Search This Blog

26.2.15

பெரியாரின் மொழி நடை

பெரியாரின் மொழி நடை
தந்தை பெரியார் அவர்கள் 1926 இல் சுயமரியாதை இயக்கம் என்னும் பெயரில் ஒரு சமுதாய சீர்திருத்த இயக் கத்தைத் தோற்றுவித்தார்.

ஜாதி மதமென்ற கொடுமை ஒழி வதும் கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமுதாயத்திற்கு நன்மை யானது என்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருது கின்றேனோ அந்த வேலையைச் செய் கிறேன் என்று சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கான காரணத்தை முன் வைத்தார்.

இவ்வியக்கம் திராவிடர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிடர் கழக மாக இயங்கியது, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தந்தை பெரியார் பொது மக்களி டையே தமது கருத்துகளைப் பிரச்சாரம் செய்ய மக்கள் பேசும் பேச்சு மொழியைக் கையாண்டார். தன் வாழ்நாள் முழுவ தும் தமிழரின் முன்னேற்றத்திற்குப் பாடு பட்ட பெரியார், 95 வயது வரை தமிழக மெங்கும் சூறாவளியெனச் சுற்றிவந்து, புரட்சிச் சிந்தனைகளைப் பேராறு களாகப் பாய்ச்சி வந்தார்.

சிந்தனையாள ராகவும், சாதனையாளராகவும், பண் பாளராகவும், சமத்துவச் சுடரொளி யாகவும், பகுத்தறிவுப் பகலவனாகவும் தன்மான இயக்கத் தந்தையாகவும் திகழ்ந்தார்.

பெரியாரின் பேச்சிலும் எழுத்திலும் எளிமை இருக்கும். ஆணித்தரமாக தமது வாதங்களை எடுத்துரைப்பதோடு, அவற்றினை அவ்வாறு எழுதவும் செய்தார். பழமொழிகளும் உவமானங் களும் பொருத்தமுடையனவாக இருக் கும். நவசக்தி ஆசிரியரான திரு.வி.க. அவர்கள் பெரியாரின் பேச்சு பற்றிய கருத்தை இங்குக் கூறுகிறார்.


சிறீமான் ராமசாமி நாயக்கர் பெரிய நூற்புலமை உடையரல்லர். ஆனால் பெரிய நூற்புலவர் அவர்போல பேச மாட்டார். நாயக்கர் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுங்கூட்டத்தில் காற்றும் மழையும் கலந்து வீசுவது போல், நான்கு மணி நேரம் அய்ந்து மணிநேரம் பேசு வார்... மலையினின்றும் அருவி பெருக் கெடுத்து ஓடுவதுபோல், சிறீநாயக்கர் வாயினின்றும் சொற்கள் பெருக் கெடுத்தோடும்.
இவரது பேச்சுத்திறனைப் பற்றி ஆனந்த விகடனில் கல்கி எழுதுகிறார்.
சாதாரணமாக இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வட நாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்த வராவார். ஆனார், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்திற்கு மேல் கேட்க முடியாது...
எவ்வளவுதான் நீட்டினாலும் ராமசாமியாரின் பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ் நாட்டில் ராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும்தான் என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்கமுடியுமென்று தயங்காமல் கூறுவேன்.

தந்தை பெரியாரின் பேச்சில் பழ மொழிகளும் உவமானங்களும் நிறைய காணப்படும்.
இதோ சான்றுகள்

தோட்டத்தில் பகுதி கிணறு,

தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதுபோல்

வௌவால் வீட்டிற்கு உறவு முறையார் வந்தால், ஆளுக்கொரு கிளையில்தானே தொங்கவேண்டும்,

காய்த்த மரத்துக்குத்தானே கல்லடி விழும்,

பட்டுச்சேலையை இரவல் கொடுத்து விட்டு மணையைத் தூக்கிக் கொண்டே திரிவதா?

பெரியார் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் பற்றிக் கவலை இல்லை. கிணறு, வயிர், ஆஹி, சூஹி, ஆருதல் போன்ற பிழைகள் இருக்கும். பேச்சுத்தமிழில் தான் எழுதுவார். பிழைகள் நிறைந் திருப்பினும் படிப்போரை வசீகரிக்கும் தன்மை இவர் எழுத்துக்கு உண்டு. இவரது வாக்கியங்கள் நீண்டனவாக இருக்கும்.
இவருடைய எழுத்தில் மொழி வளம் இல்லாவிட்டாலும் பொருள் வளம் உண்டு. பெரியாருடைய எழுத்தி லிருந்து இவரது கருத்துக்கு மாறான பொருள் கொள்ள முடியாது.

அதற்காகவே தான் மற்றபடி, அதுவும் அல்லாமல், அதனோடுங்கூட, என்றுதான் சொல்லுகிறோம், போன்ற தொடர்களை மிகுதியாகப் பயன்படுத் துவார். எந்தச் சிறுகருத்தையும் மிகவும் அழுத்தமான முறையில் சுருக்கென்று தைக்குமாறு வெளிப்படையாக விளங்கக்கூடிய நடையில் எழுதுவதில் இவர் ஒரு நிகரற்ற தனி எழுத்தாளர்.
உரை யாடுவது போலவே எழுதுவதிலும் வல்லவர். அய்ந்துக்கு இரண்டு பழு தில்லை, வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம், போன்ற தலைப்பிட்டு புனைப்பெயரில் எழுதுவார். இவரது நடையில் தமது கருத்துக்களைத் தெளிவாக வெளியிடுகின்ற தன்மையைக் காணலாம்:


நீ மனிதன். பகுத்தறிவு பெற்ற மனிதன். ஆகவே பகுத்தறிவுக்கே முதலிடம் கொடு.

கடவுளை மற மனிதனை நினை. பிறப்பால் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை. ஆணும், பெண்ணும் சமம். மனைவி மலிவான வேலைக்காரியல்ல, வெறும் விளையாட் டுப் பொம்மையல்ல, நகை மாட்டியல்ல, வாழ்க்கைத் துணை. உயிருள்ள, உரிமை யுள்ள வாழ்க்கைத் துணை. எனவே இருவரும் தோழமையோடு வாழுங்கள்.

ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத் தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப் பட்டுக்கொண்டு வருகின்றன. பெண் களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவ தாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால், ஆடு, கோழி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்கா வது முதலாளிகளால் தொழிலாளி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப் பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.

அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலும் கூட ஆண் களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது.

அந்த ஆண்மை  உலகில் உள்ள வரையிலும் பெண் மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாய்மொழி என்பதற்காகவோ, நாட்டுமொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ்மொழியிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் தனிமொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி, சிவபெருமான் பேசிய மொழி என்பதற்காகவோ, அகத்தியரால் உண்டாக்கப்பட்ட மொழி என்பதற் காகவோ எனக்கு அதில் பற்றில்லை.

வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்றுக் கிடையாது. அது மூடப்பற்று, மூடப்பக்தியேயாகும். குணத்திற்காகவும் அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக் கூடும். எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால் உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய் விடுவேன்.

அது போலவே எனது மொழி என்பதானது எனது இலட்சியத்திற்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்கு பயனளிக் காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். ஆதலால் விரும்புவ தற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பயன் காரணம் என்பதை உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இந்த நாட்டு மக்களுக்குச் சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடி யதும் சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும் மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக்கக்கூடி யதும் ஆகும் என்பது எனது அபிப் பிராயம்.

மற்ற இந்திய மொழிகளை விட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால் தமிழுக்குக் கேடு உண்டாக்கும் எனச் சந்தேகப்படத் தக்க வேறு எந்த மொழியும் விரும்பத் தாகாததேயாகும்.

