Search This Blog

1.2.15

கர்ப்பத்தடை- குழந்தைகள் பெறுவதைக் குறைத்தல் அவசியம்-பெரியார்

கர்ப்பத்தடை
- தந்தை பெரியார்

குழந்தைகள் பெறுவதைக் குறைத்தல் அவசியம்
ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும் பலமும், வீரமும் சுயமரியாதையும் அறிவுமுள்ள வர்களாக இருக்க  வேண்டுமானால் அவர்கள் குழந்தைப் பருவம் முதற் கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும் வளர்க்கப்பட வேண்டும்.  அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டு மானால் பெற்றோர்கள் தங்கள் தகுதிக் கும் சக்திக்கும், போதுமான அளவே குழந்தைகள் பெறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  அப்படி இல்லாமல் சக்திக்கும் அளவுக்கும் மீறி பெற் றோர்கள் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத்திற் குள்ளாவதுடன் குழந்தைகளும் பல வீனர்களாகவும் சௌகரிய மற்றவர் களுமாகி அவர்களைக் கொண்ட தேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகிவிடுகின்றார்கள்.


உதாரணமாக, நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுவோமேயானால் நாளுக்குநாள் ஜனங்களின் எண் ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை யோர்கள் தொழிலில்லாமல், வாழ் வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் காப்பாற்றவும், படிப்பிக்கவும், சக்தியில்லாமல் கஷ்டப் பட்டுக்கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதும் நாம் அனுபவித்தும் பார்த்தும் வருவதுமானச் சம்பவங்களாகும்.  சில குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும் பங்களுக்கும் அதிகமாக பிள்ளைக் குட்டிகளைக் கொண்ட பெரிய குடும் பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிகின்றோம்.  முதலாவது, பிள்ளை களை அதிகமாக பெறப்பெற பெற் றோர்களின் சுகபோகங்கள் தானாகவே குறைந்துகொண்டு வருகின்றன.  அது போலவேதான் ஒரு நாடும் தனது சக்திக்கு மேற்பட்ட மக்களையுடைய தாக ஆகிவிட்டால் அது சதாகாலமும் பஞ்சத்தினாலும் நோயினாலும் துன்பப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதோடு அது தன் அழகையும் முற்போக்கையும் இழந்து சுயமரியாதையையுமிழந்து தயங்க வேண்டியதாகி விடுகின்றது.


இந்த உண்மையை அறியாமலே இதுவரை அநேக சமுக சீர்திருத்தக் காரர்கள் என்பவர்களும். பொருளாதார சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும் தங்கள் நாட்டின் மக்கள் சமுகத்தின் முற்போக்கிற்கும் பொருளாதார முற் போக்கிற்கும் வேறு எத்தனையோ துறைகளில் உழன்று கஷ்டப்பட்டும் பயனடையாமல் சலிப்பின் மீது கடைசியாக ஒரு நாட்டு மக்களை மற்றொரு நாட்டுமக்கள் வெறுக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். சதா காலமும் பிறர் மீதே குற்றம் சொல்ல வேண்டியவர்களாகவுமாகி விட்டார்கள்.  நன்றாய் வாழுபவர்களின் மீது பொறாமை படவேண்டியவர்களாகவும், மற்றவர்களைப் பட்டினி போட்டால் தான் தாம் வாழலாம் என்று நினைக்க வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள். ஆனாலும், சமீபகாலத்தில் சில நிபுணர்கள் இவ்விஷயங்களை நடுநிலைமையிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்த்து இவ்விதக் கொடு மையான நிலைமைக்கு உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்திருக் கிறார்கள்.


அஃதென்னவென்றால், முதலில் குறிப்பிட்டதான அதாவது ஜனங்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று ஜனசமுகத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது என்பதேயாகும். ஆகவே, இந்த முடிவானது இப்போது மேல் நாட்டின் அறிவாளிகள் பலராலும், மற்றும் பொது நல சேவைக் காரர்கள் பலராலும், வைத்திய நிபுணர்கள் பொருளாதார நிபுணர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இத்துறைகளில் இறங்கி, மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து மிக்க முற்போக்கான மார்க்கங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்


அன்றியும், இந்தத் தத்துவத்தை அநேக அறிஞர்கள் தங்கள் வாழ்க்கைகளில் அமலுக்குக் கொண்டு வந்து கொண்டுமிருக்கின்றார்கள்.  அதாவது மேல் நாட்டார்களின் படித்த வர்கள் என்று சொல்லப்படும் கூட்டத் தார்களிலேயே அநேகர் கர்ப்பம் தரிக்காமலிருக்கத்தக்க பல உபாயங்களைக் கையாண்டு வருகின்றார்கள்.  இதற்காகப் பல சாதனங்களையும் கண்டுபிடித்து பொது ஜனங்களுக்கு அறிவித்து சில சாதனங் களை வினியோகித்தும்  வருகின்றார்கள்.  ஆனால் சாதாரண ஏழை ஜனங்களும், பாமர ஜனங்களும் இதன் உண்மைத் தன்மையை உணரவோ, பயன் அடைய முடியாமலோ இருந்து வருகிறார்கள் உண்மையிலேயே இம்மாதிரி அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் கருத்தரிக்க விடாமல் - இருக்கக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் மிக்க ஏழை மக்களேயாவார்கள்.

 
ஆனால், இவர்களோ, இம்மாதிரியான அதாவது கருத்தரிக்காமல் இருப்பதற்கான காரியங்களைப் பற்றிப் பேசுவது கூட நாகரிக விரோதமான பேச்சு என்று கருதுகின்றார்கள். அறிவில்லாத பொது ஜனங்களும் மத விஷயத்திலும், கடவுள் விஷயத்திலும் கண் மூடித்தனமான மூட பக்தியுள்ளவர்களும் இதை மத விரோதமானதென்றும், பாவகரமானதென் றும், கடவுள் கோபத்திற்கு இலக்கான காரியமென்றும்பேசி இந்தத் தத்துவங்களை எதிர்த்து வருவதால் ஏழை மக்களும் பாமர மக்களும் இப்படி ஒரு மார்க்கம் இருக் கின்றது என்று அறியக்கூட சவுகரியமில் லாமல் போய்விட்டது.  ஆனால், மேல் நாட்டில் டாக்டர் மோரீஸ்டோப்ஸ் (விணீக்ஷீஹ் ஷிஷீஜீஷீமீ) என்கின்ற ஒர் ஆங்கிலப் பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து எவ்விதப் பழிப்புக்கும், எதிர்பிரச்சாரத்திற்கும் அஞ்சாமல் இவ்விஷயத்தைக் கர்ப்பத் தடையை பிரச்சாரம் செய்யத் துணிந்ததன் பயனாய், இப்போது இவ்விஷயம், மேல் நாட்டில் எங்கும் சாதாரணமானதும், சகஜமானதுமான விஷயமாய் பேசிக் கொள்ளும்படியாக ஆகிவிட்டது.  அது மாத்திரமல்லாமல், மேல் நாடுகளில் பல இடங்களில் பிள்ளைப் பேற்றை தடுக்கும் படியான வசதிகள் சம்பந்தமாக, பல வைத்திய சாலைகள் ஏற்படுத்தப்பட்டும் இருக்கின்றன.  கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமென்ற ஆசை உடையவர் களுக்கு அம்மார்க்கங்களைக் கற்றுக் கொடுப்பதுடன் அதற்கு வேண்டிய சாதனங் களையும் கையாளும் முறைகளையும் போதிக்கின்றார்கள்.  மருந்து வியாபாரக் கடை முதலியவைகளில்,  கர்ப்பத்தடைக்கு, அனுகூலமான மருந்துகளும், சாதனக் கருவிகளும் விற்பனை செய்யவும் ஏற் பாடுகள் செய்து இருக்கின்றார்கள்.


இவைகள் வைத்திய நிபுணர்களாலும், சமுகச் சீர்திருத்த ஆராய்ச்சிக்காரர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால் இதைச் சட்ட விரோதமென்று யாரும் சொல்லத் துணியவில்லை.  இது எவ்விதத்திலும் சட்டவிரோதமான காரியமுமல்ல என்பதை யாவரும் உணர வேண்டும்.  ஏனெனில், சட்டவிரோதமான காரியம் என்பதெல்லாம் அன்னியனுக்கும் தனக்கும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய காரியங்களுக்குத்தான் சொல்லலாம். இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ அதிருப்தியோ ஏற்படுவதற் கில்லை.


அன்றியும், இந்தக் கர்ப்பத்தடை முறை என்பது கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கப்பதற்கு உரியதே ஒழிய, கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனை கலைப்பதற்காக ஏற்பட்டதல்ல.  அதற்கு இந்த முறைகள் பயன்படவும் மாட்டாது.  அன்றியும், கர்ப்பம் ஏற்பட்ட பிறகு கலைப்பது என்பது தாயின் சரீர சக்திக்கும், சில சமயங்களில் உயிருக்கும், ஆபத்தை விளைவிக்கக் கூடியதாயிருப்ப தால் கண்டிப்பாக அந்த முறையை யாரும், கையாளக் கூடாது  என்பதே நமதபிப் பிராயம். கர்ப்பத்தைக் கலைக்கும் முறை எதுவானாலும் அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதேயாகும்.  தேசப் பொது நன்மையையும், சமுக நன்மையையும் மாத்திரமே உத்தேசித்து, அறிஞர்கள் கர்ப்பத்தடையைக் கண்டுபிடிக்கவில்லை மற்றும் என்னென்ன காரியங்களுக்கு கர்ப்பத்தடை அவசியமென்பதையும் சற்று விளக்குவோம்.


பெண்ணானவள் திட சரீரியாயில்லா மலும், காயலாவுடனும், சரியான அமைப்புப் பொருந்தி சரீரமாயில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்து, பிள்ளைகளைப் பெறுவது என்பது அவளுக்கு மிகவும் அபாயகரமானதாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்.   உதாரணமாக. ட்சயரோகத் தாலும் நீரிழிவு வியாதியாலும், நெஞ்சு துடிதுடிப்பினாலும்,  பீடிக்கப்பட்டிருக்கின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் அதிகமாக சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிக்க ஆபத்துக்கும் கஷ்டத்திற்கும் உள்ளான கெடுதியாகும். தொற்று வியாதி, மேக சம்பந்தமான வியாதி, காக்கை வலிப்பு, பைத்தியம், கேனம் முதலிய வியாதியுள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதும் பயனற்றதும் வாழ்க்கையில் மிக்க கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதுமாகி விடும். பிரசவத்தினால் சரீரமெலிவும், பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவசரீர முடையவர்கள்  சுபாவசரீரமுடையவர்கள் மறுபடியும், மறுபடியும் கர்ப்பமானால், சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும். ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையைப் பெற்று, அது நன்றாக பால் குடித்து வளர்வதற்கு முன்னாலும் முதலில் கர்ப்பமாகி பிள்ளை பெற்ற பலவீனம் நீங்குவதற்கு முன்பும் கர்ப்பமாகி விட்டால், முதல் குழந்தை சௌகரியமில்லாமல்  மட்டு மல்லாமல்  மறு குழந்தையைப் பெறு வதற்கும் போதிய சக்தியில்லாமல் போய்விடும்.


