Search This Blog

9.2.15

பெரியாரை வாசித்தால் மட்டும் போதாது சுவாசிக்கவேண்டும்

பெரியாரை வாசித்தால் மட்டும் போதாது சுவாசிக்கவேண்டும் மாணவ-மாணவிகளே!
பெரியார் 1000 பரிசளிப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை

குன்னூர், பிப். 9- பெரியாரை வாசித்தால் மட்டும் போதாது, சுவாசிக்க வேண்டும் மாணவ, மாணவிகளே! என்று பெரியார் 1000 வினா - விடை போட்டி பரிசளிப்பு விழாவில் உரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். 9.12.2014 அன்று குன்னூரில் நடைபெற்ற பெரியார் 1000 விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

பெரியார் 1000 வினா - விடைப் போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் 1,200 இருபால் மாணவர்கள் பங்கேற்பு

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் சுமார் 1,200 இரு பால் மாணவர்கள் கலந்துகொண்டு, நீலகிரி மாவட்டத்தில் பல பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில், சிறப்பாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் அருந்தொண்டு வாழ்வினைப் புரிந்துகொண்டு தேர்வில் கலந்துகொண்ட அத்துணை மாணவச் செல்வங்கள், அவர்களில் 14 பேர் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி.


அதற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஆசிரியப் பெரு மக்கள், பெற்றோர்கள், அதற்கு ஒத்துழைத்த நண்பர்கள் எல்லோரையும் பாராட்டக்கூடிய இந்த நிகழ்விற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கோவை மண்டல தலைவர் அன்பிற்குரிய சகோதரர் டாக்டர் கவுதமன் அவர்களே, கழகப் பொருளாளர் அருமை மானமிகு டாக்டர் பிறை நுதல்செல்வி அவர்களே, என்றைக்கும் நம் கொள்கை வயப்பட்டவரும், நமக்குத் தோன்றாத் துணையாக இருக் கக்கூடிய அருமை சகோதரர் மானமிகு முபாரக் அவர் களே, தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்பிற்குரிய கொள்கையாளர் பாண்டியராஜ் அவர்களே, இந்த நகரத்தின் முன்னாள் நகர மன்றத் தலைவரும், நகரச் செயலாளருமான கொள்கையாளர் அன்பிற்குரிய அருமை சகோதரர் ராமசாமி அவர்களே, மற்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற நம்முடைய மாவட்டக் கழகத் தலைவர் கருணாகரன் அவர்களே, மாவட்டச் செயலாளர் அவர்களே, மகளிரணி பொறுப்பில் இருக்கக் கூடிய தோழியர்களே, பரிசு பெற்ற மாணவச் செல்வங்களே, இயக்கத் தோழர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய முக்கிய பொறுப்பாளர்களே, நேரத்தின் நெருக் கடியை கருதி, நான் ஒவ்வொருவரையும் தனியே குறிப் பிட்டு சொல்ல முடியவில்லை. அதற்காகப் பொறுத்தருள வேண்டுகிறேன். அனைத்து மாணவச் செல்வங்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.


இது அற்புதமான ஒரு வாய்ப்பாகும்


நான் இங்கே டாக்டர் அவர்களுடைய வீட்டிற்கு வந்து செல்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய நேரத்தில், இங்கே மாணவச் செல்வங்களுக்குப் பரிசளித்துவிட்டுச் செல்லலாம் என்று சொன்னார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென் றால், உங்களையெல்லாம் பார்ப்பதில் மிகுந்த உற்சாகம். உங்களை உருவாக்கிய ஆசிரியப் பெருமக்களைப் பார்ப்பதற்கும். உங்களுக்குப் பெரிய அளவிற்கு ஊக்கத்தை அளித்தப் பெற்றோர்களையும் சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்று சொன்னால், இது உள்ளபடியே இது அற்புத மான ஒரு வாய்ப்பாகும்.


ஒரு லட்சம் பேர் பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் இந்த ஆண்டு பங்கேற்றிருக்கிறார்கள் என்றால், மிகப்பெரிய வரலாறாகும். கழகத்தினுடைய அற்புதமான சாதனைத் திட்டங்களில் இது ஒன்றாகும்.


மாநிலம் தழுவிய அளவில் பெண்கள்தான் அதிகம்


பெரியாருடைய தொண்டு இதுபோன்ற இளைய தலை முறையினருக்குப் போய்ச் சேரவேண்டும். ஏனென்றால், பெரியார் இல்லையென்றால், நாம் எல்லாம் இல்லை. இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள், பெண்கள் தான் அதிகமாகப் பரிசு வாங்கியிருக்கிறார்கள் என்று. போட்டியில் பங்கேற்றதிலும் பெண்கள் அதிகம். மாநிலம் தழுவிய அளவில் பார்க்கும்பொழுது பெண்கள் அதிகம். சில நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்றேன். எல்லா மக்களும் வந்திருந்தார்கள். பெண்களில்கூட இஸ்லாமிய பெண்கள் அதிகம் பரிசு பெற்றனர். ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னவென்றால், ஒரு காலத்தில் பெண்களையே படிக்க வைக்கக்கூடாது என்ற நிலை இருந்தது. இன்றைக்கு உங்களுக்கெல்லாம் தெரியும், நோபல் பரிசு இரண்டு பேருக்குக் கிடைத்தது. ஒரு பெண்ணுடைய பெயர் மலாலா.


இது ஒரு பிரச்சார நிகழ்வு அல்ல!


பாகிஸ்தானில், தலிபான் என்ற ஒரு மதவெறிக் கும்பல் பெண்கள் படிக்கக்கூடாது என்றார்கள். இந்த மலாலா, ஏன் நாங்கள் படிக்கக்கூடாது என்று எதிர்த்துப் போராடினார். பெண்களுக்கு அந்தத் துணிச்சல் வந்துவிட்டது. பெரியாரு டைய வாழ்க்கை வரலாற்றில், இது ஒரு பிரச்சார நிகழ்வு அல்ல; தயவு செய்து பெற்றோர்கள் அப்படி நினைக்க வேண்டாம். பிரச்சாரத்தை வேறு இடத்தில் நாங்கள் செய்வோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால், உடல்நிலை சரியில்லை என்று மருந்து சாப்பிடுகிறோம்; டானிக் சாப்பிடுகிறோம் அல்லவா, எதற்காக இதனை சாப்பிடுகிறோம் என்று குழந்தைகள் கேட்டால்,  டாக்டர் வருத்தப்படுவார், அல்லது மருந்து வியாபாரிகள் எல்லாம் வருத்தப்படுவார்கள் என்பதற்காகத்தான் சாப்பிடுகிறோம் என்றா சொல்வீர்கள்?