மேடைப்பேச்சாளராகவும், கட்டுரை யாளராகவும் மட்டும் இல்லாமல் தந்தை பெரியார் பன்முக ஆற்றலுடையவ ராகவும் விளங்கினார். நிறைய நூல் களுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். அதுபோழ்து அவரது திறனாய்வுத் திறன் வெளிப்படும். ஒத்தகருத்துள்ள அறிஞர்களின் புத்தகங்களுக்கு முன் னுரை எழுதி, அந்நூலின் அவசியத் தையும் கூறுவார். தமிழ் மேடைப் பேச்சுக்கு உயிரூட்டியவர்கள் வரிசையில் டாக்டர் வரதராஜூலு நாயுடு, அறிஞர் அண்ணா - தந்தை பெரியாருக்குத் தனியிடம் உண்டு.

பெரியாரைப் பின்பற்றி குத்தூசி குருசாமி, பட்டுக்கோட்டை அழகிரி சாமி, எம்.ஆர்.இராதா போன்றோர் பேச்சாளர் ஆனார்கள். அவரின் தாக்கத்தால் தம் உரைநடையைச் செம்மையாக்கிக் கொண்டவர்கள் பலர். 

நெ.து.சுந்தரவடிவேலு,  கி.வீரமணி முதலானோர் பெரியாரின் அடிச்சுவட் டில் எழுதினவர்களே. திரு.வி.க., முத்தமிழ்க்காவலர், குன்றக்குடி அடிகளார் இவர்களது நட்பு இருந் தாலும், அவர்தம் உரைநடையின் தாக்கம் பெரியாரிடத்தில் காணுதல் அரிது.
                            --------------------------பட்டுக்கோட்டை தமிழ் அன்பன்”விடுதலை” ஞாயிறுமலர் 21-02-2015
Read more: http://viduthalai.in/page2/96578.html#ixzz3SOzufdzt

30 comments:

தமிழ் ஓவியா said...

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இதழில்

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஸ்வின்டன் அட்வர்ட்டைசர் (swindonadvertiser.co.uk) எனும் ஆங்கில இதழில் கடவுள் இல்லை என்று தலைப்பிட்டு வெளியாகி உள்ள வாசகர் கடிதத்தில் உள்ள தகவல் வருமாறு:

கடவுள் இல்லை

மூன்று முசுலீம்கள் அமெரிக்காவில் கொல்லப் பட்டனர். கடவுளை நம்புபவர்களிடையே காட்டு மிராண்டித்தனங்கள் ஏற்படக்கூடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக உள்ளது.

அண்மைக்காலத்தில் எத்தனை முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்? வானத்திலிருந்து கற் பனையாக எவனோ குதிப்பான் என்கிற நம்பிக்கை யால், மக்களைக் கடத்துவது மற்றும் உயிரோடு எரிப்பது என நடைபெறுகின்றன.

ஏசுவாக இருந்தாலும், அல்லாவாக இருந்தாலும், இன்னும் மொகம்மத் அல்லது கடவுள் அல்லது புத்தர் என்று எவரும் இருப்பதாகக் கூறினால், நாம் வாதிடுவதற்கு காரணமாவது இருக்கும்.

எங்குமே கடவுள் இல்லை, மற்றபடி இல்லாத இந்தக் குப்பைகளின் பெயரால் அந்த நம்பிக்கையில் பின்பற்றுபவர்களால் பொறுப்பற்றமுறையில் பலவும் நடத்தப்படுகின்றன.

அப்படி ஒருவன் இல்லாதநிலையில் அவனால் என்ன செய்துவிட முடியும்?

- ரோஜெர் லேக் வடக்கு ஸ்வின்டன்

Read more: http://viduthalai.in/e-paper/96890.html#ixzz3SqlW7xUI

தமிழ் ஓவியா said...

மோடி குட்டு உடைந்தது!
சொந்த தொகுதிக்குக்கூட ஒரு பைசா செலவழிக்கவில்லை

மோடியின் தத்து கிராமத்திலும் வெத்து விளம்பரம் தான்! புதுடில்லி பிப் 26_ புதிய ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களின் தொகுதிக்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று டில்லியைச் சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின் கீழ் கேள்வி கேட் டுள்ளார்.

இதில் வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மோடி இதுவரை அந்த தொகுதிக் காக ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என் பது தெரியவந்தது. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவர்களின் தொகுதி வளர்ச்சிக்காக ரூ200 கோடி ஒதுக்கப்படு கிறது. இந்த நிதியில் அவர்களின் தொகுதி மேம்பாட்டிற்கென புதிய திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த லாம், மத்திய மாநில அரசுகளின் அனுமதி மற்றும் வேறு எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் திட்டங்களை தொகுதி மக்களிடம் இருந்து பெறலாம். வாரணாசி தொகுதி மக்கள் இதுவரை பொது சமுதாயக் கூடம், பள்ளி களில் கணினி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மற்றும் சிறுதொழில் முனைவோ ருக்கான பொதுச்சந்தை போன்ற பல்வேறு திட் டங்களை மோடி வார ணாசிக்கு வரும் போதெல்லாம் அவரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் மக்கள் கொடுத்த கோரிக் கைகள் குறித்து ஆலோ சனைகள் கூட நடைபெற வில்லை என்று தெரிகிறது,.

இது குறித்து வார ணாசி மக்கள் கூறும் போது மோடி வாரணா சிக்கு வரும்போது நாங்கள் கொடுக்கும்; மனுக்கள் குறித்து என்ன நடவ டிக்கை எடுத்தார் என்று கேட்டதற்கு இதில் பெரும்பாலானவை மாநில அரசு செய்து கொடுக்கும் இதற்கான நிதி மாநில அரசின் வளர்ச்சித் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம் என்று பதில் கிடைத்தது. மோடி வாரணாசி வரும்போ தெல்லாம் வாரணாசியை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று பாஜக காரர்கள் கூறுகிறார்கள்.

வாரணா சிக்கு உலக தலைவர்களை எல்லாம் அழைத்து வரு வோம் என்கிறார்கள். ஆனால் அந்தத் தலை வர்கள் வருகை தருவதற்கு தரமான சாலைகள் எதுவும் இல்லை, இதற்குக் காரணம் கேட்டால் சாலைகளை நிர்வகிப்பது மாநில அரசு என்று பதில் வருகிறது. மோடியின் தத்து கிராமம்தான் என்ன வாழ்கிறது? மோடி தத்து எடுத்த முஸ்லீம்களே வசிக்காத கிராமமான ஜெயபூரிலும் இதே நிலைதான், மோடி செயல்படுத்தப்போகும் திட்டங்களின் பட்டியல் அடங்கிய பெரிய பதா கைகள் கிராமத்தின் நுழைவாயிலில் அலங்கரிக் கின்றன.

மோடி முதல் முறையாக வருகைதந்த போது வைத்த இந்தப் பதாகைகள் இன்று பழையதாகிப் போய் விட்டன. பல எழுத்துகள் அழிந்துவிட்டன; ஆனால் இதுவரை எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் கேட்ட போது கிராமங்களில் முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நடந்து வரும் வளர்ச்சிப் பணியை கண்காணித்து வருகின்றனர். கிராமத்தில் நாங்கள் கேட்ட சாதாரண திட் டங்களுக்குகூட இப்படி எதிர்மாறான பதில்களே வருகின்றன. ஆக்கப் பூர்வமான எந்த திட்டமும் இன்றுவரை நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.

கோடைப் பிரதேசமான வாரணாசி யில் ஆப்பிள் மரம் நடு வதற்கு வற்புறுத்துகின்ற னர். ஆப்பிள் மரங்கள் பனிபொழியும் பிரதேசங் களில் தான் செழுமையாக வளரும் ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே குளிர் காலமாக இருக்கும் வாரணாசியில் ஆப்பிள் விவசாயம் என்பது இய லாத காரியம்; ஆனால், ஜெயபூர் கிராம பஞ் சாயத்துத் தலைவரான துர்காவதி தேவியின் மைத்துனர் கிராமத்தில் ஆப்பிள் விவசாயம் செய்ய அனைவரையும் வற்புறுத் துகிறார் இதற்காக லட்சக் கணக்கில் பணம் செல வழிக்கின்றனர். தேவை யற்ற இந்த காரியத்தின் மூலம் வாரணாசியில் மோடிக்கு அவப்பெயரே ஏற்படப்போகிறது என்று வாரணாசி மக்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/96885.html#ixzz3SqliRMqH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பட்டர்

ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது; கடவுள் பக்தி கொண்டவன், பக்தியற்றவன், தாழ்ந்த வன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை. மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங் குகிறார் என்று எழுது கிறது ஓர் ஆன்மிக இதழ்.