பெண்ணும், ஆணும் தகுந்த வயது அடைவதற்கு முன் அதாவது பெண்கள் 22 வயதுக்கு முன்னும், புருஷர்கள் 25 வயதுக்கு முன்னும், சதிபதிகளாயிருக் கும் போது பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டால், அந்தக் குழந்தைகள் மிக்க இளமைப்பருவத்தின் காய்ப்பாகி உறுதி யற்ற சரீரக் கட்டுடையதாகி விடும்.  குடும்பத்திற்குப் போதியவரும்படி இல்லாத நிலையில் பெண்கள் பிள்ளை களைப் பெற்று விட்டால் குடும்பத்திற்குத் தரித்திரமும், கஷ்டமும் அதிகமாகி வாழ்க்கை திருப்தியுமற்றதாகி  விடும். அன்றியும், ஆண், பெண் ருதுசாந்தியான வுடன் பெண் கர்ப்பமாகிவிட்டால் கொஞ்சகாலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம். கல்வி இன்பம் அடைவதற்குச் சாவகாசமில்லாமல் போய்விடும். இவ் வளவு விஷயங்களில், பெண்கள் கர்ப்ப மாவது அசம்பாவிதமா யிருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கு இந்தக் கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக் கின்றது.  என்னவெனில் பெண்களுக்குக் கர்ப்பத்தை உண்டாக்குகின்ற பொறுப்பு மாத்திரம் ஆணை சேர்ந்ததாயிருக்கின் றதே தவிர, மற்றபடி கர்ப்பமான நிமிஷ முதல் பிள்ளை பெறும் வரை, அதன் பொறுப்பு முழுவதும் பிள்ளை பெறும் போது அடையும் பிரசவ வேதனையும், அதனால் உண்டாகும் ஆபத்துகளும்  பெண்களே  அடைகின்றார்கள்.  பிள் ளையைப்பெற்ற பின்பும், தாயானவள் தான் இரத்தத்தைப் பாலாக்கி, குழந்தை களுக்கு ஊட்டி வளர்க்கின்றாள்.


குழந்தைக்கு வரும் வியாதிகளுக்குக் தானே பத்தியமிருக்க வேண்டியவளா கிறாள்.  அதைச் சுமந்து போஷிக்கும் வேலை முழுவதும் தாயே செய்ய வேண்டியவளாகிறாள்.  பெண்ணானவள் ஒன்று இரண்டு பிள்ளைகளைப் பெற்ற வுடனேயே சகல விதசுகபோகங்களிலும் விரக்தியுடையவளாகிவிட வேண்டிய வளாகிறாள்.


குழந்தை பெற்ற உடனே குழந்தையின் போஷனையையும், வளர்ச்சியையும் உத்தேசித்துத் தனது சுதந்திரத்தைவிட்டு புருஷனுக்கும். குடும்பத்திற்கும் அடிமையாகிவிட வேண்டிய வளாகிறாள்.


புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும் பெண் ஜாதி ஒரு புருஷனைத் தவிர, வேறு புருஷனை எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த  தடையாயி ருக்கின்றது.


பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்கு சுதந் திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டு விட நேரிடுகின்றது.


சிறிதளவா வது  சுயேச்சையுள்ள பெண்ணாய் விளங்குவதைவிட, பிள்ளைகளைப் பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்க வேண்டியதாய் இருக்கின்றது.  கூறி வந்தவைகளாலும், இதுவரை இன்னும் பல காரணங்களாலும் பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும் என்று சொல்லுகின்றோம்.


ஆகவே, இந்தத் தலையங்கத்தில் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி ஒருவாறு விளக்கினோம்.  இனி அடுத்த வியாசத் தில் அதன் உபாயங்கள் என்ன என் பதைப் பற்றி நிபுணர்கள் என்பவர்களின் அபிப் பிராயத்தை எடுத்து விளக்கம் எண்ணியுள்ளோம்.


------------------------------தந்தை பெரியார்- "குடிஅரசு" - கட்டுரை - 01.03.1931

38 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சுண்டெலி

சுண்டெலி நாள்தோறும் சிறுகச் சிறுக பூமியைத் தோண்டி வளையை ஆழப் படுத்துகிறது. அதுபோலவே காலம் என்ற சுண்டெலி ஒவ்வொரு நிமிடமும் உயிர் களுடைய வாழ்க்கையைக் குடைந்தெடுத்தபடியே இருக்கிறது. எப்போது இதற்குள்ளே புகுந்து இதை உடைமையாக்கிக் கொள்ள லாம்? என்று மரணம் உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது.
- ஸ்ரீராமர்

இப்படி ஓர் ஆன்மிகத் துணுக்கு ஏடு ஒன்றில் வெளியாகியுள்ளது.

- ஆமாம் காலம் என்ற சுண்டெலியை உருவாக்கி யதுயார்? கடவுள் என்று தானே சொல்கிறார்கள். அவன் தானே பிண்டம் படைப்பவன்! அப்படி இருக் கும் போது ஸ்ரீராமன் புலம் புவது ஏன்? அதில் அர்த்தம் இருக்கிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/95394.html#ixzz3Qb8S7RX7

தமிழ் ஓவியா said...

கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

உலகளாவிய அளவில் தமிழும் - தமிழரும் எனும் தலைப்பில்

தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்திய ஆய்வுரை

வடமொழியால் விளைந்த பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்தும் இடித்துரை


கோலாலம்பூர், பிப்.2_ கோலாலம்பூரில் நடைபெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வட மொழி யால் தமிழுக்கு நேர்ந்த கேடுகளை ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி ஆய்வுரை வழங்கினார்.

9 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசி யாவின் தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

தமிழ்மொழியை தமிழர்க்கு அறிமுகம் செய்தவர் அறிஞர் கால்டுவெல் ஆவார். தமிழை உலகுக்கு அறிமுகப் படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர் தனி நாயக அடிகளார் ஆவார். அவருடைய பெரு முயற்சியால் முதல் உலகத்தமிழ் மாநாடு மிகவும் சிறப்பாக 1965இல் கோலாலம்பூரில் நடந்தது. இரண் டாவது மாநாடு சென்னையிலே மிகவும் கோலாகல மாக அறிஞர் அண்ணா அவர்களால் உலகச் சிறப் புடன் நடந்தது.

இப்போது 9ஆவது மாநாடு மீண்டும் கோலாலம்பூ ரில் சனவரி 30, 31 பிப்ரவரி 1ஆம் நாள்களில் நடை பெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பெருமைமிகு பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும், பெருமைமிகு டத்தோ சாமிவேலு அவர்களது ஒத்துழைப்புடனும், மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்றது.

முதல் நாள் தொடக்க விழாவில் பேசிய மலேசியப் பிரதமர் மாண்புமிகு நஜீப் ரசாக் அவர்கள் திருக் குறளின் பெருமையைப் பேசி தமிழின் பெருமை, தமிழர்களின் முன்னேற்றம், குறித்தும் கருத்துரை வழங் கினார். மலேசியாவில் 542 அரசு தமிழ்ப் பள்ளிகள் இயங்குவது பற்றியும் பேசினார்.

பல்வேறு அமர்வுகளில் 120 ஆராய்ச்சிக் கட்டு ரைகள் வாசிக்கப்பட்டன.

இரண்டாம் நாள் சிறப்புப் பேச்சாளராக மானமிகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். கோவையில் சிறப்புக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நேரே சென்னை வந்து உள்நாட்டு விமான நிலையத்தி லிருந்து பன்னாட்டு விமானத்தில் ஏறி மலேசியா வந்தடைந்தார்.
டத்தோ சாமிவேலு அவர்கள் அறிமுகப்படுத்திய போது மிகவும் பெருமையுடன் தானே திராவிடர் கழகத்தாலும், அய்யா சாரங்கபாணி அவர்களாலும் உருவாக்கப்பட்டதைச் சொல்லி ஆழமான உரை யாற்றினார். ஆசிரியர் அவர்களின் உழைப்பைப் பாராட்டி, அவரது வருகையால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகின்றோம் என்று வரவேற்றார்.

ஆசிரியர் அவர்கள் ஒரு மணி நேரம் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் எனற தலைப்பில் தமிழும், தமிழரும் எப்படிப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிக்க வேண்டியிருக்கின்றது என்பதை ஆதாரபூர்வ நூல்களை எடுத்துக்காட்டி விளக்கினார். தமிழனுக்குத் தனது மொழியே வட மொழியிலிருந்து கடன் பட்டது என்ற கதையை இல்லை,இல்லை, வடமொழிதான் தமிழுக்குக் கடன் பட்டுள்ளது, அதைத் திருடி தனது சொத்தாக சமஸ்கிருதம் என்ற மொழி உருவான கதையைச் சொன்னார். பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியில் மட்டுமன்றி, கலை, பண்பாடு, மொழியை அழிக்கச் செய்த சூழ்ச் சிகள், ஆக்கிக் கொண்டதையும், அதை நம்மையே நம்ப வைத்துவிட்ட சூழ்ச்சியையும் சொன்னார்.

செம்மொழிக்கு இருக்க வேண்டிய 11 தகுதிகளும் தமிழுக்கு மட்டுமே உள்ளதையும், சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிகள் மட்டுமே உள்ளதையும் விளக்கமாகச் சொன்னார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குயில் இதழ்களில் எழுதிய வந்தவர் மொழியா செந் தமிழ்ச்செல்வமா, என்றார். பல சொற்கள் வடமொழி போல் தோன்ற வைத்ததையும் அவை தூய தமிழ்ச்சொற்களேயாம் என்பதையும் நூலாக வெளியிட்டுள்ளதைக் காண்பித்தார். தமிழ் இசை கர்நாடக சங்கீதமாகவும், திருக்குறளிலேயே உள்ள "கூத்தாட்டும் அவை" பரத நாட்டியமாகவும் பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியை மட்டுமன்றி உள்ளதைத் தமிழறிஞர்கள் ஆக்கபூர்வமாக எடுத்துச் சொல்வதுதான் உண்மையான தமிழ்ப்பணி, அதை நாம் அனைவரும் நமது பிளவுகளை ஓரங்கட்டி, இணைப்புப் பாலங்களை இறுகச் செய்ய வேண்டும் என்று முழங்கினார். பேச்சு, புத்தகமாக அனைவர்க்கும் தரப்பட்டது.

