Search This Blog

10.2.15

ஜாதீயம் - பார்ப்பனீயம் இவற்றின் முதுகெலும்பை உடைத்தவர் பெரியார்

ஜாதீயம் - பார்ப்பனீயம் இவற்றின் முதுகெலும்பை உடைத்தவர் பெரியார்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவு

 
சென்னை, பிப். 10- ஜாதீயம் - பார்ப்பனீயம் இவற்றின் முது கெலும்பை உடைத்தவர் பெரியார் தான் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


5.12.2014 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வரலாற்று பரிமாணங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:


மிகத் தேவையான காலகட்டத்தில், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு இவை மிகவும் அதிகமாகத் தேவைப் படுகின்ற ஒரு காலகட்டத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற, சிறீ நாராயணகுரு  அவர்களுடைய பெயரால் அந்தச் சமூகப் புரட்சியாளர் செய்த அமைதிப் புரட்சியினுடைய விளைவாக, ஏற்பட்ட மிகப்பெரிய சமூக மாற்றம், நம்முடைய இன்றைய தலைமுறையினருக்கும், இனி வரக்கூடிய தலைமுறை யினருக்கும் கொண்டு செல்லப்படவேண்டிய அற்புதமான வரலாற்று செய்தியாகும் என்பதை மனதிற்கொண்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சென்னை பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற நாராயண குரு அறக்கட்டளையின் கருத்தரங்கத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய  வரவேற்புரையாற்றிய, இந்தத் துறையின் பொறுப்பாளர் அருமை அய்யா டாக்டர் எஸ்.குப்புசாமி அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அருமைப் பேராசிரியை திருமதி பானுமதி ரங்கராஜன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில், நமக்கு முன்பு, ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தியும், இந்த அறக்கட்டளையில், பயனுள்ள கருத்தரங் கமாக இக்கருத்தரங்கம் அமையவேண்டும் என்பதை வலி யுறுத்தியும், சிறந்த வரலாற்றுப் பேராசிரியராக விவேகானந்தா கல்லூரியில் இருந்து பணி ஓய்வு பெற்றவரும், திராவிட வரலாற்று ஆராய்ச்சி மய்யத்தினுடைய பொறுப்பாளர்களில் ஒருவருமான அன்பிற்குரிய அருமை நண்பர், பேராசிரியர் கருணானந்தம் அவர்களே, இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரை யாற்றிய அருமை நண்பர்கள் அய்யா டாக்டர் குப்புசாமி அவர் களே, மற்றும் இவ்வளவு சிறப்பான ஒரு அறக்கட்டளையை நிறுவி, அருமையான கருத்துகள், நாராயண குரு அவர்களு டைய பெயரால், அவருடைய சிந்தனைகளை ஒவ்வொரு முறையும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆண்டு தோறும் நினைவூட்டுவதற்கு, சென்னை பல்கலைக் கழகத்தில் ஒரு அருமையான ஏற்பாட்டினை செய்து, இந்த அறக் கட்டளையை நிறுவிய பாராட்டுதலுக்குரிய அய்யா வி.வி.வாசவன் அவர்களே, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்றியுரை கூறவிருக்கின்ற டாக்டர் எஸ்.எஸ்.சுந்தரம் அவர் களே, எதிரே அமர்ந்திருக்கக்கூடிய அறிஞர் பெருமக்களே, இந்தத் துறையில், கேரளாவில் அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய, முதன்மைச் செயலாளர்களில் ஒருவராக சிறப்பாகப் பணியாற்றிய, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யத்திலும், பழங்குடியினர் ஆதிதிராவிடர் நல ஆணையத்திலும் பொறுப்பு வகித்து, லேண்ட் ட்ரையினர் கமிஷனர் ஆப் கேரளா என்கிற அந்தப் பொறுப்பிலும் இருந்து, பிறகு ஓய்வு பெற்று, நாராயண குரு, ஜோதி பாபூலே, குமரன் ஆசான், பண்டை கருப்பன் ஆகியோர்களைப் பற்றியும் 12 புத்தகங் களை எழுதியுள்ள அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அய்யா ஜே.சுதாகரன் அய்.ஏ.எஸ். அவர்களே, மற்றும் இந்த நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்டிருக்கக்கூடிய அருமை மாண வத் தோழர்களே, தோழியர்களே, சான்றோர் பெருமக்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பல்கலைக் கழகங்களில் கருத்தரங்குகள் சடங்கு, சம்பிரதாயங்கள் போல ஆகிவிட்டன!


இங்கே விளக்கவுரையாற்றிய பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் சொன்னார்கள், நம் நாட்டில் ஏற்படுகிற ஒரு போக் கைக் குறிப்பிடுவதைப்போல, கோடிட்டுக் காட்டுவதைப்போல சொன்னார்கள். கருத்தரங்குகள், பல்கலைக் கழகங்களில் நடைபெறுவது, இப்பொழுது அதுகூட ஒரு சடங்கு, சம்பிர தாயங்கள் போல ஆகிவிட்டது. இந்தக் கருத்தரங்கிற்கு ஏராளமானோர் வந்திருக்கிறார்கள். பொதுவாக, அறக்கட்டளை சொற்பொழிவிற்கு எவ்வளவு பேர் வருவார்கள். அது ஒரு சடங்கு, ஆண்டு தவறாமல் நடத்திடவேண்டுமே என்பதற்காக, சில நேரங்களில் ஓராண்டு தவறிகூட, அடுத்தாண்டு நடத்துவ தென்பதெல்லாம், பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்கிற முறையில், எனக்கே கூட எங்களுடைய பல்கலைக் கழகத்தில் உடனடியாக நடத்திடவேண்டும் என்று நான் எங்கள் பல் கலைக் கழகத்தின் துணைவேந்தரிடம் வலியுறுத்துவது உண்டு.


ஆகவே, இந்த அற்புதமான ஒரு பணியை, மிகச் சிறப்பாக செய்ததினுடைய நோக்கம் என்னவென்றால், பலரை நாம் புரட்சிவாதிகளாகக் காட்டுகின்ற நேரத்தில், அவருடைய அரிய புரட்சிகரமான கருத்துகள், உண்மையிலேயே இளைஞர் களுக்குப் போய்ச் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், அவர்களுடைய பிம்பங்களை நாம் வழிபடுவதற்குரியதாக ஆக்குகிறோமே தவிர, பின்பற்றப்படுவதற்குரியதாக ஆக்குவதில்லை.


சிறந்த கருத்தரங்கமாக இன்றைக்கு அமைந்திருக்கிறது


தலைவர்கள் என்று சொல்லும்பொழுது, அவர்கள் வழிபடு வதற்காக அல்ல; சமூகப் புரட்சியாளர்கள் என்று சொல்லும் பொழுது, அவர்கள் பின்பற்றப்படுவதற்காக; அவர்கள் எந்த சமுதாய சமத்துவத்தை உருவாக்கவேண்டும் என்று விரும் பினார்களோ, எந்த மாற்றத்தை ஏற்படுத்தி, அதன்மூலமாக மேடுபள்ளம் அற்ற ஒரு சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாமும், அனைவருக்கும் அனைத்தும் என்று பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது சொன்னார் களோ, அதே தத்துவத்தின் அடிப்படையில், அனைவருக்கும் கிடைப்பதற்காகப் பாடுபட்டவர்கள் என்றால், அந்தக் கருத்துகளை, இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும்; முதலில் தெரிந்து கொள்வது; இரண்டாவது புரிந்துகொள்வது. ஆகவே, அந்த வகையில், இந்தக் கருத்தரங்கம் ஒரு நல்ல சிறந்த கருத் தரங்கமாக இன்றைக்கு அமைந்திருக்கிறது.


நெல்சன் மண்டேலா அவர்களுடைய நினைவு நாள் இன்று!

எதிர்பாராமல் நாம் நிகழ்ச்சி நடத்துகின்ற இந்த தேதி கூட, மிகப்பெரிய விடுதலை வீரரான நெல்சன் மண்டேலா அவர்களுடைய நினைவு நாளாகும். சமூகநீதியில், உலகளாவிய நிலையில், மனித உரிமைப் போரில், மறக்க முடியாத, உலகத் தவர்கள் அத்தனை பேரின் உள்ளத்திலும் உள்ளவர். அவரு டைய நினைவு நாள் இன்றாகும். மிகவும் பொருத்தமானது.


மனித உரிமைப்பற்றி பேசுகிறோம்; இந்த மனித உரிமைப் போரை, தன் கண்முன்னாலே தொடங்கி, அதற்காக 27 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில், ரோபன் தீவில் இருந்து; அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், உறுதி குலையாமல், தொடர்ந்து தன்னுடைய லட்சியத்தில் வெற்றி பெற்று, யார் இவரை அடக்குமுறைக்கு ஆளாக்கினார்களோ, அவர்களே இவருக்கு கைகொடுத்து வரவேற்று, சிம்மாசனத்தில் உட்காரக் கூடிய அளவிற்கு, அந்தக் கருத்துக்கு ஒரு பெரிய புரட்சியா ளராக, வெற்றி வீரராகத் திகழ்ந்தவர்; மனித உரிமைக் காவல ராக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றவர் நெல் சன் மண்டேலா அவர்கள். அவருடைய நினைவு நாள் இன்று.


