Search This Blog

16.2.15

கற்பூரம்-பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா?


கோவில் பூஜைகள்பற்றிக் கொட்டிக் கொட்டி அளப்பார்கள்; சூடம் கொளுத்துவதில் உள்ள தாத்பரியத்தை சுவை சொட்ட சொல்லுவார்கள். 

சாம்பிராணி என்றால் சாதாரணமா - அதில் உள்ள சமாச்சாரங்கள் சாதாரணமானவை யல்ல என்று சண்டமாருதம் செய்வார்கள்.

ஆனால், இந்து அறநிலை யத்துறை தெரிவித்துள்ள தகவல்களோ அவர்களின் அடிமடியில் கைவைக்கும் அவல நிலைதான்.


6.12.2014 நாளிட்ட இந்து ஏட்டில் வெளிவந்துள்ள ஒரு தகவல் என்ன கூறுகிறது?

Ban on Chmphor use in Temples to be Strictly Enforced

கோவில்களில் கற்பூர ஆராதனை கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறது என்று இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.


இப்பொழுது மட்டுமல்ல, 2001 ஆம் ஆண்டிலேயே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் இப்படி ஒரு செய்தி வெளி வந்ததுண்டு (4.8.2001).


ஆண்டவன் அருளைப் பெறவேண்டிய பக்தர்கள் கோவில்களில் கற்பூரம் கொளுத்துவது, சாம்பிராணி தூபம் காட்டுவது  சகஜம். ஆனால், காற்றோட்டமில்லாத கருவறைக்குள் சுற்றிக்கொண் டிருக்கும் இவற்றின் புகை புற்றுநோயை உண்டாக்குவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (கடவுளை நம்பிப் பயனில்லை).


சாதாரணமாக ஒரு பூட் டப்பட்ட அறையிலோ அல்லது காற்றோட்டமில்லாத வீட்டிலோ சாம்பிராணி புகை போட்டால், அது நுரையீரல் புற்றுநோயைத் தோற்றுவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகையை எந்த முறையில் பயன்படுத் தினாலும், புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக் கப்பட்டுள்ள உண்மை. புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீமையை விட நாற்பது மடங்கு அதிகமாக சாம்பிராணி கற்பூரப் புகையால் புற்றுநோய் உறுதிப்படுத்தப் படுகின்றன!


இந்த ஆய்வு தைவானில் உள்ள தேசிய சேங்குப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த தாசங்லின் என்பவரால் நடத் தப்பட்டது. அவர் பேட்டியை நியூ சைன்டிஸ்ட் என்ற ஏடு வெளியிட்ட தகவலைத்தான் இன்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு தெரிவித்தது.


இந்தச் செய்தி அப்பொழுது  வெளிவந்தபோது இந்து முன் னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் ராம.கோபாலன் என்ன கூறினார் தெரியுமா?


கற்பூரத்தில் இருந்துவரும் புகை ஒரு கிருமி நாசினி; (பெரிய விஞ்ஞானிதான்!) கற்பூரம் பல ஆயிரம் ஆண்டு காலமாக இந்துக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பூஜை முறையிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கோவில்களில் கற்பூரம் ஏற்ற பொதுமக்கள் வற்புறுத்தவேண்டும் என்று கூறினார் (ஆதாரம்: தினத் தந்தி, 3.6.2002, பக்கம் 4).


இவர் இப்படி சொன்னார் என்றால், கோவிலில் சூடம், சாம்பிராணி கொளுத்துவது தடை செய்யப்பட்டு இருப்பது குறித்து சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் என்ன சொல்லுகிறார்?


கோவில் கர்ப்பக்கிரகத்தில் ஏற்றுவதால் அர்ச்சகர்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுவதால் இந்தத் தடை ஆணையை வரவேற் பதாகக் குறிப்பிட்டுள்ளார் (தி இந்து, 6.12.2014).


இந்தப் பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா? பிழைக்கத் தெரிந்தவர்கள்!

கழுதைக்குக் கற்பூர வாசனை தெரியாவிட்டால் பரவாயில்லை; மனிதனுக்குக் கண்டிப்பாகத் தெரியவேண் டும், எச்சரிக்கை!

-------------- மயிலாடன் அவர்கள் 16-02-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

54 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

கேவலம்

செய்தி: கோவில் திருட் டைத் தடுக்கக் கோவில் களில் எச்சரிக்கை மணி பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள் ளதே!

சிந்தனை: கடவுள் சக் தியை இதைவிட வேறு எப்படிக் கேவலப்படுத்த முடியுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/96369.html#ixzz3S0kVZ1ch

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏன்? ஏன்? ஏன்?

கடவுள் ஒருவனே என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு,
படைத்தல் கடவுள் என்றும்,
காத்தல் கடவுள் என்றும்,
அழித்தல் கடவுள் என்றும்
துறை பிரித்தது ஏன்?
அவர்களுக்குள் சண்டைகளும், மோதல்களும் ஏற்பட்டது - ஏன்? ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/96377.html#ixzz3S0keEYxq

தமிழ் ஓவியா said...

அடையாளம்

மகன்: காதலர் தினம் என்பதற்கு எதிராக சில இந்து முன்னணி, சிவ சேனா அறிஞர் பெரு மக்கள்? மிக ஆர்வத் துடன் நாய்க்கும், குரங் குக்கும் இப்படி மிருக ஜீவன்களுக்குத் திரு மணம் தடபுடலாக நடத்தி, பத்திரிகையில் விளம்பரம் பெறுகிறார் களே, ஏன் அப்பா? காதலர்களை கேலி செய்யவா இம்முறை?

அப்பா: மகனே, உனக் குத் தெரியாதா? யார் யாரின் நெருங்கிய சொந்தங்களோ, அவர் கள்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களை செல வழித்து நடத்தி மகிழ்ந் திடுவார்கள்.

அதைத்தான் இந்த சொந்தங்களின் சொந் தங்கள் செய்து தங் களை உலகத்திற்கு அடை யாளம் காட்டிக் கொள் ளுகிறார்கள் மகனே! புரிந்ததா?

Read more: http://viduthalai.in/e-paper/96375.html#ixzz3S0kmN07G

தமிழ் ஓவியா said...

இலங்கையில் எல்லா இனத்தவருக்கும்

சமநீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்துகிறது

இலங்கையில் எல்லா இனத்தவர்களுக்கும் சமநீதி கிடைக்கவும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், அதிபர் மைத்ரிபால சிறி சேனா முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழக இந்திய பிரிவு வலியுறுத்தி உள்ளது.

இலங்கை அதிபர் மைத் ரிபால சிறிசேனா, 4 நாள் பயணமாக டில்லி வந்துள் ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது குறித்து சர்வதேச பெது மன்னிப்புக் கழக இந்தியப் பிரிவு (ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் இண்டியா) திட்ட இயக்குநர் ஷமீர்பாபு நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது:

இலங்கையில் சிங்கள வர்கள், தமிழர்கள் உட்பட எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழும் சூழ் நிலையை அந்நாட்டு அதி பர் சிறீசேனா ஏற்படுத்த வேண்டும். அவருக்கு இப் போது மிக அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்மூலம் எல்லோ ருக்கும் சமநீதி கிடைக்க வழி வகை செய்யவேண்டும். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சீர்திருத்தங்கள், மறுவாழ்வு திட்டங்களை செயல் படுத்தவேண்டும்.

சுதந்திரம், சம உரிமை, சுயமரியாதை ஆகியவற் றின் அடிப்படையில் மறு சீரமைப்புப் பணிகளை சிறீசேனா மேற்கொள்ள வேண்டும். அதிபர் சிறீ சேனா அறிவித்துள்ள 100 நாள் சீர்திருத்த திட்டம், மக்களிடம் அதிக நம்பிக் கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நீதித்துறை உள்பட முக்கிய துறைகள் சுதந்திர மாக செயல்படுவதற்கு அவர் எடுத்துவரும் நடவடிக்கை கள் வரவேற்கத்தக்கன. இலங் கையில் வாழும் மக்களி டம் பாரபட்சம் காட்டக் கூடாது. பேச்சு சுதந்தி ரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையில் நீதியை நிலைநாட்டவும், நம்பிக்கையை ஏற்படுத்த வும் சிறீசேனாவுக்கு எல்லா உதவிகளையும் பிரதமர் மோடி செய்யவேண்டும்.

விடுதலைப் புலிகளுட னான இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலேயே விசாரணை நடத்துவோம் என்று சிறீசேனா அறிவித் துள்ளார். அந்த விசா ரணை சுதந்திரமான, வெளிப்படையான, உண் மையான, நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். அதே சமயம் இலங்கையில் நடந்த மனித உரிமைகள் குறித்து அய்.நா. நடத்தி வரும் விசாரணைக்கு சிறீசேனா அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஷமீர் பாபு கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96372.html#ixzz3S0ktuHE6

தமிழ் ஓவியா said...

கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம்

அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற குறுகிய கால நான்கு நாள் பயணத்தில், வழக்கமாகச் சென்று புத்தங்களைப் பார்க்கும் கினோ குனியா (kinokuniya) புத்தகக் கடைக்குச் சென்று சில புத்த கங்களை வாங்கிப் படித்தேன்; மகிழ்ந் தேன்.

அதில் ஒரு புத்தகம் மகிழ்ச்சி (Happiness) என்பதாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் புதிய புத்தகங்களை வாங்குவதும், படிப்பதும், படித்ததை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுமே மகிழ்ச்சிதான்.

அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை

என்ற புரட்சிக்கவிஞரின் அறிவுரைக் கேற்ப இந்த நூல்கள் நமது மனச் சுமையைக் குறைத்து அல்லது அகற்றி ஒரு புத்துணர்ச்சியை, புத்தாக்கத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்பது உண்மை.

பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது - தனிமையில் பயணிக்கும்போது - இத்தகைய புத்தகங்களே!

ஆஸ்திரேலியாவிலும், அமெரிக் காவிலும், இங்கிலாந்திலும் வெளியிடப் பட்டு, மகிழ்ச்சிபற்றி பல்வேறு தத்துவ அறிஞர்கள் வெளியிட்ட பலதரப்பட்ட கருத்துக்களையும் ஒரு புதிய கோணத் தில் தொகுத்தளித்து ஆய்வு செய்துள்ள இந்நூல், ஒரு நல்ல தொகுப்புக் களஞ்சியம் - சிறு கைப் புத்தகம் ஆகும்.

வில் பக்கிங்காம் என்ற தத்துவ கர்த்தாவும், புதின எழுத்தாளருமான இவர் இந்த அருமையான நூலை எழுதியுள்ளார்.

உலகின் ஆதிகால கிரேக்கத் தத்துவ மேதைகள் தொடங்கி, இந்தியாவின் புத்தர், சீனத்துக் கன்ஃபூஷியஸ், ஸுவாங் சீன, மெனிக்யூயஸ் போன்ற அறிஞர் கள் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் பரிசோதனைக்குட்படுத்தி, வாழ்வில் மகிழ்ச்சியை வெறும் தத்துவமாகப் பார்க்காமல், படிக்காமல், நடைமுறைக்கு உகந்ததாக்குவதுதான் முக்கியம் என் பதை நன்கு விளக்கியுள்ளார் - இந் நூலாசிரியர் வில் பக்கிங்காம் என்ற தத்துவ சிந்தனையாளர்.

இரு வேறு அணுகுமுறைகள்பற்றிய சிறந்த ஆய்வும் சிந்தனைக்கு விருந் தாக அமைந்துள்ளன.

1. வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தான் பொது விதி. துன்பம் என்பது இடையில் ஏற்படுவது, அதை ஏற்கும் பக்குவம் இன்றியமையாதது - அது விதிவிலக்கு.

மற்றொன்று 2. துன்பம்தான் நம் வாழ்க்கையில் பொது விதி. எப்போதாவது ஏற்படு வதால், மகிழ்ச்சி என்பதுதான் விதிவிலக்கு.

இப்படி இரு மாறுபட்ட அணுகு முறைகளும் அலசி, வாதப் பிரதிவாதங் களோடு ஜெர்மானியத் தத்துவ அறிஞர் களின் கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தக்க தரவு களாக மேற்கோள்கள் காட்டப்பட்டுள் ளன.

