமே அது - காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
25.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98500.html#ixzz3VOeYJjod

தமிழ் ஓவியா said...

இணைய தளங்களில் கூறப்படும் கருத்துரிமைகளைப் பறிக்கும்

சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!

தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?

இணையதளங்களில் கூறப்படும் கருத்து களின் குரலை நெரிக்கும் மத்திய அரசின் 66ஏ பிரிவு சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இது தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி - அதையொட் டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

இந்த விளைச்சலில் சில களைகளும் முளைப்பது தவிர்க்க இயலாததே!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங் களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

தவறான பிரயோகங்கள்

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை யான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் நேற்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்சநீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதி ராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடா ளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக் கட்டுமானம் குலைக்கப்படாமல் - கருத்துச் சுதந்திரமே அது - காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
25.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98500.html#ixzz3VOeYJjod

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டில் ஒன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். - (குடிஅரசு, 4.10.1931)

தமிழ் ஓவியா said...

மதுரையில் மகளிரணி சிறப்பு வழக்காடு மன்றம்


மதுரை, மார்ச் 25_ 15.03.2015 மாலை 6.00 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தன் சார் பாக 27_ஆவது நகழ்ச்சி யாக மகளிர் தன சறபபு வழக்காடு மன்றம் மாட் டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தயாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னர் கல்லுரி பேராசிரி யர் அ. ஜோதி தலைமை தாங்கினார். ந.சரோசா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரணி தலைவர்), வே.சுசிலா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரண செயலாளர்) மற்றும் மோ.புஷ்பலதா (மதுரை மாநகர தராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர்) ஆகியோ முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சியமளா வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரி யர் க.அகலாகுமாரி (இராசா பொறயயல் கல்லூரி இணைப்புரை வழங்கனார். ''பெணகள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது.'' என்ற வழக்கனைத் தொடுத்து மகேஸ்வரி (அக்ரி) (இணை ஆணையர் வணிகவரித் துறை) வழக்காடினார். அவரது வழககினை மறுத்து வழக்கறிஞர் இன்னிசை (சென்னை உயர்நீதிமன்றம்) எதிர் வழக்காடினார். இருதரப்பு வாதுரையைக் கேட்டு பெண்கள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் ரேணுகா தேவி விரிவான விளளக் கத்தோடு தர்ப்பினை வழங்கனார். நகழ்ச்சியின் இடையே ''மம்மீ.......... எனககு ஒரு டவுட்டு'' என்ற நகழ்ச்சியை பெரியார் பிஞ்சு த.ஓவியா மற்றும் பா.வேல்விழி நடத்திக் காட்டினர். அந்நிகழ்ச்சி யில், 1) ''தருபபுகழைப்பாடப் பாட வாய்மணக்கும்'' என்று பாடுகிறார்களே அவர்கள் பல்துலக்க மாட்டார்களா? 2) ''தருநீறில் மருந்து இருக்கு தெரியுமா?'' என்கிறார் களே மருநது கடையில் அது விற்குமா? 3) ''சரஸ் வதியைக் கும்பட்டால் தான் படிபபு வரும்'' என்கிறீர்களே எங்கள் வகுப்பில் ராபர்ட் முதல் இடத்திலும், இஸ்மாயில் இரண்டாவது இடத்தி லும் இருக்கிறார்களே அவர்கள் சரஸ்வதியை கும்பிட்டார்களா?'' 4) ''பூஜைக்கு முன் கொழுக் கட்டையை தின்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்கிறீர்களே அந்த சாமியையே தருடிச் செல் கிறார்களே சாமி ஏன் அவர்கள் கண்ணை குத்த வில்லை?'' என்ற பகுத்தறிவு வினாக்களை பெரியார் பிஞ்சு த.ஓவியா சுவைபட எழுப்பிய போது அரங் கமே சிரிபபொலியால் அதிர்ந்தது. பார்வையா ளர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்தது. நகழ்ச்சியின் இறுதியில் பா.வேல்விழி நன்றியுரை ஆற்றனார்.

