Search This Blog

26.10.09

பார்ப்பனர்களை அழைத்து திருமணம் நடத்துவோர்களின் சிந்தனைக்கு...


சுயமரியாதை!

ஒவ்வொரு கிராமத்திலும் கோயில் உள்ளது. ஆனால், புரோகிதர் மகன் புரோகிதம் செய்ய வருவதில்லை. கிராமத்தில் உள்ள புரோகிதனுக்கு 500 ரூபாய் கொடுத்தால் திருமணம் செய்து வைத்துவிடுவர். புதிதாகப் புரோகிதம் செய்யப் புறப்பட்டுள்ளவர்கள் வந்தால் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். கட்அவுட் வைக்கவேண்டும் என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். இராமகோபாலன்வாள் திருவாய் திறந்து தீர்த்தம் கொடுத்துள்ளார் காஞ்சிபுரத்தில் நடந்த புரோகிதர்கள் மாநாட்டில்.

புரோகிதப் பார்ப்பனர்கள் தட்சணை வாங்கிக்கொண்டு மனிதர்களுக்கு மட்டுமா கல்யாணங்களை நடத்தி வைக்கிறார்கள்? நாய்க்கும் நாய்க்கும், கழுதைக்கும் கழுதைக்கும்கூட மந்திரங்களைச் சொல்லி நடத்தி வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

சுயமரியாதைத் திருமணம் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையல்ல. அது ஓர் இனத்தின் சுயமரியாதைப் பிரச்சினை. பார்ப்பனர் அல்லாதாருக்கு சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்குப் பூணூல் மாட்டி, தற்காலிக வருணப் பதவி உயர்வு கொடுத்து, மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை முடித்தவுடன், மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பைக் கூடையில் போடுவதன் பொருள் என்ன? பூணூலார் விளக்குவாரா?

அவர்கள் நடத்தும் கல்யாணத்தில் எந்த வகை மந்திரங்கள் சொல்லப்படுகின்றன? கீழாத்தூர் சீனிவாசாச்சாரியார் பி.ஓ.எல். என்ற பார்ப்பனரால் மொழி பெயர்க்கப்பட்டு விவாஹ சுபமுகூர்த்த போதினி என்ற பெயரால், பார்ப்பன நிறுவனமான தி லிட்டில் ஃப்ளவர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல் 22 ஆம் பக்கத்தில் அந்தக் கல்யாண மந்திரம் கூறப்பட்டுள்ளது.

ஸோம; ப்ரதமோ விவிதே

கந்தர்வ விவத உத்தர: த்ருதீயோ

அக்னிஷ்டபதி: துரீயஸ்தே

மநுஷ்ய ஜா

இதன் பொருளும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஸோமன் முதலில் இவளை (மணமகளை) அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளது

பார்ப்பனப் புரோகிதனை அழைத்து கல்யாணத்தை நடத்தச் சொன்னால், மணமகள் அதற்குமுன் மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தாள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டுமே!

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது பார்ப்பனர்களின் கலாச்சாரத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். தமிழர்களுக்குப் பொருந்துமா?

பார்ப்பனர்களை அழைத்து தமிழர்கள் கல்யாணத்தை நடத்தினால் மணமகளை விபச்சாரி என்று ஒப்புக்கொண்டதாகப் பொருள். மானம் கருதி அதனை ஒதுக்கி சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார் என்பதை ராமகோபாலனின் கூட்டம் தெரிந்துகொள்ளட்டும்!

திருமணச் செலவுகூட ஒரு குடும்பத்தின் பத்து அல்லது 15 நாள் வரும்படிக்குமேல் செல்லக்கூடாது என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும். (விடுதலை, 10.6.1970).

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

------------ மயிலாடன் அவர்கள் 26-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: