Search This Blog

28.2.15

நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன?


நிலம் கையகப்படுத்தல் அல்ல - சுருட்டல்!


நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்து கிறார்கள்? வழிமுறைகள் என்ன?


இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று அறிமுகப்படுத்தப் பட்டது. இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையகப்படுத் துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.


சட்டம் பற்றிய முன்னுரை:


பொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை, பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகப் படுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகபடுத்துதல் தொடர்பான சட்டங்கள், நிலம் கையகபடுத்துதல் சட்டம்,1984 என அழைக்கப்படுகிறது.


சட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:


1. முதல் அறிக்கை: நிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கையகப்படுத்தும் முன், அவ்வாறு கையகப்படுத்துவதற்கு தனக் குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ்க் கண்டவற்றில் அறிவிக்க வேண்டும்.

அ. அரசிதழ் ஆணை

ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.

இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், பொதுமக்களுக்கு வசதியான இடங்களில் அறிவிக்கை.

இத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிக்கை வெளியான நாள், அறிவிக்கை நாளாக கருதப்படும். அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடிப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.


2. ஆட்சேபணைகளை விசாரணை செய்தல்:


அறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடைய அல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபணைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.


நிலம் கையகபடுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகப்படுத்துவது, கையகப் படுத்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது அந்த இடத்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டுத்தலம், சமாதிகள் அல்லது மயானங்கள் இருப்பது போன்ற காரணங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபணை தெரிவிக்கலாம்.


இந்தக் கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்கு பதில் வேறு மாற்று இடத்தை கையகப்படுத்துமாறு மாவட்ட ஆட்சிய ருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத் தகைய ஆலோசனைகளுக்கு மதிப்பளிக் காவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச் சையாக முடிவெடுத்ததாக உயர்நீதிமன்றத் தில் வாதாடலாம்.
அறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதைத் தவிர்க்கலாம்.


3. கையகப்படுத்தும் முடிவை அறிவித்தல்:


கையகப்படுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்


அ. அரசிதழ் ஆணை


ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.


இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், இந்த அறிக்கை அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும். இதில் கையகப்படுத்தப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகப்படுத்தபடும் நோக்கம் ஆகிய வற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.


4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:


கையகப்படுத்தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட்ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைகளில் உள்ள ஆட்சேபணைகளை தன்னிடம் குறிப்பிட்ட தேதியில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தைப் பயன்படுத்தும் மற்றும் சம்பந்தபட்ட அனைவருக்கும் தனித் தனியே அறிவிப்பு அனுப்ப வேண்டும். அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரிவிக்க 15 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்


5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:


சம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்ட பின் கையகப்படுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகியவற்றைத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரால் உறுதி அளிக்கப்படும். உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும்.
சந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப் பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில் ( கட்டாய கையகப்படுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும்.


தீர்வுக்கான வழிமுறைகள்:

எந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்?
சட்டபிரிவு 4: முதல் அறிக்கை சட்டபிரிவு 6: கையகப்படுத்தும் முடிவை அறிவித்தல்:
சட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உறுதி
சட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்குப் பரிந்துரை
சட்டபிரிவு 28 இழப்பீட்டை மறு மதிப்பீடு செய்தல்

யாரிடம்/எப்போது புகார் செய்யலாம்?


மாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியடையா விட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை செய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆட்சியரைக் கோரலாம்.


வழக்கை எவ்வாறு பதிவு செய்வது?


சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பார். இதற்கு நீதிமன்ற கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை. இழப்பீட்டை அதிக ரித்தோ, அளவீடு மற்றும் பாகப்படுத்துதல் தொடர்பான ஆட்சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம். எனினும் இழப்பீட்டு அளவை நீதிமன்றம் குறைக்க முடியாது.


அடுத்த கட்ட நடவடிக்கைகள்:


இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து நீதிமன்றம் ஆணையிட்டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்ப்பளித்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.


அவசரச்சட்டத்தில் உள்ள பாதகமான திருத்தங்களில் சில
  • பாஜக கொண்டுவரும் புதிய சட்டத்தில் இழப்பீடு தொடர்பான எந்த ஒரு தெளிவான விளக்கமும் இல்லை.
  • கிராமசபை, பஞ்சாயத்து உறுப்பினர் களின் சம்மதம் வேண்டும் என்ற விதி எடுக்கப்பட்டுள்ளது.
  • விளைநிலங்களை எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தலாம். அதிகாரிகளிடம் மாத்திரம் இதற்கான அனுமதி பெற்றால் போதும்.
  • நிலம் கையகப்படுத்தும் போது பொதுப்பாதையாக இருந்தாலும் அதைத் தடைசெய்து மாற்றுப்பாதை ஏற்படுத்தவேண்டும்.  றீ    மாநில அரசிடம் நேரடி அனுமதி பெறத் தேவையில்லை.
  • விவசாயி ஒருவரின் அனுமதியின்றி அவரது நிலத்தை கையப்படுத் தலாம் அதற்கான இழப் பிட்டைக் கொடுத்தால் போதும்.  நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமானால் 70 சதவித விவசாயிகளின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்ற அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் இடம் பெற்ற சரத்து இப்போது நீக்கப் பட்டுள்ளது.
அரசு விரும்பினால் யாருடைய நிலத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அப்படியே தூக்கிக் கொடுக்கலாம்.

நீதிமன்றம் செல்லுவதற்கும் அரசின் ஒப்புதல் அவசியம்.


விவசாய நிலங்களாக இருந்தாலும் கவலையில்லை. ஏற்கெனவே விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்பட்டுப் பணம் சம்பாதிக்கப்பட்டது. இனி மேல் வயல்வெளிகளில் எல்லாம் கான்கிரீட் கட்டடங்கள் சும்மா தூள் பறக்கும்.
இத்தொழிற்சாலைகள் கக்கும் விஷ வாயுவைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம். இந்தியா விவசாய நாடு என்பது எல்லாம் பழங்கதை, இந்துத்து வாவில்தான் விவசாயம் பாவத் தொழில் ஆயிற்றே!


மோடி குஜராதத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது? குஜராத் மகுவாபகுதி நிலக்காரர்களின் போராட்டம் மிகவும் முக்கியமானது.


அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி எடுத்து சோப்புத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்காக உத்தர விட்டவர்தான் முதல் அமைச்சர் மோடி.


பூர்வீகமாக வாழ்ந்த 30 ஆயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் பிஜேபிக்காரர்கள்கூட உள்ளூர் மக்களோடு சேர்ந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.1400 கோடியில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் தனி முதலாளி உருவாக்க இருந்த தொழிற்சாலைக்காக அப்பாவி மக்கள் வெளியேற்றப்பட்ட கொடுமையை என் சொல்ல!


சவுராட்டிரா வாங்கனர் மாவட்டத்தில் 40 ஹெக்டர்  நிலம் சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்குத் தனியார் தொழிற்சாலைக்கு விற்ற விற்பன்னரும் இதே மோடிதான். உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற்றனர் என்பது வேறு சேதி!


கட்ஜ் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பிஜேபியின் தலைவராக அப்பொழுது இருந்த வெங்கையாநாயுடு பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்குக் குறைந்த விலையில் விற்றார் என்று பிஜேபி சட்டமன்ற உறுப்பினரே ஆன்லுக்கர் இதழுக்கு விரிவான பேட்டி அளித்ததுண்டு (ஃப்ரண்ட் லைன் 20.5.2011).


மேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் தொடங்க இருந்த நானோ கார்களை (ஒரு லட்சம் ரூபாயில்) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கிட நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் வெகு மக்கள் வீங்கு தோள் பூரித்து வெகுண்டெழுந்தனர் (இதற்குக் கம்யூ னிஸ்ட் ஆட்சி பலத்த விலையைக் கொடுக்க நேர்ந்தது)


அங்கிருந்து வெளியேறிய டாட்டாவை சிகப்புக் கம்பளம் விரித்து, பூர்ண கும்பம் கொடுத்து  கூழைக் கும்பிடு போட்டு குஜராத்தில் ஏழை மக்களின் வயிற்றில் அடித்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை அள்ளிக் கொடுத்த வள்ளல் (?) மோடி தானே!


1100 ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து எந்திரங்களைக் கொண்டு வந்த போக்கு வரத்து செலவான 700 கோடிகளையும் மோடி அரசே ஏற்றது.


கடனாக அளிக்கப்பட்ட தொகையோ ரூ.9750 கோடி 20 ஆண்டுகளில் கடனை செலுத்தலாம். வட்டி எவ்வளவு தெரியுமா? 0.1% உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் 85 விழுக்காடு என்ற நிபந் தனையும் நீக்கப்பட்டது.


அதானி குழுமத்திற்கு முந்திரா துறைமுகம் கட்டுவதற்காக (2005-2007) மோடி அரசு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்ததே! ஆனால் அந்த நிலம் அந்தக் காரணத் துக்காகப் பயன்படுத்தப்பட்டதா? 98.60 லட்சம் சதுர மீட்டர் மட்டுமே பயன் படுத்தப்பட்டது.


சதுர மீட்டர் 32 ரூபாய் விலையில் வாங்கிய அதானி குழுமம் மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை என்ன விலைக்கு விற்றுச் சுருட்டியது தெரியுமா? சதுர மீட்டர் ரூ.400 முதல் ரூ.737 வரை மற்ற நிறுவனங்களுக்கு விற்று பெரிய ஏப்ப மிட்டது. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம்!


இதனை எதிர்த்து டில்லி அறிவியல் மய்யத்தின் தலைவர் சுனில் நாராயண் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை ஒன்றை அளித்தார் (18.4.2013) முந்திரா துறைமுகத் திற்கு அளிக்கப்பட்டுள்ள சுற்றுச் சூழல் சான்றினை உடனே ரத்து செய்யுமாறு வலியுறுத்தினாரே!


மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகிறார். தற்போது நமக்குப் பொரு ளாதார வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. கடந்த காலங்களில் வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் போன்ற விதிகளின் காரணமாக தொழில் தொடங்க பல்வேறு தடைகள் இருந்து வந்தன. அந்தத் தடைகளை இப்பொழுது நீக்கியுள்ளோம் என்று கூறினாரே!


இவற்றை எல்லாம் அறிந்தால் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்லப் புதல்வர் என்பதை எளிதில் அறியலாமே!


எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கணிப்பு (சர்வே) ஒன்றில் இந்தியாவில் உள்ள 100 நிறுவனங்களிடம், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்வியை வைத்தபோது கலந்து கொண்ட கார்ப்ரேட் நிறுவனங்களில் 74 சதவீதம் கார்ப்பரேட்டர்கள் மோடிதான் அடுத்த பிரதமராக வர வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தனர்.


இதில் பிர்லா, டாட்டா, அம்பானி, மிட்டல், அடானி, தாப்பர் போன்றோர் அடங்குவர். ராகுல் உட்பட மற்றவர்களுக்கு 26 சதம் பேர் ஆதரவு தந்தனர். (தீக்கதிர் 29.10.2013 பக்.4)


ஆதரவு தர மாட்டார்களா பிரபுக்கள்? மோடி அளவுக்கு முதலாளித்துவத்திற்கு முத்தம் கொடுத்து ஆராதிக்கும் ஒருவரை எங்குப் போய்த் தேட முடியும்?
குடியரசு நாள் விளம்பரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் இடம் பெற்றிருந்த செக்குலர், சோஷலிஸ்ட் என்ற சொற்களை விலக்கி ஏன் விளம்பரம் கொடுத்தார்கள் என்பது இப்பொழுது புரிகிறதா?


செக்குலர் என்பதை நீக்கியதன் மூலம் இது மதச் சார்பற்ற அரசு அல்ல - இந்துத்துவா ஆட்சி என்பதைக் காட்டிக் கொண்டனர். சோசலிஸ்ட் என்பதை நீக்கியதன் மூலம் இது முதலாளிமார்கள் கார்ப்பரேட்டர்களின் ஆட்சி என்று விளக்கவே; இப்பொழுது புரிகிறதா அந்த விலக்கலின் மர்மம்?


தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி யாருடைய விமானத்தில் இந்தியா முழுமையும் சுற்றித் திரிந்தார்? அடானி குழுமத்தின் விமானத்தில்தானே சுற்றித் திரிந்தார்? எல்லா வகைகளிலும் கார்ப்பரேட்டர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி நன்றிக் கடன்பட்டுள்ளார்.
ஏழைகளாவது, பாழைகளாவது, விவ சாயிகளாவது...இது என்ன இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது - தெரியும் சேதி!
 
----------------------------கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள் 28-02-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/96983.html#ixzz3T2Lk6Hwh

48 comments:

தமிழ் ஓவியா said...

74 ஆண்டுகளுக்குமுன் அண்ணா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட மூதாட்டியின் மலரும் நினைவுகள்

திருச்சி அருகில் திருவானைக் கோவில் பகுதியில் ஓட்டுவீட்டில் வசிப்பவர் சம்பூரணம் 92 வயதுள்ள மூதாட்டி இவர்.
அண்மைக்காலத்தில் முக்கியப்பிர முகர்களின் கவனத்துக்குள்ளானார். முதுமைக்காலத்தில் தற்போது அதிகஅளவில் மகிழ்வடைந்துள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அம்மூதாட்டியைச் சந்தித்து அவர் அந்தக் காலத்தில் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணம் குறித்து பேசி உள்ளார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக அப்படி ஒரு சீர்திருத்த திருமணம் செய்துகொள்வது என்பது மிகப்பெரிய புரட்சியானதாகும்.

1941ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திமுக நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்முறையாக நடத்திவைத்த சுயமரியாதைத் திருமணமாக சம்பூரணம்- _ -இராம. சின்னய்யா ஆகியோரின் திருமணம் அமைந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் 50 பேர் கலந்துகொண்ட மணவிழாவாக நடைபெற்றது.

இதுகுறித்து சம்பூரணம் கூறுகையில், அப்போது எனக்கு 19 வயது. என் கணவருக்கு 34 வயது என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

எப்போதும் மறக்க முடியாத விழா அது. தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன், வழக்குரைஞர் டி.பி.வேதாசலம் ஆகி யோரும் பங்கேற்றனர் என்று பசுமை யான நினைவுகளை எடுத்துக்கூறினார்.

அறிஞர் அண்ணாவுக்கு முக்கிய மான நிகழ்வாக அமைந்நதது. அதுதான் அவர் நடத்திவைத்த முதல் சுயமரி யாதைத் திருமணமாகும். இரண்டு ரோஜா மாலைகள் மற்றும் 50 ரோஜா மலர்கள் விழாவில் இடம் பெற்றன.

