Search This Blog

19.3.15

தாலி கட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது!-பெரியார்

தாலி கட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது!




இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க் காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண், பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம் தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகு காலமாக வேரூன்றி கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குதற்கறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும், சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.


பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றியின்றைக்கு 4, 5-வருஷங்களேயாகினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தேறியிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன்வரவேண்டும்.

இத்திருமணத்தில் தாலிகட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டிருக்கிறது.


கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றை கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.


பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதன் கருத்து கலியாணம் ஆனது, ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும், இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்கு மென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் கல்யாணம் ஆகாதவன், ஆனவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும் பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டும் அடையாளம் வேண்டியதவசியமல்லவா?


அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலி கயிறு கட்ட வேண்டும். அப்படியில்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்களாகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனையிழந்த கன்னிகைதான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப்பாட்டில் கழிக்க வேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமி போல தைரியமாய் முன்வரவேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும், எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரீகமான செய்கையென்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய எதிர்ப்பையும், இடைஞ்சலையும், மூடக்கட்டுப்பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடு கூடிய செய்கைகளையும், நடவடிக்கைகளையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக்கடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனதார வாழ்த்துகிறேன்.


           -------------------05.05.1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் பேசியது. 11.05.1930- "குடிஅரசில்" வெளியானது

42 comments:

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்14 அன்று

தாலி அகற்றும் விழா, மாட்டிறைச்சி விருந்து

இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை மார்ச் 19- சென்னை பெரியார் திடலில் அண்ணல் அம் பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியும் மாட்டிறைச்சி விருந்தும் நடைபெறும் - இதுதான் இந்துத்துவா நோய்க்கான மாமருந்து என்றார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கருத் துச் சுதந்திரத்தை வலி யுறுத்தியும், புதிய தலை முறை தொலைக்காட்சி நிலையம்மீதான இந்துத் துவாவாதிகளின் வன் முறைகளைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (18.3.2015) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.இராம கிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ் மாநிலக் காங்கிரசு முன்னணித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சிப் பொருளாளர் குணங்குடி அனீபா, பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி, முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் கள் சங்க பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உள்ளிட்டோர் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட் டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை வருமாறு: திடீரென்று சில நாள்களுக்கு முன்னாலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே அருமைத் தோழர் இராம கிருஷ்ணன் அவர்களு டைய அரிய முயற்சியி னாலே ஏற்பாடு செய் யப்பட்ட இந்தக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக் கக்கூடிய கண்டன ஆர்ப் பாட்ட நிகழ்ச்சியாக கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.


தமிழ் ஓவியா said...

அன்றே சொன்னோம் - கேட்டார்களா?

கருத்துச் சுதந்திரத் துக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் நடை பெறுவது நாம் எதிர் பார்க்காதது அல்ல. கடந்த 10 மாதங்களுக்கு முன்னாலே இங்கே நண் பர்கள் சுட்டிக் காட்டி யதைப்போல இப்படி ஒரு பொதுத்தேர்தல் நாடாளுமன்றத்துக்கு வந்த காலத்திலேயே, வளர்ச்சி என்ற மயக்க மருந்தை உண்டு, இளை ஞர்களே மீண்டும் காவிக் கட்சிக்கு வாக்களித்தால், என்ன விளைவுகள் ஏற் படும் என்றால் பச்சை யாக சமதர்மத்துக்கோ, மனித தர்மத்துக்கோ இடம் இல்லாமல் வெறும் மனு தர்மம்தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என் பதை மேடை தவறாமல் நாங்கள் எடுத்துச் சொன்னோம். ஆனால், வழக்கம்போல மயக்கத் தில் இருந்தவர்கள் அதை உணரவில்லை. ஆனால், இன்றைக்கு ஒருவகை யிலே, அந்தக் காவி களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட் டிருக்கிறோம் எப்படி என்றால், அய்ந்து ஆண்டு காலம்வரையிலேகூட நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம். நாங்கள் எட்டு மாதங்களுக்குள் ளாக எங்கள் பொய் உரு வத்தைக் கலைத்து உண் மையான உருவத்தைக் காட்டுவோம் என்று இறங்கி இருக்கிறார்களே அதற்காக வரவேற் கிறோம்.

இந்த அணி சாதாரண மான அணி அல்ல. இது ஏதோ புதிய தலைமுறை ஒன்றின்மீது திட்டமிட்டு அந்த செய்தி ஊடகங்கள் மீது நடத்தப்பட்டத் தாக் குதல் என நினைக்காதீர்கள்.

பார்ப்பனீயப் பாதுகாப்புக்கு ஒத்திகை

இது ஒட்டு மொத்த மாக மனித தர்மத்துக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கு, பகுத்தறிவுக்கு, எல்லோ ருக்கும் எல்லாமும், அனைவருக்கும் அனைத் தும் என்கிற தத்துவத் துக்கு எதிராக, இன்னா ருக்கு இதுதான், இதுதான் எங்களுடைய பார்ப்பனீய, ஆதிக்க, வர்ணாசிரமப் பாதுகாப்புத் திட்டம் என்பதை வைப்பதற்கான ஒத்திகை பார்க்கிறார்கள். அவ்வளவுதான். இது ஒரு ஒத்திகை. இங்கே சொன் னார்கள். அவர்களைத் தாக்குவது என்பது மட்டும் இவர்களுடைய நோக்கம் அல்ல. அதே நேரத்திலே மத்தியிலே எங்கள் ஆட்சி இருக் கிறது. என்னவோ தெரி யாது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்தக் காலக்கட்டம் இவர்களுக்கு இருக்கிறது என்று நினைக் கக் கூடிய ஒரு நிலை. இவைகளை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்டம் போடலாம் என நினைத் தால், கேடு எங்களுக்கல்ல. உங்களுக்குத்தான் வரும். காரணம் இந்த மக்கள் சாதாரண மக்கள் அல்ல. இங்கே சொன்னதைப் போல, இது வெறும் வாக்குப் பெட்டியோடு கிளம்பிவிடுவது அல்ல. இது வெறும நாடாளு மன்ற மெஜாரிட்டி, மைனாரிட்டியைப் பொறுத்தது அல்ல.

இது மக்களுடைய கிளர்ச்சியாக, எழுச்சியாக இது திரும்பும். அது வெறும் ஊடகச் சுதந்தி ரத்தை மட்டும் அல்ல. மனிதர்களுடைய அத்து ணைச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். பாசிசத் துக்கு விடை கொடுக்கும்.

பாசிசப் போக்கு இன் றைக்கு இருக்கிறதென்றால்,

காவிகள் ஆட்சி என்ற நிலை மாறி, காவிகள் ஆட்சி என்றாலே காலிகள் ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் நடந்து கொண் டிருக்கிறீர்கள் என்று சொன்னால், அதைக்கட்டுப்படுத்த வேண்டிய வர்கள் கண்டும் காணாமல் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொன்னால், எங்களைப்போன்ற பொறுப்புள் ளவர்கள் அமைதியாகக்கூட இருப் பார்கள்.

ஜனநாயகத்தின்மூலமாக அதை மாற்றிவிடலாம், மாற்றி இருக்கிறோம் என்று. நெருக்கடி காலத்தையே சந்தித்த மண் இது. இந்தியாவிலேயே நெருக் கடி காலத்தில் அதற்குத் தலை வணங்க மாட்டோம் என்று சொன்னப் பெருமை திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்கும், அதனுடைய முதல்வர் கலைஞரையும் சார்ந்தது. இன்றைக்கு அவரிடத்தி லிருந்து மாறுபடுபவர்கள்கூட இந்த உண்மையை மறுக்க முடியாது.

அந்த காலக்கட்டத்திலே நாங்க ளெல்லாம் மிசாக் கைதிகளாக இருந்தவர்கள். சிபிஎம் போன்ற நண்பர்கள் எல்லாம் எங்களோடு இருந்தார்கள்.

தமிழ் ஓவியா said...

நெருக்கடி காலத்தைவிடவா!

அப்போது சொன்னார்கள் இனிமேல் ஒரே கட்சிதான். நீங்களெல் லாம் வெளியேகூட போக முடியாது என்று எங்களை அச்சுறுத்தினார்கள். வெளியே போகாவிட்டால் நல்லதாகி விட்டது. இருட்டிலே இருப்பதை விட இங்கே இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. எந்த விலையும் கொடுப்பதற்குத் தயாராகத்தான் நாங்கள் வந்திருக் கிறோம் என்று சொன்னோம்.

ஆனால், நெருக்கடி காலத்தை வைத்தவர்களே, இன்றைக்கு என்ன சூழல்? நினைத்துப்பார்க்க வேண்டும். தயவுசெய்து அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள். நான் வரலாற்றுச் சம்பவங்களை உங்களுக்குப் புரட்டிக் காட்டுகிறேன். நம்முடைய நாட்டிலே. அந்த நெருக்கடிக் காலத்தைவிட நீங்கள் பெரிதாக செய்துவிட முடியுமா? அதற்குத்தான் உலகத்தைக் காட்டினார்கள் இரண்டுபேரும். அருமைச் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் சொன் னார்கள். துவங்கினார்கள். நம்முடைய இராமகிருஷ்ணன் அவர்கள் அதை விளக்கி முடித்தார்கள்.

இட்லர் உலக வரலாற்றிலேயே ரொம்ப அதிசயமான சர்வாதிகாரி. என்ன அதிசயமான சர்வாதிகாரி என்று சொன்னால், இட்லர் ஜனநாயக முறைப்படி வந்த சர்வாதிகாரி.

ஹிட்லரின் வெய்மார் அரசியல் சட்டம்

எங்களுக்கெல்லாம் அரசியல் சட்டம் படிக்கிற நேரத்திலே, பல்வேறு அரசியல் சட்டங்களை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி பல்வேறு அரசியல் சட்டங்களைச் சொல்லிக் கொடுக்கிறபோது, இட்லர் வருவதற்கு முன்னாலே பழைய அரசியல் சட்டத்தை ஜெர்மானிய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு புதிய அரசியல் சட்டத்தை அங்கே கொண்டுவந்தார். அதற்கு முன்னாலே அவர் பதவிக்கு வருவதற்கு முன்னாலே திட்டமிட்டு அதை நிறைவேற்றும்படி பார்த்துக் கொண்டார்.

அந்த அரசியல் சட்டத் துக்கு வெய்மார் அரசியல் சட்டம் (Weimar Constitution) என்று பெயர் கொடுத்தார்கள்.

அதிலே பிரிவு 48 என்ற ஒரு பிரிவை வைத்தார்கள். அந்த 48 என்ற பிரிவில் இருப்பது என்னவென்றால், நாட்டில் திடீரென்று ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால், தலைவராக இருக்கக்கூடியவர் மற்ற அதிகாரங் களையெல்லாம் கலைத்துவிட்டு, அவரே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் அவசர காலம் என்று வைத்து இந்த முறையில் ஜனநாயக முறைப்படி வந்தவர் இட்லர்.

கோணிப் புளுகன் கோயபல்ஸ்

இட்லருடைய பாசிசம் என்ன ஆயிற்று? பாடத்திட்டங்களிலே மாற்றம், இனப்படுகொலை செய்தார். மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு இடமில்லை. பிரச்சாரம். இப்போது நடைபெறுகின்ற மாதிரி. கோயபல்ஸ் கோணிப் புளுகன் கோயபல்ஸ் என்று நாமெல்லாம் நாடகம் நடத்திக் காட்டவில்லையா?