ஏன் அதனோடு நிறுத்திக் கொண்டனர்? அந்தப் பக்தியுள்ள விதுரர் குலத்தவர்கள் அந்த வைணவக் கோயி லில் பட்டராக முடி யாதது ஏன் என்பதுதான் இன்றையக் கேள்வி?

Read more: http://viduthalai.in/e-paper/96887.html#ixzz3Sqlr2YPG

தமிழ் ஓவியா said...

வேலிக்கு ஓணான்

மதர் தெரசா சேவையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தார் அல்லவா? சேவை என்ற பெயரால் கிறித்துவ மத மாற்றம் செய்தவர் என்று சொன்னார் அல்லவா! அதனை சிவ சேனாவும் வரவேற்றுள்ளது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பார்களே அது இது தானோ!

ஆவியுடன் பேச்சாம்!

மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவந்த மும்பை நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் கொல் லப்பட்டார் அல்லவா? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை தபோல்கரின் ஆவியுடன் பேசும் முயற்சிகள் மேற்கொண்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் குற்றஞ்சாட்டியுள்ளார். பகுத்தறிவாளரைக் கொலை செய்தவரைக் கண்டுபிடிக்க பகுத்தறிவுக்கு எதிரான அணுகுமுறையாம் - வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/96889.html#ixzz3Sqlyrb2a

தமிழ் ஓவியா said...

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்.இல் இணையலாமாம்

ராய்பூர், பிப்.26_ அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இணையவும், அரசியல் பணிகளில் ஈடுபடவும் சத்தீஸ்கர் அரசு அனுமதி அளித் துள்ளது. சத்தீஸ்கர் அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சத் தீஸ்கர் அரசின் இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புனித நகரமாம் திருப்பதி
மது விற்பனையில் முதலிடம்

திருமலை, பிப். 26_ புனித நகரமாக கருதப்படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற்பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 415 மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வரு கிறது. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 188 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் சித்தூர் மாவட்டத்தில் முதலிடம் வகிப்பது புனித நகரமான திருப்பதி.அங்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.192 கோடிக்கு விற்பனையானது.

சிறீகாளஹஸ்தியில் 2013ஆம் ஆண்டு ரூ.104 கோடிக்கு விற்பனையானது. 2014ஆம் ஆண்டு ரூ.103 கோடிக்கு விற்பனையானது.

Read more: http://viduthalai.in/e-paper/96891.html#ixzz3SqmBScUF

தமிழ் ஓவியா said...

அஸ்திவாரம் கிடையாது!


பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...

ஆவணத் திருட்டுகள் - ஓர் அபாய எச்சரிக்கை!


பிப்ரவரி 20-ஆம் தேதி இரவு பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் இருந்து அலுவலக நேரம் முடிந்து நீண்ட நேரம் கழித்து வெளியே வந்த ஒரு காரை நிறுத்தி டில்லி காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே பிடிபட்ட மூவரும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அவர்கள் வந்த இந்திய அரசு என்று எழுதப்பட்ட (பதிவு எண் டிஎல் 13-4734) காரை சோதனை செய்த போது பெட்ரோலிய அமைச்சகத்தின் மிக முக்கியமான தகவல்கள் காவல் துறையிடம் சிக்கின.

இதனை அடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். சாந்தனு சைக்கியா, பிரயாஸ் ஜெயின், ராகேஷ் குமார் என்ற மூன்று பேர் கொடுத்த தகவலை அடுத்து மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மத்திய அரசின் அமைச்சகங்களில் முக்கிய பணியில் உள்ளவர்கள். பத்திரிகையாளர் மற்றும் இடைத்தரகர்களாக செயல் பட்டவர்கள் என ஏழுபேர் கைதுசெய்யப்பட்டனர். இவர் களிடம் விசாரணை செய்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் பெட்ரோலிய அமைச்சகம் மட்டுமில்லாமல் நிதி, பாதுகாப்பு, தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்கள்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் சைக்கியா நீதிமன்றத்தில் கூடியிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து கூச்சலிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோலிய துறையில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. நான் இந்த ஊழலை வெளியில் கொண்டுவர முயற்சி செய்தேன். இந் நிலையில் என்னை இந்த வழக்கில் சேர்த்து உண்மைகளை மூடி மறைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது என்றார். அவரது இந்த பேச்சு நீதிமன்றவளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக டில்லி காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கைதுசெய்யப்பட்டவர்கள் அனை வரும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆவணங்களைத் திருடி விற்பவர்கள், அரசு ஊழியர்கள் முக்கிய ஆவ ணங்கள் தயார் செய்யப்படும்போதே அதை நகல் எடுத்து அலுவலகத்தில் மறைவான இடத்தில் வைத்து விடுவார்கள்.

தமிழ் ஓவியா said...

பிறகு அலுவலகத்தில் அனைவரும் வெளியேறியதும், ஆவணங்களை எடுத்துக்கொண்டு தாமதமாக புறப்படு வார்கள் இவர்கள் தங்களுக்குத் துணையாக சில பத்திரி கையாளர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளனர். அவர் களுக்கு அலுவலகத்தில் நுழைவதற்கு சிறப்பு அனுமதி அட்டையைப் போலியாக தயாரித்து வழங்கியுள்ளனர். டில்லி காவல்துறையினர் இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அலுவலக காண்காணிப்புக் காமிராவை சோதனை செய்தனர்.

அதில் இவர்களின் சட்டவிரோத நட வடிக்கைகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. பொதுவாக நிதி நிலை அறிக்கை தயாரிப்பு வேலையில் உள்ளவர்கள் மிகவும் தாமதமாக அலுவலகத்தை விட்டு புறப்படு வார்கள். இந்த தாமதத்தை பயன்படுத்தி அலுவலகர்கள் போர்வையில் இவர்கள் முக்கிய ஆவணங்களைக் கடத்தியுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து போலியான சாவிகள், ரகசிய பரிமாற்றம் நடந்த நாட்குறிப்புகள்(டைரி) போலி யான அடையாள அட்டைகள், மற்றும் போலிக்கை யெழுத்துப் படிவங்கள், கணினி போன்றவை கைப்பற்றப் பட்டன.