அய்ந்துபேருடன் பிறந்தவர் சம்பூர ணம். சம்பூரணத்தின் தமக்கையார் அய்ந்து படி அரிசி போட்டு திருமண விருந்து படைத்தார். அவர் சகோதரர் சைமன் இராமசாமி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும், திமுக பொதுக்கூட்டங்களி லும் பாடியவராவார். அவர்தான் சம் பூரணம் திருமணம் சுயமரியாதைத் திரு மணமாக நடைபெற்றதற்குப் பெரிதும் காரணமானவராக இருந்துள்ளார்.

திருச்சியில் பல ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றியவர் சம்பூர்ணம். அவருடைய சகோதரி பொற்செல்வி இளமுருகு கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனாலும், சம்பூரணம் கலைஞரை பொதுக்கூட்டங்களில் மட்டுமே பார்த்து, அவர் பேச்சு, உச்சரிப்புகளால் பெரிதும் கவரப்பட்டவர். சம்பூரணத் தின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் பாக சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். அவர் மகன்கள் திருச்சி மற்றும் மதுரையில் உள்ளனர். அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கின்றனர்.

அண்மையில் சிறீரங்கம் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகைதந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சம்பூரணம் அம்மையாரை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து, நலம் விசாரித்துள்ளார்.

அவரிடமும் கலைஞர் மற்றும் தயாளு அம்மாள் குறித்தும் சம்பூரணம் நலன் விசாரித்ததுடன், கலைஞர் நீண்ட காலத்துக்கு நல்ல உடல் நலனுடன் வாழ வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page8/96997.html#ixzz3T2NippVB

தமிழ் ஓவியா said...

தெரியுமா?

சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத்தான் எழுப்பும்.

ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாள்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 லட்சம் குவளை பால் கொடுக்கும்.


Read more: http://viduthalai.in/page8/96998.html#ixzz3T2NypqGR

தமிழ் ஓவியா said...

ஹிந்துஸ்தானும் சமஸ்கிருதமும்

பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE, MBA,MA(History)MA(Linguistics)

ஹிந்துஸ்தான் எங்கே உள்ளது ?

வடஇந்தியாவில் உள்ள சிந்து சம வெளியும் கங்கைச் சமவெளியும் அடங்கிய நிலப்பரப்புக்கு இநதுஸ்தான் அல்லது ஆரிய வர்த்தம் என்று பெயர். விந்திய மலைக்கு தெற்கே திராவிடர்கள் வாழ்ந்த பகுதி (குஜராத் உள்பட) திராவிடஸ்தான் அல்லது திராவிடம் என்று அழைக்கப்பட்டது.

ஹிந்துஸ் தானில் இருந்த சிந்து சமவெளியின் பெரும்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ளது ஒரு பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ளது. கங்கைச் சமவெளியின் கிழக்குப்பகுதி தற்போது பங்களா தேஷில் உள்ளது. எனவே ஹிந்துஸ் தான் தற்போது மிகவும் சுருங்கி விட்டது.

ஹிந்துஸ்தான் என்ற பெயர் துரக்மேனிஸ்தான் கஜகிஸ்தான போன்று அந்நியரால் பாரசீகர்களால் வைக்கப்பட்ட பெயர் அதை ஜம்புத் தீபத்தில் (நாவலந்தீவு) உள்ளவர்கள் பயன்படுத்துவது மதப்பற்று அல்ல ஏனென்றால். ஹிந்துஸ்தான் மதம் சார்ந்த பெயர் அல்ல. மேலும் ஹிந் துஸ்தான் என்ற பெயர் நமது தேசிய கீதத்தில் இல்லை. ஆனால் திராவிடம் என்ற பெயர் தேசிய கீதத்தில் உள்ளது.

இந்துஸ்தானும் சமஸ்கிருதமும்

பாஜக மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹிந்துஸ்தான் என்ற பெயர் இந்தியாவிற்குப் பதிலாக பாஜக தலைவர்களால் பேசப்படு கின்றது. கங்கைச் சமவெளியில் ஆரியர் கள் குடியேறிய பின் யாகங்கள் நடந்தன. யாகங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டன. விவ சாயம் பாதிக்கப்பட்டது. அந்த விவ சாயிகள் ஆரியர்களை எதிர்த்தனர்.

இதனால் விவசாயிகள் சூத்திரர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இதன் விளைவாக புத்த சமண மதங்கள் தோன்றின. இநத மதங்களால் ஆரியர் களின் வேதமதம் ஹிந்துஸ்தானில் வழக்கு ஒழிந்தது

பின்னர் கிரேக்க வீரர் அலெக் சாண்டரின் ஆட்சி ஹிந்துஸ்தானில் கிமு-326-ல் ஏற்பட்டது. அப்போது இலக் கண அறிஞர் பாணினி இஸ்லாமாபாத் அருகே அட்டாக் மாவட்டத்தில கிமு300-ல் பிறந்தார் அவர் தன் கிராமத்தில் உயர் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட மொழிக்கு இலக்கணம் அமைத்தார். அப்போது சமஸ்கிருத மொழி தோன்றவில்லை.

மௌரியர்கள் புத்த மதத்தையும் பாலி மொழியையும் ஆதரித்தனர். ஆனால் சமஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை. கிமு 200ல் பதஞ்சலி என்ற அறிஞர் பாணினி உரை (மஹா பாஷ்யம்) எழுதினார். இதற்குப்பின் தான் சமஸ்கிருதம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

கிபி 150-ல் திராவிடஸ்தானில் சௌராஷ்டிரா பகுதியில் (குஜராத்தில்) ஜூனாகட் ராஜ்ஜியத்தில சமஸ்கிருத கல்வெட்டு முதன் முதலாக ஆராயச்சி யாளர்களுக்கு கிடைத்தது. இது ருத்ரா தாமன் என்ற மன்னன் காலத்தில்தான் நடந்தது. இது ஹிந்துஸ்தானில் சமஸ் கிருதம் போதிய வளரச்சியைப் பெற வில்லை என்பதினைக் குறிக்கின்றது.

தமிழ் ஓவியா said...


வேதமொழியும் சமஸ்கிருதமும்

வேத மொழி பாரசீக மொழியான அவெஸ்தன் மொழியுடன் கலந்து உருவான மொழி. இந்த மொழியில் ரிக் வேதம் எழுதப்பட்டது. ரிக்வேதத்தின ஒரு பகுதி இந்தியாவிற்கு வெளியே எழுதபட்டது என கம்யூனிஸ்ட் தலைவர் இ எம் எஸ் நம்புதிரிபாட் தன் நூலில் (இந்திய வரலாறு- பக்கம்-28இ-ல்) கூறுகிறார்.

இந்துத்வா கொள்கைகளைப் பரப்பிய தலைவரான பால கங்காதர திலகர் ரிக் வேதத்தை ஆய்வு செய்தார். அதற்காக திலகர் அவெஸ்தன் மொழி கற்றார். தன் ஆய்வின் முடிவில் ஒரு நூல் (-தி ஆர்க்டிக் ஹோம் .இன் த வேதாஸ்--) எழுதினார். அதில் ஆரியர்கள் ஆர்க்டிக் துருவப் பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் எனத் தெரிவித்தார்.


தமிழ் ஓவியா said...

இத்தகைய வேத மொழியை சந்தஸி என்று பாணினி குறிப்பிட்டுள்ளார். புத்த மதம் பாலி மொழியை ஆதரித் தது. சமண மதம் அரத்த மாகதியை ஆதரித்தது. இவ்விரு மதங்களும் வேதமதச் சடங்குகளை எதிர்த்ததால் வேதமதம் அழிந்தது.

பின்னர் குப்தர்கள் காலத்தில் வைணவ மதம் செல்வாக்குப் பெற்றது. அப்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் வளர்ந்தது. அப்போது இராமாயணம் மகாபாரதம் மற்றும் புராணங்கள் உருவாகின. இந்த நூல்கள் வைணவ மதத்தை வளர்க்க பெரிதும் உதவின.

பாணினியும் சமஸ்கிருதமும்

பாணினி எழுதிய இலக்கண நூலைப் பின்பற்றி பாணினி காலத் திற்குப் பின் சமஸ்கிருதம் செயற்கை யாக உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்றால் பல மொழிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது என்று சமஸ்கிருத நூல்கள் பொருள் தருகின்றன.
பாணினி காலத்துக்குப் பின் சமஸ் கிருதம் செயற்கையாக உருவாக்கப் பட்டது.

சாகித்ய அகாடெமி வெளியீடு சமஸ்கிருதம்பற்றி கூறுவதென்ன?

டாக்டர் சரோஜ் பாட்டே என்ற அம்மையார் புனே பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்துறைப் பேராசியர். இவர் பாணினி இலக்கணத்தைப்பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். அதை சாஹித்ய அகாடெமி வெளியிட்டுள்ளது. அந்த நூலில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கள் கீழே கூறப்பட்டுள்ளன.

1. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியின் பெயரை சமஸ்கிருதம் என்று குறிப்பிடவே இல்லை. பாஷா என்று தான் குறிப்பிடுகிறார். (ஏனென்றால் பாணினி காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி இல்லவே இல்லை. கிமு 100-க்குப் பின்தான் பல மொழிகளைச் சேர்த்து கலவை மொழியாக செயற்கையாக உரு வாக்கப்பட்டது).

2. பாணினி தன்னுடைய நூலுக்கு அஷ் டத்யாயி என்று பெயரிடவில்லை. பாணினி தனது நூலை எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கவில்லை. பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பிரித்திருக்கலாம் (பக்கம் 12).

3. பாணினி தனது மாடல் இலக்கண நூலில் மொத்தம் 3995 சூத்திரங் களை எழுதியுள்ளார். அதில் 300 சூத்திரங்கள் மட்டும் வேத மொழி யுடன் (சந்தஸி) தொடர்பு உடையது.

4. உயர் வகுப்பு பேச்சு மொழியாக விளங்கிய மொழிக்குத்தான் பாணினி இலக்கணம் அமைத்தார் என்று கூறப்படுவதால் பாணினி பேச்சு வழக்கற்ற சமஸ்கிருதத்திற்கு இலக் கணம் அமைக்க வில்லை என அறியலாம்.

5. மெட்டாலாங்வேஜ் (சமஸ்கிருதம் அல்லாத) மொழியில் இலக்கணம் அமைத்தார். இந்த மொழி கருவி மொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த மெட்டா லாங்வேஜ் சமஸ் கிருதத்தைச் சேராத சொற்களையும் வாக்கிய அமைப்பையும் கொண்டது என கூறுகிறார் (பக்கம் 26).

6. பாணினி தன் நூலை மிகவும் சுருக்க மாக அமைத்துள்ளதால் எழுத்து வடிவில் எழுதப் படவில்லை எனக் கருதப்படுகின்றது.

தமிழ் ஓவியா said...


7. பாணினி இலக்கணத்தை அடிப் படையாக கொண்டவை கன்னட, தெலுகு, மராத்தி, மலையாளம் மொழிகளின் இலக்கண நூல்கள் ஆகும். ஆனால் தமிழ் மொழியின் இலக்கணம் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டது. தொல்காப்பியம் பாணினி காலத் திற்கு முந்தியது.

8. பாணினி இலக்கணத்தைப் பயன் படுத்தி உருவாக்கப்பட்ட சமஸ் கிருதத்தில் இலக்கியம் இதிகாசம் மற்றும் புராணங்கள் உருவாக்கப் பட்டன.

9. பாணினி இலக்கணத்தை சமஸ் கிருதம் பயன்படுத்தியதால் பேச்சு வழக்கற்ற மொழி ஆனது என சமஸ்கிருத மொழி அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு சமஸ்கிருதம் பற்றிக் கூறுவதென்ன?

இந்த நிறுவனம் பாணினி எழுதிய அஷ்டாத்தியாயி என்ற இலக்கண நூலை தமிழாக்கத்தில் வெளியிட்டுள் ளது. இதன் ஆசிரியர் முனைவர் கு. மீனாட்சி ஆவார். அவர் இந்த நூலில் பாணினி எந்த மொழிக்கு இலக்கணம் அமைத்தார் என்பதினை கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்.

வேத மொழிக் கூறுகளை சமஸ் கிருதம் என்ற பெயரால் கூறாமல் சந்தஸி என்ற பெயரால் பாணினி கூறு கிறார். இதனால் வேதம் இயற்றப்பட்ட வேத மொழியை சந்தஸி என்று பாணினி அழைக்கிறார் எனக் கூறலாம்

உதாரணம் ------

1.1. சந்தஸி பரே அபி (அத்தியாயம்--- 1இல் சூத்திரம்- -4.81) முதல் பாகத்தில்.

1.2. கிதேஸ் சந்தஸி----அத்தியாயம் 6இல் சூத்திரம்-- 1.52 (மூன்றாம் பாகம்).

1.3. யத்திது பரம் சந்தஸி---அத்தியாயம்- 8இல்- சூத்திரம் 156 (மூன்றாம் பாகம்).

1.4-. ---சந்தஸிடஞ்---- அத்தியாயம் 4-இல் சூத்திரம் 1.இல் 19. (இரண்டாம் பாகம்)

1. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மேல் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட ஒரு மொழிக்கு பாணினி இலக்கணம் வகுத்தார் என்று நம்பப்படுகின்றது. எனவே சமஸ் கிருதத்திற்கு இலக்கணம் பாணினியால் அமைக்கப்படவில்லை

2. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழி சமஸ்கிருதம் தான் என்று தனது நூலில் எந்த இடத்திலும் கூறவில்லை. (ஆனால் அவ்வாறு முதன் முதலாக இராமாயணத்தில்தான் கூறப்பட்டுள்ளது.)

3. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியை பாஷா என்றே குறிப்பிடுகின்றார்.

4. பாணினி தனது இலக்கணத்தை விளக்க சமஸ்கிருதத்திலிருந்து வேறு பட்ட மொழியை மாதிரியாகக் கொண்டு விளக்கினார். இந்த மொழி கருவி மொழி அல்லது மெட்டாலாங்வேஜ் என்று அழைக்கப்படுகின்றது

5. மேலும் பாணினியின் இலக் கணத்தைப் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட நூல்களையும் படிக்க வேண்டும்

1) கார்த்தியாயனரின் வார்த்திகம் 2) பதஞ்சலியின் மஹாபாஷ்யம் 3) வாமனரின் ஜயாதித்தரின் காஸிகா மற்றும் 4) பாணினி காலத்துக்கு முற்பட்ட பத்துக்கு மேற்பட்ட பழைய இலக்கண நூல்கள். 5) துணை நூல்கள் -ஏழு (சிவ சூத்திரம், தாது பாடம், கண பாடம், உணாதிசூத்திரம், சூத்திரம் லிங்கானுஸாஸனம் மற்றும் சிசஷா).