பிறகு, இட்லருடைய நிலை என்ன? வரலாற்றிலே குப்பைத் தொட்டியி லேகூட இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தானே ஆளானார்? நம்மை மாதிரி இருப் பவர்கள்தான் இட்லரை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே, மோடி அரசாங்கமாக இருந்தாலும், அல்லது அவர்களை ஆதரிக்கிற வேறு அரசுகளாக இருந் தாலும், அவர்களுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறோம். நீங்கள் எந்த அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துப்போயிருக்கிறீர்களோ, அந்த அரசியல் சட்டம் அளிக்கின்ற கருத்து சுதந்திரத்தை, தாக்குவோம், ஊட கங்கள் இயங்கக் கூடாது, மாற்றுக் கருத்துகளே பேச முடியாது, நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்பது ஜன நாயகமா? சர்வாதிகாரமா?

எதேச்சதிகார ஆட்சியா? பாசிசத்துக்கு இடமில்லை என்று காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்மைப் பொறுதத வரையிலே இது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மட்டும் கருதக்கூடாது.

பார்ப்பனியத்தைக் காப்பாற்றவே!

குறிப்பிட்ட செய்திக்காக மட்டு மல்ல. மதவாதக் கொடியை ஏற்ற வேண்டும். இந்துத்துவா என்று சொல் லக்கூடிய அந்த வெறித்தனத்தை நிலை நாட்ட வேண்டும். பச்சைப் பார்ப்பன வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட வேண்டும், மனுதர்மக் கொடியை தாழ விடக்கூடாது என்பவைதான் உங்கள் நோக்கமாக இருந்தால், சந்திக்கத் தயாராக நாங்கள் வருவோம். மக்களை ஆயத்தப்படுத்துகின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். அதை நன்றாக நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அதற்காக ஒத்திகை பார்க்க வேண்டுமா?

தாலியாம் தாலி!

இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள். தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காய மாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.

தமிழ் ஓவியா said...

கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன? எனவே, நாங்கள் சொல்லுகிறோம். அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்து, இன்னும் கேட்டால், பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லை. ஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம். இங்கேயே இருக்கும் சாதாரணமாக, இங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார். அது அவருடைய கருத்து.

புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)

ஒன்றும் கிடையாது. புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!

ஆனால், இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லை, நீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள். எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லை. அவர்கள் வாக்கு வாங்க வேண்டும். அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.

தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி விருந்து. இதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன். வணக் கம். நன்றி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்.

தமிழ் ஓவியா said...

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் கழக வட மாவட்டங் களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ் சோதி, மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னரெசு பெரியார், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரட்டிஸ், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மை, தொழிலாளரணி செல்வராசு, முத்துக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன், ஏழுகிணறு கோ.கதிரவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணை செய லாளர்கள் கோவீஇராகவன், சா.தாமோதரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், செயலாளர், அனகை ஆறுமுகம், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள் ளுவர், கோ.தங்கமணி, சைதை தென்றல், ஜீவா, வழக்குரைஞர்கள் வீரமர்த்தினி, தெ. அருள்மொழி, பெரியார் களம் இறைவி, தங்க.தன லட்சுமி, வளர்மதி, பசும்பொன் மீனாட்சி, சுமதி, வனிதா, ஆவடி மோகனப்ரியா, மரகதமணி, பூவை செல்வி, பவானி, சந்தியா, வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் புரசை அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கு.செல்வேந்திரன், கூடுவாஞ்சேரி ராசு, பெரியார் மாணாக்கன், பொறியாளர் ஈ.குமார், ஜெகத் விஜயக்குமார், தரமணி மஞ்சுநாதன், மாணிக்கம், ஒளிவண் ணன், தங்க.இரமேஷ், திருவொற்றியூர் கணேசன், வெற்றி, சுரேஷ், கலை யரசன், கலைமணி, இசையின்பன், காரல்மார்க்ஸ், உடுமலை, சிறீராம், ராவந்த், கோடம்பாக்கம் மாரியப்பன் உள்பட திராவிடர் கழகம், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ்மாநில காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக பங்கேற்றனர்.

----------------------

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!

இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்) மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம். அதுமாதிரி சொல்லுங்கள். பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது? ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்) சிந்திக்க வேண்டாமா? ஆகவே, தான் நண்பர்களே, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

Read more: http://viduthalai.in/headline/98116--14-.html#ixzz3UpcgQZV7

தமிழ் ஓவியா said...

மக்களை முட்டாள்களாக்கப் பசனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.(விடுதலை, 5.1.1972)

Read more: http://viduthalai.in/#ixzz3UpeYLlnP

தமிழ் ஓவியா said...

தாலியாம் தாலி!

இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள். தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காய மாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.

கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன? எனவே, நாங்கள் சொல்லுகிறோம். அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்து, இன்னும் கேட்டால், பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லை. ஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம். இங்கேயே இருக்கும் சாதாரணமாக, இங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார். அது அவருடைய கருத்து.

புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)

ஒன்றும் கிடையாது. புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!

ஆனால், இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லை, நீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள். எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லை. அவர்கள் வாக்கு வாங்க வேண்டும். அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.

தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி விருந்து. இதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன். வணக் கம். நன்றி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg1AAWa
தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!

இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்) மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம். அதுமாதிரி சொல்லுங்கள். பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது? ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்) சிந்திக்க வேண்டாமா? ஆகவே, தான் நண்பர்களே, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg5mEhs

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்துக்கு அளவேயில்லையா?

வகுப்பறையில் மயங்கி விழும் மாணவர்கள் அரசு பள்ளியில் பேய் பீதியாம்!

தலைவாசல், மார்ச் 19_ தலைவாசல் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவமாணவிகள் திடீர் திடீரென மயங்கி விழுவ தால், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலு மிச்சம் பழத்தை மாண வர்கள் எடுத்து வரு கின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட் சியில் உள்ள இந்திராநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி யில், அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஓர் ஆசிரியரும் பணி யாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவி கள் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைப் படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென முதல் வகுப்பு மாணவர் சஞ்சய், 2 ஆம் வகுப்பு மாணவி ரம்யா, 3 ஆம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், சந்தோஷ், மாணவி யுவராணி ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மருதமுத்து, உடனே பெற்றோர்களை வரவழைத்து, மயங்கி விழுந்த மாணவ, மாண விகளை மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக் கும்படி கூறி இருக் கிறார்.

மாணவ மாணவிகளைப் பரி சோதித்த டாக்டர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுமில்லை அவர்கள் நலமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர். இதற்கிடையே பள்ளியில் இருந்த மற்ற மாணவர் களில், அரவிந்த், தமிழ்ச் செல்வன், தமிழ்மணி, அருண், கவுதம் ஆகியோ ரும் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். உடனே ஆசிரி யர்கள், அந்த குழந்தைகளையும் அவர் களின் பெற்றோரிடம் ஒப் படைத்து சிகிச்சை அளிக்கச் சொல்லி இருக் கின்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் மருதமுத்து கூறும்போது, ''வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் சென்ற 1 மணி நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்கள். இதனால், அவர்களை மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால், பள்ளியில் பேய் நடமாடுவதாக தற்போது புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள்" என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98119.html#ixzz3UpgP3Gmx

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சம்பிரதாயம்

ஒரு முறை அர்ச் சனை செய்தாலே தேங் காய் பிரசாதமாகி விடும். இதை நிர்மால்யம் என் பர். மீண்டும் அந்தத் தேங்காயைப் பயன் படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது. ஓர் ஆன்மீக இதழ்

ஏன் படைத்தால் என்ன? எப்படியும் சுவாமி சாப்பிடப் போவதில்லை. அதில் என்ன சம்பிரதாயம்?

Read more: http://viduthalai.in/e-paper/98120.html#ixzz3UpgYTcmD

தமிழ் ஓவியா said...

காந்தி படுகொலைக்கு மூளையாக இருந்த
சவார்க்கர்தான் தேசத் தந்தையாம்!

காந்தியார் ஆங்கிலேயரின் ஏஜெண்டாம்!

பா.ஜ.க.வைச் சேர்ந்த சாத்விபிராச்சி கீழ்த்தரப் பேச்சு

கபூர்தலா(உபி) மார்ச் 19 வீர் சவார்க்கரின் தியாகத் தால் தான் சுதந்திரம் கிடைத்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி கூறியுள்ளார். விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50ஆம் ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வொரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள் ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாயிரஜ் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறிய தாவது: இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட்டமா கும், இந்த போராட்டத் தின் விளைவை ஆங்கி லேயருக்கு உளவுபார்த்து கூற இங்கே பலர் இருந் தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங் கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்றுவேலை அன்றைய காலகட்டத் தில் ஆங்கிலேயர் நடத் திய ஊடகங்கள் காந் தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட் டியது, காந்தியின் ஆங் கிலேய பாசத்திற்கு வெள் ளைக்காரர்கள் கொடுத்த சன்மானமாகும்,அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ ஒரு புகழ்மிக்க தலை வரைப் போல் பார்க்கப் படுகிறார். உண்மையில் அவர் புகழ்மிக்க தலைவ ராவதற்கு தகுதியற்றவர்.

இந்து மக்களின் அடிமைத்தளைகளை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவார்க்கர். அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப் படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத் தந்தையாக பார்க்க வேண் டும் என்று கூறினார். அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பிற மதத் தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும். அவர் களுக்கு சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்ச லிருந்தால் இந்த மேடை யிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ் லாமிய நடிகர்களின் திரைப்படங்களைப் புறக்கணியுங்கள் என்று நான் சொன்னது நன்மைக் காகத்தான். அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சை விதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப் பட நடிகர்களிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது பாகிஸ்தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பி யுள்ளார்.

பசுவதையைத் தடை செய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச் சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத்தர விட்டார். அதனால் அவ ரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனைவரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங்குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல் லாம் வெறும் கட்டடங்கள் மட்டுமே என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98118.html#ixzz3Upgn20Et

தமிழ் ஓவியா said...


மாட்டாரா?
காந்தியாரைப் பற்றித் தவறுகள் பேசியதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூமீது தமிழருவி வழக்குத் தொடுத்துள்ளாராம்.
அவரைவிட ஆளும் பிஜேபி பிரமுகர்கள் காந்தியாரைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுகிறார்களே - அவர்கள்மீதும் வழக்குத் தொடுக்கப் பட வேண்டாமா? பா.ஜ.க. பாசம் இன்னும் அறுபட வில்லையோ!

Read more: http://viduthalai.in/e-paper/98118.html#ixzz3UpgwVGrl

தமிழ் ஓவியா said...

எமது 38 ஆண்டுப் பணிகள் தோழர்களுக்கு நன்றி!


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வைத்த நம்பிக் கையை, கூட்டுப் பொறுப்போடு நடத்திடும் வாய்ப்பும் கடமையும் துவங்கிய நாள் என்பதை, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் ஏராளமான கழகக் குடும்பத்தினரும் நேற்று முதல் (18.3.2015) நினைவூட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். நம் கவிஞர் ஒரு கட்டுரைகூட விடுதலையில் (18.3.2015) எழுதியுள்ளார்.

என்னைப் பாராட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ளுமுன், அதற்கு முழுக் காரணமாக இருந்த, இருக்கும் எண்ணற்ற எனது கழகக் குடும்பத் தினரை அல்லவா பாராட்டி, நன்றியை நான் குவிக்க வேண்டும்!

நம் அய்யாவும், அன்னையாரும் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்திட, மானம் பாராது, நன்றியை எதிர் நோக்காது, சுயநலத்திற்கு இடம் தராது, துரோகத்தால் துவளாது, எதிர்ப்பில் ஒதுங்காது எடுத்த பணியை அவர்தம் ஆணைப்படி செய்து முடிக்கும் கடமையில் என்றும் கண்ணாக இருப்பவன் உங்களின் இந்த எளிய தோழன் - தொண்டன்.

எனக்கு எவ்வளவு மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் பணி இந்த அரும் பணி! அய்யா, அன்னையார் காலத்திற்குப்பின் விதைத்தது முளைத்தது. காத்தது கிளைத்தது, கிளைத்தது விளைச்சலாகியது! இதை கண்ணெதிரில் பார்த்து பூரிப்பும் மகிழ்ச்சியும் பெறுவதை விடப் பெரும் பேறு வேறு ஏது?