இன்பம் விழைதல், உயிர்களின் பொது வியற்கை; மனித குலத்தின் ஆறாவது அறிவு அவ்வின்பத்திற்கு அவ்வப்போது புதுப்புது பொருள் கண்டு, கொண்டு, சமூகத்திற்கு வழங்குவதற்குத் தயங்குவதில்லை.

உடல் இன்பத்தால் விளையும் மகிழ்ச்சியை உருவாக்கும் காரண மானதை காமம் என்று வர்ணிக் கின்றனர். சொல்லாடலில் பயன்படுத்து கின்றனர்.

வள்ளுவரின் காமத்துப் பால் என்று முப்பாலில் ஒரு முக்கிய பகுதி அது பற்றித்தானே என்று வாதாடுகின்றனர்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதில் உள்ள காமுறுவர் எதைக் குறிக்கிறது?

குறுகிய பொருள் அல்ல காமத்திற்கு.

கைவிடப்படாத, விட முடியாத, நினைத்து நினைத்து மகிழ்ச்சியைப் பெருக்கத்தான் காமுறுதல் என்பதற்கு முழுப் பொருள் என்று கொள்ளலாமே!

உடலுக்கும், உள்ளத்திற்கும் இரண்டுக்கும் மகிழ்ச்சி - உள்ளத்தில் ஊறிய உணர்ச்சிக்கு உடலின் வடிவம் ஏற்படுவதுதானே காமம்?

இப்படி மகிழ்ச்சியை 2500 ஆண்டு களுக்குமுன்பே தோன்றிய தத்துவ ஞானிகளின் பட்டியலில் திரு வள்ளுவரையும் இணைக்கவேண்டும்.

மேலைநாட்டுத் தத்துவ அறிஞர் களில் ஆல்பர்ட் ஷைவட்சர்தான் இதில் பெரும் சாதனை செய்தவர். ஜி.யூ.போப் அவர்களுக்குப் பிறகு.

நம்மில் பலரும் வாய் வீச்சு, எழுத்து வியாபாரத்துடன் நிறுத்திக் கொண் டோம்.

உலக மயமாக்கியிருந்தால் வள்ளு வரும் அந்நூலில் இடம்பெற்றிருப்பாரே என்ற கவலை என்னைத் தாக்கியது!

மற்றவை நாளை!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/96380.html#ixzz3S0lUqlXL

தமிழ் ஓவியா said...

மனிதக் கொடுமை


தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது.
- (உண்மை, 15.5.1977)

Read more: http://viduthalai.in/page1/96314.html#ixzz3S0oedC7h

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் நீங்கும்.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் சி யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்சினைக்கும் இந்தக் கீரை நல்ல மருந்தாகும். மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

நீர்க்கோவை நோய் மிகச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.

கீரையையும், இளந்தண்டு களையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

கீரையைப் போலவே இதன் பழமும் சக்தி வாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங் களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page1/96342.html#ixzz3S0q1Ph74

தமிழ் ஓவியா said...

மே நரேந்திர மோடி போல்த்தா ஹூம்

எரிவாயு உருளை விசயத்தில் ஏற்கெனவே ஏகப்பட்ட தேவையற்ற அலைச்சல் உள்ள இந்த காலகட்டத்தில் எரிவாயு உருளை தேவைக்காக பதிவு செய்ய எங்கள் மடிப் பாக்கம் பகுதிக்கு தானி யங்கி சேவைக்காக இயங் குகின்ற கைப்பேசி எண் ணுக்கு தொடர்பு கொண்ட போது முன் எப்போதும் என்னுடன் தொடர்பில் இல்லாத ஒரு குரலைக் கேட்டேன். படபடப்பாக தவறுதலாக வேறு எண் ணுக்குப் போட்டு விட் டோமோ என்று மீண்டும் தானியங்கிச் சேவை எண்ணைச் சரிபார்த்தேன்.

சரியாகத் தானிருந்தது. மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டேன். திரும்பவும் அதே குரல். இப்போது தெளிவாகக் கேட்டேன். மே நரேந்திர மோடி போல்த்தா ஹீம் என்று தொடங்கி 30 வினாடிகளுக்கும் மேலாக என்னிடம் பிரதமர் ஹிந்தி யில் பேசினார். நான் புரி யாமல் கேட்டுக் கொண்டி ருந்தேன். அதன் பிறகு 24 மணி நேர தானியங்கிச் சேவை என்னை தமிழில் வரவேற்றது. அப்பாடா என்று நிம்மதியாக பெரு மூச்சு விட்டுக்கொண்டே என்னுடைய எரிவாயு உரு ளைக்கான எண்ணைப் பதிவு செய்தேன்.

- இசையின்பன், சென்னை-91

மேற்கண்ட தகவல் களை தோழர் ஒருவர் தெரிவித்துள்ளார். எரிவாயு உருளை தேவைக்காகப் பதிவு செய்யும் அலுவலகத் தில் நரேந்திர மோடி எங்கு வந்தார்? அவர்தான் இந்த நிறுவனத்தின் முதலாளியா? அப்படியென்றால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசி யமாகிறது. இந்தி பேசாத ஒரு மாநிலத்தில் இந்தியா வின் பிரதமர் ஒருவர் வாடிக்கையாளரகளுடன் வாடிக்கையாளர் செலவில் 30 வினாடிகள் பேசுகிறாராம்.

மத்தியில் உள்ள ஓர் ஆட்சி அதிகாரத்தை அலங்கோலப்படுத்தி வரு கிறது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

இன்னொரு வகையில் பார்த்தால் இந்தித் திணிப் பின் இன்னொரு வடிவம் தானே இது? இப்படியெல் லாம் இந்தியைத் திணித்து விட முடியுமா? இது எதிர் விளைவைத் தான் ஏற் படுத்தும் என்கிற அடிப் படை அறிவுகூடவில்லையே! பிஜேபி தலைமையில் உள்ள மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

வேறு எந்த மாநிலத்தில் தன் விளையாட்டைப் போட்டுக் காட்டுவதற்கும், தமிழ்நாட்டில் மொழி அகங்காரத்தின் வாலை நுழைப்பதற்கும் அடிப் படையில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

சிங்கத்தின் வாலை மிதித்துப் பார்ப்பதோ, எரிமலையின் மேல் பட்டு விரித்துப் படுப்பதோ ஆபத்தை ஆசையோடு அரவணைப்பதற்கு ஒப் பாகும். 30 வினாடி பேசினா லும் சரி 30 மணி நேரம் பேசினாலும் சரி அது யாருக்குப் புரியப் போகிறது என்கிற அடிப்படை அறிவு வேண்டாமா?

இனிய செந்தமிழ் மொழி வீழ்தல் - ஹிந்தி
எனுமொரு வடமொழி எதிர்ப்பின்றி வாழ்தல்
அநியாய மிவை யன்றோ? தமிழா! உன்
ஆண்மையும் ரோஷ மும் அழிந்ததோ தமிழா!

இது 1938ஆம் ஆண் டிலேயே தமிழ் மண்ணில் எழுந்த போர்ப் பாட்டு (பாடல் ஆசிரியர்: சித்த மல்லி அ. சிதம்பரநாத பாவலர்) மீண்டும் கிளரும் போர் -எச்சரிக்கை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/96192.html#ixzz3S0spojcN

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...

பட்டும் புத்தி வரவில்லை!


டில்லி தேர்தலில் பாஜகவின் அவமானகரமான தோல்விக்கு பாஜக அமைச்சர்கள் இந்துத்துவ கொள்கையில் மென்மையான போக்கை கடைபிடித்தது தான் முக்கிய காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பு களின் முக்கிய தலைவர்களைக் கடிந்துகொண்டாராம், நமது கொள்கையை சரியான முறையில் இந்துக்களிடம் கொண்டு சென்றிருந்தால் இந்துக்களின் ஓட்டுகள் அனைத்தும் நமக்குக் கிடைத்திருக்கும்;

ஆனால் பாஜகவும் இந்துத்துவ அமைப்புக்களும் அந்தக் காரியத்தை செய்யாமல் பேச்சோடு நின்ற காரணத்தால் தான் பாஜக தோற்றது என்று கூறியுள்ளார்.

தேர்தல் தோல்வியின் காரணத்தை விளக்க மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர்பிரசாத் வியாழன் மாலை மோகன் பகவத்தைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து மத்திய அமைச் சர்களாக ஆனவர்களும் உடனிருந்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சீதாராமன் அமைச்சர்களிடம் ஏன் அரவிந்த் கேஜரி வால் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் பிரச்சாரம் செய்யவில்லை? கேஜரிவால் மீது வார்த்தைகளால் தான் தாக்குதல் நடத்தினீர்கள்.

உறுதியான ஆதாரங்களை ஏன் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் டில்லியில் அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்தாலோசித்து ஒற்றுமையாகப் பிரச்சாரம் செய்யாதது ஏன்?. உங்களில் ஒருவருக்குக் கூடவா இந்த அவமானகரமான தோல்வி ஏற்படும் என்று தெரிய வில்லை? அப்படியே தெரிந்திருந்தும் முன்கூட்டியே தலைமைக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினாராம். சுமிருதி இராணி மீது மோகன் பகவத் மிகவும் கடுமையான கோபத்தில் இருந்தார். டில்லியை சொந்த ஊராகக் கொண்ட சுமிருதி இராணியின் தொகுதியில் பாஜக மூன்றாம் இடத்தைப் பெற்றது; இது தொடர்பாக மோகன் பகவத் கூறியபோது நீங்கள் அமைச்சாரனதும் தொண்டர்களையும் இதர உள்ளூர் தலைவர்களையும் மதிக்கவில்லை! உங்கள் மீது சங்பரிவாரத் தொண் டர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்தத் தோல்வியில் இருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மத்தியில் உள்ளவர்களில் சிலர் இந்துத்துவக் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுவதாகத் தெரிகிறது, மக்கள் நாம் இந்து ராஜ்யத்தை அமைப் போம் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்து ஆட்சியைக் கொடுத்துள்ளனர். அதில் இருந்து விலகியதால் தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது என்று மோகன் பகவத் கூறினார். மோகன்பகவத்துடனான சந்திப்பிற்கு பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுரேஷ் சோனி மற்றும் கிருஷ்ண கோபால் கூறியதாவது, தேர்தல் தோல்வி குறித்து மோகன் பகவத் மிகவும் கோபத்தில் உள்ளார். தற்போதைய கால கட்டத்தில் இது போன்ற தோல்வி மக்களிடையே வேறு மாதிரியான எண்ணத்தை உருவாக்கிவிடும்; இதற்கு நாம் எக்காரணத்திலும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதில் நாம் என்றும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்துத்துவா கொள்கையில் மிதமான போக்கை கடைபிடித்ததால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது என்று கூறினார். டில்லி தேர்தல் தோல்வி தொடர்பான விவரமான அறிக்கை ஒன்றை வரும் 15 ஆம் தேதி தலைமையகமான நாக் பூரில் நடக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்கள்

டில்லியில் இவ்வளவுப் பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பல் திருந்துவதாகத் தெரியவில்லை. இந்து வெறி அவர் களின் கண்களையும், கருத்துகளையும் திரையிட்டு மறைக்கிறது. இன்னும் கெட்டுப் போகிறேன் - என்ன பந்தயம் கட்டுகிறாய்? என்று கேட்பது போலிருக்கிறது; இவர்களின் புத்தியும் - போக்குகளும், பந்தயம் கட்டியா கெட்டுப் போக வேண்டும்?
மத்தியில் ஆட்சி அமைத்து ஒரு எட்டு மாத இடைவெளியில், இந்தியாவின் தலைநகரத்தில் ஏற்பட்டுள்ள கடும் தோல்விக்குப் பிறகும் புத்திக் கொள் முதல் பெற தயாராகவில்லை - சங்பரிவார் என்றால், இவர்களிடம் புத்திக் கூர்மையை எதிர்பார்க்க முடியாது; காரணம், மதவெறிதான் - அதுவும் கண்மூடித்தனமான மதவெறி என்றால் எப்படித் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள்?

தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே டில்லித் தலைநகரில் கிறித்தவர்களின் சர்ச்சுகள் இடிக்கப்பட்டன; எரிக்கப்பட்டன என்றால் இந்தக் கூட்டம் எந்தத் தைரியத்தில் தேர்தலைச் சந்திக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இவர்கள் என்ன இந்துக்களின் ஏகப் பிரதிநிதிகளா? என்ற கேள்வியும் இந்துக்கள் மத்தியில் கேள்வி எழுந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

Read more: http://viduthalai.in/page1/96180.html#ixzz3S0tQsvSe

தமிழ் ஓவியா said...