கடைசி நாள் மலேசியாவின் கல்வி அமைச்சர் முடிவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். பல்கலைக் கழக் துணைவேந்தர்களும், பல தமிழறிஞர்களும், 20 நாடுகளில் இருந்து வந்து பங்கேற்றனர். முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுக பரமசிவம் உணர்ச்சியுடன் தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிப் பேசியும் மழலைத் தமிழ் பேசியும் அனைவரையும் மயக்கினார்.

2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலேசியப் பல்கலைக் கழகத்தில், அவர்களது ஆதர வுடன் நடைபெற்ற வெற்றித் திருவிழாவாக நடை பெற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/95391.html#ixzz3Qb8cu36q

தமிழ் ஓவியா said...

ராம்தேவின் மோசடி மருந்து வியாபாரம்

ஆண் குழந்தை பிறக்க இவர் தயாரிக்கும் மருந்தை சாப்பிட வேண்டுமாம்!


சுடிதார் பாபா ராம் தேவ் தயாரிக்கும் மருந்தை சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்குமாம்(!)

சுஸ்மா சுவராஜூம், நஜ்மா ஹெப்துல்லாவும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஆணுக்குப் பெண் சமம் என்ற பெண்ணு ரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் பாபா ராம் தேவ் ஆண் குழந்தை பிறக்க சிறப்பு மருந்தை அருந்தி ஆண் குழந்தை பெற வேண்டுமாம்! எனது தயாரிப்பில் கிடைக்கும் மருந்தை சாப்பிடு என்று விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க பார்க்கிறார்.

மோடியின் விளம்பரத் திற்கு கோடிகளை அள் ளிச் சிதற விட்டவர்களும் தொழிலதிபர்கள் மட்டு மல்ல இந்த பாபா ராம்தேவ் போன்ற சாமி யார்களும் உண்டு.

பாபா ராம்தேவ் மருந் துகள் தயார் செய்து விற்பனை செய்து வரு கிறார். இதற்காக அவர் பதஞ்சலி என்ற பெயரில் பல்வேறு இடங்களில் மருந்துக் கடைகள் நடத்தி வருகிறார். அந்தக் கடைகளில் திவ்ய புத்ரஜீவக் என்ற மருந்து விற்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல் லாதவர்கள் இந்த மருந் தைச் சாப்பிட்டால், ஆண் குழந்தை பிறக்குமாம். ஒரு பாக்கெட் மருந்தின் விலை ரூ.35 ஆகும். கடை யில் நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள், இந்த புத்ரஜீவக் மருந்தைச் சாப்பிட்டால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறி விற்பனை செய்கிறார்களாம். இதை நம்பி பலர் அந்த மருந் தைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல் கிறார்களாம். இது குறித்து அரியானாவைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் ஷியாம் சுந்தர் கூறுகையில், உங்களுக்கு ஆண் குழந்தை இல்லை எனில் புத்ரஜீவக் மருந்தை சாப்பிட்டால் புத்ர பாக்கியம் கிடைக்கும் என்று (பாபா ராம்தேவ்) தெரிவித்துள்ளார் என் றார். அரியானாவில் தான் இணையர்கள் அதிக அளவில் இந்க மருந்தை வாங்கிச் சாப்பிடு கிறார்களாம்.

இதே அரியானாவில் தான் சில நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை படிப்பு பெண்குழந்தை வளர்ப்பு குறித்த மக்களை ஏமாற்றும் திட்டம் ஒன் றை மோடி துவக்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/95396.html#ixzz3Qb8l8pdC

தமிழ் ஓவியா said...

நேர்த்திக் கடனுக்கு குழந்தையை காணிக்கையாக கொடுத்த காட்டு விலங்காண்டிகள்


சின்னாளபட்டி, பிப்.2 திண்டுக்கல் அருகே அ.வெள்ளோட்டில் உள்ளது புனித அந்தோணி யார் கோவில். இந்த கோவில் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதி வாரத்தின் சனி, ஞாயிற் றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக் கான திருவிழா 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து பொது மக்களால் வேண் டுதல் நிறைவேறியதற்காக கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக காணிக்கையாக கொடுக்கப்பட்ட காய் கறிகள், ஆடு, மாடுகள், கோழிகள், தேங்காய்கள் ஆகியவற்றை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கோவிலில் குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தி குழந்தை வரம் கிடைத்த வர்கள் தங்களது குழந்தை களையும் காணிக்கையாக கொடுத்தனர். அந்தக் குழந்தைகளை கோவில் முன்பு மொட்டை அடித்து கோவில் நிர்வாகிகள் ஒவ்வொரு குழந்தையாக கையில் தூக்கிப் பிடித்து பொருட்களை ஏலம் விடு வது போல் பொதுமக்கள் முன்னிலையில் ஒருதரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று கூவி ஏலம் விட்டனர்.

ஏலம் கேட்ட பொது மக்களும் கூடுதல் விலைக்கு ஏலத்தைக் கேட்டு விலையை ஏற்றி விட்டனர். ஆனால் இறுதியில் பெற் றோர்களே அவரவர் குழந்தைகளை அதிக தொகைக்கு ஏலம் எடுத்துக் கொண்டனர். ஏலம் எடுத் ததற்கான தொகையை கோவில் நிர்வாகிகளிடம் கொடுத்து பெற்றோர்கள் குழந்தையை பெற்றுச் சென்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/95397.html#ixzz3Qb8ta4Zl

தமிழ் ஓவியா said...

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

நம் முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற ரீதியில் தங்கள் உணவு பழக்கத்தை வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது.

அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது.

வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக் கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்.

தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டாது.

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமி லங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாக குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறைவதுடன், அடர்த்தியாக முடி வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு முடியை பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும். ஆகவே, வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

Read more: http://viduthalai.in/page-7/95419.html#ixzz3Qb9Pq67R

தமிழ் ஓவியா said...

நரம்புகளை பலம் பெற வைக்கும் சீரகம்

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். எடையும் குறையும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகத்தை மென்று தின்றாலே வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும்.

நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டு காய்ச்சி எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும். சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

சீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சி குணமாகும்

Read more: http://viduthalai.in/page-7/95420.html#ixzz3Qb9Wx6EI

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணங்கள் நிறைந்த பரங்கிக்காய்

மலையாளிகள் சமூகத்தில் மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம் பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது.

இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்ட மின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். தோற்றம் பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர்.

சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது. குணங்கள் பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்ற தாகவும் இருக்கும்.

ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும். பயன்கள் மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இல்லை.

இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகிய வற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். வைட்டமின் ஏவை அபரி மிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல் படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதி களையும் பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் உள்ளன.

இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது. பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசி யமும் உள்ளது.

பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது. பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/95417.html#ixzz3Qb9gOqLF

தமிழ் ஓவியா said...

புதிய ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை: அசோசேம் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடில்லி, பிப்.2- புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை என்று அசோசேம் கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பான்மையான தொழி லதிபர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தவிர நடப்பு நிதி ஆண்டில் எந்த முதலீட்டுத் திட்டங்கள் வரும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் தொழில் துறை அமைப்பான அசோசேம் பிஸினஸ் நம்பிக்கை குறியீடு என்ற பெயரில் நடத்திய சர்வேயில் இவை தெரிய வந்திருக்கின்றன.

அதேசமயம் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்குள் சூழ் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
சர்வேயில் கலந்துகொண்ட 54.2 சதவீத தொழிலதிபர்கள் கடந்த ஆறு மாத காலத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

மேலும் 45.8 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு நிதி ஆண்டுக்குள் முதலீட்டு சூழ்நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் ஏற்றுமதி சந்தையும் மந்தமாகவே இருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் 41.7 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு காலாண்டில் நிலைமை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95442.html#ixzz3QbA0kql6

தமிழ் ஓவியா said...

திமுக உறவு நட்பு ரீதியானது தொல்.திருமாவளவன்

சென்னை, பிப்.2_ திமுக வுடனான உறவு குறித்து விளக்கம் அளிக்க வேண் டியதில்லை என்று தொல். திருமாவளவன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக் கிழமை திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொன்.ராதாகிருஷ்ணன் என் நட்புக்குரியவர். நல்ல வர். ஆனால், தற்போது அவரை ஆக்கிரமித் துள்ள அதிகாரத்தின் மூலம் பேசுகிறார்.
பெரியார், நாராயண குரு போன்றோரின் கோட்பாடுகளை நான் உள்வாங்கி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்க்கிறேன். தனிப் பட்ட முறையில் அமித் ஷாவோ, பொன்.ராதா கிருஷ்ணனோ எனக்குப் பகைவர்கள் இல்லை.

திமுக_ விடுதலைச் சிறுத் தைகள் இடையிலான பிரச்சினை நட்பின் அடிப் படையிலானது. இதற்கு விளக்கம் அளிக்க வேண் டிய தேவையில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் செல்வாக்குடன் திகழ்ந்த காமராஜரின் புதுதில்லி இல்லத்தை யார் கொளுத் தினர் என்பது அவருக்கே தெரியும். காந்தியைச் சுட்ட கோட்சேவை தேச பக்தன் என்று சொல்வது நியாயமா?

இதனைப் பொன். ராதாகிருஷ்ணன் கண்டிக் காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அண் மையில், நடைபெற்ற தமாகாவின் கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை யும், பாஜக தேசியத் தலை வர் அமித்ஷாவையும் தொல்.திருமாவளவன் விமர்சித்து இருந்தார்.

அதற்கு பதில் அளித் திருந்த பொன்.ராதா கிருஷ்ணன், சிறீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவை, விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கா தது ஏன் என்பதற்கு அவர்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு, தற்போது திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/95441.html#ixzz3QbA8j1Hs

தமிழ் ஓவியா said...

