Search This Blog

27.2.15

ஆர்.எஸ்.எஸில் அரசு ஊழியர்கள் உறுப்பினராகலாம் என்பது சாதாரணமானதுதானா?


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளும் விவாதத்திற்குரிய கருத்துகளும் இருப்பதால் அந்த அமைப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் நேரடி உறுப்பினர்களாக இருக்ககூடாது. 1999- ஆம் ஆண்டு சத்தீஸ்கர் அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்தது.   ஆனால், பாஜக அரசு சத்திஸ்கரில் பதவி ஏற்றதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நேரடியாக ரமன் சிங் தலைமையில் ஆன அரசு விவகாரங்களில் தலையிட்டு வந்தது. கடந்த ஆண்டு நடந்த நகராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தேர்தலில் பாஜக கடுமையான தோல்வியைச் சந்தித்து. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில்    பல்வேறு மாற்றங் களைக் கொண்டு  வர ஆரம்பித்துள்ளது. முக்கியமாக பாஜக உறுப்பினர் சேர்க்கையில் அரசு யந்திரங்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் எல்லா கூட்டங்களிலும் பங்கேற்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.   இது கட்சிரீதியாக பார்க்கப்பட்ட நிலையில்,  மாநிலத்தில் தலைமைச் செயலாளர் ஆர்.மிஸ்ரா  அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.


அதில் அரசு அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணையலாம் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணையும் பட்சத்தில் அவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க சிறப்பு அனுமதிவழங்கப்படும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 சத்தீஸ்கர் அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி அனைத்து அரசு ஊழியர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கட்டாயமாக சேரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசு நடத்தும் பல்வேறு விழாக்களில் முக்கியபங்கு வகித்து வரும் நிலையில், அந்த அமைப்பில் உறுப்பினராக ஆகி விட்டால் சிக்கல்கள் ஏற்படும் என்ற நிலையில் அரசு ஊழியர்கள் விருப்பமில்லாத பட்சத்திலும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அட்டையை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விரைவில் பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இதே நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்றே தெரிகிறது. (குஜராத் அரசும் தயாராகி விட்டது)


குஜராத் மாநிலத்தில் மோடி முதல் அமைச்சராவதற்கு முன்பு முதல் அமைச்சராகவிருந்த கேசுபாய் படேல் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரலாம் என்று ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் (2001). ஆர்.எஸ்.எஸ். ஒரு சமுதாய இயக்கம்தான் அதில் அரசு ஊழியர்கள் உறுப்பினராக சேரலாம் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் குஜராத் அரசின் ஆணையை வழிமொழிகின்ற வகையில் கருத்துத் தெரிவித்தார். அப்பொழுது அது ஒரு பிரச்சினைப் புயலை உருவாக்கியது. அதன் பின்னர் அந்த ஆணை பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.

இப்பொழுது மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கும் வீண் வேலையில் சத்தீஸ்கர் மாநில அரசு (பிஜேபி) ஈடுபட்டுள்ளது.


ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி; எந்தக் காரணத்துக்காக அது தடை செய்யப்பட்டது என்பது நாடு அறிந்த ஒன்று. 

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட பின்னணி என்பது சாதாரணமானதா? 

பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் பகிரங்கமாக அடித்து நொறுக்கினார்களே அதைத் தான் மறக்க முடியுமா? உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலை கவிழ்ந்து நிற்கும் அவலத்தை அல்லவா அது ஏற்படுத்தியது.


நாட்டில் நடக்கும் பல்வேறு மதக் கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணமாக இருந்தது என்பதை பல்வேறு ஆணையங்களும், ஆவணங்களும் நிரூபிக்கவில்லையா?


மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் சச்சரவுகளையும் கலவரங்களையும் மூட்டி விட்டு குளிர் காயும் கேவலமான அணுகுமுறைகளையும், திட்டங்களையும் கொண்டது ஆர்.எஸ்.எஸ்., இத்தகைய ஓர் அமைப்பில் அரசு ஊழியர்கள் உறுப்பினராகலாம் என்பது சாதாரணமானதுதானா?


ஆர்.எஸ்.எஸ். ஷாகா (பயிற்சி)களில் என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறது? பெண்கள் உட்பட வன்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லையா? ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப் படுவதை மறுக்க முடியுமா?


அங்கு சுற்றி இங்கு சுற்றி இப்பொழுது அரசு அலுவலகங் களுக்குள்ளேயே அன்றாடம் மதச் சர்ச்சைகளையும், கலவரங்களையும் அரங்கேற்றிட அரசு நிலையிலேயே அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது என்றால் அதன் விளைவு எங்கே போய் முடியும்? என்பதைச் சிந்திக்க வேண்டாமா?


ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படுகின்ற ஞான கங்கையில் (ஙிஸீநீலீ ஷீயீ ஜிலீஷீரீலீ) என்ன கூறுகிறார்?


இந்தியா என்பதுஒரே நாடு, ஒரே கலாச்சாரம் - ஒரே மொழி சமஸ்கிருதம் என்று தானே கூறுகிறார் இந்தியா இந்துக்களின் நாடு, மற்ற மதக்காரர்கள் இங்கு வாழ வேண்டுமானால் அவர்கள் இந்துக்களாக தங்களை அறிவிக்க வேண்டும்; எந்த வித சலுகைகளையும் எதிர் நோக்கக் கூடாது. குடிமக்கள் உரிமையுமின்றிக்கூட வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே! இவை செயல்பாட்டுக்கு வந்தால் சிறுபான்மை மக்கள் இந்தியாவில் ஒரே ஒரு நிமிடம் வாழ முடியுமா? இந்தப் பிற்போக்குக் கொள்கையுடைய - மற்ற மதங்களைக் கிஞ்சிற்றும் மதிக்க மறுக்கிற ஒர் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர்ந்து கொள்ளலாமா?


அரசு அலுவலகங்கள் ஆர்.எஸ்.எஸின் கிளைக் கழகமாக, பாசறையாக, பிரச்சாரக் கூடமாக மாறுவதற்கு அரசே முன்வந்து ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறது என்று தானே அர்த்தம்.


வரலாற்று ஆய்வுக் கழகங்களில் பொறுப்பாளர்களாகவும், மாநில ஆளுநர்களாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏற்கெ னவே நியமிக்கப்பட்டுள்ளனர். இனி, அய்.ஏ.எஸ். அதிகாரி களாக, அய்.பி.எஸ். அதிகாரிகளாக, மாவட்ட நீதிபதிகளாக ஆர்.எஸ்.எஸ். காரர்களாகத் தட்டிப் பார்த்துத் தேர்வு செய்து நியமனம் செய்யப்படுவார்கள். அதிகாரிகளின் கார்களில் ஆர்.எஸ்.எஸ். ஸ்வஸ்திக் கொடிதான் பறக்கும். ஆர்.எஸ்.எஸின் கொள்கைகள் அப்பட்டமாகப் பாடத் திட்டங்களில் இடம் பெறும்; காந்தியார் படுகொலை செய்யப்பட்டது சரியே நியாயம்தான் என்று கற்பிக்கப்படும்.


காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே அவதாரப் புருசன் என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினர்களே வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டனர்; கோட்சேக்குச் சிலைகள் வைக்கவும் முந்தி நிற்கின்றன. இந்தச் சூழலில் ஆர்.எஸ்.எசுக்கு அரசு ரீதியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்வதற்கே கடுமையாக இருக்கிறது. குடியரசு விழா விளம்பரத்தில் மதச் சார்பின்மை என்பதையும், சோசலிஸ்ட் என்பதையும் நீக்கி விளம்பரம் செய்தார்கள். இந்த இரண்டின் அடிப்படை எதிரி அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அரசமைப்புச் சட்டத்தை உயிரோடு கொல்லும் ஓர் அமைப்பு. அதிகாரப் பூர்வமான ஆயுதத்தை எடுத்துப் பறப்படப் போகிறது - உஷார்! உஷார்!!


மதச் சார்பற்ற சக்திகளுக்கு அதிக வேலை காத்திருக்கிறது. தயார்தானா?

                      ----------------------"விடுதலை” தலையங்கம் 27-02-2015

47 comments:

தமிழ் ஓவியா said...

பிற மதத்தில் இருந்து இந்து மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி பிப் 27 பிற மதங்களிலிருந்து இந்து மதத்தை ஏற்றுக்கொள்ப வர்களை தாழ்த்தப்பட்ட வர்கள் பட்டியலில் தான் சேர்க்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப் பான தீர்ப்பை வெளியிட் டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கெபி மனு என்ப வரின் பாட்டனார் கிறிஸ் தவராக மதம் மாறினார். அதன் பிறகு அவர்கள் மூன்று தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருந் தனர்.

இந்த நிலையில் மனு இந்துமதத்திற்கு மாறி தனது ஜாதிச்சான்றிதழில் தாழ்த்தப்பட்ட இந்து என்று சேர்ந்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று இருந்தார். இதை கேரள நீதி மன்றம் ஏற்க மறுத்து வேற்று மதத்தில் இருந்து இந்துமதத்திற்கு வருப வர்கள் எப்படி தாழ்த்தப் பட்டவராக சேர்க்க முடியும் என்று கூறி அவரது பணி நியமனத்தை சட்டவிரோதம் என்று கூறி அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை வசூல் செய்யவும் அவரை உடன டியாக பணி நீக்கம் செய் யவும் உத்தரவிட்டிருந்தது.

கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கெபி மனு உச்சநீதி மன்றத்திற்கு சென்றார். இவரது மனு நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் கோபால் கோடா அடங்கிய அமர் வின் முன்பு விசார ணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது: பிற மதங் களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்கள் அவர்களின் மூதாதை யர்கள் எந்த ஜாதியில் இருந்தார்கள் என்பதை சாட்சிபூர்வமாக உறுதிப் படுத்தவேண்டும். மேலும் அவர்கள் வேறு ஜாதி களை ஏற்றுக்கொள்பவ ராக இருந்தால் அந்த ஜாதி இந்துக்கள் அவர் களை தங்கள் ஜாதிக் காரர்களாக மனப்பூர்வ மாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவர் கிருத் தவ மதத்தில் இருந்தோ அல்லது இஸ்லாம் மதத் தில் இருந்தோ இந்து மதத்திற்கு மாறுவதனால் இந்து சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண் டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களாகக் கருதப்படு வார்கள்.

இன்று இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் முன் னோர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன் னோர்கள் தான் வேற்று மதத்திற்கு சென்றார்கள் எனவே அவர்கள் இந்து மதத்திற்குத் திரும்பும் பொழுது அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்து மதம் திரும்பு பவர்கள் தங்களது ஜாதி நிருபிக்கப்படாத நிலையில், அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றும், தாழ்த்தப்பட்டவர் களுக்குரிய அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் அவர்களுக்கு உண்டு என்று தீர்ப்பு கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/96966.html#ixzz3SxD381uY

தமிழ் ஓவியா said...

பிற மதத்தில் இருந்து இந்து மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி பிப் 27 பிற மதங்களிலிருந்து இந்து மதத்தை ஏற்றுக்கொள்ப வர்களை தாழ்த்தப்பட்ட வர்கள் பட்டியலில் தான் சேர்க்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப் பான தீர்ப்பை வெளியிட் டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கெபி மனு என்ப வரின் பாட்டனார் கிறிஸ் தவராக மதம் மாறினார். அதன் பிறகு அவர்கள் மூன்று தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருந் தனர்.

இந்த நிலையில் மனு இந்துமதத்திற்கு மாறி தனது ஜாதிச்சான்றிதழில் தாழ்த்தப்பட்ட இந்து என்று சேர்ந்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று இருந்தார். இதை கேரள நீதி மன்றம் ஏற்க மறுத்து வேற்று மதத்தில் இருந்து இந்துமதத்திற்கு வருப வர்கள் எப்படி தாழ்த்தப் பட்டவராக சேர்க்க முடியும் என்று கூறி அவரது பணி நியமனத்தை சட்டவிரோதம் என்று கூறி அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை வசூல் செய்யவும் அவரை உடன டியாக பணி நீக்கம் செய் யவும் உத்தரவிட்டிருந்தது.

கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கெபி மனு உச்சநீதி மன்றத்திற்கு சென்றார். இவரது மனு நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் கோபால் கோடா அடங்கிய அமர் வின் முன்பு விசார ணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது: பிற மதங் களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்கள் அவர்களின் மூதாதை யர்கள் எந்த ஜாதியில் இருந்தார்கள் என்பதை சாட்சிபூர்வமாக உறுதிப் படுத்தவேண்டும். மேலும் அவர்கள் வேறு ஜாதி களை ஏற்றுக்கொள்பவ ராக இருந்தால் அந்த ஜாதி இந்துக்கள் அவர் களை தங்கள் ஜாதிக் காரர்களாக மனப்பூர்வ மாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவர் கிருத் தவ மதத்தில் இருந்தோ அல்லது இஸ்லாம் மதத் தில் இருந்தோ இந்து மதத்திற்கு மாறுவதனால் இந்து சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண் டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களாகக் கருதப்படு வார்கள்.

இன்று இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் முன் னோர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன் னோர்கள் தான் வேற்று மதத்திற்கு சென்றார்கள் எனவே அவர்கள் இந்து மதத்திற்குத் திரும்பும் பொழுது அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்து மதம் திரும்பு பவர்கள் தங்களது ஜாதி நிருபிக்கப்படாத நிலையில், அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றும், தாழ்த்தப்பட்டவர் களுக்குரிய அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் அவர்களுக்கு உண்டு என்று தீர்ப்பு கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/96966.html#ixzz3SxD381uY

தமிழ் ஓவியா said...

அன்னைதெரசாமீது அவதூறு : கலைஞர் கருத்து


கேள்வி:- அன்னை தெரசா வின் சேவையைக் கொச்சைப் படுத்தும் வகையில் ஆர். எஸ்.எஸ். தலைவர் கருத்து தெரிவித்தது பற்றி?

கலைஞர் :- தேவையில் லாத கருத்து அது. பேசக் கூடாத கருத்து அது. ராஜஸ் தான் மாநிலத்தில் ஒரு கூட் டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத், அன்னை தெரசா ஆற்றிய சேவைகள் சிறந்தவையாக இருக்கலாம்; ஆனால், அந்தச் சேவையாருக்கு வழங்கப்படுகிறதோ, அந்த நபரை கிறித்தவ மதத்திற்கு மாற்றுவதுதான் அதன் ஒரே நோக்கமாக இருந்தது என்று குறிப் பிட்டிருக்கிறார். அன்னைதெரசா, கொல்கத்தா நகரில் ஏழையெளியவர்களுக்காக அய்ம்பதாண்டு களுக்கும் மேலாக பணியாற்றியவர். 1979ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசே வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதிலும் மறைந்து விட்ட ஒரு மாபெரும் மாதரசியைப்பற்றி இப்படிப் பட்ட அநாகரிகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறி, வீண் பிரச்சினை ஒன்றைப் பா.ஜ.க. அரசுக்கு ஏற்படுத்தி விட்டார் என்றுதான் கூற வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க என்பதை இவர்கள் உணராமல் இருக் கிறார்களே என்பதுதான் வேதனை!

Read more: http://viduthalai.in/e-paper/96961.html#ixzz3SxDVIRK7

தமிழ் ஓவியா said...

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் தினமலர் ஆசிரியர் புகழாரம்

அந்தக் காலத்தில் உள்ள எழுத்துக்கள் ஈய எழுத்துக்கள், அந்த ஈய எழுத்துகளுக்குப் பதிலாக பெரியார் நூற்றாண்டு விழாவில்தான் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை அறிவித்தனர். அந்த சீர்திருத்த எழுத்துக்கள் வராவிட்டால், இந்த மாதிரி 1,200 பக் கங்களை கம்போஸ் செய்வது கடினமாக இருக்கும்.

- தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி
சென்னை நூல் வெளியீட்டு விழாவில் (தினமலர் 27.2.2015)

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDnvGpT

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கைபற்றி செய்தி வெளியிடும் ஏடுகள் கட்டண உயர்வு இல்லை என்பதையே பெரிதாக செய்திகளை வெளியிடு கின்றனவே - பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் கட்டணங்கள் ஏன் குறைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பாதது ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDuzyRg

தமிழ் ஓவியா said...

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் தொடரும் மதவெறிப் பேச்சு!
மெக்காவில் ராமர்கோவிலை கட்டி விட்டு அயோத்தியாவில் மசூதி கட்டட்டும்!


சாஜஹான்பூர்(உபி) பிப் 27_ மெக்காவில் கோவில் கட்ட விடுவார்களா? மதீ னாவில் கோவில் கட்ட முடியுமா வாடிகன் சர்ச் சின் பாதிபகுதியில் கோவில் கட்ட விட்டால் அங்கு எல்லாம் கோவிலைக் கட்டிவிட்டு பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி கூறினால் நாங்கள் அதை விவாதத் திற்கு எடுத்துக்கொள் வோம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் யோகி மீண்டும் மதவெறிப் பேச்சை வெளிப்படுத்தியுள் ளார்.

இந்து நாட்டில் வேறு கோவில்களா?

விவாதத்திற்குரிய பாபர் மசூதி பிரச்சி னைக்கு தீர்வு காண பாபர் மசூதி மற்றும் ராம்மந்திர் கட்டலாம் என்ற தீர்மா னத்தை குறிப்பிட்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் கூறியதாவது; இது இந்து நாடு இந்து நாட்டில் வேறு மதக் கோவில்கள் ஏன் இருக்க வேண்டும். நாம் அடிமை யாக இருக்கும் போது அந்த அடிமைத்தனத்தைப் பயன்படுத்தி மசூதி, தேவாலயங்கள் கட்டப் பட்டுவிட்டன. இன்று இருக்கும் மசூதிகள் எல் லாம் ஒரு காலத்தில் இந்துக்கோவிலாக இருந்த வைகள். ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியுள்ளார்கள். இடிந்து போன பழமை யான ஒரு கட்டடத்தை ராமர் கோவில் கட்டுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு தொழுகை நடத்தி அதை மசூதியாக மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் அதற்கான எதிர்நடவடிக் கையில் கரசேவகர்கள் வெற்றிகண்டனர்.

அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வாக மீண்டும் அங்கு மசூதியும் கோவிலும் கட்ட வேண்டும் என்று கூறுகி றார்கள். இது மடத்தன மான விவகாரம்; அங்கு இஸ்லாமியர்களுக்கான உரிமை ராமர் கோவில் கட்டுமிடத்தில் எங்கிருந்து வந்தது?

அயோத்தி சனாதன தர்ம பூமி, இது புனித பூமி ராமர் பிறந்த பூமி, இங்கு மசூதி இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட் டது. தற்போது மீண்டும் அங்கு மசூதி கட்டுங்கள் என்று கூறுகிறார்கள். நான் கூறுகிறேன் முதலில் மக்காவில் கோவில் கட்ட இடம் தாருங்கள், மதீனா வில் கோவில் கட்டுங்கள், வாடிகன் சர்ச்சில் பாதி இடத்தில் கோவில் கட்ட அனுமதி தாருங்கள் அதன் பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி நாங்கள் முடிவு செய்கிறோம் என்று பேசினார்.

அயோத்தி விவகாரத் திற்குத் தீர்வு காண்பதற்கு அகாடா பரிசத் மற்றும் மசூதி வழக்கு தொடுத்த ஹுசைன் அன்சாரி ஒருவ ரும் இணைந்து ராமர் மந்திர் மற்றும் மசூதி கட்ட நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். இதற்கு விஷ்வ இந்து பரிசத் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் விவாதத்திற்குரிய பேச்சைப் பேசியிருக்கிறார். மோடிக்குப் பதிலடியா?

கடந்த 17-ஆம் தேதி டில்லியில் கிறிஸ்தவ விழா ஒன்றில் பேசிய மோடி கூறியபோது அனைத்து மத உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும், மத நல்லிணக்கம் இந்தி யர்களில் டி.என்.ஏவில் உள்ளது என்று கூறியிருந் தார். அதற்கு எதிர்க் குர லாகத் தான் பிஜேபி மக் களவை உறுப்பினர் (ஆதித்யனாத்) இப்படிப் பேசி இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/96963.html#ixzz3SxE3SLIt

தமிழ் ஓவியா said...

பக்குவப்படுத்த வேண்டும்

மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்தவேண்டும்.
(விடுதலை, 16.1.1973)

Read more: http://viduthalai.in/e-paper/96967.html#ixzz3SxEJRmf7

தமிழ் ஓவியா said...

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!


பிரதமர் மோடி அரசின் (இரண்டாவது) ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்கள் நேற்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் (ஆங்கிலத்தில் லிணீநீளீ லிக்ஷீமீ ஙிபீரீமீ) உப்பு சப்பில்லாத, ஒப்பனைகளும், ஜால வித்தைகளும், வார்த்தை ஜொலிப்புகளும் மிகுந்துள்ள ஒரு பட்ஜெட்டாகி, எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது! எந்த புதிய ரயில் அறிமுகத் திட்டங்களும் இல்லாதது இந்த ஒரே பட்ஜெட் என்பதுதான் இதன் புதுமையும் தனித்தன்மையும்!

அதுகூட பரவாயில்லை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல ரெயில்வே திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்படும் அபாயத்திற்கு, ஆளாக்கப்படும் கொடுமைகளும் உள்ளன!

தமிழ்நாட்டிற்கு பட்டை நாமம் சாத்தப்பட்டுள்ளது!! தன்னந்தனிக் குரலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வரவேற்று அறிக்கை விடுத்துள்ளார். (அவருக்கு அப்படி ஒரு காலத்தின் கட்டாயம்; இதற்குமுன்பு கடுமையாக விமர்சித்தவர்தான்) அவருமே தமிழ்நாட்டில் - அவரே வற்புறுத்திய திட்டங்கள்கூட இடம் பெறவில்லை என்பதை மென்மையாக வேண்டுகோள் அறிக்கையாகவே விடுத்துள்ளார் என்பது நம் கருத்தை உறுதி செய்கிறது.

கழிப்பறை - தூய்மை துப்புரவு என்பதெல்லாம் வெறும் அறிவிப்பால் திருப்தி அடைந்து விடக் கூடியவை அல்ல; நடைமுறையில் எப்படி செயலுரு கொண்டு இனி நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவை ஆகும்!

முன் பதிவு இல்லாது பயணிக்கும் சாமானியர்கள் - அடித்தட்டு மக்கள் ஏழை - எளிய வெகு மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்களுக்கான வசதிகள் அப்பெட்டிகளை அதிகப்படுத்தியும், உள்ளே அமர வைக்கவும் ஏற்பாடுகள் எதையும் கூறவில்லையே! புளி மூட்டைகளைப் போல ஒருவர்மீது ஒருவர் அமர்ந்தல்லவா பயணிக்கும் அவர்களுக்கு விடிவு தேவை அல்லவா? தனியார்மயம் என்ற ஒட்டகம் மெதுவாக உள்ளே நுழைகிறது. பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களான கொக்கோ கோலா, கிங்பிஷர் போன்றவை வசமாகிட மெல்லக் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன!

இரயில் கட்டணங்கள் உயரவில்லை என்பதை ஊதி ஊதிப் பெரிதாகக் கூறுவதும் ஒரு ஏமாற்று வித்தையேயாகும்.

தமிழ் ஓவியா said...