இதிலிருந்து பாணினி இலக்கணம் எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்தால்தான் இலக்கணம் எளிதாக அமையும்.

முடிவுரை

1. ஹிந்துஸ்தான் என்பது இமய மலைக்கும் மற்றும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட சமவெளி பகுதி ஆகும். எனவே ஹிந்துஸ்தானத்தின் பொருளா தார வளர்ச்சியை ஒட்டு மொத்த இந்தி யாவின் வளர்ச்சியாகக் கருதமுடியாது

2. ரிக் வேதம் சந்தஸி என்ற மொழி யில் உருவாக்கப்பட்டது.

3. பாணினி இலக்கணம் அமைத்தது வேத மொழிக்கு இல்லை

4. பாணினி (கிமு. 300) எழுதிய இல்க்கண நூலுக்குப் பின்தான் சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது.

5. புத்த மதம் இந்தியாவில் தோன்றி உலகமெலாம் பரவிய பின் தோன்றிய மொழி சமஸ்கிருதம் ஆகும். இத்தகைய சமஸ்கிருத மொழி உலக மொழிகளின் தாயாக விளங்கக்கூடிய வாய்ப்பு சிறிதும் இல்லை.

Read more: http://viduthalai.in/page6/96991.html#ixzz3T2ODMDUZ

தமிழ் ஓவியா said...

மதம் படுத்தும் பாடு

அமெரிக்க நாத்திக எழுத்தாளர் பங்களாதேஷில் கொல்லப்பட்ட கொடுமை!

பங்களாதேஷைச் சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்துவருபவருமான அவிஜித் ராய் என்பவர் நாத்திக, மதசார்பற்ற கருத்துகளை தம்முடைய இணையப் பக்கங்களில் (Blogger) பதிவிட்டு வந்துள்ளார்.

இசுலாமிய அடிப்படை மத வாதிகளின் தொடர்ச்சியான அச்சுறுத் தல்கள் இருந்தபோதிலும், அஞ்சா நெஞ்சினராக மதசார்பற்ற நிலையில் தம்முடைய கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளார்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவந்த புத்தகக் கண்காட்சிக்கு தம் மனைவி ரபீதா அகமத் போன்னாவுடன் சென்று வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, (26.2.2015) அடையாளம் தெரியாத இரண்டு காலிகளால் அவிஜித் ராய் மற்றும அவர் மனைவி ரபீதா ஆகிய இருவரும் பெரிய கத்திகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம்குறித்து உள்ளூர் காவல் துறைத் தலைமைப் பொறுப்பில் உள்ள சிராஜூல் இஸ்லாம் கூறும்போது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்துவிட்டார். இத்தாக்குதலில் அவர் மனைவியின் விரல் துண்டிக்கப்பட்டு, மிகவும் மோச மாக காயமடைந்துள்ளார் என்றார்.

ராய் பங்களாதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் ஆவார். அவர் மதசார்பற்ற கருத்து களைப் பதிவு செய்யும் வகையில் முக்தோ-_மோனா என்கிற பிளாக் பக்கத்தை உருவாக்கி தொடர்ச்சியாக மதசார்பற்ற கருத்துகளை எழுதி வந் துள்ளார். அவர் எழுதியுள்ள புகழ் பெற்ற நூல் பிஸ்வாசெர் வைரஸ் (நம் பிக்கை எனும் வைரஸ் கிருமி) உள் ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் மதசார்பற்ற எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர் கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இதேபோன்று 2013 ஆம் ஆண்டில் பங்களாதேசத்தில் நாத்திக கருத்தை எழுதிவந்த இணையப் பக்க எழுத் தாளர் அகமத் ரஜீப் ஹைடர் என்பவர் மோசமாகத் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.

அப்போது, மத அடிப்படை வாதிகளைக் கண்டித்து நாடுமுழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.

பங்களாதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதிகளால், இசுலாம் மதத்தின்மீது விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர்களை வதம் செய்வது என்கிற பெயரால் கொன்று வருகிறார்கள்.

ராய் மற்றும் அவர் மனைவிமீது தாக்குதல் நடத்தியவர்களை இன்னமும் பங்களாதேசக் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தாக்குதலுக்குப் பயன் படுத்திய பெரிய கத்தியைமட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஜப்பானில் பொங்கல் திருவிழா

திராவிடர் நாகரிகம் குறித்தும் பெருமிதம்!

தொகுப்பு: வி.சி. வில்வம்

நிஷிகசாய்பகுதி, முழுமதி தமிழ் வகுப்பு குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்துபாட, நான்காமாண்டு முழுமதி பொங்கல் நிகழ்ச்சி தோக்கியோ நக் காமச்சி அரங்கில் இனிதே தொடங்கி யது. சிறப்பு விருந்தினர் பேராசிரியர் திருஹிரோஷியமசித்தா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஜப்பான் தமிழர்களில் மூத்த உறுப் பினரான திருஜீவானந்தம் மற்றும் சரஸ்வதி ஜீவானந்தம் அவர்களை கொண்டு சிறப்பு விருந்தினருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

6500 ஆண்டுகளுக்கு முன்

6500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி மயிலாடுதுறை பகுதியில் கண்டெடுக்கபட்டதையும், அந்த கற் கோடாரியில் சிந்து சமவெளி எழுத் துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததையும் விளக்கி வரவேற்புரையை தொடங்கி னார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் செந்தில் குமார் மற்றும் செம் மலர்.

2006ஆம் ஆண்டு கண்டெடுக்கப் பட்ட அந்த கற்கோடாரி வரலாற்றின் பல இருண்ட பகுதிகளை வெளிச்சமாக் கியது. இந்தியாவில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துக்களில் மிக பழமையானது சிந்து சமவெளி எழுத் துக்கள் தான். வேதங்களில் மிகபழமை யானதாக கூறப்படும் ரிக்வேதத்தைவிட பல ஆண்டுகள் பழமையானது சிந்து வெளி நாகரீகம்.

சிந்து நாகரிகம் திராவிடர் நாகரிகம்!

சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரிகம் தான். சிந்து வெளியில் வசித்த திராவிடர்கள் பல் வேறு காரணங்களினால் தென்னகம் நோக்கி புலம் பெயர்ந்தனர் என்று அறிஞர் பெருமக்கள் கருதிய போதி லும் போதிய ஆதாரங்கள் கிடைக் காமல் இருந்தது.

கற்கோடாரி தமிழகத்தில் கிடைத்ததும், அந்த எழுத்துக்கள் எப்படி பண்டைய தமிழாக இருக்கலாம் என்று இந்தி யாவின் புகழ் பெற்ற ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் விளக்கியதும் பல முடிவுகளுக்கு அடித்தளமாக அமைந்தது. ஆனால் நமது ஊட கங்கள் இந்த முடிவுகளை கண்டு கொள்ளவில்லை என்று வருந்தினர் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்.

முழுமதியின் சேவை குறித்து முழுமதி உறுப்பினர்கள் சுதாகர், வேல் முருகன், ரகு மற்றும் கணேஷ் ஏழுமலை ஆகியோர் எடுத்த ஆவணப்படம் ஒளிப்பரப்பபட்டது.

குழந்தைகளின் ஆடல் - பாடல்!

தொடர்ந்து குழந்தைகள் தமது திற மையை ஆடல், பாடல் மூலம் நிரூபித் தனர். தமிழர்களின் தேவராட்டம், பறையாட்டம், பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்றவற்றைத் தான் அரங்கின் முகப்பாக அமைத்திருந்தனர் முழுமதி குழுவினர். அதைப் போலவே இந்த நிகழ்வில் குழந்தைகள் தமிழர் கலைகளைத் தான் அதிகம் நிகழ்த்திக் காட்டினர்.

பறையாட்டம் ஆடிய குழந்தைகளை மறக்கவே முடியாது..அப்படி ஒரு லயத்துடன் இணைந்து உண்மையான பறையாட்டக் கலைஞர்களைப் போலவே பிரமாதமாக ஆடினார்கள்.. அடுத்து காவடியாட்டம். இந்த காவடிகளை செய்ய எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பது பார்த்தவுடன் புரிந்தது.

தமிழ் ஓவியா said...

பிறகு திரைப்படப் பாடல்களுக்கான நடனம், நாட்டுப் புறபாடல்களுக்கான நடனம் என்று பல்வேறு விதமான நட னங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். தமிழ் வகுப்பில் ஒருநாள் என்ற தலைப்பில், தோக்காய் சீபா பகுதி முழுமதி தமிழ்வகுப்புகுழந்தைகள் ஒரு குறு நாடகம் நடத்தினார்கள்.

கடல் கடந்து வாழும் சூழலிலும், மொழியைக் கைவிடாது அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வாரந்தோறும் முழுமதி நடத் தும் இந்ததமிழ் வகுப்புகள் எந்தளவுக்கு குழந்தைகளைக் கற்க வைத்துள்ளன என்பதை புரியவைத்தது இந்த நாடகம். இயக்குநர்கள் செந்தில் வடிவேலன் மற்றும் அறிவு முதல்வனுக்கு பாராட் டுக்கள்.

தமிழ் ஓவியா said...

பிறகு செந்தில்குமார் இயக்கிய அடுத்த ஆப்பு உனக்கு தான் என்ற குறு நாடகம் மூலம் தமிழ்ச் சமூகத்தை பாதிக்க இருக்கும் மீத்தேன் பூதம் ஆபத்தை பற்றி நச்சென்று புரியும் வகையில் அதே நேரத்தில் கிண்டல் கேலியுடன் நடித்தார்கள் சுதாகர், ரகு மற்றும் விக்ரம் குழுவினர்.

மீத்தேன் அழிவு!

உணவு இடைவேளையில், மீத்தேன் அழிவு பற்றி மே 17 இயக்க நண்பர்கள் எடுத்த ஆவணப் படத்தை ஒளி பரப் பினார்கள். சென்ற வருடம் போலவே அருமையான பொங்கல் விருந்தை தயார் செய்து வழங்கினர் சிறீபாலாஜி உணவகத்தினர்.

யாழ் நூலக நினைவு புத்தகச்சாலை என்ற பெயரில் தமிழகத்திலிருந்து இலக்கிய புத்தகங்கள், பெரியாரிய, அம்பேத்காரிய புத்தகங்கள் என்று பல்வேறு நூல்களை கொண்டு வந்து ஒரு கண்காட்சியை அரங்கத் திற்குள் ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழர்கள் பல புத்தகங்களை வாங்கி சுமந்தபடி வீட்டுக்குச் சென்றது மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

மதிய அமர்வில் தூய்மையான இந்தியா என்று நடிகர் நடிகைகள் அடிக்கும் கூத்துகள் பற்றியும் உண் மையில் அது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் அழகாக செய்து காட் டினார்கள் ஜேஜிசி தமிழ்க் குழுவினர். ஆனாலும், இந்த குழுவினரின் அழிம் புக்கு அளவேயில்லை. அரங்கத்தில் கிடைத்த பொருட்களை யெல்லாம் தமது நாடகத்திற்க்கு சமயோசிதமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

வெளி நாடு சென்று திரும்பும் ஒரு இளைஞர் போல் நடித்த சிவா, ஒரு பெட்டியைத் தள்ளிக் கொண்டே மேடைக்கு வந்தார். பார்த்தால் அது நிகழ்ச்சித் தொகுப் பாளர்கள் வைத்திருந்த உடைகளுக் கான பெட்டி அது போல் குழந்தை களுக்குக் கொடுக்க வைத்திருந்த புத்தகப் பெட்டியையும் தமது நாடகத்திற்கான ஸ்டேஜ் பிராப்பர்ட்டியாக பயன்படுத் திக் கொண்டு நிகழ்ச்சி அமைப்பாளர் களை சற்று நேரம் காய விட்டனர்.

வினாடி வினா!

நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது வினாடி வினா நடத்தப்பட்டு டி.எம். வி.எஸ் நிறுவனம் வழங்கிய உணவு பொருட்களுக்கான பரிசுகூப்பன்கள் வழங்கப்பட்டன.

திருக்குறள் சொல்லி விளக்கம் கேட்டது, சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட போது, தமிழ்நாடுஎன்றுபெயர்மாற்றகோரி 73 நாட்கள் உண்ணா விரதமிருந்து உயிர் துறந்தவர் யார் என்பது போன்ற கேள்விகள் முழுமதி அமைப்பினரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்றையும் சமுதாய நோக்கையும் நிறுவுவதாக இருந்தது. சங்கரலிங்கனார் என்று சரியான பதிலைச் சொல்லி, பரிசைத் தட்டிச் சென்ற வரும் முழுமதி உறுப்பினரான கணேஷ் ஏழுமலை தான்.

தமிழில் பேசிய ஜப்பானியர்

பிறகு திருஹிரோஷிய மோசித்தா அவர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசி கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தினார். கோவில்கள் பற்றியும், இந்துமதம் பற்றியும்தான் செய்த ஆராய்ச்சிகள், எப்படி சமஸ்கிருதம் கற்க சென்ற தான் தமிழ் கற்க ஆரம்பித்தேன் என்பதை பற்றியும் விரிவாக விளக்கினார்.

கோவில்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ள போதிலும் தன்னை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமிகோவில் உட்பட பல கோவில்களில் உள்ளே அனுமதிக்க வில்லை. அதனால் என்ன, நானும் இறைவனை பார்த்த தில்லை, அந்த நந்தனாரும் இறைவனை பார்த்த தில்லை என்று அவர் சொல்லிய போது அரங்கே கைத் தட்டலால் அதிர்ந்தது.

இரண்டு மாத கால உழைப்பு!

பிறகு நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியது. இந்த நிகழ்ச்சிக்காக ஏறக் குறைய இரண்டு மாதகாலம் முன்பே முழுமதி குழுவினர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை சிறப்பு விருந் தினராக நிகழ்ச்சிக்கு வரும் படி அழைத்திருந்தனர். முழுமதியின் சேவைகள் பற்றி கேட்டறிந்த சகாயம் அவர்களும் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார்.

அரசு அதிகாரி என்பதால் தடையில்லா சான்றிதழுக் காக ஒருமாதம் முன்பே அவர் விண்ணபித்திருந்த போதிலும், கடைசி வரை தமிழகஅரசு எந்த முடிவும் எடுக்காமல் பயணம் நிகழ முடியாதபடி பார்த்துக் கொண்டது.