மதவெறி ஆட்சியை வேருடன் சாய்க்க வாரீர்!

பேராய மென்பது பார்ப்பன பனியாவைப்
பாதுகாக்கும் பிற்போக்குக் கட்சி
பார்ப்பன சனதாவோ ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டை
அட்டியின்றிச் செயல்படுத்தும் நஞ்சு
இருபெரும் கட்சியின் ஆட்சியால் இல்லாமை
ஏழ்மை நிலவிடும் அவலம்
பெரும்முத லாளிய பன்னாட்டுப் பகாசுர
நிறுவனத்தை வளர்க்கும் கட்சிகளே!

பேராயம் மதச்சார்பின்மை பேசிடினும்
மதவெறியைக் கட்டுப் படுத்தவில்லை
அரசு சார்ந்து ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ
வாளா விருந்ததே காரணம்
நேரு காலத்திலே நேர்ந்த அவலத்தால்
பாபர் மசூதியை இடித்தனர்
பெரும்பான்மை மக்களைப் பின்னுக்குத் தள்ளி
சிறுபான்மைப் பார்ப்பனர் ஆட்சியே!

பார்ப்பன சனதாவின் கூட்டணி ஆட்சியில்
நிறைவேறா மறைமுகத் திட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்ட அறுதிப் பெரும்பான்மை
பெற்றுவிட்ட மோடியின் அரசு
வெளிப்படையாகவே செயல் படுத்த
ஆளுக்கொரு விதமாய்க் கூச்சலிட
நாளுக்கோர் அறிவிப்பை கூச்சநாச்ச மின்றி
மதவெறியால் கொக்கரிக் கின்றார்

இந்தித் திணிப்பு சமஸ்கிருத மாக்கல்
கல்வியில் காவிச் சாயமேற்ற
இந்நாட்டின் வரலாற்றைத் திரிக்க கொலைநூல்
கீதையை தேசிய நூலாக்க
இந்துவெறி தலைக்கேற இந்தியா இந்து
நாடாம் ஒரே பண்பாடாம்
மந்தை யாடுகள் மக்களென எண்ணி
மதவெறியால் மனப்பால் குடிக்கின்றார்!

காந்தியும் பட்டேலும் கூர்ச்சரத்தில் பிறந்தவர்
பட்டேலைத் தூக்கும் கமுக்கம்
காந்தியைத் தாழ்த்தி கோட்சேவை தேசப்
பக்தரென சரடுவிடு கின்றார்
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதியாம்
அதுபோல் கொடுவெறி யனுக்கு
வாய்த்து விட்ட ஆட்சியால் நாடொறும்
சிலைகோ யில் கட்டத் துடிக்கின்றார்!

மதவெறி பிடித்தால் மானுடம் கேடுறும்
மண்ணில் நிலவும் அவலம்
மதவெறியை மாய்த்தால் மானுடம் தழைக்கும்
மதவெறியை விலக்குவீர் நாட்டோரே
அய்யா பெரியார் அண்ணல் அம்பேத்கர்
கொள்கைக் கோட்பாட்டை ஏற்று
மய்யத்தை யாளும் மதவெறி ஆட்சியை
வேருடன் சாய்க்க வாரீரே!

- கவிஞர் இனியன், திருச்சி

Read more: http://viduthalai.in/page4/95265.html#ixzz3QbBoP6D3

தமிழ் ஓவியா said...

இவர்தான் ஏழை இந்தியாவின் பிரதமர்

ஒரு மணி நேர சந்திப்பிற்கு 10 லட்ச ரூபாய் ஆடை அணிந்த மோடி ஞாயிறு அன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாஉடனான சந்திப்பின் போது மோடி அணிந்திருந்த ஆடையின் விலை ரூ.10 லட்சம், அந்த ஆடையில் மோடியின் முழுப்பெயரான நரேந்திர தாமோதரதாஸ் மோடி எழுத்து தங்க ஜரிகையில் பின்னப்பட்டிருந்தது.

ஆடை அணிவது ஒருவரது தனிப் பட்ட விருப்பம், அவர் எளிமையாக அணியலாம் அல்லது மிகவும் ஆடம் பரமாக அணியலாம், ஆனால் இந்தியா போன்ற வளரும் நாட்டின் மக்கள் பிரதிநிதி ஒருவர் எப்படி இருக்க வேண் டும் என்று பொதுவான கோட்பாடு உள்ளது. பள்ளிகளில் கூட சீருடை ஏன் அணியச்சொல்கிறார்கள் என்றால் அனைவரும் சமமாக பாவிக்கவேண்டும் என்றுதான், ஆனால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றி னைத்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வேன், என்று முழக்கமிட்ட மோடி அம்பானி, அதானி, மற்றும் மதுபான தொழிலதிபர் விஜய்மல்லையா போல் ஆடம்பர ஆடையில் பவனி வருகிறார்.

இதில் என்ன வெட்கக்கேடு என்றால் பத்திரிகைகள் இதை புகழோ புகழ் என்று புகழ்கின்றனர்.

கடந்த ஆண்டு அமெரிக்க சென்ற மோடி 5 நாட்கள் தங்கி இருந்தார் இந்த அய்ந்து நாட் களிலும் பல்வேறு வித ஆடைகளை அனிந்திருந்தார். இவை அனைத்தும் அவருக்கென்று தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட் டவை தான்!

இந்த ஆடை வடிவமைப் பாளர்கள் எல்லாம் இந்தியர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பு வரு மானத்திற்கு வழி வகுக்கிறார் என்று எண்ணி மகிழ்ச்சியடையலாம். ஆனால், மோடியின் ஆடைகளை நெய்வது முதல் வடிவமைத்து தைத்துக் கொடுப்பது எல்லாம் Holland & Sherry என்ற இங்கிலாந்து நிறுவனம். இந்த நிறுவனம் உலகில் முக்கிய சர்வாதி காரிகளுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்த பல்வேறு செய்திகள் அய்ரோப்பியப் பத்திரிகையில் வலம் வந்துள்ளன. இந்தியாவில் வாடியா, அனில் அம்பானி, போன்ற இந்திய பெரும் பணக்காரர்களுக்கான சிறப்பு ஆடை களை வடிவமைத்து தைத்து கொடுத்து வந்தது இதே நிறுவனம் தான்.

இந்த நிறுவனம் நேரடியாக மோடிக்கு ஆடைகளை அனுப்புகிறதா? அல்லது வேறு யாரேனும் மோடிக்கான இந்த நிறுவனத்தில் இருந்து ஆடைகளை பெற்று அனுப்புகிறாரா? என்று பிற்காலத்தில் தெரியவரும். மோடியின் ஆடையில் தங்க ஜரிகை களால் “NARENDRA DAMODHARDAS MODI" என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. இந்த ஆடை நெய்வதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்றும், வடிவ மைபபாளர்களுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை கொடுத்திருக்கலாம் என்றும் தங்க ஜரிகைகளின் விலை குறைந்த பட்சம் 4 லட்சம் வரை இருக்கலாம், குறைந்தபட்சம் 10 முதல் 11 லட்சம் வரை செலவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மோடிக்கு என்று பிரத்யோக ஆடை வடிவமைப்பளர் ராகேஷ் அகவர்வால் என்ற நபர் இருந்தாலும் மோடி அயல்நாட்டு வடிவமைப்பாளர்களின் ஆலோசனையையே பெரிதும் விரும்பி கேட்கிறார்.

பலரது ஆலோசனைகளை கேட்ட பிறகே தனது ஆடை வடிவ மைப்பாளரை அழைத்து இறுதி செய் கிறார். இந்தியாவில் இன்றளவும் வறுமைக் கோட்டிற்கு கீழே 43 விழுக்காடு மக்கள் வாழும் நிலையில் இந்த நாட்டின் பிரதிநிதியாக திகழும் ஒரு தனிநபர் மக்கள் பணத்தை இப்படி தன்னுடைய தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காக செலவிடலாமா? உலக நாடுகள் அனைத்தும் தங்களது பிரதிநிதிகளின் ஆடைக்கென ஒரு விதிமுறையை வைத்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை எடுத்துக்கொண்டால் அவர் பிற நாட்டிற்கு அரசு முறைப்பயணமாக செல்லும் போது அவர்களுக்கு என்று வகுக்கப்பட்ட விதிமுறைகளின் படிதான் ஆடைகளை அணிய வேண்டும் இதை டிரஸ் கோட் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இன்றளவும் இந்தியாவில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங் கள் கூட தனது பணியாளர்களுக்கு இந்த விதிகளைப் பயன்படுத்த வற்புறுத்து கிறது.

Read more: http://viduthalai.in/page8/95271.html#ixzz3QbCg5z95

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பண்படுத்திய இந்த பூமியில் இந்து அமைப்புகளின் எதிர்மறைக் கருத்துகளை பிரதமர் மறுக்காதது ஏன்?

கலைஞர்
கண்டனம்


சென்னை, பிப்.1_ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பண் படுத்தி வளர்த்து பாதுகாத்து வரும் இந்த பூமியில், இந்து அமைப்புகளின் எதிர் மறை கருத்துகளைப் பிரதமர் அவ்வப் போது மறுத்து, தெளிவுபடுத்தாதது ஏன்? எனவும், இவை ஆச்சரியத்தையும், அதிர்ச் சியையும் அளிப்பதாகவும் தி.மு.க. தலை வர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளி யிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி:- இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

கலைஞர்:- இலங்கையில் பொறுப் பேற்றிருக்கும் சிறீசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தைச் சேர்ந்த 62 வயதான திரு.கே.சிறீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப் பாராட் டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக திரு. தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார். தற் போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண் டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப்பட்டிருக்கும் ஏராள மான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங் கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாம தம் தவிர்க்கப்படவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கேள்வி:- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். சட் டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்கவேண்டும் என்ற குரல் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டதே?

கலைஞர்:- தந்தை பெரியார் அவர் களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், அந்த இரு பெரும் இமயங்களின் அடி யொற்றி இலட்சோப இலட்சம் செயல் வீரர்களும் பண்படுத்தி, வளர்த்து, பாது காத்து வரும் இந்த பூமியிலேதான், அதுவும் பெரியார் வாழ்ந்த திருச்சியிலே தான், இப்படி ஒரு குரல் கேட்டிருக்கிறது. திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விசுவ இந்து பரிஷத்தின் மாநாட்டில், அதன் செயல் தலைவர் பிரவீன் தொக்காடியா பேசும்போது, நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும். ஒரே நாட்டில் இரு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்யவேண்டும். சட்டப்படி இந் தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட குரல் எழுப்பப்பட்டிருப் பது இது முதல் முறை அல்ல.