நம் நிறுவனங்களில் பயின்று சென்று வாழ்வில் முன்னேறியுள்ளவர்களின் மகிழ்ச்சியைக் கண்டும் கேட்டும் பெறும் உற்சாகத்திற்கு ஈடு இணை உண்டா? எடுத்துக்காட்டாக, 7.3.2015 தஞ்சை வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பழைய மாணவிகள் - பெற்றோர்களாகிய குழந்தை குட்டிகளுடன் வந்து உவகைக் கூத்தாடியது போல் உற்சாகப் பொங்கலில் திளைத்த காட்சி - (எழுத்துருவில் 7ஆம் பக்கத்தில் பார்க்க) எத்தகைய மாட்சியைத் தந்தது!

நாகம்மைக் குழந்தைகள் இல்லத்தில் - ஈழத்தில் இனக் கலவரத்தில் கையில் தீக்காயம்பட்டு, அகதியாய் குடும்பத்துச் சிறுமியாய் திருச்சிக்கு வந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து முன்னேறிய நாசரம்மா என்ற பெண் மேல் நிலைக் கல்வி முடித்து, நமது தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிலும் படித்து, பட்டயம் பெற்று, பணியும் வாழ்க்கையும் பெற்ற நிலை எய்திய பின்னர் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது!

இவைகள்தான் எமது நேரிய பணியின் மூலம் கிடைத்த மதிப்பூதியம் என்று கூற வேண்டும்! எனவே, கழகமானாலும், கல்வி நிறுவனங்களா னாலும், ஏடுகள், வெளியீட்டகங்களினாலும், எல்லா இடத்திலும் உள்ள கூட்டுக் குழு மனப்பான்மை யுடன் பணியாற்றும்(Team Spirit) எல்லோருக்கும் இவ்வெற்றியில் பங்கு உண்டு

எனவே, இன்னும் நாம் உழைத்து பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று - வெற்றியடைய வீறுநடை போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய திட்டம் - ரூபாய் 30 கோடி முதல் 100 கோடி வரை செல வாகும் மிக பிரம்மாண்டத் திட்டம்! விரிந்து கொண்டே செல்கிறது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கென - தனித் தொலைக்காட்சி துவக்கும் திட்டம் - இரண்டும் நமது முக்கிய லட்சியத் திட்டங்கள்! அனைவரது ஆதரவு ஒத்துழைப்பு, நிதி சேகரிப்பு, அவை பற்றிய விளம்பரங்களைத் திட்டமிட்டு திக்கெட்டும் செய்ய வேண்டும் முனைப்போடு! திராவிடர் எழுச்சி மாநாடுகள் 150அய் நெருங்கி விட்டன!

இதுவரை நமது கொள்கைப் பிரச்சாரம் பாயாத பகுதியில்கூட, புது வெள்ளமென - பாய்ந்து, புதிய வரலாற்றை இணைக்கிறது!

உற்சாகத்தோடு களத்தில் நின்று போராடுவோம்! வெற்றி பெறுவோம்! எப்படி அறிவியல் ஒருபோதும் தோற்காதோ அதுபோலவே பெரியார் கொள்கை என்ற பகுத்தறிவியல் ஒரு நாளும் தோற்காது; துவளாது, வென்றே தீரும்!

இது உறுதி! உறுதி!

அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98123.html#ixzz3UphVRQWX

தமிழ் ஓவியா said...



தோட்டக்காரன் நான்-இந்தத் தோட்டத்தில் பூத்துக் காய்த்த சிறப்பான கனிகள் நீங்கள்! மகிழ்கிறோம் - வாழ்த்துகிறோம்

வல்லம் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய உரை


வல்லம், மார்ச் 19- இக்கல்லூரியில் படித்து நல்ல நிலையில் உயர்ந்து நிற்கும் உங்களைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் கல்லூரித் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டத்தில் ஆசிரியரின் உரை (07.03.2015) இது ஒரு மறக்க முடியாத ஒரு சிறப்பு மிகுந்த வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு அன்பு ததும்பக்கூடிய ஓர் அற்புதமான ஒரு நாள் என்று தான் நினைக்கிறேன். நாம் எல்லோருமே இந்த நாளில் நம் முடைய தலைமை விருந்தினராக இன்று அழைக்கப் பட்டுள்ள எனது ஆசிரியர் எனக்கு வந்து உலகம் பூராவும் பணியாற்றியிருக்கிறார்கள். அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா என எல்லா இடத்திலும் அவர் போய் பணியாற்றி இருக்கின்றார். அவருக்கு இப்பொழுது 87 வயது ஆகிறது. அவர் ஓய்வு பெற்ற நிலையிலும் அய்ந்து வருடம் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு போதும் என்று நிறுத்தி விட்டார். 62 வருடம் ஆசிரியராகவே பணியாற்றியுள்ளார். அவ்வளவு மிகுந்த அனுபவங்களை பெற்றுள்ள ஆசிரியர் அனந்த ராமன் அவர்கள், திருமதி வாத்தியார் அம்மா என்று நாங்கள் அன்போடு அழைக்கக் கூடிய, மேலும் உங்களுக்கு எல்லாம் அறிமுகமான தனி அதிகாரி திருமதி சுலோச்சனா அம்மை யார், ஆற்றல் மிகு முதல்வராக இருக்கக்கூடிய அருமை டாக்டர் மல்லிகா அவர்களே, இதனுடைய தாளாளர் திரு சுந்தரராஜுலு அவர்களே நம்முடைய பெருமை மிகுந்த இந்த பாலிடெக்னிக்கில் ஒரு பழைய ஆசிரியராகவும் இன் றைக்கு பல்கலைக் கழக துணைவேந்தராகவும் உயர்ந்து இருக்கக்கூடிய டாக்டர் நல்.இராமச்சந்திரன் அவர்களே, நம் முடைய அருமை பழைய மாணவர்கள் என்று சொல்லலாம் (Ex-மாதிரி ஆகிறது) அவர்கள் எப்பொழுதுமே நமது குடும்பம்தான். ஆகவே நமது கல்விக் குழுமத்தைச் சார்ந்த உறுப் பினர்கள் எனது அருமை தோழியர்கள், தோழர்கள் எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி, நான் ரொம்ப நேரம் பேச வேண்டும் என அவசியமில்லை. மாலையில் கூட பேசலாம் நீங்க பேசி நாங்க கேட்கணும் என்று தான் எனக்கு ஆசை. நாங்க பேச வேண்டிய அவசியமே இல்லை. எனக்கு நல்லா நினைவு இருக்கு, இந்த பிள்ளைகள் எல்லாம் முதன் முதலில் வந்தப்போ பெண்கள் மட்டும்தான், இப்பதான் ஆண்கள் முகத்தை எல்லாம் பார்க்கிறோம்.


தமிழ் ஓவியா said...

எனது துணைவியார் மோகனா அவர்கள் வந்து இருக் கிறார்கள். எனக்கும் அவர்களுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. நான் முதலில் பெண்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் தான் ஆண்களும் இருக்கட்டும் என்று கூறினார்கள். கடைசியாக அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். ஆனால் அப்போ பெண்கள் வந்தப்போ அவர்கள் அழகாக சொன்னார்கள். இந்த கட்டுப் பாடு அப்படிங்கிறத கேட்கும் பொழுது ரொம்ப கொஞ்சம் கண்டிப்பா இருப்பாங்க. எப்பேர்ப்பட்டவர்களாக இருந் தாலும் புதன்கிழமைதான் பார்க்கலாம் என்றால் அதற்கு விதிவிலக்கு கிடையாது. No Excemption அதே மாதிரி இங்க வந்து ஒரு List வாங்குவோம். அதில் உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும். மாமா, மச்சான் என்று யார் வந்தாலும் பார்க்க முடியாது. இந்த மாதிரி ஒரு கட்டுப்பாடு வைத்த வுடன் இந்த கட்டுப்பாடு.

தமிழ் ஓவியா said...

எடப்பாடியில் ஒரு மாணவியின் தந்தையார் கூறியது

எடப்பாடி என்ற ஊரில் ஒரு கூட்டத்திற்கு சென்று இருந் தேன். திருமணம் நடத்தி வைப்பதற்காக சென்றிருந்தேன். அங்கே ஒரு தமிழ் ஆசிரியர் புலவர் என்னிடம் வந்து திருமணம் முடிந்தவுடன் உடனடியாக சென்று விடாதீர்கள். நான் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறினார். பாலிடெக் னிக் விஷயமாக சில விஷயங்களை சொல்லணும் எனது மகள் படிக்கிறார். நீங்க அவசியம் எனக்கு கொஞ்சம் நேரத்தை ஒதுக்கணும். என் மனசுக்குள்ள பாத்திங்கன்னா, பேசுவதற்கு கூட Disturb ஆச்சு என்று கேட்டார். ஏதோ புகார் சொல்ல போறார் போல, ஏன்னா நம்ப Institution--ல் புகார் வரக் கூடாதே பெற்றோர்க்கு ஏதோ சங்கடங்கள் இருக்கப் போய்தானே அவர் தனியா சொல்லணும்னு என்று நினைத்து சரி என்று கூறி திருமணத்தை எல்லாம் நடத்தி முடித்துவிட்டு அவரை அழைத்தேன்.

அய்யா நான் வந்து என்னுடைய வேலையாக ஒருத் தரை பார்ப்பதற்காக திருச்சிக்கு சென்றேன். அப்படியே மகளை பார்த்துவிட்டு வரலாமே என்று பாலிடெக்னிக்கிற்கு சென்றேன். பழங்கள் எல்லாம் வாங்கிட்டு போனேன் அன்று செவ்வாய்க்கிழமை போனேன். அந்த வார்டன் அம்மா நீங்க புதன்கிழமைதான் பார்க்க அனுமதி உண்டு.

இன்று கண்டிப்பாக பார்க்க முடியாது. வேண்டும் என்றால் பழங்களைக் கொடுங்கள். கொடுத்து விடுகிறோம். பார்க்க விடமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். நான் அவுங்க அப்பா தான் என்று சொல்லியும் கூட பார்க்க விடவில்லை. இருக்கலாங்க புதன்கிழமைதான்னு இருக்குறப்ப நீங்க செவ்வாய்க்கிழமை பார்க்க முடியாது. ரொம்ப Emergency ஆக இருந்தால் ஒழிய மற்றபடி பார்க்க முடியாது என்று சொல்லிட்டாங்க. மேலிடத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கனும்னு சொல்லி இருக்காங்க. இதை கேட்டவுடனே நான் கோபப்படல ரொம்ப பெருமையாக இருந்தது. வீட்டை விட ரொம்ப கட்டுப்பாடாக வைத்து இருக் காங்க என்று நினைத்து பாருங்க. இந்த மாதிரி ஒரு கட்டுப்பாடு இருப்பதால், பிள்ளைகளை பற்றி, நாங்க கவலை மறந்து இருக்கின்றோம் அப்படி என்று சொன் னாங்க. பாருங்க அப்பதான் எனக்கு புரிந்தது, தவறு ஏதோ பிளான் பண்ணப்போகிறார் என்று நான் நினைத்துக் கொண் டேன். அந்தமாதிரி பிள்ளைகளை பார்த்து சொன்னாங்க. ரொம்ப தெளிவாக இந்த கட்டுப்பாடு ரொம்ப ஒழுக்கம் நம் முடைய அய்யா பிச்சை மகள் சொன்னாங்க.

தமிழ் ஓவியா said...

இது உங்கள் தாய்வீடு!