இந்தியாவில் நேர்மைக்கான விலை இது தான். இருந்த போதிலும் அன்பிற்கும் உண்டோஅடைக்கும் தாழ் என்பதற் கேற்ப, ஜப்பான் தமிழர்களுடன் சகாயம் அவர்கள் இணையம் மூலம் விழா நாளன்று இணைந்து நேரடியாக உரையாற்றியதை தமிழக அரசால் தடுக்க முடியாமல் போயிற்று.

விழா விற்கு வந்தவர்கள் சகாயத்துடன் நேரடியாக பேசிய திருப்தியடைந் தார்கள் என்ற போதிலும், தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்திச் சென்றார்கள்.

இறுதியாக முழுமதி உறுப்பினர் திரு. அருள் நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது. முழுமதி பொங்கல் விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகுந்த பொறுப்புடனும், சமூக அக் கறையுடனும் தயாரிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளுக்கு பரிசாக சிறுவர் இலக்கிய நூல்களை கொடுத்தது, மீத்தேன் எடுப்பதின் விளைவுகள், தமிழைக் கைவிடுவது மூலம் அடை யாளம் இழக்கும் பேராபத்து, சமூக இயக்கங்களில் பங்கு பெறாமல், சுய நலத்துடன் ஒதுங்குவது மூலம் விளை யும் அபாயம் என பல தளங்களையும் தொட்டுச் சென்றதன் மூலம், முழுமதி அமைப்பு மற்று மொரு வெளிநாட்டு தமிழ்சங்கமல்ல என்பதை ஆணி யடித்தது போல் புரிய வைத்தது.

Read more: http://viduthalai.in/page5/96988.html#ixzz3T2Ojg3c2

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு சிந்தனை


புல், பூண்டு - ஓரறிவு; நத்தை, சங்கு - ஈரறிவு; எறும்பு, கரையான் - மூவறிவு; ஈ, வண்டு - நான்கறிவு; விலங்குகள், பறவைகள் - அய்ந்தறிவு; மனிதன் மட்டுமே! - ஆறறிவு.

ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? - இந்த ஆறு வினாக்களும் ஆறறிவு படைத்த மனிதனின் அடையாளச் சின்னங்களாகும்.

அறிதல், உணர்தல், விரும்பிச் செய்தல் ஆகிய மூன்றும் அறிவின் கூறுபாடுகள். அறிவார்ந்த சிந்தனை, அறிவார்ந்த சொல்; அறிவார்ந்த செயல் மூன்றையும் உள்ளடக்கியவனே மனிதன். எனவே தான் மனிதன் ஓர் அறிவு ஜீவி என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் சிந்தனையின் கூர்மையே பகுத்தறிவு பகுத்தறிவு சிந்தனை வீரத்தின் சிறப்பு அம்சமாகும்.

தகவல்: வை. மாறன், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/96990.html#ixzz3T2OwNWW9

தமிழ் ஓவியா said...

எடப்பாடியில் முகிழ்த்து ஒரத்தநாட்டில் முதிர்ந்த முத்து

நாட்டின் விடு தலையை ஒட்டிய காலத் தில் சேலம் மாவட் டத்தில் திராவிடர் கழகம் வலிமை பொருந்திய இயக்கமாக இருந்தது. 1944 சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் மலர்ந்த காட்சி இதை உறுதிப் படுத்தும்.

தி.க.வின் முன்னோடி இயக்கமான ஜஸ்டிஸ் கட்சியும் (தென்னிந்திய நலவுரிமைக் கழகம்) சேலம் மாவட்டத்தில் பரவியிருந்தது. ஆட்சி யிலும் அமர்ந்திருந்தது.

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தலைவர்களாக வரலாம் என்ற அரசின் முடிவின் பயனாக ஃபோக்ஸ் (Foulxes) என்பவர் சேலம் மாவட்ட நாட்டாண்மைக் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவ ரானார் (1922). அவர் சேலம் மாவட்ட தெ.இ. நலவுரிமைக் கழகத்தின் செய லாளராகவும் இருந்தார் (1933_-36).

அவருக்குப் பின் நாட்டாண்மைக் கழகத் தலைவராயிருந்தவரும் ஜஸ்டிஸ் கட்சியின் எல்லப்பச் செட்டியார் (1936 வரை) பார்ப்பனர் அல்லாத இயக் கத்தின் தாக்கம் இவர்களின் நிர்வாகத் தில் பிரதிபலித்தன. அவர்களைப் போலவே அன்றைய சங்ககிரி தாலுகா போர்டின் தலைவராகவும், எடப்பாடி பஞ்சாயத்து போர்டின் தலைவராகவும் ஜஸ்டிஸ் கட்சியினர் இருந்தனர். 1940 வரை ஜஸ்டிஸ் கட்சியின் தாக்கம் எடப்பாடியில் இருந்தது.

எடப்பாடி நகரத்தில் தந்தை பெரியார் - திராவிடர் கழகத்தின் கொள் கைகள் இளைஞர்களின் இதயங்களைத் தொட்டன. அது பள்ளி மாணவர் களிடமும் பரவியது. தந்தை பெரியார் எடப்பாடிக்குப் புதியவர் அல்லர். அவரது அரசியல் ஈடுபாட்டிற்கு முன்பும் அவருக்கு எடப்பாடியுடன் வணிகத் தொடர்பு இருந்தது. அவரது காங்கிரஸ் காலத்திலும் அவர் இவ்வூர் மக்களிடம் பிரபலமானவர்.

அந்தக் காலக் கட்டத்தில் எடப்பாடியில் ஒரு நிலக்கிழார் - வணிகர் குடும்பத்தில் பிறந்தவர் கைலாச முத்து (1933). அவர் தமது பள்ளி இறுதிப் படிப்பை 1952இல் முடித்தார். பள்ளி மாணவராயிருந்த காலத்தில் தந்தை பெரியாரிடம் அவர் காட்டிய ஈடு பாட்டை அவருடைய வகுப்புத் தோழர் தாவுத் ஜான் விவரிக்கிறார்.

1945ஆம் வருடம் எட்டாம் வகுப்பு படித்தபோது கைலாசமுத்து எனது வகுப்புத் தோழர். அவர் தனது வீட்டில் சொந்தமாக ஒரு நூலகத்தை நடத்தி வந்தார். பாரதிதாசன் படிப்பகம் என்று பெயர். பொது மக்கள் அங்குப் படிக்க வருவர்.

தமிழ் ஓவியா said...

அந்த நூலகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சுய மரியாதை, சீர்திருத்தக் கருத்துகளை அறிய அதன் மூலம் எனக்கு வாய்ப்பு கிட்டியது. அதன் விளைவாக கை, முத்து, உத்தண்டி, கை, இ. சுப்பிர மணியம் (முத்துவின் தம்பி), ச. பழனியப்பன், நான் ஆகிய ஐவரும் ஈரோட்டில் தந்தை பெரி யாரைச் சந்திக்கக் கிளம் பினோம். தி.க.வின் சார்பில் சுயமரியாதை, சமுதாயச் சீர்திருத்தம் பற்றி எடப் பாடியில் பேச வருமாறு அவரிடம் கேட்டோம்.

அவரது தனிச் செயலாள ராயிருந்த க. ராசாரா மையும் அழைத்து வருவ தாகச் சொல்லி, ஒரு நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டு எங்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். அந்நிகழ்ச்சி நாங்கள் மறக்க முடியாத தாகும். எனவே, 1946இல் முதன் முதலாக, மாணவர்கள் சார்பில் எடப்பாடியில் சுயமரியாதைக் கருத்து களைப் பரப்பும் கூட்டத்தினை நாங்கள் நடத்தினோம்.

திரளான மக்கள் கூட்டமும் வந்தது. அப்போது முதல் ஆண்டுதோறும் எடப்பாடியில் தி.க. கூட்டம் நடைபெற ஆரம்பித்தது..
இது, கை. முத்துவின் இளமைக்கால திராவிட இயக்க ஈடுபாட்டை உணர்த் தும். அவரைவிட மூத்தோரும் எடப் பாடி தி.க.வில் தீவிரமாக இருந்தவர் பலர் உண்டு. அந்த நிலையில், 1953இல் கை. முத்துவும் அவரது தம்பியும் காட் டிய தீரம் மறக்க முடியாதது. விநாயகர் சிலை உடைப்புப் போராட்டக் காலம் அது.

தமிழ் ஓவியா said...

எடப்பாடியில் அங்காளம்மன் கோயில் ஊரின் பிரதான சாலையில் உள்ளது. அக்கோயிலுக்கான நிலத்தை வழங்கியவர்கள். கை. முத்துவின் குடும்ப முன்னோர்கள். அக்கோயிலின் பிரதான பக்தர்களில் அவரது குடும்பத்தார் முக்கியமானோர். அக்கோயிலின் முன்னால், சாலையை ஒட்டி விநாயகர் கோயில் தனியே உள்ளது. அதன் முன்னே விநாயகர் சிலை உடைப்புப் போராட்டம் நடந்தது.

சகோதரர்கள் இருவரும் முனைப்புடன் கலந்து கொண்டனர். அதனால் அவரது குடும்பம் அதிர்ச்சிக்குள்ளானது.. அப்போராட்டத்தில் கலந்து கொண் டோரில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்; ச.பழனியப்பன் உள்ளிட்ட மூவர், அக்கோவில் பூசாரி குடும் பத்தைச் சேர்ந்தவர்கள்!
அப்போராட்டம் முத்துவுக்குத் தந்த மற்றொரு விளைவு - அவர் வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நில அளவையாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். ஆறு மாதப் பயிற்சியை முடித்து கோத்தகிரி, அந்தியூர், கிருட் டிணகிரி அணைக்கட்டு, திருப்பத்தூர், போடி நாயக்கனூர் என்று பல ஊர்களில் வேலை பார்த்து, தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டிற்கு மாறுதலில் சென்றார் (1963).

தமிழ் ஓவியா said...


முப்பது - நாற்பது ஆண்டுகள் என்பது ஒரு தனி மனிதரின் வாழ்க் கையின் பெரும் பகுதியாகும். அதுவும் இளமைப் பருவம் முதல் வாழ்வின் இறுதி வரை ஒரே ஊரில் வாழ்ந்தால் அந்தக் காலம் அம்மனிதரின் உயிர் நாடியான பகுதியாகும். அவ்வாறு திகழ நேர்ந்தது கை. முத்துவிற்கு ஒரத்த நாட்டில் அமைந்த காலம்...

தமது 30ஆவது வயதில் அவர் ஒரத்தநாட்டிற்குச் சென்றார். திராவிட இயக்கத்தில் தோய்ந்திருந்த அவருக்கு, ஏற்கெனவே திராவிட இயக்கத்தின் களம் பல கண்ட அவ்வூர் தகுந்த விளைநிலமாக மாறியது. அரசு ஊழியராக இருந்தாலும், தந்தை பெரியாருடனான தொடர்பை வலுப் படுத்த அவ்வூர் அவருக்கு உரமூட் டியது.

அதற்கு அவ்வூர்க் கழக முன் னோடிகளாக இருந்த நெடுவாக் கோட்டை வை. குப்புசாமி, அ. முத் தையன் போன்றோரின் நெருங்கிய நட்பும் துணை புரிந்தன.

1966இல் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் அவர் நில அளவையில் ஈடுபட்டிருந்தபோது எனத் தெரிய வந்தது. கை. முத்து உள்ளிட்ட மூவரும் அந்த இடத்தைச் சுயமரியாதை நிறுவனத்திற்கு வாங்க லாமே என அய்யாவிடம் தெரிவித் தனர். அசையாச் சொத்தில் நாட்டம் கொண்ட அய்யாவும் இசைந்தார். அந்த இடத்தைச் சரியாக அளந்து பார்த்த போது அது 66 சென்ட் நிலம் எனத் தெரிய வந்தது.

சுயமரியாதை நிறுவ னத்திற்காக அந்த நிலம் வாங்கப் பட்டது. சில ஆண்டுகள் கழித்து, அந்த இடத்தில் கடைகள் கட்டினால் இயக்கத்திற்கு நிரந்தர வருவாய் வருமே என்ற எண்ணம் முத்துவிற்குத் தோன்றியது.

அய்யாவிடம் பேசினார். அவரும் ஏற்றுக் கொண்டார். கை. முத்துவை நம்பிப் பணம் தந்தார். நன்கொடைகள் வசூலிக்காமல் ஆறு கடைகள் கட்டப்பட்டன (1971). செலவான கணக்கை அய்யாவிடம் ஒப்புவித்தார் முத்து.

அய்யாவின் காலத்திற்குப் பின் ஆறு கடைகளை விரிவுபடுத்தலாமே என எண்ணினார் முத்து. மணியம்மை யாரிடம் எடுத்துரைத்தார். முத்துவின் நாணயத்தை நம்பி அம்மாவும் பணம் தந்தார். மேலும் அய்ந்து கடைகள் உருவாயின (1974). ஆக, ஒரத்த நாட் டின் முக்கியப் பகுதியில் சுயமரியாதை நிறுவனத்தை நினைவூட்டி தொடர் வருவாய் வரும் சொத்துக்களாக மாறியுள்ளன அக்கடைகள்.

ஒரத்தநாடு குறைந்த வருவாயினர் நல்வாழ்வுச் சங்கம் என்றொரு சங்கம் அவ்வூரில் இருந்தது. நலிவுற்ற நிலைக்கு வந்த அச்சங்கம் காணாமற் போகும் நிலையையும் எட்டியது. அச்சங்கத் திற்கான நான்கு ஏக்கர் நிலத்தை மீட்டு அதை 120க்கும் மேற்பட்ட உறுப் பினர்களுக்கு பங்கிடச் செய்ததில் முத்துவின் பங்கு மகத்தானது.

சேலம் - எடப்பாடியிலிருந்து தஞ்சைத் தரணிக்குக் குடிபெயர்ந்த கை. முத்து இப்படியாக ஒரத்த நாட்டில் செய்த சுயமரியாதை - கழகப் பணிகள் பல. உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் ஒரத்தநாடே அவரது நிரந்தர இருபபிடமானது. பெரியார் நாடு எனக் கருதும் அவ்வூரிலிருந்து தன் மகள் - மகன்களுக்குத் திருமணங்களை முடித்து பேரக் குழந்தைகளையும் அந்தச் சூழ்நிலையிலேயே வளர்த்து, வாழ்ந்து வந்தார்.

டில்லியில் பெரியார் நினைவு மய்யத் திறப்பு விழா மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களின் சீரிய முயற்சியால் நடைபெறவிருந்தது. கை. முத்து அதில் கலந்து கொள்ளக் கிளம்பினார்.