அதை சாப்பிட்டால், நம் உடம்பிற்கு நல்லது. நம் உடலில் எந்தெந்த வைட்டமின் சக்தி குறைவாக இருக் கிறதோ, அதற்காகத்தான் அந்த மருந்துகளை சாப்பிடு கிறோம். அதுதான் தந்தை பெரியார் என்கிற மாமருந்து. இந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கெல்லாம் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ, அதை சரி செய்வதற்கு. அதில் பகுத்தறிவு குறைபாடுதான் மிகப்பெரிய குறைபாடாகும். இன்னமும் பார்த்தீர்களேயானால், பக்தி என்ற பெயரில் எவ்வளவு மூடத்தனங்கள் நடைபெறுகிறது.


பெரியாரை வாசித்தால் மட்டும் போதாது; பெரியாரை சுவாசிக்கவேண்டும்!

நாள்தோறும் செய்திகள் வெளிவருகின்றன; அருவருப் பான செய்திகள் வெளிவருகின்றன. ஒரு சாமியார் எச்சில் துப்புகிறான், அதை இவன் வாங்கிவைத்துக் கொள்கிறான். சாமியார் என்கிற பெயரில், எத்தனை சிறிய பிள்ளைகளை பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள். இன்றைக்கு இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றிருக்கிறது என்று சொன்னால், பெரியார் தேவைப்படுகிறார்; பெரியாரைப் படித்துவிட்டீர்களேயானால், பெரியாரை வாசித்தால் மட்டும் போதாது; பெரியாரை சுவாசிக்கவேண்டும்.
பெரியார் அவர்கள் சிறிய வயதிலேயே புத்தகத்தைப் படித்து புரட்சியாளராக மாறியவர். வீட்டில் எதிர்த்து கேள்வி கேட்டார் பாருங்கள், அதுதான் இன்றைக்கு அவர் பெரியார்.


கேள்வி கேட்டவர்கள்தான் விஞ்ஞானிகள்; கேள்வி கேட்டதினால்தான், இந்த ஒலிபெருக்கி, கேள்வி கேட்ட தினால்தான் கம்ப்யூட்டர், கேள்வி கேட்டதினால்தான் செல்போன்.


செல்போனை எப்படி கண்டுபிடித்தார்கள், யாரோ ஒரு சாமியார் கையைத் தூக்கியதால் கண்டுபிடிக்கப்பட்டதா? புதுப்புது தொழில்நுட்பங்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய செல்போன், இப்பொழுது மிகவும் பழசாகப் போய்விட்டது.

காலாவதியான கருத்துக்கள் நம் வாழ்க்கையில் இருக்கலாமா?


மருந்து வாங்கும்பொழுது நாம் என்ன கவனிப்போம்? அந்த மருந்தை வாங்கியதும், அதே பெயருள்ள மருந்தா? அல்லது வேறா? ஏனென்றால், எவ்வளவுக்கெவ்வளவு புரியாதபடி எழுதுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு பெரிய டாக்டர் என்று அர்த்தம். புரியும்படி எழுதினால், அவர் தொழிலுக்குப் புதிதாக வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வார். ஆனால், அந்த மருந்துக் கடைக்காரருக்கு அந்த டாக்டர் என்ன எழுதியிருக்கிறார் என்பது புரியும்.
அதே மருந்துதானா? அந்த மருந்தில் காலாவதி தேதி என்ன போட்டிருக்கிறார்கள்? அவசரத்தில் பழைய மருந்தை கொடுத்துவிட்டார்கள் என்றால், அதனால் பலன் இல்லை. மருந்துக்கு ஒரு காலவரையறை இருக்கிறது. காலாவதியான மருந்துக்கு நாம் இவ்வளவு கவலை எடுத்துக் கொள்கிறோமே, காலாவதியான கருத்துக்கள் நம் வாழ்க்கையில் இருக்கலாமா? அதுதானே மிகமுக்கியம்.


காலாவதியான கருத்துக்களைக் கட்டிக்கொண்டு, நாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் பெரியார் சொன்னார். வேப்பெண்ணெயை, விளக்கெண் ணெயைக் குடிக்கச் சொல்லவில்லை.


காலாவதியான மருந்தை எப்படி உட்கொள்ளக் கூடாதோ, அதேபோல, காலாவதியான கருத்துகளை வைத்து நாம் வாழ்க்கையை நடத்தக்கூடாது என்பதுதான் மிக முக்கியமாகும். அந்தக் காலவாதியான கருத்துகளை வைத்து நம்முடைய வாழ்க்கையை நடத்தினால், அது தவறாகும். பெரியார் மிக அழகான உதாரணம் சொன்னார், ரயில்வே கால அட்டவணை புத்தகம் இருக்கிறது உங் களுக்கெல்லாம் தெரியும்.    ஒருவர் ஒரு குறிப்பிட்ட ரயிலில் செல்வதற்காக ரயில்வே நிலையத்திற்கு வருகிறார். ஆனால், அந்த ரயில் புறப்பட்டு சென்றுவிட்டது. உடனே அங்கிருந்த அதிகாரியிடம் அவர் கேட்கிறார், என்னங்க ரயில் போய்விட்டதா? என்று கேட்கிறார். நான் ரயில்வே அட்டவணையைப் பார்த்துதானே வந்திருக்கிறேன் என்று அவர் சொல்கிறார்.
உடனே அந்த அதிகாரி, நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால், இது சென்ற ஆண்டு போடப்பட்ட ரயில்வே அட்டவணைப் புத்தகம் ஆகும் என்று சொன்னார்.


ரயில்வே அட்டவணை புத்தகம் என்பது ஆண்டுக்கு ஆண்டு புதிதாகப் போடப்படும். ஒரு ரயிலைப் பிடிப்ப தற்கே இப்பொழுது லேட்டஸ்ட்டாகப் போடப்படும் ரயில்வே அட்டவணையைப் பார்த்துத்தான் போகவேண்டும்.
ஓடாத கடிகாரத்தைப் பார்த்து நாம் சென்றோம் என்றால், சரியான நேரத்திற்கு நாம் போய்ச் சேர முடியுமா? இன்னும் சில கடிகாரங்களைப் பார்க்கும்பொழுது சொல்வார்கள், இதைப் பார்க்காதீர்கள், இது மிகவும் சுலோ என்று சொல்வார்கள்.


கடிகாரம் ஓடுமுன் ஓடு!

நம் வீடுகளில் தாய்மார்கள் என்ன செய்வார்கள் என்றால், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்குத் தயார் செய்வதற்காக, ஒரு 10 நிமிடம், முன்னாடியே வைத்திருப்பார்கள்.

கடிகாரம் ஓடுமுன் ஓடு
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
என்று புரட்சிக்கவிஞர் அழகாக சொல்லியிருக்கிறார்.