அம்பேத்கர் நினைவு நாள்

நாளைய தினம், நம்முடைய சமூகப் புரட்சியாளராக இருந்து, மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரராகி, தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்கள், எந்த அளவிற்குப் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என்று சொல்வதற்கு, இதோ வைக்கம் சத்தியாக்கிரகம் எனக்கும் பயன்பட்டிருக்கிறது என்று சொல்லி, ஒரு வரலாற்றை உருவாக்கி, மிகப்பெரிய அளவில், மனித உரிமைப் போரில், எல்லையற்று தன்னுடைய கருத்துச் சுதந்திரத்தை எந்தக் காரணத்திற்காகவும் இழக்காமல், பதவிகள்கூட தன்னுடைய கொள்கைக்கு ஒத்துப்போனால் ஏற்போமே தவிர, இல்லையானால், எனக்கு அந்தப் பதவி துச்சமாக என்று காட்டி, பதவியை விட்டு வெளியே வந்து, ஒரு புரட்சியாளராக என்றைக்கும் திகழ்ந்து, வரலாற்றை உருவாக்கிய வராக ஜோதி பாபுலே அவர்களுக்குப் பின்னாலே திகழ்ந்தவர் பாபா சாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களா வார்கள். அவருடைய நினைவு நாள்தான் நாளை (டிச.6).


இந்திய வரலாற்றில் முதல் மனித உரிமைப் போராட்டம்


திட்டமிட்டு, சில தீய சக்திகள் அவருடைய நினைவு நாளை நினைவு நாளாக நினைக்கக்கூடாது, பாபர் மசூதி இடித்த நாளாக ஆக்கிவிடவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இல்லாத பாலத்தை இருப்பதாகச் சொல்லி, இருக்கின்ற மசூதியை இடித்துத் தள்ளி, மிகப்பெரிய அளவிற்கு நாட்டில் ஒரு ரத்த ஆறு  ஓடும்படியாகச் செய்த சூழ்நிலை களையெல்லாம் நாம் பார்த்தோம். எனவே, அந்த நாள்தான் நாளைக்கு. எனவே, இன்றும், நாளையும் மிகப்பெரிய அளவிற்கு, இரண்டு மிகப்பெரிய சமூகப் புரட்சியாளர்களின் நினைவு நாள்களாகும்.


இன்றைக்கு நாம், நாராயண குரு அவர்களுடைய ஒரு அற்புதமான, ஒரு சிறப்பான அவர்களுடைய பெயரால் அமைந்திருக்கின்ற அறக்கட்டளையில், இந்தியாவினுடைய வரலாற்றில், நடைபெற்ற முதல் சமூகநீதி போராட்டம்; முதல் மனித உரிமை போராட்டம்; வரலாற்று ஆசிரியர்களால் இதுவரை திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு போராட்டம் என்ற அளவில் சொல்லவேண்டுமானால், அதுதான் தந்தை பெரியார் அவர்கள் முன்னின்று நடத்தி, வைக்கம் வீரர் என்றே அந்த ஊரினுடைய பெயரும் தலைவருக்கு அமைந்தது என்று சொன்னால், அது தந்தை பெரியார் அவர்களுக்குத்தான் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்ற அந்த வைக்கம். அந்த வைக்கத்தைப்பற்றி இன்றைக்கு பேச அழைத்திருக்கிறீர்கள். அதுவும், பல்கலைக் கழகத்தினுடைய வரலாற்றுத் துறையில் அதைப் பேசுவது, அதைப்பற்றி மாலையில் விவாதிப்பது என்பதெல்லாம் ஒரு அரிய வாய்ப்பாகும்.


வெளிநாட்டினரால் ஜாதியை புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை


இதுவரையில், ஒரு கட்டத்தில் வைக்கத்தில் பெரியாருடைய பங்களிப்பு மறைக்கப்பட்டது. ஏன், வைக்கம் போராட்டமே மறைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள், Passing Reference என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவர்களும் சென்றார்கள் என்று சொல்வதைப்போல, They also run என்று சொல்வதைப்போல, அவர்களும் ஓடினார்கள் என்று சொல் வதைப்போல, இவர்களும் செய்தார்கள் என்று சொல்லுவ தென்ற ஒரு நிலையில், அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் செய்தனர்.
இந்தியாவில், மனித உரிமைப் போர் என்று சொன்னால், இதற்கு ஈடாக, இணையாக, 1924 ஆம் ஆண்டு காலகட்டத்தில், என்னைப் போன்றவர்கள், உங்களில் பலர் அப்பொழுது பிறக்காதவர்கள். இங்கே இருப்பவர்களில் ஒரு சிலர் பிறந்திருக்கலாம்; ஆனால், 1924 ஆம் ஆண்டில், அவர்கள் தொடங்கிய போராட்டத்தைப்பற்றி நினைக்கும் நேரத்தில், நான் அண்மையில்கூட, பெரியார் அவர்களைப்பற்றி உரையாற்றும்பொழுது, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில், ஜாதி, சமூகம், ஜாதியத்தைப்பற்றி எடுத்துச் சொல்லவேண்டும் என்று முனைந்தபொழுது, பல வெளிநாட்டுக்காரர்கள் குழுமியிருக்கக்கூடிய, பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் குழுமியிருக்கின்ற அந்தக் கூட்டத்தில், ஜாதி, தீண்டாமையை விளக்குவது என்பதும், அவர்களுக்குப் புரிய வைப்பது என்பது, அதுவே இப்பொழுது கடினமாக இருக்கிறது. ஏனென்றால், அந்த நாட்டில் பிறவிக் கொடுமை என்பது இல்லை; நம் நாட்டில் மட்டும்தான் உண்டு. அவர்களால்விளங்கிக் கொள்வதற்கே முடியவில்லை

நெருங்காமை, பார்க்காமை, தொடாமை

இதுவரையில், நம் நாட்டில் Untouchability தொடாமை என்பதைப்பற்றித்தான் ஒரு வார்த்தை இருக்கிறது. ஆனால், வைக்கம் போராட்டம் ஏன் அவசியப்பட்டது? ஏன் தேவைப்பட்டது? ஏன்? எதற்காக? அது உருவாகியது; இதுவரையில் மனித குலம் அவமானத்தால் தலைகுனிய வேண்டிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு தேசிய அவமானம். நெருங்காமை. அதென்ன மனிதர்களுக்குள்ளேயே நெருங் காமை. காட்டுமிருகங்களிடம் நெருங்காமை தேவைதான்.  அப்படி இல்லாமல், டில்லியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் நெருங்கியவருக்கு என்ன நேர்ந்தது? என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும்.  காட்டுமிருங்களிடம் நெருங்காமை என்று சொல்வது பாதுகாப்பு காரணமாகத்தான். ஆனால், ஆறறிவு உள்ள மனிதர்கள் என்று சொல்லும்பொழுது, நெருங்காமை, பார்க்காமை, தொடாமை இவைகளெல்லாம்.


Untouchability  என்பது மட்டுமல்ல, Unseeability, Possibility என்று வந்தால், இதைவிட ஒரு ஆதிகால காட்டுமிராண்டி சமுதாயம், வேறு உண்டா? இன்றைக்கும் அவமானப்படக் கூடிய அவலநிலை தொடருகிறதே, இதைவிட வேதனையான ஒரு சூழல் உலகத்தில் எங்காவது தேடிப்பார்த்தால்கூட இருக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.


மண்டேலா அவர்கள் பாடுபட்டதுகூட, கருப்பர்கள் - வெள்ளையர்கள் என்ற நிறபேதம்தான்.


ஆனால், ஒரு கருப்பன், வெள்ளைக்காரனிடத்தில் நெருங்கி உட்கார்ந்தான்; அதற்காக வெள்ளைக்காரன் குளித்துவிட்டு வந்தான் என்ற செய்தி கிடையாது.
நிற பேதத்தைவிட வருணபேதம் கொடுமையானது!


அவன் தோல் நிறத்தைப் பார்த்தான், அவனுக்குத் தனி இடம் கொடுத்தான். ஆனால், இங்கே, நீ படிக்காதே, உனக்குப் படிப்பதற்கு தகுதியே கிடையாது; நீ படித்தால் குற்றம்; நீ படித்தால், உன் நாக்கை அறுக்கவேண்டும்; இந்த நாட்டினு டைய மிக முக்கியமான வேத நூலை படித்தால், காதிலே ஈயத் தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று எந்த வெள்ளைக் காரனும், எந்தக் கருப்பரையும் பார்த்து சொல்லவில்லை.

எனவேதான், அந்த நிற பேதம் என்பதைவிட, இந்த வருணபேதம் என்பதிருக்கிறதே, இது மிகவும் வித்தியாசனது; மிகவும் கொடுமையானது. மிகப்பெரிய அளவிற்க.

மின்சாரத்தில்கூட ஜாதி போகும்; தீண்டாமை போகும், நம் நாட்டில். மின்சாரத்தைக் கண்டு மனிதர்கள் ஒதுங்கிறார்கள், பயப்படுகிறார்கள்.
ஆனால், நம் நாட்டில் மின்சாரம்கூட, தீண்டாமையைக் கண்டு, அதன் வழியாக ஜாதி போகிறது.


யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால், விளக்கம் பெறவேண்டுமானால், பாபு ஜெகஜீவன்ராம் எவ்வளவு பெரிய அறிவாளி. 50 ஆண்டுகாலம் அவர் தொடாத துறையே இல்லை, அரசியலில். அவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர். பாகிஸ் தான் போரின்போது, ராணுவ அமைச்சராக இருந்து மிகப் பெரிய அளவிற்கு சாதனை செய்தவர். உணவுப் பிரச்சினை யைத் தீர்த்தவர். பொது அறிவில், பட்டறிவில் அவருக்கு இணையானவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்டவர், ராணுவ அமைச்சராக இருந்த நேரத்தில், அவரைவிட உயர்ந்த ஜாதிக்காரர் என்று சொல்லக்கூடிய ஒருவருடைய கற்சிலையை அல்லது உலோகச் சிலையை, உத்தரப்பிரதேசத்தில், அதுவும் புனித கங்கை ஓடுகின்ற கங்கைப் பகுதியில், திறந்து வைக்க முடியவில்லை, அவரால்.
செருப்புத் தைப்பவர்கள் எல்லாம் மந்திரிகளாகிவிட்டால், எங்கள் பூட்சுக்கு யார் பாலீசு போடுவது?


அவருடைய உருவத்திற்கு, அந்தச் சிலையைக் கட்டிப்பிடித்து அவர் ஒன்றும் திறக்கப் போவதில்லை; ஆரத் தழுவுவதுபோலவும் அவர் அந்தச் சிலையை திறக்கப் போவதில்லை. பிறகு எப்படி அந்தச் சிலையை திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். மின்சார பொத்தானை அழுத்துவார்கள். அப்படி மின்சார பொத்தானைத்தான் அழுத்தினார் பாபு ஜெக ஜீவன்ராம், சம்பூர்ணானந்த் சிலையைத் திறப்பதற்காக. இவர் காயஸ்தா வகுப்பைச் சேர்ந்தவர்.


பாபு ஜெகஜீவன்ராம் அவர்களைப் பேசவிடவில்லை. யார்? படிக்காத பாமரர்களா? இல்லை. மேல் பட்டதாரிகளான காசி இந்துப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பார்ப்பன உயர்ஜாதி மாணவர்கள்; கொச்சையாக, மனிதத்தன்மையற்ற முழக்கத்தை கொடுத்து, அவரை அவமானப்படுத்தினார்கள் திட்டமிட்டே!

செருப்புத் தைப்பவர்கள் எல்லாம் மந்திரிகளாகிவிட்டால், எங்கள் பூட்சுக்கு
யார் பாலீசு போடுவது? ஜெகஜீவன் ராமே திரும்பிப் போ! என்று முழக்கமிட்டனர்.

சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு என்றால், இந்தத் தேசம் உண்மையிலேயே சுதந்திரமடைந்து விட்டதா? மனிதத் தன்மை பெற்றுவிட்டதா? பெரியார் கருப்பு நாள் என்று சொன்னது நூற்றுக்கு நூறு நியாயம் என்பதை அது நிரூபிக்கவில்லையா? தயவு செய்து அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஜாதியத்தினுடைய முதுகெலும்பை, பார்ப்பனியத்தின் முதுகெலும்பை உடைத்தவர், முறித்தவர் தந்தை பெரியார்!


அப்படி அவர் அந்தப் பொத்தானை அழுத்தி, அந்தக சிலையைத் திறந்து வைத்துவிட்டு, சென்னைக்குத்தான் அடுத்த நாள் வந்தார்; மயிலாப்பூர் மாங்கொல்லையில் பேசினார்; அவருடைய குமுறலையெல்லாம் கொட்டினார். இந்தப் பெரியார் மண்ணிலேதான் என்னுடைய உள்ளக் குமுறலைக் கொட்ட முடியும். ஏனென்றால், இந்த ஜாதியத்தினுடைய முதுகெலும்பை, பார்ப்பனியத்தின் முதுகெலும்பை உடைத்தவர், முறித்தவர் தந்தை பெரியார், அதிலே வெற்றி பெற்றவர் என்று சொல்லி, இந்த ஜாதியத்தினால் அங்கே அவர் பெற்ற சங்கடத்தை இங்கே தான் வந்து குமுறினார்.


சிலையைத் திறப்பதற்காக அந்தப் பொத்தானைத்தான் அழுத்தினார். உடனே அங்கே இருந்த மாணவர்கள் ஓடிப்போய், 10 குடம் புனித கங்கா ஜலத்தை (கங்கை எவ்வளவு புனிதமானது என்பது நம்முடைய பட்ஜெட்டிற்கே தெரியும்; கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கிறார்களாம்; உலகத்திலேயே புனிதத்தைத் தூய்மைப்படுத்துகின்ற கதை நம்முடைய நாட்டில் மட்டும்தான் உண்டு. இந்தப் புனிதங்கள் என்பதே எவ்வளவு அழுக் கானவை என்பதற்கு, இதைவிட ஒரு நல்ல உதாரணம் இருக்க முடியாது. போலித்தனத்திற்குப் புனிதம் என்று பெயர் வைத் திருக்கிறார்கள். புனிதர்கள் எல்லாம் போலியானவர்கள். புனிதர்களைத் தூய்மைப்படுத்தவேண்டும்; நதியை மட்டுமல்ல, மனிதர்களையும்தான்) கொண்டுவந்து, அந்த சிலையின்மீது ஊற்றினார்கள். சம்பூர்ணானந்த் சிலையின்மீது ஊற்றினார்கள். இந்தியாவினுடைய ஒரே ஒரு பத்திரிகைதான் அதைப்பற்றி எழுதியது; அதுதான் விடுதலை ஏடாகும்.

5 குடம் தண்ணீரை, ஜெகஜீவன்ராம் தலைமேல் ஊற்றி, அவரை பிராமணராக்கி இருக்கக்கூடாதா?


அதிலே நாங்கள் கேட்ட ஒரு கேள்வி, அட அதிபுத்தி சாலிகளே, வருணாசிரமத்தைப் பாதுகாக்கக்கூடிய அதன் வாரிசுகளே, உங்களைப் பார்த்து, சந்தேகப்பட்டு ஒரு கேள்வி கேட்கிறோம்; கங்கை நீருக்குத் தீட்டைப் போக்குகிற சக்தி, இழிவைப் போக்குகிற சக்தி, 10 குடம் கங்கை நீருக்கு இருக்குமேயானால், அதை ஊற்றி, சம்பூர்ணானந்த் சிலையை தூய்மைப்படுத்திவிட முடியும்; புனிதப்படுத்திவிட முடியும்; தீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என்று நீங்கள் கருதியிருப்பீர்களோயானால், அந்த 10 குடம் தண்ணீரில், ஒரு 5 குடம் தண்ணீரை, ஜெகஜீவன்ராம் தலைமேல் ஊற்றி, அவரை பிராமணராக்கி இருக்கக்கூடாதா? அதனைச் செய் திருந்தால், நாட்டில் பிரச்சினையே இருக்காதே! அவருக்கே ஒரு புரோமோஷன் வாழ்நாளில் கிடைக்காத புரோமோஷன் கிடைத்திருக்குமே! அதுதானே மிக முக்கியம் என்று கேட்டோம். அதற்குப் பதிலை. அன்றைக்கு மட்டுமல்ல, இன்றுவரை அந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியவில்லை. ஏனென்றால், அப்படிப்பட்ட கொடுமை இந்த நாட்டில்.


The Battle was bought in minds of the people

மண்டல் அவர்கள் அழகாகச் சொன்னார். சுயமரியாதை இயக்கம் நடத்திய போர் இருக்கிறதே, பெரியார் நடத்திய போர் இருக்கிறதே, அது தெருக்களில் அல்ல. மக்கள் மனதில் என்று சொன்னார். The Battle was bought in minds of the people
என்று அழகாகச் சொன்னார். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ஒரு நிலையில், வைக்கத்தின் வரலாறு மறைக் கப்படுகிறது. வைக்கம் என்று சொன்னாலே, மறைத்தார்கள்; பிறகு வரலாறு வருகின்ற நேரத்தில், அதே ஏதோ காந்தியார் முடித்தார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, திலகருக்குப் பிறகு, காந்தியார் சகாப்தம்; பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் சகாப்தமாக வரலாற்றில் மாறியது என்பது ஒரு கட்டம். அது வேறு.


ஆனால், அதேநேரத்தில், அடிப்படையில் காந்தியாருக்கும், நாராயண குருஜி அவர்களுக்கும் மிகப்பெரிய அளவிற்கு வேறுபாடு உண்டு அடிப்படையில். ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பதுதான் நாராயண குருஜி அவர்களுடைய தத்துவம். தனியே தீண்டாமை என்பதைப்பற்றி அல்ல. தந்தை பெரியார் அவர்கள்கூட அதைத்தான் சொன்னார், தீண்டாமை என்கிற சொல்லை அரசியல் சட்டம் 17 ஆவது விதியில் எடுத்துவிட்டு, ஜாதி என்ற சொல்லை போட்டுவிட்டால், ஜாதி ஒழிந்துவிடும் என்றார்.