சென்னை நகர சபைத் தலைவர்

செட்டி நாட்டுக் குமாரராஜா திரு. எம்.ஏ. முத்தையா அவர்கள் சென்னை நகரசபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிந்தெடுக்கப்பட்டதை நாம் பாராட்டு கிறோம். குறைந்த வயதுள்ள வாலிபர் ஒருவர் ஏகமனதாக நகரசபையின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

இதைக்கொண்டே குமாரராஜா அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கையும், அவர் நடத்தையிலும், திறமையிலும், நகரசபையின் அங்கத்தினர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், மதிப்பையும், நன்கு தெரிந்துகொள்ளலாம். குமாரராஜா அவர்களுடைய நிர்வாக காலத்திலாவது சென்னை நகர சபையைச் சிறிதும் பார்ப்பனியத்திற்கு இடமாக்காமல் பொது ஜன நன்மைக்கே முழுதும் இடமாக்குவார்களென்று எதிர்பார்க்கின்றோம்.

அதாவது இதற்கு முன் நகர சபையில் சங்கராச் சாரியாருக்கு வரவேற்பளிப்பதாகவும் பிள்ளையார் கோவிலுக்கு நிலம் கொடுப்பதாகவும் தீர்மானிக்கப் பட்டவை போன்ற விஷயங்களுக்கு இடமில்லாமல் ஏழை மக்களின் சௌகரியத்திற்கான தீர்மானங்களுக்கே இடமளிக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்வார் என்று நம்புகின்றோம்.

உதாரணமாகத் தலைவரைத் தேர்ந்தெடுத்த சமயத்தில் அவரைப்பாராட்டிப் பேசிய திரு. சுந்தரராவ் நாயுடு அவர்கள் குறிப்பிட்டதுபோல ஆதிதிராவிடர்களுக்குக் காலனிகள் ஏற்படுத்தி இலவசமாக வழங்குவது போன்ற சிறந்த காரியங்கள் நடைபெறுமென எதிர்பார்க்கின்றோம்.

வயதில் இளையவராயிருந்தும் பலஸ்தாபனங்களில் சம்பந்தப்பட்டு அவைகளை யெல்லாம் திறமையோடும், ஒழுங்கோடும் நடத்திப்பேரும் புகழும் பெற்ற திரு. முத்தையா அவர்கள் சென்னை நகரசபையின் தலை வரானதைப் பற்றி நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

வைதிக மனப்பான்மையையுடைய முதியவர்களைக் காட்டிலும் களங்கமற்ற அறிவு படைத்த இளைஞர்களே பொதுஜன ஸ்தாபனங்களை நிர்வகித்து உண்மையில் பொது ஜனங்களுக்கெல்லாம் நன்மை செய்யும் திறமை படைத்தவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுவது செட்டி நாட்டுக் குமாரராஜா அவர்களின் கடமையென்பதைக் கடைசியாக நினைப்பூட்டுகிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 06.11.1932

Read more: http://viduthalai.in/page1/96216.html#ixzz3S0u6Il00

தமிழ் ஓவியா said...

பரோடாவில் ஆலயப் பிரவேசம்

சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றேயென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது.

தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்.

பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரையாக்கினர்.

அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்ணெண்ணெய் ஊற்றிகுடி, தண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங்கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை.

அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது.

இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டு கிறோம். இதற்கு முன் போர் சமஸ்தானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத்தார்க்கும் கோயில் பிரவேசம் அளித் திருக்கின்றனர்.

அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்டசபையில், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறை வேறியிருக்கின்றது.

சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்திருக்கும் உத்தரவுகளைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம்.

சுதேச சமதானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்புகிறோம்.

அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பினருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பினருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 06.11.1932

Read more: http://viduthalai.in/page1/96218.html#ixzz3S0uJcGzK

தமிழ் ஓவியா said...

சௌந்திரபாண்டியன் வெற்றி

சமீபத்தில் நடைபெற்ற மதுரை ஜில்லா போர்டு தேர்தலில் நமதியக்கத்தோழர் சௌந்திர பாண்டியன் அவர்கள் பெரு வாரியான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதறிய அளவிலா மகிழ்ச்சியடைகிறோம்.

பொது ஜன சேவையில் ஆர்வமும், ஊக்கமும், செல்வாக்குமுள்ளவர் பலர் வெளியே தங்கி விடுவதும், தன்னலமும், வைதிகப்பித்தும் கொண்ட சிலர் அங்கம் பெற்று பொதுநலத்தொண்டை அறவே மறந்து சுயநலமே கருத்திருத்தி பணியாற்றுவதும் இப்போதைய ஸ்தலஸ்தாபனங்களின் இயற்கையாய் போய் விட்டது.

நமது தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் முன்னர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராய் இருந்து ஆற்றி வந்த பொது நல சேவையையும், தாழ்த்தப்பட்டார் விஷயத்தில் காட்டி வந்த அனுதாபமும், வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் போய் விடாமல் அவைகளைச் சட்ட மூலமாய் அமலுக்குக் கொண்டுவருவான்வேண்டி எடுத்துக் கொண்ட பெரு முயற்சிகளும், தமிழ் நாட்டார் இதற்குள்ளாக மறந்திருக்க மாட்டார் களென்றே நம்புகிறோம்.

பொதுவாக மதுரை ஜில்லா வாசிகளும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் தங்கள் தங்கள் நன்மைக்காக கடைசி வரை வாதாட ஒரு உண்மையும், ஊக்கமும், உறுதியும் கொண்ட இத்தகைய ஒரு அக்கத்தினரை பெற்ற பெருமைக்கு உரித்தவர்களென்றே எண்ணுகிறோம். வெற்றி பெற்ற நமதியக்கத் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு நமது மகிழ்ச்சியுரியதாகுக.

குடிஅரசு - துணைத்தலையங்கம் 07.08.1932

Read more: http://viduthalai.in/page1/96218.html#ixzz3S0uQQU3h

தமிழ் ஓவியா said...

மீண்டும் கார்ப்பொரேஷனில் இந்து மதம்

சென்ற 19.10.32 சென்னைக் கார்ப்பொரேஷனில் நடந்த கூட்டத்தில், ஜார்ஜ் டவுன் சொர்ணவிநாயகர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள 537 சதுர அடி நிலத்தை அக்கோயிலுக்கு விட்டுவிடுமாறு ஒரு அவசரத்தீர்மானம் பிரரேபிக்கப்பட்டு ஆமோதிக்கப்பட்டது. ஒரு கனவான் இது அவசரமான விஷயமல்லவென்றும், ஆகையால் இவ்விஷயத்தை தீர்க்க ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்றும் கூறினார்.

மற்றொரு கனவான், அந்தக் கோயிலிலும், அதற்கு விடும் நிலத்திலும் தீண்டாதார்க்கு உரிமையுண்டா என்று கேட்டார். இவைகளுக்குச் சரியான சமாதானம் கூறப்படாமல், முதலில் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் நகர மக்களுக்கும் பொதுவான சொத்துக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே நகரசபைச் சொத்துக்களைச் செலவு செய்யும்போது, அவை நகர மக்கள் அனைவருக்கும் உபயோகப்படக்கூடிய முறையிலேயே செலவு செய்யப் படவேண்டும் என்பதை எவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்.

ஆகவே, நகரசபைக்குச் சொந்தமான ஒரு பொது நிலத்தை, ஒரு மதத்தார்க்கே, அதிலும் சில ஜாதியார்க்கே உபயோகமாக இருக்கும் ஒரு கோயிலுக்கு விட்டதனால் நகர மக்களுக்கு என்ன பிரயோஜனமென்று கேட்கின் றோம்.

முன்பு நகரசபை சங்கராச்சாரியாருக்கு வரவேற்பு அளிக்கத் தீர்மானித்ததையும், இப்பொழுது பொதுஜன உபயோகத்திற்குப் பயன்படுத்த வசதியுள்ள 537 சதுர அடியுள்ள நிலத்தை ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமாக்கிய தீர்மானத்தையும் பார்க்கும்போது, நகரசபை, பொதுஜன நன்மைக்காக ஏற்பட்டதா? அல்லது இந்துமதப் பாதுகாப்புக்காக ஏற்பட்டதா? என்ற சந்தேகம், அந்நிய மதக்காரர்களுக்கு உண்டாகாமற் போகாது.

இம்மாதிரியே நகர சபை இந்து மதத்திற்குப் பாதுகாப்பும் அளித்துக்கொண்டே போவதைப் பொது ஜனங்கள் கண்டிக்க முற்படுவது எவ்வகையிலும் குற்றமாகாதென்றே கருதுகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 23.10.1932

Read more: http://viduthalai.in/page1/96221.html#ixzz3S0uXJzxl

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

Read more: http://viduthalai.in/page-1/96212.html#ixzz3S0v2goo9

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்டோரின் கவனத்துக்கு...

யுஜிசி என அழைக்கப்படும் பல்க லைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள் ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள் ளிட்டோருக்குப் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. தற்போது, முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ -மாணவிகளுக்குப் புதிய கல்வி உதவித் தொகை திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.ஃபில். பிஎச்.டி. (முனைவர் பட்டம்) படிப்பதற்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். கலை, சமூக அறிவியல், அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு உதவித் தொகை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

(விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது அறிவியல் மற்றும் தெழில்நுட்ப அமைச் சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவி யல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்அய்ஆர்) நிறுவனத்தின் ஜெஆர் எஃப் உதவித்தொகை பெறக்கூடாது என்பது ஒரு நிபந்தனை). ஆண்டு தோறும் 300 ஓபிசி மாணவர்களுக்கு உதவித் தொகை களை வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அத்துடன் எதிர்பாராத செல வுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் (கலை படிப்புகள்), ரூ.12 ஆயிரமும் (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்) வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு கல்வி செயல்பாடுகள் திருப்தியாக இருக் கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் கிடைக்கும். அதோடு எதிர்பாராத செலவினங்களுக் காகக் கலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,500-ம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை விண்ணப்ப தாரரின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் நேரடியாக (E- payment) வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி ஆண்டின் உதவித்தொகையைப் பெறுவ தற்கு வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக் குள் ஆன்லைனில் (www.ugc.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ஓ.பி.சி. வகுப்பினர் யார்?

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் ஓ.பி.சி பிரிவின் கீழ் வருவார்கள். பி.சி, எம்.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டால் அவர்கள் ஓ.பி.சி. வகுப் பினராகக் கருதப்பட மாட்டார்கள். ஓபிசி வகுப்பினருக்கான சான்றிதழைத் தாசில்தார் வழங்குவார். இதற்கு உரிய படிவத்தில், தேவையான ஆவணங் களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வரு வாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப் பிக்க வேண்டும்.

(தி இந்து 3.2.2015 இணைப்பு பக்கம் 1)

Read more: http://viduthalai.in/page-1/96222.html#ixzz3S0xHmjRx

தமிழ் ஓவியா said...

சென்னைத் தலைமைச் செயற்குழுவில்
கழகத் தலைவர் தெரிவித்த கருத்துகள் (சென்னை 12.2.2015)

1) கழகத் தலைவர் கலந்து கொள்ளும் ஊர்களில் கட்டாயம் மண்டலம் / மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்.

2) ஒப்படைக்கப்பட்ட நன்கொடைப் புத்தகங்களை கணக்குகளுடன் ஒப்படைக்க வேண்டும் என்று விடுதலையில் அறிவிப்பு வருவது உகந்ததல்ல - அந்த அளவிற்கு பொறுப்பாளர்கள் நடந்து காட்டவேண்டும்.

3) 2015 ஏப்ரல் 28, 29 நாட்களில் (மாலை 5 மணிக்கு) சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் - கருத் தரங்கம்; மொழிப்போர் வீரர்களுக்கும் படத் திறப்புகள்; நுழைவுக்கட்டணமும் உண்டு. இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நன்கொடையாக இருந்தாலும் பெரியார் உலகத்திற்கே!

4) பெரியார் உலகம் தொடர்பான பணிகளும், கழகத் பிரச்சாரத் தொடர்பான பணிகளும் தங்குத் தடை யின்றி இணைந்தே நடைபெறவேண்டும்.