உலகச் சந்தையில் டீசல் விலை பெரும் அளவுக்கு பாதிக்கும் கீழே - குறைந்து வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், நியாயமாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு மோடி அரசின் முதல் இரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவினால் கட்டண ஏற்றம் அறிவிக்கப்பட்டதே, அதுகூட குறைக்கப்படவில்லை. இதுவும் ஒருவகை திசை திருப்பலேயாகும். கட்டணக் குறைவு அல்லவா அறிவிப்பாக வந்திருக்க வேண்டும்? சரக்குக் கட்டணம் கூடுதலாக 10 சதவிகிதம் - வாங்குவோர் தலையில் விழுந்து அது இரயில்வேயினால் போடப்பட்ட மறைமுக வரியாக ஆகும் என்பது பலருக்குப் புரியாதா?

விலைவாசி ஏறும் அபாயமும் உண்டு. ஊடகங்களால் திட்டமிட்டு கொச்சைப்படுத்தப்பட்ட லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்து சாதனை செய்து, பயணிகளுக்கான கட்டணங்களை உயர்த்தாமலே வருமானத்தைப் பெருக்கி, பொது பட்ஜெட்டிற்கும், ரயில்வே பட்ஜெட்டிலிருந்து வாரி, வாரி வழங்கினாரே, அந்த ரகசியத்தை அவரிடமிருந்தாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுவது நல்லது.

அவரது காலம்தான் இரயில்வேயின் பொற்காலம்!

வேகங்களை அதிகப்படுத்துவது என்பது வரவேற்கத்தக்கதே!

ஒவ்வொரு இரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பு மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கலந்து - தேவைகளை அறிந்தும், அளந்தும் பட்ஜெட் தயாரித்தல் என்ற நடைமுறை மாற்றம் அவசியமாகும்! வேலை வாய்ப்புகள், வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் மிஞ்சுவதும் ஏமாற்றமே!


தமிழ் ஓவியா said...


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
27.2.2015

--------------------------

தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம் எப்படி?

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்

1. சென்னை சிறீபெரும்புதூர் (வழி பூந்தமல்லி)
2. ஆவடி- சிறீபெரும்புதூர்
3. இராமேசுவரம்-தனுஷ்கோடி
4. தஞ்சாவூர்-அரியலூர்-சென்னை எழும்பூர்
5. திண்டிவனம்-கடலூர் (வழி புதுச்சேரி)
6. மயிலாடுதுறை-திருக்கடையூர் - திருநள்ளாறு- காரைக்கால்
7. ஜோலார்பேட்டை-ஓசூர் (வழி கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம்-மேட்டூர்
9. ஈரோடு-சத்தியமங்கலம்
10. சத்தியமங்கலம்-பெங்களூரு
11. மொரப்பூர்-தருமபுரி (வழி முக்கனூர்)
12. மதுரை- காரைக்குடி (வழி திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம்-காட்பாடி
14. திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை
15. மதுரை-கோட்டயம்
16. அரக்கோணம்-திண்டிவனம் (வழி வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம்-ஆத்தூர் (வழி அரியலூர்)
18. திண்டுக்கல்-கூடலூர்
19. திண்டுக்கல்- குமுளி
20. காட்பாடி- சென்னை (வழி பூந்தமல்லி)
21. கும்பகோணம்- நாமக்கல்
22. மானாமதுரை- தூத்துக்குடி
23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி மன்னார்குடி)
24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை

பாதியில் கைவிடப்பட்டவை

1. சென்னை- கடலூர்
2. பழனி- ஈரோடு
3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை
4. திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. சிறீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி
6. மதுரை- போடி 7. திண்டுக்கல்- கோவை

இரு வழிப்பாதைப் பணி

1. திருச்சி- தஞ்சாவூர் 2. இருகூர்- போத்தனூர்

Read more: http://viduthalai.in/e-paper/96923.html#ixzz3SxEaeRx5

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று கூறியபோதும் தொடர்ந்து நடைபெற்றன

மக்களுக்காகத்தான் சட்டமே ஒழிய, சட்டத்துக்காக மக்கள் அல்ல!

ஈரோட்டில் சுதியா-தினேஷ்குமார் வாழ்க்கை இணை ஏற்பு விழாவில் தமிழர் தலைவர் உரை


ஈரோடு, பிப். 27- ஈரோட்டில் 22.2.2015 அன்று சுதியா-தினேஷ்குமார் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்திவைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை:

சுதியா-தினேஷ்குமார் வாழ்க்கை இணை ஏற்பு விழாவில் தலைமை தாங்குவதிலே, நடத்தி வைப்பதிலே நாங்கள் எல்லோருமே எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறோம். மணமகள் சுதியா பொறியியல் பட்டப் படிப்பை முடித்து, நல்ல பயிற்சி வேண்டும் என்று அவர்கள் படித்த துறையிலேயே பயிற்சி, அலுவலகப் பயிற்சி, தொழில்துறை பயிற்சி இவைகளை ஏற்க வேண்டும் என்று ஒரு முறையை ஏற்படுத்திய நேரத்தில் அவர்கள் பணி யாற்றிய அந்த இடம் எது என்று சொன்னால், திருமணத் துக்கு முன்னால்வரையிலே மிக அருமையாக, பொறுப்பாக பணியாற்றியவர் நம்முடைய அறிவுஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்களால் நிறுவப்பட்டு, பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் ஆசிரியர்களாக இருந்த இன் றைக்கும் நான் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை அலுவலகத்திலே அவர் பொறுப்பாகப் பணியாற்றினார்கள் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, நான் தலைமை தாங்கி சுதியாவினுடைய வாழ்க்கை இணைநல விழாவை நடத்திவைப்பது என்பதை விட, இந்தக் குடும்பத்துக்கு உரியவன் நான் என்ற முறை யிலே, வந்திருக்கிற எல்லோருக்கும், சம்பந்திகள் உள்பட அனைவரையும் தலைமையுரை ஆற்றுவதற்கு முன்பாக வரவேற்புரை ஆற்றவே நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன். காரணம் எங்கள் குடும்பத்து செல்வங்களிலே ஒன்றாக சுதியாவைக் கருதுகிறோம். மிகுந்த அடக்கமும், தொழில் திறமையும், நுண்ணறிவும், நல்ல அளவிற்கு எவரிடமும் பண்போடு பழகக்கூடிய பாங்கும் உடையவர் நம்முடைய பேத்தி சுதியா அவர்கள் ஆவார்கள். அந்த அளவிலே மிகுந்த பெருமையோடு அவர்கள் தனக்கு மணவிழா நிச்சயம் ஆகியிருக்கிறது என்று சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் அலுவலகத் தோழர்கள் எல்லோரிடமும் அதை குறிப்பிட்டார்கள். அந்த வகையிலே நான் வந்த உடனேகூட மணமகன் தினேஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி நீங்கள் அருமையான ஒரு செல்வத்தை, இப்போது நல்ல பெண்ணை நீங்கள் வாழ்க்கை இணையராகப் பெறுகிறீர்கள். அவ்வளவு பண்புள்ள ஒரு அற்புதமான பெண். அதை நாங்கள் நேரிலே அறிவோம் என்று அனுபவங்களை எடுத்துச்சொல்லி மகிழ்ச்சியோடு அவர்களிடத்திலே சொன்னேன். அதைவிட, நான் வரவேற்பு அளிப்பதற்கு அதுமட்டும் காரணமல்ல. இன்னமும் வந்திருக்கிற பலபேருக்கு இயக்கத் தோழர்கள் புதிதாக இணைந்தவர்களுக்கும் சேர்த்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சிற்றரசு, அதேபோல பூபதி அம்மையார் அவர்கள் இருவருடைய மணவிழா என்னு டைய தலைமையிலேதான் 27 ஆண்டுகளுக்குமுன்னால் இதே ஈரோட்டிலே நடைபெற்றது. அவர்களுடைய பிள்ளைக்கும் நான் திருமணம் செய்து வைக்கின்றேன். (கைதட்டல்)

இது மகிழ்ச்சியான ஒரு வாய்ப்பு. இத்தனை ஆண்டுக் காலம் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இந்தக் கொள்கை நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறது, இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் முக்கியமல்ல, அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், 27 ஆண்டு களுக்கு முன்னாலே இயக்கத்திலே போக்குவரத்துத் தொழிலாளர் அணியிலே முக்கியப் பொறுப்பில் இருந்தவர், இளைஞரணியில் இருந்தே துடிப்புமிகுந்த, அதே நேரத்திலே, நல்ல அளவில் கொள்கையிலே கட்டுப்பாடு மிகுந்தவர் எங்களுடைய சிற்றரசு அவர்கள்.


தமிழ் ஓவியா said...

தோழர் சிற்றரசின் கொள்கைத் தீவிரம்!

ஈரோட்டிலே இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக் குள்ளே மிகுந்த கொள்கை உள்ளம் படைத்தவர். அவருடைய அன்னையார் உள்பட எல்லோருமே அவருடைய கொள்கைக்கு உடன்பாடாகத் திகழ்ந்தவர்கள். அப்போது அந்த நேரத்திலேதான் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும் அவருடைய திருமணம் 2.3.1988இலே நடைபெற்றது. இன்றைக்கு அவருடைய மகள் திருமணம் என்னுடைய தலைமையிலே இதே ஈரோட்டிலேயே நடைபெறுகிறது. அவருடைய பேத்தியின், பேரனின் திருமணத்தையும்கூட நாங்கள் நடத்திவைப்போம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. (கைதட்டல்) காரணம் என்ன வென்றால், இப்போது அவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. மருத்துவத் தொழில் நுட்பம் எல்லோருக்கும் எல்லா வகையான வாய்ப்பு வசதிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அது முக்கிய மல்ல.

எத்தனை ஆண்டுக்காலம் 27 ஆண்டுகள் என்பதை வளர்ச்சியைக் காட்டுவதற்காக நான் இதைச் சொல்ல வில்லை. மாறாக நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். அந்தக் கொள்கையிலே அன்றைக்கு அவர் உறுதியாக இருந்தது போலவே, இன்றுவரையிலே அவர் மாறவில்லை. அதுதான் சிறப்பானது. எங்களுடைய தோழர்கள் எவ்வளவு கொள்கை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தந்தை பெரியாருக்குப் பிறகு

தந்தை பெரியாருக்குப் பிறகு, இந்த இயக்கம் இருக்குமா? என்று பலர் கேட்டார்கள். இயக்கம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்திய அளவிலே இந்தக்கொள்கை மிகப்பெரிய அளவில் பரவி இருக்கிறது. உலக அளவிலே தந்தை பெரியார் அவர்களுடைய பெருமையும், புகழும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

எனவே, இந்த மணவிழாவை நடத்திவைப்பதிலே நான் என்னுடைய கடமைகளிலே ஒன்று என்று கருதுகின்றேன். ஏதோ சம்பிரதாயத்துக்காக அழைத்தார்கள் என்பதல்ல. வரவேற்புரையிலே குறிப்பிட்டதைப்போல, நான் முக்கிய மாகக் குறிப்பிட வேண்டியது, எங்கள் இயக்கத் தோழர் என சிற்றரசு அவர்களை நான் எவ்வளவு பெருமையோடு, நினைத்தாலும், அவருக்கு சம்பந்தக்காரராக வந்திருக்கிற பல்லடம் சுப்பய்யன்-பூவாத்தாள் அம்மையார் அவர்களும் வெகுவாக எங்களால் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். காரணம் என்னவென்றால், சிற்றரசு_பூபதி அவர்கள் மகளுக்கு இப்படிப்பட்ட மணமுறையை நடத் துவது, தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்ட வடிவம் ஆக்கப் பட்ட இந்த சுயமரியாதைத் திருமண முறையிலே இங்கே இவர் முன்னாலே நின்று நடத்துவது என்பது அதிசயமல்ல. அவர்கள் இந்தக்கொள்கையிலிருந்து மாறாதவர்கள்.