தீண்டாமை என்பது கிளை; ஜாதி என்பது வேர்

சட்டப்படி ஜாதி இருக்கமுடியாது; அதனை வேறு எந்த ரூபத்திலும் கடைபிடிக்க முடியாது. ஜாதியை வைத்துத்தான் தீண்டாமையே உருவாகிறது. தீண்டாமை என்பது கிளை; ஜாதி என்பது வேர். எனவே, அந்த வேரை வெட்டவேண்டும், அதுதான் மிக முக்கியமாகும்.


காந்தியார் அவர்களைப் பொறுத்தவரையில், தீண்டாமை யைப்பற்றி பேசினார், அதனை ஒழிக்கவேண்டும் என்ப தெல்லாம் ஒரு பக்கம். ஆனால், அதைவிட அதிகமாக, அவர் தீண்டாமையை, ஜாதியிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்தார். தீண்டாதவர்களுக்குச் சமத்துவத்தை மற்றவர்களைப்போல உருவாக்கவேண்டும். அவர்களுக்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று சொல்லி, தீண்டாமை ஒழிப்பைப்பற்றி, அரிஜன சேவா சங்கம் என்று சொல்லி, அவர்களுக்கு வாய்ப்புகளை உண்டாக்கவேண்டும் என்று சொல்லி, அந்தப் வாய்ப்பைப் பெற்றார்களே தவிர, அவர்கள் ஜாதி என்று வரும்பொழுது, வருணதருமத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதுதான் காந்தியினுடைய கொள்கை.


நான் வருணதருமத்தின்மேல் நம்பிக்கை உள்ளவன். வருணாசிரம தர்மா என்று தனியே கட்டுரை எழுதி, அது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
ஆக, அந்த நிலையில், வைக்கத்தைப் பொறுத்தவரையில், இரண்டு, மூன்று செய்திகளை குறுகிய நேரத்தில் சொல்கிறேன். மற்றபடி வரலாறு எல்லோருக்கும் தெரியும்.


வைக்கம் போராட்டத்தை தொடங்கியவர்கள் கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் 1924 ஆம் ஆண்டு மாதவன் என்ற வழக்குரைஞர் கோவிலைச் சுற்றியுள்ள தெருவில் நடக்கக்கூடாது; ஈழவர்கள், தீயர்கள், மற்றவர்கள் நடக்கக்கூடாது, தீட்டுப்பட்டுவிடும் என்பதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இந்தப் போராட்டத்தைத் தொடக்கியது, முதலில் மனித உரிமை அடிப்படையில், இதனை ஒழிக்கவேண்டும். நெருங் காமை, பாராமை என்பது அநாகரிகம் என்றும், அதனை அழிக்கவேண்டும் என்று ஆரம்பித்தார்கள் என்றால், கேவசமேனன் அவர்களும், ஜார்ஜ் ஜோசப் அவர்களும்தான் அதனைத் தொடங்கியிருக்கிறார்கள்.


நான் இங்கே நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டுமானால், இதனைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், பல்வேறு நிலைகளுக்குப் பிறகு,

Vaikom Satyagraha and Gandhi
The Narayana Institute of Social Cultural Development, Trichur

முதன்முதலில், 1975 ஆம் ஆண்டிலேதான், மிகத் தெளிவாக, Vaikom Satyagraha and Gandhi,  Dr.T.K.Ravindran, Professor History, University of Kerala, Trivandrum  அவர்கள், பிறகு அவர் துணைவேந்தராகக் கூட வந்தவர். உங்களுக் கெல்லாம்கூட தெரியும்.


அந்த வகையில், T.K.Ravindran அவர்கள், முதன்முறை யாக, Vaikom Satyagraha and Gandhi என்ற தலைப்பில், அவர் ஆய்வு செய்து, அதில் பல செய்திகளை மிக அழகாக அதில் சுட்டிக்காட்டினார்.


அதிலேதான், ஆவணப்படுத்தப்பட்ட, இதுவரையில் இல்லாத சில கடிதங்கள் மற்றவைகள் எல்லாம்கூட, காந்தியா ருக்கும், ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கும், கேசவமேனன் அவர்களுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகள் அத்தனையும் மிகத் தெளிவாக அதில் இருக்கிறது. மிகப்பெரிய அளவில், இந்தக் கடிதப் போக்குவரத்துகள் வைக்கம் போராட்டம் நடந்து 25ஆம் ஆண்டு வெள்ளி விழா என்று சொல்லும்பொழுது மறைத்திருக்கிறார்கள். அந்த வைக்கம் போராட்டத்தைப்பற்றி இவற்றையெல்லாம் நான் படித்துவிட்டு மறைக்கப்பட்ட பல உண்மைகளை, கரை படிந்த அத்தியாயங்களும், காங்கிரஸ் வரலாறும் என்று நீண்ட நாள்களுக்கு முன்பு, ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அந்த புத்தகம் 1986 ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நூலாகும். இதிலே வெளிவந்த கடிதங்கள், T.K.Ravindran அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கின்ற கடிதங்கள், அப்போது காந்தியாருக்கும், மற்றவர்களுக்கும் நடந்த உரையாடல்கள் ஆகியவற்றையெல்லாம் எடுத்து, ஆதாரப்பூர்வமாக அந்த நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.


ஆய்வாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் எழுதிய புத்தகம்

அதேபோல, வைக்கம் போராட்டத்தைப்பற்றி ஒரு விளக்கம் என்று, நம்முடைய மறைந்தும் மறையாமலும், நம் நெஞ்சங் களில் இருக்கின்ற ஆய்வாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் எழுதிய புத்தகத்தினை நாங்கள் வெளியிட்டிருக் கிறோம். வைக்கம் போராட்டம் என்கிற சிறிய நூலாகும். இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்கான ஒரு நூலாகும்.


அதேபோல, இந்தச் செய்திகளை வைத்து வைக்கம் போராட்ட வரலாறு என்ற ஒரு நூல், தமிழில் மிகத் தெளிவாக, இந்தத் தகவல்கள் எல்லாம் இடம்பெற்று, கடிதப் போக்குவரத் தெல்லாம் எப்படி இருந்தன என்பதையெல்லாம் எடுத்து மிகத் தெளிவாக அந்நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இதனைப் பற்றி தீவிரமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத் தால், அந்த நூல்களை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.


அதுபோலவே, நண்பர்களே,  அறியப்படாத ஆளுமை ஜார்ஜ் ஜோசப் என்று பழ.அதியமான் எழுதிய ஒரு நூலாகும்.


                      --------------தொடரும்-------"விடுதலை”  10-02-2015

26 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கெட்ட நாள்

கோகுலாஷ்டமி கிருஷ்ணன் பிறந்த நாளாம். ராமநவமி ராமன் பிறந்த நாளாம். அப்படி இருக்கும்போது அஷ்டமி, நவமி கெட்ட நாள் என்று பக்தர்கள் பதறுவது ஏன்? கடவுள்கள் பிறந்தது கெட்ட நாளா?

Read more: http://viduthalai.in/e-paper/96004.html#ixzz3RRgOwKQj

தமிழ் ஓவியா said...

தேர்தல் தோல்வி மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு கிடைத்த பரிசு அன்னா ஹசாரேவின் ஞானோதயம்


புதுடில்லி, பிப்.11_ டில்லி தேர்தலில் பாஜக விற்குக் கிடைத்த பலத்த தோல்வியை அடுத்து தனது கருத்தை அன்னா ஹசாரே தெரிவித்தார். மத்திய அரசால் குறுக்கு வழியில் இயற்றப்பட்ட நில உரிமைச் சட்டம் மற்றும் கருப்பு பணம் கொண்டு வருவோம் என்று கூறி அதனை செய்யத் தவறியது தான் தோன்றித்தனமாக முடிவு களை எடுத்தது போன்ற சர்வாதிகாரத்தனத்திற்கு கிடைத்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்பு கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்று கிளம் பிய இரண்டு பேர்களில் ராம்தேவ் பாபா மற்றும் அன்னா ஹசாரே முக்கிய மானவர்கள். தேர்தல் காலத்தில் மோடியை மிகவும் புகழ்ந்த அன்னா ஹசாரேவிற்கு டில்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மோடி சர்வாதிகாரி யாகத் தெரிகிறார். மோடி கடந்த நாடா ளுமன்ற குளிர்காலக் கூட் டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் விவாதத்தின் மூலம் சட்டத்தை நிறைவேற்றட துணிச்சலில்லாமல் அவசர சட்டமாக பல சட்டங்களைக் கொண்டு வந்தார்.