அவர்களை எனக்கு ரொம்ப தெரியும் அவர்களை நினைத்து பார்க்கும் பொழுது பிள்ளைகள் எல்லாம் மிகவும் அற்புதமாக இருக்காங்க. நீங்க அடிக்கடி இந்த மாதிரி சந்திக்கணும். அதுதான் ஒரே ஒரு விஷயம் அடிக்கடி குடும்பத்துடன் வரணும். அதுவும் குழந்தை குட்டிகளுடன் வரணும். எல்லாருமே ஏனா அந்த பிள்ளைகளுக்கு சொல்லும் பொழுது அது தான் மகிழ்ச்சி. இதுதான் நாங்க படித்தது. ஆனால் முன்பு இப்படி இல்லை. இந்த கட்டட வசதியில்லாம் அப்பொழுது இல்லை. வாத்தியார் பற்றி எல்லாம் சொல்லுங்க.

நா வந்து என்னோட பேரனுக்கு என்னுடைய ஆசிரியரை அறிமுகப்படுத்து வேன். அவனுக்கு ரொம்ப பெருமையாக இருக்கு. அதே மாதிரி ஒவ்வொருவரும் வருடா வருடம் இந்த கல்லூரிக்கு வரும் போது கட்டாயமாக நீங்க எல்லாரும் வரனும். அது மட்டும் அல்ல, நிறைய வேலைகள் நீங்க பண்ணுறீங்க. நல்ல பொழுது போக்கு நிறைய இருக்கு. ஆனால் உங்களுக்கு ஒரு ரிலாக்சேஷன் வேனும்னா தாய் வீடு இதுதான் தங்களுக்கு அப்படி இயங்குகிற அளவுக்கு நீங்க இங்க வந்து தாராளமாக எந்த நேரமும் வரலாம். எல்லாரும் சேர்ந்துதான் வரலாம். அடிக்கடி எல்லாரும் தொடர்பு கொள்ளுங்க. ஒன்றாக இருக்கும் நேரத்திற்கு வாய்ப்புகள் உருவாக்குங்க. ரொம்ப பெருமையா இருக்கு எல்லா இடத்திலும் சொல்லுவாங்க. ஒருManager இருந்தாங்க. அவர் சொல்வார் நாங்க மற்ற இடத்தில் இருந்து வர்றோம். அவுங்க சொல்லி கொடுக்கும் Instruction ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால், பெரியார் அப்படின்று வந்துட்டு பெரியார்ல அதுஎல்லாம் perfect பண்ணிருவாங்க. அதில் எதுவும் சந்தேகம் வேண்டியதில்லை. நம்ம எட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நா அய்யா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். எங்க ஆசிரியர் Alumni Association இவுங்க எல்லாம் வர்ராங்க சொல்லுறப்ப நம்மிடம் படித்தவுங்க இப்ப வந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக Ph.D..யும் வாங்கி இருக்கக்கூடிய அளவுக்கு இருக்காங்க. சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியமா இருக்கு அதான் உங்களுக்குள்ள பாருங்க நிறைய Lateral Entryக்குள்ள போயி டாக்டர் சுந்தரராஜூலு அவர்கள் என்னா சொல்லி இருக்காங்கன்னா எல்லாம் டிப்ளமோவுடன் நிறுத்தக் கூடாது. மேலும் மேலும் படிக்கனும் அப்படின்னு சொல்லு வாங்க. ஆகவே உங்க வாழ்க்கை ரொம்ப சிறப்பாக இருக்கனும். தேவை பெரியார் சிந்தனை


தமிழ் ஓவியா said...

பெரியார்ருடைய சிந்தனைகள் இருக்க, அது நமக்காக ரொம்ப எளிமையானதாக இருக்கனும், சிக்கனமாக வாழனும், நாணயமாக வாழனும், ஒழுக்கத்தோடு வாழனும், ஒழுக்கம் என்கிறது என்ன அப்படிங்குறதுக்கு விளக்கம் சொன்னாங்க ரொம்ப அடுத்தவர் எப்படி நம்மை நடத்தனும் என்று நினைக்கிறோமோ, அப்படி நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும். இப்படி இருப்பது தான் ஒழுக்கம் என்று பெரியார் கூறுகிறார். ஆகவே அப்படிப்பட்ட ஒரு நல்ல ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை உங்க வாழ்க்கையில் கடை பிடிப்பதற்கு இந்த கல்லூரி பெரியார் பாலிடெக்னிக் பயன்படுகிறது. அப்படிங்குறது நமக்கு தெரியும். அதே மாதிரி துணிச்சல் சொன்னாங்க. அதுதான் எனக்கு ரொம்ப பிடித்தது. பொருளாளர் பேசும் பொழுதும் தெரிந்தது. மற்ற எல்லாரும் சொல்லுறப்ப துணிச்சல் தான் நான் சொன்ன கருத்து எனக்கு நல்லா தெரியும். ஒவ்வொரு தடவையும் நம்ப பிள்ளைகளைப் பார்த்து பேசி இருக்கிறேன். சென்னை வரும்போதும் சொன்னேன். நம்ப பிள்ளைகள் நிமிர்ந்து தான் பார்க்கனும். அதே மாதிரி நாம் தைரியமாக வாழனும். அப்புறம் இப்ப இருபாலரும் படிக்க வந்தாச்சு, இருபாலரும் படிக்க வருவதற்கு முன்னாடி, இந்த பேருந்தில் அங்கே இருந்து வரும்பொழுது இந்த பசங்க உத்து உத்து பார்க்கிறான் அப்படின்னா உடனே ரொம்ப பயமாக இருக்கு தலையை குனிந்துட்டு வந்துறுங்க. இப்படியல்லாம் பேசியிருக்கேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதை நடைமுறையில் எப்படி செய்து கொண்டு இருக்கீங்க. அதான் இப்ப சொன்னாங்க. அதை கேட்கும் பொழுது மகிழ்வா இருக்கு. என்னா அப்படின்னா அவன் 2 நிமிடம் பார்த்தான்ன நீ 5 நிமிடம் பாரு. அப்படி உடாமல் பார்த்திங்கன்னா அவன் ஓடிப் போய்விடுவான் நிக்க மாட்டான். தலையை குனிந்து கொண்டு இருந்தால் சரிதான் போல் என்று நினைப்பார்கள்.

தோட்டக்காரன் நான்

இப்படிப்பட்ட சூழ்லையில் பெண்கள் வந்து, ஒழுக்கத் தோடு துணிவும், ஆற்றலோட, யாரு வேலை செய்வாங்க. அவுங்க சொல்லுறமாதிரி எல்லாருக்கும் ஒரே படிப்புத்தான். ஆனால் படிப்புக்கு மேல் பெரியார் நிறுவனங்களில் எது வாக இருந்தாலும், திருச்சி ஆகட்டும், பல்கலைக்கழகமா கட்டும், பாலிடெக்னிக் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும், அதில் என்ன தனித்தன்மை என்றால் ஒழுக் கமும், துணிவும் அதுதான் அச்சமும், மடமையும் இல்லாத பெண்கள், அழகிய தமிழ்நாட்டின் கண்கள் புரட்சி கவிஞர் சொன்னதை அதை நம்ப நடை முறைப்படுத்தி காட்டி இருக்கோம். எனவே தோட்டக்காரன் ஆகிய நான் இந்த தோட்டத் தில் வளர்ந்து பூத்துக் காய்த்து கனிந்த இந்த கனிகளைப் பார்க்கிறோம். இந்தக் கனிகள் ரொம்ப சிறப்பான அளவுக்கு, தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ளதாக இருப்பதாக இருக்கும் இந்த கனிகளுக்கு வாழ்த்துக்கள். நான் ரொம்ப பெருமையா சொல்லுவேன். நம்ம எங்கு பார்த்தாலும் எனக்கு பிள்ளைகள் மகள் என்பது வீட்டுக்குள்ள இருக்கிற விலாசத்தில் இல்லை. உலகம் பூரா இருக்காங்க. அதில் தான் விரிந்த குடும்பத்தை நான் வரவேற்கிறேன். பாராட்டு கிறேன். வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கை எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும். உங்கள் பேரப் பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து சேருங்கள். உங்களுக்கு இடம் ஒதுக்கீட்டு முன்னுரிமை உண்டு.

Alumni Association-க்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங் களுடைய குறிப்புகளை தவறாம கொடுங்க, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். இந்த Alumni Association-அய் ரொம்ப Powerful Association-னா இருக்கனும். அதுதான் மிக முக்கியம் என்று சொல்லி, மற்றதை மாலையில் வாய்ப்பு இருக்கும்போது சொல்லு கிறேன். உங்கள் வாழ்க்கை எல்லா வகையிலும் ஒளி மிகுந்த வாழ்க்கையாக சிறப்பாக இருக்கவும். நம்முடைய ஆண்டுவிழாவிற்கு வந்து இருக்கும் நம்முடைய தோழர்கள் அதற்குப் பிறகு நம்ம பின்னாலே வந்த தோழர்கள் ரொம்ப சிறப்பாக இருக்காங்க. நாம பயந்த மாதிரி ஆண் பிள்ளைகளை சேர்த்தால் என்னவாகுமோ என்று நினைத்தோம். பாருங்க! அதற்கு இடமே இல்லாமல் எங்களுக்கும் குடும்பத்தில் இருக்கக் கூடிய பெண்கள் தங்கைகள் எல்லோரும் இருக்காங்க என்று சொல்லி, இன்று பாலியல் குற்றங்களும் வன்முறை களும் நாட்டில் அதிகமான போது அதற்கு முற்றிலும் மாறுபட்டு ஒரு கல்லூரி இருக்கிறது என்றால் அதுதான் பெரியார் பாலிடெக்னிக், பெரியார் நிறுவனங்கள் என்று பெருமைதந்த இந்த பிள்ளைகளுக்கு நம்முடைய தோழர் களுக்கு மனமுகந்த பாராட்டுகளும், நன்றிகளையும் சொல்லி மீண்டும் மாலை சந்திப்போம். நன்றி வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.

Read more: http://viduthalai.in/page-2/98133.html#ixzz3UpiEQMUV

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டைச் சேர்ந்த நோபல்விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்து ராயல் சொசைட்டியில் தலைவரானது வரவேற்கத்தக்கது

மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸில் மூடத்தனங்களுக்கு வக்காலத்தா? இராமகிருஷ்ணன் கண்டனம்

இளைஞர்களே விஞ்ஞான மனப்பான்மை கொள்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்தில் புகழ் பெற்ற ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் வலியுறுத்திவரும் பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தி வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தில் உள்ள பிரபல ராயல் சொசைட்டியின் தலைவராக தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்ற ஒருவர், அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் திரு. வெங்கி ராமகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் தேர்வு செய்யப் பெற்றுள்ளார் என்பது மிகவும் மகிழத்தக்கது ஆகும்.

இதற்குமுன் ஆங்கிலேயர்களான அறிவியல் மேதைகள் மட்டுமே இந்த பெயர் பெற்ற ராயல் சொசைட்டியின் (ஆராய்ச்சி நிறுவனம்) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இப்போது தமிழ்நாட்டுக்காரர் (இவர் பார்ப்பனர்) ஒருவர் வந்துள்ளது ஒரு சிறப்பு வரலாறு ஆகும்.

அவர் தன் மனதில் பட்டதை அறிவியல் சிந்தனை களின் அப்பட்டமான பிரதிபலிப்பாக பளிச் என்று கூற என்றுமே தயங்கியதில்லை.

முன்பு அவருக்கு நோபல் பரிசு அறிவித்து, பெற்ற நிலையில், பலரும் அவரைப் பேட்டி கண்டபோது, அவர் மூடநம்பிக்கைகள் நம் இந்திய நாட்டில் மண்டிக் கிடப்பதைச் சாடினார்; அதோடு ஜோதிடம் என்பது ஒரு போலி விஞ்ஞானம்; அது அறிவியலோ உண்மையோ ஆகாது என்ற கருத்தினை அழுத்தத் திருத்தமாகக் கூறினார். நாமும் அதனை எடுத்துப் போட்டு, வரவேற்று எழுதியுள்ளோம்.