Read more: http://viduthalai.in/page-4/98484.html#ixzz3VOh1sBjK

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குழந்தைப் பேறு

மயிலாடுதுறையையடுத்த திருவாலங்காட்டில் உள்ள கோயில் குளமான காமேஸ் வர தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப் பேறு கிடைக் குமாம். - ஒரு நாளேட்டின் செய்தி இது. அந்தத் திருவாலங் காட்டிலேயே குழந் தைகள் இல்லாத தம்பதிகள் இருக் கிறார்களே?

Read more: http://viduthalai.in/e-paper/98552.html#ixzz3VUa7RuPX

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதான்!
பழநி மலை கோயில்
ரோப் கார் அறுந்து விழுந்தது

பழநி, மார்ச் 26:பழநி மலைக்கோயிலுக்கு பஞ்சா மிர்தம் கொண்டு சென்ற மெட்டீரியல் ரோப் கார், பில்லர் சாய்ந்ததால் அறுந்து விழுந்தது.

பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயி லுக்கு செல்வதற்காக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாமிர்தம், அன்ன தானத்துக்கான மளிகை பொருட்கள் கொண்டு செல்வதற்கு தனியாக மெட்டீரியல் ரோப் கார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் நேற்று பிற்பகல் வழக்கம் போல் பஞ்சாமிர்தம் ஏற்றி செல்லப்பட்டது. அப்போது ரோப்கார் வழித்தடத்தில் உள்ள இரும்பு பில்லர் திடீரென சரிந்து வயர்கள் அறுந்து விழுந்தன.

இதில் பஞ்சாமிர்தம் ஏற்றி சென்ற ஒரு பெட்டி சாய்ந்ததால், பஞ்சாமிர்த டப்பாக்கள் கீழே விழுந்தன. காலியாக வந்த பெட்டி அடுத்து கீழே விழுந்தது. உடன் ரோப் கார் இயக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள தால், ஒரு வாரத்திற்கு மெட்டீரியல் ரோப் கார் இயங்காது என்று ஊழி யர்கள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98551.html#ixzz3VUaJLRcn

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகள் மீது
மனிதநேய அணுகுமுறை தேவை

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 24ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளைப் போராட வைப்பது என்பதே கருணையற்ற - மனித நேயமற்ற ஒன்று என்று எடுத்த எடுப்பிலேயே கூறிட வேண்டும். அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை - பார்வையற்றவர்கள் பிரச் சினையை அரசு திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும்.

காது கேளாதோர் பிரச்சினையை அரசாங்கம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது இயற்கையின் பாற்பட்ட மனித நியதியாகும். அவர்களின் கோரிக்கைதான் என்ன?

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற அரசு கடைப்பிடிக்கும் சட்ட விரோத விதிகளை ரத்து செய்க!

மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே அனைவருக்கும் உதவி தொகை வழங்கிடுக!

40 சதம் ஊனம் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிடுக!

காது கேளாதோர் உதவித் தொகை பெற 80 சதம் என்கிற பாரபட்சத்தை ரத்து செய்க!

உதவித் தொகை நிறுத்தப்பட்ட அனைவருக்கும் நிலுவை தொகையுடன் உடனே வழங்குக!

உத்தரவு பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் காலதாமதமின்றி உதவித் தொகை வழங்கிடுக!

2014 மார்ச் அரசாணை எண்.10-ன் படி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிக்குரிய 1107 பின்னடைவு காலிப் பணியிடங்களில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை பணி நியமனம் செய்க!

அரசாணைப்படி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளச் சான்று வழங்கிடுக!

அரசு காலிப் பணியிடத்தில் 3 சதவிதத்தை மாற்றுத் திறனாளிகளை கொண்டு நிரப்பிடுக!


மேற்கண்ட ஒன்பது கோரிக்கைகளில் அடங்கி யுள்ள நியாயத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகள் இருந்தால் அதில் ஒன்று பிறப்பிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அத்தாயின் கடமை என்பது அந்தக் குழந்தையின்மீது கூடுதல் கவனம் செலுத்துவ தாகும்.

அரசு என்பதும் அந்தத் தாயின் இடத்தி லிருந்து மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினையைப் பார்க்க வேண்டாமா? காது கேட்பதில் என்ன 80 சதவிதம்? விசித்திர மான கேலிக் கூத்து!

இவை எல்லாம் ஒரு பிரச்சினையைத் தட்டிக் கழிக்க வைக்கப்படும் நிபந்தனைகளாகவே தெரிகிறது.