இதில் முக்கிய மானது நில அபகரிப்புச் சட்டம். இந்தச் சட்டத் தின் மூலம் விவசாயி களின் நிலத்தை அவர் களது அனுமதியின்றி எடுத்துக்கொள்ள முடியும் அதே நேரத்தில் விவசாய நிலங்களுக்கான இழப் பீட்டையும் அந்த நிறு வனங்கள் தர தேவை யில்லை என்ற பல்வேறு விசித்திரமான சட்டவிதி களுடன் நிலஅபகரிப்புச் சட்டம் அவசர அவசர மாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச்சட்டம் குறித்து அன்னா ஹசாரே கூறி யுள்ளதாவது: நமது நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட்து. ஆனால் இன்றுவரை விவ சாயிகளின் தற்கொலை தொடர்கிறது. மோடி தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்துள் ளது மிகவும் வேதனை தரக்கூடிய செய்தியாகும். புதிய நில உச்சவரம்பு சட்டம் விவசாயிகளின் தற்கொலையை மேலும் ஊக்கப்படுத்தும் தீமை யான சட்டமாக இருக்கும். மக்களின் நலனில் அக்கறை வைத்துள்ளவர் போல் தேர்தல் காலங் களில் நாடுமுழுவதும் சொல்லிகொண்டு திரிந் தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் விவசாயி களுக்குக் கடுமையான ஏமாற்றத்தைத் தந்து விட்டது. மோடி விவசாயி களை ஏமாற்றி விட்டார். நில அபகரிப்புச் சட்டத் தின் மூலம் விவசாயி களுக்கு தங்களின் நிலத் தின் மீதிருந்த உரிமை முற்றிலும் இல்லாமல் போனது. இது குடிமக் களுக்கு எதிரான சட்ட மாகும். சர்வாதிகார நாட் டில் தான் இதுபோன்று மனம்போன போக்கில் சட்டமியற்றப்படும். கடந்த காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட் டமே மேல், அந்த சட்டத் தில் விவசாயியிடம் வாங்கிய நிலத்தில் அய்ந்து ஆண்டிற்குள் எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்காவிட்டால் திரும்ப விவசாயியிடமே கொடுத்துவிடவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த அரசு அதை நீக்கி முதலாளி களை முழுமையாக நில உடமையாளராக ஆக்கி விட்டது. ஆங்கிலேயர் களின் காலத்தில் கூட இப்படிப்பட்ட ஒரு கொடூர சட்டம் இல்லை. மோடி முதலாளிகளின் கைப்பாவையாகிவிட்டார். இது போன்ற விவசாயி களுக்கு விரோதமான சட்ட்த்தைக் கொண்டு வந்ததன் மூலம் மோடி மக்களாட்சியில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நடத்த தொடங்கி விட் டார் இதன் காரணமாக டில்லி மக்கள் மோடியை தூக்கி எறிந்துவிட்டார்கள் என கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96000.html#ixzz3RRgdzCNU

தமிழ் ஓவியா said...

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

- ஊசி மிளகாய்

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!

அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க. அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர் உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!

இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!

இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல் மன்னர்களின் ஆணவம் குறையுமா?

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/96005.html#ixzz3RRglr128

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயத்தில்...
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

Read more: http://viduthalai.in/page-2/95991.html#ixzz3RRh0Ly44

தமிழ் ஓவியா said...

மதவாத பிஜேபிக்கு மரண அடி!


டில்லி தேர்தல் முடிவுகள் :

வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள்

மதவாத பிஜேபிக்கு மரண அடி!

திராவிடர் கழகத் தலைவர் கருத்து

டில்லி தேர்தல் முடிவுகள்

டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கருத்து வருமாறு:

மத்தியில் அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடக்கும் பா.ஜ.க. ஆட்சி கடந்த எட்டு மாதங்களுக்குமுன் வளர்ச்சி என்ற மயக்கப் பேச்சினாலும், காங்கிரஸ் ஆட்சியின்மீது ஏற்பட்ட கோபத்தாலும், பா.ஜ.க. மோடிக்குக் கிடைத்த வெற்றி என்பது நிலையானதா? அல்லது தற்காலிக வித்தைகளின் விளைவா?

என்பதுபற்றி ஆராய்ந்து எடை போட்டுச் சொல்லும் மக்கள் - வாக்காளர்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்கி விட்டனர். உலகமே தலைநகர் டில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்திருந்த வேளையில், அதுவும் மோடி அய்ந்து முறை தேர்தல் பிரச்சாரத்தை செய்து பார்த்தும், அவரது நண்பர் அமித்ஷா வித்தைகளைக் காட்டியும் விடியற்காலை மூன்று மணி வரை விழித்து வேலை செய்தும், கிரண்பேடி என்ற மாற்றுக் கட்சி முன்னாள் அய்.பி.எஸ். பெண் அதிகாரிக்கு பா.ஜ.க.வில் ஞானஸ்நானம் கொடுத்து, உடனேயே முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்த நிலையிலும், எதுவும் டில்லியில் எடுபடவில்லை.

ஒற்றை இலக்கத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துவிட்டது ; மக்களை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மதவெறிக் கும்பலின் மாய்மால - வளர்ச்சி என்ற பிரச்சாரத்தினால் - மயக்கப் பிஸ்கட் கொடுத்து - ஏமாற்றியதற்கான விலை தான் இது என்பதை சுவரெழுத்துப் போல் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.

இந்துத்துவா மதவெறிக்குக் கிடைத்த மரண அடியாகவே இந்தப் பா.ஜ.க. தோல்வி படலம். இது முடிவல்ல, ஒரு நல்ல தொடக்கமாகும்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சிதம்பரம்
10-2-2015

Read more: http://viduthalai.in/page1/95960.html#ixzz3RRiu0hGg

தமிழ் ஓவியா said...

உடன் பிறப்பு பெருங்கவிக்கோ நீடுவாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிக!

தமிழ் மொழி, இன உணர் வின் நடமாடும் உருவம் ஒருவர் உண்டு என்றால், அவர் நமது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும், பாசத்திற் கும் உரிய அருமைச் சகோதரர் மானமிகு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் ஆவார்கள்.

உலகம் முழுவதும் சுற்றிச் சுற்றி தமிழ் அமைப்புகள் நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம், மாநாடுகளில் சீரிளமைத் திறத்தோடு சிறப்பாகக் கலந்துகொண்டு, தமிழர் திராவிடர் தம் பெருமையைப் பரப்பிடும் தொண்டறச் செம்மல் அவர்.

அவர் தமிழர் தம் உரிமைக்காக திராவிடர் இன உணர்வுக்காக பல்வேறு போராட்டங்களிலும், நடை பயணங்களிலும் தவறாது கலந்துகொண்ட வீர வரலாற்றுக்குரியவர்! எவரிடத்திலும் இருகரம் கூப்பி, அன்பு ஒழுக, பண்பு மிளிர உரையாடும் அருமை (சகோதரர்) உடன்பிறப்பு அவர்!

அவருக்கு அகவை 80 முத்து விழா என்பது மிகவும் பெருமைப்படும் நிகழ்வு ஆகும்.

அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே திராவிடர் இயக்கக் கொள்கை உணர்வாளர்களின் சங்கமம் ஆகும்.

அவர் நலத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகத் தொண்டைத் தொடர வாழ்த்துகிறோம் - நெஞ்சார!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/95972.html#ixzz3RRj4A4k4

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மனக் குழப்பம்

கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலை வில் உள்ள ஊர் திரு விடை மருதூர் இங்குள்ள மகாலிங்க சுவாமி கோவில் 20 ஏக்கர் பரப் பளவில் 4 கோபுரங் களைக் கொண்டது. இங்குள்ள நந்தி, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியை விடப் பெரியது. இங்குள்ள மூகாம்பாள் சன்னதி வடநாட்டுப் பாணியில் இருப்பது தனிச் சிறப்பு.

இங்கு பட்டினத்தார் நீண்ட நாட்கள் தங்கி சிவனை வழிபட்டதால் அவருடைய சிலை இக்கோவிலில் உள்ளது. மனக் குழப்பம், மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் அசுவமேத பிரகாரத்தில் தங்கி நிவர்த்தி பெறலாமாம்.

இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் மகிமை எழுதி வைத்தவர்கள் யார்? தங்கள் கோயி லுக்கு இப்படி ஓர் அற்புத சக்தியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தால்தான் கோயில் வியாபாரம் ஜோராக நடக்கும்.

ஒரு கேள்வி: மகா லிங்க சுவாமி இருக்கும் அந்தத் திருவிடை மரு தூரில் மன நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் யாரும் இல்லையா? அல்லது மனநல மருத்துவர்கள்தான் இல் லையா?

Read more: http://viduthalai.in/page1/95964.html#ixzz3RRjCn7am

தமிழ் ஓவியா said...

எத்தனை முதல்வர்களோ!


என்னை முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை என் கட்சித் தொண்டர்களுக்கு இருக்கிறது! என்று சிறீரங்கம் இடைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு இன்னும் எத்தனை முதல்வர்களோ!

Read more: http://viduthalai.in/page1/95977.html#ixzz3RRjLBb3l

தமிழ் ஓவியா said...

மசூதி மற்றும் தேவாலயங்களில் இந்து சாமி சிலைகள் வைக்க வேண்டுமாம்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆதித்யநாத் யோகி ஆவேசக் கூச்சல்!

வாரணாசி பிப் 10 இந்த நாடு இந்து நாடு, இங்கு உள்ளவர்கள் இந் துக்கள் இங்கு இந்து கோவில்கள் மட்டுமே இருக்கவேண்டும், ஆகை யால் மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இந்து தேவ தைகளின் சிலைகளை இந்து அமைப்புகள் வைக்கவேண்டும் அதை இந்துக்கள் வணங்க முன் வரவேண்டும் என்று ஆதித்திய யோகி கூறினார்.