ஆனால், இந்தக் கொள்கையை முழுதாக பின்பற்றாத வர்களாக இருந்தாலும், நல்ல அளவுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம், பண்புள்ளவர்கள் என்பதற்காகவும், நல்ல உறவுக் காரர்களாக ஆக வேண்டும் என்ற பெருந்தன்மையோடு சுப்பய்யன், அவருடைய அன்பு செல்வன் தினேஷ்குமார் அவர்கள் இந்தக் குடும்பத்தில் சம்பந்தம் ஏற்றிருக்கிறார்கள் அதற்காக இயக்கத்தின் சார்பிலே, அவர்கள் நம்பிக்கை மாறாதிருந்தாலும், இதை ஏற்கிறோம் என்று முன்வந்திருக் கிறார்களே, அதற்காக அவர்களை திராவிடர் கழகத்தின் சார்பில் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...

பெரியார் கொள்கை வளர்ச்சி

இந்தக் கொள்கை யாருக்கும் எதிரான கொள்கை அல்ல. மாறாக நம்மை வாழவைக்கக்கூடிய கொள்கை தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை யார் எந்த அமைப்பிலே இருந்தாலும், அவர்கள் பின்பற்றினால், பகுத்தறிவாளர்களாக மாறினால், சுயமரியாதைக்காரராக மாறினால் மிகப்பெரிய அளவிலே வளர்வார்கள். அதற்கு வேறு எங்கும் எடுத்துக்காட்டு அல்ல. இதோ இந்த மண விழாவுக்கு வாழ்த்துக் கூற வந்திருக்கிறாரே, நம்முடைய குடும்பத்தைச் சார்ந்த தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் அருமைச் சகோதரர் இளங்கோவன் அவர்கள். அவர் தந்தையார் அரசியலிலே பல்வேறு நிலையிலே இருந்தவர். இவர்களும் அரசியலிலே, தொடர்ந்து காங்கிரசிலே இருக்கிறார்கள், எங்கள் இயக்கத்தைச் சார்ந் தவர் அல்ல என்றாலும், தலைசிறந்த பகுத்தறிவாளர்கள் என்றைக்கும் பகுத்தறிவுக் கொள்கையை ஈ.வெ.கி.சம்பத் அவர்களும் சரி, இளங்கோவன் அவர்களும் சரி விட்டுக் கொடுத்தது கிடையாது. அவருடைய நெற்றி எப்போதும் சுத்தமாகவே இருக்கும். காரணம் மிகவும் சுத்தமானவர்கள். அதுதான் மிக முக்கியம். அந்த அடிப்படையிலே அவர்கள் தொடர்ந்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டைப்பற்றிக் கவலைப்படவில்லை. அது அவர்களுடைய வாய்ப்பைப் பொறுத்தது, எண்ணத்தைப் பொறுத்தது. வண்ணங்கள் முக்கியமல்ல, ஆனால், எண்ணங்கள்தான் மிக முக்கியம்.

அந்த அளவுக்கு இந்த கொள்கை வளர்ந்து கொண் டிருக்கிறது. காரணம் என்ன? தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். பெரியாருடைய வாழ்வியல் தத்துவத்தை யார் பின்பற்றினாலும், அவர்கள் வளருவார்கள்.

ஆடம்பரமாக வாழாதே, வரவுக்கு உட்பட்டு செலவு செய்துகொள். சிக்கனமாக வாழ வேண்டும். எளிமையாக வாழ வேண்டும். பகுத்தறிவு சிந்தனையோடு வாழ வேண்டும். எல்லோரும் படிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், ஒரு குடும்பத்தில் முதல் வாய்ப்பு என்றால் அதை பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். எல்லோரும் சமமாக நிற்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும். இதிலே யாருக்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியும்? எனவே, பெரியாருடைய தத்துவம் என்பது வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே என்று நினைத்துக்கொண்டு பலர் பயப்படுகிறார்கள். பெரியாருடைய தத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பு, பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பது தான் என நினைக்கிறார்கள். ஏன் அதை செய்ய வேண்டிய அவசியம் பெரியாருக்கு வந்தது? மனிதர்களை நேசித்தார். பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார். பிறவி யினாலே ஒருவர் உயர்ந்த ஜாதி, இன்னொருவன் தாழ்ந்த ஜாதி இருக்கக்கூடாது என நினைத்தார். ஆண், பெண் பேதம், ஆண் எஜமானன், பெண் அடிமை என்று இருக்கக் கூடாது என நினைத்தார். எனவேதான், இந்தக் கொள்கை யைப் பின்பற்றினால், அவர் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்தக் கருத்துடையவராக இருந்தாலும், வாழ்வியலிலே இதைப்பின்பற்றினால், சுய மரியாதை வாழ்வு சுக வாழ்வு என்று வாழ்ந்து காட்டியிருக் கிறார்கள். எனவேதான், பெரியாரின் சிக்கனம் இன்றைக்கு எப்படியெல்லாம் எல்லோருக்கும் பயன்பட்டிருக்கிறது!

பெரியாரின் சொத்துக்கள்

தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டிலே மிகப்பெரிய செல்வந்தராக இருந்ததுகுறித்து, இந்த ஊர் மக்களாகிய உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இலலை. அப்பேர்பட்டவர்கள் பொதுவாழ்க்கைக்கு வந்து எவ்வளவு எளிமையாக, மற்றவர்களுக்கு எவ்வளவு வழங்கக் கூடியவராக, தன்னுடைய அத்துணை செல்வங்களையும் அவர்கள் மக்களுக்கே ஆட்படுத்திவிட்டுப் போனார்கள். அவர்கள் அறக்கட்டளையை ஆக்கினார்கள். அதனுடைய விளைவு இன்றைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இன்றைக்குப் பல்வேறு கல்லூரிகள், பல்வேறு பகுத்தறிவு நிலையங்கள், பத்திரிகைகள், படிப்பகங்கள் இன்னும் இப்படி மனிதகுலத்துக்கு வேண்டிய அத்தனையும் பெரியார் அவர்கள் செய்து உலகளாவிய நிலையிலே அரசுகள் பெரியாரைப் பாராட்டுகின்றன.

அண்மையிலே அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, அவர்களுடைய சிலை வைப்பதிலே ஒரு பிரச்சினை ஏற்பட்டு, உயர்நீதிமன்றத்திலே ஒரு வழக்கு வந்தது. மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்திலே சில மாதங்களுக்கு முன்னாலே. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி எழுதினார். மகாத்மா காந்தி எப்படி இந்தத் தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்களோ, அதே தகுதி தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இன்னொருவர் உண்டு என்றால், அவர் தந்தை பெரியார் அவர்கள் என்று தீர்ப்பு எழுதினார்.

நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்!

தமிழ் ஓவியா said...


எந்த நீதிமன்றத்தைக் கண்டித்து பெரியார் அவர்கள் சொன்னார்களோ, அதே நீதிமன்றத்திலே, அதே உயர்நீதிமன்றத்திலே மிகப்பெரிய அளவிற்கு நீதிக்கும் நீதி சொல்வார் பெரியார் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்ன மாதிரி, அப்படிப்பட்ட அளவிற்கு பெரியார் கொள்கை வென்றிருக்கிறது. அதற்கு அடையாளம்தான் இங்கே இந்த செல்வங்களுடைய அற்புதமான இணைப்பு விழா.

சிற்றரசு அவர்களுடைய மணவிழா நடைபெற்ற போது, நானும், அருமைத் தோழியர் சுப்புலட்சுமி அவர்களும் அந்த மணவிழாவிலே கலந்து கொண்டோம். இந்த செய்தி அவருடைய மகள் சுதியாவுக்கு இனிமேல்தான் தெரியுமா என்று தெரியாது. அவருடைய மருமகனுக்கும் இது தெரிய வேண்டிய செய்தி. அன்றைக்கு மண்டபம் இவ்வளவு பெரிய மண்டபம் அல்ல. மணவிழா மேடை இவ்வளவு பெரிய மேடை அல்ல.

மணவிழா மேடையை குறிப்பிட்ட அளவில்தான் சதுரமாக, இரண்டு அடி அல்லது ஒன்றரை அடி உயரத் தில்தான் போட்டிருந்தார்கள். எளிமையாக நடத்தினார்கள். அவருடைய அம்மா அவர்கள் ஒருபக்கத்திலே நின்றார் கள். மற்றவர்கள் சம்பந்திகள் நின்றார்கள். நானும், அருமைத் தோழியர் சுப்புலட்சுமி அம்மையாரும் ஒருபக்கத்தில் இருந்தோம். அப்போது, திருமணத்தை நடத்திவைக்கிற நேரத் திலே என்ன ஆயிற்று என்று சொன்னால், அந்த மேடை சரியாகப்போடவில்லை என்பதால் சரிந்துவிட்டது. மேடை சரிந்த உடனே எல்லோருக்கும் ஒரு பதற்றம் ஏற்பட்டது.

தமிழ் ஓவியா said...

ஏனென்றால், நம் நாட்டில் திருமண விழாவை சின்ன சின்ன செய்திகளில்கூட அச்சத்தோடு பார்ப்பார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னாலும் எனக்கு மறக்கவே இல்லை. இன்னமும் நினைவில் இருக்கிறது. மேடை சரிந்த உடனே நம்முடைய சிற்றரசு அவர்கள் பக்கத்திலே மணமகள் உட் கார்ந்திருக்கிறார், நாங்கள் அந்தப்பக்கம் உட்கார்ந்திருந் தோம். உடனே, மணமகன் மணமகளைப் பற்றிக் கவலைப் படாமல் என்னைப்பிடித்து நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று என்னைப்பிடித்தார்கள்.

நான் பேசும்போது சொன்னேன். நீங்கள் யாரும் இதற்காக, இப்படி ஆகிவிட்டதே என்பதற்காக அபசகுனம் என்று பயப்படாதீர்கள். எனக்கு பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையார் அவர்கள் ராகு காலத்திலேயே திருமணத்தை செய்துவைத்தார்கள்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் நல்லநிலையில்தான் இருக்கிறோம். இது சிறு சம்பவம்தான். எங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை என்று நான் சொன்னேன். உடனே சுப்புலட்சுமி அம்மையார் பேசும்போது ஒன்றைச் சொன்னார், நான் சிற்றரசுவுக்கு சொல்கிறேன், என்னுடைய மணவிழாவின் போதுகூட விளக்கு அணைந்துவிட்டது, உடனே மற்றவர் கள் எல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்று இதற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நான் தெளிவாகச் சொன்னேன் என்று சொன்னார். அப்படி சரிந்த மேடைக் குப்பிறகு தன்னுடைய மகளின் திருமணத்துக்கு விரிந்த மேடையை அமைத்திருக்கிறார்கள். எனவேதான், இங்கே மூடநம்பிக்கைக்கு அவசியமில்லை. எங்கே மூடநம்பிக்கை இருக்கிறதோ, அங்கே தன்னம் பிக்கைக் குறையும். எங்கே தன்னம்பிக்கை இல்லையோ அங்கே மூடநம்பிக்கை ஆட்சிபுரியும். அதற்கெல்லாம் இடமில்லாமல் இங்கே இருக்கிறார்கள்.பொதுவாக இந்தப்பகுதியிலே யாரும் பார்ப்பனரை அழைத்துத் திருமணம் நடத்துகின்ற பழக்கம் கிடையாது.

பண்பாட்டுப் படையெடுப்பு

ஆனால், ஒரு பண்பாட்டுப்படையெடுப்பு உள்ளே வந்த காரணத்தால்தான் பிறகு செல்வந்தர்கள் பார்ப்பனர்களை அழைக்கக்கூடிய முறை புகுத்தப்பட்டது. அது இடையிலே வந்தது. தந்தை பெரியார் அவர்கள் இந்தப் பகுதியில் இருந்த திருமண முறையைப் பற்றியெல்லாம் விரிவாக சொல்லி யுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...