இவற்றைச் சோதனை செய்த போது நிதிநிலை அறிக்கை உரைகளும் திருடப்பட்டு அவை பெரிய நிறுவ னங்களின் முதலாளிகளிடம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பாதுகாப்புதுறை ஆவணங்கள். நிலக்கரித்துறை ஆவணங்கள், போக்குவரத்து, வெளி யுறவுதுறை போன்ற பல முக்கிய அமைச்சகத்தின் ஆவணங்களும் கைமாறியது தெரியவந்தது. இந்த ஆவணக் கடத்தல் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுனத்தின் மேலாளர் சைலேஷ் சக்சேனா, ஜூப்லிகண்ட் எனர்சி நிறுவனத்தின் நிர்வாகி சுபாஷ் சந்திரா, திருபாய் அம்பானி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரிஷி ஆனந்த,எஸ்ஸார் நிறுவனத்தின் வினய்குமார், காய்ர்ன்ஸ் நிதி நிறுவனத்தின் கே.கே நாயக் போன்றோர் கைது செய்யப்பட்டனர். கைமாறப்பட்ட நிறுவனத்தின் மூலம் அரசுக்கு பலஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரகங்களின் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் கைதானவர்களிடமிருந்து பிரதமர் அலுவலக மூத்த செயலாளர்களின் கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்களும் சிக்கின. இதனால் பிரதமர் அலுவலகத்திலும் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது. கைதான தனியார் நிறுவன அதிகாரிகளில் சிலர் மோடியின் அயல்நாட்டுப் பயணத்தின் போது உடன் சென்றவர்கள் எனவும் டில்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பிப்ரவரி 22 ஆம் தேதி வெளிவந்த ஊடகங்களில் ரிலையன்ஸ் சகோதரர்கள் இருவரது பெயரும் வெளி வந்தது. ஆனால்; அதன் பிறகு வெளிவந்த செய்திகளில் அனில் அம்பானி, மற்றும் முகேஷ் அம்பானி பெயர் இடம் பெறவில்லை. மேலும் கடந்தசில நாட்களாக ஆவணத் திருட்டு செய்திகள் முற்றிலும் ஊடகங்களில் இருந்து மறைந்து போய்விட்டது. நாட்டின் பாதுகாப்பிற்கே அச் சுறுத்தலாக ஒரு மாபெரும் விவகாரத்தை எடுத்த எடுப் பிலேயே மக்களிடம் இருந்து மூடி மறைக்க இவ்வளவுப் பெரிய மகா மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் உரிய வகையில் ஒலித்தனவா? மோடி தலைமையிலான மத்திய அரசோ யாருக்கோ வந்த இழவு என்று எண்ணி செயல்பட்டுக் கொண்டுள்ளது. நாடாளு மன்றத்தில்கூட உரிய அளவு புகார்கள் வெடிக்கவில்லை.

ஒரு பாட்டில் விஸ்கிக்காக இராணுவ ரகசியங்களைக் கொடுத்த கூம நாராயணர்கள் (பார்ப்பனர்) டில்லியில் பண்ணை வீட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக் கின்றனர்.

நாடு எங்கே போகிறது? புனிதர்(?) மோடி ஆட்சியின் மோசடி அணி வகுக்க ஆரம்பித்து விட்டன - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/96881.html#ixzz3SqnQwJRo

தமிழ் ஓவியா said...

கர்மப்பலன்

செய்தி: மதர்தெரசா மருத் துவத் தொண்டு என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபட்டார். - மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

சிந்தனை: குஷ்ட நோய் என்றால் அது கர்மபலன் என்று சொல்லும் இந்துத் துவவாதிகள் அந்த நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்ட வர்களை ஏற்றுக் கொள் வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/96900.html#ixzz3SqnolyCZ

தமிழ் ஓவியா said...

உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது?

உடல் வகைக்கேற்ற உடற்பயிற்சியே உரிய பலன் தரும் உடல் வகைக்கேற்ற உடற்பயிற்சியே உரிய பலன் தரும்
ஒவ்வொரு உடலும் ஒரு தனிரகம். எனவே ஒருவரின் உடலுக்கேற்ற உடற்பயிற்சியை செய்வதே உரிய பலன் தரும். அப்படியானால் உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

உங்கள் உடல்வாகு என்பது நினைத்தமாத்திரத்தில் எடைகூடிவிடும் ரகமா? அல்லது எவ்வளவு சாப்பிட்டாலும், உடற்பயிற்சி எதுவும் செய்யாவிட்டால்கூட உங்களுக்கு உடல் எடையே கூடாத ரகமா? ஒவ்வொரு மனித உடலும் தனித்தனித் தன்மை கொண்டது. அதாவது ஒவ்வொருவரின் கைரேகையும் ஒரு விதம் என்பதைப்போல தனித்துவமானது.

ஆனாலும் மனித உடல்வாகை எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொதுவான மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும். அந்த அடிப்படையில் பார்க்கும் போது உங்கள் உடலுக்கு உகந்த உடற்பயிற்சி எது என்பது, உங்கள் உடல் குறித்த உங்களின் புரிதலைப் பொறுத்தது.

இதில் பிரச்சினை என்னவென்றால் ஒருவருக்கு என்னவிதமான உடற்பயிற்சி தேவை என்று விவாதிக்கும் போது இரண்டு காரணிகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரில் நின்று முரண்படுகின்றன, என்கிறார் ஸ்பெய்னில் இருக்கும் அல்டோ ரெண்டிமிய்ண்டோ விளையாட்டு விஞ்ஞான மையத்தின் பேராசிரியர் ஜூவான் பிரான்ஸிஸ்கோ மார்க்கோ.

உடற்பயிற்சி மூலம் நீங்கள் உங்கள் உடல் வனப்பை அழகுப்படுத்த விரும்புகிறீர்களா அல்லது விளையாட்டுத் திறமையை மேம்படுத்தப் பார்க்கிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார் அவர்.

ஒருவரின் மரபணுக்காரணிகள் மற்றும் உடலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மனித உடலை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள் உடலியலாளர்கள்.

எக்டோமார்ப்

இந்த ரக மனிதர் உயரமானவர், ஒல்லியானவர், முன்னோக்கி சாயும் தன்மை கொண்டவர். நீண்ட கால் களும், சதைப்பற்றில்லாத மார்புப்பகுதியும் கொண்டவர். இவர்களின் உடம்பில் பெரும்பாலும் சதை போடாது. என்கிறார் பேராசிரியர் மார்கோ.

இப்படிப்பட்ட எக்டோமார்ப் உடல்வாகு கொண்ட வர்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்கும் உடல் திறன் தேவைப்படும் தடகளப்போட்டிகள் பொருத்தமான விளையாட்டுக்களாக இருக்கும். நீச்சல், சைக்கிள் போட்டிகள் போன்றவை.

இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்களுக்கேற்ற உடற்பயிற்சியின் முக்கிய நோக்கம் உடல் வலிமையை மேம்படுத்துவதாகவும், உடல் எடையை அதிகப்படுத்தி உடற்சதையை கூட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் மார்கோ.

தமிழ் ஓவியா said...


இப்படிப்பட்டவர்கள் தங்களின் உடல் மூட்டுக்களை அதிகம் அசைக்கும் விதமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். அதன் மூலம் அவர்களின் உடலின் பெருஞ் சதைப் பகுதிகளும், சிறு சதைக் குழுமங்களும் கூடுதலாக செயற்பட்டு வலுப்பெறும் என்கிறார் அவர்.

இப்படிப்பட்டவர்கள் அதிகபட்சமாக மூச்சுப்பயிற்சி தேவைப்படும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை குறைவான அளவில் செய்வது நல்லது என்கிறார் அவர். காரணம் இப்படிப்பட்டவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகள் அதிகம் செய்தால் அவர்களின் உடல் எடை குறைவதோடு, உடல் சதை கூடுவதும் நின்றுவிடும் என்கிறார் அவர்.

எண்டோமார்ப்

இந்த ரக உடல்வாகு என்பது எக்டோமார்ப் உடல் வாகுக்கு நேர் எதிரான உடல்வாகு. இவர்களின் உயரம் குறைவாகவும், உடலின் மத்தியப்பகுதியில் அதிக சதைப்பிடிப்புடனும் இருப்பார்கள்.

இந்த ரக உடலின் உணவு செரிபடும் உள்ளி யக்கம் மெதுவாக நடப்பதால், உண்ணும் உணவின் கொழுப்புச் சத்து உடலில் செரிபடாமல் எளிதாக கொழுப்பாகவே தங்கிவிடும்.

இப்படிப்பட்டவர்கள் மிக எளிதில் எடைகூடி, உடல்பருமனாகிவிடுவார்கள்.

இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்கள் உடல் வலிமை மட்டுமே தேவைப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். காரணம் இவர்களின் உடலின் கூடுதலான சதைப்பிடிப்புத் தன்மை இத்தகைய விளை யாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட உதவும்.