மத்தியில் பாஜக ஆட்சிப்பீடத்தில் அமர்ந் ததில் இருந்து தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர். இந்து நாடு இந்து மக்கள், அகண்ட இந்து ராஜ்யம் என்ற பேச்சு ஒரு புறம் தொடர்கிறது, மறு புறம் மதமாற்றம் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்களும் தொடர் கிறது, இவை அனைத்தும் ஆட்சியில் இருக்கும் பாஜக எம்பிக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே வாணா சியில் விஷ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்தியநாத் ஜோகி பேசிய போது கூறியதாவது: இது இந்து நாடு இங்கு இந்துக்கள் மட்டுமே இருக்கவேண் டும், மக்காவில் யாராது வேற்று மதத்தவர் செல்ல முடியுமா?

வாடிகனில் வேறு மதத்தவர் செல்ல முடியுமா? ஆனால், இந்தி யாவில் யாரும் வருகி றார்கள், இதைக் கேட்க இதுவரை இருந்து வந்த அரசுகளுக்குத் துணி வில்லை. தற்போது இந்துக்களுக்கான அரசு அமைந்துள்ளது. இதை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்திய சாமியார்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நான் வாரணாசி விஷ்வநாதர் கோவிலுக்கு வரும் போதெல்லாம் வரும் வழியில் உள்ள மசூதி என்னை பார்த்து நகைக்கிறது, நான் அவ மானத்தால் தலைகுனிந்து போகிறோன், இந்துக் களின் புனித நகரத்தில் மசூதியா? என்ற கேள்வி என்னை அரித்துக் கொண்டே இருக்கிறது. மதர்தெரசா போன் றவர்களை இங்குள்ளவர் கள் புனிதர்களாக பார்க் கின்றனர். அவர் புனித மானவரா? யாருக்குத் தெரியும்? ஆனால், இந்து சாமியார்களை உலகில் உள்ள நாட்டு மக்கள் எல் லாம் மிகவும் புனிதமான வர்களாகப் பார்க்கின்ற னர். அவர்களுக்கு என்று மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. பாகிஸ்தான் இஸ்லாமியர்களை உலக நாடுகள் விரட்டுகின்றனர். ஆனால், நாம் இங்கே இஸ்லாமியர்களுக்கு வச திகள் செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் அந்த காலம் முடிந்து விட் டது. இந்துநாடு என்பதற் கான சங்கொலிகள் ஒலித்து விட்டன. இனி நாம் செய்யவேண்டியது இதுதான்; ஒவ்வொரு மசூதி தேவாலயங்களை இந்துக் கோவிலாக மாற்றவேண்டும் அங்கு இந்து சாமிசிலைகளை வைக்கவேண்டும் அனைத்து இந்துக்களும் உள்ளே சென்று வழிபட வேண்டும்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பிள்ளையார் மற்றும் ராமர் சிலைகளை ஒவ் வொரு மசூதி மற்றும் தேவாலயங்களில் வைப்பேன். யாருக்கு துணி விருக்கிறது என்னை தடுக்க என்று அப்போது நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/95969.html#ixzz3RRjbOkkY

தமிழ் ஓவியா said...

வேலை வாய்ப்பு அலுவலகம் தேவையில்லையா?


வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட அய்ந்து பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-2008-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய் கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

இந்த விதி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் அய்ந்து பேரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்த குமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தர விட்டது.

எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக் கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். இது ஒரு நியாயமானதாகக் கருதப்பட முடியாது.

இந்தத் தீர்ப்பின் படி பார்த்தால் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கே வேலையில்லை என்றாகி விடுகிறதா இல்லையா?

மாநில அரசுப் பணியாளர்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படாத பணிகள் இந்த வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தது.

ஆசிரியர்களுக்கான பணி நியமனமும் அவ்வாறே நீண்ட காலமாக நடந்து வந்தது கல்வி மாநிலப் பட்டியலி லிருந்து பொதுப் பட்டியலுக்கு நெருக்கடிக்காலம் என்ற காரிருள் காலத்தில் களவாடிச் சென்றதிலிருந்து மாநில அரசுகளின் உரிமை ஒவ்வொன்றாகப் பறி போக ஆரம்பித்தன.

மத்திய அரசின் தலையீட்டால் (NCTE) தொடக்கப் பள்ளிக்கான ஆசிரியர்களின் தேர்வுக்கூட நுழைவுத் தேர்வின் மூலம் நடைபெறத் தொடங்கி விட்டது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பத்தாண்டு, பதினைந்து ஆண்டு காலம் காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் கை பிசைந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்தக் குளறுபடி களையாவது செய்து, இப்பொழுது இருந்துவரும் சமூக நீதியின் கழுத்தை நெரிப்பதில்தான் கவனமாகவும், குறியாகவும் இருக்கின்றன - ஆதிக்க சக்திகள்.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யும் முறையை நிலை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/95948.html#ixzz3RRjogZ9O

தமிழ் ஓவியா said...

தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

Read more: http://viduthalai.in/page1/95945.html#ixzz3RRjzfWwY

தமிழ் ஓவியா said...

சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை:
அரசு மறுபரிசீலனை செய்க!

தமிழர் தலைவர் அறிக்கை

இப்பொழுது அம்பேத்கர் பெயரில் உள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் - ஒரு நூற்றாண்டுக்கு மேற் பட்ட பழைமையான வரலாற்றுப் பெருமைமிகுந்த ஒன்றாகும்.

தேவையின்றி அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதை, மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பது நியாயமானதேயாகும்.

உயர்நீதிமன்றம் அருகில் இருப்பதே உகந்தது

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மிக அருகிலேயே அத்தகைய அம்பேத்கர் பெயரில் உள்ள சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டதின் நோக்கமே (பிரிட்டிஷ் அரசு காலத்தில்) சட்டம் படிக்கும் மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளையும் பார்த்து, கேட்டு அனுபவம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்த அது உதவ வேண்டும் என்பதாகும்.

இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாது, தீர்க்க வேண்டிய மக்கள் நலப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கும் நிலையில், தேவையின்றி, இந்த மாற்றம் தேவைதானா?

பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டாமா?

அதுவும் மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்த தமிழக அரசு ஏன் தேவையற்ற பிடிவாதம் காட்டவேண்டும்?

சட்டக் கல்லூரி மாணவர்கள் இதை எதிர்க்கிறார்கள்; மாற்றம் கூடாது என்று அறவழியில் அறப்போர் நடத்துகிறார்கள் என்றால், உடனடியாக சட்ட அமைச்சர் பொறுப்பில் உள்ளவரோ, தலைமைச் செயலாளரோ அல்லது சட்டத் துறை செயலாளரோ, முதலமைச்சரோ அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான குறைகளைக் கேட்டு, இடம் மாற்றத்திற்கான காரணம், அவசியம் என்னென்னவென்று விளக்கிடுவதுதானே ஜனநாயக முறை - குடியாட்சி முறை!
அதை விடுத்து, மாணவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்திடுவது, இரத்தம் சிந்த வைப்பது எவ்வகையிலும் நியாயமும் அல்ல; மனிதாபிமானமும் அல்ல!

இது பெரும் மாணவர் கிளர்ச்சியாக நாடு தழுவிய அளவில் மாறிவிடும்; விரும்பத்தகாத நிலையை தமிழக அரசே, தேடிக்கொள்வது எவ்வகையிலும் புத்திசாலித் தனமல்ல!

மறுபரிசீலனை செய்க!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது பழமொழி; இப்பொழுது ஆண்டிக்குப் பதிலாக அரசே ஊதிக் கெடுக்கலாமா?

உடனடியாக மாணவப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி முடிவு செய்க. மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுக!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

9.2.2015

Read more: http://viduthalai.in/page1/95901.html#ixzz3RRklzbuR

தமிழ் ஓவியா said...

தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந் திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக் காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர். - (விடுதலை, 5.4.1965)

Read more: http://viduthalai.in/page1/95902.html#ixzz3RRlWbu3X

தமிழ் ஓவியா said...

வயிற்றுக் கொழுப்பை குறைக்கலாம்!

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும் பாலோர் வயிற்றுக் கொழுப்பால் அவதிப்படு கின்றனர். வயிற்றுக் கொழுப்பை குறைக்க எளிய வழிகள் உள்ளது. அதை கடைப்பிடித்தால் பெருத்த வயிறு, தட்டையான வயிறாக மாறும். வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் வருமாறு:

துரித உணவுகளை தவிர்த்தல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை உண்ணலாம்.

தண்ணீர்

தாகம், அயர்ச்சி ஏற்படும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற கொழுப்பு படியும். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ளவேண்டும். குறைந்தது 6 முதல் 8 குவளை தண்ணீராவது குடிக்கவேண்டும்.

உடற்பயிற்சி

பல மணிநேர உழைப்பு மற்றும் வெகு தூர ஒட்டப்பயிற்சி ஆகிய இரண்டும், தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கொழுப்பு அதிகமாக குறையும்.

சர்க்கரை வேண்டாம்: நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை குறைப்பது நல்லது. இதற்குப் பதிலாக தேன், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்.