உடன் பத்து வயதுப் பேரனையும் அழைத்துக் கொண்டு 26.9.2000 அன்று இரவு 9.30 மணிக்கு, ஒரத்தநாட்டிலிருந்து வேறு சில கழகத் தோழர்களுடன் பேருந்தில் கிளம்பினார். அந்த இரவுப் பயணம் அவரது வாழ்வின் இறுதி இரவாகிப் போனது!

சேத்தியாத்தோப்பு அருகில் காடாம்புலியூர் என்னுமிடத்தில் கைலாச முத்து பயணித்த பேருந்து விடி யற்காலை இரண்டரை மணியளவில் விபத்திற்குள்ளானது. பலர் காய முற்றனர். மாண்டவர் 12 பேர் - அவர் களில் முத்துவும் அவரது பேரனும் அடக்கம்!

எடப்பாடியில் முகிழ்த்து ஒரத்த நாட்டில் முதிர்ந்த முத்தான கைலாச முத்துவின் உடல் ஒரத்தநாட்டிற்குச் சவமாகத் திரும்பியது. ஊர் மக்கள் அவரது உடலை எடப்பாடிக்கு அனுப்ப மறுத்து, தக்க மரியாதை தந்து அங்கேயே தகனம் செய்தனர்!

துயரம் பதிந்த அந்த நாளில் ஆல விருட்சம் போல் வாழ்ந்த முத்து, விழுது போன் றிருந்த தன் பேரனுடன் மண்ணில் மாய்ந்த துயரம் சோக இழையாய் ஒரத்த நாட்டில் இன்றும் இழையோடுகிறது..

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடி யாது என்று கூறுவதுண்டோ?

குழந் தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண் டுள்ளனர். நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page3/96987.html#ixzz3T2PpGlQk

தமிழ் ஓவியா said...

இவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாட நூல்களில்?

மு. சிவகுருநாதன்

தமிழ்ச் சூழலில் பள்ளிப் பாட நூல்களை ஆய்வு செய்வது ஒரு சுவார சியமான வேலை. நம் கல்வி முறையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இது மிகவும் அவசியமானது. 9 மற்றும் 10-ஆம் வகுப்பு களுக்கான சமூக அறிவியல் பாட நூல் களை இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

தவறான தகவல்கள்

ஒரு பாடத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தின் உறுப்பு நாடுகள் 27 என்று பட்டிய லிடப்பட்டிருக்கிறது. ஆனால், உறுப்பு நாடுகள் மொத்தம் 28. இந்தப் பட்டி யலில் குறிப்பிடப்படும் லைபீரியா ஓர் ஆப்பிரிக்க நாடு. அதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் என்ன சம்பந்தம்? லாத் வியா, குரேஷியா ஆகிய இரு நாடு களும் பட்டியலில் விடுபட்டிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

அய்.நா. சபையின் சிறப்பு நிறுவனங் களின் பட்டியலில் உலக வங்கி (அய்.பி.ஆர்.டி.) என்று கொடுக்கப்பட் டிருக்கிறது. விளக்கப் படத்திலோ, பன்னாட்டுக் கிராமப்புற வளர்ச்சி வங்கி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

புனரமைப்புக்கும் மேம்பாட்டுக்கு மான பன்னாட்டு வங்கியில் (இன்டர் நேஷனல் பேங்க் ஃபார் ரீகன்ஸ் ட்ரக்ஷன் அண்டு டெவலப்மென்ட்) கிராமம் நுழைந்தது எப்படி?

சமணத்தின் சின்னமாக ஒரு பாடத்தில் தர்மச் சக்கரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது சமணத்தின் சின்னமல்ல. ஸ்வஸ் திகா, மூன்று புள்ளிகள், பிறை வடி வத்தின் மீது ஓர் புள்ளி போன்ற வற்றை உள்ளடக்கிய சின்னமே சமணச் சின்னமாக அறியப்படுகிறது.

வடுவூர் பறவைகள் புகலிடம் நாகப் பட்டினம் மாவட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில்தான் வடுவூர் இருக்கிறது. அதேபோல், நரிமணம் (பனங்குடி) எண்ணெய் சுத்திகரிப்பாலை இருப்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில்தான்.

பாலைநில மக்கள் கள்ளர் என்பது தமிழ்ப் பதிப்பில் கள்வர் என்று திருத் தப்பட்டுள்ளது. ஆங்கிலப் பதிப்பில் கள்ளர் ஆஃப் பாலை என்றுதான் நீடிக்கிறது.

தலைவர்களைக் கொச்சைப்படுத்துதல்

தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத் கரின் விடுதலை இயக்கமான பஹிஷ் கிரித் ஹிதகரிணி சபா' என்பது பாசி கிருகித் காரணி சபா' என்று முதல் பதிப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்த பதிப்பில் (2012) இன்னும் மோசம், பகிஷ்கிருத்திகாராணிசபா என்று மாற்றப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 25, 1927 குடியரசு இதழி லிருந்து பெரியாரின் சாதிப் பட்டம் நீக்கப்படுகிறது.

1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் வெளிப்படையாக அதனை ஓர் இயக்க மாக முன்னெடுத்த பெரியாரின் பெயர் பாடப் புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடப்பட் டிருக்கிறது. ஆனால், தனது வாழ்நாள் இறுதிவரை சாதிப் பெயரைச் சுமந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்கள் எஸ்.சத்திய மூர்த்தி, வாஞ்சிநாதன் ஆக மாறி விடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

மொழியாக்கக் குளறுபடிகள்

ஃபேக்ஸ், இன்புட், ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர், மொபைல் டவர்ஸ், டிரான்ஸ்ஜென்டர், ரிமோட் சென்ஸிங், மகத் மார்ச் போன்ற சொற்கள் பிரதிகள், இடுபொருள், ஊதுலைகள், மின்னஞ்சல் கோபுரம், திருநங்கைகள், தொலைநுண்ணுணர்வு, மகத் மார்ச் பேரணி என்று மொழிபெயர்க்கப்பட் டிருக்கிறது.

ஆனால், சரியான மொழி பெயர்ப்பு முறையே தொலைநகல், உள்ளீடு, அதிவேக ஈனுலைகள், கை பேசிக் கோபுரங்கள், மாற்றுப்பாலினம், தொலை உணர்வு, மகத் பேரணி என்பதாகும்.

ஹிட்லர் பெயின்டராக வியன்னா வில் சில காலம் பணியாற்றினாராம். பெயின்டர் என்று சொன்னால் நம்மூர் வழக்கில் வண்ணமடிப்பவர் என்று தானே புரிந்துகொள்வார்கள். ஓவிய ராகப் பணியாற்றினார் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் வித்தி யாசமின்றி மொழிபெயர்த்துவிடுகிறார் கள். முன்னது மின்னியல்; பின்னது மின்னணுவியல். மார்க்சியம் என்பது தமிழ்ச் சொல்லாகவே ஆகிவிட்ட நிலையில், மார்க்ஸிஸம் என்று எழுது வதுதான் நடக்கிறது.

கருத்தியல் தெளிவின்மை

ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக் கானவை என்றும் தேவதாசிகளைப் பற்றிச் சொல்லும்போது, ஆலய சேவ கிகள் என்றும் விளக்கம் அளிக்கப் படுகிறது. இவர்கள் இறைப் பணி மற் றும் கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப் பட்டார்கள் என்றும், காலமாற்றத்தால் பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் இம்முறை சீரழிக்கப்பட்ட தாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

பாசிசம், நாசிசம், தேவதாசி முறை ஆகியவற்றை உயர்த் திப் பிடிக்க வேண்டிய அவசியமென்ன?

புள்ளிவிவரங்களில் நம்பகமின்மை

மரபுசாரா மின்சக்தி உற்பத்தியில் மிகுந்த இடர்ப்பாடுகள் இருப்பதாகப் பட்டியல் கொடுக்கப்படுகிறது. ஒலி மாசு, அதிகப் பண முதலீடு தேவைப்படும் நிலை, வானொலி-தொலைக்காட்சி அலைகளுக்கு இடையூறு, வன விலங்குகள் வாழிட அழிப்பு என்று இடையூறுகள் பட்டிலியடப்படுகின்றன. ஆனால், அணு மின்சக்தி, அனல் மின் சக்தியின் இடர்ப்பாடுகள் மருந்துக்குக் கூடச் சொல்லப்படவேயில்லை.

இந்திய அளவில் அனல் மின்சக்தி உற்பத்தி 70%, நீர் மின்சக்தி 25% என்றும் அணு மின்சக்தி 272 மெ.வா. என்றும் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் சதவிகிதத்தில் கூற வேண்டுமல்லவா? 31.07.2014 நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்தி 2,50,257 மெ.வா.;

இதில் நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்றவற்றால் கிடைக்கும் அனல் மின்உற்பத்தி 1,72,986 மெ.வா. (69.1%), நீர் மின்சக்தி 40,799 மெ.வா. (16.3%), அணு மின்சக்தி 4780 மெ.வா. (1.9%) புதுப்பிக்கத் தக்க எரிசக்தி 31,692 மெ.வா. (12.7%) என்பதுதான் அரசின் புள்ளிவிவரம்.

வரலாற்றுத் திரிபுகளும் மறைப்புகளும்

1940-ல் முகமது அலி ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார் என்றும் 1946-ல் நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்து, தனது தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக நின்றதாக பிரிவினைக்கான பழி ஜின்னா மீது சுமத்தப்பட்டு இளம் உள்ளங் களிடையே காழ்ப்புணர்ச்சி உருவாக்கப் படுகிறது.

இந்திய தேசிய காங்கிரஸும் இந்துத்துவமும் இணைந்து வளர்ந்த வரலாற்றை மறைத்துவிட்டு, ஜின்னா மீது பிரிவினை முத்திரை குத்துவது நியாயமாகுமா?

ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்ற இந்துத்துவ அமைப்புகளைத் தொடங்கிய அனைவரும் காங்கிரஸ் காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இரு அமைப்புகளில் அங்கம் வகிக்கக் கூடாதென 1936-ல் காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டுவரும்வரை இந் நிலையே நீடித்தது. இந்தக் கலாச்சாரத் தேசியவாதிகளின் வல்லாதிக்க வெறியை இந்தியா வல்லரசாகும் என்று சொல்லி, பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைப்பது நியாயமாகுமா?

கலெக்டர் ஆஷ் 4 பேரைச் சுட்டுக் கொன்றதாகவும் அதற்குப் பழிதீர்க்கவே அவரது கொலை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 1908 மார்ச் 18-ல் வ.உ.சி. கைது செய்யப் பட்டவுடன் தூத் துக்குடியில் கடையடைப்பும் போராட் டங்களும் நடைபெற்றபோது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப் பட்டனர்.

மேலும், வாஞ்சிநாதனின் சட்டைப் பையிலிருந்து கைப்பற்றப் பட்ட கடிதத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து எதுவும் இல்லை. மாறாக, கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை கொல்லும் செயலுக்கு முன்னோட்டம் என்கிறரீதியில்தான் அந்தக் கடிதத்தில் இருந்தது.

பெரியார், அண்ணா, திராவிட இயக்கம்

1947 ஆகஸ்ட் 15-அய் பெரியார் துக்க நாளாக அறிவித்தபோது, அண்ணா அதை மறுத்து இன்ப நாள் என்றது, தேர்தலில் பங்கேற்க அண்ணா விரும் பியது, கடவுள் மறுப்புக் கொள்கையில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம் போன்ற வரலாற்று உண்மைகள் மறைக் கப்பட்டு, தி.மு.க. உருவாக்கத்துக்கு பெரியார்-மணியம்மை திருமணம் காரணமாக்கப்படுகிறது.

சேலம் மாநாட்டுக்கு முன்னதாகவே ஆகஸ்ட் 05, 1944 கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல் என்று குடியரசு இதழில் துணைத் தலையங்கம் பெரியாரால் எழுதப்பட்டுள்ளது.

மேலும், சேலம் செவ்வாய்ப்பேட்டையில் நடந்த நீதிக் கட்சி மாநாடு தொடர்பான குடியரசு இதழ் தலையங்கங்களில் (ஆகஸ்ட்12,19 -1944) திராவிடர் கழகம், திராவிட நாடு குறித்தும் பெரியார் எழுதியுள்ளபோது, அண்ணா பெயரை மாற்றியதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?

இவ்வளவு பிழைகள் மலிந்த பள்ளிப் பாடநூல்களைத் தமிழ் அறிவுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. இது பொருட்படுத்தத் தக்கதல்ல என்று கருதினால், அது மாபெரும் தவறு. வருங்காலச் சந்ததியை வழி நடத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

நன்றி: தி இந்து (தமிழ்) 5.2.2015

Read more: http://viduthalai.in/page2/96985.html#ixzz3T2Q1d0ul

தமிழ் ஓவியா said...

கண்டுபிடிப்பு

நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார். கோபர்நிகஸ் கோள்களின் இயக்கத்தைக் கண்டுபிடித்தார். டார்வின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்தார். ஆல்வா எடிசன் மின் விளக்கைக் கண்டுபிடித்தார். இவற்றால் மனித குலம் வளர்ச்சி பெற்றது.

மனிதன் கடவுளைக் கண்டு பிடித்தானே - அதனால் என்ன பலன் ஏற்பட்டது? மடையனா வதற்கும், சோம்பேறியாவதற்கும் ஏற்பட்டதல் லாமல் வேறு என்னவாம்?

துத்தநாகம்

நாக்குக்கு ருசி தெரிய வில்லை என்பார்கள். என்ன காரணம் தெரியுமா? உடலில் துத்தநாகம் என்ற உப்புச் சத்துக் குறைவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. காய்ச்சலின் போது இந்தச் சத்து இழக்கப்படுவதால் வாய் கசப்பாக இருப்பதையும் உணர்கிறோம்.

Read more: http://viduthalai.in/page2/96984.html#ixzz3T2QQ7400

தமிழ் ஓவியா said...

சரிந்த மேடையும் விரிந்த மேடையும்

ஈரோடு மாவட்டத் திராவிடர் கழகச் செயலாளர் கு.சிற்றரசு - சி.பூபதி ஆகியோரின் மகள் செல்வி சுதியா அவர்களின் திருமணம் 22.2.2015 அன்று ஈரோட்டில் மிகச்சிறப்பாகவும் எளிமையாகவும் நடைபெற்றது. செல்வி சுதியா, பெரியார் திடலில் விடுதலை அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச்செயலாளர் அன்புராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் அன்பிற்குப் பாத்திரமானவர் சுதியா, அடக்கம், அமைதி, உயர்பண்பாடு ஆகியவற்றின் உறைவிடம் சுதியா என்று தமிழர் தலைவர் பாராட்டுகிறார்.