இப்படிப்பட்ட உடல்வாகுடையவர்களுக்கு மூச்சுக்குழல் கட்டமைப்பை வலுவாக்கும் வகையான உடற்பயிற்சிகளே நன்மை பயக்கும். இப்படிப்பட்டவர்கள் முதலில் சாதாரண ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு பிறகு அனேரோபிக் உடற்பயிற்சிகள் எனப்படும் அதிதீவிர உடற்பயிற்சிகளை வேகமாக செய்யவேண்டும்.

இதன் மூலம் இவர்களின் மூட்டுக்கள் வேகமாக செயற்படும். எக்டோமார்ப் உடல் வாகுடையவர்கள் எளிமையான உடற்பயிற்சிகளை, கூடுதல் இடைவெளிவிட்டு செய்யவேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக, எண்டோமார்ப் உடல்வாகுடையவர்கள் கூடுதல் வேகத்துடன், கடினமான உடற்பயிற்சிகளை செய்வதே நல்லது, என்கிறார் பேராசிரியர் மார்கோ.

மெசோமார்ப்

உடல்வாகு அடிப்படையில் பார்த்தால் இவர்கள் தாம் மிகவும் சாதகமான அம்சங்களைக்கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த பெரிய முயற்சியும் செய்யாமலே தடகள விளையாட்டு வீரருக்கு உண்டான உடல்வாகுடன் தோன்றுவார்கள். மெசோமார்ப் உடல்வாகுடையவர்கள் இயற்கையிலேயே விளையாட்டு வீரர்கள். இவர்கள் எதைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்வார்கள்", என்கிறார் மார்கோ.

கால்பந்து விளையாட்டு வீரர்கள் நினைத்த மாத்திரத்தில் திடீரென பேட்ல் எனப்படும் உள்ளரங்கு டென்னிஸ் விளை யாட்டை ஆடத்துவங்குவார்கள். அதையும் சிறப்பாக ஆடு வார்கள்.

அவர்களால் கூடைப்பந்து விளையாட்டைக்கூட சிறப் பாக ஆட முடியும். நீடித்து தாக்குப்பிடிக்கும் விளை யாட்டுக் களானாலும் சரி, வேகமாக ஓடும் ஓட்டப் பந்தயமானாலும் சரி அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்கிறார் மார்கோ.

Read more: http://viduthalai.in/page-7/96914.html#ixzz3SqqaoxgE

தமிழ் ஓவியா said...

எளிமையும் ஆழமும் கொண்ட மூத்தவர் மாயாண்டி பாரதிக்கு இரங்கல்

சில காலத்தில் நூறு ஆண்டைக்காண வேண் டிய தோழர் - கவிஞர் மாயாண்டி பாரதி அவர்கள் (வயது 98), தனது முது மையில் மதுரையில் காலமானார் என்ற செய்தி, பொதுவாழ்வில் எளிமையும், ஆழமும் உள்ள மாமனிதர் ஒரு வரை தமிழ்நாடு இழந்துவிட்டதே என்ற வேத னையைத்தான் கொள்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த முன்னோடி எழுத்தாளரான அவர் ஒரு சிறைப் பறவையாவார்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும் பத்தாருக்கும், அவரது கொள்கை இயக்கமான கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சென்னை - கி.வீரமணி
26.2.2015 தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இயற்கை சீற்றங்கள்

கேள்வி: திடீரென்று ஏற்படும் நில நடுக்கம் பெரு வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஜோதிட சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டவையா? அல்லது அப்பாற்பட்டவையா?

பதில்: இது பிரசத் ஜாதக முறைப்படி சொல்லப்படும். இதற்கு இயற்கை உற்பவங்கள் என்று பெயர் (கல்கி 15.2.2015 பக்கம்.15) ஏதாவது புரிகிறதா? இந்த வழுக்கலுக்குப் பெயர்தான் ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDhum3W

தமிழ் ஓவியா said...

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் தினமலர் ஆசிரியர் புகழாரம்

அந்தக் காலத்தில் உள்ள எழுத்துக்கள் ஈய எழுத்துக்கள், அந்த ஈய எழுத்துகளுக்குப் பதிலாக பெரியார் நூற்றாண்டு விழாவில்தான் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை அறிவித்தனர். அந்த சீர்திருத்த எழுத்துக்கள் வராவிட்டால், இந்த மாதிரி 1,200 பக் கங்களை கம்போஸ் செய்வது கடினமாக இருக்கும்.

- தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி
சென்னை நூல் வெளியீட்டு விழாவில் (தினமலர் 27.2.2015)

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDnvGpT

தமிழ் ஓவியா said...

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் தொடரும் மதவெறிப் பேச்சு!
மெக்காவில் ராமர்கோவிலை கட்டி விட்டு அயோத்தியாவில் மசூதி கட்டட்டும்!


சாஜஹான்பூர்(உபி) பிப் 27_ மெக்காவில் கோவில் கட்ட விடுவார்களா? மதீ னாவில் கோவில் கட்ட முடியுமா வாடிகன் சர்ச் சின் பாதிபகுதியில் கோவில் கட்ட விட்டால் அங்கு எல்லாம் கோவிலைக் கட்டிவிட்டு பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி கூறினால் நாங்கள் அதை விவாதத் திற்கு எடுத்துக்கொள் வோம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் யோகி மீண்டும் மதவெறிப் பேச்சை வெளிப்படுத்தியுள் ளார்.

இந்து நாட்டில் வேறு கோவில்களா?

விவாதத்திற்குரிய பாபர் மசூதி பிரச்சி னைக்கு தீர்வு காண பாபர் மசூதி மற்றும் ராம்மந்திர் கட்டலாம் என்ற தீர்மா னத்தை குறிப்பிட்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் கூறியதாவது; இது இந்து நாடு இந்து நாட்டில் வேறு மதக் கோவில்கள் ஏன் இருக்க வேண்டும். நாம் அடிமை யாக இருக்கும் போது அந்த அடிமைத்தனத்தைப் பயன்படுத்தி மசூதி, தேவாலயங்கள் கட்டப் பட்டுவிட்டன. இன்று இருக்கும் மசூதிகள் எல் லாம் ஒரு காலத்தில் இந்துக்கோவிலாக இருந்த வைகள். ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியுள்ளார்கள். இடிந்து போன பழமை யான ஒரு கட்டடத்தை ராமர் கோவில் கட்டுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு தொழுகை நடத்தி அதை மசூதியாக மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் அதற்கான எதிர்நடவடிக் கையில் கரசேவகர்கள் வெற்றிகண்டனர்.

அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வாக மீண்டும் அங்கு மசூதியும் கோவிலும் கட்ட வேண்டும் என்று கூறுகி றார்கள். இது மடத்தன மான விவகாரம்; அங்கு இஸ்லாமியர்களுக்கான உரிமை ராமர் கோவில் கட்டுமிடத்தில் எங்கிருந்து வந்தது?

அயோத்தி சனாதன தர்ம பூமி, இது புனித பூமி ராமர் பிறந்த பூமி, இங்கு மசூதி இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட் டது. தற்போது மீண்டும் அங்கு மசூதி கட்டுங்கள் என்று கூறுகிறார்கள். நான் கூறுகிறேன் முதலில் மக்காவில் கோவில் கட்ட இடம் தாருங்கள், மதீனா வில் கோவில் கட்டுங்கள், வாடிகன் சர்ச்சில் பாதி இடத்தில் கோவில் கட்ட அனுமதி தாருங்கள் அதன் பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி நாங்கள் முடிவு செய்கிறோம் என்று பேசினார்.

அயோத்தி விவகாரத் திற்குத் தீர்வு காண்பதற்கு அகாடா பரிசத் மற்றும் மசூதி வழக்கு தொடுத்த ஹுசைன் அன்சாரி ஒருவ ரும் இணைந்து ராமர் மந்திர் மற்றும் மசூதி கட்ட நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். இதற்கு விஷ்வ இந்து பரிசத் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் விவாதத்திற்குரிய பேச்சைப் பேசியிருக்கிறார். மோடிக்குப் பதிலடியா?