சோடியம் கலந்த உப்பு தவிர்த்தல்: சோடியம் கலந்த உப்பை தவிர, பொட்டாசியம் கலந்த உப்பு, எலுமிச்சை உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி உணவுகள்: வயிற்றுக் கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக கார்டிசால் உள்ளது. மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலை வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கானிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்.

தூக்கம்: போதுமான அளவு உறங்காமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். 6 முதல் 8 மணி நேரம்வரை உறக்கம் மேற்கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95914.html#ixzz3RRlza7LJ

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்

அங்கு: அலாஸ்காவில் மெண்டென் ஹால் பனிப் பாறை மிகவும் புகழ் பெற்றது. இந்தப் பாறைப் பிளவுக்குள் 50 அடி ஆழம் கயிறு மூலம் சென்று இறங்கி விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார் மியரிக் சில இடங்களில் தண்ணீர் மேலே வந்து கொண்டிருந்தது.

இங்கு: 2 கிலோ தங்கக் கம்பியை எல்இடி பல்புகளில் மறைத்து (ஒவ் வொரு பல்புக்குள்ளும் மெல்லிய தங்கக் கம்பிகள் இருந்தன) அபிதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திய கேரள இளைஞர் கைது.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர். நீங்கள் இரயில்வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டு பிடித்தவர் .ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.

நீங்கள்கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்றகிறித்தவர்.
நீங்கள்திரைப்படங்களை பார்க்காதீர்கள். ஏன் பார்க்கக் கூடாது என்றசந்தேகம் தோன் றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராமபோனை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

நீங்கள் வானொலியை கேட்காதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் மார் கோனி என்ற கிறித்தவர்.
நீங்கள்கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக்கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத் தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக் ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன்பேனாவை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும்கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தா தீர்கள்.ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.

நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
இந்துக்களே!

உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெ னில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக் களை திரும்பி வரும்படி செய்யுங்கள் ஏனெனில் அது முஸ்லிம் நாடு.

குறிப்பு: நம்நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்தவர்கள் (இந்துக்கள்), கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதகலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியின ரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப்பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான்.
(இவை உதகையில் நடந்த இந்து முன் னணி மாநாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டது).

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRo7277O

தமிழ் ஓவியா said...

அப்பளம், பார்ப்பனர்களால் தயாரித்தது?

அப்பளம்கூட பார்ப்பனர்களால் (Prepared by Brahmins) தயாரிக்கப் பட்டது என்று விளம்பரம் செய்யும் போக்கிரித்தனம் - ஜாதி ஆணவம்!

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoHHFl2

தமிழ் ஓவியா said...

அலர்ட்டா இருங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்

தலையில் மயிர் முளைக்க ஒரு கம்பெனி விளம்பரம் தர்றான். அது அமேசான் காட்டில் இருந்து யாருக்கும் கிடைக்காத மூலிகையை வச்சு தயாரிச் சுதுன்னு சொல்றான். எங்கேடா கிடைக் கும்னா, எனக்கு மிஸ்டு கால் கொடு, உடனே அனுப்புறேங்கறான்.
இங்கே இன்னொரு கம்பெனி விளம்பரம் குடுக்குது.

தெருவுக்கு தெரு தட்டி வச்சு விளம்பரம் தருது என்னடான்னு பார்த்தா, இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடு, உடனே எங்க கட்சிலே சேர்த்துக்கு வோம்ங்கிறான்.

முதல்ல சொல்ற கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தா, மயிர் முளைக்குதோ, இன்னும் கொட்டுதோ தெரியாது. கொடுத்த காசோடு போயிடும்.

ஆனா, இந்த இரண்டாவது சொன்ன கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தீங்க. நீங்க மட்டும் மிஸ் ஆக மாட்டீங்க. உங்க வம்சமே ஒன்னும் இல்லாம போயிடும். மானம் மரியாதை எல்லாம் போயி, ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்திடும் இந்த கூட்டம்.
அலர்ட்டா இருங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoPZJgv

தமிழ் ஓவியா said...

அலர்ட்டா இருங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்

தலையில் மயிர் முளைக்க ஒரு கம்பெனி விளம்பரம் தர்றான். அது அமேசான் காட்டில் இருந்து யாருக்கும் கிடைக்காத மூலிகையை வச்சு தயாரிச் சுதுன்னு சொல்றான். எங்கேடா கிடைக் கும்னா, எனக்கு மிஸ்டு கால் கொடு, உடனே அனுப்புறேங்கறான்.
இங்கே இன்னொரு கம்பெனி விளம்பரம் குடுக்குது.

தெருவுக்கு தெரு தட்டி வச்சு விளம்பரம் தருது என்னடான்னு பார்த்தா, இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடு, உடனே எங்க கட்சிலே சேர்த்துக்கு வோம்ங்கிறான்.

முதல்ல சொல்ற கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தா, மயிர் முளைக்குதோ, இன்னும் கொட்டுதோ தெரியாது. கொடுத்த காசோடு போயிடும்.

ஆனா, இந்த இரண்டாவது சொன்ன கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தீங்க. நீங்க மட்டும் மிஸ் ஆக மாட்டீங்க. உங்க வம்சமே ஒன்னும் இல்லாம போயிடும். மானம் மரியாதை எல்லாம் போயி, ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்திடும் இந்த கூட்டம்.
அலர்ட்டா இருங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoPZJgv

தமிழ் ஓவியா said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!

விவேகானந்தர் சிகாகோ செல்வ தற்கு பொருள் உதவி செய்தவரும் ,சிகாகோ மாநாடு முடித்து திரும்பிய விவேகானந்தருக்கு வரவேற்பு அளித்த வருமான ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி தான் 1897 மே 14 கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாடார்கள் நுழைந்து வழிபாடு செய்ததை கண்டித்து,

நாடார்கள் பிறப்பால் தாழ்ந்த சாதிகாரர்கள் ,அவர்களுக்கு கோவில் நுழைவு மறுக்கப்பட்டது , மீறி நுழைந்ததால் கோவில் தீட்டாகிவிட்டது எனவும், கோவிலை மத சடங்குகள் மூலம் தூய்மைபடுத்த நாடார்கள் ரூ.2500/ தர வேண்டும் என ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மதுரை சிவில் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தார் என்ற விவரம் தெரியுமா? உங்களுக்கு

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRodFFpZ

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளட்டுமே?
செம பஞ்ச்:

கேள்வி: நாத்திகர்களுக்கு ஏன் மத பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்? கடவுள்கள் பற்றிய கருத்தில் நாத்திகர்களுக்கு அசவுகரியம் இருக்கும் நிலையில், கடவுள் பெயரால் உள்ள பண்டிகைகளை மட்டும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது ஏன்?

பதில்: விஞ்ஞான முறையில் உரு வான மருத்துவ வசதிகளை ஆத்திகர்கள் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண் டும்? அவர்கள் பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள் ளட்டுமே?

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRopUR1W

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள்

இந்தியாவிலிருந்து தீண்டாமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இன்னமும் நான்கில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் இயங்கிவரும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், தீண்டாமை குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு, சட்டம், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீண்டாமை களையெடுக்கப் பட்டு விட்டதாக கூறப்பட்டு வருவதை இல்லை என்கிறது இந்த ஆய்வு. கடந்த 2011-_12 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுமக்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

அதாவது, 1. உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? 2. உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழை யவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஆய்வில் பங்கெடுத்த நான்கில் ஒருவர், தீண் டாமையைக் கடைபிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரமும் தொகுப்பாக அடுத்தாண்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு ஆய்வுத் தகவல்கள் புள்ளி விவரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மாநிலவாரியாகப் பார்த்தால் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதமும்,இமாச்சலில் 50 சதவீதமும், சத்தீஸ்கரில் 48 சதவீதமும்,ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 47 சதவீதமும், உத்தரகாண்டில் 40 சதவீதமும் `தீண்டாமை `இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இதேபோல், தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக கூறும் இந்த ஆய்வு, மேற்கு வங்காளத்தில் ஒரு சதவீதமும்,கேரளாவில் 2 சதவீதமும் தீண்டாமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச் சியாளர் டாக்டர் அமித் தோரட், இந்த ஆய்வின் மூலம் கல்வி பெற்ற மக்களிடையே ஜாதியின் தாக்கம் குறைந்துள் ளதையும், பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் அமித் சுட்டுக் காட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-1/95711.html#ixzz3RRoyPHiq

தமிழ் ஓவியா said...

வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!

அறிவியல் முன்னேற்றத் தினால், பல தொழில்கள் வளர்ச்சி யடைந்துள்ளன. அவற்றில் ஒன்று, கட்டட கட்டுமானப்பணி, பல கட்டுமானப் பொருட்கள், தொழில் நுட்பங்கள், புதிய சாதனங்கள் ஆகியவை தோன்றி சாதனைகள் பல, ஒன்றை ஒன்று மிஞ்சி நிகழ்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் வாஸ்து முறைப்படி வீடு கட்டுதல் என்ற வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இது கல்வி அறிவு இல்லாத பாமர மக்களிடையே மட்டுமின்றி படித் தவர்களிடையேயும் கூட பரவி யுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், மூட நம்பிக்கையும், பயமும், பேராசையும் ஆகும். எந்த அறிவுப் பூர்வ ஆதாரமும் இல்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல கோட்பாடுகள் இங்கு நிலவு கின்றன.