இவர்கள் எல்லாம் என்ன மிட்டா மிராசு தார்களா? செல்வந்தர்களா?

அரசு கொடுக்கும் உதவித் தொகையில் வாழ வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்படுபவர்களாயிற்றே! அவர்கள் விஷயத்தில் தேவையற்ற நிபந்தனைகளைத் திணிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் அய்யமில்லை.

இவர்களில் படித்தவர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய வேலை வாய்ப்பை அளித்திட என்ன தயக்கம்? அப்படி என்ன இவர்களுக்குப் பெரிய தொகை செலவாகப் போகிறது?

அரசு கீழே சிந்தும் பணத்துக்கு ஈடாகுமா இது? அரசு இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றிட முன்வர வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகம் மனிதாபிமான இயக்கமாகும் - மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமும் ஆகும்.

அந்த முறையில்தான் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் போராடும் இடத்திற்குச் சென்று நேற்று சந்தித்தோம். அவர்கள் நியாயமான கோரிக்கை களுக்காக திராவிடர் கழகம் உரத்த முறையில் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறது.

நீதிமன்றம் சென்றுதான் ஆக வேண்டும் என்றாலும், அந்த வகையிலும் உதவிட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு கருணையோடும், மனிதநேய உணர்வுடனும் அணுக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்து கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

26.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98557.html#ixzz3VV2Av9w5

தமிழ் ஓவியா said...

பெரியார் பாதையில் லீக்வான்யூ

சிங்கப்பூரின் சிற்பி லீயின் 'இறுதி அஞ்சலி நாளன்று அவரவர் இருக்கும் இடங்களில் , கறுப்பு உடை அணிந்து பெருமை மிகு லீ அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்' என்ற வேண்டுகோள், எதிர்பாராத அளவுக்கு மக்கள் மனங்களைத் தொட்டிருக்கிறது. ஆயிரமாயிரம் அன்பர்கள் அந்தச் செய்தியை பெரிய அளவில் பகிர்ந்து கொண்டு, அன்னாரின் புகழை உலகெங்கும் பரப்பியுள்ளனர்.

எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புடை தரித்த அனுதாபக் கூட்டம் உருவாகி வருகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை லீ அவர்கள் மறைமுகமாக ஏற்றவர். உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற பெரியாரின் அரிய கருத்தின் முழு சொந்தக்காரர் லீ.

அதே நேரத்தில் லீயின் தெய்வ நம்பிக்கை, இதுவரை யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாத ஒன்று. செயலாக்கமே நாட்டை முன்னுக் குக் கொண்டு வரும் எனத் திடமாக நம்பிய அவர், தெய்வம் சார்ந்த கொள்கைகளுக்கு நேரம் ஒதுக் காததையும் நம்மால் காண முடிகிறது. ஆனாலும், தன் மக்களின் தெய்வ நம்பிக் கைகளில் என்றைக்குமே அவர் குறுக்கே நின்ற தில்லை. முப்பதுக்கு மேற்பட்ட இந்து கோயில்களை கட்ட அனுமதித்தவர். தைப்பூசத் திருவிழாவுக்கு முக்கியத்துவம் தந்தவர்.

இந்து அறக் கட்டளை வாரியத்தின் வழி, கோயில்கள் ஒழுங்காக நிர்வ கிப்பதை உறுதிப் படுத்திஇருப்பவர். இன்றைய நம் கோயில்கள் பல, சமய ஆராதனைகளுடன், பாலர் பள்ளி போன்ற போதனைக் கூடங்களையும் நடத்தி வருகின்றன. லீயின் மறைவை ஒட்டி ,தந்தை பெரியாரின் கருஞ் சட்டைக் கொள்கையை மக்கள் இங்கே பின்பற்ற நினைப்பது மிகப் பொருத்தமே! நவ நாகரீக சிங்கப் பூக்கு, பெரியார் பார்வை தந்த பெருமையும் லீ அவர்களுக்கே உரியது.

- சிங்கப்பூர் ஏ.பி. இராமன் -

Read more: http://viduthalai.in/e-paper/98593.html#ixzz3VaHtEvB1

தமிழ் ஓவியா said...