கடந்த 17-ஆம் தேதி டில்லியில் கிறிஸ்தவ விழா ஒன்றில் பேசிய மோடி கூறியபோது அனைத்து மத உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும், மத நல்லிணக்கம் இந்தி யர்களில் டி.என்.ஏவில் உள்ளது என்று கூறியிருந் தார். அதற்கு எதிர்க் குர லாகத் தான் பிஜேபி மக் களவை உறுப்பினர் (ஆதித்யனாத்) இப்படிப் பேசி இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/96963.html#ixzz3SxE3SLIt

தமிழ் ஓவியா said...

எந்த வகையிலும் வரவேற்க முடியாத ரயில்வே பட்ஜெட் தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, பிப்.27_ எந்த வகையிலும் வரவேற்க முடியாததாக ரயில்வே பட்ஜெட் உள்ளது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே பட் ஜெட் குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் கட்டண குறைப்பு இல்லை என்று தெரிந்து விட் டது. கடந்தாண்டு பா.ஜ.க. அரசின் ரயில்வே பட் ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் தாக்கல் செய்யப் படுவதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; கடந்த கால அரசின் முடிவு அது என்று கூறி அறிவித் தார்கள். அதற்குப் பிறகு டீசல் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் இந்த ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் குறைத்து அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டும் குறைக்கப்பட வில்லை.

கடந்த 8.2.2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேகூட, தமிழகத்திற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 24 ரயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியினை வருகின்ற ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் இந்தப் பட் ஜெட்டிலும் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறை தான் முதல் தடவையாக புதிய ரயில் களோ, கூடுதல் ரயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு_பழனி ரயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய ரயில்வே அமைச்சர் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற் பட்டிருப்பதால் புதிய ரயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள். புதிய திட்டங்களை அறி விக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/96927.html#ixzz3SxGEgVdB

தமிழ் ஓவியா said...

யம திசை!

தென்திசையை யம (எமன்) திசை என்றும், வடதிசையை குபேர திசை என்றும் கூறுவது உண்டு. இது ஆரியர் வழக்கு. அவர்கள் வடக்கே வாழ்ந்தார்கள். ஆகவே, அதைக் குபேர திசை என்றார்கள். அவர்களை எதிர்த்த தமிழர் தெற்கே இருந்தார்கள். எனவே, தென் திசையை யம திசை என்றார்கள்! தென்திசையை அவாக் என்று ஆரியர் கூறினார்கள். வாக்கு என்றால் மொழி. அவாக் என்றால் மொழி அல்லாதது. அதாவது, அவர்களின் மொழி வழக்கில் இல்லாத திசை என்று பொருள். ஆனால், தமிழரோ தென் திசையைப் போற்றினார்கள் தென் என்றால், இனிமை என்று பொருள் கொண்டார்கள். தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்கிறார்கள். தங்கள் மொழியை தென்மொழி என்றார்கள். தங்கள் மன்னனை தென்னவன் என்று கூறி மகிழ்ந்தார்கள். அதே நேரம் வடதிசையைப் பழிக்கவில்லை! நன்றி: ராணி, 7.3.1982

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGt4wEm

தமிழ் ஓவியா said...

மக்கள் ஒருமைப்பாடு பேசுவோரே! கடவுள் ஒருமைப்பாடு எங்கே!

அரியும் சிவனும் ஒண்ணு: இதை அறியாதவர் வாயில் மண்ணு! நெடுங்காலமாய் நம் நாட்டில் வழங்கி

வரும் பழமொழியிது. சிவனுக்கும் திருமாலுக் கும் உயர்வு - தாழ்வு-வேறுபாடு-முரண்பாடு கிடையவே கிடையா தென்று, மதக்குழப்பங்களுக்குள்ளான மக்கட்கு அறிவு கொளுத்தும் மொழியாக இப்படிச் செப்பினர் சூழ்ச்சி மதியினர் சிலர்.

ஆதிசங்கரர் மேற்கொண்ட சமய நடவடிக்கையான உண்மை இணைப்பில் சைவத்தையும், வைணவத்தையும் உள்ளடக்கவே செய்தார்.

அதன்பின் பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அறிவாசான் அய்யா அவர்கள் தெளிவாகக் கேட்டு வந்தார் மதத் தலைவர்கள் தங்கள் கடவுளர்களைப் பற்றி ஒருமைப்பாடான முடிவுக்கு முதலில் வரமுடியுமா? என்று,

அய்யா சொல் என்றைக்கும் பொய்யாதென்பதற்கு இதோ சான்று:

மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிறீரங்க பெருமாள் கோவிலின் தென்திசைக் கோபுரத்தை வளரச் செய்வதில் வெற்றி கண்ட அகோபில மடத்தின் 44ஆம் ஜீயர் சிறீ அழகிய சிங்கரிடம் கல்கி இதழ் சார்பில் கேட்கப்பட்ட 87ஆண்டு அகவையாகி விட்ட ஒளிவு மறைவில்லா கேள்வியொன்றுக்குச் சிங்கர் அளித்த விடை சமய மக்களுக்குச் சரியான அறைகூவல்!
கேள்வி: சிறீ சங்கராச்சார்யாள் இந்த கோபுரத்தில் மூன்றாம் கட்டத்துக்குப் பண உதவி செய்திருக்கிறார். பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவுகிறார்கள். இதுமாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் சைவ தலப் பணி களுக்கு ஏன் உதவுக்கூடாது?

விடை: நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன்... ஏன் என்று கேட்டா.... சிறீமத் நாராயணன் தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும், அதே போல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு, சிவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராயணன் எப்போதும் உள்ளவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். நாங்கள்ளாம் மோட்சத்துக்குப் போக டிக்கெட் வாங்கிண்டாச்சு. அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன் (கல்கி 11-4-82) மேற்கண்ட விடை நமக்கு விளக்குவதென்ன?

1. சங்கரனுக்கு நாராயணன் பாட்டன். 2. சிவன் தவம் புரிந்து தெய்வம் ஆனவன். 3 வைணவன் சிவன் கோவிலுக்குச் சென்றால் புத்தி கெட்டுவிடும். 4 வைண வனிடம் பணம் இருந்தால் கூட, சிவன் கோவிலுக்குத் தரக்கூடாது!

ஆக, இன்றைக்கும் கூட அரியும் சிவனும் ஒன்றாகி விட்டார்களா?

குழப்பம் குறையவில்லை; நீடிக்கிறது. மக்கள் ஒருமைப்பாடு பேசவந்து விட்ட மதக்காவற் காரர்கள் முதலில் கடவுள் ஒருமைப்பாடு காணட்டும்.
- பகுத்தறிவு

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxH6qrLx

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ? குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHDNFOg

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவலை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார். இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்

நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலை வாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி
இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடு மலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHNJEEu

தமிழ் ஓவியா said...

தெரியுமா?

சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத்தான் எழுப்பும்.

ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாள்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 லட்சம் குவளை பால் கொடுக்கும்.


Read more: http://viduthalai.in/page8/96998.html#ixzz3T2NypqGR

தமிழ் ஓவியா said...

மதம் படுத்தும் பாடு

அமெரிக்க நாத்திக எழுத்தாளர் பங்களாதேஷில் கொல்லப்பட்ட கொடுமை!

பங்களாதேஷைச் சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்துவருபவருமான அவிஜித் ராய் என்பவர் நாத்திக, மதசார்பற்ற கருத்துகளை தம்முடைய இணையப் பக்கங்களில் (Blogger) பதிவிட்டு வந்துள்ளார்.