எடுத்துக்காட்டாக, மனை அளவு 8அடி இருந்தால் அரசு பரிபாலனம் என்றும் 9அடி இருந்தால் செல்வம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று 11அடி இருந்தால், புத்திரப்பேறு அதிகம் என்றும் 12 அடி இருந்தால் மலடாவர் என்று பயமுறுத்துகிறது. 15அடி இருந் தால் தரித்திரம், தாழ்ச்சி என்றும் 16அடி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகிறது.

இந்த ஒரு அடி வேறுபாடு ஏன், எப்படி இந்த நன்மை, தீமை களுக்குக் காரணமாக அமைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்தித்தால்தான் இவை மக்களை பயமுறுத்துவதற்காகக் கூறப்பட் டவை என்று தெளிவாகும்.

அறையின் நீளத்திற்கும் தரித் திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதேபோல் அறையின் நீளமும், அகலமும் பல நன்மை தீமைகளுக் குக் காரணமாக விளங்கும் என்றும் கூறுகிறது. அறையின் நீளம், அகலம், 19அடி இருந்தால் தரித்திரம், புத்திரபீடை என்றும், 20அடி இருந்தால் இன்பமயம் என்றும் கூறுகிறது. இது 25அடி இருந்தால் மனைவியின் மரணம் என்றும், 26அடி இருந்தால் செல்வம் பெருகும் எனவும் சொல் லப்படுகிறது.

இங்கும் இந்த ஒரு அடி வேறுபாடு இந்த மாற்றங் களை ஏற்படுத்தும் என்பது பகுத் தறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். இதே போன்று ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கா விட்டால், இந்த எஜமானன், எஞ்சினீயர், காண்ட்ராக்டர், கொத்து மேஸ்திரி, தச்சு மேஸ்திரி ஆகிய அய்வரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சுறுத்துகிறது.

இந்த சாத்திரம், அடுத்து ஏற்படும் அய்யப்பாடு, ஏன் இந்த அச்சுறுத்தும் கோட் பாடுகள் கூறப்படுகின்றன என்ப தாகும். இதை சற்று சிந்தித்தால் எப்படி சாதகம், சோசியம் போன் றவை பேராசை, பயம், மூடநம் பிக்கை ஆகியவற்றைக் கொண்ட மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதோ, அதேபோல், வாஸ்துவும் அதில் கூறப்படும் அச்சுறுத்தும் கோட் பாடுகளும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது என்பது தெளிவாகும்.

ஜாதி இதன் பின்னணி! மற்ற தொழில் நுட்பத் துறை களுக்குக் கொடுக்கப்படாத சாஸ்திர அந்தஸ்து ஏன் இந்த வாஸ்துவுக்கு மட்டும் கொடுக்கப் பட்டது என்று ஆராய்வோம். ஜாதி முறையை நிலைநாட்டவும் ஜாதியின் அடிப்படையில் சூழ்ச்சி யாக சில நியதிகள் செயல்படுத் தப்படவும் இந்த வாஸ்து வழி செய்தது.

அ) பொன்னிறமான மண்ணில் -_ இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால், அந்தணர் கள் இதில் வீடு கட்டலாம்.

ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாயின் வாடையுள்ள மனையில் சத்திரியர்களும்,

இ) பச்சை நிறமும், புளிப்பு ருசியும் வாடையுமுள்ள மனையில் வைசியர்களும்

ஈ) கருப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையுமுள்ள மனையில் மற்ற இனத்தவர்களும் (சூத்திரர்) வீடு கட்ட வேண்டும்.

இதேபோல், அந்தணர் தென்திசை ஆயர்மேற்றிசை
வந்திடு வணிகர்நல்வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை
பிந்திய நடுவது பிரமன்தானமே
என்று ஜாதியின் அடிப்படை யில் வீடுகட்டும் இடத்தை நிர்ண யம் செய்தது, வாஸ்து.

இவ்வாறு ஜாதி முறையை நிலைநாட்டவும், அதன் மூலம் பல வசதிகளை பெறவும், வழி செய்ததால், இக் கலை சாஸ்திர அந்தஸ்தை பெற் றது என்று ஊகிக்கலாம்.

இந்த வாஸ்து முறையைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந் ததே.

ஆனால், இந்த வாஸ்து முறையைச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், கட்டடக் கலைகூறும் சில நல்ல கருத் துக்களையும் சேர்த்துக் கூறுவது, நச்சுப் பொருளை, இனிப்பு மேலு றையுடன் கொடுப்பதற்கு இணை யாகும் அல்லவா?

முனைவர் நல். இராமச்சந்திரன், பேரா. எல்.ஜே. சுப்ரமணியம்

Read more: http://viduthalai.in/page-1/95716.html#ixzz3RRqdcwjk

தமிழ் ஓவியா said...

வாஜ்பேய யாகம்

வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.

வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.

யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.

- எஸ். நல்ல பெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9

தமிழ் ஓவியா said...

வாஜ்பேய யாகம்

வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.

வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.

யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.

- எஸ். நல்ல பெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து சுதந்திரத்திற்கு முன்பு பின்பு என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பெண்ணுரிமைப் போராளிகள் எனப் படுபவர்கள் எல்லாம் மத ரீதியாக பெண்ணடிமைக்கு நியாயம் கற்பித்தனர்.

ஆனால் அக்கால கட்டத்தில் தந்தைபெரியார் ஒருவரே பெண்களை அடிமையாக்குவதில் முதலிடம் மதம் தான் என்று உறுதியாக கூறியது மட்டுமல்லாமல் தானே முன்னின்று பெண்ணுரிமைக்கான சமூகப்போரை வழி நடத்திச்சென்றார். அதன் பயனைத்தான் இன்று இந்தியாவில் உள்ள பெண்கள் அனுபவிக்கின்றனர்.

ஆனால் இதன் ஆரம்பகட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது, அந்த ஆரம்ப கட்டபோராட்டத்தில் வெற்றிபெற்றவர்களும் அன்னை ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, போன்றோரை அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவர்களின் வரிசையில் முத்தம்மாவை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்போதைய மதராஸ் மாகாணத்தில் பிறந்து சென்னை கிருஸ்தவ கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பயின்ற முத்தம்மா அவர்கள் அய்.எஃப்.எஸ் படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் மற்றும் அய்.எஃப்.எஸ் ஆவது குதிரைக் கொம்பாகும்; அதை முறியடித்து இந்தி யாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி ஆனார் சி.பி. முத்தம்மா (1924_2009).

1949-ஆம் ஆண்டு இந்திய வெளி யுறவுதுறை அதிகாரியாக இருந்த முத் தம்மாவிற்கு அவரது பொது வாழ்க் கையில் பல்வேறு தடைகள் முக்கியமாக திருமணம் செய்யவேண்டும் என்றால் பதவியில் இருக்ககூடாது என்ற ஒரு விதி இருந்தது, இது மட்டுமல்ல பல்வேறு விதிகள் முக்கியமாக பெண் களுக்கு எதிரான விதிகள் இருந்தன.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் முத்தம்மா, மறைந்த கிருஷ் ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது வெளியுறவுத் துறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை 8(2) பட்டவர்த்தனமாக காட்டுகிறது என்று கூறி
ஒரு பெண் திருமணத்துக்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டு மென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத் தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியம்.

தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறி போகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?

விதி 18 அரசியல் சாசனத்தின் 16-ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமண மான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோரமுடியும் என்றால் திருமணமான ஆணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மனநிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான் இந்த பாகுபாடு? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது.

அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்தத்துவம் நடைமுறையில் செயல் படுத்தப்படுவதில்லை என்பதை இந்த விதி கட்டுகிறது,என்றார். கிருஷ்ணய் யரின் இந்தத் தீர்ப்பை அடுத்து அந்த பிரிவு நீக்கப்பட்டது.

கோடானு கோடிப் பெண்களில் ஒரு முத்தம்மா எடுத்த துணிச்சலான நட வடிக்கை அரசுத்துறைகளின் சுதந்திரத் திற்கு பின்பும் இருந்த ஆணாதிக்க திமிர் ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு முத்தம்மா பல்வேறு உயர்பதவிகளைப் பெற்றார். 35 ஆண்டுகள் பணிக் காலத்தில் அரசு உயர் பதவிகளில் பெண்களுக்கான தடைகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை நீக்க போராடினார்.

தனது பணி ஓய்விற்கு பிறகு அவர் செய்த காரியம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களை வியந்து பார்க்கவைத்தது. டில்லியில் முக்கிய இடத்தில் இருந்த தனது 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடை யாக வழங்கினார். அப்போதே அந்த இடம் பல கோடிகள் மதிப்பு கொண்ட தாகும். அரசுத் துறைகளின் பெண்களுக்கு எதிரான விதிகளை நீக்க அவர் எடுத்துக் கொண்ட போராட்டத்திற்கு உரமாக திகழ்ந்தது பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்பு போராட்டம் கொடுத்த ஊக்கமாகும்.

கருநாடகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி கொடவா என்ற பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(அவரின் பிறந்த நாள் 24.1.1924)

Read more: http://viduthalai.in/page-1/95718.html#ixzz3RRsKokch