இங்கே மணமகன் தினேஷ்குமார், பொறியாளர், அதோடு மேலாண்மைத்துறையில் எம்பிஏ என்பது தலை சிறந்த படிப்பு. ஒரு காலத்திலே நம்முடைய சமுதாயத்தவர் எல்லாம் படிக்கும் வாய்ப்பு இல்லை. அதைவிட படிக்கக் கூடாத ஜாதி என்று வருணாசிரமதர்மத்திலே அதை மாற்றினார்கள். குலதர்மக் கல்வியை இராஜகோபாலாச் சாரியார் கொண்டு வந்ததும், தந்தைபெரியார் அதை எதிர்த்து ஒழித்தபிற்பாடு, கல்வி வள்ளல் காமராசரைப் பொறுப்பேற்கச் செய்தார். பச்சைத்தமிழர் காமராசர் பொறுப்பேற்று, குலக்கல்வித் திட்டத்தை அன்றைக்கு ஒழித்தார்.

அதனால்தான் இன்றைய செல்வங்களுக்கு கல்வி நீரோடை நாடெல்லாம் பரவியதனுடைய நோக்க மாக, மணமகனும் பொறியாளர், மணமகளும் பொறியாளர் என்று இரண்டு பேரும் பொருத்தமான அளவிலே, மண மக்களாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்க்கை இணைஏற்புவிழாவில் இணைகிறார்கள். அதை நடத்தி வைப்பதிலே மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின் றேன். சுயமரியாதைத் திருமணத்தில் தத்துவ ரீதியாக தந்தை பெரியார் அவர்கள்தான் தலைமை ஏற்கிறார்கள். காரணம் இந்த சுயமரியாதை மணமுறையை, எளிமையான மண முறையை உருவாக்கினார்கள். சட்டப்படி இது செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்கள். 1952, 53லே. ஆனால், அதைப் பற்றி எங்கள் தோழர்கள்கவலைப்படவில்லை. நாங்கள் எல்லாம் சுயமரியாதைத் திருமணத்தை, இந்த முறையில் செய்து கொண்டபோது, சட்டப்படி அது செல்லாத திருமணம்.

சட்டம் மக்களுக்காகவே தவிர, சட்டத்துக்காக மக்கள் அல்ல. பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கி 1967லே ஆட்சிக்கு வந்த நேரத்திலே, அவர்கள் சட்டமன்றத்திலே பிரகடனப்படுத்தினார்கள். இந்தச்சட்டம் மட்டுமல்ல, அமைச்சரவையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என்று சொல்லி, சுயமரியாதைத் திருமணத்தை பெரியார் விரும்பியபடி, பெரியாரிடம் அந்தச் சட்ட வடிவத்தை முன்னாலே அனுப்பி, பிறகு அதை அவர்கள் சிறப்பாக சட்டமாக்கினார்கள். எனவேதான், தலைமை வகிப்பவர் தத்துவ ரீதியாக தந்தை பெரியார் அவர்கள். முன்னிலை வகிப்பவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் என்று நான் எல்லாத் திருமணங்களுக்கும் சொல்வேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம்முடைய உரையில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/96936.html#ixzz3SxFbOLeN

தமிழ் ஓவியா said...

எந்த வகையிலும் வரவேற்க முடியாத ரயில்வே பட்ஜெட் தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, பிப்.27_ எந்த வகையிலும் வரவேற்க முடியாததாக ரயில்வே பட்ஜெட் உள்ளது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே பட் ஜெட் குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் கட்டண குறைப்பு இல்லை என்று தெரிந்து விட் டது. கடந்தாண்டு பா.ஜ.க. அரசின் ரயில்வே பட் ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் தாக்கல் செய்யப் படுவதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; கடந்த கால அரசின் முடிவு அது என்று கூறி அறிவித் தார்கள். அதற்குப் பிறகு டீசல் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் இந்த ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் குறைத்து அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டும் குறைக்கப்பட வில்லை.

கடந்த 8.2.2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேகூட, தமிழகத்திற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 24 ரயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியினை வருகின்ற ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் இந்தப் பட் ஜெட்டிலும் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறை தான் முதல் தடவையாக புதிய ரயில் களோ, கூடுதல் ரயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு_பழனி ரயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய ரயில்வே அமைச்சர் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற் பட்டிருப்பதால் புதிய ரயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள். புதிய திட்டங்களை அறி விக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/96927.html#ixzz3SxGEgVdB

தமிழ் ஓவியா said...

ரயில்வே பட்ஜெட்: புதிய ரயில்கள் இல்லை, சரக்குக் கட்டணம் 10 சதவிகிதம் வரை அதிகரிப்பு

புதுடில்லி, பிப்.27_ ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (26.2.2015) தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்களுக்கான அறிவிப்பு ஏதும் இடம் பெறவில்லை.

ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதேநேரத்தில், சரக்கு ரயில் கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

2015_2-016ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு, நாடாளு மன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் ரயில்வே பட்ஜெட் இதுவாகும்.

இது தொடர்பாக பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:

ரயில்களில் பயோ டாய்லெட்டுகளும், விமா னங்களில் உள்ளதுபோன்ற நவீன வசதிகள் கொண்ட கழிப்பறைகளும் உருவாக்கப்படும். ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு சக்கர நாற் காலிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நடைமுறைக்குப் பதிலாக 5 நிமிடங்களில் சுலபமாக பயணச்சீட்டு பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும்.

ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வழங்கும் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு சலுகை விலையில் இணையவழிப் பயணச்சீட்டுகள் ஆகிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும். நான்கு பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆராய்ச்சி மய்யங்கள் அமைக்கப்படும் என்றார் சுரேஷ் பிரபு.

புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லை

இது குறித்து அவர் கூறியதாவது:

அதிக ரயில்களை இயக்குவதற்கான திறன் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு முடிந்த தும் புதிய ரயில்களை விடுவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

பயணக் கட்டணங்களை நான் உயர்த்தவில்லை. பல்வேறு முன்முயற்சிகளின் மூலம் இந்திய ரயில் வேயில் பயணம் செய்வதை மகிழ்ச்சியான அனுபவ மாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் நிதி யாண்டில் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1,00,011 கோடி ஒதுக்கப்படும். இது கடந்த நிதியாண்டை விட 52 சதவீதம் அதிகமாகும். பயணிகள் கட்டண வருவாய் வளர்ச்சி விகிதம் 16.7 சதவீதமாக இருந்து வருகிறது.

இந்த நிதியாண்டில் பயணிகள் கட்டண வருவாய் இலக்கு ரூ.50,175 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கட்டண வருவாய் இலக்கு ரூ.1,21,423 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டுக்காக முன்பதிவு செய்யும்போதே ரயிலில் வழங்கப்படும் சாப்பாட்டுக்காக, இந்திய ரயில்வே உணவுக் கழகத்தின் (அய்ஆர்சிடிசி) இணைய தளத்தின் மூலம் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது என்றார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

சரக்குக் கட்டணங்கள் உயர்வு: ரயில்வே பட்ஜெட்டில், சரக்குக் கட்டணங்களில் சில மாறுதல்களை அமைச்சர் அறிவித்தார். அதன்படி சிமென்ட், நிலக்கரி, இரும்பு, எஃகு, உணவு தானியங் கள், பருப்பு வகைகள், உரம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான சரக்குக் கட்டணம் 10 சதவிகிததம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் சரக்குக் கட்டண உயர்வில் இருந்து உப்புக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சரக்குக் கட்டணங்களின் உயர்வால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து ஓராண்டு காலத்தில் எவ்வளவு நிதி திரட்டப்படும் என்று சுரேஷ் பிரபு தெரிவிக்கவில்லை. எனினும், சரக்குக் கட்டணங்களின் உயர்வால் ஓராண்டில் ரூ.4,000 கோடி கூடுதல் வரு வாய் கிடைக்கும் என அதிகாரிகள் மதிப்பிட் டுள்ளனர்.

ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதிபடத் தெரிவித்தார். எனினும், ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, ரயில் பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்பது போன் றவற்றில் தனியார் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதற்காக விரிவான முதலீட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய முதலீடு தேவை என்பதால் பல விதமான நிதி ஆதாரங்களை நாட வேண்டியிருக்கும் என்று சுரேஷ் பிரபு குறிப்பிட்டார். முக்கிய அறிவிப்புகள்

ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

ரயில் புறப்படுவது, வந்து சேருவது தொடர்பான தகவல்கள் எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மூலம் பயணிகளுக்கு அளிக்கப்படும்.

தமிழ் ஓவியா said...


பெண்களின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட சில ரயில்களிலும், புறநகர் ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

ரயில் பயணச்சீட்டுகளை 60 நாள்களுக்கு முன்பே பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளது. இதற்குப் பதிலாக, 120 நாள்களுக்கு முன்பே பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

400 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதிகள் அறிமுகம் செய்யப்படும்.

குறிப்பிட்ட ரயில்களில் கூடுதலாக பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை அளிக்க கட்டணமில்லாத தொலைப்பேசி எண் 182 அறிமுகம் செய்யப்படுகிறது.

பொதுவான ரயில் சேவை தொடர்பான விவரங் களுக்கு 138 என்ற தொலைப்பேசி எண்ணில் பயணி கள் தொடர்பு கொள்ளலாம். இது 24 மணிநேரமும் செயல்படும்.

ரயில், சாலைப் பயணங்களுக்கான ஒருங்கிணைந்த பயணச்சீட்டு சேவை மேலும் பல ரயில் நிலையங் களுக்கு விரிவுபடுத்தப்படும்.

பயணச்சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போதே உண வுக்கும் பதிவு செய்யும் வசதி மேலும் பல ரயில் களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்படும். இருப்புப் பாதைகளின் திறன் 10 சதவீதம் அதிகரிக்கப்படும். இருப்புப் பாதைகளின் நீளம் 1.38 லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும்.

9,420 கி.மீ. நீள இருப்புப் பாதைகளின் திறனை மேம்படுத்த ரூ.96,182 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

ரயில்வே திட்டங்களுக்கான முதலீடுகளைத் திரட்ட தனியார் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் உள் ளிட்டவற்றுடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து பணியாற்றும்.

ரயில் பயணக் கட்டணங்களை நிர்ணயிக்கவும், வழக்குகளைத் தீர்க்கவும் ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக்கப்படும்.

3,438 ரயில்வே கடவுப் பாதைகளை அகற்ற ரூ.6,750 கோடி ஒதுக்கப்படுகிறது. அவற்றுக்குப் பதிலாக, 970 சுரங்கப் பாலங்களும், சாலை மேம்பாலங்களும் அமைக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-3/96924.html#ixzz3SxGQlcoz

தமிழ் ஓவியா said...

யம திசை!

தென்திசையை யம (எமன்) திசை என்றும், வடதிசையை குபேர திசை என்றும் கூறுவது உண்டு. இது ஆரியர் வழக்கு. அவர்கள் வடக்கே வாழ்ந்தார்கள். ஆகவே, அதைக் குபேர திசை என்றார்கள். அவர்களை எதிர்த்த தமிழர் தெற்கே இருந்தார்கள். எனவே, தென் திசையை யம திசை என்றார்கள்! தென்திசையை அவாக் என்று ஆரியர் கூறினார்கள். வாக்கு என்றால் மொழி. அவாக் என்றால் மொழி அல்லாதது. அதாவது, அவர்களின் மொழி வழக்கில் இல்லாத திசை என்று பொருள். ஆனால், தமிழரோ தென் திசையைப் போற்றினார்கள் தென் என்றால், இனிமை என்று பொருள் கொண்டார்கள். தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்கிறார்கள். தங்கள் மொழியை தென்மொழி என்றார்கள். தங்கள் மன்னனை தென்னவன் என்று கூறி மகிழ்ந்தார்கள். அதே நேரம் வடதிசையைப் பழிக்கவில்லை! நன்றி: ராணி, 7.3.1982

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGt4wEm

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்



கீதை என்ற நூல் மகாபார தத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபார தத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ. கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்

ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGzeQRD

தமிழ் ஓவியா said...

மக்கள் ஒருமைப்பாடு பேசுவோரே! கடவுள் ஒருமைப்பாடு எங்கே!