5) இளைஞரணி - மாணவரணி மகளிர் அணிகள் விரிவாக்கம். மகளிர் அணி - 30 வயதுக்கு மேல்; மகளிர் பாசறை - 30 வயதுக்குள்
(மாணவரணி, இளைஞரணிக்கும் இது பொருந்தும்)

6) இளைஞரணி - மாணவரணி மாநாடு - ஆகஸ்டில் (பெரியார் சமூகக்காப்பு அணியும் இணைந்தது) நடைபெறும்.

இளைஞரணி - மாணவரணி அமைப்புக்குழு பொதுச்செயலாளர்கள்:

1) வீ.அன்புராஜ், 2) டாக்டர் துரை. சந்திரசேகரன், 3) தஞ்சை இரா.ஜெயக்குமார், 4) உரத்தநாடு இரா.குணசேகரன், 5) மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், 6) இளை ஞரணிச் செயலாளர் இல.திருப்பதி, 7) இளந்திரையன், 8) ஒருங்கிணைப்பாளர் முனைவர் செயக்குமார் - கடலூர்.

7) மகளிர்அணி ஒருங்கிணைப்பு: 1) கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, 2) பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, 3) மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை 4) உமா செல்வராசு

8) தலைமைக் கழகத்தினர் சம்பந்தப்பட்ட மாவட்டங் களில் இயக்கப்பணிகளுக்கும், செயல்பாட்டுக்கும் பொறுப்பாளர்கள் ஆவர். மாவட்டப் பொறுப்பாளர்களோடு தொடர்பிலேயே இருக்க வேண்டும். தலைமைச்செயற்குழுவுக்கு வரும்போது திட்டங் களோடும், கருத்துக்களுடனும் வருதல் வேண்டும். அவற்றை முறைப்படுத்தி செயல்படுத்தவும் வேண்டும்.

9) மாவட்டத்திற்கு இரு இளைஞர்கள் / மாணவர்களை தேர்வு செய்து சிறப்பான பயிற்சி (INTENSIVE TRAINING) களப்பணி - மாணவர்கள், இளைஞர்கள் சேர்க்கை, ஊடக விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட துல்லியமான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கருத்துருகளை கழகத் தலைவர் கழகத் தலைமைச் செயற் குழுவில் அறிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/96136.html#ixzz3S0y93I52

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்த வேண்டும் என்ற இலங்கை வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கதே!

இந்திய நாடாளுமன்றத்திலும் இத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட
தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

டில்லி தேர்தல் முடிவுகள்

ஈழத்தில் வடகிழக்கு மாகாண அரசு ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள் ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்திட வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது என்றும். இதனை வலியுறுத்தும் வகை யிலும், அழுத்தம் கொடுக்கும் தன்மையிலும் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட, தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இராஜபக்சே தலைமை ஆட்சி ஒழிந்த நிலையில், பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற மைத்திரி பாலசிறீசேனாவின், தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சி, (இதுவும் சிங்களப் பெரும்பான் மையை வைத்துள்ள ஒரு ஆட்சி என்ற போதிலும்) இராஜபக்சே அணுகுமுறைக்கு விடை கொடுத்தால் ஒழிய, உலகத்தார் கண்முன் சீரிய ஆட்சியாகத் திகழ வாய்ப்பில்லை என்பதாலும், பொது மரியாதை கிடைக்காது என்ற தன்மையாலும், தமிழர்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம் - அவர்களின் ஒத்துழைப்பும், நல் லெண்ணமும் ஆட்சிக்குத் தேவை என்பதாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வை ஓரளவு புரிந்து கொண்ட தாலும், இவற்றைப் புரிந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதுவரை எதிர்பார்த்ததற்கு சற்று மேலாக, பழைய கள் புது மொந்தை என்பது போல் அல்லாது, பல்வேறு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

புதிய அரசின் செயல்பாடுகள்

1. வடகிழக்கு மாகாண ஆளுநரை மாற்றியது.

2. அங்கே உள்ள இராணுவத்தைத் திரும்ப அழைத்திடும் பல்வேறு நடவடிக்கைகள்.

3. சிங்களர், குடியேற்றப் பகுதிகளை மீண்டும் தமிழர் பகுதியாக்கிட, மீள் குடியேற்ற நடைமுறைத் திட்டங் களை வகுத்து, தமிழர்களுக்குரிய உரிமைகளை மீட்டுத் தரும் நடவடிக்கை.

4. முந்தைய ஒப்பந்தத்தில் உள்ள 13ஆவது பகுதி (அதனால் பெரும் அளவுக்கு லாபமில்லை என்றாலும்) கொஞ்சம் பரவாயில்லை என்ற வகையில் அரசியல் தீர்வுக்கு வழி வகை செய்தல்.

5. இராஜபக்சேவின் ஜால்ரா தலைமை நீதிபதியை மாற்றி அதற்குப் பதில் திறமை மிக்க ஒருவரை அமர்த்தி யுள்ளமை.

இவை எல்லாம் மிகப் பெரும் காயம்பட்ட நிலையில் முதலுதவிபோல, முன் சிகிச்சை போன்ற ஓரளவு திருப்தி தரும் புதிய அரசின் நடவடிக்கைகளாகும்.

தமிழக மீனவர்களின் படகுகள் மீட்பு

இவை அல்லாமல் -

1. தமிழக மீனவர்களிடமிருந்து அடாவடித்தனமாக இராஜபக்சே ஆட்சியினால் பறிக்கப்பட்ட 87 படகுகளை - சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களின் விஷம ஆலோசனைகளை ஏற்று, இலங்கை மண்ணில் முடக்கி வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததை மாற்றி, அவர்களுக்குத் திருப்பி தரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதானது - நல்லெண்ண நடவடிக்கைகளாகும்.

வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர் திரு. விக்னேசுவரன் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியமானது; இலங்கையில் நடைபெற்றது - அப்பட்டமான இன அழிப்புப் படுகொலையே! (Genocide) அய்.நா. வெளியிலிருந்து சுதந்தரமானவர்களை வைத்து அதை விசாரணை செய்து, குற்றவாளி இராஜபக்சேயையும் அவரது கூட்டத்தினையும் தண்டிக்க வேண்டும் என்ற கருத் தமைந்த வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் - அனைத்து மக்களாலும் வரவேற்றுப் பாராட்டக் கூடியது ஆகும்!

மனித உரிமைப் பறிப்பு - அய்.நா. சாசனத்திற்கு முரணானது.

இதை திராவிடர் கழகமும், டெசோ அமைப்பும், பற்பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகின்றன.

உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் தீர்மானம்

தமிழ் ஓவியா said...

அ.ய்.நா. அமைத்த போர்க் குற்ற விசாரணை அறிக்கை யில் கூறப்பட்ட கருத்துக்களை நடுநிலையோடு ஆராய்ந் தால், நிமீஸீஷீநீவீபீமீ என்ற இன அழிவுப் படுகொலைக்கான அத்தனை சம்பவங்களும் நடந்தன என்பது எளிதாக விளங்குமே!

திரு விக்னேசுவரன் அரசின் தீர்மானம் உலக நாடு களின் ஆதரவை - நியாய உணர்வு - மனித உரிமை அடிப்படையில் பெற்றே தீரும் என்பது உறுதி.

இவையெல்லாவற்றினும் மேலாக இந்திய அரசு - பிரதமர் மோடி தலைமையில் உள்ள அரசு, இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இன அழிப்புப் படுகொலை என்பதை வலியுறுத்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தனித் தீர்மானமே கொண்டு வர முன்வர வேண்டும்.

இனப்படுகொலை குறித்து அய்.நா.வின் சுதந்திரமான விசாரணை தேவை!

வருகிற தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இப்படி ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவும், விக்னேசுவரன் அரசின் தீர்மானத்தின் கருத்தை ஆதாரமாக்கி, தமிழர் இனப்படுகொலைபற்றி அய்.நா.வின் சுதந்திரமான ஒரு விசாரணைக் குழு நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

அத்துணைக் கட்சிகளும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, ஒரு மனதாக ஒருமித்த குரலில் ஆதரவு கொடுத்து வரலாற்றில் இனி எங்கும் இப்படிப்பட்ட மனித இனப்படுகொலை தலை தூக்கக் கூடாது என்று நிலையை உருவாக்கிட அது பெரிதும் உதவும் என்பது உறுதி.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13-2-2015

Read more: http://viduthalai.in/page1/96130.html#ixzz3S0yGyZew

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தோஷம் விலக

ராகு கேதுகள் தோஷம் விலக திருநாகேஸ்வரம் கீழப் பெரும் பள்ளம், காளகஸ்தி போன்ற ஆலயங்களுக்குச் சென்று பூஜை செய்து விரதம் இருப்பது நன்மை தருமாம்.
ராகு,கேதுகள் என்று கிரகங்களே கிடையாது என்று வானியல் விஞ்ஞா னம் கூறுகிறதே - இதி லிருந்து இவை எல்லாம் வெறும் கற்பனைகள், அசல் மூடநம்பிக்கைகள் என்று தெரியவில்லையா?

Read more: http://viduthalai.in/page1/96133.html#ixzz3S0yPdJvL

தமிழ் ஓவியா said...

நீங்குமா? நீங்காதா?



மதத்தைக் காப்பாற்றவே கோயில் களும், சொத்துகளும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
(விடுதலை, 3.12.1962)

Read more: http://viduthalai.in/page1/96119.html#ixzz3S0zWGFZJ

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?

-தந்தை பெரியார்

சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமாயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமுமாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?

**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?

**************

சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

Read more: http://viduthalai.in/page1/96149.html#ixzz3S10MOE7L

தமிழ் ஓவியா said...

இராமாயணம் கட்டுக்கதையே! சி.ஆர்.

விடுதலையின் பிரச்சாரத் தொண்டு வெகு விரைவில் மாற்றுக் கொள்கையுடைவர்களையும் விழிப்புறச் செய்வதற்கு நல்ல சான்றுகள் கிடைத்து வருகின்றன.

அதில் வெளிவரும் புராண சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆஸ்திகப் பிரசாரகர்களே அவ்வாராய்ச்சியிற்கண்ட உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. உண்மையான பகுத்தறிவு பிரச்சாரத் தொண்டுக்கே உயர்வு கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது.

மதுரையில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார், திராவிடத் தலைவர் பெரியாரைக் குறிப்பிட்டு அவர்கள் இருவரிடையேயும், பழங்காலமிருந்தே நிலவிவரும் சிறப்பான நட்பும், பெரியார் அவர்கள் நாட்டுப்பணியில் தீவிர சிரத்தையுடன் முந்தை நாளிலிருந்தே பாடுபடு வதையும் புகழ்ந்து கூறியிருப்பதுடன் பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் காணும் உண்மைகளை ஒப்புக் கொண்ட வகையில் கோயில்களின் புனிதத்தன்மை குறைந்திருப்பதையும்,

இராமாயணம், ஓர் கட்டுக்கதை யென்றே சொல்ல வேண்டுமென்றும், தர்மம் என்பதே மனச்சான்றுக்குச் சரியெனப் படுவதுதானென்றும், அக்காலத்தில் மக்களிடம் குடிகொண்டிருந்த ஒழுக்கக் குறைபாடுகளைப்பற்றி கவி வாணரால் சித்திரிக்கப்பட்டது தான் ராமாயணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/96149.html#ixzz3S10SLsAV

தமிழ் ஓவியா said...

திருடர்க்கு அழகு திருநீறணிதல்!

திருநீறு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் திருடர்க்கு அழகு திருநீறடித்தல் என்பது நன்றாய் விளங்கும்; இல்லாவிட்டால் மூடர்க் கழகு திருநீறடித்தல் என்பதாவது விளங்கும்.

எப்படியெனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்று அதை இடுகின்றவர்கள் கருதுவதும், தாங்கள் எவ்வளவு அக்கிரமக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய்க் கைலாயம் சித்தித்து விடும் என்று நினைப்பதுமேயாகும்.