ஒரே வார்த்தை, கடிகாரம் ஓடுமுன் ஓடு அவ்வளவு சீக்கிரம் செய்யவேண்டும்.
அப்படி வாழ்க்கையை அற்புதமாக நடத்துவதற்கு பெரியாருடைய சிந்தனைகள் என்பவை அரிய செல்வங்கள். சிறந்த வழிகாட்டிகள். வாழ்க்கையை உயர்த்தக் கூடியவை. அதிலும் பெண்ணடிமையை ஒழிக்கவேண்டும் என்று சொல்லும்பொழுது, பெரியார் சொன்னார்,

பெண்களுக்குக் கல்வி கொடுப்பதுதான்!

நான் ஒரு நாளும் பதவிக்குச் செல்லமாட்டேன்; மந்திரியாக மாட்டேன். தப்பித் தவறி ஒருவேளை நான் மந்திரியாக வேண்டும் என்கிற நெருக்கடி எனக்கு வந்து, என்னை மந்திரியாக்கிவிட்டால், கற்பனைக்காகப் பெரியார் சொல்கிறார், அரசாங்கத்தில் உள்ள அவ்வளவு பணத்தை யும் ஒரே ஒரு காரியத்திற்காகத்தான் செலவழிப்பேன். மற்றவைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம். அந்தக் காரியம் என்னவென்றால், பெண்களுக்குக் கல்வி கொடுப்பதுதான் அது. எப்பொழுது சொன்னார் பெரியார் தெரியுமா? 1928 இல். ஏன், அந்தப் பெண்களுக்குக் கல்வி கொடுத்தால்தான், அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி கொடுப்பார்கள். பெண்கள் ஆசிரியைகளாக வர வேண்டும். இவை எல்லாவற்றையும் சொன்னவர் தந்தை பெரியார். சம பகுதியாக இருக்கும் பெண்கள், வளர்ந்தால் தான் சமுதாயம் வளரும். தாய்தான் குழந்தைக்கு முதல் ஆசிரியர்; அதற்குப் பிறகுதான் பள்ளிக்கூட ஆசிரியர்.


எனவே, அப்படிப்பட்ட தந்தை பெரியாரைப்பற்றி நீங்கள் எல்லாம் படித்திருக்கிறீர்கள்; பரிசு வாங்கியிருக் கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.


அடுத்த ஆண்டு இதைவிட பன்மடங்காக எழுதிடவேண்டும்


திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நம்முடைய சகோதரர் முபாரக்பற்றி இங்கே சொன்னார்கள். நாம் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றவர்கள். ஆகவே, இந்த ஆண்டு இவ்வளவு பேர் எழுதினார்கள் என்றால், அடுத்த ஆண்டு இதைவிட பன்மடங்காக நீலகிரி மாவட்டத்தில் எழுதிடவேண்டும், எழுதுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.


ஏராளமான தோழர்கள் ஆங்காங்கே பரிசளிப்பு விழாக்களை நடத்தவேண்டும். அதன்மூலமாக பெரியாரை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். மூட நம்பிக்கையற்ற ஒரு சமுதாயத்தை, தன்னம்பிக்கை உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும்.


பெண்களைப் பாவப் பிறவிகள் என்று சொல்லக்கூடிய ஒரு நூலை...


மதவெறியை கிளப்புகிறார்கள், ஜாதி வெறியை கிளப்பு கிறார்கள்; பெண்ணடிமைத் தனத்தை நீக்கவேண்டும். பெண்களைப் பாவப் பிறவிகள் என்று சொல்லக்கூடிய ஒரு நூலை, இப்பொழுது தேசிய நூலாக ஆக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.


பெண்கள் எதற்காக வேலைக்குச் செல்கிறீர்கள். நீங்கள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும்; வீட்டி லேயே சமைத்துப் போட்டு நல்ல வேலைக்காரியாக இருங்கள் என்று ஒரு தத்துவத்தை சொல்லக்கூடியவர்கள், இன்றைக்கு எப்படியோ பதவிக்கு, பொறுப்புக்கு வந்திருக் கக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


ஆகவேதான், பெரியார்தான் நமக்கு ஒரு பாதுகாப் பானவர். அந்தப் பெரியாருடைய கருத்துகளை நம் பிள்ளைகள் தெரிந்துகொண்டால், கேள்வி மேல் கேள்வி ஞானம் ஏற்படும்.


சர் அய்சக் நியூட்டன் அவர்களை நினைத்தவுடன் உங் களுக்கு என்ன ஞாபகத்திற்கு வரும். ஒரு பழத்தை மேலே எறிந்தவுடன், கீழே விழுந்தது. ஏன் இந்தப் பழம் மேலே எறிந்தால், கீழே விழுகிறது. ஏன் மேல் நோக்கிச் செல்லவில்லை; ஏன் கீழ்நோக்கி வருகிறது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், புவி ஈர்ப்பு சக்தி. அதுதான் விஞ்ஞானத்திற்கே அடிப்படையாகும்.


செல்போன் இன்றைக்கு எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக் கிறது. முதலில் வந்த செல்போன் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது? காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டே வருகிறது. பல பொருள்களைத் தேவையில்லாமல் செய்துவிட்டது ஒரு செல்போன்.


கடிகாரம் தேவையில்லை, அலாரம் தேவையில்லை, கேமிரா தேவையில்லை, வானொலி தேவையில்லை, டார்ச் லைட் தேவையில்லை, கால்குலேட்டர் தேவையில்லை, கணினி தேவையில்லை இதுபோன்ற பல பொருள்கள்.


முன்பெல்லாம் சொல்வார்கள், அவனின்றி ஓரணுவும் அசையாது என்று. செல்போனின்றி ஓரணுவும் அசையாது என்றாகிவிட்டது.
வேலைக்காரி முனியம்மா கேட்கிறார், எத்தனை மணிக்கு அம்மா வரவேண்டும் என்று. கீரைக்காரி முத்தம்மா சொல்கிறார், ஏங்க, வாங்கினால் வாங்குங்கள், அந்த ஊரில் இந்த விலை விற்கிறதாம், எனக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று சொல்கிறார்.


பெரியாரின் கருத்துகளை தெரிந்துகொள்ளவேண்டும்


ஆகவே, மாணவச் செல்வங்களே, ஆசிரியப் பெருமக் களே, பெற்றோர்களே, தோழர்களே, அறிவை விரிவு செய்; அகண்ட மாக்கு; விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை என்று புரட்சிக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.


எனவேதான், நம்முடைய பிள்ளைகள் வெறும் பாடப் படிப்போடு நிறுத்திவிடக் கூடாது; நிறைய செய்திகளைப் படிக்கவேண்டும். பெரியார் 1000 வினா- விடை தேர்வு எழுதும்பொழுது, தேர்வுக்காகவோ, மதிப்பெண்ணுக்காக படிக்கக்கூடாது. பெரியாரின் கருத்துகளை தெரிந்துகொள்ள வேண்டும். பரிசு வாங்காத பிள்ளைகள் எல்லாம் புத்தி சாலிகள் அல்ல என்று பொருள் அல்ல; பரிசு பெற்றவர்கள் கொஞ்சம் மதிப்பெண்கள் அதிகமாக வாங்கினார்கள், அவ்வளவுதான். அதனால், அவர்களுக்கும் சேர்த்துப் பாராட்டுகள்.
மிகப்பெரிய அளவிற்கு இதுபோன்ற விழாக்கள் நடை பெற வேண்டும் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், 

வணக்கம், நன்றி!

நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை

பரிசளிப்பு விழாவிற்குத்தான் என்னை அழைத்து வந்தார்கள். நானும் அதற்காகத்தான் வந்தேன். இங்கே வந்து பார்த்தவுடன், எனக்கு 82 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள்; வயதாகிவிட்டது என்பதை ஞாபகப்படுத்தாமல் இருந்தாலே நல்லது. சிறிய பிள்ளை களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடினால், அவர் களுக்கு உற்சாகம் ஏற்படும். எனக்கு வயதாகி விட்டது என்றால், எனக்கு 28 வயது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  என்னைப் பார்த்து 82 வயது, 82 வயது என்று இவர்கள் இங்கே சொல்லிக் கொண்டிருந்தால், எனக்கே அப்பொழுதுதான் 82 வயது என்று நினைவிற்கு வருகிறது. ஆகவேதான், நான் பிறந்த நாளை கொண்டாடு வதில்லை.


எனக்கு இந்தப் பிறந்த நாளில் என்னவொரு மகிழ்வு என்றால், இந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்பொழுது வயது குறைந்துகொண்டே இருக்கிறது. உங்களோடு ஒருவராக இருக்கக்கூடிய அளவிற்கு, மாணவச் செல்வங்களைப் பார்க்கும்பொழுது, என்னுடைய நினைவுகள் மாணவப் பருவத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.


இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                   --------------------"விடுதலை” 9-2-2015
Read more: http://viduthalai.in/page-4/95880.html#ixzz3RFxKW0rI

21 comments:

தமிழ் ஓவியா said...

தேர்தல் தோல்வி மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு கிடைத்த பரிசு அன்னா ஹசாரேவின் ஞானோதயம்


புதுடில்லி, பிப்.11_ டில்லி தேர்தலில் பாஜக விற்குக் கிடைத்த பலத்த தோல்வியை அடுத்து தனது கருத்தை அன்னா ஹசாரே தெரிவித்தார். மத்திய அரசால் குறுக்கு வழியில் இயற்றப்பட்ட நில உரிமைச் சட்டம் மற்றும் கருப்பு பணம் கொண்டு வருவோம் என்று கூறி அதனை செய்யத் தவறியது தான் தோன்றித்தனமாக முடிவு களை எடுத்தது போன்ற சர்வாதிகாரத்தனத்திற்கு கிடைத்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்பு கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்று கிளம் பிய இரண்டு பேர்களில் ராம்தேவ் பாபா மற்றும் அன்னா ஹசாரே முக்கிய மானவர்கள். தேர்தல் காலத்தில் மோடியை மிகவும் புகழ்ந்த அன்னா ஹசாரேவிற்கு டில்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மோடி சர்வாதிகாரி யாகத் தெரிகிறார். மோடி கடந்த நாடா ளுமன்ற குளிர்காலக் கூட் டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் விவாதத்தின் மூலம் சட்டத்தை நிறைவேற்றட துணிச்சலில்லாமல் அவசர சட்டமாக பல சட்டங்களைக் கொண்டு வந்தார்.

இதில் முக்கிய மானது நில அபகரிப்புச் சட்டம். இந்தச் சட்டத் தின் மூலம் விவசாயி களின் நிலத்தை அவர் களது அனுமதியின்றி எடுத்துக்கொள்ள முடியும் அதே நேரத்தில் விவசாய நிலங்களுக்கான இழப் பீட்டையும் அந்த நிறு வனங்கள் தர தேவை யில்லை என்ற பல்வேறு விசித்திரமான சட்டவிதி களுடன் நிலஅபகரிப்புச் சட்டம் அவசர அவசர மாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச்சட்டம் குறித்து அன்னா ஹசாரே கூறி யுள்ளதாவது: நமது நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட்து. ஆனால் இன்றுவரை விவ சாயிகளின் தற்கொலை தொடர்கிறது. மோடி தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்துள் ளது மிகவும் வேதனை தரக்கூடிய செய்தியாகும். புதிய நில உச்சவரம்பு சட்டம் விவசாயிகளின் தற்கொலையை மேலும் ஊக்கப்படுத்தும் தீமை யான சட்டமாக இருக்கும். மக்களின் நலனில் அக்கறை வைத்துள்ளவர் போல் தேர்தல் காலங் களில் நாடுமுழுவதும் சொல்லிகொண்டு திரிந் தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் விவசாயி களுக்குக் கடுமையான ஏமாற்றத்தைத் தந்து விட்டது. மோடி விவசாயி களை ஏமாற்றி விட்டார். நில அபகரிப்புச் சட்டத் தின் மூலம் விவசாயி களுக்கு தங்களின் நிலத் தின் மீதிருந்த உரிமை முற்றிலும் இல்லாமல் போனது. இது குடிமக் களுக்கு எதிரான சட்ட மாகும். சர்வாதிகார நாட் டில் தான் இதுபோன்று மனம்போன போக்கில் சட்டமியற்றப்படும். கடந்த காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட் டமே மேல், அந்த சட்டத் தில் விவசாயியிடம் வாங்கிய நிலத்தில் அய்ந்து ஆண்டிற்குள் எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்காவிட்டால் திரும்ப விவசாயியிடமே கொடுத்துவிடவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த அரசு அதை நீக்கி முதலாளி களை முழுமையாக நில உடமையாளராக ஆக்கி விட்டது. ஆங்கிலேயர் களின் காலத்தில் கூட இப்படிப்பட்ட ஒரு கொடூர சட்டம் இல்லை. மோடி முதலாளிகளின் கைப்பாவையாகிவிட்டார். இது போன்ற விவசாயி களுக்கு விரோதமான சட்ட்த்தைக் கொண்டு வந்ததன் மூலம் மோடி மக்களாட்சியில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நடத்த தொடங்கி விட் டார் இதன் காரணமாக டில்லி மக்கள் மோடியை தூக்கி எறிந்துவிட்டார்கள் என கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96000.html#ixzz3RRgdzCNU

தமிழ் ஓவியா said...

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

- ஊசி மிளகாய்

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!

அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க. அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர் உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!

இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!

இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல் மன்னர்களின் ஆணவம் குறையுமா?