அரியும் சிவனும் ஒண்ணு: இதை அறியாதவர் வாயில் மண்ணு! நெடுங்காலமாய் நம் நாட்டில் வழங்கி

வரும் பழமொழியிது. சிவனுக்கும் திருமாலுக் கும் உயர்வு - தாழ்வு-வேறுபாடு-முரண்பாடு கிடையவே கிடையா தென்று, மதக்குழப்பங்களுக்குள்ளான மக்கட்கு அறிவு கொளுத்தும் மொழியாக இப்படிச் செப்பினர் சூழ்ச்சி மதியினர் சிலர்.

ஆதிசங்கரர் மேற்கொண்ட சமய நடவடிக்கையான உண்மை இணைப்பில் சைவத்தையும், வைணவத்தையும் உள்ளடக்கவே செய்தார்.

அதன்பின் பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அறிவாசான் அய்யா அவர்கள் தெளிவாகக் கேட்டு வந்தார் மதத் தலைவர்கள் தங்கள் கடவுளர்களைப் பற்றி ஒருமைப்பாடான முடிவுக்கு முதலில் வரமுடியுமா? என்று,

அய்யா சொல் என்றைக்கும் பொய்யாதென்பதற்கு இதோ சான்று:

மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிறீரங்க பெருமாள் கோவிலின் தென்திசைக் கோபுரத்தை வளரச் செய்வதில் வெற்றி கண்ட அகோபில மடத்தின் 44ஆம் ஜீயர் சிறீ அழகிய சிங்கரிடம் கல்கி இதழ் சார்பில் கேட்கப்பட்ட 87ஆண்டு அகவையாகி விட்ட ஒளிவு மறைவில்லா கேள்வியொன்றுக்குச் சிங்கர் அளித்த விடை சமய மக்களுக்குச் சரியான அறைகூவல்!
கேள்வி: சிறீ சங்கராச்சார்யாள் இந்த கோபுரத்தில் மூன்றாம் கட்டத்துக்குப் பண உதவி செய்திருக்கிறார். பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவுகிறார்கள். இதுமாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் சைவ தலப் பணி களுக்கு ஏன் உதவுக்கூடாது?

விடை: நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன்... ஏன் என்று கேட்டா.... சிறீமத் நாராயணன் தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும், அதே போல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு, சிவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராயணன் எப்போதும் உள்ளவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். நாங்கள்ளாம் மோட்சத்துக்குப் போக டிக்கெட் வாங்கிண்டாச்சு. அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன் (கல்கி 11-4-82) மேற்கண்ட விடை நமக்கு விளக்குவதென்ன?

1. சங்கரனுக்கு நாராயணன் பாட்டன். 2. சிவன் தவம் புரிந்து தெய்வம் ஆனவன். 3 வைணவன் சிவன் கோவிலுக்குச் சென்றால் புத்தி கெட்டுவிடும். 4 வைண வனிடம் பணம் இருந்தால் கூட, சிவன் கோவிலுக்குத் தரக்கூடாது!

ஆக, இன்றைக்கும் கூட அரியும் சிவனும் ஒன்றாகி விட்டார்களா?

குழப்பம் குறையவில்லை; நீடிக்கிறது. மக்கள் ஒருமைப்பாடு பேசவந்து விட்ட மதக்காவற் காரர்கள் முதலில் கடவுள் ஒருமைப்பாடு காணட்டும்.
- பகுத்தறிவு

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxH6qrLx

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவலை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார். இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்

நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலை வாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி
இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடு மலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHNJEEu

தமிழ் ஓவியா said...

மதம் படுத்தும் பாடு

அமெரிக்க நாத்திக எழுத்தாளர் பங்களாதேஷில் கொல்லப்பட்ட கொடுமை!

பங்களாதேஷைச் சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்துவருபவருமான அவிஜித் ராய் என்பவர் நாத்திக, மதசார்பற்ற கருத்துகளை தம்முடைய இணையப் பக்கங்களில் (Blogger) பதிவிட்டு வந்துள்ளார்.

இசுலாமிய அடிப்படை மத வாதிகளின் தொடர்ச்சியான அச்சுறுத் தல்கள் இருந்தபோதிலும், அஞ்சா நெஞ்சினராக மதசார்பற்ற நிலையில் தம்முடைய கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளார்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவந்த புத்தகக் கண்காட்சிக்கு தம் மனைவி ரபீதா அகமத் போன்னாவுடன் சென்று வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, (26.2.2015) அடையாளம் தெரியாத இரண்டு காலிகளால் அவிஜித் ராய் மற்றும அவர் மனைவி ரபீதா ஆகிய இருவரும் பெரிய கத்திகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம்குறித்து உள்ளூர் காவல் துறைத் தலைமைப் பொறுப்பில் உள்ள சிராஜூல் இஸ்லாம் கூறும்போது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்துவிட்டார். இத்தாக்குதலில் அவர் மனைவியின் விரல் துண்டிக்கப்பட்டு, மிகவும் மோச மாக காயமடைந்துள்ளார் என்றார்.

ராய் பங்களாதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் ஆவார். அவர் மதசார்பற்ற கருத்து களைப் பதிவு செய்யும் வகையில் முக்தோ-_மோனா என்கிற பிளாக் பக்கத்தை உருவாக்கி தொடர்ச்சியாக மதசார்பற்ற கருத்துகளை எழுதி வந் துள்ளார். அவர் எழுதியுள்ள புகழ் பெற்ற நூல் பிஸ்வாசெர் வைரஸ் (நம் பிக்கை எனும் வைரஸ் கிருமி) உள் ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் மதசார்பற்ற எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர் கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இதேபோன்று 2013 ஆம் ஆண்டில் பங்களாதேசத்தில் நாத்திக கருத்தை எழுதிவந்த இணையப் பக்க எழுத் தாளர் அகமத் ரஜீப் ஹைடர் என்பவர் மோசமாகத் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.

அப்போது, மத அடிப்படை வாதிகளைக் கண்டித்து நாடுமுழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.

பங்களாதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதிகளால், இசுலாம் மதத்தின்மீது விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர்களை வதம் செய்வது என்கிற பெயரால் கொன்று வருகிறார்கள்.

ராய் மற்றும் அவர் மனைவிமீது தாக்குதல் நடத்தியவர்களை இன்னமும் பங்களாதேசக் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தாக்குதலுக்குப் பயன் படுத்திய பெரிய கத்தியைமட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு சிந்தனை


புல், பூண்டு - ஓரறிவு; நத்தை, சங்கு - ஈரறிவு; எறும்பு, கரையான் - மூவறிவு; ஈ, வண்டு - நான்கறிவு; விலங்குகள், பறவைகள் - அய்ந்தறிவு; மனிதன் மட்டுமே! - ஆறறிவு.

ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? - இந்த ஆறு வினாக்களும் ஆறறிவு படைத்த மனிதனின் அடையாளச் சின்னங்களாகும்.

அறிதல், உணர்தல், விரும்பிச் செய்தல் ஆகிய மூன்றும் அறிவின் கூறுபாடுகள். அறிவார்ந்த சிந்தனை, அறிவார்ந்த சொல்; அறிவார்ந்த செயல் மூன்றையும் உள்ளடக்கியவனே மனிதன். எனவே தான் மனிதன் ஓர் அறிவு ஜீவி என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் சிந்தனையின் கூர்மையே பகுத்தறிவு பகுத்தறிவு சிந்தனை வீரத்தின் சிறப்பு அம்சமாகும்.

தகவல்: வை. மாறன், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/96990.html#ixzz3T2OwNWW9

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடி யாது என்று கூறுவதுண்டோ?

குழந் தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண் டுள்ளனர். நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page3/96987.html#ixzz3T2PpGlQk

தமிழ் ஓவியா said...

கண்டுபிடிப்பு

நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார். கோபர்நிகஸ் கோள்களின் இயக்கத்தைக் கண்டுபிடித்தார். டார்வின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்தார். ஆல்வா எடிசன் மின் விளக்கைக் கண்டுபிடித்தார். இவற்றால் மனித குலம் வளர்ச்சி பெற்றது.

மனிதன் கடவுளைக் கண்டு பிடித்தானே - அதனால் என்ன பலன் ஏற்பட்டது? மடையனா வதற்கும், சோம்பேறியாவதற்கும் ஏற்பட்டதல் லாமல் வேறு என்னவாம்?

துத்தநாகம்

நாக்குக்கு ருசி தெரிய வில்லை என்பார்கள். என்ன காரணம் தெரியுமா? உடலில் துத்தநாகம் என்ற உப்புச் சத்துக் குறைவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. காய்ச்சலின் போது இந்தச் சத்து இழக்கப்படுவதால் வாய் கசப்பாக இருப்பதையும் உணர்கிறோம்.

Read more: http://viduthalai.in/page2/96984.html#ixzz3T2QQ7400

தமிழ் ஓவியா said...

போகாத ஊருக்கு வழிகாட்டலா?
இல்லாத சரஸ்வதி நதிக்கு பிஜேபி அரசின் பணம் விரயம்

சண்டிகர், பிப்.28_ சரஸ்வதி ஆறு இருப்ப தாகக் கற்பனையில் கூறப் பட்டு வரும் நிலையில், அந்த கற்பனையான சரசுவதி நதியை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கான முயற்சியில் மீண்டும் இரட்டிப்பான முயற்சியில் அரியானா மாநிலத்தின் வனத்துறை இறங்கி உள்ளதாம்.

யமுனா நகர் மாவட் டத்தில் சரஸ்வதி நதி உருவான இடம் எனக் கூறப்படும் இடமாகிய அதி பத்ரி பகுதியில் சரசுவதி உத்கம் ஸ்தல் எனும் பகுதியில் பூமிக்கு வெளியே சரசுவதி நதியை கொண்டு வரப் போகிறார்களாம்.
வனத்துறை அலுவலர் களைக் கொண்ட குழுவி னர் அதற்கான பணிகளை மேற்கொள்ள சரசுவதி உத்கம் ஸ்தல் பகுதிக்குப் பயணமாகி உள்ளனராம்.

அப்பகுதியில் தண்ணீர் போக்குவரத்துள்ள கால்வாய்ப்பகுதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கு வதன்மூலம் கற்பனையில் மட்டுமே கூறப்பட்டுவரும் சரசுவதி நதியின் தடத்தைக் கண்டறிந்து வெளியே கொண்டுவரப்பட உள்ள தாம். இந்துமதப் புராணங் களில் குறிப்பிடக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அதன்மூலமாக சரசுவதி யின் பாதையை அறிய முடியுமா? என்றும் ஆய்வு மேற்கொள்வார்களாம். இந்துப் புராணங்களில் சரசுவதி நதி அலகாபாத் வரை பாய்ந்துசென்று அதன் பின்னர், கங்கை மற்றும் யமுனை நதிகளு டன் திரிவேணி எனும் பகுதியில் இணைகிறதாம்.

சரஸ்வதி உத்கம் ஸ்தல் என்பது ஷிவாலிக் மலை யடிவாரத்தில் அதி பத்ரி பகுதியில் உருவாவதாக நம்பப்படுகிறதாம். இது தான் சரஸ்வதி நதியின் மூலமாம். இந்தத் தகவ லின்படி, அந்தப் பகுதி களில் அரியானா சுற்று லாத்துறையும் ஷிவாலிக் நதியின் பாதையை அறிய முற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

அரியானா மாநில வனத்துறை அலுவலகத் தின் சார்பில் ரந்தீர் குமார் என்பவர் கூறும்போது, இந்தப் பகுதியில் உள்ள நீரோட்டத்தைக் கொண்டு தண்ணீரை எடுத்து வாய்க் கால் அமைத்து, மேலும் இரண்டு, மூன்று குழாய்க் கிணறுகள் அமைத்தும் அதன்மூலம் பெறப்படும் தண்ணீரை அருகில் உள்ள பழமையான ஆற்றில் கலந்து விடப் போகி றோம் என்று கூறினார்.