சுதியா - தினேஷ்குமார் திரும ணத்தை நடத்தி வைப்பதற்காகத் தமிழர் தலைவர் தாராபுரம் மாநாட்டை முடித்துவிட்டு 21.2.2015 அன்று நள் ளிரவு 11.30 மணியளவில் ஈரோடு வந்து சேர்ந்தார். ஆக்சுபோர்டு உணவகத் தின் வாயிலிலேயே கொட்டும் பனி யையும் குளிரையும் பொருட்படுத் தாமல் திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் தலைவரை வரவேற்பதற்குக் காத்திருந்தார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் பேரா.ப.காளிமுத்து கைத்தறி ஆடை அணிவித்துத் தலைவரை வரவேற்றார். இவ்வளவு நேரம் இந்தப் பனியில் ஏன் காத்துக் கொண்டிருந்தீர்கள், போய் தூங் குங்கள் என்று ஆசிரியர் அறிவுரை கூறினார்கள்.

அருகில் நின்று கொண்டிருந்த மானமிகு சிற்றரசு அவர்களிடம் காலையில் எத்தனை மணிக்கு நான் திருமண அரங்கிற்கு வரவேண்டும் என்று தலைவர் கேட்டதும், அய்யா நீங்கள் எட்டு மணிக்கு அங்கிருந்தால் போதும் என்று விடையளித்தார் சிற்றரசு. ஆசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு தோழர்கள் அவரவர் இல்லத்திற்கு திரும்பி விட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் (22.2.2015) ஏழு மணிக்கே தலைமைச் செயற்குழு உறுப்பினரும் அமைப்புச் செயலாள ருமான த.சண்முகம், தமிழர் தலை வரின் அறை முன்பாக நின்று கொண் டிருந்தார். தோழர்கள் 7.30 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். சரியாக 7.45 மணிக்கு ஆசிரியர் அறையை விட்டுப் புறப்பட்டு விட்டார். அவர் பின்னா லேயே நாங்கள் அனைவரும் ஓட்ட மும் நடையுமாகத் தொடர்ந்தோம். பேராசிரியர் ப.சுப்பிரமணியம், பொதுச் செயலாளர்கள் ஜெயக்குமார், ஒரத்தநாடு குணசேகரன், மாவட்டத் தலைவர் நற்குணன், மண்டலச் செயலாளர் பிரகலாதன் ஆகியோர் ஆசிரியருடன் இணைந்து கொண் டனர்.

தமிழ் ஓவியா said...


சரியாக 7.55 மணிக்குத் தமிழர் தலைவர் திருமண அரங்கிற்கு வந்து சேர்ந்தார். சிற்றரசு - பூபதி, மணமக ளின் பெற்றோர் பல்லடம் காளி வேலம்பட்டி செ.சுப்பையன் - பூவாத் தாள் ஆகியோரும் இப்பெருமக்களின் உற்றார் உறவினரும் வரிசையாக நின்று தமிழர் தலைவரை அன்புடன் வரவேற்றனர். அரங்கினுள் நுழைந் ததும் சிற்றரசு அவர்களின் அன்னை யாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு மேடைக்குச் சென்றார்கள். தமிழர் தலைவரின் பெருந்தன்மை, நயத்தக்க நாகரிகம், மனித நேயப்பண்பு ஆகிய வற்றை நேரில் பார்த்துக்கொண்டிருந்த பெருமக்கள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். வயது முதிர்ந்த சிற்றரசு வின் அன்னையார் எழுந்து நின்ற வுடன் தமிழர் தலைவர் அவர்தம் கைகளைப் பற்றிக்கொண்டு அம்மா எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கீங்களா என்று பேச்சுத் தமிழில் இன் முகத்தோடு உரையாடியதைப் பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். எப்பேர்பட்ட தலைவர் இவ்வளவு எளிமையாகப் பழகுகிறாரே! என்று சிலர் பேசிக் கொண்டது நம் காதில் விழுந்தது.
ஆரவாரமோ ஆரியச் சடங்கு முறைகளோ எவையுமின்றி மிக அமைதி யான முறையில் திருமண நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கம் நிரம்பி வழிந்தது. காணும் இடமெல்லாம் கருஞ்சட்டைத் தோழர்கள் மற்றவர்களை உட்கார வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தார்கள்.
பேராசிரியர் ப.காளிமுத்து வரவேற் புரையாற்றினார். சிற்றரசு - பூபதி ஆகியோர் திருமணத்தைத் தமிழர் தலைவர் அவர்கள் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தி வைத்தார்கள். இன்று அவர்களின் அருமைப்புதல்விக்கும் தமிழர் தலைவர் அவர்களே தலைமை யேற்று நடத்துகிறார்கள். எங்களின் ஆசையெல்லாம் எங்கள் பேரக் குழந்தைகளுக்கும் தமிழர் தலைவர் அவர்களே தலைமையேற்றுத் திரும ணத்தை நடத்தி வைக்கும் நல்வாய்ப்பை எங்களுக்கு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

பின்னர் தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றுகையில் பல்வேறு சுவையான செய்திகளைச் சொன்னார்கள். மக்கள் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும். சிக்கனமாக வாழ வேண்டும் 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடத்திய சிற்றரசு - பூபதி திருமணம் நடந்து கொண்டிருக்கும் போது மணமேடை திடீரென்று சரிந்து விட்டது. உடனே மணமகன் சிற்றரசு மணப்பெண்ணைக் கூடப் பார்க்காமல் என்னை வந்து நான் கீழே விழாதவாறு கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். சிலர் அதனை அப் போது கெட்ட சகுனமாகக் கருதியிருக்க லாம். ஆனால் சிற்றரசு அவர்களும் பூபதி அவர்களும் அதனைப் பொருட் படுத்தாமல் அந்த மூடநம்பிக் கையை முறியடிக்கும் வகையில் சிறப்பாக வாழ்க்கை நடத்தி அடக்கமும் அமைதி யும் நல்ல பண்பும் நிறைந்த செல்வமாகிய சுதியாவைப் பெற்றிருக்கிறார்கள். அன்று அது சரிந்த மேடையாக இருந்தது இன்று விரிந்த மேடையாகிப் புகழ்பூத்த மேடை யாக விளங்குகிறது. செல்வி சுதியா விடுதலை அலுவலகத்தை விட்டு வந்துள் ளது உண்மையிலேயே எங்களுக்குப் பெரிய இழப்புத்தான். சுதியாவைப்போல சுறுசுறுப்போடு இயங்கக்கூடிய ஒருவர் கிடைப்பது அரிதினும் அரிது. அத்தகைய பண்பு நலன்களைப் பெற்றுள்ள சுதியாவை வாழ்விணையராகப் பெறுகின்ற செல்வன் தினேஷ்குமார் அவர்களை மனமகிழ் வோடு நான் பாராட்டுகிறேன். வாழ்த்து கிறேன். நீங்கள் இருவரும் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற் றோர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்களைப் பேணிப் பாது காக்க வேண்டும். அவர்களுடைய உழைப்பினால்தான் நீங்கள் இத்தகைய உயர்நிலைக்கு வந்திருக்கிறீர்கள், ஆகவே பெற்றோரைப் பாதுகாப்பது உங்கள் கடமை, நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம். நீங்கள் உங்களைத் தொண்டறத்திலும் ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தமிழர் தலைவர் வாழ்த்துரை வழங்கிவிட்டுத் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமகன் தினேஷ்குமார் உறுதிமொழியெடுத்துக் கொண்ட பின்னர் மணமகள் சுதியா உறுதிமொழி ஏற்றார். இதைப்பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் வியப்பும் மகிழ்ச்சியும் மேலோங்கிடப் புன்முறுவல் பூத்த முகத் தினராய்க் காணப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசின் தமிழகத் தலைவர் உயர்திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பற்றிக் குறிப்பிடும்போது தமிழர் தலைவர் அவர்கள், இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டுவரும் இளங்கோவன் இங்கே வந்திருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய தந்தையார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் வாழ்நாளெல்லாம் சுயமரியாதைக் காரராக சிறந்த பகுத்தறிவாளராக வாழ்ந்தவர். அத்தகைய சுயமரியாதைக் குடும்பத்தி லிருந்து வந்தவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் என்று குறிப்பிட்டார்.

தமது வாழ்த்துரையில் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் குறிப்பிட்டதாவது:- சிற்றரசு - பூபதி ஆகியோரின் மகள் செல்வி சுதியா, பல்லடம் காளிவேலம் பட்டி சுப்பையன் - பூவாத்தாள் ஆகி யோரின் மகன் செல்வன் தினேஷ்குமார் ஆகியோரின் வாழ்க்கைத்துணை ஏற்பு விழாவில் கலந்து கொண்டு நம் அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களைச் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன். நான் காங்கிரஸ் கட் சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நம் ஆசிரியர் அவர்களைச் சந்திக்கலாம் என்று பெரியார் திடலுக்குப் போனேன். அப்போது அவர் அங்கு இல்லை, பின்னர் கோவையில் நடந்த மாநாட்டில் அவரைச் சந்தித்தேன். சில நிமிடங்களே அவரோடு பேச முடிந்தது. சென்னை செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்று அவர் அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார். சரி, சிற்றரசு மகள் திருமணத்தில் ஆசிரியரைச் சந்தித்து நீண்ட நேரம் பேசலாம் என்று எண்ணி யிருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச் சியை முடித்துவிட்டு இன்னொரு திருமணத்திற்கு நான் விரைவாகப் புறப்பட வேண்டும். ஓய்வாக ஒரு நாள் நம் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து உரையாடுவேன். அன்பிற்குரிய தோழர்களே, இந்த அரங்கில் எங்கே பார்த்தாலும் கருப்புச்சட்டைகளே என் கண்ணுக்குப் படுகின்றன. இங்கே வந்ததும் என் சொந்த வீட்டுக்கு வந்ததைப் போன்ற உணர்ச்சியை நான் பெறுகின்றேன் (கைத்தட்டல்). இப்போது நான் இருப்பது வாடகை வீடு! அது வேறு. (சிரிப்பும் கைத் தட்டலும்) உங்களைப் பார்ப்பதிலே நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ் ஓவியா said...

தோழர்களே! என் உள்ளத்திலே நீண்ட நாட்களாக ஒரு செய்தி உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதை உங்களோடுதான் நான் பகிர்ந்து கொள்ள முடியும். பேறு காலத்தில் பெண்களை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு குழந்தை இயல்பாக - இயற்கையாகப் பிறந்து விட்டால் நல்லது, இல்லையென்றால் வலி எடுக்கும்போது மருத்துவர்கள், அறுவை மருத்துவம் செய்து குழந் தையை வெளியே எடுத்துவிடுவது தாய்க்கும் சேய்க்கும் நல்லது என்று கருதினால் அறுவை மருத்துவத்தின் மூலம் குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால், பெண் ணுக்கு வலி ஏற்படுவதற்கு முன் பாகவே நாள், நட்சத்திரம், நல்லநேரம் பார்த்துக் குழந்தையை அறுவை மருத்துவத்தின் மூலம் வெளியே எடுத்துவிடுகிறார்கள். அவ்வாறு செய்து அதற்கு ஜாதகம் எழுது கிறார்கள். அது நல்ல ஜாதகமாக எதிர்காலத்திற்கு உதவும் என்று கருதுகிறார்கள். தாயின் கருவறையில் இதமான இளஞ்சூட்டில் வளர வேண் டிய குழந்தையை இப்படி அவசரப் பட்டுக் கத்தி போட்டுக் கிழித்து வெளியே கொண்டுவந்து ஜாதகம் கணித்து எழுதும் இந்தக்கொடிய மூடநம்பிக்கையை எப்போது ஒழிப்பது? சொல்லவேண்டிய இடத் திலே சொல்லிவிட்டேன். இப்படிப் பட்ட மூடநம்பிக்கைகளை ஒழிப்ப தற்கு உங்களால்தான் முடியும் என்று நிறைந்த கையொலிக்கிடையே தமது வாழ்த்துரையை முடித்துக் கொண் டார்.

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் இந்த நிகழ்வை அப்படியே எழுது என்றார் ஆசிரியர். அப்படியே செய்திருக்கிறேன். சுதியா-தினேஷ் குமார் நீடுவாழ்க! சிற்றரசு நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Read more: http://viduthalai.in/page-2/97007.html#ixzz3T2QZibz9

தமிழ் ஓவியா said...

முட்ட விடும் வேலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை நசுக்க பழங்குடியினர் ஆதரவைத் திரட்டப் போகிறார்களாம். வேறு ஒன்றுமில்லை; நக்சலைட்டுகளையும், மலைவாழ் மக்களையும் மோதவிடும் நரித் தந்திரம் இது. குஜராத் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி இந்த வேலையைத்தானே செய்தார்.

தினமணியின் பத்திரிகா தர்மம்!

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கைகள்: திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு என்று தினமணி வைத்திய நாதய்யர் தலைப்புப் போடுகிறார். சென்னை மாநகராட்சி மன்றத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்று மக்களை நம்பச் செய்யும் தகிடு தத்தம் இது. திமுக உறுப்பினர் வெளிநடப்புச் செய்தது வேறு காரணத்திற்காக என்பதுதான் உண்மை. திமுக என்றால் வைத்திகளுக்கு அப்படி ஒரு வெறுப்போ!

திடீர் சவார்க்கர் சிலை அகற்றம்

குமரி மாவட்டம் ஈத்தா மொழியில் நேற்று இந்து மகா சபை சார்பில் இந்து மகாசபை தலைவர் தா. பால சுப்பிரமணியம் தனது வீட்டில் சவார்க்கர் சிலை வைத்து கட்சி நிருவாகிகளுடன் மாலை அணிவித்துள்ளார்.

இதற்கு அரசு அனுமதிக்கவில்லை. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று அந்த சிலையை அகற்றினர். மேலும், இந்து மகா சபை நிர்வாகி தா. பாலசுப்பிரமணியம்மீது பல பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நல்ல சேதி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்துக்கான 300 ரூபாய் முன் பதிவு டிக்கெட் விற்பனையில் பெரும் பின்னடைவு!

Read more: http://viduthalai.in/e-paper/97013.html#ixzz3T2RAgvO5

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாராட்டு

செய்தி: பயங்கரவாதச் செயல்களில் படித்தவர் கள் ஈடுபடுவதற்கு அற நெறி இல்லாததே காரணம்.
- ராஜ்நாத்சிங்

மத்திய உள்துறை அமைச்சர் சிந்தனை: 1992இல் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் (அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட் பட) படித்திருந்தும் அறநெறி இல்லாதவர்கள் என்பதை ஒப்புக் கொண் டதற்குப் பாராட்டு!