இப்போது அவர் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் தலைவராகி - அறிவியல் உலகத்தின் தலை சிறந்த அறிவாளி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் சாட்டையடி!

அவர் தேர்வு செய்யப்பட்டவுடன் லண்டனில் உள்ள ஹிந்து நாளேட்டின் செய்தியாளர் பார்வதிமேனன் அவர்களிடம் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அரசியலோ, அல்லது மதங்களின் லட்சியங்களோ, அறிவியலுக்குள் ஒரு போதும் வலுக்கட்டாய மாக நுழைந்து விடக் கூடாது.

மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், கலந்து கொண்டு முட்டாள்தனமான பல கருத்துக்களை, அரசியல் கட்சியின் லட்சியங்களாகக் கொண்டுள்ள சிலர் ஊற்றுவாய் மாதிரிப் பேசியுள் ளார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், இந்திய அறிவியல் மாநாட்டினை நடத்திய அந்த அமைப்பாளர் இதற்கு சரியான மறுப்புத் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனியாக இருந்துள்ளார்கள். அப்போதே ஒரு வெளிப் படையான மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு எந்த அரசாங்கத்துடனும், ஏன் இந்த (இந்திய) அர சாங்கத்துடன் கூட எந்தப் பிரச்சினையும் கிடையாது.

அரசியலும் மதக் கொள்கைகளும் அறிவியலுக் குள் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைக்கப்படுவதை எவரும் ஏற்கவே கூடாது என்று ஓங்கி மண்டையில் அடித்ததைப் போலக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, அம்மாநாட்டில் மரபு அணுக்களும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் எங்கள் இந்து புராணங்களில் எங்கள் கடவுள்களாலேயே செய்து காட்டப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானிகள் ஏதோ புதுமை போல கூறுகிறார்கள் என்று அறியாமையான கருத்தும், அறிவியல் துறை அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க.) இதுபோல கருத்துக்களைக் கூறியும், திட்டமிட்டே சில புராணக் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அறிவியலுக்கு மதச் சாயம் பூசியது மகா வெட்கக் கேடு! உலகமே கை கொட்டிச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தியது; இதைத்தான் நோபல் பரிசு பெற்று, இங்கிலாந்தில் ராயல் சொசைட்டி தலைவராக ஆகியுள்ள திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற இந்திய விஞ்ஞானியே துணிந்து கூறி இந்தப் புரட்டை உடைத்துத் தள்ளியுள்ளார்.

முதுகெலும்போடு இப்படி அப்பட்டமான உண்மை களை விஞ்ஞானிகள்தான் வெளியிட வேண்டும். இதற்குப் பிறகாவது ஹிந்துத்துவா கருத்துக்களை விஞ்ஞானத்திற் குள், ஊடுருவச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தங்கள் மரியாதையையும், மதிப்பையும் ஆட்சிப் பொறுப் பில் உள்ளோர் காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

அதைவிட வேடிக்கை இன்று எப்படிப்பட்ட காவிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்களாகி அங்கே பேசுகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு: நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி. கட்சி உறுப்பினர் பி.பி. சவுகான் என்பவர் நேற்று (19.3.2015) ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

புனித கங்கையைக் கொண்டு வந்தவர் யார்?

புனித கங்கை ஆற்றினை இந்த பூமிக்கு யார் அழைத்துக் கொண்டு வந்தது? ஏன் அவர் அதை அழைத்து வந்தார்? அப்படி அழைத்து வந்ததின்நோக்கம் என்ன? அதன் விளைவாக குளியலில் என்ன விளைவை அது ஏற்படுத்தியது? என்னே அறிவுக்கொழுந்து கேள்வி! பதிலளித்த இணையமைச்சர் சன்வார் லால் ஜாட் என்பவர் கங்கையை பகீரதன் என்ற ராஜா அழைத்து வந்தார் (மேல் உலகத்திலிருந்து) மக்களின் சேமத்திற்காக உடனே சபாநாயகரான அம்மையார் சுமித்ரா மகாஜன் (இவரும் பிஜேபிதான்) இது என்ன? இப்படி ஒரு கேள்வியா என்று குட்டி உள்ளார்!

மத்திய அரசு அலுவலகங்களில் பினாயிலுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார் - அதனால் செலவு மிச்சமாகுமாம். இப்படி மோடி தலைமையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடக்கும் பா.ஜ.க.வின் ஆட்சி யின் அலங்கோலங்களை கண்டு அவனியும் அறிவுலகமும் நாணி, நகைக்கிறதே!

இளைஞர்களே, திருந்துவீர்!

இணையத்தினையே பார்த்து ஏமாந்து, வளர்ச்சி மாயையில், மயக்கத்தில் மோடிக்கு - மாற்றத்திற்கென வாக்களித்து குளிக்கப் போய் சேற்றை வாரி பூசிக் கொண்ட இளைஞர் உலகமே!

இனியாவது, இத்தகைய காட்சிகள், நிகழ்வுகள், விமர்சனங்களைக் கேட்டு, கண்ட பிறகாவது, பகுத்தறிவோடு, விஞ்ஞான மனப்பான்மையோடு விழித்து எழக் கூடாதா?

எவ்வளவு பெரிய தேசிய அவமானத்தை நம் நாடு சந்தித்துக் கொண்டுள்ளது என்பதை இனியாவது உணர்ந்து தக்க பரிகாரங்களைத் தேடுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98163.html#ixzz3Uw62fDJc

தமிழ் ஓவியா said...

பஞ்சகவ்யப் பிரசாதமும் அறிமுகப்படுத்தப்படுமோ!

மத்திய அரசு அலுவலகங்களில் இனிமேல் மாட்டு மூத்திரம் (கோமியம்) தானாம் பாஜக அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 20_ நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங் களில் மாட்டு மூத்திரத் தைப் பயன்படுத்த வேண்டும் என்று பாஜக தலைமையில் ஆன அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந் தியின் அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங் களில் தூய்மைப் பணி களுக்கு பினாயில் மற்றும் இதர வேதிப்பொரு ளுக்குப் பதிலாக பசு மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்தவேண்டும், பசுமாட்டு மூத்திரத்தில் கிருமிநாசினி உள்ளதால் இவற்றை காலங்காலமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பசுமாட்டு மூத்திரத் தில் உள்ள மருத்துவக் குணத்தைக் கருத்தில் கொண்டு பசுக்களை காப்பாற்றும் நோக்கில் மாட்டு மூத்திரத்தை அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தவேண்டும். முக்கியமாக பினாயில் மற்றும் திரவ வேதிப் பொருளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவது மேலா னது என அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரி கையாளர்களிடம் பேசிய மேனகா காந்தி கூறிய தாவது: முதலில் டில்லி யில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பினா யிலுக்கு பதிலாக பசுவின் மூத்திரத்தைப் பயன்படுத் தினால் பசுக்களும் பாதிக் கப்படாமல் காப்பாற்றப் படும். பசுக்கள் எப்போ துமே மதிப்புக்குரியவை ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடைய எண்ணற்ற துணை அமைப்புகள் நாடு முழுவதும் மதவெறி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பசு மாட்டின் கோமியத்தை அரசு அலுவலகங்களில் சுத்தம் செய்வதற்கு பயன் படுத்துவது என முடிவு செய்ய உள்ளது. ஆர் எஸ்எஸ் அமைப்பான புனித பசு நிறுவனம் இந்த நோக்கத்திற்காக பசுவைக் காப்போம்; தேசத்திற்கு சேவை செய்வோம் என்ற முழக்கத்தை நாடு முழு வதும் அறிமுகப்படுத்த உள்ளது.

டில்லியில் மட்டும் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்த ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிற தாம். பசு கோமியத்தை பயன்படுத்தினால் அர சுக்கு செலவு மிச்சமாகும் என்றும் அறிக்கை விட் டுள்ளது. இதற்கிடையே பாஜக அரசின் இந்த நடவடிக்கை சுகாதா ரத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நாடு செல்லும் போக்கைப் பார்த்தால் ஊழியர்களுக்குத் தேநீர் வழங்குவதற்குப் பதிலாக பஞ்கவ்யம் (மாட்டு மூத் திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) வழங்கப் பட்டாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98164.html#ixzz3Uw6lh6e3

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு!

தமிழ்நாட்டில் நீதிபதி தாக்கப்படுகிறார் என்றால் மத்திய பிரதேசத்தில் அமைச்சரிடமே மிரட்டிக் கொள்ளை அடித்துள்ளனராம்! இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடோ!

கஞ்சர்களா?

பிஜேபியைச் சேர்ந்த மத்திய கேபினட் அமைச்சர்கள் 27 பேர்களில் 11 அமைச்சர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதுவரை ஒரு பைசாகூட செலவழிக்கவில்லையாம்!

மக்கள் நலத்தை அரசு நலன் (பணத்தை மிச்சப்படுத்தி விட்டார்கள் அல்லவா) தான் இவர்கள் குறிக்கோளோ! சரியான கஞ்சர்களப்பா!

கடும் எச்சரிக்கை!

சமூக வலை தளங்களில் பெண்களின்படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் - 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று காவல்துறை எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/98172.html#ixzz3Uw6wMwRk

தமிழ் ஓவியா said...

இந்த ஏழிசை கேட்டு உயர்வோம்!

அமெரிக்காவில், இலியனாய் மாநிலத்தில் (சிகாகோ உள்ள மாநிலம்) பிரபல கல்வி வள்ளல்களில் ஒருவரும், மிகச் சிறந்த கொடையாளியுமான 104 வயது வரை வாழ்ந்தவர் டாக்டர் அர்னால்ட் பெக்மென் என்பவர். கருமான் என்ற கொல்லுப் பட்டறைத் தொழிலில் மிக எளிமையாகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்.

தெளிந்த சிந்தனை, தீர்க்கமான முடிவு, கடும் உழைப்பு - இவைகளாலும் அவரது கண்டு பிடிப்புகள் மூலம் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் பெல் - ஆகியோர் வரிசையில் வைத்து மிக உயர்வான அறிவியல் தொழில் நுட்ப மேதைகளில் ஒருவராக இன்றும் கருதப்படுகிறார்!

இலியனாய் மாநிலத்தில் சிறிய விவசாயப் பண்ணை ஒன்றைத் துவக்கினார். அதில் பல கருவிகளை தனது நுண்ணறிவின் திறத்தால் கண்டுபிடித்து, உலகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்து புகழும் பொருளும் சம்பாதித்தார்!

ரசாயன அறிவியலில் பி.எச்.மீட்டர் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்திட Analytical chemistry -க்கு பெரிதும் உதவிடும் வாய்ப்பான கருவியை கண்ட றிந்து, ஏராளமான விருதுகளை அக்கண்டுபிடிப்பு களுக்காகப் பெற்றார்!

இவரது தொழில் திறமை, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளைத் தாண்டி, இவரது புகழ் நிலைத்த புகழாக வரலாற்றில் நிற்பதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம் இவர் ஒரு தலை சிறந்த கொடை வள்ளல் என்பதனால் ஆகும்!

டாக்டர் பெக்மென் அவர்களது தனித்த, படைப்பாற்றல், அறிவியல் நுண்மாண் நுழைபுலம் இவரது வாழ்வை வளப்படுத்தினால் மட்டும் போதாது: தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, குடும்பம் என்ற சின்ன கடுகு உள்ளத்தை விரட்டிவிட்டே தொல்லுலக மக்கள் எல்லாம் எம்மால் பயன்பெற்று வாழ பணி செய்வதே தனது கடன் என்று எண்ணி, 1977-இல் இவர் சுமார் 40 கோடி டாலர்களை ஒதுக்கி தனது வாழ் விணையர் மேபல் என்ற அம்மையாரும் இணைந்த அர்னால்ட் அண்ட் மேபல் பெக்மேன் பவுண்டேஷன் என்ற ஒரு பொது அறக்கட்டளைத் துவக்கினார்.