இதற்கு ஆதாரமாக திருநீறின் மகிமையைப் பற்றிச் சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப்பனன் மிக்க அயோக்கியனாகவும், கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமாபாதகமான காரியங்கள் செய்து கொண்டே இருந்து ஒருநாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும்,

அந்தச் சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எறிந்து விட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப் பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்தில் தள்ளிக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில், சிவகணங்கள் இரத்தின விமானத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எமதூதர் களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்து, கைலாயத்திற்குப் பார்வதியிடம் கொண்டு போனதாகவும்,

எமன்வந்து, இவன் மகாப்பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படி கொண்டு போகலாம்? என்று வாதாடினதாகவும், அதற்கு சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்றுத் திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத்துக்கு அருகனானதனால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும்,

அதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் புரட்டிப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒரு நாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோட்சத்தில் இடமில்லை என்று சொல்லி வாதிட்டதாகவும், அதன் மீது சிவகணமும் எமகணமும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பான் உயிருடன் இருக்கும் வரை மகாபாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடுகாட்டில் இவன் பிணத்தை எறிந்த விட்டபோது,

மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின்மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும் போது அதன் காலில் பட்டிருந்த அந்தச் சாம்பலில் கொஞ்சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி எமனைக் கண்டித்து அனுப்பி விட்டுப் பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள். அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு இதில் எழுதக் கூடாத படுபாதகங்கள் செய்வதனால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்குமென்றும் அவன் பிதுர்க்கள் செய்த பாவங்கள் கூட நீங்கி நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.

இவை பிரமோத்திர காண்டம் 14ஆவது 15ஆவது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாக இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கக் கோருகிறோம்.

- விடுதலை 29.12.1950

Read more: http://viduthalai.in/page1/96150.html#ixzz3S10a2KjD

தமிழ் ஓவியா said...

அறிவியல்

23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-

மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.

- குடிஅரசு, 30.1.1938

Read more: http://viduthalai.in/page1/96150.html#ixzz3S10hClsX

தமிழ் ஓவியா said...

வேடிக்கை வாதம் போலி சயின்ஸ்

சுயமரியாதைக்காரர்.: மாட்டுச் சாணியை உருட்டி கொளுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே இதன் காரணம் என்ன? அந்தச் சாணி நாற்றமடிப்பதில்லை என்கின்ற காரணம் தானே?

பார்ப்பான்: ஓய் உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.

சு.ம.: இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்: ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களை யெல்லாம் விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களை யெல்லாம் விட, அந்தக்காலத்துப் பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது. தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும், இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புளுத்துப் போய்விட்டது.

சு.ம.: ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால் அதை விட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே: பின்னை அதை...

பார்ப்பான்: சீச்சீ, நீர் என்ன? சுயமரியாதைக் காரராக்கும். உம்மிடம் யார் பேசுவார்?
(குடிஅரசு 20.11.1943)

Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10oAeZb

தமிழ் ஓவியா said...

கே.எம்.பணிக்கர் கூற்று!

ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10vh9DC

தமிழ் ஓவியா said...

பாரதியார்


இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்வதால், டாக்டர் நாயரைத் தலைமை யாகக் கொண்ட திரா விடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரோதம் பூண்டு போகிறேன் என்று நினைத்து விடலாகாது.

தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க.

இன்னும் நம் பாரத தேசத்தின் அய்க்கியத் தைப் பரி பூரணமாகச் செய்ய நமது நாடு முழுவதிலும் வடமொழிப் பெயர்ச்சி மென்மேலும் ஓங்குக. எனினும் தமிழ் நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக இவ்வாறு பாரதி கூறுகிறார் (ம.பொ. சிவஞானம் எழுதிய பாரதியும் ஆங்கிலமும் பக்கம் 39-40) எப்பொ ழுதோ பாடினார் என்று அலட்சியப்படுத்தலாம்; ஆனால் அதனை இப் பொழுதும் கையாண்டுள் ளதால் தான் கவனிக்க வேண்டியுள்ளது.

டாக்டர் நாயரைபற்றி பாரதி என்ன சொல்லு கிறார்? திராவிடக் கஷி யார் என்ற போலிப் புனைந்த தேச விரோதி என்கிறார்.

இன்றைய ஆர்.எஸ்.எஸ். காரர்களும், பார்ப்பனர்களும் பார்ப் பனப் பாதந்தாங்கும் புல் லுருவிகளும் என்ன சொல்லுகிறார்களோ, அதையேதானே பாரதி யும் சொல்லியிருக்கிறார். இந்த வகையில் இவர் களுக்கெல்லாம் பாரதி யார் வழிகாட்டி என்று கூட தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள் ளலாம்தான்.

திராவிடக் கஷியார் என்றும் போலிப் புனைப் பெயர் என்றும் கோபப் படும் பாரதி தனது பாடல்களில் எத்தனை எத்தனை இடங்களில் ஆரிய நாடு என்றும், ஆரியர் என்றும் கொக் கரிக்கிறார்.

ஆரிய சாத்திர சம் பிரதாயங்களைத் தழுவி வாழ்வாராயின் அச்ச மொன்றும் இல்லை என்றெல்லாம் எழுத வில்லையா? ஆரிய மைந்தன் அகத்தியன் என்றெல்லாம் பாட வில்லையா?

திராவிடர் என்பது பொய். ஆரியர் என்பது தான் மெய் என்று கூறு கிறாரா பாரதி?

வேத முடைய திந்தநாடு - நல்ல
வீரர் பிறந்திருந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
என்று பாடியவன் தானே பாரதி.
இன்னும் ஒருபடி மேலே சென்று லெனி னைப் பரம மூடன் என்று எழுதியவரும் இந்த முண்டாசுக் கவிஞன் தான்.

பாரதியாக இருந்தா லும் சரி, விவேகானந்த ராக இருந்தாலும் சரி முற்போக்கும், பிற்போக் கும் கைகோர்த்துக் கொண் டிருக்கும் கலவை என்றே சொல்ல வேண்டும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/96071.html#ixzz3S11ei1u1

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வேண்டுதல்

கடவுள் எல்லாம் அறிந் தவன் தெரிந்தவன் என் றால், பக்தர்கள் எல்லாம் ஏன் அவனிடம் வேண்டு தலை செய்கிறார்கள் - நேர்த் திக் கடன் கழிக்கிறார்கள்?

Read more: http://viduthalai.in/page1/96087.html#ixzz3S127IZTd

தமிழ் ஓவியா said...

உயிர் நாடி...

மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமுமேயல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.

- (விடுதலை, 1.4.1950)

Read more: http://viduthalai.in/page1/96089.html#ixzz3S12Dp6st

தமிழ் ஓவியா said...

மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம்!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் இருபால் மாணவர்களுக்கும் சிறப்பு வழிபாடு ஒன்று சென்னை சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த வழிபாட்டில் பங்கு கொள்ளும் இருபால் மாணவர்களிடம் அகல் விளக்குகள் வழங்கப்படுமாம். அந்த அகல் விளக்கை ஏற்றி எங்கள் வாழ்வில் ஒளியேற்று இறைவா! என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு வழிபாடு நடத்துவார்களாம். அதன் பிறகு பூஜையில் வைக்கப்பட்ட காப்புக் கயிறுகளை மாணவர்களுக்கு வழங்குவார்களாம்.

இதனைப் படிக்கும் பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டின் நுழைவு வாசலில் ஆன்மீகவாதிகள் எதிர்கால நம்பிக்கை ஒளி விளக்குகளின் கைகளில் அகல் விளக்கைக் கொளுத்தி கடவுளிடம் விண்ணப்பம் போட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முன் வருகிறார்கள் - வெட்கக்கேடு!

இது மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையையும், சோம்பேறித்தனத்தையும் தானே வளர்க்கும்.

கடவுளிடம் கையேந்தினால் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற பொய் நம்பிக்கையை மாணவர்களிடம் திணித்தால் அவர்கள் கல்வியில் எப்படிக் கவனம் செலுத்துவார்கள்? அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?

அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவதற்குமான அறிவார்ந்த வழிமுறைகள் உள்ளன. கல்வியாளர்கள் அதைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அறிவுக்கு ஒவ்வாத முறையில் தவறான வழியில் மாணவர்களைத் திசை திருப்பலாமா!?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) தெளிவாக, திட்டவட்டமாகக் கூறுகிறது.

இந்த நிலையில், இதற்கு முற்றிலும் முரண்பாடாக மூடநம்பிக்கை வலைக்குள் மாணவர்களைச் சிக்க வைப்பது சட்டப்படி குற்றமல்லவா!? மாணவர்களின் எதிர் காலத்தை இருட்டறையில் தள்ளுவது குற்றம் அல்லவா?

இது ஏதோ ஒரு மதப்பிரச்சினை என்று கருதி விடக் கூடாது; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற வேலையில் ஈடுபட்டாலும் அது குற்றம் குற்றமே!

இதுகுறித்து ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் விமர்சிக்க வேண்டாமா?

ஆனால் நம் நாட்டு ஏடுகளும், இதழ்களும் ஊடகங்களும் ஆன்மீக மலர்களைத்தானே வெளி யிட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு எதை விற்றாவது கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும் என்பதுதானே நோக்கம்.

சரி, கல்வியாளர்கள் இல்லையா? அவர்கள் முன்வந்து கருத்துக்களைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்; அப்படிச் சொல்லுவதற்கு முதுகெலும்பு வேண்டுமே, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் சுயநல கதகதப்பில் அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

அரசியல்வாதிகள் கருத்துச் சொல்ல பெரும்பாலும் விரும்பாததற்குக் காரணம் இது கடவுளோடு, பக்தி யோடு சம்பந்தப்பட்டது என்பதால் வாக்கு வங்கியை நினைத்து வாய் மூடிக் கொள்ளும் நிலைதான்.

கடைசியில் எங்கு வந்து நிற்கிறது என்றால், இது பகுத்தறிவாளர்கள் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இதில் உண்மை நிலை என்னவென்றால் எதிர் காலத்தின் உலகை நிர்மாணிக்கக் கூடிய மாணவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக ஆக்கி விடக் கூடாது என்று கருதுகிற ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய, தலையிட வேண்டிய ஒன்றாகும். இது வெறும் கழகப் பிரச்சினையல்ல.

இதில் இன்னொரு கேள்வியும் உண்டு, தேர்வு களுக்குமுன் இப்படி வழிபாடு நடத்திய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் உண்டா?

கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் எல்லாம் தேர்வில் தோல்வி அடைந்து விடுகின்றனரா?

பக்தி என்பது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடிய மூட உணர்வு என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/page1/96093.html#ixzz3S12M7ryk

தமிழ் ஓவியா said...

இது உண்மையா? இது உண்மையா? இது உண்மையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை நிரப்பிடும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, தற்போதுள்ள தலைமை நீதிபதி பார்ப்பனர் (வடக்கே இருந்து வந்தவர்) தற்போதுள்ள பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை 6 (2 அல்லது 3 சதவிகிதம் உள்ள வகுப்பினர்) மேலும் அதே அளவுக்கு நியமனம் செய்யப்பட- பார்ப்பனப் பண்ணையமாக மாற்றிட - தீவிர முயற்சிகளைச் செய்து, பகீரதப் பிரயத்தனம் செய்யும் நிலையில், இதை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் புரிந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

இரண்டு மூன்று பட்டியலின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

ஒரே பட்டியலாகப் புதிய நீதிபதிகளுக்கான நியமனப்பட்டியலுக்குப் பதிலாக - இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து, தனித்தனியே ஒவ்வொரு பட்டியலிலும் ஒன்று அல்லது இரண்டு பார்ப்பனர்கள் பெயரை அவ்வப்போது சேர்ப்பது என்ற தந்திர வித்தை கையாளப்படுவதால் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது உண்மையா?

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாய் வருவதற்கு, மிகவும் பார்ப்பன வெறிபிடித்த ஒரு மாவட்ட நீதிபதி, (டில்லியில் தனக்குள்ள செல்வாக்கால்,) கலைஞர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள ஆட்சியின் எதிர்ப்பினால், வடக்கே (பஞ்சாபி) மாநிலத்தில் நியமிக்கப்பட்டவர், தற்போது வாரம் இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மந்திராலோசனையின் முக்கிய நபராக உள்ளார் என்பதும், இதில் மற்றொரு ஆலோசகராக சென்னை நீதிமன்ற மூத்த பார்ப்பன நீதிபதி ஒருவரும் முக்கியப் பங்கு வகித்து ஒரு கூட்டுத் திட்டமே உருவாகி அதிகமான பார்ப்பனரை உள்ளே கொண்டு வருவதும், பார்ப்பனரல்லாத மாவட்ட நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பிட, ஏதாவது அற்பக் காரணங்களைத் தேடுவதும், தலைக்குக் கத்தி வைக்கும் மனு நீதி ராஜ்யத்தை நடத்திவரும் கொடுமை தொடர்கிறது என்று உயர்நீதிமன்ற நீதித்துறை வட்டாரங்களிலேயே கூட குமுறலும், கொந்தளிப்பும் பெருகியுள்ளன என்பது உண்மையா?