இசுலாமிய அடிப்படை மத வாதிகளின் தொடர்ச்சியான அச்சுறுத் தல்கள் இருந்தபோதிலும், அஞ்சா நெஞ்சினராக மதசார்பற்ற நிலையில் தம்முடைய கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளார்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவந்த புத்தகக் கண்காட்சிக்கு தம் மனைவி ரபீதா அகமத் போன்னாவுடன் சென்று வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, (26.2.2015) அடையாளம் தெரியாத இரண்டு காலிகளால் அவிஜித் ராய் மற்றும அவர் மனைவி ரபீதா ஆகிய இருவரும் பெரிய கத்திகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம்குறித்து உள்ளூர் காவல் துறைத் தலைமைப் பொறுப்பில் உள்ள சிராஜூல் இஸ்லாம் கூறும்போது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்துவிட்டார். இத்தாக்குதலில் அவர் மனைவியின் விரல் துண்டிக்கப்பட்டு, மிகவும் மோச மாக காயமடைந்துள்ளார் என்றார்.

ராய் பங்களாதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் ஆவார். அவர் மதசார்பற்ற கருத்து களைப் பதிவு செய்யும் வகையில் முக்தோ-_மோனா என்கிற பிளாக் பக்கத்தை உருவாக்கி தொடர்ச்சியாக மதசார்பற்ற கருத்துகளை எழுதி வந் துள்ளார். அவர் எழுதியுள்ள புகழ் பெற்ற நூல் பிஸ்வாசெர் வைரஸ் (நம் பிக்கை எனும் வைரஸ் கிருமி) உள் ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் மதசார்பற்ற எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர் கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இதேபோன்று 2013 ஆம் ஆண்டில் பங்களாதேசத்தில் நாத்திக கருத்தை எழுதிவந்த இணையப் பக்க எழுத் தாளர் அகமத் ரஜீப் ஹைடர் என்பவர் மோசமாகத் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.

அப்போது, மத அடிப்படை வாதிகளைக் கண்டித்து நாடுமுழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.

பங்களாதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதிகளால், இசுலாம் மதத்தின்மீது விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர்களை வதம் செய்வது என்கிற பெயரால் கொன்று வருகிறார்கள்.

ராய் மற்றும் அவர் மனைவிமீது தாக்குதல் நடத்தியவர்களை இன்னமும் பங்களாதேசக் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தாக்குதலுக்குப் பயன் படுத்திய பெரிய கத்தியைமட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு சிந்தனை


புல், பூண்டு - ஓரறிவு; நத்தை, சங்கு - ஈரறிவு; எறும்பு, கரையான் - மூவறிவு; ஈ, வண்டு - நான்கறிவு; விலங்குகள், பறவைகள் - அய்ந்தறிவு; மனிதன் மட்டுமே! - ஆறறிவு.

ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? - இந்த ஆறு வினாக்களும் ஆறறிவு படைத்த மனிதனின் அடையாளச் சின்னங்களாகும்.

அறிதல், உணர்தல், விரும்பிச் செய்தல் ஆகிய மூன்றும் அறிவின் கூறுபாடுகள். அறிவார்ந்த சிந்தனை, அறிவார்ந்த சொல்; அறிவார்ந்த செயல் மூன்றையும் உள்ளடக்கியவனே மனிதன். எனவே தான் மனிதன் ஓர் அறிவு ஜீவி என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் சிந்தனையின் கூர்மையே பகுத்தறிவு பகுத்தறிவு சிந்தனை வீரத்தின் சிறப்பு அம்சமாகும்.

தகவல்: வை. மாறன், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/96990.html#ixzz3T2OwNWW9

தமிழ் ஓவியா said...

போகாத ஊருக்கு வழிகாட்டலா?
இல்லாத சரஸ்வதி நதிக்கு பிஜேபி அரசின் பணம் விரயம்

சண்டிகர், பிப்.28_ சரஸ்வதி ஆறு இருப்ப தாகக் கற்பனையில் கூறப் பட்டு வரும் நிலையில், அந்த கற்பனையான சரசுவதி நதியை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கான முயற்சியில் மீண்டும் இரட்டிப்பான முயற்சியில் அரியானா மாநிலத்தின் வனத்துறை இறங்கி உள்ளதாம்.

யமுனா நகர் மாவட் டத்தில் சரஸ்வதி நதி உருவான இடம் எனக் கூறப்படும் இடமாகிய அதி பத்ரி பகுதியில் சரசுவதி உத்கம் ஸ்தல் எனும் பகுதியில் பூமிக்கு வெளியே சரசுவதி நதியை கொண்டு வரப் போகிறார்களாம்.
வனத்துறை அலுவலர் களைக் கொண்ட குழுவி னர் அதற்கான பணிகளை மேற்கொள்ள சரசுவதி உத்கம் ஸ்தல் பகுதிக்குப் பயணமாகி உள்ளனராம்.

அப்பகுதியில் தண்ணீர் போக்குவரத்துள்ள கால்வாய்ப்பகுதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கு வதன்மூலம் கற்பனையில் மட்டுமே கூறப்பட்டுவரும் சரசுவதி நதியின் தடத்தைக் கண்டறிந்து வெளியே கொண்டுவரப்பட உள்ள தாம். இந்துமதப் புராணங் களில் குறிப்பிடக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அதன்மூலமாக சரசுவதி யின் பாதையை அறிய முடியுமா? என்றும் ஆய்வு மேற்கொள்வார்களாம். இந்துப் புராணங்களில் சரசுவதி நதி அலகாபாத் வரை பாய்ந்துசென்று அதன் பின்னர், கங்கை மற்றும் யமுனை நதிகளு டன் திரிவேணி எனும் பகுதியில் இணைகிறதாம்.

சரஸ்வதி உத்கம் ஸ்தல் என்பது ஷிவாலிக் மலை யடிவாரத்தில் அதி பத்ரி பகுதியில் உருவாவதாக நம்பப்படுகிறதாம். இது தான் சரஸ்வதி நதியின் மூலமாம். இந்தத் தகவ லின்படி, அந்தப் பகுதி களில் அரியானா சுற்று லாத்துறையும் ஷிவாலிக் நதியின் பாதையை அறிய முற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

அரியானா மாநில வனத்துறை அலுவலகத் தின் சார்பில் ரந்தீர் குமார் என்பவர் கூறும்போது, இந்தப் பகுதியில் உள்ள நீரோட்டத்தைக் கொண்டு தண்ணீரை எடுத்து வாய்க் கால் அமைத்து, மேலும் இரண்டு, மூன்று குழாய்க் கிணறுகள் அமைத்தும் அதன்மூலம் பெறப்படும் தண்ணீரை அருகில் உள்ள பழமையான ஆற்றில் கலந்து விடப் போகி றோம் என்று கூறினார்.

இந்து மதக் கற்பனை யில் உள்ளபடி, சரஸ்வதி ஆறு என்பது பூமிக்கடி யில் இன்னமும் உள்ள நீரோட்டமாம். பூமிக்கடி யில் உள்ள நீரோட்டம் இருப்பதுகுறித்து செயற் கைக்கோள் படங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள் ளது என்றும். சரஸ்வதியின் ஆற்றோட்டப் பாதை யாகக் கருதப்படும் பகுதி யில் நீரோட்டம் உள்ள தாகக் கூறப்படுகிறது.

பூமிக்கடியில் உள்ள சரசுவதி ஆற்றை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கு பாஜக ஆளும் அரியானா அரசு டேராடூ னில் உள்ள ஆய்வகத்தின் உதவியை நாடி உள்ளது. புதிதாக தண்ணீர் கால் வாயை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதியில் மத ரீதியிலான சுற்று லாவை அதிகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று வனத்துறை யின் சார்பில் கூறப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97010.html#ixzz3T2R1t8fe

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாராட்டு

செய்தி: பயங்கரவாதச் செயல்களில் படித்தவர் கள் ஈடுபடுவதற்கு அற நெறி இல்லாததே காரணம்.
- ராஜ்நாத்சிங்

மத்திய உள்துறை அமைச்சர் சிந்தனை: 1992இல் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் (அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட் பட) படித்திருந்தும் அறநெறி இல்லாதவர்கள் என்பதை ஒப்புக் கொண் டதற்குப் பாராட்டு!