இலியனாய் பல்கலைக் கழகத்திற்கு 4 கோடி டாலர் நன்கொடை அளித்து மிக பிரம்மாண்டமான 3,13,000 ச.அடி உள்ள மாபெரும் கட்டடம் ஒன்றை கட்டிடக் கொடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி யாளர்கள் வந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறிவியல் (Inter-disciplinary research) ஆராய்ச்சி நடைபெற உதவியுள்ளார்!

ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு! (குறள் - 231)

என்ற குறளுக்கேற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது! நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதால் பெருமை வராது;

நாம் எவ்வளவு புகழ், பெருமைக்குரிய அறிவாளியாய் உயர்ந்துள்ளோம் என்பதாலும் உண்மையான சிறப்பு வராது; மாறாக, நாம் உலகத்திற்கும் சமுதாயத் தொண்டறத்திற்காகவும் எவ்வளவு உதவினோம் என்பதைப் பொறுத்ததே நிலைத்த புகழும் பெருமையும்!
அத்தகைய மாமனிதர்தம் வாழ்க்கையில் அவர் கையாண்டு உயர்ந்தமைக்குக் காரணமாக அமைந் தவை அவரால் கூறப்பட்ட ஏழு விதிகள்!

நம்மைப் பொறுத்தவரை நமக்கு அவை ஏழிசைகளாகவே இன்பத்தைப் பாய்ச்சுகின்றன!

பெக்மேன் அவர்கள் கூறுகிறார்:

1. எந்தக் கால கட்டத்திலும் நேர்மையையே(integrity) கடைப்பிடித்து ஒழுகுதல்.

2. எந்தப் பணியை எடுத்துக் கொண்டு செய்தா லும், அரை மனதோடு அதில் ஈடுபடாமல், முழு விருப்பத்தோடு செய்யவே பழக வேண்டும்.

எதில் முழுதாய் ஈடுபட முடியாதோ அதை ஏற்காமல் வெளியேறிட வேண்டும்.

விருப்பத்துடன் உள்ளே அல்லது விருப்ப மில்லா விட்டால் வெளியே என்பதே தம் கொள்கையாக இருக்க வேண்டும்.

3. பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதையும் செய்யாமல் இருப்பது முக்கியம்.

4. எந்தக் காரியத்தைச் செய்தாலும் பின்னால் அதனால் பிறகு அவமானம் ஏற்படக் கூடிய எதனையும் செய்ய முனையவே கூடாது.

5. எதையும் மிக நேர்த்தியுடன் (Excellence) (மற்றவர் மிக மிக விரும்புவதே நேர்த்தி) அதற்கு வேறு மாற்று கிடையவே கிடையாது!

6. எதிலும் தன்னடக்கமும் நிதானமும் கடைப் பிடித்தல் மிக நன்று.
(சிற்சில நேரங்களில் இது சற்று கூடுதல் ஆனாலும் பரவாயில்லை)

7. உங்களை நீங்கள் எப்போதும் பெரிய ஆளாக எண்ணி இறுமாறாதீர்கள்!

இப்படி இந்த ஏழு இசைகளை இசைத்த இந்தப் பெருமகனாரின் படத்துடன் அக்கட்டடத்தில் அவரது வாழ்வு : பிறப்பு: 10.4.1900 மறைவு: 18.5.2004 என்று செதுக்கப்பட்டுள்ளது.

இவைகளை நாமும் பின்பற்றலாமே!

(சிகாகோவிலிருந்து இதை அனுப்பிய திருமதி அருள்பாலுவுக்கு என் நன்றி!)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98184.html#ixzz3Uw7LlgY4

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம் >>>

திருச்செந்தூர் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு ஒரு வரலாற்றுத் திருப்பம்

திருச்செந்தூர்... சற்று நின்று திரும்பிப் பார்த்தால் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று யோசிக்க வைக்கும் இடம்! காரணம், இங்கே வருகின்ற பக்தர்களின் கூட்டத்தில் ஒருவராவது நாகரிகச் சிந்தனை உடையவரா என்பது தெரியாததுதான், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே காட்டுமிராண்டிக் காலத்தை நினைவூட்டும் வகையில் பக்தர்கள் நடந்து கொள்கின்றார்கள். இந்த ஊரிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் தங்கும் வசதி பிற ஊர்களில் இல்லாத அளவுக்கு உள்ளது. உணவுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு திருமண மண்டபமாகச் சுற்றிக் கொண்டிருந்தால் முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை இலவசமாக உணவு கிடைக்கும். இதனால் குற்றவாளிகளின் புகலிடம் இந்தக் கோயில் எனலாம்.

சனாதன இந்து மதத்தின் உறைவிடம் திருச்செந்தூர். இங்கேயுள்ள மக்கள், கடவுள் என்று நம்புகின்ற சுப்பிரமணிய சாமியை விட அதிக சக்தி படைத்தவன் பார்ப்பனன் தான் என்று உறுதியாக நம்புகின்றனர். அதனால் பார்ப்பனர்களை வைத்து பல வழிபாடுகளை தங்கள் வீடுகளில் நடத்து கின்றனர். இதனால் பார்ப்பனர்களின் வீடுகளில் பணம் கரைபுரண்டோடுகின்றது.

இங்கே சில நாத்திக அமைப்புகள் ஓரிரு நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும், பார்ப் பனர்கள் கலங்கவில்லை. காரணம், அவற் றால் தங்களை வீழ்த்த முடியாது என்பது தான். அவர்கள் அஞ்சுகின்ற ஒரே எதிரி தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் தலைவரான நமது தமிழர் தலைவர் அவர்கள் தான்.

திருச்செந்தூர் பார்ப்பனர்களின் 19 ஆம் நூற்றாண்டு எதிரி முத்துக்குட்டி (வைகுண்ட சுவாமிகள்) 20 ஆம் நூற்றாண்டு எதிரி தந்தை பெரியார்; இன்று நமது தமிழர் தலைவர் அவர்கள்.

19 ஆம் நூற்றாண்டு மத்தியில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த முத்துக்குட்டியை கடலில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றவர்கள் பார்ப்பனர்கள்தான். அவரை அதிலிருந்து காப்பாற்றியவர்கள் சில முற் போக்கு சிந்தனை கொண்ட துறவிகள்தான்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழர் தலைவர் அவர்கள் திருச்செந்தூர் வந்த பொழுது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

எனவே மாநாட்டு நாளான மார்ச் 12 அன்று காவல் துணைக்கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் தூத்துக்குடியி லிருந்து திருச்செந்தூர்வரை தமிழர் தலைவருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கிய துடன், மாநாட்டுக்கும் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழர் தலைவரின் எழுச்சி மிகு உரையால் திருச்செந்தூரில் சனாதன இந்துமதம் ஆட்டம் கண்டு விட்டது. உங்கள் தலைவரையும் தெரியும், தலைவரின் மகனையும் தெரியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர்கள் இன்று மலைத்துப்போய் நிற்கின்றார்கள்.

திருச்செந்தூர் வட்டார மாநாடு மிகப்பெரிய வரலாற்றுத்திருப்பத்தை உருவாக்கப் போவது உறுதி.

மாநாடு நடைபெற்ற மறுநாள் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்த போது அவர் கூறினார். யாருமே இதுவரை இப்படிப் பாராட்டியது இல்லை.

யார் நல்லது செய்தாலும் பாராட்ட வேண்டும். இதை தந்தை பெரியாரின் வரலாற்றிலிருந்தும் எங்கள் தலைவரிடமி ருந்தும் கற்றுக் கொண்டோம் என்றேன்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/98188.html#ixzz3Uw7WXh9E

தமிழ் ஓவியா said...

ஒரு சமயவாதி பேசுகிறார்!

மக்களுள் கடவுளை வணங்குபவரை நான்கு வகுப்பினராக பிரிக்கலாம். முதல் வகுப்பினர் கடவுள் ஒருவர்தான் போற்றுதலுக்கு உரியவர் என்ற ஞானத்தைப் பெற்றவர். இரண்டாவது வகுப்பினர் மெய்ப் பொருளைப் பற்றி உள்ளவாறு தெரிந்து விரும்புபவர். இவ்விரு வகுப்பினர்களை உலகில் எளிதிற் காணமுடியாது.

அரிதாக யாரோ சிலர்தான் இருக்கின்றனர். மூன்றாவது வகுப்பினர் பொருள் வேண்டுமென்று ஆசைப்படுபவர். நான்காவது வகுப்பினர் தாங்கள் படும் கஷ்டத்தினின்று தப்பித்து கொள்ள முயலுபவர். பின் சொல்லிய இரு வகுப்பினரும் செய்யும் பூஜையை காமிய பூஜை எனலாம். இது பிரதிபலனைக் கோரிச் செய்யும் வழிபாடாம்.

கடவுளோடு இவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இவர்கள் வேண்டுவதை வருவித்தும் வேண்டாததை விலக்கியும் அவர்கள் செய்து வைத்தால் அதற்குக் கைமாறாக அவருக்கு (கடவுளாக) ஏதேனும் செலுத்து வதாகப் பிரதிக்கினை பண்ணுகின்றனர்.

போதிய அளவு விவேகம் பெறாதிருக்கும் பாமரர் இவ்வாறு கோரிக்கை செய்வதில் குற்றம் ஒன்றும் இல்லையென்றே சொல்லலாம். கடவுளது இயல்பைப்பற்றி அன்னவர் ஆழ்ந்து ஒன்றும் அறிந்திலர்.

ஒருவரது உதவியை நாடினால் அவருக்கு பிரதியுபகாரம் ஏதாவது செய்வது முறையென்று அவர்கள் கருதுகின்றனர். தாங்கள் நாடுகின்ற உதவி எவ் வளவுக்கெவ்வளவு பெரியதோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களும் ஈடுகொடுக்க முற்படு கின்றனர்.

உதவி வேண்டி தெய்வத்தை அணுகுவதற்கு இதுதான் உகந்த முறையென்று அவர்கள் மனப்பூர்வமாக நம்புகின்றனர். கடவுளோடு வியாபாரம் செய்வதாக அவர்கள் ஒருபோதும் எண்ணுகிறதில்லை.

பணச் செருக்குடைய மற்றொரு கூட்டத்தார் உளர். அவர்களிற் பெரும்பாலர் வியாபாரிகள். ஆதலால் அவர்கள் தங்களுடைய மனப்பான்மையைக் கடவுள்மீது சுமத்தி அவருடன் வர்த்தகம் செய்கின்றனர். லஞ்சம் கொடுத்துக் கடவுளைக் கைவசப்படுத்த முயலுகின்றனர் என்றே சொல்லலாம்.

ஏனென்றால் அவர்கள் அடாத முறையில் பணம் சம்பாதிக்க முற்படுகின்றனர். அதற்குப் பரிகாரமாகத் தங்கள் ஊதியத்தின் ஒரு சிறுபகுதியைக் கடவுளுக்கு காணிக்கை செலுத்தி விடுவதாகக் கோரிக்கை செய்து கொள்கின்றனர். இவ்விதத்தில்தான் ஏராளமான திரவியங்கள் திருப்பதியிலும் ஏனைய ஸ்தலங்களிலும் நாள்தோறும் வந்து குவிகின்றன.

இதை ஒரு முழு மோசமான மூடநம்பிக்கையென்றும் மூட பழக்கவழக்கம் என்றும் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதற்கு அடிப்படையாக உள்ள எண்ணம் போற்றத்தக்கதன்று. அது கபடமும் வஞ்சகமும் நிறைந்துள்ளது. பணம் செலுத்திக் கடவுளைச் சரிப்படுத்தி விடலாம் என்றும் புண்ணியத்தை விலைக்கு வாங்கிவிடலாம் என்றும் எண்ணுபவர் ஒருநாளும் மன நேர்மையடையார்.