இந்து மதக் கற்பனை யில் உள்ளபடி, சரஸ்வதி ஆறு என்பது பூமிக்கடி யில் இன்னமும் உள்ள நீரோட்டமாம். பூமிக்கடி யில் உள்ள நீரோட்டம் இருப்பதுகுறித்து செயற் கைக்கோள் படங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள் ளது என்றும். சரஸ்வதியின் ஆற்றோட்டப் பாதை யாகக் கருதப்படும் பகுதி யில் நீரோட்டம் உள்ள தாகக் கூறப்படுகிறது.

பூமிக்கடியில் உள்ள சரசுவதி ஆற்றை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கு பாஜக ஆளும் அரியானா அரசு டேராடூ னில் உள்ள ஆய்வகத்தின் உதவியை நாடி உள்ளது. புதிதாக தண்ணீர் கால் வாயை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதியில் மத ரீதியிலான சுற்று லாவை அதிகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று வனத்துறை யின் சார்பில் கூறப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97010.html#ixzz3T2R1t8fe

தமிழ் ஓவியா said...

முட்ட விடும் வேலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை நசுக்க பழங்குடியினர் ஆதரவைத் திரட்டப் போகிறார்களாம். வேறு ஒன்றுமில்லை; நக்சலைட்டுகளையும், மலைவாழ் மக்களையும் மோதவிடும் நரித் தந்திரம் இது. குஜராத் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி இந்த வேலையைத்தானே செய்தார்.

தினமணியின் பத்திரிகா தர்மம்!

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கைகள்: திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு என்று தினமணி வைத்திய நாதய்யர் தலைப்புப் போடுகிறார். சென்னை மாநகராட்சி மன்றத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்று மக்களை நம்பச் செய்யும் தகிடு தத்தம் இது. திமுக உறுப்பினர் வெளிநடப்புச் செய்தது வேறு காரணத்திற்காக என்பதுதான் உண்மை. திமுக என்றால் வைத்திகளுக்கு அப்படி ஒரு வெறுப்போ!

திடீர் சவார்க்கர் சிலை அகற்றம்

குமரி மாவட்டம் ஈத்தா மொழியில் நேற்று இந்து மகா சபை சார்பில் இந்து மகாசபை தலைவர் தா. பால சுப்பிரமணியம் தனது வீட்டில் சவார்க்கர் சிலை வைத்து கட்சி நிருவாகிகளுடன் மாலை அணிவித்துள்ளார்.

இதற்கு அரசு அனுமதிக்கவில்லை. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று அந்த சிலையை அகற்றினர். மேலும், இந்து மகா சபை நிர்வாகி தா. பாலசுப்பிரமணியம்மீது பல பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நல்ல சேதி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்துக்கான 300 ரூபாய் முன் பதிவு டிக்கெட் விற்பனையில் பெரும் பின்னடைவு!

Read more: http://viduthalai.in/e-paper/97013.html#ixzz3T2RAgvO5

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாராட்டு

செய்தி: பயங்கரவாதச் செயல்களில் படித்தவர் கள் ஈடுபடுவதற்கு அற நெறி இல்லாததே காரணம்.
- ராஜ்நாத்சிங்

மத்திய உள்துறை அமைச்சர் சிந்தனை: 1992இல் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் (அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட் பட) படித்திருந்தும் அறநெறி இல்லாதவர்கள் என்பதை ஒப்புக் கொண் டதற்குப் பாராட்டு!

மருந்து

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக அர்சீனியம் ஆல்பம் என்னும் ஹோமியோபதி மருந் தைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97015.html#ixzz3T2RJx732

தமிழ் ஓவியா said...

ஒழுக்க நெறி!

பள்ளிக்கூட அறைகளில் கேமரா, ரயில் பெட்டிகளில் கேமரா, கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் கேமரா - இது தான் இந்த நாட்டில் ஆன்மிகம் வளர்த்த ஒழுக்க நெறி!

Read more: http://viduthalai.in/e-paper/97016.html#ixzz3T2RRCCKX

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/97005.html#ixzz3T2RbBn4z

தமிழ் ஓவியா said...

கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்தில் சொற்பொழிவு

இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேச பக்திக் கிளர்ச்சிக்கும், ஜாதியக் கிளர்ச்சிக்கும், அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறுபட்டிருப்பதாகவும் இவ்விதக் கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு அதன் பேரால் சோம்பேறி வாழ்க்கைப் பிரியர்களாலும்,

பேராசைக் காரர்களாலும் நடத்தப்படும் போட்டி வியாபாரங்களே இன்று தேசியமாயும், ஜாதியுமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர, அவற்றுள் நாணயமோ, உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில்,

ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப் பிடித்து வெடித்துக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகிறதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்கு தகுந்த படி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும்,

இப்போதைய பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்பதற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார். குடிஅரசு - சொற்பொழிவு - 13.11.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SIyuFu

தமிழ் ஓவியா said...

பெரியார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்று மீண்டபின் அளித்த முக்கிய அறிக்கை

தோழர்களே, எனது மேல் நாட்டு சுற்றுப் பிரயாணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து 11. 11. 32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன். நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப்புற்றிருந்தாலும் சமீபத்தில் களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண் டிருக்கிறேன்.

என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார்செயில்ஸில் இந்தியாவுக்குக் கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்குச் சென்று இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2 - அல்லது 3 - மாதத்தில் இந்தியா திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார்.

அதற்குள் கூடிய சீக்கிரம் நமது இயக்கத் தோழர்கள் பலரைக் கூட்டி கலந்து பேசி ஒரு வேலை திட்டத்துடன் தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித்திருக்கிறேன்.

சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங் களையும், காட்சிகளையும், அதனால் தான் கொண்ட கருத்துக் களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்.

நான் இங்கு இல்லாத போது இயக்கத்தைத் தொடர்ந்து முன்னிலும் பல மடங்கு அதிகமாக எழுத்தாலும் உபன்யாசங்களாலும் மகாநாடுகள் கூட்டியும் மக்களுக்கு உண்மை உணர்ச்சிக்களை ஊட்டி தீவிரமாய் வேலை செய்து வந்த தோழர்கள் யாவருக்கும் நான் என் மனப் பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குடிஅரசு - குறிப்பு - 13.11.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SQb1dK

தமிழ் ஓவியா said...

தேசியத்தின் விளைவு

1914ஆம் வருஷம் முதல் 1918 வருஷம் வரை நடந்த உலக மகாயுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசியம், தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தின் சம்பந்தப்படும் படி செய்தது.

இந்த உலக மகாயுத் தத்தின் பயனாய் கொல்லப்பட்டவர்கள் 97,43,914 கிட்டத் தட்ட ஒரு கோடி பேர் காயம் பட்டவர்கள் 20,92,7,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போன வர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான தொகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இது நிற்க, இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர்பார்த்து தேசாபிமானத்தின் காரணமாக என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங்கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ஆம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து எண்பது கோடி ரூபாய் ஆகும்.

இதை தினக் கணக்காய் பிரித்தால் தினம் 1க்கு 20,00,000 பவுன் (இருபது லட்சம் பவுன்) அதாவது நாள் 1க்கு 270,00,000 இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப் படுகின்றது.

பிரிட்டிஷ் அரசாங்கமானது தனது அரசாட்சி வரும் படியில் உள்ள ஒவ்வொரு பவுன் வரும் படியிலும் 13 ஷில்லிங் யுத்த தேசாமானத்திற்காக. தேசத்தைக் காப்பாற்ற தேசிய கடனுக்கும் சேனை தளவாடங்களுக்காக அதாவது,

யுத்த கடனுக்கு வட்டி 0 - 9 - 0 யுத்த வீரருக்கு பென்ஷன் தற்காலம் ராணுவத்திற்கும் 0 - 1 - 3
தரைகப்பல் தளவாடத்திற்கும் 0 - 2 - 9 ஆக : 0 - 13 - 0

மேற்படி பதின்மூன்று ஷில்லிங்போக பாக்கி இருக்கும்

ஷில்லிங்கில் கல்விக்கு 0 - 1 - 5
உத்தியோக பென்ஷன் 0 - 1 - 3
தல ஸ்தாபன உதவி 0 - 1 - 2
வேலை இல்லதவர்களுக்கு பிச்சை 0 - 1 - 2

வீட்டு வசதி கோர்ட்டு வசதிவகையறாவுக்கு 0 - 0 - 8
போலீஸ் 0 - 0 - 6
விவசாயம் சுகாதாரம் 0 - 0 - 2
சில்லறை ஆக 0 - 0 - 3 ஆக : 0 - 7 - 0

ஆக பிரஜைகளின் நன்மைக்கு என்று ஏழு ஷில்லிங்கும் செலவு செய்யப்படுகிறது.

அதாவது மேற்கண்ட யுத்த கடன் வட்டிக்காக என்று செலவு செய்யப்படும் 9 ஷில்லிங்கும் முதலாளிமார்களுக்கே போய்ச்சேரும் தேசாபிமானத்திற்காக ஏற்பட்ட காரியத்தின் பயனாய் இன்று முதலாளிமார்கள் தேச அரசிரை வரும் படியில் கிட்டத் தட்ட சரிபகுதியை உலக முள்ளளவும் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

எனவே, பல கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து காயப்படுத்தி காணாமல் போகச் செய்ததும் அல்லாமல், மக்களிடத்தில் வாட்டிப் பிழிந்து வசூல் செய்யும் வரியிலும் நூற்றுக்கு 65 பாகத்தை தேசத்தைக் காப்பாற்ற என்னும் பேரால் இராணுவத்திற்கும், தள வாடங்களுக்கும் செலவு செய்தும்,

இந்த தேசத்தில் இன்று பத்து லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும், ஜீவனத்துக்கு தங்களுக்கும் தங்கள் பெண்டு பிள்ளைகளுக்கும் அரைவயிற்றுக்கு போதுமான கஞ்சிக்கூட மார்க்கமில்லாமலும் தவித்து வருகிறார்கள்.

இது பாமர ஜனங்களுடைய - ஏழை ஜனங்களுடைய தேசாபிமான முட்டாள் தனமா? அல்லது பணக்காரனுடைய படித்த கூட்டத்தாருடைய தேசாபிமான பித்தலாட்டமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த வாரம் தேசியக் கடன் என்பது என்ன? என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

குடிஅரசு - கட்டுரை - 11.12.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SYjvzi

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம்.

ஆனால் எந்த காங்கிரஸ் காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு.

அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ் காரத்தைப் பற்றிப் பிரயோசனமில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது?

ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SgpIx9

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் பொது பட்ஜெட்:

எதிர்பார்த்தவை தராமல் ஏழை, எளிய - நடுத்தர
மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது வேதனைக்குரியது

தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
மத்திய அரசின் இந்த பொது நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) எதிர்பார்த்தவற்றைத் தராமல், ஏழை, எளிய - நடுத்தர வர்க்க மக் களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது வேதனைக்குரியதாகும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி அவர்களது தலைமையில் பொறுப் பேற்று 9 மாதங்களான நிலையில், அவரது நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் மக்களவையில் இரண்டாம் முறை பட்ஜெட் நேற்று (28.2.2015) அறிவித்துள்ளார்.

முதல் முறை அறிவித்தது முழுமையான ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் அல்ல; இதுதான் முழு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் ஆகும்.

ரயில்வே துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அளித்த பட்ஜெட்டும் ஏழை, எளிய, மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே இருந்தது.

ஆனால், சில ஜிகினா வேலைகள் - அறிவிப்புகள் மூலம் - ஒப்பனை அதிகமாக செய்யப்பட்டதாக இருந்து இரயில்வே அமைச்சரால், தமிழ் நாட்டிற்குப் பட்டை நாமம் சாத்தும் வகையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட புதிய ரயில்வே திட்டங்கள் - பாதிக் கிணறு தாண்டியதைப் போல பாதியிலேயே கைவிடப்பட்ட திட்டங்களாகின! முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எடுக்காமலேயே கைவிடப் பட்டன!