எந்தவித ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு ஏதும் இல்லாத - கூறவும் முடியாத நிலையில் ஒரு மாவட்ட நீதிபதியை இதற்கு மேலே பதவி உயர்வு (உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தகுதி) அவர் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இம்மாதம் 28 ஆம் தேதி அவரது பதவிக் காலம் (மாவட்ட நீதிபதிக்கானது) முடிவுறும் நிலையில், அவரைப் பரிந்துரை செய்வதைத் தவிர்க்கவே,
அவர் அரசியல் செல்வாக்குள்ள தம் ஜாதிக்காரர் ஒருவரை ஒரு குறிப்பிட்டவரைச் சந்திக்கின்றார் என்றெல்லாம் உயர்நீதிமன்ற மேலிடம் ஏனோதானோ என்று குற்றம் சுமத்தி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல நடந்துகொள்வது உண்மையா?

மாவட்ட நீதிபதி பதவிகள் நியமனத்திலும் பார்ப்பன சூழ்ச்சி

மாவட்ட நீதிமன்ற சார்பு (Subordinate Judiciary) தேர்வுக்கான, தேர்வுத் தாளைத் திருத்துதல், மாவட்ட நீதிபதி முதல் மற்ற நீதித் துறையில் பார்ப்பனர் ஏக போகம் தொடரும் வண்ணம், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு மதிப்பெண் போடுவதில், பாரபட்சம் காட்டி, பார்ப்பனரல்லாதவர்களைத் தடுக்கும் முயற்சியை திருப்பணியாகவே ஒரு பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதி, மேலிடத்தின் ஆதரவோடு நடத்தி, பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக்கட்டும், பரசுராம அவதாரம் எடுத்து வருவது உண்மையா?

இதுபற்றி உடனடியான மாற்றம் தேவை; பார்ப்பனரல்லாத மூத்த நீதிபதிகள் பலர் இருந்தும், இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஒரு பார்ப்பனரிடமே விடப்பட்டுள்ளது? இந்த நிலையால், மேலும் குமுறல் அதிகமாகி, நீதித்துறை கொதி நிலையில் உள்ளது என்பதும் உண்மையா?

குறிப்பு: இதற்கான சமூகநீதிப் போராட் டத்தில் பெருமளவு வழக்குரைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம் -

திராவிடர் கழகம்)

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் படுகொலைக்குக் காரணமாக இருந்த ஆட்சியின் சொந்தக்காரர் மோடி கூறுகிறார்

உலக அளவில் நடக்கும் மத ரீதியான மோதல்கள் கவலையளிக்கிறதாம்!

புதுடில்லி, பிப்.18_ டில்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி உலக அளவில் நடக்கும் மதரீதியான மோதல்கள் கவலையளிப்பதாக உள் ளது என்று தெரிவித்துள் ளார். கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் மற்றும் கன்னிகாஸ்திரி யூப்ரேசியா ஆகியோருக்கு அண்மையில் வாடிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் அளிக்கப் பட்டது. புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை நினை வுகூரும் வகையில் டில் லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் தங்களுக்கு விருப்பமான மத நம்பிக் கையை பின்பற்ற ஒவ் வொருவருக்கும் பூரண உரிமை உள்ளது இந்தி யாவிலும் அந்த நிலை உள்ளது என்று கூறிய மோடி இதற்கான சுதந் திரத்தை அரசு உறுதி செய்யும் என்றார். அனைத்து மதத்தின ரையும் மதித்து நடக்கும் பண்பாடு ஒவ்வொரு இந்தியனின் உணர்வி லும் கலந்தது என குறிப் பிட்ட மோடி, மத சகிப்புத் தன்மையுடனும், பரஸ்பர மரியாதையுட னும் பிற மதத்தினரை மதிக்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத ரீதியிலான மோதல்களை உருவாக்கு பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றார்.

இந்தியா வந்த அமெ ரிக்க அதிபர் ஒபாமாமுதல் அமெரிக்க பத்திரிகையின் தலையங்கம்வரை இந்தி யாவில் மத நல்லிணக்கம் குறைந்து வருவதாக பேசப்பட்டது. பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துப் பேச வேண்டும் எனவும் பல் வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்தது.

மோடியை அழைக்க எதிர்ப்பு!

பிரதமர் மோடியை இந்நிகழ்ச்சிக்கு அழைத் ததில் கிறிஸ்தவ சபை களுக்கு இடையே இரு வேறு கருத்து நிலவுவ தாகவும் தெரிகிறது. ஒரு தரப்பினர், டில்லி யில் தேவாலயங்கள்மீதான தாக்குதலுக்குப் பின்னர் எந்தக் கருத்தும் தெரிவிக் காதவரை ஏன் அழைக்க வேண்டும் என வாதிட்ட தாகவும், மற்றொரு தரப் பினர் இந்த அழைப்பின் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மவு னம் கலைக்க வழிவகை ஏற்படும் என தெரிவித் ததாகவும் கூறப்படுகிறது.

தலைநகர் டில்லியில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கு தலுக்கு ஆளாகிவருகின் றன. கடந்த வாரம் கிறிஸ் தவ கல்வி நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது. இருப்பினும் மோடி மத மோதல்கள் தொடர்பாக தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து வந்தார். டில்லி தேர்தல் தோல்வி, அதைத் தொடர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைப் பதில் மீண்டும் தோல்விய டையும் நிலை, உலக நாடுகளின் அழுத்தம் போன்றவைகளால் இறுதி யில் மோடி தனது நிலைப் பாட்டைக் கூறியுள்ளார். அதே நேரத்தில் நேரடி யாக இந்துத்துவா சக்தி களைக் குறிப்பிடாமல், சர்வதேச மத ரீதியான மோதல்கள் என்று குறிப் பிட்டதன்மூலம் சங் பரி வாரத்தின் தலைவர்களை சமாதானப்படுத்துவதுபோல் உள்ளதாகத் தெரிகிறது.

மோகன் பகவத், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா போன்றோர் இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந் துக்களே என்றும், விரை வில் 5 கோடி பேரை இந்துமதத்திற்கு மாற் றுவோம் என்று கூறி வரும் நிலையில், மோடி யின் இந்த திடீர்ப் பேச்சு சங் பரிவார் கூட்டங்களி டையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் மோடியின் மதச்சார்பின்மை!

இந்துக் கலாச்சாரம், இந்து நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு மத்தியில் அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். நமது பாரதத் தன்மை குறித்த கனவு களை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

மேற்கண்டவாறு ராகவ் ரெட்டி, வி.எச்.பி. அமைப்பின் சர்வதேசத் தலைவர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96418.html#ixzz3S69iOwIi

தமிழ் ஓவியா said...

சிவராத்திரி உபயம்: 2000 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி

உஜ்ஜைன், பிப். 18_ மத்தியப் பிரதேசம் உஜ் ஜைனியில் உள்ள மகா பைரவர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2000 சிவ பக்தர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனை யில். சேர்க்கப்பட்டுள் ளனர்.

அதில் 200_க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை மோசமாக உள்ளதாம். மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என்றும், உலகம் அழியும்போதுகூட அழி யாத கோவில் என்றும் கதைகட்டி விடப்பட்ட உஜ்ஜைனி மகாபைரவர் கோவிலில் சிவராத்திரி விழாவன்று ஆயிரக்கணக் கானோர் கூடுவார்கள். இந்த ஆண்டும் உஜ்ஜைனி மகாபைரவர் சிவராத்திரி கோவில் விழா கடந்த ஞாயிறு அன்று துவங்கி யது. மத்தியபிரதேச மாநிலம் மட்டுமின்றி ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். நேற்று மாலைமுதல் சிவராத்திரி விழா தொடங்கி நடந்து வந்ததாம்.

நள்ளிரவு விழாவில் கலந்துகொண்ட அனை வருக்கும் பிரசாதம் வழங் கப்பட்டதாம். அத்துடன் விழா நிறைவடைந்தது. பிரசாதம் உண்ட சில மணிநேரத்தில் முதலில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் மற்றும் கடுமை யான வயிற்றுவலி ஏற் பட்டது. இதனை அடுத்து பெண்கள் மற்றும் ஆண் களுக்கும் வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டது. முதலில் சில நூறு பேருக்கு மட்டும் இருந்த வயிற்றுவலி இன்று காலையில் ஆயிரக்கணக் கானோர் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவ திப்பட ஆரம்பித்துவிட் டனர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதுமே அழுகுரல் கேட்கத் தொடங்கியது. நிலைமை மோச மானதைத் தொடர்ந்து அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத் துவமனைகளில் சேர்க்கப் பட்டனர். இச்சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச தலைமை மருத்துவ அதி காரி என்.கே.திரிவேதி கூறியதாவது. காலைமுதல் 2000_க் கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரசு மருத் துவமனை மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் குவிந்தவண்ணம் உள்ள னர்.

சுமார் 500 பேர் களுக்கு முதலுதவி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டோம். இதில் 1500_க்கும் மேற் பட்டோர் உள்நோயா ளிகளாக சேர்க்கப்பட் டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களில் 200_க்கும் மேற்பட்டோர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதில் 40 பேரை போபா லில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.

மாவட்ட காவல்துறை இணை ஆணையர் ஆர்.பி. கோலட் கூறும்போது, பிரசாதம் தயாரித்து வழங்கும் உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறு வனம் ஒன்று வெளியில் இருந்து உணவு தயாரித் துக் கொண்டுவந்துள்ளது. உணவில் நச்சு கலந் துள்ளதா என கண்டறிய உணவு மாதிரிகள் ஆய் வகத்திற்கு அனுப்பட் டுள்ளது, இவ்விவகாரம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்துவரு கிறது என்று கூறினார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/96419.html#ixzz3S69qyljo

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம் (2)

மகிழ்ச்சி என்பது இன்ப உணர்வின் வெளிப்பாடு;

துயரம், துக்கம் என்பது துன்பத்தின், துயரத்தின் வெளிப்பாடு.

வாழ்க்கையில் வெறும் இன்பமோ, வெறும் துன்பமோ எப்போதும் இருந்த தில்லை - எவர்க்கும்.

மாறி மாறி மகிழ்ச்சியும், துயரமும் வெளிப்படும் நிகழ்வுகளும், நிலை களும் சகஜம்.

உலக வரலாற்றில் எப்போதும் எல்லா பக்கங்களும் தொடர் துன்பத் தாலோ அல்லது அறுபடாத தொடர் இன்பத்தாலோ நிரப்பப்பட்டதல்ல; சில பக்கங்கள் இரண்டுமில்லாத காலி பக்கங்களாகவே இருக்கின்றன என்றார் ஜெர்மன் தத்துவ அறிஞர் ஜார்ஜ் வில் லியம் பிரஃடெரிக் ஹெகல் (1770-1831).

(இவர் வரலாற்றுக்கும், தத்துவத் திற்கும் உள்ள இணைப்பைப்பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்த மேதையாவார். காரல் மார்க்ஸ்க்கு இவரது தத்துவம், தர்க்க முறையின் தாக்கம் அதிகம் உண்டு).

தத்துவ அறிஞர்களில்கூட நம்பிக் கைக் குறைந்த சலிப்பும், விரக்தியும் மேலோங்கும் அணி (Pessimistic Philosophers); மற்றொரு வகை எப்போதும் நம்பிக்கை தளராத விரிந்த மனப்போக்கு உடைய தத்துவ ஞானிகள் (Optimistic Philosophers).

முன்னவர்களை Weeping philosophers - எப்போதும் அழுது புலம்பும் அழுகுணிச் சித்தர்கள் என்றும், பின்ன வர்களை எப்போதும் சிரித்து மகிழும் சிரிப்புத் தத்துவ அறிஞர்கள் Laughing Philosophers என்றும் கூறி மகிழ்வது.