இவர்கள் செலவிடும் திரவியம் வீணாய்ப் போகின்றது. அது சமய வளர்ச்சி, கல்வி, சமுதாய முன்னேற்றம் முதலியவை களுக்குப் பயன்படுமாகில் நாம் பெரிதும் திருப்தியடையலாம். ஆனால் அதற்குப் பதிலாக ஆலயங்கள் பிணக்கையும் வறுமையையும் அதிகரிக்கச் செய்து வருகின்றன. பிடுங்கும் சுபாவம் கடவுளிடத்தில் என்றைக்கும் இல்லை.

கடவுளின் பெயரால் ஆலயங்களை நடத்துபவர் தங்களது மேலான பொறுப்பை மறந்துவிட்டு, பிடுங்கும் சுபாவமுடைய கீழ்மையை இந்நாளில் அடைந்திருக்கின்றனர். இவ்வாறு கடவுளின் பெயரால் ஒழுக்கத்தை இழப்பதையும் திரவியத்தை விரயம் செய்வதையும் கண்டிக்கத்தக்க மூடப்பழக்க வழக்கங்கள் என்போம்.

(பக்கம் 229), சிறீராமகிருஷ்ண விஜயம், 1935, சுவாமி சித்பவானந்தர்)

Read more: http://viduthalai.in/page-7/98187.html#ixzz3Uw9Z7gbh

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்!

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

..........

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.

..........

போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர் களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூ சியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

..........

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள்களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!

..........

என்னைப் பொறுத்தமட்டில் நான் நினைக்கிறேன், மனிதத் தன்மையை அடியோடு ஒழித்து விட்ட ஆஸ்திகர்களை விட, மனிதத் தன்மையைப் பத்திரமாகப் பாதுகாக்கும் நாஸ்திகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/98183.html#ixzz3Uw9k7t9g

தமிழ் ஓவியா said...

விதியைப் பற்றி...

மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே. மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியி னின்று விடுதலை அடைகிறான்.

மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெ றும் பிரமை என்று நிரூபிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது. பல மற்றவர்கள், பாதகர்கள் - இவர் களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள். - எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/98183.html#ixzz3Uw9rpvSw

தமிழ் ஓவியா said...

சொர்க்கமா - நரகமா?

தன்னை எதிர்த்து பார்லி மென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடை யில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப்படுத்த வேண்டும் என எண்ணினார்.

லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார். நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன் னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3Uw9zGwDX

தமிழ் ஓவியா said...

என்னை அழைக்கின்ற கோவிலின் சாமி
எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி

தன்னை விளக்கிடுமோ இதை யோசிப்பீர்
சமூக நிலை புரியும்.

என்னை அளித்தவர் ஓர் கடவுள் மற்றும்
ஏழையர்க்கோர் கடவுள் - எனில்

முன்னம் இரண்டையும் சேர்த்துருக்குங்கள் முளைக்கும் பொதுக் கடவுள்.

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3UwA72nzs

தமிழ் ஓவியா said...

தரித்திரம் ஏன்?

சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத் திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனி செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்கு பார்த்தால், மனிதனின் மொத்த வரும்படி யில், ஒரு குறிப்பிட்ட பாகம் வீணா வதைக் காணலாம்.

மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும் பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலியவை களால் ஏற்பட்ட கடனின் பேரிலே வாழ்க் கையைத் தொடர வேண்டியிருக்கிறது.

இவை எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது

- தந்தை பெரியார் (27.12.1930 களக்காட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3UwAEYTmJ

தமிழ் ஓவியா said...

குஜராத் பகுத்தறிவாளர் மறைவு

சூரத், மார்ச் 20_ சிறந்த பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் மனித நேயர் பேரா சிரியர் ராமன் பதக், குஜராத் மாநிலம், பர் தோலி நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் (92 வயது) மறைந்தார்.

குஜராத்தி மொழி யில் மிகவும் புலமை பெற்ற பதக், குஜராத்தி மொழியில் ராமன்_பிராமன், ஆன்சு அந்த்ராதர், ஆக்ரோஷ், பட்கர், பிராதிகார், பிரகோப் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

நீண்ட காலமாக செய்தித்தாள்களில் சிறந்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந் துள்ளார். அவர் கட்டுரைகளில் மதமூடநம்பிக்கை களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் எழுதிய ராமன்_பிராமன் நாவல் முழு மையான பகுத்தறிவுச் சிந்தனையோடு அமைந் துள்ளதாகும். தவிர்க்கப்பட வேண்டிய மத பழைமைவாதங்கள் மற்றும் அதன் கேடுகளுக்கு எதிராக ஏராளமான கருத்துகள் அதில் அடங்கியுள்ளன.

சூரத் பகுத்தறிவாளர் அமைப்பில், பாபு தேசாய் மற்றும் பேராசிரியர் பிஏபாரிக் ஆகி யோருடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். ராமன் பதக், பஞ்சமால் மாவட் டத்தின் மலைப்பகுதியில் உள்ள ராஜ்காட் கிராமத்தில் 22.7.1922 அன்று பிறந்தார்.

ராமன் பதக்கின் மூத்த சகோதரர் குஜராத்தி மொழியில் சிறந்த கவிஞரான ஜெயந்தி பதக் ஆவார். அவருக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, அவர் இறந்த பிறகு, தமது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடையாக அளிக்கவேண்டும் என்பதை தம்முடைய இறுதி விருப்பமாகத் தெரிவித்திருந்தார்.

அவர் விருப்பப்படியே வல்சாத் பகுதி மருத்துவக் கல்லூரிக்கு அவருடைய உடல் கொடையாக வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/98199.html#ixzz3UwAapJLw

தமிழ் ஓவியா said...

அய்ரோப்பா கண்டம் மற்றும் யுரேஷிய பகுதி முழுவதும் முழுமையாகத் தெரியும் சூரிய கிரகணம் இன்று

ஓஸ்லோ மார்ச் 20- அய்ரோப்பிய நாடுகளில் 9 மணியள வில் (இந்திய நேரப்படி நண்பகல் ஒரு மணி) சூரிய கிரகணம் ஏற்படும். இந்தச் சூரியகிரகணம் மிகவும் அபூர்வமானது.

அதாவது அய்ரோப்பிய நாடுகளில் 8 மணிமுதல் நன்றாக விடியத் துவங்கும், அந்தக் காலகட்டத்தில் இந்தச் சூரிய கிரகணம் ஏற்படுவதல், தொடர்ந்து 2 மணிநேரம் அதாவது 90 முதல் 130 நிமிடம் வரை இந்தச் சூரிய கிரகணம் நிலைத்து நிற்கும். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டுதான் இறுதியாக நடந்துள்ளது. 16 ஆண்டுகள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது.

இங்கிலாந்தில் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம். ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நார்வே ஸ்வீடன் மற்றும் கிழக்கு ரஷ்யப்பகுதிகள் முழுவதும் சூரியன் மறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில்தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வருவது ஆகும். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்க நாட்டையும் பின் தள்ளி ஜெர்மனி உலக அளவில் முன்னணியில் உள்ளது.

ஒரு மணிநேரம் ஏற்படும் இந்தச் சூரிய கிரகணத்தால் சூரிய மின்சார உற்பத்தியில் 2.7 சதவிகித அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என்று இது குறித்து சூரிய மின் உற்பத்தியை ஆய்வு செய்து வரும் வல்லுனர் பாரி பிஸ்சர் கூறியுள்ளார்.

இதனால் சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள மின் நிலையங்கள் அவசரத் திட்டங்களை வகுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இயற்கை வாயுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை உடனடியாக தொடங்குவது, மின் மிகையுள்ள மற்ற பகுதிகளிலிருந்து மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மின் நிலையங்கள் தீவிரப்படுத்தும்.

எனவே, அன்றைய தினத்தில் கிரகணத்தின்போது மின் உற்பத்தி குறைந்தாலும், சூரிய கிரகணம் முடிந்தவுடன் வழக்கமான மின் உற்பத்தியை விட, 3.5 சதவிகிதம் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

சூரிய கிரகணம் என்றதுமே கோவில்களில் நடை சாத்தும் இந்துத்துவாவாதிகள் வெளிச்சத்திற்கு வருவார்களா?

Read more: http://viduthalai.in/page-8/98206.html#ixzz3UwBH7XkZ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மஞ்சள் நீர்

கடை திறக்கும்போது வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது எல்லாம் பிற் காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட் சுமிக்கு விருப்பமான மஞ்சளைக் கால்படும் விதமாக கீழே தெளிப்பது தவறு என்கிறது ஓர் ஆன் மிக இதழ்.

ஒருவர் சரி என்பது இன்னொருவர் தவறு என்பார். இதெல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம். பூமிகூட பூமாதேவிதான் அதில் என்னென்னவெல் லமோ நடக்கிறதே!

Read more: http://viduthalai.in/e-paper/98240.html#ixzz3V1UqoPw2

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சதி


பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/e-paper/98252.html#ixzz3V1VSThdI

தமிழ் ஓவியா said...

பெசண்டம்மையாரின் முடிவு

தோழர் அன்னிபெசண்டம்மையார் 20.09.1933 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண் மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் ஆகும்.

பெண்கள் பாவஜென்மம் என்றும், பேதமையென்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக் குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந் துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்க வென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்.

தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவி யாவார் பாதிரிகளின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம்இல்லை என்று பிரச்சாரம் செய்யும்படி செய்தது பிறகு புருஷனைவிட்டு பிரிந்தார். பிறகு கர்ப்பத் தடையை யாவருக்கும் பிரச்சாரம் செய்துவந்தார் கர்ப்பத்தடையை சட்டசம்பந்த மாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரமும் செய்தார்.

பின்னர் தனது 32ஆம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் வந்து அச்சபையின் உலக தலைவரானார். பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரச்சாரம் என்னும் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தார்.

இதனால் சென்னையில் உள்ள விபூதி பூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். அய்க்கோர்ட்டு ஜட்ஜ்கள் உள்பட அநேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும் ஒரளவு செல்வாக்குப் பெற்று. விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார்.


தமிழ் ஓவியா said...

இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரச்சாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.

காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் அய்யங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார்.

இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச் சாரியாராகிய அய்யங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியா மலேயே போய்விட்டது.

இந்தக் காரணத்தால் சென்னை அய்யங்கார்கள் அரசியலில் மிதவாதிகள் ஆகி தோழர்கள் சி.எஸ். கஸ்தூரிரங்கய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபா லாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள்,

இதற்கு பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜீலு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும் பயன்படுத்திக் கொண்டு, அம்மையாரை எதிர்த்து அம்மை யாருக்கு பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்கு சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தியாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.

இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனா கவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின்மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவு கடந்த உதவி செய்து கொண்டே வந்தார்.

தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப் பட்டவர்கள் ஆவார்கள், அம்மையாரின் அபார சத்தியை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன், தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும்,

உலகமத (போப்) குருவேலை யை உபவேலை யாகவும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமாவார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86ஆவது வயதில் முடிவெய்தியதுபற்றி யாரும் வருந்த வேண்டியதே இல்லை.

ஏனெனில் இனி தன்னால் யாதொரு காரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியதுதான் நல்லறிவின் குறிப்பாகும்.

ஆகவே அம்மையாரைத் தாயைப்போலவும் குருவைப் போலவும் தெய்வத்தைப் போலவும் கருதி அம்மையாரைப் போற்றிவந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனித ஜீவ இயற்கையை உணர்ந்த ஞான வான்கள் ஆதலால் அப்படிப் பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.

குடிஅரசு - துணை தலையங்கம் - 24.09.1933

Read more: http://viduthalai.in/page-4/98290.html#ixzz3V1WpNjrX

தமிழ் ஓவியா said...

தமிழின் தனித் தன்மை

உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ். இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன.

இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந் தியது. ஆனால், அதில் உள்ள சொற் களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம்.

உதாரணம்: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத் தில் பத்து கோடி, நூறு கோடி என்று தான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.

வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)

ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. மேலும், இலங்கையில் நாடாளுமன்ற மொழியாகவும் உள்ளது.

Read more: http://viduthalai.in/page3/98223.html#ixzz3V1YNM7pD

தமிழ் ஓவியா said...

கச்சனம் - கருஞ்சட்டை வீரர் ப. ஆத்மநாதன்

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் கச்சனம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எனக்கு இப்ப எண்பத்தி ரெண்டு வயது ஆகிறது. எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் ஏழ்மையான விவசாய குடும்பம்.

எனக்கு எலெக்டிரிக்கல் வேலையில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். லைன் மேனுக்கு உதவியா போவேன். கோயில் திருவிழாவுக்கு லைட் கட் டுவேன். அப்ப கோயிலில் நடக்கும் சில தவறான செயல்களை காண முடிந்தது.

அந்த காலத்திலே எங்க அப்பா திராவிட நாடு பத்திரிகை வாங்குவார். நான் படிச்சு பல விவசயங்களை தெரிந்து கொண்டேன்.

வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை இவைகளைப்பற்றி நண்பர்களிடம் பேசுவேன். அதனால நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என அப்பகுதியிலேயே அறிமுகமானேன்.

அந்த சமயத்தில் தான் தோலி. ஆர்.எஸ். (ஆர். சுப்பிரமணி) சாந்தன் ஆகியோர் என்னை வந்து சந்திச்சு எங்க பகுதிக்கு என்னை பொறுப்பாள ராக நியமிச்சாங்க மிலிடரி வைத்திய நாதன் எனக்கு அப்போது உதவியாக இருந்தார்.

முதன் முதலாக வடபாதி மங்கலம் திருஞானசம்பந்தத்தை அழைத்து எங்க ஊரில் கூட்டம் போட்டோம். ஒரு முறை எங்க ஊரில் வைத்து இருந்த வெங்கடாசலபதி படத் துக்கு செருப்பு மாலை போட்டு விட்டேன்.

எனக்கு 33ஆவது வயதில் திருமணம் அதில் என்னானா அந்த பொண்ணு வேறு ஒரு வருக்கு நிச்சயம் செய்யப் பட்டது. ஏதோ காரணத் தால் அந்த பையன் இறந்து விட்டான். உடனே அந்த பொண்ணு ராசி இல்லாத பொண்ணு. அதான் நிச்சயம் செய்யப்பட்ட பையன் செத்துப் போயிட்டான் என செய்தியை பரப்பி விட்டார்கள். அதை அறிந்து நான் போய் அந்த பெண்ணை மணந்தேன். இன்னிக்கு வரைக்கும் நான் சாக வில்லை.

திருத்துறைப்பூண்டியில் நடந்த தீக் குண்டம் இறங்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீயில் இறங்கினேன். தஞ்சை பெரியார் சிலை திறப்பு விழா உட்பட பல வெளியூர் நிகழ்ச்சிக்கு போய் உள்ளேன். தனித் தமிழ்நாடு போராட் டம் சட்ட எரிப்பு போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். நான் சிறுவன் எனக் கூறி கைது செய்யவில்லை. சிறைக்கு போகாதது வருத்தம்தான். இனி வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன்.

கச்சனத்தில் ஆர்.எஸ்., சாந்தன் கோவிந்தசாமி, வைத்தியநாதன் மற்றவர்களோடு சேர்ந்து ஜாதி ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஆப்பரக்குடி மீனாட்சி தியேட்டரில் நடத்தினோம். அந்த மாநாட்டில் அய்யா, ஆசிரியர், பாலதண்டாயுதம், எஸ்.எஸ். பாஷா, யாதுப், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் தலைமையில் அம்பகரத் தூரில் கோயிலில் எருமை மாடு வெட் டுவதைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடந்தது. அதிலும் கலந்து கொண்டேன். நம்ம போராட்டத்துக்கு பின் அங்கே கிடா வெட்டுவது தடை செய்யப் பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அய்யாவுடன் சேர்ந்து சில நாட்கள் வேனில் பிரச்சாரத்திற்கு சென்றது வாழ்வில் மறக்க முடியாத வாய்ப்பு
எனது மூத்த மகளுக்கு அய்யா அறிவுக்கண்ணு என்று பெயர் வைத் தார். மயிலாடுதுறையில் அய்யா தலை மையில் நடைபெற்ற கவிஞர் திருமணத் துக்கு போய் வந்தேன். அய்யா காலம் முதல் இன்று வரை முடிந்த வரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன்.

கடைசியா நான் கூற விரும்புவது ஆசிரியரைப் பற்றி அய்யா அவர்கள் ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆசிரியர் நம் இயக்கத் தின் ஈடில்லா சொத்து. ஓய்வு இல்லாமல் கொள்கைக்காக உழைக்கிறார். தனி மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் ஆசிரியர்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வைத் தது பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டியது.

வாழ்க பெரியார் தொடர்க ஆசிரியர் பணி

சந்திப்பு: தி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி

Read more: http://viduthalai.in/page3/98222.html#ixzz3V1YXLF78

தமிழ் ஓவியா said...

யார் தேசத் துரோகிகள்?

இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.

நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ இந்து தேசத்துக்குத் துரோகம் செய்ததாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும். நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.

வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும் அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும் நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா?

அவர்கள் ஒழித்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு நாங்களும் கையொப்பம் போடுகிறோம்.

அதற்குச் சக பார்ப்பனர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம்.

அதை விட்டுவிட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினை த்தால் அது முடியுமா? என்று தான் கேட்கின்றேன்.

சேலம் விக்டோரியா மார்க்கெட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு குடிஅரசு 14.06.1936

Read more: http://viduthalai.in/page2/98221.html#ixzz3V1Yv2LBR

தமிழ் ஓவியா said...

பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.

அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Read more: http://viduthalai.in/page4/98225.html#ixzz3V1ZGx0bE

தமிழ் ஓவியா said...

கரை புரளும் உற்சாகம்!

கடந்த இரண்டு மாதங்கள் போல் தமிழகம் வந்திருந்த எனக்குப் பெரும் மகிழ்ச்சி. எப்போதும் ஊரிலிருந்து திரும்பும் போது தாழ்ந்த தமிழகமே என்ற மன உளைச்சலில் தான் வருவேன். இந்த முறை கரைபுரளும் உற்சாகத்தைக் கண்டு நம்பிக்கையுடன் திரும்பியுள்ளேன் !
தமிழகம் பல்வேறு முனைகளில் தாழ்ந்து தான் உள்ளது.

தமிழினத்தின் எதிரிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக இல்லாத மீசையை முறுக்கப் பார்க்கின்றார்கள்.தமிழர்களைப் பிரிப் பதிலும், விலை கொடுத்து வாங்குவதிலும் மற்ற பல வெளியே சொல்லாத திட்டங் களை நிறைவேற்றுவதிலும் மன சாட்சி யையும், இன சாட்சியையும் பண சாட்சிக்கு விற்று விட்ட பிறப்பால் "தமிழர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் இனத் துரோகிகளை அடையாளம் கண்டு மயக்கப் பார்க்கின்றனர்.

குழப்பப் பட்டு வருவோரும், குழம்பியுள்ளோரும் தங்களை அறிந்து கொள்ளாமல் துணை போகும் படி நிற்கின்றார்கள். நெற்றியிலே பொட்டும், கையிலே கயிறும் கட்டியுள்ள பலர் நெஞ்சிலே பெரியார் இருந் தாலும், நெஞ்சிலே உள்ள பெரியார் மூளைக்குச் செல் வதைப் பல் வேறு பயத்தினாலும், மதப் பிரச்சார மயக்கத்தினாலும் மூளையில் இட்டுள்ள விலங்கை உடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தன்னுடைய தாத்தாவை " டேய் முருகா, அதை எடுத்து வா" என்று சொன்ன பார்ப்பனப் பொடியனும், அவனுடைய குழந்தைகளும் இன்று தங்களையும், தங்களது குழந்தைகளையும் " யுவர் ஹானர். சார் "என்று அழைப்பது யாரால் வந்தது என்று வெளியே சொல்லா விட்டாலும் நெஞ்சிலே உணர்ந்து தான் உள்ளனர்.

அவர்களெல்லாம் இன்று மதவாதம் படுத்தும் பாட்டையும், மதவாதிகளின் திமிர் பிடித்த நடவடிக் கைகளையும் கண் முன்னே கண்டு கலங்குகின்றார்கள். மீண்டும் பார்ப்பன ஆதிக்கம் தமிழர்களைத் தூண்டி விட்டுத் தமிழர்களே பதவி மோகத்தால் தமிழின எதிரிகள் ஆவதையும் கண் கூடாகப் பார்க்கின்றனர்!

இதையெல்லாம் எதிர்த்துப் போராட ஒரே இயக்கமாகக் கருஞ்சட்டைப் படை யினர் முன்னே அணி வகுத்துச் செல்ல அனைத்துத் தமிழர்களும் உடன் தோள் கொடுத்து நிற்கும் உற்சாகமே இன்று கரைபுரண்டு வெள்ளமாக "இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற புரட்சிக் கவிஞரின் சங்க நாதத்திற்கு வழி வகுத்துள்ளது.

பொருள் வசதியும், உடல் வசதியும் இல்லாதவர்கள் மற்றும் இளைஞரின் உற்சாகத்தைக் கண்டு மானமிகு ஆசிரியப் பெருந்தகை அறிவித்தலை ஆணையாகக் கொண்டு 80 நாட்களில் நூற்றுப் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநாடு களைத் திருச்செந்தூரிலிருந்து, சென்னை வரை என்று தினமும் நடத்தும் உற்சாகம் கரைபுரண்டு ஓடும் எழுச்சி தமிழரின் விடி வெள்ளியாகத் திகழ்கின்றது.

தன்னுடைய உடல் நலத்தைப் பணையம் வைத்து இன நலத்திற்காகப் பாடு படும் தலைவர் பய ணங்கள் ஓய்வதில்லை என்று முன் செல்ல கருஞ் சட்டைப் படையினர் உற்சாகத்துடன் வழி நடக்கின்றனர்.

செய்தித் தாள்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களுக்கே வந்துள்ள இடையூறையும் அச்சுறுத்தலையும் உணர்ந்து இனியாவது நாம் தமிழர்கள் திராவிடர்கள்' என்ற உணர்வைப் பெறட்டும்! பார்ப்பனீய அடிமைத் தனத்தை, மத வாதிகளின் மிரட்டலை ஒழிக்கக் கற்றுக் கொள்ளட்டும்!!

கரைபுரண்டு ஓடும் உற்சாகம் சங்கே முழங்கு என்று முழங்கட்டும்! நன்றி எதிர் பார்க்காத கருஞ்சட்டைப் படையினரை, அவர்களின் தொண்டு தந்தை பெரியாரின் தமிழன் மானமும், அறிவும் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற தொண்டு என்பதை ஒவ்வொருவரும் உணரட்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Read more: http://viduthalai.in/page4/98228.html#ixzz3V1Ze8SAc

தமிழ் ஓவியா said...

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு

மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.

அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.

கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.

இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.

மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.

பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.

மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page4/98230.html#ixzz3V1a999Es

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிரகதீஸ்வரர்

பிரகதீஸ்வரம் என்றால் உலகெங்கும் வியாத் திருப்பது என்று பொரு ளாம்; அப்படியென்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ருசியா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் வியா பித்துள்ளாரா? ஏற்றுக் கொள்ளத்தக்கக் கடவுளா? ஒபாமாவும் அன்றாடம் பிரகதீஸ்வரரைத்தான் வணங்குகிறாரா?

Read more: http://viduthalai.in/e-paper/98311.html#ixzz3V7A9SWXJ