மருந்து

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக அர்சீனியம் ஆல்பம் என்னும் ஹோமியோபதி மருந் தைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97015.html#ixzz3T2RJx732

தமிழ் ஓவியா said...

ஒழுக்க நெறி!

பள்ளிக்கூட அறைகளில் கேமரா, ரயில் பெட்டிகளில் கேமரா, கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் கேமரா - இது தான் இந்த நாட்டில் ஆன்மிகம் வளர்த்த ஒழுக்க நெறி!

Read more: http://viduthalai.in/e-paper/97016.html#ixzz3T2RRCCKX

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/97005.html#ixzz3T2RbBn4z

தமிழ் ஓவியா said...

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையே!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் சேர்ந்து விரட்டியடித்துள்ளனர். ராமேசுவரத்தில் கடந்த 26ஆம் தேதி காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்திய எல்லையான கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படை மற்றும் இலங்கை மீனவர்கள் சேர்ந்து ராமேசுவர மீனவர்களை தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். அது மட்டும் இல்லாமல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு தாக்கி உள்ளனர்.

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் பதற்றத் துடன் கரை திரும்பி உள்ளனர். தற்போது இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பிறகும் தமிழக மீனவர்மீது தாக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கைக் கடற்படை மீனவர்களை விரட்டியடித்ததால் மீனவர் மத்தியில் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுபோலவே காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மீனவர்களும் அதே நாளில் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை மீனவர்கள், எங்கள் பகுதியில் ஏன் மீன்பிடிக்க வந்தீர்கள்? என்று கூறி, இங்கிருந்து சென்ற மீனவர்களிடம் தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. இந்த மோதலில் இலங்கை மீனவர் ஒரு காயம் அடைந்தார். அவரை, அவருடன் வந்த மீனவர்கள் காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மருத்துவ மனையில் சேர்ந்தனர். இதனை அடுத்து இலங்கை கடற்படையினர் விரைந்து வந்து காரைக்கால், நாகப் பட்டினம் மீனவர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் 43 பேரை 5 படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகவும் தங்கள் நாட்டு மீனவர்களை தாக்கியதாகவும் வழக்குப் பதிவு செய்து 43 பேரையும் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்தனர்.

ஒரே நாளில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்தனர் என்கிறபோது, இலங்கைப் பகுதியில் மீன்பிடிப்பு என்ற கேள்வி எங்கே வந்தது? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இலங்கை மீனவர்கள்தான் வேதாரண்யம் பகுதியில் தமிழ்நாட்டு பகுதியில் மீன் பிடித்துள்ளனர்.

இது ஏதோ ஆடு ஓநாய்க் கதையாக இல்லையா? இப்பொழுது புதிதாக இன்னொரு தகவலையும் உலவ விடுகிறார்கள். இதுவரை தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கினர் என்றுதான் செய்தி வரும் இப் பொழுது என்னடா என்றால் தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களைத் தாக்கியதாகப் புதுக்கதை கிளம்பி இருக் கிறது.

இலங்கையில் புதிய ஆட்சி வந்தாலும் பழைய கந்தாயம்தான் தொடர்கிறது. இந்தியாவில் புதிய ஆட்சி வந்ததும் தலைகீழ் மாற்றம் நடக்கப் போகிறது என்று தலைகீழாக நின்று கூச்சல் போட்டவர்கள் இப்பொழுது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்ளப் போகிறார்களாம்?

அய்ந்து மீனவர்களைத் தூக்குத் தண்டனையிலிருந்து மோடி அரசு காப்பாற்றி விட்டது என்று தோள் தூக்கி முழங்கியபோது, அதன் பின்னணியில் உள்ள திரைக் கதை வசன நாடகம் எள்ளி நகையாடப்பட்டது.

தமிழ் ஓவியா said...


விடுதலை பெற்று வந்தவர்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த முறையை இப்பொழுது நினைத்தாலும் கொள்ளைச் சிரிப்புதான் முட்டிக் கொண்டு கிளம்புகிறது.

இதை இன்னொரு வகையிலும் எண்ணிப் பார்க்கலாம்; தமிழக மீனவர்களை தூக்குத் தண்டனையிலிருந்தே மீட்கக் கூடிய அதீத செல்வாக்குப் பலமும், ராஜ தந்திர வீச்சும் உள்ள பிரதமர் மோடியால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழாதா?

இலங்கையின் புதிய அதிபர் இந்தியா வருகிறார், புதிய பிரதமர் மோடி இலங்கை செல்லவிருக்கிறார். இப்படி இரு நாடுகளுக்கும் இடையே இழையோடும் நட்பின் பரிசாக தமிழக மீனவர்களின் உரிமையை மீட்டுக் கொடுக்கக் கூடாதா? முடியாதா?

ஒன்று மட்டும் உண்மை, முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் சரி (UPA) இன்றைய பிஜேபி தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சியாக இருந்தாலும் சரி வெளிநாட்டுக் கொள்கைகளில், அதிலும் குறிப்பாக இலங்கைப் பிரச்சினையில் ஒரே குட்டையில் ஊறும் உளுத்துப் போன மட்டைகள்தாம்.

இரு நாட்டு மீனவர்களைச் சந்திக்க வைத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமாம். இது என்ன புதிய கண்டுபிடிப்பா? இதற்கு முந்தைய கட்சியிலும் நடந்து புளித்துப் போன சங்கதிதானே இது? பழைய கள் புதிய மொந்தை என்கிற பாணியால் எல்லாம் ஆகக் கூடிய காரியம் ஒன்றும் இல்லை. நிரந்தரத் தீர்வான கச்சத்தீவை மீட்பதில் கால தாமதம் ஆனாலும், எங்களுக்குச் சொந்தமான கச்சத் தீவை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தோம் என்பதை மறைக்க வேண்டாம்!

இதற்குக் கைமாறாக இலங்கை அரசு செய்ய வேண்டிய கடப்பாடு - தமிழக மீனவர்கள் எங்களுடைய பரம்பரை மூதாதையர் வழி வந்த கச்சத் தீவுப் பகுதியில் எங்கள் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை அளித்தே தீர வேண்டும் என்று அழுத்தந் திருத்தமாக அடித்துச் சொல்லிப் பெற்றுத் தருவதுதான் - இந்திய அரசின் உடனடியான சிரமேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகளாகும். இதனை விட்டு விட்டு போகாத ஊருக்கு வழியாக எதையாவது சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்தினால் தமிழக மீனவர்கள் மட்டுமல்ல; தமிழர் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

சிறீரங்கம் இடைத் தேர்தலில் கட்டிய பணத்தைக்கூட திருப்பிப் பெற முடியாத கனமான தோல்வியை பிஜேபிக் குத் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்ததன் கூர்மையையும் மோடி அரசு புத்திசாலித்தனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையே என்ற ஏக்கமும், எண்ணமும் இரட்டிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதி நிலையை அடைந்திருக்கிறது என்று எடுத் துச் சொல்லுகிறோம் - ஏன், எச்சரிக்கவும் செய்கிறோம்!

Read more: http://viduthalai.in/page-2/97006.html#ixzz3T2RkV8sN

தமிழ் ஓவியா said...

பெரியார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்று மீண்டபின் அளித்த முக்கிய அறிக்கை

தோழர்களே, எனது மேல் நாட்டு சுற்றுப் பிரயாணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து 11. 11. 32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன். நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப்புற்றிருந்தாலும் சமீபத்தில் களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண் டிருக்கிறேன்.

என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார்செயில்ஸில் இந்தியாவுக்குக் கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்குச் சென்று இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2 - அல்லது 3 - மாதத்தில் இந்தியா திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார்.

அதற்குள் கூடிய சீக்கிரம் நமது இயக்கத் தோழர்கள் பலரைக் கூட்டி கலந்து பேசி ஒரு வேலை திட்டத்துடன் தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித்திருக்கிறேன்.

சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங் களையும், காட்சிகளையும், அதனால் தான் கொண்ட கருத்துக் களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்.

நான் இங்கு இல்லாத போது இயக்கத்தைத் தொடர்ந்து முன்னிலும் பல மடங்கு அதிகமாக எழுத்தாலும் உபன்யாசங்களாலும் மகாநாடுகள் கூட்டியும் மக்களுக்கு உண்மை உணர்ச்சிக்களை ஊட்டி தீவிரமாய் வேலை செய்து வந்த தோழர்கள் யாவருக்கும் நான் என் மனப் பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குடிஅரசு - குறிப்பு - 13.11.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SQb1dK

தமிழ் ஓவியா said...

தேசியத்தின் விளைவு

1914ஆம் வருஷம் முதல் 1918 வருஷம் வரை நடந்த உலக மகாயுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசியம், தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தின் சம்பந்தப்படும் படி செய்தது.

இந்த உலக மகாயுத் தத்தின் பயனாய் கொல்லப்பட்டவர்கள் 97,43,914 கிட்டத் தட்ட ஒரு கோடி பேர் காயம் பட்டவர்கள் 20,92,7,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போன வர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான தொகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இது நிற்க, இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர்பார்த்து தேசாபிமானத்தின் காரணமாக என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங்கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ஆம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து எண்பது கோடி ரூபாய் ஆகும்.

இதை தினக் கணக்காய் பிரித்தால் தினம் 1க்கு 20,00,000 பவுன் (இருபது லட்சம் பவுன்) அதாவது நாள் 1க்கு 270,00,000 இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப் படுகின்றது.

பிரிட்டிஷ் அரசாங்கமானது தனது அரசாட்சி வரும் படியில் உள்ள ஒவ்வொரு பவுன் வரும் படியிலும் 13 ஷில்லிங் யுத்த தேசாமானத்திற்காக. தேசத்தைக் காப்பாற்ற தேசிய கடனுக்கும் சேனை தளவாடங்களுக்காக அதாவது,

யுத்த கடனுக்கு வட்டி 0 - 9 - 0 யுத்த வீரருக்கு பென்ஷன் தற்காலம் ராணுவத்திற்கும் 0 - 1 - 3
தரைகப்பல் தளவாடத்திற்கும் 0 - 2 - 9 ஆக : 0 - 13 - 0

மேற்படி பதின்மூன்று ஷில்லிங்போக பாக்கி இருக்கும்

ஷில்லிங்கில் கல்விக்கு 0 - 1 - 5
உத்தியோக பென்ஷன் 0 - 1 - 3
தல ஸ்தாபன உதவி 0 - 1 - 2
வேலை இல்லதவர்களுக்கு பிச்சை 0 - 1 - 2

வீட்டு வசதி கோர்ட்டு வசதிவகையறாவுக்கு 0 - 0 - 8
போலீஸ் 0 - 0 - 6
விவசாயம் சுகாதாரம் 0 - 0 - 2
சில்லறை ஆக 0 - 0 - 3 ஆக : 0 - 7 - 0

ஆக பிரஜைகளின் நன்மைக்கு என்று ஏழு ஷில்லிங்கும் செலவு செய்யப்படுகிறது.

அதாவது மேற்கண்ட யுத்த கடன் வட்டிக்காக என்று செலவு செய்யப்படும் 9 ஷில்லிங்கும் முதலாளிமார்களுக்கே போய்ச்சேரும் தேசாபிமானத்திற்காக ஏற்பட்ட காரியத்தின் பயனாய் இன்று முதலாளிமார்கள் தேச அரசிரை வரும் படியில் கிட்டத் தட்ட சரிபகுதியை உலக முள்ளளவும் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

எனவே, பல கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து காயப்படுத்தி காணாமல் போகச் செய்ததும் அல்லாமல், மக்களிடத்தில் வாட்டிப் பிழிந்து வசூல் செய்யும் வரியிலும் நூற்றுக்கு 65 பாகத்தை தேசத்தைக் காப்பாற்ற என்னும் பேரால் இராணுவத்திற்கும், தள வாடங்களுக்கும் செலவு செய்தும்,

இந்த தேசத்தில் இன்று பத்து லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும், ஜீவனத்துக்கு தங்களுக்கும் தங்கள் பெண்டு பிள்ளைகளுக்கும் அரைவயிற்றுக்கு போதுமான கஞ்சிக்கூட மார்க்கமில்லாமலும் தவித்து வருகிறார்கள்.

இது பாமர ஜனங்களுடைய - ஏழை ஜனங்களுடைய தேசாபிமான முட்டாள் தனமா? அல்லது பணக்காரனுடைய படித்த கூட்டத்தாருடைய தேசாபிமான பித்தலாட்டமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த வாரம் தேசியக் கடன் என்பது என்ன? என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

குடிஅரசு - கட்டுரை - 11.12.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SYjvzi

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம்.

ஆனால் எந்த காங்கிரஸ் காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு.

அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ் காரத்தைப் பற்றிப் பிரயோசனமில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது?

ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SgpIx9

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சிவன்

மார்க்கண்டேயனை - அவன் ஆயுள் முடிந்த நிலையில் எமன் பாசவலையை வீசினான். அந்த நேரத்தில் சிவனை மார்க்கண்டேயன் கட்டி அணைத்ததால் எமனைக் காலால் உதைத்து விரட்டி னான் சிவன் என்றால் இதில் எமன் செய்தது தவறா? (அவன் கட மையைத்தானே செய் தான்?) சிவன் செய்தது சரியா?

Read more: http://viduthalai.in/e-paper/97093.html#ixzz3T8IQQ5To

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம்: உதவிக்கரம் நீட்டிய நீதிமன்றம்

கொச்சி, மார்ச் 1_ வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொள்ள கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்.சசீந்திரன். இந்து மதத்தைச் சேர்ந்த இவரின் மகளும், அதே பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு இருதரப்பில் இருந்தும் அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் சுசீந்திரன் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் வி.கே.மோகனன், பி.டி.ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலர்கள் ஆஜராகி தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். அதையடுத்து, இருவரின் திருமணத்தையும் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இருவருக்கும் பாது காப்பு அளிக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

Read more: http://viduthalai.in/page-3/97083.html#ixzz3T8Ii6RSp

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பம் உண்டா?

பெண்ணாடம் வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் வினா விருத்தாசலம், மார்ச் 1_- திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பங்கள் தமிழ்நாட்டில் உண்டா? என பெண்ணாடத்தில் நடந்த திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வினா எழுப்பி, சிறப்புரையாற்றினார். பெண்ணாடம் வானொலித் திடல் அண்ணா அரங்கத்தில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு (22.2.2015) எழுச்சியுடன் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது, நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கு திராவிட இயக்கமே காரணம் என்றும், நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக இல்லாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் வரதராஜன் என்கிற ஆதிதிராவிடர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது யாரால்? பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றால் யாருடைய உழைப்பு? இந்த வரலாறு தமிழ்த் தேசியங்களுக்குத் தெரியாது.

