Search This Blog

21.10.09

கமலகாசனும், - அக்ரகாரவாசிகளும்

கமல் 50

50 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கால் பதித்த கமலகாசனுக்கு பிரம்மாண்டமான விழா எடுக்கப்பட்டுள்ளது. ஏடுகளிலும், இதழ்களிலும் அட்டைப்படக் கதாநாயகனாகவும் அவரே ஜொலிக்கிறார்.

குமுதத்தில் (7.10.2009) அவரின் பேட்டியும் வெளிவந்துள்ளது.

ஒரு காலத்தில் விடி யற் காலையில் குளிச்சிட்டு ஈரத் துணியோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிற வங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவுபூர்வமான வரிகள் என்னைப் புரட்டிப் போட்டுடுச்சி என்று எடுத்தவுடனேயே வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார் என்கிறது குமுதம்.

குமுதத்தில் சொன்னது இன்னும் பொருத்தம்தான். ஊரில் கிடக்கும் புராணக்-குப்பைகள், ஓட்டை உடைசல்களையெல்லாம் ஒப்பனை செய்து ஊர்வலம் விடும் ஏடாயிற்றே! நன்றாக மூக்கை வெட்டுகிற மாதிரி அதில் பேட்டி தந்துள்ளார். அதற்காகவும் ஒரு சபாஷ் போடலாம் போலத்தான் தோன்றுகிறது.

கமலகாசன் மட்டுமல்ல, மனந்திறந்து தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிப்போர் யாராக இருந்தாலும் கமலகாசன் நிலைக்கே ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை.

அய்யய்யோ அவர் சாமியில்லை என்கிறவர். அந்த நூலைத் தொடாதே, தீண்டாதே, பார்க்காதே, படிக்காதே! என்று ஆரம்பத்திலேயே அச்சக் குரல் கொடுத்து வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, அதனைத் தொட்டுப் படித்துவிட்டால், எந்தக் கொம்பனாக இருந்தாலும், அறிவுலக ஆசானின் வரிகளை வரித்துக்கொண்டுதான் தீருவார்கள்.

இவ்வார ஆனந்தவிகடனிலும் (14.10.2009) கடவுள்பற்றிய கருத்தை சற்று வித்தியாசமாகச் சொல்லுகிறார்.

நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை, இருந்தால் நல்லா இருக்குமேன்னுதான் சொல்றேன் என்கிறார். தசாவதாரத்திலும் இதையேதான் கூறுகிறார்!

கடவுள் ஒருவர் இருந்து மக்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பாரேயானால், யார்தான் வேண்டாம் _ இல்லை என்று சொல்லப் போகிறார்கள்? அப்படி ஒருவர் இல்லையே என்பதுதானே பகுத்தறிவாளர்களின் கவலை.

கடவுள் ஒருவர் இருந்து நேராக வந்துவிட்டால் கடவுள் இருக்காருன்னு சொல்லிட்டுப் போறோம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லவில்லையா?

கலை உலகின் ஜாம்பவான் ஒருவரின் வாயிலிருந்து இத்தகு கருத்துகள் வெளிவருவது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்பதே! அதேநேரத்தில் அக்ரகாரவாசிகள் இவரை எப்படியெல்லாம் உள்ளுக்குள் வறுத்துக் கொட்டுவார்கள்! ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்!

---------------- மயிலாடன் அவர்கள் 20-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை



2 comments:

Ravikumar Tirupur said...

thozha! katturai nandraga irunthathu. nandri.

வால்பையன் said...

கமல் இந்துத்துவாவாதி!

இஸ்லாமியர்கலுக்கு எதிரா படம் எடுக்குறார்ன்னு சொல்றாங்களே!

பெரியார் பேர சொன்னதால மன்னிச்சு விட்றலாங்கிறிங்களா!?