சிற்சில நேரங்கள் ஒருவர் மகிழ்ச்சி மற்றவருக்குத் துன்பம் என்ற நிலையே உலகின் நடைமுறையாக உள்ளது! எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியும், துயரமும் - இன்பமும், துன்பமும் - எல்லா நேரங்களிலும் ஏற்பட்டுவிடுமா?

இயலுமா? என்றால், பதில் இல்லை. கடினம்; எளிதில் இவை இணையாது என்பதே யதார்த்தம் - நடைமுறை.

பசியால் மானை வேட்டையாடி சிங்கம் தன் பசியைத் தீர்த்து மகிழ்கிறது.

மான், சிங்கத்திடமிருந்து தப்பியோட முயன்று அதில் தோல்வி அடைந்து, சிக்கிக் கொள்கிறது. இரையாகி அது சிங்கத்திற்கு தன்னை இழந்து சிங்கம் மகிழ்ச்சி அடைகிறது.

அதுபோலத்தான் ஏழைகளும், பாட்டாளிகளும் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைத்து, தனக்குரிய பலன் கிட்டாவிட்டாலும், பணக்காரர்களின் குதிர் நிரம்பி வழிய உதவுகின்றனர்!

ஏழை பாட்டாளிகளின் கண்ணீர், செந்நீர், ஏகபோக முதலாளிகள் - பணக்காரர்களின் பன்னீராக மாற்றப் படுகிறது!

ஒரு பக்கம் வலி மிகுந்த துன்பம்; மறுபுறம், குதூகலம், கொள்ளை லாபத் தினை குன்றெனக் குவித்து மகிழும் குவலயச் சுரண்டல்காரர்களின் மகிழ்ச்சி - என்று நியாயமான துன்பம், நியாயம், நீதியற்ற இன்பம் - இவைதான் இன் றைய உலகின் சமூக அமைப்பாகி உள்ளது!

பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியானார் செல்வர்

என்றார் புரட்சிக்கவிஞர்.

மகிழ்ச்சியை இன்பத்தால் மட்டுமே அனுபவிப்பதைவிட, துன்பம் துவட்டி எடுக்கும்போதும் அனுபவிக்கப் பழகு வது மிகவும் இன்றியமையாத தேவை யாகும் தொண்டறத்தில்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் 669)

இதில் துன்பத்தை ஏற்று துக்கம் வராமல் (கொண்ட லட்சியத்திற்கான விலை என்கிறபோது, மகிழ்ச்சியோடு அதை ஏற்கும் வைர நெஞ்சங்களுக்கு, வையகத்தில் பஞ்சமா? வரலாற்றில் கொஞ்சமா?

நச்சுக்கோப்பையை ஏற்று குடித்து மகிழ்வுடன் தனது வாழ்வை முடித்து, வரலாறாக வாழுகிறார் சாக்ரட்டீஸ்!

தூக்குமேடையை முத்தமிட்ட கொள்கை நாத்திக நன்னெறியார் தீரன் பகத்சிங்,

வசதி, வழக்குரைஞர் செல்வ வாழ்வு துறந்து, சிறையில் செக்கிழுத்து, அறி வையும், மானத்தையும் தவிர, மற்ற எல்லாவற்றையும் துறந்த ஒப்பற்ற தியாக மாணிக்கம் - வைர நெஞ்சம் படைத்த வ.உ.சிதம்பரனார், எதிர் நீச்சல், இழிவுகளைச் சுமந்தும் தன் இலட்சியப் பயணத்தை, ஒரு கையில் மூத்திரச் சட்டி, மறுகையில் அணையாத அறிவுச்சுடர் தாங்கி 95 வயது வரை பட்டிதொட்டியெங்கும் பரப்புரை செய்து வாழ்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார் - இப்படி எத்தனை எத்தனையோ பேர் துன்பத்தால் துவளாது, இன்பத்தை நெருப்பிலும் கண்டு தூய்மையாலே தொண்டறச் செம்மல்கள் ஏராளம் உண்டே!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/96424.html#ixzz3S6AP6J52

தமிழ் ஓவியா said...

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முஸ்லிம் மத குருக்களின் 6 கேள்விகள்

கான்பூர், பிப். 18_ இந் தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா என்பது தொடர்பாக முஸ்லிம் மத குருக்களின் குழு கேட்ட 6 கேள்வி கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை எரிச்சலூட்டியுள்ளது.

அனைத்திந்திய மஜ் லிசே இத்தேயாதுல் முஸ் லிமின் (ஏ.அய்.எம்.அய். எம்.) தலைவர் அசாதுதீன் உவைசி சமீபத்தில் பேசிய பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப் புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உவைசியின் கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து சன்னி உலமாக்கள் கவுன் சில் பொதுச் செயலர் ஹாஜி மொகம்மது சலீஸ் தலைமையிலான முஸ்லிம் மத குருக்கள், ஆர்.எஸ். எஸ். மூத்த நிர்வாகி இந்தரேசை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து ஹாஜி மொகம்மது சலீஸ் கூறியதாவது:

உவைசியின் கருத்தை முஸ்லிம் மக்கள் ஏற்க வில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். பாஜக எம்.பி.க்கள் சாக்ஷி மகராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பேசி யதுபோல், நாடாளுமன்ற உறுப்பினரான உவைசியும் தேவையில்லாத கருத்தை பேசியுள்ளார். அதை முழுமையாக எதிர்க் கிறோம்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றனவா என்பது தொடர்பாக 6 கேள்வி களை கேட்டோம். ஆனால் அது இந்தரேசை எரிச் சலூட்டியுள்ளது என் பதை உணர்கிறோம். அவர் அந்த 6 கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

மாறாக முஸ்லிம்கள் மாநாட்டை நடத்தும்படியும், அதில் தனது பதிலை தெரிவிப்ப தாகவும் கூறினார். ஒரு அறைக்குள் நடந்த கூட் டத்திலேயே இந்த கேள்வி களுக்கு பதிலளிக்க முடிய வில்லை. மாநாட்டில் எப் படி பதிலளிக்க முடியும்.

நமது அரசமைப்பு சட்டமானது அனைவருக் கும் மத சுதந்திரத்தை கொடுத்துள்ளது. மதமாற் றம் குறித்த வரைவு சட் டத்தைக் கொண்டுவர ஏன் தயங்குகிறார்கள்.

முஸ்லிம் மதத்தை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து விலகி செல்ல எநதத் தடையும் இல்லை. யாரையும் கட்டாயப் படுத்தி முஸ்லிமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நாட்டின் நலனுக்காகவே உள் ளோம். அதனால்தான் பிரிவினையின்போது ஜின் னாவையும், பாகிஸ்தா னையும் துறந்தோம். காந் தியாரை தலைவராகவும், இந்தியாவை தாய்நாடா கவும் ஏற்றுக் கொண்டோம்.

மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் அதை எதிர்ப் போம். உவைசியின் கருத் தையும் எதிர்க்கிறோம். காந்தியாரின் வழியில் ஒன் றுபட்டு நாட்டு நலனை யோசிப்போம்.

இவ்வாறு ஹாஜி மொகம் மது சலீஸ் தெரிவித்தார்.

இதனிடையில் முஸ் லிம் மத குருக்கள் குழு வில் இடம்பெறுவதற்கு மறுத்த கான்பூர் நகர முஸ்லிம் மத குருவான ஆலம் ராஜா நூரி, ஆர்.எஸ். எஸ். நிர்வாகியிடம் இது குறித்து பேச வேண்டிய தில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தை சந்தித்துக் கேட்க வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பால் எந்தப் பலனும் கிடைக்கப் போவ தில்லை. நான் ஊரில் இல்லை. இருந்திருந்தா லும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டேன் என்றார் நூரி.

ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை சந்திக்கும் தங்களு டைய குழுவில், நூரியின் பெயர் இடம்பெறவில்லை. கடைசியில்தான் அவரு டைய பெயர் சேர்க்கப்பட் டது என்று சலீஸ் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/96466.html#ixzz3S6BiHa7s

தமிழ் ஓவியா said...

நீங்குமா? நீங்காதா?


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
(விடுதலை, 3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/96503.html#ixzz3SBwBKa96

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்

Print
Email


இந்தியாவில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் முதல் அண்மையில் பிகார் மாநிலத்தில் நடந்த கலவரம் வரை குறிப்பிட்ட மதத்தின்மீது கடுமையான தாக்குதல்கள் நடை-பெற்றுள்ளன. இந்தத் தொடர் தாக்குதலின்-மூலம் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்-துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சுதந்திர-மாகச் செயல்பட அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆந்திரா, ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள இந்த மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மிரட்டி வற்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மத்திய அரசு இந்த அவலத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

அண்மையில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்க அரசு முன்வராததால் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.

இந்தியாவில் 13 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காத நிலையில் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சில குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.

தடுக்க வேண்டிய அரசுகளோ கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றன என பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்-பட்டுள்ளது

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு. அய்யர் ஜாதிவெறியோடு நடத்திய சேரன்மாதேவி குருகுலம் மலேயா நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தந்த ரூ 20,000 நன்கொடையால் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...



கருத்து

’மேக் இன் இந்தியா’ மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுகிறார் பிரதமர் மோடி. ஆனால், வெளிநாட்டுத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க சங்பரிவாரின் பொருளாதாரப் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. என்ன முரண் இது?

- திக்விஜய் சிங்

காங்கிரஸ் பொதுச்செயலாளர்

மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற வார்த்தைகளை அரசியல் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது அழிவை ஏற்படுத்தக்கூடியது; கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுக்கத்தக்க அறிக்கையாகும். அறியாமையின் வெளிப்பாடே அந்த அறிக்கை மதச்சார்பின்மை அவசியம் இல்லை என சொல்வது கவலை தருவதாக உள்ளது.

- ஜிதன்ராம் மாஞ்சி

பிகார் முதல்வர்

மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும் பான்மைத்துவம் மற்றும் சகிப்புத் தன்மை இல்லாத நாடாக மாறியிருக்கிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓ.க்களின் ஆவணங்-களின் தகவல்கள் கூறுகின்றன.

- ஜோ பிட்ஸ்,

அமெரிக்காவின் குடியரசு

கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்.



தேர்தல் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டு-களாகப் பலராலும் சொல்லப்-பட்டு வருகின்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

மனிதனின் வாழ்க்கை உயர்வடைய புத்தகங்கள் மிகவும் முக்கிய-மானவை. ஒருவன் தலைகுனிந்து-படிப்பது-தலைநிமிர்ந்து வாழ்வதற்கே. உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை புத்தகங்களே. புத்தகம் என்பது ஒவ்வொரு முறை திறக்கும்-போதும் வெடிக்கக்கூடிய சக்தி படைத்தது. சாதாரண மனிதனைக்கூட சாதனை மனிதனாக்க புத்தகங்களால் முடியும்.

- இரா.தாண்டவன்,

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.


சொல்றாங்க...

அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.

- ஒபாமா, அமெரிக்க அதிபர்

சொல்றேங்க...

அமெரிக்காவா? நம்ப வைத்துக் கழுத்த அறுக்காம இருந்தா சரி!

இந்தியா_பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அய்.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது.

- சர்தாஜ் அஜிஸ்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான்.

ஏன் சீனாதான் நெருக்கமா இருக்கே, அங்க விண்ணப்பித்தாப் போச்சு!

தமிழ் ஓவியா said...

கர்மவீரன் கோட்சேயாம்!
பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!



சந்திரபிரகாஷ் கவுசிக்

காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள்ளதாக கூறியுள்ளது. நாடு முழுவதும் கோட்சேவிற்கு சிலைகள் அமைக்க வேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந்தது.

இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத்தில் சிலை அமைத்துவிட்டு பிறகு மற்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

இதுகுறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்திரபிரகாஷ் கவுசிக் கூறியதாவது: இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசுகள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித்தரித்து வந்தது. ஆனால் கோட்சே அப்படியாப்பட்டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலைகாரராகப் பார்க்கக்கூடாது. ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேசவிரோத சக்திகள் நம்மை அப்படிப் பார்க்க வைத்துவிட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந்திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம். இதை மத்திய அரசே ஒப்புக்கொண்டு விட்டது.

பிரதமர் மோடிகூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறுவதில் தவறு என்ன என்று புரியவில்லை. மோடி ஒன்றும் பாகிஸ்தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை. இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

சாக்சி

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நடாளுமன்றத்தில் இருந்தே தொடங்க வேண்டும். தெருவிற்குத் தெரு சிலைவைக்கும் முன்பு நாடாளுமன்றத்தில் சிலை வைத்தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும்.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே எங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசை அணுகியுள்ளனர். முதலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைத்த பிறகுதான் மற்ற இடங்களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறுகிறோம்.

சாக்சி, கோட்சேவைப் பற்றிக் கூறியது, பிறகு பின்வாங்கியது பற்றிக் கேட்டபோது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனைவரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்றுதான் பார்க்கிறார்கள். இந்துக்களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது. இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம், விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இனி சுதந்திரம்தான். இவர்கள் நினைத்தால் இந்து தேசத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகளுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்.

அதனால்தான் ஆளும் பா.ஜ.க. அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப்பது இந்து அரசு. ஆகையால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை. கோடான கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பா.ஜ.க. அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

ஆதாரம்: http://www.liveaaryaavart.com/2014/12/demand-for-putting-Godsey-idol-in-parliament.html

கோட்சே போன்ற மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலை வைக்காமல் பாகிஸ்தானிலா வைக்க முடியும்?

- இந்து மகாசபைத் தலைவர் சந்திரபிரகாஷ் கவுசிக், (எக்னாமிக் டைம்ஸ் 17.12.2014)

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வளர சிறந்த வழி


எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு...

கூடுதல்....மாதம், நாள் மறுப்பு......செய்தால்...!

என் திருமண மண்டபத்தில்....

ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்!

அஷ்டமி... நவமி... அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்!

நான் தயார்..

நீங்கள் தயாரா?...

- முகநூலிலிருந்து

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்

-அறிஞர் அண்ணா

பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்-காகப் பணிகளையும் செய்ய வேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச் செய்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும்.

பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்-களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.

அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒருமுறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும், அந்த முறைகளை இளமை குன்றாத தீவிரத் தன்மையோடு கூடியதாக வைத்திருக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக் கொள்ளத்தக்க, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்க வேண்டும்.

பெரியாரைப் பின்பற்றுவோம்

நெடுங்காலமாகப் பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக்கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.

இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன், உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்தி கொள்கிறோம்.

நன்மையறியாமல் இவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துகளைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறைகூறத் துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை.

பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துகளை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறைகூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடை-யின்றி ஆளவேண்டும்.

ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும். நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.

ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுங்கள்

பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறுவோர் இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்க வேண்டும். ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன்.

விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழ முடியாத மூடப் பழக்கங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.

(அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 18.11.1967 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)

தமிழ் ஓவியா said...

பழைமையான சூரியக் குடும்பம்


பூமியைப் போன்ற அளவுள்ள அய்ந்து கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரம் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப் பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழைமையான நட்சத்திரமாகக் கருதப்படும் இதற்கு கெப்ளர் 444 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கெப்ளர் 444அய் பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள அயந்து கிரகங்கள் சுற்றி வருகின்றன. கெப்ளர் 444 குடும்பத்திலுள்ள கிரகங்கள் தங்களது சூரியனை 10 நாள்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்துவிடுகின்றன. அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு தூரத்திற்குள் வட்டப் பாதையில் சுற்றி வந்துவிடுகினறன என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற பழைமையான நட்சத்திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றி வருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது. கெப்ளர் 444 சூரியக் குடும்பமானது நமது சூரியக் குடும்பத்தைவிட இரண்டரை மடங்கு பழைமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழைமையானது என சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் கல்லூரிப் பேராசிரியர் டேனியர் ஹுபர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

புதுப்பா

முகங்கள்
அண்ணனுக்கு ஆனைமுகம்
தம்பிக்கு ஆறுமுகம்
தந்தைக்கும் தாய்க்கும்
பாதிப் பாதி முகம்
பக்தனே நீ எந்த முகத்தோடு
கோவிலுக்குப் போகிறாய்?

- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.

புதுப்பா

பாதையை மாற்று!
விரும்பியதை விரும்பு - உன்னை
விரும்பியதை விரும்பு!
எறும்புக்குத் தெரியாதா
கரும்பின் சுவை!
கண்ணின் பார்வை
காணும் தூரம் மட்டும்!
அறிவின் பார்வையோ
ஆகாயத்தை எட்டும்!
கீதையைப் போற்றாதே!
பாதையை மாற்று! - பெரியார்
பாதைக்கு மாற்றேது!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

மோடி ஏன் மறுக்கவில்லை?

இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.

அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்தும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் உள்ளார்.

மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை அதிகரித்து இதுபோன்ற தொல்லைகள் இருந்தபோதிலும், மோடி தொடர்ச்சியாக அமைதியாக இருப்பதன் மூலம், இந்து தேசியவாதிகளின் உரிமைகளைக் குறித்த எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

அண்மையில் இந்தியாவில் உள்ள ஏராளமான கிறித்தவ வழிபாட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கடந்த டிசம்பரில் கிழக்கு டில்லியில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் முழுவதுமாக தீக்கிரை-யாக்கப்-பட்டது.

கிறித்தவ மதபோதகர் கூறும்போது, புகைமண்டலமாக இருந்தபோது மண்ணெண்ணெய் மணம் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் தீய நபர்களால் செயின்ட் அல்போன்சா சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், பணம் நிறைந்திருந்த உண்டியல் பெட்டியை அவர்கள் தொடவில்லை.

கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் இந்தியாவுக்கே உரிய மதச் சார்பின்மையை நிலைநிறுத்த அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாபெரும் அளவிலான மதமாற்றங்கள் குறித்தும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் கடந்த டிசம்பரில் 200 முசுலீம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜனவரியில் மேற்கு வங்கத்தில் நூறு கிறித்தவர்கள்வரை மறு மதமாற்றம் என்கிற பெயரில், இந்துமதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்து தேசியவாதக் குழுக்களாக உள்ள விஸ்வ இந்து பரிஷத், ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஒளிவுமறைவின்றி தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் பிரச்சாரத்தைச் செய்து இந்துக்கள் அல்லாதவர்களை மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

இந்தியாவில் 80 விழுக்காட்டினருக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். ஆனால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த பிரவீன் தொகாடியா கூறும்போது, அவருடைய அமைப்பான வி.எச்.பி., நாட்டில், நூறு விழுக்காட்டளவில் இந்துக்களாக ஆக்குவது-தான் இலக்கு என்று கூறியுள்ளார். அதற்கு ஒரே வழி மதச்சிறுபான்மையரின் மத நம்பிக்கைகளை மறுப்பதுதான்.

அயோத்தியில் 3,000 முசுலீம்களை ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்ய உள்ளதாக வி.எச்.பி. கூறுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகளால் 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடுமுழுவதும் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் 2000பேர் உயிரிழந்தனர்.

நெருப்போடு விளையாடுவதை வி.எச்.பி. தெரிந்தே செய்கிறது. மோடியின் விருப்பமான திட்டமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால், புதுடில்லியில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மதவாதங்களால் பிரித்துக் கொண்டிருக்கும் வரை, இந்தியா வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார். மத சகிப்புத் தன்மையற்ற தன்மையில் கேளாக்காதாக உள்ள மோடியின் அமைதியை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்; வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.

- சு.மன்னர்மன்னன்

காட்சி

தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.

தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.

விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.

காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.

காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.

பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.

தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.

இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.

அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.

அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.

இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அடிமாடு

செய்தி: தொழில் துறை எவ்வளவு வளர்ச்சி அடைந் தாலும் போதாது; விவசாயம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். - பிரதமர் மோடி

சிந்தனை: ஆமாம்; அதற்காகத் தான் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடி மாட்டு விலைக்கு வாங்கப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/96569.html#ixzz3SIRKFtrY

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சாதனையா?

பகவான்தான் தலை எழுத்தை எழுதுகிறான் என்றால் மக்களின் சராசரி வயது முன்பை விட இப்பொழுது உயர்ந் துள்ளதே - இது கடவுள் சக்தியா? அறிவியல் மருத்துவத்தின் சாதனையா?



Read more: http://viduthalai.in/e-paper/96572.html#ixzz3SIRTif7W

தமிழ் ஓவியா said...

கற்றுக் கொள்ள வேண்டியது


இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)

Read more: http://viduthalai.in/e-paper/96550.html#ixzz3SISLaB4F

தமிழ் ஓவியா said...

ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்

ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட் நகரில் உள்ள வினோதங்களில் ஒன்று அங்கு அமைந்திருக்கும் நாத்திகர்கள் காட்சி சாலை. உலகத்தில் உள்ள அனைத்து மதங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கக் குறிப்புகளும், கடவுள் உருவச் சின்னங்களும் அங்கு வைக் கப்பட்டுள்ளன.

மதங்களாலும், கடவுள்களாலும் அல்லது இவை பற்றிய நம்பிக்கையால் மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்பதை விளக்குவதே அந்த கண்காட்சியின் நோக்கம்.

அங்கு ஓரிடத்தில் விநாயகர் சிலைக்குக் கீழே விநாயகர் விஷ்ணுவின் மகன் என்ற குறிப்பு இருக்கிறது.

அந்தக் கண்காட்சியில் கடவுள், மதம் காரணமாக மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITO14B2

தமிழ் ஓவியா said...

கோபுரத்தை தாங்கும் காக்கைகள்!

இங்கு மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று யாரும் நினைக்கவேண்டாம். ஆனால் நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகம்.

லண்டனின் லண்டன் டவர் என்ற பிரசித்திபெற்ற கோட்டைக் கோபுரங்களில் பல காக்கைகள் வாழுகின்றன. அந்த காக்கைகளையும் அரண்மனை பணியாளர்கள் கணக்கில் சேர்த்து, அரசாங்க செலவில் அவற்றை பராமரிக்கிறார்கள்.

இதற்கு காரணம் என்? அந்தக் காக்கைகள் அகன்று விட்டால் லண்டன் டவர் கட்டடம் இடிந்து விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். என்னே மூட நம்பிக்கை!

தகவல்: நாங்கூர் எஸ்.பாஸ்கரன் எம்.ஏ.,

Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITVzY67

தமிழ் ஓவியா said...

அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்

ஆண்டவன் ரகசியம்

ஆதி காலத்தில் மனிதன் ஓயாத அலைகளைப் பார்த்தான். அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக் கண்டான்; கடும்புயல் வீசி பெருமரங்கள் சாய்வதைக் கண்டான்; இடி இடித்து அதன் ஓசையால் புற்றுக்குள் இருக்கும் நாகமும், புதரில் மறைந்து இருக்கும் புலியும் நடுநடுங்கி ஓடுவதை அவன் பார்த்தான்.

ஏன் இவை ஏற்படுகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. இது விளங்காத காரணத்தால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏன் என்று புரியாது அச்சத்துடன் நின்ற அந்த மனிதனின் முன்னே ஒரு எத்தன் நின்றான். அவை என்ன தெரியுமா? அதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்.

அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் உலகிலேயே முதலில் தோன்றிய பார்ப்பனன் அல்லது புரோகிதன். அச்சத்திலே ஏற்பட்டதுதான் ஆண்டவன் தத்துவம்.

முக்தி பெற்ற பார்ப்பான்!

மதுரை சோமநாதப் பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்த்தவளை கட்டிலுக்கிழுத்தான்- பெண்டாடினான். நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.

தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...! ஒரு பெண்தானே, என எண்ணி அவனை வெட்டி வீழ்த்தினான்.

இரு பாதகம் செய்த அவன் மருட்சி கொண்டு மதுரைக்கு வந்து ஆலவாய் அப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான். அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க, அவன் குரல் கேட்ட பெருமான் ஆட்டத்தை நிறுத்த, உடனே அம்மை பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க அய்யன்,

அன்னையை பெண்டாடிய அடியாரின் கருத்தை விளக்க, அந்த மாபாவிக்கா அருள்புரிவது என்று மீனாட்சி சிணுங்க உமையவளே, உற்றுக் கேள் எத்தகைய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத் தான் வேண்டும் என்று கூறினாராம். பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.

அக்கினியின் ஆசை!

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றா னாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம்.

ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.

ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.
ஆதாரம்: பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100 என்ற நூல்

Read more: http://viduthalai.in/e-paper/96560.html#ixzz3SITopAdp