இன்றும்கூட, நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் திராவிடர் இயக்கமல்லவா! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அல்லவா! எனவே, தமிழகத்தில் திராவிடர் இயக்கத் தால் பலன் பெறாத குடும்ப உண்டா எனக் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-8/97056.html#ixzz3T8Jxb9tF

தமிழ் ஓவியா said...

மாணவியரிடம் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கிய காட்டுமிராண்டித்தனம்



ஆத்தூர், மார்ச் 1_ மாணவி ஒருவரின் 150 ரூபாய் திருட்டு போனதை கண்டுபிடிக்க, மூன்று மாண வியரின் உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கியதால் அவர்களின் உள்ளங்கை வெந்து போனது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கருமந் துறை அரசு உறைவிட மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர்.

இதில் கருமந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள மாணவியர் விடுதியில் 107 மாணவியர் தங்கி உள்ளனர். கடந்த 12 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு, எட்டாம் வகுப்பு மாணவியின் 150 ரூபாய் காணாமல் போனது.

பணத்தை இழந்த மாணவி உட்பட மூன்று பேரும் சேர்ந்து, தங்களது அறையில் தங்கியிருந்த ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியர் மீனா, சிவலட்சுமி, சுகன்யா ஆகியோரிடம் கைகளில் கற்பூரம் அணையும் வரை வைத்திருந்து, சத்தியம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மூன்று பேரும் அப்படியே செய்ய கடைசியில் உள்ளங்கை வெந்து போனது. தகவல் அறிந்து விடுதி காப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் வெங் கடேஸ்வரன் காயமடைந்த மூன்று மாணவி யருக்கும் சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல தனி வட்டாட்சியர் புகழேந்தி கூறியதாவது:

சம்பந்தப்பட்ட மூன்று மாணவியரும், மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் நிகழாமல் விடுதி வார்டன் உள்ளிட்டோர், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/97055.html#ixzz3T8K62551

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம்
நிதிஷ்குமார் குறிப்பிடுகிறார்

மத்திய வரி வருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான பங்கீட்டு தொகையை மிகக்குறைந்த அளவில் பெறும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. கடந்த 28-இல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளு மன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில், மாநிலங் களுக்கு வழங்கப்படும் பங்குத்தொகையை 10 சதவீதம் உயர்த்துவதாக ஜெட்லி அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.

ஆனால், மாநிலங்களுக்கான நிதிப் பங்களிப்பை உயர்த்தியபோதும், நிதியைப்பெறும் வளர்ச்சி வீதத்தில், தழிழகம், தெலுங் கானாவைத் தொடர்ந்து, பீகார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்ப தாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது: மத்திய வரிவருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட் டில் 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட மத்திய வரி வருவாய் பங்கீட்டை பெறுவதில் தமிழகத் திற்கு 25.7 சதவீத வளர்ச்சி மட்டுமே கிடைக்கும். இந்த மாநிலம், நாட்டிலேயே மிகக்குறைந்த சதவீத பங்கீட்டு உயர்வைப்பெறும். இதற்கு அடுத்தப்படியாக தெலுங் கானா, 30.9 சதவீதமும், பீகார் 37.3 சதவீத வளர்ச்சியும் பெறும். இந்த மூன்று மாநிலங்களும், நாட்டிலேயே மிகக்குறைந்த வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலம் 93.9 சதவீதமும், ஜம்மு - காஷ்மீர் 80.6 சதவீதமும் இதற்கு அடுத்தப்படியாக மத்தியபிரதேசம் 64.7, அரியானா 60.3, குஜராத், 57.7 உள்ளிட்ட மாநிலங்களும் அதிகப்படியான மத்திய வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன. மத்திய அரசின் இந்த போக்கு ஓட்டு வங்கி அரசியலை வெளிப்படுத்து கிறது.

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக சில முக்கிய முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளேன். விரை வில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97182.html#ixzz3TK8m2Aiy

தமிழ் ஓவியா said...

அய்யோ ஜோதிடமா? அலறும் ராஜபக்சே!

கொழும்பு, மார்ச் 3_ எதை செய்தாலும் ஜோதிடரை கேட்டு செய்த இலங்கை முன்னாள் ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவ தில்லை' என்று கூறியுள்ளார். உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே என்று ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால் ஜோதிடத்தால் கெட்டது யார் என்றால் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே என்று யாரைக் கேட்டாலும் சரியாகச் சொல்வார்கள்.

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்தது வரை ஜோதிடரை கேட்டு காய் நகர்த்திய ராஜபக்சேவோ, இப் போது ஜோதிடம் என்றாலே அலறுகிறார். பாகிஸ்தான் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் தன்னை கைவிட்டதால்தான் பலவிதமான சர்வ தேச தாக்கங்களுக்குள்ளாகிய தாக குறிப்பிட் டுள்ளார். இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர் களா என்ற கேள்விக்கு பதில் அளித் துள்ள ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவதில்லை எனக் கூறியுள்ளார். ஆட்சி முடிய 2 ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர் களின் சொல்லைக் கேட்டு ஆட்சியை கலைத்த ராஜபக்சே, அதிபர் தேர்தலில் படுதேல்வியை சந்தித்தார் இப்போதோ வழக்குகளைச் சந்திக்க இருக்கிறார் ராஜபக்சே. (ஒன் இண்டியா)

Read more: http://viduthalai.in/e-paper/97191.html#ixzz3TK8vB88W

தமிழ் ஓவியா said...

புண்ணியம்

ஏகாதசி என்றும் பட்டினி விரதம் என்றும் கொட்டி அளக்கிறார் களே - அன்றாடம் கோடிக் கணக்கான மக்கள் வறு மையில் உணவின்றிப் பட்டினி கிடக் கிறார்களே

அவர்களுக்கெல்லாம் புண்ணியம் கிடைக்குமா?

Read more: http://viduthalai.in/e-paper/97184.html#ixzz3TK94MSEV

தமிழ் ஓவியா said...

அடே, அப்படியா?

நம் நாட்டில் மிகவும் குறைந்த விலையில் உண வுகள் கிடைக்கும் இடம் நாடாளுமன்ற உணவகங்கள் தானாம் பாவம் ஏழைகள் சாப்பிடும் இடம் அல்லவா அவை!

30 கோடி மக்கள் வறு மைக் கோட்டுக்கும் கீழே இருக்கிறார்களே -அவர் களுக்கு இதனை விரிவுபடுத் தக் கூடாதா?

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9QPNUP

தமிழ் ஓவியா said...

அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?
(குடிஅரசு, 12.5.1935)

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் முயற்சி வரவேற்கத்தக்கது


தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா அவர்கள் மாநிலங்களவையில் திருநங்கைகளின் நலன்களைப் பேணும் வகையில் தனி நபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அப்பொழுது அவர் அவையில் தெரிவித்த கருத்துக்கள் சிறப்பானவை;-

மனித குலம் தோன்றியது முதல் பல்வேறு கலாச்சாரம், இனம் ஆகியவற்றில் திருநங்கைகள் பிரதிபலிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் அந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த அவர்கள் மனம், உடல், பாலின ரீதியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றால் அதைப் பதிவு செய்ய அதிகாரிகள் தயங்கும் நிலைதான் நம் நாட்டில் நிலவுகிறது. சில இடங்களில் திருநங்கைகள் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுகின்றனர். இதனால் கல்வி, சட்ட உதவி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்படுவதுடன் சிலர் வீடற்ற நிலையில் அவதிப்படுகின்றனர். பொது இடங் களில் அவர்களுக்கென பிரத்யேக கழிவறைகள்கூட கிடையாது. அவர்களின் வாழ்வாதாரத்தையும், நிலை யையும் சீர்படுத்த பொறுப்புள்ள உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு யார் அதைச் செய்ய முற்படுவர்?

திருநங்கைகளுக்கு நாட்டில் மதிப்பையும் பாலின பிரிவினை இல்லாத வாழ்க்கையையும் உறுதிப்படுத்த இந்த மசோதாவை முன்மொழிகிறேன். அவர்களுக் கான நலத் திட்டங்களை வகுத்து அவை செயல்படுத்தப் படுவதை தேசிய, மாநில ஆணையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

திருநங்கைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். 2008-இல் தமிழக முதல்வராக கலைஞர் இருந்த போது திருநங்கைகளுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது. பாலினத்தை மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு அரசு மானியமும் வழங் கப்பட்டது. ஆனால், அவை இப்போதும் வழங்கப் படுகிறதா எனத் தெரியவில்லை! திருநங்கைகளின் நலன்களைக் காக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் இந்த மசோதாவைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கக் கூடிய இயக்கம் திராவிட இயக்கம்; அந்த வகையில் சிவா அவர்களின் முயற்சியும் பேச்சும் வரவேற்கத் தகுந்தவை.
அரவாணிகள் என்று கூறப்பட்டு, கேலிக்குரியவர் களாக சமுதாயத்தில் ஆக்கப்பட்டவர்களுக்கு திரு நங்கைகள் என்ற அழகிய பெயரை அளித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே! மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சொன்னதெல்லாம் சாதாரணமானதா?

கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெண்கள் புரட்சி மாநாட்டில் திருநங்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது (13.4.2013).

அம்மாநாட்டில் நாமக்கல்லைச் சேர்ந்த ரேவதி என்ற திருநங்கை அழைக்கப்பட்டுச் சிறப்பு செய்யப் பட்டார். திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

ஊடகத்தில் பகுத்தறிவுப் பணியாற்றி வந்த ரோஸ் அவர்கள் அழைக்கப்பட்டு பெரியார் திடலில் பாராட்டப்பட்டார்.

திருநங்கைகள் தன்மானத்தோடும், மற்றவர்களுக்கு நிகராக வாழ வேண்டும் என்று நினைப்பதும், அதற்கான திட்டங்கள் தீட்டுவதும் ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும்.
தி.மு.க. ஆட்சியில் மாநிலம் அளவில் மேற்கொள் ளப்பட்ட முயற்சியும் அளிக்கப்பட்ட அங்கீகாரமும், தீட்டப்பட்ட திட்டங்களும் இந்திய அளவில் மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சிவா அவர்கள் இப்படியொரு மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்குள்ளும் தேவையில்லாமல் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மாநிலங்களவையில் மூக்கை நுழைத்திருப்பது தேவையில்லாததாகும்.

இன்றைக்கும்கூட திருநங்கைகள் இரயில்களில் ஏறிப் பயணிகளிடம் பிச்சை எடுப்பது போன்ற சுய மரியாதைக்கு எதிரான செயல்பாடுகளுக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது அவர்களுக்கான இழிவாகாது; இதற்குக் காரணமான சமுதாயத்தின் இழிவாகும்; இந்த நிலைக்குச் சமுதாயமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

கட்சி அரசியல்களுக்கு அப்பால் நின்று, சிவா அவர்களால் முன்மொழியப்பட்ட மசோதாவை நிறைவேற்றிக் கொடுத்து மூன்றாவது பாலினத்தை சுயமரியாதையோடு கம்பீரமாக வாழ வைத்தால், அது நாட்டுக்கும் மனித குலத்துக்கும் மிகப் பெரிய தலை நிமிர்வாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/97196.html#ixzz3TKAAadk1

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம் எப்படி?

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்

1. சென்னை சிறீபெரும்புதூர் (வழி பூவிருந்தவல்லி)
2. ஆவடி- சிறீபெரும்புதூர்
3. இராமேசுவரம்-தனுஷ்கோடி
4. தஞ்சாவூர்-அரியலூர்-சென்னை எழும்பூர்
5. திண்டிவனம்-கடலூர் (வழி புதுச்சேரி)
6. மயிலாடுதுறை-திருக்கடையூர் - திருநள்ளாறு- காரைக்கால்
7. ஜோலார்பேட்டை-ஓசூர் (வழி கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம்-மேட்டூர்
9. ஈரோடு-சத்தியமங்கலம்
10. சத்தியமங்கலம்-பெங்களூரு
11. மொரப்பூர்-தருமபுரி (வழி முக்கனூர்)
12. மதுரை- காரைக்குடி (வழி திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம்-காட்பாடி
14. திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை
15. மதுரை-கோட்டயம்
16. அரக்கோணம்-திண்டிவனம் (வழி வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம்-ஆத்தூர் (வழி அரியலூர்)
18. திண்டுக்கல்-கூடலூர்
19. திண்டுக்கல்- குமுளி
20. காட்பாடி- சென்னை (வழி பூவிருந்தவல்லி)
21. கும்பகோணம்- நாமக்கல்
22. மானாமதுரை- தூத்துக்குடி
23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி மன்னார்குடி)
24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை

பாதியில் கைவிடப்பட்டவை

1. சென்னை- கடலூர்
2. பழனி- ஈரோடு
3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை
4. திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. சிறீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி
6. மதுரை- போடி 7. திண்டுக்கல்- கோவை

இரு வழிப்பாதைப் பணி

1. திருச்சி- தஞ்சாவூர்
2. இருகூர்- போத்தனூர்

Read more: http://viduthalai.in/page-2/97160.html#ixzz3TKAecBIT

தமிழ் ஓவியா said...

செய்தியும்-சிந்தனையும்!

உயிருடன்...!

செய்தி: அமர்நாத் யாத் திரை முன்பதிவு தொடங் கியது!
சிந்தனை: நோய் நொடியின்றிப் பக்தர்கள் உயிருடன் திரும்ப வாழ்த்துகிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/97250.html#ixzz3TQUZMGxL

தமிழ் ஓவியா said...

21% முசுலிம்கள்

இந்தியா முழுமையும் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட வர்கள் 57,936. இதில் முசுலிம்கள் மட்டும் 21.30 விழுக் காடாம்.

44 லட்சம் பேர்

2013-2014 இல் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதோர் 44,07,193 பேர்கள்.

3869

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் களுக்கான இடங்கள் 3869.

அரசு செலவில் தனியார் மயமா?

20 விமான நிலையங்கள் ரூ.27,000 கோடி செலவு செய்து நவீன மயமாக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமான நிலை யங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் வேலையும் மறுபுறம் நடந்து வருகிறது. ஆக, அரசு செலவில் நவீனப்படுத்தி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஆகா, தனியார் நிறு வனங்கள்மீது பி.ஜே.பி. அரசுக்கு என்ன கரிசனம்!

Read more: http://viduthalai.in/e-paper/97251.html#ixzz3TQUrM9Ni