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/96005.html#ixzz3RRglr128

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயத்தில்...
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

Read more: http://viduthalai.in/page-2/95991.html#ixzz3RRh0Ly44

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மனக் குழப்பம்

கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலை வில் உள்ள ஊர் திரு விடை மருதூர் இங்குள்ள மகாலிங்க சுவாமி கோவில் 20 ஏக்கர் பரப் பளவில் 4 கோபுரங் களைக் கொண்டது. இங்குள்ள நந்தி, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியை விடப் பெரியது. இங்குள்ள மூகாம்பாள் சன்னதி வடநாட்டுப் பாணியில் இருப்பது தனிச் சிறப்பு.

இங்கு பட்டினத்தார் நீண்ட நாட்கள் தங்கி சிவனை வழிபட்டதால் அவருடைய சிலை இக்கோவிலில் உள்ளது. மனக் குழப்பம், மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் அசுவமேத பிரகாரத்தில் தங்கி நிவர்த்தி பெறலாமாம்.

இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் மகிமை எழுதி வைத்தவர்கள் யார்? தங்கள் கோயி லுக்கு இப்படி ஓர் அற்புத சக்தியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தால்தான் கோயில் வியாபாரம் ஜோராக நடக்கும்.

ஒரு கேள்வி: மகா லிங்க சுவாமி இருக்கும் அந்தத் திருவிடை மரு தூரில் மன நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் யாரும் இல்லையா? அல்லது மனநல மருத்துவர்கள்தான் இல் லையா?

Read more: http://viduthalai.in/page1/95964.html#ixzz3RRjCn7am

தமிழ் ஓவியா said...

மசூதி மற்றும் தேவாலயங்களில் இந்து சாமி சிலைகள் வைக்க வேண்டுமாம்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆதித்யநாத் யோகி ஆவேசக் கூச்சல்!

வாரணாசி பிப் 10 இந்த நாடு இந்து நாடு, இங்கு உள்ளவர்கள் இந் துக்கள் இங்கு இந்து கோவில்கள் மட்டுமே இருக்கவேண்டும், ஆகை யால் மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இந்து தேவ தைகளின் சிலைகளை இந்து அமைப்புகள் வைக்கவேண்டும் அதை இந்துக்கள் வணங்க முன் வரவேண்டும் என்று ஆதித்திய யோகி கூறினார்.

மத்தியில் பாஜக ஆட்சிப்பீடத்தில் அமர்ந் ததில் இருந்து தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர். இந்து நாடு இந்து மக்கள், அகண்ட இந்து ராஜ்யம் என்ற பேச்சு ஒரு புறம் தொடர்கிறது, மறு புறம் மதமாற்றம் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்களும் தொடர் கிறது, இவை அனைத்தும் ஆட்சியில் இருக்கும் பாஜக எம்பிக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே வாணா சியில் விஷ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்தியநாத் ஜோகி பேசிய போது கூறியதாவது: இது இந்து நாடு இங்கு இந்துக்கள் மட்டுமே இருக்கவேண் டும், மக்காவில் யாராது வேற்று மதத்தவர் செல்ல முடியுமா?

வாடிகனில் வேறு மதத்தவர் செல்ல முடியுமா? ஆனால், இந்தி யாவில் யாரும் வருகி றார்கள், இதைக் கேட்க இதுவரை இருந்து வந்த அரசுகளுக்குத் துணி வில்லை. தற்போது இந்துக்களுக்கான அரசு அமைந்துள்ளது. இதை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்திய சாமியார்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நான் வாரணாசி விஷ்வநாதர் கோவிலுக்கு வரும் போதெல்லாம் வரும் வழியில் உள்ள மசூதி என்னை பார்த்து நகைக்கிறது, நான் அவ மானத்தால் தலைகுனிந்து போகிறோன், இந்துக் களின் புனித நகரத்தில் மசூதியா? என்ற கேள்வி என்னை அரித்துக் கொண்டே இருக்கிறது. மதர்தெரசா போன் றவர்களை இங்குள்ளவர் கள் புனிதர்களாக பார்க் கின்றனர். அவர் புனித மானவரா? யாருக்குத் தெரியும்? ஆனால், இந்து சாமியார்களை உலகில் உள்ள நாட்டு மக்கள் எல் லாம் மிகவும் புனிதமான வர்களாகப் பார்க்கின்ற னர். அவர்களுக்கு என்று மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. பாகிஸ்தான் இஸ்லாமியர்களை உலக நாடுகள் விரட்டுகின்றனர். ஆனால், நாம் இங்கே இஸ்லாமியர்களுக்கு வச திகள் செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் அந்த காலம் முடிந்து விட் டது. இந்துநாடு என்பதற் கான சங்கொலிகள் ஒலித்து விட்டன. இனி நாம் செய்யவேண்டியது இதுதான்; ஒவ்வொரு மசூதி தேவாலயங்களை இந்துக் கோவிலாக மாற்றவேண்டும் அங்கு இந்து சாமிசிலைகளை வைக்கவேண்டும் அனைத்து இந்துக்களும் உள்ளே சென்று வழிபட வேண்டும்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பிள்ளையார் மற்றும் ராமர் சிலைகளை ஒவ் வொரு மசூதி மற்றும் தேவாலயங்களில் வைப்பேன். யாருக்கு துணி விருக்கிறது என்னை தடுக்க என்று அப்போது நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/95969.html#ixzz3RRjbOkkY

தமிழ் ஓவியா said...

வேலை வாய்ப்பு அலுவலகம் தேவையில்லையா?


வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட அய்ந்து பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-2008-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய் கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

இந்த விதி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் அய்ந்து பேரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்த குமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தர விட்டது.

எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக் கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். இது ஒரு நியாயமானதாகக் கருதப்பட முடியாது.

இந்தத் தீர்ப்பின் படி பார்த்தால் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கே வேலையில்லை என்றாகி விடுகிறதா இல்லையா?

மாநில அரசுப் பணியாளர்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படாத பணிகள் இந்த வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தது.

ஆசிரியர்களுக்கான பணி நியமனமும் அவ்வாறே நீண்ட காலமாக நடந்து வந்தது கல்வி மாநிலப் பட்டியலி லிருந்து பொதுப் பட்டியலுக்கு நெருக்கடிக்காலம் என்ற காரிருள் காலத்தில் களவாடிச் சென்றதிலிருந்து மாநில அரசுகளின் உரிமை ஒவ்வொன்றாகப் பறி போக ஆரம்பித்தன.

மத்திய அரசின் தலையீட்டால் (NCTE) தொடக்கப் பள்ளிக்கான ஆசிரியர்களின் தேர்வுக்கூட நுழைவுத் தேர்வின் மூலம் நடைபெறத் தொடங்கி விட்டது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பத்தாண்டு, பதினைந்து ஆண்டு காலம் காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் கை பிசைந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்தக் குளறுபடி களையாவது செய்து, இப்பொழுது இருந்துவரும் சமூக நீதியின் கழுத்தை நெரிப்பதில்தான் கவனமாகவும், குறியாகவும் இருக்கின்றன - ஆதிக்க சக்திகள்.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யும் முறையை நிலை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/95948.html#ixzz3RRjogZ9O

தமிழ் ஓவியா said...

தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

Read more: http://viduthalai.in/page1/95945.html#ixzz3RRjzfWwY

தமிழ் ஓவியா said...

சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை:
அரசு மறுபரிசீலனை செய்க!

தமிழர் தலைவர் அறிக்கை

இப்பொழுது அம்பேத்கர் பெயரில் உள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் - ஒரு நூற்றாண்டுக்கு மேற் பட்ட பழைமையான வரலாற்றுப் பெருமைமிகுந்த ஒன்றாகும்.

தேவையின்றி அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதை, மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பது நியாயமானதேயாகும்.

உயர்நீதிமன்றம் அருகில் இருப்பதே உகந்தது

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மிக அருகிலேயே அத்தகைய அம்பேத்கர் பெயரில் உள்ள சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டதின் நோக்கமே (பிரிட்டிஷ் அரசு காலத்தில்) சட்டம் படிக்கும் மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளையும் பார்த்து, கேட்டு அனுபவம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்த அது உதவ வேண்டும் என்பதாகும்.

இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாது, தீர்க்க வேண்டிய மக்கள் நலப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கும் நிலையில், தேவையின்றி, இந்த மாற்றம் தேவைதானா?

பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டாமா?

அதுவும் மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்த தமிழக அரசு ஏன் தேவையற்ற பிடிவாதம் காட்டவேண்டும்?

சட்டக் கல்லூரி மாணவர்கள் இதை எதிர்க்கிறார்கள்; மாற்றம் கூடாது என்று அறவழியில் அறப்போர் நடத்துகிறார்கள் என்றால், உடனடியாக சட்ட அமைச்சர் பொறுப்பில் உள்ளவரோ, தலைமைச் செயலாளரோ அல்லது சட்டத் துறை செயலாளரோ, முதலமைச்சரோ அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான குறைகளைக் கேட்டு, இடம் மாற்றத்திற்கான காரணம், அவசியம் என்னென்னவென்று விளக்கிடுவதுதானே ஜனநாயக முறை - குடியாட்சி முறை!
அதை விடுத்து, மாணவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்திடுவது, இரத்தம் சிந்த வைப்பது எவ்வகையிலும் நியாயமும் அல்ல; மனிதாபிமானமும் அல்ல!

இது பெரும் மாணவர் கிளர்ச்சியாக நாடு தழுவிய அளவில் மாறிவிடும்; விரும்பத்தகாத நிலையை தமிழக அரசே, தேடிக்கொள்வது எவ்வகையிலும் புத்திசாலித் தனமல்ல!

மறுபரிசீலனை செய்க!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது பழமொழி; இப்பொழுது ஆண்டிக்குப் பதிலாக அரசே ஊதிக் கெடுக்கலாமா?

உடனடியாக மாணவப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி முடிவு செய்க. மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுக!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

9.2.2015

Read more: http://viduthalai.in/page1/95901.html#ixzz3RRklzbuR

தமிழ் ஓவியா said...

தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந் திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக் காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர். - (விடுதலை, 5.4.1965)

Read more: http://viduthalai.in/page1/95902.html#ixzz3RRlWbu3X

தமிழ் ஓவியா said...

வயிற்றுக் கொழுப்பை குறைக்கலாம்!

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும் பாலோர் வயிற்றுக் கொழுப்பால் அவதிப்படு கின்றனர். வயிற்றுக் கொழுப்பை குறைக்க எளிய வழிகள் உள்ளது. அதை கடைப்பிடித்தால் பெருத்த வயிறு, தட்டையான வயிறாக மாறும். வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் வருமாறு:

துரித உணவுகளை தவிர்த்தல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை உண்ணலாம்.

தண்ணீர்

தாகம், அயர்ச்சி ஏற்படும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற கொழுப்பு படியும். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ளவேண்டும். குறைந்தது 6 முதல் 8 குவளை தண்ணீராவது குடிக்கவேண்டும்.

உடற்பயிற்சி

பல மணிநேர உழைப்பு மற்றும் வெகு தூர ஒட்டப்பயிற்சி ஆகிய இரண்டும், தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கொழுப்பு அதிகமாக குறையும்.

சர்க்கரை வேண்டாம்: நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை குறைப்பது நல்லது. இதற்குப் பதிலாக தேன், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்.

சோடியம் கலந்த உப்பு தவிர்த்தல்: சோடியம் கலந்த உப்பை தவிர, பொட்டாசியம் கலந்த உப்பு, எலுமிச்சை உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி உணவுகள்: வயிற்றுக் கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக கார்டிசால் உள்ளது. மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலை வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கானிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்.

தூக்கம்: போதுமான அளவு உறங்காமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். 6 முதல் 8 மணி நேரம்வரை உறக்கம் மேற்கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95914.html#ixzz3RRlza7LJ

தமிழ் ஓவியா said...

ஆதி சங்கராச்சாரி அவதார ரகசியம்

ஆதி சங்கராச்சாரி ஏன் இவ்வுலகில் அவதரித்தார்! அவர் அவதாரித்தன் உள் ளோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரம சிவனே காதோடு காதாக தனது ஓய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்ட வாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.

கலியுகத்திலுண்டாகும் பக்தர்களுடைய சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொல்லுகின் றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக் கொள்ளத்தக்கது; ஒருவர்க்குஞ் சொல்லத் தக்கது அன்று அம் பிகையே!

பாவ கர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறழ்ந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற் கலியுகத்தில், எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்கவேன். மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல்வேன், கேட்பாயாக!

இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்பவர்கள்; வேதபோதக வாக்கியங்களுக்குமாறு பாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்;

பெரிய சாத்திரங்களால் அத்வைதத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர்களாகிய இவர்களால், குரு ஆசாரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.

அப்போது அவர்களைக் கரையேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற்றில் சங்கரர் என்னும் திருநாமமுடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்
(சங்கரதிக்கு விஜயகாவிய வசனம் நூல் பக்.2)
எப்படியிருக்குக் கதை?

Read more: http://viduthalai.in/page-1/95709.html#ixzz3RRneIIbj

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்

அங்கு: அலாஸ்காவில் மெண்டென் ஹால் பனிப் பாறை மிகவும் புகழ் பெற்றது. இந்தப் பாறைப் பிளவுக்குள் 50 அடி ஆழம் கயிறு மூலம் சென்று இறங்கி விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார் மியரிக் சில இடங்களில் தண்ணீர் மேலே வந்து கொண்டிருந்தது.