தமிழ் ஓவியா said...


மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், சிவ சேனா போன்ற இந்துத்துவா அமைப்பு களைச் சேர்ந்த பலரும், ஏன், மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும் இப்படிப் பேசி வருவதை இந்தியா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே; காந்தியாரைப் போன்ற தேச பக்தர் கோட்சே; கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்கவேண்டும்; கேந்திரிய வித்யா லயா பள்ளிகளில் சமஸ்கிருதம் போன்ற அடிப்படை வாதக் கருத்துகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. பிரதமர் நரேந் திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பகவத் கீதையைத் தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசிய புனித நூல் தகுதி வழங் கப்பட்டுவிட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்புதான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும்; அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிடும் என் றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார். அதைப்போலவே, முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் இல்லை. அவசரநிலை காலத் திலேதான் இந்த இரு சொற்களும் சேர்க் கப்பட்டன. இந்தச் சொற்கள் அரசமைப் புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட் டிருக்கிறார்.

அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதை நினைவூட்ட நாடு முழுவதும் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை ராம் மகோத் சவம் நடத்தப் படும் என்றும்; கிராமங் கள்தோறும் இரண்டரை அடி உயர முள்ள ராமர் சிலையை நிறுவி, பத்து நாட்கள் வழிபாடு நடத்தி அந்தந்த இடங் களிலேயே ராமர் சிலை நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. இந்தியத் திரு நாட்டை பிற்போக்குத் திசைக்கு இழுத்துச் செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவுபடுத்த வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காத்து வருவது, ஜனநாயகம் - மதச் சார் பின்மை - சமாதானம் - சமதர்மம் - யாரை யும் விலக்கி வைக்காத அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சிப் பாதை ஆகிய முற்போக்கு லட்சியங்களில் உறுதியான நம் பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஆச் சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது!
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி_பதில் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95372.html#ixzz3QbDRmMnv

தமிழ் ஓவியா said...


மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், சிவ சேனா போன்ற இந்துத்துவா அமைப்பு களைச் சேர்ந்த பலரும், ஏன், மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும் இப்படிப் பேசி வருவதை இந்தியா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே; காந்தியாரைப் போன்ற தேச பக்தர் கோட்சே; கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்கவேண்டும்; கேந்திரிய வித்யா லயா பள்ளிகளில் சமஸ்கிருதம் போன்ற அடிப்படை வாதக் கருத்துகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. பிரதமர் நரேந் திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பகவத் கீதையைத் தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசிய புனித நூல் தகுதி வழங் கப்பட்டுவிட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்புதான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும்; அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிடும் என் றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார். அதைப்போலவே, முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் இல்லை. அவசரநிலை காலத் திலேதான் இந்த இரு சொற்களும் சேர்க் கப்பட்டன. இந்தச் சொற்கள் அரசமைப் புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட் டிருக்கிறார்.

அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதை நினைவூட்ட நாடு முழுவதும் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை ராம் மகோத் சவம் நடத்தப் படும் என்றும்; கிராமங் கள்தோறும் இரண்டரை அடி உயர முள்ள ராமர் சிலையை நிறுவி, பத்து நாட்கள் வழிபாடு நடத்தி அந்தந்த இடங் களிலேயே ராமர் சிலை நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. இந்தியத் திரு நாட்டை பிற்போக்குத் திசைக்கு இழுத்துச் செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவுபடுத்த வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காத்து வருவது, ஜனநாயகம் - மதச் சார் பின்மை - சமாதானம் - சமதர்மம் - யாரை யும் விலக்கி வைக்காத அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சிப் பாதை ஆகிய முற்போக்கு லட்சியங்களில் உறுதியான நம் பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஆச் சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது!
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி_பதில் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95372.html#ixzz3QbDRmMnv

தமிழ் ஓவியா said...

உண்டாக்க வேண்டும்



மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும். (விடுதலை, 1.10.1967).

Read more: http://viduthalai.in/page1/95292.html#ixzz3QbES8KsT

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங் களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுது வார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்;

வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page1/95301.html#ixzz3QbFhSS37

தமிழ் ஓவியா said...

தற்கொலை தெய்வீகமா? (தேசியத்துரோகி)


மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம்.

இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை தெய்வத் தன்மை உள்ளவள் என்றும், தான் மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்கியதை இல்லை என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்த தாகவும் சொல்லப்படுகிறது.

அப்பெண் இறந்ததற்குத் தெய்வத் தன்மை கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வல மாகத் தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தைப் புதைத்த இடத்தில் கோயில் கட்டுவ தற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.

நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டு வதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத் தால் மானமுள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கௌரவமாக ஜீவனம் பண்ணிய வர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள் குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண் களும் உண்டு, பெண்களும் உண்டு.

மணமகன் பிடிக்காத காரணத்தால், மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற் கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடை பெற்றும் இருக்கின்றது ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத்தன்மை கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறுவதும் மூடத்தனமேயாகும்.

மசூலிப்பட்டணத்தில் இறந்து போன மணப்பெண் விஷய மும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரிய முள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம். அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த காரணமும் கூற முடியாது.

இவ்வாறு உண்மையைச் சிந்தித்து பார்க்கும் அறிவில்லாமல் தெய்வீகத் தன்மையை நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வதனால் உண்டாகும் பைத்திய காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின்றார்களா? இந்தமாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்தமாக உண்டான மூடநம்பிக் கைகள் காரணமாகத் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் பெருகியிருக்கின்றன.

கிராமங்களில் உள்ள பல வகைப்பட்ட கோயில்களெல்லாம் செத்துப் போனமனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங்களில் உள்ள வர்கள் அந்தக் கோயில் சாமி களைப் பற்றிச் சொல்லும் கதை களால் அறியலாம். இப்பொழுது மசூலிப் பட்டினத்தில் நடந்த சம்பவமும் இதற்குத் தகுந்த உதாரணமாகும்.

பொது ஜனங் களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தெய்வத்தன்மை என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரை யிலுமவர்கள் முன்னேற்ற மடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷயங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங்களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும் படி செய்ய முன் வருமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 05.06.1932

Read more: http://viduthalai.in/page1/95304.html#ixzz3QbG8gGP7

தமிழ் ஓவியா said...

இன்று அண்ணா அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

பெரியார் தம் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க சூளுரைப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அண்ணா தலைவராக ஏற்றுக் கொண்ட தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதைச் சமூகத்தைப் படைக்கச் சூளுரைப்போம் என்று ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கராகத் திகழ்ந்து, உலக வரலாற்றில் எங்கு தேடினும் கிடைக்காத ஒரு சரித்திரச் சாதனையை நிகழ்த்தி, தனி ஒரு வரலாற்றையே உருவாக்கிய பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 46ஆம் நினைவு நாள் இன்று!

என்ன அந்த சரித்திரச் சாதனை தெரியுமா, நண்பர்களே? தன்னை உருவாக்கிச் செதுக்கிய தலைவனுக்கு, தான் முதன் முதலாக உருவாக்கிய (தி.மு.கழக) ஆட்சியை, சட்டமன்றத்திலேயே பதிவு செய்யும் வகையில் இந்த அரசே தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு என்று பிரகடனப்படுத்திய வரலாறு அது! அத்தகைய தலைவரின் வாழ்நாளில், அத்தலைவரே பூரித்து, இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி, (சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்செய்தியை நேரில் சென்று தெரிவித்தபோது) எனக்கு வலி குறைந்தது; மகிழ்ச்சி என்று சொன்ன வரலாறு எங்காவது உண்டா?

திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனை இது!

அத்தகைய அண்ணாவின் ஓராண்டு கால ஆட்சி - அசோகன் ஆட்சி, பவுத்த நெறியைப் பரப்புகின்ற பணி செய்ததைப் போல, அண்ணாவின் ஆட்சி - பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் - திராவிடர் இயக்கத்தின் - கொள்கை லட்சியங்களை நிறைவேற்றிடும் வண்ணம் செய்த முப்பெரும் சாதனைகள் சரியான அடிக்கட்டு மானத்தை இட்ட, லட்சியங்களை கோட்டையில் கொலுவிருக்கச் செய்தவை ஆகும்!

1. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் (முன்பு நடந்தவை உட்பட) வழங்கியது.

2. சென்னை ராஜ்யம் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றச் சட்டம்.

3. பள்ளிகளில் தமிழ் - ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மூலம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை முறித்து தடுத்த திருத்தொண்டு

மற்றும் ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணங் களுக்கு தங்கப் பதக்கப் பரிசு, சமூக நீதிக்கு பாதுகாப்பான ஒரு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஆணையம் அமைக்கத் துவக்கப் பணிகள் - தகுதி திறமை பேசி, மருத்துவக் கல்லூரிக்கு மனுபோட உயர்த்தப்பட்ட மதிப் பெண்களை பழைய படியே குறைத்து, வாய்ப்பற்றவர் களுக்கு அரிய வாய்ப்புக்களை பாதுகாக்க சமூகநீதி காப்பு,

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைநகர் சென்னையில் வரலாறு காணாத பெருமை - சிறப்புடன் நடத்திய சாதனை, இப்படி எண்ணற்ற சாதனைகள் - குறுகிய காலத்தில்.

இத்தகைய அண்ணா, அடிப்படை கட்டுமானமான பகுத்தறிவுக் கொள்கைகளை, மதச் சார்பின்மையைக் காக்க, அரசு அலுவலகங்களில் கடவுள் படம் வைக்கக் கூடாது என்ற சுற்றறிக்கை. (ஆச்சாரியார் போன்றவர்களின் எதிர்ப்பையும் கூட பொருட்படுத்தாது செய்தல்) போன்ற பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

அய்யாவிடம் அண்ணா கேட்டது

ஆட்சிக்கு வந்த பிறகு அய்யாவைப் பார்த்து பொது மேடையிலேயே, அதிக அதிகாரமில்லாத இவ்வாட்சியி லிருந்து நடத்தவா? அல்லது இதை விட்டு விட்டு முன்புபோல தங்கள் பின்னால் வந்து ஒரு தொண்டனாகப் பிரச்சாரப் பணி செய்யவா என்று கேட்க, அதற்கு அவரது தலைவரான தந்தை பெரியார்.