ஏமாற்றப்பட்ட பட்ஜெட்

இந்த பொது பட்ஜெட்டிலும் எதிர்பார்த்தவை தராமல் ஏமாற்றப்பட்ட பட்ஜெட்டாகவே ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களுக்கு அமைந்துள்ளது வேதனைக்குரிய தாகும். டீசல், பெட்ரோல் விலை - உலகச் சந்தையில் 145 டாலர் விலை 45 டாலராக குறைந்துள்ள நிலையில் இங்கு (ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 3 ரூபாய்க்கு மேல்) ஏற்றப்பட்டுள்ளது!

விலைவாசிகள் மேலும் ஏறும் அபாயம்

மற்ற விலைவாசிகள் இதன் மூலம் மேலும் ஏறும் அபாயமும், டீசல் பம்ப் செட் மோட்டார் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போன்ற வர்களையும் வேறு பல தரப்பட்ட நடுத்தர மக்களையும் இது வெகுவாகப் பாதிக்கும் என்பது உறுதி.
சேவை வரிகளை மேலும் பல துறைகளுக்கு விரிவாக் கியதோடு, 2 விழுக்காடு கூடுதலாக தூக்கி உயர்த்தி யுள்ளதும் மேலே சொன்ன பல தரப்பினரையும் பாதிப்பது உறுதி.
வருமான வரி வரம்பு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாயிலிருந்து மேலும் உயர்த்தி அறிவிப்புகள் வரலாம் என்ற மக்களின் எதிர்பார்ப்பு - ஏமாற்றத்தையே தந்துள்ளது.
அதில் மாறுதல் - கூடுதல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. முதுகுடி மக்களுக்கு அளித்துள்ள சலுகை ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.

பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் ஆட்சி

அதே நேரத்தில் பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் ஆட்சிதான் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி என் பதை இந்த பட்ஜெட் உலகுக்கே பிரகடனப்படுத்தியுள்ளது!

பெரும் கம்பெனிகள் செலுத்தும் வரி 30 சதவிகிதத்தி லிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு அவர்களது மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றுள்ள பட்ஜெட்டாக உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்?

கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை அது சமுதாய முதலீடு என்ற தத்துவத்திற்கு ஆதாரமாகும். ஆனால், அது பெரும் அளவில் ஒதுக்கப்படவில்லை. 68,000 கோடி என்பதுதான் கல்வி வளர்ச்சி என்ற யானைப் பசிக்கு இது வெறும் சோளப் பொறிதான்!

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றும் தனியார் துறையில் அரசு போட்டிருந்த பங்குகளையும் விற்றும், பற்றாக்குறைகளை ஈடு கட்ட முயன்றுள்ளார்கள்! பொன் முட்டையிடும் வாத்து கதை தான் இது!

கருப்புப் பணம் பற்றி கடும் விதிகள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், செயல்பாட்டைப் பொறுத்துதான் அதன் வெற்றி - தோல்வி அமையக் கூடும்.

விரிவான விளக்கம் பிறகு.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

1.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97091.html#ixzz3T8I1Kr42

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம்: உதவிக்கரம் நீட்டிய நீதிமன்றம்

கொச்சி, மார்ச் 1_ வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொள்ள கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்.சசீந்திரன். இந்து மதத்தைச் சேர்ந்த இவரின் மகளும், அதே பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு இருதரப்பில் இருந்தும் அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் சுசீந்திரன் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் வி.கே.மோகனன், பி.டி.ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலர்கள் ஆஜராகி தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். அதையடுத்து, இருவரின் திருமணத்தையும் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இருவருக்கும் பாது காப்பு அளிக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

Read more: http://viduthalai.in/page-3/97083.html#ixzz3T8Ii6RSp

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பம் உண்டா?

பெண்ணாடம் வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் வினா விருத்தாசலம், மார்ச் 1_- திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பங்கள் தமிழ்நாட்டில் உண்டா? என பெண்ணாடத்தில் நடந்த திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வினா எழுப்பி, சிறப்புரையாற்றினார். பெண்ணாடம் வானொலித் திடல் அண்ணா அரங்கத்தில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு (22.2.2015) எழுச்சியுடன் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது, நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கு திராவிட இயக்கமே காரணம் என்றும், நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக இல்லாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் வரதராஜன் என்கிற ஆதிதிராவிடர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது யாரால்? பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றால் யாருடைய உழைப்பு? இந்த வரலாறு தமிழ்த் தேசியங்களுக்குத் தெரியாது.

இன்றும்கூட, நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் திராவிடர் இயக்கமல்லவா! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அல்லவா! எனவே, தமிழகத்தில் திராவிடர் இயக்கத் தால் பலன் பெறாத குடும்ப உண்டா எனக் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-8/97056.html#ixzz3T8Jxb9tF

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம்
நிதிஷ்குமார் குறிப்பிடுகிறார்

மத்திய வரி வருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான பங்கீட்டு தொகையை மிகக்குறைந்த அளவில் பெறும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. கடந்த 28-இல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளு மன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில், மாநிலங் களுக்கு வழங்கப்படும் பங்குத்தொகையை 10 சதவீதம் உயர்த்துவதாக ஜெட்லி அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.

ஆனால், மாநிலங்களுக்கான நிதிப் பங்களிப்பை உயர்த்தியபோதும், நிதியைப்பெறும் வளர்ச்சி வீதத்தில், தழிழகம், தெலுங் கானாவைத் தொடர்ந்து, பீகார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்ப தாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது: மத்திய வரிவருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட் டில் 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட மத்திய வரி வருவாய் பங்கீட்டை பெறுவதில் தமிழகத் திற்கு 25.7 சதவீத வளர்ச்சி மட்டுமே கிடைக்கும். இந்த மாநிலம், நாட்டிலேயே மிகக்குறைந்த சதவீத பங்கீட்டு உயர்வைப்பெறும். இதற்கு அடுத்தப்படியாக தெலுங் கானா, 30.9 சதவீதமும், பீகார் 37.3 சதவீத வளர்ச்சியும் பெறும். இந்த மூன்று மாநிலங்களும், நாட்டிலேயே மிகக்குறைந்த வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலம் 93.9 சதவீதமும், ஜம்மு - காஷ்மீர் 80.6 சதவீதமும் இதற்கு அடுத்தப்படியாக மத்தியபிரதேசம் 64.7, அரியானா 60.3, குஜராத், 57.7 உள்ளிட்ட மாநிலங்களும் அதிகப்படியான மத்திய வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன. மத்திய அரசின் இந்த போக்கு ஓட்டு வங்கி அரசியலை வெளிப்படுத்து கிறது.

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக சில முக்கிய முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளேன். விரை வில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97182.html#ixzz3TK8m2Aiy

தமிழ் ஓவியா said...

அய்யோ ஜோதிடமா? அலறும் ராஜபக்சே!

கொழும்பு, மார்ச் 3_ எதை செய்தாலும் ஜோதிடரை கேட்டு செய்த இலங்கை முன்னாள் ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவ தில்லை' என்று கூறியுள்ளார். உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே என்று ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால் ஜோதிடத்தால் கெட்டது யார் என்றால் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே என்று யாரைக் கேட்டாலும் சரியாகச் சொல்வார்கள்.

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்தது வரை ஜோதிடரை கேட்டு காய் நகர்த்திய ராஜபக்சேவோ, இப் போது ஜோதிடம் என்றாலே அலறுகிறார். பாகிஸ்தான் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் தன்னை கைவிட்டதால்தான் பலவிதமான சர்வ தேச தாக்கங்களுக்குள்ளாகிய தாக குறிப்பிட் டுள்ளார். இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர் களா என்ற கேள்விக்கு பதில் அளித் துள்ள ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவதில்லை எனக் கூறியுள்ளார். ஆட்சி முடிய 2 ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர் களின் சொல்லைக் கேட்டு ஆட்சியை கலைத்த ராஜபக்சே, அதிபர் தேர்தலில் படுதேல்வியை சந்தித்தார் இப்போதோ வழக்குகளைச் சந்திக்க இருக்கிறார் ராஜபக்சே. (ஒன் இண்டியா)

Read more: http://viduthalai.in/e-paper/97191.html#ixzz3TK8vB88W

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாதுகாப்பு

செய்தி: இந்தியாவில்தான் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
- யோகி ஆதித்யநாத் எம்.பி., (பிஜேபி)

சிந்தனை: அதனைக் கெடுக்கத்தானே இவர் வன் முறையைத் தூண்டும் வார்த் தைகளை அவ்வப்போது உதிர்த்துக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97185.html#ixzz3TK9Dszud

தமிழ் ஓவியா said...

தலை தப்பாது!

உடலுறுப்புகள் மாற்றம் என்ற மருத்துவ விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வரு கிறது. இதுவரை தலை மாற்று அறுவை சிகிச்சை வரவில்லை. 2017இல் தலை மாற்று அறுவைச் சிகிச்சையும் நடை முறைக்கு வருமாம். அன் றைக்கே பிர்மாவின் தலையைக் கிள்ளினார் சிவன் என்று கூறி, தலை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட முதல் மருத்துவர் எங்கள் சிவன் தான் என்று பிரதமர் சொல்லு வாரோ என்னவோ!

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9axpBY

தமிழ் ஓவியா said...

மீண்டும் டால்மியா

இந்திய கிரிக்கெட் கட்டுப் பாடு வாரியத்தில் (பிசிசிஅய்) தலைவராக ஜக்மோகன் டால்மியா 10 ஆண்டுகளுக் குப்பின் மீண்டும் போட்டி யின்றித் தேர்வு செய்யப்பட் டுள்ளார். அது சரி அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப் பட்டதே, அது என்னவாயிற் றாம்?

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9qFTrU

தமிழ் ஓவியா said...

அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?
(குடிஅரசு, 12.5.1935)

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம் எப்படி?

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்

1. சென்னை சிறீபெரும்புதூர் (வழி பூவிருந்தவல்லி)
2. ஆவடி- சிறீபெரும்புதூர்
3. இராமேசுவரம்-தனுஷ்கோடி
4. தஞ்சாவூர்-அரியலூர்-சென்னை எழும்பூர்
5. திண்டிவனம்-கடலூர் (வழி புதுச்சேரி)
6. மயிலாடுதுறை-திருக்கடையூர் - திருநள்ளாறு- காரைக்கால்
7. ஜோலார்பேட்டை-ஓசூர் (வழி கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம்-மேட்டூர்
9. ஈரோடு-சத்தியமங்கலம்
10. சத்தியமங்கலம்-பெங்களூரு
11. மொரப்பூர்-தருமபுரி (வழி முக்கனூர்)
12. மதுரை- காரைக்குடி (வழி திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம்-காட்பாடி
14. திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை
15. மதுரை-கோட்டயம்
16. அரக்கோணம்-திண்டிவனம் (வழி வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம்-ஆத்தூர் (வழி அரியலூர்)
18. திண்டுக்கல்-கூடலூர்
19. திண்டுக்கல்- குமுளி
20. காட்பாடி- சென்னை (வழி பூவிருந்தவல்லி)
21. கும்பகோணம்- நாமக்கல்
22. மானாமதுரை- தூத்துக்குடி
23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி மன்னார்குடி)
24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை

பாதியில் கைவிடப்பட்டவை

1. சென்னை- கடலூர்
2. பழனி- ஈரோடு
3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை
4. திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. சிறீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி
6. மதுரை- போடி 7. திண்டுக்கல்- கோவை

இரு வழிப்பாதைப் பணி

1. திருச்சி- தஞ்சாவூர்
2. இருகூர்- போத்தனூர்

Read more: http://viduthalai.in/page-2/97160.html#ixzz3TKAecBIT