மருந்து

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக அர்சீனியம் ஆல்பம் என்னும் ஹோமியோபதி மருந் தைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97015.html#ixzz3T2RJx732

தமிழ் ஓவியா said...

தேசியத்தின் விளைவு

1914ஆம் வருஷம் முதல் 1918 வருஷம் வரை நடந்த உலக மகாயுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசியம், தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தின் சம்பந்தப்படும் படி செய்தது.

இந்த உலக மகாயுத் தத்தின் பயனாய் கொல்லப்பட்டவர்கள் 97,43,914 கிட்டத் தட்ட ஒரு கோடி பேர் காயம் பட்டவர்கள் 20,92,7,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போன வர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான தொகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இது நிற்க, இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர்பார்த்து தேசாபிமானத்தின் காரணமாக என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங்கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ஆம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து எண்பது கோடி ரூபாய் ஆகும்.

இதை தினக் கணக்காய் பிரித்தால் தினம் 1க்கு 20,00,000 பவுன் (இருபது லட்சம் பவுன்) அதாவது நாள் 1க்கு 270,00,000 இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப் படுகின்றது.

பிரிட்டிஷ் அரசாங்கமானது தனது அரசாட்சி வரும் படியில் உள்ள ஒவ்வொரு பவுன் வரும் படியிலும் 13 ஷில்லிங் யுத்த தேசாமானத்திற்காக. தேசத்தைக் காப்பாற்ற தேசிய கடனுக்கும் சேனை தளவாடங்களுக்காக அதாவது,

யுத்த கடனுக்கு வட்டி 0 - 9 - 0 யுத்த வீரருக்கு பென்ஷன் தற்காலம் ராணுவத்திற்கும் 0 - 1 - 3
தரைகப்பல் தளவாடத்திற்கும் 0 - 2 - 9 ஆக : 0 - 13 - 0

மேற்படி பதின்மூன்று ஷில்லிங்போக பாக்கி இருக்கும்

ஷில்லிங்கில் கல்விக்கு 0 - 1 - 5
உத்தியோக பென்ஷன் 0 - 1 - 3
தல ஸ்தாபன உதவி 0 - 1 - 2
வேலை இல்லதவர்களுக்கு பிச்சை 0 - 1 - 2

வீட்டு வசதி கோர்ட்டு வசதிவகையறாவுக்கு 0 - 0 - 8
போலீஸ் 0 - 0 - 6
விவசாயம் சுகாதாரம் 0 - 0 - 2
சில்லறை ஆக 0 - 0 - 3 ஆக : 0 - 7 - 0

ஆக பிரஜைகளின் நன்மைக்கு என்று ஏழு ஷில்லிங்கும் செலவு செய்யப்படுகிறது.

அதாவது மேற்கண்ட யுத்த கடன் வட்டிக்காக என்று செலவு செய்யப்படும் 9 ஷில்லிங்கும் முதலாளிமார்களுக்கே போய்ச்சேரும் தேசாபிமானத்திற்காக ஏற்பட்ட காரியத்தின் பயனாய் இன்று முதலாளிமார்கள் தேச அரசிரை வரும் படியில் கிட்டத் தட்ட சரிபகுதியை உலக முள்ளளவும் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

எனவே, பல கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து காயப்படுத்தி காணாமல் போகச் செய்ததும் அல்லாமல், மக்களிடத்தில் வாட்டிப் பிழிந்து வசூல் செய்யும் வரியிலும் நூற்றுக்கு 65 பாகத்தை தேசத்தைக் காப்பாற்ற என்னும் பேரால் இராணுவத்திற்கும், தள வாடங்களுக்கும் செலவு செய்தும்,

இந்த தேசத்தில் இன்று பத்து லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும், ஜீவனத்துக்கு தங்களுக்கும் தங்கள் பெண்டு பிள்ளைகளுக்கும் அரைவயிற்றுக்கு போதுமான கஞ்சிக்கூட மார்க்கமில்லாமலும் தவித்து வருகிறார்கள்.

இது பாமர ஜனங்களுடைய - ஏழை ஜனங்களுடைய தேசாபிமான முட்டாள் தனமா? அல்லது பணக்காரனுடைய படித்த கூட்டத்தாருடைய தேசாபிமான பித்தலாட்டமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த வாரம் தேசியக் கடன் என்பது என்ன? என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

குடிஅரசு - கட்டுரை - 11.12.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SYjvzi

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம்.

ஆனால் எந்த காங்கிரஸ் காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு.

அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ் காரத்தைப் பற்றிப் பிரயோசனமில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது?

ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SgpIx9

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம்: உதவிக்கரம் நீட்டிய நீதிமன்றம்

கொச்சி, மார்ச் 1_ வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொள்ள கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்.சசீந்திரன். இந்து மதத்தைச் சேர்ந்த இவரின் மகளும், அதே பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு இருதரப்பில் இருந்தும் அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் சுசீந்திரன் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் வி.கே.மோகனன், பி.டி.ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலர்கள் ஆஜராகி தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். அதையடுத்து, இருவரின் திருமணத்தையும் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இருவருக்கும் பாது காப்பு அளிக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

Read more: http://viduthalai.in/page-3/97083.html#ixzz3T8Ii6RSp

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பம் உண்டா?

பெண்ணாடம் வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் வினா விருத்தாசலம், மார்ச் 1_- திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பங்கள் தமிழ்நாட்டில் உண்டா? என பெண்ணாடத்தில் நடந்த திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வினா எழுப்பி, சிறப்புரையாற்றினார். பெண்ணாடம் வானொலித் திடல் அண்ணா அரங்கத்தில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு (22.2.2015) எழுச்சியுடன் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது, நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கு திராவிட இயக்கமே காரணம் என்றும், நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக இல்லாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் வரதராஜன் என்கிற ஆதிதிராவிடர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது யாரால்? பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றால் யாருடைய உழைப்பு? இந்த வரலாறு தமிழ்த் தேசியங்களுக்குத் தெரியாது.

இன்றும்கூட, நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் திராவிடர் இயக்கமல்லவா! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அல்லவா! எனவே, தமிழகத்தில் திராவிடர் இயக்கத் தால் பலன் பெறாத குடும்ப உண்டா எனக் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-8/97056.html#ixzz3T8Jxb9tF

தமிழ் ஓவியா said...

மாணவியரிடம் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கிய காட்டுமிராண்டித்தனம்



ஆத்தூர், மார்ச் 1_ மாணவி ஒருவரின் 150 ரூபாய் திருட்டு போனதை கண்டுபிடிக்க, மூன்று மாண வியரின் உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கியதால் அவர்களின் உள்ளங்கை வெந்து போனது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கருமந் துறை அரசு உறைவிட மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர்.

இதில் கருமந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள மாணவியர் விடுதியில் 107 மாணவியர் தங்கி உள்ளனர். கடந்த 12 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு, எட்டாம் வகுப்பு மாணவியின் 150 ரூபாய் காணாமல் போனது.

பணத்தை இழந்த மாணவி உட்பட மூன்று பேரும் சேர்ந்து, தங்களது அறையில் தங்கியிருந்த ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியர் மீனா, சிவலட்சுமி, சுகன்யா ஆகியோரிடம் கைகளில் கற்பூரம் அணையும் வரை வைத்திருந்து, சத்தியம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மூன்று பேரும் அப்படியே செய்ய கடைசியில் உள்ளங்கை வெந்து போனது. தகவல் அறிந்து விடுதி காப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் வெங் கடேஸ்வரன் காயமடைந்த மூன்று மாணவி யருக்கும் சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல தனி வட்டாட்சியர் புகழேந்தி கூறியதாவது:

சம்பந்தப்பட்ட மூன்று மாணவியரும், மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் நிகழாமல் விடுதி வார்டன் உள்ளிட்டோர், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/97055.html#ixzz3T8K62551