இப்பணியை நானும் தோழர்களும் தொடருவோம்; நீங்கள் ஆட்சியில் தொடருங்கள் ஒரு நாள், ஒரு மணி, ஒரு நிமிடம் கூட குறைவில்லாமல் ஆட்சியிலிருந்து முடிந்த நல்லவைகளை நாட்டு மக்களுக்குச் செய்யுங்கள் என்று கூறிய காட்சி - நமது மனதில் ஒளிபட நிற்கிறது இன்றும்!

ஆரிய மாயை இன்று...

அத்தகைய அண்ணா பெயர் வெறும் திரையாகப் பயன்படுகிறது!

ஆரிய மாயையைக் கண்டு, வெகுண்டு உரைத்த தலைவர் பெயரிலேயே அண்ணா, ஆரியம் சார்ந்த கலாச்சாரத்தினையும், மூடநம்பிக்கைகளையும் முனைப் புடன் நடத்துவதாக ஆக்கி, காரணப் பெயரான ஒரு தலைவரை வெறும் இடு குறிப்பெயராக்கிய வேதனையில், வெட்கப்பட்டுத் துடிக்கின்றன நமது நெஞ்சங்கள்!

ஏனோ இந்த கொள்கைப் பஞ்சங்கள் என்றாலும் தி.மு.க. என்னும் இரும்புக் கவசம் இன்னும் இருக்கிறது, கலைஞர் தலைமையில்.

சூளுரைப்போம்!

அண்ணா நினைவு நாளில் அவர் விரும்பிய பெரியா ரின் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க அனைவரும் சூளுரைத்து, சுயமரியாதைச் சூடு பெறுவோமாக!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்
3-2-2015

Read more: http://viduthalai.in/e-paper/95466.html#ixzz3QgwvMxg3

தமிழ் ஓவியா said...

காந்தியின் கொள்ளுப் பேரன் எச்சரிக்கை


இந்தூர், பிப்.3-_ மகாத் மாவை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக் குரிய விஷயம் என்று காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தெரி வித்துள்ளார். காந்தியைச் சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றும், அவருக்குக் கோவில் கட்டப்படும் என்றும் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இது காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்திக்கு (வயது 55) மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியார் அவர் களைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன் படுத்துவது வேதனைக்குரிய விஷயம். மகாத்மா அகிம்சை கருத்துகளை கொண்டிருந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங் களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். இவ் வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/95470.html#ixzz3QgxKXDTu

தமிழ் ஓவியா said...

மாநில மொழிகளைக் காக்க ஒற்றுமையுடன் போராட வேண்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா


மாநில மொழிகளைக் காக்க அனைவரும் ஒற்று மையாகப் போராட வேண்டும் என்று, கர் நாடக முதல்வர் சித்தர மையா கேட்டுக் கொண் டார்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஷாரவணபெலகோலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 81-ஆவது கன்னட சாகித்ய மாநாட் டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

மத்திய அரசின் மொழிக் கொள்கையால், மாநில மொழிகளைக் காக்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. தமது மாநில மொழிகளைக் காக்க பக்கத்து மாநிலங் களைச் சேர்ந்த அனை வரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அனைவரும் ஒன்றி ணைந்து போராடி வரு கிறோம். கன்னட மொழி யைக் காக்க, வரும் காலங் களிலும் இது தொடர வேண்டும்.

ஆங்கில மொழி மோகத் தால் தனியார் பள்ளிகள் கன்னட மொழியைப் புறக்கணித்து வருகின்றன. இதனால், நமது மண் ணிலேயே நமது தாய் மொழி அழியும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நமது மொழியைக் காக்க வேண் டியது நமது அனைவரின் கடமை. இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களை ஒன்றி ணைத்து பிரதமரைச் சந்திக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர் பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள் ளேன்.

கன்னட மொழியைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் கன்னடம் கற்பிக்க வேண் டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் தாய்மொழியைக் கற்பிக்க தமிழகத்தின் மாதிரியில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுச் செயல் பட்டு வருகிறோம். கர் நாடகத்தில் அனைத்து மொழிகளைச் சேர்ந்த வர்களும் வாழ்ந்து வரு கின்றனர்.

ஆனால், ஆங்கில மொழி வேறு நாட்டிலி ருந்து இங்குவந்து குடி யேறி உள்ளது. அதனை தாய்மொழியாகக் கொண் டவர்கள் 0.5 சதம்கூட இருக்க மாட்டார்கள். என்றாலும், அனைவரும் ஆங்கில மோகம் கொண் டுள்ளது வேதனை அளிக் கிறது.

அனைத்து மாநிலங் களிலும் தங்கள் தாய் மொழியைக் கட்டாய மாக்க வேண்டும் என காங்கிரஸ் அரசு உறுதி யாக உள்ளது. கன்னட சாகித்ய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மா னங்களைச் செயல்படுத்த அரசு உதவியாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன் னட சாகித்ய மாநாட்டின் தலைவர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/95473.html#ixzz3QgxWnT6Q

தமிழ் ஓவியா said...

மனிதன்


மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஆர்.எஸ்.எஸ். பங்கு குறித்து மவுனம் ஏன்? திக் விஜய்சிங் வினா


கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர் களுக்கு எதிரான கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள தொடர்பு குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசாதது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி யாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறிய தாவது: கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்ப வங்கள் வருத்தத்துக்கும் கண்டனத் துக்கும் உரியவை.

இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசவில்லை. இந்த விஷயத்தில் அனை வரும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று திக் விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-2/95480.html#ixzz3Qgz2docf

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை: அய்பாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்குமாம்

நியூயார்க், பிப். 3- அமெரிக்காவில் அய்பாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாஸ்டன் பல்கலைக்கழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில், வழக்கமான நட்புணர்வு மற்றும் எதேச்சையான விளையாட்டுகளை தவிர்த்து இதுபோன்ற சாதனங்களின் அதீத பயன்பாடானது, பரிதாப உணர்ச்சி, சமூக சிந்தனை மற்றும் சிக்கலை தீர்க்கும் மூளையின் திறன் ஆகியவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் மொழி மற்றும் சமூகத்திறன்கள் பாதிக்கப்படும் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95497.html#ixzz3Qh0nNgOI

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வெங்காய ஜாதகம்?

கேள்வி: ஒருவர் மறை விற்குப் பின் என்ன நிலை யில் உள்ளார் என்பதை ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா?

பதில்: அப்படி எது வும் ஜாதகத்தில் இல்லை.
- கல்கி, 8.2.2015

அப்புறம் என்ன வெங் காய ஜாதகம்?

Read more: http://viduthalai.in/e-paper/95503.html#ixzz3Qmpq6shz

தமிழ் ஓவியா said...

விடுதலை வாசகர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கும் வகையில், உரத்த சிந்தனையாக ஓர் புதிய பகுதி "கருத்துக்களம்" என்ற பொதுத் தலைப்பில் முக்கிய தலைப்புகளை அறிவிப்போம்.

100 - 150 சொற்களுக்கு மிகாமல் சுருங்க எழுதி விளங்க வைக்கும் வகையில், மின் அஞ்சல் மூலம் விடுதலை ஆசிரியருக்கு அனுப்பலாம்.

வெளிவரும் சிறப்பான கருத்துகளுக்கு தக்க பரிசுகள்- புத்தகங்களாக அளிக்கப்படும்.

திராவிடர் இயக்கத்தால் தமிழும், தமிழரும் வளர்ந்தன ரா? இல்லையா?

முதல் களம்

இரு கருத்துகளும் வரலாம். (Point - Counter Point வாதம் - எதிர்வாதம்போல் அமையும்)

அனுப்பப்படும் கருத்துகள் அத்தனையும் இடம்பெறும் என்று உறுதி அளிக்க இயலாது.

ஆனால், மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் நிச்சயம் உண்டு.

- ஆசிரியர், விடுதலை



mail id : viduthalaimalar@gmail.com

Read more: http://viduthalai.in/e-paper/95501.html#ixzz3Qmq4hUPn

தமிழ் ஓவியா said...

வாய்க் கொழுப்பு நீள்கிறது

முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுகிறார்களாம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி பேச்சு

புதுடில்லி, பிப்.4_ விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் களில் ஒருவரான பிராச்சி சாமியாரிணி லவ் ஜிகாத் செய்பவர்கள் நாய்களைப் போல் 40_50 பிள்ளைக ளைப் பெற்றுத்தள்ளுகி றார்கள். இந்துக்கள் 4 குழந் தைகளைப் பெறக் கூறி னால் சிலருக்கு கோபம் வரு கிறது என்று பேசினார். ஞாயிறன்று இரவு புதுடில்லியில் விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் களுள் ஒருவரான சாமியா ரிணி பிராய்ச்சி என்பவர் பேசும்போது, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசியல் தலை வர்கள் கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாக சித்தரித்து மக்களிடையே பொய் பிரச்சாரம் செய் கின்றனர்.

இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமை வதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்க ளால் நமக்கு என்றென் றும் தொல்லைதான்.

ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர் கள் 40 குழந்தைகளை நாய்களைப்போல் பெற்றுத் தள்ளுகின்றனர். இப்படி நாய்களைப் போல் குழந்தைப் பெறு வதை யாரும் கண்டு கொள்ளவில்லை; ஆனால், இந்து ராஷ்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தை களைப் பெறக் கூறினால் அதை எதிர்க்கின்றனர். இனிவரும் காலங்களில் எந்த வித பொய்ப்பிரச் சாரங்களையும் இந்துமக் கள் கவனத்தில் கொள் ளக்கூடாது அவர்களது கடமை 4 நான்கு குழந் தைகளைப் பெறுவது மட் டுமே, இதை தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும், மேலும் 4 குழந்தைகளுக்குமேல் உள்ள இந்து குடும்பங் களுக்கு பாராட்டும், பணமும் வழங்கப்படும்.

இதன்மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தை களுக்குமேல் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும், இந்தியாவில் உள்ள முக் கிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய் மதமான இந்து மதத் திற்குத் திரும்பவேண்டும் என்று பிராச்சி சாமியா ரிணி தமதுரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/95505.html#ixzz3QmqCso9c

தமிழ் ஓவியா said...

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/95509.html#ixzz3QmqsR4HW

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும். - (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/95508.html#ixzz3Qmr1GkpT

தமிழ் ஓவியா said...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!