இங்கு: 2 கிலோ தங்கக் கம்பியை எல்இடி பல்புகளில் மறைத்து (ஒவ் வொரு பல்புக்குள்ளும் மெல்லிய தங்கக் கம்பிகள் இருந்தன) அபிதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திய கேரள இளைஞர் கைது.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர். நீங்கள் இரயில்வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டு பிடித்தவர் .ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.

நீங்கள்கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்றகிறித்தவர்.
நீங்கள்திரைப்படங்களை பார்க்காதீர்கள். ஏன் பார்க்கக் கூடாது என்றசந்தேகம் தோன் றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராமபோனை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

நீங்கள் வானொலியை கேட்காதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் மார் கோனி என்ற கிறித்தவர்.
நீங்கள்கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக்கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத் தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக் ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன்பேனாவை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும்கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தா தீர்கள்.ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.

நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
இந்துக்களே!

உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெ னில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக் களை திரும்பி வரும்படி செய்யுங்கள் ஏனெனில் அது முஸ்லிம் நாடு.

குறிப்பு: நம்நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்தவர்கள் (இந்துக்கள்), கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதகலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியின ரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப்பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான்.
(இவை உதகையில் நடந்த இந்து முன் னணி மாநாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டது).

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRo7277O

தமிழ் ஓவியா said...

அப்பளம், பார்ப்பனர்களால் தயாரித்தது?

அப்பளம்கூட பார்ப்பனர்களால் (Prepared by Brahmins) தயாரிக்கப் பட்டது என்று விளம்பரம் செய்யும் போக்கிரித்தனம் - ஜாதி ஆணவம்!

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoHHFl2

தமிழ் ஓவியா said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!

விவேகானந்தர் சிகாகோ செல்வ தற்கு பொருள் உதவி செய்தவரும் ,சிகாகோ மாநாடு முடித்து திரும்பிய விவேகானந்தருக்கு வரவேற்பு அளித்த வருமான ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி தான் 1897 மே 14 கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாடார்கள் நுழைந்து வழிபாடு செய்ததை கண்டித்து,

நாடார்கள் பிறப்பால் தாழ்ந்த சாதிகாரர்கள் ,அவர்களுக்கு கோவில் நுழைவு மறுக்கப்பட்டது , மீறி நுழைந்ததால் கோவில் தீட்டாகிவிட்டது எனவும், கோவிலை மத சடங்குகள் மூலம் தூய்மைபடுத்த நாடார்கள் ரூ.2500/ தர வேண்டும் என ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மதுரை சிவில் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தார் என்ற விவரம் தெரியுமா? உங்களுக்கு

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRodFFpZ

தமிழ் ஓவியா said...

என்ன நான் சொல்றது.. சரிதானே

பாஜகவின் அடியாள் சங்கங்களான வி.ஹெச்.பி. போன்ற கோஷ்டிகள், மதமாற்றத்தை செய்வதற்கு ஒரு பெயர் வைத்துள்ளார்கள். அதற்கு பெயர் கர் வாபஸ். அதாவது வீட்டுக்கு திரும்ப வேண்டும்.

மோடி தேர்தல் நேரத்தில் என்ன சொன்னார்? நம் நாட்டை ஏமாற்றி வெளி நாட்டில் பதுக்கி வைத்த பணத்தை மீட்டு வாபஸ் செய்து நம்ம கணக்கில் வைப்பேன் என சொன்னாரே, அதை முதல்ல செய்கய்யா.

எங்களுக்கு வேண்டாம் GHAR VAPASI கர் வாபஸ்
எங்களுக்கு வேண்டியது PAISA VAPASI பைசா வாபஸ்.
என்ன நான் சொல்றது.. சரிதானே.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRojHYVD

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளட்டுமே?
செம பஞ்ச்:

கேள்வி: நாத்திகர்களுக்கு ஏன் மத பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்? கடவுள்கள் பற்றிய கருத்தில் நாத்திகர்களுக்கு அசவுகரியம் இருக்கும் நிலையில், கடவுள் பெயரால் உள்ள பண்டிகைகளை மட்டும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது ஏன்?

பதில்: விஞ்ஞான முறையில் உரு வான மருத்துவ வசதிகளை ஆத்திகர்கள் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண் டும்? அவர்கள் பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள் ளட்டுமே?

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRopUR1W

தமிழ் ஓவியா said...

தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தை முறியடிப்பீர்!

உலகில் தோன்றிய முதல்மொழி தமிழே
தனித்தியங்க வல்ல மொழிதமிழ்
உலகில் வாழும் மொழிகளுள் இன்றும்
உயிர்ப்புடன் வாழ்வது தமிழே!

இறவா இலக்கிய இலக்கணம் படைத்த
எழுத்துப் பேச்சு மொழிதமிழ்
ஆரிய ஆங்கிலத் திணிப்பை மீறி
அழியா மொழி நம் தமிழே!

கிறித்துவச் சமயம் பரப்பவந்த அய்ரோப்பா
பாதிரிகள் தமிழைக் கற்றனர்
அரும்பெரும் தமிழின் ஆற்றலை அதன்
கட்டமைப்பைக் கண்டு வியந்தனர்
தேர்ந்த காவியம் படைத்தார் திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் வரைந்தார்
திருக்குறள் சங்க இலக்கியத்தை மொழி
பெயர்த்து உலகிற்கு உணர்த்தினர்!

ஆரியம் தமிழில் கலந்ததால் தெலுங்கு
கன்னடம், மலையாளம் தோன்றின
புராண இதிகாச புனைவுகள் புளுகுகள்
பொய்யும் புரட்டும் எழுந்தன
இயற்கை வழிபாடு இல்லாத கற்பனை
கடவுள் உருவ வழிபாடாக
ஆயக்கலையெல்லாம் ஆரிய மாக்கி
பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தினர்!

பொறியியல் மருத்துவம் வானியல் இசை
சிற்பம் கட்டடக் கலைபோன்று
அறிவுத் திறமுடை நூல்களை ஆரியத்தில்
பெயர்த்து நீர்நெருப்பில் அழித்தனர்
பெருவுடையார் பிரகதீஸ்வரர் சிற்றம்பலம் சிதம்பரம்
திருவரங்கம் சிறீரங்க மாக்கினர்
திருவுடை தமிழக ஊரை யெல்லாம்
வடமொழியால் ஆக்கியவர் பார்ப்பனர்!

திருவள்ளுவர் நாளைக் கொண்டாட திருகு
தாளங்கள் பாரதியைத் திணிக்கின்றார்
திருக்குறளைத் தேசிய நூலாக்க மறுக்கின்றார்
இங்கே ஒளிந்திருக்கும் ஆர்எஸ்எஸ்
குரங்குதன் குட்டியை விட்டாழம் பார்க்க
தருண்விஜய் பாராட்டு!

காவிகள்
பாராட்டில் கிரங்காதீர் கீதையைத் தேசிய
நூலாக்க ஆடிய நாடகமே!