கடவுளின் கிருபையோ!
சூடத்தால் ஏற்பட்ட விபரீதம்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், அவரது மகள் விமலாதேவி (வயது 7). கடந்த 7ஆம் தேதி குடும்பத்தோடு கன்னிதேவி கோயிலுக்குச் சென்றனர். சிறுமி விமலாதேவியும் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார். தவறுதலாக அந்தச் சூடம் ஆடையில் பட்டு காயம் அடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்றும் மரணம் அடைந்தார். கடவுளைக் கும்பிடுவோர் சிந்திக்க வேண்டாமா?


Read more: http://viduthalai.in/e-paper/98594.html#ixzz3VaI8Cqqq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


எதிர்காலம்

எதிர்காலத்தைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? அனைத்தையும் திட்ட மிட்டு ஆட்டுவிப்பவன் அதைப் பார்த்துக் கொள்வான் - ரமணரிஷி

உண்மைதானே - ரமணரிஷி புற்றுநோய் வந்து பரிதாபகரமான முறையில் மரணம் அடைந்தது எல்லாம்கூட ஆண்டவன் திட்டமிட் டது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/98595.html#ixzz3VaIIRpvg

தமிழ் ஓவியா said...

அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியமா?

மத்திய அமைச்சர் கருத்துக்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை, மார்ச் 27_ அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருப்பது சாத்திய மற்றது என அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும்போது, பினாயில் பயன்படுத் துவதைவிட கோமியத்தால் தயாரிக் கப்படும் திரவத்தை பயன்படுத் தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மற்ற துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

அமைச்சர் கூறியது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும், இது பாஜகவின் அரசியல் தந்திரம் என்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகி கள் கூறுகின்றனர். அவர்கள் கூறிய தாவது:

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன்: இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால், மத்திய அமைச்சரே கூறுகிறார் என்றால் ஒட்டுமொத்த அமைச்சகமே ஆர். எஸ்.எஸ். கருத்தியலை அமல்படுத் ததான் முயல்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜே.கணேசன்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினந்தோறும் கோமியம் பயன்படுத் துவது என்பது நடைமுறைச் சாத்திய மற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி: தமிழகத் தில் சுமார் ஆயிரம் அரசு அலுவலக வளாகங்கள், 10 ஆயிரம் அலுவலக கட்டிடங்கள் உள்ளன. பல அலுவ லகங்கள் பராமரிப்பின்றி கிடக்கின் றன. குறைந்தபட்சம் பினாயில் பயன்படுத்திதான் சுத்தம் செய்து வருகின்றனர்.

திடீரென்று அனைத்து அலுவலகங்களிலும் கோமியம் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது. மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன்: சுற்றுச்சூழ லுக்கு நல்லது என்றால் இத்தனை ஆண்டுகள் இதுபற்றி ஏன் கூற வில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தைரியமாக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/98601.html#ixzz3VaJN9b80

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaJpqbuo

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.
(குடிஅரசு, 15.4.1928)

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaK5J7gP

தமிழ் ஓவியா said...

அண்ணா கூறுகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaMjHDSH

தமிழ் ஓவியா said...

குன்னமிர்தல் கூறுகிறார்!

மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சமமின்மையும் ஆகும்.

சமமற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமுதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)

இந்திய சமுதாய பழக்க வழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது

(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னமிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது)

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaNiZI3r

தமிழ் ஓவியா said...

மந்திரம் - தந்திரம் - யந்திரம்

மனிதன் ஒரு காந்தம். அவன் உடல் உறுப்புகளில் காந்த சக்தி உள்ளது என்பதைப் பகுத்தறிவாளர்கள் கூட மறுக்க முடியாது. ஏனென்றால், அது விஞ்ஞானி களால் நிரூபிக்கப் பட்ட உண்மை.