ஜனவரி 26 - குடியரசு நாளைக் கொண்டாடும் சாக்கில் பிரதமர் மோடி அவர்கள் தன்னை உலகத் தலைவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட செயல்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களையே இவ்வாண்டு முக்கிய விருந்தினராக அழைத்துள்ளார்!

இதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவையாகும்.



ஏற்கெனவே திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஒப்புக் கொள்ளப்பட்டாமல் இழுபறியாக இருந்த சில பிரிவுகளும் நம் மக்களுக்குக் கேடு_பாதகம் விளைவிக்கக்கூடிய பிரிவுகளும் சேர்த்து இப்போது பிரதமர் மோடி அரசால் கையொப்பமிடப்பட்டு, முழுக்க அமெரிக்காவின் பக்கமே சாய்ந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலையினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அமெரிக்கா (வெளிநாடு) எவ்விதத்திலும் பொறுப்பேற்காது; நஷ்டஈடு தராது. மாறாக, அணு உலையை ஏற்படுத்தும் நாடே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரிவை ஒப்புக் கொண்டிருப்பது, நமது முழு சரணாகதியைத்தான் காட்டும். பொதுவாக இதுமாதிரி ஒப்பந்தங்கள் இரு சாராருக்கும் வெற்றி, யாருக்கும் தோல்வி இல்லை என்ற (Win Win Situation) அடிப்படையில் அமைவதே விரும்பத்தக்கது!

அமெரிக்க முதலீடு என்பதால் அதிக லாபம் யாருக்கு? உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிவு (Technical Know) எந்த அளவு வளரும்; பொறுத்திருந்து பார்த்தால் புரியும்.

பொதுவாக இவ்வாட்சி ஒரு பக்கம் மதவாதம்; மற்றொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பண்ணையம் இவற்றின் நிலைக்களனாக உள்ளது என்பன மறுக்க முடியாதவை.

அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள் போன்ற கொள்ளை லாபக் குபேரர்கள் கொழுக்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம், நிலங்களைக்கூட அடிமாட்டு விலைக்கு விற்று வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ளும் நிலைதான்; உர மானியம் ரத்து, உணவுக்கான சலுகைகள் ரத்து போன்றவை இதன் உண்மை நிறத்தைக் காட்டும்!

நமது விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். மதவெறியைப் பளிச்சென்று சுட்டிக்காட்டிய-தோடு, சரியான எச்சரிக்கையையும் தந்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத்தாமல் இருக்கும்பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்-குறியாகத்தான் இருக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமை) 25ஆவது பிரிவு அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடுகிறது. அனைவருக்கும் _ தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாய் பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நமது இரண்டு நாடுகளிலும், அனைத்து நாடுகளிலும் மதச் சுதந்திரத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் உள்ளது.

இப்படி பிரதமர் மோடிக்கும், ஆட்சியிலிருக்கும் அவரது கட்சியினருக்கும் பராக் ஒபாமா இந்திய அரசியல் சட்டப் பிரிவு பற்றி பாடம் எடுத்துள்ளார்!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் முதல் மற்ற மதவாத அடிப்படையாளர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இது டாலர் தேசத்திலிருந்து வந்த மில்லியன் டாலர் குட்டு!

மோதிரக் கையால் குட்டுப்படுவதைவிட டாலர் கையால் குட்டுப்படுவதைப் பெருமையாகக் கருதுவார்களோ? இதைத்தானே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இரோம் சர்மிளா : விடுதலையும் தொடரும் கைதுகளும்


இராணுவச் சட்டங்கள்

இரோம் சர்மிளா :

விடுதலையும் தொடரும் கைதுகளும்


'சர்மிளா தற்கொலைக்கு முயலும் குற்றவாளி', அவரைக் காண இம்பால் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி அனுமதி மறுத்துக் கூறியவை இவை. ஆனால் அதே நீதிமன்றம் 'சர்மிளா குற்றமற்றவர், அவரது போராட்டம் சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்து. ஜனவரி 22ஆம் தேதி விடுதலை செய்தது.

ஆனால் அடுத்த நாள் இரவே மருத்துவ உதவி தரப்படுகிறது என மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விடுதலையும் தொடரும் கைதுகளும் சர்மிளாவின்மேல் நிகழ்த்தப்படுவதல்ல, அவர் வைக்கும் கோரிக்கையின்மேல் நிகழ்த்தப்படுபவை.

மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே அந்தக் கோரிக்கை. அதற்காகவே கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்தச் சட்டத்தை இங்கிலாந்து காலனிய காலத்தில் எதிர்த்த அதே காங்கிரஸ்தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இங்கு நடைமுறைப்படுத்தியது.

இந்திய விடுதலைக்குப் பிறகான அரை நூற்றாண்டு காலம் கடந்தும் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டம், மத்தியில் எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத ஒன்று. அந்தச் சட்டம் ஏற்படுத்திய வன்முறையே எனது உண்ணாவிரதத்துக்குக் காரணம் என்கிறார் சர்மிளா.

அப்படி என்ன வன்முறை? நவம்பர் 2, 2002, மாலோம் என்ற பகுதியில் காலைப் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 10 பேர் எவ்வித எச்சரிக்கையுமின்றி அசாம் ரைபில்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதில் ஓர் இளைஞர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வீரதீர விருது பெற்றவர். இந்தச் சட்டத்துக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் கேட்கமுடியாத உட்சபட்ச அதிகாரத்தை எதிர்த்து அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சர்மிளா தொடர்கிறார்.

ஏன் இந்தச் சட்டம்? 1948இல் இந்தியாவால் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மணிப்பூரிலும் இன்னும் பிற வடகிழக்குப் பகுதிகளிலும் இந்திய _- காலனித்துவ ஆட்சி (Indian Colonial Rule) என்று நிலவும் அரசியல் சூழலை இன்றளவும் இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பதால் இங்கு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வைத்திருக்க வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு, ஆயுத இயக்கங்கள் ஊடுருவலைத் தடுக்கவே இச்சட்டம் என்கிறது.

தற்கொலை குற்றமல்ல

அண்மையில் உச்ச நீதிமன்றம் அய். பி. சி. 309, அதாவது தற்கொலைக்கு முயல்வது குற்றமாகாது என்றது. இப்போது சர்மிளாவுக்குக் கொடுக்கப்பட்ட விடுதலை, அய். பி. சி. 309 விலக்கப்பட்ட அடிப்படையில்தான் என எண்ணப்பட்டது.

தற்கொலைக்கு முயலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட ஆணையகம், தற்கொலைக்கு முயல்வோரைத் தண்டிப்பது சரியாகாது. அவர்களுக்கு அதிலிருந்து மீண்டும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றது.

சட்ட ஆணையகம் கருத்தின் அடிப்படையில், இங்கு சிகிச்சையானது ராணுவ சிறப்பதிகாரச் சட்டக் கொள்கை மீதே தேவையாக உள்ளது.

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

(கட்டுரையாளர் நியூஸ்7 தொலைக்காட்சியில் தமிழ் செய்தியாளராகப் பணியாற்றுபவர். இரோம் ஷர்மிளா குறித்து அத்தொலைக்காட்சியில் சிறப்புப் பதிவினைச் செய்தவர்.)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகளுக்கு உதவியாக சாஸ்திரங்களை எடுத்துச் சொல்லும் பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்தார்கள் என்பதும், அந்தப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறி வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எதுக்காவது போராடுவோம்?"

போனவாரம் மாதொருபாகன் மனதைப் புண்படுத்துகிறது என்று போராடியவர்கள், இப்போது நயன்தாரா பீர் வாங்குவது போல் நடிக்கக்கூடாது என்று போராட்ட அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள். எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் எதற்குப் போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் எல்லாவற்றுக்கும் போராட்ட அறிவிப்பு விடுக்கிறார்கள் இந்துத்துவ காமெடியினர். ஏதோ நம்மால ஆன உதவியையும் செய்யலாமே! எதற்கெல்லாம் போராட்டம், எப்படியெல்லாம் நடத்தலாம் என்பதை நம் உண்மை வாசகர்கள் எழுதி அனுப்பலாம். சிறந்த போராட்டத்திற்குப் பரிசு உண்டு. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் உங்கள் ஆலோசனைகளை அனுப்பிவையுங்கள்.

எதுக்காவது போராடுவோம்?

உண்மை

பெரியார் திடல், 84/1, (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

unmaionline@gmail.com

தமிழ் ஓவியா said...

ஒரு திருநங்கையின் திறந்த மடல்


'ஐ’ய்யே...

அதுக்கும் மேல...

தமிழ் சினிமா கண்ட மாபெரும்(!) இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு,

தங்களின் ஐ(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்குப் பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறுக்கித்தனங்களுக்கும், நாயக வழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம், “a shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!



நியாயமான ஒரு படைப்பைப் புரிதலின்றி மததுவேசமாகச் சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்கச் செய்யும் அதேவேளையில்தான் உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதே மதத் துவேசத்தைக் காரணம் காட்டி டாவின்சி கோட் தடை செய்யப்பட்ட நாட்டில், இதே மத துவேசத்தைக் காரணம் காட்டி தற்காலிகத் தடை செய்யப்பட்டு, அதுவே பெரும் விளம்பர முமாகி வணிக வெற்றியும் அடைந்த விஸ்வ ரூபம் படம் வெளியானதும் இங்கேதானே.

ஆனால், தாய்நாட்டு அகதிகளான, பாலியல் வெறியர்களான, அருவெருப்பான சமூக விரோதி களான எங்களை எப்படியும் சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும் எதுவும் கூறப்போவதில்லை.

சமீபகாலமாக வலைத்தளங்களில் திரைப் படங்களைத் துவைத்துக் கிழித்துத் தொங்கப் போடும் வலைத்தள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த 'ஐ' படம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம்தான்.

இம்மொக்கைக் கதை, திரைக்கதையைக் கலாய்த்த அளவிற்கு திருநங்கைகளைக் காயப் படுத்தியதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் இதில் ஒரு நயன்தாரா வேறு வில்லன்..!! என்று எழுதி யிருக்கிறார்.

குறைந்தபட்சம் இந்த ஆபத்தான ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்ட மான பட்ஜெட் தாண்டி அதற்கும் மேலயும் சில விசயங்கள் இருப்பதைத் தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள் விரும்புகிறேன்.

சிவாஜி படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்னக் கலைவாணர் அவர்கள் இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு என்று ஏளனமாகக் கூறியதும் சீ..சீ என்று அருவெறுப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதைத் தூசி தட்டி தற்போது அதற்கும் மேல ப்ரம்மாண்டமாய் காறித் துப்பியதைத்தான் பேச விரும்புகிறேன்.