இந்தி எதிர்ப்பில் இன்றுவரை தமிழகம்
விழிப்புடன் இருப்பதைக் கண்டு
இந்துவியக் கும்பல இப்போது தங்கள்
அணுகு முறையை மாற்றிக் கொண்டு
தமிழைப் போற்றியும் திருக்குறளை ஏற்றியும்
புதிய வடிவமெடுக் கின்றார்
தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தின்
தந்திரத்தை முறியடிப் பீரே!
கவிஞர் இனியன், திருச்சி

Read more: http://viduthalai.in/page-1/95715.html#ixzz3RRr7RCHX

தமிழ் ஓவியா said...

கம்யூனிஸ்டுகளின் கடவுள் கொள்கை

கம்யூனிஸ்டு ஒழுக்கமுறை என்று ஒன்று இருக்கிறதா? ஆம் நிச்சயமாக இருக்கிறது. நமக்கென்று தனி நெறிமுறையில்லை என்று அடிக்கடி கருத்துக் கூறப்படுகிறது. பூர்ஷ்வாக்கள் நம்மைக் கம்யூனிஸ்டுகள் எல்லாவித ஒழுக்க முறைகளையும் நிராகரிக்கிறார்கள் என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். இது பிரச்சினையைக் குழப்பும் முறையாகும்.

தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகும். எந்த அர்த்தத்தில் நெறிமுறைகளை நிராகரிக்கின்றோம். பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடுக்கப்படும் அர்த்தத்தில் கடவுளின் கட்டளைகள் என்னும் அடிப்படையில் கூறப்படும் நெறிமுறை என்னும் அர்த்தத்தில் கூறப்படும் அவைகளை நிராகரிக்கின்றோம்.

இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக ஒன்று கூறுகிறோம். தமக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. மதக் குருக்களும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக்களும் கடவுளின் பெயரைக் கிளப்பி விட்டு - அவர்கள் சுரண்டல்காரர்கள் என்னும் முறையில் அவர்களுடைய நல உரிமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நன்கு தெளிவாக அறிவோம்.

- வி.இ. லெனின்
(மதத்தைதப்பற்றி எனும் நூல் பக்.103)

Read more: http://viduthalai.in/page-1/95720.html#ixzz3RRs5IJ4n

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து சுதந்திரத்திற்கு முன்பு பின்பு என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பெண்ணுரிமைப் போராளிகள் எனப் படுபவர்கள் எல்லாம் மத ரீதியாக பெண்ணடிமைக்கு நியாயம் கற்பித்தனர்.

ஆனால் அக்கால கட்டத்தில் தந்தைபெரியார் ஒருவரே பெண்களை அடிமையாக்குவதில் முதலிடம் மதம் தான் என்று உறுதியாக கூறியது மட்டுமல்லாமல் தானே முன்னின்று பெண்ணுரிமைக்கான சமூகப்போரை வழி நடத்திச்சென்றார். அதன் பயனைத்தான் இன்று இந்தியாவில் உள்ள பெண்கள் அனுபவிக்கின்றனர்.

ஆனால் இதன் ஆரம்பகட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது, அந்த ஆரம்ப கட்டபோராட்டத்தில் வெற்றிபெற்றவர்களும் அன்னை ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, போன்றோரை அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவர்களின் வரிசையில் முத்தம்மாவை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்போதைய மதராஸ் மாகாணத்தில் பிறந்து சென்னை கிருஸ்தவ கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பயின்ற முத்தம்மா அவர்கள் அய்.எஃப்.எஸ் படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் மற்றும் அய்.எஃப்.எஸ் ஆவது குதிரைக் கொம்பாகும்; அதை முறியடித்து இந்தி யாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி ஆனார் சி.பி. முத்தம்மா (1924_2009).

1949-ஆம் ஆண்டு இந்திய வெளி யுறவுதுறை அதிகாரியாக இருந்த முத் தம்மாவிற்கு அவரது பொது வாழ்க் கையில் பல்வேறு தடைகள் முக்கியமாக திருமணம் செய்யவேண்டும் என்றால் பதவியில் இருக்ககூடாது என்ற ஒரு விதி இருந்தது, இது மட்டுமல்ல பல்வேறு விதிகள் முக்கியமாக பெண் களுக்கு எதிரான விதிகள் இருந்தன.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் முத்தம்மா, மறைந்த கிருஷ் ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது வெளியுறவுத் துறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை 8(2) பட்டவர்த்தனமாக காட்டுகிறது என்று கூறி
ஒரு பெண் திருமணத்துக்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டு மென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத் தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியம்.

தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறி போகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?

விதி 18 அரசியல் சாசனத்தின் 16-ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமண மான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோரமுடியும் என்றால் திருமணமான ஆணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மனநிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான் இந்த பாகுபாடு? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது.

அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்தத்துவம் நடைமுறையில் செயல் படுத்தப்படுவதில்லை என்பதை இந்த விதி கட்டுகிறது,என்றார். கிருஷ்ணய் யரின் இந்தத் தீர்ப்பை அடுத்து அந்த பிரிவு நீக்கப்பட்டது.

கோடானு கோடிப் பெண்களில் ஒரு முத்தம்மா எடுத்த துணிச்சலான நட வடிக்கை அரசுத்துறைகளின் சுதந்திரத் திற்கு பின்பும் இருந்த ஆணாதிக்க திமிர் ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு முத்தம்மா பல்வேறு உயர்பதவிகளைப் பெற்றார். 35 ஆண்டுகள் பணிக் காலத்தில் அரசு உயர் பதவிகளில் பெண்களுக்கான தடைகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை நீக்க போராடினார்.

தனது பணி ஓய்விற்கு பிறகு அவர் செய்த காரியம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களை வியந்து பார்க்கவைத்தது. டில்லியில் முக்கிய இடத்தில் இருந்த தனது 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடை யாக வழங்கினார். அப்போதே அந்த இடம் பல கோடிகள் மதிப்பு கொண்ட தாகும். அரசுத் துறைகளின் பெண்களுக்கு எதிரான விதிகளை நீக்க அவர் எடுத்துக் கொண்ட போராட்டத்திற்கு உரமாக திகழ்ந்தது பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்பு போராட்டம் கொடுத்த ஊக்கமாகும்.

கருநாடகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி கொடவா என்ற பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(அவரின் பிறந்த நாள் 24.1.1924)

Read more: http://viduthalai.in/page-1/95718.html#ixzz3RRsKokch

தமிழ் ஓவியா said...

மதுவால் மதி மயக்கம்

கரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது. கருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17).

கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர்.

நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி சீருடை யிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறிச் செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கிக் கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர்.

இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்துச் சென்றனர். வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்! பள்ளிச் சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-1/95725.html#ixzz3RRsrP7Xg