இந்த உண்மையின் அடிப் படையில் அமைந்தது தான் தாந்த்ரிக சாஸ்திரம். சரியான சாதனையாலும், பயிற்சியாலும் இந்த காந்த சக்தியை ஓர் ஆக்க சக்தியாக்கி அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியிருக் கின்றனர். (ஞான பூமி, பிப்ரவரி 1982, பக்கம் 29)

தேஹரியில் கொஞ்சகாலம் தங்கினேன், அப்போது பண்டிதரிடம் எனக்குப் படிக்கச் சில புத்தகங்களையும் ஏடுகளையும் கேட்டேன். அவர் சில இலக்கணங்கள், இலக் கியங்கள், நிகண்டுகள், தாந்திர நூல்கள் கிடைக்குமென்றார். தாந்திர நூல்களை நான் அதுகாறும் பார்த்ததில்லை. அதைப் படிக்கக் கேட்டேன். பண்டிதர் பல தாந்திர நூல்களைத் தந்தார்.

புத்தகத்தைத் திறந்ததுமே நம்பமுடியாதபடி அவ்வளவு அசுத்த, ஆபாச, அபத்த, அசங்கியச் சரக்குகளைக் கண்டு அருவருத்தேன். தாந்திர நூல் தாய், மகள், அக்கா, தங்கை, சண்டாளி, சாமரி என்ற விவஸ்தை இல்லாமல் ஸஹகமனம் (புணர்ச்சி) செய்யத் தூண்டுகிறது.

அதில் நிர்வாண ஸ்திரீயை பூஜை செய்யச் சொல்லியிருக்கிறது. எல்லா பிராணிகளையும் கொன்று புலாலுண்ணலாம். மீனுண்ணலாம், மதுபானம் செய்யலாம்; இவையெல்லாம் பூஜா விதியாம்.

பிராமணன் முதல் சாமரன் வரையில், விவஸ்தை இல்லாமல் பஞ்ச மகாரானுஷ்டானம் செய்யச் சொல்லுகிறது. மாமிசம், மது, மத்ஸ்யம், முத்திரை, மைதுனம் ஆகியவை பஞ்சமகாரங்கள். இந்தப் பைசாச அனுஷ்டானங்கள் முக்தி தருமாம். ஆனந்த முக்திக்கு இவை வழியாம்.

இந்தத் தாந்திர நூல்களை படித்து முடித்தபோது, என் அருவருப்பிற்கும் வியப்பிற்கும் அளவில்லை. இப்படிப்பட்ட ஆபாசக் குப்பை களை எழுதி தர்ம சாஸ்திரம் என்று பிரச்சாரம் செய்யும் தூர்த்தரை வெறுத்து, அங்கிருந்து சிறீநகரம் சென்றேன்.

- (பக்கம் 24, நூல்: தயானந்த ஜோதி, ஆரிய சமாஜம், சென்னை

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaNrvBmP

தமிழ் ஓவியா said...

கீதைப் பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா?

என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்

ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaO064Af

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.

மனிதனால் - எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

பொதுஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு பொது ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்கக் கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaOFIKrM

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியு டையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை.

நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOQ1tFa

தமிழ் ஓவியா said...

நாட்டையே அழிக்கும் ஆபத்து: மிகப்பெரிய விண்கல் நாளை பூமியை கடக்கிறது

லண்டன், மார்ச் 27_ சுமார் 1000 மீட்டர் அக லம் கொண்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று நாளை (27 ஆம் தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள் ளது.

அந்த விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர் கள் பெயர் சூட்டியுள் ளனர். இந்தக்கல் பூமியின் 28 லட்சம் மைல்களை கடந்து பயணிக்கும்.

இந்த மிகப்பெரிய கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் கேட் டலினா ஸ்கை சர்வே மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியை கடப்பது 5 ஆயி ரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய மாகும். இந்த மிகப்பெரிய விண்கல் மணிக்கு 37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வருகிறது.

இந்த விண்கல் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்து விடும். மேலும் இதனால் பருவநிலை மாற்றம், நில நடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா பகுதியில் விழுந்த விண் கல்லால் ஏற்பட்ட பாதிப் புகளை விட இந்த புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதுதொடர்பாக பக் கிங்காம் ஷைர் பல்கலைக் கழகத்தின் வானியல் பேராசிரியர் பில் நேப்பி யர் கூறுகையில், 2014 ஒய்.பி.35 போன்ற விண்கற்கள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வுதான் என்றாலும் அவை ஏற்படுத்தும் ஆபத் துகளை நாம் சாதாரண மாக எடை போட்டு விட முடியாது என்றார்.

Read more: http://viduthalai.in/page-4/98642.html#ixzz3VaPOMTIn