வழக்கமான நாயகன் போலவே இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்ல னைப் பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே டே பொட்ட.. என்கிறார். நான் அதிர்ச்சி யடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் நன்கு பழகி யிருக்கிறோம். விக்ரம் அவர்களுக்கும்கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் சேது படத்தில்கூட டே.. இப்பிடிப் பண்ணிப் பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப் போற என்று சொன்னவர்தான். அதற்குப் பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருக்கக்கூடும்.

சதுரங்க வேட்டை என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத் அவர்களே பொட்ட என்று சொல்லாடலை எளிதாகப் பயன்படுத்துகையில், அதனைப் பிரபல திரை விமர்சகர்களான கேபிள் சங்கர்கள் சப்பைக் கட்டுக் கட்டும்போது, உங்களிடம் மட்டும் அந்தக் கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.

அதுசரி உங்களால் பொட்டை என்று அறியப்படும் நாங்கள் உங்கள் ஆண்மைப் பராக் கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடி யிருப்பதை அறிந்து எம் பாலினத்திற்கு நேர்மை யாக இருக்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

திருநங்கையாக குடும்பத் தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும் திருநங்கை யாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

தமிழ் ஓவியா said...

பெற்றோர்களின் சொத்துசுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாகத் தொடங்கி அடுத்த வர்களைச் சாராமல் வாழ்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

தெருவி லும், வெள்ளித்திரையிலும் உங்கள் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் ஆண்மை பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது பொட்டைகள் சோத்தில் உப்புப் போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??

ஐ என்ற தலைப்பிற்கேற்ப அய்ந்து வில்லன்கள் வேண்டுமென்று யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலைப் பாராட்டுகிறேன்.. அதற்கும் மேல, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில் வித்தியாசமான, காமெடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக திருநங்கையை வைத்ததையும், அதுவும் ஆதண்டிக்காக இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜனியையே (எந்திரன் படத்தில் அய்ஸ்வர்யா ராயை அழகாய் காட்டி யவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்க வைத்த தில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன்.

ஆனால், அந்தக் கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜப் பேரான ஓஜாஸ்யையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?

தமிழ் ஓவியா said...

தான் வியக்கும், விரும்பும் அழகியாலயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜாஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த் தரமான பார்வையேன் வருகிறது. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதைப் பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக விதைக்கத்தானே?!. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளைக் கலாய்க்க, காஞ்சனா (திருநங்கைகளைச் சற்று கண்ணியமாக்கிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்கப் பயன்படுத்தும் ரசிகர்களை எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகி யிருக்கும் நிலையில் ஊரோரம் புளியமரம்.. என்று பாடுவது எதனால்?

நீங்கள் எதிர்பார்த்ததைப் போலவே அந்தக் காட்சியில் ரசிகசிகாமணிகள் அரங்கம் அதிரச் சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை மீறி, முதல்வன் படத்தில் வரும் புகழின் அம்மாவைப் போல என்னைப் போன்ற பொட்டைகளைப் பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை எட்டியிருக்காது.

அதெப்படி, வெறும் திரையிலும், போஸ்டர் களிலும் மட்டுமே கண்ட ஓர் அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஓர் ஆணழகன் காதலித்துவிட முடியும், அதுவும் உண்மையான, நியாயமான, சில்மிஷம் இல்லாத காதலாகிறது.

குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு அழகியால், ஆணழகனைப் பரிசுத்தமாக காதலிக்க முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கை யின் காதல் உணர்வு மட்டும் எப்படித் தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்ப னாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவெறுப்பா கவே பார்க்கப்படுகிறது.

அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைத்தான் சூசகமாகக் கூறுகிறீர்கள் இல்லையா?

அவரை ரிச் _ -திருநங்கையாகக் காட்ட ஆரம் பத்தில் அழகான கேமரா ஆங்கிளைப் பயன் படுத்திய நீங்கள், அவரது காதல் புறக்கணிக்கப் படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்டப் பயன்படுத்திய காமிரா ஆங் கிளில் அசிங்கமாகத் தெரிந்தது ஓஜாஸ் மட்டும் இல்லை, நீங்களும்தான் என்பதை உணர்ந் தீர்களா?

இவ்வளவு வரைக்குமே உங்களிடம் நாகரிக மாகத்தான் கோபம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், 9 என்ற அறையெண்ணைக் காட்டி பின் ஓஜாஸைக் காட்டிய உங்கள் அரதப்பழசான, அருவெறுப்பான விளையாட்டை எண்ணி என்னால் கெட்ட வார்த்தைகளால் வசை பாடாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், இதே 9 என்ற சொல்தான், என் பள்ளிக்காலம் முழுதும் முள்ளாகக் குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னைத் தனிமைப் படுத்தியது.

இதே 9 என்ற சொல்தான், இப்போது வரையிலும் எல்லா அற்பனும் என்னைச் சிறுமைப்படுத்தப் பேராயுதமாகப் பயன்படுத்து கிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த கெட்ட வார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.

இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சன சிகாமணிகள் எனக்கு நாகரிக வகுப்பு எடுப்பார்களே என்று அஞ்சி நானாக நாகரிகமாகவே தொடர்கிறேன்.

இப்படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை என்ற டிஸ்க்லைம ருடன் தொடங்கும் இப்படத்தில்தான், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட்.

அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?

ஒரேயொரு படத்திற்காக இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும் விக்ரமிடம் இதுபோன்ற அற்பக் காட்சிகளில் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள்கூட வைக்கமுடியவில்லை.

ஏனெனில், அடுத்த உலகநாயகனாக வேண்டு மெனத் துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும்கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக் கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் பொட்டை என்னும் சொல்லாடலைத் தொடர்ந்து தமது படங்களிலும், அதற்கும் மேல வேட்டையாடு, விளையாடு படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்குச் சிறப்பாக மலினப்படுத்தி யிருக்கிறாரே...

உங்கள் இருவருக்கும் மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமெடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண் பராக்கிரமசாலிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல.

உங்களால் ஏலியனாகக் கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான்.

எங்கள் வீட்டிலும் டி.வி. பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம்.

ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

- லிவிங் ஸ்மைல் வித்யா

தமிழ் ஓவியா said...

கருத்து


மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்தனை ரீதியாக முதலாளித்துவ ஆதரவாளர்களாகி-விட்டனர். சமூக, பொருளாதாரக் கொள்கையின்படி நான் இன்னும் ஒரு மார்க்சிஸ்ட்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சரிசமமான பகிர்வுக்குத்தான் மார்க்சிசத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

- தலாய் லாமா, புத்த மதத் தலைவர், திபெத்.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவிச் சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்



சொல்றாங்க...



பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரதப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாகக் காவி மயமாக்கப்படும்.

- ராம் பிலாஸ் சர்மா, கல்வி அமைச்சர், ஹரியானா

சொல்றேங்க...

நல்லா கற்பிங்க அமைச்சர் சார்!

ஆனா... நண்பன் படத்து டயலாக் மாதிரி கற்பிங்கிறது கற்பழின்னு ஆகாமப் பாத்துக்குங்க! ஏன்னா... நீங்க சொல்ற பாரதப் பண்பாட்டின் மகாபாரதத்தையும், பாகவதத்தையும், இதர புராணங்களையும் மாதிரி கற்பழிப்பு சீன் உள்ள கதைகள் உலகத்திலேயே கிடையாது!

சொல்றாங்க...

பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தமல்ல.

- பூபிந்தர் சிங் ஹுடா, மேனாள் முதல்வர், ஹரியானா

சொல்றேங்க...

இதுதானா சார் உங்க டக்கு! பா.ஜ.க. மட்டும் இதை வச்சு அரசியல் பண்ணக்கூடாது... நாங்களும் பண்ணு-வோம்ங்கிறீங்களா... விஷம் யார் கையில இருந்தாலும் விஷம்தான் சார்.

சொல்றாங்க...

டில்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டில்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப்பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்தைய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்குக் காரணமே இந்தக் கட்சிகளின் ஜாதிய அரசியல்தான். - நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்

சொல்றேங்க...

ஆமாங்க... அவங்களோடது பிற்படுத்தப்-பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல். உங்களோடது பார்ப்பன உயர்ஜாதி அரசியல்!

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடாக பாலஸ்தீனம் ஜனவரி 6 அன்று இணைந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்கத் தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்துதர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று ஆணையிட்டது.

அய்ரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கொலிந்தா கிரயா கிதாரொவிச் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த கருநாடக மேனாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டிக்கு 40 மாதங்களுக்குப் பின்னர் ஜனவரி 20 அன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பயங்கரவாதிகள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்கள் இரண்டினை பாகிஸ்தான் அரசு ஜனவரி 3 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை ஜனவரி 6 அன்று நிறைவேற்றப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை மதுகின்னார் வெற்றி பெற்றுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் மன்னர் அப்துல்லா ஜனவரி 23 அன்று மரணம் அடைந்ததை அடுத்து புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்-பட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தேநீர் இரட்டைக் குவளை

மலைஜாதிப் பெண்
கிள்ளிப் பறித்தாள்
தேயிலையை அங்கே!
கறவைப் பசுவை
பாடிக் கறந்தாள்
பால் வந்ததிங்கே!
கரும்பாலை அலுப்பில்
தினம் அவன் உழைத்தே
சக்கரை சேர்ந்ததிங்கே!
தண்ணீர் கலந்தவன்
என்ன ஜாதியோ?
என்ன எழவோ?
-என யாரும் கேட்டறியேன்.
பாத்திரம் தேய்த்தவன்,
அடுப்பைச் செய்தவன்,
எரிக்கிற எண்ணெய்,
கழுவுகிற சோப்புக் கட்டி,
எதற்கும் ஆதிமூலம் கேட்டறியேன்.
ஜாதி பேசும்
சுத்தபத்தம் எல்லாம்
தேநீர்க் கடை
இரட்டைக் குவளையில்தான்.
இப்பெல்லாம் எங்க சார்
இரட்டை டம்ளர். எல்லாமே பிளாஸ்டிக் டம்ளர்தானே' என்பவன்
வலிந்து சொல்வான்
இப்பெல்லாம் யாரு சார்?
ஜாதி பாக்குறா! என்று.

- தம்பி. அழ. பிரபு, மதுரை